இந்தியாவில் பருவமழை முன்கணிப்பின் வரலாறு மற்றும் பரிணாமம். -அலிந்த் சவுகான்

 தென்மேற்கு பருவமழைக்கான துல்லியமான முன்னறிவிப்புகளைச் செய்வதற்கான முயற்சிகள் 1870களில் இருந்து தொடங்குகின்றன. நீண்ட சோதனை மற்றும் பிழை செயல்முறை மூலம் இந்திய வானிலை ஆய்வு மையம் அதன் கணிப்புகளை மேம்படுத்தியுள்ளது. ஆனால், சிறப்பாகச் செயல்பட வாய்ப்பு உள்ளது.


ஜூன்-செப்டம்பர் தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் “இயல்பை விட அதிகமாக” மழை பெய்யும் என்றும் நீண்ட கால சராசரியில் (long-period average (LPA)) 105% என்றும் கணித்துள்ளது.


இந்திய பருவமழையின் அனைத்து முக்கிய காரணிகளான, பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் எல் நினோ-தெற்கு அலைவு (El Niño-Southern Oscillation (ENSO)) மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole (IOD)) போன்றவை சாதகமாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த மாத தொடக்கத்தில் கூறியது.


தென்மேற்கு பருவமழை நான்கு மாதங்கள் நீடிக்கும் மற்றும் நாட்டின் வருடாந்திர மழைப்பொழிவில் சுமார் 70%-ஐ வழங்குகிறது. இது விவசாயம், பொருளாதாரம் மற்றும் நீர்த்தேக்கங்கள் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்களை நிரப்புவதற்கு மிகவும் முக்கியமானது. துல்லியமான பருவமழை முன்னறிவிப்புகள் அரசாங்கத்தை வெவ்வேறு சூழ்நிலைகளுக்குத் தயாராவதற்கு உதவுகின்றன.


இந்த ஆண்டு பருவமழைக்கான முதல் முன்னறிவிப்பு ஏப்ரல் 15 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. கேரளக் கடற்கரையில் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, மே மாதத்தின் கடைசி வாரத்தில் இரண்டாம் கட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்பு வெளியிடப்படும். எதிர்காலத்தில் 30 நாட்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை நீண்டதூர முன்னறிவிப்புகளைச் செய்யலாம்.


முதல் கணிப்புகள்

இந்திய வானிலை ஆய்வு மையம் நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1877-ஆம் ஆண்டு பருவமழையை முன்னறிவிப்பதற்கான ஒரு முறையான முயற்சி தொடங்கியது, ஆங்கிலேய வானிலை ஆய்வாளரும் பழங்கால ஆராய்ச்சியாளருமான (palaeontologist) ஹென்றி பிரான்சிஸ் பிளான்ஃபோர்ட் இந்திய அரசாங்கத்திற்கு முதல் வானிலை அறிக்கையாளராக நியமிக்கப்பட்டார்.


காலப்போக்கில் முன்னறிவிப்பு மற்றும் உண்மையான மழைப்பொழிவு தரவு


டெக்கான் பீடபூமியில் பயிர் தோல்விகள் 1876-78-ஆம் ஆண்டு பெரும் பஞ்சத்திற்கு வழிவகுத்த பின்னர், துல்லியமான மழைப்பொழிவு முன்னறிவிப்புகளுக்கான தேவை அதிகரித்தது. இது 1877ஆம் ஆண்டு காலகட்டத்தில் முழு நாட்டையும் பாதித்தது. பருவமழை எப்போது, ​​எங்கு மழை பெய்யும் என்பதைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை ஆங்கிலேய காலனித்துவ அரசாங்கம் உணர்ந்தது.


குயின்னிபியாக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரமேஷ் சுப்பிரமணியன் தனது "பருவமழை, கணினிகள், செயற்கைக்கோள்கள்: இந்தியாவில் வானிலை கண்காணிப்பின் வரலாறு மற்றும் அரசியல்" 2021 என்ற தனது ஆய்வறிக்கையில் எழுதியது போல, பருவமழையின் வெற்றி விவசாயம், நதி ஆரோக்கியம், கப்பல் போக்குவரத்து மற்றும் ஆங்கிலேய நலன்களுக்கான வருவாய்க்கு மிகவும் முக்கியமானது.


பனி & மழை: பருவமழையின் முதல் தற்காலிக முன்னறிவிப்புகள் 1882 மற்றும் 1885ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பிளான்ஃபோர்ட் வழங்கினார். அவர் இமயமலை பனிப்போர்வைக்கும் இந்திய பகுதியில் பெய்யும் மழையின் அளவுக்கும் இடையேயான உறவை ஆராய்ந்தார்.


பிளான்ஃபோர்டின் முன்னறிவிப்புகள் "இமயமலையின் குளிர்காலம் மற்றும் வசந்த கால பனி படிவுக்கும் அதைத் தொடர்ந்து வரும் கோடைகால பருவமழைக்கும் இடையேயான தலைகீழ் உறவை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக, இமயமலை பனியின் மாறுபட்ட அளவு மற்றும் தடிமன் வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளின் காலநிலை நிலைமைகள் மற்றும் வானிலையில் பெரும் மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கருதப்பட்டது" என்று இந்தியாவில் வானிலை ஆய்வின் பரிணாம வளர்ச்சி பற்றிய அதிகாரப்பூர்வ கணக்கில் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.


1886-ல், பிளான்ஃபோர்ட் இந்தியா முழுவதற்கும் பர்மாவிற்கும் பருவமழை மழையளவின் முதல் நீண்ட கால முன்னறிவிப்பை (long-range forecast (LRF)), இந்த தலைகீழ் உறவு கருதுகோளின் அடிப்படையில் வழங்கினார்.


பிளான்ஃபோர்டைத் தொடர்ந்து சர் ஜான் எலியட் வந்தார். அவர் மே 1889-ல் கல்கத்தா தலைமையகத்தில் இந்திய வானிலை ஆய்வகங்களின் முதல் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இது இன்றைய இந்திய வானிலை ஆய்வுமைய தலைவர் பதவிக்கு இணையானது.


மேலும் வேறு சில காரணிகள்: எலியட் பிளான்ஃபோர்டின் பணியை முன்னெடுத்துச் சென்றார். இமயமலை பனியைப் பற்றிய தரவுகளை ஏப்ரல்-மே மாதங்களில் உள்ளூர் இந்திய வானிலை நிலைமைகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆஸ்திரேலியாவில் நிலவும் நிலைமைகள் போன்ற காரணிகளுடன் இணைத்து தனது நீண்டகால முன்னறிவிப்புகளை வெளியிட்டார்.


ஆனால், பிளான்ஃபோர்டைப் போலவே எலியட்டாலும் வறட்சிகளையோ அல்லது அதைத் தொடர்ந்து வந்த பஞ்சங்களையோ, பட்டினி மற்றும் மரணங்களை ஏற்படுத்தியவற்றை திறம்பட முன்னறிவிக்க முடியவில்லை. 1899-1900-ஆம் ஆண்டு இந்தியப் பஞ்சம், பத்து லட்சத்திலிருந்து 4.5 மில்லியன் மக்களைக் கொன்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எலியட் இயல்பைவிட சிறந்த மழை பெய்யும் என்று கணித்திருந்த ஒரு வருடத்தில் அது தாக்கியது.


இந்திய பருவமழை மீது உலகளாவிய காரணிகளின் தாக்கத்தை இணைக்க முயன்ற முதல் காலனித்துவ அதிகாரி இயற்பியலாளரும் புள்ளியியலாளருமான சர் கில்பர்ட் வாக்கர் ஆவார். அவர் 1904-ல் எலியட்டைத் தொடர்ந்து வந்தார்.


28 முன்கணிப்புகள், புள்ளியியல் தொடர்புகள்: வாக்கர் பருவமழை மழைக்கும் முந்தைய உலகளாவிய வளிமண்டல, நிலப்பரப்பு மற்றும் கடல் அளவுருக்களுக்கும் இடையேயான புள்ளியியல் தொடர்புகளின் அடிப்படையில் முதல் புறநிலை மாதிரிகளை உருவாக்கினார். தனது முன்னறிவிப்புகளைச் செய்ய, வாக்கர் இந்தியப் பருவமழையுடன் குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான வரலாற்றுத் தொடர்பைக் கொண்ட 28 அளவுருக்கள் அல்லது முன்கணிப்பாளர்களை அடையாளம் கண்டார்.


வாக்கர் உலகளாவிய அழுத்த அமைப்புகளில் தெற்கு அலைவு (Southern Oscillation (SO)), வட அட்லாண்டிக் அலைவு (North Atlantic Oscillation (NAO)) மற்றும் வட பசிபிக் அலைவு போன்ற (North Pacific Oscillation (NPO)) மூன்று பெரிய அளவிலான ஊசலாட்ட மாறுபாடுகளை விவரித்தார்.


இவற்றில், தெற்கு அலைவு (Southern Oscillation (SO)) இந்தியாவின் காலநிலை மாறுபாட்டிலும் உலகின் பல பகுதிகளிலும் மிக முக்கியமான தாக்கத்தைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது. தெற்கு அலைவு பின்னர் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு நீரின் அசாதாரண வெப்பமாதல் அல்லது எல் நினோ உடன் 1960களில் ஜேகப் பியெர்க்நஸ் மூலம் இணைக்கப்பட்டது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (India_MeteorologicalIndia Meteorological Department (IMD)) தெரிவித்துள்ளது.


வாக்கர் மேலும், மழையின் அளவை முன்னறிவிப்பதற்காக இந்தியத் துணைக்கண்டத்தை ஒரு பிரிக்கப்படாத முழுமையாகக் கருத முடியாது என்று வாதிட்டார். தீபகற்பம், வடகிழக்கு, மற்றும் வடமேற்கு இந்தியா என்று பிராந்தியத்தை மூன்று துணைப்பிராந்தியங்களாகப் பிரித்தார்.


சுதந்திரத்திற்குப் பிறகு


இந்திய வானிலை ஆய்வு மையம் பருவமழை முன்னறிவிப்புக்கான வாக்கரின் மாதிரியை 1987 வரை பயன்படுத்தியது. முன்னறிவிப்புகள் மிகவும் துல்லியமாக இல்லை. "1932-1987 காலகட்டத்தில் தீபகற்பத்திற்கான முன்னறிவிப்புகளின் சராசரி பிழை 12.33 செ.மீ மற்றும் வடமேற்கு இந்தியாவிற்கு 9.9 செ.மீ," என்று நிலவுலக அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் எம் ராஜீவன் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி டி.ஆர் பட்நாயிக் தங்கள் “தென்மேற்கு பருவமழையின் கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பின் பரிணாம வளர்ச்சி” (Mausam, IMD’s quarterly journal, 2025) என்ற கட்டுரையில் எழுதியுள்ளார்.


முக்கிய பிரச்சனை என்னவென்றால், வாக்கர் அடையாளம் கண்ட பல அளவுருக்கள் காலப்போக்கில் முக்கியத்துவத்தை இழந்துவிட்டன. அவற்றின் தொடர்பு பருவமழையுடன் இனி ஒன்றாக இல்லை. இந்திய வானிலை ஆய்வுமைய விஞ்ஞானிகள் மாதிரியில் பல மாற்றங்களை முயற்சித்தனர். ஆனால், அதன் துல்லியம் அதிகம் மேம்படவில்லை.


கோவாரிகர் மாதிரி (GOWARIKER MODEL): 1988-ல், இந்திய வானிலை ஆய்வு மைய வாசந்த் ஆர் கோவாரிகர் தலைமையிலான விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட சக்தி தேய்வு மாதிரியின் (power regression model) அடிப்படையில் பருவமழையின் செயல்பாட்டு முன்னறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியது. இது மொத்த மழையுடன் ஒரு புள்ளியியல் உறவில் முன்கணிப்பாளர்களாக 16 அனுபவரீதியாக பெறப்பட்ட வளிமண்டல மாறிகளைப் பயன்படுத்தியது.


நாடு முழுவதிலும் பருவத்திற்கான முன்னறிவிப்புக்கு ஆதரவாக புவியியல் பிராந்தியங்களுக்கான முன்னறிவிப்பு கைவிடப்பட்டது. வடமேற்கு இந்தியா, தீபகற்ப இந்தியா, மற்றும் வடகிழக்கு இந்தியாவிற்கான செயல்பாட்டு முன்னறிவிப்புகள் 1999-ல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், இந்த பிராந்தியங்களின் புவியியல் எல்லைகள் வேறுபட்டன.


புதிய மாதிரியிலும் இதேபோன்ற சிக்கல்கள் எழுந்தன. "2000-ஆம் ஆண்டில், பதினாறு அளவுருக்களில், நான்கு அளவுருக்கள் பருவமழையுடனான தங்கள் தொடர்பை இழந்துவிட்டன என்பது உணரப்பட்டது, எனவே அவை மற்ற முன்கணிப்பாளர்களால் மாற்றப்பட்டன," என்று சூர்யசந்திரா ஏ ராவ், பிரசாந்த் ஏ பிள்ளை, மஹேஷ்வர் பிரதான் மற்றும் அங்கூர் ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் தங்களது 2019-ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரையான “இந்தியாவில் இந்திய கோடைகால பருவமழையின் பருவகால முன்னறிவிப்பு: கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்” (மௌசம்) என்ற கட்டுரையில் எழுதினர்.


இந்த காலகட்டத்தில் IMDயின் பிராந்திய முன்னறிவிப்புகள் துல்லியமற்றதாக இருந்தன. "1994, 1997 மற்றும் 1999 போன்ற ஆண்டுகளில் முன்னறிவிப்பு பிழை மாதிரி பிழையை விட அதிகமாக இருந்தது" என்று ராவ் மற்றும் பலர் எழுதினர்.


14 நல்ல பருவமழைகளுக்குப் பிறகு 2002-ல் வந்த வறட்சியை முன்னறிவிக்கத் தவறிய பிறகு, அது 1987-க்குப் பிறகு மிக மோசமான வறட்சியாக இருந்தது. சக்தி தேய்வு மாதிரி விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டது.


இரண்டு புதிய மாதிரிகள்: 2003-ல், IMD பருவமழை முன்னறிவிப்புக்கான 7 8 மற்றும் 10 அளவுருக்களுடன் இரண்டு புதிய மாதிரிகளை அறிமுகப்படுத்தியது. இது புதிய இரண்டு-கட்ட முன்னறிவிப்பு உத்தியையும் ஏற்றுக்கொண்டது. முதல் கட்ட முன்னறிவிப்பு ஏப்ரல் மத்தியில் வெளியிடப்பட்டது மற்றும் ஒரு புதுப்பிப்பு அல்லது இரண்டாம் கட்ட முன்னறிவிப்பு ஜூன் மாத இறுதியில் வெளியிடப்பட்டது.


புதிய மாதிரிகள் 2003 பருவமழையை துல்லியமாக முன்னறிவித்தன. ஆனால், 2004 வறட்சியை முன்னறிவிக்கத் தவறிவிட்டன. இது IMDயை வரைவு பலகைக்கு மீண்டும் அனுப்பியது.


இந்தத் துறை இரண்டு முக்கிய நோக்கங்களுடன் தனது மாதிரிகளை மறுமதிப்பீடு செய்தது: (அ) பருவமழையுடன் உறவுகளைக் கொண்ட பொருத்தமான மற்றும் நிலையான முன்னறிவிப்பாளர்களின் மறுபரிசீலனை மற்றும் (ஆ) முன்னறிவிப்பாளர்களின் உகந்த எண்ணிக்கை மற்றும் உகந்த மாதிரி பயிற்சி காலம் போன்றவற்றை அடையாளம் காண்பதன் அடிப்படையில் மாதிரி மேம்பாட்டின் முக்கியமான வழி” என்று 2019 ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.


புள்ளியியல் முன்னறிவிப்பு அமைப்பு: 2007-ல், IMD தனது இரண்டு-கட்ட முன்னறிவிப்பு உத்திக்கு ஆதரவாக புள்ளியியல் அரங்க முன்னறிவிப்பு அமைப்பை (Statistical Ensemble Forecasting System (SEFS)) உருவாக்கியது. மேலும், தனது மாதிரிகளில் உள்ள அளவுருக்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்தது.


ஏப்ரலில் முதல் முன்னறிவிப்புக்கான 8-அளவுரு மாதிரியை 5-அளவுரு மாதிரி மாற்றியது, மற்றும் ஜூனில் முன்னறிவிப்பு புதுப்பிப்புக்கான 10-அளவுரு மாதிரியை ஒரு புதிய 6-அளவுரு மாதிரி மாற்றியது. மாதிரிகளின் "அதிகப்படியான பொருத்தம்" இல்லாமல் இருப்பதை உறுதிசெய்வதே நோக்கமாக இருந்தது. இதில் ஒரு மாதிரி பயிற்சித் தொகுப்பை மிக நெருக்கமாகப் பொருத்துகிறது அல்லது நினைவில் கொள்கிறது. அதனால் புதிய தரவின் அடிப்படையில் சரியான முன்னறிவிப்புகளைச் செய்யத் தவறுகிறது.


இந்தத் துறை, ஒருங்கிணைந்த முன்னறிவிப்புகளின் கருத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்த முறையில், முன்னறிவிப்பாளர்களின் அனைத்து சேர்க்கைகளையும் அடிப்படையாகக் கொண்ட அனைத்து சாத்தியமான முன்னறிவிப்பு மாதிரிகளும் ஒற்றை, மிகவும் வலுவான கணிப்பை உருவாக்குவதாகக் கருதப்பட்டது.


இந்தப் புதிய அமைப்பு, IMD தனது முன்னறிவிப்பை கணிசமாக மேம்படுத்த உதவியது. 2007 மற்றும் 2018க்கு இடையிலான சராசரி முழுமையான பிழை (முன்னறிவிப்புக்கும் உண்மையான மழைப்பொழிவுக்கும் இடையிலான வேறுபாடு) 1995 மற்றும் 2006க்கு இடையிலான சராசரி முழுமையான பிழையான 7.94% உடன் ஒப்பிடும்போது, ​​LPA-ல் 5.95% (ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பதிவான மழைப்பொழிவு) ஆகும்.


சமீபத்திய ஆண்டுகளில் முன்னறிவிப்புகள்


இணைந்த இயக்கவியல் மாதிரி (COUPLED DYNAMIC MODEL): பருவமழை முன்னறிவிப்பில் மேம்பாடு 2012-ல் பருவமழை திட்டம் இணைந்த முன்னறிவிப்பு அமைப்பின் (Monsoon Mission Coupled Forecasting System (MMCFS)) தொடக்கத்தாலும் ஏற்பட்டது. இது ஒரு இணைந்த இயக்கவியல் மாதிரியாகும். இதனால் கடல், வளிமண்டலம், மற்றும் நிலத்திலிருந்து தரவுகளை இணைத்து மிகவும் துல்லியமான முன்னறிவிப்புகளை வழங்க முடியும். IMD தனது முன்னறிவிப்புகளுக்கு MMCFS மற்றும் SEFSஐ சேர்த்துப் பயன்படுத்தியது.


பல மாதிரி குழுமம் (MULTI-MODEL ENSEMBLE) : 2021-ல் பல மாதிரி குழுமம் அடிப்படையிலான அமைப்பின் தொடக்கத்துடன் முன்னறிவிப்புகளின் துல்லியம் மேலும் அதிகரித்தது. இந்த புதிய பல மாதிரி குழுமம் அமைப்பு இந்தியாவின் சொந்த MMCFS மாதிரி உட்பட பல்வேறு உலகளாவிய காலநிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி மையங்களிலிருந்து இணைந்த உலகளாவிய காலநிலை மாதிரிகளை (coupled global climate models (CGCMs)) பயன்படுத்தியது.


2007இல் SEFS மற்றும் 2021இல் MME அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பருவமழைக்கான IMDயின் செயல்பாட்டு முன்னறிவிப்புகள் கணிசமாக மேம்பட்டுள்ளன என்று புவி அறிவியல் அமைச்சகம் இந்த ஆண்டு பிப்ரவரி  மாதத்தில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்தது.


சிறந்த முன்னறிவிப்புகள், முன்னேற்றத்திற்கான நோக்கம்: இந்தியாவின் பருவகால மழையின் தனிப்பட்ட முன்னறிவிப்பு பிழை 1989 மற்றும் 2006-க்கு இடையிலான அதே எண்ணிக்கையிலான ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2007-2024 ஆண்டுகளில் சுமார் 21% குறைந்துள்ளது என்று புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்கவையில் தெரிவித்தார்.


IMDயின் ஏப்ரல் மாத முன்னறிவிப்புகளும் மிகவும் துல்லியமாகிவிட்டன. கடந்த நான்கு ஆண்டுகளில் (2021 முதல் 2024 வரை), உண்மையான மழைப்பொழிவு ஏப்ரல் மாத முன்னறிவிப்பிலிருந்து 2.27 சதவீத புள்ளிகள் மட்டுமே வேறுபட்டது. இது எதிர்பார்க்கப்படும் 4% வரம்பிற்குள் உள்ளது.


இருப்பினும், IMDயை இன்னும் மேம்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ராஜீவன் மற்றும் பட்டநாயக் ஆகியோர் தங்கள் ஆய்வறிக்கையில், ENSO போன்ற உலகளாவிய காலநிலை முறைகளுடன் வானிலை நிகழ்வுகளுக்கு இடையிலான குறிப்பிடத்தக்க உறவுகள் அல்லது இணைப்புகள் - முறையான பிழைகள்/சார்புகள் மற்றும் தொலைதொடர்புகளை மேம்படுத்துவதன் மூலம் துறை அதன் முன்னறிவிப்பு மாதிரிகளை மேம்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.


Original article:
Share:

உச்சநீதிமன்றத்தின் முன்னிருக்கும் கேள்வி: “போட்டியின்றி” பெறும் தேர்தல் வெற்றிகள் அரசியலமைப்பிற்கு விரோதமானவையா? -தாமினி நாத்

 ஒரு வேட்பாளர் மட்டுமே இருந்தால் தேர்தலை நடத்தாமல் இருப்பது வாக்காளர்கள் "அனைவருக்கும் எதிரான வாக்கு" (None of the Above (NOTA)) விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தடுக்கிறது என்றும், அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒரு தேர்தலில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே இருந்தால், தேர்தல் நடத்தப்படாமல், வெற்றி பெறுவதற்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவதற்கு அவர் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வாக்கைப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் பரிந்துரைத்தது.


மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை, 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 53(2)-ன் அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்ட தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் சட்ட ஆராய்ச்சி சிந்தனைக் குழுவான சட்டக் கொள்கைக்கான விதி மைய (Vidhi Centre for Legal Policy) மனுவை நீதிமன்றம் விசாரித்தது.


இந்தப் பிரிவு ("போட்டியிடப்பட்ட மற்றும் போட்டியிடாத தேர்தல்களில் நடைமுறை") வேட்பாளர்களின் எண்ணிக்கை, வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருந்தால், தேர்தல் அதிகாரி அத்தகைய அனைத்து வேட்பாளர்களையும் அந்த இடங்களை நிரப்ப முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக உடனடியாக அறிவிக்க வேண்டும்" என்று கூறுகிறது.


ஆகஸ்ட் 2024-ல் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஒரு வேட்பாளர் மட்டுமே இருந்தால் தேர்தலை நடத்தாமல் இருப்பது வாக்காளர்கள் NOTA விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தடுக்கிறது. இது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று வாதிடுகிறது.


இந்த மனு, 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை, மக்கள் சிவில் உரிமைகளுக்கான சங்கம் VS இந்திய ஒன்றியம் என்ற வழக்கில் குறிப்பிடுகிறது. அந்த தீர்ப்பில், தேர்தல்களில் NOTA-விற்கு வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்றும், இது அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a)-ன் கீழ் நேரடித் தேர்தல்களில் NOTAவைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்மறை வாக்களிக்கும் உரிமை பாதுகாக்கப்படுகிறது என்றும நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் இந்த உரிமை பொருந்த வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


போட்டியற்ற தேர்தல்கள்


1951 முதல் 2024 வரை, 26 இடங்களில், வேறு யாரும் போட்டியிடாததால், மக்களவை வேட்பாளர்கள் யாரும் வாக்களிக்காமல் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனால், இந்தத் தேர்தல்களில் 82 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்த 26 வழக்குகளில், 1957-ல் 7 வழக்குகளும், 1951 மற்றும் 1967-ல் தலா 5 வழக்குகளும், 1962-ல் 3 வழக்குகளும், 1977-ல் 2 வழக்குகளும், 1971, 1980, 1989 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் தலா 1 வழக்குகளும் நடந்தன. 2024-ஆம் ஆண்டில், பாஜகவின் சூரத் வேட்பாளர் முகேஷ்குமார் தலால் மற்ற அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் பெற்ற பிறகு அல்லது தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மாநில சட்டமன்றங்களில் போட்டியற்ற தேர்தல்கள் அதிகமாக நடப்பதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பதில்


இந்த மாத தொடக்கத்தில் அளித்த பதிலில், தேர்தல் ஆணையம், 1951 முதல் 2024 வரை நடைபெற்ற 20 மக்களவைத் தேர்தல்களில், 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே போட்டியின்றி வெற்றி பெற்றதாகக் கூறியது. 1989 முதல், இதுபோன்ற ஒரு வழக்கு மட்டுமே நடந்துள்ளது.


ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியுடன், அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடுகின்றன. எனவே, வேட்பாளர்களின் எண்ணிக்கையும் தானாகவே அதிகரிக்கிறது. மேலும், வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த அதிக விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்துடன் உள்ளனர். ஒரு தேர்தல் போட்டியின்றி நடைபெறுவதற்கான வாய்ப்பு அரிதாகிவிட்டது. இது புள்ளிவிவர தரவுகளிலிருந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அத்தகைய சூழ்நிலையில், நீதிமன்றம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் வாதிட்டது.


"NOTA" ஒவ்வொரு தேர்தலிலும் தானாகவே போட்டியிட்டதாகக் கருத முடியாது என்று ஆணையம் வாதிட்டது.


எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (electronic voting machine (EVM)) ஒரு பொத்தானைச் சேர்க்க வேண்டும் என்று கூறும் NOTA தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.


எனவே, தேர்தல் ஆணையம் "வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வரும் இடங்களில் வாக்களிப்பு நடைபெறும்போது NOTA விருப்பத்தைப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தது. எனவே, போட்டியிடாத அனைத்து தேர்தல்களிலும் NOTAவை கட்டாய வேட்பாளராகக் கருதுவது தற்போதைய சட்டங்களால் அனுமதிக்கப்படவில்லை. இதைச் சாத்தியமாக்க, 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் 1961-ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.


உச்சநீதிமன்றத்தின் பார்வை


ஏப்ரல் 24 அன்று நடந்த விசாரணையின்போது, ​​இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வின் ஒரு பகுதியாக இருந்த நீதிபதி சூர்யா காந்த், ஒரு வேட்பாளர் தானாகவே வெற்றி பெறுவதற்குப் பதிலாக, குறைந்தது 10% அல்லது 15% வாக்குகளைப் பெற்றால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று கூறுவது நல்ல யோசனையாக இருக்கலாம் என்று கூறினார்.


ஜனநாயகம் பெரும்பான்மை ஆதரவை அடிப்படையாகக் கொண்டால், போட்டியிடாத தேர்தல்களிலும் கூட, வேட்பாளரை ஆதரிக்கும் சில வாக்காளர்கள் இருக்க வேண்டும் என்று நீதிபதி காந்த் கூறினார்.


இந்தப் பிரச்சினையை ஆராய அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார், "இப்போது, ​​எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இந்த பிரச்சனை நாளை எழும்பட்சத்தில் நீங்கள் இன்றே தீர்வை உருவாக்கலாம்" என்று கூறினார்.


அந்த தீர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து, நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “5% வாக்குகளை கூட பெற முடியாத ஒருவரை ஏன் தானாக பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டும்? நீங்கள் மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள், அதை பற்றி சிந்தியுங்கள்” என்றார்.


Original article:
Share:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா அறிவித்த 5 அம்ச செயல் திட்டம் என்ன? -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி: சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை நிறுத்துதல் போன்ற பல்வேறு இராஜதந்திர நடவடிக்கைகளை தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் எல்லைகளுக்குள் இருந்தே திருப்பித் தாக்கும் திறன்களை உள்ளடக்கிய பல இராணுவ பதிலடி நடவடிக்கைகளை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.


முக்கிய அம்சங்கள்:


• செவ்வாய்க்கிழமை ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். வியாழக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் அடையாளம் கண்டு, கண்காணித்து, தண்டிக்கும்" என்றும் "அவர்களை உலகின் கடைசி எல்லை வரை துரத்துவோம்" என்றும் கூறினார்.


• அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் "இராணுவ பதிலடி இருக்கும், நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார். தாக்குதலின் தன்மை பற்றி விவாதித்து வருகிறோம். 2019-ஆம் ஆண்டு முதல், நமது ஆயுதங்களை நவீனமயமாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நமது எல்லைக்குள்ளிருந்தே பயங்கரவாதிகளை இலக்கு வைக்கும் வாய்ப்பு நமக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.


• 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி ஒருவர் புல்வாமாவில் வெடிபொருள் நிரப்பப்பட்ட காரை, ஒன்றிய ரிசர்வ் பாதுகாப்பு படை (Central Reserve Police Force (CRPF)) வாகனங்களின் மீது மோதச் செய்தார். சில நாட்களுக்குப் பிறகு பாலகோட்டில் இந்திய விமானப்படை குறிவைத்து தாக்குதலை நடத்தியது.


• பகல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு மறுக்க முடியாதது என்று வலியுறுத்திய அரசாங்க வட்டாரங்கள், "இது பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனிருடன் மிகவும் தொடர்புடையது" என்றும் அவரது நலன்களுடன் தொடர்புடையது என்றும் சுட்டிக்காட்டின. அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி, பகல்காம் தாக்குதல் "பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களின் பின்னணியில், பிரபலத்தைப் பெறவும், இந்தியாவில் சமூகங்களிடையே பிளவுகளை உருவாக்கவும் ஜெனரல் முனிரின் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம்" என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


• மதத்தின் அடிப்படையில் இலக்குகளைத் தேர்ந்தெடுத்த பயங்கரவாதிகளின் அடையாளங்கள் மற்றும் விவரங்களைக் கண்டறியும் முயற்சிகள் "முன்னேற்றத்தில்" இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.


உங்களுக்குத் தெரியுமா?


பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவால் அறிவிக்கப்பட்ட 5-அம்ச செயல் திட்டம்: 


1. இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை (Indus Waters Treaty) உடனடியாக "நிறுத்தி வைத்துள்ளது".


2. புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையத்தில் உள்ள பாதுகாப்பு/இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்கள் விரும்பத்தகாத நபர் (Persona Non Grata) என அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற ஒரு வாரம் அவகாசம் உள்ளது. இந்தியா இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையத்திலிருந்து தனது பாதுகாப்பு/கடற்படை/விமானப்படை ஆலோசகர்களை திரும்பப் பெறவுள்ளது.


3. சார்க் விசா விலக்கு திட்டம் (SAARC Visa Exemption Scheme (SVES)) விசாக்களின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட எந்த விசாக்களும் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும். SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் உள்ள எந்தவொரு பாகிஸ்தானியரும் இந்தியாவைவிட்டு வெளியேற 48 மணிநேரம் அவகாசம் உள்ளது.


4. அட்டாரி எல்லை சோதனைச் சாவடி உடனடியாக மூடல் - செல்லுபடியாகும் ஒப்புதல்களுடன் எல்லையைக் கடந்து சென்றவர்கள் மே 1, 2025-க்கு முன்பு அந்த வழியாகத் திரும்பிச் செல்லலாம்.


5. தற்போதைய 55-ல் இருந்து தூதரகங்களின் எண்ணிக்கை 30ஆக குறைக்கப்படும். இது மே 01, 2025க்குள் நடைமுறைப்படுத்தப்படும்.


Original article:
Share:

தூய ஆற்றல் புரட்சி -அசோக் குலாட்டி, சுவாங்கி ராத்

 நமது கிரகத்தின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க, நாம் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலையானதாக இல்லாத இந்தியாவின் விவசாய முறையை மாற்ற வேண்டும்.


சர்வதேச தாய் பூமி தினம் (Mother Earth Day) ஏப்ரல் 22 அன்று கொண்டாடப்பட்டது. இது 2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தால் உருவாக்கப்பட்டது. இருப்பினும், இதன் தோற்றம் 1970ஆம் ஆண்டுகளில் இருந்து செல்கிறது. இந்த நாளின் குறிக்கோள், இயற்கையுடன் இணக்கம் என்ற முயற்சியை ஆதரிப்பதும், நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதும் ஆகும். பூமி மட்டுமே உயிர்கள் உள்ள ஒரே கிரகம். எலோன் மஸ்க் செவ்வாய் கிரகத்திற்கான திட்டங்களை வைத்திருந்தாலும், மனிதர்களுக்கு வேறு கிரகம் இல்லை. 


பூமியில் உள்ள தனித்துவமான நிலைமைகள், அதன் உயிர்க்கோளத்தைப் போலவே, மனித உயிர்வாழ்விற்கு அதை ஈடுசெய்ய முடியாததாக ஆக்குகின்றன. எனவே, பொருளாதார ரீதியாக வளரும் அதே வேளையில், பூமியின் வளங்களை - காற்று, மண், நீர் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். ஆனால், நாம் அதைச் செய்திருக்கிறோமா? துரதிர்ஷ்டவசமாக, பதில் இல்லை.  காந்தி கூறியது போல், "பூமி, காற்று, நிலம் மற்றும் நீர் ஆகியவை நம் முன்னோர்களிடமிருந்து வந்த மரபு அல்ல, மாறாக நம் குழந்தைகளிடமிருந்து பெற்ற கடன். நாம் அவற்றைப் பெற்றபடியே ஒப்படைக்க வேண்டும்."


கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், மனித மக்கள் தொகை பெருகியதால், பூமியின் வளங்கள் கணிசமாக மாறின. 1804ஆம் ஆண்டில் மனித மக்கள் தொகை 1 பில்லியனை எட்ட கிட்டத்தட்ட 300,000 ஆண்டுகள் ஆனது. ஆனால், அடுத்த பில்லியன் 123 ஆண்டுகளில், 1927ஆம் ஆண்டுக்குள் சேர்க்கப்பட்டது. 1927ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை, மக்கள் தொகை நான்கு மடங்குக்கும் மேலாக அதிகரித்து, 8 பில்லியன் மக்களைத் தாண்டியது. 


இந்தியா தற்போது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். மேலும், இந்த நூற்றாண்டின் இறுதி வரை அது அப்படியே இருக்கும். இந்த விரைவான மக்கள்தொகை வளர்ச்சி உணவு, வீட்டுவசதி, உடை மற்றும் போக்குவரத்துக்கான தேவையை பெரிதும் அதிகரித்துள்ளது. ஆற்றல் மற்றும் பயணத்திற்கான புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு புவி வெப்பமடைதலுக்கும் காற்றின் தரம் மோசமடைவதற்கும் கணிசமாக பங்களித்துள்ளது.


இந்தியா கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. யேல் பல்கலைக்கழகத்தின் 2024 சுற்றுச்சூழல் மாசுபாட்டு குறியீட்டின் (Environment Pollution Index (EPI)) படி, 180 நாடுகளில் இந்தியா 176வது இடத்தில் உள்ளது. IQAir இன் 2024 உலக காற்று தர அறிக்கை, உலகின் மிகவும் மாசுபட்ட 100 நகரங்களில் 74 இந்தியாவில் உள்ளன என்பதைக் காட்டுகிறது. 


சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனத்தின் மற்றொரு அறிக்கை, டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் காற்று மாசுபாட்டால் 11.9 ஆண்டுகள் வாழ்க்கையை இழக்கிறார்கள் என்று கூறுகிறது. இந்திய அரசாங்கம் இந்த அறிக்கைகளை மறுக்கக்கூடும் என்றாலும், நிலைமை மோசமாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், NCR பகுதி "எரிவாயு அறை"யாக மாறும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை.


மனிதன் உயிர்வாழ்வதற்கு காற்று அவசியம். ஆனால், அது பூமியின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். மண், நீர் மற்றும் பல்லுயிர் பெருக்கம் ஆகியவை மிக முக்கியமானவை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பாதுகாப்பு தேவை. உலக மக்கள்தொகைக்கு உணவளிக்க இந்த கூறுகள் அவசியம். விரைவான மக்கள்தொகை வளர்ச்சி இருந்தபோதிலும், சிறந்த விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நீர்ப்பாசனம் மற்றும் பண்ணை இயந்திரங்கள் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிக்க அறிவியல் உதவியுள்ளது. இந்தியாவின் பசுமைப் புரட்சி மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது. இருப்பினும், அதிக உணவை உற்பத்தி செய்ய, மண், நீர் ஆதாரங்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு தீங்கு விளைவித்துள்ளோம்.


இந்தியாவில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மண்ணில் 0.5%-க்கும் குறைவான மண் கார்பன் உள்ளது. அதே நேரத்தில், அது குறைந்தது 1.5 முதல் 2% வரை இருக்க வேண்டும். பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர் கடந்த 20 ஆண்டுக்கு 1.5 அடிக்கு மேல் குறைந்து வருகிறது. மேலும், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரிப்பதால் மாசுபட்டு வருகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அரிசி-கோதுமை சுழற்சி பல்லுயிர் பெருக்கத்தை கணிசமாகக் குறைத்துள்ளது. இது நமது உணவு உற்பத்தி முறை நீடிக்க முடியாதது என்பதைக் காட்டுகிறது. இதை எவ்வாறு மேம்படுத்துவது?


நிலையான வளர்ச்சியை ஆதரிப்பதில் கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் தயாரிப்புகள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளுக்கான (New payment systems for ecosystem services (PES)) புதிய கட்டண முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். கார்பன் வரவுகள், நீர் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் போன்ற இயற்கைக்கு நன்மை பயக்கும் விவசாய நடைமுறைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு வெகுமதி அளிக்கப்பட வேண்டும். உற்பத்தித்திறன் வளர்ச்சி முக்கியமானது என்றாலும், இயற்கையின் வளங்களைப் பராமரிப்பதும் மிக முக்கியமானது. நிலைத்தன்மையுடன் வளர்ச்சியை சமநிலைப்படுத்துவது சவாலானது. ஆனால், இரு இலக்குகளிலும் நாம் கவனம் செலுத்தினால் அடையக்கூடியது.


2000-01 முதல் 2024-25 வரை, இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஆண்டுக்கு 6.3% ஆகவும், விவசாயம் ஆண்டுக்கு 3.5% ஆகவும் அதிகரித்துள்ளது. இது வறுமையைக் குறைக்கவும், மக்களுக்கு உணவளிக்கவும், இந்தியாவை விவசாயப் பொருட்களின் நிகர ஏற்றுமதியாளராக மாற்றவும் உதவியுள்ளது. இருப்பினும், இலவச மின்சாரம், அதிக மானியத்துடன் கூடிய உரங்கள் (குறிப்பாக யூரியா) மற்றும் பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற பகுதிகளில் நெல் மற்றும் கோதுமையை வரம்பற்ற முறையில் கொள்முதல் செய்தல் போன்ற கொள்கைகள் விவசாய சுற்றுச்சூழல் அமைப்புகளை சேதப்படுத்துகின்றன. 


இந்த மானியங்கள் மறுசீரமைக்கப்பட்டு நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இது கழிவுகளைக் கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவும். PES மூலம் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர்களை ஊக்குவிப்பதன் மூலம் அவற்றை மீண்டும் விவசாய முறைகளுக்கு கொண்டுவர முடியும். அவை அதிக சத்தானவை, மண்ணை மேம்படுத்துகின்றன, தண்ணீரைச் சேமிக்கின்றன, மேலும் நைட்ரஜனை நிலைநிறுத்துதல், காற்றின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் பல்லுயிரியலை ஆதரிப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உதவுகின்றன.


இந்த ஆண்டு பூமி தினம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் கவனம் செலுத்துகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் அதை 300% அதிகரிக்கும் நோக்கத்துடன் விவசாயிகள் மூன்றாவது பயிராக வேளாண் மின்னழுத்தங்களை (பண்ணைகளில் சூரிய சக்தி) பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டால், அது தூய்மையான ஆற்றலை உருவாக்கவும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் உதவும். மின்சார நிறுவனங்கள் அனல் மின்சாரத்தின் விலையைவிட 10-15% அதிக விலையில் விவசாயிகளிடமிருந்து மின்சாரத்தை வாங்கினால் இது வேலை செய்யும். இது பண்ணைகளில் ஒரு தூய எரிசக்தி புரட்சியைத் தொடங்கும் மற்றும் இது சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகள் இருவருக்கும் உதவியாக இருக்கும்.


குலாட்டி ஒரு புகழ்பெற்ற பேராசிரியர் மற்றும் ராத் சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த இந்திய ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council for Research on International Economic Relations (ICRIER)) ஊழியர்.


Original article:
Share:

குழந்தைகளுக்கு நன்றாக சாப்பிடக் கற்றுக் கொடுப்பது பள்ளியிலேயே தொடங்கப்பட வேண்டும் -பவன் அகர்வால்

 உணவு எழுத்தறிவு (Food literacy) இனி ஒரு ஆடம்பரமல்ல. குழந்தைகளுக்கு உணவளிப்பதில் மட்டுமல்ல, ஆரோக்கியமாக சாப்பிடுவது எப்படி என்பதைக் கற்றுக்கொடுப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.


கடந்தமாதம், உலகத் தலைவர்கள் பாரிஸில் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து (N4G) உச்சிமாநாட்டிற்காக சந்தித்தனர். அதே நேரத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (United Nations General Assembly (UNGA)), ஐக்கிய நாடுகள் சபையின் ஊட்டச்சத்துக்கான பத்தாண்டு நடவடிக்கை 2025ஆம் ஆண்டு முதல் 2030-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்தது. அனைத்து வகையான ஊட்டச்சத்து குறைபாட்டையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலகளாவிய முயற்சியைத் தொடரவும், 2030-ஆம் ஆண்டு நிலையான வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலின் இலக்குகளை சிறப்பாகப் பொருத்தவும் இந்த நீட்டிப்பு நோக்கமாக உள்ளது.


ஊட்டச்சத்துக்கு இது ஒரு முக்கியமான தருணமாக இருக்கலாம். இது மக்கள் உணவை நாடுவதைப் பற்றியது மட்டுமல்ல. அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், எப்படி சாப்பிடுகிறார்கள், ஏன் சாப்பிடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் ஆகும். குறிப்பாக, குழந்தைகளுக்கு. ஊட்டச்சத்து என்பது ஒரு சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல; இது கல்வி, நியாயம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.


இதுவரை, உலகளாவிய ஊட்டச்சத்து முயற்சிகள் பெரும்பாலும் வாழ்க்கையின் முதல் 1,000 நாட்களில் கர்ப்பம் முதல் இரண்டு வயது வரை, ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுப்பதற்கான மிக முக்கியமான நேரமாக கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால், இப்போது, ​​அடுத்த 4,000 நாட்களும் அதே அளவு முக்கியம் என்பதை நிபுணர்கள் உணர்ந்துள்ளனர். இதில் இளம் வயதினரின் காலமும் அடங்கும். இது பெரிய உடல், உணர்ச்சி மற்றும் நடத்தை மாற்றங்களின் காலமாகும். இது ஆரம்பகால ஊட்டச்சத்து பிரச்சினைகளை சரிசெய்ய மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது.


இளமைப் பருவத்தில் நல்ல ஊட்டச்சத்து குழந்தைகள் சரியாக வளரவும் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்திற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கவும் உதவும். இதை அடைய, குழந்தைகளுக்கு உணவளிப்பதைத் தாண்டி, ஆரோக்கியமாக சாப்பிடுவது எப்படி என்பதைக் கற்பிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.


பாரிஸ் உச்சிமாநாட்டில் நடந்த ஒரு துணை நிகழ்வு, “நன்றாக சாப்பிட கற்றுக்கொள்ளுங்கள்: உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட உணவுமுறைகள் மற்றும் மாற்றத்தின் முகவர்களாக இளைஞர்கள்” (“Learn to Eat Well: Bio-diverse Diets and Youth as Agents of Change”) என்ற தலைப்பில் இந்த யோசனையை தெளிவாக எடுத்துக்காட்டியது. உணவு மற்றும் ஊட்டச்சத்து கல்வி பள்ளிகளில் தொடங்கப்பட வேண்டும் என்று மக்கள் இப்போது நம்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. கலோரிகளை எண்ணுவதைவிட அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் தங்கள் ஆரோக்கியத்திற்கும் பூமிக்கும் நல்ல தேர்வுகளை எவ்வாறு செய்வது என்பதையும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.


மாறும் உலகம்


இன்று, குழந்தைகள் உணவை எளிதாகப் பெறும் உலகில் வாழ்கிறார்கள்.  ஒரு தொலைபேசியைத் தட்டினால் போதும், அதை ஆர்டர் செய்து டெலிவரி பெறலாம். உணவும் அதிகமாக விளம்பரப்படுத்தப்படுகிறது, இதனால் என்ன சாப்பிட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பது கடினமாகிறது.


பெரும்பாலான குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்வதற்கான போதுமான விவரம் அல்லது திறன்கள் இல்லை. அவர்களின் உணவுப் பழக்கம் பெரும்பாலும் நல்ல ஊட்டச்சத்து அல்லது மரபுகளுக்குப் பதிலாக நண்பர்கள், பழக்கவழக்கங்கள் அல்லது விளம்பரங்களால் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பல குழந்தைகள் காலை உணவைத் தவிர்க்கிறார்கள், மிகக் குறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுகிறார்கள், மேலும் அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுகிறார்கள்.



உணவுப் பன்முகத்தன்மையின் முக்கியத்துவம்


இன்றைய ஒரு பெரிய இழப்பு உணவுப் பன்முகத்தன்மை நமது உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற பல்வேறு வகையான உணவுகளை உண்பது. நிலையான வளர்ச்சி இலக்கு 2 (பசியை முடிவுக்குக் கொண்டுவருதல்)-ன் கீழ் ஐக்கிய நாடுகள் சபை குறைந்தபட்ச உணவுப் பன்முகத்தன்மையை உலகளாவிய நடவடிக்கையாக ஆக்கியுள்ளது. இது, கடந்த 24 மணி நேரத்தில் ஒரு குழந்தை 10 உணவுக் குழுக்களில் குறைந்தது ஐந்து உணவுகளை சாப்பிட்டதா? எனும் ஒரு எளிய கேள்வியைக் கேட்கிறது.


துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவின் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் இரண்டிலும் பெரும்பாலான குழந்தைகள் போதுமான வகைகளை சாப்பிடுவதில்லை. அவர்களின் மோசமான உணவுமுறைகள் அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு நமது உணவு முறைகள் மற்றும் கல்வியில் ஆழமான சிக்கல்களையும் காட்டுகின்றன.


மோசமான உணவுமுறைகள் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைப் பருவ உடல் பருமன், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்கள் மற்றும் மனநலப் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. தடுக்கக்கூடிய வயதுவந்தோரின் நோய்களில் கிட்டத்தட்ட 70% குழந்தைப் பருவத்தில் உருவாகும் பழக்கவழக்கங்களுடன்  குறிப்பாக உணவுப் பழக்கங்களுடன் தொடங்குகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இது சீக்கிரமாகத் தொடங்குவது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது, மேலும் ஆரோக்கியமான பழக்கங்களைக் கற்பிக்க பள்ளிகள் சிறந்த இடம்.


இருப்பினும், பெரும்பாலான பள்ளிகளில் உணவு மற்றும் ஊட்டச்சத்து கல்வி இல்லை அல்லது அது காலாவதியாகியுள்ளது மற்றும் நிஜ வாழ்க்கையுடன் இணைக்கப்படவில்லை. சரியான பாடத்திட்டம் அல்லது நல்ல கற்றல் பொருட்கள் இல்லை, இது குழந்தைகளுக்கு நன்றாக சாப்பிட கற்றுக்கொடுப்பதை கடினமாக்குகிறது. ஆசிரியர்களுக்கு பெரும்பாலும் பயிற்சி மற்றும் கருவிகளும் இல்லை. சரியான ஆதரவு இல்லாமல், பள்ளிகள் நல்ல உணவு மற்றும் ஊட்டச்சத்து கல்வியை வழங்குவது கடினமாக உள்ளது.


இதனால்தான் நமக்கு ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் வயதுக்கு ஏற்ற பாடத்திட்டம் தேவை. இது உணவுக் குழுக்களுக்கு அப்பால் சென்று வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் கற்பிக்க வேண்டும். இது பாலர் பள்ளியின் ஆரம்பத்திலேயே தொடங்கி குறைந்தபட்சம் நடுநிலைப் பள்ளி வரை தொடர வேண்டும், உணவு, சுகாதாரம், அடையாளம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளைப் புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு உதவுகிறது.


மனித உடல் எவ்வாறு செயல்படுகிறது. பன்முகத்தன்மை கொண்ட உணவுகள் ஏன் முக்கியம். உணவு அமைப்புகள் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கின்றன என்பது வரை அனைத்தையும் இந்தப் பாடத்திட்டம் கற்பிக்க முடியும். பல்லுயிர் பன்முகத்தன்மை கொண்ட உணவுகளை ஊக்குவிப்பது ஒரு முக்கிய பகுதியாக இருக்க வேண்டும். பல்வேறு வகையான உள்ளூர், பருவகால மற்றும் பாரம்பரிய உணவுகளை உண்ணுதல் இந்த உணவுமுறைகள் சிறந்த ஊட்டச்சத்தை வழங்குகின்றன. இது உள்ளூர் விவசாயிகளை ஆதரிக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கைக் குறைக்கின்றன மற்றும் பாரம்பரிய உணவு அறிவைப் பாதுகாக்க உதவுகின்றன.


இது பள்ளி வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்


குழந்தைகளுக்கு நன்றாக சாப்பிட கற்றுக்கொடுப்பது அவ்வப்போது பேச்சுக்கள் அல்லது செயல்பாடுகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. அது பள்ளி வாழ்க்கையின் வழக்கமான பகுதியாக மாற வேண்டும். இதன் பொருள் நல்ல, வயதுக்கு ஏற்ற பொருட்களைக் கொண்ட வாராந்திர பாடங்களைக் கொண்டிருக்க வேண்டும். பள்ளிகள் ஆரோக்கியமான உணவகங்கள், சமையலறைத் தோட்டங்கள், எளிய சமையல் அமர்வுகள் மற்றும் மாணவர்கள் தலைமையிலான பிரச்சாரங்கள் மூலம் இதை ஆதரிக்க வேண்டும். இந்த நிஜ வாழ்க்கை நடவடிக்கைகள் குழந்தைகள் உணவு, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பற்றிய நீடித்த அறிவு, பழக்கவழக்கங்கள் மற்றும் மதிப்புகளை வளர்க்க உதவுகின்றன.


உலகெங்கிலும் உள்ள பள்ளிகள் ஏற்கனவே என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுகின்றன. மாணவர்கள் காய்கறிகளை வளர்க்கிறார்கள், உணவு சமைக்கிறார்கள், உணவு லேபிள்களைப் படிக்கிறார்கள், மேலும் அவர்களின் உணவுத் தேர்வுகள் அவர்களின் ஆரோக்கியத்தையும் பூமியையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள்.


இந்தியாவில், தேசிய கல்விக் கொள்கை மற்றும் பள்ளி சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் திட்டம் இந்த வகையான கற்றலுக்கான இடத்தை உருவாக்கியுள்ளன. இருப்பினும், நமக்கு இன்னும் ஒரு தெளிவான அமைப்பு, ஒரு முழு பாடத்திட்டம், ஆண்டு முழுவதும் குறைந்தது ஒரு வாராந்திர அமர்வு, சரியான கற்றல் வளங்கள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை.


குழந்தைகளை கற்பவர்களாக மட்டுமல்ல, செல்வாக்கு செலுத்துபவர்களாகவும் பார்க்க வேண்டும். சரியான அறிவு மற்றும் கருவிகளுடன், அவர்கள் தங்கள் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் சமூகங்களை பாதிக்கலாம். அவர்கள் சிறந்த பள்ளி உணவைக் கேட்கலாம், உணவு வீணாவதைக் குறைக்க உதவலாம், ஆரோக்கியமான உணவு பற்றிய விழிப்புணர்வைப் பரப்பலாம்.


நன்றாக சாப்பிடக் கற்றுக்கொள்வது என்பது உணவைப் பற்றியது மட்டுமல்ல. அது ஆரோக்கியத்தைப் பராமரிப்பது, கலாச்சாரத்தைப் புரிந்துகொள்வது, கிரகத்தை மதிப்பது மற்றும் பொறுப்புள்ள குடிமக்களாக வளர்வது பற்றியது. ஊட்டச்சத்து குறைபாடு, அதிகமாக சாப்பிடுவது, காலநிலை மாற்றம் மற்றும் கலாச்சார இழப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் உலகில், உணவுக் கல்வி விருப்பமானது அல்ல. அது அவசியமானது.


ஆரோக்கியமான, கனிவான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் ஒரு தலைமுறையை நாம் உருவாக்க விரும்பினால், இன்று முதல் ஒவ்வொரு குழந்தையின் கல்வியின் ஒரு பகுதியாக நன்றாக சாப்பிடக் கற்றுக்கொள்வதை நாம் செய்ய வேண்டும்.


பவன் அகர்வால், Food Future Foundation அமைப்பின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (Food Safety and Standards Authority of India (FSSAI)).


Original article:
Share:

தூய செயற்கை நுண்ணறிவு : AI தரவு மையங்கள் மற்றும் ஆற்றல் தேவை குறித்து…

 சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில், செயற்கை நுண்ணறிவின் (AI) பொருளாதார நன்மைகள், கூடுதல் ஆற்றல் AI தரவு மையங்களுக்குத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செலவுகளைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தது. ஏனெனில், இந்த செலவுகள் AI தரவு மையங்களுக்குத் தேவைப்படும் அதிகரித்த எரிசக்தி தேவையிலிருந்து வருகின்றன.


ஒரு மாற்றும் தொழில்நுட்பமாக AI, நிலையான வளர்ச்சி உத்திகளைப் பின்பற்றுவதற்கான உலகளாவிய இலக்கிற்கு அடிப்படையில் இது முரணாக இல்லை என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியுடன் சிறப்பாகத் தயாராக இருக்கும் நாடுகள் தங்கள் AI லட்சியங்களைத் தொடரும்போது குறைந்த சமூக மற்றும் சுற்றுச்சூழல் செலவை அனுபவிக்கும்.


இந்தியாவின் AI உள்கட்டமைப்பு, குறிப்பாக இந்தியா AI மிஷன் மூலம் அரசாங்கத்தால் மறைமுகமாக நிதியளிக்கப்படும் பகுதி, மேக்ரோ மட்டத்தில் நாட்டின் எரிசக்தி கலவையில் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், AI செயல்பாடுகளுக்காக குறிப்பாக புதுப்பிக்கத்தக்கவற்றைத் தொடர வேண்டிய அவசியம் இன்னும் உள்ளது.


இந்த அணுகுமுறை ஏற்கனவே அரசாங்கத்தின் திட்டங்களில் பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பாரிஸில் நடந்த AI செயல் உச்சி  மாநாட்டில் (AI Action Summit) இந்தத் திட்டங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டன.


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலையான நடைமுறைகளுக்கான உந்துதல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரே தொழில் AI அல்ல என்றாலும், இந்தத் துறை இரண்டு முக்கிய காரணங்களுக்காக தனித்து நிற்கிறது.


முதல் காரணம், AI பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு மிகப்பெரியது. உலகளவில் மிகப்பெரிய AI கணினி திறனைக் கொண்ட அமெரிக்காவில்  "AI விரிவாக்கம் மட்டும் மின்சார விலையை 9 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்" என்று IMF அறிக்கை காட்டுகிறது. இது பல பிற ஆதாரங்களில் இருந்து ஏற்கனவே உள்ள விலை அழுத்தங்களை அதிகரிக்கும்.


எனவே, வழக்கமான எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தினால் ஏற்படும் உமிழ்வுகளில் ஏற்படும் கூர்மையான உயர்வைக் குறைப்பதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும்.


இரண்டாவது காரணம், தரவு மையங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்கட்டமைப்பைக் கொண்டிருக்க தனித்துவமாக பொருத்தமானவை. சில இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் செயல்பாடுகளுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வாங்கத் தொடங்கியுள்ளன. தரவு மையங்கள் ஆக்கிரமித்துள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் சூரிய மின்கலங்கள் மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உபகரணங்களை நிறுவுவதற்கு ஏற்றவை.


அணுசக்தியும் ஒரு உதவிகரமான பங்கை வகிக்கக்கூடும். வளர்ந்துவரும் தரவு மையக் குழுக்களுக்கு அருகில் அமைந்துள்ள மற்றும் புதுப்பிக்கத்தக்க மூலங்களுடன் பயன்படுத்தப்படும் சிறிய மட்டு உலைகள், குறிப்பிடத்தக்க அளவு உமிழ்வைத் தடுக்கும்


மின்சாரப் பயன்பாடு மட்டுமே சுற்றுச்சூழலைப் பாதிக்காது. இந்தத் தொழில்நுட்பத்திற்கு சுரங்கத்திலிருந்து நிறைய கனிமங்களும் தேவைப்படுகின்றன. இதற்கு நிறைய தண்ணீரைப் பயன்படுத்துகின்றன. மேலும், மின்னணு பாகங்கள் தயாரிக்கும்போது கழிவுகளை உருவாக்குகின்றன. இந்தியா மின்னணு உற்பத்தியிலும் வளர விரும்புகிறது. எனவே, இந்த தாக்கங்களை நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய, இந்தியா பாரம்பரிய மூலங்களிலிருந்து வரும் மாசுபாட்டைக் குறைக்க வேண்டும் மற்றும் அதிக ஆற்றலைப் பயன்படுத்தும் புதிய தொழில்களை கவனமாக நிர்வகிக்க வேண்டும்.


Original article:

Share: