மறக்கப்பட்ட ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட மசோதா முறையை மீண்டும் உயிர்ப்பித்தல் -மேகுல் சப்ரா, அதர்வா தேஷ்முக்

 தனிநபர் மசோதா, இந்தியாவின் சட்டமன்ற நிலப்பரப்புக்கு ஒரு தங்கச் சுரங்கமாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது.


தனிநபர் மசோதாக்கள் (Private Member’s Bills (PMBs)) அமைச்சர்கள் அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய சட்டங்களை பரிந்துரைக்க அனுமதிக்கின்றன. இந்தியாவின் நாடாளுமன்ற அமைப்பில், பெரும்பாலான சட்டங்கள் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு, அமைச்சகங்களால் வரைவு செய்யப்பட்டு, அமைச்சர்களால் தாக்கல் செய்யப்படுகின்றன. இதற்கு நேர்மாறாக, ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சியைச் சேர்ந்த தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தனிநபர் உறுப்பினர் மசோதாக்கள் வருகின்றன. ஒவ்வொரு அமர்விலும், வெள்ளிக்கிழமைகள் பொதுவாக தனிநபர் மசோதாக்கள் பற்றிய விவாதத்திற்காக ஒதுக்கப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் தாங்களாகவே செயல்படக்கூடிய சில வழிகளில் தனிநபர் மசோதாகளும் ஒன்றாகும்.


இருப்பினும், இந்த முக்கியமான தலையீடு படிப்படியாக சிதைந்து வருகிறது. அடிக்கடி ஏற்படும் இடையூறுகள், முன்கூட்டிய ஒத்திவைப்புகள் மற்றும் அரசாங்க அலுவல்களுக்கு அதிகரித்து வரும் முன்னுரிமை ஆகியவை தனிநபர் மசோதாவை ஒரு தீவிரமான சபை நடவடிக்கைக்குப் பதிலாக ஒரு அடையாளமாக குறைத்துள்ளன. தனிநபர் மசோதாவைப் புறக்கணிப்பது ஒரு நடைமுறைக் குறைபாடாகும். மேலும், அது ஜனநாயகப் பின்னடைவையும் குறிக்கிறது.


தனிநபர் மசோதா போக்குகள், 17வது மற்றும் 18வது மக்களவை 


சுதந்திரத்திற்குப் பிறகு, வெறும் 14 தனிநபர் மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ளன. மேலும், 1970 முதல் எந்த மசோதாவும் இரண்டு அவைகளையும் கடந்ததில்லை. 17வது மக்களவையில் (2019-24), 729 தனிநபர் உறுப்பினர் மசோதாக்களும், மாநிலங்கவையில் 705 மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும், மக்களவையில் இரண்டு மசோதாக்கள் மற்றும் மாநிலங்களவையில் 14 மட்டுமே விவாதிக்கப்பட்டன.


18வது மக்களவையில், இதுவரை 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தனிநபர் மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். 2024ன் தொடக்க மற்றும் வரவு செலவு அறிக்கை கூட்டத்தொடர்களில், மக்களவையில் 64 தனிநபர் உறுப்பினர் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், ஒன்று கூட விவாதிக்கப்படவில்லை.


குளிர்காலக் கூட்டத்தொடரில், மக்களவையில் இரண்டு வெள்ளிக்கிழமைகள் இடையூறுகளால் பாதிக்கப்பட்டன. மற்றொரு, வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு குறித்த பொது விவாதத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டது. வரவு செலவு அறிக்கை கூட்டத்தொடரில்கூட, வழக்கமாக தனிநபர் உறுப்பினர்ரகளுக்கு ஒதுக்கப்பட்ட முதல் வெள்ளிக்கிழமை, ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை குறித்த விவாதங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. மக்களவையில் ஒரு வெள்ளிக்கிழமை மட்டுமே தனிநபர் தொடர்பான செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டது. அதுவும் ஒரு தீர்மானத்திற்காக மட்டுமே. மாநிலங்களவையில், வரவு செலவு அறிக்கை கூட்டத்தொடரின் போது பட்டியலிடப்பட்ட தனிநபர் மசோதாகளில், ஒரே வெள்ளிக்கிழமை 49 மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், ஒன்றின் மீது மட்டுமே விவாதம் தொடங்கியது, ஆனால், அவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதால் (adjourned) அது குறைக்கப்பட்டது.


தனிநபர் மசோதாக்கள் நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிசார்பின்றி தனிப்பட்ட நம்பிக்கைகள், தொகுதி கோரிக்கைகள் அல்லது உருவாகும் சமூகத் தேவைகளைப் பிரதிபலிக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான தளத்தை வழங்கியுள்ளன.


குறிப்பிடத்தக்க ஒரு உதாரணம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சூலே அவர்கள் அக்டோபர் 28, 2019 அன்று லோக் சபாவில் அறிமுகப்படுத்திய “இணைப்பை துண்டிக்கும் உரிமை” (Right to Disconnect) மசோதாவாகும். இந்த மசோதா ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ வேலை நேரத்திற்கு அப்பாற்பட்ட வேலை தொடர்பான தகவல்தொடர்பிலிருந்து விலகுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை வழங்குவதை முன்மொழிந்தது, டிஜிட்டல் காலத்தில் வேலை தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகரித்துவரும் அத்துமீறலை நிவர்த்தி செய்தது. இது ஆரம்ப நிலையை தாண்டி முன்னேறவில்லை என்றாலும், மன ஆரோக்கியம், வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் அதிகமாக இணைக்கப்பட்ட பொருளாதாரத்தில் தொழிலாளர் உரிமைகள் குறித்த முக்கியமான தேசிய உரையாடலை இந்த மசோதா தூண்டியது. இது தனிநபர் உறுப்பினர் மசோதாக்கள் எவ்வாறு முன்னோக்கி சிந்திக்கும் மற்றும் பாரம்பரியமற்ற யோசனைகளுக்கான வாகனங்களாக இருக்கலாம் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.


கடைசியாக தனிநபர் மசோதா சட்டமாக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவை இன்னும் பொருத்தமானவையாக உள்ளனவா? 


மாறாக, சில தனிநபர் உறுப்பினர் மசோதாக்கள் அதிக உறுதியான சட்டமியற்றும் தாக்கத்தைக் கொண்டிருந்தன. 2014-ல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்கவையின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் “திருநங்கைகளின் உரிமைகள்” (Rights of Transgender Persons) மசோதாவை அறிமுகப்படுத்தினார். ஏப்ரல் 24, 2015 அன்று, இந்த மசோதா 40 ஆண்டுகளுக்கு மேலாக மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்ட முதல் தனிநபர் மசோதாவாக வரலாற்றை உருவாக்கியது. இது மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-க்கு இது அடித்தளமிட்டது. இந்த மசோதா தனிநபர் முன்முயற்சிகள் எவ்வாறு சட்டமியற்றும் கொள்கையை வடிவமைக்க முடியும் என்பதையும், சமூக ரீதியாக உணர்திறன் வாய்ந்த பிரச்சினைகளில் அரசாங்க நடவடிக்கையை கட்டாயப்படுத்த முடியும் என்பதற்கு ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாகும்.


தனிநபர் மசோதாக்கள் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் தன்னிச்சையாக சிந்திக்க இடமளிக்கின்றன. பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் சினாய்யா ஷெட்டி அவர்களின் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளை அளிக்கும் மசோதா இதற்கு ஒரு உதாரணம். அவரது தலையீடானது, அரசாங்க முன்னுரிமைகளால் அடிக்கடி கட்டுப்படுத்தப்படும் கருவூல அமர்வு நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட தனிப்பட்ட நுண்ணறிவு அல்லது தொகுதி கருத்துக்களின் அடிப்படையில் சட்டங்களை அறிமுகப்படுத்த தனிநபர் உறுப்பினர் மசோதாக்களைப் பயன்படுத்தலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.


தன்னிச்சையான செயல்பாட்டிற்கான இடம் சுருங்குகிறது (Shrinking space for independent action)


தனிப்பட்ட சட்டமியற்றல் முன்முயற்சிக்கான குறைக்கப்பட்ட இடத்திற்கு பங்களித்த மாற்றங்களை ஒருவர் புறக்கணிக்க முடியாது. 10-வது அட்டவணை மூலம் கட்சித்தாவல் தடை சட்டத்தை (Anti-Defection Law) அறிமுகப்படுத்திய 52-வது அரசியலமைப்பு திருத்தம், அரசியல் நிலைத்தன்மையை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், குறிப்பாக கருவூல அமர்வு உறுப்பினர்கள், தங்கள் கட்சியின் சட்டமியற்றல் கொள்கையை தன்னிச்சையாக கேள்வி கேட்பதற்கோ அல்லது அதிலிருந்து விலகுவதற்கோ உள்ள திறனை வரம்புக்குட்படுத்தும் எதிர்பாராத விளைவையும் இது கொண்டுள்ளது. இத்தகைய கட்டமைக்கப்பட்ட சூழலில், தனிநபர் மசோதா என்பது கட்சி எல்லைகளைக் கடந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கபூர்வமான கொள்கை மாற்றுகளை பரிந்துரைக்கக்கூடிய சில வழிகளில் ஒன்றாக உள்ளது.


இந்தியாவில் வாக்காளர்கள் கட்சி சின்னங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம் என்றாலும், அவர்களின் தேர்வுகள் பெரும்பாலும் தனிநபரின் நேர்மை, நிபுணத்துவம் மற்றும் தொகுதிக்குள் உள்ள சாதனைப் பதிவு ஆகியவற்றால் சமமாக பாதிக்கப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதற்காக மட்டுமல்லாமல், தங்கள் தொகுதியினரின் ஆர்வங்கள் மற்றும் கவலைகளுக்கு குரல் கொடுப்பதற்காகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


தனிநபர் உறுப்பினர் மசோதா செயல்முறையைப் பாதுகாக்க, ஒரு தொடர் நடைமுறை மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும்.

சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்


முதலாவதாக, தனிநபர் மசோதாக்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை புனிதமானதாகக் (sacrosanct) கருதுவது அவசியம். தேசிய அவசரநிலை சூழ்நிலைகளைத் தவிர, நடைமுறை மற்றும் வணிக நடத்தை விதிகளில் திருத்தங்கள் இந்த நேரத்தை மீறுவதிலிருந்து வெளிப்படையாகப் பாதுகாக்க வேண்டும். தனிநபர் உறுப்பினர் மசோதாக்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரங்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல், நிலைத்தன்மையுடன் செயல்படுத்தப்பட வேண்டும். பயனுள்ள விவாதம் மற்றும் தனிநபர் உறுப்பினர் மசோதாக்களை ஏற்றுக்கொள்ளும் திறனையும் செயல்படுத்துகிறது.


தரம், பொருத்தம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கான மசோதாக்களைத் திரையிடுவதற்குப் பொறுப்பான தனிநபர் மசோதாகளுக்காக குறிப்பாக ஒரு மறுஆய்வுக் குழுவை நிறுவுவது குறித்து நாடாளுமன்றம் பரிசீலிக்கலாம். பொது முக்கியத்துவம் மற்றும் கட்சிகளுக்கு இடையிலான ஆதரவின் அடிப்படையில் விவாதத்திற்கான முன்னுரிமைப் பட்டியலைக்கூட இது பரிந்துரைக்கலாம். அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லது பரவலாக ஆதரிக்கப்படும் மசோதாக்கள் காலக்கெடுவிற்குள் அவையை அடைவதற்கு ஒரு விரைவான வழிமுறையும் அறிமுகப்படுத்தப்படலாம்.


அரசாங்கம் தனது சொந்த சட்டமியற்றும் பணிகளுக்கு போதுமான நேரம் இல்லை என்று நினைத்தால், வெள்ளிக்கிழமைகளை தனிநபர் மசோதாக்களுக்கு ஒதுக்குவதற்குப் பதிலாக நாடாளுமன்றத்தின் வேலை நேரத்தை அதிகரிப்பது பற்றி சிந்திக்க வேண்டும். தற்போது, ​​இரு அவைகளும் காலை 11 மணி முதல் மாலை 4:30 மணி வரை செயல்படும். இதில் மதிய உணவு இடைவேளையும் அடங்கும். ஒன்று அல்லது இரண்டு மணிநேரங்களை மட்டும் கூடுதலாகச் சேர்ப்பது கூட, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நேரத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், பூஜ்ஜிய நேரம் (Zero Hour) மற்றும் கேள்வி நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்த உதவும். இந்தியா விரைவில் தொகுதி மறுவரையறை செய்தல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ள நிலையில், சீர்திருத்தத்தின் அவசரம் முன்னெப்போதையும்விட  அதிகமாக உள்ளது.


சர்வதேச நடைமுறையிலிருந்து மாற்றியமைக்கக்கூடிய ஒரு கட்டாய சீர்திருத்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பத்துநிமிட விதி - எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பிரையும் ஒரு தனி நபர் உறுப்பினர் மசோதாவுக்கு ஆதரவாக 10 நிமிடங்கள் வரை ஒரு குறுகிய உரையை நிகழ்த்தலாம். அதன் அறிமுகத்துடன், அதன் பிறகு மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் சமமான நேரத்திற்கு அதை எதிர்க்கலாம். இது நீண்டநேர இடைவெளிகள் இல்லாமல் மசோதாக்களை அறிமுகப்படுத்தவும், கேட்கவும், பதிவு செய்யவும் அனுமதிக்கிறது. இந்திய சூழலில் இதேபோன்ற ஒரு விதியை ஏற்றுக்கொள்வது, தற்போதுள்ள தனி நபர் மசோதா நடைமுறைகளுக்கு கூடுதலாகவோ அல்லது மாற்றாகவோ அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற யோசனைகள் பொதுக் களத்தில் நுழைவதற்கான ஒரு வழியை உருவாக்கலாம்.


இந்திய குடியரசுத்தலைவர்/மாநிலங்கவை தலைவர் ஜக்தீப் தன்கர் கூறுகையில், ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதில் தனி நபர்களின் பங்கை வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர்தனி நபர் மசோதாக்களை இந்தியாவின் சட்டமன்ற நிலப்பரப்புக்கு "தொலைநோக்குப் பார்வை கொண்டவை, எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்டவை மற்றும் ஒரு தங்கச் சுரங்கம்" என்று அவர் விவரித்தார். இந்த பொறிமுறையானது உண்மையாக ஆதரிக்கப்படும்போது அதன் மதிப்பு மற்றும் திறனை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.


மெஹுல் சாப்ரா & அதர்வா தேஷ்முக் 2024-25ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சட்ட உதவியாளர்களாக (Legislative Assistants to Members of Parliament (LAMP)) உள்ளனர். 


Original article:
Share:

இந்திய நீதி அறிக்கை 2025, நீதி அமைப்பு சாதாரண குடிமகனை எவ்வாறு தோல்வியடையச் செய்கிறது என்பதைக் காட்டுகிறது -மாதுரிமா தனுக

 தாமதமான விசாரணைகள், நகர்ப்புற காவல் துறை சார்பு, சிறைச்சாலை நெரிசல் மற்றும் சட்ட நிறுவனங்களில் பொறுப்புத்தன்மை இல்லாமை ஆகியவற்றின் மீது பெரும்பாலும் பாரபட்சம் காட்டுகிறது.


இந்த மாதம் வெளியிடப்பட்ட இந்திய நீதி அறிக்கை (India Justice Report (IJR)) 2025 இன் நான்காவது பதிப்பு, நீதித்துறையின் நான்கு முக்கிய துறைகளான நீதித்துறை, காவல்துறை, சிறைச்சாலைகள் மற்றும் சட்ட உதவி ஆகியவற்றில் உள்ள முக்கியமான சிக்கல்களை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் நீதி அமைப்பை பலவீனமாகவும், மெதுவாகவும், பெரும்பாலும் சாதாரண மக்களுக்கு நீதி வழங்க முடியாததாகவும் மாற்றியிருக்கும் அமைப்பில் கடுமையான இடைவெளிகள் இருப்பதை இது காட்டுகிறது.


"அநீதி" (injustice) பற்றிய சொற்றொடர் பொதுவானவை. அவற்றைப் பற்றி நாம் செய்தித்தாள்களில் படிக்கிறோம், செய்தி சேனல்களில் பார்க்கிறோம், அல்லது திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களில் பார்க்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையங்களிலிருந்து திருப்பி அனுப்பப்படும் காட்சிகளைக் கண்டு நம்மில் சிலர் தயங்குகிறோம். நீதிமன்றங்கள் பெரும்பாலும் வழக்குகளை ஒத்திவைப்பதை நாம் கவனிக்கிறோம். ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் போராட்டங்கள் நீண்ட குற்றவியல் நடைமுறைகளில் சிக்கித் தவிப்பதையும் நாம் காண்கிறோம். இருப்பினும், பலர் அதை "சாதாரணமானது" என்றும் வழக்கமான வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள்.


நீதித்துறையின் பிரச்சினைகள் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கின்றன. காவல்துறையினர் நம்மைப் பாதுகாக்க வேண்டியிருந்தாலும், அவர்களை அணுக நாம் பயப்படுகிறோம். வழக்குகள் முடிவடைய அதிக நேரம் எடுப்பதால் நாம் நீதிமன்ற அமைப்பு முறையை நம்பவில்லை. காவல் வன்முறை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை தவறாக நடத்துவதற்கு நாம் பழகிவிட்டோம். மேலும், பொறுப்பானவர்களை அரிதாகவே பொறுப்பேற்க வைக்கிறோம். இந்த பிரச்சினைகளை நாம் புறக்கணிக்கலாம், ஆனால் உண்மை என்னவென்றால், நீதி அமைப்பு தோல்வியடையும் போது நாம் அனைவரும் பாதிக்கப்படுகிறோம்.


எனவே, பிரச்சினை எங்கே உள்ளது? இது வெறும் விருப்பமின்மை அல்லது திறனின்மையா, அல்லது முழு அமைப்பும் குறைபாடா? மாநிலங்கள் எவ்வளவு சிறப்பாக நீதியை வழங்க முடியும் என்பதை தரவரிசைப்படுத்துவதன் மூலம் பிரச்சினையின் ஆரம்பத்தை கண்டறிய இந்திய நீதி அறிக்கை (IJR) முயற்சிக்கிறது. இது நான்கு முக்கிய பகுதிகளைப் பார்க்கிறது. அவை மனித வளங்கள், உள்கட்டமைப்பு, பட்ஜெட்டுகள் மற்றும் பணிச்சுமை போன்றவை ஆகும். இந்த அமைப்பு எவ்வளவு பன்முகத்தன்மை கொண்டது என்பதையும் இது ஆராய்கிறது. நீதியை மேம்படுத்த அரசாங்கங்கள் எடுக்கும் முயற்சிகள் பற்றிய நுண்ணறிவுகளை இந்திய நீதி அறிக்கை (IJR) வழங்குகிறது. இந்த ஆண்டு, இது தடயவியல் போராட்டங்களையும் எடுத்துக்காட்டுகிறது மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையங்களையும் பார்க்கிறது.


காவல் துறையைப் பொறுத்தவரை, காவல் வளங்கள் முக்கியமாக நகரங்களில் இருப்பதாக அறிக்கை காட்டுகிறது. 2017ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுக்கு இடையில் கிராமப்புற காவல் நிலையங்கள் குறைந்துள்ளன. காவல்துறை-மக்கள் தொகை விகிதம் 100,000 பேருக்கு 155 அதிகாரிகள், இது 197 என்ற இலக்கை விடக் குறைவு. இது நீண்ட விசாரணைகளுக்கும் பொதுப் பாதுகாப்பிற்கும் வழிவகுக்கிறது.


நீதித்துறையைப் பொறுத்தவரை, நிலுவையில் உள்ள வழக்குகளில் 20% அதிகரிப்பு இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அவை ஐந்து கோடியைத் தாண்டியுள்ளன. போதுமான நீதிமன்ற அரங்குகள் இல்லை. மேலும், நீதிமன்றங்களில் பல காலியிடங்கள் உள்ளன. உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் காலியிடங்கள் முறையே 33% மற்றும் 21% ஆகும். மாவட்ட நீதிமன்றங்கள் பணிச்சுமையை அதிகரித்து வருகின்றன.  ஒவ்வொரு நீதிபதியும் 2,200 வழக்குகளைக் கையாளுகின்றனர். இருப்பினும், வழக்கு தீர்வு விகிதம் 94% ஆகும். இது மெதுவான நீதிக்கு வழிவகுக்கிறது மற்றும் அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குறைக்கிறது.


சிறைகளில், நெரிசல் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. சில சிறைச்சாலைகள் அவற்றின் திறனில் 400% க்கும் அதிகமாக இயங்குகின்றன. 76 சதவீத கைதிகள் விசாரணைக்காக காத்திருக்கிறார்கள். இந்த கைதிகள் இன்னும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படவில்லை. மேலும், அவர்கள் நீண்ட காலம் காவலில் உள்ளனர். நான்கு கைதிகளில் ஒருவர் தங்கள் விசாரணைக்காக ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்கிறார். சிறை ஊழியர்களைப் பொறுத்தவரை, 30% பதவிகள் காலியாக உள்ளன. பெரும்பாலான மாநிலங்களில், ஒவ்வொரு 699 கைதிகளுக்கும் ஒரு சீர்திருத்த அதிகாரியும், ஒவ்வொரு 775 கைதிகளுக்கும் ஒரு மருத்துவரும் உள்ளனர். ஒரு கைதிக்கு சராசரியாக ஒரு நாளைக்குச் செலவிடும் தொகை ரூ.121 மட்டுமே.  இது நிதி, சரியான உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் இல்லாததைக் காட்டுகிறது. இது மாதிரி சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் சட்டம், 2023 இன் (Model Prisons & Correctional Services Act) இலக்குகளை அடைவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது.


சட்ட உதவி பற்றிய அறிக்கை சில கவலைகளை எழுப்புகிறது. நிதியை திறம்பட பயன்படுத்துதல், வளங்களை சீரற்ற முறையில் விநியோகித்தல் மற்றும் சமூக அடிப்படையிலான சட்ட உதவி சேவைகளின் சரிவு ஆகியவற்றில் உள்ள சிக்கல்களை இது சுட்டிக்காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சட்ட மருத்துவமனை 163 கிராமங்களுக்கு சேவை செய்கிறது. சட்ட உதவிப் பணியாளர்களில் 41,553 வழக்கறிஞர்கள் மற்றும் 43,050 துணை சட்ட தன்னார்வலர்கள் உள்ளனர். இந்தியா ஒரு சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பையும் தொடங்கியுள்ளது. இந்த அமைப்பு மாவட்ட நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளில் சட்ட பிரதிநிதித்துவத்தை வழங்குகிறது. சட்ட சேவைகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 12 லட்சத்திலிருந்து 2024ஆம் ஆண்டில் 15.5 லட்சமாக அதிகரித்துள்ளது.  இது தேசிய கட்டணமில்லா உதவிஎண் (national toll-free helpline), இணையவழி தளம் (online portal) மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தொடர்பு (targeted outreach) காரணமாக இருக்கலாம்.


தடயவியல் தொடர்பான சிக்கல்களையும் அறிக்கை குறிப்பிடுகிறது. இவற்றில் நீண்டகால நிதி பற்றாக்குறை, காலாவதியான உள்கட்டமைப்பு மற்றும் திறமையான ஊழியர்களின் பற்றாக்குறை ஆகியவை அடங்கும். மாநில மனித உரிமைகள் ஆணையங்களும் சவால்களை எதிர்கொள்கின்றன. மூத்த பதவிகளில் பல காலியிடங்கள் மற்றும் புகார்களைக் கையாள பலவீனமான அமைப்புகள் உள்ளன.


தரவு, பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவுகள் சீர்திருத்தத்திற்கு வழிவகுக்கும். ஆனால், முக்கிய குழுக்கள் சிந்தித்து செயல்பட நேரம் எடுத்துக் கொண்டால் மட்டுமே. நீதித்துறை, மாநில அரசுகள், காவல்துறை, சிறைச்சாலைகள், தடயவியல் துறைகள் மற்றும் சட்ட சேவைகள் அதிகாரிகள் இந்த இடைவெளிகளை நேர்மறையான நடவடிக்கைகளுடன் சரிசெய்ய திட்டங்களை உருவாக்க முடியும். முறையான மாற்றம் கடினமானது. ஆனால், சீர்திருத்தத்திற்கான வழி ஒவ்வொரு பிரச்சினையையும் படிப்படியாகக் கையாள்வதாகும். மிக முக்கியமானது பிரச்சினையை ஒப்புக்கொள்ளும் விருப்பமும் அதைத் தீர்ப்பதற்கான அர்ப்பணிப்பும் ஆகும்.


நீதி அமைப்பை சீர்திருத்துவதற்கு தேவையான உந்துதலாக IJR செயல்படும் என்பது ஒரு நம்பிக்கையாகும்.


எழுத்தாளர் ஒரு வழக்கறிஞர், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் மற்றும் இந்தியாவின் காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சியில் சிறை சீர்திருத்தங்களுக்கான முன்னாள் திட்டத் தலைவர்.


Original article:
Share:

சாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் : விவாதம் மற்றும் பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் நிலைப்பாடு

 இந்தியாவின் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025, சாதிவாரி தரவு குறித்த அரசியல் விவாதம் : எதிர்க்கட்சிகள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் கவனம் செலுத்தி வரும் நேரத்தில் இந்த முடிவு வந்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதை ஒரு முக்கிய பிரச்சினையாக மாற்றியுள்ளார்.


சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா 2025 : அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Political Affairs (CCPA)) வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பைச் சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை, ஏப்ரல் 30 அன்று இதை அறிவித்தார்.


"பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, சாதிவாரி கணக்கெடுப்பை தற்போது, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக சேர்க்க முடிவு செய்துள்ளது. இது சமூகம் மற்றும் நாட்டின் மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது" என்று அவர் கூறினார்.


எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சாதிவாரி கணக்கெடுப்பை ஒரு முக்கிய பிரச்சினையாக மாற்றியுள்ள நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த வகையான சாதி தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது?


1951ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை சுதந்திர இந்தியாவில் நடந்த ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிலும், பட்டியலிடப்பட்ட வகுப்புகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பற்றிய தரவு வெளியிடப்பட்டது. இருப்பினும், இது மற்ற சாதிகள் பற்றிய தரவுகளை வெளியிடவில்லை. 1931ஆம் ஆண்டுக்கு முன்பு, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் சாதி பற்றிய தரவு சேர்க்கப்பட்டது.


1941-ஆம் ஆண்டில்,சாதி தொடர்பான தரவு சேகரிக்கப்பட்டது.  ஆனால், அது பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை. அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையராக இருந்த M. W. M. Yeats, இந்த அறிக்கை நாடு தழுவிய சாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையாக இருக்காது என்று விளக்கினார். அது மிகப் பெரியது, விலை உயர்ந்தது, இனி தேவையில்லை என்று அவர் கூறினார். இது இரண்டாம் உலகப் போரின் போது நடந்தது.


இத்தகைய தரவு இல்லாமல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs), அவர்களின் உட்பிரிவுகள் அல்லது பிற சாதிகளின் மக்கள்தொகை பற்றிய துல்லியமான மதிப்பீடு இல்லை. மண்டல் கமிஷன் OBC மக்கள்தொகையை 52% என மதிப்பிட்டுள்ளது. வேறு சில மதிப்பீடுகள் தேசிய மாதிரி கணக்கெடுப்பு தரவை அடிப்படையாகக் கொண்டவை. மாநில மற்றும் தேசிய தேர்தல்களுக்கு அரசியல் கட்சிகளும் தங்கள் சொந்த மதிப்பீடுகளைச் செய்கின்றன.


கிட்டத்தட்ட ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்பும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான கோரிக்கை எழுப்பப்படுகிறது. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் மற்றும் கேள்விகளின் பதிவுகள் இதைக் காட்டுகின்றன. இந்தக் கோரிக்கை பெரும்பாலும் OBCகள் மற்றும் பிற பின்தங்கிய பிரிவுகளிடமிருந்து வருகிறது. இருப்பினும், உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள் பொதுவாக அதை எதிர்க்கிறார்கள்.

தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?


தற்போதைய அரசாங்கம் புதன்கிழமை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த இருப்பதாக அறிவித்தது. இருப்பினும், ஜூலை 2021ஆம் ஆண்டில், அத்தகைய மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளப்போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.


மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் பதிலளித்ததாவது, “மக்கள் தொகை கணக்கெடுப்பில் SC மற்றும் ST தவிர, சாதி வாரியான மக்கள்தொகையை கணக்கிட வேண்டாம் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது” என்று அவர் கூறினார்.


ஆனால், ஆகஸ்ட் 31, 2018ஆம் ஆண்டு, அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்தது. பின்னர் பத்திரிகை தகவல் பணியகம், “முதல் முறையாக OBC பற்றிய தரவுகளைச் சேகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறியது.


இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்டக் கோரிக்கையை தாக்கல் செய்தது. அவர்கள் ஒரு கூட்டத்தின் நிமிட அறிக்கையைக் (minutes of a meeting) கேட்டனர். இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் (Office of the Registrar General of India (ORGI)) கோரிக்கைக்கு பதிலளித்தது. OBCகள் பற்றிய தரவுகளைச் சேகரிப்பது குறித்து உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs (MHA)) ஆகஸ்ட் 31, 2018 அன்று அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு நடைபெற்ற விவாதங்களின் பதிவுகள் தங்களிடம் இல்லை என்று இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் (ORGI) கூறியது. கூட்டத்தின் நிமிட அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் (ORGI) கூறியது.


இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) எங்கே நின்றது?


2010ஆம் ஆண்டில், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர்கள், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி மற்றும் சமூகத் தரவுகள் சேகரிக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.


மார்ச் 1, 2011 அன்று, மக்களவையில் ஒரு சுருக்கமான விவாதத்தின் போது, ​​உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம் பல பிரச்சினைகளை எழுப்பினார். OBCகளின் ஒன்றியப் பட்டியல் மற்றும் மாநில-குறிப்பிட்ட பட்டியல்கள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். சில மாநிலங்களில் எந்தப் பட்டியலும் இல்லை. மற்றவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் என்ற உட்பிரிவுடன் கூடிய பட்டியல் உள்ளது. ஆதரவற்றவர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் போன்ற திறந்த பிரிவுகள் போன்ற பிரச்சினைகளையும் பொதுப் பதிவாளர் (Registrar General) குறிப்பிட்டார்.  சில சாதிகள் பட்டியலிடப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் OBC பட்டியல்களில் காணப்படுகின்றன. கிறிஸ்தவம் அல்லது இஸ்லாத்திற்கு மாறும் பட்டியல் சாதிகளைச் சேர்ந்த மக்கள் வெவ்வேறு மாநிலங்களில் வித்தியாசமாக நடத்தப்படுகிறார்கள். சாதி வகைப்பாட்டின் அடிப்படையில் புலம்பெயர்ந்தோர் மற்றும் கலப்புத் திருமணங்களிலிருந்து வரும் குழந்தைகளின் நிலையும் தெளிவாக இல்லை.


இந்த குழப்பங்களுக்கு மத்தியில், அமைச்சரவை விரைவில் முடிவு செய்யும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார். பின்னர், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. பல விவாதங்களுக்குப் பிறகு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கம் முழு சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை (Socio Economic Caste Census (SECC)) நடத்த முடிவு செய்தது.


சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை (Socio Economic Caste Census (SECC)) தரவு என்ன ஆனது?


ரூ.4,893.60 கோடி அங்கீகரிக்கப்பட்ட செலவில், சமூக-பொருளாதார சாதி கணக்கெடுப்பு (SECC) ரூ.4,893.60 கோடி செலவில் கிராமப்புறங்களில் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தாலும், நகர்ப்புறங்களில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தாலும் நடத்தப்பட்டது. 2016-ஆம் ஆண்டில், சாதித் தரவைத் தவிர்த்து, இரண்டு அமைச்சகங்களும் SECC தரவை இறுதி செய்து வெளியிட்டன.


சாதித் தரவு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இது முன்னாள் நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியாவின் கீழ் ஒரு நிபுணர் குழுவை அமைத்து தரவுகளை வகைப்படுத்தவும் உதவியது. அது தனது அறிக்கையை சமர்ப்பித்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அத்தகைய அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.


ஆகஸ்ட் 31, 2016 அன்று, கிராமப்புற மேம்பாட்டுக்கான நாடாளுமன்றக் குழு மக்களவை சபாநாயகரிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அது SECC பற்றி சில கருத்துக்களை தெரிவித்தது. சாதி மற்றும் மதத் தரவுகளில் 98.87% பிழைகள் இல்லாதது என்று குழு குறிப்பிட்டது. இருப்பினும், இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் (Office of the Registrar General of India (ORGI)) 1,34,77,030 பேருக்கான தரவுகளில் பிழைகளைக் கண்டறிந்தது. இது மொத்த SECC மக்கள்தொகையான 118,64,03,770 இல் இருந்தது. பிழைகளை சரிசெய்ய மாநிலங்களிடம் கேட்கப்பட்டது.


முரணான பார்வை என்ன?


செப்டம்பர் 2024ஆம் ஆண்டில், ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (Rashtriya Swayamsevak Sangh (RSS)) சாதி கணக்கெடுப்பை ஆதரிப்பதாகக் கூறியது. இருப்பினும், இந்தத் தரவை அரசியல் அல்லது தேர்தல் தொடர்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அது மேலும் கூறியது.


ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். விளம்பரப் பொறுப்பாளர் சுனில் அம்பேகர் அமைப்பின் கருத்தை விளக்கினார். சாதித் தரவு நல நடவடிக்கைகளுக்கு உதவும் என்று ஆர்.எஸ்.எஸ் நம்புகிறது என்றார். இது இன்னும் பின்தங்கிய மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் சமூகங்கள் அல்லது சாதிகளுக்கு குறிப்பாக உண்மை.


"நலப்பணிகளுக்காக, குறிப்பாக பின்தங்கிய சமூகங்கள் அல்லது சாதிகளுக்கு உதவுவதற்கும், சிறப்பு கவனம் தேவைப்படுவதற்கும், அரசாங்கம் சில நேரங்களில் தரவுகளை சேகரிக்க வேண்டியிருக்கும் என்று ஆர்எஸ்எஸ் நம்புகிறது. இது கடந்த காலத்தில் செய்யப்பட்டுள்ளது. இது  மீண்டும் செய்யப்படலாம். இருப்பினும், இது அந்த சமூகங்களின் நலனுக்காக மட்டுமே இருக்க வேண்டும். தேர்தல்களின் போது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படக்கூடாது. இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்" என்று ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.


இருப்பினும், அந்த அமைப்பு முன்னதாகவே இந்த யோசனையை எதிர்த்தது. மே 24, 2010 அன்று, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்பு ஒரு  விவாதத்தின் போது, ​​அப்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி நாக்பூரிலிருந்து ஒரு அறிக்கையில் "நாங்கள் வகைகளைப் பதிவு செய்வதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், சாதிகளைப் பதிவு செய்வதற்கு எதிரானவர்கள்" என்று கூறினார்.


அரசியல் சாசனத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் முன்வைத்துள்ள சாதியற்ற சமுதாயம் என்ற கருத்துக்கு எதிராக சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடப்பதாகவும், இது சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சிகளை பலவீனப்படுத்தும் என்றும் அவர் கூறியிருந்தார்.


Original article:
Share:

யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்கள் (Global Geoparks) பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை -ரோஷ்னி யாதவ்

 யுனெஸ்கோ அதன் உலகளாவிய புவிசார் பூங்காக்கள் வலைதளத்தில் (Global Geoparks Network) 16 புதிய தளங்களைச் சேர்த்துள்ளது. இந்த தளங்கள் 11 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவை. இந்த ஆண்டு, வலைதளத்தில் அதன் பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.  புதிய புவிசார் பூங்காக்கள் சீனா, வட கொரியா, ஈக்வடார், இந்தோனேசியா, இத்தாலி, நார்வே, தென் கொரியா, சவுதி அரேபியா, ஸ்பெயின், யுனைடெட் கிங்டம் மற்றும் வியட்நாமில் ஆகியவற்றில் அமைந்துள்ளன.


முக்கிய அம்சங்கள் :


1. யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்கள் (Global Geoparks) என்பது ஒருங்கிணைந்த மற்றும் இணைக்கப்பட்டப் புவியியல் பகுதிகள் ஆகும். இந்த பகுதிகளில் முக்கியமான புவியியல் மதிப்பைக் கொண்ட தளங்கள் மற்றும் நிலப்பரப்புகள் உள்ளன. இந்த பகுதிகளின் மேலாண்மை ஒரு விரிவான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இந்த அணுகுமுறை பாதுகாப்பு, கல்வி மற்றும் நிலையான வளர்ச்சியை உள்ளடக்கியது.


2. யுனெஸ்கோவின் அதிகாரப்பூர்வ தளத்தின்படி, "யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்கள் (Global Geoparks) அதன் புவியியல் பாரம்பரியத்தைப் பயன்படுத்துகிறது. இப்பகுதியின் இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் மற்ற அனைத்து அம்சங்களுடனும், நமது பூமியின் வளங்களை நிலையானதாகப் பயன்படுத்துதல், காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தணித்தல் மற்றும் இயற்கை ஆபத்திலிருந்து ஏற்படும் அபாயங்களைக் குறைத்தல் போன்ற சமூகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புரிதலை மேம்படுத்துகிறது."


3. உலகளாவிய புவிசார் பூங்காக்கள் (Global Geoparks) கீழ்-மேல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தி அவை, தொடர்புடைய உள்ளூர் மற்றும் பிராந்திய பங்குதாரர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய போது, ​​நிலையான வளர்ச்சியுடன் பாதுகாப்பை இணைக்கின்றன.


4. தற்போது, ​​50 நாடுகளில் 229 யுனெஸ்கோ புவிசார் பூங்காக்கள் (Global Geoparks) உள்ளன. யுனெஸ்கோ புவிசார் பூங்கா (Global Geoparks) வலைதளத்தில் தனது தளத்தைச் சேர்த்து வட கொரியா தனது வரலாற்றுச் சாதனையை முதன்முதலில் பதிவு செய்தது. அதே நேரத்தில், சவுதி அரேபியா புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டு புவிசார் பூங்காக்களுடன் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


                 மார்ச் 5, 2025 அன்று, யுனெஸ்கோ சர்வதேச புவி அறிவியல் மற்றும் புவிசார் பூங்காக்கள் திட்டத்தின் (International Geoscience and Geoparks Programme) 10-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இந்தத் திட்டம் புவி அறிவியலில் யுனெஸ்கோவின் முக்கிய முயற்சியாகும்.


5. ஏப்ரல் 30, 2025 நிலவரப்படி, இந்தியாவில் யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்கள் எதுவும் இல்லை.  இந்தியா பல புவியியல் பாரம்பரிய தளங்களை அடையாளம் கண்டுள்ளது மற்றும் புவிசார் பூங்காக்களை உருவாக்குவதற்கான யோசனையை ஆராய்ந்து வருகிறது. ஆனால், எதுவும் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்படவில்லை.


யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்கள் இருப்பதற்கான அளவுகோல்கள்


யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காவாக மாற, ஒரு பகுதி யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்களுக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்டுள்ள சில விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காவில் நான்கு முக்கிய விஷயங்கள் இருக்க வேண்டும். அவை:




1. சர்வதேச மதிப்புள்ள புவியியல் பாரம்பரியம் :


இந்தப் பகுதி முக்கியமான புவியியல் பாரம்பரியத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்த பாரம்பரியம் சர்வதேச மட்டத்தில் மதிப்புமிக்கதாக இருக்க வேண்டும்.


2. பயனுள்ள மேலாண்மை அமைப்பு :


யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்கள் ஒரு அமைப்பால் நிர்வகிக்கப்பட வேண்டும். இந்த அமைப்பு சட்டப்பூர்வ அந்தஸ்தைக் கொண்டிருக்க வேண்டும். இது தேசிய சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட வேண்டும்.


3. தெரிவுநிலை (Visibility) :


யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்கள் உள்ளூர் பொருளாதாரத்தை நிலையான முறையில் வளர்க்க உதவுகின்றன. அவை முக்கியமாக புவிசார் சுற்றுலா மூலம் இதைச் செய்கின்றன. புவிசார் சுற்றுலாவை ஊக்குவிக்க, புவிசார் பூங்கா காணக்கூடியதாகவும் நன்கு அறியப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.


4. வலைதள அமைப்பு (Networking) : 


யுனெஸ்கோவின் உலகளாவிய புவிசார் பூங்காவாக இருக்க, அது உலகளாவிய புவிசார் பூங்காக்கள் வலையமைப்பின் ((Global Geoparks Network (GGN))) உறுப்பினராக இருக்க வேண்டும். 


உலகளாவிய புவிசார் பூங்காக்கள் வலையமைப்பு (Global Geoparks Network (GGN)) என்றால் என்ன?

                   இது, 2004ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. உலகளாவிய புவி பூங்காக்கள் வலையமைப்பு (GGN) என்பது ஆண்டு உறுப்பினர் கட்டணத்துடன் சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.



யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்களின் பதவி நிலையானதா?


யுனெஸ்கோ நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தளத்திற்கு உலகளாவிய புவிசார் பூங்கா என்ற பட்டத்தை வழங்குகிறது. அதன் பிறகு, அந்த தளம் இன்னும் தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்கிறதா என்பதைப் பார்க்க மறுமதிப்பீடு எனப்படும் ஒரு செயல்பாட்டில் மீண்டும் கவனமாக சரிபார்க்கப்படுகிறது. யுனெஸ்கோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்பட,


1. கள மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்தப் பகுதி இன்னும் அளவுகோல்களைப் பூர்த்தி செய்தால், அது யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காவாகவே இருக்கும். இந்த நிலை இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தொடரும். இது "பச்சை அட்டை" (green card) என்று அழைக்கப்படுகிறது.


2. அந்தப் பகுதி இனி தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், இரண்டு ஆண்டுகளுக்குள் சிக்கலைச் சரிசெய்ய நிர்வாகக் குழுவிடம் கூறப்படும். இந்த எச்சரிக்கை "மஞ்சள் அட்டை" (yellow card) என்று அழைக்கப்படுகிறது.


3. "மஞ்சள் அட்டை" பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தப் பகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், அது அதன் யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்கா அந்தஸ்தை இழக்கும். இது "சிவப்பு அட்டை" (red card) என்று அழைக்கப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


உலகம் முழுவதும் கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organisation (UNESCO)) முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதகுலத்திற்கு மிகவும் மதிப்புமிக்க தளங்களைக் கண்டறிந்து, பாதுகாத்து, இதை ஒருங்கிணைப்பதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். யுனெஸ்கோ உலக கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பது தொடர்பான மாநாட்டால் வழிநடத்தப்படுகிறது. இந்த சர்வதேச ஒப்பந்தம் 1972ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


1. யுனெஸ்கோவின் உலக நினைவகம் (Memory of the World (MoW)) திட்டம், 1992ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது ஒரு சர்வதேச ஒத்துழைப்புக்கான உத்தியாகும். இது ஆவணப்பட பாரம்பரியத்தை, குறிப்பாக அரிதான மற்றும் அழிந்து வரும் பாரம்பரியத்தை பாதுகாத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் அணுகல் மற்றும் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.


2. 1997ஆம் ஆண்டில் தொடங்கி, 2017 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கு இடையில் நீண்ட இடைவெளியைத் தவிர்த்து, ஒன்பது (1999 இல்) மற்றும் 78 (2017 இல்) சேர்த்தல்களுடன் பதிவேடு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும், ஒரு நாட்டிலிருந்து அதிகபட்சம் இரண்டு சமர்ப்பிப்புகள் சேர்க்கப்படும்.


3. சமீபத்தில், பகவத் கீதை மற்றும் பாரத முனியின் நாட்டிய சாஸ்திரத்தின் கையெழுத்துப் பிரதிகள் யுனெஸ்கோவில் சேர்க்கப்பட்டுள்ளன. உலகப் பதிவேட்டின் நினைவகம், பட்டியலில் உள்ள இந்தியாவின் மொத்த கல்வெட்டுகளின் எண்ணிக்கை 14 ஆக உள்ளது.


நாட்டியசாஸ்திரம் (Natyashastra) : நாட்டியசாஸ்திரம் என்பது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஒரு பண்டைய புத்தகம் ஆகும். இது நிகழ்த்து கலைகளைப் (performing arts) பற்றியது. இந்த புத்தகம் பாரம்பரியமாக பரத முனிவருக்குக் கூறப்பட்டுள்ளது. இதில் 36,000 வசனங்கள் உள்ளன.  யுனெஸ்கோவின் கூற்றுப்படி, நாட்டியசாஸ்திரம் நாடகம் (நாட்டியம்), நிகழ்ச்சி (அபிநயம்), அழகியல் அனுபவம் (ரசம்), உணர்ச்சி (பாவம்) மற்றும் இசை (சங்கீதம்) ஆகியவற்றுக்கான முழு விதிகளையும் வழங்குகிறது.


பகவத் கீதை : பகவத் கீதை என்பது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட புத்தகம், 700 வசனங்கள் 18 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இது பண்டைய இந்திய இதிகாசமான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். மேலும், பீஷ்ம பர்வம் எனப்படும் அதன் ஆறாவது பிரிவில் காணப்படுகிறது. இந்த புத்தகம் வியாச முனிவரால் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.

 

ராமசரிதமானஸ் (Ramcharitmanas) : இந்த கையெழுத்துப் பிரதி கோஸ்வாமி துளசிதாஸால் எழுதப்பட்டது.


பஞ்சதந்திரம் (Panchatantra) : விஷ்ணு சர்மாவால் எழுதப்பட்ட இந்த விலங்குக் கதைகளின் தொகுப்பு, ஒரு பண்டைய இந்தியப் படைப்பாகும். இதில் கவிதைகள் மற்றும் உரைநடை இரண்டும் அடங்கும்.


சஹ்ருதயலோக-லோகனா : இதன் அழகியல் முக்கியத்துவம் காரணமாக, 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு காஷ்மீரி அறிஞர்களான ஆச்சார்ய ஆனந்தவர்தன் மற்றும் அபிநவகுப்தர் ஆகியோரால் இது எழுதப்பட்டது.

Original article:
Share:

தேசிய குடிமை உதவியாளருக்கான (national civic assistant) வழக்கு - சித்தார்த் கபூர்

 படிவங்கள் (forms), பதிவிறக்கங்கள் (downloads) அல்லது சிக்கலான வழிசெலுத்தல் (complex navigation) ஆகியவற்றின் தேவையை நீக்கி, மக்கள் தங்களின் குறைகளை எளிய மொழியில் தெரிவிக்கும் வகையில், AI-இயங்கும் சாட்பாட் அமைப்புகளை (AI-powered chatbot) பயன்படுத்தப்பட வேண்டும்.


புத்தொழில் மகாகும்பம்-2025 (Startup Mahakumbh) நிகழ்வில், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள் மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற முக்கியமான தொழில்நுட்பத் துறைகளில் சீனாவின் முக்கியத்துவத்துடன் ஒப்பிடுகையில், உணவு விநியோக பயன்பாடுகள் மற்றும் ஆடம்பர சேவைகள் உள்ளிட்ட நுகர்வோரை மையமாகக் கொண்ட மாதிரிகளில் இந்திய புத்தொழில்களின் கவனம் குறித்து கேள்வி எழுப்பினார். இது, சுற்றுச்சூழல் அமைப்பு உயர்ந்த இலக்கை அடையவும், தொழில்நுட்பத்தில் இந்தியாவை மேலும் தன்னிறைவு பெறவும் அவர் ஊக்குவித்தார். வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக நுகர்வோரை மையமாகக் கொண்ட புத்தொழில்களை ஆதரித்த தொழில்துறை தலைவர்களிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றபோது, ​​​​அவரது கருத்துக்கள் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பின. அவை, இந்தியாவின் உலகளாவிய இருப்பை எந்த வகையான கண்டுபிடிப்பு வரையறுக்க வேண்டும்?


புத்தொழில்கள் சீனாவின் தொழில்நுட்பப் பாதையில் இருந்து உத்வேகம் பெறலாம் என்றாலும், அதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பும் அதன் மூலம் பொறுப்பும் உள்ளது என்பதை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். இந்த வாய்ப்பு பொதுவாகவே உலகளாவிய மாதிரிகளை தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமல்ல, மாறாக ஒரு படி மேலே சென்று பொது நிர்வாகத்தில் புதுமைகளை உருவாக்குவதன் மூலம் ஒரு முன்மாதிரியை அமைக்க உள்ளது.


பொதுத் தேவைகளை மையமாகக் கொண்ட அமைப்புகளை உருவாக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு உண்டு. இந்த அமைப்புகள் நியாயமானதாகவும், திறந்ததாகவும், குடிமக்களுக்கு விரைவாக பதிலளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இத்தகைய அமைப்புகளை உருவாக்குவது பொது சேவைகளை மேம்படுத்தவும், மக்கள் உண்மையிலேயே கேட்கப்படுவதை உணரவும், தனியார் நிறுவனங்கள் மற்றவர்களை நகலெடுப்பதற்குப் பதிலாக அசல் மற்றும் அர்த்தமுள்ள புதுமைகளை உருவாக்க ஊக்குவிக்கவும் உதவும்.


பொது நிர்வாக தளங்கள்


இந்தியாவில் ஏற்கனவே பொது நிர்வாகத்தில் பல்வேறு டிஜிட்டல் தளங்கள் உள்ளன. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் புத்தொழில்கள் தொடர்ந்து புதியவற்றை அறிமுகப்படுத்துகின்றன. இருப்பினும், தெரு விலங்குகள், குப்பைகள், குழிகள் மற்றும் உடைந்த உள்கட்டமைப்பு போன்ற பொதுவான பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்கும்போது குடிமக்கள் இன்னும் சிக்கல்களையும் குழப்பங்களையும் எதிர்கொள்கின்றனர். சில நகரங்கள் மற்றும் மாநிலங்கள் தங்களுக்கென சொந்த குடிமை தளங்களைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, டெல்லியில் MCD 311 மற்றும் கிரீன் டெல்லி, ஆந்திரப் பிரதேசத்தில் புரசேவா, கர்நாடகாவில் ஜனஹிதா ஆகியவை உள்ளன. CPGRAMS என்பது புகார்களுக்கான ஒரு தேசிய போர்டல் ஆகும்.


Centralised Public Grievance Redress and Monitoring System (CPGRAMS) : மையப்படுத்தப்பட்ட பொது குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பு ஆகும்.


இந்த இயங்குதளங்களில் பெரும்பாலானவை ஒரே மாதிரியான செயல்முறைகளைப் பின்பற்றுகின்றன. இதில், பயனர்கள் ஒரு வகையைத் தேர்வு செய்ய வேண்டும் மற்றும் சிக்கல் தொடர்பாக எழுத்துப்பூர்வ விளக்கம் விவரிக்கப்பட வேண்டும். சில சமயங்களில் புகைப்படங்களை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் பதிவேற்ற வேண்டும். பொதுவாக, இயங்குதளங்கள் இயற்கையான, கட்டமைக்கப்படாத பயனர் உள்ளீட்டைப் பொறுத்து கடினமான பணிப்பாய்வுகளை நம்பியுள்ளன. சில தளங்களில், புகார்தாரர்கள் பரந்த அளவிலான விருப்பங்களின் பட்டியலிலிருந்து பொருத்தமான துறையைக் கண்டறிந்து தேர்ந்தெடுக்க வேண்டும். இது பெரும்பாலும் சிக்கலானது மற்றும் சவாலானது. குறிப்பாக, துறைசார் அதிகார வரம்புகள் பற்றிய தகவல்கள் உடனடியாக அணுக முடியாத போது. இதன் விளைவாக, புகார்தாரர்கள் விரக்தியடைந்துள்ளனர். இதனால் செயல்முறை பாதியிலேயே கைவிடப்படலாம்.  டிஜிட்டல் அமைப்பில் வசதியில்லாதவர்கள் அல்லது தங்கள் பிரச்சினைகளை முறையான மொழியில் விவரிக்கவும் தெரிவிக்கவும் முடியாதவர்களுக்கு தற்போதைய அமைப்புகள் சவாலாக உள்ளன. மேலும், காலாவதியான பயனர் இடைமுகங்களின் (outdated user interfaces) சிக்கல் மற்றும் தற்போதைய அமைப்புகளுக்குள் சீரற்ற இயங்குதளப் பதிலளிக்கும் தன்மை உள்ளது. எனவே, பல தளங்களில் முழு அனுபவமும் தடையின்றி உள்ளது.


மக்கள் புகார்களைத் தாக்கல் செய்து தீர்க்கும் முறையை மேம்படுத்த அரசாங்கம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. குடிமை உதவியாளராகச் செயல்படும் தேசிய, AI-இயங்கும் அமைப்பை உருவாக்குவதன் மூலம் இதைச் செய்யலாம். இந்த அமைப்பு மக்கள் தட்டச்சு செய்வதன் மூலமோ அல்லது பேசுவதன் மூலமோ எளிய மொழியில் பிரச்சினைகளைப் புகாரளிக்க அனுமதிக்கும். உதவியாளர் புகாரைப் புரிந்துகொள்வார், சரியான துறை மற்றும் அதிகாரியைக் கண்டுபிடிப்பார், முறையான சமர்ப்பிப்பை எழுதுவார். மேலும், அதன் முன்னேற்றத்தைக் கண்காணிக்க மக்களை அனுமதிப்பார். முழு செயல்முறையும் ஒரு சாட்பாட் மூலம் நடக்கும், படிவங்கள், பதிவிறக்கங்கள் அல்லது சிக்கலான படிகள் தேவையில்லாமல் பயன்படுத்த எளிதாக்குகிறது.


அணுகக்கூடிய இயங்குதளம் (Accessible dashboard)


புகார் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அது ஒரு பொது இயங்குதளத்தில் சேர்க்கப்பட வேண்டும். இந்த இயங்குதளத்தில் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், நிலுவையில் உள்ள அனைத்து புகார்களையும் பகுதி, துறை வாரியாக, அவை எவ்வளவு காலமாக நிலுவையில் உள்ளன என்பதையும், பிற விவரங்களுடன் காட்ட வேண்டும். இது பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கண்காணித்து உறுதிப்படுத்த உதவும்.


பல குறை தீர்க்கும் அமைப்புகள் தெளிவாக இல்லை. இதனால் குடிமக்கள் தங்கள் புகார்கள் பெறப்படுகிறதா என்று உறுதியாக தெரியவில்லை. ஒரு இயங்குதளத்தில் இந்த சிக்கலை தீர்க்கவும், அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை வளர்க்கவும் உதவும். உதாரணமாக, ஒரு சாலையின் பள்ளம் 45 நாட்களுக்குள் சரிசெய்யப்படாவிட்டால், அதன் தாமதம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஒரு பகுதியில் தெருநாய்கள் குறித்து பல புகார்கள் இருந்தால், அந்த புகார்கள் தெளிவாக இருக்கும். ஒரு உள்ளூர் கவுன்சில் மற்றொரு உள்ளூர் கவுன்சிலை விட விரைவாக பிரச்சினைகளை தீர்த்தால், அந்த வித்தியாசத்தை அளவிடுவது எளிதாக இருக்கும். இந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அமைப்புகளை மேம்படுத்துவதில் இந்த கடைசி படியை அது இன்னும் தீர்க்கவில்லை.


உருவாக்கக்கூடிய AI மாதிரிகள், பொது நிர்வாகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கக்கூடியது. உதாரணமாக, AI குடிமை உதவியாளர்கள் என்பது ஒரு எளிய மற்றும் அடையக்கூடிய யோசனையாகும். இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில புத்தொழில் நிறுவனங்கள் உரையாடல் AI கருவிகள் மற்றும் பொது புகார் இயங்குதளங்களை உருவாக்குவதன் மூலம் இந்தப் பகுதியில் புதுமைகளை உருவாக்க முயற்சித்துள்ளன. இருப்பினும், இந்த முயற்சிகள் இன்னும் குறைவாகவே உள்ளன. மேலும், அவை பரவலாக அறியப்படவில்லை. அதாவது அவை பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை.


AI குடிமை உதவியாளர் போன்ற ஒரு அமைப்பு அரசாங்கத்தால் வழிநடத்தப்படும் ஒரு முயற்சியாக இருக்க வேண்டும். இது தூய்மை இந்தியா இயக்கம் (Swacch Bharat Abhiyaan) அல்லது "LPG மானியத்தை விட்டுகொடு" (Give up LPG subsidy) பிரச்சாரத்தைப் போலவே வலுவான பொது மக்கள் தொடர்பு மற்றும் நிலையான தெரிவுநிலையால் ஆதரிக்கப்பட வேண்டும். இது நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் அதைப் பயன்படுத்துவதற்குத் தகவல் அளிக்கப்படுவதையும் அதிகாரம் பெறுவதையும் உறுதிசெய்ய உதவும். முக்கியமாக, இந்த இயங்குதளம் குடிமக்களைச் சென்றடைய வேண்டும். மாறாக வேறு வழியில் அல்ல. இந்த திட்டம் "ஒரு நாடு, ஒரு குடிமை இயங்குதளமாக" (One nation, one civic dashboard) இருக்கலாம்.


இது போன்ற ஒரு அமைப்பு, தெளிவாக வடிவமைக்கப்பட்டால், மக்கள் அரசாங்கத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை மாற்ற முடியும். இது தனித்தனி புகார் சேனல்களை ஒரு புத்திசாலித்தனமான அமைப்பாக மாற்றும். இது நிர்வாகத்திற்கான புதிய தரத்தை அமைக்கும். இந்திய அரசு ஒரு முன்மாதிரியாக இருந்து நல்லாட்சி எப்படி இருக்கும் என்பதைக் காட்ட வேண்டும். நாம் வெற்றி பெற்றால், மற்ற நாடுகள் நாம் அவர்களைப் பார்ப்பதற்குப் பதிலாக இந்தியாவை ஒரு முன்மாதிரியாகப் பார்க்கக்கூடும்.


இறுதியாக, இதில் கேள்வி என்னவென்றால், பயனுள்ள குடிமை அமைப்புகளை உருவாக்க முடியுமா என்பது அல்ல. மாறாக, மக்கள் அவற்றை உருவாக்கத் தேர்ந்தெடுப்பார்களா என்பதுதான்.


சித்தார்த் கபூர் ஒரு வழக்கறிஞர் மற்றும் பொதுக் கொள்கை மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர் ஆவர்.


Original article:
Share: