மூலதனச் செலவு குழப்பநிலை : பொருளாதாரத் தரவு மற்றும் கொள்கை குறித்து . . .

 தனியார் முதலீடுகள் இன்னும் நிச்சயமற்றவை. இது வளர்ச்சி குறித்த கவலைகள் காரணமாகும்.


கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, பொருளாதார மீட்சியை அதிகரிக்க உள்கட்டமைப்பில் பொது மூலதனச் செலவினங்களை (public capital expenditure) ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது. உள்கட்டமைப்பு கட்டுமானமானது சிமென்ட் மற்றும் எஃகு போன்ற பொருட்களுக்கான தேவையை அதிகரிக்கும், கட்டுமானத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் வலுவான பொருளாதார தாக்கத்தைத் தூண்டும் என்பது இதன் கருத்து. இறுதியில் தனியார் முதலீட்டாளர்கள் பசுமை மற்றும் பழுப்புத் திட்டங்களைத் (greenfield and brownfield projects) திட்டமிடுவதற்கு சாதகமான நிலைமைகளை உருவாக்கும். 2024-25 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த ஐந்தாண்டுகளில் உள்கட்டமைப்புக்கான வலுவான நிதி ஆதரவை, மற்ற முன்னுரிமைகள் மற்றும் நிதி ஒருங்கிணைப்பு ஆகியவற்றுகளுடன் இணைந்து சமநிலைப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து  முன்னுரிமை அளிக்கும் என்று கூறினார். இந்த ஆண்டு மூலதனச் செலவினங்களுக்கு ₹11.11 லட்சம் கோடியை அவர் அறிவித்தார், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4% ஆகும். தேர்தலால், பாதிக்கப்பட்ட முதல் காலாண்டில் செலவினக் கட்டுப்பாடுகள் காரணமாக அந்த இலக்கை அடைய வாய்ப்பில்லை. 2025-26ஆம் ஆண்டிலும் மூலதனச் செலவினம் (capital expenditure) உந்துதலைத் தொடருமாறு தொழில்துறையினர் ஒன்றியத்தை வலியுறுத்தியிருந்தாலும், அரசாங்கத்தின் தொடர்ச்சியான தூண்டுதல்கள் மற்றும் அவர்களின் சொந்த செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான தூண்டுதல்களுக்கு பதிலளிக்கத் தவறிவிட்டது.


இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் இரண்டு தனியார் முதலீட்டுத் திட்டங்களில், குறிப்பாக உள்நாட்டுத் தொழில்துறையில் குறிப்பிடத்தக்க தொடர்ச்சியான சரிவை பதிவு செய்துள்ளதாக தரவு காட்டுகிறது. முதல் காலாண்டில் (Q1), தனியார் மூலதனச் செலவினத் திட்டங்கள் (private capital expenditure (capex) plans) பல ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவிற்குக் குறைந்துவிட்டன. மேலும், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் முதலீட்டு நோக்கங்களில் ஒரு மீட்சியைப் பதிவு செய்திருந்தாலும், அந்த உயர்வு மூன்றாம் காலாண்டில் (Q3) முன்னேற்றம் மங்கிவிட்டது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின்படி, (Centre for Monitoring Indian Economy reports) உள்நாட்டு முதலீடுகளின் மதிப்பு இரண்டாம் காலாண்டிலிருந்து (Q2) 1.4% குறைந்துள்ளதாகவும், புதிய திட்டங்களின் மதிப்பு ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 22%க்கு மேல் குறைந்துள்ளதாகவும் திட்டங்களின் இன்றைய தரவு தெரிவிக்கிறது. 


பெருநிறுவனங்கள் ஆபத்தான திறனில் பல காரணிகள் உள்ளன. அவை, பலவீனமான இரண்டாம் காலாண்டின் முடிவுகள், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள், அதிகரித்த செலவுகள் மற்றும் அதிக லாபகரமான நகர்ப்புற சந்தைகளில் தேவை குறைந்து வருகிறது. மூன்றாவது காலாண்டின் ஆரம்ப முடிவுகள், தேவை மேம்படவில்லை என்றும், தொழிற்த்துறைத் திறன்கள் விரிவடைவதற்கான தெளிவான அழுத்தம் இல்லை என்றும் கூறுகின்றன. இந்த மந்தநிலையிலிருந்து ஒரு நிலையான மீட்சிக்கு, தனியார் மூலதனம் முன்னிலை வகிக்க வேண்டும். ஏனெனில், நிதி ஒழுக்கத்தைப் பேணுவதோடு, நலத்திட்டங்களுக்கு நிதியளிக்கும் அதே வேளையில், பொது மூலதனத்தை அதிகரிப்பதற்கும் வரம்புகள் உள்ளன. தொழில்துறைக்கான அறிவுரைகள் புதிய செலவினங்களைத் தூண்டுவதற்கு வாய்ப்பில்லை என்பதையும், இறக்குமதி-மாற்றீடு போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தும் ஊக்கத்தொகை போதுமானதாக இல்லை என்பதையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு திட்டம் சாத்தியமற்றதாகவும், தேவை நிச்சயமற்றதாகவும் இருந்தால், புதிய நிதிகள் எதுவும் முதலீடு செய்யப்படாது. 


முதலீட்டிற்கான சரியான நிலைமைகளை உருவாக்குவதிலும், அந்தத் திட்டங்கள் உண்மையான திட்டங்களாகவும் வேலை வாய்ப்புகளாகவும் மாற உதவுவதிலும் கொள்கைக் கவனம் செலுத்த வேண்டும். வருமானம் மற்றும் நுண்-நிலை சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது மிகவும் முக்கியமானது. அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை கோடிட்டுக் காட்ட பட்ஜெட்டில் வாக்குறுதியளிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பு பின்னர் குறிப்பிடப்படவில்லை என்பது கவலை அளிக்கிறது.




Original article:

Share:

இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்திற்கு (IMEC) முன்னுரிமை அளிப்பது அமெரிக்காவிற்கு நன்மை அளிக்கிறது -சஞ்சீவ் ஜோஷிபுரா, கபில் சர்மா

 பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தத் திட்டத்தை நிறைவு செய்வதை அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும்.


அமெரிக்காவும் இந்தியாவும் பல ஆண்டுகளாக வலுவான இராஜதந்திர கூட்டாண்மையை உருவாக்கியுள்ளன. இது 1990-ம் ஆண்டுகளில் கிளிண்டன் நிர்வாகம் இருநாடுகளின் உறவுக்கு ஒரு புதிய பாதையை அமைத்தபோது இருநாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு தொடங்கியது. இன்று, இரு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொள்கிறார்கள். பொருளாதார வளர்ச்சி, பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஜனநாயக மதிப்புகள் போன்ற பொதுவான இலக்குகள் இரு நாடுகளையும் நெருக்கமாகக் கொண்டுவருகின்றன. உலகளாவிய அளவில் இயக்கவியல் (Global dynamic) மாறும்போது, ​​இந்தக் கூட்டாண்மை டிரம்ப் நிர்வாகத்தில் இன்னும் முக்கியமானதாகிவிட்டது.


இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor (IMEC)) ஒப்பந்தமானது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இது, அமெரிக்கா மற்றும் இந்தியா இரண்டு நாடுகளுக்கும் இராஜதந்திர ரீதியில் நலன்களை ஊக்குவிக்கும் அதே வேளையில், இந்த பலதரப்பு கூட்டாண்மையை அவர் வலுப்படுத்த முடியும். சம்பந்தப்பட்ட நாடுகளிடையே ஒத்துழைப்பைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருப்பதன் மூலம், வலுவான பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்க முடியும். இந்த வழித்தடம் சுதந்திரமான மற்றும் திறந்த வர்த்தக வழித்தடங்களை ஆதரிக்கும். இது எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதோடு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கும். இந்த முன்னேற்றங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.


இப்போது மிகவும் கருத்தியல் சார்ந்தது


2023-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட, இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடமானது (IMEC) மேம்பட்ட நேரடி மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு (physical and digital infrastructure) மூலம் மூன்று முக்கிய பிராந்தியங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட வலையமைப்பை உருவாக்குவதற்கான ஒரு லட்சியப் பார்வையை பிரதிபலிக்கிறது. இரயில்வே, கப்பல் பாதைகள் மற்றும் கடல்சார் இணைப்புகள் உள்ளிட்ட திறமையான போக்குவரத்து வழிகளை இந்த வழித்தடம் உருவாக்க வேண்டும். அதே நேரத்தில், எல்லை தாண்டிய மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் குழாய்கள் மற்றும் டிஜிட்டல் தொடர்பு கேபிள்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. IMEC-யின் முக்கிய குறிக்கோள்கள் வர்த்தக இணைப்புகளை மேம்படுத்துவதும், போக்குவரத்து செலவுகளைக் குறைப்பதும் ஆகும். அதே நேரத்தில், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை மேலும் பன்முகப்படுத்துவதும், பங்கேற்கும் நாடுகளிடையே வலுவான பொருளாதார உறவுகளை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும். இவற்றில் இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஆணையம் ஆகியவை அடங்கும்.


தற்போது, இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) என்பது உறுதியானது என்பதைவிட கருத்தியல் ரீதியானது என்று கூறுவது நியாயமானது. அதன் லட்சிய இலக்குகளை அடைவதற்கு விரிவான திட்டமிடல் மற்றும் வலுவான ஒத்துழைப்பு தேவைப்படும். இந்த விஷயத்தில் டிரம்ப் நிர்வாகத்தின் தலைமையானது, சர்வதேச அரங்கில் அவரது நிலைப்பாட்டை மேம்படுத்த முடியும். IMEC-ஐ ஆதரிப்பதன் மூலம், அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சிக்கு (Belt and Road Initiative (BRI)) ஒரு வலுவான மாற்றீட்டை உருவாக்க முடியும். இந்த மாற்று மேற்கத்திய நாடுகளின் ஜனநாயக மதிப்புகள் மற்றும் சந்தைக் கொள்கைகளை பிரதிபலிக்கும் ஒரு சமநிலையான உலகளாவிய பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.


இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) ஒருபோதும் நேரடியான முயற்சியாக இருக்க விதிக்கப்படவில்லை. பங்கேற்கும் ஒவ்வொரு நாடும் முதலீடு, அரசியல் விருப்பம் மற்றும் பொருளாதார உத்திகளை கவனமாக சமநிலைப்படுத்த வேண்டும். மேலும், மற்ற தேசிய முன்னுரிமைகளுடன் நேரடியாக போட்டியிடும் கணிசமான உள்கட்டமைப்பு சார்ந்த முதலீடுகளை இந்த வழித்தடம் கோருகிறது. மேலும், தனியார் துறை ஈடுபாடானது சிக்கலான மற்றொரு நிலையை அறிமுகப்படுத்துகிறது. இதில், பெருநிறுவன முதலீட்டாளர்களுக்கு முதலீட்டைத் திரும்பப் பெற தெளிவான பாதைகள் தேவை மற்றும் தனியார் துறையின் தீவிர ஈடுபாடு இல்லாமல், இந்த திட்டம் வெற்றியடைவது சாத்தியமில்லை.


கிரீஸ் மற்றும் இத்தாலி போன்ற பல நாடுகள் இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தில் (IMEC) கணிசமான முன்முயற்சியைக் காட்டியுள்ளன. ஒரு பாரம்பரிய இராஜதந்திரிக்கு (traditional diplomat) அல்லாத, ஜெரார்ட் மெஸ்ட்ரலெட் (Gérard Mestrallet) சிறப்புத் தூதராக நியமிப்பதன் மூலம் பிரான்ஸ் ஒரு தனித்துவமான நடவடிக்கையை எடுத்துள்ளது. பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் இந்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார முன்முயற்சிக்கு தலைமை தாங்குவதற்கு பிரான்சில் இருந்து ஒரு வணிகத் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஏனெனில், அவர் பிரான்சுக்கான அதன் பொருளாதார திறனை அங்கீகரிக்கிறார். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை மேற்கத்திய நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்துவதில் IMEC வகிக்கக்கூடிய பங்கை பாராட்டுகின்றன. மேலும், அதை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. வழக்கமான, இராஜதந்திர ஈடுபாடு இல்லாமல், பங்கேற்கும் நாடுகளிடையே பதற்றம் மற்றும் அரசியல் உராய்வை உருவாக்கக்கூடிய ஒரு சீரற்ற பொருளாதார நிலப்பரப்பை உருவாக்கும் குறிப்பிடத்தக்க ஆபத்து உள்ளது. இந்த வழித்தடமானது கடலோரப் பகுதிகள் மற்றும் முதன்மை துறைமுகங்களுக்கு மட்டுமல்ல, இந்த விரிவான வர்த்தக வலையமைப்பில் முக்கியமான முனைகளாக மாறக்கூடிய உள்நாட்டுப் பகுதிகளுக்கும் உருமாறும் பொருளாதார வாய்ப்புகளை வழங்குகிறது. இப்பிராந்தியத்திற்குள் கூட, ஈராக் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் IMEC-ஐ ஆதரிக்க ஏற்கனவே வர்த்தக ஒப்பந்தங்களைத் தொடங்கியுள்ளன.


சீனாவின் BRI க்கு மாற்றாக


இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகளை வழங்குகிறது. இது வர்த்தக செலவுகளை வெகுவாகக் குறைக்கும் மற்றும் கடல்சார் தளவாடங்களை மேம்படுத்தும். இந்த வலையமைப்பு சூயஸ் கால்வாயில் ஏற்படக்கூடிய இடையூறுகள் போன்றவற்றின் அபாயத்தையும் குறைக்கிறது. இது அதிக வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கு வலுவான வாய்ப்புகளை உருவாக்குகிறது. BRI-க்கு மாற்றாக செயல்படுவதன் மூலம், இந்த வழித்தடம் இந்தியா மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் வலுவான இராஜதந்திர உறவுகளை உருவாக்க உதவுகிறது.


சுற்றுச்சூழலுக்கு சிறந்தது


இந்த ஒப்பந்தம் பூமியின் காலநிலை ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய தாக்கங்களைக் கொண்டுள்ளது. இந்தியா பசுமை ஹைட்ரஜன் வளர்ச்சியில் ஒரு முக்கிய நட்பு நாடாக மாறியுள்ளது. தற்போது, வளர்ந்து வரும் சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. பசுமை ஹைட்ரஜனை உருவாக்க நாடு லட்சிய முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. தூய்மையான ஆற்றலுக்கு மாறுவதற்கும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் அதன் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.


இந்தியா ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற சர்வதேச கூட்டணி நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது. அவர்கள், பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்தல், சேமித்தல் மற்றும் கொண்டு செல்வதற்கான உள்கட்டமைப்பை உருவாக்கி வருகின்றனர். இந்த முயற்சி கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க உதவும். இது புதைபடிவ எரிபொருள் இறக்குமதியைச் சார்ந்திருப்பதையும் குறைக்கும். கூடுதலாக, இது வளர்ந்து வரும் பசுமை தொழில்நுட்பத் துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.


ஆபிரகாம் உடன்படிக்கைகளை எளிதாக்குவதில் டிரம்ப் நிர்வாகத்தின் பங்கு, இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை (IMEC) சாத்தியமாக்கிய இராஜதந்திர நிலைமைகளை உருவாக்க உதவியது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் IMEC-ன் வலுவான ஆதரவாளராக இருந்துள்ளார். எதிர்காலத்தைப் பார்க்கும்போது, ​​புதிய அமெரிக்கத் தலைமையின் கீழ் IMEC-ன் எதிர்காலம் குறித்து இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான டிரம்பின் அன்பான தனிப்பட்ட உறவு ஒரு புதிரான காரணியாகும். இந்த நல்லுறவு தற்போதைய உறவுகளுக்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும். இப்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை (peace agreement) ஏற்பட்டுள்ளதால், அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பற்றி விவாதிக்க இரு நாட்டு தலைவர்களும் IMEC பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்க உதவ முடியும்.


இந்த முயற்சி பாரம்பரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அப்பாற்பட்டது. இது பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வது பற்றியது. இதற்கு பல பங்குதாரர்களிடையே முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. வழித்தடத்தின் முக்கிய தலைவர்களாக அமெரிக்காவும் இந்தியாவும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும். மேலும், அவர்கள் இந்த திட்டத்தை நிறைவு செய்ய வழிகாட்ட வேண்டும். இதில், பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் அதன் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் இரண்டையும் அங்கீகரிக்க வேண்டும்.


சஞ்சீவ் ஜோஷிபுரா இந்தியாஸ்போராவின் நிர்வாக இயக்குநராக உள்ளார். கபில் சர்மா கேப்ஸ்டோன் ஸ்ட்ராடஜீஸ் நிறுவனத்தில் முதல்வராக உள்ளார். அட்லாண்டிக் கவுன்சிலில் அவர் ஒரு ஆய்வாளராகவும் உள்ளார்.




Original article:

Share:

பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளா அல்லது மாநில பல்கலைக்கழக சட்டங்களா? -கே. அசோக் வர்தன் ஷெட்டி

 பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission (UGC)) தலைவர், துணைத் தலைவர் மற்றும் 10 உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் மாற்றியமைக்கப்பட்ட விதிகள் (supersede provisions), மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மற்றும் ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட முழுமையான சட்டங்களான (plenary laws) மாநிலப் பல்கலைக்கழகச் சட்டங்களின் விதிகளை மீற முடியுமா என்பதுதான் முக்கியப் பிரச்சினையாக உள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள ஆறு மாநிலப் பல்கலைக்கழகங்களில் தற்போது துணைவேந்தர் இல்லை. இந்தப் பதவிகள் சில மாதங்களாக காலியாக உள்ளன. மற்றவை ஒரு வருடத்திற்கு மேல் காலியாக உள்ளன. துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேடல் குழுவை (search committee) எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே நிலவும் கருத்து    வேறுபாட்டின் காரணமாக துணைவேந்தர்களை நியமிப்பதற்கு தாமதம் ஏற்படுகிறது.


ஆளுநர் பல்கலைக்கழகச் சட்டங்களின் கீழ் மாநில பல்கலைக்கழகங்களின் முன்னாள்-அலுவல் வேந்தராக (ex-officio Chancellor) தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவில் ஒரு உறுப்பினரைச் சேர்க்க விரும்புகிறார். இது பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள், 2018-ன் விதிமுறை 7.3-ஐ அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும் இதை மாநில அரசு ஏற்கவில்லை. அதற்குப் பதிலாக மாநில பல்கலைக்கழகச் சட்டங்களைப் பின்பற்ற மாநில அரசு விரும்புகிறது. இந்தச் சட்டங்கள் தேடல் குழுவில் வேந்தர், ஆட்சிக்குகுழு (syndicate) மற்றும் பல்கலைக்கழகப் பேரவையில் (senate) இருந்து தலா ஒரு உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று கோருகின்றன. பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலையீடு மாநில சுயாட்சிக்கு (State autonomy) பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தின் காரணமாக, மாநில அரசு இதை எதிர்க்கிறது.


உச்சநீதிமன்றத்தின் முரண்பாடான தீர்ப்புகளால் நிலைமை சிக்கலாக உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் ஒரு தொகுப்பு ஆளுநரின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறது. இந்த தீர்ப்புகள் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகள் கட்டாயம் என்று கூறுகின்றன. கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகள் மாநில பல்கலைக்கழக சட்டங்களை மீறலாம் என்றும் கூறுகின்றன. மற்றொரு, தொகுப்பு தீர்ப்புகள் மாநில அரசாங்கத்தை ஆதரிக்கின்றன. இந்தத் தீர்ப்புகள் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகள் மாநில பல்கலைக்கழகங்களுக்கான பரிந்துரைகள் மட்டுமே என்று கூறுகின்றன. பல்கலைக்கழக மானியக் குழு உருவாக்கியுள்ள வரைவு விதிமுறைகளின் (UGC’s Draft Regulations,2025) காரணமாக சர்ச்சை மேலும் அதிகரித்துள்ளது. இந்த வரைவு விதிமுறைகள் மாநில சுயாட்சியை மேலும் குறைப்பதாகக் கருதப்படுகிறது.


கேரளா மற்றும் பஞ்சாபிலும் இந்த நிலையே தொடர்கிறது. அங்கும் பல பல்கலைக்கழகங்களில் வேந்தர்கள் இல்லை. இது பல்கலைக்கழக நிர்வாகத்தில் பணியாளர் நியமனங்களில் தாமதம் மற்றும் பட்டங்களை வழங்குதலில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.


ஒரு அரசியலமைப்பு கேள்வி


பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)) விதிமுறைகள் என்பது 1956ஆம் ஆண்டு UGC சட்டத்தின் பிரிவு 26-ன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் ஆகும். தலைவர், துணைத் தலைவர் மற்றும் 10 உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள், மாநில பல்கலைக்கழக சட்டங்களின் விதிகளை மீற முடியுமா என்பது முக்கிய பிரச்சினை. மாநில பல்கலைக்கழக சட்டங்கள் மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் அல்லது குடியரசுத்தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட முழுமையான சட்டங்கள் ஆகும். இந்த பிரச்சினை ஒன்றிய-மாநில உறவுகள் பற்றிய ஒரு பெரிய சட்டக் கேள்வியின் ஒரு பகுதியாகும். ஒன்றிய அரசு மற்றும் அதன் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் அறிவிப்புகள் ஒரு முழுமையான மாநில சட்டத்தின் விதிகளை மீற முடியுமா?


இந்தப் பிரச்சினை பிரதிநிதித்துவச் சட்டத்தின் நோக்கம் பற்றியது. இந்தச் சட்டம் அதிகாரப் பிரிவினையை பலவீனப்படுத்தக்கூடும். இது கூட்டாட்சித் தத்துவத்தையும் பலவீனப்படுத்தக்கூடும். அதிகாரப் பகிர்வு மற்றும் கூட்டாட்சி இரண்டும் அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களாகக் (basic features) கருதப்படுகின்றன.


நீதித்துறை முன்மாதிரிகள் (Judicial precedents)


அரசியலமைப்பின் பிரிவு 254(1) ஒன்றிய மற்றும் மாநில சட்டங்களுக்கு இடையிலான மோதல்களைக் கையாள்கிறது. ஒரு மாநிலச் சட்டம், பொதுப் பட்டியலில் உள்ள விஷயங்களில் ஒன்றிய அரசின் சட்டத்துடன் முரண்பட்டால், ஒன்றிய அரசின் சட்டமே செல்லும் என்று அது கூறுகிறது. மாநிலச் சட்டத்தின் முரண்பாடான பகுதி செல்லாது. அரசியலமைப்பின் பிரிவு 254(1)-ன் படி, அது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட முழுமையான சட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும், இது பிரதிநிதித்துவ சட்டங்களுக்குப் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் பல முக்கிய தீர்ப்புகளில் இந்தக் கருத்தை நிலைநிறுத்தியுள்ளது.


இது குறித்த ஒரு முன்னணி வழக்கு ச. டிகா ராம்ஜி எதிர் உத்தரபிரதேச மாநில (Ch. Tika Ramji Vs. State of Uttar Pradesh, 1956) வழக்கில், அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955-ன் கீழ் வெளியிடப்பட்ட ஒன்றிய அரசின் கரும்பு கட்டுப்பாட்டு உத்தரவு, 1955, உத்தரபிரதேச கரும்புச் சட்டம், 1953-ஐ மீற முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றம் மேற்படி, “ரத்து செய்யும் அதிகாரம், ஏதேனும் இருந்தால், நாடாளுமன்றத்திடம் இருந்தது. பொருத்தமான விதியை இயற்றுவதன் மூலம் நாடாளுமன்றம் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும். இந்த ரத்து செய்யும் அதிகாரத்தை எந்தவொரு நிர்வாக அதிகாரிக்கும் நாடாளுமன்றம் ஒப்படைக்க முடியாது. அத்தகைய ஒரு பிரதிநிதித்துவம் செல்லாது என்று கூறியது.


இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள்கள் (பம்பாய்) எதிர் யூனியன் ஆஃப் இந்தியா (Bombay VS Union of India, 1984) வழக்கில், உச்சநீதிமன்றம், துணைச் சட்டத்தை முழுமையான சட்டத்தைப் போலவே கேள்விக்குள்ளாக்கலாம் என்று தீர்ப்பளித்தது. அது உருவாக்கப்பட்ட சட்டத்தைப் பின்பற்றவில்லை என்றால் அல்லது அது மற்றொரு சட்டத்திற்கு முரணாக இருந்தால் அதையும் சவால் செய்யலாம். துணைச் சட்டம் முழுமையான சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. ஜே.கே. இண்டஸ்ட்ரீஸ் எதிர் யூனியன் ஆஃப் இந்தியா (J.K. Industries versus Union of India, 2007) வழக்கில், துணைச் சட்டம் சட்டத்தின் விதிகளுக்கு முரணாக இருந்தால் அல்லது அதே விஷயத்தில் மற்றொரு சட்டத்திற்கு முரணாக இருந்தால் அதை கேள்விக்குள்ளாக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் தீர்ப்பளித்தது. துணைச் சட்டம் முழுமையான சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. ஒன்றிய அரசும் அதன் நிறுவனங்களும் மாநில சட்டங்களை மீற துணைச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது. எந்தவொரு மாற்றத்திற்கும் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒன்றிய அரசின் சட்டம் தேவைப்படுகிறது.


பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமீறல் 


பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956 மற்றும் தமிழ்நாட்டின் பல்கலைக்கழக சட்டங்களுக்கு இடையே எந்த முரண்பாடும் இல்லை. ஏனெனில், பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் துணைவேந்தர்கள் நியமனத்தைக் குறிப்பிடவில்லை. பல்கலைக்கழக மானியக் குழுவின் படி, துணைவேந்தர்கள் மீதான ஒழுங்குமுறை 7.3 ஐ உருவாக்கும் அதன் அதிகாரம் பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956-ன் பிரிவு 26(1)(e) மற்றும் பிரிவு 26(1)(g)-லிருந்து வருகிறது. பிரிவு 26(1)(e) பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான தகுதிகளை வரையறுக்க பல்கலைக்கழக மானியக் குழுவை அனுமதிக்கிறது. மேலும் பிரிவு 26(1)(g) பல்கலைக்கழகங்களில் தரநிலைகள் மற்றும் ஒருங்கிணைப்பை ஒழுங்குபடுத்த பல்கலைக்கழக மானியக் குழுவை அனுமதிக்கிறது. இருப்பினும், பிரிவு 26(1)(e)-ன் கீழ் துணைவேந்தர்கள் "கற்பிக்கும் பணியாளர்களாக" (teaching staff) கருதப்படுவதில்லை. ஒன்றிய மற்றும் மாநில பல்கலைக்கழக சட்டங்கள் அனைத்திலும் வேந்தர், துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர், நிதி அதிகாரி மற்றும் இயக்குநர்கள் போன்ற பிற பாத்திரங்களுடன் "பல்கலைக்கழகத்தின் அதிகாரி" என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே, மேலே உள்ள இரண்டு விதிகளும் துணைவேந்தர்களுக்குப் பொருந்தாது.


மேலும், சட்டத்தின் பிரிவு 12(d)-ன் கீழ் பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரங்கள் ஆலோசனை மட்டுமே. பல்கலைக்கழக மானியக் குழுவால் உயர்கல்விக்கான தரநிலைகளை பரிந்துரைக்க முடியும். ஆனால், பிரிவு 14-ன் கீழ் மானியங்களை நிறுத்தி வைப்பதன் மூலம் மட்டுமே அவற்றை அமல்படுத்த முடியாது. டெல்லி பல்கலைக்கழகம் எதிர் ராஜ் சிங் (University of Delhi VS Raj Singh (1994)) வழக்கில் உச்ச நீதிமன்றம் இதை உறுதிப்படுத்தியது. பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள் ஆலோசனை மட்டுமே, கட்டாயம் அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பல்கலைக்கழகங்கள் அவற்றைப் பின்பற்றலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம். ஆனால், அவை அவ்வாறு செய்யாவிட்டால் நிதியை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, துணைவேந்தர்கள் மீதான பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒழுங்குமுறை 7.3, பிரதிநிதித்துவ சட்டத்தில் நிர்வாகத்தின் விதிமீறலுக்கு ஒரு எடுத்துக்காட்டு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டம், 1956-ன் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது.


கூடுதலாக, துணைவேந்தர்கள் குறித்த தனது நிலைப்பாட்டை பல்கலைக்கழக மானியக் குழு பலமுறை மாற்றியுள்ளது. துணைவேந்தர்கள் குறித்து 2010 வரை எந்த ஒழுங்குமுறையும் இல்லை. 2010ஆம் ஆண்டில், UGC தேடல் குழுவில் ஒரு உறுப்பினரை அறிமுகப்படுத்தியது. இந்தத் தேவை 2013-ல் திரும்பப் பெறப்பட்டது. 2018-ல் இது மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. 2025 வரைவு விதிமுறைகள் இந்தக் கட்டுப்பாட்டை மேலும் விரிவுபடுத்துகின்றன. இந்த மாற்றங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் நடவடிக்கைகள் கல்வித் தரங்களை மேம்படுத்துவதைவிட நிர்வாகக் கட்டுப்பாட்டைப் பற்றியது என்பதைக் காட்டுகின்றன.


தீர்ப்புகளில் முரண்பாடுகள்


சமீபகாலமாக, சில முரண்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.


அண்ணாமலை பல்கலைக்கழகம் VS செயலாளர், தகவல் மற்றும் சுற்றுலா வழக்கு 2009, மேற்கு வங்க மாநிலம் VS அனிந்தியா சுந்தர் தாஸ் 2022 , கம்பிர்தன் கே. காத்வி VS குஜராத் மாநிலம் 2022 , மற்றும் பேராசிரியர் ஸ்ரீஜித் பி.எஸ். VS டாக்டர் ராஜஸ்ரீ எம்.எஸ். 2022 உள்ளிட்ட பல வழக்குகளில், பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டவுடன், அவை பல்கலைக்கழக மானியக் குழு  சட்டத்தின் ஒரு பகுதியாக மாறும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த விதிமுறைகளுக்கு எதிரான எந்தவொரு துணைவேந்தர் நியமனங்களும் செல்லாது என்று நீதிமன்றம் பிரிவு 254(1)-ப் பயன்படுத்திக் கொண்டது. இருப்பினும், கல்யாணி மதிவாணன் VS கே.வி. ஜெயராஜ் 2015 வழக்கில், உச்சநீதிமன்றம் அதே காரணத்தைப் பயன்படுத்தியது. ஆனால், மாநிலத்தால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் மாநில பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள் கட்டாயமில்லை என்று கூறியது. பி.ஜே. தர்மராஜ் VS தென்னிந்திய திருச்சபை டிசம்பர் 2024 என்ற வழக்கில், மாநில அரசு திருத்தப்பட்ட விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவை நிறுவனத்திற்குப் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகள் தானாகவே அது உருவாக்கப்பட்டச் சட்டத்தின் ஒரு பகுதியாக மாறும் என்ற கருத்து அரசியலமைப்புச் சட்டத்தினாலோ அல்லது பொது உட்பிரிவுகள் சட்டத்தினாலோ (General Clauses Act, 1897) ஆதரிக்கப்படவில்லை. இந்தக் கருத்து சுரங்கத் தலைமை ஆய்வாளர் VS கரம் சந்த் தாப்பர் 1961 வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முரணானது. விதிகள் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தே இருக்கும் என்று நீதிமன்றம் கூறியது. சில நோக்கங்களுக்காக அவை சட்டத்தில் இருப்பது போல் கருதப்பட்டாலும், அவை துணை விதிகளாகவே இருக்கின்றன. மேலும், அது உருவாக்கப்பட்டச் சட்டத்தின்ஒரு பகுதியாக மாறாது.


ஒரு சட்டமன்றத்தின் முன் துணைச் சட்டத்தை இயற்றுவதற்கு மூன்று அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகள் உள்ளன:


 (i) கூடுதல் நடைமுறை இல்லாமல்: இங்கே துணைச் சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது மற்றும் தகவலுக்காக மட்டுமே பொருந்தும்.


(ii) எதிர்மறைத் தீர்மான நடைமுறை; சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது, ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் சட்டமன்றத்தால் ரத்து செய்யப்படலாம் அல்லது மாற்றப்படலாம். இது பிரிவு 28(1)-ன் கீழ் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்குப் பொருந்தும்.


(iii) உறுதியான தீர்மான நடைமுறை: இங்கே தீர்மானம் சட்டமன்றத்திடமிருந்து முன் ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வரும்.


நீதிமன்றங்கள், உருவாக்கப்பட்ட சட்டத்தின் ஒரு பகுதியாக உறுதிமொழித் தீர்மான நடைமுறையின் கீழ் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மட்டுமே அங்கீகரிக்க வேண்டும். ஏனெனில், மற்ற இரண்டு நடைமுறைகளும் சட்டமன்ற மேற்பார்வை குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பதால், நிர்வாகத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்குகின்றன.


அடுத்து என்ன?


சர்ச்சையின் அரசியலமைப்பு முக்கியத்துவம் மற்றும் கோட்பாட்டு தெளிவற்ற சட்டப் புள்ளிகள் காரணமாக, உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்விடம் இருந்து தெளிவான தீர்ப்பு தேவைப்படுகிறது. இந்தத் தீர்ப்பு, அரசியலமைப்பின் பிரிவு 254(1) ஒன்றிய மற்றும் மாநில சட்டங்களுக்கு இடையிலான மோதல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பிரதிநிதித்துவச் சட்டம் உறுதியான தீர்மான நடைமுறையைப் பின்பற்றாவிட்டால், அது தானாகவே உருவாக்கப்பட்ட சட்டத்தின் ஒரு பகுதியாக மாறாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மேலும் கூடுதலாக, பல்கலைகழகச் சட்டத்தை மாநிலம் ஏற்றுக்கொள்ளாவிட்டால், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) விதிமுறைகள் மாநில பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனையாக இருக்கும் என்பதை வலியுறுத்த வேண்டும்.


நாடு முழுவதும் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் இயல்பான செயல்பாட்டை மீட்டெடுப்பதற்கு மட்டுமல்லாமல், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான சட்டமன்ற அதிகாரங்களின் நுட்பமான சமநிலையைப் பாதுகாப்பதற்கும் இத்தகைய தெளிவான நிலைப்பாடு அவசியம்.


கே. அசோக் வர்தன் ஷெட்டி ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆவார்.




Original article:

Share:

இந்தியாவின் சவால்: சீனாவுடனான உறவுகளை சமநிலைப்படுத்துதல் -ஹேப்பிமோன் ஜேக்கப்

 சீனாவுடனான இந்தியாவின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படாது. சீனா நமக்கு ஒரு முக்கியமான இராஜதந்திர சவாலாக இருக்கும்.


கிழக்கு லடாக்கில் உள்ள டெப்சாங் மற்றும் டெம்சோக் ஆகிய ஃபிளாஷ்பாயிண்ட் பகுதிகளில் படைகளை விலக்குவது மற்றும் 2020ஆம் ஆண்டுக்கு முந்தைய ரோந்து முறைகளை மீண்டும் தொடங்குவது குறித்து கவனம் செலுத்தும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அக்டோபர் 21 ஒப்பந்தம் உண்மையில் வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான படைகளை விலக்கிக் கொள்ளும் செயல்முறையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த ஒப்பந்தம் 2020ஆம் ஆண்டு கோடையில் தொடங்கிய எல்லைப் போட்டியின் பெரும்பகுதியை கவனித்துக்கொள்கிறது. சீனாவுடனான எந்தவொரு எல்லை ஒப்பந்தமும் நேர்மறையானது. ஆனால், எந்தவொரு ஒப்பந்தமும் தேவையற்ற சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் மற்றும் இந்தியாவின் நிலத்தை சீனா தொடர்ந்து எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும்.


கடந்த ஆண்டு அக்டோபர் ஒப்பந்தம் பெரும்பாலும் இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு தற்காலிக நிவாரணமாக பார்க்கப்படுகிறது. மாறாக, 2020ஆம் ஆண்டு எல்லை மோதலுக்கு முந்தைய நிலைமைக்குத் திரும்புவதில்லை. இது ஒரு சரியான ஒப்பந்தம் அல்ல. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அது தேவைப்பட்டது.  இந்த ஒப்பந்தம் தற்காலிகமானது என்றால், மேலும் மோதல்களும் முட்டுக்கட்டைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவுடன் எல்லைத் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதை சீனா தொடர்ந்து தவிர்க்கும். இந்த நடத்தை சீனாவின் வளர்ந்து வரும் சக்தியிலிருந்தும், இந்தியாவுடன் ஒப்பிடும்போது அது தன்னை எவ்வாறு கருதுகிறது என்பதிலிருந்தும் வெளிப்படுகிறது. சீனா தன்னால் முடிந்ததைச் செய்ய விரும்புகிறது மற்றும் இந்தியா அதை ஏற்றுக்கொள்ளும் என்றும்  எதிர்பார்க்கிறது


அக்டோபர் ஒப்பந்தத்தை நீண்டகாலக் கண்ணோட்டத்தில் பரிசீலிப்பது முக்கியம். பல காரணங்களுக்காக சீனா இந்தியாவின் மிகப்பெரிய சவாலாகும். முதலாவதாக, சீனா இந்தியாவை ஒரு சமமான நாடாகப் பார்க்கவில்லை. குறிப்பாக, சீனாவின் சக்தி இந்தியாவைவிட மிக வேகமாக வளர்ந்துள்ளது. இந்த அதிகார வேறுபாடு பிராந்தியத்தில் சமநிலையை சீர்குலைத்துள்ளது. சீனாவும் இந்தியாவை நோக்கி பிராந்திய இலக்குகளைக் கொண்டுள்ளது. இது அவர்களின் உறவை மேலும் சிக்கலாக்குகிறது. இந்தக் காரணிகளைப் பார்க்கும்போது, ​​சீனாவுடனான இந்தியாவின் பிரச்சினை விரைவில் நீங்காது என்பது தெளிவாகிறது. சீனா இந்தியாவிற்கு ஒரு முக்கிய பிரச்சினையாகத் தொடரும். குறுகிய இடைவெளிகள் பிரச்சினையைத் தீர்க்கும் என்று நினைப்பது நடைமுறைக்கு மாறானது.


 இங்கு விவாதிக்கப்படும் காரணிகள் கொள்கை வகுப்பாளர்களையும் மற்றும் உயர் அதிகாரிகளையும் மூன்று முக்கிய முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். முதலாவதாக, சீனாவை சமநிலைப்படுத்துவது மிகவும் முக்கியமானது. அது ஏற்கனவே தாமதமாகிவிட்டாலும் கூட, சீனாவின் வளர்ந்து வரும் சக்தியைச் சமாளிக்க இந்தியா உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


சீனாவின் சவாலை எதிர்கொள்ள உள்நாட்டு சமநிலை என்பது குறிப்பிடத்தக்க பாதுகாப்பு மற்றும் இராணுவ மாற்றங்களைச் செய்வதாகும். வெளிப்புற சமநிலை என்பது இந்தியா இந்த சவாலை நிர்வகிக்க உதவும் கூட்டாளர்களைக் கண்டுபிடிப்பதையும் கூட்டணிகளை உருவாக்குவதையும் உள்ளடக்கும். சீனாவை மட்டும் கையாளும் இந்தியாவின் திறன் பலவீனமடைந்து வருவதாகவும், புதிய கூட்டாளிகள் தேவை என்றும் இந்திய அதிகாரிகள் இப்போது நம்புகிறார்கள்.


சீனாவை சமநிலைப்படுத்த, இந்தியா சரியான கூட்டாளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும். சிறந்த முடிவுகளுக்காக கொள்கைகளை சரிசெய்ய வேண்டும். மேலும், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வாக்குறுதிகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். சீனாவை சமநிலைப்படுத்துவதற்கு அமெரிக்காதான் சிறந்த தேர்வாகும். ஆனால், அமெரிக்காவை அதிகமாக நம்பியிருப்பது ஆபத்துகளைக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் ஆதரவை அதிகம் சார்ந்து இல்லாமல் அல்லது சீனாவுடன் மோதலை ஏற்படுத்தாமல்,  சீனாவின் பிராந்திய ஆதிக்கத்தை சீனாவின் உலகளாவிய செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் குறிக்கோளுடன் இந்தியா சமநிலைப்படுத்த வேண்டும்.

இந்திய அதிகாரிகளிடையே எட்டக்கூடிய ஒரு முடிவு என்னவென்றால், இந்தியா இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்க சக்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான காரணம் எளிமையானது. சீனாவை சவால் செய்ய இந்தியாவிடம் போதுமான பலம் இல்லை. அவ்வாறு செய்ய முயற்சிப்பது அதிக எல்லை மோதல்களுக்கு வழிவகுக்கும். சீனா ஒரு முக்கியமான வர்த்தக நட்பு நாடு ஆகும். மேலும், சீனாவை எதிர்கொள்ள மற்ற நாடுகளை நம்பியிருப்பது எதிர்பாராத பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சீனாவின் ஆதிக்கத்துடன் வாழ்வது என்பது தெற்காசியாவில் இந்தியாவை இரண்டாம் நிலை சக்தியாக ஏற்றுக்கொள்வது மற்றும் சீனா இந்தியப் பெருங்கடலை அதிகமாகக் கட்டுப்படுத்த அனுமதிப்பது மற்றும் சீனாவை கோபப்படுத்தும் செயல்களைத் தவிர்ப்பது என்பதாகும்.


மூன்றாவது முடிவு முதல் இரண்டையும் இணைக்கிறது. நாட்டின் சக்தி வளரும் வரை காத்திருப்பது மற்றும் சீனா பிரச்சினைகளை ஏற்படுத்தாது என்று நம்புவது போன்றது ஆகும். பதட்டங்களைத் தணிக்க வர்த்தகத்தை நம்புவது மற்றும் சீனாவை மறைமுகமாக சமநிலைப்படுத்த கூட்டாளர்களைக் கண்டுபிடிப்பது ஆகியவை இதில் அடங்கும்.


இந்த மூன்று விருப்பங்களில் இந்தியா எதைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது? சிறிய உள் அல்லது வெளிப்புற சமநிலை மற்றும் வளர்ந்து வரும் மற்றும் ஆக்ரோஷமான வல்லரசைச் சமாளிப்பதற்கான தெளிவான உத்தி இல்லாத சீனா ஆதிக்கம் செலுத்தும் பிராந்தியத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா? அல்லது சீனாவை சமநிலைப்படுத்துவதற்கான வழிகள், வழிமுறைகள் மற்றும் கூட்டாளர்களை இந்தியா தீவிரமாகத் தேடுகிறதா?


இந்த முயற்சியானது, இந்தியாவிற்கு இப்போதும் எதிர்காலத்திலும் ஒரு முக்கிய முடிவாகும். நாம் எடுக்கும் தேர்வு நமது எதிர்கால கொள்கைகள், உத்திகள் மற்றும் செயல்களை வடிவமைக்கும்.  மேலும்,  அது விளைவுகளை ஏற்படுத்தும்.


பலவீனமான நாடுகள் வலுவானவற்றை சமநிலைப்படுத்த பல வழிகளைக் கொண்டுள்ளன என்பதை வரலாறு காட்டுகிறது. பலவீனமான நாடு செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு, அதிகாரம் நியாயமற்ற முறையில் தனக்கு எதிராக சாய்ந்திருக்கும் சூழ்நிலையை ஏற்றுக்கொள்வதுதான். நாம் மீண்டும் அந்தத் தவறைச் செய்வோமா?


ஹேப்பிமோன் ஜேக்கப், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை கற்பிக்கிறார் மற்றும் இந்தியாவின் உலக இதழின் (INDIA’S WORLD ) ஆசிரியராக உள்ளார்.




Original article:

Share:

வளர்ந்த இந்தியாவிற்கு, சுகாதாரத்தில் கவனம் செலுத்துங்கள் -கே.ஸ்ரீநாத் ரெட்டி

 இந்தியா தனது டிஜிட்டல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பை, மேம்பட்ட மருத்துவமனை பராமரிப்பை உள்ளடக்கிய பொது நிதியுதவி பெற்ற சுகாதார காப்பீட்டுத் திட்டங்களுடன் இணைக்க வேண்டும்.


2047-ஆம் ஆண்டுக்குள் பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கு, ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட மக்கள்தொகையை உருவாக்கும் இலக்குடன் பின்னிப் பிணைந்துள்ளது. சுகாதாரத்திற்கான தற்போதைய சவால்கள் 2025ஆம் ஆண்டில் தொடர்ந்து கவனம் செலுத்த அழைப்பு விடுத்தாலும், புதிதாக உருவாகி வரும் மற்றும் எதிர்பார்க்கப்படும் எதிர்கால அச்சுறுத்தல்கள் இப்போதிருந்தே எதிர்கொள்ளப்பட வேண்டும். மக்கள் தொகை அளவில் சுகாதார மேம்பாடு மற்றும் நோய்த் தடுப்பு ஆகியவற்றிற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றாலும், நோயறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை திறமையான மற்றும் சமமான முறையில் வழங்குவதன் மூலம் தனிநபர்களின் சீர்குலைந்த ஆரோக்கியத்தை விரைவாக மீட்டெடுக்க வேண்டும். 2047ஆம் ஆண்டுக்குள் வலுவான மற்றும் சுறுசுறுப்பான சுகாதார அமைப்பை நாம் விரும்பினால், 2025ஆம் ஆண்டிலேயே அதைக் கட்டமைக்கத் தொடங்க வேண்டும். அதன் வளர்ச்சி இரண்டு முக்கிய கூறுகளான பணம் மற்றும் திறமையான மக்கள் மூலம் ஆதரிக்கப்பட வேண்டும்.


2047ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு ( universal health coverage (UHC)) அடைய, நமது சுகாதார அமைப்புகள் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்புத் துறையில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அதிக பொது நிதி தேவைப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அளவுகளில் இதற்கு நிதியுதவி  அதிகரிக்கப்படுகின்றன.


UHC-க்கு, நாம் இரண்டு துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். அவை, நிதிப் பாதுகாப்பு மற்றும் சேவை பாதுகாப்பு. நாடு முழுவதும் உள்ள சுகாதார சேவைகள் அனைத்து குடும்பங்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பரந்த அளவிலான தரமான பராமரிப்பை வழங்க வேண்டும்.

இதன் பொருள், இந்தியா முழுவதும் சமமாக பரவியுள்ள பல திறன் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள் நமக்குத் தேவை. மிகவும் திறமையான மருத்துவர்களின் பற்றாக்குறை இருப்பதால், இந்த இடைவெளியை நிரப்ப நேரம் எடுக்கும் என்பதால், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிபுணர்களுக்கு பயிற்சி அளிப்பதே உடனடி முன்னுரிமை.

 

ஆயுஷ்மான் பாரத் இயக்கம் வலுவான மற்றும் நியாயமான சுகாதார அமைப்பை உருவாக்குவதற்கான முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் மேம்பட்ட முதன்மை பராமரிப்பு, சிறந்த சுகாதார வசதிகள், பாதிக்கப்படக்கூடிய மற்றும் முதியோர் குழுக்களுக்கான நிதி உதவி மற்றும் அமைப்பின் பல்வேறு பகுதிகளை இணைக்க டிஜிட்டல் சுகாதார தொழில்நுட்பத்திற்கான உந்துதல் ஆகியவை அடங்கும். இப்போது, ​​நாட்டை ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி நகர்த்த இந்த கூறுகளை நாம் இணைக்க வேண்டும். நோய் கண்காணிப்பை வழங்குவதன் மூலமும், சுகாதார திட்டங்களின் வெற்றியை அளவிடுவதன் மூலமும் டிஜிட்டல் சுகாதார இயக்கம் இந்த முயற்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 


இந்தியாவில் சுகாதார குறிகாட்டிகள் மாவட்டங்கள், மாநிலங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் பாலினங்களைப் பொறுத்து வேறுபடுகின்றன. தேசிய அளவிலான தரவு பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டாலும், மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளிலிருந்து விரிவான உள்ளூர் தரவு நமக்குத் தேவை. இந்தத் தரவு சான்றுகள் சார்ந்த, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ற, செலவு குறைந்த, கலாச்சார ரீதியாக உணர்திறன் மற்றும் நியாயமான செயல்களை வழிநடத்த வேண்டும். இதை அடைய, தற்போதைய சிதறிய தரவு அமைப்புகளை துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் தகவல்களை வழங்கும் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாக இணைக்க வேண்டும்.


நோய்கள் வேகமாக மாறி வருவதால் இந்தத் தரவு மிகவும் முக்கியமானது. தொற்றா நோய்கள் (Non-communicable diseases (NCDs)) மற்றும் மனநலப் பிரச்சினைகள் இப்போது தொற்று நோய்களைவிட அதிக தீங்கு விளைவிக்கின்றன. தொற்றா நோய்கள் அதிகரித்து வருகின்றன, மேலும் மூன்றில் இரண்டு பங்கு இறப்புகளுக்கு வழிவகுக்கும், அவற்றில் பல, மக்களின் மிகவும் உற்பத்தித் திறன் கொண்ட ஆண்டுகளில் நிகழ்கின்றன.


நோய்கள் மற்றும் அவற்றின் ஆபத்து காரணிகள் பற்றிய தரவு நமக்குத் தேவை‘. அவை எவ்வளவு பொதுவானவை மற்றும் காலப்போக்கில் அவை எவ்வாறு மாறுகின்றன என்பதை பொறுத்தது. இதில் தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் (NCDs) இரண்டும் அடங்கும். தற்போது, ​​NCDகள் மற்றும் அவற்றின் ஆபத்து காரணிகள் வரையறுக்கப்பட்ட பிராந்திய ஆய்வுகளில் மட்டுமே ஆய்வு செய்யப்படுகின்றன. தொற்று நோய்களுக்கு, ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் (Integrated Disease Surveillance Programme (IDSP)) தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்கள் மூலம் சில தரவுகளை சேகரிக்கிறது. இருப்பினும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் (விலங்கியல் நோய்கள் (zoonotic diseases)) வேகமாக அதிகரித்து வருவதால், நமக்கு இன்னும் விரிவான மற்றும் நிகழ்நேர கண்காணிப்புத் தேவை.


புதிய நுண்ணுயிர் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து, நுண்ணுயிர் எதிர்ப்பு (antimicrobial resistance (AMR)) கண்காணிக்க கழிவு நீர் கண்காணிப்பு போன்ற முறைகளை நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். காலநிலை மாற்றம் நீரால் பரவும் நோய்களை அதிகரித்து, நோய்க்கிருமிகளால் பரவும் நோய்களைப் பரப்புகிறது. இது வலுவான மற்றும் மிகவும் கவனமாக கண்காணிப்பு அமைப்புகளை அவசியமாக்குகிறது.


விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய விலங்கியல் நோய்கள், உள்ளூர் பாதிப்புகள் முதல் உலகளாவிய தொற்றுநோய்கள் வரை அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இதைச் சமாளிக்க, காட்டு விலங்குகள், பண்ணை விலங்குகள், செல்லப்பிராணிகள் மற்றும் குடியேறிய மற்றும் புலம்பெயர்ந்த மனித குழுக்களில் உள்ள நுண்ணுயிரிகளை நாம் கண்காணிக்க வேண்டும். "One Health" அணுகுமுறை, பல்வேறு இனங்கள் மற்றும் பகுதிகளிலிருந்து இந்தத் தரவை இணைப்பதை வலியுறுத்துகிறது. அதே நேரத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் தீவிர வானிலை போன்ற காலநிலை மாற்றங்கள் நோய் பரவலை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆய்வு செய்கிறது. தொற்று நோய்களைக் கண்காணித்து புரிந்துகொள்வதற்கு பெரிய தரவுகளைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது.


நோயாளி பராமரிப்புக்கு திறமையான தரவு அமைப்புகள் தேவை. ஒரே மருத்துவமனைக்குள்ளும் கூட, வெவ்வேறு நோயறிதல் மற்றும் சிகிச்சை தரவுகளை இணைக்க வேண்டும். நோயாளிகள் ஒரு சுகாதார நிலையத்திலிருந்து இன்னொரு சுகாதார நிலையத்திற்கு மாறும்போது, ​​தரவு பரிமாற்றமின்மை மற்றும் முக்கியமான தகவல்களின் மோசமான ஒருங்கிணைப்பு ஆகியவை நோயறிதலை கடினமாக்குவதோடு சிகிச்சை முடிவுகளையும் பாதிக்கலாம். இது நோயாளிகள் தங்கள் உடல்நலம் குறித்த தகவல்களை முழுமையாகப் பெறும் உரிமையையும் மறுக்கிறது.


அரசாங்கத்தால் நடத்தப்படும் பொது சுகாதார அமைப்புகளில் டிஜிட்டல் சுகாதார திட்டம் சேர்க்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான தனியார் சுகாதார வசதிகள் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது இந்தியாவின் சுகாதார அமைப்பில் இடைவெளியை ஏற்படுத்துகிறது. இது பொதுமக்களுக்கு மலிவு மற்றும் சரியான சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதை பாதிக்கிறது மற்றும் தனிப்பட்ட நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.


PMJAY போன்ற அரசு நிதியளிக்கும் சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் மருத்துவமனை பராமரிப்பில் கவனம் செலுத்தும் மாநில காப்பீட்டுத் திட்டங்களுடன் ஆரம்ப சுகாதார சேவையை இணைக்க இந்தியா தனது டிஜிட்டல் பலங்களைப் பயன்படுத்த வேண்டும். டிஜிட்டல் தரவு அமைப்புகள் பொது மற்றும் தனியார் சுகாதாரத் தகவல் மற்றும் பரிந்துரை அமைப்புகளை இணைக்க வேண்டும். இது தொடர்புடைய நோயறிதல் மற்றும் சிகிச்சை கருவிகளை உருவாக்க பெரிய இந்திய தரவுத் தொகுப்புகளை பகுப்பாய்வு செய்ய செயற்கை நுண்ணறிவு முறைகளை அனுமதிக்கும். பாதிப்புகள் அல்லது திட்ட சிக்கல்களின்போது சுகாதாரப் பிரச்சினைகளைப் புகாரளிப்பது போன்ற சமூக ஈடுபாட்டை டிஜிட்டல் வழிமுறைகள் மூலமாகவும் ஆதரிக்க முடியும். இவை 2025ஆம் ஆண்டில் நமது சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பில் டிஜிட்டல் மாற்றத்தைத் தூண்டுமா?


கே.ஸ்ரீநாத் ரெட்டி, எழுத்தாளர் மற்றும் இந்திய பொது சுகாதார அறக்கட்டளை (PHFI) மற்றும் பல்ஸ் டு பிளானட் (Pulse to Planet) என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். 




Original article:

Share:

வெளிப்புற அந்நிய நேரடி முதலீடு (Outward Foreign Direct Investment (OFDI)) என்றால் என்ன? - ரோஷினி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :  


1. 2023-ம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தரவுகளின்படி, மொத்த வெளிநாட்டு நேரடி முதலீடு (overseas direct investment) $32.29 பில்லியனாக இருந்தது.


2. வெளிநாட்டு நேரடி முதலீடு (Overseas direct investment) என்பது பட்டியலிடப்படாத பங்கு மூலதனத்தைப் பெறுவதையோ அல்லது ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் சங்க ஒப்பந்தத்தில் சேருவதையோ குறிக்கிறது. பட்டியலிடப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 10 சதவீதம் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்வதும் இதில் அடங்கும். கூடுதலாக, பட்டியலிடப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவாக முதலீடு இருக்கும்போது கட்டுப்பாட்டுடன் முதலீடு செய்வதும் இதில் அடங்கும்.


3. வெளிப்புற அந்நிய நேரடி முதலீடு (Outward Foreign Direct Investment (OFDI)) மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. அவை, பங்கு (equity), கடன்கள் (loans) மற்றும் உத்தரவாதம் (guarantees) வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டில், ஈக்விட்டி வடிவில் உள்ளூர் நிறுவனங்களின் வெளிநாட்டு அந்நிய நேரடி முதலீடு 12.69 பில்லியன் டாலராக இருந்தது. இது, 2023-ம் ஆண்டில் முதலீடு செய்யப்பட்ட 9.08 பில்லியன் டாலரை விட 40 சதவீதம் அதிகரித்துள்ளது. 


4. இந்திய நிறுவனங்கள் விடுதிள், கட்டுமானம், உற்பத்தி, விவசாயம், சுரங்கம் மற்றும் சேவைகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்கின்றன. வெளிநாட்டு நேரடி முதலீடு (ODI) மூலம் மொத்த நிதிக்கான உறுதிமொழிகளைச் செய்த நாடுகளில் சிங்கப்பூர், அமெரிக்கா, UK, UAE, சவுதி அரேபியா, ஓமன் மற்றும் மலேசியா ஆகியவை அடங்கும்.


5. கூட்டு முயற்சிகள் (joint ventures (JV)) மற்றும் முழுமையாக சொந்தமான துணை நிறுவனங்களில் (wholly owned subsidiaries (WOS)) வெளிநாட்டு முதலீடுகள் இந்திய தொழில்முனைவோருக்கு உலகளாவிய வணிகத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய வழிகளாகக் கருதப்படுகின்றன.


6. கூட்டு முயற்சிகள் இந்தியா மற்ற நாடுகளுடன் பொருளாதார ரீதியாக ஒத்துழைப்பதற்கான ஒரு வழியாகக் கருதப்படுகின்றன. அவை தொழில்நுட்பம் மற்றும் திறன்களை மாற்ற உதவுகின்றன. அவை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் (research and development (R&D)) முடிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கின்றன. கூட்டு முயற்சிகள் ஒரு பெரிய உலகளாவிய சந்தைக்கான அணுகலை வழங்குகின்றன. அவை பிராண்ட் பிம்பத்தை மேம்படுத்தவும் வேலைகளை உருவாக்கவும் உதவுகின்றன. கூடுதலாக, அவை இந்தியா மற்றும் தலைமைதாங்கிய நாடு இரண்டிலிருந்தும் மூலப்பொருட்களைப் பயன்படுத்துகின்றன.


7. அவை வெளிநாட்டு வர்த்தகத்திற்கு முக்கியமானவை. அவை இந்தியாவிலிருந்து ஆலை, இயந்திரங்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிக்கின்றன. அவை அந்நிய செலாவணி வருவாயையும் கொண்டு வருகின்றன. இதில் ஈவுத்தொகை வருவாய், ராயல்டி, தொழில்நுட்ப அறிவு கட்டணம் மற்றும் அத்தகைய முதலீடுகளிலிருந்து பிற விநியோகங்கள் ஆகியவை அடங்கும்.




உங்களுக்குத் தெரியுமா?


1. அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment (FDI)) என்பது ஒரு நிறுவனம் மற்றொரு நாட்டில் ஒரு வணிகத்தின் கட்டுப்பாட்டு உரிமையைப் பெறும் முதலீட்டைக் குறிக்கிறது. இதன் பொருள் வெளிநாட்டு நிறுவனங்கள் பிற நாடுகளில் உள்ள வணிகங்களின் அன்றாட நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளன.


2. இந்தியா இரண்டு வழிகளில் அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுகிறது:  அவை,


(a) தானியங்கி வழி (Automatic route) : இந்த வழியின் கீழ், ஒரு வெளிநாட்டவர் அல்லது இந்திய நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI), முன் ஒப்புதல் தேவையில்லை. அந்நிய நேரடி முதலீட்டுக்கு (FDI) இந்திய அரசாங்கத்திடமிருந்தும் ஒப்புதல் தேவையில்லை. 


(b) அரசு வழித்தடம் (Government route) : இந்த வழித்தடத்தின் கீழ், அரசாங்கத்தின் ஒப்புதல் கட்டாயமாகும்.



Original article:

Share: