ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்ற வாக்குறுதி பற்றி…

 ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை இனியும் தாமதம் செய்யக்கூடாது.


ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் ​​யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான அழைப்பு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கோரிக்கை மற்றும் ஒன்றிய அரசின் வாக்குறுதியை நினைவூட்டுவதாகும். இந்த அழைப்பு துணை நிலை ஆளுநரின் வழக்கமான சட்டமன்ற உரையின் ஒரு பகுதியாகும். மேலும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது. இது சமீபத்திய அமைச்சரவை தீர்மானத்தையும் பின்பற்றுகிறது. கூடுதலாக, அனைத்து யூனியன் பிரதேசங்களையும் மேற்பார்வையிடும் ஜனாதிபதியை துணை நிலை ஆளுநர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரிக்கப்பட்ட இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு  ஜம்மு காஷ்மீர் அதன் மாநில அந்தஸ்தை மீண்டும் பெறும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதியளித்தது. குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும், சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆட்சியில் இருப்பதால், இந்த வாக்குறுதி இப்போது மிகவும் முக்கியமானது. சட்டப்பிரிவு 370-ன் கீழ் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய குடியரசுத் தலைவர் உத்தரவு மற்றும் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் செல்லுபடியாகும் என்பது குறித்த நீதிமன்ற வழக்கின் போது இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த உத்தரவாதத்தின் அடிப்படையில், ஜம்மு & காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா என்பது குறித்து  தீர்ப்பளிக்க வேண்டாம் என்று அரசியலமைப்பு அமர்வு முடிவு செய்தது.


ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைப்புகளில் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதை சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் ஆட்சிக்கு திரும்ப வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தையும் இது சுட்டிக் காட்டுகிறது. மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து பலர் இன்னும் வருத்தத்தில் இருக்கலாம். இருப்பினும், மாநில அந்தஸ்து வழங்குவது முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதை பெரும்பாலானோர் ஒப்புக்கொள்கிறார்கள். புதிய அரசாங்கத்தின் தேர்தல் ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்தியுள்ளது. மாநில அந்தஸ்து வழங்குவதை இனியும் தாமதப்படுத்த எந்த காரணமும் இல்லை. தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு நிலைமை குறித்து சிறிது கவலை ஏற்பட்டுள்ளது. பள்ளத்தாக்கில் பல உள்ளூர் அல்லாத தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் மற்றும் வீரர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதக் குழுக்கள் உள்ளூர் அல்லாத தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினாலும், பாதுகாப்புப் படையினரின் பதிலடியைத் தூண்டவும் அவர்கள் விரும்புகிறார்கள். இருப்பினும், மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதில் நேர்மறையான முடிவை தாமதப்படுத்த எந்த காரணமும் இருக்கக்கூடாது. பயங்கரவாதத் தாக்குதல்களின் அதிகரிப்பு மற்றும் ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி ஜம்மு காஷ்மீரில் ஆட்சியில் அமைக்க வேண்டும் என்ற இலக்கை அடைய முடியவில்லை என்பதை கரணம் காட்டி எந்த தாமதத்தையும் ஏற்படுத்தக்கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு அதன் நிர்வாக அதிகாரங்களை விரிவுபடுத்த முழு மாநில அந்தஸ்து தற்போது காஷ்மீருக்கு தேவைப்படுகிறது. இனியும் தாமதிக்காமல் மாநில அந்தஸ்தை உடனடியாக வழங்க வேண்டும் .




Original article:

Share:

இனி மேலும் எய்ம்ஸ் (AIIMS) அல்லது ஒன்றிய அரசின் நிதியுதவித் திட்டம் (CSS) வேண்டாம் என்பதே பரிந்துரை -முனைவர் கே.ஆர்.அந்தோணி

 கிராமப்புற சமூக சுகாதார மையங்கள் மற்றும் புதிய எய்ம்ஸில் பல பணியிடங்கள் காலியாக உள்ளன. கிடைக்கக்கூடிய வளங்களை திறமையாக நிர்வகிப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்.


நமக்கு இனி எய்ம்ஸ் அல்லது ஒன்றிய அரசின் நிதியுதவி  திட்டம் (Centrally Sponsored Scheme (CSS)) எதுவும் தேவையில்லை. முதலில் பணியில் உள்ளவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். பின்னர், புதிய காலி பணியிடங்களை உருவாக்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.  


18 புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களில் (All India Institutes of Medical Sciences (AIIMS)), 11 வெளியில் இருந்து பார்க்கும்போது நன்றாக இருக்கிறது. அவை பல்வேறு ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இருப்பினும், சிகிச்சை முறை சில சமயங்களில் ஏமாற்றத்தை அளிக்கின்றன. இந்த மருத்துவ கல்வி நிறுவனங்களில் தேவையை விட 40% குறைவான ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.


இவ்வளவு காலியிடங்கள் உள்ள நிலையில், மாணவர்களுக்கு எப்படி சிறப்புப் பயிற்சி அளிக்க முடியும்? இந்த AIIMS ஆனது மாவட்ட மற்றும் சமூக சுகாதார மையங்களுக்கு (Community Health Centres (CHC)) சிறப்பு மருத்துவர்களை வழங்க வேண்டும். ஆனால், கிராமப்புறங்களில் மூன்றில் இரண்டு பங்கு சிறப்புப் பணியிடங்களும், நகர்ப்புறங்களில் மூன்றில் ஒரு பகுதியும் காலியாக உள்ளன. AIIMS மருத்துவமனைகளை கட்டுவதற்குப் பதிலாக, தற்போதுள்ள மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.


கள யதார்த்தம் 


இந்தியாவின் ஆரோக்கிய இயக்கவியல் 2022-23 அறிக்கை ஒரு சிக்கலான சூழ்நிலையை சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவில் 757 மாவட்டங்களில் உள்ள 5,491 கிராமப்புற சமூக சுகாதார மையங்களில் 79.9% காலியிடங்கள் உள்ளன. 21,964 பணியாளர்கள் தேவைப்பட்டாலும், 4,413 மருத்துவ நிபுணர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். 2014 முதல், கிராமப்புற சமூக சுகாதார மையங்களில்  17,500 மருத்துவ நிபுணர்கள் இல்லை. 731 மருத்துவக் கல்லூரிகளில் 72,627 முதுகலை இடங்கள் இருந்தும் இந்தப் பற்றாக்குறை தொடர்கிறது. வல்லுநர்கள் பல காரணங்களுக்காக கிராமப்புற சமூக சுகாதார மையங்களில் பணிபுரிவதைத் தவிர்க்கிறார்கள். அவர்களுக்கு நல்ல பணியாளர்கள் குடியிருப்பு, அவர்களின் குழந்தைகளுக்கு பள்ளிகள் மற்றும் பிற மருத்துவர்களின் ஆதரவு தேவை. கிராமப்புற சமூக சுகாதார மையங்களில் நிபுணர்கள் பணிபுரியும் போது, ​​கிராமப்புற மற்றும் பழங்குடி மக்கள் மாவட்ட மருத்துவமனைகளுக்கு வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை. ஒரு கிராமப்புற சமூக சுகாதார மையத்தில் 1.6 முதல் 2 லட்சம் பேருக்கு 30 படுக்கைகள் மற்றும் நான்கு முதல் ஐந்து நிபுணர்கள் இருக்க வேண்டும். ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டங்களிலிருந்து (CSS) நிதியைப் பயன்படுத்த மாநிலங்கள் அதிக கிராமப்புற சமூக சுகாதார மையங்களை உருவாக்குகின்றன. 2005 முதல், தேசிய ஊரக சுகாதார இயக்கம் (National Rural Health Mission (NHRM)) தொடங்கப்பட்டதில் இருந்து, கடந்த ஆண்டு வரை, பீகார், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் 2,145 கிராமப்புற சமூக சுகாதார மையங்கள் சேர்க்கப்பட்டன.

 

மாநிலங்கள் 60% நிதியை 15-வது நிதிக்குழு ஒதுக்கீட்டிலிருந்து பயன்படுத்த வேண்டும். இந்த நிதிகள் மூலதன உள்கட்டமைப்பு முதலீட்டிற்காக, புதிய வசதிகளை நிர்வகிக்க  மாநிலங்கள் தங்களின் சொந்த ‘ஆண்டு சுகாதார நிதிநிலை அறிக்கை’யை பயன்படுத்த வேண்டும். மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கான மனித வளங்களின் செலவை ஓரளவு ஈடுசெய்யும். இருப்பினும், சுகாதாரத் துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும், அவர்களை திறந்த சந்தையில் கண்டுபிடிப்பது கடினம். இது நிதிநிலை அறிக்கை பயன்படுத்துவதை கடினமாக்குகிறது.


2022-23-ல், ஒன்றிய அரசின் நிதியுதவி 29% மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மேலும், 2023-24-ல் இது 50%ஆக இருந்தது. மூலதனச் செலவு ஒதுக்கீடுகளைப் (capex intensive allocation) பெற்ற கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மட்டுமே இந்த நிதியால் பயனடைந்தனர்.


ஒன்றிய சுகாதார நிதிநிலை அறிக்கை உள்கட்டமைப்புக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கக்கூடாது. மருந்துகள், பரிசோதனைகள், அவசர கால வாகனங்கள், அவசரகால சேவைகள் மற்றும் ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. இந்த வசதிகள் ஒன்றிய அரசின் நிதியுதவியில் கட்டப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் கட்டிடங்களைக் கட்டுவதற்குப் பதிலாக சுகாதாரப் பணிகளைச் சிறப்பாகச் செய்வதில் ஒன்றிய அரசு  கவனம் செலுத்த வேண்டும்.


இந்த பயன்படுத்தப்படாத கட்டிடங்கள் செயல்படும் வரை நோயாளிகள் காத்திருக்க முடியாது. இதுபோன்ற குறைபாடுகளின் காரணமாக நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் விலையுயர்ந்த சிகிச்சை பெறுகின்றனர். இதனால் நோயாளிகள் கடன் வாங்கும் சூழல் உருவாகும். பல நோயாளிகள் இப்போது மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். தற்போதைய அமைப்பு அரிதாகவே வேலை செய்கிறது. தேவையான நிபுணர்களைக் கொண்டிருப்பது சிகிச்சை முறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


செயல்பாடற்ற சமூக சுகாதார மையங்கள் (Ghost Community Health Centres)


பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் தேசிய தகவல் மைய தரவுகளின்படி (Ministry of Panchayati Raj and the National Informatics Centre) இந்தியாவில் 785 மாவட்டங்கள் உள்ளன. 714 மாவட்டங்களில் மட்டுமே மேம்பட்ட சிகிச்சைக்கான மருத்துவமனைகள் உள்ளன. முன்னதாக, முதல் பரிந்துரை அலகுகள் (First Referral Units (FRUs)) அமைப்பு இருந்தது. ஒவ்வொரு FRU-க்கும் 600 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்திற்கு நான்கு அலகுகள் இருந்தன. இந்த பிரிவுகள் தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை அளித்தன. அவர்களுக்கு மகப்பேறு மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், குழந்தை மருத்துவர்கள் போன்ற மருத்துவர்கள் தேவைப்பட்டனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் இரத்த வங்கிகள் தேவைப்பட்டன. இந்த அமைப்பு 1992 முதல் 1997 குழந்தை உயிர்ப்பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான தாய்மை திட்டத்தின் (Child Survival and Safe Motherhood Programme) கீழ் செயல்படுத்தப்பட்டது.


சமூக சுகாதார மையங்கள் என்பது 30 படுக்கைகள் கொண்ட அலகுகளாகும், அதில் ஐந்து நிபுணர்கள் இருக்க வேண்டும்: ஒரு மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர் மற்றும் மயக்க மருந்து நிபுணர். இந்த நிபுணர்கள் 1.6 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரையிலான மக்களுக்கு சேவை செய்ய உள்ளனர். இந்தியாவில் 785 மாவட்டங்களில் *5,491 சமூக சுகாதார மையங்கள் உள்ளன. ஒரு மாவட்டத்திற்கு சுமார் ஏழு சமூக சுகாதார மையங்கள்  உள்ளன. இருப்பினும், இந்தியாவில் 4,413 நிபுணர்கள் மட்டுமே உள்ளனர். பல சமூக சுகாதார மையங்களில் தலா ஒருவருக்கும் குறைவான நிபுணர்களைக் கொண்டிருக்கின்றன. இது ‘செயல்பாடற்ற’ சமூக சுகாதார மையங்களை உருவாக்குகிறது. அனைத்து சமூக சுகாதார மையங்களிலும் நிபுணர்கள் சமமாகப் பரவியிருந்தால், 882 சமூக சுகாதார மையங்களை சரியாக இயக்க போதுமான நிபுணர்கள் இருப்பார்கள். அறுவை சிகிச்சை தியேட்டர்கள், லேபர் ரூம்கள் போன்ற வசதிகள் வரி செலுத்துவோரின் பணத்தை இது போன்ற நடவடிக்கைகள்  வீணடிக்கின்றன.


கிடைக்கக்கூடிய நிபுணர்களைப் பயன்படுத்த கவனமாக திட்டமிட வேண்டும். சிறப்பு சிகிச்சைக்காக துணை மாவட்ட அளவில் ஒன்று அல்லது இரண்டு சமூக சுகாதார மையங்களில் ஐந்து அடுக்கு நிபுணர்களை வைப்பதே சிறந்த தீர்வாகும். அரசியல் அழுத்தங்கள் இந்த முடிவை பாதிக்கக் கூடாது. வல்லுநர்கள் ஒன்றாக வேலை செய்யும் போது, ​​அவர்கள் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கிறார்கள். 24 மணி நேர மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களுடன் ஊழியர்களுக்கு வீட்டுவசதி வழங்குவது, ஊழியர்களின் மன உறுதியை மேம்படுத்தவும், வருவாயைக் குறைக்கவும் உதவும். அதே நேரத்தில், மாவட்ட அளவிலான துணை பதவிகளுக்கு கூடுதல் நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கும் பிரச்சினையும் கவனிக்கப்பட வேண்டும்.


மாணவர்கள் மற்றும் மருத்துவ சேவை


இனி, அரசு நிதியுதவி பெறும் அனைத்து முதுகலை மருத்துவ இடங்களும் சமூக சுகாதார மையங்கள் அல்லது மாவட்ட மருத்துவமனை இடுகையுடன் இணைக்கப்பட வேண்டும். மருத்துவ மாணவர்கள் இதற்கு சம்மதிக்க வேண்டும். பின்தங்கிய பகுதிகளில் 7 முதல் 10 ஆண்டுகள் பணிபுரியும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறுகிய கால பணிகளை விரும்புபவர்கள் தேசிய சுகாதார இயக்கத்தின் (National Health Mission (NHM)) கீழ் அதிக ஊக்கத்தொகையுடன் பணிபுரியலாம். ஆனால், ஓய்வூதிய பலன்கள் இல்லை. தற்போதைய பணியாளர் நெருக்கடியை தீர்க்க இது ஒரு முக்கியமான படியாகும்.


அவசர அறுவை சிகிச்சை, அதிர்ச்சி சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை போன்ற அத்தியாவசிய திறன்களில் பயிற்சி பெற்ற குடும்ப மருத்துவ நிபுணர்களின் குழுவை உருவாக்குவது குறுகிய காலத்தில் உதவும். இருப்பினும், நிபுணர் பற்றாக்குறையை முழுமையாக தீர்க்க அதிக நேரம் எடுக்கும். இப்போது, கிடைக்கக்கூடிய வளங்களை திறமையாக நிர்வகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.


டாக்டர் கே.ஆர்.ஆண்டனி கேரளாவின் கொச்சியில் உள்ள குழந்தை மருத்துவர் மற்றும் பொது சுகாதார ஆலோசகர் மற்றும் யுனிசெப் உடன் இணைந்து செயல்பட்டவர்.




Original article:

Share:

டிரம்ப் 2.0, இந்தியா மற்றும் தெற்காசியாவில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும்? -சுஹாசினி ஹைதர்சுஹாசினி ஹைதர்

 டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தை வரவேற்கும் அதே வேளையில் அவரது சமூக ஊடகப் பதிவுகள், வர்த்தகம் மற்றும் கட்டணங்கள் பற்றிய கருத்துகள் இந்தியாவை கவலையடையச் செய்துள்ளது.


ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, டெக்சாஸின் ஹூஸ்டனில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்புடன் இந்தியா "நன்றாக இணைந்துள்ளது" என்று கூறினார். மேலும், அப்கி பார் டிரம்ப் சர்க்கார் (இந்த முறை, டிரம்ப் அரசாங்கம்) என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 


அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் போதுமான வாக்குகளைப் பெற்றுள்ளார் பிரதமர் மோடியின் கருத்துக்கள் டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில்  இரு தலைவர்களுக்கு இடையே இருந்த நட்புறவைக் காட்டுகின்றன. இருப்பினும், அவர்களின் தனிப்பட்ட தொடர்பைத் தாண்டி, டிரம்பின் முதல் பதவிக்காலம் இந்தியாவுக்கு கலவையான முடிவுகளைத் தந்தது. டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தை (டிரம்ப் 2.0) வரவேற்கும் அதே வேளையில் அவரது சமூக ஊடக பதிவுகள், வர்த்தகம் மற்றும் கட்டணங்கள் பற்றிய கருத்துகள் இந்தியாவை கவலையடையச் செய்துள்ளது.


உறவுகள் எவ்வாறு சீராக இருக்கும் 


டிரம்பின் வெற்றியால் இந்திய அரசு மகிழ்ச்சி அடைவதற்கு பல காரணங்கள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் இந்தியாவுடனான தனது கடந்தகால உறவை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகத்தை வலுப்படுத்துதல், அதிக அமெரிக்கத் தொழில்நுட்பத்தை இந்திய நிறுவனங்களுக்குக் கிடைக்கச் செய்தல், இந்தியாவின் பாதுகாப்புப் படைகளுக்கு அதிக அமெரிக்க இராணுவ உபகரணங்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.


சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை டிரம்ப் மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சு வார்த்தைகள் 2019-2020-ல் தீவிரமாக இருந்தன. ஆனால், அவர் ஆட்சியை இழந்தவுடன் இந்த பேச்சு வார்த்தை நிறுத்தப்பட்டது. முன்னாள் அதிபர் ஜோ பைடன்  இந்த பேச்சு வார்த்தையை தொடர ஆர்வம் காட்டவில்லை.


கார்பன் உமிழ்வைக் குறைக்க இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, டிரம்ப் அமெரிக்க எண்ணெய் மற்றும் எல்என்ஜியை வாங்க இந்தியாவை ஊக்குவிப்பார். இது 2019-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட  லூசியானாவில் உள்ள டிரிஃப்ட்வுட் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (Liquefied natural gas (LNG)) ஆலைக்கான ஒப்பந்தத்தைப் போன்றது. இந்த ஒப்பந்தம் பெட்ரோநெட் இந்தியாவிலிருந்து $2.5 பில்லியன் முதலீடாக அமெரிக்காவிற்கு சென்றிருக்கும். இருப்பினும், இந்த ஒப்பந்தம் ஒரு வருடம் கழித்து ரத்து செய்யப்பட்டது.


டிரம்பின் புதிய ஆட்சி காலத்தில், இந்திய-அமெரிக்க ஜனநாயக நெறிமுறைகள், சிறுபான்மையினர் உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் போன்ற தலைப்புகளில் உறவுகள் குறைவான சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். இவை தற்போதைய இந்திய அரசாங்கத்திற்கு எதிராக  முந்தைய பைடன் நிர்வாகம் மற்றும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் எழுப்பிய கவலைகள் ஆகும். வெளிநாட்டு (பங்களிப்பு) ஒழுங்குமுறைச் சட்டம் (Foreign (Contribution) Regulation Act), 2010-ல் பாதிக்கப்பட்டுள்ள காலநிலை மற்றும் மனித உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சிகிச்சை குறித்த கேள்விகளைப் பற்றி இந்தியாவும் கவலைப்பட வேண்டியதில்லை. இருப்பினும், சில குடியரசுக் கட்சியினர் இந்தியாவில் பணிபுரியும் யு.எஸ். கிறிஸ்தவ அரசு சாரா நிறுவனங்களைப் பற்றி கேள்வி கேட்கலாம்.


பன்னுன்-நிஜ்ஜார் வழக்குகளில் அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் நீதித் துறையின் பொதுக் கருத்துக்கள் மேலும் முடக்கப்படும் என்று புது தில்லி நம்புகிறது. கடந்த ஆண்டு காலிஸ்தானி செயற்பாட்டாளர் குர்பத்வந்த் பன்னூன் மீதான கொலை முயற்சியை தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படும் இடைத்தரகர் நிகில் குப்தா தொடர்பான விசாரணை தொடரும் அதே வேளையில், குடியரசுக் கட்சி இந்துக் கூட்டணியின் நிறுவனர் ஷலப் 'ஷைலி' குமார், டிரம்ப் "கடுமை காட்டுவார்” என எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார். காலிஸ்தானி குழுக்கள் மீது. மேலும், ட்ரம்ப் கடந்த காலத்தில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் கொண்டிருந்த உறைபனியான உறவுகள், நிஜ்ஜார் கொலை தொடர்பாக ஒட்டாவாவுடன் நடந்து வரும் இராஜதந்திரப் போரில் வாஷிங்டனின் எதிர்வினை குறித்து டெல்லி கவலைப்பட வேண்டியதில்லை என்பதைக் குறிக்கிறது.


பிரச்சனை ஏற்படும் பகுதிகள் 


பிரச்சனை எங்கிருந்து வரலாம்? முதல் பிரச்சினை, டிரம்ப் தனது ஆட்சிக்காலத்தில் வர்த்தக வரிகளை குறைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நிர்வாகம் எதிர் வரிகளை விதித்தது. உலக வர்த்தக அமைப்பில் புகார்களை பதிவு செய்தது மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான இந்தியாவின் (Generalized System of Preferences (GSP)) அந்தஸ்தை நீக்கியது.


இரண்டாவது பிரச்சினை, சில நேரங்களில் மிகைப்படுத்துவது அல்லது அவற்றை உருவாக்குவது மற்றும் பிற தலைவர்களுடனான தனிப்பட்ட உரையாடல்களைப் பகிர்ந்துகொள்வது போன்ற செயல்களை செய்தார். உதாரணமாக, ஹார்லி டேவிட்சன் வாகனங்களின் மீதான வரிகளைக் குறைத்ததற்காக இந்திய பிரதமர் மோடியை அவர் கேலி செய்தார் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி மீதான தடையை நீக்குமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தார். இது இந்தியாவை வருத்தப்படுத்தியது. 


2019-ஆம் ஆண்டில், டிரம்ப் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானிடம், "காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க முடியும்" என்றும், பிரதமர் மோடி தன்னை மத்தியஸ்தம் செய்யும்படி கேட்டுக் கொண்டார் என்றும் கூறினார். இந்த கூற்றை இந்தியா மறுத்தது. 2020-ஆம் ஆண்டில், சீனா உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியாவுடன் இராணுவ மோதலைத் தொடங்கிய பிறகு, டிரம்ப், மோடி இந்த நிலைமை குறித்து "நல்ல மனநிலையில் இல்லை" என்று கூறினார். இரு தலைவர்களும் இது குறித்து பேசவே இல்லை என்று இந்தியா அவரது கருத்தை  மறுத்தது. இருப்பினும், மோதலின் போது டிரம்ப் இந்தியாவை ஆதரித்ததாக இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். உளவுத்துறையை இந்தியாவுடன் அமெரிக்கா பகிர்ந்து கொண்டது. அமெரிக்கா ட்ரோன்களை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கியது. இந்தியப் படைகளுக்கு குளிர்கால உபகரணங்களை வழங்கியது. கடந்த அமெரிக்கா நிர்வாகங்களை போல் இல்லாமல் டிரம்ப் தேவையான நேரத்தில் இந்தியாவிற்கு  தனது ஆதரவை வழங்கினார். 


ஜூன் 2018-ல், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலின் போது, ​​டிரம்ப் அப்போதைய ஐ.நா. தூதுவர் நிக்கி ஹேலியை புது டெல்லிக்கு அனுப்பினார். இதனால் ஈரான் மற்றும் வெனிசுலா ஆகிய இரு நாடுகளிலிருந்தும் எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தியது. இப்போது, ​​ரஷ்யவுடனான உறவுகளை  தவிர்க்குமாறு புது தில்லி அழுத்தத்தை எதிர்கொள்ளக்கூடும். டிரம்ப் ரஷ்ய அதிபர்  விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளார். காசா மற்றும் லெபனானில் இஸ்ரேலின் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும்படி இந்தியாவும் டிரம்பிடம் கோரிக்கை வைக்கும். தற்போது துண்டிக்கப்பட்டிருக்கும் இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை புத்துயிர் பெற வளைகுடா நாடுகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு அவருடைய உதவியை இந்தியா  நாடும்.


இந்தியாவின் அண்டை நாடுகள் டிரம்பின் வெற்றியைப் பற்றி அதிகம் கவலைப்படலாம். அவரது முந்தைய ஆட்சிக் காலத்தில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்த பெரும்பாலான உதவிகளை அவர் ரத்து செய்தார். இப்போது, ​​சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)) மற்றும் உலக வங்கியின் கடன்களுக்கான அமெரிக்க ஆதரவை இழப்பதைப் பற்றி ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கம் கவலைப்படலாம். வங்கதேச, ஜனநாயகக் கட்சித் தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ், ஏற்கனவே திரு டிரம்புடன் மோதியுள்ளார். சமீபத்தில், டிரம்ப் இந்து சிறுபான்மையினரைப் பாதுகாப்பதில் டாக்காவின் தோல்வி குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.


பைடன் நிர்வாகம் தெற்காசிய நாடுகளான நேபாளம், பூட்டான் மற்றும் மாலத்தீவுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது. இப்பகுதியில் உள்ள பல நாடுகள் அமெரிக்காவில் ஏற்பட்ட மாற்றத்தைவிட தங்களுக்கு புதிய அரசு அளிக்க இருக்கும் ஆதரவை பற்றி அதிகம் கவலைப்படலாம்.




Original article:

Share:

தலைமை நீதிபதி சந்திரசூட்டின் 7 முக்கிய தீர்ப்புகள் -ரோஷ்னி யாதவ்

 இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அவரது பதவிக்காலத்தில் உச்சநீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட சில முக்கியமான தீர்ப்புகள் மற்றும் முன்னேற்றங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் இறுதி நாட்கள் இந்த வாரம் என்பதால், இவர் மே 2016-ம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்திற்கு தலைமைப் பொறுப்பேற்று முக்கியப் பங்காற்றியபோது, ஏற்பட்ட சில முக்கியமான தீர்ப்புகள் மற்றும் முன்னேற்றங்களைப் பற்றி சிந்திப்போம். 


தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை அங்கீகரிப்பது, ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்குவது மற்றும் தேர்தல் பத்திரத் திட்டத்தைத் தடுப்பது முதல், அவரது புலமையையும், நீதித்துறையும் கலந்த தீர்ப்புகள், அவர் ஓய்வுபெற்ற நவம்பர் 10-ம் தேதிக்குப் பிறகு, நீதிமன்றத்தின் எதிர்கால தீர்ப்புகள் மற்றும் சட்டத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை எதிர்நோக்கியுள்ளோம்.


  1. நீதிபதி கே.எஸ். புட்டசாமி vs இந்திய ஒன்றியம் (தனியுரிமைக்கான உரிமை வழக்கு-Right to Privacy Case)


ஆகஸ்ட், 2017-ம் ஆண்டில், நீதிபதி கே. புட்டசாமி vs இந்திய ஒன்றியம் (K. Puttaswamy vs Union of India) வழக்கில் இந்திய உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக தீர்ப்பளித்தது. இதில், "தனிமனித  உரிமையானது, பிரிவு 21-ன் கீழ் வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தின் முக்கியமான பகுதியாக பாதுகாக்கப்படுகிறது. மற்றும் அரசியலமைப்பின் பகுதி III ஆல் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும்.


இந்த தீர்ப்பில் நீதிபதி டி.ஒய். சந்திரசூட், அமர்வில் மற்ற அனைத்து உறுப்பினர்களுடன் சேர்ந்து, ஏப்ரல் 28, 1976-ம் ஆண்டு, ADM ஜபல்பூர் vs ஷிவ்காந்த் சுக்லா (ADM Jabalpur vs Shivkant Shukla) வழக்கில் அவசரகாலத் தீர்ப்பை வெளிப்படையாக நிராகரித்தார். நீதிபதி சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி. சந்திரசூட், வாழ்வதற்கான அடிப்படை உரிமை அரசியலமைப்பின் கொடை என்றும், இது அவசரநிலையின் போது இடைநீக்கம் செய்யப்படலாம் என்றும் தீர்ப்பளித்த அமர்வில் பெரும்பான்மையானவர்களில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  1. ஷபின் ஜஹான் vs இந்திய ஒன்றியம் (ஹாதியா வழக்கு-Hadiya case)


புகழ்பெற்ற ஹாதியா வழக்கில், உச்சநீதிமன்றம், “தனக்கு விருப்பமான நபரை திருமணம் செய்யும் உரிமையானது அரசியலமைப்பின் பிரிவு 21 (உயிர் மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை) உடன் ஒருங்கிணைந்ததாகும்” என்று கூறியது. மேலும், கேரள முஸ்லிம் மதம் மாறிய பெண் ஹதியா மற்றும் ஷெபின் ஜஹான் திருமணத்தை ரத்து செய்த கேரள உயர்நீதிமன்றத்தின் 2017 ஆம் ஆண்டு உத்தரவை ரத்து செய்தது.


இந்த வழக்கில், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ.எம். கன்வில்கர் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரின் இரண்டு விரிவான ஒருங்கிணைந்த தீர்ப்புகளை வழங்கியது.


ஒருவர் தனக்கு ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பது, திருமணத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியிலேயோ, ஒவ்வொரு தனிநபரையும் சார்ந்தது. திருமணம் என்பது தனிப்பட்ட விஷயம், அதை மீறக்கூடாது. வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் தனிநபரின் உரிமை மத நம்பிக்கைகளால் பாதிக்கப்படுவதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்றவும், பரப்பவும் உரிமையை அரசியலமைப்பு உறுதி செய்கிறது. அதேபோல், மதம் மற்றும் திருமணத் தேர்வுகள் தனிப்பட்ட முடிவுகளாகும். அங்கு தனிமனித சுதந்திரம் மிக முக்கியமானது. ஒரு நபரின் இணையைத் தேர்ந்தெடுப்பதை மாநிலமோ அல்லது சட்டமோ கட்டுப்படுத்த முடியாது அல்லது அத்தகைய முடிவுகளை தேர்ந்தெடுப்பதைக் கட்டுப்படுத்த முடியாது. நீதிபதி சந்திரசூட் கூறியது போல் இந்த தேர்வுகள் அரசியலமைப்பின் கீழ் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மைய கருத்தாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.


  1. டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு vs இந்திய ஒன்றியம்


இந்த வழக்கில், டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும், ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்பட்ட துணைநிலை கவர்னருக்கும் (Lieutenant Governor (LG)) இடையிலான ஒட்டுமொத்த சர்ச்சையின் முக்கிய பகுதியாக சேவைகளை ஒழுங்குபடுத்துவது பற்றிய கேள்வி இருந்தது.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. சேவை நிர்வாகத்தில் அதிகாரத்துவத்தை சட்டமன்றம் கட்டுப்படுத்துகிறது என்று அமர்வு தீர்ப்பளித்தது. இருப்பினும், தேசிய தலைநகர் பிரதேசத்தின் (National Capital Territory (NCT)) சட்டமன்ற அதிகாரங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு இது பொருந்தாது. டெல்லி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத மூன்று பகுதிகள் உள்ளன. அவை பொது ஒழுங்கு, காவல்துறை மற்றும் நிலம் ஆகியவை ஆகும்.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியதாவது, “தேசிய தலைநகர் டெல்லியின் அரசாங்கத்தின் (National Capital Territory of Delhi (GNCTD)) பிரிவு 41 மீதான சட்டமியற்றும் மற்றும் நிர்வாக அதிகாரம் பொது ஒழுங்கு, காவல்துறை மற்றும் நிலம் தொடர்பான சேவைகளுக்கு நீட்டிக்கப்படாது. எவ்வாறாயினும், பிராந்தியத்தின் அன்றாட நிர்வாகத்தின் அடிப்படையில் NCTD-ன் கொள்கைகள் மற்றும் பார்வையை செயல்படுத்துவதற்குப் பொருத்தமான இந்திய ஆட்சிப் பணி (IAS) அல்லது கூட்டுப் பணியாளர் சேவைகள் (joint cadre services) போன்ற சேவைகள் மீதான சட்டமன்ற மற்றும் நிர்வாக அதிகாரம் டெல்லிக்கு இருக்கும்.


  1. இந்திய ஒன்றியத்தில் நவ்தேஜ் ஜோஹர்


ஜூன் 2016-ம் ஆண்டில், சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் நவ்தேஜ் சிங் ஜோஹர் மேலும் நான்கு பேருடன் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். ஐந்து பேரும் LGBTQI சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 377-ஐ சவால் செய்தனர். (நாஸ் அறக்கட்டளை வழக்கு ஒரு பொது நல வழக்காகும்)


ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பில், ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் அளவிற்கு இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 377-ஐ ரத்து செய்தது. 'நவ்தேஜ்' தீர்ப்பின் அடிப்படையில் LGBTQ சமூகம் சமமான குடிமக்கள் என்று கூறியது மற்றும் பாலியல் நோக்குநிலை மற்றும் பாலினத்தின் அடிப்படையில் சட்டத்தில் பாகுபாடு இருக்க முடியாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


டி.ஒய்.சந்திரசூட், இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஆர்.எஃப் நாரிமன், ஏ.எம்.கான்வில்கர் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோருடன் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வில் ஒரு பகுதியாக இருந்தார்.


  1. சொத்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பிறர் vs மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் பிறர்


இந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசியலமைப்பின் 39 (பி) பிரிவில் மறுபங்கீடு செய்வதற்கு அனைத்து தனியார் சொத்துக்களையும் "சமூகத்திற்கு சொந்தமான வளங்களாக" கருத முடியாது என்று தீர்ப்பளித்தது.


இந்த தீர்ப்பில், இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் பெரும்பான்மை தீர்ப்புக்காக எழுதினார். இவருடன் நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, ராஜேஷ் பிண்டல், சதீஷ் சந்திர சர்மா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ், நீதிபதி பி.வி. நாகரத்னா ஒருமித்த கருத்தை எழுதினர். நீதிபதி சுதன்ஷு துலியா இதற்கு மறுப்பு தெரிவித்தார்.


  1. தேர்தல் பத்திர வழக்கு (Electoral Bonds Case)


பிப்ரவரி 2024-ம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அரசியல் நிதியுதவிக்கான ஒன்றிய அரசின் தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு எதிராக ஒருமனதாக தீர்ப்பளித்தது.


இந்த தீர்ப்பில், வருமான வரிச் சட்டம் (Income Tax Act) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (Representation of Peoples Act) 29C பிரிவுகளில் திருத்தங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று நீதிமன்றம் அறிவித்தது. பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India (SBI)) "தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்றும், இதுவரை பத்திரங்களை பணமாக்கியவர்களின் அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.


  1. எம் சித்திக் (D) Thr Lrs vs மஹந்த் சுரேஷ் தாஸ் & பிறர் 


இந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஒருமனதாக தீர்ப்பளித்தது. இதில், சர்ச்சைக்குரிய நிலம் முழுவதையும் ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்படும் எனவும், இதை அறக்கட்டளைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும், முஸ்லிம்களின் பெயரில் "பங்கு” (equity), மசூதி கட்டுவதற்கு அந்த இடத்திற்கு அருகில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அல்லது “அயோத்தியில் பொருத்தமான முக்கிய இடத்தில்” ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.


தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.நசீர் ஆகியோருடன் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பு இடம்பெற்றது. இந்த தீர்ப்பின் மூலம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோஹி அகாரா பிரிவினர், ராம்லல்லா விராஜ்மான் தெய்வம் மற்றும் உ.பி. சன்னி மத்திய வக்பு வாரியம் இடையே மும்முனையாகப் பிரித்து வழங்க உத்தரவிட்ட அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் செப்டம்பர் 30, 2010 தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.




Original article:

Share:

அனைத்து தனியார் சொத்துக்களும் மறுபகிர்வுக்கான 'சமூகப் பொருள் வளம்' அல்ல : உச்சநீதிமன்ற தீர்ப்பைப் புரிந்துகொள்ளுதல் -அபூர்வா விஸ்வநாத்

 முக்கியமான உச்சநீதிமன்ற தீர்ப்பு, சொத்து, சொத்து வைத்திருக்கும் உரிமை மற்றும் சமூகத்துடனான உறவை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதில் தாக்கங்களைக் கொண்டுள்ளது.  


உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு, நவம்பர் 5-ம் தேதி  செவ்வாய் கிழமையன்று தீர்ப்பளித்ததாவது, அரசியலமைப்பின் 39 (பி)-ல் கூறப்பட்டுள்ளபடி, "சமூகத்தின் பொருள் வளங்கள்" (material resources of the community) என்று கூறி, தனியாருக்குச் சொந்தமான அனைத்து சொத்துகளையும் அரசாங்கம் எடுத்து மறுபங்கீடு செய்ய முடியாது.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பி.வி.நாகரத்னா, சுதான்ஷு துலியா, ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, ராஜேஷ் பிண்டால், சதீஷ் சந்திர சர்மா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. 


முதலாவதாக, ட்டப்பிரிவு 31C, சொத்துரிமை தொடர்பான முக்கிய அரசியலமைப்பு விதி, அடுத்தடுத்த திருத்தங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம்  திருத்தங்களைத் தடை செய்த போதிலும் இந்த சட்டப்பிரிவு நடைமுறையில் இன்னும் உள்ளதா என்பதை பரிசீலிக்க வேண்டும்.


இரண்டாவதாக, அரசியலமைப்பின் 39C பிரிவின் விளக்கம் 


சொத்து, சொத்தை சொந்தமாக வைத்திருக்கும் உரிமை, சமூகத்துடனான இதன் உறவு ஆகியவற்றை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதற்கான தாக்கங்களை இந்த முக்கியமான தீர்ப்பு கொண்டுள்ளது. 


நீதிபதி சந்திரசூட் தனக்கும் மற்ற ஏழு நீதிபதிகளுக்கும் ஒரு தீர்ப்பு எழுதினார். நீதியரசர் நாகரத்னா இணக்கமான கருத்தை எழுதினார். நீதிபதி துலியா இதற்கு உடன்படவில்லை மற்றும் மாறுபட்ட கருத்தை எழுதியுள்ளார்.


சட்டப்பிரிவு 31C இன்னும் செயல்பாட்டில் இருக்கிறதா? 


சட்டப்பிரிவு 31C முதலில் "சமூகத்திற்கு சொந்தமான வளங்கள்" (material resources of the community) பொது நன்மைக்கு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இயற்றப்பட்ட சட்டங்களைப் பாதுகாப்பதற்காக சட்டப்பிரிவு 39(b) மற்றும் சட்டப்பிரிவு 39(c)-ல் கூறப்பட்டுள்ளபடி வளங்கள் மற்றும் உற்பத்திக்கான  வழிகள் "பொது தீங்கு" (common detriment) விளைவிப்பதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டது.


எவ்வாறாயினும், அவசரநிலைக்கு முந்தைய காலத்தில், வங்கி தேசியமயமாக்கல் வழக்கு போன்ற அரசாங்கத்தின் சோசலிச கொள்கைகளை நீதிமன்றம் தாக்கியது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அரசியலமைப்பு (இருபத்தி ஐந்தாவது) திருத்தச் சட்டம், 1971 மூலம் பிரிவு 31 சி திருத்தப்பட்டது. சட்டப்பிரிவு 39-ன் உட்பிரிவுகள் (பி) அல்லது (சி) இல் உள்ள கொள்கைகளைப் பாதுகாக்க அரசின் கொள்கையை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு சட்டமும் இல்லை என்று திருத்தம் கூறியது. மேலும், விதிகள் 14, 19 அல்லது 31-ன் கீழ் ஏதேனும் உரிமைகளுடன் சட்டம் முரண்பட்டாலும் அல்லது குறைக்கப்பட்டாலும் கூட இது பொருந்தும். மேலும், இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கும் எந்தவொரு சட்டமும் அவ்வாறு செய்யத் தவறியதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது.


இந்தத் திருத்தம், 1973-ம் ஆண்டு கேசவானந்த பாரதி வழக்கில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், 13 நீதிபதிகள் 7-6 பெரும்பான்மையுடன் தீர்ப்பளித்தனர். அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு "அடிப்படை கட்டமைப்பு" (basic structure) உள்ளது. அதை, அரசியலமைப்பு திருத்தம் மூலம் கூட மாற்ற முடியாது என்று அவர்கள் முடிவு செய்தனர்.


1976-ம் ஆண்டில், நாடாளுமன்றம் அரசியலமைப்பு (நாற்பத்தி இரண்டாவது) திருத்தச் சட்டத்தை இயற்றியது. இந்த திருத்தம் பிரிவு 31C-ன் கீழ் "அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி-IV-ல் கூறப்பட்டுள்ள அனைத்து அல்லது எந்தக் கொள்கைகளுக்கும்" பாதுகாப்பை விரிவுபடுத்தியது. இதன் விளைவாக, ஒவ்வொரு நெறிமுறைக் கோட்பாடு கொள்கையும் (பிரிவு 36-51) அரசியலமைப்பின் பிரிவுகள் 14 மற்றும் 19-ன் கீழ் உள்ள சவால்களிலிருந்து விடுபடுகிறது. 


உச்ச நீதிமன்றம் 1980-ம் ஆண்டில் ”மினர்வா மில்ஸ் vs யூனியன் ஆஃப் இந்தியா” (Minerva Mills vs Union of India) என்ற தீர்ப்பில் இந்த விதியை ரத்து செய்தது.


2024-ம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் முன் உள்ள கேள்வி என்னவென்றால், 1978-1980ஆம் ஆண்டுக்கு இடையில், உச்ச நீதிமன்றம் 31 சி பிரிவை ஒட்டுமொத்தமாக இரத்து செய்ததா அல்லது கேசவானந்த பாரதிக்கு பிந்தைய நிலையை மீட்டெடுத்ததா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.  இங்கு பிரிவுகள் 39 (பி) மற்றும் (சி) பாதுகாக்கப்பட்டன. கேசவானந்தாவுக்குப் பிந்தைய பதவி மீண்டும் நிலைநாட்டப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


அரசியலமைப்பின் பிரிவு 39(b) இன் விளக்கம் பற்றி


இரண்டாவது கேள்வியாக, தனியாருக்குச் சொந்தமான சொத்துக்களை அரசு கையகப்படுத்த முடியுமா என்பது நீதிமன்றத்தின் முன் உள்ள கேள்வியாகும். அரசியலமைப்பின் பிரிவு 39(பி) இல் கூறப்பட்டுள்ளபடி, சொத்துக்கள் "சமூகத்திற்கு சொந்தமான வளங்களாக" (material resources of the community) கருதப்பட்டால் இது சாத்தியமாகும்.


"அரசின்  வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்" (Directive Principles of State Policy(DPSP)) என்ற தலைப்பில் அரசியலமைப்பின் பகுதி IV இன் கீழ் வரும் பிரிவு 39(b) "சமூகத்திற்கு சொந்தமான வளங்களின் உரிமை மற்றும் கட்டுப்பாடு பொது நன்மைக்கு துணைபுரியும் வகையில் சிறப்பாக விநியோகிக்கப்படுவதை" பாதுகாப்பதற்கான கொள்கையை உருவாக்குவதற்கான கடமையை அரசின் மீது வைக்கிறது. அரசின்  வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாட்டு (DPSP) சட்டங்களை இயற்றுவதற்கான வழிகாட்டும் கொள்கைகளாக இருக்க வேண்டும். ஆனால், எந்த நீதிமன்றத்திலும் நேரடியாக செயல்படுத்த முடியாது. 


1977-ம் ஆண்டு முதல், உச்ச நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் சட்டப்பிரிவு 39(பி)-ன் விளக்கத்தை எடுத்துரைத்துள்ளது. குறிப்பாக, கர்நாடக அரசு vs ஸ்ரீ ரங்கநாத ரெட்டி-1977 (State of Karnataka vs Shri Ranganatha Reddy) வழக்கு ஆகும். இந்த வழக்கில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 4: 3 என்ற பெரும்பான்மையில், தனியாருக்குச் சொந்தமான வளங்கள் "சமூகத்திற்கு சொந்தமான வளங்களின்" வரம்பிற்குள் வராது என்று கூறியது. இருப்பினும், நீதிபதி கிருஷ்ண ஐயரின் கருத்துதான் அடுத்தடுத்த ஆண்டுகளில் செல்வாக்கு பெற்றது.


சஞ்சீவ் கோக் உற்பத்தி நிறுவனத்துக்கு vs பாரத் கோக்கிங் நிலக்கரி-1983 (Sanjeev Coke Manufacturing Company vs Bharat Coking Coal) என்ற வழக்கில் 39(b) பிரிவு பின்னர் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மூலம் உறுதி செய்யப்பட்டது. நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அவற்றின் கோக் உள்கட்டமைப்பு ஆலைகளை தேசியமயமாக்கும் ஒன்றிய சட்டத்தை நீதிமன்றம் உறுதி செய்தது. "செல்வத்தை தனியார் சொத்திலிருந்து பொது சொத்தாக மாற்றுவதை” இந்த விதி உள்ளடக்கியது என்று நீதிமன்றம் கூறியது. ஏற்கனவே, பொது சொத்தாக இருப்பதை கட்டுப்படுத்தப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது. 


நீதிபதி கிருஷ்ண ஐயரின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் இப்போது திறம்பட எதிர்த்துள்ளது. இந்த தீர்ப்பின் முழு விவரம் எதிர்பார்க்கப்படும் அதே வேளையில், ஒரு தனிநபருக்கு சொந்தமான ஒவ்வொரு சொத்தும் சமூகத்திற்கு சொந்தமான வளங்களாக" (material resources of the community) இருக்க முடியாது என்ற கருத்தை பெரும்பான்மையான பார்வைகள் கொண்டுள்ளன. 




Original article:

Share:

ஜார்கண்ட் பழங்குடியினர் தங்கள் உரிமைகளுக்காக நூற்றாண்டுகளாக எப்படிப் போராடி வந்தனர்? -நிகிதா மோஹ்தா

 ஜார்க்கண்ட் மாநிலத்தின் வரலாறு எப்போதும் அதன் பழங்குடி சமூகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. உண்மையில், தனி மாநிலத்தை உருவாக்குவதற்கு வழிவகுத்த இயக்கம் 1767-ம் ஆண்டில் பிரிட்டிஷாருக்கு எதிரான ஒரு பழங்குடி கிளர்ச்சியுடன் தொடங்குகிறது. 


ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக சமீபத்தில் வெளியிட்டது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code (UCC)) அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில், பழங்குடி சமூகங்கள் இதன் விதிகளில் இருந்து விலக்கப்படும் என்றும், அவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பேணப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


ஜார்க்கண்ட் மாநில பழங்குடியினரின் நலனுக்கான இந்த அர்ப்பணிப்பு புதியதல்ல. இது, மாநிலத்தின் பழங்குடி மக்களின் தேவைகள் மற்றும் நலன்கள் தேர்தல் அறிக்கைகளில் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. இது மாநிலத்தில் இந்த சமூகத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமூக-அரசியல் நிலப்பரப்பில் பழங்குடியினர் முக்கிய பங்கு வகித்துள்ளனர் மற்றும் அவர்களின் போராட்டங்கள் பல வரலாற்று நிகழ்வுகளைத்  தூண்டியுள்ளன. 


ஜார்க்கண்ட் மாநிலத்தின் பெரும்பகுதி கிழக்கு இந்தியாவில் உள்ள சோட்டா நாக்பூர் பீடபூமியில் அமைந்துள்ளது. 1765-ம் ஆண்டில், வங்காளம், பீகார் மற்றும் ஒரிசா போன்ற பிராந்தியங்களுக்கு முகலாயர்கள் திவானி உரிமைகளை வழங்கிய பின்னர், ஆங்கிலேயர்கள் பீகாரின் ஒரு பகுதியான ஜார்க்கண்ட் மீது வருவாய் ஈட்ட அனுமதியைப் பெற்றனர். 


பல ஆண்டுகளாக, சோட்டா நாக்பூர் பீடபூமியில் முண்டா, சந்தால், ஓரான், ஹோ மற்றும் பிர்ஹோர் போன்ற பல்வேறு பழங்குடியினரின் தாயகமாக உள்ளது. லக்னோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் சமூக மானுடவியல் பேராசிரியரான நதீம் ஹஸ்னைன், தனது ”பழங்குடியினர் இந்தியா” (Tribal India) என்ற புத்தகத்தில், இந்த பழங்குடியினரைச் சேர்ந்த தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயிகள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த எண்ணிக்கை அனைத்து பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கும், தேசிய சராசரியான 44.7 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. இவர்கள், சாகுபடியை நம்பியிருப்பது அவர்களுக்கு நிலத்தை ஒரு முக்கிய சொத்தாக ஆக்குகிறது.


18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஆங்கிலேயர்கள் தங்கள் அதிகாரத்தை விரிவுபடுத்தியபோது, அவர்கள் வணிக விவசாயம் மற்றும் சுரங்கத்தை ஊக்குவிக்கும் பல்வேறு நிர்வாக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தினர். இதனால், பல பழங்குடியினரை தங்கள் பூர்விக நிலங்களிலிருந்து இடம்பெயரச் செய்தது. இந்த வளச் சுரண்டலுக்கு எதிர்வினையாக, பழங்குடியினத் தலைவர்கள் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்க்கவும், தங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இயக்கங்களையும், கிளர்ச்சிகளையும் நடத்தினர். 


மறைந்த அறிஞர்களான ராம் தயாள் முண்டா மற்றும் பிஷேஷ்வர் பிரசாத் கேசரி ஆகியோர் 2003-ம் ஆண்டு எழுதிய 'ஜார்க்கண்ட் இயக்கத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள்' (Recent Developments In The Jharkhand Movement) என்ற கட்டுரையில், 1769-93 ஆம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டம் ”வெளிப்படையான கிளர்ச்சியின் காலம்” (period of open revolt) என்று குறிப்பிடுகின்றனர்.


தால் கிளர்ச்சி முதல் முண்டா கிளர்ச்சி வரை 


ஜார்க்கண்டில் ஆங்கிலேய ஆட்சியின் போது நடந்த முதல் பழங்குடியினர் கிளர்ச்சி 1767-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியான தல்பூமின் முன்னாள் மன்னர் ஜகந்நாத் தால் தலைமையில் நடந்த ‘தால் கிளர்ச்சி (Dhal Revolt)’ ஆகும். உள்ளூர் மக்களை ஒடுக்கப்பட்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் தூண்டப்பட்ட இந்த கிளர்ச்சி 10 ஆண்டுகள் நீடித்தது. நடந்து கொண்டிருந்த கிளர்ச்சியின் அமைதியின்மைக்கு பதிலளிக்கும் விதமாக, ஆங்கிலேயர்கள் 1777-ம் ஆண்டில் ஜகந்நாத் தாலை தால்பமின் ஆட்சியாளராக மீண்டும் நியமித்தனர். 


இருப்பினும், இது ஒரு ஆரம்பம்தான். அதைத் தொடர்ந்து பல கிளர்ச்சிகள் நடந்தன. அவற்றில், இரண்டு குறிப்பிடத்தக்க கிளர்ச்சிகள் முண்டா கிளர்ச்சி மற்றும் தானா பகத் இயக்கம் என்று ஹஸ்னைன் கூறுகிறார். "பீகார்-ஜார்க்கண்ட் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட பழங்குடி இயக்கங்களில், பிர்சா இயக்கம் மிகவும் பரவலானது மற்றும் நன்கு அறியப்பட்டதாகும். தானா பகத் இயக்கத்திற்குப் பிறகு, நீண்டகால சமூக-அரசியல் தாக்கங்களின் பன்முக முக்கியத்துவம் காரணமாக மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது" என்று ஹஸ்னைன் குறிப்பிடுகிறார். 


1899 முதல் 1900-ம் ஆண்டு வரை நீடித்த முண்டா கிளர்ச்சி, ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் கந்துவட்டிக்காரர்களின் கீழ் பாரம்பரியமாக விவசாயிகளாக இருந்த முண்டாக்கள் எதிர்கொண்ட சுரண்டலுக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க பதிலாக கிளர்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த கிளர்ச்சிக்கு பிர்சா முண்டா தலைமை தாங்கினார். அவர் தெய்வீக உத்வேகம் கொண்ட ஒரு இளம் மற்றும் துடிப்பான தலைவர் ஆவார். இந்த இயக்கம் கொரில்லா போர் மற்றும் காலனித்துவ சொத்துக்கள் மற்றும் அதிகாரிகள் மீது நேரடி தாக்குதல்களை நடத்தியது.


இந்த இயக்கம் ஜார்க்கண்டில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பரவலான ஒன்றாகும். அது தெளிவான நோக்கங்களைக் கொண்டிருந்தது. இது, ஆங்கிலேய  அரசாங்கத்தை தூக்கியெறிவது, பிராந்தியத்திலிருந்து வெளிநாட்டினரை வெளியேற்றுவது மற்றும் ஒரு சுதந்திரமாக முண்டா அரசை நிறுவுவது, கந்துவட்டிக்காரர்கள், நில உரிமையாளர்கள், அறக்கட்டளைகள் மற்றும் பிற ஒடுக்குமுறையாளர்களை குறிவைத்து தைரியமாக போராட்டத்தில் இணையுமாறு  பிர்சா தனது ஆதரவாளர்களை வலியுறுத்தினார். ஆரம்பத்தில் ராஞ்சியில் ஆங்கிலேய கம்பெனி இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பிர்சா விரைவில் விடுவிக்கப்பட்டு தனது படைகளை அணிதிரட்ட மீண்டும் திரும்பினார். 


டிசம்பர் 25, 1897 அன்று, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை மூலதனமாகக் கொண்டு, பிர்சா உள்ளூர் கிறிஸ்தவ மக்களை குறிவைத்து ஒரு திடீர் தாக்குதலைத் திட்டமிட்டார். இதன் விளைவாக, வன்முறை ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் கிளர்ச்சியை அடக்கி, பிர்சா மற்றும் அவரது கூட்டாளி கயா முண்டாவை கைது செய்தனர். இறுதியில், போதுமான மருத்துவ வசதி இல்லாததால் 1900-ம் ஆண்டில் பிர்சா சிறையில் மரணத்திற்கு வழிவகுத்தது. 


கிளர்ச்சியின் அடக்குமுறை இருந்தபோதிலும், முண்டா கிளர்ச்சி நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, முண்டா மக்களால் பிர்சா ஒரு வீரனாகவும் தியாகியாகவும் நினைவுகூரப்படுகிறார்.


தானா பகத் இயக்கம் 1914-ம் ஆண்டில் தொடங்கியது. இது, பிர்சா இயக்கத்துடன் இணைந்து உருவானது. ஒரான் பழங்குடியினரின் தலைவரான ஜத்ரா பகத் என்பவரால் இந்த இயக்கம் நிறுவப்பட்டது. பகத் பாரம்பரிய நடைமுறைகளுக்கு திரும்ப அழைப்பு விடுத்தார். அவர் காலனித்துவ ஆட்சி மற்றும் மேற்கத்திய நாடுகளின் தாக்கங்களை நிராகரித்தார். பகத் விவசாய பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, ‘வாடகை தராத’ பிரச்சாரத்தைத் தொடங்கினார். இதில், கட்டாய அல்லது குறைந்த ஊதிய வேலைகளை மறுக்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்தினார். 


தானா பகத்கள் புரட்சிகர இந்து காங்கிரஸ் தொழிலாளர்களுடன் கூட்டணி வைத்தனர். அவர்கள் சத்தியாகிரகம், ஒத்துழையாமை மற்றும் கீழ்ப்படியாமை இயக்கங்களில் தீவிரமாகப் பங்குகொண்டனர். வன்முறையற்ற இந்திய தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக, அவர்கள் காங்கிரஸ் தொழிலாளர்களுடன் இணைந்து மதுபானக் கடைகளைத் தாக்கவும், உள்கட்டமைப்புகளை அழிக்கவும், காவல் நிலையங்கள் மற்றும் காலனித்துவ அரசாங்க அலுவலகங்களைத் தாக்கவும் முயன்றனர். இந்த இயக்கம் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. இது அகிம்சை மற்றும் கூட்டு நடவடிக்கை போன்ற கருத்துக்களை அறிமுகப்படுத்தியது, பின்னர் அவை பரந்த சுதந்திரப் போராட்டத்தில் இணைக்கப்பட்டன.


இந்த இரண்டு இயக்கங்களின் மரபு ஜார்க்கண்டின் பழங்குடி சமூகங்களுக்குள் தொடர்ந்து எதிரொலிக்கிறது. இது, அவர்களின் கலாச்சார மற்றும் அரசியல் முயற்சிகளை இன்றுவரை வடிவமைக்கிறது. 


ஒரு புதிய மாநிலம் உருவாகிறது 


ராம் தயாள் முண்டா மற்றும் பிஷேஷ்வர் பிரசாத் கேசரி ஆகியோர் 1986-ம் ஆண்டு முதல் (அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டபோது, அதைத் தொடர்ந்து 1987-ல் ஜார்க்கண்ட் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டபோது) "மறுசீரமைப்புக் காலம்" (Period of Reconstruction) பற்றி குறிப்பிடுகின்றனர். இது இறுதியில் ஜார்க்கண்ட் இயக்கத்திற்கும், 2000-ம் ஆண்டில் ஒரு தனி மாநிலத்தை உருவாக்குவதற்கும் வழிவகுத்தது. 


இந்த அரசியல்-புவியியல் பிரதேசத்திற்கான உரிமைகோரலின் அடிப்படை அதன் கலாச்சார தொடர்ச்சி, இயற்கையின் சீரான தன்மை மற்றும் அதன் பொருளாதார வாழ்க்கையின் கட்டமைப்பு ஒருமைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த இயக்கம் யதார்த்தமான நலன்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் கூட ஒப்புக் கொண்டுள்ளது என்று அவர்கள் மேலும் கூறுகின்றனர். 


ஜார்கண்ட் இயக்கத்தை ஆராய்வது ஜார்கண்டி கலாச்சாரம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வாறு மெதுவாக சிதைந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது என்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த செயல்முறை ஆங்கிலேயர்களின் வருகையுடன் தொடங்கி, சுதந்திரத்திற்குப் பிறகும் இன்றுவரை தொடர்கிறது.


ஜார்க்கண்ட் இயக்கத்தின் உணர்வை 1767-ம் ஆண்டில் ஜகந்நாத தால் கிளர்ச்சியில் காணலாம். இன்று, மாநிலத்தில் வசிப்பவர்கள், குறிப்பாக பழங்குடி சமூகங்கள், நிலத் தகராறுகள், குறைந்த கல்வியறிவு விகிதங்கள் மற்றும் தொடர்ச்சியான வறுமை மற்றும் வேலையின்மை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சவால்களை தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். விரைவான தொழில்துறை வளர்ச்சி மற்றும் மின் திட்டங்களுக்கு மத்தியில், பொருளாதார சுரண்டல் அவர்களின் கூட்டு அடையாளத்தின் மைய அம்சமாக உள்ளது.




Original article:

Share: