இந்தியாவில் ஊரக பகுதிகளில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? -ரித்விகா பட்கிரி

 2025-26ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) செலவினத்திற்கான 60 சதவீத வரம்பு, திட்டத்தின் தேவை சார்ந்த தன்மையை கவனிக்காமல் விடுகிறதா? MGNREGS பணிகளுக்கான தேவை அதிகரிப்பு எவ்வாறு ஒரு பெரிய ஊரக நெருக்கடியை பிரதிபலிக்கிறது?


அரசு சமீபத்தில் 2025-26 நிதியாண்டின் முதல் பாதிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் (MGNREGS) கீழ் செலவினத்தில் 60 சதவீத வரம்பை விதித்துள்ளது. இதுவரை, இந்த திட்டம் இத்தகைய செலவு வரம்பு இல்லாமல் தேவை-சார்ந்த திட்டமாக (demand-driven programme) செயல்பட்டு வந்தது.


குறிப்பாக,  வேளாண்மை பருவத்தில், அதைச் சார்ந்திருக்கும் ஊரக சமூகங்களுக்கு இந்த வரம்பு சவாலாக இருக்கும். மேலும், வரவு செலவு அறிக்கையின் முதல் பாதியில் 20% முந்தைய ஆண்டின் மீதமுள்ள ஊதியத்தை வழங்கப் பயன்படுத்தப்படுகிறது என்றும் வாதிடப்படுகிறது.


ஜூன் 2024 முதல் ஜூன் 2025 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் வேலை கோரும் குடும்பங்களின் எண்ணிக்கை 4.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தரவுகள் காட்டியுள்ள நேரத்தில் இந்த உத்தரவு வந்துள்ளது. ஜூன் 2024இல், சுமார் 26.39 மில்லியன் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பணிகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். இது இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 27.59 மில்லியனாக உயர்ந்துள்ளது.


வேலைக்கான தேவை கிடைப்பதை விட அதிகமாக உள்ளது


2025ஆம் ஆண்டு, ஊரக பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு குறைந்தது 100 நாட்கள் உத்தரவாதமான கூலி வேலைவாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கிறது. 1991ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் (economic liberalisation) பிறகு உண்மையான வேளாண் வருமானம் குறைந்து வருவதால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம், வறுமை குறைப்பு மற்றும் மூலதன உருவாக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஊரக தேவைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த திட்டம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறத. மேலும், COVID-19 பொது முடக்கத்தின் போது, வீடு திரும்பிய பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் மிகவும் உதவியாக இருந்தது.


இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், இந்தத் திட்டம் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமை மற்றும் தாமதமான ஊதிய விநியோகம் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டது. 2018-19ஆம் ஆண்டு நிலவரப்படி, ஊரக பகுதிகளில் உள்ள குடும்பங்களில் சராசரியாக 7.4 சதவீதம் பேர் மட்டுமே 100 நாட்கள் வேலை பெற்றனர். 2023-24ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ், சராசரியாக ஒரு குடும்பம் 52 நாட்கள் மட்டுமே வேலை செய்தது.


தொற்றுநோய்க்குப் பிறகு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் வேலை கேட்கும் மக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு உள்ளது. இருப்பினும், வேலைக்கான தேவை மற்றும் அதன் கிடைக்கும் தன்மைக்கு இடையில் வளர்ந்துவரும் இடைவெளி, பொதுமுடக்கத்திற்கு பிறகு வேலைவாய்ப்பை பெறுவது கடினமாகிவிட்டது.


இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (Centre for Monitoring Indian Economy (CMIE)) தரவு இந்த நெருக்கடியின் முக்கிய குறிகாட்டிகளை வெளிப்படுத்துகிறது. அவை:


—ஊரக ஊதிய குறைவு


— அதிக ஊரக பணவீக்கம்


— மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) கீழ் வேலைவாய்ப்புக்கான அதிக தேவை


— மந்தமான ஊரக நுகர்வு.


இந்தப் பிரச்சினைகள் வேளாண் துறையின் வளர்ச்சிகளுடன் நெருக்கமாக தொடர்புடையவை.


வேளாண்மை மற்றும் ஊரக வேலைவாய்ப்பு


இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறையாக வேளாண்மை உள்ளது. 2023-24ஆம் ஆண்டில் 46 சதவீதமாக இருந்தது. அதே, நேரத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில், விவசாயத்தின் உண்மையான மொத்த மதிப்பு கூட்டல் (Gross Value Added (GVA)) 4.9 சதவீதம் அதிகரித்துள்ளது.


2025 நிதியாண்டில் வேளாண்மை 4.6% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2024இல் 2.7% ஆக இருந்தது. இருப்பினும், வேளாண் தொழிலாளர்களின் உண்மையான ஊதியம் பெரும்பாலும் அப்படியே உள்ளது. இந்த வளர்ச்சி நல்ல காரீஃப் பயிர் மற்றும் நல்ல ரபி (குளிர்கால) பயிரையும் சார்ந்துள்ளது. இது வானிலையையும் சார்ந்து உள்ளது.


இந்தியாவில், வேளாண்மையில் வேலை செய்பவர்கள்   உழவர்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் என இரண்டு வகையினராக உள்ளனர். வேளாண் தொழிலாளர்கள் மற்றவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் வேலை செய்து, பணம் அல்லது பொருட்களாக ஊதியம் பெறுகிறார்கள். உழவர்கள் தாங்களாகவே நிலத்தை சொந்தமாக வைத்திருக்கிறார்கள் அல்லது வாடகைக்கு அல்லது குத்தகைக்கு எடுத்து நிலத்தைப் பயன்படுத்துகிறார்கள்.


வேளாண் தொழிலாளர்களின் உண்மையான ஊதியங்களில் தேக்கநிலை, வேளாண்மையின் வேலைவாய்ப்பு பங்கு 2018-19இல் 42.5 சதவீதத்திலிருந்து 2023-24இல் 46.1 சதவீதமாக அதிகரித்ததுடன், துறை மற்றும் பரந்த இந்திய பொருளாதாரத்தின் பிரச்சினைகளை வெளிப்படுத்துகிறது.


கோவிட்-19 பொது முடக்கத்தின் காலத்தில், வேளாண்மை பலருக்கு ஒரு மாற்றுத் தேர்வாகச் செயல்பட்டது. மற்ற வேலைகள் கிடைக்காதபோது, கிராமப்புறக் குடும்பங்கள் வேளாண்மையை நோக்கித் திரும்பியதாக ஆய்வுகள் காட்டுகின்றன. வீடு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் ஒரு மாற்றுத் தொழிலாக வேளாண்மை வேலைகளைச் செய்யத் தொடங்கினர்.


இது ஊரக தொழிலாளர்களுக்கு வேளாண்மை இன்னும் முக்கியமானதாக உள்ளது என்பதை இது காட்டுகிறது. அதே நேரத்தில், நிலையான வேளாண் வளர்ச்சி மற்றும் உழவர்களின் வருமானத்தில் உயர்வு ஆகியவை பொது முதலீடு மற்றும் இந்தத் துறையில் கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் சார்ந்துள்ளது.



பசுமைப் புரட்சிக்குப் பிறகான ஊரக பொருளாதாரம்


தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியின் அறிக்கையின் படி, அகில இந்திய கிராமப்புற நிதி உள்ளடக்க கணக்கெடுப்பு (2021-22), வேளாண் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ.13,661 ஆகவும்,  வேளாண்  அல்லாத குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ.11,438 ஆகவும் இருந்தது.  வேளாண் குடும்பங்களைப் பொறுத்தவரை, சாகுபடி வருமானம் மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காகும். இது அவர்களுக்கு முதன்மையான ஆதாரமாகும்.

 வேளாண் குடும்பங்கள்  வேளாண்  அல்லாத குடும்பங்களுடன் ஒப்பிடும்போது பிற வருமான ஆதாரங்களில் அதிக பன்முகத்தன்மையைக் காட்டியுள்ளன. ஊரக பகுதிகளில் உள்ள குடும்பங்களில் பண்ணை அல்லாத வேலைவாய்ப்பு தோன்றிய கதை பசுமைப் புரட்சிக்குப் பிந்தைய ஊரகப் பொருளாதாரத்தின் மாற்றத்துடன் நெருக்கமாக தொடர்புடையது.


1960ஆம் ஆண்டு மற்றும் 1980ஆம் ஆண்டுக்கு இடையிலான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மறைந்த பொருளாதார நிபுணர் ராஜ் கிருஷ்ணா "இந்து வளர்ச்சி விகிதம்" (Hindu rate of growth) என்று அழைத்தார். இது சராசரியாக 4 சதவீதமாக இருந்த குறைந்த பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது. 1960ஆம் ஆண்டுகளில், வேளாண்மையில் வளர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் சுமார் 1 சதவீதமாக இருந்தது. இது 1968-69 மற்றும் 1975-76ஆம் ஆண்டுக்கு இடையில் 2.2 சதவீதமாக  சிறிதளவு அதிகரித்தது.


1970ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் ஏற்பட்ட பசுமைப் புரட்சி, இந்தியா தனது மக்களுக்கு உணவளிக்க போதுமான அரிசி மற்றும் கோதுமையை உற்பத்தி செய்ய உதவியது. ஆனால், அதன் பலன்கள் அனைவருக்கும் சமமாக இல்லை. அவை:


– வெவ்வேறு பகுதிகளில் சமமற்ற வளர்ச்சி

– வேளாண்மைக்கு மழையை நம்பியிருக்கும் பகுதிகளைப் புறக்கணித்தல்

– தினை மற்றும் பிற தானியமற்ற உணவுகள் போன்ற சத்தான பயிர்களில்  குறைவான கவனம் செலுத்துதல்

– வளங்கள் இல்லாத ஏழை உழவர்களை விட்டுவிடுதல் போன்ற  காரணங்களுக்கு வழிவகுத்தது.


மேலும், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் நீண்டகால சுற்றுச்சூழல் நிலைத்தன்மை தொடர்பான பிரச்சினைகள் குறித்த கவலைகளையும் இது எழுப்பியது.


ஊரக பண்ணை சாராத வேலைவாய்ப்பு அதிகரிப்பு


இந்தியாவில் பசுமைப் புரட்சி பற்றி மற்றொரு விவாதம் உள்ளது. அது வேளாண்மைக்கு வெளியே கிராமப்புற வேலைகளின் வளர்ச்சிக்கு உதவியதா என்பது தான். பண்ணை உற்பத்தித்திறன் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம், பசுமைப் புரட்சி கிராமங்களில் அதிக செலவினங்களுக்கு வழிவகுத்தது என்பது பொதுவான நம்பிக்கை. இது, சிறு, உழைப்பு மிகுந்த கிராமப்புற வணிகங்களால் உருவாக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவையை அதிகரித்தது.


இந்த செலவின அதிகரிப்பு பதப்படுத்தப்பட்ட பண்ணை பொருட்கள் போன்ற பொருட்களுக்கான தேவையையும் அதிகரித்தது. பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் இந்த வகையான வளர்ச்சியால் பயனடைந்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன. இருப்பினும், அதிகரித்து வரும் விவசாய செலவுகள் மற்றும் பசுமைப் புரட்சி நன்மைகளை சமமற்ற முறையில் பகிர்ந்து கொள்வது பல ஊரக குடும்பங்களை வாழ்க்கைக்காக வேளாண் அல்லாத வேலைகளைத் தேட கட்டாயப்படுத்தியது என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.


வேளாண்மையில் ஏற்படும் நெருக்கடி காரணமாக கிராமப்புற பண்ணை சாராத வேலைகள் பெரும்பாலும் வளர்கின்றன என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். கிராமப்புற பண்ணை சாராத வேலைகள் வளர்ந்து வரும் விதம் இன்னும் விவாதத்திற்குரியது. ஆனால், கூலித் தொழிலாளர்கள், உரங்கள் மற்றும் இயந்திரங்கள் போன்றவற்றின் விலை அதிகரித்து வருவதால், வேளாண்மையைத் தொடர பல விவசாயிகள் இப்போது அதிக கடன்களை வாங்குகிறார்கள் என்பதற்கான தெளிவான சான்றுகள் உள்ளன.


தற்போதைய, ஊரக பிரச்சனை குறித்த பெரிய கேள்வி என்னவென்றால், வேளாண் துறையில் வளர்ச்சி இருந்தபோதிலும், கிராமப்புற தொழிலாளர்கள் போதுமான வேலைவாய்ப்பைக் கண்டறிய போராடுகின்றனர். கடன் அணுகலை எளிதாக்குதல், நேரடி வரிகளைக் குறைத்தல் (பெருநிறுவன வரிகள் போன்றவை), மற்றும் வணிகம் செய்வதற்கான எளிமையை ஊக்குவித்தல் போன்ற விநியோக  கொள்கைகள் முக்கியமானவையாக இருந்தாலும், அவை வேலை உருவாக்கம் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பின் தரம் போன்ற அடிப்படைக் கவலைகளை நிவர்த்தி செய்வதில் குறைவாகவே உள்ளன.


உதாரணமாக, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் வேலைவாய்ப்புக்கான சட்டப்பூர்வ உரிமையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், செலவு வரம்பு இந்தத் திட்டத்தின் தேவை-உந்துதல் தன்மையை புறக்கணிக்கிறது. குறிப்பாக, நீர்ப்பாசனம், சேமிப்பு மற்றும் காலநிலை-எதிர்ப்பு வேளாண் நடைமுறைகள் போன்ற பகுதிகளில் வேளாண்மையில் பொது முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும்.  மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் மற்றும் வேளாண்மை இரண்டும் கோவிட்-19 பொது முடக்கத்தின் போது, மக்கள் உயிர்வாழ உதவியது. எனவே எதிர்கால கொள்கைகள் இதை மனதில் கொள்ள வேண்டும்.



Original article:

Share:

உற்பத்தித்திறன் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு முறைப்படுத்தலை பின்பற்றவும் -இர்ஃபான் அஹ்மத் சோஃபி

 இந்தியாவின் உற்பத்தித் துறையில் ஒப்பந்த வேலைவாய்ப்பு (Contractualisation) என்பது உண்மையான தொழிலாளர் நெகிழ்வுத்தன்மை (labour flexibility) அல்லது திறமையான தொழிலாளர் தேவைப்படுவதை விட பணத்தைச் சேமிப்பதைப் பற்றியது.


கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவின் முறையான உற்பத்தித் துறை அதன் வேலைவாய்ப்பு கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான மாற்றத்தைக் கண்டுள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் தொழில் ஆய்வுகளின் (Annual Surveys of Industries (ASI)) படி, உற்பத்தித் தொழிலாளர்களில் ஒப்பந்த தொழிலாளர்களின் பங்கு 1999-2000இல் 20%இலிருந்து 2022-23இல் 40.7%ஆக இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இது அனைத்து தொழில்களிலும் காணப்படுகிறது. முறையான துறையில் முறைசாரா வேலைவாய்ப்பு (informalisation) அதிகரிக்கும் போக்கு கல்வி மற்றும் கொள்கை வட்டங்களில் பரவலாக எழுதப்பட்டுள்ளது. முறையான வேலைகள் எவ்வாறு முறைசாரா வேலைகளைப் போலவே மாறி வருகின்றன என்பது குறித்து நிபுணர்கள் அடிக்கடி பேசியுள்ளனர். 1999–2000ஆம் ஆண்டு முதல் 2018–19ஆம் ஆண்டு வரையிலான தொழிற்சாலை தரவுகளைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, தவறான வழியில் அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது உற்பத்தித்திறனைக் குறைக்கும் என்பதைக் காட்டுகிறது. இது நீண்டகால வளர்ச்சிக்கு முறையான வேலைகளை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகிறது.


ஒப்பந்த தொழிலாளர்களின் நிலை


ஒப்பந்த வேலைவாய்ப்பை நோக்கிய மாற்றம் பெரும்பாலும் செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையை (operational flexibility) மேம்படுத்தவும், தேவைப்படும்போது சிறப்பு திறன்களை அணுகும் ஒரு உத்தியாக பார்க்கப்படுகிறது. எனினும், ஒப்பந்த தொழிலாளர்களின் நிலையைப் பரிசீலிக்கும்போது, உண்மையான தொழிலாளர் நெகிழ்வுத்தன்மை அல்லது திறன்களை விட செலவு தவிர்ப்பு தான் அவர்களின் அதிகரித்துவரும் சூழல் முக்கிய காரணியாக உள்ளது என்பது தெரிய வருகிறது. பொதுவாக மூன்றாம் தரப்பு ஒப்பந்தக்காரர்கள் மூலம் பணியமர்த்தப்படும் ஒப்பந்த தொழிலாளர்கள், பணிநீக்கங்கள், வேலை குறைப்புகள் மற்றும் தன்னிச்சையான பணிநீக்கங்களுக்கு எதிரான பாதுகாப்புகளை நிர்வகிக்கும் தொழில்துறையின் 1947ஆம் ஆண்டு பிரச்சனைகள்(Industrial Disputes Act 1947) சட்டத்தின், கீழ் முக்கிய தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, அவர்களின் பேரம் பேசும் சக்தி பலவீனமாக உள்ளது. இது அவர்களை சுரண்டலுக்கு (exploitation) ஆளாக்குகிறது.


2018-19ஆம் ஆண்டில், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழக்கமான தொழிலாளர்களை விட 14.47% குறைவான ஊதியம் வழங்கப்பட்டது. பெரிய நிறுவனங்களில் (31%), அதைத் தொடர்ந்து நடுத்தர (23%) மற்றும் சிறிய நிறுவனங்களில் (12%) ஊதிய இடைவெளி அதிகமாக இருந்தது. மேலும், ஒப்பந்த மற்றும் வழக்கமான தொழிலாளர்களுக்கான மொத்த தொழிலாளர் செலவில் வேறுபாட்டைக் கருத்தில் கொண்டால், ஏற்றத்தாழ்வுகள் இன்னும் நிலவிவருகின்றன. ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சராசரி தினசரி தொழிலாளர் செலவு வழக்கமான தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது 24% குறைவாக இருந்தது. குறைந்தது ஒன்பது தொழில்களில், நிறுவனங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழக்கமான தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தில் பாதிக்கும் குறைவாகவே ஊதியம் வழங்கின. சில சந்தர்ப்பங்களில், வித்தியாசம் 78% முதல் 85% வரை இருந்தது, இது ஒப்பந்தத் தொழிலாளர்கள் எவ்வளவு மோசமாக சுரண்டப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.


உற்பத்தித்திறனில் பாதிப்பு


சந்தேகமின்றி, ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலும் சிறப்புத் திறன்களைக் கொண்டுள்ளனர் மற்றும் நிறுவனங்கள் சந்தை மாற்றங்களுக்கு விரைவாக மாற்றியமைக்க உதவுகிறார்கள். ஆனால். அவர்கள் வெளிப்புற ஒப்பந்தக்காரர்கள் மூலம் குறுகிய காலத்திற்கு பணியமர்த்தப்படும்போது, பிரச்சினைகள் ஏற்படலாம். நிறுவனமும் ஒப்பந்ததாரரும் ஒரே நீண்டகால இலக்குகளைப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கலாம். இது சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். இது தொழிலாளர்கள் தங்கள் முழு வேலையைச் செய்யாமல் இருக்கும் நிலை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும், குறுகிய கால ஒப்பந்தங்கள் தொழிலாளர்களை அடிக்கடி வேலையை விட்டு வெளியேறச் செய்து, உறுதியற்ற தன்மையை உருவாக்குகின்றன. இது நிறுவனங்கள் பயிற்சி மற்றும் புதிய யோசனைகளில் முதலீடு செய்வதைத் தடுக்கிறது. இது காலப்போக்கில் உற்பத்தித்திறனைப் பாதிக்கிறது.


ஒப்பந்த உழைப்பு மிகுந்த தொழிலாளர்களை (contract labour-intensive (CLI))) பெரிதும் நம்பியுள்ள வணிகங்கள், வழக்கமான தொழிலாளர்களைப் (regular labour-intensive (RLI)) பயன்படுத்துபவர்களுடன் ஒப்பிடும்போது சராசரியாக 31% குறைவான தொழிலாளர் உற்பத்தித்திறனைக் கொண்டுள்ளன என்பதை எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது. 100க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட சிறிய வணிகங்களில் (36% குறைவு) மற்றும் 100-300 தொழிலாளர்களைக் கொண்ட நடுத்தர வணிகங்களில் (23% குறைவு) இந்த உற்பத்தித்திறன் இடைவெளி அதிகமாக உள்ளது. தொழிலாளர்-தீவிர நிறுவனங்களில் CLI நிறுவனங்களுக்கான சாதகமற்ற உற்பத்தித்திறன் இடைவெளி 42% ஆக மேலும் விரிவடைகிறது.  தொழிலாளர் உற்பத்தித்திறனை பாதிக்கக்கூடிய நிறுவனம் மற்றும் மாநிலத்துடன் தொடர்புடைய காரணிகளைக் கருத்தில் கொண்டாலும் இந்த இடைவெளி பெரியதாக உள்ளது.


ஒப்பீட்டளவில் சிறிய, நடுத்தர மற்றும் தொழிலாளர் அதிகமுள்ள CLI நிறுவனங்களில் காணப்படும் எதிர்மறை உற்பத்தித்திறன் வேறுபாடுகள், செலவுக் குறைப்பு நடவடிக்கையாக அல்லது விதிமுறைகளைத் தவிர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கான அதிக நாட்டத்திற்குக் காரணமாக இருக்கலாம். இவை இறுதியில் நீண்ட காலத்தில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் நடைமுறைகளாகும்.


இருப்பினும், உயர் திறன் கொண்ட CLI நிறுவனங்களில் தொழிலாளர் உற்பத்தித்திறன் அவர்களின் குறைந்த திறன் கொண்ட அமைப்புகளுடன் ஒப்பிடும்போது 5% அதிகமாக இருந்தது. பெரிய உயர் திறன் CLI நிறுவனங்களில் உற்பத்தித்திறன் நன்மை கணிசமாக 20% ஆக அதிகரித்தது. இதேபோல், பெரிய அளவிலான மூலதன அதிகமுள்ள (capital-intensive) CLI நிறுவனங்கள் தொழிலாளர் உற்பத்தித்திறனில் 17% ஆதாயத்தைப் பதிவு செய்தன. இருப்பினும், இத்தகைய நிறுவனங்கள் மொத்த முறையான உற்பத்தியில் சுமார் 20% மட்டுமே உள்ளன. மீதமுள்ள 80% நிறுவனங்கள் ஒப்பந்த வேலைவாய்ப்பால் மோசமாகப் பாதிக்கப்பட்டன.


கொள்கை பரிந்துரைகள்


2020ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு புதிய தொழிலாளர் சட்டத்தை இயற்றியது. இது பணியமர்த்தல் மற்றும் பணிநீக்கம் செய்வதில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் சட்டம், நிறுவனங்கள் வெளிப்புற ஒப்பந்ததாரர்களைப் பயன்படுத்தாமல், நிலையான கால ஒப்பந்தங்களில் தற்காலிக தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்த அனுமதிக்கிறது. இருப்பினும் அடிப்படை சலுகைகளை கோருவதன் மூலம் இந்தத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் இது முயற்சிக்கிறது. ஆனால், இந்தச் சட்டம் இன்னும் முழுமையாகப் பயன்பாட்டில் இல்லாததால், தற்காலிக தொழிலாளர்களை எளிதாக பணியமர்த்துவது முறையான நிறுவனங்களில் அதிக முறைசாரா வேலைகளுக்கும், வேலைத் தரத்திற்கும் வழிவகுக்கும் என்று தொழிலாளர் சங்கங்கள் கவலைப்படுகின்றன.


சமூக பாதுகாப்பு பங்களிப்புகளில் சலுகைகளை வழங்குவதன் மூலமோ அல்லது அரசாங்க திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு மானியத்துடன் அணுகலை வழங்குவதன் மூலமோ நிறுவனங்களை நியாயமான நீண்ட நிலையான கால ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ள கொள்கை வகுப்பாளர்கள் ஊக்குவிக்கலாம். இது பணியாளர்களின் நிலைத்தன்மையை மேம்படுத்தி திறன் குவிப்பை ஆதரிக்கும். அதே நேரத்தில் ஆபத்தான வேலைவாய்ப்பின் சாத்தியமான எழுச்சி குறித்த தொழிலாளர் சங்கங்களின் அச்சங்களையும் தணிக்கும்.


இதேபோல், 2016ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு பணியாளர்களின் ஓய்வூதிய திட்டம் (Employees' Pension Scheme (EPS)) மற்றும் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (Employees' Provident Fund (EPF)) முதலாளியின் பங்களிப்பை (12%) ஏற்றுக்கொள்வதன் மூலம் முறையான துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்க பிரதம மந்திரி ரோஸ்கார் ப்ரோத்சாஹன் யோஜானாவை (Pradhan Mantri Rojgar Protsahan Yojana (PMRPY)) செயல்படுத்தியது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த போதிலும், இது மார்ச் 2022இல் நிறுத்தப்பட்டது. PMRPY திட்டத்தின் கீழ் ஆதரவை மீண்டும் தொடங்கி விரிவுபடுத்துவது ஒப்பந்த தொழிலாளர்களின் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் உற்பத்தித் துறையில் முறையான வேலைவாய்ப்பை ஊக்குவிக்கவும் உதவும்.



Original article:

Share:

தடைபட்ட வளர்ச்சி: பொருளாதார செயல்பாடு, காலநிலை தொடர்பான நிகழ்வுகள் குறித்து…

 தொழில்துறை வளர்ச்சி இன்னும் உள்கட்டமைப்புக்கான அரசாங்க செலவினங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.


நாட்டின் மாதாந்திர பொருட்கள் உற்பத்தியின் அளவீடான தொழில்துறை உற்பத்தி குறியீடு (Index of Industrial Production (IIP)), ஜூன் மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி 10 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்து, வெறும் 1.5% மட்டுமே உயர்ந்துள்ளதாக தெரிகிறது. சுரங்கத் தொழில் 8.7% குறைந்து மின்சார உற்பத்தி 2.6% குறைந்ததே இதற்குக் காரணமாகும். தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால், ஆரம்ப மற்றும் சீரற்ற பருவமழையால் ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தின் முக்கிய சுரங்கப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது பொருளாதாரத்தின் முக்கிய பகுதியாக இருக்கும் சுரங்கப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியது.  


ஜூன் 1 முதல் ஜூலை 12 வரை ஜார்க்கண்டில் வழக்கத்தை விட அதிக மழை பெய்ததாகவும், ஆனால் ஐந்து மாவட்டங்கள் மழை பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் ராஞ்சி வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் மூலம் மின்சார உள்கட்டமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலி சிக்கல்களுக்கு ஏற்பட்ட சேதம் ஜூன் மாதத்தில் தொழில்துறை வளர்ச்சியை 3.9% ஆகக் குறைத்திருக்கலாம். இது கடந்த ஆண்டு 3.5% ஆக இருந்தது. 

இது மின்சாரத் தேவையையும் குறைத்தது. சுரங்கம் மற்றும் மின்சாரம் தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (Industrial Production Index (IIP)) 22.3% உருவாக்கினாலும், மீதமுள்ளவை உற்பத்தி நடவடிக்கைகளுக்காகப் பிரிக்கப்படுகின்றன. மூலதனம் (3.5%), இடைநிலை (5.5%) மற்றும் உள்கட்டமைப்பு (7.2%) பொருட்கள் உற்பத்தியில் வலுவான வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சியின் பெரும்பகுதி அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு செலவினங்களைச் சார்ந்து இருப்பதைக் குறிக்கிறன.


இந்தியாவில் நிறுவன ரீதியாகவும் பொது பொருளாதார விவாதத்திலும், பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் இடையூறுகளை காலநிலை தொடர்பான நிகழ்வுகளுடன், குறிப்பாக தொழில்துறை உற்பத்தி குறியீடு அல்லது உள்நாட்டு உற்பத்தி தரவு வெளியீடுகள் போன்ற அதிகாரப்பூர்வ அறிக்கைளில் வெளிப்படையாக தொடர்புபடுத்துவதில் தயக்கம் உள்ளது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை 'அதிக அடிப்படை விளைவுகள்; விநியோகச் சங்கிலி தடைகள்; உள்ளீட்டு செலவு ஏற்ற இறக்கங்கள்; உலகளாவிய தேவை மென்மையாக்கல் மற்றும் உள்நாட்டு நுகர்வு சுருக்கம்' ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்துறை மற்றும் பொருளாதார குறைவான செயல்திறனை வடிவமைக்க முனைகின்றன. 


சுரங்கப் பகுதிகளில் ஏற்படும் வெள்ளம் போன்ற காலநிலை தொடர்பான பிரச்சினைகள், தொழில்துறை உற்பத்தி குறியீடு அல்லது தேசிய பொருளாதார தரவு போன்ற அறிக்கைகளில் அரிதாகவே குறிப்பிடப்படுகின்றன. இந்தியாவில் உள்ள பொருளாதார தரவு நிறுவனங்கள், காலநிலை அபாய கட்டமைப்புகளை பெரிய பொருளாதார அறிக்கையுடன் ஒருங்கிணைப்பதில் மெதுவாக செயல்படுகின்றன. ஐரோப்பிய மத்திய வங்கி அல்லது இங்கிலாந்து வங்கி போன்ற நிறுவனங்கள் காலநிலை அபாயத்தை வெளியீடு மற்றும் நிதி நிலைத்தன்மையுடன் ஒப்பிடத் தொடங்கியுள்ளன. 


சுரங்கங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு போன்ற நிகழ்வுகளை காலநிலை மாற்றத்துடன் இணைப்பது சிக்கலானது மற்றும் விரிவான அறிவியல் பகுப்பாய்வு தேவைப்படுகிறது என்பது உண்மைதான். பொருளாதாரத் தரவுகள் அரசியல் ரீதியாகத் தோன்றக்கூடும் என்று கவலைப்படுவதால் கொள்கை வகுப்பாளர்கள் பெரும்பாலும் இதைத் தவிர்க்கிறார்கள். 


ரிசர்வ் வங்கி அதன் நிதி அறிக்கைகளில் காலநிலை அபாயங்களைக் குறிப்பிடத் தொடங்கியுள்ளது. ஆனால், தொழில்துறை உற்பத்தியைக் கண்காணிக்கும் தொழில்துறை உற்பத்தி குறியீடு போன்ற அறிக்கைகளில் இந்தக் கவலைகள் இன்னும் குறிப்பிடப்படவில்லை. இந்தியா தனது பொருளாதார நடவடிக்கைகளுடன் காலநிலை பண்புகளை ஒருங்கிணைக்க ஒரு முறையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் தற்போது உருவாகி உள்ளது.



Original article:

Share:

கிராமப்புற வளர்ச்சியை மாற்றக்கூடிய ஓர் உத்தி -ஸ்டெல்லா ஜார்ஜ், கெசியா யோன்சோன், சமித் மித்ரா

 பிந்தைய காலத்தில், ராஜஸ்தானின் பன்சூரில் விவசாயியான ரீனாவுக்கு பல தசாப்தங்களாக நிகழாத ஒரு அனுபவம் கிடைத்துள்ளது. தனது பாசன பம்பை இயக்க நம்பமுடியாத மின்சாரத்திற்காக காத்திருக்காமல், இப்போது இரவில் நிம்மதியாகத் தூங்குகிறார். அவரது வயல்கள் இப்போது பகலில் சூரிய தகடுகள் இணைக்கப்பட்ட சூரிய சக்தியைப் பயன்படுத்தி பாய்ச்சப்படுகின்றன. மேலும், அவருக்கு இனி விலையுயர்ந்த டீசல் பம்ப் தேவையில்லை. இதன் விளைவாக, அவரது வருமானம் 60% வரை அதிகரித்துள்ளது. மேலும், முதல் முறையாக, அவர் தனது விவசாயத்தின் முழு கட்டுப்பாட்டையும் உணர்கிறார்.


ரினாவின் கதை, சூரிய விளக்குகள் போன்ற அடிப்படை சூரிய கருவிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சுத்தமான ஆற்றல் உள்ளூர் அமைப்புகளுடன் இணைக்கப்படும்போது இந்தியாவின் கிராமப்புறங்கள் எவ்வாறு பயனடைய முடியும் என்பதைக் காட்டுகிறது. இந்தியா அதன் ஆற்றல் மாற்றத்தில் ஒரு பெரிய கட்டத்தை எட்டியுள்ளது. அதன் மொத்த மின்சார திறனில் பாதி இப்போது புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து வருகிறது என்று புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த முன்னேற்றம் சீரற்றது.  அதே நேரத்தில், இந்த ஆண்டு இந்தியாவும் ஒரு பில்லியன் டன்களுக்கு மேல் நிலக்கரியை உற்பத்தி செய்ததாக நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது, அதில் 88% மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்டது.


புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சேர்ப்பது மட்டுமல்லாமல் இதில் உள்ள  பெரிய சவால் என்னவென்றால், மாற்றம் நியாயமானதாக இருப்பதையும், சுமார் 65% மக்கள் வசிக்கும் கிராமப்புற இந்தியா பின்தங்கியிருக்காமல் இருப்பதையும் உறுதி செய்வதாகும். இன்றும்கூட, பல கிராமப்புற வீடுகளில் நம்பகத்தன்மையற்ற மின்சாரம் உள்ளது. மின்சாரம் குறைவாக இருப்பதால் விவசாயிகள் பெரும்பாலும் இரவில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டியிருக்கும். 


மேலும், இறுதியில் டீசல் பம்புகளைப் பயன்படுத்துகிறார்கள். இது சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இது அவர்களின் செலவுகளை அதிகரிக்கிறது மற்றும் உற்பத்தித்திறனைக் குறைக்கிறது. காலநிலை மாற்றத்திற்கு அவர்களை மேலும் பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது. மோசமான மின்சாரம் குழந்தைகளின் கல்வியையும் பாதிக்கிறது. இது பெண்களின் பணிச்சுமையை அதிகரிக்கிறது மற்றும் பொது சேவைகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகிறது.


இருப்பினும், நன்கு திட்டமிடப்பட்ட கிராமப்புற சூரிய சக்தி திட்டம் பெரிய முன்னேற்றங்களைக் கொண்டுவரும், குறிப்பாக ஏழ்மையான சமூகங்களுக்கு. உதாரணமாக, டீசலில் இருந்து சூரிய சக்தி பம்புகளுக்கு மாறுவது சிறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன செலவுகளைக் குறைக்கலாம். அவர்களை நிதி ரீதியாக மேலும் நிலையானதாக மாற்றலாம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஆதரிக்கலாம். சேமிக்கப்படும் பணத்தை விவசாயத் தேவைகள், கல்வி அல்லது பிற வீட்டுச் செலவுகளுக்குப் பயன்படுத்தலாம். 



இது மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு உதவும். ஒட்டுமொத்த நாட்டிற்கும், குறைந்த புதைபடிவ எரிபொருளைப் பயன்படுத்துவது இறக்குமதி செலவுகளைக் குறைக்கும் மற்றும் 2030-ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளையும் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இலக்கையும் அடைய உதவும்.


ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் நல்ல கொள்கைகள், சரியான உள்கட்டமைப்பு மற்றும் சமூக ஆதரவு இணைந்து செயல்பட்டால் என்ன நடக்கும் என்பதைக் காட்டுகின்றன. ராஜஸ்தான் நிறைய சூரிய ஒளி மற்றும் திறந்தவெளி நிலத்தைக் கொண்டுள்ளது. இந்த ஆற்றலைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அது ஒரு முழுமையான அமைப்பை உருவாக்கியது. அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களின் உதவியுடன், சூரிய சக்தி கிராமப்புற வாழ்க்கையின் வழக்கமான பகுதியாக மாறிவிட்டது.


2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சம்போதி நடத்திய ஆராய்ச்சி ஆய்வில், மின்கட்டமைப்போடு இணைக்கப்பட்ட சூரிய சக்தி, பண்ணைகள், வீடுகள் மற்றும் சமூகங்கள் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ரினா போன்ற விவசாயிகள் இப்போது வழக்கமான நீர்ப்பாசனத்தைக் கொண்டுள்ளனர். பெண்கள் சலவை இயந்திரங்கள் மற்றும் மிக்சர்கள் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்துகின்றனர். 


இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது மற்றும் கற்றல் அல்லது பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது. குழந்தைகள் குறைந்த மின்வெட்டுடன் நீண்டநேரம் படிக்கலாம். மேலும், சூரிய மின் நிலையங்கள் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளில் உள்ளூர் வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இந்த மாற்றங்கள் பொருளாதாரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதோடு குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்குள் சுதந்திரத்தையும் அதிகரிக்கின்றன.


ராஜஸ்தான் கிராமப்புற சூரிய சக்தி வளர்ச்சியின் ஒரு பெரிய தேசிய போக்கின் ஒரு பகுதியாகும். குஜராத் மற்றொரு உதாரணம். வீடுகள் மற்றும் பண்ணைகளுக்கு மின் இணைப்புகளைப் பிரிப்பது போன்ற வலுவான சீர்திருத்தங்களை இது செய்தது. 

இது நிலையான மின்சாரத்தை வழங்க உதவியது மற்றும் சூர்யசக்தி கிசான் யோஜனாவைத் தொடங்குவதை சாத்தியமாக்கியது. இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் சூரிய சக்தி பேனல்களை அமைத்து கூடுதல் மின்சாரத்தை மின்கட்டமைப்பிற்கு விற்கலாம். இது அவர்களின் வருமானத்தை அதிகரிக்கிறது மற்றும் கிராமப்புறங்களில் நிலையான ஆற்றலை ஆதரிக்கிறது.


பல்வேறு மாநிலங்கள் தங்கள் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு உள்ளூர் தீர்வுகளை உருவாக்குகின்றன. மகாராஷ்டிராவில், வாஹினி யோஜனா, வார்தாவில் உள்ள தேஜஸ்வினி சூரிய ஆற்றல் மகளிர் தொழில்துறை கூட்டுறவு சங்கம் போன்ற பெண்கள் தலைமையிலான சூரிய கூட்டுறவுகளை அமைத்து வருகிறது. இந்த கூட்டுறவு நிறுவனங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்வதைவிட அதிகமாக செய்கின்றன. அவை தொழில்முனைவோர் மற்றும் உள்ளூர் எரிசக்தி கட்டுப்பாட்டையும் ஊக்குவிக்கின்றன. 


விவசாயிகள் சீரற்ற மழை மற்றும் நீர் தேக்கத்தை சமாளிக்கும் பீகாரில், கலப்பின சூரிய-டீசல் அமைப்புகள் ஒரு நெகிழ்வான எரிசக்தி விருப்பத்தை வழங்குகின்றன. சத்தீஸ்கர் தொலைதூர பழங்குடிப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு மின்சாரம் வழங்க சூரிய சக்தியைப் பயன்படுத்துகிறது.


இந்த மாறுபட்ட மாதிரிகள் எதில் ஒத்துப்போகின்றன? இந்த முயற்சிகள் அனைத்தும், புவியியல், சமூக இயக்கவியல், ஆளுமை அமைப்புகள் மற்றும் நிதி மாதிரிகள் போன்ற உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப மாற்றியமைப்பதே அவற்றை பயனுள்ளதாக்குகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன. சூரிய வன்பொருளை டிஜிட்டல் கருவிகள், பயிற்சி மற்றும் புத்திசாலித்தனமான நிதியுதவியுடன் இணைப்பதன் மூலம், இந்த தீர்வுகள் அளவிடக்கூடியதாகவும் நிலைத்து நிற்கக்கூடியதாகவும் மாறுகின்றன.


இருப்பினும், ஒரு ஆபத்து உள்ளது. கிராமப்புற சூரிய திட்டங்கள் பெரிய முறையைக் கருத்தில் கொள்ளாமல் உபகரணங்களை நிறுவுவதில் மட்டுமே கவனம் செலுத்தினால், உண்மையான வாய்ப்பு இழக்கப்படும். சூரிய பேனல்கள் மற்றும் பம்புகள் வெறும் ஆரம்பம். உண்மையான தாக்கம் உள்ளடக்கிய, நெகிழ்வான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட அமைப்புகளை உருவாக்குவதிலிருந்து வருகிறது.


பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மகாபியான் (Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan (PM KUSUM)) போன்ற பெரிய அரசு திட்டங்களை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள். இந்தத் திட்டங்கள் மத்திய மானியங்களை மட்டும் வழங்கக்கூடாது - அவை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (MNRE) பரவலாக்கப்பட்ட சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கான இலக்கிற்கு இணங்க, விவசாயிகள், கிராம சபைகள் மற்றும் கூட்டுறவுகளால் உள்ளூர் கட்டுப்பாடு மற்றும் முடிவெடுப்பதை ஆதரிக்க வேண்டும்.


முக்கிய படிகளில் வெவ்வேறு விவசாயப் பகுதிகளுக்கு ஏற்ப செயல்படுத்தலை வடிவமைத்தல், மின் விநியோக நிறுவனங்களுக்கு (DISCOMs) சிறந்த கருவிகளை வழங்குதல் மற்றும் சிறு விவசாயிகளுக்கு கலப்பு நிதி விருப்பங்களை வழங்குதல் ஆகியவை அடங்கும். சூரிய கூட்டுறவு, பகிரப்பட்ட எரிசக்தி அமைப்புகள் மற்றும் உள்ளூர் வணிகங்கள் போன்ற மாதிரிகளை ஊக்குவிப்பது நீண்டகால பராமரிப்பு, மற்றும் புதுமைகளை உறுதிப்படுத்த உதவுகிறது.


ஒரு அமைப்புகள் சார்ந்த அணுகுமுறை இந்தியாவின் தேசிய மற்றும் சர்வதேச இலக்குகளை ஆதரிக்கிறது. பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் அதன் உறுதிப்பாடுகள், 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான அதன் நோக்கம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் அதன் கவனம் போன்றவை. ஆனால் மிக முக்கியமாக, சுத்தமான ஆற்றலால் உண்மையில் பயனடைபவர்கள் யார்? எனும் ஒரு முக்கிய கேள்வியை எழுப்புகிறது. 


இந்தியாவின் கிராமங்கள் காலநிலை திட்டங்களிலிருந்து விலக்கப்படக்கூடாது. அவை செயல்முறையின் மையத்தில் இருக்க வேண்டும். இது அதிக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்வது மட்டுமல்ல - அதை யார் பயன்படுத்தலாம், செல்வாக்கு செலுத்தலாம் மற்றும் அதிலிருந்து பயனடையலாம் என்பது பற்றியது.


அதிக சூரிய சக்தியை உருவாக்குவதில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் சுத்தமான ஆற்றலுக்கான நியாயமான அணுகலை உறுதி செய்வதிலும் இந்தியா முன்னிலை வகிக்க வாய்ப்பு உள்ளது. சுத்தமான எரிசக்தி மாற்றத்திலிருந்து ஒவ்வொரு வீடும் விரைவில் பயனடைவதை உறுதிசெய்ய அது இப்போதே செயல்பட வேண்டும்.


ஸ்டெல்லா ஜார்ஜ் (மூத்த ஆராய்ச்சி மேலாளர்), கெசியா யோன்சோன் (சம்போதியில் துணைத் தலைவர், உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை) மற்றும் சமித் மித்ரா (Global Energy Alliance for People and Planet (GEAPP) அமைப்பின் இந்தியாவிற்கான நிர்வாக இயக்குநர் மற்றும் நாட்டு இயக்குநர்) ஆகியோர் இக்கட்டுரையை எழுதியுள்ளனர்.


Original article:

Share:

குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பும் குறிப்பு, நிறுவனங்களுக்கு இடையேயான எல்லைகளை மறுவரையறை செய்ய உதவும். -டாக்டர் அஸ்வனி குமார்

 இந்தியாவின் ஜனநாயகத்தில் அரசின் எந்த ஒரு பகுதியும் ஆதிக்கம் செலுத்தவோ அல்லது தீங்கு விளைவிக்கவோ முடியாத வகையில், நியாயமான அதிகார சமநிலையைப் பராமரிக்க, நாடு உச்ச நீதிமன்றத்தின் கருத்தை நம்பியுள்ளது.


தமிழ்நாடு மாநிலம் vs தமிழ்நாடு ஆளுநர் (The State of Tamil Nadu vs The Governor of Tamil Nadu) (2025) என்ற வழக்கில் அதன் தீர்ப்பு தொடர்பான குடியரசுத்தலைவரின் பரிந்துரையை உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரிக்கும். இந்த வழக்கு அரசியலமைப்பிற்கு மிகவும் முக்கியமானது. மாநிலங்களின் அதிகாரங்கள் தலையிடப்படுகின்றன மற்றும் உயர் அரசியலமைப்பு பாத்திரங்கள் சரியான கவனத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என்ற கவலைகளை இது கையாள்கிறது. இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் கருத்து சட்டப்பூர்வமாக பிணைக்கப்படாது என்றாலும், எதிர்காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதில் இது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.


சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தமிழக ஆளுநர் நீண்டகாலமாக தாமதம் செய்து வருவதாக நீதிமன்றம் விமர்சித்துள்ளது. இந்த தாமதம் அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் நீதிமன்றம் கூறியது. அரசியலமைப்பில் காலக்கெடு தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஆளுநர் நியாயமாகவும் மற்றும் உரிய  நேரத்திற்குள் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் நீதிமன்றம் கூறியது. அரசாங்க விதிகளின் அடிப்படையில், அரசாங்கத்தின் பரிந்துரையைப் பெற்ற மூன்று மாதங்களுக்குள் ஆளுநர் அல்லது குடியரசுத்தலைவர் ஒரு மசோதாவை முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.


அரசியலமைப்பின் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகளை நீதிமன்றம் எவ்வாறு பார்க்கிறது என்பதைப் பொறுத்தவரை நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமானது. இருப்பினும், ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் குறித்து முடிவெடுக்கும்போது குடியரசுத்தலைவர் தனது கருத்தைக் கேட்க வேண்டும் என்றும் நீதிமன்றம் பரிந்துரைத்தது. இந்தப் பகுதி மிகவும் கேள்விக்குரியது, மேலும் நீதிமன்றம் மிகைப்படுத்திச் செல்வதாகக் கருதப்படலாம்.


ஏனெனில், வழக்கில் குடியரசுத்தலைவரின் அதிகாரங்கள் முக்கியப் பிரச்சினையாக இல்லை. மேலும், அரசியலமைப்பில் குடியரசுத்தலைவரின் பங்கு ஆளுநரின் பங்கிலிருந்து வேறுபட்டது. மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரியாக, தவறுகள் நடக்கக்கூடும் என்று கருதாமல், குடியரசுத்தலைவர் பொதுவாக முறையாகச் செயல்படுவார் என்று நம்பப்படுகிறது. குடியரசுத்தலைவரின் முடிவுகள் பெரும்பாலும் தேசியத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் நீதிமன்றங்கள் எளிதில் தீர்ப்பளிக்க முடியாது.


குடியரசுத்தலைவரின் பங்கு சிறப்பு வாய்ந்தது மற்றும் குடியரசுத்தலைவரின் விருப்பப்படி பணியாற்றும் மற்றும் மாநிலத்தில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுநருடன் நேரடியாக ஒப்பிடக்கூடாது. இந்தக் காரணங்களால், குடியரசுத்தலைவர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கவில்லை. மேலும், இந்த முடிவிலிருந்து வரும் அரசியலமைப்பு கேள்விகள் குறித்து நீதிமன்றத்தின் முறையான கருத்தைக் கேட்டுள்ளார்.


அரசியலமைப்பின் கீழ் குடியரசுத்தலைவர் (நிர்வாகி) மற்றும் நீதிமன்றங்கள் (நீதித்துறை) எவ்வளவு அதிகாரத்தைக் கொண்டுள்ளன என்பதுதான் பிரச்சினை. இந்த வழக்கில் நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்து ஏற்கனவே உள்ள முடிவை ரத்து செய்யாது. நீதிமன்றக் கட்டுப்பாடுகளிலிருந்து குடியரசுத்தலைவரை பாதுகாக்க அந்த முடிவை மறுபரிசீலனை செய்யவோ அல்லது புதிய சட்டத்தை ஆதரிக்கவோ இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.


சில முக்கியமான சட்டக் கேள்விகள் குறித்து நீதிமன்றம் தனது கருத்தைத் தெரிவிக்குமாறு இந்தக் குறிப்பு கேட்டுக்கொள்கிறது. உச்சநீதிமன்றத்திற்கு மிகவும் பரந்த அதிகாரங்களை வழங்கும் பிரிவு 142-ன் கீழ் நீதித்துறை (நீதிமன்றங்கள்) குடியரசுத்தலைவர் அல்லது ஆளுநரின் அதிகாரங்களை மாற்றவோ அல்லது எதிராகச் செல்லவோ முடியுமா என்பது ஒரு முக்கிய கேள்வி.


ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்த நீதிமன்றத்தின் காரணம் தெளிவானது மற்றும் தர்க்கரீதியானது என்றாலும், குடியரசுத்தலைவரின் ஒப்புதல் தேவைப்படும் மசோதாக்கள் குறித்த சட்டப் பிரச்சினைகள் குறித்து பிரிவு 143-ன் கீழ் குடியரசுத்தலைவர் நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்ற அதன் பரிந்துரை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.


இந்த பரிந்துரை குடியரசுத்தலைவரின் முடிவெடுக்கும் அதிகாரங்களில் நீதிமன்றத்தின் தேவையற்ற தலையீடு என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். குறிப்பாக சட்ட வழக்கு தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கைகள் பற்றியது என்பதால், தீர்ப்பின் இந்தப் பகுதி குடியரசுத்தலைவரின் வழக்கமான முடிவுகளை எடுப்பதற்கு எதிரானது.


அரசாங்கம் அல்லது பாராளுமன்ற கொள்கை முடிவுகளிலும், இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்துவதிலும் நீதித்துறை தலையிடுவது, அரசியலமைப்பில் அதிகார சமநிலை குறித்த கவலைகளுக்கு வழிவகுத்துள்ளது. இத்தகைய தலையீடு தெளிவாகத் தீய நோக்கங்களுடன் செய்யப்படாவிட்டால், நீதிமன்றங்கள் நிதானத்தைக் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு வழக்கில், அரசியலமைப்பு நிர்வாகத்திற்கு மட்டுமே விட்டுவிடும் நிர்வாக விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் சமீபத்தில் ஆக்ஸ்போர்டு யூனியனில் தனது உரையில் நீதித்துறை அதிகாரத்தை சமநிலையில் பயன்படுத்துவதை ஆதரித்தார்.


நீதிபதிகள், தங்கள் அனுபவம், அறிவு மற்றும் சட்டத்தைப் பற்றிய புரிதலுடன், வெவ்வேறு மதிப்புகளை கவனமாக பரிசீலித்து சமநிலைப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்களின் வேலையின் ஒரு முக்கிய பகுதியாகும். அரசாங்கத்தின் எந்த ஒரு பகுதியும் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறாமல் இருக்க, நியாயமான அதிகார சமநிலையை உறுதிசெய்ய நாடு உச்சநீதிமன்றத்தை நம்பியுள்ளது. அரசியலமைப்பின் பாதுகாவலராக, நீதிமன்றம் நிலையான மற்றும் தார்மீக ரீதியாக நல்ல முடிவுகளை எடுப்பதன் மூலம் இந்த நம்பிக்கையைப் பெற வேண்டும். அரசியல் நோக்கங்களுக்காக சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதையோ அல்லது அரசியல் நீதித்துறையில் செல்வாக்கு செலுத்துவதையோ தடுக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த நீதிபதிகளின்  முடிவுகளில் இன்று நாம் எதிர்கொள்ளும் கடினமான பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வுகளைக் காண்போம் என்று நம்புகிறோம்.


அஸ்வனி குமார் எழுத்தாளர், மூத்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம் மற்றும் முன்னாள் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஆவார்.



Original article:

Share:

இந்திய கானமயில் -ரோஷ்னி யாதவ்

 இந்திய கானமயில் அதன் உயிர்வாழ்விற்கு கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அதன் வாழ்விடங்களில் முக்கியத் தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை முன்மொழிந்துள்ளது. இது இந்த பறவையை மீண்டும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.


தற்போதைய செய்தி:


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களுக்கு உதவ, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, இந்திய கானமயில் (Great Indian Bustard (GIB)) வாழும் பகுதிகளில் மின் இணைப்புகள் பிரச்சினைக்கு ஒரு தீர்வை பரிந்துரைத்துள்ளது. இந்த வாழ்விடங்களில் உள்ள அனைத்து மேல்நிலை மின் இணைப்புகளையும் தடை செய்வதற்கு பதிலாக, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் மின் இணைப்புகளுக்கு சிறப்பு "மின் வழித்தடங்கள்" அமைக்க குழு பரிந்துரைத்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:

1. இந்திய கானமயில் (Great Indian Bustard (GIB)) இந்தியாவில் மட்டுமே காணப்படும் ஒரு பெரிய பறவை. இது இந்தியாவில் உள்ள நான்கு பஸ்டர்ட் இனங்களில் மிகப்பெரியது. மற்ற மூன்று பறவை இனங்கள் மெக்வீன்ஸ் பஸ்டர்ட், லெஸ்ஸர் புளோரிகன் மற்றும் பெங்கால் புளோரிகன் போன்றவை ஆகும்.


2. பறக்கக்கூடிய கனமான பறவைகளில் இந்திய கானமயில்கள் அடங்கும். அவை முக்கியமாக புல்வெளிகளில் வாழ்கின்றன. மேலும், பெரும்பாலான நேரத்தில் தரையில் நடக்கின்றன. தேவைப்படும்போது மட்டுமே பறக்கின்றன.


3. அவை பூச்சிகள், பல்லிகள், புல் விதைகள் மற்றும் இதே போன்ற சிறிய உணவை உண்கின்றன. புல்வெளி எவ்வளவு ஆரோக்கியமானது என்பதை அவற்றின் இருப்பு காட்டுவதால், புல்வெளிகளுக்கு இந்திய கானமயில்கள் முக்கியமான பறவைகளாகக் காணப்படுகின்றன.

4. கடந்த காலத்தில், இந்திய கானமயில்கள் இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதியில் வாழ்ந்தன. ஆனால், இப்போது அவை அந்தப் பகுதியில் 10% மட்டுமே காணப்படுகின்றன. மிகக் குறைவாகவே எஞ்சியிருப்பதால், சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (International Union for Conservation of Nature (IUCN)) அவற்றை "மிகவும் ஆபத்தான நிலையில்" இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. அதாவது அவை காடுகளிலிருந்து மறைந்துவிடும் நிலையில் உள்ளன. இப்போது, அவை பெரும்பாலும் மேற்கு ராஜஸ்தானில் காணப்படுகின்றன.


5. கடந்த 40 ஆண்டுகளில், அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இன்று, 150-க்கும் குறைவான கானமயில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. விவசாயம் காரணமாக புல்வெளி இழப்பு, அவற்றின் முட்டைகளை நாய்கள் போன்ற விலங்குகள் சாப்பிடுவது மற்றும் சமீபத்தில் மற்றும் மின்கம்பிகளில் மோதி கொல்லப்படுவது ஆகியவை அவற்றின் முக்கிய அச்சுறுத்தல்களாகும்.


இந்திய கானமயில் மீட்புத் திட்டம் மற்றும் பாதுகாப்புத் திட்டம்


1. இந்திய கானமயில்களின் எண்ணிக்கையைக் காப்பாற்றுவதற்கான முதல் முயற்சிகள் 2012–2013-ல் தொடங்கியது. அப்போது ராஜஸ்தான் அரசாங்கமும் சுற்றுச்சூழல் அமைச்சகமும் நீண்டகால மீட்புத் திட்டத்தைத் தொடங்கின. ஏழு ஆண்டுகளுக்கு ₹33.85 கோடியைப் பெற்றபிறகு இந்தத் திட்டம் 2016-ல் வலுவடைந்தது. பறவைகளின் இயற்கை வாழ்விடத்தை மேம்படுத்தவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க இனப்பெருக்கத் திட்டத்தைத் தொடங்கவும் இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டது.


2. காடு அல்லாத நோக்கங்களுக்காக காடுகள் அழிக்கப்படும்போது பணத்தை சேகரிக்கும் இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதியத்தால் இந்தத் திட்டம் நிதியளிக்கப்பட்டது. ஜூலை 2018-ல், சுற்றுச்சூழல் அமைச்சகம், ராஜஸ்தான் வனத்துறை மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் (Wildlife Institute of India (WII)) இடையே ஒரு முறையான ஒப்பந்தம் கையெழுத்தானது.


3. இந்த ஒப்பந்தம் ராம்தேவ்ரா மற்றும் சோர்சனில் நீண்டகால இனப்பெருக்க மையங்களை அமைப்பதற்கும், கள ஆராய்ச்சி மூலம் பறவைகளைக் கண்காணிப்பதற்கும், அவற்றின் வாழ்விடத்தை நிர்வகிப்பதற்கும், உள்ளூர் சமூகங்களை பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபடுத்துவதற்கும் வழிவகுத்தது.


4. பாதுகாப்பு திட்டத்தின் அடுத்த முழு கட்டம் 2024 முதல் 2033-ஆம் ஆண்டு வரை நடைபெறும். ஆனால், உடனடி பணிகள் 2029-ஆம் ஆண்டு வரை தொடரும். ராம்தேவ்ரா இனப்பெருக்க மையத்தை மேம்படுத்துவதும், இந்த பாதுகாப்பு மையத்தை மேம்படுத்துவதும் முக்கிய இலக்குகளாகும். செயற்கை கருவூட்டலுக்கான ஒரு புதிய ஆய்வகம் ராம்தேவ்ராவில் அமைக்கப்படும். மேலும், இது 2026-ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நிபுணர் குழுவின் பரிந்துரைகள்


  1. மார்ச் 2024-ல், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்றம், இந்திய கானமயில் (GIB) வாழும் பகுதிகளில் உள்ள அனைத்து மின் கம்பிகளையும் நிலத்தடியில் வைக்க வேண்டும் என்ற அதன் முந்தைய 2021-ஆம் ஆண்டு வெளியிட்ட உத்தரவை ரத்து செய்தது. மின் கம்பிகளை புதைப்பது மிகவும் விலை உயர்ந்ததாகவும் தொழில்நுட்ப ரீதியாக கடினமாகவும் இருக்கும் என்ற கவலைகள் காரணமாக இது நடந்தது. அதற்குப் பதிலாக, ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் விரைவான வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில், மின் கம்பிகளால் ஏற்படும் இந்திய கானமயில் இறப்புகளைத் தடுப்பதற்கான வழிகளை பரிந்துரைக்குமாறு நீதிமன்றம் ஒரு நிபுணர் குழுவைக் கேட்டது.


  1. நிபுணர் குழு இப்போது இந்திய கானமயில்களுக்கான பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை விரிவுபடுத்தியுள்ளது. ராஜஸ்தானில், முன்னுரிமை பாதுகாப்பு பகுதி 13,163 சதுர கிலோமீட்டரிலிருந்து 14,013 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. குஜராத்தில், இது 500-லிருந்து 740 சதுர கிலோமீட்டராக உயர்ந்துள்ளது. கானமயில்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக இந்தப் பகுதிகள் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.


  1. பறவைகளுக்கான சிறப்பு இயக்க வழித்தடங்களையும் குழு முன்மொழிந்தது. ராஜஸ்தானில், இந்த வழித்தடம் 5 கிலோமீட்டர் அகலமாக இருக்கும். குஜராத்தில், 1 முதல் 2 கிலோமீட்டர் அகலம் கொண்ட இரண்டு தனித்தனி வழித்தடங்கள் இருக்கும். இருப்பினும், குழுவின் ஒரு உறுப்பினர் இதை ஏற்கவில்லை. சில மின் இணைப்புகளை எந்த மாற்றங்களும் இல்லாமல் இயக்க அனுமதிக்கும் முடிவை எதிர்த்து ஒரு எதிர்ப்புக் குறிப்பைச் சமர்ப்பித்தார்.


  1. மண்டலங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதைப் பொறுத்து வெவ்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை குழு பரிந்துரைத்தது. கானமயில்களின் பகுதிகளில் இருக்கும் மின் இணைப்புகள் அவை எவ்வளவு சக்திவாய்ந்தவை என்பதைப் பொறுத்து கையாளப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தால் முன்னர் அடையாளம் காணப்பட்டபடி, முக்கியமான கானமயில் மண்டலங்களில் உள்ள சில மின் இணைப்புகளை உடனடியாக புதைக்க வேண்டும். 220 kV மின்னழுத்தம் மற்றும் அதற்கு மேற்பட்ட மின்னழுத்தம் கொண்ட மின் இணைப்புகள் ஏதேனும் மாற்றங்கள் தேவையா என்பதை தீர்மானிக்க தனித்தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டும். முன்னுரிமை மண்டலங்களுக்கு வெளியே எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் புதிய மின் இணைப்புகளை சுதந்திரமாக அமைக்கலாம் போன்ற பரிந்துரைகளை வழங்கியது.


  1. குஜராத்தில் இந்திய கானமயில் எண்ணிக்கையை அதிகரிக்க "ஜம்ப் ஸ்டார்ட்" (“jump start”) முறையைப் பயன்படுத்துவது முக்கியப் பாதுகாப்பு யோசனைகளில் ஒன்றாகும். ராஜஸ்தானில் உள்ள பாதுகாப்பு மையங்களில் இருந்து குஞ்சு பொரிக்க கிட்டத்தட்ட தயாராக இருக்கும் முட்டைகளை எடுத்து, குஜராத் காட்டுப்பகுதியில் உள்ள இந்திய கானமயில் பெண் பறவையின் கீழ் அடைகாப்பதற்காக வைப்பது இதில் அடங்கும். குஜராத்தில் மீதமுள்ள கானமயில்களை கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக குறியிடவும் பரிந்துரைக்கப்பட்டது.


உலக இயற்கை பாதுகாப்பு தினம் 2025


1. இந்திய கானமயில் (GIB) இனத்தை பாதுகாப்பது ஏன் முக்கியம் என்பதைப் புரிந்துகொண்ட பிறகு, ஜூலை 28 உலக இயற்கை பாதுகாப்பு தினமாகக் (World Nature Conservation Day) கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே இந்த நாளின் நோக்கம். தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை கவனித்துக்கொள்ள இது நமக்கு நினைவூட்டுகிறது.


2. 2025-ஆம் ஆண்டு உலக இயற்கை பாதுகாப்பு தினத்திற்கான கருப்பொருள் "மக்கள் மற்றும் தாவரங்களை இணைத்தல்: வனவிலங்கு பாதுகாப்பில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை ஆராய்தல்" (“Connecting People and Plants: Exploring Digital Innovation in Wildlife Conservation.”) என்பதாகும்.



Original article:

Share: