இந்திய கானமயில் -ரோஷ்னி யாதவ்

 இந்திய கானமயில் அதன் உயிர்வாழ்விற்கு கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அதன் வாழ்விடங்களில் முக்கியத் தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை முன்மொழிந்துள்ளது. இது இந்த பறவையை மீண்டும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.


தற்போதைய செய்தி:


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களுக்கு உதவ, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, இந்திய கானமயில் (Great Indian Bustard (GIB)) வாழும் பகுதிகளில் மின் இணைப்புகள் பிரச்சினைக்கு ஒரு தீர்வை பரிந்துரைத்துள்ளது. இந்த வாழ்விடங்களில் உள்ள அனைத்து மேல்நிலை மின் இணைப்புகளையும் தடை செய்வதற்கு பதிலாக, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் மின் இணைப்புகளுக்கு சிறப்பு "மின் வழித்தடங்கள்" அமைக்க குழு பரிந்துரைத்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:

1. இந்திய கானமயில் (Great Indian Bustard (GIB)) இந்தியாவில் மட்டுமே காணப்படும் ஒரு பெரிய பறவை. இது இந்தியாவில் உள்ள நான்கு பஸ்டர்ட் இனங்களில் மிகப்பெரியது. மற்ற மூன்று பறவை இனங்கள் மெக்வீன்ஸ் பஸ்டர்ட், லெஸ்ஸர் புளோரிகன் மற்றும் பெங்கால் புளோரிகன் போன்றவை ஆகும்.


2. பறக்கக்கூடிய கனமான பறவைகளில் இந்திய கானமயில்கள் அடங்கும். அவை முக்கியமாக புல்வெளிகளில் வாழ்கின்றன. மேலும், பெரும்பாலான நேரத்தில் தரையில் நடக்கின்றன. தேவைப்படும்போது மட்டுமே பறக்கின்றன.


3. அவை பூச்சிகள், பல்லிகள், புல் விதைகள் மற்றும் இதே போன்ற சிறிய உணவை உண்கின்றன. புல்வெளி எவ்வளவு ஆரோக்கியமானது என்பதை அவற்றின் இருப்பு காட்டுவதால், புல்வெளிகளுக்கு இந்திய கானமயில்கள் முக்கியமான பறவைகளாகக் காணப்படுகின்றன.

4. கடந்த காலத்தில், இந்திய கானமயில்கள் இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதியில் வாழ்ந்தன. ஆனால், இப்போது அவை அந்தப் பகுதியில் 10% மட்டுமே காணப்படுகின்றன. மிகக் குறைவாகவே எஞ்சியிருப்பதால், சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (International Union for Conservation of Nature (IUCN)) அவற்றை "மிகவும் ஆபத்தான நிலையில்" இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. அதாவது அவை காடுகளிலிருந்து மறைந்துவிடும் நிலையில் உள்ளன. இப்போது, அவை பெரும்பாலும் மேற்கு ராஜஸ்தானில் காணப்படுகின்றன.


5. கடந்த 40 ஆண்டுகளில், அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இன்று, 150-க்கும் குறைவான கானமயில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. விவசாயம் காரணமாக புல்வெளி இழப்பு, அவற்றின் முட்டைகளை நாய்கள் போன்ற விலங்குகள் சாப்பிடுவது மற்றும் சமீபத்தில் மற்றும் மின்கம்பிகளில் மோதி கொல்லப்படுவது ஆகியவை அவற்றின் முக்கிய அச்சுறுத்தல்களாகும்.


இந்திய கானமயில் மீட்புத் திட்டம் மற்றும் பாதுகாப்புத் திட்டம்


1. இந்திய கானமயில்களின் எண்ணிக்கையைக் காப்பாற்றுவதற்கான முதல் முயற்சிகள் 2012–2013-ல் தொடங்கியது. அப்போது ராஜஸ்தான் அரசாங்கமும் சுற்றுச்சூழல் அமைச்சகமும் நீண்டகால மீட்புத் திட்டத்தைத் தொடங்கின. ஏழு ஆண்டுகளுக்கு ₹33.85 கோடியைப் பெற்றபிறகு இந்தத் திட்டம் 2016-ல் வலுவடைந்தது. பறவைகளின் இயற்கை வாழ்விடத்தை மேம்படுத்தவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க இனப்பெருக்கத் திட்டத்தைத் தொடங்கவும் இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டது.


2. காடு அல்லாத நோக்கங்களுக்காக காடுகள் அழிக்கப்படும்போது பணத்தை சேகரிக்கும் இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதியத்தால் இந்தத் திட்டம் நிதியளிக்கப்பட்டது. ஜூலை 2018-ல், சுற்றுச்சூழல் அமைச்சகம், ராஜஸ்தான் வனத்துறை மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் (Wildlife Institute of India (WII)) இடையே ஒரு முறையான ஒப்பந்தம் கையெழுத்தானது.


3. இந்த ஒப்பந்தம் ராம்தேவ்ரா மற்றும் சோர்சனில் நீண்டகால இனப்பெருக்க மையங்களை அமைப்பதற்கும், கள ஆராய்ச்சி மூலம் பறவைகளைக் கண்காணிப்பதற்கும், அவற்றின் வாழ்விடத்தை நிர்வகிப்பதற்கும், உள்ளூர் சமூகங்களை பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபடுத்துவதற்கும் வழிவகுத்தது.


4. பாதுகாப்பு திட்டத்தின் அடுத்த முழு கட்டம் 2024 முதல் 2033-ஆம் ஆண்டு வரை நடைபெறும். ஆனால், உடனடி பணிகள் 2029-ஆம் ஆண்டு வரை தொடரும். ராம்தேவ்ரா இனப்பெருக்க மையத்தை மேம்படுத்துவதும், இந்த பாதுகாப்பு மையத்தை மேம்படுத்துவதும் முக்கிய இலக்குகளாகும். செயற்கை கருவூட்டலுக்கான ஒரு புதிய ஆய்வகம் ராம்தேவ்ராவில் அமைக்கப்படும். மேலும், இது 2026-ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நிபுணர் குழுவின் பரிந்துரைகள்


  1. மார்ச் 2024-ல், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்றம், இந்திய கானமயில் (GIB) வாழும் பகுதிகளில் உள்ள அனைத்து மின் கம்பிகளையும் நிலத்தடியில் வைக்க வேண்டும் என்ற அதன் முந்தைய 2021-ஆம் ஆண்டு வெளியிட்ட உத்தரவை ரத்து செய்தது. மின் கம்பிகளை புதைப்பது மிகவும் விலை உயர்ந்ததாகவும் தொழில்நுட்ப ரீதியாக கடினமாகவும் இருக்கும் என்ற கவலைகள் காரணமாக இது நடந்தது. அதற்குப் பதிலாக, ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் விரைவான வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில், மின் கம்பிகளால் ஏற்படும் இந்திய கானமயில் இறப்புகளைத் தடுப்பதற்கான வழிகளை பரிந்துரைக்குமாறு நீதிமன்றம் ஒரு நிபுணர் குழுவைக் கேட்டது.


  1. நிபுணர் குழு இப்போது இந்திய கானமயில்களுக்கான பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை விரிவுபடுத்தியுள்ளது. ராஜஸ்தானில், முன்னுரிமை பாதுகாப்பு பகுதி 13,163 சதுர கிலோமீட்டரிலிருந்து 14,013 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. குஜராத்தில், இது 500-லிருந்து 740 சதுர கிலோமீட்டராக உயர்ந்துள்ளது. கானமயில்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக இந்தப் பகுதிகள் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.


  1. பறவைகளுக்கான சிறப்பு இயக்க வழித்தடங்களையும் குழு முன்மொழிந்தது. ராஜஸ்தானில், இந்த வழித்தடம் 5 கிலோமீட்டர் அகலமாக இருக்கும். குஜராத்தில், 1 முதல் 2 கிலோமீட்டர் அகலம் கொண்ட இரண்டு தனித்தனி வழித்தடங்கள் இருக்கும். இருப்பினும், குழுவின் ஒரு உறுப்பினர் இதை ஏற்கவில்லை. சில மின் இணைப்புகளை எந்த மாற்றங்களும் இல்லாமல் இயக்க அனுமதிக்கும் முடிவை எதிர்த்து ஒரு எதிர்ப்புக் குறிப்பைச் சமர்ப்பித்தார்.


  1. மண்டலங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதைப் பொறுத்து வெவ்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை குழு பரிந்துரைத்தது. கானமயில்களின் பகுதிகளில் இருக்கும் மின் இணைப்புகள் அவை எவ்வளவு சக்திவாய்ந்தவை என்பதைப் பொறுத்து கையாளப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தால் முன்னர் அடையாளம் காணப்பட்டபடி, முக்கியமான கானமயில் மண்டலங்களில் உள்ள சில மின் இணைப்புகளை உடனடியாக புதைக்க வேண்டும். 220 kV மின்னழுத்தம் மற்றும் அதற்கு மேற்பட்ட மின்னழுத்தம் கொண்ட மின் இணைப்புகள் ஏதேனும் மாற்றங்கள் தேவையா என்பதை தீர்மானிக்க தனித்தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டும். முன்னுரிமை மண்டலங்களுக்கு வெளியே எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் புதிய மின் இணைப்புகளை சுதந்திரமாக அமைக்கலாம் போன்ற பரிந்துரைகளை வழங்கியது.


  1. குஜராத்தில் இந்திய கானமயில் எண்ணிக்கையை அதிகரிக்க "ஜம்ப் ஸ்டார்ட்" (“jump start”) முறையைப் பயன்படுத்துவது முக்கியப் பாதுகாப்பு யோசனைகளில் ஒன்றாகும். ராஜஸ்தானில் உள்ள பாதுகாப்பு மையங்களில் இருந்து குஞ்சு பொரிக்க கிட்டத்தட்ட தயாராக இருக்கும் முட்டைகளை எடுத்து, குஜராத் காட்டுப்பகுதியில் உள்ள இந்திய கானமயில் பெண் பறவையின் கீழ் அடைகாப்பதற்காக வைப்பது இதில் அடங்கும். குஜராத்தில் மீதமுள்ள கானமயில்களை கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக குறியிடவும் பரிந்துரைக்கப்பட்டது.


உலக இயற்கை பாதுகாப்பு தினம் 2025


1. இந்திய கானமயில் (GIB) இனத்தை பாதுகாப்பது ஏன் முக்கியம் என்பதைப் புரிந்துகொண்ட பிறகு, ஜூலை 28 உலக இயற்கை பாதுகாப்பு தினமாகக் (World Nature Conservation Day) கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே இந்த நாளின் நோக்கம். தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை கவனித்துக்கொள்ள இது நமக்கு நினைவூட்டுகிறது.


2. 2025-ஆம் ஆண்டு உலக இயற்கை பாதுகாப்பு தினத்திற்கான கருப்பொருள் "மக்கள் மற்றும் தாவரங்களை இணைத்தல்: வனவிலங்கு பாதுகாப்பில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை ஆராய்தல்" (“Connecting People and Plants: Exploring Digital Innovation in Wildlife Conservation.”) என்பதாகும்.



Original article:

Share:

சிறுத்தைப்புலி திட்ட வழிகாட்டுதல் குழு -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) மூத்த உறுப்பினர்கள், கடந்த ஆண்டு அங்கு நடந்த பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு புதிய அரசியல் கூட்டணி உருவானதைத் தொடர்ந்து, முக்கிய மூல நாடான தென்னாப்பிரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் மந்தமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


• அதே நேரத்தில், போட்ஸ்வானா நான்கு சிறுத்தைகளை அனுப்ப முறையாக உறுதியளித்துள்ளது. மேலும், காலவரையறையை முடிவு செய்ய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கென்யாவில், பேச்சுவார்த்தைகள் பொதுவான நிலையில் உள்ளன. உடனடி இடமாற்றத்தைவிட (mmediate translocation) நீண்டகால ஒத்துழைப்பை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன.


• நாட்டின் லட்சிய இடமாற்றத் திட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்கனவே 20 சிறுத்தைகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றில், 8 சிறுத்தைகள் 2022-ல் நமீபியாவிலிருந்தும், 12 சிறுத்தைகள் 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவிலிருந்தும் கொண்டு வரப்பட்டன. அவை அனைத்தும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன.


• இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மத்தியப் பிரதேச அரசு போட்ஸ்வானாவிலிருந்து 8 புதிய சிறுத்தைகள் கொண்டு வரப்படும் என்றும், முதல் நான்கு மே மாதத்திற்குள் வரும் என்றும் அறிவித்தது. அது இன்னும் நடக்கவில்லை.


• தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) மூத்த அதிகாரி ஒருவர், இந்தத் திட்டத்திற்கான விவரங்களைத் திட்டமிட்டு வருவதாகவும், பொருத்தமான தேதிகளை நிர்ணயிக்க உயர் தூதரகம் மூலம் மற்ற நாட்டோடு தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். சம்பந்தப்பட்ட, ஒன்றிய அமைச்சர் மற்ற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதில் பணியாற்றி வருகிறார்.


• சிறுத்தைப்புலி திட்ட வழிகாட்டுதல் குழுவின் கூட்ட பதிவுகள், டிசம்பர் 13, 2023-க்குள், கென்யா, தான்சானியா, சூடான் மற்றும் பிற நாடுகளிலிருந்து அதிகமான சிறுத்தைகளை கொண்டு வருவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகக் காட்டுகின்றன. இருப்பினும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், தற்போது சூடான் அல்லது தான்சானியாவுடன் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


• 2023-ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 சிறுத்தைகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன. மேலும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தியாவின் சிறுத்தை திட்டத்திற்கு உதவி வருகின்றனர். ஆனால், தென்னாப்பிரிக்க அரசாங்கத்தில் சமீபத்திய மாற்றங்கள் அதிக சிறுத்தைகளைக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளன.


• 2022-ஆம் ஆண்டில் நமீபியாவிலிருந்து 8 சிறுத்தைகளையும், தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 சிறுத்தைகளையும் குனோ தேசிய பூங்காவிற்கு இடமாற்றம் செய்வதன் மூலம் சிறுத்தைப்புலித் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த சிறுத்தைகளில் 8 மற்றும் குனோவில் பிறந்த 5 குட்டிகள் இறந்ததன் மூலம் இந்தத் திட்டம் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது.


• இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் கண்காணிப்பதற்கும், ஆலோசனை அமைப்பாகவும் செயல்படுவதற்காக தேசிய புலி பாதுகாப்பு ஆணையத்தால் மே 2023-ல் சிறுத்தைப்புலி திட்ட வழிகாட்டுதல் (Project Steering Committee) குழு அமைக்கப்பட்டது.


• சிறுத்தைகள் மிகப் பழமையான பெரிய பூனை இனங்களில் ஒன்றாகும். அவற்றின் மூதாதையர்கள் சுமார் 8.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தனர். அவை "பாதிக்கப்படக்கூடியவை" (vulnerable) என்று பட்டியலிடப்பட்டுள்ளன. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றிய (International Union for Conservation of Nature (IUCN)) சிவப்புப் பட்டியலின்படி அவை அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன. ஆசிய சிறுத்தை மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்க சிறுத்தை என இரண்டு வகையான சிறுத்தைகள் உள்ளன. மேலும், அவை ‘மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன’’ (critically endangered) என்று பட்டியலிடப்பட்டுள்ளன.



Original article:

Share:

2025ஆம் ஆண்டு தேசிய கூட்டுறவுக் கொள்கை -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி?


ஜூலை 24 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 23 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய தேசிய கூட்டுறவுக் கொள்கையை மாற்றியமைத்து, 2025ஆம் ஆண்டிற்கான புதிய தேசிய கூட்டுறவுக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். மோடி அரசாங்கத்தின் கீழ் முக்கியத்துவம் பெற்று வரும் கூட்டுறவு அமைச்சகத்திற்கு இது ஒரு முக்கியமான படியாகும். உலகமயமாக்கல் மற்றும் புதிய தொழில்நுட்பம் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் உலகம் நிறைய மாறிவிட்டதால், இந்தப் புதுப்பிப்பு தேவை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. தேசிய கூட்டுறவுக் கொள்கை 2025 முதல் 2045 வரை, இந்தியாவின் சுதந்திரத்தின் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருக்கும். புதிய 'ஒத்துழைப்பு மூலம் செழிப்பு' (Sahkar Se Samriddhi) என்ற யோசனையின் மூலம் 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதே இந்தக் கொள்கையின் குறிக்கோள் என்று அமித் ஷா கூறினார். சுரேஷ் பிரபு தலைமையிலான 48 பேர் கொண்ட குழுவால் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டது.


2. கூட்டுறவுத் துறைக்கான நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கான ஆறு தூண்களை இந்தக் கொள்கை வரையறுத்தது. அவையாவன: அடித்தளத்தை வலுப்படுத்துதல், துடிப்பை ஊக்குவித்தல், எதிர்காலத்திற்காக கூட்டுறவு சங்கங்களைத் தயார்படுத்துதல், உள்ளடக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் அணுகலை விரிவுபடுத்துதல், புதிய துறைகளில் விரிவடைதல் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டிற்கு இளைய தலைமுறையைத் தயார்படுத்துதல் போன்றவையாகும்.


3. குறிப்பிடத்தக்க வகையில், ஐக்கிய நாடுகள் சபை 2025ஆம் ஆண்டை ‘கூட்டுறவுகள் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குகின்றன’ (Cooperatives Build a Better World) என்ற கருப்பொருளுடன் சர்வதேச கூட்டுறவு ஆண்டாக அறிவித்துள்ளதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. சர்வதேச கூட்டுறவு ஆண்டை அறிமுகப்படுத்தும் நிகழ்வு 2024 நவம்பரில் இந்தியாவில் நடைபெற்றது - 2021-ல் புதிய கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டதிலிருந்து அரசாங்கத்தின் உயர் மட்டங்களிலிருந்து கூட்டுறவுகளை மேம்படுத்துவதிலும் வலுப்படுத்துவதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது.


4. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மோடி அரசாங்கத்தால் கூட்டுறவு அமைச்சகம் ஒரு தனி அமைச்சகமாக உருவாக்கப்பட்டது. அமித்ஷாவிற்கு அமைச்சகத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது. 1979 முதல் அதுவரை, கூட்டுறவுத் துறை வேளாண் அமைச்சகத்தின் கீழ் வந்தது.


5. ஜூலை 7, 2021 அன்று மோடி தனது இரண்டாவது பதவிக்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை மேற்கொள்வதற்கு ஒரு நாள் முன்பு, அதிகாரப்பூர்வ அரசிதழில் இரண்டு பக்க அறிவிப்பு மூலம் புதிய அமைச்சகம், ஒத்துழைப்பு அமைச்சகம் (Sahkarita Mantralaya) என்று அறிவிக்கப்பட்டது. அதன் தொலைநோக்கு பார்வை ஒத்துழைப்பு மூலம் செழிப்பு என்று கூறப்பட்டது.


6. கடந்த நான்கு ஆண்டுகளில், அமைச்சகம் பல பெரிய முயற்சிகளைக் கண்டுள்ளது. அவற்றில் 2023ஆம் ஆண்டு பல மாநில கூட்டுறவு சங்கச் சட்டம் அடங்கும். இது தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (National Cooperative Exports Limited (NCEL)) உட்பட மூன்று புதிய கூட்டுறவு அமைப்புகளை அறிமுகப்படுத்தியது. இதில், ‘உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம்’ மற்றும் இரண்டு லட்சம் புதிய பல்நோக்கு முதன்மை விவசாய கடன் சங்கங்கள் ஆகியவை அடங்கும். தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development (NABARD)) முன்முயற்சியின் கீழ் காந்திநகரில் மாதிரி கூட்டுறவு கிராம முயற்சியும் தொடங்கப்பட்டது.


7. NCEL உருவாக்கம் கூட்டுறவு நிறுவனங்களுக்கான ஏற்றுமதித் துறையையும் திறந்துள்ளது. நிறுவப்பட்ட சில மாதங்களுக்குள், NCEL பல நாடுகளிலிருந்து அரிசி மற்றும் கோதுமைக்கான ஆணைகளைப் பெற்றது. அதன் மொத்த மதிப்பு ரூ. 5,000 கோடியாகும்.


8. இந்த மாத தொடக்கத்தில், குஜராத்தின் ஆனந்தில் இந்தியாவின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகமான திரிபுவன் சஹ்காரி பல்கலைக்கழகத்திற்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். மேலும், கூட்டுறவு கல்வியை மேல்நிலைப் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.


இந்தியாவில் கூட்டுறவுகளின் வரலாறு


1. கூட்டுறவுத் துறையின் வரலாறு சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே தொடங்குகிறது. எட்வர்ட் சட்டக் குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு 1904-ல் கூட்டுறவு கடன் சங்கச் சட்டம் இயற்றப்பட்டது.


2. சில ஆண்டுகளுக்குள், இந்தத் துறை வேகமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் எண்ணிக்கை 5,300 ஆகவும், அவற்றின் உறுப்பினர் எண்ணிக்கை 1911-ல் 3 லட்சத்திற்கும் அதிகமாகவும் அதிகரித்தது.


3. கூட்டுறவுகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்புடன், 1912-ஆம் ஆண்டின் கூட்டுறவு சங்கச் சட்டம் இந்தக் கூட்டுறவுகளை அமைப்பதற்கான அடிப்படை கட்டமைப்பை வழங்கும் வகையில் இயற்றப்பட்டது. இது 1914-ஆம் ஆண்டு முதல் கூட்டுறவு வீட்டுவசதி சங்கமான மெட்ராஸ் கூட்டுறவு ஒன்றியத்தின் அரசியலமைப்பிற்கு வழிவகுத்தது.


4. வங்கி நெருக்கடி மற்றும் முதல் உலகப் போருக்குப் பிறகு, கடன் கூட்டுறவுகளின் நிலை குறித்து பரிந்துரைக்க 1914-ஆம் ஆண்டில் மேக்லேகன் ஒத்துழைப்பு குழு அமைக்கப்பட்டது.


5. 1919-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம், கூட்டுறவுச் சங்கங்களின் மீது மாகாணங்களுக்குக் கட்டுப்பாட்டை வழங்கியது. 1925-ஆம் ஆண்டு பம்பாய் கூட்டுறவுச் சங்கச் சட்டம், மாகாணத்தால் இயற்றப்பட்ட முதல் சட்டமாகும்.


6. நாடு சுதந்திரம் பெறுவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு, டிசம்பர் 14, 1946 அன்று, அமுல் என்று அழைக்கப்படும் கெரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, கூட்டுறவுத் துறை ஐந்தாண்டுத் திட்டங்களில் ஒரு முக்கிய இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.


7. வர்கீஸ் குரியனின் தலைமையில் பால் கூட்டுறவு சங்கங்கள், இந்தியாவின் பால் உற்பத்தியை மிகவும் பற்றாக்குறையாக இருந்த நாட்டிலிருந்து 239 மில்லியன் டன்களுடன் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக மாற்றியது. அதைத் தொடர்ந்து 2023-24ஆம் ஆண்டில் அமெரிக்கா 103 மில்லியன் டன்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.


8. 2002-ஆம் ஆண்டில், ஏ.பி. வாஜ்பாயின் கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, கூட்டுறவுத் துறை புதிய கவனம் செலுத்தியது. இது தேசிய கூட்டுறவுக் கொள்கையை இயற்ற வழிவகுத்தது. இப்போது, 23 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு புதிய கூட்டுறவுக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது.


97வது அரசியலமைப்பு திருத்தம்


1. 97வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம், பகுதி IXB (கூட்டுறவு சங்கங்கள்) அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. கூட்டுறவு சங்கங்களை உருவாக்கும் உரிமை அரசியலமைப்பின் பிரிவு 19(1), பகுதி-3-ன் கீழ் சுதந்திர உரிமையாக (Right to Freedom) சேர்க்கப்பட்டது.


2. இது தவிர, பிரிவு 43-B (கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துதல்) இந்திய அரசியலமைப்பின் பகுதி-4-ன் கீழ் மாநில கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகளில் (Directive Principles of State Policy) ஒன்றாகவும் சேர்க்கப்பட்டது.


3. அரசியலமைப்பின் கீழ், கூட்டுறவு சங்கங்கள் மாநிலப்பட்டியலில் (state subject) உள்ளது. அவை மாநில அரசாங்கங்களின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன. ஆனால், பல சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் செயல்பாட்டுப் பகுதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரவியுள்ளன. உதாரணமாக, கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லையில் உள்ள மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் இரு மாநிலங்களிலிருந்தும் கரும்புகளை வாங்குகின்றன. மாநிலங்களுக்கு இடையேயான 2023ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) சட்டம், பல மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களை நிர்வகிக்கிறது.


01. கூட்டுறவுகள் என்றால் என்ன?


கூட்டுறவுகள் (Cooperatives) என்பது சந்தையில் கூட்டு பேரம் பேசும் சக்தியைப் பயன்படுத்த மக்களால் அடிமட்ட அளவில் உருவாக்கப்பட்ட அமைப்புகளாகும். அவர்கள் தங்கள் வளங்களை, பகிரப்பட்ட கருவிகள் அல்லது நிதிகள் போன்றவற்றை ஒன்றிணைத்து, ஒன்றாக வேலை செய்து சந்தையில் தனியாக அடைய கடினமாக இருக்கும் பொதுவான லாபத்தைப் பெறலாம். விவசாயத்தில், கூட்டுறவு பால் பண்ணைகள், சர்க்கரை ஆலைகள், நூற்பு ஆலைகள் போன்றவை தங்கள் விளைபொருட்களைச் செயலாக்க விரும்பும் விவசாயிகளின் ஒருங்கிணைந்த வளங்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.


02. இந்தியாவில் கூட்டுறவு முயற்சிகளின் 5 புள்ளிகள் என்ன?


பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், அமைச்சகம் 60 முயற்சிகளை எடுத்துள்ளதாக கூட்டுறவு அமைச்சர் கூறினார். மேலும், அனைத்து முயற்சிகளும் ஐந்து முக்கியமான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை: மக்கள், முதன்மை வேளாண் கூட்டுறவு சங்கங்கள் (primary agriculture cooperative societies (PACS)), டிஜிட்டல் மற்றும் தேசிய தளங்கள், கொள்கைகள் மற்றும் செழிப்பு போன்றவையாகும். இந்த யோசனைகள் கூட்டுறவுகளின் பணி மற்றும் இலக்குகளை வழிநடத்துகின்றன.


03. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட 2025 சர்வதேச கூட்டுறவு ஆண்டின் கருப்பொருள் என்ன?


ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச கூட்டுறவு ஆண்டிற்கான கருப்பொருள் ‘கூட்டுறவுகள் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குகின்றன’ (Cooperatives Build a Better World) என்பதாகும்.



Original article:

Share:

இந்தியாவின் ஏழ்மைக்கு எதிரான பல்பரிமாண போராட்டத்தை வடிவமைத்தல் -பரிக்ரமா சௌத்ரி

 ஒன்றிய அரசின் உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்டம் (Samaveshi Aajeevika) போன்ற உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்கள் மாநிலங்களுக்கு பாதிப்பு மையங்களை கண்டறிந்து அவற்றை இலக்காகக் கொள்ள உதவும்.


வறுமையைக் குறைக்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் நல்ல பலன்களை அளித்துள்ளன. உலக வங்கியின் திருத்தப்பட்ட வறுமைக் கோட்டின் படி, 2011 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கு இடையில், சுமார் 270 கோடி மக்கள் தீவிர வறுமையிலிருந்து வெளியே வந்துள்ளனர். இது ஜெர்மனி மற்றும் ரஷ்யாவின் மக்கள்தொகையை விட அதிகமானதாகும். இந்தக் காலத்தில் ஏழ்மையான, சாதி மற்றும் மதக் குழுக்கள் மிக வேகமாக முன்னேறின.

வறுமை என்பது பல பரிமாணங்களைக் கொண்டது என்றும், அது வெறும் பணப் பற்றாக்குறையை விட அதிகமானது என்றும் இப்போது பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் பற்றாக்குறைகளும் அடங்கும்.


இந்தியாவின் பல்பரிமாண வறுமைக் குறியீடு (Multidimensional Poverty Index (MPI)) பல வழிகளில் வறுமையை அளவிடுகிறது. இது சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் உள்ள 12 அடிப்படைத் தேவைகளைப் பார்க்கிறது. மக்கள் தங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிகளில் எவ்வாறு பற்றாக்குறையை அனுபவிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஒரு நபர் அடிப்படைத் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பூர்த்தி செய்யாவிட்டால் அவர் சமூகத்தில் மிகவும் பின்தங்கியவர் என்று கருதப்படுகிறார்.


இந்த அணுகுமுறையின் அடிப்படையில், நிதி ஆயோக்கின் விவாதக் கட்டுரை இந்தியாவில் ஏறக்குறைய 200 கோடி மக்கள் இன்னும் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. வறுமை கடுமையாக உள்ளது. மிக ஏழ்மையானவர்கள் தங்கள் 12 அடிப்படைத் தேவைகளில் பாதி தேவையைப் பூர்த்தி செய்ய போராடுகிறார்கள். இந்த மக்கள் பெரும்பாலும் மண் வீடுகளில் வசிக்கிறார்கள், அங்கு குழாய் நீர் மற்றும் சரியான சுகாதாரம் இன்னும் ஆடம்பரமாகக் கருதப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் உணவைத் தவிர்க்கிறார்கள், மேலும் ஒரு நோய் அல்லது திடீர் வாழ்க்கை நிகழ்வு கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.


மக்கள் ஒரே நேரத்தில் பல இன்னல்களை எதிர்கொள்ளும்போது, குறிப்பாக நிதி சாராத இன்னல்களை எதிர்கொள்ளும்போது, இந்தப் பிரச்சினைகள் ஒன்றையொன்று மோசமாக்கி, அவர்களை வறுமையில் சிக்க வைக்கும்.


உதாரணமாக, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் இரண்டிலும் பின்தங்கிய மக்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். உலகெங்கிலும் வறுமையில் வாடும் மக்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான பிரச்சினைகளை மீண்டும் மீண்டும் எதிர்கொள்கின்றனர். பெரும்பாலும், வறுமை ஒழிப்புக் கொள்கைகள் இந்த ஒன்றோடொன்று தொடர்புகளை மனதில் வைத்து வடிவமைக்கப்படுவதில்லை.

படிப்படியான அணுகுமுறை (Graduation Approach)


வறுமையை அளவிடுவதற்கும் ஆய்வு செய்வதற்குமான இந்த பல்முனை வழி வறுமை எதிர்ப்பு திட்டங்களை வடிவமைக்க ஒரு புதிய அணுகுமுறையையும் கோருகிறது. அரசாங்கங்களைப் பொறுத்தவரை, இது தீவிர வறுமையில் வாடும் மக்களுக்கு வறுமையில் இருந்து தப்பிப்பதற்கான கருவிகளை வழங்கும் திட்டங்களில் முதலீடு செய்வதாகும். வங்கதேசத்தை தளமாகக் கொண்ட அரசு சாரா நிறுவனமான வங்காளதேச கிராமப்புற முன்னேற்றக் குழுவின் (Bangladesh Rural Advancement Committee (BRAC) படிப்படியாக முன்னேறும் அணுகுமுறை அதைச் செய்வதற்கான ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது.


படிப்படியாக முன்னேறும் அணுகுமுறை ஏழ்மையானவர்களுக்கு தொடர்ச்சியான மற்றும் உதவிகரமான தொகுப்பை வழங்குகிறது. இதில் கால்நடைகள் அல்லது வர்த்தகத்திற்கான சிறிய பொருட்கள் போன்ற உற்பத்தி சொத்து, அவற்றை நிர்வகிப்பதற்கான பயிற்சி, அவர்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு வருடம் வரை பணம் மற்றும் அவர்களின் வருமானம் மற்றும் சேமிப்பை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல் ஆகியவை அடங்கும்.


இந்த திட்டம் இப்போது உலகளவில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இது நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டுஃப்லோ உள்ளிட்ட அப்துல் லத்தீஃப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகத்துடன் இணைந்த ஆராய்ச்சியாளர்களின் சீரற்ற மதிப்பீடுகளை பின்பற்றி, 43 நாடுகளில் மில்லியன் கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது.


உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள், படிப்படியாக முன்னேறும் அணுகுமுறையின் பல-கூறு ஆதரவு தொகுப்பைப் பெற்றுள்ளன. அவை அனைத்து முக்கிய பல்பரிமாண வறுமைக் குறிகாட்டிகளாலும் (Multidimensional Poverty Index (MPI)) குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெற்றன.



அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.


வாழ்க்கைத் தரம்: இந்த மாதிரி உணவு, எரிபொருள் மற்றும் சொத்துக்களுக்கான வீட்டுச் செலவினங்களை அதிகரித்தது - இவை அனைத்தும் பல்பரிமாண வறுமைக் குறிகாட்டிகளின் வாழ்க்கைத் தர பரிமாணத்தின் முக்கிய கூறுகளாகும். வங்கதேசத்தில், இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கிராமங்களில் நடுத்தரக் குடும்பங்களைப் போலவே, பலர் நிலத்தையும் கடையையும் வைத்திருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஏமனில் கூட, மக்கள் தங்கள் வீடுகளைப் புதுப்பிப்பதில் அதிக செலவு செய்தனர். இது அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு அவர்களிடம் மிச்சப்படுத்த பணம் இருப்பதாகக் கூறியது. குடும்பங்கள் சிறந்த நிதிப் பாதுகாப்பையும் குழந்தைகளுக்கு அதிகம் செலவளித்ததாக தெரிவித்தன. இந்தியாவில், குடும்பங்கள் அதிக சொத்துக்களை வைத்திருந்தன மற்றும் முறைசாரா கடனைச் சார்ந்திருப்பதைக் குறைத்தன.


சுகாதாரம்: உணவில் படிப்படியாக முன்னேறும் அணுகுமுறை மக்களுக்கு அதிக உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பைப் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இது சிறந்த ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. ஆப்கானிஸ்தானில், இந்தத் திட்டம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கை 8% குறைத்தது. பாகிஸ்தான், இந்தியா, ஹோண்டுராஸ், கானா, எத்தியோப்பியா மற்றும் பெருவில் நடத்தப்பட்ட ஆய்வுகள், மக்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்ததாகக் கண்டறிந்துள்ளன. இந்தியாவில், இந்தத் திட்டம் உணவுப் பாதுகாப்பிற்கு பெரிதும் உதவியது என்றும், இந்தத் திட்டத்தில் 99% குடும்பங்கள் உணவைத் தவிர்க்கவில்லை என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.


கல்வி: படிப்படியாக முன்னேறும் அணுகுமுறையின் சில மாற்றங்கள் குழந்தைகளிடையே பள்ளி சேர்க்கை விகிதங்களையும் அதிகரித்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். 2016 மற்றும் 2018 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களுக்கு 7 சதவீத புள்ளிகள் மற்றும் பெண்களுக்கு 5 சதவீத புள்ளிகள் பள்ளி சேர்க்கை அதிகரித்தது கண்டறியப்பட்டது.

படிப்படியாக முன்னேறும் அணுகுமுறை இந்தியாவின் வறுமை அளவீடுகளுடன் நன்றாகப் பொருந்துகிறது. இது மாநில மற்றும் மத்திய அரசுகள் பல வழிகளில் வறுமையை எதிர்த்துப் போராட சிறந்த திட்டங்களை உருவாக்க உதவுகிறது.


பொதுவான பற்றாக்குறைகள்


இது கொள்கை வகுப்பாளர்களுக்கு அவசர கவனம் தேவைப்படும் முக்கியப் பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது. உதாரணமாக, இந்தியாவில் மிகவும் பொதுவான பற்றாக்குறை தொகுப்பு நான்கு பிரிவுகளில் உள்ளது: ஊட்டச்சத்து, வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் சுத்தமான சமையல் எரிபொருள் அடங்கும். இந்தியாவில் 34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இவற்றைப் பெறுவதில்லை. இந்த பகுதிகளை சரிசெய்யும் கொள்கைகள் வறுமை ஒழிப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.


கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா குழந்தைகளின் ஊட்டச்சத்து, தாய்மார்களின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மற்றும் வறுமையில் வாழும் மக்களுக்கான நிதி உள்ளடக்கம் ஆகியவற்றை மேம்படுத்த பல கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அது வெற்றிகரமாகவும் இருந்துள்ளது. ஊட்டச்சத்து இயக்கம் (Poshan Abhiyan) போன்ற முன்முயற்சிகள் சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதில், குறிப்பாக ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளன. மேலும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PM Awas Yojana) மலிவு வீட்டுவசதி மூலம் மில்லியன் கணக்கானவர்களை அடைந்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் வெவ்வேறு அமைச்சகங்களால் வழிநடத்தப்படுகின்றன. படிப்படியாக முன்னேறும் அணுகுமுறை போன்ற பல்முகத் திட்டம் கொள்கைத் திட்டமிடுபவர்களுக்கு இந்த இலக்குகளை ஒரு ஒருங்கிணைந்த உத்தியின் மூலம் அடைவதை எளிதாக்குகிறது.


2024-ஆம் ஆண்டில், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், BRAC, The Nudge Institute மற்றும் Abdul Latif Jameel Poverty Action Lab தெற்காசியா உள்ளிட்ட கூட்டாளர்களின் கூட்டமைப்புடன் 11 மாநிலங்களில் உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்ட முன்முயற்சியை முன்னோடியாகக் கொண்டு ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்தது. படிப்படியாக முன்னேறும் அணுகுமுறை மாதிரியை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திட்டம், கிராமப்புற பெண்கள் தொழில்முனைவோராக மாற்றி, அவர்களை தன்னிறைவுப் பாதையில் கொண்டு செல்ல உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


மாநிலங்கள் பல பரிமாண வறுமை குறியீட்டை பயன்படுத்தி அதிக வறுமை நிலைகள் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு, கூட்டுறவு கூட்டாட்சிக்கு இணங்க, வறுமை மற்றும் அதன் பல்வேறு பரிமாணங்களை திறம்பட எதிர்த்துப் போராட உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்டம் (Samaveshi Aajeevika) போன்ற ஒருங்கிணைந்த தீர்வுகளுடன் அவற்றை நிவர்த்தி செய்யலாம்.


பரிக்ரம சவுத்ரி, J-PAL தெற்காசியாவின் கொள்கைப் பணிகளின் தலைவராக உள்ளார்.



Original article:

Share:

கடந்த காலத்திலிருந்து படிப்பினைகள் : சோழர் மரபு பற்றி . . .

 சோழர் மரபில் பிரமாண்ட கோவில்கள் மட்டுமல்ல, இது நல்லாட்சியின் வலுவான பாரம்பரியத்தையும் உள்ளடக்கியது.


பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு பயணம் ஒரு நுட்பமான அரசியல் செய்தியை உள்ளடக்கியிருந்தது. கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற வருடாந்திர ஆடி திருவாதிரை விழாவின் நிறைவு விழாவில், ராஜேந்திர சோழன் I-இன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் உரையாற்றினார். அவர் தனது உரையில், சோழப் பேரரசர் ராஜேந்திர சோழன் மற்றும் அவரது தந்தை ராஜராஜ சோழன் I-இன் பாரம்பரியத்தை மையப்படுத்தி, பண்டைய சோழர்களின் கீழ் இருந்த இந்தியாவைப் போலவே, தற்கால இந்தியாவும் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதிலும், இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும் முனைப்புடன் செயல்படும் என்பதை வலியுறுத்தினார். இந்த விழா, ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியாவிற்கு மேற்கொண்ட கடல் பயணத்தின் 1,000 ஆண்டு நிறைவையும், உலக பாரம்பரிய தலமான புகழ்பெற்ற கோவிலின் கட்டுமானத்தையும் நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சோழ வம்சத்தின் மகத்துவத்தை நினைவுகூர்வது கவர்ச்சிகரமானது, ஆனால் சோழ ஆட்சியின் மற்ற சாதாரண அம்சங்களான நீர் மேலாண்மை, வரி மற்றும் நில வருவாய் வசூல், மற்றும் ஜனநாயக செயல்முறைகள் ஆகியவை நவீன பொருத்தத்திற்கு உட்பட்டவை.


தென்கிழக்கு ஆசியாவிற்கு ராஜேந்திர சோழனின் கடல் பயணத்திலிருந்து 1,000 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் இந்த விழா கொண்டாடியது. தற்போது உலக பாரம்பரிய தளமாக இருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்தில் புகழ்பெற்ற கோவிலின் கட்டுமானத்தையும் இது குறித்தது. சோழ வம்சத்தின் மகத்துவம் நினைவில் கொள்வது சுவாரஸ்யமானது. இருப்பினும், இன்று பொருத்தமான சோழ ஆட்சியின் அன்றாட அம்சங்களும் உள்ளன. இவற்றில் நீர் மேலாண்மை, வரி மற்றும் நில வருவாய் அமைப்புகள் மற்றும் ஜனநாயக செயல்முறைகள் ஆகியவை அடங்கும்.


உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில், குறிப்பாக, சோழர்கள் பல கற்றல்களைப் பெற்றுள்ளனர். சமீபத்திய மாதங்களில், குடிமைக் கட்டமைப்புகள் சம்பந்தப்பட்ட அபாயகரமான விபத்துகள் நடந்துள்ளன. பிரகதீஸ்வரர் கோயில்கள் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக வலுவாக உள்ளன. அவற்றின் மீள்தன்மை நமக்கு மதிப்புமிக்க பாடங்களைக் கற்பிக்கக்கூடும்.


கடந்த 200 ஆண்டுகளில் தெற்கு தீபகற்பம் பல பூகம்பங்களின் மையமாக இருந்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கோயில் மேல்கட்டமைப்புகள் நவீன கட்டிட நுட்பங்களுக்கான தடயங்களைக் கொண்டிருப்பதாக நம்புகின்றனர். இந்த நுட்பங்கள் பூகம்பங்களுக்கு கட்டிடங்களின் எதிர்ப்பை மேம்படுத்த உதவும்.


இந்த கோயில்களின் கட்டமைப்பு நிலைத்தன்மையை கவனமாக ஆய்வு செய்வது இன்று மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும். சோழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், இந்தியா அவர்களின் நிர்வாக வெற்றியிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம்.


ஒரு முக்கிய பகுதி நீர்வள மேலாண்மை. கங்கைகொண்ட சோழபுரம் அமைந்துள்ள காவிரி டெல்டா பெரும்பாலும் வெள்ளத்தை எதிர்கொள்கிறது. எதிர்கால பயன்பாட்டிற்காக சேமிக்கப்படாமல் அதிக அளவு நீர் கடலில் கலக்கிறது. பற்றாக்குறை காலங்களில் இந்த நீர் உதவக்கூடும்.


அரசியலமைப்பின் 73 மற்றும் 74-வது திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இருப்பினும், பல உள்ளாட்சி அமைப்புகள், முக்கிய நகரங்களில்கூட, இன்னும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் செயல்படுகின்றன.


இந்த கொண்டாட்டம் அடிமட்ட ஜனநாயக அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இராஜராஜ சோழன் மற்றும் இராஜேந்திர சோழனின் சிலைகளை ஒன்றிய அரசு நிறுவும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இது நாட்டிற்கு அதன் வரலாற்று வேர்களை நினைவூட்டுவதாகும்.


இருப்பினும், இந்த முயற்சி சோழர்களின் வலுவான நிர்வாகத்தை நாட்டிற்கு நினைவூட்டினால் அது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போதைய தலைவர்களை நீண்டகால நிர்வாகக் குறைபாடுகளை சரிசெய்ய இது ஊக்குவிக்க வேண்டும்.



Original article:

Share:

ஆபத்தான கலாச்சாரம் : பாதுகாப்பு மற்றும் பெருந்திரள் கூடுகை குறித்து . . .

 வழக்கமாகத் திட்டமிடப்பட்ட மக்கள் கூட்டம் என்ற கருத்தை ஒழிக்க வேண்டும்.


ஒரு நாள் இடைவெளியில், வட இந்தியாவில் இரண்டு யாத்திரைகள் குழப்பத்தை எதிர்கொண்டன. ஜூலை 27, 2025 அன்று, ஹரித்வாரின் மான்சா தேவி சன்னதிக்குச் செல்லும் செங்குத்தான படிக்கட்டில் எட்டு பேர் இறந்தனர். அறுந்து விழுந்த மின்கம்பி இருப்பதாக வதந்தி பரவிய பிறகு இது நடந்தது. அடுத்த நாள், பராபங்கியில் உள்ள அவசனேஷ்வர் கோவிலில், குரங்குகள் மேல்நிலை கேபிளை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது பீதியை ஏற்படுத்தியதுடன் இரண்டு பேரைக் கொன்றது. இரண்டு சம்பவங்களும் மின்சாரம் தாக்கும் என்ற அச்சத்தால் ஏற்பட்டவை ஆகும்.


கோயில்களில் இதுபோன்ற ஆபத்துகள் புதிதல்ல. கடைகளில் மூடப்பட்ட தற்காலிக வயரிங் மற்றும் அதிக சுமை கொண்ட மின்மாற்றிகள் கண்காட்சிகளில் பொதுவானவையாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இரண்டு ஆலயங்களிலும் தானியங்கி மின்வெட்டு அமைப்பு இல்லை. மேலும், தவறான தகவல்களைத் தடுக்க பொது முகவரி அமைப்பும் இல்லை. ஹரித்வார் விசாரணையில் பழைய பரிந்துரைகள் மீண்டும் நிகழ வாய்ப்புள்ளது. இவற்றில் நிலத்தடி கேபிள் இணைப்பு மற்றும் நிகழ்நேர மின்னழுத்தக் கண்காணிப்பு ஆகியவை அடங்கும். இருப்பினும், மின்சாரம் தாக்கும் அச்சுறுத்தல் தற்செயலானது. சமீபத்திய நிகழ்வுகளில் (பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில்) இரண்டு பெரிய நெரிசல்களைத் தவிர, இதுபோன்ற அனைத்து துயரங்களும் மதப் பெருந்திரள் கூட்டங்களில் அல்லது அவற்றில் கலந்துகொள்ளும் போது நிகழ்ந்தன.


பல வழிகாட்டுதல்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும் இந்த துயரங்கள் நிகழ்கின்றன. அதிகாரிகள் ஆபத்துக்கு உணர்திறன் இல்லாதவர்களாக மாறிவிட்டதால் இது நிகழ்கிறது. உத்தரகாண்டில் சார் தாம் (Char Dham) விழாவிற்கான கூட்ட மேலாண்மை கையேடு உள்ளது. மேலும் NDMA-வின் வழிகாட்டுதல்கள் ஒவ்வொரு நிகழ்வும் உள்ளடக்க திறனை கணக்கிட வேண்டும், நுழைவை படிப்படியாக அனுமதிக்க வேண்டும், பல மாற்று வெளியேறும் பாதைகளை பராமரிக்க வேண்டும், மற்றும் பயிற்சிகளை நடத்த வேண்டும் என்று கூறுகின்றன. ஆயினும், மன்சா தேவியில், நுழைவு மற்றும் வெளியேறுதலாக இரண்டிற்குமாக செயல்படும் படிக்கட்டு, திட்டமில்லாமல் பயன்படுத்தப்பட்டது, மேலும் ஒரே மாற்று பாதை மிகவும் குறைவான உள்ளடக்க திறனை மட்டுமே கொண்டிருந்தது.


உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசத்தில், பதிலளிப்பு கட்டமைப்பு மறுசீரமைப்பை விட இழப்பீட்டை மையமாகக் கொண்டிருந்தது. NDMA விதிமுறைகள் சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்பட வேண்டும், உயிர்களைப் பாதுகாக்கத் தவறும் தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது வணிகங்களுக்கு கடுமையான விளைவுகள் இருக்க வேண்டும். தற்போது, மாநிலங்கள் இந்த விதிமுறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விதிகளை மட்டுமே பின்பற்றுகின்றன, மேலும் கோயில் அறக்கட்டளைகள் பெரும்பாலும் இவற்றை விருப்பமாகக் கருதுகின்றன, ஏனெனில் புனித யாத்ரீக வசதிகள் பல கட்டிட விதிகளில் தொண்டு விலக்குகளின் கீழ் வருகின்றன. வழக்கமான ‘தரிசனத்திற்கு’ பாதுகாப்பு சான்றிதழ் தேவையில்லை, புனிதர்களின் தினசரி வருகை விளையாட்டு மைதானத்தின் கூட்டத்தைவிட அதிகமாக இருந்தாலும் கூட. மாநிலங்கள் தற்காலிக தன்னார்வலர்கள் மற்றும் பயிற்சியற்ற காவலர்களை நம்பி கூட்டத்தை நிர்வகிக்கின்றன. இருப்பினும், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்ட ஆண்டு பயிற்சிகள் வழக்கமான வழிபாட்டிற்கு அரிதாகவே நடத்தப்படுகின்றன, மேலும் நிரந்தர உள்கட்டமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் பெரும்பாலும் திருவிழாக்களுக்கு திருப்பி விடப்படுகின்றன. மதம் சார்ந்தவையோ அல்லது வேறு வகையிலோ, எளிமையாக திட்டமிடப்பட்ட அல்லது மலிவான பெருங்கூட்ட நிகழ்வு என்ற கருத்தை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கூட்டத்தின் அளவு முன்நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டும்போது, ஒற்றை சம்பவ-கட்டளை கட்டமைப்பு அமலுக்கு வர வேண்டும். அதிகாரிகள் மேல்நிலை LiDAR மற்றும் AI கேமராக்களைப் பயன்படுத்தி கூட்ட அடர்த்தியைக் கணக்கிட வேண்டும், நிகழ்நேர எச்சரிக்கைகளுடன் போக்குவரத்தை திருப்பிவிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ உதவ வேண்டும். இறுதியாக, மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்: இடங்கள் நுழைவாயில்களில் திறன் அட்டவணைகளை வெளியிட வேண்டும், காலாண்டு பயிற்சிகளை நடத்தி நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும், பாதுகாப்பு கலாசாரத்தை இயல்பாக்க வேண்டும், மற்றும் தன்னார்வலர்களுக்கு அடிப்படை உயிர் காக்கும் திறன்கள் மற்றும் கூட்ட உளவியல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.



Original article:

Share:

உலகளாவிய குறைமின்கடத்தி வரிசையை மறுவடிவமைத்தல் -வித்யாசங்கர் சத்யா

 இந்தியா-அமெரிக்கா-தைவான் சிப் கூட்டாண்மை முக்கியமானது, ஏனெனில் இது ஒவ்வொரு நாட்டின் தனித்துவமான பலங்களையும் ஒன்றிணைக்கிறது.   


உலகளாவிய பதட்டங்கள் அதிகரித்து, தொழில்நுட்பம் ஒரு முக்கிய சக்தி ஆதாரமாக மாறும்போது, குறைமின்கடத்திகள் பெரும்பாலும் 'புதிய எண்ணெய்' என்று அழைக்கப்படுகின்றன. 21ஆம் நூற்றாண்டில் பொருளாதார பாதுகாப்பின் மையமாக மாறியுள்ளன. இந்தியா, அமெரிக்கா மற்றும் தைவான் இடையேயான மூன்று வழி கூட்டாண்மை ஒரு வலுவான, நம்பகமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட உலகளாவிய சிப் விநியோகச் சங்கிலியை உருவாக்குவதற்கு முக்கியமாகும்.


பல ஆண்டுகளாக, தைவான் குறைமின்கடத்தித் தொழிலை வழிநடத்தி வருகிறது. முக்கியமாக TSMC மூலம், இது இப்போது அமெரிக்காவின் அரிசோனாவில் எட்டு புதிய சிப் தொழிற்சாலைகளை சிப்ஸ் சட்டத்தின் உதவியுடன் கட்டி வருகிறது. அமெரிக்கா அதன் சொந்த தொழிற்சாலைகள் இல்லாமல் சிப் வடிவமைப்பிலும், அறிவுசார் சொத்து மற்றும் மின்னணு வடிவமைப்பு கருவிகள் போன்ற துறைகளிலும் முன்னணியில் உள்ளது. திறமையான நிபுணர்களின் பெரிய குழு மற்றும் வளர்ந்து வரும் மின்னணுத் துறையுடன், இந்தியா, சிப் துறையின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக சிப்களின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் சோதனை ஆகியவற்றில் விரைவாக வலுவாகி வருகிறது.


உலகின் குறைமின்கடத்தி வடிவமைப்பு திறமையாளர்களில் 20%-க்கும் அதிகமானோர் இந்தியாவில் ஏற்கனவே உள்ளனர். இன்டெல், குவால்காம் (இந்தியா அதன் ஐபியில் 60% பங்களிக்கிறது), ஏஎம்டி மற்றும் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவில் சிப் வடிவமைப்பு மற்றும் சோதனை மையங்களைக் கொண்டுள்ளன. பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் நொய்டா போன்ற நகரங்களில் உலகளவில் ஸ்மார்ட்போன்கள், தரவு மையங்கள் மற்றும் செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்படும் சிப்களில் பணிபுரியும் பல மேம்பட்ட வடிவமைப்பு குழுக்கள் உள்ளன. சுருக்கமாக, உலகம் பயன்படுத்தும் சிப்களை இந்தியா வடிவமைக்கிறது.


பெரிய வாய்ப்பு என்ன? சிப் துறையில் இந்தியா ஒரு முழுமையான நாடாக மாற முடியும். இதன் பொருள் தைவானுடன் நெருக்கமாக பணியாற்றுவது ஆகும். வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை அணுகுவது மற்றும் ஐபி பாதுகாப்பு, இரட்டைப் பயன்பாட்டு தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான விதிகளை மேம்படுத்துவது இதில் அடங்கும்.


இந்தியா, அமெரிக்கா மற்றும் தைவான் இடையேயான கூட்டாண்மை மூன்று பலங்களை ஒன்றிணைக்கிறது. அவை: தைவானின் மேம்பட்ட உற்பத்தி, அமெரிக்காவின் அதிநவீன வடிவமைப்பு மற்றும் இந்தியாவின் முழுமையான வடிவமைப்பு திறன்கள் மற்றும் பெரிய திறமைக் குழு போன்றவை ஆகும். இந்த குழுப்பணி ஆபத்தான பகுதிகளை குறிப்பாக சீனா சம்பந்தப்பட்டவற்றை  சார்ந்திருப்பதைக் குறைத்து பலவீனங்களை பலங்களாக மாற்றும்.


இந்தியா நிறைய நன்மைகளை பெற உள்ளது. சிப்களை வடிவமைப்பதைத் தாண்டி, இந்தியா சிப் உருவாக்கத்திற்கு நம்பகமான இடமாக மாறி வருகிறது. மைக்ரான், ரெனேசாஸ், போஷ், டவர் குரூப் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்கின்றன. மேலும், இந்தியா உலகளாவிய ஏற்றுமதி கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. இது வாஸ்ஸெனார் ஏற்பாட்டில் இணைந்துள்ளது. இது நம்பகமான நெறிமுறைகளைப் பயன்படுத்துகிறது மற்றும் பாதுகாப்பான இரட்டைப் பயன்பாட்டு தொழில்நுட்பங்களை சரிபார்க்கும் திறனை வளர்த்து வருகிறது.  


இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவை குறைமின்கடத்திகளுக்கான நம்பகமான இடமாக காண உதவுகின்றன. மேலும், தைவான் மற்றும் அமெரிக்க நிறுவனங்களுடன் கூட்டு உற்பத்தி ஒப்பந்தங்களுக்கு கதவுகளைத் திறக்கின்றன.


அமெரிக்கா எல்லாவற்றையும் உள்நாட்டிலேயே செய்வதில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. CHIPS மற்றும் அறிவியல் சட்டம் ஒரு வலுவான படியாக இருந்தாலும், உள்நாட்டில் அனைத்து வசதிகளையும் உருவாக்குவது விலை உயர்ந்தது மற்றும் மெதுவானது. இந்தியாவின் மலிவு மற்றும் நம்பகமான சிப் வடிவமைப்பு மற்றும் சோதனைத் திறன்களைப் பயன்படுத்துவது அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும் காப்புப்பிரதியையும் தருகிறது. சில செயல்பாடுகளை இந்தியாவிற்கு நகர்த்துவது விநியோக நேரங்களையும் குறைக்கிறது மற்றும் போக்குவரத்து அபாயங்களைக் குறைக்கிறது. அதே நேரத்தில் அரசியல் ரீதியாக நிலையற்ற கிழக்கு ஆசியப் பகுதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது.


தைவானுக்கு, சில சிப் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றுவது ஒரு பாதுகாப்பு முறையைச் சேர்க்கிறது. உலகின் மேம்பட்ட சிப்களில் 90%-க்கும் அதிகமானவற்றை தைவான் தயாரிப்பதால், செயல்முறையின் சில பகுதிகளை இந்தியாவிற்கு நகர்த்துவது கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது. தைவானின் தொழில் குழுவான TEEMA ஏற்கனவே இந்தியாவின் வளர்ந்து வரும் சிப் மையங்களான தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் கூட்டாண்மைகளைப் பார்த்து வருகிறது.


இந்தியா மலிவான இயக்கச் செலவுகளை (கிழக்கு ஆசியாவை விட 30–40% குறைவாக), திறமையான ஆங்கிலம் பேசும் பொறியாளர்கள் மற்றும் ஜனநாயக மற்றும் அறிவுசார் சொத்து-நட்பு மதிப்புகளுடன் இணைந்த சட்ட அமைப்பை வழங்குகிறது. அமெரிக்கா மற்றும் தைவான் ஆகிய இரு நாடுகளுக்கும், இந்த நடவடிக்கை இருப்பிடத்தைப் பற்றியது மட்டுமல்ல. இது நம்பகமான கூட்டாளர்களுடன் பணிபுரிவது பற்றியது ஆகும்.


இந்தக் கூட்டாண்மை வெறும் பொருளாதார நன்மைகளுக்காக மட்டுமல்ல. உலகின் முக்கியமான தொழில்நுட்ப அமைப்புகள் ஜனநாயக நாடுகளால் கட்டமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்பான வடிவமைப்பு, பாதுகாப்பான சிப் உற்பத்தி மற்றும் பொதுமக்கள் மற்றும் இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களை கவனமாகக் கையாள்வதற்கான விதிகளை அமைப்பதிலும் இது கவனம் செலுத்துகிறது. எந்தவொரு நாடும், குறிப்பாக சர்வாதிகார இலக்குகளைக் கொண்ட ஒரு நாடு, குறைக்கடத்திகளின் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்துவதைத் தடுப்பதே இதன் குறிக்கோள் ஆகும்.


இந்தக் கனவை நனவாக்க, வெற்று கூட்டங்களுக்கு மேல் நமக்குத் தேவை உருவாகியுள்ளது. அவை:


1. முதலீடு மற்றும் மென்மையான ஒத்துழைப்பை ஊக்குவிக்க ஒரு முத்தரப்பு குறைமின்கடத்தி அமைப்பு.


2. அடுத்த தலைமுறை குறைமின்கடத்தி தொழில்நுட்பத்தை உருவாக்க உதவும் ஒரு கூட்டுக் கண்டுபிடிப்பு நிதி.


3.  நிர்வகிப்பதற்கான பொதுவான விதிகள் மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் தேவை. இதனால் தொழில்நுட்பம் எல்லைகளைக் கடந்து செல்ல வாய்ப்பு உள்ளது.


4. நம்பகமான, வெளிப்படையான மற்றும் மீள்தன்மை கொண்ட சிப் விநியோகச் சங்கிலிகளுக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு.


இந்தியா-அமெரிக்கா-தைவான் ஒத்துழைப்பு ஒரு தூதரக முழக்கம் அல்ல. இது ஒரு சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த தொழில்நுட்ப எதிர்காலத்திற்கான இராஜதந்திர திட்டமாகும். சிலிக்கான் யுகம் ஒரு ஒற்றை தோல்வி புள்ளியால் பணயம் வைக்கப்படக் கூடாது. ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து, முன்னேற்றத்தை துரிதப்படுத்த முதலீட்டு அளவில் இதை உருவாக்க வேண்டிய நேரம் இது.


வித்யாஷங்கர் சத்யா, எழுத்தாளர் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கொள்கை ஆராய்ச்சியாளர், தி பசிபிக் மன்றத்தில் உறுப்பினராக உள்ளார்.



Original article:

Share:

இந்தியாவின் எரிசக்தி மாற்றத்தைப் புரிந்துகொள்ளுதல். -குஷன்குர் டே & இந்திரஜித் பானர்ஜி

 தூய எரிசக்தி தொழில்நுட்பத்தை ஆதரிப்பதற்கும் நீண்டகால எரிசக்தி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் பசுமை நிதி முக்கியமானது.


உலக பொருளாதார மன்றம் (The World Economic Forum (WEF)), ஆக்சென்ச்சருடன் இணைந்து, சமீபத்தில் 'பயனுள்ள எரிசக்தி மாற்றத்தை வளர்ப்பது' (Fostering Effective Energy Transition’) என்ற அறிக்கையை வெளியிட்டது. இது 118 நாடுகளின் எரிசக்தி மாற்ற குறியீட்டு (Energy Transition Index (ETI)) மதிப்பெண்களையும், அவற்றின் பலங்கள், வாய்ப்புகள் மற்றும் தூய்மையான எரிசக்திக்கு மாறுவதில் உள்ள சவால்களையும் காட்டுகிறது.


இந்த அறிக்கையின்படி, இந்தியா 2025-ஆம் ஆண்டில் 53.3 ETI மதிப்பெண்ணுடன் 71வது இடத்தைப் பிடித்தது. இது 2024-ல் 63வது இடத்தில் இருந்து சரிந்தது. ஸ்வீடன் 77.5 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்தது.


ஆற்றல் செயல்திறனை மேம்படுத்துதல், தூய்மையான எரிசக்தியில் முதலீடு செய்தல் மற்றும் ஆதரவான எரிசக்தி கொள்கைகளை உருவாக்குதல் ஆகியவற்றில் இந்தியா நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இருப்பினும், சில ஆழமாக வேரூன்றிய சிக்கல்கள் இன்னும் தூய்மையான எரிசக்திக்கு மாறுவதில் அதன் முன்னேற்றத்தை மெதுவாக்குகின்றன.

புதைபடிவ எரிபொருள் சார்பு


இந்தியா அதன் புதைபடிவ எரிபொருட்களின் அதிக பயன்பாடு மற்றும் சுத்தமான எரிசக்திக்கான சமமற்ற அணுகல் ஆகியவற்றால் இன்னும் பெரிய சவால்களை எதிர்கொள்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாக இருந்தாலும் (1.77 எக்ஸாஜூல்கள்), சீனா (13.9 EJ) மற்றும் அமெரிக்காவிற்குப் (6.65 EJ) பிறகு, அதன் நிலக்கரி பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. 1998-ல் 6.53 EJ-லிருந்து 202-ல் 21.98 EJ ஆக, ஆண்டுக்கு 5% என்ற அளவில் வளர்ந்து வருகிறது. மேலும், விவசாயத்தில் பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கு இடையில் அதிகரித்துள்ளது.


கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீடுகளுக்கு இடையே சுத்தமான சமையல் எரிபொருளை அணுகுவதில் இடைவெளி உள்ளது. இதன் காரணமாக, கிராமங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் உள்ள மக்கள் பெரும்பாலும் எரிபொருள்களின் கலவையைப் பயன்படுத்துகின்றனர். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா ஏழை வீடுகளுக்கு சுத்தமான சமையல் எரிபொருளைப் பெற உதவியது. ஆனால், பலர் இன்னும் அதைப் பயன்படுத்துவதில் சிரமப்படுகிறார்கள். ஏனெனில், அது மிகவும் விலை உயர்ந்ததாகவோ அல்லது சிரமமானததாகவோ உள்ளது.


சுத்தமான ஆற்றலுக்கு சீரான மாற்றத்தை உறுதி செய்வதற்கு ஒரே தீர்வு (‘one-size-fits-all’) அனைவருக்கும் வேலை செய்யாது. ஏனென்றால், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகள், பெரிய தொழில்கள், விவசாயம் மற்றும் சிறு வணிகங்களுக்கு இடையே பயன்பாட்டின் எளிமை மற்றும் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் ஆற்றல் அணுகலில் வேறுபாடுகள் உள்ளன.


மாற்றத்தை ஊக்குவித்தல்


புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இந்தியாவை தூய்மையான ஆதாரங்களுக்கு திறம்பட மாற்ற உதவும். இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 2009-ல் 48 GW-லிருந்து 2024-ல் சுமார் 204 GW ஆக வளர்ந்தது.  உலகளாவிய அறிக்கைகள் இந்தியா சூரிய மின் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் என்றும், 2025–2029-ஆம் ஆண்டில் சூரிய PV திறன் 188 முதல் 278 GW வரை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த மாற்றத்தின் போது ஏற்படும் அபாயங்களைக் குறைக்க, நிலையான மின்சார விநியோகத்தை உறுதி செய்தல், சேமிப்பை மேம்படுத்துதல், இடைக்கணிப்பிகளை உருவாக்குதல் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு ஒரு தனித்த மின் அமைப்பு தீர்வுகளை கொண்டு வருதல் ஆகியவை முக்கியம். பிரதமரின் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana) போன்ற அரசுத் திட்டங்களுக்கு சிறந்த கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வு தேவை. இதனால் அதிகமான வீடுகள் தூய ஆற்றலுக்கு மாற உதவும்.


சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு பசுமை நிதி முக்கியமானது. உதாரணமாக, தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன் (National Green Hydrogen Mission) (2023) ஒவ்வொரு மாநிலத்தின் தொழில்துறை பலங்களின் அடிப்படையில் சிறப்பு நிதி ஆதரவை வழங்குகிறது.


தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியம் எரிசக்தி திட்டங்களின் செலவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் மற்றும் நிதி அபாயங்களைக் குறைக்க உதவ வேண்டும்.


எரிசக்தித் துறையில் நீண்டகால முதலீடுகளை ஈர்க்க நிலையான மற்றும் நெகிழ்வான கொள்கை கட்டமைப்புகள் தேவை.


குஷன்குர் டே டே ஐஐஎம் லக்னோவில் இணைப் பேராசிரியராகவும், பானர்ஜி ஐஐஎம் அகமதாபாத்தில் கல்வி ஆராய்ச்சியாளராகவும் உள்ளனர்.



Original article:

Share: