உலக வங்கி இந்தியாவை 'மிகவும் சமமான நாடுகளில்' ஒன்றாக மதிப்பிட்டுள்ளது -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி: 


இந்தியா இப்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. உலக வங்கியின் புதிய அறிக்கையின்படி, இந்தியா உலகின் "மிகவும் சமமான நாடுகளில்" (most equal countries) ஒன்றாகும். இந்த அறிக்கை இந்தியாவை ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா மற்றும் பெலாரஸ் போன்ற நாடுகளைத் தொடர்ந்து தரவரிசைப்படுத்துகிறது. இந்த சூழலில், கினி குறியீட்டைப் (Gini Index) பற்றியும் உலக வங்கியின் அறிக்கையிலிருந்து (World bank’s report) முக்கிய விஷயங்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.



முக்கிய அம்சங்கள் :


1. கினி குறியீடு இந்தியாவை நான்காவது இடத்தில் தரவரிசைப்படுத்தியது. இதில், இந்தியாவானது 25.5 மதிப்பெண்களைப் பெற்றது. இந்த மதிப்பெண் சீனா போன்ற நாடுகளை விடவும் மிகக் குறைவு, அதாவது சீனாவானது 35.7 மதிப்பெண்கள், அமெரிக்கா 41.8 மதிப்பெண்கள், இங்கிலாந்து 34.4 மதிப்பெண்களைப் பெற்றன. இந்தியாவும் ஒவ்வொரு G7 மற்றும் G20 நாடுகளையும் விட சமமாக உள்ளது. அவற்றில் பல முன்னேறிய பொருளாதாரங்களாகக் கருதப்படுகின்றன.


2. உலக வங்கி 167 நாடுகளுக்கான தரவை வெளியிட்டது. அவற்றில், ஸ்லோவாக் குடியரசு (Slovak Republic) முதலிடத்தில் இருந்தது. இது 24.1 மதிப்பெண்கள் பெற்று, மிகவும் சமமான நாடாக மாறியது.


3. இந்தியா "மிதமான குறைந்த" (moderately low) சமத்துவமின்மை பிரிவில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. "குறைந்த சமத்துவமின்மை" (low inequality) குழுவில் நுழைவதற்கு இந்தியா மிக அருகில் உள்ளது. இந்த குழுவில் ஸ்லோவாக் குடியரசு (24.1), ஸ்லோவேனியா (24.3) மற்றும் பெலாரஸ் (24.4) போன்ற நாடுகள் அடங்கும்.


மிகவும் சமமான நாடு (Most Equal Country)


                "மிகவும் சமமான நாடு" என்ற சொல், மக்களிடையே வருமானம் மிகவும் நியாயமாகப் பகிரப்படும் ஒரு நாட்டைக் குறிக்கிறது. மேலும், நுகர்வு மக்கள்தொகை முழுவதும் சமமாகப் பரவியுள்ளது என்பதையும் இது குறிக்கிறது.


4. குறிப்பாக, சமீபத்திய உலக வங்கி அறிக்கையானது, '2025 வசந்தகால வறுமை மற்றும் சமத்துவ சுருக்கம்' (The Spring 2025 Poverty and Equity Brief) என்ற இந்தியா 171 மில்லியன் மக்களை தீவிர வறுமையிலிருந்து வெற்றிகரமாக மீட்டுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.



உலகின் மிகவும் சமமான முதல் 10 நாடுகள்

நாடுகள்

சமீபத்திய ஆண்டு

கினி குறியீடு

ஸ்லோவாக் குடியரசு

2022

24.1

ஸ்லோவேனியா

2022

24.3

பெலாரஸ்

2020

24.4

இந்தியா

2022

25.5

உக்ரைன்

2020

25.6

நெதர்லாந்து

2021

25.7

மால்டோவா

2022

25.9

செசியா

2022

25.9

பெல்ஜியம்

2022

26.4


கினி குறியீடு (Gini Index) என்றால் என்ன?


5. ஒரு பொருளாதாரத்தில் மக்கள் அல்லது குடும்பங்களிடையே வருமானம் அல்லது நுகர்வு எவ்வாறு பரவுகிறது என்பதை கினி குறியீடு (Gini Index) அளவிடுகிறது. வருமான விநியோகம் முற்றிலும் சமமாக இருப்பதிலிருந்து எவ்வளவு வேறுபடுகிறது என்பதை இது காட்டுகிறது. எளிமையாகச் சொன்னால், ஒரு நாட்டிற்குள் வருமானம் எவ்வளவு சமமாகப் பகிரப்படுகிறது என்பதை இது நமக்குச் சொல்கிறது.


6. இந்தக் குறியீடு 0 முதல் 100 வரை குறிப்பிடுகிறது. 0 என்ற கினி குறியீடு என்பது அனைவருக்கும் ஒரே வருமானம் உள்ள சரியான சமத்துவத்தைக் குறிக்கிறது. 100 என்ற குறியீடு என்பது ஒரு நபருக்கு அனைத்து வருமானமும் உள்ள சரியான சமத்துவமின்மையைக் குறிக்கிறது. கினி குறியீடு அதிகமாக இருந்தால், நாடு மிகவும் சமமற்றதாக இருக்கும்.


7. இந்த குறியீட்டிற்கான தரவு, அரசாங்க புள்ளிவிவர நிறுவனங்கள் மற்றும் உலக வங்கி நாட்டுத் துறைகளிலிருந்து பெறப்பட்ட முதன்மை வீட்டு கணக்கெடுப்புத் தரவை அடிப்படையாகக் கொண்டது. உயர் வருமான பொருளாதாரங்களுக்கான தரவு பெரும்பாலும் லக்சம்பர்க் வருமான ஆய்வு தரவுத்தளத்திலிருந்து (Luxembourg Income Study database) பெறப்படுகிறது.


இது ஏன் "கினி குறியீடு" (Gini Index) என்று அழைக்கப்படுகிறது?


          கினி குறியீடு கினி குணகம் (Gini coefficient) என்றும் அழைக்கப்படுகிறது. இது 1912-ம் ஆண்டு கொராடோ கினி (Corrado Gini) என்ற இத்தாலிய புள்ளிவிவர நிபுணரால் உருவாக்கப்பட்டது. இந்த குறியீடு வருமான சமத்துவமின்மையை அளவிடுகிறது. இது இரண்டு விஷயங்களுக்கு இடையிலான வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டது. உண்மையான வருமான விநியோகத்தைக் காட்டும் லோரென்ஸ் வளைவு (Lorenz curve) மற்றும் வருமான விநியோகத்தில் சரியான சமத்துவத்தைக் குறிக்கும் ஒரு கோடு.


கினி குறியீடு மற்றும் உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையைப் பற்றி அறிந்த பிறகு, உலக வங்கியின் புதிய உலகளாவிய வறுமைக் கோட்டைப் புரிந்துகொள்வோம். இந்த தலைப்பு சமீபத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டது.


உலக வங்கியின் திருத்தப்பட்ட வறுமைக் கோடு மற்றும் இந்தியா


8. உலக வங்கி தனது வறுமைக் கோட்டை ஒரு நாளைக்கு $2.15 இலிருந்து ஒரு நாளைக்கு $3 ஆக மாற்றியது. இதன் பொருள், தினசரி நுகர்வு $3க்குக் கீழே உள்ளவர்கள் இப்போது வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த மாற்றத்தின் காரணமாக, இந்தியாவின் தீவிர வறுமை விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. இது 2011-12-ல் 27.1% ஆக இருந்தது, 2022-23-ல் 5.3% ஆக உயர்ந்துள்ளது. சமீபத்திய உலக வங்கி தரவுகளின்படி, எண்ணிக்கையில், தீவிர வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை 344.47 மில்லியனிலிருந்து 75.24 மில்லியனாகக் குறைந்துள்ளது.


9. வறுமைக் கோடு (Poverty line) என்பது ஒரு நாட்டில் யார் ஏழைகள் என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் வருமான நிலையாகும். இது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச வருமானத்தைக் காட்டுகிறது. இந்த நிலை வெவ்வேறு நாடுகளில் அவர்களின் பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் மாறுகிறது. வறுமைக் கோட்டை அர்த்தமுள்ளதாக மாற்ற, அதை நிர்ணயிக்கும் போது நேரத்தையும் இடத்தையும் கருத்தில் கொள்வது முக்கியம்.


10. 2021-ம் ஆண்டில், உலக வங்கி உலகளாவிய பணவீக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அதன் தீவிர வறுமைக் கோட்டைப் புதுப்பித்தது. இந்த மாற்றத்துடன்கூட, இந்தியா சிறப்பாகச் செயல்பட்டது. மேலும், வறுமை எண்கள் நிலையானதாகவே உள்ளன. உலக வங்கியின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு $3 வருமான வரம்பில், 2022-23-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் தீவிர வறுமை விகிதம் 5.3 சதவீதமாகும். இது பழைய வறுமைக் கோட்டில் அளவிடப்பட்ட $2.15 ஒரு நாள் வறுமைக் கோட்டில் அளவிடப்பட்ட 2.3 சதவீத விகிதத்தைவிட அதிகமாகும்.


மனித மேம்பாட்டு அறிக்கை 2025


1. சமீபத்தில், ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (United Nations Development Programme (UNDP)) அதன் சமீபத்திய மனித மேம்பாட்டு அறிக்கையை (Human Development Report (HDR)) வெளியிட்டது. இந்த அறிக்கையானது, "விருப்பத் தேர்வின் விஷயம்: AI யுகத்தில் மக்களும் சாத்தியக்கூறுகளும்" (A matter of choice: People and possibilities in the age of AI) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு வளர்ச்சியை மீண்டும் தொடங்க உதவும் என்பதை இது காட்டுகிறது.


2. சமத்துவமின்மையின் இடைவெளி அதிகரித்து வருவதாக (widening gap in inequality) அறிக்கை சுட்டிக்காட்டியது. குறைந்த மனித மேம்பாட்டு குறியீட்டு (HDI) மதிப்பெண்களைக் கொண்ட நாடுகளுக்கும் மிக அதிக HDI மதிப்பெண்களைக் கொண்ட நாடுகளுக்கும் இடையே இது நடக்கிறது. இது தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக நடந்துள்ளது. இந்தப் போக்கு ஒரு பெரிய மாற்றமாகும். ஏனெனில் முன்பு, இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் குறைந்து கொண்டிருந்தன.


3. HDI என்பது மனித வளர்ச்சியில் சராசரி சாதனையை அளவிடும் கூட்டு குறியீடாகும். இது நான்கு குறிகாட்டிகளைப் பயன்படுத்துகிறது. அவை, பிறப்பில் ஆயுட்கால எதிர்பார்ப்பு (நிலையான வளர்ச்சி இலக்கு 3); எதிர்பார்க்கப்படும் கல்வி ஆண்டுகள் (நிலையான வளர்ச்சி இலக்கு 4.3); சராசரி கல்வி ஆண்டுகள் (நிலையான வளர்ச்சி இலக்கு 4.4); மற்றும் தனிநபர் மொத்த தேசிய வருமானம் (GNI) (2017 PPP$) (நிலையான வளர்ச்சி இலக்கு 8.5).


HDI வகைப்பாடு


ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) படி, நாடுகள் அவற்றின் HDI மதிப்புகளின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன. அவை,


  1. 0.550-க்கும் குறைவான HDI ”குறைந்த மனித வளர்ச்சி” என்று கருதப்படுகிறது.

  2. 0.550 முதல் 0.699 வரையிலான HDI ”நடுத்தர மனித வளர்ச்சி”.

  3. 0.700 முதல் 0.799 வரையிலான HDI ”உயர் மனித வளர்ச்சி”.

  4. 0.800 அல்லது அதற்கு மேற்பட்ட HDI ”மிக உயர்ந்த மனித வளர்ச்சி”.


4. HDI 2025 தரவரிசையில், ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதன் மனித மேம்பாட்டு குறியீடு (HDI) 0.972. தெற்கு சூடான் கடைசி இடத்திலும் உள்ளது. அதன் HDI 0.388 ஆகும்.


5. HDI தரவரிசையில் இந்தியா நிலையான முன்னேற்றத்தைக் காட்டுகிறது. 2025-ம் ஆண்டுக்கான UNDP அறிக்கையில், இந்தியா 130-வது இடத்தில் உள்ளது. நாட்டின் HDI 2022-ல் 0.676 ஆக இருந்தது. 2023-ல் 0.685 ஆக அதிகரித்துள்ளது. இது இந்தியாவை நடுத்தர மனித மேம்பாட்டு பிரிவில் வைக்கிறது. இது இந்தியாவை 0.700 என்ற HDI-ல் தொடங்கும் உயர் மனித மேம்பாட்டு வகைக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறது.


தரவரிசை

நாடு

HDI

1.

ஐஸ்லாந்து

0.972

2.

நார்வே

0.97

2.

சுவிட்சர்லாந்து

0.97

4.

டென்மார்க்

0.962

5.

ஜெர்மனி

0.959

5.

ஸ்வீடன்

0.959



6. இந்தியாவின் மனித மேம்பாட்டு குறியீட்டு (HDI) மதிப்பு 1990 முதல் 53% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று அறிக்கை கூறியது. இந்த வளர்ச்சி உலகளாவிய சராசரி மற்றும் தெற்காசிய சராசரியை விட வேகமாக உள்ளது. இந்த முன்னேற்றம் முக்கியமாக இலக்கு வைக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு, நலத்திட்டங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற காரணமாகும்.


7. அறிக்கையின்படி, இந்தியா உலகளவில் ஒரு தனித்துவமான இடத்தில், உயர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) வல்லரசாக வைக்கப்பட்டுள்ளது, மேலும் இது மிக உயர்ந்த சுய-அறிக்கையிடப்பட்ட AI திறன் ஊடுருவலைக் கொண்டுள்ளது. இந்த அறிக்கை, 20 சதவீத இந்திய AI ஆராய்ச்சியாளர்கள் இப்போது நாட்டில் தங்குவதைத் தேர்ந்தெடுப்பதாகவும், இது 2019-ல் கிட்டத்தட்ட இல்லாத நிலையில் இருந்து உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியது.



Original article:

Share:

செயல்திறன் தரக் குறியீடு 2.0 என்பது என்ன? -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி:


2023-24-ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வி குறிகாட்டிகளின் சமீபத்திய மதிப்பீட்டான செயல்திறன் தரக் குறியீடு (Performance Grading Index (PGI) 2.0 அறிக்கையை கல்வி அமைச்சகம் சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது.


முக்கிய அம்சங்கள்:


1. 2017-ஆம் ஆண்டில் செயல்திறன் தரக் குறியீடு (Performance Grading Index (PGI) 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், அமைச்சகம் 2021-ல் PGI 2.0 என மறுசீரமைத்தது. இது 73 குறிகாட்டிகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வியின் மதிப்பீடாகும். முடிவுகள் மற்றும் நிர்வாகம் மற்றும் மேலாண்மை போன்ற 2 வகைகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த வகைகள் மேலும் 6 களங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:


(i) கற்றல் விளைவு மற்றும் தரம்,


(ii) அணுகல்,


(iii) உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள்,


(iv) சமத்துவம்,


(v) நிர்வாக செயல்முறைகள்,


(vi) ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி போன்றவைகளாகும்.


2. 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளை உள்ளடக்கிய சமீபத்திய அறிக்கை, தேசிய சாதனை கணக்கெடுப்பு 2021, கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (Unified District Information System for Education (UDISE+)) மற்றும் மதிய உணவு திட்டம் (mid-day meal programme (PM-POSHAN)) பற்றிய தகவல்களிலிருந்து தரவைப் பெறுகிறது.


3. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 1,000 புள்ளிகளில் மதிப்பெண் பெறுகின்றன. PGI 2.0-ல், PGI மதிப்பெண்களுக்கான பெயரிடல் பல்வேறு தரங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்ச அடையக்கூடிய தரம் Daksh என்று அழைக்கப்படுகிறது. இது தர வரம்பில் 90%-க்கும் அதிகமாக மதிப்பெண் பெற்ற மாநிலம்/யூனியன் பிரதேசங்களுக்கானது. 


4. குறிப்பிடத்தக்க வகையில், 761 மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் வரம்புகளில் எந்த மாநிலம்/யூனியன் பிரதேசமும் மதிப்பெண் பெறவில்லை. சண்டிகர் 703 புள்ளிகளைப் பெற்று, பிரசெஸ்டா-1-ஐ அடைந்தது - சமீபத்திய PGI-ல் அடையப்பட்ட மிக உயர்ந்த தரத்தைப் பெற்றது. 2022-2023-ஆம் ஆண்டில் 687.8 புள்ளிகளைப் பெற்ற சண்டிகர், 703 புள்ளிகளைப் பெற்று, பிரசெஸ்டா-1 தரவரிசையில் 701 முதல் 760 வரை மதிப்பெண் பெற்ற ஒரே மாநிலம் அல்லது யூனியன் பிரதேசமாக உருவெடுத்தது.


5. சண்டிகரை தொடர்ந்து பஞ்சாப் 631.1 புள்ளிகளிலும், டெல்லி 623.7 புள்ளிகளிலும் உள்ளன. கேரளா, குஜராத், ஒடிசா, ஹரியானா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகியவையும் 581-640 புள்ளிகளைப் பெற்றன.


6. மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாநிலம் மேகாலயா (417.9). அதற்கு மேலே அருணாச்சலப் பிரதேசம் (461.4), மிசோரம் (464.2), நாகாலாந்து (468.6), மற்றும் பீகார் (471.9) இருந்தன.


7. 521-580 (அகான்ஷி-1 தரம்) என்ற நடுத்தர வரம்பில் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகியவை இருந்தன.


8. மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாட்டைக் குறிப்பிடுகையில், 2023-24-ஆம் ஆண்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகபட்ச மதிப்பெண் 719 ஆகவும், குறைந்தபட்ச மதிப்பெண் 417-ஆகவும் இருந்ததாக அறிக்கை கூறுகிறது.


9. இந்த மதிப்பெண்கள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தலையீடு செய்ய வேண்டிய பகுதிகளை அடையாளம் காண உதவும். 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், 25 மாநிலங்கள் 2022-23 உடன் ஒப்பிடும்போது 2023-24-ல் மதிப்பெண்களில் முன்னேற்றத்தைக் கண்டன.


ULLAS திட்டம் மற்றும் PM SHRI 


1. மிசோரம், கோவா மற்றும் திரிபுரா ஆகியவை சமூகத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றலைப் புரிந்துகொள்வது (Understanding Lifelong Learning for All in Society (ULLAS)) - நவ பாரத் சக்ஷர்தா காரியக்ரம் என்பதன் கீழ் "முழு கல்வியறிவு" குறிச்சொல்லைப் பெற்றுள்ளன.


2. ULLAS - நவ பாரத் சக்ஷர்தா காரியக்ரம் அல்லது புதிய இந்திய எழுத்தறிவுத் திட்டம் (New India Literacy Programme (NILP)) என்பது 2022-2027 முதல் செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசின் ஒரு நிதியுதவி திட்டமாகும். இந்தத் திட்டம், தொடக்கப் பள்ளியில் கற்பிக்கப்படுவது போல, எழுதப் படிக்கத் தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட 5 கோடி மக்களுக்கு வாசிப்பு, எழுத்து மற்றும் எளிய கணிதத்தின் அடிப்படைத் திறன்களைக் கற்பிக்க விரும்புகிறது.


3. ULLAS கார்த்வ்ய போத்தின் (Kartvya Bodh) உணர்வை அடிப்படையாகக் கொண்டது மற்றும் தன்னார்வத் தொண்டில் செயல்படுத்தப்படுகிறது. இது 


(i) அடிப்படை கணக்கு மற்றும் எழுத்தறிவு,


(ii) முக்கிய வாழ்க்கைத் திறன்கள்,


(iii) அடிப்படைக் கல்வி,


(iv) தொழில் திறன்கள், மற்றும்


(v) தொடர் கல்வி ஐந்து கூறுகளைக் கொண்டுள்ளது.


எழுச்சி பெறும் இந்தியாவிற்கான பிரதமர் பள்ளிகள் (PM Schools for Rising India (PM SHRI))


1. இது ஒன்றிய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு அமைச்சகத்தால் நடத்தப்படும் ஒரு முயற்சியாகும். தேசிய கல்விக் கொள்கை 2020 எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்டவும், அருகிலுள்ள பிற பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டாகவும் 14,500 பள்ளிகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


2. இந்த திட்டம் நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களால் நடத்தப்படும் ஏற்கனவே உள்ள ஆரம்ப, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கானது.



Original article:

Share:

மதச்சார்பற்ற அரசியலை மீட்டெடுப்பது -துளசி கே. ராஜ்

 மதச்சார்பின்மைக்கு எதிரான சவால்களுக்கு மத்தியில், முக்கியமானது என்னவென்றால், மதச்சார்பற்ற அரசியலமைப்பு கூட மதச்சார்பற்ற அரசாங்கத்தால் தாக்கப்படலாம்.


அரசியலமைப்பின் முகவுரையில் (Preamble) "மதச்சார்பற்ற" (secular) என்ற வார்த்தையை சேர்த்ததை விமர்சித்து துணை குடியரசுத்தலைவர் ஜக்தீப் தன்கர் அவர்கள் ஆற்றிய கருத்துகள் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளன. அவசரகாலத்தின்போது முகவுரையில் இந்த வார்த்தைகளை சேர்த்தது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் எண்ணங்களுக்கு துரோகம் செய்வதாக அமைந்துள்ளது, என்று அவர் கூறினார்.


தன்கரின் கருத்துகள் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (Rashtriya Swayamsevak Sangh (RSS)) பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே அவர்கள் இதே போன்ற கருத்துகளை வெளியிட்டதைத் தொடர்ந்து வந்துள்ளது.


இருவரும் அரசியலமைப்பின் மதச்சார்பற்ற இயல்பைப் பற்றியும், மிக முக்கியமாக, இந்திய அரசியலின் பரந்த கட்டமைப்பைப் பற்றியும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். அரசியல் நிர்ணய சபை விவாதங்களில் (Constituent Assembly debates), அரசியலமைப்பின் உருவாக்கியவர்கள் மதச்சார்பின்மையின் பல்வேறு மாதிரிகளை விவாதித்தனர். எதை ஏற்றுக்கொள்வது என்பதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், மதச்சார்பின்மைக்கான பரந்த அரசியல் அர்ப்பணிப்பு உறுதியாக இருந்தது. எந்த அரசிலும் மதம் இருக்கக் கூடாது என்பதில் உடன்பாடு இருந்தது. அரசு எந்த மதத்தையும் ஆதரிக்கக் கூடாது என்பதை ஏற்றுக்கொண்ட அதே நேரம், K.M. மன்ஷி போன்ற உறுப்பினர்கள் இந்தியா தனது சொந்த மதச்சார்பின்மையை உருவாக்க வேண்டும் என்றும் அமெரிக்க "நிறுவனம் இல்லை" (non-establishment clause) என்ற விதி "இந்திய நிலைமைக்கு பொருத்தமானதல்ல" என்றும் நம்பினர். இந்த தனித்துவமான கருத்தாக்கம் அரசின் மதத்துடனான உறவுகளுக்கு நெகிழ்வான அணுகுமுறையை ஏற்றுக்கொள்கிறது.


"மதச்சார்பற்ற" (secular) என்ற சொல் அரசியலமைப்பில் குறிப்பிடப்படாவிட்டாலும், அதன் முக்கிய சிற்பி டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் அதை முகவுரையில் சேர்ப்பது தேவையற்றது என்று கூறினார். அரசியலமைப்பின் உள்ளடங்கிய சிறப்பியல்புகள் அதன் மதச்சார்பற்ற அடித்தளத்தை குறிப்பிடுவதாக அவர் கண்டார்.


அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 15 மூலம் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடை (prohibits discrimination on the basis of religion) செய்கிறது. பிரிவு 16, மதத்தின் அடிப்படையில் பொது வேலைவாய்ப்பு மறுக்கப்படக்கூடாது (public employment shall not be denied on the ground of religion) என்று கூறுகிறது. பிரிவு 25, ஒவ்வொருவருக்கும் அவரவர் சொந்த நம்பிக்கைகளைப் பின்பற்றவும், சுதந்திரமாக தங்கள் மதத்தைப் பின்பற்றவும், பின்பற்றவும், பகிர்ந்து கொள்ளவும் சம உரிமையை வழங்குகிறது. மத நடைமுறையுடன் தொடர்புடைய பொருளாதார, நிதி, அரசியல் அல்லது பிற மதச்சார்பற்ற செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் கூறுகிறது.


உரிமைகள் பற்றிய எந்தப் புரிதலும் அரசியல் யதார்த்தங்களிலிருந்து தனிமைப்படுத்தப்படக் கூடாது. அரசியலமைப்பு எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும், அது ஒரு உறுதியான அரசியல் கட்டமைப்பால் ஒன்றிணைக்கப்பட வேண்டும். சட்ட அறிஞர் மார்க் டஷ்நெட் இந்தக் கருத்தை Why the Constitution Matters (ஏன் அரசியலமைப்பு முக்கியம்), 2010 என்ற புத்தகத்தில், “அரசியலமைப்பு முக்கியமானது, ஏனெனில் அது நமது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இங்கே நான் வழங்கும் பதில் வேறுபட்டது. அரசியலமைப்பு முக்கியமானது, ஏனெனில் அது நமது அரசியலுக்கு ஒரு கட்டமைப்பை வழங்குகிறது. நமது அடிப்படை உரிமைகளுக்கான பாதுகாப்பு எதுவாக இருந்தாலும், அதற்கு இறுதியான — சில நேரங்களில் நெருக்கமான — மூலமாக இருப்பது அரசியல், ‘அரசியலமைப்பு’ அல்ல” என்று அழகாக விளக்குகிறார்.


பல சவால்கள்


எனவே, மதச்சார்பற்ற அரசியலமைப்பு கூட, நமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு எவ்வித மரியாதையும் இல்லாத மதச்சார்புடைய அரசியல் ஆட்சியால் தாக்கப்படலாம் என்பதே முக்கிய கருத்து. இந்த அச்சுறுத்தல் எப்போதும் சட்டத்தை நேரடியாக மீறுவதன் மூலம் வெளிப்படுவதில்லை, மாறாக சட்டத்தின் எல்லைக்கு வெளியே செயல்படுவதன் மூலம் தோன்றுகிறது. மதச்சார்பின்மையின் பின்னணியில், குறைந்தபட்சம் மூன்று நவீன சவால்கள் தற்போது உருவாகின்றன.


முதலாவது, சிறுபான்மை சமூகங்களின், குறிப்பாக முஸ்லிம்களின் சில செயல்களை தேர்ந்தெடுத்து குற்றமாக்குவதாகும். சட்டவிரோத அத்துமீறல் என்று குற்றம் சாட்டி, 2020-ஆம் ஆண்டு முதல் பல்வேறு மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் வீடுகள் இடிக்கப்பட்டன. Amnesty International அறிக்கை ஒன்று குறைந்தபட்சம் 617 பேர், அதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உட்பட, வீடற்றவர்களாக்கப்பட்டனர் அல்லது அவர்களின் வாழ்வாதாரங்களில் இருந்து பறிக்கப்பட்டனர் என்று ஏப்ரல் மற்றும் ஜூன் 2022-க்கு இடையில் மட்டுமே ஆவணப்படுத்துகிறது. இந்த ஆய்வு ஐந்து மாநிலங்களில் நடத்தப்பட்டது - அசாம், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வந்தது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வந்த டெல்லியிலும் ஆட்சி செய்து வந்தது. 


உச்சநீதிமன்றத்தின் தாமதமான தீர்ப்பு 2024 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டபோது (இடிப்பு விவகாரத்தில் உத்தரவுகள் தொடர்பாக), நாடு பல ஆண்டுகளாக சட்டவிரோத இடிப்புகளை கண்டிருந்தது. தங்கள் வீடுகளை இழந்த மக்கள் இன்னும் இழப்பீடு கிடைக்க காத்திருக்கின்றனர், மேலும் இடிப்புகளுக்கு உத்தரவிட்டு நடத்திய அரசு அதிகாரிகள் பொறுப்புக்கூறப்படாமல் உள்ளனர். மாநிலத்திற்கு எதிராக இழப்பீடு கோர முயற்சித்தால், ஆதாரம் கேள்விக்குள்ளாக்கப்படுவதும், தாமதங்களின் பிரச்சனைகளும் எதிர்கொள்ளப்படலாம். இந்த சந்தர்ப்பங்களில், புள்ளிவிவரங்கள் சிறுபான்மை சமூகங்களை குறிவைப்பதைக் காட்டினாலும், பாகுபாட்டை நிரூபிப்பதில் உள்ள சிரமம் விவகாரங்களை சிக்கலாக்குகிறது. சட்டவிரோத இடிப்புகளின் கதை, ஒரு ஆக்ரோஷமான நிர்வாகம் எவ்வளவு எளிதாக சட்டத்தின் கடுமையைத் தவிர்த்து கூட்டு தண்டனையை அமல்படுத்த முடியும் என்பதை நினைவூட்டியது.


இரண்டாவது சவால் அரசு கொள்கையில் சில மதங்களை குறிவைப்பதாகும். பல்வேறு மாநிலங்களில் பிரகடனப்படுத்தப்பட்ட மதமாற்ற எதிர்ப்பு சட்டங்கள் (anti-conversion laws) நடுநிலையானவைகளாக தோன்றினாலும், சில சமூகங்களின் உறுப்பினர்கள் மற்றவர்களைவிட அதிகமாக தண்டிக்கப்பட்டதைக் காட்டியது. உத்தரப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஒரு மாதிரி ஆய்வில், ஆய்வு செய்யப்பட்ட "காதல் ஜிஹாத்" (love jihad) வழக்குகளில், ஒன்றைத் தவிர மற்ற அனைத்திலும் வழக்குகளிலும் முஸ்லிம்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்று பிரிவு 14, Amrashaa Singh, October 13, 2023-ஆம் ஆண்டு வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்தத் தொடரில் வக்ஃப் சட்டம் சமீபத்திய சட்டமாகும். பாதிக்கப்பட்ட மக்களுடன் முறையாக விவாதிக்காமல் அரசாங்கம் மாற்றங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது. புதிய விதி, வக்ஃப் நிர்வாகத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், இந்து கோயில்களை நிர்வகிக்கும் தேவசம் வாரியங்களில், இந்து உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இது, அரசாங்கம் வெவ்வேறு மதங்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், வக்ஃபுக்கு பங்களிப்பதற்கு முன்பு, ஒருவர் குறைந்தது ஐந்து ஆண்டுகள் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.


மூன்றாவது மதச்சார்பின்மைக்கு எதிரான குறியீட்டு தாக்குதல் (symbolic assault) ஆகும். இவை இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை சீர்குலைக்க சில தெளிவான முயற்சிகள் நடந்துள்ளன. கேரளாவில், ஆளுநர் கலந்து கொண்ட இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில், RSS உடன் அமைப்புடன் தொடர்புடைய சின்னமான காவி கொடியுடன் கூடிய பாரத மாதாவின் உருவம் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் நமது ஜனநாயகம் அனைத்து மதங்களையும் நம்பிக்கைகளையும் உள்ளடக்கியது மற்றும் மதிக்கிறது என்பதைக் காட்ட இந்தியா தனது தேசியக் கொடியாக மூவர்ணக் கொடியைத் தேர்ந்தெடுத்தது. இந்து அடையாளத்தை இந்திய அடையாளத்துடன் இணைப்பதற்கான அழுத்தம், இந்தியா போற்றும் மற்றும் அன்பாகக் கருதும் பன்முகத்தன்மை மற்றும் நம்பிக்கைக்கு முரணானது.


குறைந்தபட்ச மையக்கரு


அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கருத்தியல் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், மதச்சார்பற்ற மதிப்புகளின் குறைந்தபட்ச மையக்கரு எந்தவொரு ஜனநாயகத்தின் அடிப்படையாகும். மதச்சார்பின்மையுடன், எதிர்க்கட்சி உரிமைகளை மதிப்பது, நீதிமன்றங்களின் சுதந்திரம் மற்றும் முடிவெடுப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் வளங்களைப் பகிர்வதில் சமத்துவம் போன்ற பிற கருத்துக்களும் ஜனநாயகத்தின் குறைந்தபட்ச மையக்கருவின் ஒரு பகுதியாகும்.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் மிகவும் முக்கியமானது. ஏனெனில், அது சுயராஜ்யம் (self-governance) மற்றும் அடிப்படை உரிமைகளுக்கான கோரிக்கையிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த குறைந்தபட்ச மையக்கருவை முற்றிலுமாக கைவிடும் அரசியலால் அரசியலமைப்புச் சட்டம் எப்போதும் பலவீனப்படுத்தப்படலாம். ஒரு அரசியலமைப்புச் சட்டம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அதை நடத்துபவர்கள் மோசமாக இருந்தால் அது தோல்வியடையக்கூடும் என்று டாக்டர் அம்பேத்கர் எச்சரித்தார்.


(கட்டுரையாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்; கருத்துக்கள் தனிப்பட்டவை)



Original article:

Share:

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புகள் குறித்து…

 விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களைத் தடுக்க ஒற்றை ஆரோக்கியம் திட்டம் (One Health programme) அவசியம்.


ஒற்றை ஆரோக்கியம் திட்டம் (One Health Programme) என்றால் என்ன?


ஒற்றை ஆரோக்கியம் திட்டம் என்பது மனிதன், விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய மூன்றின் ஆரோக்கியம் ஒரு மாற்றாக இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு நோய்களைத் தடுக்கும் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்  திட்டமாகும்.


கேரளாவில் நிபா வைரஸின் இரண்டு வழக்குகள் கண்டறியப்பட்ட நிலையில், ஒருவர் இந்த தொற்றால் உயிரிழந்துள்ளார். இது தடுக்கக்கூடிய ஒரு ஆபத்தான நோய் குறித்து கவனத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இருப்பினும், இந்த வைரஸ் பரவினால் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். மலப்புரத்தைச் சேர்ந்த ஒரு பதின்வயது பெண் ஜூலை 1 அன்று இந்த வைரஸால் இறந்தார்.  மேலும், பாலக்காட்டைச் சேர்ந்த 38 வயது பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். கேரளாவின் மூன்று மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களின் தொடர்பு பட்டியலில் 425 பேர் அடையாளம் காணப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 228 பேர் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், அங்கு இம்முறை பேஷண்ட் ஜீரோ [Patient Zero] கண்டறியப்பட்டார், 110 பேர் பாலக்காட்டில் மற்றும் 87 பேர் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ளனர். பாலக்காட்டில் ஒரு தொடர்பு நபர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே நேரத்தில் மலப்புரத்தில் 12 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் - அவர்களில் ஐந்து பேர் தீவிர சிகிச்சை பிரிவில்உள்ளனர். அவர்களில் ஒருவரின் பரிசோதனை முடிவு தொற்று இல்லை என்று வந்துள்ளது. மற்றவர்கள் இன்னும் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். தொடர்பு பட்டியலில் உள்ள 140-க்கும் மேற்பட்டவர்கள் சுகாதார ஊழியர்கள் என்று கூறப்படுகிறது. கேரளாவின் சுகாதார அமைப்பு தொற்றின் மூல காரணத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மலப்புரம், பாலக்காட் மற்றும் கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் தொடர்பு நபர்களைக் கண்டறிதல், மேலும், பரவலைத் தடுக்க அவர்களை தனிமைப்படுத்துதல், தொற்றைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அறிகுறிகளைக் காட்டும் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 2001-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பல நிபா வைரஸ் பரவல்கள் ஏற்பட்டுள்ளன. அந்த ஆண்டு, மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட 66 பேரில் 45 பேர் இறந்தனர். 2018-ஆம் ஆண்டில், கேரளாவில் வைரஸ் பரவியது. மேலும் உறுதிப்படுத்தப்பட்ட 19 பேரில் 17 பேர் சிகிச்சைக்குப் பிறகும் இறந்தனர். அப்போதிருந்து, கேரளாவில் தொடர்ந்து நிபா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.


ஒரு பாதிப்புகூட ஏன் முழு சுகாதாரப் பராமரிப்பு அமைப்பையும் கலக்கத்தில் ஆழ்த்தும் அளவுக்கு முக்கியமான கவலையாக மாறுகிறது? நிபா என்பது 40% முதல் 75% வரை அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட ஒரு பரவக்கூடிய வைரஸ் தொற்று ஆகும். அதாவது தொற்று பரவினால், பலர் இறக்க வாய்ப்புள்ளது. எதிர்கால ஆராய்ச்சி நிபா தொற்றுகளை இறப்பு இல்லாமல் திறம்பட சிகிச்சையளிக்க ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு பயனுள்ள கருவியைச் சேர்க்கக்கூடும். ஆனால், தற்போதைய சூழலில், நடவடிக்கை தடுப்பு மற்றும் விழிப்புணர்வை உருவாக்குவதில் மட்டுமே உள்ளது. நிபா வைரஸ் இயற்கையாகவே வௌவால்கள் மூலம் பரவுகிறது. வௌவால்கள் சுவைத்த பழங்களை உட்கொள்வது வைரஸ் பரவுவதில் ஒரு பங்கை வகிக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. காலநிலை மாற்றமும் மனித செயல்பாடுகளும் இயற்கை வாழ்விடங்களை எவ்வாறு அழிக்கின்றன என்பதைக் கவனிப்பதும் முக்கியம். இது நிபா போன்ற வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தாவ வழிவகுக்கும். இதைத் தடுக்க, இதுபோன்ற நோய்களைக் கண்காணித்து கட்டுப்படுத்த உதவும் வலுவான ஒற்றை ஆரோக்கியம் திட்டம்  (One Health programme) நமக்குத் தேவை.



Original article:

Share:

தமிழ்நாடு மாநில திட்டக்குழு அறிக்கை, 30 ஆண்டுகளில் கட்டுமான பரப்பு அதிகரிப்பால் வெப்ப அழுத்தம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது

 சென்னை, கரூர் மற்றும் ராமநாதபுரத்தின் சில பகுதிகள் இப்போது தமிழ்நாட்டின் மிகவும் வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ளன. அதே நேரத்தில் உதகமண்டலம் மற்றும் கொடைக்கானல் போன்ற குளிர்ந்த பகுதிகள் கூட வெப்பமாகிவிட்டன என்று அறிக்கை கூறுகிறது.


தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் (State Planning Commission (SPC)) பகுப்பாய்வு, நகரமயமாக்கல், காடுகள் அழிப்பு மற்றும் நில பயன்பாட்டு மாற்றங்களால் உயரும் வெப்பநிலை மக்கள், சுற்றுச்சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு அதிகரிக்கும் ஆபத்தை உருவாக்குகிறது என்பதை அறிக்கை வெளிக்காட்டுகிறது.


நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வெப்ப அழுத்தம்: தமிழ்நாட்டில் கட்டுமானப் பகுதி மற்றும் காலநிலை தொடர்புகளின் பத்தாண்டு கால மதிப்பீடு (Urban Growth and Thermal Stress: A Decadal Assessment of Built-Up Area and Climate Interactions in Tamil Nadu) என்ற தலைப்பில் இந்த ஆய்வு, தமிழ்நாடு வெப்பக் குறைப்பு உத்தி (2024) அடிப்படையாகக் கொண்டது. இது 30 ஆண்டுகால தரவுகளைப் பயன்படுத்துகிறது  செயற்கைக்கோள் படங்கள், நில உயர வரைபடங்கள் மற்றும் காலநிலை பதிவுகள் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் வெப்பத்தால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதைக் முதல் முறையாக வெளிக்காட்டுகிறது.


முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் திங்களன்று சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கை, பல நகர்ப்புறவாசிகள் நீண்ட காலமாக உணர்ந்ததை உறுதிப்படுத்துகிறது - நகரங்கள் வெப்பமாகவும் வேகமாகவும் மாறி வருகின்றன என்பதையும் வெளிக்காட்டுகிறது.


2015-ஆம் ஆண்டு நிலவரப்படி சென்னையில் 74% கட்டுமானப் பகுதி, கோவை மற்றும் திருப்பூர் போன்ற தொகுதிகள் குறிப்பிடத்தக்க நகர்ப்புற விரிவாக்கத்தைக் கண்டுள்ளன. இது நில மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்புடன் நேரடியாக தொடர்புடையது. இந்த மாற்றங்கள் வெப்ப அசௌகரியத்தை மோசமாக்குவது மட்டுமல்லாமல், கட்டுமானம் மற்றும் ஆற்றல் அமைப்புகளையும் சிரமப்படுத்துகின்றன.


பகுப்பாய்வு செய்யப்பட்ட 389 தொகுதிகளில், 94 தொகுதிகள் வெப்பநிலையில் கடுமையான நீண்டகால அதிகரிப்பைக் காட்டின. அதே, நேரத்தில் 64 தற்போது கடுமையான வெப்ப அழுத்தத்தை அனுபவித்து வருகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், சென்னை, கரூர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 25 தொகுதிகள் இரண்டு வகைகளிலும் அடங்கும், இதனால் அவை தமிழ்நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடங்களாகின்றன.


பாரம்பரியமாக குளிர்ச்சியான உயரமான பகுதிகளான கொடைக்கானல், உதகமண்டலம் மற்றும் ஏற்காடு இனி பருவநிலை புகலிடங்களாக இல்லை.


காடுகள் அழிவு மற்றும் சுற்றுலா சார்ந்த வளர்ச்சி காரணமாக, கொடைக்கானல் 0.7°C மற்றும் திருத்தணியில் 1.2°C வரை குறிப்பிடத்தக்க வெப்பமயமாதல் பதிவாகியுள்ளது. வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 17 மலைப்பகுதிகளில் உள்ளன. இது வனவிலங்குகள் மற்றும் இயற்கை வாழ்விடங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கவலையை அதிகரிக்க செய்கிறது.


எதிர்கால காலநிலை சூழ்நிலைகளின்கீழ் (RCP 4.5 மற்றும் 8.5), தமிழ்நாடு 2050-ஆம் ஆண்டிற்குள் 0.9°C முதல் 2.7°C வரை ஆண்டு காற்று வெப்பநிலை அதிகரிப்பை அனுபவிக்கக்கூடும். இத்தகைய மாற்றங்கள் பயிர்கள், நீர் வழங்கல் மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்கு - குறிப்பாக வெளிப்புற தொழிலாளர்கள் மற்றும் வயதானவர்களுக்கு - தீங்கு விளைவிக்கும் என்று அறிக்கை கூறுகிறது.


தமிழ்நாட்டிற்கான உலகளாவிய உகந்த வெப்பநிலை குறியீடு (Universal Thermal Comfort Index) இப்போது பல மாவட்டங்களில் "வலுவான வெப்ப அழுத்தத்தை" பதிவு செய்கிறது. இது உயரும் வெப்பநிலை மட்டுமல்லாமல் மனித ஆரோக்கியம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் வெப்பத்தின் நேரடி தாக்கத்தையும் குறிக்கிறது.


மாநில திட்டக்குழுவின் அறிக்கையின்படி, தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியத்தின் (Tamil Nadu State Land Use Research Board (TNSLURB)) படி, கடந்த 20-ஆண்டுகளில் 3,025 சதுர கிலோமீட்டருக்கு மேல் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த இழப்புகள் மேற்பரப்பு அல்பிடோவை (albedo) மாற்றி, ஆவியாதலைக் குறைத்து, நகர்ப்புற வெப்பத் தீவு விளைவை (Urban Heat Island effect) அதிகரிக்கச் செய்கின்றன. அதே நேரத்தில், ஒரு காலத்தில் பயிரிடப்பட்ட நிலங்களில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன அல்லது பயிரிடப்படாமல் விடப்பட்டுள்ளன. இது மாநிலத்தின் காலநிலை தடுப்பு பகுதிகளை மேலும் பாதிப்படைய செய்கின்றது.


1985-ஆம் ஆண்டில் சிறிய கட்டிடப் பரப்பளவைக் கொண்ட புறநகர் மண்டலங்களான ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி மற்றும் குன்றத்தூர் போன்ற பகுதிகள் விரைவாக நகரமயமாக்கப்பட்டு, இப்போது அதிக வெப்பத் தீவிரத்தைப் பதிவு செய்துள்ளன. கடலோரப் பகுதிகள் ஏற்கனவே கடல் மட்ட உயர்வு மற்றும் புயல்கள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. இப்போது, ​​அவை மிக அதிக வெப்பத்தையும் சமாளிக்க வேண்டியுள்ளது. இதனால், இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் ஒன்றாகக் கையாள கவனமாகத் திட்டமிடுவது மிகவும் முக்கியம்.


பயனுள்ள இராஜதந்திர நடவடிக்கைகள்


தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் வெப்பத்தை எதிர்த்துப் போராட, குறிப்பாக நகரங்கள், அருகிலுள்ள பகுதிகள் மற்றும் மலைகளில், புத்திசாலித்தனமான திட்டமிடல் தேவை என்று அறிக்கை கூறுகிறது.


பூங்காக்கள், பசுமை கூரைகள் மற்றும் ஊடுருவும் மேற்பரப்புகள் போன்ற பசுமை கட்டமைப்பை நகர திட்டமிடலில் ஒருங்கிணைப்பது நகர்ப்புற வெப்பத் தீவு விளைவைக் குறைக்கலாம், அதே நேரத்தில் புதுப்பிக்கப்பட்ட கட்டிட குறியீடுகள் செயலற்ற குளிரூட்டும் அம்சங்கள், பசுமைப் போர்வை மற்றும் மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்க வேண்டும்.


நகரங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும், எந்தெந்த நிலங்கள் கட்டிடம் கட்டுவதற்கு ஏற்றவை என்பதை சரிபார்ப்பது, கட்டுமானத்தை கட்டுப்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அதிக மரங்களை நடுவது முக்கியம் என்று அறிக்கை கூறுகிறது.


குறிப்பாக, கிராமங்கள் மற்றும் தரவு பற்றாக்குறை உள்ள பகுதிகளில், செயற்கைக்கோள்கள் மற்றும் தரையிலிருந்து நிகழ்நேரத் தரவைப் பயன்படுத்தி சிறந்த வெப்பக் கண்காணிப்பையும் இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது. மிகவும் ஆபத்தில் உள்ள பகுதிகளில் உதவியை மையப்படுத்த, மாஸ்டர் பிளான்கள் மற்றும் பொலிவுறு நகர திட்டங்கள் (Smart City proposals) போன்ற முக்கியமான திட்டங்களில் வெப்பத் தரவைச் சேர்க்க பரிந்துரைக்கிறது.



Original article:

Share: