தூய்மை இந்தியா திட்டம் (Swachh Bharat Mission) - குஷ்பு குமாரி

 காந்தி ஜெயந்தியின் போது, ​​மகாத்மா காந்தியின் தூய்மையான இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நினைவுகூறும் விதமாக, தொடங்கப்பட்ட இந்தியாவின் முதன்மையான முயற்சிகளில் ஒன்றான தூய்மை இந்தியா திட்டம்  பற்றி மீண்டும் பார்ப்போம்.


தற்போதைய நிலை : 


2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா திட்டம் (Swachh Bharat Mission) தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு தொடங்கப்பட்ட முதல் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த திட்டத்தை அறிவிக்கும் போது, ​​பிரதமர் குறிப்பிட்டதாவது, "தூய்மையான இந்தியா என்பது மகாத்மா காந்தியின் 190-வது பிறந்தநாளில் இந்தியா செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும்." இதன் நோக்கம், சுகாதாரம் மற்றும் நீர் அணுகலை மையமாகக் கொண்ட நிலையான வளர்ச்சி இலக்கு 6 உடன் இணைக்கப்பட்டுள்ளது.


காந்தி ஜெயந்தி அன்று, இந்திய அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான, காந்தியின் தூய்மையான மற்றும் சுகாதாரமான இந்தியா என்ற கனவை நிறைவேற்றி அதை ஜன அந்தோலனாக ”மக்கள் இயக்கமாக” (Jan Andolan) மாற்றுவதற்கான வழியைப் பார்ப்போம்.


முக்கிய அம்சங்கள் :


1. இந்த பணியானது கிராமங்களுக்கான, ‘தூய்மை இந்தியா திட்டம்-கிராமம் (SBM-Grameen)’ எனவும், நகரங்களுக்கு ‘தூய்மை இந்தியா திட்டம்-நகரம் (SBM-Urban)’ எனவும் பிரிக்கப்பட்டது. இது, குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டது. ஸ்வச் பாரத் கோஷ் (நிதி) தொடங்கப்பட்டது. இந்த நோக்கத்திற்காக "தொண்டு பங்களிப்புகள் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதிகளை வழிப்படுத்துவதை எளிதாக்குவதற்காக" தூய்மை இந்தியா கோஷ் (நிதி) தொடங்கப்பட்டது.


2. அக்டோபர் 2, 2019-க்குள் இந்தியாவை “திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாததாக” (Open Defecation-Free (ODF)) ஆக்குவது தூய்மை இந்தியா திட்டத்தின் (SBM) முக்கிய குறிக்கோளாக இருந்தது. இதற்காக கோடிக்கணக்கான வீடுகள் மற்றும் சமூகக் கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும். அமைச்சகத்தின் கூற்றுப்படி, "ஒரு நாளின் எந்த நேரத்திலும், ஒரு நபர்கூட திறந்தவெளியில் மலம் கழிக்கவில்லை என்றால், ஒரு நகரம் / வார்டை ODF நகரம் / ODF வார்டாக அறிவிக்கலாம் / என்று தெரிவித்தது."


3. அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறைகள் இருப்பதை உறுதி செய்வதும், சமூகக் கழிப்பறைகள் (cluster toilets) இருப்பதை உறுதி செய்வதும், பள்ளி மற்றும் அங்கன்வாடி கழிப்பறைகளில் கழிவு மேலாண்மை அமைப்புகள் இருப்பதை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும். திடக்கழிவுகளில் கரிம மற்றும் கனிம பொருட்கள் (சமையலறை கழிவுகள், நெகிழி, உலோகங்கள் போன்றவை) அடங்கும். அதே நேரத்தில், திரவ கழிவு மேலாண்மை என்பது மனித நுகர்வுக்கு ஏற்றதாக இல்லாத கழிவுநீரைக் கையாள்கிறது.


4. தூய்மை இந்தியா திட்டம்-நகர்ப்புறம் (SBM-U) 2019 அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் அனைத்து சட்டப்பூர்வ நகரங்களிலும் அடைய வேண்டிய மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டிருந்தது.


  • ​​100% திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (Open Defecation Free (ODF)) நிலையை அடைதல்,


  • 100% அறிவியல் பூர்வமான திடக்கழிவு மேலாண்மை (Solid Waste Management (SWM)) உறுதி செய்தல்,


  • 'மக்கள் இயக்கம்' (Jan Andolan) மூலம் நடத்தை மாற்றம்


5. 2021-ம் ஆண்டில், இந்த பணியானது ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்தது. அதன்பிறகு, தூய்மை இந்தியா திட்டம்-நகர்ப்புறத்தின் (SBM-U) சாதனைகளைத் தக்கவைக்க அரசாங்கம் ”SBM-நகர்ப்புற 2.0”-ஐ அறிமுகப்படுத்தியது. குப்பையில்லா நகரங்கள், மலக் கசடு, நெகிழிக் கழிவுகள், திறன் மேம்பாடு மற்றும் சாம்பல் நீர் மேலாண்மை ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இந்த பணி 5 ஆண்டுகளுக்கு 1 அக்டோபர் 2021 முதல் அக்டோபர் 1, 2026 வரை நீட்டிக்கப்படுகிறது.


6. நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals (SDG)) 2030-ஐ அடைவதற்காக SBM-Urban-2.0-ன் கீழ் அனைத்து நகரங்களையும் ‘குப்பை இல்லாததாக’ மாற்ற உறுதிபூண்டுள்ளது. இது MoHUA-ஆல் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மூலம் அனைத்து சட்டப்பூர்வ நகரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.


7. எஸ்பிஎம்-கிராமின் முடிவுகளை எட்டியபிறகு, ஜல் சக்தி அமைச்சகம் ஸ்வச் பாரத் மிஷன் – கிராமின் இரண்டாம் கட்டத்தை தொடங்கியது, இது ஒரு மத்திய அரசின் நிதியுதவி திட்டமாகும். இது 2020-21 முதல் 2025-26 வரை மிஷன் முறையில் செயல்படுத்தப்படுகிறது.


8. ஜல் சக்தி அமைச்சகமானது, தூய்மை இந்தியா திட்டம்-கிராமம் (SBM-Grameen) கட்டம்-II ஐ அறிமுகப்படுத்தியது. ”சம்பூர்ன் ஸ்வச்சதா” (முழுமையான தூய்மை) அடைவதே இதன் முக்கியக் குறிக்கோள் ஆகும். அதாவது, திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (ODF) நிலையை நிலைநிறுத்துவதற்கும், 2024-25க்குள் திட மற்றும் திரவக் கழிவுகளை நிர்வகிப்பதற்கும், அனைத்து கிராமங்களையும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாததிலிருந்து (ODF) ODF பிளஸ் பயன்முறைக்கு மாற்றுவதற்கும்" தொடங்கப்பட்டது.


9. SBM(G) இரண்டாம் கட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:


ODF-நிலைத்தன்மை : கிராமங்கள் அவற்றின் ODF நிலையைப் பேணுவதை உறுதி செய்தல்.


திடக்கழிவு மேலாண்மை : கழிவுகளைப் பிரித்து உரமாக்குதல் அமைப்புகளை நிறுவுதல்.


திரவக் கழிவு மேலாண்மை : கழிவுகளை சாம்பல் நீர் மற்றும் மழைநீருக்காக ஊறவைக்கும் குழிகள் மற்றும் சுத்திகரிப்பு அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும்.


காட்சித் தூய்மை : கிராமப்புறங்களின் ஒட்டுமொத்த தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல்.


தூய்மை இந்தியா திட்டத்தின் தாக்கம்


1. தூய்மை இந்தியா திட்டம் (SBM) பற்றிய நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, 2014 மற்றும் 2020-க்கு இடையில், அரசாங்கத்தின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் மற்றும் சிறந்த சுகாதார சேவைகள் ஆண்டுதோறும் சுமார் 60,000 முதல் 70,000 குழந்தை இறப்புகளைத் தடுத்திருக்கலாம்.


2. 2003-ம் ஆண்டில், ஒரு மாவட்டத்தில் சராசரி கழிப்பறை வசதி 40 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தது என்றும், 2020-ம் ஆண்டில், இது 60 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது என்றும் ஆய்வு கூறுகிறது. கழிப்பறைகளை அணுகுவதற்கும் குழந்தை இறப்பு விகிதத்திற்கும் இடையே ஒரு தலைகீழ் தொடர்பை ஏற்படுத்திய ஆய்வில், 30 சதவீத கழிப்பறை வசதி உள்ள மாவட்டங்கள் கூட குழந்தை இறப்பு விகிதத்தை கணிசமான எண்ணிக்கையில் குறைக்க முடிந்தது என்று கூறியது.


3. 2012-ம் ஆண்டில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 1,000 நேரடி பிறப்புகளுக்கு 40 குழந்தை இறப்புகள் இருந்தன. இது 2016-ல் 33 ஆகக் குறைந்து, மேலும் 2019-ல் 30-ஆகக் குறைந்துள்ளது. அதேபோல், 2012-ல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு ஒரு மாவட்டத்திற்கு 1,000 நேரடி பிறப்புகளுக்கு 44-ஆக இருந்தது. 2014-ல் 40-க்கும், 2016-ல் 35-க்கும், 2019-ல் 30-க்கும் கீழாக குறைந்துள்ளது.


4. சுகாதாரத்தின் பொருளாதார நன்மைகள், ஒரு கிராமம் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நிலையை அடைந்தபோது, ​​ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.50,000 மிச்சப்படுத்தியதாக யுனிசெஃப் (UNICEF) ஆய்வு மதிப்பிட்டுள்ளது. குறைக்கப்பட்ட மருத்துவக் கட்டணங்கள், நேரத்தை மிச்சப்படுத்துதல் மற்றும் பிற காரணிகளிலிருந்து இந்த சேமிப்பு மதிப்பிடப்பட்டுள்ளது.


5. அரசியல் தலைமை, பொது நிதி, கூட்டாண்மை மற்றும் மக்கள் பங்கேற்பு ஆகிய நான்கு Ps-களில் உட்பதிந்துள்ள SBM-ன் முக்கிய பாடங்கள், மிகப் பெரிய, மாற்றத்தை ஏற்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களின் வெற்றிக்கு இன்றியமையாதவை என இப்போது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை மற்ற தேசிய பிரச்சாரங்களால் பின்பற்றப்படுகின்றன. மேலும் நைஜீரியா, இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் சமமான கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.


காந்தி - தூய்மைக்கான ஒரு முன்னோடி


1. காந்தியின் பொது மற்றும் தனியார் சுகாதாரம் பற்றிய அக்கறை, தென்னாப்பிரிக்காவில் அவர் கழித்த நாட்களிலிருந்து அவரது சத்தியாக்கிரகப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. காந்தியைப் பொறுத்தவரை, சமூகத்தில் தூய்மைக்கான உந்துதல், சாதியற்ற மற்றும் சுதந்திரமான சமூகத்தை உருவாக்குவதற்கான செயல்முறையின் ஒரு பகுதியாகும்.


2. "ஒவ்வொருவரும் அவரவர் துப்புரவாளர்கள்" (Everyone is his own scavenger) என்று காந்தி கூறினார். தூய்மையை ஒரு தனிப்பட்ட பொறுப்பாக ஆக்குவதன் அவசியம் தீண்டாமையை அகற்றுவதற்கு முக்கியமானது என்ற உண்மையை மீண்டும் வலியுறுத்தினார். மேற்கத்திய நாடுகளின் நாகரிகப் பணி இந்தியர்களுக்குத் தேவை என்ற கருத்தை அகற்றுவதற்கு சுகாதாரம் அவசியமாகக் கருதப்பட்டது என்று அவர் கண்டார்.

சுதந்திரத்தை விட சுகாதாரம் முக்கியமானது.


மகாத்மா காந்தி


3. 1920-களின் முற்பகுதியில் நடந்த ஒத்துழையாமைப் போராட்டத்திற்குப் பிறகு, காந்தியின் இயக்கத்தில் தூய்மைக்கான உந்துதல் வலுவடைந்தது. இந்த நேரத்தில், காந்தியின் சுகாதாரத்திற்கான அழைப்பு இரண்டு தனித்தனி காரணங்களின் ஒரு பகுதியாக மாறியது. ஒன்று சுதந்திரத்திற்கான போராட்டம். மற்றொன்று தீண்டாமையை அகற்றும் முயற்சி ஆகும்.


4. தூய்மைக்கும் சுயாட்சிக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை காந்தி சுட்டிக்காட்டினார். மேற்கத்திய நாடுகளிடமிருந்து நகராட்சி சுகாதாரத்தைக் கற்றுக்கொள்ளுமாறு அவர் இந்தியர்களைக் கேட்டார். இந்தியாவின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப அதை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். "சுத்தமான, துணிச்சலான மக்களால் மட்டுமே சுயாட்சி இருக்க முடியும்" என்று அவர் நம்பினார்.


5.  “தேசிய அல்லது சமூக சுகாதார உணர்வு நம்மிடையே ஒரு நற்பண்பாக இல்லை. நாம் ஒருவகையில் குளிக்கலாம், ஆனால் கிணறு, குளம் அல்லது நதியை, அதன் கரையில் அல்லது அதற்குள் நாம் குளிக்கும்போது அழுக்காக்குவதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இந்தக் குறையை நான் ஒரு பெரிய தீமையாகக் கருதுகிறேன், இது நமது கிராமங்களின் அவமானகரமான நிலைக்கும், புனித நதிகளின் புனித கரைகளுக்கும், சுகாதாரமின்மையால் உருவாகும் நோய்களுக்கும் காரணமாக உள்ளது.”



Original article:

Share:

போர்க்களம், மாற்றம் மற்றும் இந்திய ஆயுதப்படைகள் குறித்து . . . -ஹர்ஷ் வி. பந்த், அங்கித் கே.

 மாறிவரும் போர்க்கள இயக்கவியல் ஒரு தகவமைப்பு ராணுவத்தை (adaptive military) கோருகிறது.


உலகளாவிய போர்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதில் முன்னுதாரண புதிய மாற்றங்களுடன், இந்தியா அனைத்து களங்களிலும் உள்ள எதிரிகளிடமிருந்து கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence (AI)), தானியங்கி (automation), ஆளில்லா விமானங்கள் (drones) மற்றும் மலிவான துல்லியமான ஆயுதங்களின் (low-cost precision weapons) விலையைக் குறைத்துள்ளன. அதே நேரத்தில், அவை செயல்பாட்டு அபாயங்களை (operational risks) அதிகரித்துள்ளன. 

இந்தியா இருமுனை அச்சுறுத்தல் சூழ்நிலையின் பின்னணியில், இந்தியா அதன் கட்டமைப்பு, கோட்பாடு, தொழில்நுட்பம், படையின் அமைப்பு, தொழில்முறை இராணுவக் கல்வி (professional military education (PME)) மற்றும் இராணுவத் தயார்நிலை ஆகியவற்றை மறுவடிவமைத்து வருகிறது. இருப்பினும், கூட்டுறவை உருவாக்குவதற்கான கடந்தகால முயற்சிகள் வரையறுக்கப்பட்ட முடிவுகளை மட்டுமே வழங்கியுள்ளன. சீர்திருத்தங்கள் இப்போது ஆயுதப்படைகளின் செயல்பாட்டுத் தேவைகளுக்குப் (operational needs) பொருந்தக்கூடிய வேகத்திலும் அளவிலும் முன்னேற வேண்டும்.


‘ஒருங்கிணைப்பு’ முதல் ‘கட்டளை’ வரை


கடந்த மாதம் கொல்கத்தாவில் நடந்த ஒருங்கிணைந்த இராணுவத்தளபதிகள் மாநாட்டில் (Combined Commanders Conference), ‘சீர்திருத்தங்களின் ஆண்டு - எதிர்காலத்திற்கான மாற்றம்’ (Year of Reforms – Transformation for the Future) என்ற கருப்பொருளில், சேவைத் தட்டுப்பாட்டிலிருந்து (service silos) ஒருங்கிணைந்த பயிற்சிக் கட்டளைகளுக்குச் (integrated theatre commands) செல்லும் நோக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். 


பாதுகாப்பு அமைச்சகம், 2025-ம் ஆண்டு சேவைகள் அமைப்புகள் (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை) விதிகள்-2025 (Inter-Services Organisations [Command, Control and Discipline] Rules) போன்ற கட்டமைப்பு, நிர்வாக மற்றும் செயல்பாட்டு விஷயங்களை மதிப்பாய்வு செய்வதற்கு முன்னுரிமை அளித்துள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் உண்மையான அளவீடுகளுக்கு எதிராக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். பிரதமர் மோடி கூட்டுறவுக்கு முன்னுரிமை அளித்து ஒரு பத்தாண்டு காலத்திற்குப் பிறகு, இப்போதுதான் இந்திய இராணுவம் கூட்டு தொழில்முறை இராணுவக் கல்வி (PME) நிலையை எட்டியுள்ளது. முன்னேற்றம் மெதுவாக உள்ளது மற்றும் தற்போதைய தேவைகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதை இது காட்டுகிறது.


இதற்கிடையில், பாதுகாப்பு அமைச்சகம் ஏற்கனவே இணையவெளி (cyber), விண்வெளி (space) மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கான முப்படை-சேவை நிலையங்களை, தலைமையக ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் (Headquarters Integrated Defence Staff (HQ IDS)) கீழ் உயர்த்தியுள்ளது. "ருத்ரா" (Rudra) மற்றும் "பைரவ்" (Bhairav) போன்ற புதிய போர் வடிவங்கள் காலாட்படை, பீரங்கி, கவசம், வான் பாதுகாப்பு, பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பாகங்களை ஒன்றிணைக்கின்றன. இந்த நிலையங்கள் கட்டுப்படுத்தப்பட்டவை மற்றும் பணிசார்ந்த போருக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய குழுக்கள் வேகமான எதிர்வினை நேரங்களையும் மேலும் நெகிழ்வான செயல்பாட்டு வரிசைப்படுத்தலையும் செயல்படுத்துகின்றன. குறிப்பாக, சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உணர்திறன் எல்லைகளில் (sensitive borders) இது உள்ளது.


சமீபத்தில், இந்தியா அதன் நிலம் மற்றும் நீர் இரண்டிலும் செயல்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கான கூட்டுக் கோட்பாட்டை (Doctrine for Amphibious Operations) வகைப்படுத்தியது. இந்த ஆவணம் அத்தகைய நடவடிக்கைகளுக்கான கட்டமைப்பை விளக்குகிறது. இது கடல், வான் மற்றும் நிலப் படைகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறது. 


இருப்பினும், உலகெங்கிலும் உள்ள பல இராணுவங்களால் புரிந்து கொள்ளப்பட்ட பயிற்சியானது, இந்திய சூழலில் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. சீனா பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்த பயிற்சிக் கட்டளைகளை (integrated theatre commands) உள்ளடக்கியது. இந்திய இராணுவப்பயிற்சி வடிவமைப்பில் பூர்வீகமாக இருக்க வேண்டும். இது வரை அனைத்து சேவைகளின் கூட்டுத்தன்மையும் சோதிக்கப்படாதபோது இது மிகவும் முக்கியமானது. ஆபரேஷன் சிந்தூர் வலிமையைக் காட்டினாலும், மோதல் பெரும்பாலும் வான்வழியாக இருந்தது மற்றும் அதற்கு முழுமையான கூட்டு அணிதிரட்டல் தேவையில்லை.


போருக்கான கோட்பாடு மற்றும் தொழில்நுட்ப பரிணாமம்


இந்திய ஆயுதப் படைகளின் கூட்டுக் கோட்பாடு-2017 (Joint Doctrine of the Indian Armed Forces) மற்றும் இராணுவத்தின் நிலப் போர் கோட்பாடு-2018 (Army’s Land Warfare Doctrine) ஆகியவை ஒருங்கியக்கம் (synergy) மற்றும் கூட்டுத்தன்மைக்கான (jointness) அடிப்படைகளை அமைக்கின்றன. சமீபத்திய ரன் சம்வத் (போர், மற்றும் போர்ச்சண்டை பற்றிய முதல் முப்படைக் கருத்தரங்கு) போரானது எதிரியை அறியவும், தீர்வைக் குறியிடவும் மற்றும் நிகழ்வை வடிவமைக்கவும் கூடிய எதிர்கால கலப்பின வீரர்களுக்கு (அறிஞர், தொழில்நுட்பம் மற்றும் தகவல் வீரர்கள்) தயார்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாறிவரும் காலங்களில், கோட்பாட்டுப் பரிணாமம், எதிர்காலப் போர்கள் ஆரம்பத்திலிருந்தே பல களங்களாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் வேகமும் தகவல்களும் வழக்கமான துப்பாக்கியின் ஆற்றலைப் போலவே விளைவுகளைத் தீர்மானிக்கும்.


சமீபத்திய கொள்முதல் மிகவும் முக்கியமானது மற்றும் தடையற்ற கூட்டுத்தன்மையை உருவாக்குவதற்கு ஏற்ப உள்ளது. MQ-9B ஆளில்லா விமானங்கள் நிலையான உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு (intelligence, surveillance, and reconnaissance (ISR)) மற்றும் நிலம் மற்றும் கடல் முழுவதும் துல்லியமான தாக்குதலை தீவிரப்படுத்துகின்றன. 


இந்த ஒப்பந்தம் முப்படைகளின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துகிறது. கடற்படையின் ரஃபேல்-எம் ஆர்டர் கேரியர் விமானப் போக்குவரத்தை உறுதிப்படுத்துகிறது மற்றும் கடல்சார் வேலைநிறுத்தம் மற்றும் கடற்படை விமானப் பாதுகாப்பிற்கான புதிய விருப்பங்களைத் திறக்கிறது. ஆகாஷ்டீர், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட, இராணுவ வான் பாதுகாப்பிற்கான தானியங்கி கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வலைப்பின்னல், விமானப்படையின் ஒருங்கிணைந்த விமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புடன் (Integrated Air Command and Control System (IACCS)) ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்த படி நிலையானதாகத் தோன்றலாம், ஆனால் அதிக கூட்டுத்தன்மையை நோக்கிய ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்.


ஒரு நவீனப் படையை உருவாக்குதல்


இராணுவத்தின் ஒருங்கிணைந்த போர்க் குழுக்கள், கவசம், காலாட்படை, பீரங்கிகள், பொறியாளர்கள், ஆயுதங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றைக் கொண்டு 12 முதல் 48 மணி நேரத்திற்குள் வரிசைப்படுத்த வடிவமைக்கப்பட்ட அனைத்து ஆயுதப் படைகளாக "ருத்ரா" என்ற திட்டம் உருவாகி வருகின்றன. கூட்டுப் பயிற்சி, தளவாடங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு ஆற்றல் ஆகியவற்றுடன் செயல்படும் படைப்பிரிவுகளாக மாற்றுவதற்கு உத்வேகம் தேவை. ப்ராலே அரை-பாலிஸ்டிக் ஏவுகணை ஜூலை 2025-ல், நிலத்தை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி-நிலையானது தீவிரமாக வலுப்படுத்துகிறது. 

கடலில், கேரியரை மையமாகக் கொண்ட கடல்சார் நிலை கட்டமைக்கப்படுகிறது. Rafale-M ஆனது வான்வழிப் பிரிவுகளை ஆதரிக்கிறது. அதே நேரத்தில், கடற்படை 15 ஆண்டு திறன் கொண்ட சாலை வரைபடத்தை வான், மேற்பரப்பு மற்றும் ஆளில்லா அமைப்புகளின் வளர்ச்சியை உள்ளடக்கியது.


இந்தியாவின் அடுத்த கட்டம் இராணுவ ஆற்றலின் மையமாக ஒருங்கிணைப்பு மற்றும் கற்றலில் கவனம் செலுத்துவதாகும். இதற்கு பொதுவான தரவு மற்றும் இடைமுகத் தரங்களை அமைக்கும் நிலையான மற்றும் பயனுள்ள கூட்டுத்தன்மையை நிறுவுவதாகும். சேவைகளுக்கு இடையே வேறுபாடுகள் இருந்தபோதிலும், பயிற்சிநிலைக் கட்டளைகள் செயல்படுத்தப்பட வேண்டும். ஒருவேளை ஆரம்பகால ஆணைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட அதிகாரிகள் காலப்போக்கில் மதிப்பிடப்பட்டிருக்கலாம். 


நிபுணத்துவ இராணுவக் கல்வியானது, ஒவ்வொரு களப்பயிற்சியிலும் நிலைநிறுத்தப்ப்பட்ட தொழில்நுட்பவியலாளர்-இராணுத்தளபதிகளின் பணியாளர்களை உயர்த்த வேண்டும். மேலும், பயிற்சிகளில் ஏற்படும் தோல்விகளை நிச்சயமாகத் திருத்தம் செய்ய வேண்டும். அதனை திறம்பட செய்திட, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் தொழில்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, குறியீடு, தரவு, சோதனை மைதானங்கள் மற்றும் விரைவான முன்மாதிரி உருவாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய PME மற்றும் பயிற்சிகளில் பொதுமக்கள்-ராணுவ இணைப்பு இன்றியமையாதது. வலுவான தொழில்துறை வளாக மேலாண்மை அடித்தளம், வேகமான மற்றும் மீண்டும் மீண்டும் நடத்தப்படும் சோதனைகள் மூலம் இந்த சுழற்சியுடன் இணைக்கப்பட வேண்டும், இதில் வெற்றிகரமானவை தக்கவைக்கப்பட்டு, காலாவதியானவை நீக்கப்பட வேண்டும். மாற்றம் போர்க்களத்தின் இயக்கவியலை மாற்றும்போது, பொருந்தக்கூடிய ராணுவம் மட்டுமே முன்னணியை மாற்றும்.


ஹர்ஷ் வி. பந்த், அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கான துணைத் தலைவராக உள்ளார். அங்கித் கே. குஜராத்தின் காந்திநகரில் உள்ள ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகள் உதவிப் பேராசிரியராக உள்ளார்.



Original article:

Share:

மறுவரையறை செய்தல்: இந்தியா, முன்னறிவிப்பு மற்றும் இயற்கை நிகழ்வுகள் குறித்து..

 இயற்கைப் பேரிடர்களுக்கு சிறப்பாக தயாராக இருக்க இந்தியா வானிலை முன்னறிவிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.


இந்த ஆண்டு இந்தியாவில் வழக்கத்தைவிட 8% அதிக பருவமழை பெய்துள்ளது, இது ஒரு நல்ல செய்தியாகத் தெரிகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் அதிக பயிர்களை பயிரிட்டனர். செப்டம்பர் நடுப்பகுதியில், காரீப் பயிர்களுக்கான மொத்த பரப்பளவு சுமார் 15 லட்சம் ஹெக்டேர் அதிகரித்து, சுமார் 1,110 லட்சம் ஹெக்டேரை எட்டியது. கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 430 லட்சம் ஹெக்டேருடன் ஒப்பிடும்போது, நெல் சாகுபடி 8.45 லட்சம் ஹெக்டேருக்கு மேல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு 438 லட்சம் ஹெக்டேருக்கு மேல் அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள், கரடுமுரடான தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களும் மற்ற பயிர்களைப் போலவே அதிகரித்துள்ளன. செப்டம்பர் மாத இறுதியில், இந்தியாவின் முக்கிய நீர்த்தேக்கங்களில் 163 பில்லியன் கன மீட்டர் (billion cubic metres (BCM)) நீர் இருந்தது. 


இது கடந்த ஆண்டு இதே நேரத்தில் இருந்த 157.8 பில்லியன் கன மீட்டரைவிட அதிகமான அளவாகும். 1 BCM என்பது ட்ரில்லியன் லிட்டர்கள் ஆகும். இருப்பினும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சில மாவட்டங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 


ஆறுகள் நிரம்பி வழிந்தன, பகுதிகளைத் துண்டித்து, பஞ்சாபில் உள்ள முழு கிராமங்களையும் விவசாய நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்கடித்தன. இது புதிதல்ல என்றாலும், இந்த ஆண்டு நகரங்கள் மற்றும் கிராமங்கள் இரண்டிலும் பல நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தினால் பாதிப்புகள் ஏற்பட்டன. நாடு முழுவதும் மண் அரிப்பு (Land erosion) மற்றும் வண்டல் படிவு (siltation) பரவலாக இருந்ததால் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டது.


வடமேற்கு இந்தியா, மத்திய இந்தியா மற்றும் தென் தீபகற்பம் போன்ற பகுதிகளில் பருவகால மழைப்பொழிவு அவற்றின் பருவகால சராசரியைவிட 27%, 15% மற்றும் 10% அதிகமாக இருந்தது. பல சூழல்களில், மாநில அதிகாரிகள் கனமழை பற்றி தெரிவித்தபோது, வானிலை அறிவியல் சொற்களில் மிகவும் குறிப்பிட்ட வரையறையாக இருக்கும் 'மேக வெடிப்பு' (cloudburst) பற்றிய செய்திகள் இருந்தன. தமிழ்நாட்டில் ஒரே ஒரு நிகழ்வில் மட்டுமே இது உண்மையான நிரூபிக்கப்பட்டது. 


தொழில்நுட்ப சொற்கள் சிறிய விவரங்களாகத் தோன்றினாலும், மக்கள் இந்த நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளும் விதத்தைப் பாதிக்கின்றன. ஒரு 'மேக வெடிப்பு' என்பது மிகவும் அரிதான மற்றும் கணிக்க முடியாத நிகழ்வாகத் தோன்றுகிறது. அதன் தாக்கத்தை மட்டுமே தாங்க வேண்டியிருக்கும். மறுபுறம், 'சாதாரண' மழை போன்ற சொற்கள்கூட — அவற்றின் காணக்கூடிய தாக்கம் அடிக்கடி சேதத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும் — ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட ஒன்று (fait accompli) என்ற எண்ணத்தை வெளிப்படுத்த முனைகின்றன. ஏப்ரல் மாதம் முதல், இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) மழைப்பொழிவு 'இயல்பைவிட அதிகமாக' (above normal) இருக்கும் என்று கூறி வருகிறது - இது வழக்கமான 87 செ.மீ.யைவிட 4% அதிகம். 


இது நிகழும்போது, ​​மக்கள் வானிலை முன்னறிவிப்பைப் பாராட்டுகிறார்கள். ஆனால், பிரச்சினைகளுக்குத் தயாராவதில் போதுமான கவனம் செலுத்துவதில்லை. வறட்சி எச்சரிக்கைகள் அனைவரையும் தீவிரமாகத் தயார்படுத்தும் அதே வேளையில், கனமழை பெரும்பாலும் இயற்கை பரிசாகவே (natural munificence) பார்க்கப்படுகிறது. அச்சுறுத்தலாக பார்க்கப்படுவதில்லை. 


நிறுவனம் எப்போதும் உளவியல் ரீதியாக வறட்சி எச்சரிக்கையை ‘போர் அடிப்படையில்’ தயாராக வேண்டியதாகக் கருதப்பட்டாலும், அதிகப்படியான மழை இயற்கையின் பெருந்தன்மையாகக் கருதப்படுகிறது. முன்கணிப்பு தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அறிவு இருக்கையில், இந்த அணுகுமுறையை மாற்றியமைக்க வேண்டிய நேரம் இது. இதைச் செய்யத் தவறுவது, அரசாங்கம் பொதுமக்களுக்கு எதிரான பொறுப்பைத் துறப்பதாகக் கருதப்பட வேண்டும்.



Original article:

Share:

ஒரு புத்தொழில் புரட்சி, 'புதுமை மூலதனம்' என்ற இலக்கு -மு.க. ஸ்டாலின்

 தமிழ்நாடு உலகளாவிய புத்தொழில் உச்சி மாநாடு 2025 (Tamil Nadu Global Startup Summit) தொடக்க நிலை நிறுவனங்களை ஆதரிப்பதற்கும் புதிய யோசனைகளை ஊக்குவிப்பதற்கும் தனது திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.


சமீபத்தில் ஓசூரில் நடைபெற்ற TN Rising முதலீட்டு மாநாட்டில், டோரஸ் ரோபோடிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு இளம் நிறுவனர், கையில் ஆவணங்களுடன் மேடைக்கு வந்தார். தமிழ்நாடு அரசாங்கத்துடன் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) பரிமாறிக்கொள்ள தயாராக இருந்தார். அன்று மற்ற பெரு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொண்டதிலிருந்து இவர்களது பயணம் தனித்து நின்றது — அரசாங்கத்தின் ஆதரவுடன் தொடங்கிய இன்குபேஷன், பொறுமையான வழிகாட்டுதல் மற்றும் மிதமான ஆரம்ப முதலீட்டு ஆதரவுடன் ஒரு சவாலான பிரச்சினையைச் செம்மைப்படுத்தியது. அந்தக் காலையில், அவர்கள் இனி வாய்ப்புக்காக விண்ணப்பிக்கும் நிலையில் இல்லை. ₹100 கோடி முதலீட்டுடன் ஒரு முக்கியமான துறையில் அரசாங்கத்தின் கூட்டாளர்களாக மாறினர்.


டோரஸ் ரோபாட்டிக்ஸ் போன்ற பல புத்தொழில் நிறுவனங்களை மாநிலத்தில் முதலீட்டாளர்களாக வரவேற்பது, நாம் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதன் அடையாளமாகும்: அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு புத்தொழில் நிறுவனம் வளர்ந்து மாநிலத்துடன் பங்குதாரராக மாறக்கூடிய ஒரு அமைப்பாக மாறிவிடும். இது புதிய யோசனைகளை கவனமாக இணைத்து, தெளிவான இலக்குகளுடன் விதிகளை வகுக்கும் ஒரு திட்டத்தின் விளைவாகும்.


புத்தொழில் நிறுவனங்களின் அபரிமிதமான வளர்ச்சி


பல ஆண்டுகளாக, தமிழ்நாட்டின் தொழில்துறை அதன் வலுவான உற்பத்திக்கு பெயர் பெற்றது. கடந்த நான்கு ஆண்டுகளில், அந்த வலிமையை ஆழ்ந்த தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளுக்கு, அமைதியாக, சீராக மற்றும் அனைவரையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தியுள்ளோம்.


எனது தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்றபோது, மாநிலத்தில் 2,032 தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் இருந்தன. இன்று, அந்த எண்ணிக்கை 12,100-ஐ கடந்துள்ளது. இது நான்கு ஆண்டுகளில் ஏறத்தாழ ஆறு மடங்கு உயர்ந்துள்ளது. அவற்றில் 50% பெண்களால் வழிநடத்தப்படுகின்றன என்பது பெருமைக்குரிய செய்தியாகும். ஒன்றிய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் மாநிலங்களின் 2022-ஆம் ஆண்டுக்கான தொடக்க நிலை நிறுவன தரவரிசையில், 2018-ஆம் ஆண்டில் 'வளர்ந்து வரும் மாநிலம்' (‘Emerging State’) என்ற பட்டியலில் இருந்து முன்னேறி, ஒன்றிய அரசாங்கத்தால் 'சிறந்த செயல்திறன்' (‘Best Performer’) கொண்ட மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டது. 


2024-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தொடக்க நிறுவன சுற்றுச்சூழல் அறிக்கையின்படி, ஆசியாவில் தொடக்க நிலை  நிறுவனங்களுக்கான தரவரிசையில் சென்னை 18-வது இடத்தைப் பிடித்தது. மேலும், மலிவு விலையில் திறமையான தொழிலாளர்களைக் கொண்ட ஆசியாவின் முதல் 10 நகரங்களில் ஒன்றாகவும் இருந்தது. நாட்டிலேயே அதிக தொடக்கநிலை ஆதரவு மையங்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அடல் புதுமை இயக்கத்தால் (Atal Innovation Mission) புதுமை சுற்றுச்சூழல் அமைப்பிற்கான முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு பெயரிடப்பட்டுள்ளது.


புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் புதிய யோசனைகளை ஊக்குவிக்கவும் அரசு பயன்படுத்திய மூன்று பகுதி திட்டத்தின் காரணமாக இது நடந்தது. திட்டத்தின் முதல் பகுதி, தொடக்க நிலை நிறுவனங்களை ஊக்குவிக்க அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்துவதாகும். தமிழ்நாடு அரசின் புத்தொழில்  தொடக்க மானிய நிதி (Tamil Nadu Startup Seed Grant Fund (TANSEED)) மூலம், வழக்கமான தொடக்க நிலை நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சமும், பெண்கள் தலைமையிலான அல்லது பசுமை தொழில்நுட்பம் மற்றும் கிராமப்புற வேலைகளில் கவனம் செலுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சமும் வழங்கப்படுகிறது. இதுவரை, இப்போபே, கல்லபாக்ஸ் மற்றும் ட்ரீம் ஏரோஸ்பேஸ் போன்ற 169 தொடக்க நிலை  நிறுவனங்கள் ரூ.18.79 கோடியைப் பெற்றுள்ளன. இந்த தொடக்க நிலை நிறுவனங்கள் பின்னர் ரூ.537 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்தன. இது மாநிலத்தால் வழங்கப்பட்ட தொகையைவிட 28 மடங்கு அதிகமானதாகும்.


இந்த மூலதன தர்க்கத்தை நாங்கள் எல்லைப்புறத் துறைகளுக்கும் விரிவுபடுத்துகிறோம். உதாரணமாக, ரூ.10 கோடி மதிப்புள்ள தமிழ்நாடு விண்வெளி தொழில்நுட்ப நிதியம் (Tamil Nadu Space Tech Fund), வெளி முதலீட்டாளர்களுடன் 1:1 போட்டியில் ரூ.50 லட்சம் வரை சாதனை அடிப்படையிலான உதவியை வழங்குகிறது. இது செயற்கைக்கோள்கள் முதல் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI) சார்ந்த புவிசார் தீர்வுகள் வரை முக்கிய மற்றும் கீழ்நிலை விண்வெளி பயன்பாடுகளை ஆதரிக்கிறது.


உள்ளடக்கம், பாலின சமத்துவத்தில் கவனம்


எங்கள் திட்டத்தின் இரண்டாம் பகுதி, தொண்டு நிறுவனமாக அல்ல, மாறாக ஒரு புத்திசாலித்தனமான உத்தியாக உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துகிறது. 2022-23ஆம் ஆண்டில் ரூ.30 கோடியுடன் தொடங்கப்பட்ட பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த மக்களுக்கு புத்தொழில் நிறுவன நிதி, 2023-24ஆம் ஆண்டில் ரூ.50 கோடியாக அதிகரித்தது, சமமான வாய்ப்புகளை உருவாக்க உதவும் வகையில் நிதியுதவி அளிக்கிறது. 


இதுவரை, ஆர்பிட்எய்ட், யூனிபோஸ் மற்றும் டிஏஎம்எஸ் ட்ரைபல் கிரீன் ஃப்யூல் போன்ற 43 தொடக்க நிலை நிறுவனங்கள் ரூ.60.80 கோடியைப் பெற்றுள்ளன. பட்டியல்  மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த மக்களுக்கு வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோரை ஆதரிப்பதற்காக ஒரு சிறப்புத் திட்டமான பெரியார் சமூக நீதி நிறுவன ஆய்வகத்தையும் (Periyar Social Justice Venture Lab) நாங்கள் தொடங்கினோம். 30-க்கும் மேற்பட்ட புத்தொழில்  நிறுவனங்கள் ஏற்கனவே இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளன. மேலும், இது நல்ல பலன்களைக் தந்து வருகிறது - 8 நிறுவனங்கள் அடுத்த சுற்று நிதியை மொத்தம் ₹16.9 கோடியாக வெற்றிகரமாக திரட்டியுள்ளன.


கோவை, கன்னியாகுமரி, ஈரோடு மற்றும் சென்னையில் 200-க்கும் மேற்பட்ட பெண்களை பயிற்சி பெற்ற தொழில் துவக்க முகாம்கள் (Thozhil bootcamps) மூலம் பாலின சமத்துவத்தில் கவனம் செலுத்தியுள்ளோம். இதன் மூலம் 15 பெண் தொழில்முனைவோர் காப்பீட்டு செலவுகளுக்காக ரூ.14.70 லட்சம் பெற்றனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கை நிறுவனர்களுக்கு, கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் காப்பீட்டு அணுகலுடன் ரூ.5 லட்சம் வரை சிறப்பு விதை மானிய நிதிகள் வழங்கப்பட்டுள்ளன. 


கிராமப்புற கண்டுபிடிப்பாளர்களுக்காக, கிராமம் தோறும் புத்தொழில் திட்டம் (Gramam Thorum Puthozhil scheme) செயல்படுத்தப்பட்டுள்ளது. 100 கிராமங்களில் 100 தொடக்க நிறுவனங்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.  இது பங்குச் சந்தையின் தேவையில்லாமல் ரூ.1 லட்சம் மானியங்களை வழங்குகிறது மற்றும் உள்ளூர் வளர்ச்சி மையங்கள் மூலம் வழிகாட்டல் உதவிகளை வழங்குகிறது.


எங்களின் மூன்றாவது தூணாக ஒரு பரவலாக்கப்பட்ட மற்றும் இணைக்கப்பட்ட புனைவு மண்டலத்தை உருவாக்குவது இருந்தது. பத்து பிராந்திய மையங்கள் சென்னை, மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், கடலூர், ஓசூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி — உள்கட்டமைப்பு, வழிகாட்டிகள் மற்றும் சந்தைகளை தொழில்முனைவோருக்கு அருகில் கொண்டு வருகின்றன. சென்னையில் ஒரு மெட்ரோ மையம் செயல்படுகிறது. 


மேலும், தூத்துக்குடி அடுத்த மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாங்கள் முன்னதாகவே ஒரு எதிர்கால திட்டத்தை உருவாக்கி வருகிறோம், இதற்காக இரண்டாம்/மூன்றாம்/நான்காம் நிலை நிறுவனங்களில் 100 முன்-ஊக்குவிப்பு மையங்கள் (Pre-Incubation Centres) அறிமுகப்படுத்தப்படுகின்றன. முதல் 25 மையங்களுக்கு தலா ₹7.5 லட்சம் வீதம் (மொத்த செலவு ₹1.87 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது.


டிஜிட்டல் தளங்கள் இந்த மையங்களை ஒன்றிணைக்கின்றன. மென்டர்TN 320 வழிகாட்டிகளையும் 1,171 புத்தொழில் நிறுவனங்களையும் இணைத்து, 1,120 மணிநேர வழிகாட்டுதலை எளிதாக்கியுள்ளது. TANFUND தொடக்கநிறுவனங்களை மூலதனத்துடன் இணைக்கிறது, இதில் 300-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களும் 2,500-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோரும் பதிவு செய்துள்ளனர், 221 முதலீட்டாளர் இணைப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன, 1,417 தொடக்கநிறுவன-முதலீட்டாளர் இணைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, மற்றும் இதுவரை ₹127.09 கோடி திரட்டப்பட்டுள்ளது.


மாணவர்கள் தங்கள் திட்டங்களை வெற்றிகரமான புத்தொழில் நிறுவனங்களாக மாற்ற உதவுவதற்காக, StartupTN, நான் முதல்வனின் ஹேக்கத்தான் திட்டமான 'நிரல் திருவிழவுடன்’ கூட்டு ஒன்றிணைந்துள்ளது. இந்த ஒத்துழைப்பு, உண்மையான உலக பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குவதில் மாணவர்களுக்கு ஆதரவளிக்க பள்ளிகள் மற்றும் வணிகங்களை இணைக்கிறது.


மூலதனம் மற்றும் உள்கட்டமைப்பை, உராய்வைக் குறைக்கும் மற்றும் தரத்தை உயர்த்தும் கருவிகளுடன் நிறைவு செய்துள்ளோம். ஸ்டார்ட்அப்டிஎன் ஸ்மார்ட் கார்டு (StartupTN Smart Card), ஆரம்பகட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு அத்தியாவசிய சேவைகளுக்கான மானிய விலை அணுகலை வழங்குகிறது. இது விலைமதிப்பற்ற பணத்தை மிச்சப்படுத்தவும் விரைவாக அளவிடவும் உதவுகிறது. இருமொழி அழைப்பு மையம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது.  முதல் முறையாக நிறுவனர்கள் தகவல் பற்றாக்குறையால் தொலைந்து போகாமல் இருப்பதை உறுதி செய்கிறது.


பிராண்ட்லேப்ஸ் (BrandLabs) மூலம், எங்கள் 'நில்-பிராண்ட்-செல்' (Nil-Brand-Sell) பாடநெறி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 250 நிமிடங்கள் நிறுவனர்கள் சிறந்த தயாரிப்புகளை நம்பகமான பிராண்டுகளாக மாற்ற உதவுகிறது. எங்கள் பெருநிறுவன புதுமை முயற்சி (Corporate Innovation Initiative), திறந்த புதுமை தளத்தின் (Open Innovation portal) மூலம், தொடக்க தொடக்க நிலை நிறுவனங்களை பாஷ் (Bosch), காவேரி மருத்துவமனைகள் (Kauvery Hospitals), ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), பேயூ (PayU), பீரர் இன்னோவேஷன் (Pierer Innovation) மற்றும் டைம்லர் இந்தியா கமர்ஷியல் வாகனங்கள் (Daimler India Commercial Vehicles) போன்ற பெரிய நிறுவனங்களுடன் இணைத்து, உண்மையான உலக சவால்களைத் தீர்க்க உதவுகிறது.


முடிவுகள் தெளிவாக உள்ளன அதை அளவிட முடியும் மற்றும் தேசிய அளவில் முழுவதும் அங்கீகரிக்கப்படுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? பதில் அமைப்புகள்தான், வெறும் வார்த்தைகள் அல்ல. நாங்கள் StartupTN-ஐ மேம்படுத்தி, மாநிலம் முழுவதும் அதைப் பரப்பி, உள்ளடக்கத்தை வளர்ச்சியின் முக்கிய பகுதியாக மாற்றினோம். 


அனைவருக்கும் வழிகாட்டிகள், சந்தைகள் மற்றும் பணம் கிடைப்பதை உறுதி செய்தோம். ஒரு காலத்தில் தங்கள் யோசனைகளை கைவிட்டவர்களுக்கு இப்போது ஆதரவும் முன்னேறும் வழியும் கிடைக்கிறது. தரவரிசையில் கீழே இருந்து முதலிடத்தில் இடத்திற்கு வந்தோம். குறுகியகால திட்டங்களிலிருந்து வலுவான, நீடித்த நிறுவனங்களாக மாறினோம். எங்களுக்கு வெற்றிகரமான தொடக்க அமைப்பு கிடைக்கவில்லை - அதை நாங்களே உருவாக்கினோம்.


கோயம்புத்தூரில் உலகளாவிய உச்சி மாநாடு


தமிழ்நாடு உலகளாவிய புத்தொழில் நிறுவன உச்சி மாநாடு (Tamil Nadu Global Startup Summit (TNGSS)) 2025 அக்டோபர் 9-10-ஆம் தேதிகளில் கோயம்புத்தூரில் நடைபெறும். இது எங்கள் பயணத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இரண்டு நாட்களில், 30,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், 2,000 பிரதிநிதிகள் மற்றும் 750 கண்காட்சியாளர்கள் ஒன்று கூடி கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள வருவார்கள். 


மக்கள் சிறப்பாக இணைக்க உதவுவதற்காக, ஒவ்வொரு நபருக்கும் சரியான கூட்டாளர்கள், முதலீட்டாளர்கள் அல்லது வளங்களுடன் பொருந்தக்கூடிய ஒரு சிறப்பு செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டைப் பயன்படுத்துகிறோம். இந்த உச்சிமாநாடு அனைவரையும் வரவேற்கும் வகையில் கவனமாக திட்டமிடப்பட்டுள்ளது. பெண் பங்கேற்பாளர்களை ஆதரிப்பதற்காக உணவளிக்கும் அறைகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு போன்ற சிறப்பு வசதிகள் இதில் உள்ளன. தமிழ்நாட்டின் தொடக்கக் கதையின் அடுத்த அத்தியாயத்தை வடிவமைக்க 35 நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள், நிறுவனர்கள், மாணவர்கள் மற்றும் உலகளாவிய தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட உள்ளனர்.


இந்த உச்சிமாநாட்டில் கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் மற்றும் ஹார்வர்ட் இன்னோவேஷன் லேப்ஸ் ஆகியவற்றின் சிறப்பு வகுப்புகள் நடைபெறும். மேலும், சிறந்த வெற்றிகரமான தொடக்க நிலை நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த தலைவர்களின் பேச்சுகளும் இருக்கும். விண்வெளித் தொழில்நுட்பம், பெரிய நிறுவனங்கள், பிரபலமான பிராண்டுகள் மற்றும் அரசுப் பணிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பகுதிகள் இருக்கும். நீங்கள் ஒரு தொழில்முனைவோராக இருந்தாலும் சரி, முதலீட்டாளராக இருந்தாலும் சரி, கொள்கை வகுப்பாளராக இருந்தாலும் சரி, மாணவராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் புதிய வாய்ப்புகளைக் கண்டறிய உதவும் வகையில் இந்த உச்சிமாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.


மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார்.



Original article:

Share:

ஒரு தற்சார்பு இந்தியாவிற்கு, இந்தியா உள்நாட்டிலேயே சுரங்கம் தோண்ட வேண்டும் -அனில் அகர்வால்

 இயற்கை வளங்களை இறக்குமதி செய்வதைச் சார்ந்திருப்பதைக் குறைக்க தனியார் துறை உதவ முடியும்.


2047-ஆம் ஆண்டுக்குள் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான இலக்கு, மிக விரைவில் தன்னிறைவை அடைய வேண்டும். இறக்குமதியை நம்பியுள்ள எந்த நாடும் வலுவாக மாறாது. அரசாங்கத்திற்கு இது தெரியும். மேலும், பிரதமரின் தன்னிறைவு மற்றும் சுதேசி அழைப்பு மிகவும் சரியான நேரத்தில் உள்ளது.


தற்போது, ​​இந்தியாவின் இறக்குமதியில் 50 சதவீதம் எண்ணெய், தங்கம், தாமிரம் மற்றும் பாக்சைட் போன்ற இயற்கை வளங்களிலிருந்து வருகிறது. மின்னணுவியல் மற்றொரு முக்கிய பகுதியாகும். இது இறக்குமதியில் 15 சதவீதத்தை உருவாக்குகிறது. அரசாங்கம் மின்னணுவியல் உள்நாட்டு உற்பத்தியை வெற்றிகரமாக அதிகரித்துள்ளது. இப்போது, ​​இந்தியாவிற்குள் அதிக இயற்கை வளங்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துவதும் முக்கியம்.


ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய வளமான புவியியல் வளங்களைக் கொண்டிருப்பது இந்தியாவுக்கு அதிர்ஷ்டம். மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பகுதிகள் ஒரே நிலப்பரப்பின் ஒரு பகுதியாக இருந்தன மற்றும் ஏராளமான கனிமங்கள் மற்றும் ஹைட்ரோகார்பன்களைப் பகிர்ந்து கொள்கின்றன. வித்தியாசம் என்னவென்றால், மற்ற நாடுகள் தங்கள் வளங்களை ஆராய்ந்து பயன்படுத்தியுள்ளன. அதேநேரத்தில் இந்தியா இன்னும் கண்டுபிடிக்க அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது.   


இந்தியா தனது சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய புவியியல் மற்றும் கனிம வைப்புகளைக் கொண்டுள்ளது. எனவே இறக்குமதிகளை நம்பியிருக்க எந்த காரணமும் இல்லை. இருப்பினும், எண்ணெய், தங்கம் மற்றும் தாமிரம் ஆகிய மூன்று முக்கிய வளங்களுக்கு இந்தியா இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ளது. இவை அனைத்து வள இறக்குமதிகளிலும் 60% ஆகும். தற்போது, ​​இந்தியா அதன் எண்ணெயில் சுமார் 90%, அதன் தாமிரத்தில் 95% மற்றும் அதன் தங்கத்தில் 99%-க்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது. நிலக்கரி மற்றும் பாக்சைட் ஆகியவை இறக்குமதி செய்யப்படுகின்றன, இருப்பினும் இந்தியா அவற்றை முழுமையாக உற்பத்தி செய்ய முடியும்.


புதிய ஆய்வு முறைகளை ஏற்றுக்கொள்வது, அனுமதிகளுக்கு சுய சான்றிதழை அனுமதிப்பது, இருக்கும் வளங்களை மேம்படுத்துவது மற்றும் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே நியாயமான போட்டியை உறுதி செய்தல் போன்ற நான்கு கொள்கை மாற்றங்கள் இதை சரிசெய்யக்கூடும்.


ஆய்வுதான் முக்கிய மையமாக இருக்க வேண்டும். உலகெங்கிலும், தொடக்க நிறுவனங்களைப் போன்ற சிறிய நிறுவனங்கள் பெரும்பாலான ஆய்வுகளை கையாளுகின்றன. அவை அதிக ஆபத்துக்களை எடுக்கின்றன. இதில் பத்தில் ஒன்பது முயற்சிகள் தோல்வியடையக்கூடும். ஆனால், வேலை செய்யும் ஒரு கண்டுபிடிப்பிலிருந்து சம்பாதிப்பதன் மூலம் வெற்றி பெறலாம். இந்தியாவில், தற்போதைய ஏல அடிப்படையிலான அமைப்பு இந்த அணுகுமுறையை ஆதரிக்கவில்லை. பெரும்பாலான ஆய்வுகளை அரசாங்கமே செய்கிறது. ஆனால், அதன் இரண்டு ஆய்வு நிறுவனங்களால் முழு நாட்டையும் திறம்பட ஆராய முடியாது. இளம் தொழில்முனைவோர் இந்த வேலையை மேற்கொள்ள நாம் அனுமதிக்க வேண்டும். அரசாங்கம் இன்னும் பங்கு தொகைகள் மற்றும் வரிகள் மூலம் வருவாயைப் பெற முடியும்.


இரண்டாவதாக, இந்த செயல்முறை வேகமாக இருக்க வேண்டும். பெரும்பாலான நாடுகளில், ஆய்வுப் பணிகளிலிருந்து சுரங்கத்திற்கு மாறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இந்தியாவில், பல அனுமதிகள் மற்றும் அவற்றை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் இது இன்னும் அதிக நேரம் எடுக்கும். இந்த சிக்கலான முறைக்குப் பதிலாக, நாம் சுய சான்றிதழுக்கு மாற வேண்டும். அரசாங்கம் விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுடன் ஒரு விதிகளை உருவாக்க முடியும். தொழில்முனைவோர் தங்களைச் சான்றளிக்க முடியும். பின்னர் அரசாங்கம் தணிக்கைகள் மூலம் அவர்களைச் சரிபார்த்து பொறுப்பேற்க வைக்க முடியும். இந்த அமைப்பு ஏற்கனவே வருமானவரி போன்ற துறைகளில் சிறப்பாக செயல்படுகிறது.

மூன்றாவதாக, செயலற்ற அல்லது குறைவான செயல்திறன் கொண்ட தற்போதைய சொத்துக்கள் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும். எண்ணெய், தாமிரம் மற்றும் தங்கத்தில் உள்ள பெரும்பாலான சொத்துக்களை அரசாங்கம் சொந்தமாகக் கொண்டுள்ளது. கோலார் தங்க வயல்கள் போன்ற சில செயலற்ற நிலையில் உள்ளன. இந்துஸ்தான் காப்பர் அல்லது ஹட்டி தங்கச் சுரங்கம் போன்ற மற்றவை பல ஆண்டுகளாக உற்பத்தி குறைவாகவே உள்ளன. சில, குறிப்பாக எண்ணெயில், பெரிய முதலீடுகளுக்காகக் காத்திருக்கின்றன. இந்த சொத்துக்கள் தனியார் துறை பங்கேற்புக்குத் திறக்கப்படலாம். புதிய முதலீடு மற்றும் நவீன தொழில்நுட்பம் புதிய ஆய்வுடன் ஒப்பிடும்போது விரைவான முடிவுகளைத் தரும், இது விரைவான அனுமதிகளுடன்கூட நேரம் எடுக்கும்.


நான்காவதாக, பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சம வாய்ப்புகளை உருவாக்குங்கள். பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் இன்னும் இயற்கை வளத் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மேலும், பெரும்பாலும் நிதி உதவி அல்லது திட்டங்களை எளிதாக அணுகுவது போன்ற சிறப்பு நன்மைகளைப் பெறுகின்றன. இது தனியார் நிறுவனங்கள் போட்டியிடுவதை கடினமாக்குகிறது. குறிப்பாக இளம் வணிக உரிமையாளர்களிடையே தொழில்முனைவோரை ஊக்குவிக்க, எந்தவிதமான பாரபட்சமும் இருக்கக்கூடாது.


இந்த மாற்றங்களுக்கு அரசாங்க நிதி தேவையில்லை. உண்மையில், அவை அரசாங்க வருவாயை அதிகரிக்கலாம். அவை வெளிப்படைத்தன்மையையும் ஊக்குவிக்கின்றன மற்றும் இறக்குமதியை கணிசமாகக் குறைக்கலாம். அதிக உள்நாட்டு உற்பத்தி மில்லியன் கணக்கான வேலைகளை உருவாக்கும் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். 2047-ஆம் ஆண்டுக்குள் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் இயற்கை வளத் துறை முக்கியப் பங்கு வகிக்க முடியும்.


ஆசிரியர் வேதாந்தா குழுமத்தின் தலைவர்.



Original article:

Share:

2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதிய உட்பிரிவினரை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். -மணிஷ் திவாரி

 இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிநவீன தரவுகளின் மேம்பட்ட பகுப்பாய்வை அனுமதிக்கிறது. தரவு சேகரிப்பு கருத்தியல் ரீதியாக விரிவான வகைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டால் இந்த தொழில்நுட்ப திறன்கள் வீணாகிவிடும்.


சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பண்டைய நாகரிகத்தை நவீன தேசிய அரசாக மாற்றுவதே அரசியலமைப்பு சபையின் நோக்கமாகும். அது அந்தஸ்து மற்றும் வாய்ப்பின் சமத்துவத்தில் கவனம் செலுத்தியது. சிறப்பு அரசியலமைப்பு நடவடிக்கைகள் மூலம் வரலாற்று ரீதியாக பின்தங்கிய குழுக்களுக்கு அரசியல், பொருளாதார மற்றும் சமூக அதிகாரமளித்தல் கட்டமைப்பை வழங்கியது.


பிரிவுகள் 15 மற்றும் 16, பட்டியல் சாதிகள் (SCs) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (STs) உட்பட சமூக மற்றும் கல்விரீதியாக பின்தங்கிய வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக சட்டங்களை உருவாக்க மாநிலத்தை அனுமதித்தது. பிரிவு 17 தீண்டாமையை முடிவுக்குக் கொண்டு வந்தது. பிரிவு 23 மனித கடத்தல் மற்றும் கட்டாய உழைப்பை தடை செய்தது. பிரிவு 24 குழந்தை தொழிலாளர் முறையை தடை செய்தது. சாதி, மதம், இனம், பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாட்டையும் அரசியலமைப்பு தடை செய்தது.


1990-ஆம் ஆண்டில், மத்திய அரசு மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது. இது பொது வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBCs) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. இது SC மற்றும் ST சமூகங்களுக்கு அப்பால் உறுதியான நடவடிக்கையை விரிவுபடுத்தியது.


பின்னர், இந்திரா சாவ்னி vs இந்திய ஒன்றிய வழக்கில் (Indra Sawhney vs Union of India) உச்சநீதிமன்றம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBCs) இடஒதுக்கீடுகளை அங்கீகரித்தது. மொத்த இடஒதுக்கீடுகளுக்கு 50 சதவீத வரம்பை நிர்ணயித்தது மற்றும் "கிரீமி லேயர்" விதியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அரசின் சலுகைகள் உண்மையிலேயே பின்தங்கிய பிரிவுகளுக்கு மட்டுமே செல்வதை உறுதி செய்தது.


2019-ஆம் ஆண்டில், அரசியலமைப்பு (103வது திருத்தம்) சட்டம், இடஒதுக்கீடு இல்லாத பிரிவில் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கு கூடுதலாக 10% இடஒதுக்கீட்டை வழங்கியது. இது மொத்த இடஒதுக்கீட்டை 59.5% ஆக உயர்த்தியது. இந்தியாவில், சமூகநீதி என்ற கருத்து எப்போதும் வகுப்பை சாதியுடன் இணைத்துள்ளது.


2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதி கணக்கெடுப்பைச் சேர்க்க மத்திய அரசு ஏப்ரல் 30 அன்று முடிவு செய்தது. எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 1931-ஆம் ஆண்டு கடைசி முழு சாதி கணக்கெடுப்பிலிருந்து கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் மற்றும் 2011ஆம் ஆண்டு சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பிலிருந்து (SECC) 14 ஆண்டுகள் கழித்து இது நடைபெறுகிறது.


இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது உறுதியான நடவடிக்கைக்கான சான்றுகள் சார்ந்த அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாகும். இருப்பினும், துணை சாதிகள், குடும்ப வம்சாவளி (கோத்திரங்கள் போன்றவை) மற்றும் அவற்றின் பிராந்திய வடிவங்கள், சரியான பொருளாதார குறிகாட்டிகள் பற்றிய விரிவான தரவு இல்லாமல் பரந்த சாதி குழுக்களை பட்டியலிடுவது, சமூகத்தின் முழுமையான வரைபடத்தைக் கொடுக்காது. இந்திய சமூகத்தை உண்மையிலேயே புரிந்து கொள்ளவும், பயனுள்ள கொள்கைகளை வடிவமைக்கவும் விரிவான ஆய்வு தேவை.


அப்போதுதான் 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அரசியல் குறியீட்டைத் தாண்டி உண்மையான கொள்கை வகுப்பிற்கு பயனுள்ளதாக மாறும்.


இந்தியாவின் சமூக அமைப்பு பரந்த வகைகளால் பிடிக்க முடியாத அளவுக்கு சிக்கலானது என்பதை பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களும் புரிந்துகொண்டனர். நிர்வாக மற்றும் வருவாய் நோக்கங்களுக்காக, அவர்கள் விரிவான சாதிக் கணக்கெடுப்புகளை மேற்கொண்டனர். 1931-ஆம் ஆண்டு சாதிக் கணக்கெடுப்பு, சுமார் 4,147 சாதிகள், துணை சாதிகள் மற்றும் பரம்பரைக் குழுக்களைப் பதிவு செய்தது. இது 1901-ல் பட்டியலிடப்பட்ட 1,646 சாதிகளிலிருந்து ஒரு பெரிய மாற்றம் ஆகும்.


2011 சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பிலிருந்து (SECC) அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு படிப்பினைகளை வழங்கும் சிக்கல்களை எதிர்கொண்டது. NDA/BJP அரசாங்கம் 2011 சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பிலிருந்து (SECC) தரவை வெளியிடவில்லை. அதில் குறைபாடுகள் மற்றும் நம்பகத்தன்மை சிக்கல்கள் இருப்பதாகக் கூறியது. சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பிலிருந்து (SECC) பயன்படுத்தப்படும் பரந்த வகைகளை விட, மில்லியன் கணக்கான இந்தியர்கள் தங்கள் குறிப்பிட்ட சமூகம், துணை சாதி அல்லது பரம்பரையால் தங்களை அடையாளம் காட்டியதால் தரவு மிகவும் சிக்கலானது என்று அவர்கள் வாதிட்டனர். துணை சாதி அடையாளங்களை எளிமைப்படுத்த அல்லது அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை சமூகத்தில் வலுவாக உள்ளன என்பதை இது காட்டுகிறது.


இதில் பதிலளித்தவர்கள் 46.7 லட்சம் சாதி உள்ளீடுகளையும் 8 கோடிக்கும் மேற்பட்ட பிழைகளையும் கொடுத்தனர். இவை தவறுகள் அல்ல, ஆனால் சாதி அடையாளத்தின் சிக்கலான யதார்த்தத்தின் பிரதிபலிப்பாகும். இதை பரந்த வகைகளாக கட்டாயப்படுத்த முடியாது. துணை சாதி மற்றும் பரம்பரை விவரங்கள் பதிவு செய்யப்படாவிட்டால், 2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதி அடிப்படையிலான கணக்கீடுகளை உருவாக்கும் உண்மையான சமூகப் பிரிவுகளைக் காட்டத் தவறிவிடும்.


முன்னேறிய சாதிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் போன்ற பரந்த குழுக்களுக்குள், பல சிறிய துணை சமூகங்கள் உள்ளன. இந்த துணை சமூகங்கள் இன்று மிகவும் மாறுபட்ட வரலாறுகள், வேலைகள் மற்றும் சமூக அந்தஸ்தை கொண்டுள்ளன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) துணை சாதிகளில் 25% மட்டுமே 97% இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெற்றதாக நீதிபதி ரோகிணி ஆணையம் கண்டறிந்தது. ஒட்டுமொத்த எண்ணிக்கையைப் பார்ப்பது ஒரு குழுவிற்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகளை மறைத்து, ஏற்கனவே சலுகை பெற்ற மற்றும் செயலில் உள்ள துணைக் குழுக்களுக்கு அதிக நன்மையை அளிக்கும் என்பதை இது காட்டுகிறது. இந்த துணைக் குழுக்கள் பற்றிய விரிவான தகவல்கள் இல்லாமல், கொள்கைகள் தற்செயலாக அரசியல் ரீதியாக வலுவான மற்றும் சமூக ரீதியாக செயலில் உள்ள துணைக் குழுக்களுக்கு உதவக்கூடும், இது உள் படிநிலைகளை வலுப்படுத்தக்கூடும்.


கோத்ராக்கள் மற்றும் பரம்பரை அடையாளங்கள் முக்கியமானவை. ஏனெனில், அவை பெரும்பாலும் சமூக வலைப்பின்னல்கள், செல்வாக்கு மற்றும் பொருளாதார வாய்ப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. கிராமப்புற இந்தியாவில், இந்த உறவு உறவுகள் நில உரிமை, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் வளங்களை அணுகுவதை பாதிக்கலாம்.


விரிவான பொருளாதார தகவல்கள் இல்லாமல், சாதித் தரவை மட்டும் சேகரிப்பது, தகவலறிந்த கொள்கைகளை உருவாக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்காது. சாதி மற்றும் பொருளாதார நிலை சிக்கலான வழிகளில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், அவை வெறும் அரசியல் தலைப்புச் செய்தியாக இல்லாமல், ஒரு நுணுக்கமான புரிதலைக் கோருகின்றன.


வீட்டு வசதிகள், சொத்துக்கள், நுகர்வு மற்றும் தொழில் பற்றிய முன்மொழியப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கேள்விகள் விரிவான தரவை வழங்கும். இந்தத் தரவு சாதி, துணை சாதி மற்றும் பரம்பரைத் தகவல்களுடன் சேகரிக்கப்படும்போது, ​​சமூக மற்றும் பொருளாதார காரணிகள் எவ்வாறு குறுக்கிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள அதை பகுப்பாய்வு செய்யலாம்.


இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த அரசாங்கம் விரும்புகிறது. இது விரிவான தரவு பகுப்பாய்விற்கான புதிய வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால், சேகரிக்கப்பட்ட தரவு பரந்த வகைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டால் இந்த மேம்பட்ட தொழில்நுட்பங்கள் வீணாகிவிடும். டிஜிட்டல் கருவிகள் இந்தியாவின் சமூக பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ள உதவ வேண்டும். மேலும், அதைப் புறக்கணிக்கக்கூடாது.


சாதி, துணை சாதி, பொருளாதார நிலை மற்றும் குடும்பத் தொடர்புகளால் அசாதரண நிலை எவ்வாறு உருவாகிறது என்பதைக் கருத்தில் கொண்டு சமூகத்தை உண்மையிலேயே பிரதிபலிக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வடிவமைப்பதற்கான அரசியல் மற்றும் நிர்வாக அர்ப்பணிப்பு தேவை.


அப்போதுதான், தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்களின் சிக்கலான தன்மைக்கு ஏற்ற தலையீடுகளை வடிவமைக்க முடியும் என்று நம்பலாம். 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, ஒரு கணக்கெடுப்பு மற்றும் கணக்கியல் பயிற்சியை விட அதிகமாக இருக்க வேண்டும். இது சமூக நீதியின் மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது.


மணிஷ் திவாரி எழுத்தாளர், வழக்கறிஞர், மூன்றாவது முறை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர்.



Original article:

Share: