சட்டங்கள் அரசியலமைப்புச் சுதந்திரங்களை விகிதச்சமமற்ற முறையில் கட்டுப்படுத்துவதில்லை என்பதை உச்சநீதிமன்றம் எவ்வாறு உறுதி செய்கிறது? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


1. பயங்கரவாத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தண்டிக்க பல பிற்கால சட்டங்கள் பயன்படுத்தப்படுவதற்கு முன்பே காலனித்துவ சட்டம்  இருந்து வந்தது. இது மாகாண அரசாங்கத்திற்கு "சட்டவிரோத சங்கத்தின்" (unlawful association) உறுப்பினர்களைக் கைது செய்ய அனுமதித்தது.


2. பத்தாண்டுகளுக்குள், மார்ச் 1950-ஆம் ஆண்டில், சென்னையில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் மீண்டும் அதே சட்டத்தைப் பயன்படுத்தியது. இந்த முறை, அவர்கள் ஒரு கலாச்சாரக் குழுவான மக்கள் கல்விச் சங்கத்தை "சட்டவிரோத சங்கம்" (unlawful association) என்று அறிவித்தனர். அரசாங்கம் இதனை "பொது அமைதிக்கு ஆபத்து" (danger to public peace) ஏற்படுத்தும் என்றும், கம்யூனிஸ்ட் கட்சிக்காக "பிரச்சாரம் செய்து வருவதாகவும்" (carrying on propaganda) கூறியது.


3. சங்கத்தின் செயலாளர் வி.ஜி. ரோ, ஒரு மூத்த தொழிற்சங்கவாதி ஆவார். அவர் சென்னையைத் தளமாகக் கொண்ட நன்கு அறியப்பட்ட ரோ & ரெட்டி (Row & Reddy) என்ற சட்ட நிறுவனத்தை இணைந்து நிறுவினார். நிறுவனம் இன்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறது. ரோ சட்டத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை சவால் செய்தார். அவர் முதலில் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கும், பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கும் கொண்டு சென்றார். மேலும், இந்தத் தடை புதிய அரசியலமைப்பால் அவருக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக வாதிட்டார்.


4. மார்ச் 31, 1952 அன்று, இந்திய தலைமை நீதிபதி எம். பதஞ்சலி சாஸ்திரி தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்தச் சட்டத்தை ரத்து செய்தது.


5. சட்டவிரோத சங்கங்களுக்கு (unlawful associations) எதிரான சட்டம் காலப்போக்கில் பல கடுமையான விதிமுறைகளை எடுத்துள்ளது. இதனால்  பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (Terrorist and Disruptive Activities (Prevention) Act), 1987-ம் ஆண்டில் இயற்றப்பட்டது. இது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (Prevention of Terrorism Act), 2002 மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (Unlawful Activities (Prevention) Act), 1967 ஆகியவற்றின் ஒரு பகுதியாகவும் இருந்தது. இருப்பினும், வி.ஜி.ரோவின் தீர்ப்பு ஒரு முக்கியமான முன்னுதாரணத்தை எடுத்துரைத்தது. இதில், உள்ள சட்டங்கள் அரசியலமைப்பு சுதந்திரங்களின் மீது "நியாயமான கட்டுப்பாடுகளை" (reasonable restrictions) மட்டுமே விதிக்க வேண்டும் என்று அது கூறியது. ஒரு சட்டம் குடிமக்களின் சுதந்திரங்களை அதிகமாகக் கட்டுப்படுத்துகிறதா என்பதைச் சரிபார்க்க நீதிமன்றம் ஒரு சோதனையையும் உருவாக்கியது.


6. நீதிமன்றம் ஒரு 'சோதனையை' அறிமுகப்படுத்தியது. அது பின்னர் "கட்டமைக்கப்பட்ட விகிதாசார சோதனையாக" (structured proportionality test) மாறியது. அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய இந்த சோதனை இப்போது பயன்படுத்தப்படுகிறது. இந்த சோதனை, ஒரு அடிப்படை உரிமையை கட்டுப்படுத்துவது அதன் குறிக்கோளுக்கு அவசியம் என்பதை அரசு நிரூபிக்க வேண்டும். இது "சட்டபூர்வமான மாநில நலனை" (legitimate state interest) நிறைவேற்றுவதாகக் கூறிக் கொண்டு, ஒரு உரிமையை முற்றிலுமாக அகற்றக்கூடிய நியாயமற்ற நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை என்பதை இது உறுதி செய்கிறது.


உங்களுக்குத் தெரியுமா? :


1. வொம்பட்கெரே குருநந்தன் ரோ (Vombatkere Gurunandan Row) 1907-ம் ஆண்டில் பிறந்தார். இவர் இந்திய குடிமைப் பணி அதிகாரியான (ICS officer) நீதிபதி வொம்பட்கெரே பாண்ட்ராங் ரோவின் மகன் ஆவார். அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக சிறிது காலம் மாற்றப்பட்டார். சட்டம் படிக்கும் போது, ​​ரோ கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் ஆர்வம் காட்டினார். அவர் தனது தாய்மாமா சுந்தர் பட் காசர்கோட்டால் ஈர்க்கப்பட்டார். 



அவரது மாமா ஒரு "தீவிர இடதுசாரி" மற்றும் லண்டனில் ஒரு மருத்துவர் ஆவார். பின்னர், 1931-ம் ஆண்டில், ரோ லண்டனில் உள்ள கிரேஸ் இன்னில் (Gray’s Inn) உள்ள வழக்கறிஞர் மன்றத்திற்கு அழைக்கப்பட்டார். இருப்பினும், அவர் சட்டம் பயில இந்தியா திரும்பினார்.


2. சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ரோ & ரெட்டியை நிறுவினார். ரோவின் பங்குதாரரான ADV ரெட்டி சீக்கிரமே நிறுவனத்தை விட்டு வெளியேறினார். அவர் 1946-ஆம் ஆண்டில் ஒரு நீதிபதியாகவும் பின்னர் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் ஆனார். பின்னர், A.ராமச்சந்திரன் நிறுவனத்தில் புதிய பங்குதாரரான சேர்ந்தார். இருப்பினும், நிறுவனத்தின் பெயர் அப்படியே இருந்தது.


3. உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ஆரம்பகால அரசியலமைப்பு வழக்குகள் பல, சென்னையிலிருந்து வந்தவை என்று நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான 88 வயதான NGR பிரசாத் கூறுகிறார். அவர் குறிப்பாக, ரோ & ரெட்டியின் வழக்குகளைக் குறிப்பிடுகிறார்.


4. கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலனின் தடுப்புக் காவலுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றம் விசாரித்த முதல் அரசியலமைப்பு வழக்கு ஆகும். இந்த வழக்கை அதே சட்ட நிறுவனம் கையாண்டது.  ஒரு வழக்கறிஞரான ரோ, ஒரு இளம் வழக்கறிஞர் எம்.கே. நம்பியார் என்பவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மரண தண்டனை வழக்கை வாதிடுவதைக் கவனித்தார். பின்னர் ரோ, கோபாலனுக்காக வாதிட நம்பியாரைத் தேர்ந்தெடுத்தார்.

 




Original article:

Share:

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 239AA-ன் படி டெல்லி முதலமைச்சரின் பணி மற்றும் அதிகாரங்கள் பற்றி… -பிரியா குமாரி சுக்லா

 உங்களுக்குத் தெரியுமா?:


• 1991-ஆம் ஆண்டு 69-வது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசியலமைப்பில் 239-AA பிரிவு சேர்க்கப்பட்டது. இது டெல்லிக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கியது. இது எஸ். பாலகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. டெல்லிக்கு மாநில அதிகாரம் வழங்குவதன் கோரிக்கையை ஆய்வு செய்ய 1987-ஆம் ஆண்டு இந்தக் குழு அமைக்கப்பட்டது.


• இந்த விதியின்படி, டெல்லியின் தேசிய தலைநகரப் பிரதேசம் (National Capital Territory (NCT)) ஒரு நிர்வாகி மற்றும் சட்டமன்றத்தைக் கொண்டிருக்கும். டெல்லியில் உள்ள எந்தப் பகுதிக்கும் சட்டங்களை இயற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு உள்ளது. மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள துறைகளில் சட்டங்களை இயற்றலாம். இருப்பினும், இதில் சில விதிவிலக்குகள் உள்ளன. காவல்துறை, பொது ஒழுங்கு மற்றும் நிலம் குறித்து சட்டமன்றத்தால் சட்டங்களை இயற்ற முடியாது.  இந்த துறைகள் ஒன்றிய அரசின் கீழ் இருக்கும்.


• உச்ச நீதிமன்றத்தின் இரண்டு அரசியலமைப்பு அமர்வுகள் டெல்லி அரசாங்கத்தின் அதிகாரங்கள் குறித்து தீர்ப்பளித்துள்ளன. முதல் தீர்ப்பு ஜூலை 2018-ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. இரண்டாவது தீர்ப்பு மே 2023-ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. இரண்டு தீர்ப்புகளும் அரசியலமைப்பின் பிரிவு 239AA-ஐ விளக்கின. இந்த பிரிவு தேசிய தலைநகரின் நிர்வாக அமைப்பை வரையறுக்கிறது. 1991-ஆம் ஆண்டில், பிரிவு 239AA அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. அதே ஆண்டு, நாடாளுமன்றம் டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டம், 1991-ஐ நிறைவேற்றியது. இந்த சட்டம் டெல்லி சட்டமன்றம் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாட்டிற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கியது.


• 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், பிரிவு 239AA டெல்லிக்கு "பிரதிநிதித்துவ அரசாங்க வடிவத்தை" (representative form of government") அறிமுகப்படுத்தியதாகக் கூறியது. டெல்லிக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை வழங்குவதை நாடாளுமன்றம் நோக்கமாகக் கொண்டிருந்தது. விலக்கு அளிக்கப்பட்டவற்றைத் தவிர, பொதுப்பட்டியல் மற்றும் ஒரே நேரத்தில் பட்டியலில் உள்ள துறைகள் மீது இந்த சட்டமன்றம் சட்டமன்ற அதிகாரங்களைக் கொண்டுள்ளது. இந்தத் தீர்ப்பு துணை நிலை ஆளுநரின் பங்கையும் தெளிவுபடுத்தியது. அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும். இருப்பினும், சில சூழ்நிலைகளில், இறுதி முடிவுக்காக துணை நிலை ஆளுநர் குடியரசுத்தலைவரிடம் பரிந்துரைக்கலாம்.


• விதி 239AA, டெல்லி அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரத்தை டெல்லி சட்டமன்றத்தின் சட்டமன்ற அதிகாரத்துடன் இணைக்கும் ஒரு விதியாக பிரிவு 239AA-ஐ நீதிமன்றம் விவரித்தது. டெல்லி அமைச்சர்கள் குழுவிற்கு பொதுப் பட்டியலில் உள்ள அனைத்துப் துறைகளின் மீதும் நிர்வாக அதிகாரம் உள்ளது என்பதை அது தெளிவுபடுத்தியது. மாநிலப் பட்டியலில் உள்ள மூன்று துறைகளைத் தவிர, காவல்துறை, பொது ஒழுங்கு மற்றும் நிலம்  போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இருப்பினும், மாநிலப் பட்டியல் அல்லது பொதுப் பட்டியலில் உள்ள எந்தவொரு விஷயத்திலும் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றினால், டெல்லியின் நிர்வாக நடவடிக்கைகள் அந்தச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.




Original article:

Share:

பேரிடர் தாங்கும் உட்கட்டமைப்புக்கான கூட்டணி (CDRI) ஏன் முக்கியமானது? - குஷ்பு குமாரி

 சமீபத்தில், பேரிடர் தாங்கும் உட்கட்டமைப்புக்கான கூட்டணி (Coalition for Disaster Resilient Infrastructure (CDRI)) ஒரு விரிவான ஆய்வை நடத்தியது. தொலைத்தொடர்புத் துறைக்கான பேரிடர் ஆபத்து மற்றும் மீள்தன்மை மதிப்பீட்டு கட்டமைப்பை (Disaster Risk and Resilience Assessment Framework (DRRAF)) உருவாக்குவதே இதன் நோக்கமாக இருந்தது. இந்த ஆய்வு, இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.


பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி வலைத்தளத்தின்படி, “இந்தியாவில், 58%-க்கும் அதிகமான நிலம் நிலநடுக்கங்களால் ஆபத்துகளை எதிர்கொள்வதாகவும், 12% வெள்ளத்தால் பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும், 15% நிலச்சரிவுகளால் பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் மற்றும் 10% க்கும் அதிகமானவை காட்டுத் தீயால் பாதிப்புகளை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் 7,516 கி.மீ கடற்கரையில், 5,700 கி.மீ. கடற்கரை பகுதிகள் புயல்கள் மற்றும் சுனாமிகளால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்கின்றன. தொலைத்தொடர்பு முறை நாடு முழுவதும் பரவியுள்ள ஒரு முக்கியமான உட்கட்டமைப்பை கொண்டுள்ளது. இது இயற்கை பேரிடர்களால்  கடுமையான பாதிப்புகளை சந்திக்கிறது.


முக்கிய அம்சங்கள்:


1. பேரிடர் தாங்கும் உட்கட்டமைப்புக்கான கூட்டணி (Coalition for Disaster Resilient Infrastructure (CDRI)) என்பது ஒரு சர்வதேச அமைப்பாகும். 2019-ஆம் ஆண்டில் இதை அமைக்க இந்தியா முயற்சி எடுத்தது. CDRI-ல் தேசிய அரசாங்கங்கள், ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை திட்டங்கள் பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் மற்றும் நிதி வழிமுறைகள், தனியார் துறை மற்றும் அறிவுசார் நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டாண்மை ஆகும். இது நிலையான வளர்ச்சிக்கு ஆதரவாக புதிய மற்றும் ஏற்கனவே உள்ள உட்கட்டமைப்பு அமைப்புகளின் காலநிலை மற்றும் பேரிடர் அபாயங்களுக்கு எதிர்ப்புத் திறன்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


2. CDRI என்பது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும் ஒன்றிணைந்து செயல்படும் நாடுகளின் குழுவாகும். சாலைகள், ரயில்வேக்கள், மின் நிலையங்கள், தகவல் தொடர்பு இணைப்புகள், நீர் அமைப்புகள் மற்றும் வீடுகள் போன்ற முக்கியமான கட்டமைப்புகளை பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பதே அவர்களின் குறிக்கோளாகும்.


3. பேரிடர் தயார்நிலை மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குவது முக்கியமாக ஒவ்வொரு நாட்டின் பொறுப்பாகும். இருப்பினும், நவீன உள்கட்டமைப்பு எல்லைகளுக்கு அப்பால் இணைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வேக்கள் இப்போது பல நாடுகளை இணைக்கின்றன. மேலும், மின்சார பரிமாற்ற முறைகள் தேசிய எல்லைகளைக் கடக்கின்றன. ஆறுகள் மற்றும் அவற்றின் வளங்கள் வெவ்வேறு நாடுகளால் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இந்த வலையமைப்பின் ஒரு பகுதி சேதமடைந்தால், அது முழு அமைப்பையும் பாதிக்கலாம். இது பேரிடர் நடந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளில் வேலை இழப்புகள் மற்றும் பொருளாதார சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.


4. இந்தியாவின் CDRI முன்முயற்சியின் முக்கிய குறிக்கோள் உள்கட்டமைப்பு வலையமைப்புகளை வலுப்படுத்துவதாகும். இருப்பினும், CDRI உட்கட்டமைப்பு திட்டங்களைத் திட்டமிடவோ அல்லது கட்டமைப்பிற்காகவோ உருவாக்கப்படவில்லை. இது உறுப்பு நாடுகளில் உள்ள திட்டங்களுக்கு நிதியுதவியும் வழங்குவதில்லை. அதற்கு பதிலாக, CDRI சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்துகிறது. இது பயிற்சி மூலம் திறன்களை மேம்படுத்த உதவுகிறது. உட்கட்டமைப்பு மேம்பாட்டில் வடிவமைப்புகள், செயல்முறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கான பொதுவான தரநிலைகளை அமைப்பதிலும் கவனம் செலுத்துகிறது.


5. மீள்தன்மை உட்கட்டமைப்பில் $1 முதலீடு செய்வதன் மூலம் பேரிடர் இழப்புகளில் $4-க்கும் அதிகமாக சேமிக்க முடியும் என்று CDRI மதிப்பிடுகிறது. இது குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு பொருந்தும். உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது பேரிடர்களின் போது ஏற்படும் சேதத்தையும் செலவுகளையும் குறைக்க உதவும்.


உட்கட்டமைப்பு (Infrastructure) என்பது சொத்துக்களை உருவாக்குவது மற்றும் முதலீட்டில் நீண்டகால வருமானத்தை ஈட்டுவது மட்டுமல்ல. இது எண்களைப் பற்றியது மட்டுமல்ல. இது மக்களைப் பற்றியது. மக்களுக்கு உயர்தர, நம்பகமான மற்றும் நிலையான  சேவைகளை சமமான முறையில் வழங்குவதாகும்.


26-வது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP26) இயற்கை பேரழிவுகளுக்கு எதிராக சிறிய தீவு நாடுகளில் முக்கியமான உட்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய முயற்சியை இந்தியா தொடங்கியது. 


CDRI-ன் முக்கிய முயற்சிகளில் ஒன்று நெகிழ்திறன் கொண்ட தீவு நாடுகளுக்கான உள்கட்டமைப்பு (Infrastructure for Resilient Island States (IRIS)) வழங்குவதாகும். பிரதமர் நரேந்திர மோடி இதை 2021-ஆம் ஆண்டில் 26-வது காலநிலை மாற்ற மாநாட்டில் தொடங்கி வைத்தார். கடல் மட்டம் உயர்ந்து வருவதால் அவற்றின் இருப்பு அச்சுறுத்தப்படுகிறது. சிறிய தீவு நாடுகள் காலநிலை மாற்றத்தால் அதிக ஆபத்தில் உள்ளன. சில தீவுகள் இதன் காரணமாக அழிந்துபோகக்கூடும். கடந்த சில ஆண்டுகளாக, பல சிறிய தீவு நாடுகள் ஒரே பேரழிவில் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9% இழந்துள்ளதாக CDRI தெரிவித்துள்ளது.


2022-ஆம் ஆண்டு எகிப்தில் நடந்த காலநிலை மாற்ற மாநாட்டில் CDRI, உட்கட்டமைப்பு மீள்தன்மை விரைவுபடுத்தும் நிதியை (Infrastructure Resilience Accelerator Fund (IRAF)) அறிவித்தது. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (United Nations Development Programme (UNDP)) மற்றும் பேரிடர் அபாயக் குறைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (United Nations Office for Disaster Risk Reduction (UNDRR)) ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த நிதி உருவாக்கப்பட்டது. உட்கட்டமைப்பு அமைப்புகளில் பேரிடர் மீள்தன்மையை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். வளரும் நாடுகள் மற்றும் சிறு தீவு வளரும் நாடுகளுக்கு (Small Island Developing States (SIDS)) உதவுவதில் IRAF கவனம் செலுத்துகிறது.


பேரிடர் மேலாண்மை மசோதா (Disaster Management Bill), 2024


1. கடந்த ஆண்டு டிசம்பரில், மக்களவை பேரிடர் மேலாண்மை திருத்த  மசோதா, 2024-ஐ நிறைவேற்றியது. இந்த மசோதா தற்போதுள்ள பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ஐ மாற்றியது. இந்தச் சட்டம் இந்தியாவில் பேரிடர் மேலாண்மைக்கு ஒரு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை செயல்படுத்த, பிரதமர் தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA) மற்றும் மாநில முதலைமைச்சர்களின் தலைமையிலான மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் (State Disaster Management Authorities (SDMAs)) ஆகிய பேரிடர் மேலாண்மைக்கான ஒரு சட்டப்பூர்வ அமைப்பை உருவாக்கியது.


2. பேரிடர் மேலாண்மை சட்டம் 2004-ஆம் ஆண்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய சுனாமிக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் மாநில அளவில் NDMA, SDMA, தேசிய பேரிடர் மீட்புப் படை (National Disaster Response Force (NDRF)) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (National Institute of Disaster Management (NIDM)) ஆகியவற்றை உருவாக்க வழிவகுத்தது. இந்தச் சட்டத்தைத் தொடர்ந்து 2009-ல் தேசிய பேரிடர் மேலாண்மைக் கொள்கையும் (National Disaster Management Policy) 2016-ல் தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டமும் (National Disaster Management Plan) உருவாக்கப்பட்டது.


3. பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா (Disaster Management (Amendment) Bill, 2024) நகர்ப்புற பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை உருவாக்க முன்மொழிகிறது. இவை நகராட்சி ஆணையரால் வழிநடத்தப்படும். பெருநகரங்களுக்கு சிறப்பு பேரிடர் மேலாண்மை தேவைகள் உள்ளன. அவற்றில் பல மாவட்டங்கள் இடம்பெற்றிருக்கும். நகர அளவிலான பேரழிவுகளுக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்படுகிறது. இது நகர்ப்புற வெள்ளம் போன்ற பிரச்சினைகளை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும்.


4. 2005 சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாநில பேரிடர் நிவாரண நிதி (State Disaster Relief Fund (SDRF)) இப்போது அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுவிற்கு (National Crisis Management Committee) சட்ட அங்கீகாரத்தை வழங்குகிறது. 


தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பேரிடர் மதிப்பீடுகள், நிதி ஒதுக்கீடுகள், செலவுகள் மற்றும் தயார்நிலை மற்றும் தணிப்புத் திட்டங்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட தேசிய பேரிடர் தரவுத்தளத்தை உருவாக்கி பராமரிக்கும் பணியை மேற்கொள்ளும். பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச நிவாரணத்திற்கான வழிகாட்டுதல்களை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைக்க வேண்டும் என்றும் இந்த மசோதா முன்மொழிகிறது.




Original article:

Share:

சங்க இலக்கியத்தின் ‘மறு கண்டுபிடிப்பு’ மற்றும் அது எவ்வாறு தமிழ் வரலாறு மற்றும் தொல்லியல் ஆதாரமாக மாறியது? -அட்ரிஜா ராய்சௌத்ரி

 சங்க இலக்கியம் தமிழ் உணர்வுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நூல்கள் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மட்டுமே 'மறு கண்டுபிடிப்புக்கு' உட்பட்டன.


தமிழ்நாட்டில் உள்ள கீழடி அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் ஒருவர், சங்க இலக்கியங்களின் கவிதைகள், அருங்காட்சியகம் சுற்றிலும் அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டார். இந்தக் கல்வெட்டுகள் அருங்காட்சியகத்தின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மூலையையும் அலங்கரிக்கின்றன. இதன், அருகிலுள்ள இடத்திலிருந்து தொல்பொருள் கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதே அவற்றின் முக்கிய நோக்கமாக இருந்தது. 

இந்தக் கண்டுபிடிப்புகள், தமிழ் வரலாறு முன்னர் நினைத்ததைவிட பல நூறு ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், அரசியல் விவாதங்களில் அகழ்வாராய்ச்சிகள் என்பது ஒரு முக்கிய தலைப்பாக இருந்து வருகின்றன. அவை தமிழ் பேசும் உலகில் மிகுந்த உற்சாகத்தையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில், அவை தமிழர்களின் பண்டைய வரலாற்றை நிரூபிக்கின்றன மற்றும் நன்கு அறியப்பட்ட தமிழ் சங்க இலக்கியத்திற்கு முக்கியமான சான்றுகளை வழங்குகின்றன.


மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியரும் சமூக ஆர்வலருமான ஏ.முத்துகிருஷ்ணன் கூறுகையில், “இவ்வளவு காலம் சங்க நூல்கள் கற்பனை என்று ஏளனம் செய்யப்பட்டன" சங்க நூல்களில் எழுதப்பட்ட நகர்ப்புற வாழ்க்கை இங்கு இருந்தது என்பதற்கு நம்மிடம் ஆதாரம் இல்லை என்பதுதான் பிரச்சனை" என்று அவர் விளக்குகிறார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில், கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை மற்றும் ஆலங்குளம் ஆகிய இடங்களில் தொல்லியல் துறை அகழாய்வுகள் மூலம் பெரிய குடியிருப்புகள் கண்டறியப்பட்டு, சங்க நூல்கள் விவரித்தவற்றில் பலவற்றை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன.


இலக்கியத்தை தொல்பொருளியல் துறையுடன் இணைக்கும் முயற்சிகள் புதியவை அல்ல. அவை தென்னிந்திய துணைக் கண்டத்திற்கும் புதியவை அல்ல. சுதந்திரத்திற்குப் பிறகு, தொல்பொருள் ஆய்வாளர் பி.பி.லால் தலைமையிலான இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (Archaeological Survey of India (ASI)) ஒரு பெரிய திட்டத்தைத் தொடங்கியது. தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் இராமாயணம் மற்றும் மகாபாரதத்திற்கான பொருள் ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதே இலக்காக இருந்தது.


தமிழ் பண்பாட்டில், சங்க இலக்கியங்கள் இந்தியாவின் பிற பகுதிகளில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் கொண்டிருக்கும் அதே கலாச்சார மற்றும் உணர்ச்சி முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில், இன்றைய மக்கள் இந்த நூல்களை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதில் சுவாரஸ்யமான ஒற்றுமைகள் உள்ளன. அவை, பெரும்பாலும் வரலாறு மற்றும் தொல்பொருளியல் துறைக்கான முக்கியமான ஆதாரங்களாகக் காணப்படுகின்றன.


சங்கம் என்பது தென்னிந்தியாவிலிருந்து அறியப்பட்ட மிகப் பழமையான இலக்கியமாகும். இது பழைய தமிழில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பைக் குறிக்கிறது. இந்தத் தொகுப்பில் 8 கவிதைத் தொகுப்புகள், 10 சிறு கவிதைகள் (idylls), ஒரு இலக்கண புத்தகம் மற்றும் 18 சிறு படைப்புகள் உள்ளன. மொத்தத்தில், 473 கவிஞர்களால் எழுதப்பட்ட சுமார் 2,381 கவிதைகள் உள்ளன. கூடுதலாக, 102 கவிதைகள் பெயர் குறிப்பிடப்படாத ஆசிரியர்களால் எழுதப்பட்டன. சங்க நூல்களின் சரியான தேதிகள் குறித்து அறிஞர்கள் உடன்படவில்லை. இருப்பினும், அவை கிமு 3-ம் நூற்றாண்டுக்கும், கிபி 3-ம் நூற்றாண்டுக்கும் இடையில் இயற்றப்பட்டவை என்பதை பெரும்பாலானோர் ஒப்புக்கொள்கிறார்கள்.


சங்கப் பாடல்களை அகம் மற்றும் புறம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அகக் கவிதைகள் காதலை மையமாகக் கொண்டுள்ளன. அதே சமயம், புறக் கவிதைகள் போர், மரணம், சமூகம் மற்றும் இராஜ்ஜியம் போன்ற கருப்பொருள்களை உள்ளடக்கியது.


சங்கப் பாடல்கள் தமிழ் கலாச்சாரத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டிருந்தாலும், அவை 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ அல்லது 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ மட்டுமே மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. இது அவற்றின் பரவலான பிரபலத்திற்கு வழிவகுத்தது. இதற்கு முன்பு, இந்தப் பாடல்களில் பெரும்பாலானவை வாய்மொழியாகக் கடத்தப்பட்டன. ”The Tamils: A Portrait of a Community” (2025) எழுதிய பத்திரிகையாளர் நிர்மலா லட்சுமணன், "இந்தப் பாடல்களில் சில குழந்தைகளுக்கான தாலாட்டுப் பாடல்களாகவோ அல்லது வணிகர்கள் மற்றும் பிறரால் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்களாகவோ கடத்தப்பட்டன" என்று விளக்குகிறார்.

இந்த நூல்களின் 'மறு கண்டுபிடிப்பிற்கான' பெருமைக்குரியவர்கள் உ.வே. சுவாமிநாத ஐயர் மற்றும் C.W. தாமோதரன் பிள்ளை போன்ற இரண்டு பேர் ஆவர். உ.வே. சுவாமிநாத ஐயர் "தமிழ் தாத்தா" என்று அழைக்கப்பட்டார். கும்பகோணத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். அங்கு பணிபுரிந்தபோது, ​​சேலம் ராமசாமி முதலியாரை சந்தித்தார். ராமசாமி முதலியார் ஒரு வழக்கறிஞராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும் இருந்தார். 


அவர் உ.வே. சுவாமிநாத ஐயருக்கு சிந்தாமணி என்ற பழங்கால நூலை அறிமுகப்படுத்தினார். உரை அவரது வாழ்க்கையை மாற்றியது. அன்றிலிருந்து, உ.வே. சுவாமிநாத ஐயர் தனது வாழ்நாள் முழுவதையும் பண்டைய தமிழ் இலக்கியங்களைக் கண்டறிவதிலும் திருத்துவதிலும் அர்ப்பணித்தார். இவருடைய முயற்சிகளில், கும்பகோணத்தில் வக்கீல் பணிபுரிந்த C.W. தாமோதரன் பிள்ளையும் சேர்ந்து, தமிழ் மொழியின் செழுமை மற்றும் தொன்மைக்காக தீவிரமாக வாதிட்டார். உ.வே. சுவாமிநாத ஐயர் மற்றும் C.W. தாமோதரன் பிள்ளை சேகரித்து ஆவணப்படுத்திய நூல்கள் பெரும்பாலும் பனை ஓலைகளில் எழுதப்பட்டவை. அவற்றில் பல அழியும் தருவாயில் இருந்தன. மேலும் பல முழுமையடையாத வசனங்களையும் கொண்டிருந்தன.


1887-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் சங்கக் கவிதையான ”கலித்தொகை”யின் மறுபதிப்பின் அறிமுகத்தில், கையால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்துவதில் உள்ள சவால்களை தாமோதரன் பிள்ளை விவரிக்கிறார். கையெழுத்துப் பிரதி முழுமையடையவில்லை, தொடக்கமும் முடிவும் இல்லை என்று அவர் விளக்குகிறார். ஒவ்வொரு வரியிலும் பல எழுத்துக்கள் உடைந்திருந்ததால், படிக்க கடினமாக இருந்தது. இதனால், விரக்தியடைந்த அவர், அதைப் படிக்க முயற்சிப்பதைக்கூட கைவிட்டார்.


 நெருப்பு, நீர் மற்றும் மதக் கட்டுப்பாடுகளைத் தாண்டிய பகுதிகள் மட்டுமே எஞ்சியிருந்தன என்று அவர் குறிப்பிட்டார். 1920 வாக்கில், அனைத்து சங்கப் படைப்புகளும் அச்சிடப்பட்டிருந்தன. வரலாற்றாசிரியர் வி. ராஜேஷ் தனது ”கையெழுத்துப் பிரதிகள், நினைவகம் மற்றும் வரலாறு: காலனித்துவ இந்தியாவில் பாரம்பரிய தமிழ் இலக்கியம் 2013” (Manuscripts, Memory and History: Classical Tamil Literature in Colonial India) என்ற புத்தகத்தில், பாரம்பரிய தமிழ் படைப்புகள் அதிகமான மக்களுக்குக் கிடைத்த காலம் இது என்று எழுதுகிறார். இதற்கு முன்பு, ஒரு சிறிய குழு அறிஞர்கள் மற்றும் மத மடங்கள் மட்டுமே அவற்றை அணுக முடிந்தது.


இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான ஒரு நேர்காணலில், ராஜேஷ் கூறுகையில், “19 ஆம் நூற்றாண்டில் அச்சு கலாச்சாரத்தின் விரிவாக்கம் போன்ற சில முன்னேற்றங்கள், இந்தக் காலகட்டத்தில் சங்க இலக்கியத் தொகுப்பு வெளியிடப்படுவதற்கு நேரடியாகக் காரணமாக இருந்தன” என்று கூறுகிறார்.


19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இருந்த தமிழ் அறிஞர்கள் சங்க நூல்களின் பண்டைய தோற்றத்தை நிரூபிக்க பெரும் முயற்சி எடுத்ததாக ராஜேஷ் ஒப்புக்கொள்கிறார். இந்த நூல்கள் உண்மையில் பழமையானவை என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். இருப்பினும், தாமோதரன் பிள்ளை மற்றும் உ.வே. சாமிநாத ஐயர் போன்ற நவீன அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நூல்களை மீண்டும் கண்டுபிடிப்பதில் தங்கள் பங்கை பெரும்பாலும் மிகைப்படுத்தியுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். 'மறு கண்டுபிடிப்பு' மீதான இந்த கவனம் ஒரு முக்கியமான உண்மையை புறக்கணிக்க வழிவகுத்தது. இடைக்காலத்தில் தொகுக்கப்பட்ட இந்த நூல்கள் மீண்டும் தொகுக்கப்பட்டு நவீன காலத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த அதிகப்படியான முக்கியத்துவம் காரணமாக அறிஞர்கள் இந்த நூல்கள் எவ்வாறு வரலாற்றில் கடத்தப்பட்டன என்பதைப் படிப்பதைத் தடுத்து நிறுத்தியதாக ராஜேஷ் நம்புகிறார்.


'சங்க இலக்கியம்' என்ற பரந்த பிரிவின் கீழ் இந்த நூல்களை தொகுப்பது வரலாற்று ரீதியாக துல்லியமானது அல்ல என்று சிலர் வாதிடுகின்றனர். மொழியியல் அறிஞர் கே.வி. ஸ்வெலெபில், தனது ”தமிழ் இலக்கியம்” 1975 என்ற புத்தகத்தில், 19-ம் நூற்றாண்டில் கலாச்சார தமிழ் நூல்களை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது என்று விளக்குகிறார். ஏனெனில், இது கி.பி 6 மற்றும் 8-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இலக்கிய மரபில் ஒரு முறிவு ஏற்பட்டது. இந்த நேரத்தில், மதச்சார்பற்ற, பாணர் கவிதைகள் (bardic poetry) "இறந்த செவ்வியல் பாரம்பரியத்தின்" ஒரு பகுதியாக மாறியது. பின்னர் அது சைவ-வைணவ பக்தி இயக்கத்தின் மத மற்றும் தனிப்பட்ட பாடல்களால் மாற்றப்பட்டது.


பின்னர், 19-ம் நூற்றாண்டின் தமிழ் பண்டிதர்கள் இந்த செவ்வியல் இலக்கிய பாரம்பரியத்தின் மீது தங்கள் கவனத்தை செலுத்தியபோது, ​​அவர்கள் 7-ம் நூற்றாண்டின் பக்தி காலத்திற்கு முந்தைய அனைத்து படைப்புகளையும் ‘சங்கம்’ என்ற தொகுப்புகளின் கீழ் தொகுத்தனர். இந்த அணுகுமுறை உள்ளடக்கம், வடிவம், மொழி, பாணி, உரைநடை, நோக்கம் மற்றும் உந்துதல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைப் புறக்கணித்ததாக ஸ்வெலெபில் விளக்குகிறார். இதன் விளைவாக, சுமார் 800 ஆண்டுகால இலக்கியப் படைப்புகள் ஒரு எளிய குழுவாகக் குறைக்கப்பட்டன. இந்தக் குழுவிற்கு கிமு 2000 முதல் கிபி 800 வரை வெவ்வேறு தேதிகள் ஒதுக்கப்பட்டன.


"இது ஒரு வரலாற்று வெற்றி," என்று அவர் குறிப்பிடுகிறார்.


இந்தக் கவிதைகள் வெவ்வேறு கவிஞர்களால் எழுதப்பட்டவை என்று லட்சுமணன் கூறுகிறார். அவை இயற்றப்பட்ட நேரத்தில், அவை ஒரே தொகுப்பின் ஒரு பகுதியாகக் காணப்படவில்லை. அவர் கூறுகிறார், "அவை அனைத்தும் ஒரே மாதிரியான காலத்தைச் சேர்ந்தவை. வசதிக்காக அவற்றை சங்க இலக்கியம் என்று அழைக்கிறோம்."


3 சங்கங்களின் கதை


பின்னர், சங்கப் பாடல்களின் உருவாக்கம் பற்றிய ஒரு புராணக்கதை உள்ளது. பாண்டிய மன்னர்கள் மூன்று இலக்கியக் கூட்டங்கள் அல்லது சங்கங்களை அமைத்ததாகக் கூறுகிறது. இந்தக் கூட்டங்களில் கடவுள்களும் கவிஞர்களும் கலந்து கொண்டனர். மேலும், இங்கு இலக்கியப் படைப்புகள் வழங்கப்பட்டன. முதல் கூட்டம் மதுரையில் நடந்து 4,400 ஆண்டுகள் நீடித்தது. இரண்டாவது கூட்டம் கபாடபுரத்தில் நடந்து 3,700 ஆண்டுகள் நீடித்தது. மூன்றாவது கூட்டம் மீண்டும் மதுரையில் நடந்து 1,850 ஆண்டுகள் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தனது புத்தகத்தில், மூன்று சங்கங்களின் கதை முதன்முதலில் 8-ம் நூற்றாண்டின் விளக்கவுரையில் தோன்றியதாக ராஜேஷ் வாதிடுகிறார். இந்த விளக்கவுரை ”இறையனார் களவியல்” (Iraiyanar Kalaviyal) என்ற இலக்கண உரைக்காக எழுதப்பட்டது. காலப்போக்கில், இந்த புராணக்கதை தமிழ் அறிவார்ந்த மரபில் ஆழமாக வேரூன்றியது. நவீன காலத்தின் ஆரம்பத்திலும்கூட, தமிழ் அறிஞர்கள் இந்த புராணக்கதையைப் பகிர்ந்து கொண்டதாக ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.


சங்கங்கள் நடந்ததா இல்லையா என்பது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினை என்று ராஜேஷ் கூறுகிறார். ஒவ்வொரு சங்கமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது என்ற பாரம்பரிய நம்பிக்கை நவீன வரலாற்று சிந்தனையுடன் ஒத்துப்போகவில்லை என்று அவர் விளக்குகிறார்.


புலவர்களின் மூன்று சங்கங்களின் கருத்து பண்டைய காலங்களிலிருந்து தமிழ்நாட்டில் சைவ சமயம் இருந்து வருகிறது என்ற நம்பிக்கையுடன் நெருக்கமாக தொடர்புடையது என்று அவர் விளக்குகிறார். தமிழ்நாட்டில் சைவ சமயத்தின் நீண்ட வரலாற்றை நிரூபிக்க விரும்பிய அறிஞர்கள் இந்த மூன்று சங்கங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முயன்றவர்கள் என்றும் அவர் கூறுகிறார்.


தமிழ் தேசியமும், சங்க இலக்கியமும்


இந்திய தேசியவாதம் தொடங்கிய அதே நேரத்தில் உ.வே. சாமிநாதர் ஐயர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட சங்க நூல்களை வெளியிட்டார். இந்திய தேசிய காங்கிரஸ் 1885-ம் ஆண்டில் பம்பாயில் நிறுவப்பட்டது. தொடக்கத்திலிருந்தே, அதில் மெட்ராஸ் பிரசிடென்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அடங்குவர், அவர்களில் சிலர் தமிழ் அறிஞர்களும் ஆவர். மெட்ராஸைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் இந்திய தேசியவாதத்தையும் தமிழ் பெருமையையும் சமநிலைப்படுத்த முடிந்தது.


ராஜேஷ் தனது புத்தகத்தில் ராமசாமி முதலியார் பற்றி எழுதுகிறார். ராமசாமி     முதலியார் ஒரு மிதவாதி காங்கிரஸ்காரர் ஆவார். உ.வே. சாமிநாதர் ஐயர் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து பாரம்பரிய தமிழ் இலக்கியப் படைப்புகளை வெளியிட ஊக்குவித்தார். ராஜேஷ் ஜி சுப்பிரமணிய ஐயரையும் குறிப்பிடுகிறார். அவர் தி இந்து மற்றும் சுதேசமித்திரன் என்ற தமிழ் செய்தித்தாளின் நிறுவனர் ஆவார். அந்தப் பத்திரிகை பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் குறித்த கட்டுரைகளை வெளியிடும். செவ்வியல் இலக்கிய நூல்களை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்தவர்களின் முயற்சிகளைப் பாராட்டியது.


மெட்ராஸைச் சேர்ந்த மற்றொரு முக்கியமான காங்கிரஸ் தலைவர் கவிஞர் சி. சுப்பிரமணிய பாரதி ஆவார். அவர் ”இந்தியா” என்ற தமிழ் வார இதழைத் நடத்தினார். மேலும், காலனித்துவ அரசாங்கத்தை விமர்சிக்க ”திருக்குறள்” என்ற உரையை அடிக்கடி பயன்படுத்தினார்.


வ.உ. சிதம்பரம் பிள்ளையும் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவர் ஒரு போர்க்குணமிக்க தேசியவாதியாகவும், சென்னையில் சுதேசி இயக்கத்தின் தலைவராகவும் இருந்தார். அவர் தனது பெரும்பாலான நேரத்தை பாரம்பரிய தமிழ் படைப்புகளைத் திருத்தி வெளியிடுவதில் செலவிட்டார்.

ஆரம்பகால திராவிட இயக்கத் தலைவர்கள் தமிழ் அடையாளத்தையும் திராவிட தொன்மையையும் உறுதிப்படுத்த சங்க நூல்களையும் பயன்படுத்தினர். குறிப்பாக, நீதிக் கட்சி, தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காங்கிரஸின் கூற்றை சவால் செய்தது.


சங்க இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு எழுதுதல்


சுதந்திரத்திற்குப் பிறகும், அதற்கு முன்பும் கூட, சங்க நூல்கள் தமிழ்நாட்டின் வரலாற்றை எழுத அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தென்னிந்தியாவின் நன்கு அறியப்பட்ட வரலாற்றாசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி தனது ”சோழர்கள் (1955)” (The Colas) என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பகால சோழர்களைப் பற்றிய தகவல்களின் முக்கிய ஆதாரம் மூன்றாம் சங்கம் என்று அழைக்கப்படும் ஆரம்பகால தமிழ் இலக்கியங்கள் என்று அவர் எழுதினார்.


1975-ம் ஆண்டில், வரலாற்றாசிரியர் ஆர். சம்பகலட்சுமி சங்க நூல்களிலிருந்து சான்றுகளைப் பயன்படுத்தி இடப் பெயர்களைப் படித்தார். ஆரம்பகால வரலாற்றுக் காலத்தில் தோண்டப்பட்ட வாழ்விடத் தளங்களுடன் அவற்றை இணைத்தார். தென்னிந்தியாவின் ஆரம்ப மற்றும் நவீன காலத்திற்கு முந்தைய படைப்புகளுக்கு அவர் பெயர் பெற்றவர் ஆவார். முன்னதாக, 1946-ம் ஆண்டில், மெகாலித் என்றும் அழைக்கப்படும் இரும்புக் கால புதைகுழிகளை, சங்கத் தொகுப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றுடன் கே.ஆர். ஸ்ரீனிவாசன் ஒப்பிட்டார். 1980-ம் ஆண்டு காலகட்டங்களில், வரலாற்றாசிரியர் ராஜன் குருக்கள் பண்டைய நூல்களிலிருந்து தகவல்களை ஆதரிக்க தொல்பொருள் தரவுகளையும் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொல்பொருள் ஆய்வாளர் ஷினு ஏ ஆபிரகாம் 2003-ல் "சேர, சோழ, பாண்டியா : ஆரம்பகால வரலாற்று தென்னிந்தியாவின் தமிழ் ராஜ்ஜியங்களை அடையாளம் காண தொல்பொருள் சான்றுகளைப் பயன்படுத்துதல்" (Chera, Chola, Pandya: Using Archaeological Evidence to Identify the Tamil Kingdoms of Early Historic South India) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.


 இந்தக் கட்டுரையில், அறிஞர்கள் ”தமிழகத்தை” ஒரு தனித்துவமான கலாச்சாரப் பகுதியாக எவ்வாறு அடையாளம் காண்கிறார்கள் என்பதை விளக்குகிறார். இந்த அடையாளம் பல்வேறு உரை சார்ந்த மூலங்களிலிருந்து வருகிறது. இந்த மூலங்களில் மிக முக்கியமானது சங்க இலக்கியம் ஆகும்.


இருப்பினும், சங்க இலக்கியங்களை வரலாற்றுத் தரவுகளாகப் பயன்படுத்த, அதன் கவிதை மற்றும் பாணர் தன்மையை (poetic and bardic nature) நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் எச்சரிக்கிறார். பெரும்பாலான கவிதைகள் ஆட்சியாளர்கள், போர்வீரர்கள் மற்றும் புரவலர்களைப் புகழ்கின்றன என்று அவர் விளக்குகிறார். இருப்பினும், இது வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தொல்பொருள் பதிவுகளுக்கான குறிப்புகளாக நூல்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை.


கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள இலக்கிய ஆதாரங்கள் மற்றும் பொருள் பதிவுகளைப் பயன்படுத்துவதற்கான தொடர்ச்சியான பேச்சுவார்த்தை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, முழு தெற்காசியப் பகுதிக்கும் பொருந்தும் என்று தொல்பொருள் ஆய்வாளர் ஸ்மிருதி ஹரிச்சரன் விளக்குகிறார். தொல்பொருளியல் துறையில் காணப்படும் பொருள் ஆதாரங்களை பூர்த்தி செய்யும் தகவல்களை நூல்கள் வழங்க முடியும் என்றும் அவர் நம்புகிறார்.


உதாரணமாக, ஹரிச்சரன் தென்னிந்தியாவில் மெகாலிதிக் புதைகுழிகளை (megalithic burials) ஆராய்கிறார். பல்வேறு வகையான அடக்கங்கள் உள்ளன என்றும், சில மற்றவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமாகத் தெரிகின்றன என்றும் அவர் விளக்குகிறார். இருப்பினும், இந்த வேறுபாடுகள் எதைக் குறிக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. இந்த வேறுபாடுகள் சமூக, கலாச்சார, பொருளாதார அல்லது காலம் தொடர்பான காரணிகளுடன் இணைக்கப்படலாம். ஆனால், தோண்டியெடுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் இன்றுவரை உயிர்வாழாததால், ஆராய்ச்சியாளர்கள் முக்கியமான விவரங்களுக்கு நூல்களை நம்பியுள்ளனர். அடக்கம் செய்யும் நடைமுறைகளில் சமூக-கலாச்சார வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள இந்த நூல்கள் உதவுகின்றன.


1946-ம் ஆண்டில், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வெவ்வேறு புதைகுழி வகைகளுக்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு பெயர்ச்சொற்களைப் பற்றி சீனிவாசன் ஒரு கட்டுரையில் விவாதித்தார். கடந்த காலத்தில், மக்கள் மிகவும் உணர்வுடன் வெவ்வேறு அடக்கம் வகைகளைப் பயன்படுத்தினர் மற்றும் அவற்றுக்கான குறிப்பிட்ட பெயரிடலைக் கொண்டிருந்தனர் என்பதை இது நமக்குச் சொல்கிறது.


இலக்கிய நூல்களை மட்டுமே உறுதிப்படுத்த அகழ்வாராய்ச்சியைப் பயன்படுத்துவது அல்லது அவற்றிலிருந்து வரும் தகவல்களை மட்டுமே நம்பியிருப்பது இலக்கியம் மற்றும் தொல்லியல் இரண்டையும் பாதிக்கிறது என்று ஹரிச்சரண் கூறுகிறார். "எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள இது உண்மையில் நமக்கு உதவாது" என்று அவர் கூறுகிறார். உதாரணமாக, சங்க காலத்திற்குப் பிந்தைய பாடல்களான சிலப்பதிகாரம், பெண் கதாநாயகி கண்ணகி மதுரையை எரித்ததாகக் குறிப்பிடுகிறது.


 "நகரம் எரிக்கப்பட்டதற்கான தொல்பொருள் ஆதாரங்களை நாங்கள் காணவில்லை என்றாலும், தொல்லியல் மற்றும் இலக்கிய நூல்களிலிருந்து அங்கு ஒரு பெரிய குடியிருப்பு இருந்ததை நாங்கள் கற்றுக்கொள்கிறோம்," என்று அவர் விளக்குகிறார். "கீழடியில் அகழ்வாராய்ச்சிகள் கடந்த காலத்தில் ஒரு பெரிய குடியிருப்பு இருந்ததை நமக்குக் காட்டுகின்றன," என்று அவர் மேலும் கூறுகிறார்.


கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகளை "வளர்ந்து வரும் வரலாறு" (history in the making) என்று தொல்பொருள் ஆய்வாளர் சுதேஷ்னா குஹா அழைக்கிறார். இந்த வரலாறு தென்னிந்தியாவில் ஒரு விவாதத்தை உள்ளடக்கியது என்று அவர் விளக்குகிறார். வட இந்திய தேசியவாதம் இந்தியாவின் பண்டைய கடந்த காலத்தை வேத மற்றும் சமஸ்கிருத மரபுகளுடன் எவ்வாறு இணைக்க முயற்சிக்கிறது என்பது பற்றிய விவாதம் இது. இந்த இணைப்பு இந்தியாவின் மேம்பட்ட நகர்ப்புற வெண்கல யுக கலாச்சாரத்தின் (Bronze Age culture) மூலம் செய்யப்படுகிறது. இந்தியாவின் ஆரம்பகால நகர்ப்புற குடியிருப்புகளின் தமிழ் பாரம்பரியத்தைக் காண்பிப்பதே கீழடி அகழ்வாராய்ச்சிகளின் நோக்கமாகும் என்று அவர் மேலும் கூறுகிறார்.


தென்னிந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சி பல ஆண்டுகளாக பல இரும்புக் கால தளங்களை, பெரும்பாலும் மெகாலித் தொல்பொருட்களை கண்டுபிடித்துள்ளது. இந்த தளங்கள் கிமு 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும். இருப்பினும், அவை மிகவும் பழமையானதாக இருக்கலாம் என்று குஹா கூறுகிறார். கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் தமிழ்நாட்டில் நாகரிகம் கிமு 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறுகின்றன. கீழடிக்கு முந்தைய அகழ்வாராய்ச்சிகள், தென்னிந்தியாவின் ஆரம்பகால நகரங்களுக்கான சான்றுகளைக் காட்டின என்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


தொல்பொருள் ஆய்வாளர் நயன்ஜோத் லஹிரி ”Monuments Matter: India’s Archaeological Heritage since Independence 2017” என்ற புத்தகத்தை எழுதினார். அதில், கொடுமணல் மற்றும் பொருந்தல் ஆகிய இரண்டு முக்கியமான தளங்களை அவர் குறிப்பிட்டார். இந்த தளங்கள் 2009-ம் ஆண்டு தொடங்கி கே. ராஜன் என்பவரால் தோண்டியெடுக்கப்பட்டன. அவை, கிமு 5-ம் மற்றும் 6-ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் நகர்ப்புற கலாச்சாரத்தின் ஆரம்ப அறிகுறிகளைக் காட்டின. தென்னிந்திய வரலாற்றைப் புரிந்துகொள்வதில் இந்த கண்டுபிடிப்புகளை "முக்கிய மைல்கல்" (major landmark) என்று லஹிரி அழைத்தார்.


இருப்பினும், கீழடி சிறப்பு வாய்ந்தது. இது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியுடன் இணைகிறது. இந்தப் பகுதி சங்க கவிதைகளின் பெரிய மற்றும் பழமையான தொகுப்பாகும்.




Original article:

Share:

கிராமப்புற இந்தியாவிற்கு அதிக திறன் கிராமங்கள் தேவை -குஷாங்கூர் டே, அவினாஷ் குமார்

 திறன் கிராமங்கள் கிராமப்புற மீட்சிக்கு உதவும். கிராமப்புற மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த கிராமங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.


பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் கிராமப்புற இந்தியா ஏன் முக்கியமானது? இது இந்தியாவின் மக்கள்தொகையில் 65 சதவீதத்தைக் கொண்டுள்ளது. பெரும்பாலான கிராமப்புற மக்கள் 15-59 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். கோவிட்-19 பிறகு, கிராமப்புற தொழிலாளர் பங்கேற்பு விகிதம் முன்பை விட அதிகரித்துள்ளது). மேலும், 2017 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான 14 சதவீத CAGR உடன் கிராமத் தொழில் தயாரிப்புகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், அனைத்திந்திய கிராமப்புற நிதி உள்ளடக்கல் கணக்கெடுப்பு (All India Rural Financial Inclusion Survey) 2021-22 அறிக்கையின்படி கிராமப்புற இந்தியாவின் தனிநபர் வருமானம் ஒரு நாளைக்கு ₹100 ரூபாய் கூட இல்லை.


எனவே, 2025–26 ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மாநிலங்களுடன் கூட்டு சேர்ந்து விரிவான பல துறைகளின் ‘கிராமப்புற செழிப்பு மற்றும் மீள்தன்மை’ திட்டம் (‘rural prosperity and resilience’ programme) சரியான நேரத்தில் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.


இது திறன், முதலீடு மற்றும் தொழில்நுட்பம், கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிப்பது மற்றும் நிறுவன வளர்ச்சியை ஊக்குவிப்பது ஆகியவற்றின் மூலம் விவசாயத்தில் குறைந்த வேலைவாய்ப்பை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகளாவிய மற்றும் உள்நாட்டில் சிறந்த நடைமுறைகள் இணைக்கப்படும் என்றும், பலதரப்பு வளர்ச்சி வங்கிகளிடம் இருந்து தகுந்த தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகள் பெறப்படும் என்றும் நிதி அமைச்சர் எடுத்துரைத்தார்.


எனவே, ஒரு சில பிரச்சனைகள் கவனிக்கப்பட வேண்டும்: கிராமப்புற வளர்ச்சியை முன்னேற்ற திறன் கிராமம் என்ற கருத்தை நாம் பிரச்சாரம் செய்யலாமா? சிறந்த நடைமுறைகள் எப்படி கிராமப்புற பின்னடைவுக்கான ஆதார அடிப்படையிலான கொள்கை வகுப்பை தெரிவிக்கும்?


கிராமப்புற மீள்தன்மை, திறன் கிராமங்கள்


கிராமப்புற மீள்தன்மை என்பது கிராமப்புறங்கள் தங்கள் வாழ்க்கை முறை, கட்டமைப்புகள் மற்றும் சமூகங்களை வலுவாக வைத்திருக்கும் அதே வேளையில் பிரச்சினைகளைக் கையாளவும், சவால்களில் இருந்து மீளவும், மாற்றங்களைச் செய்யவும் உருவாக்கும் திறன் ஆகும். இது இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் நல்ல வாழ்க்கைத் தரத்தைப் பராமரிக்க உதவுகிறது


மீள்தன்மை மூன்று இணைக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை, பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சூழலியல். இது பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சமூக பிணைப்புகளை வலுப்படுத்தவும், இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.


கிராமப்புறங்கள் வலுவாகவும், மீள்தன்மையுடனும் இருக்க திறன் கிராமங்கள் உதவுகின்றன. மக்களின் வாழ்க்கையையும் வேலைகளையும் மேம்படுத்த அவர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷனின் கீழ் தொடங்கப்பட்ட திறன் கிராமத் திட்டம், 2019ஆம் ஆண்டுக்குள் 300 கிராமக் குழுக்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், இந்த திட்டம் காலப்போக்கில் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டதாகத் தெரிகிறது.


2016 ஆம் ஆண்டில், சில மாநிலங்கள் CSR நிதிகள் அல்லது உள்ளூர் மேம்பாட்டு நிதிகளின் ஆதரவுடன் ஸ்மார்ட் வில்லேஜ் இயக்கத்தை (Smart Village Movement (SVM)) தொடங்கின. இந்த இயக்கம் கலிபோர்னியா பல்கலைக்கழக பெர்க்லி வளர்ச்சி சந்தை மையத்துடன் இணைந்து செயல்படுகிறது. இது ஒரு இலாப நோக்கற்ற குழுவாகும். பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதன் மூலம் கிராமப்புறங்களை வலுப்படுத்த பல்வேறு துறைகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை SVM காட்டுகிறது.

தொழில்நுட்பம், உள்ளூர் அறிவு மற்றும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி கிராமப்புறங்கள் நீடித்து நிலைக்கும் வகையில் SVM திட்டம் உதவுகிறது. கிராமங்களை வலிமையாக்க, மேலிருந்து கீழான, கடுமையான அணுகுமுறையை நாம் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, திட்டத்தைத் திட்டமிட்டு இயக்கும்போது சமூகத்தை உள்ளடக்கிய மற்றும் பல்வேறு துறைகளை இணைக்கும் ஒரு கீழ்நிலை-மேல் முறையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.


இந்த அணுகுமுறை கிராமப்புற மக்கள் மற்றும் குழுக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் அவர்களின் அறிவு, முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பைச் சார்ந்துள்ளது. அதிகப்படியான பயன்பாடு மற்றும் குறைவைத் தவிர்க்க பகிரப்பட்ட வளங்களை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது கிராமப்புற மீள்தன்மைக்கு அவசியமாகும். எனவே, பொது, தனியார் துறை மற்றும் உள்ளூர் மக்களுக்கு இடையிலான சமூக அமைப்புகள் அல்லது கூட்டாண்மைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.


மேலும், உள்ளூர் தலைமை, குழுப்பணி மற்றும் வலுவான சமூக பிணைப்புகள் கிராமப்புறங்கள் வலுவாக இருக்க உதவுகின்றன. அவை புதிய யோசனைகள் மற்றும் திறன் கிராமக் குழுக்களில் பகிரப்பட்ட முடிவெடுப்பதை இணைக்கின்றன.


முன்னோக்கிய வழி


முதலாவதாக, கிராமப்புறங்களை வலிமையாக்க திறன் கிராமங்களை உருவாக்குவதற்கு முழுமையான மற்றும் சமூகம் சார்ந்த அணுகுமுறை தேவை. இது சமூக, டிஜிட்டல் மற்றும் பௌதீக அம்சங்களை ஒன்றாகக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு பகுதியில் கவனம் செலுத்தி மற்றவற்றைப் புறக்கணிப்பது நீண்டகால வளர்ச்சிக்கு வழிவகுக்காது.


இரண்டாவதாக, திறன் கிராமங்கள் கிராமப்புறச் சமூகங்களுக்குப் பயனளிக்கும் வகையில் முறையான மற்றும் முறைசாரா அறிவைப் பெற அனுமதிக்கின்றன மற்றும் தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்வதில் குறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அளவிலான தடைகளை பேச்சுவார்த்தைக்கு உதவுகின்றன. இந்த கிராமங்கள், கிராமப்புற உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் கைவினைஞர் வணிகங்களுக்கு நேரடி நுகர்வோர் சந்தைப்படுத்துதலில் உதவுவதற்கு இடைநிலையை எளிதாக்குகின்றன.


மூன்றாவதாக, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஸ்மார்ட் கிராமக் குழுக்களை உருவாக்க, வெவ்வேறு நிதி ஆதாரங்கள் ஒன்றிணைய வேண்டும். இவற்றில் மத்திய அரசு திட்டங்கள், பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதிகள் மற்றும் கலப்பு நிதி ஆகியவை அடங்கும். கலப்பு நிதியில் மானியங்கள், குறைந்த வட்டி கடன்கள் மற்றும் சர்வதேச மேம்பாட்டு வங்கிகளிடமிருந்து உத்தரவாதங்கள் ஆகியவை அடங்கும்.


இந்தத் திட்டங்களைத் திட்டமிடுதல், நிதியளித்தல் மற்றும் செயல்படுத்துவதில் வெவ்வேறு குழுக்கள் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம். இந்த குழுப்பணி திறன் கிராமங்கள் தொடர்ந்து வளர்ந்து வெற்றிபெறுவதை உறுதிசெய்ய உதவும்.


நான்காவதாக, பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அடிப்படையில் சமூகங்கள் வலுவாக மாற திறன் கிராமங்கள் உதவும். கிராமப்புறங்களை ஆதரிக்க, நமக்கு நல்ல சந்தை அமைப்புகள் மற்றும் வலுவான அமைப்புகள் தேவை. இதைச் சாத்தியமாக்க அரசாங்கம், பல்கலைக்கழகங்கள், வணிகங்கள் மற்றும் உள்ளூர் குழுக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


மொத்தமாக, உள்நாட்டில் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி கிராமப்புற வாழ்வாதாரங்களை பல்வகைப்படுத்துதல், சாதகமான சந்தை இணைப்புகளை உருவாக்குதல், ஆதரவான சமூக உள்கட்டமைப்பை உருவாக்குதல், மேம்படுத்தப்பட்ட சேவை வழங்குதல் மற்றும் உள்ளூர் சூழலியல் சூழலின் தரத்தை பராமரித்தல் ஆகியவை கிராமப்புற செழிப்பு மற்றும் மீள்தன்மைக்கு இன்றியமையாதவை ஆகும்.


குஷாங்கூர் டே IIM லக்னோவில் இணைப் பேராசிரியராகவும், அவினாஷ் குமார் IIM கல்கத்தாவில் உதவிப் பேராசிரியராகவும் உள்ளார்.




Original article:

Share:

மாம்பழங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு அப்பால் : அமெரிக்க ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா லாபம் ஈட்ட முடியுமா? -இந்திரஜித் பானர்ஜி மற்றும் பூர்ணிமா வர்மா

 வரி குறைப்புகள் (Tariff reductions) இந்தியாவின் உள்நாட்டு சந்தைக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, கொள்கை வகுப்பாளர்கள் வர்த்தக தாராளமயமாக்கல் சமநிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்..


"21-ம் நூற்றாண்டுக்கான அமெரிக்க-இந்தியா ஒப்பந்தம்" (US–India COMPACT for the 21st Century) பிப்ரவரி 13, 2025 அன்று தொடங்கப்பட்டது. 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை $200 பில்லியனில் இருந்து $500 பில்லியனாக அதிகரிப்பதே இதன் குறிக்கோள் ஆகும். "திட்டம் 500" (Mission 500) என்று அழைக்கப்படும் இந்த முயற்சி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகத்தை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறது. 2025-ம் ஆண்டின் பிற்பகுதியில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை (bilateral trade agreement) உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் கட்டணங்களைக் குறைத்தல், வரி அல்லாத தடைகளை நீக்குதல் மற்றும் விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். சவால்கள் இருந்தாலும், இந்தத் திட்டம் வளர்ச்சி, அறிவு பரிமாற்றம் மற்றும் வேலை உருவாக்கத்தை ஊக்குவிக்கும். இந்தியா ஒரு உலகளாவிய சக்தியாக வளர்ந்து வரும் நிலையில், கொள்கை வகுப்பாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அறிஞர்கள் இந்த திட்டம் இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா அல்லது ஆபத்துகளை ஏற்படுத்துமா என்பதை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். இதன் முக்கிய கேள்வி : "திட்டம் 500" நீண்ட காலத்திற்கு இந்தியாவின் பொருளாதாரத்திற்கு உதவுமா அல்லது பாதிக்குமா? என்பதுதான்.


2023-ம் ஆண்டில், அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியகம் (US Census Bureau) இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே $190 பில்லியன் வர்த்தகத்தை பதிவு செய்தது. இது ஒரு நிலையான வளர்ச்சியைக் காட்டுகிறது. 2024-ம் ஆண்டில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பொருட்களின் வர்த்தகத்தை $129.2 பில்லியனாக மதிப்பிட்டார். இந்தியாவிற்கான அமெரிக்க ஏற்றுமதி $41.8 பில்லியனை எட்டியது. இது 2023-ஐ விட 3.4% அதிகரிப்பு ஆகும். அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதி $87.4 பில்லியனாக இருந்தது, இது 4.5% அதிகரிப்பைக் குறிக்கிறது. இது அமெரிக்காவிற்கான வளர்ந்து வரும் பொருட்களின் வர்த்தக பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. அமெரிக்காவிற்கு மலிவான, உழைப்பு மிகுந்த ஏற்றுமதிகள் காரணமாக, இந்தியா வர்த்தக உபரியிலிருந்து பயனடைகிறது. இவை அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் அதிக மதிப்புள்ள, மூலதனம் மிகுந்த பொருட்களுக்கு முரணானவையாக உள்ளது. இருப்பினும், இந்த வர்த்தக மாதிரி நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்காது.


இந்தியாவின் சந்தையில் அமெரிக்காவிற்கு வரம்பிற்குட்பட்ட அணுகல் இருப்பதற்கான மற்றொரு காரணம் அதிக வரித் தடைகள் (high tariff barriers) ஆகும். விவசாயப் பொருட்களுக்கான சராசரியாகப் பயன்படுத்தப்படும் மிகவும் விருப்பமான நாடுகளுக்கு (most favoured nation (MFN)) வரிகள் அமெரிக்காவில் 5 சதவிகிதம் ஆனால் இந்தியாவில் 39 சதவிகிதம் ஆகும். இந்திய மோட்டார் சைக்கிள்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியைவிட, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது. இந்த கட்டண வேறுபாடுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சந்தை அணுகல் மூலம் வர்த்தக பற்றாக்குறையை குறைப்பதற்கான உள்நாட்டு அழுத்தம் ஆகியவை ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் ஆர்வத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. சுங்க வரி விகிதங்களில், குறிப்பாக விவசாயப் பொருட்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், இந்த நாடுகளுக்கு இடையே உள்ள உள்நாட்டு சந்தையை ஆதரிப்பதில் உள்ள அடிப்படை வேறுபாடுகள் காரணமாகும். இருப்பினும், அமெரிக்கா தனது விவசாயிகளுக்கு, குறிப்பாக 2018 முதல் 2020 வரை அதிக ஆதரவை வழங்குகிறது. ஏற்றுமதியை அதிகரிப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்துவதால், விவசாயப் பொருட்களின் மீதான குறைந்த வரிகளை இந்த ஆதரவு விளக்குகிறது.


இதனால், வரி குறைப்பு (Tariff reductions) இந்தியாவின் உள்நாட்டு சந்தையை பாதிக்கலாம். வர்த்தகம் வளரும்போது, ​​இந்த ஒப்பந்தம் அமெரிக்க சந்தை அணுகலை அதிகரிப்பதைவிட இந்தியாவின் உயர் மதிப்பு ஏற்றுமதிக்கு சாதகமாக இருக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் அமெரிக்க தொழில்துறை மற்றும் விவசாய ஏற்றுமதிக்கு பலனளித்தால், இந்தியாவின் வர்த்தக உபரி, அந்நிய செலாவணி இருப்பு மற்றும் விவசாயம் பாதிக்கப்படலாம். இந்தியா மாம்பழங்கள் மற்றும் மாதுளைகளை ஏற்றுமதி செய்கிறது. அதே நேரத்தில், அமெரிக்கா தொழில்துறை, உலோகம் மற்றும் நுகர்வோர் துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் உயர் மதிப்பு வர்த்தக சூழ்நிலையில் பரிமாற்றம் மற்றும் குறைந்த லாபம் கொண்ட விநியோகர்களாக இந்தியாவின் நிலை சவாலானதாக இருக்கலாம்.


அமெரிக்க பெருநிறுவனங்களின் போட்டிக்கு எதிராக இந்திய தொழில்களின் மீள்தன்மை ஒரு கவலைக்குரியது. ஆரம்ப வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க போர்பன் (US bourbon), மோட்டார் சைக்கிள்கள் (motorbikes), ஐசிடி பொருட்கள் (ICT products) மற்றும் உலோகங்கள் (metals) மீதான வரிகளை இந்தியா குறைத்தது. இவை அமெரிக்க நிறுவனங்களுக்கு போட்டிக்கான நன்மையைக் கொண்ட துறைகள் ஆகும். இருப்பினும், இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தை அணுகல் முக்கியமாக விவசாயத்திற்கு பயனளிக்கிறது. இது இந்திய உற்பத்தியாளர்களுக்கு பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. வர்த்தக கட்டுப்பாடுகளைக் குறைப்பது இந்தியாவில் அமெரிக்க தயாரிப்பு விற்பனையை அதிகரிக்க வழிவகுக்கும். இது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் முக்கிய நிறுவனங்களை பாதிக்கலாம். ஜவுளி, ஆட்டோமொபைல்கள், மின்னணுவியல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் போன்ற துறைகள் சந்தைப் பங்கை இழக்கக்கூடும். அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்கு மலிவான பொருட்களை இறக்குமதி செய்ய குறைந்த வரிகளைப் பயன்படுத்தலாம்.


வர்த்தகத்திற்கான சவாலானது பொருளாதாரம் மற்றும் இராஜதந்திர ரீதியிலானது. அதிகரித்து வரும் அமெரிக்க இறக்குமதிகள் இந்திய தொழில்களில் சமமான முதலீட்டால் பொருந்தவில்லை என்றால், இந்தியா சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். இதில் தொழில்துறை தேக்கம், வேலை இழப்புகள் மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறுகள் ஆகியவை அடங்கும். வர்த்தக ஒப்பந்தங்கள் மெதுவாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். இது உள்நாட்டுத் துறைகளுக்கு நீண்டகால பாதிப்பைத் தவிர்க்க உதவும்.


ஒப்பந்தம் (COMPACT) புதிய முதலீடுகளை ஆதரிக்கிறது. ஆனால், தற்போதைய போக்குகள் கவலையளிக்கின்றன. இந்திய நிறுவனங்கள் அமெரிக்க அலுமினியம், எஃகு, பேட்டரி மற்றும் மருத்துவத் தொழில்களில் $7.35 பில்லியனை முதலீடு செய்கின்றன. இது அமெரிக்காவில் 3,000 வேலைகளை உருவாக்குகிறது. இருப்பினும், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவின் அதிக மதிப்புள்ள துறைகளில் முதலீடு செய்வதாக உறுதியளிக்கவில்லை.


இந்த நாடுகளின் வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து (COMPACT) இந்தியா முழுமையாகப் பயனடைய, தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையில் அமெரிக்க முதலீடுகள் தேவை. இதில் கூட்டு ஆராய்ச்சி, தகவல் பகிர்வு ஒப்பந்தங்கள் மற்றும் குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் நேரடி நிதி ஆகியவை அடங்கும். இதற்கான உறுதிமொழிகள் இல்லாமல், இந்தியா தொழில்நுட்பத்தில் பின்தங்கக்கூடும். அதே நேரத்தில், திறமையையும், மூலதனத்தையும் தொடர்ந்து இழக்க நேரிடும்.


இந்தியா விமானம், இயந்திரங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற மூலதனம் மிகுந்த, அதிக லாபம் தரும் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இது ஜவுளி, தோல் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற உழைப்பு மிகுந்த பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அதிக மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலமும், குறைந்த லாபம் தரும் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலமும், இந்தியா நியாயமற்ற பொருளாதார அமைப்பில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. இந்த அமைப்பு நாடானது அதிக மதிப்புள்ள ஏற்றுமதியை அதிகரிப்பதைத் தடுக்கிறது. கூடுதலாக, அதிக பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கான அமெரிக்காவின் அழுத்தம் மூலதனத்தின் பெரிய வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும். இது இந்தியாவின் வர்த்தக உபரியையும் குறைக்கலாம். வர்த்தக வளர்ச்சியை அதிகரிக்க, இந்தியா அதன் ஏற்றுமதி இலாகாவில் (export portfolio) அதிக மதிப்புள்ள பொருட்களைச் சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.


அமெரிக்க-இந்தியா ஒப்பந்தம் ஒரு சிக்கலான ஒப்பந்தமாகும். ஆனால், அது பொருளாதார நன்மைகளைத் தரும். 2018 முதல் 2023 வரை இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் 34.3% வளர்ந்ததாக அமெரிக்க வணிகத் துறை US (Department of Commerce) தெரிவித்துள்ளது. இது $141.5 பில்லியனில் இருந்து $190.1 பில்லியனாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி அடுத்த ஐந்து ஆண்டுகளில் வர்த்தகம் $500 பில்லியனாக விரிவடைய முடியுமா என்ற கேள்விகளை எழுப்புகிறது. வர்த்தக தாராளமயமாக்கல் சமநிலையில் இருப்பதை கொள்கை வகுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.


வர்மா IIM அகமதாபாத்தில் ஒரு பேராசிரியராகவும் உள்ளார். பானர்ஜி ஒரு கல்வியாளராகவும் உள்ளார்.




Original article:

Share: