இந்தியாவின் காலநிலை இலக்குகளைக் கண்காணித்தல் -அமிதாப் சின்ஹா

 இந்தியாவின் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் 22%-க்கும் குறைவானது மின்சாரத்திலிருந்து வருகிறது. மீதமுள்ளவை எண்ணெய், நிலக்கரி மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை நேரடியாக எரிப்பதன் மூலம் வருகின்றன.


இந்தியா தனது நிறுவப்பட்ட மின்சார உற்பத்தி திறனில் 50%-க்கும் அதிகமானவை தற்போது புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து வருவதாகக் கூறியுள்ளது. இதன் பொருள், 2015 பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் இந்தியா தனது முக்கிய காலநிலை வாக்குறுதிகளில் ஒன்றை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துள்ளது.


கடந்த வாரம் வெளியிடப்பட்ட அரசாங்கத் தரவுகளின்படி, ஜூன் மாத இறுதியில் மொத்த நிறுவப்பட்ட மின்சார திறன் 484.82 GW ஆக இருந்தது. இதில், 242.78 GW பெரிய நீர் மின்சாரம், அணுசக்தி மற்றும் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து வருகிறது.


2030ஆம் ஆண்டிற்கு இந்தியா மூன்று காலநிலை இலக்குகளை நிர்ணயித்துள்ளது. ஒன்று, அதன் நிறுவப்பட்ட மின்சார திறனில் 50% புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து பெறுவதாகும். இரண்டாவது, 2005-ஆம் ஆண்டு அளவுகளுடன் ஒப்பிடும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு யூனிட்டுக்கு குறைந்தபட்சம் 45% உமிழ்வைக் குறைப்பதாகும். மூன்றாவது, காடுகள் மற்றும் மரங்கள் மூலம் 2.5 முதல் 3 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை வெளியேற்றுவது ஆகும்.


கூடுதல் கார்பன் உறிஞ்சுதல் இலக்கு, ஏற்கனவே எட்டப்படவில்லை என்றாலும், இந்த ஆண்டு எட்டப்படும். இருப்பினும், அதிகாரப்பூர்வ தரவு இன்னும் கிடைக்கவில்லை. மூன்றாவது இலக்கிலும் நல்ல முன்னேற்றம் உள்ளது.


புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சார்ந்திருத்தல்


இந்தியா இப்போது அதன் நிறுவப்பட்ட மின்சார திறனில் 50% புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து பெறுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வேகமான வளர்ச்சியால் இது முக்கியமாக நிகழ்ந்துள்ளது. எடுத்துக்காட்டாக, 2024-ஆம் ஆண்டில், இந்தியா கிட்டத்தட்ட 30 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சேர்த்தது. இது இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு அதிகமாகும். இதில், சுமார் 24 GW சூரிய சக்தியிலிருந்து வந்தது.


இந்த முன்னேற்றம் நல்லது. ஆனால், சீனா கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் 10 மடங்கு அதிக புதுப்பிக்கத்தக்க திறனைச் சேர்த்து வருகிறது.


இந்தியா 2030-ஆம் ஆண்டுக்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத மின்சார திறனை 500 GW கொண்டிருக்க விரும்புகிறது. இது அதிகாரப்பூர்வ வாக்குறுதியாக இல்லாவிட்டாலும், அதன் காலநிலை இலக்குகளின் ஒரு பகுதியாகும். இதை அடைய, அணுசக்தியும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கும். இந்தியா இப்போது 10 அணு உலைகளை உருவாக்கி வருகிறது. அவை 2030-ஆம் ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கி தற்போதைய திறனை சுமார் 17 GW ஆக இரட்டிப்பாக்க வேண்டும். இருப்பினும், இந்தியா உருவாக்கி வரும் பாரத் சிறிய மட்டு உலைகள் அப்போது தயாராக இருக்க வாய்ப்பில்லை.


இதன் விளைவாக, வரும் ஆண்டுகளில் புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து புதிய திறன் சேர்த்தல்களில் பெரும்பகுதியை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்ந்து உருவாக்கும்.


திறன் vs உற்பத்தி


நிறுவப்பட்ட திறனில் 50 சதவீதம் புதைபடிவமற்ற எரிபொருட்களிலிருந்து பெறப்படுவதால், இந்தியாவின் பாதி மின்சாரம் சுத்தமானது என்று அர்த்தமல்ல. ஏனெனில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நேரம், பருவம் மற்றும் வானிலை போன்ற காரணிகளைப் பொறுத்தது. எனவே, மின்சார உற்பத்தியில் புதைபடிவமற்ற எரிபொருட்களின் உண்மையான பங்கு நிறுவப்பட்ட திறனை விடக் குறைவு.


மத்திய மின்சார ஆணையத்தின் தரவுகளின்படி, மே மாதத்தில், பெரிய நீர் மற்றும் அணுசக்தி உள்ளிட்ட புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்கள் இந்தியாவின் மின்சாரத்தில் 28 சதவீதத்தை உற்பத்தி செய்தன.


இந்தியாவின் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் மின்சாரம் ஒரு சிறிய பகுதி மட்டுமே. இந்தியா பயன்படுத்தும் ஆற்றலில் 22%-க்கும் குறைவானது மின்சாரம். பெரும்பாலான ஆற்றல் எண்ணெய், நிலக்கரி மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை நேரடியாக எரிப்பதன் மூலம் வருகிறது.
















இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த ஆற்றலில் மின்சாரம் சுமார் 22% ஆகும். இந்த மின்சாரத்தில் சுமார் 28% புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து வருகிறது. எனவே, புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிபொருட்களிலிருந்து வரும் சுத்தமான ஆற்றல் இந்தியாவின் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் சுமார் 6% மட்டுமே. இது சிறியதாகத் தோன்றலாம், ஆனால் இது உலகளாவிய சராசரியைப் போன்றது.


வனவியல் இலக்கில் முன்னேற்றம்


புதிய தரவு இன்னும் வரவில்லை. ஆனால், 2005ஆம் ஆண்டு அளவுகளுடன் 2.5 முதல் 3 பில்லியன் டன் கார்பன் உறிஞ்சுதலைச் சேர்ப்பதாக இந்தியா ஏற்கனவே வாக்குறுதியளித்திருக்கலாம். காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கட்டமைப்பு மாநாட்டிற்கு (UNFCCC) அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2021-ஆம் ஆண்டுக்குள் சுமார் 2.29 பில்லியன் டன் கூடுதல் கார்பன் உறிஞ்சுதல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் காடுகள் மற்றும் மரங்களின் முக்கிய அதிகாரப்பூர்வ பதிவான இந்திய வன அறிக்கை (ISFR) - 2017 முதல் 2021 வரை இந்தியாவின் கார்பன் இருப்பு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 150 மில்லியன் டன் CO2-க்கு சமமாக அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளிவரும் அடுத்த ISFR, 2023 வரை தரவுகளைக் கொண்டிருக்கும்.


இந்தப் போக்கு தொடர்ந்தால், 2021 மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கு இடையில் சுமார் 300 மில்லியன் டன் CO2 உறிஞ்சுதலைச் சேர்த்தால், இந்தியாவின் கார்பன் உறிஞ்சுதல் குறைந்த இலக்கான 2.5 பில்லியன் டன்களைக் கடக்கும். இதன் பொருள் 2030 காலக்கெடுவிற்கு முன்பே இந்தியாவின் வனவியல் இலக்கு எட்டப்படும்.


உமிழ்வு தீவிரம்


உமிழ்வு தீவிர இலக்கில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அதிக தகவல்கள் இல்லை. 2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு யூனிட்டுக்கு உமிழ்வை 2005-ஆம் ஆண்டு அளவைவிட குறைந்தது 45 சதவீதம் குறைப்பதாக இந்தியா கூறியுள்ளது.


உமிழ்வு தீவிரம் குறித்த சமீபத்திய தரவு 2020-ஆம் ஆண்டிலிருந்து பெறப்பட்டது. அந்த நேரத்தில், இந்தியா ஏற்கனவே 2005 அளவை விட 36 சதவீதம் குறைத்திருந்தது. அதன் பிறகு உமிழ்வு தீவிரம் குறைப்பு குறித்து நல்ல மதிப்பீடுகள் எதுவும் இல்லை, ஆனால் இதுவரை இந்தியாவின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டால், 2030-ஆம் ஆண்டுக்குள் 45 சதவீதக் குறைப்பு இலக்கை எளிதாக அடைய முடியும்.


இந்தியா தனது மூன்று காலநிலை இலக்குகளையும் அடையும் என்பதில் ஒருபோதும் சந்தேகமில்லை. உண்மையில், இந்தியா அவற்றை இரண்டு மடங்கு அதிகமாக அடையும் பாதையில் உள்ளது. 2015-ல் நிர்ணயிக்கப்பட்ட அசல் இலக்குகள் 2022-ஆம் ஆண்டுக்குள் அடையப்பட்டன. இது இந்தியா புதிய இலக்குகளை நிர்ணயிக்க அனுமதித்தது. இந்த புதிய இலக்குகளும் இப்போது அடையப்படுகின்றன.


UNFCCC மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தால் நிர்வகிக்கப்படும் சர்வதேச காலநிலை அமைப்பின் கீழ், நாடுகள் தங்கள் சொந்த காலநிலை இலக்குகளை நிர்ணயிக்க முடியும். பெரும்பாலான நாடுகள் மிதமான இலக்குகளை நிர்ணயித்துள்ளன. இருப்பினும், பல வளர்ந்த நாடுகள் உமிழ்வைக் குறைப்பதில் மட்டுமல்லாமல், காலநிலை நிதியை வழங்குவதிலும் தங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டன.


பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் பெற வேண்டிய சர்வதேச நிதி மற்றும் தொழில்நுட்பத்தைப் பெற்றால் இன்னும் பலவற்றைச் செய்ய முடியும் என்று இந்தியா கூறியுள்ளது.



Original article:

Share:

நெகிழித் தொழில்துறை (Plastic Industry) பசுமைக் கொள்கைகளை பாதிக்க முயற்சிக்கிறதா? -ஸ்வேதா குப்தா

 இந்தியா முறைசாரா கழிவு சேகரிப்பாளர்களை முறையானக் கழிவு அமைப்புகளில் எவ்வாறு ஒருங்கிணைக்க முயற்சித்துள்ளது?


தற்போதைய செய்தி: 


முதல் பார்வையில், புகையிலை மற்றும் நெகிழி ஆகியவை தொடர்பற்றவையாகத் தோன்றலாம். இரு தொழில்களும் வரலாற்று ரீதியாக சில உடல்நல அபாயங்களை ஒப்புக் கொண்டாலும், உற்பத்தி மற்றும் வருவாய் மாதிரிகளை தொடர்ந்து விரிவாக்கி வருகின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உடல்நல நிபுணர்கள், புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் நெகிழித் தொழில், புகையிலைத் தொழிலின் ‘ஒழுங்குமுறையை தாமதப்படுத்துதல், பொதுத் தொடர்பு சுழற்சியைப் பயன்படுத்துதல், மற்றும் பொது மக்களின் கருத்தை குழப்புவதன் மூலம் பழியை மாற்றுதல்’ போன்ற உத்திகளைப் பின்பற்றுவதாக வெளிப்படுத்துகின்றனர்.



நெகிழி, புகையிலையின் வழிமுறைகளை எவ்வாறு பிரதிபலிக்கிறது?


இரு தொழில்களும் தீங்கு விளைவிக்கும் ஆதாரங்கள் இருந்தபோதிலும் லாப நோக்கம் கொண்ட தந்திரங்களை பயன்படுத்தியுள்ளன.


பொறுப்பை மாற்றுதல்: பல அதிகார வரம்புகளில், புகையிலை விளம்பரங்களில் "புகைபிடித்தல் தீங்கு விளைவிக்கும்" போன்ற எச்சரிக்கைகள் உள்ளன. ஆனால், இன்னும் தயாரிப்பை விளம்பரப்படுத்துகின்றன. அரசாங்க விதிகள் போதுமான அளவு வலுவாக இல்லாததால் இது நிகழ்கிறது. இது தனிநபர்கள் மீது பழியை சுமத்துகிறது. அதேபோல், நெகிழி நிறுவனங்கள் தாங்களாகவே பொறுப்பேற்காமல், மறுசுழற்சி செய்யாததற்கு மக்களைக் குறை கூறுகின்றன. இரண்டு சந்தர்ப்பங்களிலும், பெரிய அமைப்புகளால் ஏற்படும் சேதம் சாதாரண மக்களின் தவறு போல் தோற்றமளிக்கிறது.


தவறான மக்கள் தொடர்பு மற்றும் அறிவியலுக்கு நிதியளித்தல்: புகையிலை நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மக்களுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை என்று கூறும் ஆய்வுகளுக்கு நிதியளித்துள்ளன. இதேபோல், NPR மற்றும் PBS அறிக்கை செய்தபடி, நெகிழி தொழில் 1980-களில் மறுசுழற்சி செய்வதை ஒரு தீர்வாக ஊக்குவித்தது. இருப்பினும், அது மிகவும் விலை உயர்ந்தது மற்றும் பெரிய அளவில் செய்வது கடினம் என்பதை அவர்கள் ரகசியமாக அறிந்திருந்தனர். தடைகளை நிறுத்த நெகிழி மறுசுழற்சி செய்யக்கூடியது என்று நெகிழி நிறுவனங்கள் விளம்பரங்களை வெளியிட்டாலும், பெரும்பாலான நெகிழிக் கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்படுகின்றன, நிலத்தில் கொட்டப்படுகின்றன அல்லது திறந்தவெளியில் கொட்டப்படுகின்றன.


பசுமை சலவை (Greenwashing): புகையிலை நிறுவனங்கள் ஒரு காலத்தில் "லேசான" மற்றும் "மென்மையான" சிகரெட்டுகளை பாதுகாப்பானவை என்று தவறாக சந்தைப்படுத்தின. ஆனால், இந்த தந்திரம் பின்னர் தவறானது என்று நிரூபிக்கப்பட்டது. இதேபோல், "மக்கும் தன்மை கொண்டவை" என்று பெயரிடப்பட்ட நெகிழிகள் பெரும்பாலும் கூறப்படுவது போல் உடைவதில்லை. ஏனெனில், தெளிவற்ற தரநிலைகள் மற்றும் மோசமான கழிவு அமைப்புகள், அவற்றின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து நுகர்வோரை தவறாக வழிநடத்துகின்றன. உதாரணமாக, கோகா-கோலா நிறுவனம் 2030-ஆம் ஆண்டுக்குள் 25% மறுபயன்பாட்டு பொதிகட்டுதல் செய்யும் தன் இலக்கை அமைதியாக கைவிட்டது. அதே, நேரத்தில் முக்கியமான மறுசுழற்சி இலக்குகளையும் குறைத்துக் கொண்டது. இவையெல்லாம் செய்துவிட்டு, இன்னும் சுற்றுச்சூழலுக்கு நல்லது செய்கிறோம் என்று விளம்பரம் செய்துகொண்டே இருந்தது. இதனால் அந்த நிறுவனம் பசுமை சலவை (Greenwashing) என்னும் போலி சுற்றுச்சுழலிற்கு அக்கறை காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டது.


உலகளாவிய தெற்கு நோக்கி கவனம் திருப்புதல்


உலகளாவிய வடக்கு முழுவதும் ஒற்றை பயன்பாட்டு நெகிழிப் பயன்பாட்டை குறைப்பதற்கும் பொதிகட்டுதல் பொருளின் பயன்பாட்டை பகுத்தறிவுபடுத்துவதற்கும் விதிமுறைகள் கடுமையாகும்போது, நெகிழி உற்பத்தியாளர்கள் வளர்ச்சியை நிலைநிறுத்த குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின்  (Organisation for Economic Co-operation and Development (OECD)) 'உலகளாவிய நெகிழி கண்ணோட்டம்' (Global Plastic Outlook) அறிக்கை 2022-ன் படி, 2060-ஆம் ஆண்டுக்குள் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் நெகிழிப் பயன்பாடு இரு மடங்கிற்கும் அதிகமாகவும், ஆசியாவில் மூன்று மடங்காகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஐரோப்பாவில் இது 15% மட்டுமே அதிகரிக்கும். அதே நேரத்தில் வட அமெரிக்காவில், 34% அதிகரிக்கும்.


மேலும், இந்தியாவைப் போலவே, உலகத் தெற்கில் உள்ள பல நாடுகளும் நெகிழி பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்கின்றன. ஆனால், விதிகளை உருவாக்குவதிலும் பின்பற்றுவதிலும் அவை பெரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றன. 2023-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 19 வகையான ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகள் மீதான இந்தியாவின் தடை இந்த வகையான நெகிழிக் கழிவுகளில் சுமார் 11% மட்டுமே உள்ளடக்கியது என்றும், விதிகள் எப்போதும் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


உலகளாவிய தெற்கு நோக்கி கவனம் திரும்பும்போது, இந்த இடங்கள் பெரும்பாலும் பலவீனமான சுற்றுச்சூழல் விதிகள், குறைவான பொது விழிப்புணர்வு மற்றும் மோசமான கழிவு அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இதனால் இந்த பகுதிகள் அதிகரித்து வரும் நெகிழி மாசுபாட்டால் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளன.


விதிமுறை மற்றும் செல்வாக்கு செலுத்துதல் (Lobbying)


புகையிலை தொழில் அதன் பொருளாதார பங்களிப்புகளை அதிகப்படுத்தி பொது சுகாதார நடவடிக்கைகளை தாமதப்படுத்த முன்னணி குழுக்களுக்கு நிதியளிப்பதாக அறியப்படுகிறது. இந்த தந்திரங்கள் 2012ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் ஒரு உலகளாவிய சுருக்கம் (A Global Brief) மற்றும் புகையிலை-இல்லாத குழந்தைகளுக்கான பிரச்சாரம் மற்றும் உலகளாவிய சுகாதார ஆதரவை வளர்க்கும் வளர்க்கும் இடம் (Campaign for Tobacco‑Free Kids and the Global Health Advocacy Incubator) என்று ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்திற்கு 2022-ல் சமர்ப்பிக்கப்பட்டது.


நெகிழித் துறையும் விதிகளைப் பாதிக்கவும் வலுவான சட்டங்களைத் தாமதப்படுத்தவும் இதே போன்ற தந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளது. 1970கள் மற்றும் 1980களில் பெரிய நெகிழி மற்றும் ரசாயன நிறுவனங்களின் பழைய ஆவணங்கள், நெகிழியை மறுசுழற்சி செய்வது கடினம் மற்றும் விலை உயர்ந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்ததைக் காட்டுகின்றன. ஆனால் மறுசுழற்சி செய்வது ஒரு நல்ல தீர்வு என்று அவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். காலநிலை ஒருமைப்பாடு மையத்தின் 2024ஆம் ஆண்டு அறிக்கையால் ஆவணப்படுத்தப்பட்ட இந்த ராஜதந்திரம், நெகிழி உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதில் இருந்து பொதுமக்கள் மற்றும் அரசியல் அழுத்தத்தைத் திசைதிருப்ப உதவியது.


கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஐ.நா.வின் கீழ் உலகளாவிய நெகிழி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் நெகிழி மற்றும் புதைபடிவ எரிபொருள் தொழில்கள் செல்வாக்கு செலுத்த முயன்றுள்ளன. சர்வதேச சுற்றுச்சூழல் சட்ட மையத்தின்படி, மூன்றாவது சுற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் (International Environmental Law (INC-3)) தொழில்துறை செல்வாக்கு தெளிவாகத் தெரிந்தது. அங்கு முந்தைய சுற்றில் இருந்ததைவிட புதைபடிவ எரிபொருள் மற்றும் இரசாயனத் துறைகளில் இருந்து 36% அதிகமான பரப்புரையாளர்கள் இருந்தனர்.



நெகிழியைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாடு என்ன?


இந்தியாவில், கழிவு மேலாண்மை அமைப்பு, மறுசுழற்சி செய்யப்படும் நெகிழியில் 70% சேகரித்து பதப்படுத்தும் பொறுப்பை முறைசாரா துறையில், குப்பை சேகரிப்பவர்கள் (ragpickers) மற்றும் வரிசைப்படுத்துபவர்கள் முதல் அடிமட்ட மறுசுழற்சி செய்பவர்கள் வரை லட்சக்கணக்கான மக்களைச் சார்ந்துள்ளது. ஆனால் இந்த வேலை பெரும்பாலும் அவர்களின் உடல்நலம் மற்றும் கண்ணியத்தைப் பணயம் வைத்து வருகிறது. இதனால் அவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள், சட்ட அங்கீகாரம் அல்லது சமூகப் பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தான பொருட்கள் மற்றும் நச்சுப் புகைகளுக்கு ஆளாகின்றனர்.


அவர்கள் நீண்டகால சுகாதார அபாயங்களை எதிர்கொள்கின்றனர். சுவாச நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் உட்பட, மற்றும் பெரும்பாலும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர், நிலையான வருமானம் மற்றும் அடிப்படை சமூக பாதுகாப்புகளுக்கான அணுகல் இல்லாமல் உள்ளனர்.


அவர்களின் பங்கை அங்கீகரித்து, இந்திய அரசு அவர்களை முறைப்படுத்தவும் பாதுகாக்கவும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2024-ல் தொடங்கப்பட்ட இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (National Action for Mechanised Sanitation Ecosystem) திட்டம் பாதுகாப்பு நடவடிக்கைகள், ஆயுஷ்மான் பாரத்தின் (Ayushman Bharat) கீழ் சுகாதார காப்பீடு, மற்றும் சமூகப் பாதுகாப்பு நன்மைகளுக்கான அணுகலை வழங்குவதன் மூலம் கழிவு சேகரிப்பாளர்களை முறையான கழிவு அமைப்புகளில் ஒருங்கிணைக்க நோக்கமாக கொண்டுள்ளது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் (Ministry of Social Justice and Empowerment) படி, மே 2025 நிலவரப்படி, 80,000-க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் கழிவு சேகரிப்பு தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் சுயவிவரப்படுத்தப்பட்டுள்ளனர். 45,700-க்கும் மேற்பட்டவர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன மற்றும் சுமார் 26,400 பேருக்கு ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.


2016ஆம் ஆண்டின் நெகிழிக் கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் உள்ள விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு வழிகாட்டுதல்கள் 2022இல் திருத்தப்பட்டவை. உற்பத்தியாளர்கள் தாங்கள் உருவாக்கும் நெகிழிக்கு நிதி மற்றும் செயல்பாட்டு ரீதியாக பொறுப்பேற்க வேண்டும் என்று கோருகின்றன. இருப்பினும், இந்தியாவின் 19 ‘ஒருமுறை பயன்படுத்தப்படும்’ நெகிழிகளுக்கு விதிக்கப்பட்ட தடையைப் போலவே, அமலாக்கத்தில் உள்ள இடைவெளிகளை நிபுணர்கள் விமர்சித்துள்ளனர், பாதிக்கும் குறைவான உற்பத்தியாளர்கள் மட்டுமே தங்கள் கடமைகளை நிறைவேற்றியுள்ளனர்.



Original article:

Share:

BRICS புதிய மற்றும் ஆச்சரியமான வழிகளில் மாறி வருகிறது. - த்ரிதி முகர்ஜி பிபில்

 இந்தக் குழு வலுவான மக்கள்தொகையையும், நல்ல உணவுப் பாதுகாப்பையும் மற்றும் சொந்த நிதி அமைப்பையும் கொண்டுள்ளது. இப்போது பன்முக நிர்வாகத்திற்கான தேவையும் உள்ளது.


BRICS அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் அடங்கும். இது வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் குறியீட்டு குழுவாகத் (symbolic coalition) தொடங்கியது. இப்போது, உலகளாவிய நிர்வாகம் பற்றிய புதிய யோசனைகளுக்கான ஒரு தீவிர தளமாக மாறி வருகிறது. 2024-ம் ஆண்டில், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை பிரிக்ஸில் இணைந்தன. சவுதி அரேபியா மற்றும் அர்ஜென்டினா விரைவில் சேரக்கூடும். இன்று, BRICS உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 46% ஐ பிரதிநிதித்துவப்படுத்துகிறது. வாங்கும் சக்தி சமநிலையால் (purchasing power parity) அளவிடப்படும் போது இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40% ஆகும். இந்த மாற்றம் மேற்கத்திய நாடுகளை எதிர்ப்பது பற்றியது அல்ல. மாறாக, இது ஒரு நியாயமான, பல துருவ உலகளாவிய அமைப்புக்கான வளர்ந்து வரும் தேவையைக் காட்டுகிறது.


ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் அதன் சொந்த இலக்குகள் உள்ளன. இதனால், ஈரான் தடைகளைத் தவிர்க்க விரும்புகிறது. மேலும், எண்ணெய் இராஜதந்திரத்திற்கான அதன் அணுகுமுறையை ஐக்கிய அரபு அமீரகம் மாற்றி வருகிறது. வளர்ச்சி நிதியில் அதிக செல்வாக்கைப் பெற எத்தியோப்பியா இலக்கு வைத்துள்ளது. ஆப்பிரிக்க-அரபு உறவுகளை இணைக்க எகிப்து செயல்படுகிறது. குழு வளரும்போது, அதன் உள் சிக்கல்களும் அதிகரிக்கின்றன. இந்த புதிய ஒழுங்கு எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம் மிகவும் குறிப்பிடத்தக்க சவாலாகும்.


மக்கள்தொகை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தாண்டி, BRICS உணவுப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த குழு உலகின் அரிசியில் 52%க்கும் அதிகமானதையும் அதன் கோதுமையில் 42% க்கும் அதிகமானதையும் உற்பத்தி செய்கிறது. ஏற்றுமதி தடைகள், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் கணிக்க முடியாத காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் உலகில், இது BRICS உலகளாவிய உணவு முறைகளில் வலுவான செல்வாக்கை அளிக்கிறது. 2025 ரியோ உச்சி மாநாட்டில், BRICS உறுப்பினர்கள் உணவு ஏற்றுமதியை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை எதிர்த்துப் பேசினர். அவர்கள் மனிதாபிமான நிலைத்தன்மையின் பாதுகாவலர்களாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். இருப்பினும், இந்த குழுவிற்குள் அதிகமான பதட்டங்கள் உள்ளன. மரபணு மாற்றப்பட்ட விதைகள் மற்றும் வேளாண் தொழில்நுட்ப தளங்களை ஊக்குவிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதன் விவசாயத் துறையைத் திறக்க இந்தியா அழுத்தத்தில் உள்ளது. இதனால், அழுத்தத்தை இந்தியா எதிர்த்தது. அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் மற்றும் 2025 இந்திய எஃகு மீதான வரிகள் போன்ற கடந்த கால நிகழ்வுகள், வெளிப்புற தாக்கங்கள் ஒரு நாட்டின் உள் அமைப்புகளை எவ்வாறு சீர்குலைத்து நம்பிக்கையைக் குறைக்கும் என்பதைக் காட்டுகின்றன.


சாதகமற்ற நிதி


IMF மற்றும் உலக வங்கி மீது அதிருப்தி உள்ளது. இந்த நிறுவனங்கள் இன்னும் காலாவதியான ஒதுக்கீடுகள் மற்றும் அரசியல் சார்புகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, BRICS அதன் சொந்த நிதி அமைப்பை உருவாக்க முடிவு செய்தது. புதிய மேம்பாட்டு வங்கி (New Development Bank (NDB)) 96 திட்டங்களுக்கு $32 பில்லியனை வழங்கியுள்ளது. கான்டிஜென்ட் ரிசர்வ் ஏற்பாடு (Contingent Reserve Arrangement (CRA)) $100 பில்லியன் அளவு கொண்டுள்ளது. பிரெட்டன் வுட்ஸ் நிறுவனங்களைப் (Bretton Woods institutions) போலல்லாமல், BRICS சமமான வாக்களிக்கும் உரிமைகளை வழங்குகிறது. அவற்றுக்கும் குறைவான நிபந்தனைகள் இணைக்கப்பட்டுள்ளன.


இருப்பினும், மிகப்பெரிய மாற்றம் BRICS Pay ஆகும். இது எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கான டிஜிட்டல் கட்டண முறையாகும். இது 2025-ல் தொடங்கியது மற்றும் இந்தியா, UAE, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவை இணைக்கிறது. இந்த அமைப்பு பணம் அனுப்புதல் மற்றும் சிறு வணிக வர்த்தகத்திற்கான நிகழ்நேர, குறைந்த விலை பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. இது SWIFT இன் புவிசார் அரசியல் கட்டுப்பாட்டை சவால் செய்கிறது.


2022ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா ரூபாய்-ரூபிள் தீர்வுகளில் சிக்கல்களை எதிர்கொண்டது. ரஷ்யாவும் ஈரானும் உலகளாவிய கட்டண நெட்வொர்க்குகளிலிருந்து விலக்கப்பட்டன. இந்தப் பிரச்சினைகள் இறையாண்மை மாற்றுகளுக்கான அவசரத் தேவையைக் காட்டின.


இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)) இந்த முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜூன் 2024-ல் மட்டும், UPI 14.3 பில்லியன் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியது. இது ஏற்கனவே சிங்கப்பூர், UAE மற்றும் கென்யாவில் உள்ள கட்டண முறைகளுடன் இயங்கக்கூடியது. இதன் காரணமாக, UPI உலகளாவிய தெற்கில் அளவிடக்கூடிய மற்றும் பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கான ஒரு மாதிரியாக மாறி வருகிறது.


அதே நேரத்தில், BRICS புதிய அமைப்புகளை உருவாக்குவதில் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், நிர்வாகம் தொடர்பான பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ரியோ உச்சிமாநாட்டில் ஜி ஜின்பிங் இல்லாததும், முக்கியமான கனிம சார்பு குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்களும் தீவிரமான பிரச்சனைகளை எடுத்து காட்டுகின்றன. BRICS நாடுகளின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சீனா 70 சதவீதத்தை உருவாக்குகிறது. மேலும், குழுவிற்குள் அதன் ஆதிக்கத்தை உறுதிப்படுத்த விரும்புகிறது. இதில் புதிய மேம்பாட்டு வங்கி (NDB), BRICS ஊதிய தரநிலைகள் மற்றும் டிஜிட்டல் விதிமுறைகள் மீதான கட்டுப்பாடு ஆகியவை அடங்கும். மறுபுறம், இந்தியா பரவலாக்கப்பட்ட அமைப்புகளை ஆதரிக்கிறது. இது விதிகள் சார்ந்த கட்டமைப்புகளையும் வலியுறுத்துகிறது.


இந்தப் போட்டி அரசியலைப் பற்றியது மட்டுமல்ல. இது கட்டமைப்பு ரீதியானது. விமான குத்தகை, துறைமுக தளவாடங்கள், மறுகாப்பீடு மற்றும் குறைக்கடத்திகள் போன்ற முக்கியமான துறைகள் இன்னும் டாலர் அடிப்படையிலான அமைப்புடன் பிணைக்கப்பட்டுள்ளன. உலகளாவிய விமான குத்தகைகளில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவை டாலர்களில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. லண்டனின் லாயிட்ஸ் அல்லது உலகளாவிய குறைக்கடத்தி விநியோகச் சங்கிலிகளுக்கு BRICS இன்னும் வலுவான மாற்றுகளை உருவாக்கவில்லை. பாதுகாப்புகள் மற்றும் பகிரப்பட்ட விதிகள் இல்லாமல், BRICS அமைப்பானது வாஷிங்டனின் ஒருமித்த கருத்தை பெய்ஜிங்கின் ஒருமித்த கருத்துடன் மாற்றக்கூடும்.


BRICS இனி வெறும் புகார் கூறும் குழு அல்ல. உணவு அமைப்புகள், நிதி தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொதுப் பொருட்களுக்கான புதிய யோசனைகளை இப்போது முயற்சித்து வருகிறது. ஆனால் பெரிய இலக்குகளுக்கு நல்ல திட்டமிடல் தேவை. வலுவான நிறுவனங்கள், நியாயமான முடிவெடுப்பது மற்றும் தெளிவான விதிகள் இல்லாமல், BRICS தான் தவிர்க்க விரும்பும் அதே பிரச்சினைகளை மீண்டும் செய்யக்கூடும்.


எழுத்தாளர் IIIFT உடன் தொடர்புடையவர் ஆவார்.



Original article:

Share:

இந்தியாவில் செயல்திறன் மிக்க திட்ட விநியோகம் : ஒரு ‘குடிமக்களை மையமாக’க் கொண்ட புரட்சி. -அங்கித் கோயல்

 பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் ஒரு மூத்த குடிமகனை கற்பனை செய்து பாருங்கள். அவர் பல ஆவணங்களை சுமந்து அரசு அலுவலகங்களுக்கு இடையே நடந்து செல்கிறார். இதில் ஆதார், ரேஷன் கார்டு, வருமானச் சான்றிதழ் போன்றவை அடங்கும். ஓய்வூதியத் திட்டத்தை அணுக அவருக்கு இவை தேவை. இந்த ஆவணங்கள் மாநிலத்தால் வழங்கப்படுகின்றன. மேலும், அவர் தகுதியானவர் என்பதை நிரூபிக்க வேண்டும். இருப்பினும், ஏற்கனவே தனது தரவை வைத்திருக்கும் அதே அமைப்பில் அவர் இன்னும் தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு இதுவே உண்மையாகப் பார்க்கப்படுகிறது. அவர்கள் தகுதி பெற்றிருந்தாலும், அரசாங்கத் திட்டங்களை அணுகுவது இன்று எளிதானது அல்ல. இதற்கு முக்கிய காரணம் மறைக்கப்பட்ட தரவு ஆகும். வருவாய்த் துறைகள் வருமானம் மற்றும் சாதியைப் பதிவு செய்கின்றன. உணவுத் துறைகள் ரேஷன் கார்டுகளை நிர்வகிக்கின்றன. சுகாதாரத் துறைகள் மருத்துவமனை வருகைகளைப் பதிவு செய்கின்றன. ஆனால் இந்த அமைப்புகள் அனைத்தும் தனித்தனியாக வேலை செய்கின்றன. ஆனால், தரவைப் பகிர்ந்து கொள்வதில்லை.


ராஜஸ்தானில், 2022ஆம் ஆண்டு வெளியான CAG தணிக்கையில் 1.2 லட்சம் ஓய்வூதிய பயனாளிகள் தகுதியற்றவர்கள் என்று கண்டறியப்பட்டது. பதிவுகள் சரியாக புதுப்பிக்கப்படவில்லை. அதே நேரத்தில், தகுதியுள்ள பல மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில், 2020 கோவிட்-19 நிவாரணம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தவறவிட்டது. ரேஷன் கார்டுகள் அவர்களின் சொந்த ஊர்களுடன் இணைக்கப்பட்டிருந்தன அவர்களின் தற்போதைய முகவரிகளைக் காட்டாததால் இது நிகழ்ந்தது. மகாராஷ்டிராவில், விவசாயிகள் விவசாய மானியங்களைப் பெறுவதில் நீண்ட தாமதங்களை எதிர்கொள்கின்றனர், ஏனெனில், காசோலைகள் கைமுறையாக(manually) செய்யப்படுகின்றன. ஜார்க்கண்டில், பழைய 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. எனவே விண்ணப்பித்த சுமார் ஏழு லட்சம் பேர் இன்னும் காத்திருக்கிறார்கள்.


செலவு மிக அதிகம். குடிமக்கள் நீண்ட வரிசையில் பல நாட்கள் காத்திருக்கும்போது ஊதியத்தையும் கண்ணியத்தையும் இழக்கிறார்கள். அதே நேரத்தில், அரசாங்கங்கள் கைமுறை வேலை (manual work) மற்றும் தவறுகளை சரிசெய்வதற்கு நிறைய செலவிடுகின்றன. இந்தத் தவறுகளில் சேர்த்தல் பிழைகளும் அடங்கும். அங்கு தகுதியற்றவர்களுக்கு நன்மைகள் செல்கின்றன. முன்கூட்டிய திட்ட விநியோகம் ஒரு சிறந்த தீர்வாகும். இந்த அணுகுமுறையில், அரசு தேவைகளை எதிர்பார்த்து நேரடியாக நன்மைகளை வழங்குகிறது. இந்த முறை குடிமக்கள் மீது கவனம் செலுத்துகிறது மற்றும் இந்த தடைகளை உடைக்கிறது.


முன்கூட்டிய திட்ட விநியோகம் (Proactive delivery) குடிமக்களை முதன்மைப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மாற்றுகிறது. தகுதியான குடும்பங்களை தானாகவே சேர்க்க குடிமக்களின் ஒற்றை தரவுத்தளத்தைப் பயன்படுத்துகிறது, எனவே அவர்கள் சலுகைகளைப் பெற அலைய வேண்டியதில்லை. ஆதார், வருமானம், குடும்ப அளவு மற்றும் பிற விவரங்களை இணைக்கும் ஒரு மையப்படுத்தப்பட்ட, நிகழ்நேர தரவுத்தளம், ஓய்வூதியம், வீட்டுவசதி அல்லது சுகாதார காப்பீடு போன்ற திட்டங்களுடன் மக்களை எளிதாகப் பொருத்த முடியும்.


இந்த அமைப்பு எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கும் என்பதை நிஜ உலக எடுத்துக்காட்டுகள் காட்டுகின்றன. ஹரியானாவின் பரிவார் பெஹ்சான் பத்ரா (Parivar Pehchan Patra (PPP)) 2020-ல் தொடங்கியது. இது 65 லட்சம் குடும்பங்களை, அதாவது 2 கோடிக்கும் மேற்பட்ட குடிமக்களைக் கண்காணிக்கிறது. இது ஓய்வூதியம், எரிவாயு மானியங்கள் மற்றும் சுகாதார நலன்களுக்கு அவர்களை தானாகவே சேர்க்கிறது. 2023ஆம் ஆண்டு வாக்கில், பரிவார் பெஹ்சான் பத்ரா (Parivar Pehchan Patra (PPP)) நகல் பதிவுகளை அகற்றுவதன் மூலம் ₹500 கோடியை மிச்சப்படுத்தியது. இது மில்லியன் கணக்கானவர்களுக்கு சேவைகளை விரைவாக அணுக உதவியது.


கேரளாவின் ஸ்மார்ட் கிச்சன் திட்டம் (Smart Kitchen Scheme) 2021-ல் தொடங்கியது. இது 1.25 லட்சம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மானிய விலையில் சமையலறை உபகரணங்களை வழங்க ரேஷன் கார்டு மற்றும் வருமானத் தரவைப் பயன்படுத்துகிறது. இது சுமார் 5 லட்சம் குடிமக்களை உள்ளடக்கியது. இது மக்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.


உத்தரபிரதேசம் அதன் குடும்ப அடையாள அட்டை முறையைப் பயன்படுத்துகிறது. இது முதியோர் ஓய்வூதியத்தை வழங்க ஆதாருடன் பதிவுகளை இணைக்கிறது. மூத்த குடிமக்கள் தகுதி பெற்றவுடன் ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் தங்கள் விவரங்களை விண்ணப்பிக்கவோ அல்லது சரிபார்க்கவோ தேவையில்லை.


இந்த அமைப்புகள் குடும்ப நிலையில் தரவுகளை சேகரிப்பதில் கவனம் செலுத்துகின்றன. PMAY வீட்டுவசதி மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களுக்கு இது முக்கியமானது. இந்தத் திட்டங்கள் வீட்டு விவரங்களின் அடிப்படையில் தகுதியைச் சரிபார்க்கின்றன. அவை மக்களின் வீடுகளுக்கு நேரடியாக நன்மைகளை வழங்க உதவுகின்றன. இந்த அணுகுமுறை செயல்திறன் மற்றும் நியாயத்தன்மை இரண்டையும் மேம்படுத்துகிறது.


ஒரு முன்னெச்சரிக்கையான, குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அமைப்பை உருவாக்குவது குறிப்பிடத்தக்க தடைகளை எதிர்கொள்கிறது. அவை உள்ளடக்கத்தை உறுதி செய்வதற்காக தீர்க்கப்பட வேண்டும்:


தரவு பிரித்தல் மற்றும் துல்லியமின்மை : பீகாரின் 2021ஆம் ஆண்டு கிராமப்புற கணக்கெடுப்பு 30% வீடுகளுக்கு புதுப்பிக்கப்பட்ட வருமானச் சான்றிதழ்கள் இல்லை என்பதைக் காட்டுகிறது. இதன் காரணமாக, இந்த வீடுகள் அரசாங்க நலத்திட்டங்களிலிருந்து விலக்கப்பட்டன.


தனியுரிமை மற்றும் தவறான பயன்பாட்டின் அபாயங்கள் : கர்நாடகாவின் 2023ஆம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரக்குறிப்பு பற்றிய அச்சத்தின் மீது பொதுமக்களின் கோபத்தை ஏற்படுத்தியது. இது மில்லியன் கணக்கான பதிவுகளை வெளிப்படுத்தும் கடந்த ஆதார் தரவு மீறல்களால் அதிகரித்த கவலையாகும்.


உள்கட்டமைப்பு இடைவெளிகள் : 2024ஆம் ஆண்டு IAMAI தரவுகளின்படி, 60% கிராமப்புற இந்தியர்களிடம் திறன்பேசிகள் போன்கள் இல்லை. இதன் விளைவாக, டிஜிட்டல் அமைப்புகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களை விட்டுவிடக்கூடும்.


நம்பிக்கைக் குறைபாடுகள் : 2019ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேசம் அதன் நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கியது. இருப்பினும், டிஜிட்டல் செய்யப்பட்ட தலைப்புகளில் 15% இயற்பியல் பதிவுகளுடன் பொருந்தவில்லை. இது சர்ச்சைகளை ஏற்படுத்தியது மற்றும் மக்களின் நம்பிக்கையைக் குறைத்தது. இதன் விளைவாக, பல சலுகைகள் தாமதமாகின அல்லது நிறுத்தப்பட்டன.


விலக்கு பிழைகள் : 2021-ம் ஆண்டில், பஞ்சாப் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், தகுதியான விவசாயிகளில் 10% பேர் விடுபட்டனர். பயன்படுத்தப்பட்ட பதிவுகள் காலாவதியானதால் இது நடந்தது. இந்த விவசாயிகள் முக்கியமான ஆதரவைத் தவறவிட்டனர்.


இந்தப் பிரச்சினைகள் கடுமையான செலவுகளைக் கொண்டுள்ளன. குடிமக்கள் வருமானத்தை இழந்து சிக்கலான நடைமுறைகளைக் கையாள்வதில் நேரத்தைச் செலவிடுகிறார்கள். பதிவுகளை கைமுறையாகச் சரிபார்ப்பதற்கும் தவறுகளைச் சரிசெய்வதற்கும் அரசாங்கங்கள் கூடுதல் வளங்களைச் செலவிட வேண்டும். இது வளர்ச்சித் திட்டங்களிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்கிறது.


இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. குடிமக்களின் பதிவுகளை ஒருங்கிணைத்து, ஒன்றுடன் ஒன்று இயங்கக்கூடிய தரவுத்தளத்தில் புதுப்பிப்பதன் மூலம் முன்னெச்சரிக்கை சேவை வழங்கல் தொடங்குகிறது. உத்தரபிரதேசத்தின் குடும்ப ஐடி (Family ID) பல்வேறு ஆவணங்கள் மற்றும் தரவை இணைக்கிறது.  இது ஆதார், வாக்காளர் ஐடிகள், ரேஷன் கார்டுகள், வருமானம், சாதி, வரி பதிவுகள் மற்றும் வீட்டு நிலையில் பயன்படுத்தப்படும் திட்டங்களின் நிலையை இணைக்கிறது. இது நகல்களை நீக்கவும் பிழைகளைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த முழுமையான இணைப்பு, முதியோர் ஓய்வூதியம், சுகாதார காப்பீடு அல்லது வீட்டு மானியங்கள் போன்ற திட்டங்களுக்கான தகுதி முழுமையாக, ஒட்டுமொத்தமாக சரிபார்க்கப்படுவதை உறுதி செய்கிறது. இது மக்கள் தவறாக விலக்கப்படக்கூடிய தவறுகளைக் குறைக்கிறது.


குடிமக்களின் தனியுரிமையைப் பாதுகாக்க வலுவான குறியாக்கம் (encryption) மற்றும் கடுமையான விதிகள் (strict protocols) தேவை. எடுத்துக்காட்டாக, உத்திர பிரதேசத்தின் குடும்ப ஐடி அமைப்பில், முழுமையான குறியாக்கத்தைப் பயன்படுத்துகின்றன. இது அங்கீகரிக்கப்படாத அணுகலை நிறுத்துகிறது. தெளிவான தரவு பயன்பாட்டுக் கொள்கைகளும் உதவுகின்றன. அவை என்ன அனுமதிக்கப்படுகின்றன என்பதை விளக்குகின்றன மற்றும் தவறான பயன்பாட்டிற்கான தண்டனைகளை நிர்ணயிக்கின்றன. இந்த நிலைகள் பொது நம்பிக்கையை உருவாக்குகின்றன. அவை விவரக்குறிப்பையும் நிறுத்துகின்றன. இதன் விளைவாக, பெரிய தரவுத் திட்டங்கள் அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் சமூக ரீதியாக நீடித்ததாகவும் மாறும்.


உள்கட்டமைப்பு இடைவெளிகளைக் குறைக்க டிஜிட்டல் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் தொடர்புகளுடன் இணைப்பது அவசியம். இது பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட மக்களைச் சேர்க்க உதவுகிறது. குஜராத்தில், மொபைல் ரேஷன் கார்டு குழுக்கள் (mobile ration‑card teams) கிராமங்களில் வீடு வீடாகச் சென்றன. ஸ்மார்ட்போன்கள் அல்லது இணைய அணுகல் இல்லாத வீடுகளை அவர்கள் பதிவு செய்தனர். உள்ளூர் தன்னார்வலர்கள் (local volunteers) இந்த மாதிரியைப் பின்பற்றலாம். இது தொலைதூர அல்லது டிஜிட்டல் முறையில் விலக்கப்பட்ட பகுதிகளில் கூட பதிவுகளைப் புதுப்பிக்க உதவும். இது அமைப்பில் உள்ள ஏதேனும் பார்வையற்ற இடங்களையும் (blind spots) நீக்குகிறது.


வெளிப்படைத்தன்மை நேரடி திட்டத் தரவைப் பகிர்வதன் மூலம் குடிமக்களை கூட்டமைப்புகளில் மாற்றுகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் MGNREGA தரவுத்தளம் பயனாளிகளின் நிகழ்நேர பட்டியல்கள் மற்றும் கட்டண நிலைகளைக் காட்டுகிறது. இது சமூகங்கள் தங்கள் உரிமைகளைச் சரிபார்த்து, ஏதேனும் தவறுகளைப் புகாரளிக்க அனுமதிக்கிறது. திறந்த போர்டல்கள் ஊழலை நிறுத்த உதவுகின்றன. அவை சர்ச்சைகளைத் தீர்ப்பதையும் விரைவுபடுத்துகின்றன. நிர்வாகம் பொறுப்பானது, நியாயமானது மற்றும் மேற்பார்வைக்கு திறந்திருக்கும் என்பதை அவை காட்டுகின்றன.


சிறந்த தானியங்கி அமைப்புகள் கூட சில சிறப்பு நிகழ்வுகளைத் தவறவிடலாம். அதனால்தான் மனித உதவி மிகவும் முக்கியமானது. கேரளாவின் 2021 ஸ்மார்ட் கிச்சன் திட்ட (Smart Kitchen Scheme) உதவி எண் 10,000 குடும்பங்களை தளத்தரவைச் சேர்த்தது. இதில் தானியங்கி அமைப்புகளால் தவறவிடப்பட்ட சுமார் 40,000 பேர் அடங்குவர். அழைப்பு மையங்கள், உதவி மையங்கள் மற்றும் களக் குழுக்களைப் பயன்படுத்துவது இந்த இடைவெளிகளை நிரப்புகிறது. இது தகுதியான குடிமக்கள் முக்கியமான சேவைகளை அணுகுவதை உறுதி செய்கிறது.


ஒருங்கிணைந்த தரவுத்தளங்கள், தொடர்பு மற்றும் உதவி எண்களுக்கான நிதி சேமிப்பிலிருந்து வரலாம். சேர்க்கை மற்றும் விலக்குக்கான பிழைகளை சரிசெய்வதன் மூலம் இந்த சேமிப்பு சாத்தியமாகும். முன்னதாக, இதுபோன்ற பிழைகள் தகுதியற்றவர்களுக்கு பணம் செலுத்த வழிவகுத்தன. அவை விலையுயர்ந்த கைமுறை திருத்தங்களையும் ஏற்படுத்தின. இது அரசாங்கத்தின் பட்ஜெட்டை திருத்தியது.


முன்னோடித் திட்டங்கள் உத்வேகத்தை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, மகப்பேறு சலுகைகளுக்கு தாய்மார்களை தானாகச் சேர்க்க தமிழ்நாடு மருத்துவமனைத் தரவைப் பயன்படுத்தலாம். இது ஆந்திராவின் ரிது பரோசா மாதிரியைப் (Rythu Bharosa model) போன்றது. ஒரு மாநிலத்தில் ஒரு முன்னோடித் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டால், அது நாடு முழுவதும் தத்தெடுப்பை ஊக்குவிக்கும்.


ஹரியானாவின் PPP, கேரளாவின் ஸ்மார்ட் கிச்சன் மற்றும் உத்தரபிரதேசத்தின் குடும்ப ஐடி ஆகியவை முன்கூட்டியே விநியோகம் சிறப்பாக செயல்படுவதைக் காட்டுகின்றன. இந்தத் திட்டங்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு விரைவாகவும் நியாயமாகவும் நன்மைகளைப் பெற உதவியுள்ளன. தரவை ஒன்றிணைப்பதன் மூலமும், தரவை சேர்ப்பதில் கவனம் செலுத்துவதன் மூலமும், நம்பிக்கையை வளர்ப்பதன் மூலமும், திட்டங்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதை இந்தியா மாற்ற முடியும். இது குடிமக்களை முதன்மைப்படுத்தும் ஒரு மென்மையான அமைப்பை உருவாக்கும். இது நீண்ட காகிதப்பணி செயல்முறையை நிறுத்தி, ஒவ்வொரு தகுதியுள்ள நபரும் அவர்களின் நன்மைகளைப் பெறுவதை உறுதி செய்யும்.


அங்கித் கோயல் கட்டுரையாளர் மற்றும்  சமக்ரா நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆவார்.



Original article:

Share:

பெண்களைப் பொறுத்தவரை, ஊட்டச்சத்து என்பது உணவைப் பற்றியது மட்டுமல்ல, ஒரு சமூக-கலாச்சார கட்டமைப்பாகும். -ரிதுபர்ண பத்கிரி

 பெண்கள் தங்கள் குடும்பத்தின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்தாலும், அவர்கள் பெரும்பாலும் குறைவாகவே சாப்பிடுபவர்களாகவும், கடைசியாகவே சாப்பிடுபவர்களாகவும் இருக்கிறார்கள். அதிகமாக ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், ஊட்டச்சத்து கொள்கைகள் உண்மையில் பெண்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினைகளைக் கையாளுகின்றனவா?


சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா மூன்று முக்கிய ஊட்டச்சத்து பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இவை ஊட்டச்சத்து குறைபாடு, அதிகப்படியான ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் போன்றவைகளை உள்ளடக்கியது. உலகளாவிய பசி குறியீட்டின் (Global Hunger Index) (2020) படி, இந்தியா 107 நாடுகளில் 94வது இடத்தில் உள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை (Global Nutrition Report), இந்தியா 2025ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய ஊட்டச்சத்து இலக்குகளைத் தவறவிட வாய்ப்புள்ளது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.


இந்தக் கண்டுபிடிப்புகள், 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுக்கு இடையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்-5 (National Family Health Survey (NFHS)) தரவுகளுடன் ஒத்துப்போகின்றன. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், 35.5% பேர் வளர்ச்சி குன்றியவர்களாகவும், 19.3% பேர் உடல் எடை குறைவாகவும், 32.1% பேர் எடை குறைவாகவும் இருப்பதாக இந்த கணக்கெடுப்பு காட்டுகிறது.


2015-16இல் நடத்தப்பட்ட கடைசி கணக்கெடுப்பு (NFHS-4)க்குப் பிறகு இந்த எண்ணிக்கை மேம்பட்டிருந்தாலும், ஊட்டச்சத்து இன்னும் ஒரு கவலையாகவே உள்ளது. பெண்களுக்கு, ஊட்டச்சத்து என்பது உணவைப் பற்றியது மட்டுமல்ல. இது சமூக மற்றும் கலாச்சார காரணிகளாலும் பாதிக்கப்படுகிறது. இதை மேலும் ஆராய்வோம்.


ஊட்டச்சத்து மற்றும் பாலினம்


ஊட்டச்சத்து என்பது உணவைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு சமூக-கலாச்சார கட்டமைப்பாகும். பல காரணிகள் ஊட்டச்சத்தை பாதிக்கின்றன. கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள், பாலின தன்மைகள், வீடுகளில் உணவு எவ்வாறு பகிரப்படுகிறது மற்றும் கலாச்சார நம்பிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும். NFHS-5 தரவுகளின்படி, 2019-21இல் 15-49 வயதுடைய பெண்களில் 57 சதவீதம் பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2015-16இல் 53 சதவீதமாக இருந்தது.


குறிப்பிடத்தக்க வகையில், கர்ப்பிணிப் பெண்களை விட (52.2 சதவீதம்) கர்ப்பிணி அல்லாத பெண்களில் இரத்த சோகையின் பாதிப்பு (57.2 சதவீதம்) அதிகமாக இருந்தது. குறிப்பாக சாதரண பெண்கள், சிறப்பு கவனிப்பு அல்லது சத்தான உணவை அரிதாகவே பெறுகிறார்கள் என்பதை இது குறிக்கிறது. உதாரணமாக, லீலா டியூப்பின் ”Women and Kinship: Perspectives on Gender in South and South-East Asia-1997”  போன்ற மானுடவியல் ஆய்வுகள், படித்த, உயர் நடுத்தர குடும்பங்களைத் தவிர, பொதுவாகப் பெண்களுக்குப் பால் சார்ந்த உணவுகள் கொடுக்கப்படுவதில்லை என்பதைக் காட்டுகின்றன. பெரும்பாலான பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது, நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அல்லது கர்ப்பமாக இருக்கும்போது போன்ற சிறப்பு சூழ்நிலைகளில் மட்டுமே பால் சார்ந்த உணவுகளைப் பெறுகிறார்கள்.


மாதவிடாய் ஆரோக்கியத்தை புறக்கணிப்பது இரத்த சோகையை மோசமாக்குகிறது. சுமார் 59 சதவீத இளம் பெண்கள் (15-19 வயது) இரத்த சோகை உள்ளவர்கள் ஆவர். இந்த இரத்த சோகை கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது அபாயங்களை அதிகரிக்கிறது. இரத்த சோகை தவிர, ஐந்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளில் 33.1 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்கள் ஆவர். இது பல காரணங்களால் நிகழ்கிறது. இவர்களில் இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களும் அடங்குவர். குழந்தை ஒரு பெண் என்பதால் பிரசவத்திற்குப் பிறகு கொடுக்கப்படும் குறைவான கவனிப்பு மற்றொரு காரணமாக அமைகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் எடை குறைவு விகிதங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், பெண்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது குறைவான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து பெறுகிறார்கள்.


மேலும், பெண்கள் தங்கள் குடும்பங்களின் ஊட்டச்சத்தை கவனித்துக் கொண்டாலும், அவர்கள் பெரும்பாலும் குறைவாக சாப்பிட்டு கடைசியாக சாப்பிடுபவர்கள். இது தலைமுறைகளாக ஊட்டச்சத்து சமத்துவமின்மை தொடர்கிறது என்பதைக் காட்டுகிறது. எடை குறைந்த தாய்மார்களுக்கு (18.5 கிலோ/மீ2 க்குக் குறைவான உடல் நிறை குறியீட்டெண் கொண்ட) பிறக்கும் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவோ, மெலிந்தவர்களாகவோ அல்லது எடை குறைவாகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.


28 மாநிலங்களில், 21 மாநிலங்களில் இரத்த சோகை அதிகரித்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் குஜராத்தில் அதிக விகிதங்கள் உள்ளன. அசாம், சத்தீஸ்கர் மற்றும் திரிபுராவில் 15 சதவீத புள்ளிகள் அதிகரிப்பு காணப்பட்டது, அதே நேரத்தில் பீகார், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் தெலுங்கானாவில் 5 சதவீதத்திற்கும் குறைவான சிறிய அதிகரிப்பு காணப்பட்டது.


பட்டியல் பழங்குடி (ST) சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். இது சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகல் இல்லாததைக் குறிக்கிறது. மறுபுறம், உயர் கல்வி நிலைகளைக் கொண்ட பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இது, கல்வி ஊட்டச்சத்து பற்றிய அறிவை மேம்படுத்த உதவுகிறது மற்றும் சிறந்த உணவுப் பழக்கத்திற்கு வழிவகுக்கிறது என்பதை இது குறிக்கிறது.


அதிக பெண் கல்வியறிவு, தாமதமான திருமணம் மற்றும் பொது விநியோக முறையின் நல்ல அணுகல் ஆகியவற்றின் காரணமாக பாலினம் முழுவதும் ஒப்பீட்டளவில் ஊட்டச்சத்து சமத்துவத்திற்காக கேரளா தனித்து நிற்கிறது என்பதை இங்கே கோடிட்டுக் காட்ட வேண்டும். தாய்மார்களின் கல்வி மற்றும் ஊட்டச்சத்து நிலை மேம்படுவதால் குழந்தைகளின் வளர்ச்சி குறைகிறது. இதற்கு நேர்மாறாக, தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பள்ளிக் கல்விக்கு அணுகல் இல்லாதவர்களாகவும், மிகக் குறைந்த செல்வச் சதவிகிதத்தில் உள்ளவர்களாகவும் உள்ளனர். 


சிக்கிம் மற்றொரு குறிப்பிடத்தக்க மாநிலமாகும். ஏனெனில், இது பெண்களின் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. எனவே, NFHS-5 தரவுகளின்படி பாலினம் மற்றும் ஊட்டச்சத்து அடிப்படையில் வடகிழக்கில் மிசோரமிற்கு அடுத்தபடியாக மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த எண்கள், குறிப்பாக பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த, உள்ளூர் அளவில் நல்ல நிர்வாகம் மற்றும் சிறந்த நடைமுறைகளின் அவசியத்தைக் குறிப்பிடுகின்றன. 


அதிகப்படியான ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு


பெண்களிடையே வளர்ந்து வரும் மற்றொரு ஊட்டச்சத்து பிரச்சினை அதிகப்படியான ஊட்டச்சத்து குறைபாடு ஆகும். இந்திய வரலாற்றில் முதல்முறையாக, 15-49 வயதுக்குட்பட்ட பெண்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களை விட அதிக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பெண்கள் அதிகம். தற்போது, 41.3 சதவீத பெண்கள் அதிக எடை அல்லது பருமனாக உள்ளனர். கிராமப்புறங்களில் 21 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 33 சதவீத பெண்கள் அதிக ஊட்டச்சத்துள்ள நகர்ப்புறங்களில் இந்தப் போக்கு அதிகமாகக் காணப்படுகிறது. 


இதன் விளைவாக, பெண்கள் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றாத நோய்களால் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். பெரும்பாலான பெண்கள் முக்கிய பராமரிப்பாளர்களாக இருப்பதால் இது நிகழ்கிறது. அவர்கள் பெரும்பாலும் தங்களைக் கவனித்துக் கொள்ள, தங்கள் ஆரோக்கியத்தை நிர்வகிக்க அல்லது உடல் செயல்பாடுகளைச் செய்ய சிறிது நேரம் கூட கிடைப்பதில்லை.


இது தவிர, பெண்கள் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் உணவுகளில் பொதுவாக பல்வேறு வகைகள் இல்லை. புரத உட்கொள்ளல் பெரும்பாலும் மிகவும் குறைவாக இருக்கும். கலாச்சார பழக்கவழக்கங்கள் இதை மோசமாக்குகின்றன. பெண்கள் பெரும்பாலும் குறைவாகவும், நீண்ட நேரமாகவும் சாப்பிடுபவர்கள். இது அவர்களின் ஊட்டச்சத்து ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது.


இந்திய அரசியலமைப்பு உணவு உரிமையை அங்கீகரிக்கிறது. இதன் பொருள் ஒவ்வொரு குடிமகனுக்கும் போதுமான உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான உரிமை உள்ளது. இந்த உரிமை பிரிவு 21 இன் கீழ் வாழ்வதற்கான உரிமையின் (Right to Life) ஒரு பகுதியாகும். மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கொள்கைகளின் (Directive Principles of State Policy) பிரிவு 47, ஊட்டச்சத்து மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்த அரசு பாடுபட வேண்டும் என்றும் கூறுகிறது. நிலையான வளர்ச்சி இலக்குகளின் (SDGs) இலக்கு 2 இல் கூறப்பட்டுள்ளபடி, 2030-ம் ஆண்டுக்குள் பசியை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா உறுதிபூண்டுள்ளது.


இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, அரசாங்கம் பல கொள்கைகளையும் திட்டங்களையும் தொடங்கியுள்ளது. இதில் 1975-ல் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (Integrated Child Development Services (ICDS)), 1993-ல் தேசிய ஊட்டச்சத்து கொள்கை, 2017-ல் தேசிய சுகாதாரக் கொள்கை, 2017-ல் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (Pradhan Mantri Matru Vandana Yojana (PMMVY)) மற்றும் 2021-ல் தொடங்கப்பட்ட போஷன் 2.0 ஆகியவை அடங்கும்.


முந்தைய முயற்சிகளில் பெரும்பாலானவை குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்களை மையமாகக் கொண்டிருந்தாலும், போஷன் 2.0 இளம் பருவப் பெண்களை நோக்கி இந்த பார்வையை விரிவுபடுத்தியது. கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது மட்டுமே ஊட்டச்சத்து நிலை தீர்மானிக்கப்படுவதில்லை. ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நீண்டகால அணுகுமுறை தேவை என்பதைக் காட்டுகிறது. போஷன் 2.0, Poshan tracker எனப்படும் டிஜிட்டல் கண்காணிப்பு பயன்பாட்டின் மூலம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையும் நிகழ்நேர கண்காணிப்பையும் ஊக்குவிக்கிறது. இது ஊட்டச்சத்தை மேம்படுத்த நடத்தை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.


ஊட்டச்சத்து பணியை சமூக ரீதியாக எவ்வாறு பயனுள்ளதாக மாற்றுவது?


இந்தியாவில் பல கொள்கைகள் மற்றும் திட்டங்கள் உள்ளன. இருப்பினும், அவற்றின் செயல்பாடு மற்றும் செயல்திறன் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே வேறுபடுகின்றன. அங்கன்வாடி பணியாளர்கள் (Anganwadi workers) போன்ற கீழ்நிலை சேவை வழங்குநர்கள் குறைந்த ஊதியம் மற்றும் அதிக வேலை செய்கிறார்கள். சில ஆய்வுகள், இந்தத் தொழிலாளர்கள் சில நேரங்களில் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து கூடுதல் உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ரேஷன் (take home ration (THR)) பொருள்களுக்கு பணம் செலுத்த வேண்டியிருப்பதைக் கண்டறிந்துள்ளன. இந்தப் பிரச்சனைகள் அவர்களைத் குறைத்து மதிப்பிடுகிறது. இதன் விளைவாக, குழந்தை பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து சேவைகள் முறையாக வழங்கப்படுவதில்லை.


ஊட்டச்சத்து சமூகநீதி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை. இந்தியா இதுவரை முக்கியமாக ஊட்டச்சத்து குறைபாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. ஆனால் இப்போது, அதிகப்படியான ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. கொள்கைகளை முறையாக விரிவுபடுத்துவது உடல் பருமன் மற்றும் தொற்றாத நோய்களை எதிர்த்துப் போராட உதவும். மதிய உணவு மற்றும் THR பொருள்கள் போன்ற அரசு தலைமையிலான திட்டங்களில் ஆரோக்கியமான மற்றும் மிகவும் மாறுபட்ட உணவுமுறைகள் அடங்கும்.


ஊட்டச்சத்து-உணர்திறன் கொண்ட விவசாய நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து சேவைகளை வழங்குவதற்கு தனியார்-பொது கூட்டாண்மைகளை உருவாக்குதல் ஆகியவை ஊட்டச்சத்து சேவைகளின் வரம்பையும் தரத்தையும் மேலும் விரிவுபடுத்த உதவும். பொருளாதார வல்லுநர்கள், சமூகவியலாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களை உள்ளடக்கி ஊட்டச்சத்துக் கொள்கைகளுக்கு பல ஒழுங்குமுறை அணுகுமுறையைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக பெண் பிரதிநிதிகள் போன்ற நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு திட்டத்தை வைத்திருப்பது இந்தக் கொள்கைகளை சமூகத்தில் மிகவும் பயனுள்ளதாக மாற்றும்.



Original article:

Share:

இந்தியாவின் மின் துறைக்குத் தேவையான சீர்திருத்தம் -ஆர் வி ஷாஹி

 அனல் மின் நிலையங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கிறது. சீனா வேகமாக வளர்ந்து வருவதாலும், அமெரிக்கா கணிக்க முடியாததாக இருப்பதாலும், இந்தியாவும் இங்கிலாந்தும் வலுவான உறவுகளிலிருந்து பயனடையலாம்.


2015ஆம் ஆண்டில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களுக்கான சல்பர் டை ஆக்ஸைடு (SO2) வரம்புகளை நிர்ணயித்தது. இது இந்தியாவில் உள்ள சுமார் 600 மின் நிலையங்களுக்கும் எரிவாயு கந்தக நீக்க (flue gas desulphurisation (FGD)) அமைப்புகளை நிறுவுவதை கட்டாயமாக்கியது. இந்த முறையை செயல்படுத்துவதற்கான அட்டவணை கடினமாக இருந்தது. மின் துறையுடன் தொடர்புடைய பெரும்பாலான தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் சரியான கவலைகளை எழுப்பினர். இந்திய நிலக்கரியில் குறைந்த கந்தக (சல்பர்) உள்ளடக்கம் இருப்பதால், இந்த ஆலைகளில் பெரும்பாலானவற்றிற்கு FGD அமைப்பு அவசியமில்லை என்று இந்த நிபுணர்கள் வாதிட்டனர். இருப்பினும், இந்த அமைப்பின் செயல்படுத்தல் பல ஆலைகளில் தொடங்கப்பட்டது. பழைய மற்றும் புதிய மின் உற்பத்தி நிலையங்களில் மின்சார விநியோகத்தை நிறுவுவதற்கான மூலதனச் செலவு நிதி ஆதாரங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டது. இது ஒரு கிலோவாட்-மணி நேரத்திற்கு சுமார் ரூ.0.25 முதல் 0.30 வரை கட்டணங்களை அதிகரிக்க வழிவகுக்கும். இதற்கு மின் உற்பத்தியாளர்கள் (Power generators) கவலைப்பட்டனர். ஆனால், விநியோக நிறுவனங்களும் மின்சார நுகர்வோரும் இன்னும் அதிகக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் அவர்கள் இன்னும் கவலைப்பட்டனர்.


அதிக செலவு மற்றும் நுகர்வோர் மீதான கூடுதல் சுமையைத் தவிர, இந்திய நிலக்கரியில் மிகக் குறைந்த சல்பர் உள்ளடக்கம் இருப்பதால், இந்த அமைப்பு தொழில்நுட்ப ரீதியாக தேவையா என்பது பற்றிய பிரச்சினையும் இருந்தது. மேலும் ஆராய்ச்சி முறையும் தேவைப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து அனல் மின் நிலையங்களுக்கும் FGDகள் தேவையா என்பதைச் சரிபார்க்க சல்பர் டை ஆக்ஸைடு (SO2) உமிழ்வுகள் குறித்து இன்னும் விரிவான ஆய்வு இருக்க வேண்டும் என்று மின்சார அமைச்சகம் மற்றும் IIT டெல்லி நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


நிதி ஆயோக், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (National Environmental Engineering Research Institute(NEERI)) அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான ஆய்வைத் தொடங்கியது. இதில், ஆராய்ச்சியாளர்கள் இந்திய நிலக்கரியின் அனைத்து அம்சங்களையும், விதிமுறைக்கு மாறாக SO2 உமிழ்வின் அளவையும் ஆய்வு செய்தனர். அவர்கள் ஒரு விரிவான அறிக்கையை தயாரித்து பரிந்துரைகளை வழங்கினர். "அனைத்து கண்காணிப்பு நிலையங்களிலும் சுற்றுப்புற SO2 செறிவு, ஒரு கன மீட்டருக்கு 80 மைக்ரோகிராம்கள் என்ற பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை விட மிகவும் குறைவாக உள்ளது. பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் FGDகளை நிறுவவில்லை என்றாலும் இது உண்மைதான்" என்று அவர்களின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. மேலும், அடுக்குகளில் இருந்து SO2 வெளியேற்றத்திற்கான விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர். ஏனெனில், பூமத்திய ரேகைக்கு அருகில் இந்தியாவின் நிலை ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து வேறுபட்டது. அவர்கள் தற்போதைய வழிகாட்டுதல்களை அமைத்துள்ளனர். இந்தியா மேலும் வலுவான சூரிய ஒளியைப் பெறுகிறது. இது அதிக தரை மட்ட வெப்பமாக்கல், வலுவான செங்குத்து காற்று இயக்கம் (வெப்பச்சலனம்), அதிக கலவை உயரம் மற்றும் சிறந்த காற்றோட்டத்தை ஏற்படுத்துகிறது.  FGD அமைப்பு முக்கியமாக சுண்ணாம்புக்கல் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துகிறது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு சுண்ணாம்புக்கல்லை சுரங்கம் கொண்டு செல்வது ஒரு பெரிய கார்பன் தடயத்தை உருவாக்குகிறது. மேலும், CO2 (கார்பன் டை ஆக்சைடு) வளிமண்டலத்தில் SO2 ஐ விட அதிக நேரம் நீடிக்கும்.


திருத்தப்பட்ட அறிவிப்பில் FGD முழுமையாக திரும்பப் பெற வேண்டிய அவசியமில்லை. இது இப்போது திடமான அறிவியல் ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆய்வுகள் நாட்டில் சுமார் 600 மின் உற்பத்தி நிலையங்களை மூன்று குழுக்களாக வகைப்படுத்த உதவியது. முதல் குழுவில் மிகப் பெரிய நகரங்களுக்கு அருகிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் அடங்கும். இரண்டாவது குழுவில் அதிக மாசுபட்ட பகுதிகளில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் அடங்கும். மூன்றாவது குழுவில் மற்ற அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் உள்ளன.


தரவு பகுப்பாய்வு, சுமார் 78 சதவீத மின் உற்பத்தி நிலையங்களுக்கு FGD அமைப்பு தேவையில்லை என்பதைக் காட்டுகிறது. இதன் பொருள் அதிக அளவு மூலதனச் செலவினங்களைச் சேமிக்க முடியும். சேமிக்கப்பட்ட பணத்தை அதிக மின் உற்பத்தி திறனை உருவாக்கப் பயன்படுத்தலாம். முக்கியமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் கவனம் செலுத்தப்படும்.


இந்த அறிவிப்பு மின் நுகர்வோருக்கு அதிக கட்டணங்கள் குறித்த அச்சங்களையும் நீக்கியுள்ளது. இந்தியாவின் நீண்டகால எரிசக்தி மாற்றத் திட்டத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒரு முக்கிய பங்கை வகிக்கும். இருப்பினும், இந்த மாற்றம் எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, அடுத்த சில காலகட்டங்களுக்கு உள்நாட்டு நிலக்கரி தொடர்ந்து ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கும். இந்த அறிவிப்பு நுகர்வோருக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான மின்சாரத்தைத் திட்டமிடுவது குறித்த தெளிவான வழிகாட்டுதலையும் வழங்குகிறது.


எழுத்தாளர் இந்திய அரசின் முன்னாள் மின்சாரத்துறை செயலாளர் மற்றும் இந்திய எரிசக்தி மன்றத்தின் தலைவர் ஆவார்.



Original article:

Share: