இந்தியாவிற்கு உலகளாவிய செல்வாக்கை உருவாக்குவதற்கான ஒரு கூட்டமைப்பாக பிரிக்ஸ் -ஹேப்பிமான் ஜேக்கப்

 இது G7 மற்றும் G20 போன்ற பிற குழுக்களில் இந்தியா தனது செல்வாக்கை அதிகரிக்க உதவும். இந்தியா உலகளாவிய தெற்கிற்கு ஒரு பாலமாகவும் தலைவராகவும் செயல்பட முடியும்.


பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாடு பல வேறுபட்ட உணர்வுகளை ஏற்படுத்துகிறது. சிலர் சங்கடமாக உணர்கிறார்கள், மற்றவர்கள் ஆர்வமாக, உற்சாகமாக அல்லது நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்த எதிர்வினைகள் அவர்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்தது. போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கு மாறும்போது 11 உறுப்பினர்களைக் கொண்ட குழு உலக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதற்கு முன்பு, ஜூன் நடுப்பகுதியில் நடந்த குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலும் ஜி7 உச்சிமாநாட்டிலும் இந்தியா கலந்து கொண்டது. சில வாரங்களுக்கு முன்பு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation (SCO)) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திலும் இந்தியா இணைந்தது. இந்த நிகழ்வுகள் இந்தியா கையாள வேண்டிய சிக்கலான அரசியல் சவால்களைக் காட்டுகின்றன.


எனவே பிரிக்ஸ் அதன் உறுப்பினர்களுக்கு என்ன மதிப்பை வழங்குகிறது? பிரிக்ஸ் அதன் உறுப்பு நாடுகளுக்கு வெவ்வேறு மதிப்புக்கான முன்மொழிவுகளை வழங்குகிறது. பல நாடுகளுக்கு, குறிப்பாக உலகளாவிய தெற்கில், பிரிக்ஸ், வளர்ந்த நாடுகளால் பெரும்பாலும் கவனிக்கப்படாத அவர்களின் வரலாற்று குறைகள் மற்றும் கவலைகளை வெளிப்படுத்த ஒரு குறிப்பிடத்தக்க தளமாக செயல்படுகிறது. ரஷ்யா, சீனா மற்றும் ஈரானுக்கு, பிரிக்ஸ் ஒரு வளர்ந்துவரும் உலகளாவிய மன்றமாகும். அவர்கள் அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் சவால் செய்ய இதைப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்கா தலைமையிலான ஒழுங்கிற்கு உலகளாவிய மாற்றீட்டை உருவாக்குவதற்கான வழிகளையும் அவர்கள் விவாதிக்கிறார்கள். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களாக ரஷ்யாவும் சீனாவும் தற்போதைய ஒழுங்கின் ஒரு பகுதியாக இருந்தாலும் இது நிகழ்கிறது.


புதிய மற்றும் ஆர்வமுள்ள உறுப்பினர்களுக்கு, பிரிக்ஸ் எதிர்கால புவிசார் அரசியல் செல்வாக்கிற்கான நம்பிக்கையை வழங்குகிறது. புதிய உலக ஒழுங்கை வடிவமைப்பது (new world order gain momentum) பற்றிய பேச்சுக்கள் வேகம் பெறுவதால் எந்த நாடும் புறக்கணிக்கப்பட விரும்பாது.


பிரிக்ஸ் பல பெரிய சவால்களை எதிர்கொள்கிறது. இதுபோன்ற போதிலும், அது அதிக உறுப்பினர்களைச் சேர்க்க விரும்புகிறது. அதிக உறுப்பினர்களைக் கொண்டிருப்பது அதன் செல்வாக்கை அதிகரிக்கும் என்று அது நம்புகிறது. இது ஒரு முக்கியமான உலகளாவிய மன்றமாக மாறவும் நம்புகிறது. இருப்பினும், பிரிக்ஸ் விரிவடையும் அளவுக்கு, அதிக உள்-மோதல்கள் தோன்றக்கூடும். பல விஷயங்களில் பிரிக்ஸ் உறுப்பினர்களிடையே குறைவான ஒற்றுமை மற்றும் அதிக கருத்து வேறுபாடுகள் உள்ளன. 2024 கசான் உச்சிமாநாட்டுப் பிரகடனம் (Kazan Summit Declaration) போன்ற 134 பத்திகளைக் கொண்ட நீண்ட உச்சிமாநாட்டுப் பிரகடனங்களில் அவர்கள் உடன்படும்போதுகூட இது நிகழ்கிறது. ஒரு வகையில், உறுப்பு நாடுகள் வலுவான அறிவிப்புகள் நிறைந்த இந்தப் பிரகடனங்களில் கையெழுத்திடுகின்றன. ஏனெனில், இந்தப் பிரகடனங்கள் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிவார்கள்.


பிரிக்ஸ் எதிர்கொள்ளும் முக்கிய சவால் என்னவென்றால், அதன் உறுப்பினர்கள் பகிரப்பட்ட அறிவிப்பின் இலக்குகளால் ஒன்றுபடவில்லை. மாறாக, அவர்கள் முக்கியமாக அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கை எதிர்ப்பதன் மூலம் ஒன்றுபட்டுள்ளனர். இந்த ஒழுங்கு மனிதகுலத்தின் பெரும்பகுதியினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், உறுப்பினர்கள் தங்களின் எதிர்ப்பு எவ்வளவு வலுவாக இருக்க வேண்டும் அல்லது அது எதன் வடிவத்தை எடுக்க வேண்டும் என்பதில் உடன்படவில்லை. உதாரணமாக, இந்தியாவும் ரஷ்யாவும் பெரும்பாலும் மிகவும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளன. தற்போதைய இந்த அமைப்பை எவ்வாறு சீர்திருத்துவது அல்லது புதிய ஒன்றை உருவாக்குவது என்பதில் அவர்கள் உடன்படவில்லை. இந்த வேறுபாடுகள் அவற்றின் வெவ்வேறு இராஜதந்திர  நலன்களிலிருந்தும் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடனான உறவுகளிலிருந்தும் வருகின்றன.


பிரிக்ஸ் ஒரு வலுவான உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றாக மாற முடியுமா? என் கருத்துப்படி, பதில் இல்லை. இந்தியா தனது புவிசார் அரசியல் உத்தியை பிரிக்ஸுடன் முழுமையாக இணைக்க வேண்டுமா? நான் இல்லை என்று கூறுவேன். சர்வதேச அரசியல் வெறுமனே கருப்பு மற்றும் வெள்ளை அல்ல, சாம்பல் நிறத்தின் பல நிழல்கள் உள்ளன. இதன் காரணமாக, பிரிக்ஸ் போன்ற குழுக்களின் ஒரு பகுதியாக இந்தியா இருப்பதில் சில மதிப்பு உள்ளது. முக்கியமாக, இது புவிசார் அரசியல் ஹெட்ஜிங் அல்லது அதன் விருப்பங்களை சமநிலைப்படுத்துவதில் இந்தியாவுக்கு உதவுகிறது.


புது தில்லிக்கு, பிரிக்ஸ் என்பது ஒரு முக்கியமான மேற்கத்திய தாக்கம் அல்லாத தளமாகும், அங்கு உலகளாவிய ஒழுங்கு குறித்த மிகவும் செல்வாக்கு மிக்க மாற்று கருத்துக்கள் தற்போது வெளிப்படுத்தப்படுகின்றன, இருப்பினும் இவற்றில் பெரும்பாலானவை வெறும் பேச்சு வார்த்தைகளாகவே உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, பிரிக்ஸ் பேச்சு வார்த்தைகள், ஜி7 மற்றும் ஜி20 போன்ற மற்ற மன்றங்களில் ஒரு பாலமாக செயல்படும் மாநிலமாக அதன் செல்வாக்கை அதிகரிக்க ஒரு மதிப்புமிக்க கருவியாக உள்ளது. மேலும், பிரிக்ஸ் தொடர்ந்து உலகளாவிய தெற்கின் முக்கியமான கவலைகளை எதிரொலிப்பதால், இந்தியா உலகளாவிய தெற்கில் ஒரு முன்னணி குரலாக தன்னை நிலைநிறுத்த முயலும்போது, இது புது தில்லிக்கு கருவி மதிப்பை வழங்குகிறது. உலகளாவிய தெற்கின் கவலைகளை மையமாகக் கொண்ட மன்றங்களில் நீங்கள் பங்கேற்கவில்லை என்றால், அதன் நலன்களை திறம்பட பிரதிநிதித்துவப்படுத்தவோ அல்லது பேசவோ உங்களுக்கு நியாயமான தகுதியோ அல்லது தளமோ இல்லாமல் இருக்கலாம்.


புவிசார் அரசியலில் கடுமையான பிளவுகளை ஏற்படுத்தினால், அத்தகைய குறியீட்டு மதிப்பு தீங்கு விளைவிக்கும். எடுத்துக்காட்டாக, மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பின் அறிக்கையை முதலில் இந்தியா மேற்கத்திய நாடுகளிடமிருந்து கவனத்தையும் ஆர்வத்தையும் பெற உதவுகிறது. ஆனால், இந்த சொல்லாட்சி இந்தியாவின் சீர்திருத்தவாத அணுகுமுறைக்கு மிகவும் தீவிரமாகிவிட்டால், அது இந்தியாவுக்கு பயனுள்ளதாக இருப்பதை நிறுத்துகிறது. அதன் அறிக்கை அதன் குறியீட்டு அர்த்தத்திற்கு அப்பால் செல்லும்போது இந்தியாவிற்கான பிரிக்ஸின் பயன் குறைகிறது.


இரண்டாவதாக, பிரிக்ஸ் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் என்ன செய்வார்கள் என்பதில் இந்தியா யதார்த்தமாக இருக்க வேண்டும். ஒரு உறுப்பினர் பிரச்சனையை எதிர்கொள்ளும்போது அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கலாம், ஆனால் இந்த ஆதரவு ஒரு குழுவாக அல்ல, தனிப்பட்ட நாடுகளாகவே நிகழ்கிறது. இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது இந்தியா இதைப் பார்த்தது. பிரிக்ஸ் ஒரு குழுவாகவோ அல்லது அதன் தனிப்பட்ட உறுப்பினர்களாகவோ இந்தியாவுக்கு ஆதரவளிக்கவில்லை. பிரிக்ஸின் குறிக்கோள் உறுப்பினர்களிடையே பொதுவான நலன்களைப் பற்றி விவாதிப்பதாகும். இது எந்த ஒரு நாட்டின் குறிப்பிட்ட தேவைகளில் கவனம் செலுத்துவதில்லை. எனவே, இந்த உண்மையைப் புரிந்துகொண்டு பிரிக்ஸுடன் இந்தியா ஈடுபட வேண்டும். அதன் பங்கேற்பு குழுவின் சிறிய பகிரப்பட்ட நலன்களை மட்டுமே ஆதரிக்க வேண்டும். மிக முக்கியமாக, இந்தியா தவறுதலாக வேறு எந்த உறுப்பு நாட்டின் திருத்தல்வாத இலக்குகளுக்கும் (revisionist goals) உதவுவதைத் தவிர்க்க வேண்டும்.


இந்தியாவைப் பொறுத்தவரை, பிரிக்ஸ் என்பது நிச்சயமற்ற காலங்களில் இராஜதந்திர  பாதுகாப்புக்கான ஒரு பயனுள்ள கருவியாகும். இது இந்தியாவை ஒரே நேரத்தில் வெவ்வேறு உலக சக்திகளுடன் சமநிலைப்படுத்தவும் ஈடுபடவும் அனுமதிக்கிறது. இது எதிர்க்கும் பக்கங்களைக் கையாள்வதில் இந்தியாவுக்கு சில நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. அதன் வேறுபட்ட மற்றும் போட்டியிடும் இலக்குகளை நிர்வகிக்கும் அதே வேளையில், அதன் உண்மையான நலன்கள் எங்கே உள்ளன என்பது குறித்து இந்தியா தெளிவாகத் தெரியாமல் இருக்கவும் இது அனுமதிக்கிறது.


பிரிக்ஸ் மீதான இந்தியாவின் அணுகுமுறையின் பின்னணியில் உள்ள முக்கிய யோசனை கவனமான பாதுகாப்பு ஆகும். இது பகிரப்பட்ட சித்தாந்தம் அல்லது ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டது அல்ல.


ஹேப்பிமான் ஜேக்கப் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சிலின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஆவார். அவர் *INDIA’S WORLD* பத்திரிகையின் ஆசிரியராகவும் உள்ளார்.



Original article:

Share:

ஆந்திரப் பிரதேசம், பள்ளிக் குழந்தைகளுக்கான ஒரு திட்டத்திற்கு ஏன் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பெயரை சூட்டியுள்ளது? -ஸ்ரீனிவாஸ் ஜன்யாலா

 சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வித்யார்த்தி மித்ரா கருவிகள் திட்டம் (Vidyarthi Mitra Kits scheme) என்றால் என்ன, அது மாணவர்களுக்கு எவ்வாறு உதவும்?


ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான NDA அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு கருவிகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ‘சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வித்யார்த்தி மித்ரா கருவிகள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.


முன்னாள் குடியரசுத்தலைவரும், கல்வியாளர் மற்றும் தத்துவஞானியின் பெயரைத் தேர்ந்தெடுப்பதில், பள்ளி மாணவர்களுக்கான திட்டங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயரைச் சூட்டும் போக்கை அரசாங்கம் நிராகரிப்பதாகவும், மாணவர்களை அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக வைத்திருக்க விரும்புவதாகவும் கூறியுள்ளது.


ராதாகிருஷ்ணன் 1962 முதல் 1967 வரை நாட்டின் இரண்டாவது குடியரசுத்தலைவராகப் பணியாற்றினார். அவரது பிறந்தநாள் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாகக் (Teachers’ Day) கொண்டாடப்படுகிறது.


சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வித்யார்த்தி மித்ரா கருவிகள் திட்டம் என்ன?


35 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கருவிகளை மாநில அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இந்த கருவிகளை வாங்க அரசாங்கம் ரூ. 953 கோடி செலவிட்டது.


இந்திய தர ஆணையம் (Quality Council of India (QCI)) அரசாங்கத்துடன் இணைந்து, கருவிகளை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களிலும் மூன்று அடுக்கு தர சோதனைகளை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த கருவிகள் ஒவ்வொரு மாணவருக்கும் சமமான தொடக்கத்தை அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகளில் சீருடைகள், காலணிகள், பெல்ட்கள், சாக்ஸ், பள்ளி பைகள், பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், பணிப்புத்தகங்கள் மற்றும் ஆக்ஸ்போர்டு அகராதிகள் ஆகியவை அடங்கும். சீருடைகள் அணியத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக தையல் கட்டணங்களையும் - 1–8 வகுப்புகளுக்கு ரூ. 120 மற்றும் 9–10 வகுப்புகளுக்கு ரூ. 240 - அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. மொத்த பட்ஜெட் ரூ.953.71 கோடி - மாநிலத்திலிருந்து ரூ.778.68 கோடி மற்றும் ஒன்றிய அரசிடமிருந்து ரூ.175.03 கோடி - ஒவ்வொரு கருவியும் தோராயமாக ரூ.2,279 மதிப்புடையது.


மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் என்.லோகேஷ் நாயுடு கூறுகையில், முந்தைய YSRCP ஆட்சியின் கீழ், இந்த கருவிகள் ஜெகன்னா வித்யா கனுகா என்று முத்திரை குத்தப்பட்டு அப்போதைய முதல்வர் Y S ஜெகன் மோகன் ரெட்டியின் படங்கள் இடம்பெற்றிருந்தன. பள்ளி மாணவர்களை அரசியல் செல்வாக்கிற்கு ஆளாக்குவதற்கும், அரசியல் விளம்பரத்திற்காக அரசாங்கப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் இது பரவலாக விமர்சிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.


தற்போதைய கருவிப் பெட்டிகளில் எந்த அரசியல் நிறங்கள், சின்னங்கள் அல்லது இலச்சினைகள் இல்லை.


கருவிப் பெட்டியின் உள்ளே என்ன இருக்கிறது?


ஒவ்வொரு மாணவரும் பெறுவது:


1. புதிய வண்ணங்களில் மூன்று செட் சீருடைகள் (ஆலிவ் பச்சை பேன்ட்/கவுன்கள் மற்றும் வெளிர் மஞ்சள்-பச்சை கோடிட்ட சட்டைகள்)


2. ஒரு ஜோடி காலணிகள், இரண்டு ஜோடி சாக்ஸ், ஒரு பெல்ட் மற்றும் ஒரு பள்ளி பை


3. பாடப்புத்தகங்கள், பணிப்புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள்


4. 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆக்ஸ்போர்டு ஆங்கிலம்-ஆங்கிலம்-தெலுங்கு அகராதி


5. 1-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சித்திர அகராதிகள்


6. தேவைப்படும் இடங்களில் உருது, தமிழ் மற்றும் ஒடியா போன்ற பிராந்திய/சிறுபான்மை மொழிகளில் அகராதிகள் போன்றவற்றை பெறுகின்றனர்.



Original article:

Share:

நிலநடுக்கங்கள் எவ்வாறு அளவிடப்படுகின்றன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


• வெள்ளிக்கிழமை, கியூஷுவின் தெற்கு முனையில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள சிறிய தீவுகளைச் சேர்ந்த சிலரை அதிகாரிகள் மாற்றினர்.


• வியாழக்கிழமை அன்று ஏற்பட்ட அந்த நிலநடுக்கம், நிற்பதற்கு கடினமாக இருக்கும் அளவுக்கு வலிமையானது, கடந்த இரண்டு வாரங்களில் ககோஷிமா மாகாணத்தின் தீவுகளில் ஏற்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளில் ஒன்றாகும். இவை, இந்த மாதம் நாட்டை ஒரு பெரிய பேரழிவு தாக்கும் என்று ஒரு காமிக் புத்தக கணிப்பிலிருந்து உருவான வதந்திகளைத் தூண்டியுள்ளன.



உங்களுக்குத் தெரியுமா?


• நிலநடுக்கம் என்பது பூமியின் மேற்பரப்பின் கீழ் நடைபெறும் அசைவுகளால் ஏற்படும் தரையின் தீவிர அதிர்வு ஆகும். இது அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (United States Geological Survey (USGS)) அமைப்பின் கூற்றுப்படி, பூமியின் இரண்டு தொகுதிகள் திடீரென ஒன்றையொன்று கடந்து சறுக்கும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. இது சேமித்து வைக்கப்பட்ட 'மீள்தன்மை வலி' சக்தியை (elastic strain energy) நிலநடுக்க அலைகள் (seismic waves) வடிவத்தில் வெளியிடுகிறது. இது பூமி வழியாக பரவி தரையின் அதிர்வை ஏற்படுத்துகிறது.


• பூமியின் வெளிப்புற மேற்பரப்பு, புவியோடு, டெக்டோனிக் தட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தட்டுகளின் விளிம்புகள் தட்டு எல்லைகள் எனப்படுகின்றன, இவை பிளவுகளால் ஆனவை. டெக்டோனிக் தட்டுகள் எப்போதும் மெதுவாக இயங்கிக் கொண்டிருக்கின்றன, ஒன்றையொன்று தாண்டி சறுக்கி, மோதிக்கொள்கின்றன. தட்டுகளின் விளிம்புகள் மிகவும் கரடுமுரடாக இருப்பதால், அவை ஒன்றோடொன்று சிக்கிக்கொள்கின்றன, ஆனால் தட்டின் மற்ற பகுதிகள் தொடர்ந்து நகர்கின்றன. தட்டு போதுமான தூரம் நகர்ந்து, ஒரு பிளவில் விளிம்புகள் பிரிந்து விடுபடும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது.


• பூமியின் மேற்பரப்பிற்கு கீழே நிலநடுக்கம் தொடங்கும் இடம் அதிகேந்திரம் (hypocenter) என்று அழைக்கப்படுகிறது. அதற்கு நேர் மேலே பூமியின் மேற்பரப்பில் உள்ள இடம் நிலநடுக்க மையம் (epicentre) என்று அழைக்கப்படுகிறது.


ஜப்பான் ஏன் பூகம்பங்கள் மற்றும் சுனாமிகளுக்கு ஆளாகிறது?


• இதற்கு அதன் இடம் தான் காரணம். ஜப்பான் 'பசிபிக் நெருப்பு வளையம்' (Pacific Ring of Fire) என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது உலகின் மிகவும் அதிக  உணர்திறன் கொண்ட பகுதியாகும். இந்த 'வளையம்' என்பது லைவ் சயின்ஸ் (Live Science) அமைப்பின் அறிக்கையின்படி "பசிபிக் பெருங்கடலின் விளிம்பைப் பின்பற்றி, குதிரைக் காலடி வடிவில் கற்பனை செய்யப்பட்ட பகுதி, அங்கு உலகின் பல நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் நடைபெறுகின்றன" என்று குறிப்பிடுகிறது.


•  நெருப்பு வளையத்திற்குள், பசிபிக் தட்டு (Pacific Plate), யூரேசியன் தட்டு (Eurasian Plate) மற்றும் இந்தோ-ஆஸ்திரேலிய தட்டு (Indo-Australian Plate) உள்ளிட்ட வேறுபட்ட டெக்டோனிக் பகுதிகள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து மோதுகின்றன. இதனால் பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமிகள் ஏற்படுகின்றன.



Original article:

Share:

CROPIC மற்றும் வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு -குஷ்பூ குமாரி

 சமீபத்தில், அரசாங்கம் விவசாயத் துறைக்காக, பயிர்களின் நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் புகைப்பட சேகரிப்பு (Collection of Real Time Observations & Photo of Crops (CROPIC)) திட்டத்தை தொடங்கியுள்ளது. இது விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவின் ஒருங்கிணைப்புடன் எவ்வாறு தொடர்புடையது?


தற்போதைய செய்தி:


கடந்த மாதம், விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் CROPIC திட்டத்தை தொடங்கியது. இது வயல் புகைப்படங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மாதிரிகளைப் பயன்படுத்தி பயிர் தகவல்களைச் சேகரிக்கும் ஆய்வு ஆகும். இந்த ஆய்வு பிரதான் மந்திரி பஸல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)) திட்டத்திற்காக நடத்தப்படுகிறது. இது பயிர் கையெழுத்துகளின் வளமான அடைவு உருவாக்க உதவுவதையும், பிரதான் மந்திரி பஸல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு இழப்பு மதிப்பீடு மற்றும் இழப்பீடு வழங்குதலை தானியங்கு படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. CROPIC என்பது பயிர்களின் நேர நிலை கண்காணிப்பு மற்றும் புகைப்பட சேகரிப்பு என்பதைக் குறிக்கிறது. இதன் கீழ், பயிர்கள் அவற்றின் சுழற்சியின் போது நான்கு அல்லது ஐந்து முறை புகைப்படம் எடுக்கப்படும். மேலும், படங்கள் அவற்றின் கால அளவு மற்றும் பருவகாலத்தின் நடுப்பகுதியில் ஏற்படும் இழப்புகளை மதிப்பிடுவதற்கு படங்கள் பகுப்பாய்வு செய்யப்படும்.


2. வயல் புகைப்படங்களைச் சேகரிப்பதற்காக, ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகம் CROPIC திறன்பேசி செயலியை உருவாக்கியுள்ளது. வயலில் இருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பெறப்படும். பின்னர், அவை பயிர் வகை, பயிர் நிலை, பயிர் சேதம் மற்றும் அதன் அளவு உள்ளிட்ட தகவல்களுக்காக பகுப்பாய்வு செய்யப்படும்.


3. இந்த அமைப்பு புகைப்படங்களை பகுப்பாய்வு செய்து பயனுள்ள தகவல்களைப் பெற செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். ஒரு வலை தரவுத்தளம் முடிவுகளைத் தெளிவாகக் காண்பிக்கும். விவசாயிகளுக்கு இழப்பீடு அல்லது காப்பீடு வழங்க இந்த திறன்பேசி செயலி பயன்படுத்தப்படும்.


விவசாயம், சுகாதாரம், கல்வி, அடுத்த தலைமுறை நகர்ப்புற உள்கட்டமைப்பு உருவாக்குதல் மற்றும் நகர்ப்புற பிரச்சனைகளைத் தீர்ப்பதில் செயற்கை நுண்ணறிவுக்கு ஒரு பெரிய பங்கு இருப்பதாக நான் காண்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


4. CROPIC பயிர் கால அளவு மற்றும் அழுத்தத்தை கண்காணிக்கும் இரட்டை நோக்கத்தை வழங்கும் மற்றும் கணினி பார்வை தொழில்நுட்பம் மற்றும் புகைப்பட பகுப்பாய்வு மாதிரிகளைப் பயன்படுத்தி பயிர் இழப்பு மதிப்பீடு மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குதலை தானியங்கு படுத்தும். இந்த முயற்சி நிதி மீள்தன்மையை வளர்ப்பதற்கான, விவசாயத்தில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் ஒரு பகுதியாகும்.


5. CROPIC முதலில் ஒவ்வொரு பருவத்திலும் குறைந்தது 50 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்படும். இந்த மாவட்டங்கள் வெவ்வேறு வேளாண்-காலநிலை மண்டலங்களில் (agro-climatic zones) நன்கு பரவியிருக்கும். ஆரம்பத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பருவத்திற்கும் மூன்று முக்கிய அறிவிக்கப்பட்ட பயிர்களை உள்ளடக்கும். (அறிவிக்கப்பட்ட பயிர்கள் PMFBY போன்ற காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் உள்ளடக்கப்பட்டவை) 


6. PMFBY-ன் கீழ் உள்ள கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிதியம் (FIAT) CROPIC-க்கு நிதியுதவி செய்யப் பயன்படுகிறது. FIAT பயிர் காப்பீட்டு திட்டங்களின் கீழ் பல்வேறு தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு சுமார் ரூ.825 கோடி மொத்த ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது.


புதுமை மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிதி (Fund for Innovation and Technology (FIAT)) 


புதுமை மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிதிக்கு, ஒன்றிய அமைச்சரவை ஜனவரி 1, 2025 அன்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலதனம் ரூ.824.77 கோடி ஆகும். இந்த நிதி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விளைச்சல் மதிப்பீட்டு அமைப்பு (Yield Estimation System using Technology (YES-TECH)), வானிலை தகவல் மற்றும் வலையமைப்பு தரவு அமைப்புகள் (Weather Information and Network Data Systems (WINDS)) போன்ற திட்டங்களின் கீழ் தொழில்நுட்ப முயற்சிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.


பிரதான் மந்திரி பஸல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY))


1. பிரதான் மந்திரி பஸல் பீமா யோஜனா 2016-ஆம் ஆண்டில் ஏற்கனவே இருந்த தேசிய விவசாய காப்பீட்டு திட்டம் (National Agricultural Insurance Scheme (NAIS)) மற்றும் மாற்றப்பட்ட தேசிய விவசாய காப்பீட்டு திட்டத்தை (Modified National Agricultural Insurance Scheme (MNAIS)) மாற்றுவதற்காக தொடங்கப்பட்டது. இது ஒரு நாடு, ஒரு பயிர், ஒரு காப்பீடு (One Nation, One Crop, One Premium) என்ற அடிப்படையில் செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், "அறிவிக்கப்பட்ட பகுதிகளில்" (notified areas) "அறிவிக்கப்பட்ட பயிர்களை" (notified crops)  வளர்க்கும் பங்கு விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் காப்பீட்டுக்கு தகுதியுடையவர்கள் ஆவார்.


2. பிரதான் மந்திரி பஸல் பீமா யோஜனா  திட்டத்தின் கீழ், ஒரு விவசாயி அனைத்து காரீஃப் உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களுக்கும் காப்பீட்டுத் தொகையில் 2% அல்லது காப்பீட்டு விகிதத்தில், எது குறைவாக இருக்கிறதோ அதையும்; அனைத்து ரபி உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களுக்கும் காப்பீட்டுத் தொகையில் 1.5% அல்லது காப்பீட்டு விகிதத்தில், எது குறைவாக இருக்கிறதோ அதையும்; தோட்டக்கலைப் பயிர்களுக்கு 5% காப்பீட்டிற்காகச் செலுத்த வேண்டும்.



விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு


1. கிசான் இ-மித்ரா (Kisan e-Mitra) : இது பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் குறித்த விவசாயிகளின் கேள்விகளுக்கு உதவ செயற்கை நுண்ணறிவால் இயங்கும் chatbot பயன்பாடாகும். இது பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் செயல்திறன் மற்றும் பரவலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் விவசாயிகளுக்கு அவர்களின் கேள்விகளுக்கு "உடனடி, தெளிவான மற்றும் துல்லியமான" பதில்களை வழங்குகிறது. இது 11 பிராந்திய மொழிகளை ஆதரிக்கிறது மற்றும் பிற அரசாங்க திட்டங்களுக்கு உதவுவதற்காக உருவாகி வருகிறது.


2. தேசிய பூச்சி கண்காணிப்பு அமைப்பு (National Pest Surveillance System (NPSS)) : NPSS, ஆகஸ்ட் 2024-இல் தொடங்கப்பட்டது, இது பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் விவசாயிகளை விவசாய விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களுடன் இணைக்க உதவும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தளமாகும். இது விவசாயிகளுக்கு நிகழ்நேர பயிர் பாதுகாப்பு ஆலோசனை வழங்குவதன் மூலம் பூச்சித் தாக்குதல், பயிர் நோய்கள், பயிர் சேதம் போன்றவற்றுக்கு விரைவான மற்றும் உடனடி தீர்வுகளை வழங்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலை பயன்படுத்துகிறது.


3. நிதி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விளைச்சல் மதிப்பீட்டு அமைப்பு (Yield Estimation System using Technology (YES-TECH)) : பயிர் விளைச்சலை மதிப்பிடுவதற்கு இது தொலை உணர்வு தொழில்நுட்பத்தைப் (Remote Sensing Technology) பயன்படுத்துகிறது. மதிப்பீட்டில் குறைந்தது 30% இந்த தொழில்நுட்பத்திலிருந்து வருகிறது. ஆந்திரப் பிரதேசம், அசாம், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய ஒன்பது மாநிலங்கள் இந்த முறையைப் பயன்படுத்துகின்றன.


4.வானிலை தகவல் மற்றும் வலையமைப்பு தரவு அமைப்புகள் (Weather Information and Network Data Systems (WINDS)) : இது மாவட்ட மட்டத்தில் தானியங்கு வானிலை நிலையங்களையும் (Automatic Weather Stations (AWS)) பஞ்சாயத்து மட்டத்தில் தானியங்கு மழை அளவீட்டு கருவிகளையும் (Automatic Rain Gauges (ARGs)) அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. WINDS திட்டத்தின் கீழ், மிகவும் விரிவான உள்ளூர் வானிலை தரவுகளைச் சேகரிக்க வானிலை வலையமைப்பு ஐந்து மடங்கு பெரிதாக்கப்படும். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தரவுகளை வாடகைக்கு எடுப்பதற்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்று வேளாண் அமைச்சகம் கூறுகிறது.


5. டிஜிட்டல் விவசாய இயக்கம் (Digital Agriculture Mission) : செப்டம்பர் 2, 2024 அன்று அங்கீகரிக்கப்பட்ட ஒன்றிய அரசின் பட்ஜெட்டில், விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (Digital Public Infrastructure (DPI)) உருவாக்க ரூ. 2,817 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் மூன்று முக்கிய பகுதிகள் அடங்கும்: AgriStack (விவசாயிகளுக்கான டிஜிட்டல் தரவுத்தளம்), பண்ணை திட்டமிடலுக்கு உதவும் (Krishi Decision Support System (DSS)), மற்றும் மண் ஆரோக்கியத்தை நன்கு புரிந்துகொள்ள மண் சுயவிவர வரைபடங்களாகும்.


6. SATHI : விதை அங்கீகாரம், கண்காணிப்பு மற்றும் முழுமையான பண்டகக் கணக்கு (Seed AUthentication, Traceability, and Holistic Inventory (SATHI)) என்பது இந்திய அரசின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தால் தேசிய தகவல்நுட்ப மையத்துடன் (National Informatics Centre (NIC)) இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு தேசிய தரவுத்தளம் ஆகும். இது விதை உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியை திறம்பட கண்காணிக்கவும், விதைகள் தோன்றிய இடத்திலிருந்து அவை விவசாயியைச் சென்றடையும் வரை முழுமையான கண்காணிப்புத்தன்மையை வழங்கவும் ஒரு டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல் என்ற நோக்கத்துடன் உள்ளது. SATHI கட்டம் 1 ஏப்ரல் 19, 2023 அன்று விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்களால் தொடங்கப்பட்டது.


நமோ ட்ரோன் தீதிகள் (Namo Drone didis)


1. நமோ ட்ரோன் தீதி என்பது விவசாய சேவைகளுக்கு உதவுவதற்கு ட்ரோன் தொழில்நுட்பத்துடன் பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுக்களை (Self-Help Groups (SHGs)) அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒன்றிய அரசின் திட்டமாகும். இது 2024-25 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் 15000 தேர்ந்தெடுக்கப்பட்ட சுய உதவிக் குழுகளுக்கு ட்ரோன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுய உதவிக்குழுக்கள் மூலம் குறைந்தது 2 கோடி கிராமப்புற பெண்கள் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க உதவுவதே இலக்கு என்று மோடி அறிவித்தார்.


2. மே 25 அன்று தனது மாதாந்திர ‘மனதின் குரல்’ வானொலி உரையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த "பெண்கள் வயல்களில் உழைப்பதோடு, வானத்தின் உயரங்களையும் தொடுகிறார்கள்" என்று புகழ்ந்தார். அவர்களை "வான வீராங்கனைகள்" என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, "தொழில்நுட்பமும் உறுதியும் ஒன்றிணையும்போது மாற்றம் வருகிறது என்பதை இந்தப் பெண்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்" என்று கூறினார்.


3. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பெண்ணும் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ட்ரோனை ரூ. 2 லட்சத்திற்கு பெறுகிறார். ட்ரோன் செலவில் 80% மானியமாக 8 லட்சம் வரை வழங்கப்படுகிறது. ட்ரோன் பைலட் பயிற்சியும் ட்ரோன் தொகுப்பின் ஒரு பகுதியாகும்.


ட்ரோன் தீதிகளின் நன்மைகள்:


(a) விவசாய செயல்திறனை மேம்படுத்துதல் : ட்ரோன் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் துல்லியமான பயன்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேம்பட்ட உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு (Global Positioning System (GPS)) மற்றும் உணர் கருவி தொழில்நுட்பத்தின் பயன்பாடு வயல்களில் துல்லியமான பறக்கும் பாதைகளைப் பின்பற்றவும், சமமான மற்றும் இலக்கு பயன்பாட்டை உறுதி செய்யவும், ரசாயனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் ட்ரோன்களை திட்டமிட அனுமதிக்கும்.


(b) பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் திறன் மேம்பாடு : பயிற்சி மூலம் ட்ரோன் தீதிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு தொழில்நுட்பம், அவர்களுக்கு மேம்பட்ட திறன்களை வழங்கும். இது பயிர் கண்காணிப்பு, மண் பகுப்பாய்வு மற்றும் துல்லியமான விவசாயம் போன்ற பணிகளை மிகவும் திறம்படச் செய்ய அவர்களுக்கு உதவும். பெண்கள் அதிகம் அல்லது குறைந்த தண்ணீர் தேவைப்படும் பகுதிகளைக் கண்டறிவதன் மூலம், கசிவுகளைக் கண்டறிவதன் மூலம் மற்றும் நீர் வளங்களை திறம்பட நிர்வகிப்பதன் மூலம் நீர்ப்பாசன மேலாண்மையை மேம்படுத்தலாம்.


(c) சமூக மற்றும் வலையமைப்பிற்கான வாய்ப்புகள் : இது பெண்களுக்கு பங்கேற்பாளர்களின் ஆதரவான வலையமைப்புகளுடன் இணைக்க உதவியது, சமூக உணர்வு மற்றும் ஒத்துழைப்பை வளர்த்தது. இது அவர்களின் அனுபவங்கள், சவால்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு உதவுகிறது. இந்த திட்டம் தொழில்துறை நிபுணர்கள் மற்றும் விவசாய வல்லுநர்களுக்கான அணுகலையும் வழங்குகிறது, வழிகாட்டல் மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கான வழிகளை உருவாக்குகிறது.


Original article:

Share:

கரீபியன் சமூகம் (Caribbean Community (CARICOM)) என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள் :


டிரினிடாட் மற்றும் டொபாகோ நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, இரு நாடுகளும் அளவு மற்றும் புவியியல் ரீதியாக வேறுபட்டிருந்தாலும், அவை பொதுவான மதிப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்று கூறினார். இரு நாடுகளும் பெருமைமிக்க ஜனநாயக நாடுகள். அவை உரையாடல், இறையாண்மை, பன்முகத்தன்மை மற்றும் மனித கண்ணியத்தில் நம்பிக்கை கொண்டுள்ளன. மோதல்களின் போது, ​​இந்த மதிப்புகளுக்கு உண்மையாக இருப்பது முக்கியம்.


“பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி” என மோடி கூறினார். பயங்கரவாதத்தால் ஏற்படும் வலியையும் இழப்பையும் ரெட் ஹவுஸ் (Red House) அனுபவித்ததாக அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையாக நிற்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அதற்கு எந்த தங்குமிடமும் இடத்தையும் அனுமதிக்கக்கூடாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவை ஆதரித்ததற்காக டிரினிடாட் மற்றும் டொபாகோ மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் மோடி நன்றி தெரிவித்தார்.


மோடிக்கு ‘தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் மற்றும் டொபாகோ’ (The Order of the Republic of Trinidad and Tobago) விருது வழங்கப்பட்டது, கரீபியன் நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதைப் பெற்ற முதல் வெளிநாட்டுத் தலைவராக உள்ளார்.


இரு தரப்பினரும் பல துறைகளில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். மருந்துத் துறை, மேம்பாட்டுத் திட்டங்களுக்கான இந்திய உதவி, கலாச்சார பரிமாற்றங்கள், விளையாட்டு, இராஜதந்திர பயிற்சி மற்றும் மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வுகள் இருக்கையை அமைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.


இந்தியாவின் UPI முறையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் கூறினார். இந்தியா ஸ்டாக் கட்டமைப்பின் (Stack framework) கீழ் ஆதார் மற்றும் டிஜிலாக்கர் போன்ற கருவிகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றவும் அவர் ஆர்வம் காட்டினார்.


பிரதமராக மோடி நாட்டிற்கு வருகை தருவது இதுவே முதல் முறை. மேலும் 1999-ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் நிலையில் டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு மேற்கொள்ளப்படும் முதல் இந்திய இருதரப்பு பயணமும் இதுவாகும்.


இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு உறவு பகிரப்பட்ட வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியத்திலிருந்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார். இந்த பிணைப்பு 180 ஆண்டுகளுக்கு முன்பு டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு வந்த இந்தியர்களால் கட்டமைக்கப்பட்டது. இந்தியாவிற்கும் டிரினிடாட் & டொபாகோவிற்கும் இடையிலான கூட்டாண்மையை இன்னும் வலுப்படுத்துவதாக அவர் உறுதியளித்தார்.


டிரினிடாட் மற்றும் டொபாகோ இந்தியாவிற்கு CARICOM கூட்டமைப்பாக மட்டுமல்ல, உலகளவில் ஒரு முக்கியமான கூட்டணியாக இருப்பதாக மோடி கூறினார். அவர்களின் ஒத்துழைப்பு முழு உலகளாவிய தெற்கிற்கும் முக்கியமானது என்று அவர் கூறினார்.


கரீபியன் சமூகமான CARICOM, ஒரு பிராந்திய அரசியல் மற்றும் பொருளாதார ஒன்றியமாக உள்ளது. இதில் 15 மாநிலங்கள் மற்றும் ஐந்து தொடர்புடைய உறுப்பினர்கள் உள்ளனர்.


கிர்மிடியா சமூகத்தின் (Girmitiya community) விரிவான தரவுத்தளத்தை உருவாக்குவதில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருவதாக மோடி கூறினார். இந்த சமூகம் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டிருந்தது. அவர்கள் தென்னாப்பிரிக்கா, பிஜி, மொரிஷியஸ் மற்றும் கரீபியன் தீவுகளில் தோட்டங்களில் வேலை செய்தனர்.


உங்களுக்குத் தெரியுமா? :


இரண்டாவது இந்தியா-CARICOM உச்சி மாநாடு நவம்பர் 20, 2024 அன்று கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெற்றது. இது இந்தியாவிற்கும் கரீபியன் சமூகத்திற்கும் (CARICOM) இடையிலான உறவில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த உச்சிமாநாடு CARICOM உறுப்பு நாட்டில் நடத்தப்பட்ட முதல் உச்சிமாநாடாகும். இது இரு பிராந்தியங்களுக்கிடையேயான ஆழமான உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


CARICOM உறவுகள், ஏழு முக்கிய தூண்களில் இணைக்கப்பட்டுள்ளன. அவை,


—திறன் மேம்பாடு (Capacity Building)


—விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு (Agriculture and Food Security)


—புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றம் (Renewable Energy and Climate Change)


—புதுமை, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் (Innovation, Technology, and Trade)


—கிரிக்கெட் மற்றும் கலாச்சாரம் (Cricket and Culture)


—கடல் பொருளாதாரம் (Ocean Economy)


—மருத்துவம் மற்றும் சுகாதாரம் (Medicine and Healthcare)



Original article:

Share:

காஷ்மீரில் வரலாறு காணாத வெப்பத்தின் பின்னணி என்ன? -பஷாரத் மசூத்

 காஷ்மீரில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பமான ஜூன் மாதத்திற்குப் பிறகு, ஸ்ரீநகரும், சுற்றுலா நகரமான பஹல்காமும் சமீபத்தில் வரலாறு காணாத வெப்பநிலையைக் கண்டன. இதற்குக் காரணம் என்ன?


ஜூலை 5, சனிக்கிழமையன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு 70 ஆண்டுகளுக்கும் மேலான அதிகபட்ச பகல்நேர வெப்பநிலையைப் பதிவு செய்தது. பிரபலமான சுகாதார ரிசார்ட்டான (popular health resort) பஹல்காமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச பகல்நேர வெப்பநிலையை எட்டியது. இந்தப் புதிய பதிவுகள் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளில் பள்ளத்தாக்கின் வெப்பமான ஜூன் மாதத்தைத் தொடர்ந்து இந்த சாதனை படைத்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.


காஷ்மீரின் காலநிலை


காஷ்மீர் பள்ளத்தாக்கு மிதமான காலநிலையைக் கொண்டுள்ளது. இது நான்கு தனித்துவமான பருவங்களை அனுபவிக்கிறது: வசந்த காலம் (spring), கோடை (summer), இலையுதிர் காலம் (autumn) மற்றும் குளிர்காலம் (winter) போன்றவை ஆகும். வசந்த காலம் மார்ச் முதல் மே வரை நீடிக்கும். இலையுதிர் காலம் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நீடிக்கும். இந்த இரண்டு பருவங்களும் பொதுவாக இனிமையானவை. குளிர்காலம் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும். குளிர்காலத்தில், வெப்பநிலை உறைபனிக்குக் கீழே குறைகிறது. உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது. சமவெளிகளில் மிதமான பனிப்பொழிவு ஏற்படுகிறது.


ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கோடை காலம் நீடிக்கும். தற்போது கோடை காலம் மிதமானது. நகரங்களில், பகல்நேர வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். குல்மார்க் மற்றும் பஹல்காம் போன்ற ரிசார்ட்டுகளில், வெப்பநிலை சுமார் 30 டிகிரி செல்சியஸ் ஆகும். மேற்குப் பகுதியிலிருந்து வரும் இடையூறுகள் அவ்வப்போது மழையைப் பெறுகின்றன. இந்த மழைப்பொழிவு வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் பொதுவாக ஆண்டின் வெப்பமான மாதங்கள் ஆகும்.


என்ன மாறிவிட்டது?


சமீபத்திய ஆண்டுகளில், காஷ்மீரின் வானிலை மிகவும் கணிக்க முடியாததாகிவிட்டது. பள்ளத்தாக்கு நீண்ட வறண்ட காலங்களை அனுபவித்து வருகிறது. அதே நேரத்தில், வெப்பநிலை சீராக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு, காஷ்மீரில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பமான ஜூன் மாதம் இருந்தது. பகல்நேர வெப்பநிலை இயல்பைவிட மூன்று டிகிரி அதிகமாக இருந்தது.


ஜூலை 5, சனிக்கிழமை, ஸ்ரீநகரில் அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது 70 ஆண்டுகளுக்கும் மேலான அதிகபட்ச வெப்பநிலையாகும். இது நகரத்தில் இதுவரை பதிவான மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலையாகும். 1953-ம் ஆண்டு இதே தேதியில், ஸ்ரீநகரில் 37.7 டிகிரி செல்சியஸ் என்ற சற்று அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஸ்ரீநகரில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை ஜூலை 10, 1946 அன்று 38.3 டிகிரி செல்சியஸ் ஆகும்.


அதே நேரத்தில், பஹல்காமில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ் ஆகும். இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதிவான முந்தைய 31.5 டிகிரி செல்சியஸ் என்ற சாதனையை முறியடித்துள்ளது.


இது கவலையளிக்கிறதா?


இந்த ஆண்டு பள்ளத்தாக்கின் நிலையான அதிக வெப்பநிலையை கவலையளிக்கும் பகுதியாகும் என்று சுதந்திரமான வானிலை முன்னறிவிப்பாளர் ஃபைசான் அரிஃப் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் அதிக வெப்பநிலை நிலவியது, ஆனால் அவை தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் என்று அவர் விளக்கினார். இருப்பினும், இந்த ஆண்டு வெப்பநிலை நீண்ட காலமாக இயல்பைவிட அதிகமாகவே உள்ளது. பகல்நேர (அதிகபட்ச) மற்றும் இரவுநேர (குறைந்தபட்ச) வெப்பநிலை இரண்டும் அதிகமாகவே உள்ளன.


காஷ்மீரின் வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணங்கள்


ஸ்ரீநகரில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறையின் இயக்குனர் முக்தர் அகமது வெப்பநிலை உயர்வுக்கு பல காரணங்களைக் கூறினார்.


"முதலாவதாக, உலகளவில் வெப்பநிலை அதிகரிப்பதற்கு புவி வெப்பமடைதல் காரணமாகிறது," என்று அகமது கூறினார். "காஷ்மீரில், கடந்த காலங்களில், வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைத் தாண்டும் போதெல்லாம், மழைப்பொழிவால் சற்று ஆறுதல் அளித்தது. ஆனால் இப்போது நாம் நீடித்த வறட்சியைக் காண்கிறோம்."


இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நீர் நீராவி கிடைப்பது குறைவு (reduced water vapour) என்று அவர் விளக்கினார். "மலைகளில் மிகக் குறைவான பனிப்பொழிவு உள்ளது, மார்ச் மாதத்திற்குள் எந்தளவு பனிவிழுந்தாலும் அது உருகி மலைகளை வெறுமையாகவும் வறண்டதாகவும் ஆக்குகிறது."


நகர்ப்புற வெப்ப தீவுகள் (Urban Heat Islands (UHI)) மற்றும் அவை எவ்வாறு வெப்பத்தை மோசமாக்குகின்றன என்பதையும் அஹ்மத் பேசினார்.


நகர்ப்புற வெப்ப தீவுகள் என்றால் என்ன, அவை வெப்பநிலையை எவ்வாறு பாதிக்கின்றன?


ஒரு நகர்ப்புற வெப்ப தீவு (UHI) என்பது அருகிலுள்ள கிராமப்புறங்களைவிட மிகவும் வெப்பமான ஒரு நகரம் அல்லது நகர்ப்புறப் பகுதியாகும். வேகமான நகர்ப்புற வளர்ச்சி, அதிக கான்கிரீட் மற்றும் சாலைகள், குறைவான நீர்நிலைகள் மற்றும் குறைவான தாவரங்கள் காரணமாக UHIகள் ஏற்படுகின்றன.


பள்ளத்தாக்கில், குறிப்பாக ஸ்ரீநகரில், அருகிலுள்ள கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த பசுமையான இடத்துடன் நகரங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. கான்கிரீட் மற்றும் நடைபாதை மேற்பரப்புகள் அதிக வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றன. இது வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கிறது. போக்குவரத்து மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளும் சிக்கலை அதிகரிக்கின்றன.



Original article:

Share:

பொதுவான இலக்குகள்: இந்தியா மற்றும் ஐந்து-நாடுகள் பயணம் பற்றி…

 பிரதமர் நரேந்திர மோடியின் பயணங்கள் உலகளாவிய தெற்கு நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியாவின் முயற்சிகளை பிரதிபலிக்கிறது.


தற்போது நடந்து வரும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா (BRICS) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசிலுக்குச் செல்லும் வழியில், பிரதமர் நரேந்திர மோடி கானா டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் அர்ஜென்டினாவுக்கு தொடர்ச்சியான இருதரப்பு பயணங்களை மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு நிறுத்தமும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு மற்றும் முக்கிய தனிமங்கள் (critical minerals) போன்ற சில பொதுவான தலைப்புகளை உள்ளடக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இருந்தது. அக்கராவில், இந்தியா-கானா உறவுகள் விரிவான கூட்டாண்மையாக (comprehensive partnership) மேம்படுத்தப்பட்டன. மேற்கு ஆப்பிரிக்காவிற்கு கானாவை "தடுப்பூசி மையமாக" (vaccine hub) மாற்ற உதவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில், டிரினிடாட் மற்றும் டொபாகோவில், இந்தியாவிலிருந்து தரமான மற்றும் மலிவான பொது மருந்துகளுக்கான அணுகலை மேம்படுத்த "இந்திய மருந்தியல்" குறித்து ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பியூனஸ் அயர்ஸில், ஜேவியர் மிலே அதிபர் முக்கிய தனிமங்கள் மற்றும் அர்ஜென்டினாவின் பரந்த ஷேல் (shale) எரிவாயு மற்றும் எண்ணெய் இருப்புகள் மீது ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் இந்தியா தனது மருந்து தொழிலை அர்ஜென்டினாவிற்கு வழங்கியது. இந்த மூன்று நிறுத்தங்களும் "வளந்து வரும் உலகின்" [developing world] அல்லது உலகளாவிய தெற்கு [Global South] நாடுகளில் இருந்தன, மேலும் பிரேசில் மற்றும் பின்னர் நமீபியாவிற்கான முன்னோக்கிய பயணம், "வளர்ந்த உலகிற்கு" [developed world] அல்லது உலகளாவிய வடக்கிற்கு [Global North] மாற்று பொருளாதார வழிமுறைகளை கட்டமைப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. உலகளாவிய சவால்களுக்கு குறைந்த செலவிலான தீர்வுகளுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பு வாய்ப்பு, இந்த நாடுகளுக்கு பேரிடர் எதிர்ப்பு உள்கட்டமைப்புக் கூட்டணி (Coalition for Disaster Resilient Infrastructure (CDRI)) போன்ற இந்தியா தலைமையிலான சர்வதேச அமைப்புகளின் ஊக்குவிப்பை உள்ளடக்கியது. பிரதமர் நரேந்திர மோடி இந்திய புலம்பெயர்ந்தோர் (Indian diaspora) சமூகத்திற்கு தனது சிறப்பு உரையையும் வழங்கினார் - 1845-ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் காலனித்துவ முயற்சிகளால் இந்திய தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்ட போர்ட் ஆஃப் ஸ்பெயினில் அவர் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது. அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்கலூ மற்றும் பிரதமர் கம்லா பெர்சாட்-பிசாசரின் இந்திய வம்சாவளியை குறிப்பிட்டு, பிரதமர் நரேந்திர மோடி உலகளவில் 35 மில்லியன் இந்திய புலம்பெயர்ந்தோர் சமூகம் இந்தியாவின் "பெருமை" என்று கூறினார்.


அரசியல் வரலாற்றின் அடிப்படையில் இந்தியாவிற்கும் இந்த ஐந்து நாடுகளுக்கும் இடையிலான ஆழமான தொடர்புகளைத் தவிர்க்க இயலாது. ஒவ்வொரு நாடும் ஒரு பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறது - பிரிட்டிஷ், ஸ்பானிஷ், போர்த்துகீசிய மற்றும் ஜெர்மன் படைகளின் கீழ் பாதிக்கப்பட்ட காலனிகள் - மற்றும் அவற்றில் சில ஏன் அணிசேராத இயக்கத்தில் (Non-Aligned Movement) சேர்ந்தன. தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு என்று அழைக்கப்படும் வளரும் நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும் ரஷ்யா மற்றும் சீனாவுடன் சேர்ந்து (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா) வழிமுறையை நிறுவுவதில் இந்தியாவும் பிரேசிலும் ஆற்றிய பங்கு, மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா (India, Brazil, South Africa (IBSA)) உருவாக்கம், உலக தெற்கின் நலன்களை வலுவாக முன்வைக்கும் விளைவாக இருந்தது. இந்த பயணத்தில் உள்ள நாடுகள் எதுவுமே "மேற்கத்திய எதிர்ப்பு" (anti-West) என அழைக்க முடியாது. மேலும், குறிப்பிட்ட, மோதல்களில் குறிப்பாக உக்ரைன் மற்றும் காசா புது டெல்லிக்கு அவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும், இந்த உறவுகளுக்குப் பின்னால் உள்ள உந்து சக்தி, அதன் விளைவாக பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது நாள் பயணத்திட்டம், தற்போதைய உலக ஒழுங்கிற்கு அப்பாற்பட்டு, வளரும் மற்றும் வளர்ச்சி குறைந்த நாடுகளின் தேவைகளுக்கு மிகவும் சமமான, பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் உணர்திறன் கொண்ட ஒன்றைப் பார்ப்பதற்கான பொதுவான விருப்பத்தைப் பற்றியது.



Original article:

Share: