2024–25ஆம் ஆண்டில் உலகின் முதல் 10 சுற்றுலாப் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று. -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி:


பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு வலுவான மீட்சி மற்றும் பல்வேறு சவால்களின் பின்னணியில், உலகளாவிய பயண மற்றும் சுற்றுலாத் துறை 2023இல் உலக பொருளாதாரத்திற்கு $10.9 டிரில்லியன் பங்களித்தது என்று உலக பயண மற்றும் சுற்றுலா சபை (World Travel & Tourism Council (WTTC)) தெரிவித்துள்ளது. WTTCஇன் 2024 பொருளாதார செயல்விளைவு நிலை அறிக்கை (Economic Impact Trends Report) இந்த தொழில்துறை முன்னேறும் பாதையில் இருப்பதைக் காட்டுகிறது. மேலும், உலக பொருளாதார மன்றம் இந்த துறை 2034ஆம் ஆண்டுக்குள் $16 டிரில்லியனை எட்டும் என்று கணித்துள்ளது. இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். இந்தச் சூழலில், சுற்றுலாப் பொருளாதாரத்தின் அடிப்படையில் இந்தியா உலகளவில் எந்த இடத்தில் உள்ளது என்பதையும், 2024ஆம் ஆண்டு பயண மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீட்டின் (Travel and Tourism Development Index (TTDI)) சிறப்பம்சங்களையும் அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. உலக பயண மற்றும் சுற்றுலா சபையின் (World Travel & Tourism Council (WTTC)) அறிக்கையின் படி, அமெரிக்கா 2024இல் இருந்து உலகின் மிகப்பெரிய சுற்றுலா பொருளாதாரமாக இருந்து வருகிறது. இது முன்னெப்போதும் இல்லாத $2.36 trillion பங்களிப்பை அளித்துள்ளது. இது அதன் அருகிலுள்ள போட்டியாளரை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமான அளவாகும். சீனா $1.3 டிரில்லியன் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த சுற்றுலாச் சந்தையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2. ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் முதல் 10 இடங்களில் வலுவான இடங்களைப் பிடித்துள்ளன. இதற்கிடையில், ஹாங்காங், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகள் சுற்றுலாவில் விரைவாக வளர்ந்து வருகின்றன. ஜப்பான் தனித்து நின்று $297 பில்லியன் பங்களிப்புடன் 4-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.


3. இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தற்போது உலகளவில் எட்டாவது பெரிய சுற்றுலாப் பொருளாதாரமாக உள்ளது. இது $231.6 பில்லியன் பங்களிப்புடன், அதன் முந்தைய 10-வது இடத்திலிருந்து உயர்ந்துள்ளது. இந்த முன்னேற்றம் இந்தத் துறையில் நாட்டின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் WTTC நான்காவது இடத்திற்கு உயரும் என்று கணித்துள்ளது.

2024-25ல் முதல் 10 பெரிய உலகளாவிய பயணப் பொருளாதாரங்கள்

தரவரிசை

நாடு

பொருளாதார பங்களிப்பு (US$, பில்லியன்)

1

அமெரிக்கா

$2,360B

2

சீனா

$1,300B

3

ஜெர்மனி

$487.6B

4

ஜப்பான்

$297B

5

ஐக்கிய இராச்சியம்

$295.2B

6

பிரான்ஸ்

$264.7B

7

மெக்சிகோ

$261.6B

8

இந்தியா

$231.6B

9

இத்தாலி

$231.3B

10

ஸ்பெயின்

$227.9B


4. தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடும்போது பல நாடுகள் சர்வதேச சுற்றுலா செலவினங்களில் குறிப்பிடத்தக்க ஏற்றங்களைக் கண்டுள்ளன. இதில் சவுதி அரேபியா (+91.3 சதவீதம்), துருக்கியே (+38.2 சதவீதம்), கென்யா (+33.3 சதவீதம்), கொலம்பியா (+29.1 சதவீதம்) மற்றும் எகிப்து (+22.9 சதவீதம்) ஆகியவை அடங்கும்.

உலக பயண மற்றும் சுற்றுலா சபையின் 2024ஆம் ஆண்டு பொருளாதார அறிக்கையின் முக்கிய குறிப்புகளை இப்போது பார்த்தோம். தற்போது ஒரு முக்கியமான உலகளாவிய பயணம் மற்றும் சுற்றுலா குறியீட்டின் முக்கிய சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.


2024ஆம் ஆண்டு பயண மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீட்டில் முதல் 5 நாடுகள்

தரவரிசை

நாடு

மதிப்பெண்

1

அமெரிக்கா

5.24

2

ஸ்பெயின்

5.18

3

ஜப்பான்

5.09

4

பிரான்ஸ்

5.07

5

ஆஸ்திரேலியா

5.00


5. தென்கிழக்கு ஆசியாவில், பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீட்டில் இந்தியா 39-வது இடத்தில் உள்ளது மற்றும் குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. 2021ஆம் ஆண்டில், இது 54-வது இடத்தைப் பிடித்தது.


6. சர்ரே பல்கலைக்கழகத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த குறியீடு, இந்தியா பயணிகளுக்கு மிகவும் மலிவு விலையில் உள்ளது விலை போட்டித்தன்மையில் 18-வது இடம் மற்றும் நல்ல காற்று 26-வது இடம் மற்றும் தரைவழி போக்குவரத்தில் 25-வது இடத்தைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.


7. குறிப்பாக, இந்தியாவின் வலுவான இயற்கை 6-வது இடம், கலாச்சார (9வது) மற்றும் வேலைக்கான பயணத்தில் 9-வது இடம் வளங்கள் பயணத்தை ஊக்குவிக்க உதவுகின்றன. மேலும், அனைத்து வளத் தூண்களிலும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்ற மூன்றில் ஒன்று மட்டுமே இந்தியா என்று உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum (WEF)) தெரிவித்துள்ளது.


ஸ்வதேஷ் தரிசன் 2.0 (Swadesh Darshan 2.0)


1. பல்வேறு கருப்பொருள் சார்ந்த சுற்றுலா சுற்றுகளின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்காக 2014-15ஆம் ஆண்டில் ஒன்றிய அரசால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், சுற்றுலா அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக நிதி உதவி வழங்குகிறது.


2. இந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட முக்கியமான சுற்றுலாப் பாதைகள் புத்த மதச் சுற்று, வடகிழக்கு சுற்று, இராமாயணச் சுற்று, வனவிலங்கு சுற்று, கிராமப்புறச் சுற்று போன்றவை அடங்கும். இருப்பினும், பல மாநிலங்கள் பணத்தையும் வளங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்ததாலும், அதிகமான மக்கள் இதில் ஈடுபட்டிருந்ததாலும்,  இந்த திட்டம் திட்டமிட்டபடி செயல்படவில்லை.


3. எனவே, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க, ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் கவனம் செலுத்தும் ஸ்வதேஷ் தரிசன் (Swadesh Darshan 2.0) கருத்தியல் உருவாக்கப்பட்டது.


4. அதிகாரப்பூர்வ ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 வலைத்தளத்தின்படி, "'உள்ளூர் மக்களுக்கான குரல்' (“With the mantra of ‘vocal for local’) என்ற குரல்களுடன், புதுப்பிக்கப்பட்ட திட்டம், சுதேச தரிசனம் 2.0, சுற்றுலா தலமாக இந்தியாவின் முழு திறனையும் உணர்ந்து 'தற்சார்பு இந்தியா' (Aatmanirbhar Bharat’) என்ற இலக்கை அடைய முயல்கிறது.  ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 என்பது ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இது சுற்றுலாவை முழுமையான மற்றும் சீரான முறையில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் சுற்றுலா உள்கட்டமைப்பை உருவாக்குதல், சேவைகளை மேம்படுத்துதல், மக்களுக்கு பயிற்சி அளித்தல், இடங்களை சிறப்பாக நிர்வகித்தல் மற்றும் அவற்றை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். சுற்றுலாவை நிலையானதாகவும் பொறுப்புணர்வுடனும்

மாற்றுவதற்கான கொள்கைகள் மற்றும் நிறுவன மாற்றங்களால் இந்த திட்டம் ஆதரிக்கப்படுகிறது.


Original article:

Share:

இந்தியாவில் வரதட்சணை மரணங்கள்: நீண்ட விசாரணைகள், அரிய தண்டனைகள் -தேவ்யான்ஷி பிஹானி, விக்னேஷ் ராதாகிருஷ்ணன்

 கடந்த இரண்டு மாதங்களில் வரதட்சணை தொடர்பான மரணங்களின் தொடர்ச்சி சட்டவிரோத நடைமுறையில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.


கடந்த மூன்று மாதங்களில், இந்தியா முழுவதும் வரதட்சணை தொடர்பான மரணங்களின் தொடர்ச்சி பதிவாகியுள்ளது. உத்தர பிரதேசத்தின் அலிகாரில், ஒரு பெண்ணின் உடலின் சில பகுதிகளில் சூடான இரும்பு அழுத்தப்பட்டதால் இறந்தார். அவர் வரதட்சணைக்காக தொடர்ந்து தாக்கப்பட்டதாக அவரது குடும்பம் குற்றம் சாட்டியது. உத்தர பிரதேசத்தின் பிலிபீத் சேர்ந்த மற்றொரு பெண், கணவர் மற்றும் அவரது குடும்பத்தின் வரதட்சணை நிபந்தனையை பூர்த்தி செய்யாதால் உயிருடன் எரிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. சண்டிகரில், ஒரு இளம் மணமகள் வரதட்சணை துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில், பொன்னேரி அருகே, திருமணமான நான்கு நாட்களுக்குப் பிறகு, வரதட்சணைக்காக மாமியார் துன்புறுத்தியதாகக் கூறப்படும் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார். தமிழ்நாட்டின் திருப்பூரைச் சேர்ந்த மற்றொரு பெண், திருமணமான இரண்டு மாதங்களுக்குள் அதே காரணத்திற்காக தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.


இந்த வழக்குகள் வரதட்சணை கோரும் சட்டவிரோத நடைமுறை இந்தியாவில் தொடர்ந்து வளர்ந்து வருவதைக் காட்டுகின்றன. தேசிய குற்ற ஆவணங்கள் பணியக (National Crime Records Bureau) தரவுகளின் படி, 2017-2022 காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 7,000 வரதட்சணை மரண வழக்குகள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளன. இவை மட்டுமே பதிவாகிய வழக்குகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்னும் பல பதிவாகாமல் போவதால், தேசிய குற்ற ஆவணங்கள் பணியகம் தரவு நமக்கு ஒரு பழமைவாத மதிப்பீட்டை மட்டுமே தருகிறது.


எண்ணிக்கைகள் அதிர்ச்சியளிக்கின்றன. தரவை நாம் நெருக்கமாக பார்க்கும்போது, இந்த மரணங்கள் பற்றிய விசாரணைகள் மெதுவாக இருந்தன மற்றும் தண்டனைகள் சிலவற்றிற்கு மட்டுமே இருந்தன என்பதை காண்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக பதிவாகும் 7,000 வரதட்சணை மரணங்களில், 4,500 மரணங்களுக்கு மட்டுமே காவல்துறையினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. மீதமுள்ளவை விசாரணையின் பல்வேறு நிலைகளில் சிக்கியிருந்தன அல்லது 'வழக்கு உண்மை ஆனால் போதுமான சான்றுகள் இல்லை', 'பொய்யான வழக்கு' மற்றும் 'புகார் தவறான புரிதலில் அல்லது தவறான தகவலின் அடிப்படையில் அமைந்தது' உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. சில வழக்குகள் ஆறு மாதங்களுக்கு மேல் விசாரணை நிலையில் சிக்கியிருந்தன. 


2022ஆம் ஆண்டின் இறுதியில் விசாரணை நிலுவையில் உள்ள கிட்டத்தட்ட 3,000 வரதட்சணை மரண வழக்குகளில், 67% ஆறு மாதங்களுக்கு மேல் அந்த நிலையில் சிக்கியிருந்தன என்பதை (விளக்கப்படம் 1) சுட்டிக்காட்டுகிறது.


குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதிலும் காலதாமதம் ஏற்பட்டது. 2022இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 6,000-க்கும் மேற்பட்ட வரதட்சணை மரண வழக்குகளில், 70% வழக்குகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த விசாரணையைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டன என்பதை (விளக்கப்படம் 2) சுட்டிக்காட்டுகிறது.


விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு வழக்குகள் வந்தபோதும், சிலருக்கு மட்டுமே தண்டனை கிடைத்தது. மீதமுள்ளவர்கள் நீதிமன்ற நடைமுறைகளில் சிக்கிக்கொண்டனர். ஏனெனில், அவை திரும்பப் பெறப்பட்டன அல்லது சமரசம் செய்யப்பட்டன. அல்லது மனு பேரத்தில் முடிவடைந்தன. சில வழக்குகளில் ஆதாரம் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக விசாரணைக்கு அனுப்பப்பட்ட 6,500 வழக்குகளில், 100 வழக்குகள் மட்டுமே தண்டனையில் முடிந்தன. மீதமுள்ள 90%-க்கும் மேற்பட்டவை பல்வேறு நிலைகளில் நீதிமன்றத்தில் நிலுவையில் வழக்குகள் இருந்தன. மீதமுள்ள சில வழக்குகள் குற்றவாளிகள் அல்லாத தீர்ப்புகளுடன் முடிவடைந்தன. சில வழக்குகள் விசாரணைக்கு முன்பே கைவிடப்பட்டன. மேலும், சில வழக்குகள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன


2017-2022 காலகட்டத்தில் இந்தியா முழுவதும் 6,100-க்கும் மேற்பட்ட கொலைகளுக்கு வரதட்சணை முக்கிய காரணமாகும். இந்த கொலைகளில் 60% மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் பீகாரில் பதிவாகியுள்ளன. இந்த மூன்று மாநிலங்கள் மற்றும் ஜார்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள வழக்குகள் 2017-2022 காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வரதட்சணை மரண வழக்குகளில் 80% ஆகும் என்பதை (வரைபடம் 3) எடுத்துக்காட்டுகிறது.


இந்தியாவில் உள்ள 19 நகரங்களில் தரவுகள் கிடைத்துள்ளன. அந்த காலகட்டத்தில் 30% வரதட்சணை மரண வழக்குகள் பதிவாகியுள்ளன. இது எந்த நகரத்திலும் இல்லாதது  என்பதை (வரைபடம் 4) எடுத்துக்காட்டுகிறது. டெல்லியைத் தொடர்ந்து கான்பூர், பெங்களூரு, லக்னோ, பாட்னா ஆகிய நகரங்கள் உள்ளன.



Original article:

Share:

பெண்கள், STEM தொழில்கள் மற்றும் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தொழில்துறை -கான்தா சிங், அந்தரா லாஹிரி

 உலக இளைஞர் திறன் தினம் (World Youth Skills Day), ஜூலை 15, இந்தியாவின் பெண்களுக்கான அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல்,  மற்றும் கணிதம் (Science, technology, engineering, and mathematics (STEM)) தொழில்களில் முதலீடு செய்யாததால் தொழில்துறை இழப்பைச் சந்திக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.


ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15, 2025 அன்று, நாம் உலக இளைஞர் திறன் தினத்தை அனுசரிக்கும்போது, வேலையின்மையை குறைக்கவும் கண்ணியமான வேலையை ஊக்குவிக்கவும் திறன் மேம்பாடு அடிப்படையானது என்பதை நினைவூட்டுகிறது. இந்தியா ஒரு முக்கியமான முரண்பாட்டை எதிர்கொள்கிறது. இந்தியாவின் STEM பட்டதாரிகளில் 43% பெண்கள் ஆவார்.  இது உலகளவில் முக்கிய பொருளாதாரங்களில் மிக உயர்ந்த விகிதம் ஆகும். ஆனால், STEM வேலைகளில் 27% மட்டுமே பெண்களால் நடத்தப்படுகின்றன.  பல பெண்கள் இந்தத் துறையில் தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்கள்.


கால இடைவெளி தொழிலாளர் நலன் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) 2023-24இன் படி, இந்தியாவின் ஒட்டுமொத்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (labour force participation rate (FLFPR)) 41.7% ஆக உயர்ந்துள்ளது. பல ஆண்டுகளாக தேக்கத்திற்குப் பிறகு இது அர்த்தமுள்பயனுள்ள  முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், நகர்ப்புறங்களில் (25.4%) விட கிராமப்புற பெண்களுக்கு (47.6%) அதிகரிப்பு அதிகமாக உள்ளது. இது முறையான வேலைவாய்ப்பு, பணியிட பாதுகாப்பு மற்றும் சமூக எதிர்பார்ப்புகளின் தடைகளை பிரதிபலிக்கிறது. STEMஇல், இந்த முரண்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. யுனெஸ்கோ புள்ளியியல் நிறுவனத்தின் (2021) கூற்றுப்படி, உலகளவில் ஆராய்ச்சியாளர்களில் 31.5% மட்டுமே பெண்கள் உள்ளனர். இந்த கல்வி-வேலைவாய்ப்பு இடைவெளி, தொழில்துறை தனித்துவமாக நிவர்த்தி செய்ய நிலைநிறுத்தப்பட்ட முறையான தடைகளை பிரதிபலிக்கிறது. பொருளாதார பங்குகள் தெளிவாக உள்ளன. மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிடியூட்டின் மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் பணியாளர்களில் 68 மில்லியன் பெண்கள் பங்கேற்க அனுமதிப்பது 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை $700 பில்லியன்களாக உயர்த்தக்கூடும். இதேபோல், 50% பெண் பணியாளர் பங்கேற்பு விகிதத்தை அடைவது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 1% உயர்த்தக்கூடும் என்று உலக வங்கி அறிவுறுத்துகிறது.


அரசாங்க பார்வை மற்றும் STEM திறன் மேம்பாடு


புதிய கல்வி கொள்கை (New Education Policy (NEP)) 2020இன் படி STEM துறைகளில் அதிக வாய்ப்புகளைப் பெற உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது முக்கிய கல்வி அமைச்சகம் (Ministry of Education (MoE)) கல்வியை திறன் மேம்பாடு மற்றும் வாழ்க்கை திறன் பயிற்சியுடன் இணைத்துள்ளது. அரசாங்கம் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை (Industrial Training Institutes (ITIs)) மேம்படுத்தி, திறன் பயிற்சியை விரிவுபடுத்தி, கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் நல்ல தொழில்நுட்பக் கல்வி கிடைக்கச் செய்து, கிராமப்புற இந்தியாவில் அதிகமான இளைஞர்கள் அதை அணுகும் வகையில் உறுதி செய்கிறது.


இந்த முன்னேற்றம் பிரதமரின் வளர்ந்த இந்தியா (Viksit Bharat) பார்வையுடன் ஒத்துப்போகிறது. இதில் பெண்களின் பொருளாதார இயக்கம் உள்ளடக்கிய மேம்பாட்டின் மூலக்கல்லாக அமைகிறது. மொத்த தேசிய வரவு செலவுத் திட்டத்தில் பாலின வரவு செலவுத் திட்டத்தின் பங்கு 2024-25இல் 6.8%-இலிருந்து 2025-26இல் 8.8%-ஆக அதிகரித்துள்ளது. பாலின-குறிப்பிட்ட திட்டங்களுக்கு ரூ.4.49 லட்சம் கோடி ஒதுக்கீடு உள்ளது.


மேலும், ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்டத்தில் 2025-26 பெண் தொழில்முனைவோர்களுக்கான கால கடன்கள், புதிய தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப-உந்துதல் திறன் மேம்பாட்டில் முதலீடுகளை அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் இந்தியா முதல் திறன் இந்தியா வரை, மற்றும் பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (Beti Bachao, Beti Padhao) முதல் பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா (PM Vishwakarma Yojana) போன்ற பல நல்ல திட்டங்கள் உள்ளன. இருப்பினும், அரசாங்கக் கொள்கையால் மட்டுமே கல்வி-வேலைவாய்ப்பு இடைவெளியைக் குறைக்க முடியாது. பெண்கள் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெற  நிறுவனங்கள் செயலில் உள்ள உதவியாளராக மாற வேண்டும்.


காணாமல் போன இணைப்பாக தொழில்துறை


பெண்கள் திறன்களைக் கற்றுக்கொள்வதிலிருந்து வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் தொழில்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் "இயந்திர வேலை ஆண்களுக்கானது" அல்லது "பெண்களால் செய்ய முடியாது" போன்ற சமூக நம்பிக்கைகள் தொழில்நுட்பத் துறைகளில் பெண்களுக்கு இன்னும் கண்ணுக்குத் தெரியாத தடைகளை உருவாக்குகின்றன. உலக வங்கி மற்றும் யுனெஸ்கோவின் ஆய்வுகள், இந்த கருத்துக்கள் பல பெண்கள் STEM தொழில்களில் சேருவதையோ அல்லது தங்குவதையோ தடுக்கின்றன என்பதைக் காட்டுகின்றன. பணியிடங்கள் பெரும்பாலும் நட்பற்றவை, குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புகள் பற்றித் தெரியாது, வேலைகள் இன்னும் பாலின ரீதியாகக் காணப்படுகின்றன என்பதாலும் அவர்கள் வெளியேறுகிறார்கள். STEMஇல் அதிகமான பெண்களை வைத்திருக்க, நாம் இந்த யோசனைகளை மாற்ற வேண்டும், பணியிடங்களை பாதுகாப்பாக மாற்ற வேண்டும், நியாயமான ஊதியம் வழங்க வேண்டும், மேலும் திருமணம் மற்றும் மகப்பேறு பராமரிப்பு காரணமாக ஏற்படும் வேலை மாற்றங்களை நிர்வகிக்க பெண்களுக்கு உதவ வேண்டும்.


இந்தியாவின் தனியார் துறை படிப்படியாக முன்னேறுகிறது. பல நிறுவனங்கள் கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதல் திட்டங்கள், தொழில்துறை-இணைந்த பயிற்சி முயற்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுடனான கூட்டாண்மைகள் மூலம் வகுப்பறைகளிலிருந்து தொழில்களுக்கு நேரடி பாதைகளை உருவாக்க முன்னிலையில் நிற்கின்றன. அத்தகைய ஒரு முயற்சி UN Womenஇன் WeSTEM திட்டம் ஆகும். இது மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் அரசாங்கங்களுடன் ஒத்துழைப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு, Micron Foundationஇன் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் திறன்களுக்கான அணுகலை வழங்குகிறது மற்றும் திறமை இடைவெளியை குறைக்கிறது. குடும்பங்கள் மற்றும் சமூக தலைவர்களை ஈடுபடுத்துவதன் மூலமும், பணியிட பாதுகாப்பு அமர்வுகளை நடத்துவதன் மூலமும் மற்றும் வகுப்பறைகளில் பெண் முன்மாதிரிகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், திறன் மேம்பாடு திறம்பட செயல்பட மனநிலையில் மாற்றம் தேவை என்பதை இந்தத் திட்டம் அங்கீகரிக்கிறது.


தொழில்துறை தலைமைத்துவத்திற்கான வரைபடம்


கல்வி நிறுவனங்களுடன் தொழில்துறை கூட்டாண்மைகள், மாணவர்களுடன் தொழில் வல்லுநர்களை இணைக்கும் வழிகாட்டுதல் வலையமைப்புகள் மற்றும் வாழ்க்கை மாற்றங்களுக்கு இடமளிக்கும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும். பணியிட கொள்கைகள், கல்வி-வேலைவாய்ப்பு இடைவெளியைக் குறைக்கும். பெண்களின் STEM தொழில்களில் முதலீடு செய்ய இந்தியாவால் முடியுமா என்பது கேள்வி அல்ல. தொழில்துறையால் முடியாது என்பதுதான் முக்கியமான கேள்வியாக உள்ளது. STEM வேலைகளுக்குத் தேவையான திறன்களை பெண்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்குவது ஒரு வலுவான மற்றும் நியாயமான சமூகத்தை உருவாக்க உதவுகிறது. ஒரு பெண் வருவாய் ஈட்டும் போது, அவருடைய செல்வாக்கு அவருடைய குடும்பம், பணியிடம், அரசாங்க முடிவுகள் மற்றும் முழுத் தொழில்களுக்கும் பரவுகிறது. அவளுடைய குரல் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது.


கான்தா சிங்,  ஐ.நா. பெண்கள் இந்தியாவின்  பிரதிநிதியாகவும், இந்தியாவில் உள்ள Team UN-இன் ஒரு பகுதியாகவும் உள்ளார். அந்தாரா லஹிரி, மைக்ரான் அறக்கட்டளையின் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் இயக்குநராக உள்ளார்.


Original article:

Share:

தமிழ்நாடு மாதிரியின் சாத்தியங்களும் வரம்புகளும் - பிரமித் பட்டாச்சார்யா

 ஹரியானா அல்லது மகாராஷ்டிரா போன்ற பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் கல்வியில் சிறந்த முடிவுகளை அடைந்துள்ளது. இந்த பகுதிகளில் அதன் சாதனைகள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன.


நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ராபர்ட் லூகாஸ் வளரும் நாடுகளுக்கு இடையிலான பெரிய வருமான வேறுபாடுகளை சுட்டிக்காட்டினார். இந்த வேறுபாடுகளை நாம் வாய்ப்புகளாக பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார். 1988ஆம் ஆண்டு வெளியான ஒரு பிரபலமான ஆய்வறிக்கையில், இந்தோனேசியா அல்லது எகிப்து போல இந்தியா வளர இந்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா என்று கேட்டார். "ஆம் என்றால், இந்தியா என்ன செய்ய முடியும்? இல்லை என்றால், இந்தியாவில் என்ன தடுக்கிறது?" இந்தக் கேள்விகள் மக்களின் நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியமானவை என்று அவர் கூறினார். நாம் அவற்றைப் பற்றி யோசித்தவுடன், வேறு எதையும் பற்றி யோசிப்பது கடினம்.


இந்திய மாநிலங்களுக்கு இடையே வருமானம் மற்றும் மனித வளர்ச்சியில் பெரிய வேறுபாடுகள் உள்ளன. இது கேள்விகளை எழுப்புகிறது. உத்தரபிரதேசம் தமிழ்நாடு அல்லது மகாராஷ்டிராவைப் போல வளர முடியுமா? ஆம் எனில், அது என்ன செய்ய வேண்டும்? இல்லையென்றால், ஏன்? மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளி சமீபத்தில் அதிகரித்துள்ளதால் இதுபோன்ற கேள்விகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.


சில பொருளாதார வல்லுநர்களும் கொள்கை வல்லுநர்களும் தமிழ்நாடு ஒரு சிறந்த வளர்ச்சி "மாதிரியை" கண்டறிந்துள்ளதாக நம்புகிறார்கள். மாநிலத்தின் பொருளாதார உற்பத்தியில் கால் பங்கை உற்பத்தித் துறை கொண்டிருப்பதால், தமிழ்நாடு வியட்நாமின் ஒரு தேசிய பதிப்பாகக் கருதப்படுகிறது. முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், மற்ற மாநிலங்கள் தங்கள் தொழில்களை மேம்படுத்த தமிழ்நாடு மாதிரியைப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார். துணிகர முதலீட்டாளராக இருந்து, கொடை வள்ளலாக (Venture capitalist-turned-philanthropist) மாறிய ஆஷிஷ் தவான், இதை ஒப்புக்கொள்கிறார். புதிய முதலீட்டாளர்களை ஆதரித்ததற்காக மாநில அரசின் பங்கை அவர் பாராட்டுகிறார்.


ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா போன்ற பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் கல்வியில் சிறந்த சாதனைகளைக் கொண்டுள்ளது. இது தமிழ்நாட்டை வளர்ச்சிக்கு மிகவும் கவர்ச்சிகரமான மாதிரியாக மாற்றுகிறது. கேரளாவில் நவீன தொழில்துறையின் அடித்தளம் இல்லை. எனவே அது ஒரு முழுமையான வளர்ச்சி மாதிரியாக செயல்பட முடியாது. குஜராத் பலவீனமான மனித மேம்பாட்டு விளைவுகளைக் கொண்டுள்ளது. எனவே இது சற்று சிறந்ததாகவும் உள்ளது. பொருளாதார நிபுணர் பிரணாப் பர்தன் இந்த வாதத்தை முன்வைத்துள்ளார்.


தமிழகத்தின் வளர்ச்சியின் வெற்றிக்குப் பின்னால் என்ன இருக்கிறது? அதற்கு காரணம் மாநிலத்தின் ஒரு பகுதி தனித்துவமான அரசியல் பொருளாதாரத்தில் உள்ளது. இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளும் ஒரு பொதுவான பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்கின்றன மற்றும் முக்கிய சமூக-பொருளாதார பிரச்சினைகளில் ஒரே மாதிரியான கொள்கை நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டன. இரு கட்சிகளும் பிரிட்டிஷ் ஆட்சியின் போது பிராமண எதிர்ப்பு இயக்கத்திலிருந்து தொடங்கின. மேலும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் (OBC) அதிகாரம் செய்ய முயன்றன. இந்த சமூகங்களில் சில பாரம்பரிய வேளாண் சார்ந்த செயல்பாடுகளிலிருந்து நவீன வணிகங்களுக்கு மாறியதால், மாநில அரசியல்வாதிகளிடமிருந்து இரு கட்சி ஆதரவைப் பெற்றனர். தொழில்முனைவோர் தொடங்குவதற்கு ஒருபோதும் "வர்க்க எதிரிகளாக" (class enemies) பார்க்கப்படவில்லை. மேலும், நாட்டின் பல பகுதிகளை விட அவர்கள் தொடர்ந்து அதிக சமூக நியாயத்தன்மையை அனுபவித்து வருகின்றனர்.


திராவிட சித்தாந்தவாதிகள் பொருளாதாரத்தின் தொழில்மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலை ஆதரித்தனர். சாதி அடிப்படையிலான வேலைகள் மற்றும் பழைய படிநிலை மரபுகளிலிருந்து தமிழ் சமூகம் விடுபட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். பொருளாதார வல்லுநர்களான கலையரசன் .ஏ மற்றும் விஜயபாஸ்கர் .எம் ஆகியோர் 2021-ம் ஆண்டு எழுதிய ”The Dravidian Model” என்ற புத்தகத்தில் இதை எழுதியுள்ளனர். திராவிட சிந்தனையாளர்கள் முதலாளித்துவ நடவடிக்கைகள் மேலும் ஜனநாயகமாக மாற வேண்டும் என்று விரும்பினர். உள்ளூர் வணிகர்களின் நலன்களையும் அவர்கள் ஆதரித்ததாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். கடந்த முப்பது ஆண்டுகளில் பல ஊழல் மோசடிகள் இருந்தபோதிலும், மாநிலத்தின் வணிக சார்பு கொள்கை (pro-business tilt) தொடர்கிறது.


தமிழ்நாடு மாதிரியைப் பின்பற்ற விரும்பும் எந்தவொரு மாநில அளவிலான கொள்கை வகுப்பாளரும் அதன் வரம்புகளைப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த பத்தாண்டுகளில், பிற மாநிலங்களின் வேலைவாய்ப்புகள் அதிகரித்தாலும், உற்பத்தித் துறையில் தமிழகத்தின் பங்கு குறைந்துள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தித் துறை வேகமாக வளர்ந்தாலும், அமைப்புசாரா துறை நலிவடைந்துள்ளதாகத் தெரிகிறது. அமைப்புசாரா துறை அதிக ஆட்களை வேலைக்கு அமர்த்துவதால், உற்பத்தியில் கிடைத்த லாபத்தை விட வேலைவாய்ப்பில் கிடைத்த லாபம் மிகவும் குறைவாகவே உள்ளது.


இரண்டாவதாக, மாநில அரசு சுகாதாரம் மற்றும் கல்வியில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்தாலும், மாநில மக்கள்தொகையில் வளர்ந்து வரும் ஒரு பகுதியினர், கலையரசன் மற்றும் விஜயபாஸ்கர் குறிப்பிடுவது போல, சிறந்த தரத்தைத் தேடி தனியார் கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்களை நோக்கித் திரும்புகின்றனர்.


மூன்றாவதாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு சாதகமான மாநில அரசின் சமூகக் கொள்கைகள் சில துணை பிரிவுகள், மற்றவர்களை விட அதிகமாக உதவியுள்ளன. எடுத்துக்காட்டாக, 2007ஆம் ஆண்டில், தொழில்முறை படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வை (common entrance test (CET)) தமிழ்நாடு முடிவுக்குக் கொண்டு வந்தது. ஏனெனில், CET தனியார் பயிற்சி பெறக்கூடிய சமூக ரீதியாக சலுகை பெற்ற குழுக்களுக்கு சாதகமாகக் கருதப்பட்டது. CET-ஐ முடிவுக்குக் கொண்டுவருவது அதிகமான மக்கள் தொழில்நுட்பக் கல்வியை அணுக உதவியது. இருப்பினும், ஆர். ஸ்ரீனிவாசன் மற்றும் என். ரகுநாத் ஆகியோரின் 2019ஆம் ஆண்டு ஆய்வில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்குள் (OBC) உள்ள வசதி படைத்த சமூகங்கள் இந்த மாற்றத்தால் அதிகம் பயனடைந்ததாகக் காட்டியது.


சில வரம்புகள் இருந்தபோதிலும், உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதில் தமிழ்நாடு மற்ற பெரும்பாலான மாநிலங்களை விட சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. மற்ற பிராந்தியங்களுக்கு இந்த மாநிலம் பயனுள்ள பாடங்களை வழங்குகிறது.


இருப்பினும், திராவிட மாதிரியை முழுமையாக நகலெடுப்பது கடினமாக இருக்கலாம். இந்த மாதிரி ஒரு தனித்துவமான மக்கள்தொகைக்கான சூழ்நிலையைப் பொறுத்தது. தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் பிற்படுத்தப்பட்ட சாதிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன் காரணமாக, சமத்துவத்தை ஊக்குவிக்கும் கொள்கைகளுக்கான உடன்பாட்டை உருவாக்குவது எளிதாகிவிட்டது. கடந்த தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி (National Family Health Survey), தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் உயர் சாதியினர் 2% மட்டுமே உள்ளனர்.


உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில், உயர் சாதியினர் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக, திராவிட மாதிரியை அங்கு பயன்படுத்துவது கடினமாக இருக்கலாம். இருப்பினும், சமூக-பொருளாதார சீர்திருத்தங்களில் தமிழ்நாடு கொண்டுள்ளதைப் போல உத்தரபிரதேசமும் ஒரு அரசியல் உடன்பாட்டை எட்ட முடிந்தால், உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவது மாநிலத்திற்கு எளிதாக இருக்கும்.


பிரமித் பட்டாச்சார்யா சென்னையைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர்.



Original article:

Share:

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களில் இந்தியாவின் முக்கிய வியூகம். -ஆதித்ய சின்ஹா

 ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமைத் திட்டம் ஆய்வக ஆராய்ச்சிக்கும் வணிக நம்பகத்தன்மைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது


நவீன பொருளாதார வளர்ச்சியின் கதை என்பது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (research and development (R&D)) நீடித்த முதலீட்டின் கதையாகும். 1820 மற்றும் 2000ஆம் ஆண்டுக்கு இடையில், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 300 மடங்கு அதிகரித்தது. இந்த நேரத்தில், சராசரி வருமானம் பதின்மூன்று மடங்கு உயர்ந்தது. இந்த முன்னோடியில்லாத பொருளாதார வளர்ச்சி அறிவியலின் நிறுவனமயமாக்கல், அறிவுசார் சொத்துரிமை மற்றும் தேசிய கண்டுபிடிப்பு அமைப்புகளின் எழுச்சி ஆகியவற்றிலிருந்து பிரிக்க முடியாததாக இருந்தது.


பிரிட்டனின் எழுச்சி சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்களுடன் தொடங்கியது. 1624ஆம் ஆண்ட ஏகபோகங்களின் சட்டம் (Statute of Monopolies) நவீன காப்புரிமை உரிமைகளை அறிமுகப்படுத்தியது. 1688ஆம் ஆண்டு நடந்த புகழ்பெற்ற புரட்சியானது தனியார் சொத்துரிமையைப் பெற்றது.  இது புதுமைகளை ஊக்குவித்தது. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பிரிட்டிஷ் காப்புரிமை (British patent) தாக்கல்கள் மூன்று மடங்காக அதிகரித்தன. நீராவி இயந்திரம் மற்றும் சுழலும் ஜென்னி போன்ற கண்டுபிடிப்புகள் தொழில் மற்றும் விவசாயத்தை மாற்றின. 20ஆம் நூற்றாண்டில், அமெரிக்கா இந்தத் தலைமையை ஏற்றுக்கொண்டது. 1950 முதல் 2000 வரை, அமெரிக்க அரசாங்கம் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் கூட்டாட்சி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவினம் அரிதாகவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 2 சதவீதத்தை செலவிட்டது.


இந்தியா, இப்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், வரலாற்று ரீதியாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (R&D) மிகக் குறைவான முதலீடாக செலவிட்டுள்ளது. சீனா (2.4 சதவீதம்), அமெரிக்கா (3.4 சதவீதம்), மற்றும் பிரேசில் (1.2 சதவீதம்) ஆகிய நாடுகளுக்குப் பின்னால் தேசியச் செலவினம் ஜிடிபியில் 0.7 சதவீதத்துக்குக் கீழே உள்ளது. இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா தனது அறிவியல் சுற்றுச்சூழல் அமைப்பை விரிவுபடுத்துவதில், குறிப்பாக உயிரி தொழில்நுட்பம், விண்வெளி, கடல் அறிவியல் மற்றும் கிராமப்புற தொழில்நுட்பங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.


இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய அறிவியலை ஆதரிக்கும் நிறுவனங்களை அரசாங்கம் மறுவடிவமைப்பு செய்யத் தொடங்கியுள்ளது. ₹50,000 கோடி பட்ஜெட்டுடன் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (Anusandhan National Research Foundation (ANRF)) உருவாக்கம், பொருளாதாரத் திட்டமிடலில் ஆராய்ச்சியைச் சேர்க்கும் வலுவான நோக்கத்தைக் காட்டுகிறது. ANRF இன் மேம்பட்ட ஆராய்ச்சி மானியம் (Advanced Research Grant (ARG)) திட்டம் பல்வேறு தொழில்நுட்ப தயார்நிலை நிலைகளில் (TRL 1-6) ஆராய்ச்சிக்கான போட்டி நிதியை வழங்குகிறது. இது முக்கியமான அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறது. ARG திட்டம் பல்வேறு துறைகளில் குழுப்பணி மற்றும் துணிச்சலான அறிவியல் திட்டங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சிறிய, படிப்படியான மாற்றங்களிலிருந்து விலகி, பெரிய, இலக்கு சார்ந்த புதுமைகளில் கவனம் செலுத்துகிறது.


செலவு விதிகள் (Expenditure rules)


ஆராய்ச்சி செய்வதை எளிதாக்குவதில் சீர்திருத்தங்களும் மிக முக்கியமானவை. முன்னதாக, செலவு விதிகள் (Expenditure rules) தற்செயலாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை கடினமாக்கின. சிக்கலான அறிவியல் கொள்முதல் செயல்முறைகளுக்கு அவர்கள் பொதுவான பொறுப்புத்தன்மை விதிகளைப் பயன்படுத்தினார்கள். கடந்த மாதம், பொது நிதி விதிகளை (2017) மாற்றுவதன் மூலம் இதை செலவினத் துறை சரிசெய்தது.


இப்போது, விதிகள் 154 மற்றும் 155 இன் கீழ் அறிவியல் பொருட்களுக்கான கொள்முதல் வரம்புகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதில், வரையறுக்கப்பட்ட டெண்டர் விசாரணைகளுக்கான வரம்பு ₹50 லட்சத்திலிருந்து ₹1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, துணைவேந்தர்களும் இயக்குநர்களும் இப்போது ₹200 கோடி வரையிலான உலகளாவிய டெண்டர் விசாரணைகளை முன்வந்து தாங்களாகவே அங்கீகரிக்க முடியும். இந்த மாற்றங்கள் உயர்நிலை அறிவியல் உபகரணங்களை வாங்குவதை மெதுவாக்கும் நீண்டகால தடைகளை நீக்குகின்றன.


மிக முக்கியமான மாற்றம் ஜூலை 1, 2025 அன்று நிகழ்ந்தது. அன்று, ₹1 லட்சம் கோடி ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு (RDI) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முதல் முறையாக, தனியார் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக குறிப்பாக ஒரு நிதி அமைப்பை இந்தியா உருவாக்கியது. இந்தத் திட்டம் குறைந்த அல்லது வட்டி இல்லாத நீண்ட கால கடன்களை வழங்குகிறது. இது புதிய மற்றும் முக்கியமான தொழில்நுட்பத் துறைகளுக்கு பங்கு ஆதரவையும் வழங்குகிறது. இந்தத் திட்டம் ANRF ஆல் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் நிதிகளின் ஆழமான தொழில்நுட்ப நிதியால் உதவுகிறது. RDI திட்டம் ஆராய்ச்சியின் மேம்பட்ட நிலைகளில் (உயர் TRLகள் என்று அழைக்கப்படுகிறது) குறைந்த தனியார் முதலீட்டின் சிக்கலைத் தீர்க்கிறது. இது ஆய்வக ஆராய்ச்சிக்கும் வணிக வெற்றிக்கும் இடையிலான இடைவெளியான "மரணப் பள்ளத்தாக்கை" (valley of death) கடக்க உதவுகிறது. இந்தத் திட்டம் இந்திய அரசாங்கத்தின் பங்கை பணம் கொடுப்பதில் இருந்து புதுமைகளை தீவிரமாக ஆதரிப்பதாக மாற்றுகிறது.


முன்னேற்றத்தைத் தொடர, RDI திட்டத்தின் நிதி உதவி, புதுமைக்கான நிலையான சந்தைகளை உருவாக்கும் செயல்களுடன் பொருந்த வேண்டும். இதற்கு பணம் மட்டும் போதாது. புதுமைப்பித்தன்கள் (Innovators) தங்கள் தீர்வுகளை மக்கள் வாங்குவார்கள் என்ற நம்பிக்கை தேவை.


இதன் பொருள் கொள்முதல்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதில் மாற்றங்கள் இருக்க வேண்டும். இந்த மாற்றங்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கான அபாயங்களைக் குறைக்க வேண்டும். சில செயல்திறன் இலக்குகள் அடையப்பட்டவுடன் சந்தை அணுகலை உறுதி செய்யும் அமைப்புகளையும் அவை உள்ளடக்கியிருக்க வேண்டும். கூடுதலாக, பொதுச் செலவு முக்கியமான உத்திக்கான முடிவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.


பாதுகாப்பு சிறப்புக்கான கண்டுபிடிப்பு (Innovation for Defence Excellence (iDEX)) தளம் இந்த அணுகுமுறையை தெளிவாகக் காட்டுகிறது. இது பாதுகாப்பு கொள்முதலை தொடக்கநிலை கண்டுபிடிப்புகளுடன் இணைக்கிறது. இந்த இணைப்பு தயாரிப்புகளை சந்தைக்குக் கொண்டுவருவதற்கு எடுக்கும் நேரத்தைக் குறைக்கிறது. இது ஆயுதப் படைகளில் ஒரு வாடிக்கையாளருக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. இதேபோன்ற மாதிரிகளை மற்ற துறைகளிலும் விரிவுபடுத்துவது தனியார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (R&D) ஊக்குவிக்கும். இது புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் அபாயங்களையும் குறைக்கலாம். இது ஆய்வக ஆராய்ச்சியிலிருந்து தொழில்துறை பயன்பாட்டிற்கு இந்தியாவின் நகர்வை விரைவுபடுத்தும். பொது கொள்முதல் மூலம் தேவையை உருவாக்குவது ஆராய்ச்சியை அளவிடக்கூடிய மற்றும் சந்தைக்குத் தயாரான தீர்வுகளாக மாற்றுவதற்கான ஒரு வலுவான வழியாகும்.


இந்தியா இப்போது ஒரு முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. இது ஒரு வலுவான கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கத் தொடங்கியுள்ளது. இது நீண்டகால நிறுவன சிக்கல்களை சரிசெய்யவும் தொடங்கியுள்ளது. இப்போது, அது இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பெரிய, தொடர்ச்சியான முதலீடுகள் இல்லாமல் எந்த நாடும் அதிக வருமானம் ஈட்டவில்லை. அதன் வளர்ந்த இந்தியா 2047 இலக்குகளை அடைய, இந்தியா அதிநவீன அறிவியலில் முன்னணியில் இருக்க வேண்டும்.


சின்ஹா பேரியல் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் பிரச்சினைகள் குறித்து எழுதுகிறார்.



Original article:

Share:

மாநிலங்களவைக்கு உறுப்பினர்கள் எப்படி, ஏன் பரிந்துரைக்கப்படுகிறார்கள்? -ரோஷ்னி யாதவ்

 சமீபத்தில், மாநிலங்களவைக்கு நான்கு புதிய உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டனர். ஆனால், பரிந்துரைக்கப்பட்ட இடங்கள் என்ன? பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? 


தற்போதைய செய்தி :


அரசாங்கம் மாநிலங்களவைக்கு நான்கு புகழ்பெற்ற நபர்களை பரிந்துரைத்துள்ளது. அவர்கள் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிகம், கேரள பாஜக தலைவர் சி சதானந்தன் மாஸ்டர் மற்றும் வரலாற்றாசிரியர் மீனாட்சி ஜெயின் உள்ளிட்ட நபர்களை அரசாங்கம் மாநிலங்களவைக்கு பரிந்துரைத்தது.


இப்போது, மாநிலங்களவைக்கு யார், எப்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வோம். மேலும், மாநிலங்களவையில் ஏன் 'பரிந்துரைக்கப்பட்ட' (‘nominated’) நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்?


முக்கிய அம்சங்கள் :


1. மத்திய உள்துறை அமைச்சகமானது சனிக்கிழமை தாமதமாக ஒரு அறிவிப்பில், இந்திய அரசியலமைப்பின் 80வது பிரிவின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மாநிலங்களவைக்கு சில நபர்களை குடியரசுத் தலைவர் பரிந்துரைத்துள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் சில உறுப்பினர்களின் ஓய்வு காரணமாக ஏற்பட்ட காலியிடங்களை நிரப்புகின்றன. இதில், பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் ஸ்ரீ உஜ்வால் தியோராவ் நிகம், ஸ்ரீ சி. சதானந்தன் மாஸ்டர், ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா மற்றும் டாக்டர் மீனாட்சி ஜெயின் போன்றோர் அடங்குவர்.


2. அரசியலமைப்பின் 80வது பிரிவு, மாநிலங்களவை (Composition of the Council of States) எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை விளக்குகிறது. மாநிலங்களவையில் குடியரசுத்தலைரால் பரிந்துரைக்கப்படும் பன்னிரண்டு உறுப்பினர்களும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 238 உறுப்பினர்களும் இருப்பார்கள் என்று அது கூறுகிறது. பிரிவு 80 (3) இலக்கியம், அறிவியல், கலை அல்லது சமூகப் பணிகளில் சிறப்பு அறிவு அல்லது அனுபவம் உள்ளவர்களை ஜனாதிபதி பரிந்துரைக்க முடியும்.


"குடியரசுத்தலைவரால் பரிந்துரைக்கப்பட வேண்டிய உறுப்பினர்கள், சிறந்த அறிவு அல்லது நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று அது கூறுகிறது. அதாவது இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவைகளில் ஈடுபாடு உடையவராக இருக்க வேண்டும்.


3. ஒரு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் அவையில் அமர்ந்த ஆறு மாதங்களுக்குள் ஒரு அரசியல் கட்சியில் சேரலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் அனைத்து அதிகாரங்களும் சலுகைகளும் அவர்களுக்கு உண்டு. மற்ற உறுப்பினர்களைப் போலவே அவர்களும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்.


4. பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில்லை. எனினும், அவர்களுக்கு துணைகுடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது.


மாநிலங்கவையில் பரிந்துரைக்கப்பட்ட இடங்களுக்கான விதி ஏன் உள்ளது?


5. அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினரான என். கோபாலசாமி அய்யங்கார், அரசியலமைப்பில் ஒரு விதியைச் சேர்ப்பதை ஆதரித்தார். இந்த ஏற்பாடு மாநிலங்கள் கவுன்சிலுக்கு (மாநிலங்களவை) சிறந்த நபர்களை பரிந்துரைக்க அனுமதிக்கும். அரசியலில் ஆழமாக ஈடுபடாத அனுபவம் வாய்ந்தவர்களுக்கு இது ஒரு வாய்ப்பை வழங்கும் என்று அவர் கூறினார். இந்த மக்கள் விவாதங்களில் கலந்து கொண்டு அறிவையும் முக்கியத்துவத்தையும் கொண்டு வர விரும்பலாம். பொதுவாக, இத்தகைய குணங்கள் மக்கள் சபையில் (மக்களவையில்) பொதுவாகக் காணப்படுவதில்லை.


6. இருப்பினும், காலப்போக்கில், நியமனத்தின் உயர்ந்த இலட்சியம் பலவீனமடைந்தது. ஆளும் கட்சிகள் அவையில் தங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்ட வகையை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றன. அவர்கள் உதவிகளை வழங்கவும், தங்களுக்கு விருப்பமான மக்களை நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வரவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.


மசோதாக்களில் வாக்களிப்பதைத் தாண்டி மாநிலங்களவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருப்பது ஏன் முக்கியம்?


7. பண மசோதாக்கள் (Money Bills) விவகாரத்தில் மாநிலங்கவையின் பங்கு வரையறுக்கப்பட்டுள்ளது. பண மசோதாவை மாநிலங்கவையால் திருத்த முடியாது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் திருத்தங்களை பரிந்துரைக்கலாம். மேலும், மக்களவை இவை அனைத்தையும் அல்லது ஏதேனும் ஒன்றை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

8. எனினும், மாநிலங்கவை சில சிறப்பு அதிகாரங்களை அனுபவிக்கிறது. மாநில பட்டியலில் (State List) பட்டியலிடப்பட்ட ஒரு  விவகாரத்தில் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்று "தேசிய நலனுக்கு அவசியம் அல்லது பொருத்தமானது" என்று கூறி, உள்ளிருந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால், நாடாளுமன்றம் அந்த விவகாரத்தில் சட்டம் இயற்ற அதிகாரம் பெறுகிறது. அத்தகைய தீர்மானம் அதிகபட்சமாக ஒரு வருடம் வரை நடைமுறையில் இருக்கும். ஆனால், இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் இந்த காலம் ஒரு நேரத்தில் ஒரு வருடம் நீட்டிக்கப்படலாம்.


9. யூனியன் மற்றும் மாநிலங்கள் இரண்டிற்கும் வேலை செய்யும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அகில இந்திய சேவைகளை உருவாக்க பரிந்துரைக்க இதேபோன்ற முறையைப் பயன்படுத்தலாம். இந்த சேவைகளை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.


10. தேசிய அவசரநிலை, ஒரு மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அல்லது நிதி அவசரநிலை போன்ற அவசரநிலையை  குடியரசுத்தலைவர் அறிவிக்கும்போது மாநிலங்களவைக்கும் முக்கிய பங்கு உண்டு. அத்தகைய அறிவிப்பை மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கீகரிக்க வேண்டும்.


11. இருப்பினும், சில சூழ்நிலைகளில், மாநிலங்களவை சிறப்பு அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டவுடன் மக்களவை கலைக்கப்பட்டால்  அல்லது அதன் ஒப்புதலுக்காக கொடுக்கப்பட்ட நேரத்தில் கலைக்கப்பட்டால்,  அரசியலமைப்பின் 352, 356 மற்றும் 360 வது பிரிவுகளின் கீழ் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் மாநிலங்களவை அதை அங்கீகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினால் அந்த பிரகடனம் அமலில் இருக்கும்.


மாநிலங்களவைக்கு உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?


1. ராஜ்யசபா ஒரு நிரந்தர சபை. அது ஒருபோதும் கலைக்கப்படுவதில்லை. அதை தொடர்ந்து நடத்த, அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் வெளியேறுகிறார்கள் (அரசியலமைப்பின் பிரிவு 83(1) இன் படி). புதிய உறுப்பினர்கள் தங்கள் இடத்தைப் பிடிக்கத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள்.


2. ராஜ்யசபாவில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 12 உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் 233 உறுப்பினர்கள் டெல்லி மற்றும் புதுச்சேரியின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். ஒரு உறுப்பினர் ராஜினாமா செய்தால், இறந்தால் அல்லது தகுதி நீக்கம் செய்யப்பட்டால், காலியான இடத்தை நிரப்ப இடைத்தேர்தல் (சிறப்புத் தேர்தல்) நடத்தப்படுகிறது. புதிய உறுப்பினர் பழைய உறுப்பினரின் மீதமுள்ள காலத்தை மட்டுமே நிறைவு செய்கிறார்.


3. அரசியலமைப்பின் நான்காவது அட்டவணை ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் எத்தனை ராஜ்யசபா இடங்களைப் பெறுகின்றன என்பதை தீர்மானிக்கிறது. இது ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டது.


4. ராஜ்யசபா உறுப்பினர்கள் பொதுமக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.  பிரிவு 80(4) விகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் ஒற்றை மாற்றத்தக்க வாக்கு முறையைப் பயன்படுத்தி சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுகிறது.


5. ஒரு வேட்பாளர் வெற்றிபெறத் தேவையான வாக்குகளின் எண்ணிக்கை, எத்தனை இடங்கள் திறந்திருக்கும் மற்றும் எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. ஒரு இடம் இருந்தால், வெற்றி பெற்ற வேட்பாளர் பதிவான வாக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றையும் சேர்த்து ஒன்றையும் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணைய விதிகள் கூறுகின்றன. உதாரணமாக, 100 வாக்குகள் பதிவானால், வேட்பாளர் வெற்றிபெற (100 ÷ 2) + 1 = 51 வாக்குகளைப் பெற வேண்டும்.


6. ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட வேண்டியிருந்தால், ஒவ்வொரு முதல் விருப்ப வாக்குக்கும் 100 மதிப்பு வழங்கப்படும். இந்த வாக்கு மதிப்புகள் அனைத்தும் சேர்க்கப்படும். இந்தத் தொகை இடங்களின் எண்ணிக்கையை விட ஒன்றால் வகுக்கப்பட்டு, பின்னர் முடிவுடன் 1 சேர்க்கப்படும்.


உதாரணமாக:


3 மாநிலங்களவை இடங்களை நிரப்ப 100 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தால்:


ஒதுக்கீடு = (100 × 100) ÷ (3 + 1) + 1 = 2501


எந்த வேட்பாளரும் ஒரு இடத்திற்கு போதுமான வாக்குகளைப் பெறவில்லை என்றால், வாக்காளர்களின் இரண்டாவது விருப்ப வாக்குகள் எண்ணப்படும், ஆனால் ஒவ்வொன்றும் குறைவான மதிப்பைக் கொண்டிருக்கும்.



Original article:

Share: