காலநிலை நிதி வகைபிரித்தல் என்பது என்ன?

முக்கிய அம்சங்கள்:


இது போன்ற காரணிகளால் தான், பிரதமர் நரேந்திர மோடியின் கீழ், இந்தியா இந்த பிளவு பட்டுக்கிடக்கும் அமைப்புமுறையை சவால் செய்கிறது. நாம் நமது சுத்தமான எரிசக்தி மாற்றத்தை (clean energy transition) விரைவுபடுத்தும் போது, நாம் துல்லியமாக எது காலநிலை நிதியாக (climate finance) கணக்கிடப்படுகிறது? என்று கேட்கிறோம்: இதை யார் வரையறுக்கிறார்கள்? மேலும், இது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை நாம் எவ்வாறு உறுதி செய்கிறோம்? 


26வது கால நிலை மாநாட்டில், பிரதமர் மோடி வளர்ந்த நாடுகளை ஆண்டுதோறும் $1 டிரில்லியன் திரட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். "காலநிலை தணிப்பை (climate mitigation) நாம் கண்காணிக்கும்போது, காலநிலை நிதியையும் நாம் கண்காணிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். 28வது கால நிலை மாநாட்டில், "உலகளாவிய தெற்கின் (Global South) நம்பிக்கைகளை நிறைவேற்ற காலநிலை நிதியும் தொழில்நுட்பமும் மிகவும் அவசியம்" என்று பிரதமர் மோடி கூறினார்.


கடினமாக குறைக்க முடியாத துறைகளில் (hard-to-abate sectors) கார்பன் நீக்கம் செய்ய (decarbonise) இந்தியாவுக்கு மட்டும் 2030-க்குள் $467 பில்லியன் தேவைப்படுகிறது. உலகளவில், ஆண்டு தேவைகள் $7 டிரில்லியனை தாண்டுகின்றன. ஆனால், பணப்புழக்கம் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் உள்ளது.


தற்போதைய அமைப்பின் உறுதியான பன்முக வளர்ச்சி வங்கிகள் (Multilateral Development Banks (MDBs)), பசுமை காலநிலை நிதியம் (Green Climate Fund (GCF)) மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (Global Environment Facility (GEF)) ஆகியவை இந்தத் தருணத்தின் தேவைகளை நிறைவேற்றத் தவறிவிட்டன.


முதலாவதாக, பொறுப்புணர்வு மட்டும் வெளிப்படைத்தன்மையும் பலவீனமானக பலவீனமாக உள்ளன. இரண்டாவதாக, அதிகாரம் இன்னும் சில செல்வந்த நாடுகளிடமே குவிந்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்கள் இன்னும் ஒரு சில செல்வந்த நாடுகளுக்கு விகிதாசாரமற்ற செல்வாக்கை வழங்கும் கட்டமைப்புகளால் நிர்வகிக்கப்படுகின்றன. மூன்றாவதாக, அணுகல் கடினமாக உள்ளது.


வளரும் நாடுகளைப் பொறுத்தவரை, சிக்கலான விண்ணப்ப செயல்முறைகள் முக்கியமான நிதிகள் வருவது மெதுவாக இருப்பதைக் குறிக்கிறன. அதிகளவு கடன் வாங்கும் செலவுகள் மற்றும் அதிகரிக்கும் கடன்களால் இது மேலும் அதிகரிக்கிறது. இதனால் நாடுகள் கடன் வழங்குபவர்களுக்கு பணம் செலுத்துவதற்கும் தங்கள் மக்களைப் பாதுகாப்பதற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


இதுவே துல்லியமான காரணம் இந்தியா தனது வரலாற்றுசிறப்பு மிக்க G20 தலைமையின்போது, பன்முக வளர்ச்சி வங்கிகள் (Multilateral Development Banks (MDBs)) சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்தது.


இன்று, தனியார் மூலதனம் அபாயம் மிகக் குறைவாகவும் லாபம் அதிகமாகவும் உள்ள இடங்களை நோக்கி செல்கிறது. இது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் தகவமைப்பு, நெகிழ்ச்சி, இழப்பு மற்றும் சேதம் ஆகியவற்றின் கடினமான, அவசரமான தேவைகளை தவிர்க்கிறது. உத்தரவாதங்கள் அல்லது கலப்பு நிதி (blended finance) போன்ற கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், பன்முக வளர்ச்சி வங்கிகள் தனியார் மூலதனத்தை மிகவும் தேவைப்படும் துறைகள் மற்றும் பகுதிகளில் ஆபத்தை நீக்குகின்றன.


இந்தியாவின் வரைவு காலநிலை நிதி வகைபாடு (Climate Finance Taxonomy) ஒரு முக்கியமான தலையீடு ஆகும். இது "பசுமை" அல்லது "காலநிலை-இணைந்த" முதலீட்டிற்கான தெளிவான, விஞ்ஞான அளவுகோல்களை முன்மொழிகிறது. இது பொது திட்டமிடல் மற்றும் தனியார் மூலதனம் இரண்டையும் வழிநடத்துகிறது. இது ஒரு நிலையான களத்தை உருவாக்குகிறது மற்றும் இந்தியாவின் பசுமை சந்தை நம்பகத்தன்மையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை வெளிக்காட்டுகிறது.


இந்தியாவின் பயணம் நடைமுறை தலைமை (pragmatic leadership) என்ன கட்டமைக்க முடியும் என்பதை காட்டுகிறது. உலகளாவிய கட்டமைப்பிற்கு அதே அடித்தளம் தேவை. இது மூன்று அத்தியாவசிய சீர்திருத்தங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது: அவை வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுவான தரநிலைகள்போன்றவைகளாகும். பன்முக வளர்ச்சி வங்கிகள் முழுவதும் ஜனநாயகமயமாக்கப்பட்ட நிர்வாகம் மற்றும் இறுதியாக, புதுமையான கடன் மற்றும் மீள்தன்மை நிதிகள் உள்ளன.


சர்வதேச சமூகம் உலகளாவிய கட்டமைப்புகளை நியாயமானதாகவும் மேலும் பயனுள்ளதாகவும் மாற்ற வேண்டும். அப்போதுதான் "உலகம் ஒரே குடும்பம்" (Vasudhaiva Kutumbakam) என்ற கொள்கை நமது பகிரப்பட்ட காலநிலை எதிர்காலத்தின் ஒழுங்கமைக்கும் தத்துவமாக உணர முடியும்.


பிரேசிலின் பெலெம் தெற்கில், ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations (UN)) ஆண்டு காலநிலை மாநாடு 30வது கால நிலை மாநாட்டிற்கு புரவலன் நகரம், குவாமா நதி செல்கிறது. இது பரந்த அமேசான் மழைக்காடுகளை முக்கிய நகரத்திலிருந்து பிரிக்கிறது. மலைச்சரிவான வனப்பகுதியில் மல்வேசிய குடும்பத்தைச் சேர்ந்த 50 மீட்டர் உயரமுள்ள ஒரு அரிய மழைக்காட் மரம் உயர்ந்து நிற்கிறது.


பிரேசிலில், இந்த மரம் போர்த்துகீசிய பெயரான Samaúma என்று அழைக்கப்படுகிறது. மேலும், இந்த மரம் புனிதமானதாகவும் பிரேசில், பொலிவியா, கொலம்பியா, ஈக்வடார், பெரு மற்றும் வெனிசுலா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்காவின் 40 சதவீதத்தை உள்ளடக்கிய முழு வெப்பமண்டல காட்டின் ராணியாகவும் கருதப்படுகிறது.


உலகளாவிய காலநிலை நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளை விவாதிக்க கொள்கை வகுப்பாளர்கள், தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பெலெமில் ஒன்றுகூடியுள்ள நிலையில், பிரேசிலின் பழங்குடி சமூகங்களின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூரில் வசிக்கும்ர் மக்கள் Samaúma-வின் இருப்பு உட்பட தங்கள் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சிக்கின்றனர்.


Kapok மரம் என்றும் அழைக்கப்படும் Samaúma 70 மீட்டர் உயரம் அல்லது 20 மாடி கட்டிடத்தின் உயரத்திற்கு வளரக்கூடியது. இயற்கையான விதானத்தை உருவாக்கி மழைக்காட்டில் மற்ற மரங்களை விட உயர்ந்து நிற்கிறது. இந்த மரங்கள் 300-400 ஆண்டுகள் வரை மாறுபடும் சராசரி ஆயுட்காலத்தை கொண்டுள்ளன, அதன் பட்ரஸ் வேர்கள் (buttress roots) உறுதியான இயல்புடையவை மற்றும் முழு வளர்ச்சியடைந்த மனிதனை விட உயரமானவை.


அமேசான் காடு 400-க்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடி சமூகங்கள் வாழ்கின்றன; அவர்களது பண்பாடு அப்பகுதியின் தாவரங்கள் மற்றும் விலங்குகளுடன் ஆழமான தொடர்புகளை கொண்டுள்ளன. இந்த Samaúma மரமும் அச்சமூகங்களால் வழிபடப்படுகிறது; அவர்களிடையே ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

கடந்த பத்தாண்டுகளில், பல Samaúma மரங்கள் காடழிப்புக்கு இரையாகியுள்ளன. இது அமேசான் பகுதியில் கவலையளிக்கும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. பழங்குடி சமூகத்தின் ஒரு பிரிவினர் கடந்த வாரம் 30வது கால நிலை மாநாடு நடைபெற்ற இடத்திற்கு வெளியே பொது ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் சுரங்க மற்றும் விவசாய தொழில் போன்ற வணிக முயற்சிகளுக்கு வழி வகுக்க காடழிப்பு மற்றும் மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்துப் போராடினர்.


அதன் உயரம் காரணமாக, சமௌமா ஒளிச்சேர்க்கை (photosynthesis) மேற்கொள்வதற்கு விரிவான திறனைக் கொண்டுள்ளது. ஏனெனில், அதன் பரந்த இலைகள் நேரடியாக சூரிய ஒளியைப் பெறுகின்றன. இது ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கிறது. பின்னர், அது உலகிற்கு அளிக்கப்படுகிறது என்று கார்சியா  கூறினார்.


உங்களுக்குத் தெரியுமா?


பெலெம் சுகாதார நடவடிக்கை திட்டம் (Belem Health Action Plan), பிரேசிலின் 30வது கால நிலை மாநாடு தலைமையின் முதன்மையான விளைவு, 30வது கால நிலை மாநாட்டின் அர்ப்பணிக்கப்பட்ட சுகாதார நாளான 13 நவம்பர் 2025 அன்று வெளியிடப்பட்டது.


காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை சமாளிக்க உலகளாவிய சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இரண்டு கொள்கைகள் மற்றும் கருத்துக்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது: அவை சுகாதார சமத்துவம் மற்றும் 'காலநிலை நீதி' (climate justice) மற்றும் சமூக பங்கேற்புடன் காலநிலை மற்றும் சுகாதாரம் தொடர்பான தலைமை மற்றும் நிர்வாகம் ஆகும்.


The Climate and Health Funders Coalition என்ற கூட்டணியின் கீழ், காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ள 35-க்கும் மேற்பட்ட முன்னணி தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்தன. காலநிலை மாற்றத்தின் காரணங்கள் மற்றும் சுகாதாரத்திற்கான அதன் விளைவுகள் இரண்டையும் சமாளிக்க அவர்கள் ஆரம்பத்தில் $300 மில்லியனை வழங்கினர்.


 Original Article: What is Climate Finance Taxonomy? 


Share: