சர்வதேச நாணய நிதிநயத்தின் உலக பொருளாதார கண்ணோட்டம் -ரோஷ்னி யாதவ்

 சில நாட்களுக்கு முன்னர், சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)) தனது உலக பொருளாதார கண்ணோட்டத்தின் (World Economic Outlook (WEO)) புதுப்பிப்பை வெளியிட்டது. இந்த அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள் என்ன? இந்தியாவின் வளர்ச்சிப் பாதையைப் பற்றி அது என்ன கூறுகிறது?


தற்போதைய செய்தி


ஜூலை 29 அன்று, சர்வதேச நாணய நிதியம் தனது உலகப் பொருளாதார கண்ணோட்டத்தின் (World Economic Outlook (WEO)) சமீபத்திய புதுப்பிப்பை வெளியிட்டது. WEO என்பது IMF-ன் அளவுகோல் வெளியீடாகும். ஏனெனில் இது உலகப் பொருளாதாரத்தின் விரிவான படத்தையும் தனிப்பட்ட நாடுகளின் விவரங்களையும் வழங்குகிறது. இந்த சூழலில், WEO பற்றி தெரிந்துகொள்வது, அதன் சிறப்பம்சங்கள் பற்றி அறிவது முக்கியமாகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. சர்வதேச நாணய நிதியம் உலக பொருளாதாரக் கண்ணோட்டத்தை ஆண்டுக்கு இரண்டு முறை, ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளியிடுகிறது. இது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களிலும் புதுப்பிப்புகளை வழங்குகிறது. ஜூலை 29-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆவணம், ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட உலக பொருளாதாரக் கண்ணோட்டத்தின் ஜூலை மாத புதுப்பிப்பாகும்.


2. ‘உலகளாவிய பொருளாதாரம்: தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் பலவீனமான மீள்தன்மை’ என்பது புதுப்பிக்கப்பட்ட உலக பொருளாதாரக்  கண்ணோட்டத்தின் முக்கிய செய்தி அதன் தலைப்பில் காட்டப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து இது இரண்டு முக்கியமான விவகாரங்களை வழங்குகிறது.


3. முதலாவதாக, உலகப் பொருளாதாரம் பலவீனமாக இருந்தாலும், மீள்தன்மையுடன் இருப்பதை நிரூபித்துள்ளது. இரண்டாவதாக, எதிர்காலக் கண்ணோட்டம் தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மையால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


4. எல்லா புரட்சிகளையும் (கோவிட்-19 தொற்றுநோய், ரஷ்யா-உக்ரைன் மோதல், மற்றும் இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட கட்டணத் தாக்குதல் போன்றவை) மீறி, உலகப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைய முடிந்துள்ளது. இதுவே மீள்தன்மையின் (resilience) பொருளாகும்.


5. சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய புதுப்பிப்பின்படி, “உலகளாவிய வளர்ச்சி 2025-ஆம் ஆண்டில் 3.0 சதவீதமாகவும், 2026-ல் 3.1 சதவீதமாகவும் இருக்கும் என்று கணித்துள்ளது. 2025-ஆம் ஆண்டிற்கான முன்னறிவிப்பு ஏப்ரல் 2025 உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் குறிப்பு முன்னறிவிப்பைவிட 0.2 சதவீதப் புள்ளிகள் அதிகமாகவும், 2026-ஆம் ஆண்டிற்கான 0.1 சதவீதப் புள்ளிகள் அதிகமாகவும் உள்ளது.


6. இருப்பினும், இந்தத் தன்மை "குறைவானது". மேலும், இது நிலையற்றது அல்லது பலவீனமான அடித்தளத்துடன் உள்ளது. ஏனென்றால், ஏப்ரல் மாதத்தில் அதிபர் டிரம்ப் முதன்முதலில் அவற்றை அறிவித்தபோது இருந்ததைப் போல கட்டண நிலைமை மோசமாக இல்லாவிட்டாலும், இறுதி வரிவிதிப்பு விகிதங்கள் (tariff rates) என்னவாக இருக்கும் என்பது குறித்து இன்னும் தெளிவான யோசனை இல்லை.


7. மற்றொரு பெரிய ஆபத்து உலகளாவிய மோதல்களால் (மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனில் உள்ளதைப் போல) ஏற்படுகிறது.  இது விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, பொருட்களின் விலைகளை உயர்த்தக்கூடும்.




தனிப்பட்ட நாடுகளின் வளர்ச்சி தரவு


1. தற்போது, பெரும்பாலான கொள்கை நிச்சயமற்ற தன்மை வெளிப்படும் அமெரிக்கா, கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2025-ஆம் ஆண்டில் வளர்ச்சி வேகத்தை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டின் இறுதியில், அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி $31 டிரில்லியனை நெருங்கும். 2026ஆம் ஆண்டில், அமெரிக்க வளர்ச்சி குறைந்து 1.2%-ஆக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2. இதற்கு நேர்மாறாக, அமெரிக்காவிற்கு முக்கியப் பொருளாதார போட்டியாளரான சீனா, சிறிது மந்தநிலை இருந்தபோதிலும் திடமான 4.8% விகிதத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி $19 டிரில்லியனைத் தாண்டிய பொருளாதாரத்திற்கு இது குறிப்பிடத்தக்கதாகும்.


3. உலகப் பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து வலுவான செயல்திறன் கொண்ட நாடாகத் திகழ்கிறது. இந்தியா, 2025-ஆம் ஆண்டில் 6.4% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சி விகிதம் 2023-ஆம் ஆண்டைவிட குறைவாக இருந்தாலும், போட்டியிடும் பொருளாதாரங்கள் மூன்றில் ஒரு பங்கு விகிதத்தில்கூட வளர்வதற்கு போராடும் உலகில் 6%-க்கும் அதிகமான வளர்ச்சியுடன், இந்தியா வேகமாக இடைவெளியைக் குறைத்து, குறைந்தபட்சம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில், ஒன்றன்பின் ஒன்றாக வளர்ந்த பொருளாதாரங்களைவிட வேகமாக வளர்ச்சியடைவதை உறுதி செய்கிறது.


சர்வதேச நாணய நிதியம் பற்றி


1. 1945-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)) தனது 191 உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் நிலையான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் (prosperity) அடைய வேலை செய்கிறது. உற்பத்தித்திறன், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார நல்வாழ்வை அதிகரிக்க அவசியமான நிதி நிலைத்தன்மை மற்றும் பண ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிப்பதன் மூலம் அது அவ்வாறு செய்கிறது.



2. இதன் மூன்று முக்கியமான பணிகள் உள்ளன:


(i) சர்வதேச நாணய ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.


(ii) வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் விரிவாக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும்


(iii) பொருளாதார வெற்றியைப் பாதிக்கக்கூடிய செயல்களைத் தடுக்க இது முயற்சிக்கிறது.


3. சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, "வளர்ச்சி வங்கிகளைப் போல இல்லாமல், சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்ட திட்டங்களுக்கு கடன் வழங்காது. அதற்குப் பதிலாக, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் வளர்க்கவும், சர்வதேச நாணய நிதியம் பணத்தை வழங்குகிறது. இது நெருக்கடிகளைத் தடுக்க உதவும் முன்னெச்சரிக்கை நிதியுதவியையும் வழங்குகிறது.


4. ஆளுநர்கள் குழு (Board of Governors) என்பது சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பாகும். இது வழக்கமாக வருடத்திற்கு ஒரு முறை கூடுகிறது. ஒவ்வொரு உறுப்பு நாட்டிற்கும் ஒரு ஆளுநரையும் ஒரு மாற்று ஆளுநரையும் கொண்டுள்ளது. ஆளுநர் உறுப்பு நாட்டால் நியமிக்கப்படுகிறார். பொதுவாக ஆளுநர் நிதி அமைச்சர் அல்லது மத்திய வங்கியின் ஆளுநராக இருப்பார்.


5. சர்வதேச நாணய நிதியத்தில், ஆளுநர் குழுவிற்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன. சில ஒதுக்கப்பட்ட அதிகாரங்களைத் தவிர, ஆளுநர் குழு நிர்வாகக் குழுவிற்கு (Executive Board) அனைத்தையும் வழங்கலாம்.


6. சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, நிர்வாகக் குழு (Executive Board) சர்வதேச நாணய நிதியத்தின் தினசரி வேலைகளை நடத்துவதற்கு பொறுப்பானதாகும். சர்வதேச நாணய நிதியம் உறுப்பு நாடுகளால் அல்லது நாடுகளின் குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 இயக்குநர்களையும், அதன் தலைவராகப் பணியாற்றும் நிர்வாக இயக்குநரையும் கொண்டுள்ளது.


01. சர்வதேச நாணய நிதியம்  எங்கிருந்து பணம் பெறுகிறது?


உறுப்பினர் ஒதுக்கீடுகள், பலதரப்பு மற்றும் இருதரப்பு கடன் ஒப்பந்தங்கள் போன்ற மூன்று மூலங்களிலிருந்து சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதி வருகிறது. ஒதுக்கீடுகள் (Quotas) என்பது சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய நிதி ஆதாரமாகும். இதில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் உலகப் பொருளாதாரத்தில் அதன் ஒப்பீட்டு நிலைப்பாட்டின் அடிப்படையில் (relative position) ஒரு ஒதுக்கீடு ஒதுக்கப்படுகிறது.


02. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் யார்?


கிறிஸ்டாலினா ஜியோர்ஜிவா அக்டோபர் 1, 2019 முதல் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார். அவர் அக்டோபர் 1, 2024 அன்று தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கினார்.


03. சிறப்பு எடுப்பு உரிமைகள் (SDRs) என்றால் என்ன?


சர்வதேச நாணய நிதியத்தின் ஆபத்தில் உள்ள பொருளாதாரங்களுக்கு சிறப்பு எடுப்பு உரிமைகள் (Special Drawing Rights (SDRs)) வடிவில் பணம் கடன் வழங்குகிறது. இது ஐந்து நாணயங்களால் ஆனது - அமெரிக்க டாலர், யூரோ, சீன யுவான், ஜப்பானிய யென் மற்றும் பிரிட்டிஷ் பவுண்ட் போன்றவையாகும். இதை கடன்களாக, பணமாக, பத்திரங்களாக அல்லது பங்குகளை வாங்குவதற்குப் பயன்படுத்தலாம்.


04. உலக நிதி நிலைத்தன்மை அறிக்கை (Global Financial Stability Report) என்றால் என்ன?


சர்வதேச நாணய நிதியம், வெளியிடும் உலக நிதி நிலைத்தன்மை அறிக்கை உலக நிதி அமைப்பு மற்றும் சந்தைகளின் மதிப்பீட்டை வழங்குகிறது மற்றும் உலக சூழலில் வளர்ந்து வரும் சந்தை நிதியுதவியை நிவர்த்தி செய்கிறது.


இது தற்போதைய சந்தை நிலைமைகளில் கவனம் செலுத்துகிறது. நிதி நிலைத்தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்புசார் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துகிறது மற்றும் வளர்ந்து வரும் சந்தை கடனாளிகளால் நீடித்த சந்தை அணுகலை வலியுறுத்துகிறது. இது சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தால் சுட்டிக்காட்டப்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகள் நிதியை எவ்வாறு பாதிக்கும் என்பதைக் காட்டுகிறது.



Original article:

Share:

இரசாயன மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கான புதிய விதிகள் என்ன? -ஜேக்கப் கோஷி

 தொழில்துறை மாசுபாடு மேலாண்மைத் திட்டத்திற்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் (Capacity Building Program for Industrial Pollution Management Project) கீழ் என்ன பணிகள் இருந்தன?


தற்போதைய செய்தி: சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் (Environment Protection Act) கீழ்,  புதிய விதிகளை சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. இது இரசாயன மாசுபாடு உள்ள தளங்களை நிவர்த்தி செய்வதற்கான செயல்முறையை வகுக்கிறது. 2025-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு (மாசுபட்ட இடங்களின் மேலாண்மை) விதிகள் (Environment Protection (Management of Contaminated Sites) Rules, 2025) என்று அழைக்கப்படும் இந்த விதிகள், இரசாயன மாசுபாட்டை கையாள்வதற்கான சட்டக் கட்டமைப்பை வழங்குகின்றன. நாடு முழுவதும் இதுபோன்ற பல தளங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், தற்போது வரை சரியான அமைப்பு எதுவும் இல்லை.


மாசுபட்ட இடங்கள் (contaminated sites)  என்றால் என்ன?


மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் (Central Pollution Control Board) கூற்றுப்படி, மாசுபட்ட இடங்கள் என்பது ஆபத்தான மற்றும் பிற கழிவுகள் வரலாற்று ரீதியாக கொட்டப்பட்ட பகுதிகளாகும். இது பெரும்பாலும் மண், நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர் மாசுபாட்டிற்கு காரணமாகி, மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. சில இடங்கள் ஆபத்தான கழிவு மேலாண்மைக்கு எந்த விதிமுறையும் இல்லாத காலத்தில் உருவாக்கப்பட்டன. சில சூழல்களில், மாசுபாட்டிற்குக் காரணமான மாசுபடுத்துபவர்கள் தங்கள் செயல்பாடுகளை செய்ய தவறிவிட்டனர் அல்லது மறுசீரமைப்பு செலவு அவர்களின் திறனைவிட அதிகமாக உள்ளது. இவற்றில், குப்பைக் கிடங்குகள், கழிவு சேமிப்பு மற்றும் சுத்திகரிப்பு தளங்கள், கசிவு தளங்கள் மற்றும் ரசாயனக் கழிவுகளைக் கையாளுதல் மற்றும் சேமிப்பு தளங்கள் ஆகியவை அடங்கும். நாடு முழுவதும் இதுபோன்ற 103 தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 7 இடங்களில் மட்டுமே சீரமைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாசுபட்ட மண், நிலத்தடி நீர், மேற்பரப்பு நீர் மற்றும் வண்டல் ஆகியவற்றை தேவையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்வதும் அடங்கும்.


இந்த விதிகள் ஏன் முக்கியமானது?


மாசுபட்ட இடங்களை சீரமைப்பு (Remediation) செய்வதற்கான தேசிய திட்டத்தை உருவாக்குவதற்காக, சுற்றுச்சூழல் அமைச்சகம் 2010-ஆம் ஆண்டில் தொழில்துறை மாசு மேலாண்மை திட்டத்திற்கான (Industrial Pollution Management Project) திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியது. சாத்தியமான மாசுபட்ட தளங்களின் பட்டியலை உருவாக்குதல்; மாசுபட்ட தளங்களின் மதிப்பீடு மற்றும் சரிசெய்தலுக்கான வழிகாட்டுதல் ஆவணத்தை உருவாக்குதல்; மற்றும் மாசுபட்ட தளங்களின் சரிசெய்தலுக்கான சட்ட, நிறுவன மற்றும் நிதிக் கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற மூன்று பரந்த பணிகளைக் கொண்டிருந்தது. முதல் இரண்டு படிகள் நடைமுறையில் இருந்தபோதிலும், சட்டக் குறியீட்டு முறை தொடர்பான கடைசி படி நிறைவேற்றப்படாமல் இருந்தது. ஜூலை 25 அன்று பொது வெளியில் வெளியிடப்பட்ட விதிகள் இந்த சட்டக் குறியீட்டு செயல்முறையின் (codification process) ஒரு பகுதியாகும்.


இந்த விதிகளின் கீழ், மாவட்ட நிர்வாகம் "சந்தேகத்திற்கிடமான மாசுபட்ட இடங்கள்" (suspected contaminated sites) பற்றிய அரையாண்டு அறிக்கைகளை தயார் செய்யும். மாநில வாரியம் அல்லது 'குறிப்பு அமைப்பு' (reference organisation) இந்த இடங்களை ஆராய்ந்து இவ்வாறு தகவல் அளிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் "ஆரம்ப மதிப்பீடு" வழங்கும். இதைத் தொடர்ந்து, விரிவான ஆய்வு செய்வதற்கும் இந்த இடங்கள் உண்மையில் 'மாசுபட்டவை' என்பதை உறுதி செய்வதற்கும் மேலும் மூன்று மாதங்கள் இருக்கும். இதில் சந்தேகத்திற்குரிய அபாயகரமான இரசாயனங்களின் அளவை நிறுவுவது அடங்கும் — ஆபத்தான மற்றும் பிற கழிவுகள் (மேலாண்மை மற்றும் நாடுகடந்த இடமாற்றம்) விதிகள், 2016 (Hazardous and Other Wastes (Management and Transboundary Movement) Rules, 2016) பிரிவுகளின் கீழ் தற்போது 189 குறிக்கப்பட்டவை உள்ளன. இந்த இடங்கள் பாதுகாப்பான அளவுகளை மீறினால், இந்த இடங்களின் இருப்பிடம் பகிரங்கப்படுத்தப்பட்டு அதை அணுகுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பின்னர், நிபுணர்களின் குழுவாக இருக்கும் 'குறிப்பு அமைப்பு', ஒரு சீரமைப்பு திட்டத்தை குறிப்பிடும் பணியை மேற்கொள்ளும். மாசுபாட்டிற்கு காரணமான நபரைகளை அடையாளம் காண மாநில வாரியத்திற்கும் 90 நாட்கள் இருக்கும். பொறுப்பானவர்கள் தளத்தின் சீரமைப்பு செலவை செலுத்த வேண்டும். இல்லையெனில் ஒன்றிய அரசும் மாநில அரசும் சுத்தம் செய்வதற்கான செலவுகளை ஏற்பாடு செய்யும். அத்தகைய மாசுபாடு உயிர் இழப்பு அல்லது தீங்கு விளைவித்ததாக நிரூபிக்கப்பட்டால், 2023ஆம் ஆண்டு, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், குற்றவியல் குற்றச்சாட்டுகள் கையாளப்படும் என்று ஒரு அதிகாரி The Hindu-விடம் தெரிவித்தார்.


விலக்குகள் எதுவும் உள்ளனவா?


கதிரியக்கக் கழிவு, சுரங்க நடவடிக்கைகள், எண்ணெயால் ஏற்படும் கடல் மாசுபாடு மற்றும் கொட்டும் இடங்களில் இருந்து வரும் திடக் கழிவுகள் (solid waste) ஆகியவற்றால் ஏற்படும் மாசுபாடு இந்த சட்டங்களின் பிரிவுகளின் கீழ் கையாளப்படாது. ஏனெனில், அவை தனி சட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. விதிகளில் உள்ள மற்றொரு பெரிய சிக்கல் என்னவென்றால், மாசுபட்ட தளம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் எவ்வளவு விரைவாக அதை சுத்தம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறவில்லை.



Original article:

Share:

மராட்டியப் பேரரசு பற்றி… -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


  • புதன்கிழமை, NCERT-ன் சமூக அறிவியல் பாடப்புத்தகக் குழுவின் தலைவரான மைக்கேல் டானினோ, புதிய புத்தகங்களில் உள்ள வரைபடம் குறித்த ஆட்சேபனைக்கு பதிலளித்தார். வரைபடத்தின் எல்லைகள் தவறாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க கூடுதல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். அப்படி இருந்தால், எதிர்கால பதிப்புகளுக்கு சிறந்த தகவல்களுடன் திருத்தப்பட்ட வரைபடம் தயாரிக்கப்படும்.


  • 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், முகலாயப் பேரரசு உடைந்து கொண்டிருந்ததால், மராட்டிய பேஷ்வா முதலாம் பாஜி ராவ்  வடக்கு நோக்கி விரிவடையத் தொடங்கினார். இந்த நேரத்தில், மராட்டியர்கள் ஏற்கனவே தக்காணத்தில் உள்ள முன்னாள் முகலாய பிரதேசங்களிலிருந்து வரி வசூலித்துக் கொண்டிருந்தனர்.


  • பின்னர் மராட்டியர்கள் ராஜஸ்தானின் சில பகுதிகள், டெல்லி மற்றும் பஞ்சாபைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பண்டேல்கண்ட் ஆகிய பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் ஒரிசா, வங்காளம் மற்றும் பீகாரையும் தாக்கினர். போபால் போருக்குப் பிறகு அவர்கள் மால்வா மீது கட்டுப்பாட்டைப் பெற்றனர். வங்காளத்தில் தாக்குதல்கள் பாஜி ராவின் வாரிசுகளின் கீழ் நடந்தன.


  • சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான ராகுல் மகர், மராத்தியர்கள் ராஜபுத்திர பிரதேசங்களிலிருந்து சௌத் மற்றும் சர்தேஷ்முகி (வரி வகைகள்) வசூலித்தாலும், அங்கு அவர்களுக்கு அரசியல் கட்டுப்பாடு இருந்தது என்று எப்போதும் அர்த்தமல்ல என்று விளக்கினார்.


  • நிதி கப்பம் செலுத்துவதும் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதும் வேறுபட்டவை என்று அவர் கூறினார். ராஜபுதனம், ஒரிசா மற்றும் வங்காளம் போன்ற மாநிலங்கள் மராத்தியர்களுக்கு பணம் கொடுத்தன. ஆனால், பேஷ்வாவை எப்போதும் தங்கள் ஆட்சியாளராகப் பார்க்கவில்லை.


  • ஜெய்சால்மர் ராஜ்புத்களின் பாட்டி (Bhati) குலத்தின் கீழ் இருந்தது. கோர்டன், பாஜி ராவ் I 1728-ல் மேற்கு மால்வா மற்றும் ராஜஸ்தான் வழியாக மேற்கொண்ட பயணத்தைப் பற்றி எழுதினார். கோர்டன், புண்டி மற்றும் ஜோத்பூரில் ஏற்பட்ட வாரிசு மோதல்கள் மற்றும் மராத்தாக்கள் இந்தப் பகுதிகளில் இருந்து கோரிய பயணத்தையும் குறிப்பிடுகிறார்.



  • சில பகுதிகள் பேஷ்வாவின் அதிகாரிகளால் முழுமையாக நிர்வகிக்கப்பட்டன. மற்றவை தளர்வான கட்டுப்பாட்டை மட்டுமே கொண்டிருந்தன. மேலும், கோட்டையான இடங்களிலிருந்து மராத்திய அதிகாரத்தை எதிர்த்த உள்ளூர் நில உரிமையாளர்களுக்கு (ஜமீன்தார்கள்) தாயகமாக இருந்தன.


  • மராத்தியர்கள் எந்த வகையான அரசியல் அமைப்பைக் கொண்டிருந்தனர். அது ஒரு கூட்டமைப்புதானா என்று அறிஞர்கள் இன்னும் விவாதிக்கின்றனர்.


உங்களுக்குத் தெரியுமா?:


  • NCERT 8-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், மராட்டியர்கள் தக்காணம் மற்றும் வட இந்தியா போன்ற தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாத மாகாணங்களிலிருந்து சௌத் (25%) மற்றும் சர்தேஷ்முகி (சௌத் மீது 10% கூடுதலாக) வரிகளை வசூலித்ததாகக் கூறுகிறது. அதற்கு ஈடாக, அவர்கள் இந்த மாகாணங்களைப் பாதுகாத்தனர். மேலும், அவற்றின் உள் விஷயங்களில் தலையிடவில்லை.


  • சத்ரபதி சிவாஜி மகாராஜ் (1630–1680) 17-ஆம் நூற்றாண்டில் பல்வேறு தக்காண மாநிலங்களிலிருந்து ஒரு சுதந்திர மராட்டிய ராஜ்யத்தை உருவாக்கினார். அவர் வெவ்வேறு தக்காண சுல்தான்களுக்காகப் பணியாற்றிய ஒரு ஜெனரலின் மகன்.


  • தற்போதைய புனேவில் உள்ள தனது தந்தையின் நிலத்தை ஒரு சுதந்திர மராட்டிய மாநிலமாக விரிவுபடுத்த சிவாஜி விரும்பினார். அந்த நேரத்தில், பிஜாப்பூர், கோல்கொண்டா, அகமதுநகர் மற்றும் முகலாயப் பேரரசு போன்ற சுல்தான்கள் தக்காணத்தின் கட்டுப்பாட்டிற்காகப் போராடி வந்தனர்.


  • சிவாஜி, ‘சுயராஜ்யம்’ அமைப்பை நிறுவினார். அதாவது உள்ளூர் மக்களால் ஆளப்படும் ஒரு ராஜ்யம் என்று வரலாற்றாசிரியர் உதய் எஸ். குல்கர்னி கூறுகிறார். அவர் பல சாதிகளை ஒரு பொதுவான **மராத்தா** அடையாளத்தின் கீழ் ஒன்றிணைத்தார்.


  • மராட்டிய வம்சத்தின் முக்கியமான போர்கள்

போர்கள்

விளக்கம்

பிரதாப்கர் போர் (1659)

மராட்டியர்களுக்கும், அடில்ஷாஹி படைகளுக்கும் இடையே போர் நடந்தது

கோலாப்பூர் போர் (1659)

மராட்டிய மன்னர் சிவாஜிக்கும் அடில்ஷாஹி படைகளுக்கும் இடையே போர் நடந்தது

போர் கடிதம் (1664)

மராட்டிய ஆட்சியாளர் சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கும் முகலாய கேப்டனான இனாயத் கானுக்கும் இடையே போர் நடந்தது.

புரந்தர் போர் (1665)

மராட்டியருக்கும் முகலாயப் பேரரசுக்கும் இடையே போர் நடந்தது

சல்ஹர் போர் (1672)

மராட்டியப் பேரரசுக்கும் முகலாயப் பேரரசுக்கும் இடையே போர் நடந்தது

சங்கம்னர் போர் (1679)

முகலாயப் பேரரசுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையே போர் நடந்தது. இது சிவாஜி நடத்திய கடைசிப் போர்.

முதல் ஆங்கிலோ-மராத்தா போர் (1775-82)

1782 சல்பாய் உடன்படிக்கையுடன் போர் முடிவுக்கு வந்தது.

இரண்டாம் ஆங்கிலோ-மராத்தா போர் (1803-05)

பஸ்சின் ஒப்பந்தம் (1802) - இரண்டாம் பேஷ்வா பாஜி ராவ் மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இடையே கையெழுத்தானது. தியோகான் ஒப்பந்தம் (1803) - நாக்பூரின் இரண்டாம் ரகுஜி போன்ஸ்லே மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் சர் ஆர்தர் வெல்லஸ்லி இடையே கையெழுத்தானது

மூன்றாம் ஆங்கிலோ-மராத்தா போர் (1817-19)

சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவை: பூனா ஒப்பந்தம் (பேஷ்வாவுடன்), குவாலியர் ஒப்பந்தம் (சிந்தியாவுடன்), மண்டசோர் ஒப்பந்தம் (ஹோல்கருடன்).



Original article:

Share:

இந்திய தேர்தல் ஆணையத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது கவலை அளிக்கிறது. -அஞ்சலி பரத்வாஜ், அம்ரிதா ஜோஹ்ரி

 இந்திய தேர்தல் ஆணையம் (ECI) முக்கியமான தகவல்களை மறைத்து, அதன் நடவடிக்கைகளைப் பகிரங்கமாக விளக்காமல் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பணயம் வைக்கிறது.


ஜூன் 24 அன்று, பீகாரின் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது, இதில் கிட்டத்தட்ட 8 கோடி வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். இந்த முடிவு பொதுமக்களுக்குத் தெரிவிக்காமலோ அல்லது அவர்களின் கருத்துக்களைக் கேட்காமலோ ரகசியமாக எடுக்கப்பட்டது. இந்த நடைமுறை நாடு முழுவதும் செய்யப்படும் என்றும் ECI கூறியது. வெளிப்படைத்தன்மை இல்லாதது களத்தில் நடைபெறும் செயல்பாட்டின் நம்பகத்தன்மை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.


பீகாரின் புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது. இது ஒரு தொகுதிக்கு சுமார் 27,000 வாக்காளர்கள். மாநிலத்தில் பெரும்பாலான இடங்கள் சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவதால், இந்த எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டு தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றிபெற்ற வித்தியாசத்தைவிட அதிகமாகும். இதுபோன்ற பெரிய அளவிலான நீக்கங்கள் பல சட்டமன்றத் தொகுதிகளில் முடிவுகளை மாற்றக்கூடும்.


இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) கூற்றுப்படி, 22 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டதாகக் கண்டறியப்பட்டது. 36 லட்சம் பேர் பீகாரில் இருந்து நிரந்தரமாக வெளியேறிவிட்டனர் அல்லது அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் 7 லட்சம் பேர் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வளவு பெரிய அளவில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்படும்போது, சரியான சரிபார்ப்பை அனுமதிக்கவும், தேர்தலின் நியாயத்தைப் பாதுகாக்கவும் விவரங்களைப் பகிரங்கப்படுத்த வேண்டும். இருப்பினும், நீக்கப்பட்ட பெயர்களின் முழுமையான பட்டியலையோ அல்லது நீக்கத்திற்கான காரணங்களையோ தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. தேர்தல் ஆணையம் தனது செய்திக்குறிப்பில், வாக்குச் சாவடி நிலை நீக்கப் பட்டியல்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த பட்டியல்கள் ஏன் நீக்கப்பட்டன என்பதைக் காட்டவில்லை என்று கூறியது. இந்தத் தகவல் இல்லாமல், நீக்கங்கள் நியாயமானவையா அல்லது தகுதியான வாக்காளர்கள் தவறாக நீக்கப்பட்டுள்ளார்களா என்பதை கட்சிகளோ அல்லது பொதுமக்களோ உறுதிப்படுத்த முடியாது. விரிவான தரவு இல்லாதது கவலையளிக்கிறது. குறிப்பாக, இதுபோன்ற நீக்கங்கள் பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களை அதிகம் பாதிக்கும். 


நாடு முழுவதும் தேர்தல் பட்டியல்களின் சிறப்புத் திருத்தம் (SIR) செய்வது ஒரு சாதாரண நிர்வாக நடவடிக்கை அல்ல. கிட்டத்தட்ட 100 கோடி வாக்காளர்களை உள்ளடக்கிய இந்தப் பெரிய பணியை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) திடீரென ஏன் மேற்கொண்டது என்பதை குடிமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். தேர்தல் நியாயத்தை பாதிக்கக்கூடிய பெரிய தவறுகள் அல்லது கடுமையான பிழைகள் வாக்காளர் பட்டியலில் இருந்ததற்கான ஆதாரம் உள்ளதா? தேர்தல் நடைபெறவிருக்கும் பீகாரில், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், ECI ஏன் இவ்வளவு அவசரமாக இந்த நாடு தழுவிய தேர்தல் பட்டியல்களின் சிறப்புத் திருத்தத்தை தொடங்கியது?


இந்திய தேர்தல் ஆணையம் (ECI), உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள் குறித்து பல தரப்பினர் புகார் அளித்துள்ளதாகக் கூறியது. இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்த பிறகு, நாடு தழுவிய சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தேவை என்று ECI உணர்ந்தது. இருப்பினும், 800 பக்க பிரமாணப் பத்திரத்தில் இந்த முடிவுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படும் "தன்னிச்சையான மதிப்பாய்வு" இல்லை. ஒரு ஜனநாயகத்தில், பொது அதிகாரிகள் எடுத்த முடிவுகளை மட்டுமல்ல, அவற்றின் பின்னணியில் உள்ள காரணங்களையும் அறிய குடிமக்களுக்கு உரிமை உண்டு. மதிப்பாய்வின் முறை மற்றும் முடிவுகளைப் பகிர்ந்து கொள்ளாததன் மூலம், ECI மக்களின் தகவல் உரிமையை மறுக்கிறது. ஆதாரம் இல்லாமல், SIR-க்கான காரணம் தெளிவாக இல்லை. இது தன்னிச்சையானது மற்றும் சாத்தியமான வெளிப்புற செல்வாக்கு குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது.


இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வாக்காளர் பட்டியலைத் துல்லியமாக வைத்திருப்பதற்காக திருத்த முடியும். இருப்பினும், 2003 பீகார் வாக்காளர் பட்டியலில் பட்டியலிடப்பட்டவர்கள் மட்டுமே குடியுரிமைக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்று முடிவு செய்துள்ளது. இது விவாதத்தைத் தூண்டியுள்ளது.


பீகாரில் கடைசியாக பெரிய திருத்தம் 2003-ல் செய்யப்பட்டது என்றும், அப்போது பட்டியலிடப்பட்ட அனைவரும் ஏற்கனவே தகுதி விதிகளை பூர்த்தி செய்திருப்பார்கள் என்றும், அதில் இந்தியக் குடிமகனாக இருப்பதும் அடங்கும் என்றும் ECI கூறுகிறது. ஆனால், இது ஒரு கேள்வியை எழுப்புகிறது. 2003-ல் ECI உண்மையில் வாக்காளர்களிடம் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களைக் காட்டச் சொன்னதா?


முன்னாள் தேர்தல் ஆணையர்கள் உட்பட பலர், ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் பாஸ்போர்ட் அல்லது அவர்களின் அல்லது அவர்களின் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற குறிப்பிட்ட ஆவணங்களைக் காட்டி குடியுரிமையை நிரூபிக்கச் சொன்னதில்லை என்று கூறுகிறார்கள். ECI-ன் தற்போதைய அத்தகைய ஆவணங்களுக்கான கோரிக்கை, சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மறைமுகமாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு வழியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.


தற்போதைய செயல்முறை 2003-ல் செய்யப்பட்டதைப் போன்றது என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI) கூறுகிறது. இருப்பினும், இதை உறுதிப்படுத்தக்கூடிய பதிவுகள், பீகாரில் 2003-ம் ஆண்டு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பொது அணுகலில் இல்லை. இந்த ஆவணங்கள் ECI வலைத்தளத்தில் இல்லை மற்றும் ECI நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் சேர்க்கப்படவில்லை. அறிக்கைகளின்படி, பத்திரிகையாளர்கள் இந்த பதிவுகளைக் கேட்டபோது, ECI அதிகாரிகள் அவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினர்.


தெளிவின்மையின் அபாயங்கள்


வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு புலனாய்வு அறிக்கை (SIR) வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். யாராவது தங்கள் குடியுரிமையை நிரூபிக்க முடியாவிட்டால், அதன் விளைவுகள் வாக்களிக்கும் உரிமையை இழப்பதைவிட மிகவும் கடுமையானதாக இருக்கலாம். 1955-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் கீழ், சந்தேகிக்கப்படும் வெளிநாட்டினரின் வழக்குகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்ப தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.


பீகாரில், SIR செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாதது தேர்தல் ஜனநாயகத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். தெளிவு இல்லாமல் வாக்காளர் பட்டியல்களில் இருந்து மக்களை நீக்குவது தேர்தல்களை குறைவான நியாயமாக்குவது மட்டுமல்லாமல், ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் குறைக்கிறது.


அஞ்சலி பாரத்வாஜ் மற்றும் அம்ரிதா ஜோஹ்ரி ஆகியோர், சதர்க் நாகரிக் சங்கதன் மற்றும் மக்களின் தகவல் உரிமைக்கான தேசிய இயக்கத்துடன் தொடர்புடைய வெளிப்படைத்தன்மை செயற்பாட்டாளர்கள்.



Original article:

Share:

ஆழமாகப் பதிந்திருக்கும் ஒரு களங்கத்தின் சின்னத்திற்கு முடிவு கட்டுதல் -இமையம்

 தமிழக அரசின் நிர்வாக நடவடிக்கை, அதிகாரப்பூர்வ பதிவுகளில் இருந்து 'காலனி' என்ற வார்த்தையை நீக்குவது, சமூக ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் நோக்கில் ஒரு அடையாள மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க செயலாகும்.


தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில், "காலனி" என்ற சொல் சமூக அவமானத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் சுற்றுப்புறங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தீண்டாமையின் அடையாளமாகத் தொடர்ந்து செயல்படுகிறது. ஏப்ரல் 29, 2025 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில், "காலனி" என்று முடிவடையும் அனைத்து கிராமப் பெயர்களும், "பள்ளப்பட்டி", "பறையப்பட்டி", "நாவிதன் குளம்", "பறையன் குளம்" மற்றும் "சக்கிலிப்பட்டி" போன்ற அவமதிக்கும் சாதி குறிப்புகளைக் கொண்ட பிற கிராமப் பெயர்களும் மாநில பதிவுகளிலிருந்து நீக்கப்படும் என்றும், இந்த கிராமங்கள் மறுபெயரிடப்படும் என்றும் அறிவித்தார்.


வர்ணாசிரம அமைப்பின் கீழ் உயர் சாதியினரின் வீடுகளிலிருந்து விலகி, தொழிலாள வர்க்க மக்களை தனிமைப்படுத்தப்பட்ட குடியிருப்புகளாகப் பிரிக்கும் நடைமுறை கி.பி 12-ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாக நம்பப்படுகிறது. இதை ஆதரிக்கும் இலக்கியக் குறிப்புகள் அந்தக் காலத்திலிருந்தே காணப்படுகின்றன.


தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் தாக்கம்


காலப்போக்கில், அங்கு வசிக்கும் மக்களின் தாழ்த்தப்பட்ட சாதி நிலையை அவமதிக்கவும், முன்னிலைப்படுத்தவும் சில உள்ளூர்ப் பெயர்கள் உருவாக்கப்பட்டன. உதாரணங்களில் சேரி தெரு, பறையர் தெரு, பள்ளர் தெரு, தோட்டி தெரு, ஹரிஜன் காலனி, ஆதி திராவிடர் காலனி, பழைய காலனி, புதிய காலனி மற்றும் அம்பேத்கர் காலனி ஆகியவை அடங்கும். சிலர் ‘காலனி’ என்ற சொல் ஒரு ‘தீங்கற்ற’ சொல் என்றும், அதற்கு ‘சாதி’ தொடர்பு இல்லை என்றும் வாதிடுகின்றனர். எனவே, இடங்களின் பெயர்களில் இருந்து ‘காலனி’ என்ற சொல்லை நீக்குவது பயனற்றது என்கின்றனர். அவர்கள் நகர்ப்புறங்களில் உள்ள ரயில்வே காலனி, ஜெயேந்திரர் காலனி போன்ற பல்வேறு சாதி மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் மதச்சார்பற்ற இடங்களை உதாரணமாகக் கூறுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள உண்மை நிலை முற்றிலும் வேறுபட்டது, அங்கு ‘காலனி’ என்ற சொல் முற்றிலும் வேறு பொருளைக் கொண்டுள்ளது. ‘காலனி’ என்ற சொல் பிரத்தியேகமாக கீழ்நிலை சாதிகள் வாழும் பகுதிகளைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது.


15ஆம் நூற்றாண்டிலிருந்து, போர்த்துகீசியர்கள், அதைத் தொடர்ந்து ஸ்பானிஷ், டச்சு, பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் பிறர், இந்திய துணைக் கண்டம் உட்பட உலகம் முழுவதும் காலனிகளை நிறுவினர். அவர்கள் தங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் வாழ்ந்த சிறப்பு குடியிருப்புப் பகுதிகளை விவரிக்க 'காலனி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர்.


முதலில், இந்த சொல் 'ஐரோப்பிய காலனிகள்' அல்லது 'வெள்ளையர் குடியேற்றங்கள்' என்பதைக் குறிக்கிறது. காலப்போக்கில், காலனித்துவ ஆட்சியுடன் எந்த தொடர்பும் இல்லாவிட்டாலும், அனைத்து வகையான குடியிருப்பு பகுதிகளுக்கும் இது பயன்படுத்தத் தொடங்கியது.


ஒரு விசித்திரமான மற்றும் முரண்பாடான மாற்றத்தில், 'காலனி' என்பதன் அர்த்தம் உயரடுக்கு ஐரோப்பிய இடங்களைக் குறிப்பதில் இருந்து சமூக ரீதியாக விலக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட இந்தியர்களின் சுற்றுப்புறங்களை விவரிப்பதாக மாறியது.


'காலனி' என்ற வார்த்தை கிராமப்புற இந்தியாவில் ஒரு வலுவான சமூகக் களங்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் சாதியைக் குறிக்க ஒரு மறைமுக வழியாக பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கடவுச் சீட்டு, வங்கிக் கணக்குப் புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற பல அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஒரு நபரின் முகவரி ஒரு முக்கிய விவரமாகும். சாதி சார்ந்த குடியிருப்பு பெயர்கள், குறிப்பாக 'காலனி' என்று முடிவடையும் பெயர்கள், இந்த முகவரிகளில் தோன்றும்போது, அவை உடனடியாக ஒரு நபரின் சாதியை வெளிப்படுத்துகின்றன. இது சகாக்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களிடமிருந்து பாரபட்சமான எதிர்வினைகள், அவமரியாதை மனப்பான்மைகள் மற்றும் ஒருசார்பான முடிவுகளுக்கு வழிவகுக்கும். வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்துகொள்வது ஆழ்ந்த உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பாகுபாடு கடந்தகாலத்தின் ஒரு விஷயம் மட்டுமல்ல, இது இன்று இந்தியாவில் பலரை தொடர்ந்து பாதிக்கிறது.


பல நூற்றாண்டுகளாக பயன்பாடு


சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் 'சேரி' என்ற சொல் தாழ்த்தப்பட்ட சாதியினரின் குடியிருப்புகளைக் குறிக்கத் தொடங்கியது. 20-ஆம் நூற்றாண்டில், 'சேரி' மற்றும் 'காலனி' ஆகியவை தீண்டத்தகாத சாதியினரின் இடங்களை விவரிக்க ஒரே வார்த்தையாகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் பண்டைய தமிழ் இலக்கியத்தில், 'சேரி' என்பது எந்த எதிர்மறையான பொருளும் இல்லாமல், மக்கள் வாழ்ந்த எந்தவொரு குடியேற்றத்தையும் குறிக்கிறது.


பழமையான தமிழ் படைப்புகளில் ஒன்றான (கிமு 7-ஆம் நூற்றாண்டில்) தொல்காப்பியம், 'சேரி' என்றும் குறிப்பிடுகிறது. இந்த இலக்கணப் புத்தகம் "புலன்" எனப்படும் ஒரு வகை இலக்கியத்திற்கான விதிகளை விளக்குகிறது, இது 16-ஆம் நூற்றாண்டின் "பள்ளு" இலக்கியத்தைப் போன்றது. இந்த பாணியில், பயன்படுத்தப்படும் சொற்கள் பொதுவான அன்றாட மொழியாக இருக்க வேண்டும், ஆழமான ஆராய்ச்சி அல்லது விளக்கம் தேவையில்லை. தொல்காப்பியம் "சேரி மொழி"யை "பொது மக்களின் மொழி" (“language of common people”) என்று குறிக்கிறது.


பதினெட்டு பழமையான இலக்கிய நூல்களான ‘பதினெண்மேல்கணக்கு’, கடைசி தமிழ்ச் சங்க காலத்தைச் (தோராயமாக கி.மு. ஐந்தாம் நூற்றாண்டை) சார்ந்தவை, அவை ‘சேரி’ என்ற சொல்லுக்கு ஏராளமான குறிப்புகளைக் கொண்டுள்ளன. புகழ்பெற்ற 'அகம்' கவிதைத் தொகுப்பான 'குறுந்தொகை'யில், இந்த வார்த்தை ஆறு முறை வருகிறது, அதற்கு ஒரு கிராமத்தில் உள்ள அனைவரும் வாழும் இடம் என்று பொருள். இது அவமதிப்பாகப் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.


'அகநானூறு' தொகுப்பில் 'சேரி' பற்றிய 15 குறிப்புகள் உள்ளன. கிபி 2-ஆம் நூற்றாண்டின் சிலப்பதிகாரத்தில், 'புறஞ்சேரி' என்ற சொல் மதுரையின் புறநகரில் உள்ள ஒரு குடியேற்றத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, அங்கு கோவலனும் கண்ணகியும் சமணத் துறவி 'கவுந்தி அடிகள்' உடன் தங்கியிருந்தனர். இந்தப் பகுதி பிராமணர்கள் வாழ்ந்த பகுதி என்றும் உரை கூறுகிறது.


கி.பி 6 மற்றும் 9-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், பக்தி இயக்கம் தொடங்கியது. ஆனால், அதன் சமூக மற்றும் அரசியல் விளைவுகள் பிற்கால சோழர் காலத்தில் வலுவாக உணரப்பட்டன. சோழர்களின் எழுச்சியுடன், பிரமாண்டமான கோயில் கட்டுமானம் வேகமாக அதிகரித்தது. சில கடவுள்கள் 'பிரதான நீரோட்டமாக' ஏற்றுக்கொள்ளப்பட்டன. மற்றவை ஓரங்களுக்குத் தள்ளப்பட்டன.


பெரிய கோயில்களின் வளர்ச்சி சமூகம் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டது மற்றும் அறிவு எவ்வாறு உருவாக்கப்பட்டது மற்றும் பகிரப்பட்டது என்பதை மாற்றியது. கி.பி 12-ஆம் நூற்றாண்டில், சேக்கிழாரின் பெரிய புராணம் "தீண்டத்தகாத குடியிருப்புகள்" (“Untouchable quarters.”) என்று பொருள்படும் "தீண்டச்சேரி" என்று குறிப்பிட்டது. கிராமங்களும் நகரங்களும் பிரிக்கப்பட்டன. இதனால் சில பகுதிகள் 'தீண்டத்தகாத' சமூகங்களுக்காக ஒதுக்கப்பட்டன.


19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளின் சீர்திருத்த இயக்கங்களுக்குப் பிறகும், இந்தப் பிரிவுகளின் தடயங்கள் இன்னும் உள்ளன. அத்தகைய ஒரு போராட்டத்தின் போது, தந்தை பெரியார் வைக்கத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

விஜயநகர ஆட்சி 14-ஆம் நூற்றாண்டில் வந்தது. மதுரை, செஞ்சி மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்களின் கீழ், 14 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வர்ணாசிரம தர்மம் மிகக் கொடூரமாக அமல்படுத்தப்பட்டது. இது சமூகங்களின் சமூக மற்றும் உடல் ரீதியான பிரிவினையை அதிகரித்தது. இது ஐரோப்பியர்கள் தமிழ்நாட்டில் வலுவான இருப்பைப் பெற அனுமதித்தது. இந்த நேரத்தில் சமூகப் பிளவுகள் இன்னும் மோசமாகின.


மகாத்மா காந்தி தீண்டத்தகாத சாதிகளைக் குறிக்க 'ஹரிஜன் (கடவுளின் பிள்ளைகள்)' என்ற வார்த்தையை உருவாக்கினார். முரண்பாடாக, அவர்களின் நிலையை உயர்த்துவதற்குப் பதிலாக, அந்த வார்த்தை அவமானம், களங்கம் மற்றும் விலக்கு ஆகியவற்றின் மற்றொரு கருவியாக மாறியது. 'ஹரிஜன் காலனி' என்ற சொல் பிரிக்கப்பட்ட தலித் குடியிருப்புகளைக் குறிக்கிறது.


அயோத்திதாச பண்டிதர் 'ஆதி-திராவிடர்' என்ற வார்த்தையை ஊக்குவித்தார். 1922-ஆம் ஆண்டில், எம்.சி. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி அரசாங்கத்தின் ராஜா, அனைத்து தீண்டத்தகாத சாதிகளையும் 'பறையர்' அல்லது 'பஞ்சமர்' என்று அழைப்பதற்குப் பதிலாக 'ஆதி-திராவிடர்' என்று வகைப்படுத்த சென்னை சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். இருப்பினும், 'ஆதி-திராவிடர்' கூட இறுதியில் வெறுக்கத்தக்க வார்த்தையாக மாறியது.


ஒரு கண்ணோட்டத்தில்


பிரிட்டிஷ் ஆட்சியின்போது, அதிகாரப்பூர்வ பதிவுகளில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் பகுதிகளுக்கு இழிவான பெயர்கள் சேர்க்கப்பட்டன. 'சேரி' மற்றும் 'காலனி' போன்ற சொற்கள் முக்கியமாக தலித் பகுதிகளை அடையாளம் காண பயன்படுத்தப்பட்டன. இந்த நடைமுறை இன்னும் கிராமப்புற தமிழ்நாட்டில் காணப்படுகிறது. நேர்மறையான சமூக மாற்றத்தை ஊக்குவிக்க அரசாங்கம் இப்போது இந்தப் பெயர்களை மாற்ற விரும்புகிறது.


'வேளச்சேரி' அல்லது 'பாண்டிச்சேரி' போன்ற பெயர்கள் எந்த அவமானகரமான அர்த்தத்தையும் கொண்டிருக்கவில்லை, மேலும் அவை சாதாரண இடப் பெயர்களாகக் கருதப்படுகின்றன. நகரங்களில் இன்னும் 'சாய்பாபா காலனி' போன்ற 'காலனி'யுடன் முடிவடையும் பகுதிகள் இருக்கும். ஆனால் கிராமப்புறங்களில், 'காலனி' மற்றும் 'சேரி' ஆகியவை அகற்றப்படும். அவை அரசியல் தலைவர்களின் பெயர்களைத் தவிர்த்து, பிரபலமான மலர்கள், கவிஞர்கள் அல்லது விஞ்ஞானிகளின் பெயர்களால் மாற்றப்படும்.


இது ஒரு நலத்திட்ட அறிவிப்பு அல்ல, ஆனால் சமூக ஒருங்கிணைப்பை அடையும் முயற்சியில் நேர்மறையான சமூக மாற்றத்தை ஊக்குவிக்கும் நீண்டகால பார்வையுடன் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை. ஒரு சமூக ஒருமைப்பாடு கொண்ட சமூகம் மட்டுமே முன்னேற்றத்தையும் கூட்டு வளத்தையும் அடைய முடியும். அதற்காக, இது ஒரு ‘குறியீட்டு’ மற்றும் ‘வரலாற்று’ செயல் ஆகும்.


இமையம் ஒரு தமிழ் எழுத்தாளர், தற்போது தமிழ்நாடு மாநில பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.



Original article:

Share: