சங்க இலக்கியத்தின் ‘மறு கண்டுபிடிப்பு’ மற்றும் அது எவ்வாறு தமிழ் வரலாறு மற்றும் தொல்லியல் ஆதாரமாக மாறியது? -அட்ரிஜா ராய்சௌத்ரி

 சங்க இலக்கியம் தமிழ் உணர்வுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நூல்கள் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மட்டுமே 'மறு கண்டுபிடிப்புக்கு' உட்பட்டன.


தமிழ்நாட்டில் உள்ள கீழடி அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் ஒருவர், சங்க இலக்கியங்களின் கவிதைகள், அருங்காட்சியகம் சுற்றிலும் அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டார். இந்தக் கல்வெட்டுகள் அருங்காட்சியகத்தின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மூலையையும் அலங்கரிக்கின்றன. இதன், அருகிலுள்ள இடத்திலிருந்து தொல்பொருள் கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதே அவற்றின் முக்கிய நோக்கமாக இருந்தது. 

இந்தக் கண்டுபிடிப்புகள், தமிழ் வரலாறு முன்னர் நினைத்ததைவிட பல நூறு ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், அரசியல் விவாதங்களில் அகழ்வாராய்ச்சிகள் என்பது ஒரு முக்கிய தலைப்பாக இருந்து வருகின்றன. அவை தமிழ் பேசும் உலகில் மிகுந்த உற்சாகத்தையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில், அவை தமிழர்களின் பண்டைய வரலாற்றை நிரூபிக்கின்றன மற்றும் நன்கு அறியப்பட்ட தமிழ் சங்க இலக்கியத்திற்கு முக்கியமான சான்றுகளை வழங்குகின்றன.


மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியரும் சமூக ஆர்வலருமான ஏ.முத்துகிருஷ்ணன் கூறுகையில், “இவ்வளவு காலம் சங்க நூல்கள் கற்பனை என்று ஏளனம் செய்யப்பட்டன" சங்க நூல்களில் எழுதப்பட்ட நகர்ப்புற வாழ்க்கை இங்கு இருந்தது என்பதற்கு நம்மிடம் ஆதாரம் இல்லை என்பதுதான் பிரச்சனை" என்று அவர் விளக்குகிறார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில், கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை மற்றும் ஆலங்குளம் ஆகிய இடங்களில் தொல்லியல் துறை அகழாய்வுகள் மூலம் பெரிய குடியிருப்புகள் கண்டறியப்பட்டு, சங்க நூல்கள் விவரித்தவற்றில் பலவற்றை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன.


இலக்கியத்தை தொல்பொருளியல் துறையுடன் இணைக்கும் முயற்சிகள் புதியவை அல்ல. அவை தென்னிந்திய துணைக் கண்டத்திற்கும் புதியவை அல்ல. சுதந்திரத்திற்குப் பிறகு, தொல்பொருள் ஆய்வாளர் பி.பி.லால் தலைமையிலான இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (Archaeological Survey of India (ASI)) ஒரு பெரிய திட்டத்தைத் தொடங்கியது. தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் இராமாயணம் மற்றும் மகாபாரதத்திற்கான பொருள் ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதே இலக்காக இருந்தது.


தமிழ் பண்பாட்டில், சங்க இலக்கியங்கள் இந்தியாவின் பிற பகுதிகளில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் கொண்டிருக்கும் அதே கலாச்சார மற்றும் உணர்ச்சி முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில், இன்றைய மக்கள் இந்த நூல்களை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதில் சுவாரஸ்யமான ஒற்றுமைகள் உள்ளன. அவை, பெரும்பாலும் வரலாறு மற்றும் தொல்பொருளியல் துறைக்கான முக்கியமான ஆதாரங்களாகக் காணப்படுகின்றன.


சங்கம் என்பது தென்னிந்தியாவிலிருந்து அறியப்பட்ட மிகப் பழமையான இலக்கியமாகும். இது பழைய தமிழில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பைக் குறிக்கிறது. இந்தத் தொகுப்பில் 8 கவிதைத் தொகுப்புகள், 10 சிறு கவிதைகள் (idylls), ஒரு இலக்கண புத்தகம் மற்றும் 18 சிறு படைப்புகள் உள்ளன. மொத்தத்தில், 473 கவிஞர்களால் எழுதப்பட்ட சுமார் 2,381 கவிதைகள் உள்ளன. கூடுதலாக, 102 கவிதைகள் பெயர் குறிப்பிடப்படாத ஆசிரியர்களால் எழுதப்பட்டன. சங்க நூல்களின் சரியான தேதிகள் குறித்து அறிஞர்கள் உடன்படவில்லை. இருப்பினும், அவை கிமு 3-ம் நூற்றாண்டுக்கும், கிபி 3-ம் நூற்றாண்டுக்கும் இடையில் இயற்றப்பட்டவை என்பதை பெரும்பாலானோர் ஒப்புக்கொள்கிறார்கள்.


சங்கப் பாடல்களை அகம் மற்றும் புறம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அகக் கவிதைகள் காதலை மையமாகக் கொண்டுள்ளன. அதே சமயம், புறக் கவிதைகள் போர், மரணம், சமூகம் மற்றும் இராஜ்ஜியம் போன்ற கருப்பொருள்களை உள்ளடக்கியது.


சங்கப் பாடல்கள் தமிழ் கலாச்சாரத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டிருந்தாலும், அவை 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ அல்லது 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ மட்டுமே மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. இது அவற்றின் பரவலான பிரபலத்திற்கு வழிவகுத்தது. இதற்கு முன்பு, இந்தப் பாடல்களில் பெரும்பாலானவை வாய்மொழியாகக் கடத்தப்பட்டன. ”The Tamils: A Portrait of a Community” (2025) எழுதிய பத்திரிகையாளர் நிர்மலா லட்சுமணன், "இந்தப் பாடல்களில் சில குழந்தைகளுக்கான தாலாட்டுப் பாடல்களாகவோ அல்லது வணிகர்கள் மற்றும் பிறரால் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்களாகவோ கடத்தப்பட்டன" என்று விளக்குகிறார்.

இந்த நூல்களின் 'மறு கண்டுபிடிப்பிற்கான' பெருமைக்குரியவர்கள் உ.வே. சுவாமிநாத ஐயர் மற்றும் C.W. தாமோதரன் பிள்ளை போன்ற இரண்டு பேர் ஆவர். உ.வே. சுவாமிநாத ஐயர் "தமிழ் தாத்தா" என்று அழைக்கப்பட்டார். கும்பகோணத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். அங்கு பணிபுரிந்தபோது, ​​சேலம் ராமசாமி முதலியாரை சந்தித்தார். ராமசாமி முதலியார் ஒரு வழக்கறிஞராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும் இருந்தார். 


அவர் உ.வே. சுவாமிநாத ஐயருக்கு சிந்தாமணி என்ற பழங்கால நூலை அறிமுகப்படுத்தினார். உரை அவரது வாழ்க்கையை மாற்றியது. அன்றிலிருந்து, உ.வே. சுவாமிநாத ஐயர் தனது வாழ்நாள் முழுவதையும் பண்டைய தமிழ் இலக்கியங்களைக் கண்டறிவதிலும் திருத்துவதிலும் அர்ப்பணித்தார். இவருடைய முயற்சிகளில், கும்பகோணத்தில் வக்கீல் பணிபுரிந்த C.W. தாமோதரன் பிள்ளையும் சேர்ந்து, தமிழ் மொழியின் செழுமை மற்றும் தொன்மைக்காக தீவிரமாக வாதிட்டார். உ.வே. சுவாமிநாத ஐயர் மற்றும் C.W. தாமோதரன் பிள்ளை சேகரித்து ஆவணப்படுத்திய நூல்கள் பெரும்பாலும் பனை ஓலைகளில் எழுதப்பட்டவை. அவற்றில் பல அழியும் தருவாயில் இருந்தன. மேலும் பல முழுமையடையாத வசனங்களையும் கொண்டிருந்தன.


1887-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் சங்கக் கவிதையான ”கலித்தொகை”யின் மறுபதிப்பின் அறிமுகத்தில், கையால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்துவதில் உள்ள சவால்களை தாமோதரன் பிள்ளை விவரிக்கிறார். கையெழுத்துப் பிரதி முழுமையடையவில்லை, தொடக்கமும் முடிவும் இல்லை என்று அவர் விளக்குகிறார். ஒவ்வொரு வரியிலும் பல எழுத்துக்கள் உடைந்திருந்ததால், படிக்க கடினமாக இருந்தது. இதனால், விரக்தியடைந்த அவர், அதைப் படிக்க முயற்சிப்பதைக்கூட கைவிட்டார்.


 நெருப்பு, நீர் மற்றும் மதக் கட்டுப்பாடுகளைத் தாண்டிய பகுதிகள் மட்டுமே எஞ்சியிருந்தன என்று அவர் குறிப்பிட்டார். 1920 வாக்கில், அனைத்து சங்கப் படைப்புகளும் அச்சிடப்பட்டிருந்தன. வரலாற்றாசிரியர் வி. ராஜேஷ் தனது ”கையெழுத்துப் பிரதிகள், நினைவகம் மற்றும் வரலாறு: காலனித்துவ இந்தியாவில் பாரம்பரிய தமிழ் இலக்கியம் 2013” (Manuscripts, Memory and History: Classical Tamil Literature in Colonial India) என்ற புத்தகத்தில், பாரம்பரிய தமிழ் படைப்புகள் அதிகமான மக்களுக்குக் கிடைத்த காலம் இது என்று எழுதுகிறார். இதற்கு முன்பு, ஒரு சிறிய குழு அறிஞர்கள் மற்றும் மத மடங்கள் மட்டுமே அவற்றை அணுக முடிந்தது.


இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான ஒரு நேர்காணலில், ராஜேஷ் கூறுகையில், “19 ஆம் நூற்றாண்டில் அச்சு கலாச்சாரத்தின் விரிவாக்கம் போன்ற சில முன்னேற்றங்கள், இந்தக் காலகட்டத்தில் சங்க இலக்கியத் தொகுப்பு வெளியிடப்படுவதற்கு நேரடியாகக் காரணமாக இருந்தன” என்று கூறுகிறார்.


19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இருந்த தமிழ் அறிஞர்கள் சங்க நூல்களின் பண்டைய தோற்றத்தை நிரூபிக்க பெரும் முயற்சி எடுத்ததாக ராஜேஷ் ஒப்புக்கொள்கிறார். இந்த நூல்கள் உண்மையில் பழமையானவை என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். இருப்பினும், தாமோதரன் பிள்ளை மற்றும் உ.வே. சாமிநாத ஐயர் போன்ற நவீன அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நூல்களை மீண்டும் கண்டுபிடிப்பதில் தங்கள் பங்கை பெரும்பாலும் மிகைப்படுத்தியுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். 'மறு கண்டுபிடிப்பு' மீதான இந்த கவனம் ஒரு முக்கியமான உண்மையை புறக்கணிக்க வழிவகுத்தது. இடைக்காலத்தில் தொகுக்கப்பட்ட இந்த நூல்கள் மீண்டும் தொகுக்கப்பட்டு நவீன காலத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த அதிகப்படியான முக்கியத்துவம் காரணமாக அறிஞர்கள் இந்த நூல்கள் எவ்வாறு வரலாற்றில் கடத்தப்பட்டன என்பதைப் படிப்பதைத் தடுத்து நிறுத்தியதாக ராஜேஷ் நம்புகிறார்.


'சங்க இலக்கியம்' என்ற பரந்த பிரிவின் கீழ் இந்த நூல்களை தொகுப்பது வரலாற்று ரீதியாக துல்லியமானது அல்ல என்று சிலர் வாதிடுகின்றனர். மொழியியல் அறிஞர் கே.வி. ஸ்வெலெபில், தனது ”தமிழ் இலக்கியம்” 1975 என்ற புத்தகத்தில், 19-ம் நூற்றாண்டில் கலாச்சார தமிழ் நூல்களை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது என்று விளக்குகிறார். ஏனெனில், இது கி.பி 6 மற்றும் 8-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இலக்கிய மரபில் ஒரு முறிவு ஏற்பட்டது. இந்த நேரத்தில், மதச்சார்பற்ற, பாணர் கவிதைகள் (bardic poetry) "இறந்த செவ்வியல் பாரம்பரியத்தின்" ஒரு பகுதியாக மாறியது. பின்னர் அது சைவ-வைணவ பக்தி இயக்கத்தின் மத மற்றும் தனிப்பட்ட பாடல்களால் மாற்றப்பட்டது.


பின்னர், 19-ம் நூற்றாண்டின் தமிழ் பண்டிதர்கள் இந்த செவ்வியல் இலக்கிய பாரம்பரியத்தின் மீது தங்கள் கவனத்தை செலுத்தியபோது, ​​அவர்கள் 7-ம் நூற்றாண்டின் பக்தி காலத்திற்கு முந்தைய அனைத்து படைப்புகளையும் ‘சங்கம்’ என்ற தொகுப்புகளின் கீழ் தொகுத்தனர். இந்த அணுகுமுறை உள்ளடக்கம், வடிவம், மொழி, பாணி, உரைநடை, நோக்கம் மற்றும் உந்துதல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைப் புறக்கணித்ததாக ஸ்வெலெபில் விளக்குகிறார். இதன் விளைவாக, சுமார் 800 ஆண்டுகால இலக்கியப் படைப்புகள் ஒரு எளிய குழுவாகக் குறைக்கப்பட்டன. இந்தக் குழுவிற்கு கிமு 2000 முதல் கிபி 800 வரை வெவ்வேறு தேதிகள் ஒதுக்கப்பட்டன.


"இது ஒரு வரலாற்று வெற்றி," என்று அவர் குறிப்பிடுகிறார்.


இந்தக் கவிதைகள் வெவ்வேறு கவிஞர்களால் எழுதப்பட்டவை என்று லட்சுமணன் கூறுகிறார். அவை இயற்றப்பட்ட நேரத்தில், அவை ஒரே தொகுப்பின் ஒரு பகுதியாகக் காணப்படவில்லை. அவர் கூறுகிறார், "அவை அனைத்தும் ஒரே மாதிரியான காலத்தைச் சேர்ந்தவை. வசதிக்காக அவற்றை சங்க இலக்கியம் என்று அழைக்கிறோம்."


3 சங்கங்களின் கதை


பின்னர், சங்கப் பாடல்களின் உருவாக்கம் பற்றிய ஒரு புராணக்கதை உள்ளது. பாண்டிய மன்னர்கள் மூன்று இலக்கியக் கூட்டங்கள் அல்லது சங்கங்களை அமைத்ததாகக் கூறுகிறது. இந்தக் கூட்டங்களில் கடவுள்களும் கவிஞர்களும் கலந்து கொண்டனர். மேலும், இங்கு இலக்கியப் படைப்புகள் வழங்கப்பட்டன. முதல் கூட்டம் மதுரையில் நடந்து 4,400 ஆண்டுகள் நீடித்தது. இரண்டாவது கூட்டம் கபாடபுரத்தில் நடந்து 3,700 ஆண்டுகள் நீடித்தது. மூன்றாவது கூட்டம் மீண்டும் மதுரையில் நடந்து 1,850 ஆண்டுகள் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தனது புத்தகத்தில், மூன்று சங்கங்களின் கதை முதன்முதலில் 8-ம் நூற்றாண்டின் விளக்கவுரையில் தோன்றியதாக ராஜேஷ் வாதிடுகிறார். இந்த விளக்கவுரை ”இறையனார் களவியல்” (Iraiyanar Kalaviyal) என்ற இலக்கண உரைக்காக எழுதப்பட்டது. காலப்போக்கில், இந்த புராணக்கதை தமிழ் அறிவார்ந்த மரபில் ஆழமாக வேரூன்றியது. நவீன காலத்தின் ஆரம்பத்திலும்கூட, தமிழ் அறிஞர்கள் இந்த புராணக்கதையைப் பகிர்ந்து கொண்டதாக ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.


சங்கங்கள் நடந்ததா இல்லையா என்பது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினை என்று ராஜேஷ் கூறுகிறார். ஒவ்வொரு சங்கமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது என்ற பாரம்பரிய நம்பிக்கை நவீன வரலாற்று சிந்தனையுடன் ஒத்துப்போகவில்லை என்று அவர் விளக்குகிறார்.


புலவர்களின் மூன்று சங்கங்களின் கருத்து பண்டைய காலங்களிலிருந்து தமிழ்நாட்டில் சைவ சமயம் இருந்து வருகிறது என்ற நம்பிக்கையுடன் நெருக்கமாக தொடர்புடையது என்று அவர் விளக்குகிறார். தமிழ்நாட்டில் சைவ சமயத்தின் நீண்ட வரலாற்றை நிரூபிக்க விரும்பிய அறிஞர்கள் இந்த மூன்று சங்கங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முயன்றவர்கள் என்றும் அவர் கூறுகிறார்.


தமிழ் தேசியமும், சங்க இலக்கியமும்


இந்திய தேசியவாதம் தொடங்கிய அதே நேரத்தில் உ.வே. சாமிநாதர் ஐயர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட சங்க நூல்களை வெளியிட்டார். இந்திய தேசிய காங்கிரஸ் 1885-ம் ஆண்டில் பம்பாயில் நிறுவப்பட்டது. தொடக்கத்திலிருந்தே, அதில் மெட்ராஸ் பிரசிடென்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அடங்குவர், அவர்களில் சிலர் தமிழ் அறிஞர்களும் ஆவர். மெட்ராஸைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் இந்திய தேசியவாதத்தையும் தமிழ் பெருமையையும் சமநிலைப்படுத்த முடிந்தது.


ராஜேஷ் தனது புத்தகத்தில் ராமசாமி முதலியார் பற்றி எழுதுகிறார். ராமசாமி     முதலியார் ஒரு மிதவாதி காங்கிரஸ்காரர் ஆவார். உ.வே. சாமிநாதர் ஐயர் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து பாரம்பரிய தமிழ் இலக்கியப் படைப்புகளை வெளியிட ஊக்குவித்தார். ராஜேஷ் ஜி சுப்பிரமணிய ஐயரையும் குறிப்பிடுகிறார். அவர் தி இந்து மற்றும் சுதேசமித்திரன் என்ற தமிழ் செய்தித்தாளின் நிறுவனர் ஆவார். அந்தப் பத்திரிகை பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் குறித்த கட்டுரைகளை வெளியிடும். செவ்வியல் இலக்கிய நூல்களை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்தவர்களின் முயற்சிகளைப் பாராட்டியது.


மெட்ராஸைச் சேர்ந்த மற்றொரு முக்கியமான காங்கிரஸ் தலைவர் கவிஞர் சி. சுப்பிரமணிய பாரதி ஆவார். அவர் ”இந்தியா” என்ற தமிழ் வார இதழைத் நடத்தினார். மேலும், காலனித்துவ அரசாங்கத்தை விமர்சிக்க ”திருக்குறள்” என்ற உரையை அடிக்கடி பயன்படுத்தினார்.


வ.உ. சிதம்பரம் பிள்ளையும் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவர் ஒரு போர்க்குணமிக்க தேசியவாதியாகவும், சென்னையில் சுதேசி இயக்கத்தின் தலைவராகவும் இருந்தார். அவர் தனது பெரும்பாலான நேரத்தை பாரம்பரிய தமிழ் படைப்புகளைத் திருத்தி வெளியிடுவதில் செலவிட்டார்.

ஆரம்பகால திராவிட இயக்கத் தலைவர்கள் தமிழ் அடையாளத்தையும் திராவிட தொன்மையையும் உறுதிப்படுத்த சங்க நூல்களையும் பயன்படுத்தினர். குறிப்பாக, நீதிக் கட்சி, தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காங்கிரஸின் கூற்றை சவால் செய்தது.


சங்க இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு எழுதுதல்


சுதந்திரத்திற்குப் பிறகும், அதற்கு முன்பும் கூட, சங்க நூல்கள் தமிழ்நாட்டின் வரலாற்றை எழுத அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தென்னிந்தியாவின் நன்கு அறியப்பட்ட வரலாற்றாசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி தனது ”சோழர்கள் (1955)” (The Colas) என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பகால சோழர்களைப் பற்றிய தகவல்களின் முக்கிய ஆதாரம் மூன்றாம் சங்கம் என்று அழைக்கப்படும் ஆரம்பகால தமிழ் இலக்கியங்கள் என்று அவர் எழுதினார்.


1975-ம் ஆண்டில், வரலாற்றாசிரியர் ஆர். சம்பகலட்சுமி சங்க நூல்களிலிருந்து சான்றுகளைப் பயன்படுத்தி இடப் பெயர்களைப் படித்தார். ஆரம்பகால வரலாற்றுக் காலத்தில் தோண்டப்பட்ட வாழ்விடத் தளங்களுடன் அவற்றை இணைத்தார். தென்னிந்தியாவின் ஆரம்ப மற்றும் நவீன காலத்திற்கு முந்தைய படைப்புகளுக்கு அவர் பெயர் பெற்றவர் ஆவார். முன்னதாக, 1946-ம் ஆண்டில், மெகாலித் என்றும் அழைக்கப்படும் இரும்புக் கால புதைகுழிகளை, சங்கத் தொகுப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றுடன் கே.ஆர். ஸ்ரீனிவாசன் ஒப்பிட்டார். 1980-ம் ஆண்டு காலகட்டங்களில், வரலாற்றாசிரியர் ராஜன் குருக்கள் பண்டைய நூல்களிலிருந்து தகவல்களை ஆதரிக்க தொல்பொருள் தரவுகளையும் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொல்பொருள் ஆய்வாளர் ஷினு ஏ ஆபிரகாம் 2003-ல் "சேர, சோழ, பாண்டியா : ஆரம்பகால வரலாற்று தென்னிந்தியாவின் தமிழ் ராஜ்ஜியங்களை அடையாளம் காண தொல்பொருள் சான்றுகளைப் பயன்படுத்துதல்" (Chera, Chola, Pandya: Using Archaeological Evidence to Identify the Tamil Kingdoms of Early Historic South India) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.


 இந்தக் கட்டுரையில், அறிஞர்கள் ”தமிழகத்தை” ஒரு தனித்துவமான கலாச்சாரப் பகுதியாக எவ்வாறு அடையாளம் காண்கிறார்கள் என்பதை விளக்குகிறார். இந்த அடையாளம் பல்வேறு உரை சார்ந்த மூலங்களிலிருந்து வருகிறது. இந்த மூலங்களில் மிக முக்கியமானது சங்க இலக்கியம் ஆகும்.


இருப்பினும், சங்க இலக்கியங்களை வரலாற்றுத் தரவுகளாகப் பயன்படுத்த, அதன் கவிதை மற்றும் பாணர் தன்மையை (poetic and bardic nature) நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் எச்சரிக்கிறார். பெரும்பாலான கவிதைகள் ஆட்சியாளர்கள், போர்வீரர்கள் மற்றும் புரவலர்களைப் புகழ்கின்றன என்று அவர் விளக்குகிறார். இருப்பினும், இது வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தொல்பொருள் பதிவுகளுக்கான குறிப்புகளாக நூல்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை.


கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள இலக்கிய ஆதாரங்கள் மற்றும் பொருள் பதிவுகளைப் பயன்படுத்துவதற்கான தொடர்ச்சியான பேச்சுவார்த்தை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, முழு தெற்காசியப் பகுதிக்கும் பொருந்தும் என்று தொல்பொருள் ஆய்வாளர் ஸ்மிருதி ஹரிச்சரன் விளக்குகிறார். தொல்பொருளியல் துறையில் காணப்படும் பொருள் ஆதாரங்களை பூர்த்தி செய்யும் தகவல்களை நூல்கள் வழங்க முடியும் என்றும் அவர் நம்புகிறார்.


உதாரணமாக, ஹரிச்சரன் தென்னிந்தியாவில் மெகாலிதிக் புதைகுழிகளை (megalithic burials) ஆராய்கிறார். பல்வேறு வகையான அடக்கங்கள் உள்ளன என்றும், சில மற்றவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமாகத் தெரிகின்றன என்றும் அவர் விளக்குகிறார். இருப்பினும், இந்த வேறுபாடுகள் எதைக் குறிக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. இந்த வேறுபாடுகள் சமூக, கலாச்சார, பொருளாதார அல்லது காலம் தொடர்பான காரணிகளுடன் இணைக்கப்படலாம். ஆனால், தோண்டியெடுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் இன்றுவரை உயிர்வாழாததால், ஆராய்ச்சியாளர்கள் முக்கியமான விவரங்களுக்கு நூல்களை நம்பியுள்ளனர். அடக்கம் செய்யும் நடைமுறைகளில் சமூக-கலாச்சார வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள இந்த நூல்கள் உதவுகின்றன.


1946-ம் ஆண்டில், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வெவ்வேறு புதைகுழி வகைகளுக்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு பெயர்ச்சொற்களைப் பற்றி சீனிவாசன் ஒரு கட்டுரையில் விவாதித்தார். கடந்த காலத்தில், மக்கள் மிகவும் உணர்வுடன் வெவ்வேறு அடக்கம் வகைகளைப் பயன்படுத்தினர் மற்றும் அவற்றுக்கான குறிப்பிட்ட பெயரிடலைக் கொண்டிருந்தனர் என்பதை இது நமக்குச் சொல்கிறது.


இலக்கிய நூல்களை மட்டுமே உறுதிப்படுத்த அகழ்வாராய்ச்சியைப் பயன்படுத்துவது அல்லது அவற்றிலிருந்து வரும் தகவல்களை மட்டுமே நம்பியிருப்பது இலக்கியம் மற்றும் தொல்லியல் இரண்டையும் பாதிக்கிறது என்று ஹரிச்சரண் கூறுகிறார். "எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள இது உண்மையில் நமக்கு உதவாது" என்று அவர் கூறுகிறார். உதாரணமாக, சங்க காலத்திற்குப் பிந்தைய பாடல்களான சிலப்பதிகாரம், பெண் கதாநாயகி கண்ணகி மதுரையை எரித்ததாகக் குறிப்பிடுகிறது.


 "நகரம் எரிக்கப்பட்டதற்கான தொல்பொருள் ஆதாரங்களை நாங்கள் காணவில்லை என்றாலும், தொல்லியல் மற்றும் இலக்கிய நூல்களிலிருந்து அங்கு ஒரு பெரிய குடியிருப்பு இருந்ததை நாங்கள் கற்றுக்கொள்கிறோம்," என்று அவர் விளக்குகிறார். "கீழடியில் அகழ்வாராய்ச்சிகள் கடந்த காலத்தில் ஒரு பெரிய குடியிருப்பு இருந்ததை நமக்குக் காட்டுகின்றன," என்று அவர் மேலும் கூறுகிறார்.


கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகளை "வளர்ந்து வரும் வரலாறு" (history in the making) என்று தொல்பொருள் ஆய்வாளர் சுதேஷ்னா குஹா அழைக்கிறார். இந்த வரலாறு தென்னிந்தியாவில் ஒரு விவாதத்தை உள்ளடக்கியது என்று அவர் விளக்குகிறார். வட இந்திய தேசியவாதம் இந்தியாவின் பண்டைய கடந்த காலத்தை வேத மற்றும் சமஸ்கிருத மரபுகளுடன் எவ்வாறு இணைக்க முயற்சிக்கிறது என்பது பற்றிய விவாதம் இது. இந்த இணைப்பு இந்தியாவின் மேம்பட்ட நகர்ப்புற வெண்கல யுக கலாச்சாரத்தின் (Bronze Age culture) மூலம் செய்யப்படுகிறது. இந்தியாவின் ஆரம்பகால நகர்ப்புற குடியிருப்புகளின் தமிழ் பாரம்பரியத்தைக் காண்பிப்பதே கீழடி அகழ்வாராய்ச்சிகளின் நோக்கமாகும் என்று அவர் மேலும் கூறுகிறார்.


தென்னிந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சி பல ஆண்டுகளாக பல இரும்புக் கால தளங்களை, பெரும்பாலும் மெகாலித் தொல்பொருட்களை கண்டுபிடித்துள்ளது. இந்த தளங்கள் கிமு 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும். இருப்பினும், அவை மிகவும் பழமையானதாக இருக்கலாம் என்று குஹா கூறுகிறார். கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் தமிழ்நாட்டில் நாகரிகம் கிமு 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறுகின்றன. கீழடிக்கு முந்தைய அகழ்வாராய்ச்சிகள், தென்னிந்தியாவின் ஆரம்பகால நகரங்களுக்கான சான்றுகளைக் காட்டின என்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


தொல்பொருள் ஆய்வாளர் நயன்ஜோத் லஹிரி ”Monuments Matter: India’s Archaeological Heritage since Independence 2017” என்ற புத்தகத்தை எழுதினார். அதில், கொடுமணல் மற்றும் பொருந்தல் ஆகிய இரண்டு முக்கியமான தளங்களை அவர் குறிப்பிட்டார். இந்த தளங்கள் 2009-ம் ஆண்டு தொடங்கி கே. ராஜன் என்பவரால் தோண்டியெடுக்கப்பட்டன. அவை, கிமு 5-ம் மற்றும் 6-ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் நகர்ப்புற கலாச்சாரத்தின் ஆரம்ப அறிகுறிகளைக் காட்டின. தென்னிந்திய வரலாற்றைப் புரிந்துகொள்வதில் இந்த கண்டுபிடிப்புகளை "முக்கிய மைல்கல்" (major landmark) என்று லஹிரி அழைத்தார்.


இருப்பினும், கீழடி சிறப்பு வாய்ந்தது. இது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியுடன் இணைகிறது. இந்தப் பகுதி சங்க கவிதைகளின் பெரிய மற்றும் பழமையான தொகுப்பாகும்.




Original article:

Share:

கிராமப்புற இந்தியாவிற்கு அதிக திறன் கிராமங்கள் தேவை -குஷாங்கூர் டே, அவினாஷ் குமார்

 திறன் கிராமங்கள் கிராமப்புற மீட்சிக்கு உதவும். கிராமப்புற மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த கிராமங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.


பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் கிராமப்புற இந்தியா ஏன் முக்கியமானது? இது இந்தியாவின் மக்கள்தொகையில் 65 சதவீதத்தைக் கொண்டுள்ளது. பெரும்பாலான கிராமப்புற மக்கள் 15-59 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். கோவிட்-19 பிறகு, கிராமப்புற தொழிலாளர் பங்கேற்பு விகிதம் முன்பை விட அதிகரித்துள்ளது). மேலும், 2017 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான 14 சதவீத CAGR உடன் கிராமத் தொழில் தயாரிப்புகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், அனைத்திந்திய கிராமப்புற நிதி உள்ளடக்கல் கணக்கெடுப்பு (All India Rural Financial Inclusion Survey) 2021-22 அறிக்கையின்படி கிராமப்புற இந்தியாவின் தனிநபர் வருமானம் ஒரு நாளைக்கு ₹100 ரூபாய் கூட இல்லை.


எனவே, 2025–26 ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மாநிலங்களுடன் கூட்டு சேர்ந்து விரிவான பல துறைகளின் ‘கிராமப்புற செழிப்பு மற்றும் மீள்தன்மை’ திட்டம் (‘rural prosperity and resilience’ programme) சரியான நேரத்தில் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.


இது திறன், முதலீடு மற்றும் தொழில்நுட்பம், கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிப்பது மற்றும் நிறுவன வளர்ச்சியை ஊக்குவிப்பது ஆகியவற்றின் மூலம் விவசாயத்தில் குறைந்த வேலைவாய்ப்பை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகளாவிய மற்றும் உள்நாட்டில் சிறந்த நடைமுறைகள் இணைக்கப்படும் என்றும், பலதரப்பு வளர்ச்சி வங்கிகளிடம் இருந்து தகுந்த தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகள் பெறப்படும் என்றும் நிதி அமைச்சர் எடுத்துரைத்தார்.


எனவே, ஒரு சில பிரச்சனைகள் கவனிக்கப்பட வேண்டும்: கிராமப்புற வளர்ச்சியை முன்னேற்ற திறன் கிராமம் என்ற கருத்தை நாம் பிரச்சாரம் செய்யலாமா? சிறந்த நடைமுறைகள் எப்படி கிராமப்புற பின்னடைவுக்கான ஆதார அடிப்படையிலான கொள்கை வகுப்பை தெரிவிக்கும்?


கிராமப்புற மீள்தன்மை, திறன் கிராமங்கள்


கிராமப்புற மீள்தன்மை என்பது கிராமப்புறங்கள் தங்கள் வாழ்க்கை முறை, கட்டமைப்புகள் மற்றும் சமூகங்களை வலுவாக வைத்திருக்கும் அதே வேளையில் பிரச்சினைகளைக் கையாளவும், சவால்களில் இருந்து மீளவும், மாற்றங்களைச் செய்யவும் உருவாக்கும் திறன் ஆகும். இது இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் நல்ல வாழ்க்கைத் தரத்தைப் பராமரிக்க உதவுகிறது


மீள்தன்மை மூன்று இணைக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை, பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சூழலியல். இது பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சமூக பிணைப்புகளை வலுப்படுத்தவும், இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.


கிராமப்புறங்கள் வலுவாகவும், மீள்தன்மையுடனும் இருக்க திறன் கிராமங்கள் உதவுகின்றன. மக்களின் வாழ்க்கையையும் வேலைகளையும் மேம்படுத்த அவர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷனின் கீழ் தொடங்கப்பட்ட திறன் கிராமத் திட்டம், 2019ஆம் ஆண்டுக்குள் 300 கிராமக் குழுக்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், இந்த திட்டம் காலப்போக்கில் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டதாகத் தெரிகிறது.


2016 ஆம் ஆண்டில், சில மாநிலங்கள் CSR நிதிகள் அல்லது உள்ளூர் மேம்பாட்டு நிதிகளின் ஆதரவுடன் ஸ்மார்ட் வில்லேஜ் இயக்கத்தை (Smart Village Movement (SVM)) தொடங்கின. இந்த இயக்கம் கலிபோர்னியா பல்கலைக்கழக பெர்க்லி வளர்ச்சி சந்தை மையத்துடன் இணைந்து செயல்படுகிறது. இது ஒரு இலாப நோக்கற்ற குழுவாகும். பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதன் மூலம் கிராமப்புறங்களை வலுப்படுத்த பல்வேறு துறைகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை SVM காட்டுகிறது.

தொழில்நுட்பம், உள்ளூர் அறிவு மற்றும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி கிராமப்புறங்கள் நீடித்து நிலைக்கும் வகையில் SVM திட்டம் உதவுகிறது. கிராமங்களை வலிமையாக்க, மேலிருந்து கீழான, கடுமையான அணுகுமுறையை நாம் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, திட்டத்தைத் திட்டமிட்டு இயக்கும்போது சமூகத்தை உள்ளடக்கிய மற்றும் பல்வேறு துறைகளை இணைக்கும் ஒரு கீழ்நிலை-மேல் முறையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.


இந்த அணுகுமுறை கிராமப்புற மக்கள் மற்றும் குழுக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் அவர்களின் அறிவு, முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பைச் சார்ந்துள்ளது. அதிகப்படியான பயன்பாடு மற்றும் குறைவைத் தவிர்க்க பகிரப்பட்ட வளங்களை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது கிராமப்புற மீள்தன்மைக்கு அவசியமாகும். எனவே, பொது, தனியார் துறை மற்றும் உள்ளூர் மக்களுக்கு இடையிலான சமூக அமைப்புகள் அல்லது கூட்டாண்மைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.


மேலும், உள்ளூர் தலைமை, குழுப்பணி மற்றும் வலுவான சமூக பிணைப்புகள் கிராமப்புறங்கள் வலுவாக இருக்க உதவுகின்றன. அவை புதிய யோசனைகள் மற்றும் திறன் கிராமக் குழுக்களில் பகிரப்பட்ட முடிவெடுப்பதை இணைக்கின்றன.


முன்னோக்கிய வழி


முதலாவதாக, கிராமப்புறங்களை வலிமையாக்க திறன் கிராமங்களை உருவாக்குவதற்கு முழுமையான மற்றும் சமூகம் சார்ந்த அணுகுமுறை தேவை. இது சமூக, டிஜிட்டல் மற்றும் பௌதீக அம்சங்களை ஒன்றாகக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு பகுதியில் கவனம் செலுத்தி மற்றவற்றைப் புறக்கணிப்பது நீண்டகால வளர்ச்சிக்கு வழிவகுக்காது.


இரண்டாவதாக, திறன் கிராமங்கள் கிராமப்புறச் சமூகங்களுக்குப் பயனளிக்கும் வகையில் முறையான மற்றும் முறைசாரா அறிவைப் பெற அனுமதிக்கின்றன மற்றும் தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்வதில் குறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அளவிலான தடைகளை பேச்சுவார்த்தைக்கு உதவுகின்றன. இந்த கிராமங்கள், கிராமப்புற உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் கைவினைஞர் வணிகங்களுக்கு நேரடி நுகர்வோர் சந்தைப்படுத்துதலில் உதவுவதற்கு இடைநிலையை எளிதாக்குகின்றன.


மூன்றாவதாக, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஸ்மார்ட் கிராமக் குழுக்களை உருவாக்க, வெவ்வேறு நிதி ஆதாரங்கள் ஒன்றிணைய வேண்டும். இவற்றில் மத்திய அரசு திட்டங்கள், பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதிகள் மற்றும் கலப்பு நிதி ஆகியவை அடங்கும். கலப்பு நிதியில் மானியங்கள், குறைந்த வட்டி கடன்கள் மற்றும் சர்வதேச மேம்பாட்டு வங்கிகளிடமிருந்து உத்தரவாதங்கள் ஆகியவை அடங்கும்.


இந்தத் திட்டங்களைத் திட்டமிடுதல், நிதியளித்தல் மற்றும் செயல்படுத்துவதில் வெவ்வேறு குழுக்கள் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம். இந்த குழுப்பணி திறன் கிராமங்கள் தொடர்ந்து வளர்ந்து வெற்றிபெறுவதை உறுதிசெய்ய உதவும்.


நான்காவதாக, பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அடிப்படையில் சமூகங்கள் வலுவாக மாற திறன் கிராமங்கள் உதவும். கிராமப்புறங்களை ஆதரிக்க, நமக்கு நல்ல சந்தை அமைப்புகள் மற்றும் வலுவான அமைப்புகள் தேவை. இதைச் சாத்தியமாக்க அரசாங்கம், பல்கலைக்கழகங்கள், வணிகங்கள் மற்றும் உள்ளூர் குழுக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


மொத்தமாக, உள்நாட்டில் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி கிராமப்புற வாழ்வாதாரங்களை பல்வகைப்படுத்துதல், சாதகமான சந்தை இணைப்புகளை உருவாக்குதல், ஆதரவான சமூக உள்கட்டமைப்பை உருவாக்குதல், மேம்படுத்தப்பட்ட சேவை வழங்குதல் மற்றும் உள்ளூர் சூழலியல் சூழலின் தரத்தை பராமரித்தல் ஆகியவை கிராமப்புற செழிப்பு மற்றும் மீள்தன்மைக்கு இன்றியமையாதவை ஆகும்.


குஷாங்கூர் டே IIM லக்னோவில் இணைப் பேராசிரியராகவும், அவினாஷ் குமார் IIM கல்கத்தாவில் உதவிப் பேராசிரியராகவும் உள்ளார்.




Original article:

Share:

மாம்பழங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு அப்பால் : அமெரிக்க ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா லாபம் ஈட்ட முடியுமா? -இந்திரஜித் பானர்ஜி மற்றும் பூர்ணிமா வர்மா

 வரி குறைப்புகள் (Tariff reductions) இந்தியாவின் உள்நாட்டு சந்தைக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, கொள்கை வகுப்பாளர்கள் வர்த்தக தாராளமயமாக்கல் சமநிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்..


"21-ம் நூற்றாண்டுக்கான அமெரிக்க-இந்தியா ஒப்பந்தம்" (US–India COMPACT for the 21st Century) பிப்ரவரி 13, 2025 அன்று தொடங்கப்பட்டது. 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை $200 பில்லியனில் இருந்து $500 பில்லியனாக அதிகரிப்பதே இதன் குறிக்கோள் ஆகும். "திட்டம் 500" (Mission 500) என்று அழைக்கப்படும் இந்த முயற்சி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகத்தை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறது. 2025-ம் ஆண்டின் பிற்பகுதியில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை (bilateral trade agreement) உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் கட்டணங்களைக் குறைத்தல், வரி அல்லாத தடைகளை நீக்குதல் மற்றும் விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். சவால்கள் இருந்தாலும், இந்தத் திட்டம் வளர்ச்சி, அறிவு பரிமாற்றம் மற்றும் வேலை உருவாக்கத்தை ஊக்குவிக்கும். இந்தியா ஒரு உலகளாவிய சக்தியாக வளர்ந்து வரும் நிலையில், கொள்கை வகுப்பாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அறிஞர்கள் இந்த திட்டம் இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா அல்லது ஆபத்துகளை ஏற்படுத்துமா என்பதை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். இதன் முக்கிய கேள்வி : "திட்டம் 500" நீண்ட காலத்திற்கு இந்தியாவின் பொருளாதாரத்திற்கு உதவுமா அல்லது பாதிக்குமா? என்பதுதான்.


2023-ம் ஆண்டில், அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியகம் (US Census Bureau) இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே $190 பில்லியன் வர்த்தகத்தை பதிவு செய்தது. இது ஒரு நிலையான வளர்ச்சியைக் காட்டுகிறது. 2024-ம் ஆண்டில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பொருட்களின் வர்த்தகத்தை $129.2 பில்லியனாக மதிப்பிட்டார். இந்தியாவிற்கான அமெரிக்க ஏற்றுமதி $41.8 பில்லியனை எட்டியது. இது 2023-ஐ விட 3.4% அதிகரிப்பு ஆகும். அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதி $87.4 பில்லியனாக இருந்தது, இது 4.5% அதிகரிப்பைக் குறிக்கிறது. இது அமெரிக்காவிற்கான வளர்ந்து வரும் பொருட்களின் வர்த்தக பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. அமெரிக்காவிற்கு மலிவான, உழைப்பு மிகுந்த ஏற்றுமதிகள் காரணமாக, இந்தியா வர்த்தக உபரியிலிருந்து பயனடைகிறது. இவை அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் அதிக மதிப்புள்ள, மூலதனம் மிகுந்த பொருட்களுக்கு முரணானவையாக உள்ளது. இருப்பினும், இந்த வர்த்தக மாதிரி நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்காது.


இந்தியாவின் சந்தையில் அமெரிக்காவிற்கு வரம்பிற்குட்பட்ட அணுகல் இருப்பதற்கான மற்றொரு காரணம் அதிக வரித் தடைகள் (high tariff barriers) ஆகும். விவசாயப் பொருட்களுக்கான சராசரியாகப் பயன்படுத்தப்படும் மிகவும் விருப்பமான நாடுகளுக்கு (most favoured nation (MFN)) வரிகள் அமெரிக்காவில் 5 சதவிகிதம் ஆனால் இந்தியாவில் 39 சதவிகிதம் ஆகும். இந்திய மோட்டார் சைக்கிள்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியைவிட, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது. இந்த கட்டண வேறுபாடுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சந்தை அணுகல் மூலம் வர்த்தக பற்றாக்குறையை குறைப்பதற்கான உள்நாட்டு அழுத்தம் ஆகியவை ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் ஆர்வத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. சுங்க வரி விகிதங்களில், குறிப்பாக விவசாயப் பொருட்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், இந்த நாடுகளுக்கு இடையே உள்ள உள்நாட்டு சந்தையை ஆதரிப்பதில் உள்ள அடிப்படை வேறுபாடுகள் காரணமாகும். இருப்பினும், அமெரிக்கா தனது விவசாயிகளுக்கு, குறிப்பாக 2018 முதல் 2020 வரை அதிக ஆதரவை வழங்குகிறது. ஏற்றுமதியை அதிகரிப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்துவதால், விவசாயப் பொருட்களின் மீதான குறைந்த வரிகளை இந்த ஆதரவு விளக்குகிறது.


இதனால், வரி குறைப்பு (Tariff reductions) இந்தியாவின் உள்நாட்டு சந்தையை பாதிக்கலாம். வர்த்தகம் வளரும்போது, ​​இந்த ஒப்பந்தம் அமெரிக்க சந்தை அணுகலை அதிகரிப்பதைவிட இந்தியாவின் உயர் மதிப்பு ஏற்றுமதிக்கு சாதகமாக இருக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் அமெரிக்க தொழில்துறை மற்றும் விவசாய ஏற்றுமதிக்கு பலனளித்தால், இந்தியாவின் வர்த்தக உபரி, அந்நிய செலாவணி இருப்பு மற்றும் விவசாயம் பாதிக்கப்படலாம். இந்தியா மாம்பழங்கள் மற்றும் மாதுளைகளை ஏற்றுமதி செய்கிறது. அதே நேரத்தில், அமெரிக்கா தொழில்துறை, உலோகம் மற்றும் நுகர்வோர் துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் உயர் மதிப்பு வர்த்தக சூழ்நிலையில் பரிமாற்றம் மற்றும் குறைந்த லாபம் கொண்ட விநியோகர்களாக இந்தியாவின் நிலை சவாலானதாக இருக்கலாம்.


அமெரிக்க பெருநிறுவனங்களின் போட்டிக்கு எதிராக இந்திய தொழில்களின் மீள்தன்மை ஒரு கவலைக்குரியது. ஆரம்ப வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க போர்பன் (US bourbon), மோட்டார் சைக்கிள்கள் (motorbikes), ஐசிடி பொருட்கள் (ICT products) மற்றும் உலோகங்கள் (metals) மீதான வரிகளை இந்தியா குறைத்தது. இவை அமெரிக்க நிறுவனங்களுக்கு போட்டிக்கான நன்மையைக் கொண்ட துறைகள் ஆகும். இருப்பினும், இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தை அணுகல் முக்கியமாக விவசாயத்திற்கு பயனளிக்கிறது. இது இந்திய உற்பத்தியாளர்களுக்கு பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. வர்த்தக கட்டுப்பாடுகளைக் குறைப்பது இந்தியாவில் அமெரிக்க தயாரிப்பு விற்பனையை அதிகரிக்க வழிவகுக்கும். இது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் முக்கிய நிறுவனங்களை பாதிக்கலாம். ஜவுளி, ஆட்டோமொபைல்கள், மின்னணுவியல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் போன்ற துறைகள் சந்தைப் பங்கை இழக்கக்கூடும். அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்கு மலிவான பொருட்களை இறக்குமதி செய்ய குறைந்த வரிகளைப் பயன்படுத்தலாம்.


வர்த்தகத்திற்கான சவாலானது பொருளாதாரம் மற்றும் இராஜதந்திர ரீதியிலானது. அதிகரித்து வரும் அமெரிக்க இறக்குமதிகள் இந்திய தொழில்களில் சமமான முதலீட்டால் பொருந்தவில்லை என்றால், இந்தியா சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். இதில் தொழில்துறை தேக்கம், வேலை இழப்புகள் மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறுகள் ஆகியவை அடங்கும். வர்த்தக ஒப்பந்தங்கள் மெதுவாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். இது உள்நாட்டுத் துறைகளுக்கு நீண்டகால பாதிப்பைத் தவிர்க்க உதவும்.


ஒப்பந்தம் (COMPACT) புதிய முதலீடுகளை ஆதரிக்கிறது. ஆனால், தற்போதைய போக்குகள் கவலையளிக்கின்றன. இந்திய நிறுவனங்கள் அமெரிக்க அலுமினியம், எஃகு, பேட்டரி மற்றும் மருத்துவத் தொழில்களில் $7.35 பில்லியனை முதலீடு செய்கின்றன. இது அமெரிக்காவில் 3,000 வேலைகளை உருவாக்குகிறது. இருப்பினும், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவின் அதிக மதிப்புள்ள துறைகளில் முதலீடு செய்வதாக உறுதியளிக்கவில்லை.


இந்த நாடுகளின் வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து (COMPACT) இந்தியா முழுமையாகப் பயனடைய, தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையில் அமெரிக்க முதலீடுகள் தேவை. இதில் கூட்டு ஆராய்ச்சி, தகவல் பகிர்வு ஒப்பந்தங்கள் மற்றும் குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் நேரடி நிதி ஆகியவை அடங்கும். இதற்கான உறுதிமொழிகள் இல்லாமல், இந்தியா தொழில்நுட்பத்தில் பின்தங்கக்கூடும். அதே நேரத்தில், திறமையையும், மூலதனத்தையும் தொடர்ந்து இழக்க நேரிடும்.


இந்தியா விமானம், இயந்திரங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற மூலதனம் மிகுந்த, அதிக லாபம் தரும் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இது ஜவுளி, தோல் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற உழைப்பு மிகுந்த பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அதிக மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலமும், குறைந்த லாபம் தரும் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலமும், இந்தியா நியாயமற்ற பொருளாதார அமைப்பில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. இந்த அமைப்பு நாடானது அதிக மதிப்புள்ள ஏற்றுமதியை அதிகரிப்பதைத் தடுக்கிறது. கூடுதலாக, அதிக பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கான அமெரிக்காவின் அழுத்தம் மூலதனத்தின் பெரிய வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும். இது இந்தியாவின் வர்த்தக உபரியையும் குறைக்கலாம். வர்த்தக வளர்ச்சியை அதிகரிக்க, இந்தியா அதன் ஏற்றுமதி இலாகாவில் (export portfolio) அதிக மதிப்புள்ள பொருட்களைச் சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.


அமெரிக்க-இந்தியா ஒப்பந்தம் ஒரு சிக்கலான ஒப்பந்தமாகும். ஆனால், அது பொருளாதார நன்மைகளைத் தரும். 2018 முதல் 2023 வரை இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் 34.3% வளர்ந்ததாக அமெரிக்க வணிகத் துறை US (Department of Commerce) தெரிவித்துள்ளது. இது $141.5 பில்லியனில் இருந்து $190.1 பில்லியனாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி அடுத்த ஐந்து ஆண்டுகளில் வர்த்தகம் $500 பில்லியனாக விரிவடைய முடியுமா என்ற கேள்விகளை எழுப்புகிறது. வர்த்தக தாராளமயமாக்கல் சமநிலையில் இருப்பதை கொள்கை வகுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.


வர்மா IIM அகமதாபாத்தில் ஒரு பேராசிரியராகவும் உள்ளார். பானர்ஜி ஒரு கல்வியாளராகவும் உள்ளார்.




Original article:

Share:

உலகளாவிய கடல் பனி மூடி ஏன் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது? இதன் பொருள் என்ன? -அலிந்த் சவுகான்

 கடல் பனி என்பது துருவப் பகுதிகளில் சுதந்திரமாக மிதக்கும் பனியைக் குறிக்கிறது. இது பொதுவாக குளிர்காலத்தில் விரிவடைந்து கோடையில் உருகும் போது, ​​சில கடல் பனியானது ஆண்டு முழுவதும் இருக்கும். இது நிலத்தில் உருவாகும் பனிமலைகள் (icebergs), பனிப்பாறைகள் (glaciers), பனிக்கட்டிகள் (ice sheets) மற்றும் பனியடுக்குகளிலிருந்து (ice shelves) வேறுபட்டது என்பதை நினைவில் கொள்க.


பிப்ரவரி 13-க்கு முந்தைய ஐந்து நாட்களில், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக்கில் மொத்த கடல் பனியின் அளவு 15.76 மில்லியன் சதுர கி.மீ ஆகக் குறைந்துள்ளது. இது ஜனவரி-பிப்ரவரி 2023ஆம் ஆண்டில் முந்தைய ஐந்து நாள் சாதனையான குறைந்தளவாக 15.93 மில்லியன் சதுர கி.மீ.-ஐ விடக் குறைவு ஆகும். இந்தத் தகவல், அமெரிக்க தேசிய பனி மற்றும் பனி தரவு மையத்தின் (National Snow and Ice Data Center (NSIDC)) தரவுகளின் பிபிசி பகுப்பாய்விலிருந்து வருகிறது.


கடல் பனி (Sea ice) என்பது துருவப் பகுதிகளில் சுதந்திரமாக மிதக்கும் பனியாகும். இது பொதுவாக குளிர்காலத்தில் விரிவடைந்து கோடையில் உருகும் நிலையைக் கொண்டுள்ளது. இருப்பினும், சில கடல் பனி ஆண்டு முழுவதும் இருக்கும். இது நிலத்தில் உருவாகும் பனிமலைகள், பனிப்பாறைகள், பனிப்படலங்கள் மற்றும் பனியடுக்குகளிலிருந்து வேறுபட்டது ஆகும்.


கடலில் இருக்கும் வெப்பத்தை தக்க வைப்பதன் மூலம் பூமியை குளிர்விப்பதில் கடல் பனி முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால், மேலே உள்ள காற்று வெப்பமடைவதைத் தடுக்கிறது. எனவே, கடல் பனி மூடி குறைந்தால், அது பூமிக்கு பேரழிவு தரும் விளைவுகளுக்கு வழிவகுக்கும்.


சரிவு 


தற்போது, ​​ஆர்க்டிக் கடல் பனி ஆண்டின் இந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த அளவில் உள்ளது. 1970 காலகட்டங்களின் பிற்பகுதியில் இருந்து செயற்கைக்கோள் பதிவுகளின் அடிப்படையில் அண்டார்டிக் கடல் பனி ஒரு புதிய குறைந்த அளவிற்கு அருகில் உள்ளது. வரலாற்றுப் போக்குகளைக் கருத்தில் கொண்டால் இது ஆச்சரியமல்ல. 1970 கால கட்டங்களின் பிற்பகுதியிலிருந்து, தேசிய பனி மற்றும் பனி தரவு மையம் (NSIDC) ஆண்டுக்கு 77,800 சதுர கி.மீ கடல் பனி இழப்பை மதிப்பிட்டுள்ளது.


1981 மற்றும் 2010 ஆம் ஆண்டுக்கு இடையில், செப்டம்பர் மாதத்தில் ஆர்க்டிக் கடல் பனியின் அளவு, அதன் குறைந்தபட்ச அளவை எட்டும்போது, ​​ஒரு பத்தாண்டு காலத்திற்கு 12.2% சுருங்கியது என்று நாசா தெரிவித்துள்ளது.


அண்டார்டிக்கில், நிலைமை வேறுபட்டது. 2015 வரை, கடல் பனி ஒவ்வொரு ஆண்டும் சற்று அதிகரித்து வருகிறது. ஆனால், 2014-ம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து 2017-க்கு இடையில், அண்டார்டிக் இரண்டு மில்லியன் சதுர கிலோமீட்டர் கடல் பனியை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோப்பர்நிக்கஸ் மரைன் சர்வீஸின் கூற்றுப்படி, இந்தப் பகுதி ஸ்பெயினின் அளவைவிட நான்கு மடங்கு பெரியது. 2018-ம் ஆண்டில், கடல் பனி அளவு மீண்டும் அதிகரித்தது.


2023-ம் ஆண்டில், அதிகபட்சமாக அண்டார்டிக் கடல் பனியானது வரலாற்று ரீதியாக குறைந்த அளவை எட்டியுள்ளது. கடல் பனி மூட்டம் வழக்கத்தைவிட இரண்டு மில்லியன் சதுர கிமீ குறைவாக இருந்தது. இது இங்கிலாந்தின் அளவை விட சுமார் 10 மடங்கு அதிகமாக இருந்தது.


கடந்த ஆண்டு, 2023 ஆம் ஆண்டைவிட அதிகமாக இருந்தது. ஆனால், 1981-2010 இலிருந்து சராசரியாக அதிகபட்ச அளவை விட 1.55 மில்லியன் சதுர கிமீ குறைவாக உள்ளது.




சரிவுக்கான காரணங்கள்


2025-ம் ஆண்டில் குறைந்த பனி அளவுகள் பல காரணிகளால் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இவற்றில் சூடான காற்று, சூடான கடல் நீர் மற்றும் பனிக்கட்டியை உடைக்கும் பலத்த காற்று ஆகியவை அடங்கும் என்று பிபிசி தெரிவித்துள்ளது.


அண்டார்டிக் கடல் பனியானது, குறிப்பாக பனி உடைக்கும் காற்றினால் பாதிக்கப்படக்கூடியது. ஆர்க்டிக் பனியைப் போலல்லாமல், இது கண்டங்களுக்குப் பதிலாக கடலால் சூழப்பட்டுள்ளது. இதனால், இது அதை மேலும் நகரக்கூடியதாகவும் மெல்லியதாகவும் ஆக்குகிறது. தெற்கு அரைக்கோள கோடையின் (டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) இறுதியில் வெப்பமான காற்று மற்றும் வெப்பமான நீர் காரணமாக இந்த ஆண்டு நிலைமை மோசமாகிவிட்டது.


அதிக காற்று வெப்பநிலை அண்டார்டிக் பனிப்படலத்தின் விளிம்புகளை உருக வழிவகுத்தது. இது பனியடுக்குகள் என்றும் அழைக்கப்படுகிறது. இது கடலுக்கு மேல் நீண்டுள்ளது. பிரிட்டிஷ் அண்டார்டிக் கணக்கெடுப்பின் (British Antarctic Survey) ஆராய்ச்சி விஞ்ஞானி டாம் பிரேஸ்கர்டில், தொடர்ந்து கடல் வெப்பமயமாதல் இந்தப் பிரச்சினைக்கு பங்களிப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார்.


நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலம் நீடிக்கும் ஆர்க்டிக்கில், வடகிழக்கு கனடாவில் உள்ள ஒரு பெரிய உப்பு நீர்நிலையான ஹட்சன் விரிகுடாவைச் சுற்றி தாமதமாக உறைபனி ஏற்பட்டதால் கடல் பனி குறைவாகவே இருந்தது. வழக்கத்திற்கு மாறாக வெப்பமான கடல்கள் குளிர்வதற்கு அதிக நேரம் எடுத்ததால் தாமதம் ஏற்பட்டது.


நார்வே மற்றும் ரஷ்யாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள பேரண்ட்ஸ் கடல் (Barents Sea) மற்றும் அலாஸ்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே உள்ள பெரிங் கடல் (Bering Sea) ஆகியவற்றைச் சுற்றிலும் பனி உடைந்து சில புயல்களை இப்பகுதி கண்டது.ஆர்க்டிக் பனி பல ஆண்டுகளாக மெல்லியதாகவும் உடையக்கூடியதாகவும் மாறுகிறது. எனவே, புயல்களால் உடைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.


நார்வேயின் ஸ்வால்பார்ட் போன்ற பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமான காற்றின் வெப்பநிலை கடல் பனியை மேலும் இழக்கச் செய்தது.


சரிவு (dip) என்றால் என்ன?


கடல் பனி மூட்டம் குறைவாக இருந்தால், அதிக நீர் சூரியனுக்கு வெளிப்படும். இது அதிக வெப்பத்தை (சூரிய கதிர்வீச்சு) உறிஞ்சுவதற்கு காரணமாகிறது. இது அதிக வெப்பநிலைக்கு வழிவகுக்கிறது. கடல் பனி துருவப் பகுதிகளில் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. அதன் பிரகாசமான, வெள்ளை மேற்பரப்பு திரவ நீரைவிட அதிக சூரிய ஒளியை விண்வெளிக்கு பிரதிபலிக்கிறது. கடல் பனி இழப்பு (loss of sea ice) உலகின் பிற பகுதிகளைவிட துருவப் பகுதிகள் வேகமாக வெப்பமடைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.


கடல் பனி உருகுவது உலகப் பெருங்கடல்களில் நீரின் இயக்கத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. உருகும் பனியிலிருந்து வரும் நன்னீர் கடல் நீரில் கலப்பதால் இது நிகழ்கிறது. இதன் விளைவாக, மேற்பரப்பு நீரின் உப்புத்தன்மை குறைந்து, அதன் அடர்த்தியைக் குறைக்கிறது. இது கடலின் அடிப்பகுதிக்கு நீர் கீழ்நோக்கிச் செல்லும் ஓட்டத்தைக் குறைக்கிறது. இந்த செயல்பாட்டில் மந்தநிலை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இது உலகளாவிய காலநிலையை சீர்குலைக்கும், கடல் உணவுச் சங்கிலிக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பனியடுக்குகளை பலவீனப்படுத்தும்.




Original article:

Share:

இந்தியாவில் கேக் உத்தரவு (gag order) என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 யூடியூப் நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்ததற்காக பாட்காஸ்டர் (podcaster) ரன்வீர் அல்லாபாடியா மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்படுவதிலிருந்து உச்ச நீதிமன்றம் தற்காலிக பாதுகாப்பை வழங்கியது. இருப்பினும், நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என் கே சிங் ஆகியோர் முக்கியமான விதிகளை வகுத்தனர். மறு அறிவிப்பு வரும் வரை, அல்லாபாடியாவும் அவரது குழுவினரும் சமூக ஊடகங்களில் எதையும் பதிவிட அனுமதிக்கப்படவில்லை.


              Gag Order :  Gag உத்தரவு (Gag Order) என்பது ஒரு வழக்கு அல்லது நிகழ்வைப் பற்றி பொதுமக்களிடம் பேசுவதைத் தடுக்கும் ஒரு சட்ட உத்தரவு ஆகும். இது, Gag உத்தரவின் நோக்கமானது பாரபட்சத்தைத் தடுப்பதும் சட்டச் செயல்முறையின் நேர்மையைப் பேணுவதுமாகும்.


முக்கிய அம்சங்கள் :


1. அடுத்த விசாரணையில் உதவுமாறு உச்ச நீதிமன்றம் இந்திய அட்டர்னி ஜெனரலைக் (Attorney General for India) கேட்டுக் கொண்டது. இணையவழி உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் உள்ள "வெற்றிடத்தை" இது நிவர்த்தி செய்வதாகும்.


2. அல்லாபாடியாவுக்கு நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், பேச்சு சுதந்திரம் குறித்த சில கேள்விகளை Gag உத்தரவு (Gag Order) எழுப்புகிறது. அத்தகைய நிபந்தனை "பேச்சு சுதந்திரத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும்" (chilling effect on the freedom of speech) என்று கூறிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


3. மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை அணுகியதுடன், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை (FIR) இணைக்க அவர் முயன்றார். மேலும், தனது கைது நடவடிக்கையைத் தடுக்க இடைக்கால உத்தரவையும் அவர் கோரினார்.


4. அவர் கோரிய நிவாரணம் முன்ஜாமீன் பெறுவதைப் போன்றது. இத்தகைய கோரிக்கைகள் பெரும்பாலும் அரசியலமைப்பின் பிரிவு 32-ன் கீழ் விசாரிக்கப்படுகின்றன. இந்தப் பிரிவு அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கிறது மற்றும் தன்னிச்சையான காவல்துறை நடவடிக்கைகளுக்கு எதிராகப் பாதுகாக்கிறது.


5. ஒரே பிரச்சினைக்காக வெவ்வேறு இடங்களில் பல முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பதிவு செய்வது பல வழக்குகளில் காணப்படுகிறது. இந்த நடைமுறை ஒரு நபரின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தலாம். நீதிமன்றங்கள் பொதுவாக இந்த FIR-களை இணைக்கின்றன அல்லது ஒன்றில் மட்டுமே விசாரணையை அனுமதிக்கின்றன. அதே நேரத்தில், மற்றவற்றை நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் மனுதாரர் பல நீதிமன்றங்களில் ஆஜராக வேண்டியதில்லை. இறுதியில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டாலும், குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ச்சியான பல தண்டனைகளுக்குப் பதிலாக ஒரே தண்டனையை அனுபவிக்கிறார்.


6. ஆனால், உச்ச நீதிமன்றம் இரண்டு நிபந்தனைகளை விதித்தது. முதலாவதாக, அல்லாபாடியா நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி அவரது பாஸ்போர்ட்டை டெபாசிட் செய்ய வேண்டும். இரண்டாவதாக, மறு உத்தரவு வரும் வரை அவர் அல்லது அவரது கூட்டாளிகள் YouTube அல்லது வேறு எந்த ஆடியோ/வீடியோ தளத்திலும் எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்பக்கூடாது.

உங்களுக்கு தெரியுமா? :


1. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 438(2), உயர் நீதிமன்றம் அல்லது அமர்வு நீதிமன்றம் ஒருவரை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடலாம் என்று கூறுகிறது. வழக்கின் குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில் நீதிமன்றம் நிபந்தனைகளை அமைக்க வேண்டும்.


2. குற்றம் சாட்டப்பட்டவர் தப்பிச் செல்வதைத் தடுக்க பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு ஒத்துழைப்பதை உறுதி செய்வதற்காக அதிக தொகையில் ஜாமீன் நிர்ணயிக்கப்படலாம். மற்றொரு பொதுவான நிபந்தனை என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கமான இடைவெளியில் ஒரு காவல் அதிகாரியிடம் புகார் அளிக்க வேண்டும்.


3. மற்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் கடுமையான ஜாமீன் நிபந்தனைகளை விதித்துள்ளன. கூகிள் மேப் பின் (Google map PIN) குறியீட்டைப் பகிர்வது அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிப்பது ஆகியவை இதில் அடங்கும். 2023-ம் ஆண்டு நடந்த ஒரு வழக்கில், ஜாமீன் பெறுவதற்காக குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஒரு பெரிய தொகையை டெபாசிட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இத்தகைய கடுமையான ஜாமீன் நிபந்தனைகள் "ஜாமீன் விற்பது" (selling bail) போன்றது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.


4. எவ்வாறாயினும், கைது செய்வதிலிருந்து பாதுகாப்பை வழங்கும் gag உத்தரவு (gag order), ஒரு அசாதாரண நிபந்தனையாகும். ஏனெனில், இது முன் தடையாக செயல்படுகிறது. முன் தடை (prior restraint) என்பது பேச்சு அல்லது வேறு எந்த வெளிப்பாடும் அது நிகழும் முன் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், முன் தடையை விதிக்கும் சட்டங்கள் பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. வெறுப்புப் பேச்சு வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர் இதே போன்ற அறிக்கைகளை வெளியிட முடியாது என்று நீதிமன்றம் முடிவு செய்யலாம். இதன் பொருள், பேச்சில் முழுமையாக குறுக்கிடுவதைத் தவிர்க்க, gag உத்தரவை (gag order) குறுகிய முறையில் வடிவமைக்க முடியும்.


5. 2022-ம் ஆண்டில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் இருக்கும்போது ஜுபைர் ட்வீட் செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு கோரியிருந்தது. இருப்பினும், இந்தக் கோரிக்கையை நீதிமன்ற அமர்வு நிராகரித்தது.




Original article:

Share: