ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வு - சில மாநிலங்களுக்கான பங்கின் வீழ்ச்சியைத் தடுத்தல் - சி.ரங்கராஜன், டி.கே.ஸ்ரீவஸ்தவா

 வருமான தூர அளவுகோல் (income distance criterion) மற்றும் செஸ்கள் (cesses) மற்றும் கூடுதல் கட்டணங்கள் (surcharges) ஆகியவை மதிப்பாய்வு செய்யப்பட வேண்டிய பகுதிகள் ஆகும்.


பதினாறாவது நிதிக்குழு (16th Finance Commission) பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. இந்தக் கட்டுரை குறிப்பாக இந்தியாவின் பல தென் மாநிலங்கள் எழுப்பிய கவலையைக் குறிப்பிடுகிறது. பிரச்சினை (அல்லது புகார்) என்னவென்றால், இந்த மாநிலங்கள் ஒன்றியத்திலிருந்து மாநிலங்களுக்கு, நிதி ஆயோக்கிலிருந்து, நிதி ஆணைக்குழுவிற்கு மாற்றப்பட்ட வளங்களில் அவற்றின் பங்கில் காலப்போக்கில் சரிவைச் சந்தித்து வருகின்றன.


இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, எந்தெந்த மாநிலங்கள் காலப்போக்கில் தங்கள் பங்கைப் பெறுகின்றன, எவை இழக்கின்றன என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கிடைமட்டமாக நிதிகளை விநியோகிப்பதற்கு பயன்படுத்தப்படும் அளவுகோல்களையும் நாம் ஆராய வேண்டும். இது, சில மாநிலங்கள் தொடர்ந்து தங்கள் பங்கை இழக்க வழிவகுத்தது. கடைசியாக, இந்த போக்கை எவ்வாறு மாற்றியமைப்பது என்பதை நாம் ஆராய வேண்டும்.


பன்னிரெண்டாவது முதல் பதினைந்தாவது நிதி ஆணையத்தின் தரவுகள், தென் மாநிலங்களின் பங்கு 19.785 சதவீதத்திலிருந்து 15.800 சதவீதமாகக் குறைந்துள்ளதைக் காட்டுகிறது. இந்த, இரண்டு ஆணையங்களையும் ஒப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களும் பங்கு குறைந்துள்ளன. இதற்கிடையில், மஹாராஷ்டிரா போன்ற மலைப்பாங்கான, மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களை 'ஆதாய மாநிலங்களாக' (gainer States) உள்ளடக்கியது.





தூர அளவுகோல்


தனிப்பட்ட மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு வெவ்வேறு ஆணையங்களால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்கள் மற்றும் தர நிலையைப் பொறுத்தது. ஒரு மாநிலம் பணக்கார மாநிலத்திலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை அளவிடும் தொலைதூர அளவுகோல் ஒரு முக்கிய காரணியாகும். பதின்மூன்றாவது நிதிஆணையம் (13th Finance Commission) அதன் பங்கின் தரநிலையை 50% லிருந்து 47.5% ஆகக் குறைத்தது. பின்னர், பதினைந்தாவது நிதி ஆணையம் (15th Finance Commission) அதை 45% ஆகக் குறைத்தது. கடந்த காலத்தில், பதினொன்றாவது நிதி ஆணையம் (11th Finance Commission) இந்த அளவுகோலுக்கு 62.5% அதன் பங்கு ஒதுக்கியது. விநியோகத்தில் முக்கியமான காரணியாகக் கருதப்படும் சமன்படுத்தும் கொள்கையானது (equalisation principle), இந்தியாவிலும் பிற இடங்களிலும் பொருளாதார மற்றும் சமூக நீதிக்காகப் பின்பற்றப்படுகிறது.


தென் மாநிலங்கள் நஷ்டத்திற்கு முக்கிய காரணம் வருமான தூர அளவுகோல் (income distance criterion) ஆகும். இதன் பொருள், தொலைதூர அளவுகோல், ஒரு மாநிலம் அதிக வருமானம் பெறும் மாநிலத்திலிருந்து எவ்வளவு தூரம் இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாகப் பெறுகிறது என்பதைக் குறிக்கிறது. அதன் தாக்கம் தனித்தனியாகக் காட்டப்படாவிட்டாலும், மலைப்பாங்கான மாநிலங்கள் முக்கியமாக காரணம் பரப்பளவு/காடு அளவுகோலில் இருந்து பயனடைகின்றன. இரண்டு நிதி ஆணையங்களுக்கு இடையில், தென் மாநிலங்கள் தூர அளவுகோல் காரணமாக 8.055% புள்ளிகளை இழந்தன. ஆனால், ஒட்டுமொத்த இழப்பு 3.985% புள்ளிகளில் குறைவாக இருந்தது. இது, மற்ற அளவுகோல்களிலிருந்து லாபத்தை பரிந்துரைக்கிறது.


பீகார், உத்தரபிரதேசம் போன்ற குறைந்த வருமானம் கொண்ட மாநிலங்கள் தூர அளவுகோல் காரணமாக காலப்போக்கில் ஆதாயமடைந்துள்ளன. இருப்பினும், பிற காரணிகளால் அவை இழந்துள்ளன. பீகாரின் ஒட்டுமொத்த பங்கு 0.970% புள்ளிகளும், உத்தரபிரதேசத்தின் ஒட்டுமொத்த பங்கு 1.325% புள்ளிகளும் குறைந்துள்ளது.




மக்கள் தொகை குறித்து


சர்ச்சையை ஏற்படுத்தும் ஒரு அளவுகோல் மக்கள் தொகையாகும். பதினான்காவது நிதி ஆணையத்துக்கு (14th Finance Commission) முன்பு, அவர்கள் 1971 மக்கள் தொகை தரவைப் பயன்படுத்தினர். ஆனால், பதினைந்தாவது நிதி ஆணையத்தைப் (14th Finance Commission) பொறுத்தவரை, அவர்கள் 2011 தரவுகளுக்கு மாறினார்கள். மேம்படுத்தப்பட்ட கருவுறுதல் விகிதங்களைக் (improved fertility rates) கொண்ட மாநிலங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க, ஒரு மக்கள்தொகை மாற்ற அளவுகோல் (demographic change criterion)  அறிமுகப்படுத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக, இந்த மாற்றங்களின் ஒருங்கிணைந்த தாக்கம் அனைத்து மாநில குழுக்களுக்கும் குறைவாகவே இருந்தது. குறிப்பாக, தமிழ்நாடு சற்று சாதகமான கூட்டு தாக்கத்தை சந்தித்தது.


எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்


வருமான தூர அளவுகோலை நாம் புறக்கணிக்க முடியாது. ஆனால், அது என்றென்றும் தொடர வேண்டுமா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இது, ஒரு சரியான கவலை. ஆனால், இதே போன்ற கேள்விகள் வேறு பல பிரச்சினைகள் குறித்து எழுப்பப்படலாம். பதினாறாவது நிதி ஆணையம் (16th Finance Commission) அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து, மற்ற அளவுகோல்களின் முக்கியத்துவத்தை அதிகரிப்பது ஒரு தீர்வாக இருக்கலாம்.


மற்றொரு அம்சம், பிரிக்கக்கூடிய பங்கின் அளவு கேள்வியுடன் இணைக்கப்பட்டுள்ளது. பதினான்காவது நிதி ஆணையம் (15th Finance Commission) பரிந்துரைத்தபடி மாநிலங்களின் பங்குகளை 42% ஆக உயர்த்த ஒப்புக் கொண்டாலும், மத்திய அரசு செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களை அதிகரித்து, தொகுப்பின் அளவைக் குறைத்தது. இது உகந்ததல்ல. மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 10% வரை செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களை கட்டுப்படுத்துவது ஒரு தீர்வாக இருக்கலாம். பதினான்காவது நிதி ஆணையத்தின் (15th Finance Commission) பரிந்துரைக்குப் பிறகு, மொத்த வருவாயில் மாநிலங்களின் பங்கு 63.9% முதல் 68.1% ஆகவும், பின்னர் 2020-21 ஆம் ஆண்டில் 70.7% ஆகவும் அதிகரித்தது. இருப்பினும், இது 2022-23 ஆம் ஆண்டில் 67.5% ஆகக் குறைந்தது. இது, பன்னிரண்டாவது நிதி ஆணைய (12th Finance Commission) காலத்தில் 61.3% ஐ விட அதிகமாகும்.


முடிவில், மாநிலங்களின், பங்குகள் சரிவு குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம், வருமான தூர அளவுகோலுக்கு (income distance criterion) அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது 45% குறிப்பிடத்தக்க பங்கின் தரநிலையை கொண்டுள்ளது. இருப்பினும், எந்தவொரு நியாயமான விநியோக திட்டத்திலும், இந்த அளவுகோலை நாம் புறக்கணிக்க முடியாது.  


நிதி ஆணையம் (Finance Commission) அதன் முக்கியத்துவத்தை 5% முதல் 10% வரை குறைக்கலாம். கூடுதலாக, பதினாறாவது நிதி ஆணையம் (16th Finance Commission) செஸ்கள் மற்றும் கூடுதல் கட்டணங்களுக்கு வரம்புகளை விதிக்க முடியும்.


சி.ரங்கராஜன், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஆவார். 

டி.கே. ஸ்ரீவஸ்தவா, Madras School of Economics-ன் முன்னாள் இயக்குநர்.




Original article:


Share:

மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் ஒரு பழங்குடியினருக்கு வாழ வழி தேவை - மதுசூதன் பந்தி

 கர்நாடகாவில் உள்ள 'பானி யெரவா' (Phani Yerava) பழங்குடியினரிடையே மது துஷ்பிரயோகம் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினை. இந்தச் சிக்கலுக்குக் கொள்கை அளவில் கவனம் தேவை. ஏனெனில், அந்த பிரச்சனை அதிகமாகி வருகிறது.


கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மகுடா கிராமம் (Makuta village), குடகு மாவட்டத்தில் உள்ள பெடோலி கிராம பஞ்சாயத்தின் கீழ் வருகிறது. குறிப்பாக, இது கெர்த்தி பாதுகாக்கப்பட்ட காட்டுக்கு (Kerti reserved forest) அருகிலுள்ள மகுட ஆரண்ய வலயாவின் (Makuta Aranya Valaya) ஒரு பகுதியாகும். அடர்த்தியான வெப்பமண்டல பசுமையான காடுகளுக்கு பெயர் பெற்ற இந்த பகுதி, கர்நாடகாவின் 10 உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட தலக்காவேரி துணைக் கிளையின் ஒரு பகுதியாகும்.


இந்த கிராமம் 'பானி எரவா' (Phani Yerava) பழங்குடியினரின் தாயகமாகும். 2021 ஆம் ஆண்டில், ஒரு முஸ்லீம் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட, இரண்டு உள்ளூர் மக்களின் உதவியுடன், அனைத்து 19 எரவா குடும்பங்களும் வன உரிமைச் சட்டத்தின் (Forest Rights Act) கீழ் 135 ஏக்கர் வன நிலத்தை வெற்றிகரமாக உரிமை கோர முடிந்தது. இந்த நிலத்தில் தலைமுறை தலைமுறையாக எரவர்கள் (Yeravas) வசித்து வருகின்றனர்.

இருப்பினும், வன உரிமைகளைப் பெறுவதன் முக்கியத்துவம் குறித்து கேட்டபோது, பழங்குடியினர் மிகவும் ஆர்வமாக இல்லை. ஏனென்றால், அவர்கள் வாழ்வாதாரத்திற்காக காடுகளை நம்பியிருப்பது காலப்போக்கில் குறைந்துவிட்டது.


காட்டில், சிறு வன விளைபொருட்களை சேகரிப்பது அவர்களுக்கு சோர்வாக இருந்தது. கூடுதலாக, சந்தை உறுதியற்ற தன்மை மற்றும் இடைத்தரகர்களின் சுரண்டல் காரணமாக விளைபொருட்களை விற்பனை செய்வது லாபகரமாக இல்லை. எனவே, தொழிலாளர்களாக வேலை செய்வதன் மூலம் சிறந்த ஊதியத்தை சம்பாதிக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இப்போது, அவர்களில் பெரும்பாலோர் தினக்கூலிகளாக, முக்கியமாக விவசாயத்தில் வேலை செய்கிறார்கள். ஒரு சவாலான அனுபவம், தொழிலாளிகள் செய்யும் அதே வேலையைச் செய்வதன் மூலம் தாங்கள் அதிகம் சம்பாதிக்கலாம் என்று நினைக்க வைத்ததுதான். எனவே, இப்போது அவர்களின் முக்கிய வேலை தினசரி கூலிகளான, சாதாரண வேலைகள் அல்லது விவசாயத்தில் வேலை செய்வது ஆகும். அவர்களில் பெரும்பாலானோர் மலையாளம் தெரிந்தவர்கள் என்பதால் தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து 10 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள கேரளாவின் காசர்கோடு (Kasaragod) பகுதியை வேலை செய்யத் தேர்வு செய்கிறார்கள்.


அவர்கள், விறகு மற்றும் தேனைத் தவிர, காடுகளில் இருந்து எரிபொருள், தேன், தூபம் (தூபா/வடேரியா இண்டிகா) மற்றும் சோப்பு பாட் (ஷேககாய்) ஆகியவற்றை சேகரிக்கின்றனர். அவர்கள் சேகரிக்கும் தொகை, காட்டில் என்ன கிடைக்கிறது மற்றும் அவற்றை சேகரிக்க வேண்டிய தேவையைப் பொறுத்தது. இருப்பினும், வனப் பொருட்களைச் சேகரிப்பவர்கள் அதை முக்கியமாக தங்கள் சொந்த உபயோகத்திற்காகச் சேமிக்கிறார்கள். மேலும், அதிகப்படியானவற்றைச் சேமித்து வைக்க முடியாது.


போதையின் கொடுமை


இருப்பினும், ஒரு கவலைக்குரிய பிரச்சினை உள்ளது. வன உரிமைச் சட்டத்திற்குப் (Forest Rights Act) பிறகு அவர்களின் நிலைமையைப் புரிந்துகொள்ள சென்றபோது, பெரும்பாலான சமூகம் மது போதையில் இருந்தது. பழங்குடியினர் அல்லாத உள்ளூர்வாசிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள மற்றவர்கள் பழங்குடியினர் நகரத்தில் இந்த பழக்கத்தை ஆரம்பித்ததாகக் குறிப்பிட்டனர். ஒரு நாள் கடின உழைப்புக்குப் பிறகு, ஓய்வெடுக்க வீட்டிற்குத் திரும்பிய பின்னர் மற்ற தொழிலாளர்களும் மாலையில் அதையே செய்வதை அவர்கள் கவனித்தனர். கிராமத்தில் உள்ள பழங்குடியினர், இந்த பழக்கத்தை எப்படி ஆரம்பித்தார்கள் என்பதை நினைவில் கொள்ள முடியவில்லை. இளம் பருவத்தினர் கூட இதில் ஈடுபட்டுள்ளனர். இது, அவர்களின் பள்ளி வருகை மற்றும் வெளி உலக விழிப்புணர்வை அதிகம் பாதிக்கிறது. வெளி உலகத்தைப் பற்றிய தகவல் சமூகத்திற்கு இல்லை. இதன் காரணமாக, ரேஷன் கார்டுகள், ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் வன உரிமைச் சட்டம் தொடர்பான அரசு ஆவணங்கள் போன்ற அத்தியாவசிய ஆவணங்கள் நம்பகமான பழங்குடியினர் அல்லாத உறுப்பினர்களால் (trustworthy non-tribal members) பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டியிருக்கிறது. 


இந்த பகுதியில், பணிபுரியும் சமூக நலத்துறை அதிகாரிகளும் (Department of Social Welfare) இந்த பிரச்னை குறித்து கவலையடைந்துள்ளனர். அவர்கள் போதைப்பொருள் மறுவாழ்வு திட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். மற்றொரு கிராமமான, சோம்வார்பேட்டை தாலுகா, நேருகலலே கிராம பஞ்சாயத்தில், 'யாரவா' (Yarava) பழங்குடியின தலைவர் சோகத்தில் இருந்தார். அவரது உறவினர்கள் பலர் போதைக்கு அடிமையாகி உயிரை இழந்தனர். இதனால், தனது குக்கிராமத்தில் மக்கள் தொகை பாதியாக குறைந்துள்ளது என்றார். மேலும், பழங்குடியினர் நல்ல உணர்வுடன் ஒழுக்கமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று அவர் நம்பினார்.


எனது ஆய்வின் போது, எழுத்தாளர்-ஆராய்ச்சியாளர் கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பல பழங்குடி கிராமங்களுக்குச் சென்றார். ஒவ்வொரு கிராமத்திலும், வெவ்வேறு தீவிரங்களுடன் இதே போன்ற கதை வெளிப்பட்டது. இந்த ஆய்வு, புது தில்லியின், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலால் (Indian Council of Social Science Research) நிதியளிக்கப்பட்ட "பழங்குடியினர், வன உரிமைகள் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு: கர்நாடகாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பற்றிய ஆய்வு" (Tribals, Forest Rights and Heritage Conservation: A Study of Western Ghats in Karnataka) என்ற தலைப்பில் ஒரு பெரிய ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டது.


அரசு சார்பற்ற நிறுவனங்களின் (Non-government organisation) ஆர்வலர்கள் மற்றும் கிராமங்களின் அதிகார வரம்பில் உள்ள அரசு அதிகாரிகள், இப்பகுதியில் உள்ள பிரச்சினைகள் அரசின் கொள்கைகளில், போதிய கவனம் பெறவில்லை என்று வாதிடுகின்றனர். ஹசலாரு, கவுடாலு மற்றும் ஜெனு குருபாஸ் உள்ளிட்ட உள்ளூர் பழங்குடித் தலைவர்கள் இந்தக் கருத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சில பழங்குடியினர் மட்டுமே சமீப ஆண்டுகளில் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் பலனடைந்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த, சமூகப் பிரச்சினைகளை தீவிரமாக எடுத்துக் கொண்டு அனைத்து குழுக்களுக்கும் பயனளிக்கும் முடிவுகளை எடுக்குமாறு அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர். அப்போதுதான் வனவாசிகளிடையே போதை போன்ற பிரச்சனைகளுக்கு திறம்பட தீர்வு காண முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.


மதுசூதன் பாண்டி, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள குஜராத் மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆசிரிய உறுப்பினராக உள்ளார்.




Original article:

Share:

மொழிகளின் மொழி வழியே தமிழை உலகிற்கு எடுத்துச் செல்லுதல் : மொழிபெயர்ப்பு - மினி கிருஷ்ணன்

 மொழி எல்லைகளைத் தாண்டி இலக்கியத்தைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகளை மேற்கொண்ட முதல் மற்றும் ஒரே மாநில அரசு தமிழ்நாடு அரசுதான்.


நாம் ஒரு மொழிபெயர்ப்பு உலகில் வாழ்கிறோம். அதன் சக்தியைப் புறக்கணிப்பது என்பது நாகரிகங்களை வடிவமைப்பதில் அதன் பங்கைக் மறுப்பதாகும். மறுமலர்ச்சி, நவீன மருத்துவம், பொறியியல் முன்னேற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்ததில் மொழிபெயர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இது அரபு, லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளிலிருந்து ஐரோப்பிய மொழிகளுக்கு அறிவை மாற்ற உதவியது, மேலும் தொழில்துறை புரட்சிக்கும் வழிவகுத்தது. வானியல், கணிதம் மற்றும் மத நூல்கள் போன்ற துறைகளிலும் இது ஒரு பங்கைக் கொண்டிருந்தது.


மொழிபெயர்ப்பு ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கும் முயற்சிகளை எதிர்க்கிறது மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கிறது. மொழிபெயர்ப்பாளர்கள், பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை, ஆனால் அவர்கள், இன்றைய உலகில் தலைவர்களாக குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறார்கள், வாசிப்பையும் சிந்தனையையும் கட்டுப்படுத்தும் முயற்சிகளை எதிர்க்கிறார்கள்.


இருப்பினும், ஒரு பிடிப்பு உள்ளது. எந்தவொரு வெளியீட்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களும் எப்போதுமே கருத்தியல் மற்றும் வணிக ரீதியானவை என்பதை நாம் புரிந்துகொண்டாலும், மொழிபெயர்ப்பு, குறிப்பாக அழகியலில் கவனம் செலுத்தும் போது, எப்போதும் ஆதரவும் பங்களிப்பும் தேவைப்படும். 11-12 ஆம் நூற்றாண்டுகளில் பாக்தாத்தின் அறிவுப் பேரரசு, 16 ஆம் நூற்றாண்டில் பேரரசர் அக்பரால் நிறுவப்பட்ட மொழிபெயர்ப்புப் பணியகம் மற்றும் 18-19 ஆம் நூற்றாண்டுகளில் கிழக்கிந்திய நிறுவனத்தால் சமஸ்கிருதம், அரபு மற்றும் பாரசீக நூல்களின் மொழிபெயர்ப்பு ஆகியவை வரலாற்று எடுத்துக்காட்டுகள், இவை அனைத்தும் நிதியுதவி செய்யப்பட்ட முயற்சிகள்.


தமிழின் செழுமையையும், தொன்மையையும், சமகாலப் பன்முகத்தன்மையையும் உலகுக்குக் கொண்டு செல்லும் போது அவற்றை அணுகக்கூடிய மொழியிலும் உணர்வுபூர்வமாகவும் எவ்வாறு கிடைக்கச் செய்வது?


இந்தியாவில், தேசிய புத்தக அறக்கட்டளை (National Book Trust) மற்றும் சாகித்ய அகாடமி (Sahitya Akademi) ஆகியவை 60 ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புகளைச் சேகரித்துள்ளன, ஆனால் அவற்றின் தாக்கம் குறைவாகவே உள்ளது. அறிவுசார் நூல்களில் கவனம் செலுத்தும் தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம் 2006 முதல் சவால்களை எதிர்கொண்டுள்ளது.


தமிழகத்தில் பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகம் (Tamil Nadu Textbook & Educational Services Corporation’s (TNTB)) ஒரு புதிய அணுகுமுறையை எடுத்து வருகிறது. தனியார் ஆங்கிலப் பதிப்பாளர்களுடன் இணைந்து தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்கிறார்கள். அரசாங்கம் இந்த மொழிபெயர்ப்புகளுக்கு நிதியளித்து அவற்றை பள்ளிகளில் விநியோகிக்க உதவுகிறது, இது ஒரு பரந்த சந்தையை உருவாக்குகிறது. தமிழ் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பாளர்கள் ஆகியோருக்குப் பயனளிக்கும் அதே வேளையில், தமிழ் இலக்கியத்தை அனைத்து வாசகர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.


2018-19 முதல், தமிழ் கவிதை, புனைகதை, வரலாறு மற்றும் சமூக-கலாச்சார புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகம் (TNTB) விவாதித்து வருகிறது. உலகளாவிய ஆங்கிலம் பேசும் பார்வையாளர்களுக்கு தமிழ் இலக்கியம் மற்றும் வரலாற்றை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்த திட்டத்திற்காக அவர்கள் முன்னணி வெளியீட்டாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளனர்.


தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய ஐந்து தென்னிந்திய மாநிலங்களும் மொழி, இலக்கியம், சினிமா மற்றும் நிகழ்த்துக் கலைகள் போன்ற கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களைப் பகிர்ந்து கொண்டு, மகிழ்ச்சியான பரிமாற்றத்தைக் கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம்.


ஏப்ரல் 2021 இல், இந்த திட்டம் தமிழை மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொழிபெயர்ப்பதை உள்ளடக்கியது. "திசைதோறும் திராவிடம்" (Thisaithorum Dravidam) என்ற திட்டத் தலைப்பு பன்மொழி தென்னிந்தியாவின் யோசனையை வலியுறுத்துகிறது.


வளர்ச்சியையும் கலாச்சாரத்தையும் நாம் மறுபரிசீலனை செய்யும்போது, மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை கலப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பது முக்கியம், குறிப்பாக காலனித்துவ காலத்தின் தாக்கத்திற்குப் பிறகு.


நமது கலாச்சார ரீதியாக மாறுபட்ட நிகழ்காலத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியப் படைப்புகளுக்கான நமது தேடலில், பண்டையகாலம் நவீன மற்றும் சமகால படைப்புகளுடன் சமப்படுத்த வேண்டும். தமிழின் செழுமையை உலகுக்குக் காட்டும் அதே வேளையில், அவற்றை எவ்வாறு அனைத்து வாசகர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவது?


"திசைதோறும் திராவிடம்" மொழி ரீதியான இடைவெளிகளை ஆக்கப்பூர்வமாக இணைக்க உதவுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது போல், தமிழை நேசிப்பது என்பது பிற மொழிகளை வெறுப்பது அல்ல. மொழியியல் பேராசிரியர் ரமாகாந்த் அக்னிஹோத்ரி கூறுகிறார் மொழிகள் இயற்கையாகவே ஒன்றுக்கொன்று எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது.


தெலுங்கிற்கு கீதா ராமசாமி, மலையாளத்திற்கு ஏ.ஜே.தாமஸ், கன்னடத்திற்கு வி.எஸ்.ஸ்ரீதரா என ஒவ்வொரு மொழிக்கும் ஆசிரியத் தொகுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.


இன்றுவரை, 42 ஆங்கில மொழிபெயர்ப்புகளும், 25 மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிபெயர்ப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. சில படைப்புகள் பதிப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டன, மற்றவை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகத்தின் (TNTB) ஆலோசனைக் குழு மற்றும் மொழிபெயர்ப்பு இணை இயக்குநர் டாக்டர் டி.எஸ்.சரவணன் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்டன.


மொழி எல்லைகளைத் தாண்டி இலக்கியத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு, இதுபோன்ற மொழிபெயர்ப்புத் திட்டங்களைத் தொடங்கிய முதல் மற்றும் ஒரே மாநில அரசு தமிழக அரசுதான். டாக்டர் சரவணன் பரஸ்பர மொழிபெயர்ப்பு செயல்முறை மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வெளியீட்டாளர்களுடனான ஒத்துழைப்பு ஆகியவற்றை எடுத்துரைத்தார். "மூன்று ஒடியா புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்தால், ஒடியா பதிப்பாளர்கள் மூன்று தமிழ் புத்தகங்களை ஒடியா மொழியில் மொழிபெயர்ப்பார்கள்" என்று அவர் விளக்கினார்.


பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி இந்த மொழிபெயர்ப்புத் திட்டங்களின் முக்கியத்துவத்தைப் பாராட்டினார். சமகால தமிழ் இலக்கியத்தை முதன்முறையாக மொழிபெயர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், கடந்த 2,000 ஆண்டுகளாக எழுத்தாளர்கள் தொடர்ந்து படைப்புகளை உருவாக்கி வரும் ஒரு தனித்தன்மை வாய்ந்த மொழி தமிழ், இன்னும் போதுமான கவனத்தைப் பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டார்: "இந்த திட்டம் தமிழ் இலக்கிய பாரம்பரியத்தின் தொடர்ச்சியைக் காட்டுகிறது." வெளியீட்டாளர்களுடனான ஒத்துழைப்பையும் அவர் பாராட்டினார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், மொழி அல்லது கலாச்சார தடைகளைப் பொருட்படுத்தாமல், மொழியின் சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும், வாசகர்களுடன் எதிரொலிக்கும் வகையிலும் தமிழிலிருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளின் விரிவான தொகுப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


கட்டுரையாளர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகத்தின் (TNTB) மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாசிரியர்.




Original article:

Share:

திராவிட மாதிரி (Dravidian Model) அரசு தமிழ்நாட்டை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றியமைத்துள்ளது -ஏ.எஸ்.பன்னீர்செல்வன்

 தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள்  கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் பதவி வகித்து வருகிறார்.அவர், 2018 முதல் இந்தியாவின் பழமையான மாநில அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் (Dravida Munnetra Kazhagam (DMK)) தலைவராக உள்ளார். 1973-ம் ஆண்டு திமுக பொதுக்குழுவில் இணைந்தார். நெருக்கடி நிலையை எதிர்த்து 1976 ஆம் ஆண்டில் ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார். 1980-ல் திமுகவின் இளைஞரணி தொடங்கினார். 1989-ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக அறிமுகமானார். சட்டமன்றத்தில் அவர் ஏழாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 1996 ஆம் ஆண்டில் சென்னையின், நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக இருந்த அவர், நகரத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் சிங்கார சென்னை (Beautiful Chennai) திட்டத்தைத் தொடங்கினார்.


முதலமைச்சர் ஸ்டாலின் சமூக நீதி மற்றும் கூட்டாட்சி சமநிலையை ஆதரிப்பதில் பெயர் பெற்றவர். ஒன்றிய அரசிடம் இருந்து மாநில உரிமைகளை பாதுகாக்க பாடுபடுகிறார். இந்தியாவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கியமானவர். 2024 பொதுத் தேர்தலுக்கான இந்திய அரசியல் கூட்டணியில், கட்சிகளுக்கு இடையிலான வேறுபாடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் தீர்த்து வைக்கிறார்.


கொரோனா (Covid) இரண்டாவது அலையின் போது, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு சவால்களை எதிர்கொண்டது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மக்களின் பாதுகாப்பை ஒரு வாரத்திற்குள் உறுதி செய்வது போன்ற பிரச்சினைகளை அவர்கள் விரைவாக நிவர்த்தி செய்தனர்.


திராவிட மாதிரி (Dravidian Model) என்பது ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கிய ஒரு தனித்துவமான அணுகுமுறை. வகுப்புவாத இடஒதுக்கீடு, அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்புகள், நியாயமான வளர்ச்சிக்கான பெண்கள் உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் 1967 இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதும் இதே அணுகுமுறையைத் தொடர்ந்தனர். இன்றும், திராவிட மாதிரி அரசு இதை பின்பற்றுகிறது. இது சமத்துவத்தைப் பற்றியது, எந்தவொரு குறிப்பிட்ட குழுவிற்கும் ஆதரவாக அல்ல, ஆனால் இடைவெளிகளைக் குறைக்க கல்வி, உள்கட்டமைப்பு, வேலைகள் மற்றும் முதலீடு ஆகியவற்றை பரவலாக வழங்குகிறது. தமிழகத்தின் பொருளாதாரத்தை கடந்த அரசு தவறாக நிர்வகித்துள்ளது. இதனால் கடுமையான நிதி சிக்கல் ஏற்பட்டது. அதிமுக அரசு ஒன்றிய அரசை மிக நெருக்கமாகப் பின்பற்றியதால் மாநிலத்தின் கட்டமைப்பு மிகவும் மோசமாக இருந்தது. மாநில உரிமைகளை ஒன்றிய அரசு பறிக்கவிட்டார்கள். தமிழகத்தை மீண்டும் முதல் மாநிலமாக மாற்றுவதே திராவிட மாதிரி அரசின்  (Dravidian Model) இலக்காக இருந்தது. இது சவாலாக இருந்தது, ஆனால் தமிழ்நாடு நிறைய சவால்களை சமாளித்து சாதித்துள்ளது.


ஒரு மாநிலத்தின் வளர்ச்சி அதன் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றால் அளவிடப்படுகிறது.


பள்ளி மற்றும் உயர்கல்வி இரண்டிலும் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இல்லம் தேடி கல்வி (Illam Thedi Kalvi), முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (Chief Minister’ Breakfast Scheme), புதுமைப் பெண் திட்டம் (Pudhumai Penn Thittam) போன்ற நிகழ்ச்சிகள் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. மாணவர்களுக்கான 'தமிழ்ப் புதல்வன்' (‘Tamizh Pudhalvan’) திட்டம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அதன் சுகாதார உள்கட்டமைப்பு காரணமாக 'இந்தியாவின் மருத்துவ தலைநகரம்' ( 'Medical Capital of India') என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் சுகாதார சேவைகளில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது. மக்களை தேடி மருத்துவம் (Makkalai Thedi Maruthuvam), இன்னுயிரை காப்போம் (Innuyirai Kaapom) போன்ற நிகழ்ச்சிகள் மனித வாழ்வின் மீதுள்ள மதிப்பைக் காட்டுகின்றன.உயர்கல்விக்கான இந்தியாவின் முதல் 100 இடங்களில் 19 இடங்களைப் பெற்ற மிகவும் சிறந்த கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது.


கடந்த 3 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சியில் தமிழகம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இப்போது தொழில்துறையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலமாக உள்ளது. இது 2023 ஆம் ஆண்டில் மின்னணுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் முதலிடம் பிடித்தது. எளிதாக தொழில் செய்யக்கூடிய மாநிலங்களின் தரவரிசையில் 14வது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. இந்தியாவின் 40 சதவீத பெண் தொழிலாளர்களுடன் தமிழ்நாடு புதிய முதலீடுகளையும் வேலை வாய்ப்புகளையும் ஈர்த்துள்ளது.


தமிழ்நாட்டின்  கடந்த மூன்று ஆண்டுகளில் திராவிட மாதிரி அரசு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது.


திராவிட மாதிரி (Dravidian mode) தனித்துவம் வாய்ந்தது, நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கி நூறு ஆண்டுகளாக உள்ளது. இது சமூக இட ஒதுக்கீடுகள், அனைவருக்கும் கல்வி, வேலைகள் மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் பெண்களுக்கு வாக்குரிமை ஆகியவற்றை ஆதரிக்கிறது. 1967 முதல் திமுக ஆட்சியில் இருந்தபோது பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் இதை முன்னெடுத்தனர். திராவிட மாதிரியானது சமத்துவத்தை ஊக்குவிக்கிறது மற்றும் கல்வி, உள்கட்டமைப்பு, வேலைகள் மற்றும் முதலீடுகளை உள்ளடக்கியது. இது சமூகத்தில் இடைவெளிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


திராவிட மாதிரியானது கிராமப்புற மக்களுக்கு கல்வி, வேலைகள், சுகாதாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் நகரங்களில் உள்ள அதே அணுகலை உறுதி செய்கிறது.


'எல்லாமே எல்லாருக்கும்' (‘Everything for all’) என்பதுதான் திராவிட மாதிரியின் மிக எளிமையான இலக்கணம்!


இந்தியாவின் ஒற்றுமை, அதன் பல்வேறு மொழிகளைப் பேசும் மற்றும் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட பல்வேறு மக்களுடன், கூட்டாட்சி சித்தாந்தத்தை நம்பியுள்ளது. மாநில அரசுகள் மக்களுடன் நேரடியாக ஈடுபட்டு அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துகின்றன. 1969ல் முதல்வரான தலைவர் கலைஞர், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் (State Autonomy) வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.


நீதிபதி ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில தன்னாட்சித் தீர்மானத்தை (State Autonomy Resolution) நிறைவேற்றினார். மாநில சுயாட்சியிலும், கூட்டாட்சியிலும் திமுக உறுதியாக நிற்கிறது.


ஆனால், டெல்லியில் உள்ள தற்போதைய ஒன்றிய அரசு அதிகாரத்தை மையப்படுத்தி, மாநில உரிமைகளை பறித்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம் போன்ற அதிகாரங்கள் மாநிலங்களிடமிருந்து ஒன்றியத்திற்கு மாற்றப்பட்டன. பாஜக ஆட்சியின் கீழ் தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வு (National Entrance Cum Eligibilty Test (NEET)), உதய் மின்சாரத் திட்டம் (UDAY electricity scheme) மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax ((GST) போன்ற கொள்கைகள் அதிகாரத்தை மேலும் மையப்படுத்தி, ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் மீறியுள்ளன. தமிழகம், குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம், மாநில உரிமை மற்றும் சுயாட்சிக்காக தொடர்ந்து போராடி வருகிறது.


கல்வி, சுகாதாரம், பெண்கள் நலன் போன்ற சமூக முதலீடுகளில் திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. இந்த முயற்சிகளை இலவசங்கள் என்று வகைப்படுத்தவும், அவற்றின் சமூக அக்கறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் முயற்சி நடக்கிறது. இதுபோன்ற விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?


 திராவிட முன்னேற்ற கழகம் மீதான விமர்சனங்கள் புதிதல்ல. ஆனால் அது காலாவதியானது. கலைஞர் ஆட்சியில் +2 மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கினார். அப்போது, இது ஒரு கையளிப்பு என்று விமர்சிக்கப்பட்டது. அந்த பஸ் பாஸ்கள் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வியை முடிக்க உதவியது. இப்போது, அவர்களில் பலர் தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் பதவிகளை வகிக்கிறார்கள், யூனியனுக்கு வரி பங்களிக்கிறார்கள்.அவர்களும் அவர்களது குடும்பங்களும் செலுத்தும் வரிகள் ஒன்றியத்தின் நிதிக்கு பங்களிக்கின்றன. கலைஞர் அரசு செய்தது இலவசம் மட்டும் கொடுக்கவில்லை; இது எதிர்கால சந்ததியினருக்கான முதலீடாகும். அந்த முதலீட்டின் பலனை இப்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கிறது.

 

முட்டையுடன் கூடிய சத்தான உணவு (nutritious meal), வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், விவசாயிகளுக்கு மின்சாரம் போன்ற திட்டங்கள் நீண்டகால இலக்குகளைக் கொண்டுள்ளன. மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணம் ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் ரூ.800 வரை சேமிக்க உதவுகிறது. இந்தச் சேமிப்பை மற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம் மற்றும் பெண்களின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது. வேலைகளைத் தொடரவும், சொந்தத் தொழில் தொடங்கவும், நேர்காணல்களில் கலந்து கொள்ளவும் இது அவர்களை ஊக்குவிக்கிறது.


2023 டிசம்பரில், மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளம், சென்னை உட்பட வட மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களை பாதித்தது. பேரிடர் நிவாரண நிதியை வழங்குமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன். ஆனால், அதை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ.6000 வழங்கியது. தமிழ்நாடு மத்திய அரசுக்கு வரி செலுத்துகிறது. ஆனால், செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா மட்டுமே திரும்பப் பெறுகிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டாலும், மக்களுக்கான நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.


வாகன பதிவு மற்றும் புதிய முதலீடுகள் போன்ற ஆதாரங்களில் இருந்து வரும் வருவாயைப் பயன்படுத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் மேம்பட்ட பொருளாதார நிலைமை இந்த சவால்களை சமாளிக்க உதவுகிறது.


தொடக்க இந்திய கூட்டணி கூட்டத்தின் போது, ஒவ்வொரு மாநிலத்தின் வலுவான கட்சிகளின் அடிப்படையில் நியாயமான தொகுதி பங்கீடு வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். தனிப்பட்ட காரணங்களுக்காக நிதிஷ் குமார் விலகினாலும், பீகாரில் தொகுதி பங்கீடு சுமூகமாக நடந்து வருகிறது. கூட்டணியின் முயற்சிகளுக்கு தேசிய மற்றும் மாநில கட்சிகள் பங்களித்து வருகின்றன.


தேர்தல் களத்தில், அனைத்து தரப்பினருக்கும் சவால்கள் உள்ளன, ஆனால் இந்திய கூட்டணி மக்களின் ஆதரவை வெல்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது.


பாஜக அரசு தனது நலனுக்காக விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இது பொதுமக்கள் நம்பத் தொடங்கியுள்ளது. அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) மற்றும் வருமான வரித் துறை (Income Tax Department ) போன்ற நிறுவனங்களின் வழக்குகள் பாஜக அல்லாத மாநிலங்களை குறிவைக்கின்றன. அதே, நேரத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் புகார்கள் புறக்கணிக்கப்படுகின்றன. பாஜகவில் இணைவது ஊழல் தலைவர்களின் பிம்பங்களை ஒரே இரவில் சுத்தப்படுத்துவதாகத் தெரிகிறது.


தேர்தல் நெருங்க நெருங்க, பாஜக அல்லாத தலைவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் அதிகரிக்கும், ஆனால் இந்தியா கூட்டணி அதை எதிர்கொள்ள தயாராக உள்ளது, இது பாஜகவின் குறைபாடுகளை அம்பலப்படுத்துகிறது.


ஜனநாயகத்தில் யாரும் என்றென்றும் ஆட்சி செய்ய முடியாது. விவசாயிகள் பிரச்சினைகள், தொழிலாளர் உரிமைகள், சிறு வணிகர்களின் கவலைகள், மாணவர் பிரச்சினைகள் மற்றும் சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் சாதியினரின் குறைகள் போன்ற பிரச்சினைகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக உள்ளன.


திராவிட முன்னேற்ற கழகம் பல ஆண்டுகளாக ஆளுநர் அலுவலகத்தை விமர்சித்து வருகிறது. திராவிட முன்னேற்ற கழகம், 1967 முதல் ஆளும் கட்சியாக அல்லது பிரதான எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. ஆளுநர் கண்மூடித்தனமாக விளையாடினாலும் தமிழ்நாடு அரசு தனது அரசியல் இலக்குகளை எப்படி நிறைவேற்றுகிறது?


நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மீற முடியாது என்று திமுக தொடர்ந்து கூறி வருகிறது. ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் அல்லது தேர்வு நடைமுறையில் மாநில அரசை ஈடுபடுத்த வேண்டும் என்று நாங்கள் நீண்ட காலமாக வாதிட்டு வருகிறோம். சமீபத்தில், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆளுநர்கள் அரசியல்வாதிகளைப் போல செயல்பட்டனர், ஆனால் நாங்கள் அவர்களின் அதிகாரங்களை சட்டமன்றத்திலும் நீதிமன்றத்திலும் சவால் செய்துள்ளோம். ஆளுநர்களை வைத்து ஜனநாயகத்தை சீர்குலைக்கும் இந்த முயற்சி அரசியல் சாசனத்திற்கு எந்த மரியாதையும் காட்டவில்லை மற்றும் ஜனநாயக விழுமியங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.


2024 தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெற உதவும் காரணிகளில் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், மாணவர்கள், சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் சாதியினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அடங்கும். வெல்ல முடியாதது என்ற பாஜகவின் கூற்று 2004 இல் 'இந்தியா ஒளிர்கிறது' (“Shining India”) என்ற வாதத்தை நினைவூட்டுகிறது, பின்னர்  பின்வாங்கியது. பெரிய தொழிலதிபர்களைத் தவிர பாஜக ஆட்சியில் அவர்கள் சந்தித்த இன்னல்களை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். இந்த அதிருப்தி தேர்தல் முடிவுகளை இந்தியா கூட்டணிக்கு சாதகமாக மாற்றக்கூடும்.


மு.க.ஸ்டாலின் கட்சி தலைவர் ஆனதும் , அதைத் தொடர்ந்து முதல்வரானதற்கும் கட்சி உறுப்பினர்களின் கடின உழைப்பும், மக்களின் நம்பிக்கையுமே காரணம். வாக்காளர்களை திருப்திப்படுத்தும் மற்றும் தனக்கு வாக்களித்த அனைவரையும் திருப்திப்படுத்தும் மற்றும் எங்களுக்கு வாக்களிக்காத அனைவரையும் தங்கள் முடிவுக்கு வருந்த வைக்கும் அரசாக இருக்கும் என்று முதல்வர் தனது உரையில் கூறினார். முதல்வராக இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும், திராவிட முன்னேற்ற கழகத்தை திறம்பட வழி நடத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


பாஜகவை நீங்கள் இடைவிடாது தாக்குவதாலும், அதற்கு எதிராக ஒரு தேசிய கூட்டணியை அணிதிரட்ட முயற்சிப்பதாலும் ஒன்றிய அரசு உங்களை குறிவைக்கிறது என்று நினைக்கிறீர்களா?


போராட்டங்களும் தாக்குதல்களும் எனக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தெரிந்ததுதான். ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போதெல்லாம் அதைப் பாதுகாக்க நாங்கள் எப்போதும் எழுந்து நிற்கிறோம்.


எனது தந்தை கலைஞர் கருணாநிதி தனது கொள்கைகளை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் தனது கொள்கைகளில் உறுதியாக இருந்தார் என்பதை மறைந்த பிரதமர் இந்திரா காந்தி ஒப்புக் கொண்டார். அவரது மகனாக, நான் அவரது முன்மாதிரியைப் பின்பற்றுகிறேன். நான் நல்லதை ஆதரிக்கிறேன், தீங்கு விளைவிப்பதை எதிர்க்கிறேன் என்ற கொள்கையுடன் முதலமைச்சர் பயணித்து கொண்டு இருக்கிறார்.




Original article:

Share:

தமிழ்நாட்டில் நூலக இயக்கம் -சுந்தர் கணேசன்

 தமிழ்நாடு கடந்த 100 ஆண்டுகளில் அறிவுசார் சமுதாயமாக மாறியுள்ளது. இந்த மாற்றம் கல்வியில் முதலீடுகள் மற்றும் நூலக இயக்கம் போன்ற முயற்சிகளால் ஏற்பட்டது. மாநிலத்தில் தற்போது 4661 நூலகங்கள் பொது நூலக இயக்குநரகத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.


  சமூக, இலக்கிய மற்றும் அரசியல் இயக்கங்கள் கல்விக் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்தி, தமிழகம் முழுவதும் கல்வியை அணுகக்கூடியதாக ஆக்கியுள்ளன. பல்வேறு சாதிகள் மற்றும் மதங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், கல்வியை மேலும் ஜனநாயகப்படுத்தவும் நீதிக்கட்சி வகுப்புவாத (communal G.O.) அரசாணையை வெளியிட்டது. நூலக இயக்கம், மற்ற தலையீடுகளுடன், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கியது.


கன்னிமாரா பொது நூலகம் (Connemara Public Library) இந்தியாவில் உள்ள நான்கு களஞ்சிய நூலகங்களில் (repository libraries) ஒன்றாகும். 1918 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சரஸ்வதி மகால் (Serfoji’s Saraswathi Mahal) நூலகம் தமிழகத்தின் பழமையான நூலகங்களில் ஒன்றாகும். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு திரு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்தபோது, 1948 ஆம் ஆண்டில் மெட்ராஸ் பொது நூலகச் சட்டம் (Madras Public Libraries Act) நிறைவேற்றப்பட்டது. சுதந்திர இந்தியாவில் பொது நூலகங்களுக்காக இயற்றப்பட்ட முதல் சட்டம் இதுவாகும். மெட்ராஸ் பொது நூலகங்கள் சட்டம், கல்வி அமைச்சர் தலைமையிலான மாநில நூலகக் குழு மூலம் நிர்வாகத்தை நிறுவியது. 1972 ஆம் ஆண்டில், திமுக அரசு பொது நூலக இயக்குநரகத்தை உருவாக்கி, தமிழ்நாட்டில் நூலக இயக்கத்தை பெரிதும் விரிவுபடுத்தியது மற்றும் மாநிலம் முழுவதும் ஏராளமான நூலகங்களை நிறுவ வழிவகுத்தது. தற்போது, கன்னிமாரா பொது நூலகம் சென்னை (Chennai), அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை, கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரை (Madurai) தவிர, 32 மாவட்ட மைய நூலகங்கள், 314 முழுநேர கிளை நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள், 1612 கிளை நூலகங்கள், 1915 கிராம நூலகங்கள் மற்றும் 771 பகுதிநேர நூலகங்கள் உட்பட 4661 நூலகங்கள் பொது நூலகத் துறையின் பொது நூலகத் துறையின் ( Department of Public Libraries (DPL)) கீழ் இயங்குகின்றன.


திராவிட இயக்கத்தின் அறிஞரான கே.திருநாவுக்கரசு, தமிழ்நாடு முழுவதும் சிறிய வாசிப்பு அறைகள் மற்றும் நூலகங்களை அமைப்பதில் திராவிடக் கட்சி உறுப்பினர்களின் ஈடுபாட்டை பதிவு செய்துள்ளார். தேநீர் கடைகள் மற்றும் சலூன்களில் கூட சிறிய நூலகங்கள் இருந்தன. இது ஏழைகளின் சமூக இயக்கத்திற்கு உதவுகிறது என்று திருநாவுக்கரசு கூறுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியும் இதே போன்ற முயற்சிகளில் பங்களித்தது.


2010 ஆம் ஆண்டில், அண்ணா நூற்றாண்டு நூலகம் (Anna Centenary Library (ACL)) அப்போதைய முதலமைச்சர் கலைஞர் திரு மு.கருணாநிதி அவர்களால் திறக்கப்பட்டது. இது, பல்வேறு மொழிகளில் 6.25 லட்சம் புத்தகங்களைக் கொண்டுள்ளது.  அண்ணா நூற்றாண்டு நூலகம், நாட்டின் பழமையான கையெழுத்துப் பிரதி நூலகமான கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தையும் கொண்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்கும் கட்டிடம் மற்றும் புத்தகங்களை அணுகுவதற்கான முயற்சிகளைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து வந்த அதிமுக அரசு அதை மருத்துவமனையாக மாற்ற விரும்பியபோது, நீதிமன்றம் தலையிட்டு, நூலகத்தின் சரியான பராமரிப்பை உறுதி செய்தது. 2021 ஆம் ஆண்டில், நூலகங்கள் மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்த திமுக அரசு முடிவு செய்தது. சிறிது காலமாக புறக்கணிக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம்  புதுப்பிக்க நிதி ஒதுக்கினர். 2023 ஆம் ஆண்டில், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் (Kalaignar Centenary Library (KCL)) முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதிக அளவிலான மக்களுக்கு அறிவிற்கான அணுகலை இந்த  நூலகம் உறுதி செய்கிறது. 


பொது நூலகச் சட்டத்தை புதுப்பிக்க அரசாங்கம் ஒரு குழுவை உருவாக்கியது. தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த திரு மா.ராஜேந்திரன் இந்தக் குழுவை வழிநடத்துகிறார். குழு உறுப்பினர்கள், நூலக அறிவியல், கல்வித்துறை, காப்பகங்கள் மற்றும் தொழில்நுட்ப துறை எனப் பல்வேறு துறைகளில் இருந்து வந்துள்ளனர்.   இதன் உறுப்பினர்கள் இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒரு வரைவு முன்மொழிவை அரசாங்கத்திடம் கொடுத்தனர். அது இப்போது பரிசீலனையில் உள்ளது. தற்போதைய, நூலக சட்டம் சேவைகள் தொடர்பான அனைத்து சிக்கல்களையும் தீர்க்கும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு எதிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்கும்.


பல தனியார் நூலகங்கள் அரசாங்க ஆதரவைப் பெறுகின்றன. மறைமலை அடிகள்  நூலகத்திற்கு ஆதரவு தேவை என்பதை அறிந்த கலைஞரின் அறிவுறுத்தலின் பேரில் மறைமலை அடிகள் நூலகத்தின் புத்தகங்கள் கன்னிமாரா பொது நூலகத்திற்கு மாற்றப்பட்டது. பெசண்ட் நகரில்  உள்ள உ.வே. சாமிநாத ஐயர் நூலகம் (U. Ve. Saminatha Iyer Library)  1967 இல் புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றது.


2010 ஆம் ஆண்டில் கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு, மற்றொரு முக்கியமான நூலகமான ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தை (Roja Muthiah Research Library (RMRL)) அரசு அங்கீகரித்தது. இந்த முயற்சிக்கு உள்ளூர் நூலக ஆணையக்குழுவிற்கு சொந்தமான ஒரு கட்டிடத்தை வழங்கியது. பல அரிய புத்தகங்கள் இங்கு சேமித்து பராமரிக்கப்படுகின்றன. இந்த நூலகம் புத்தகங்களைப் பாதுகாப்பதில் முன்னோடியாக திகழ்கிறது மற்றும் அதன் பல்வேறு அரிய புத்தகங்களின் மூலம் பொதுமக்களுக்கும் ஆராய்ச்சி சமூகத்திற்கும் சேவை செய்கிறது. தற்போதைய அரசு இத்தகைய நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கூடுதல் இடவசதி மற்றும் நிதியை வழங்கி வருகிறது.  புதுக்கோட்டையில் உள்ள ஞானாலயா நூலகம் (Gnanalaya Library), சென்னையில் உள்ள அடையாறு நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம், ஈரோட்டில் உள்ள மகாகவி பாரதி நினைவு நூலகம் (Mahakavi Bharathi Memorial Librar), கும்பகோணத்தில் உள்ள சிவகுருநாதன் தமிழ் நூலகம் (Sivagurunathan Tamil Library) மற்றும் தமிழ் நூல் காப்பகம், விருத்தாச்சலம் சாய் மறைகார் நூலகம் (Islamic Library) என இன்னும் பல நூலகங்கள் உள்ளன. இவை நூலக இயக்கத்தை நன்கு ஆதரிக்கின்றன. 


சென்னை பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியல் விரிவுரையாளராகவும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் (Roja Muthiah Research Library (RMRL)) முதல் இயக்குநராகவும் இருந்த சங்கரலிங்கம் புதிய நூலக இயக்கம் குறித்து பேசினார். இந்த இயக்கம் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பணிகளை உள்ளடக்கியது. 1994இல்  ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (Roja Muthiah Research Library (RMRL)) தொடங்கப்பட்டபோது, ஏற்கனவே இருந்த முந்தைய இயக்கத்தைத் தொடர்ந்து ஒரு புதிய நூலக இயக்கத்தின் ஆரம்பமானது என்று குறிப்பிட்டார்.


அரசு, அதன் முயற்சிகளில் ஒன்றாக தமிழ் இணையக் கல்விக்கழகத்தை  (Tamil Virtual Academy (TVA)) நிறுவியது. உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள், அரிய தமிழ் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை அணுக இதனைப் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாடு அரசு பொது நூலகங்களுக்கான ஒருங்கிணைந்த நூற்பட்டி (Union Catalogue for Public Libraries)  என்ற மற்றொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நூற்பட்டியல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலின் நூற்பட்டியல்களையும் ஒன்றிணைத்து, அறிஞர்களுக்குத் தேவையான நூல்களை கண்டுபிடிப்பதில்  பெரிதும் உதவுகிறது. பொது நூலகங்களின் இயக்குநரகம் மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஆகியவை இந்தத் திட்டத்தில் இணைந்து செயல்பட்டன.   இப்போதைய திமுக ஆட்சியில் உள்ளூர் நூலக ஆணைக்குழு (Local Library Authority) மற்றும் மாநில நூலகக் குழு (State Library Committee) ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.  


Original article:

Share:

வளர்ச்சி மற்றும் மக்கள் நலனை சமநிலைப்படுத்துதலில் தமிழகத்தின் முன்மாதிரி -ஏ.எஸ்.பன்னீர்செல்வன்

 தமிழ்நாட்டின் சிறப்பான அணுகுமுறை, பயனுள்ள திட்டங்களை தீட்டுதல், சமூக ஒற்றுமையை ஊக்குவித்தல், பிளவுபடுத்தும் சக்திகளை எதிர்கொள்ள  நிறுவனங்களை அமைத்தல் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது: 


திராவிட மாதிரியின் (Dravidian Model) முதல் பகுதி தனிநபர்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியம் குறித்து கவனம் செலுத்துகிறது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டாக, இந்த இயக்கம் ஆண் பெண் இடையிலான சமத்துவம், அனைவருக்கும் ஒரே மாதிரியான பொருளாதார வாய்ப்புகள், சாதி படிநிலை இல்லாமை மற்றும் மதம் அல்லது சாதியின் அடிப்படையில் பாகுபாடு இல்லை என்பதை வலியுறுத்தும் ஒரு சமத்துவ சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாதிரியில் தேசிய அரசு என்ற கருத்து அரசு எந்திரங்களால் ஒன்றிணைக்கப்படுவதைக் காட்டிலும் மக்கள் ஒன்றிணைவதை அடிப்படையாகக் கொண்டது.


இந்தியாவின் சமச்சீரான வளர்ச்சிக்கு திராவிட மாதிரியின் பங்களிப்பை, ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய "ஒரு திராவிடப் பயணம்: விவசாயத்திற்குப் பிந்தைய சமூகமாக தமிழ்நாட்டின் மாற்றத்திற்குள் ஒரு பார்வைகள்" (A Dravidian Journey: Glimpses into Tamil Nadu’s Transformation to a Post-agrarian Society), மற்றும் ஆ. கலையரசன் மற்றும் எம்.விஜயபாஸ்கர் எழுதிய "திராவிட மாதிரி: தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதாரத்தை விளக்குதல்" (The Dravidian Model: Interpreting Political Economy of Tamil Nadu) ஆகிய இரண்டு முக்கியமான புத்தகங்கள் விளக்குகின்றன.


திரு.ஜெயரஞ்சன், சமுதாயத்தையும் அறிவையும் கட்டியெழுப்ப ஆதாரங்களின் சக்தியை நம்புகிறார். பின்னர் உண்மைகளை பகுப்பாய்வு செய்து கணிப்புகளைச் செய்வதில் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப்புறப் பொருளாதாரம் விவசாயத்தை முதன்மையாகக் கொண்டதாக இல்லை என்று விளக்கமளித்துள்ளார். கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் தமிழ்நாடு எவ்வாறு தன்னை மாற்றிக்கொண்டது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றை இங்கு நினைவுகூருவது பொருத்தமானது. அவர் எழுதிய "விவசாயத்திற்குப் பிந்தைய" என்ற சொல் கிராமப்புற வாழ்வாதாரங்களில் விவசாயத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. பல கிராம குடும்பங்களை இனி 'விவசாயிகள்' என்று நாம் அழைக்க முடியாது. மக்கள் பல்வேறு வகையான வேலைகளைத் தேடி. தங்கள் கிராமங்களில் இருந்து வெளியேறி வேலைக்காக வெகுதூரம் செல்கிறார்கள். சிலர் வேலைக்காக நகரங்கள் மற்றும் மாநகரங்களுக்குச் குடிபெயற்கிறார்கள். விழுப்புரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கரும்பு வெட்டுவதற்காக நீண்ட காலமாக இடம்பெயர்கின்றனர். மேலும், 'கிராமப்புற' அல்லது 'விவசாயத் தொழிலாளர்' என்ற வகைக்கு இப்போது சிறிது அர்த்தமில்லை. இது கிராமப்புற அல்லது விவசாய உழைப்பின் வகைகளை குறைந்த பொருத்தமானதாக ஆக்குகிறது.


சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் முழுவதும், குழந்தை இறப்பு விகிதம் (infant mortality rate) மற்றும் மொத்த கருவுறுதல் விகிதம் (total fertility rate) உட்பட பல முக்கிய சுகாதாரக் குறியீடுகளுடன் ஒப்பிடுகையில், மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு மாநிலம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்பதை கல்வியாளர்கள் இன்று ஒப்புக்கொள்கிறார்கள். அதன் பொது சுகாதார அமைப்பின் ஆழமான ஊடுருவல் மற்றும் வலுவான செயல்பாட்டிற்காக இது பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மாநிலத்தின் சமத்துவ அரசியல் மற்றும் தீவிர சமூக இயக்கங்கள் காரணமாக கூறப்படுகிறது. இது, அதன் வளர்ச்சிப் பாதையை வடிவமைத்தது. அரசியலில் சமத்துவம் மீதான கவனம் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் மேம்பாடுகளுக்கு கணிசமாக பங்களித்துள்ளது. இது, சுகாதாரம், சமத்துவம் மற்றும் நீதி குறித்த தற்போதுள்ள சமூக அறிவியல் இலக்கியங்களிலிருந்து போதுமான ஆதரவைப் பெறுகிறது. திராவிட மாடல் ஏற்றத்தாழ்வைக் குறைப்பதே நோக்கம் என்பதை கலையரசனும் விஜயபாஸ்கரும் தரவுகள் மூலம் காட்டியுள்ளனர். 

1960-61 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் தேசிய சராசரிக்கு இணையாக இருந்தது, ஆனால் 2010-11 ஆம் ஆண்டில், இது தேசிய சராசரியில் 150% க்கும் அதிகமாக இருந்தது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறுமை அளவுகளும் கணிசமாகக் குறைந்துள்ளன. தேசிய சராசரியை விட அதிகமாக இருந்த தமிழகம், இப்போது நாட்டின் மூன்றாவது மிகக் குறைந்த வறுமை விகிதத்தைக் கொண்டுள்ளது. இது, அதிக தனிநபர் வருமானம் கொண்ட மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தை விட குறைவாக உள்ளது. இது பொருளாதார வளர்ச்சியை படிப்பதோடு சமத்துவமின்மையைக் குறைப்பதையும் உருமாறும் அரசியலுக்கு முக்கியமானதாக ஆக்குகிறது. கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை ஜனநாயகப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, திராவிட மாதிரியின் முக்கிய அம்சங்களை ஜெயரஞ்சன் விளக்கியுள்ளார். கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை ஜனநாயகமயமாக்குவதில் அரசாங்கக் கொள்கைகளின் வெற்றிகள் அடங்கியுள்ளன என்ற அடிப்படையில் இது செயல்படுகிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள பல்வேறு கட்டுரைகள் ஒரு தனித்துவமான வளர்ச்சி மாதிரியை முன்னிலைப்படுத்துகின்றன. அங்கு விரைவான வளர்ச்சியும் சமூக நலனும் பரஸ்பரம் பிரத்தியேகமாக தோன்றுவதற்கு பதிலாக ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன. கடந்த அறுபது ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பல்வேறு அளவுகோல்களில் தமிழ்நாடு எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 


திராவிட மாதிரி வளர்ச்சி (Dravidian Model of growth) பல முனைகளில் வெற்றி பெற்றுள்ளது மற்றும் மற்ற மாதிரிகளைப் போலல்லாமல் தனித்தனியாக இயங்கவில்லை என்ற வாதத்திற்கு ஆதரவாக நான்கு முக்கிய குறிகாட்டிகளை பரிசீலிக்கலாம். கல்வித்துறையில், மாநிலத்தின் அனைத்து குறிகாட்டிகளும் சிறப்பாக இருந்தாலும், உயர்கல்வி சேர்க்கை விகிதம் (graduate enrolment ratio (GER)) தொடர்பான தரவுகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. தமிழ்நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் (GER) 51.3%, உலகிலேயே மிக உயர்ந்த ஒன்றாகும் அமெரிக்காவில் 37%, மேலும் இது இந்தியாவின் தேசிய சராசரியான 27% ஐ விட அதிகமாக உள்ளது. பல்வேறு உறுதியான செயல் திட்டங்கள் மூலம், கிட்டத்தட்ட ஒவ்வொரு சமூகக் குழுவிற்கும் கல்வியை அரசு உறுதி செய்துள்ளது.

தொழில்துறை வளர்ச்சியைப் பொறுத்தவரை, சில பொருளாதார வல்லுநர்கள் ஒவ்வொரு குறிகாட்டிக்கும் பின்னால் உள்ள சூழலைப் புரிந்துகொள்வதை விட மொத்த எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில்துறை வளர்ச்சியில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைத் தொடர்ந்து இந்தியாவிலேயே தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.  உலக வங்கி ஆய்வின்படி, தமிழ்நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது ஏழைகளின் விகிதம் குறைவாக உள்ளது. மேலும், நுகர்வு சமத்துவமின்மை குறைந்துள்ளது. வறுமையும் கணிசமாகக் குறைந்துள்ளது. தமிழ்நாடு மிகக் குறைந்த GINI  (Gini coefficient) குறியீட்டைக் (0.32)  கொண்டுள்ளது.


மூன்றாவது பகுதி, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதும் பட்டினியை ஒழிப்பதைப் பற்றியது. தமிழ்நாட்டின் மாநில உணவுக் கொள்கை, உணவு தானியங்களை மலிவு விலையில் வழங்குவதற்கான  பொது விநியோக முறையை (Universal Public Distribution System (PDS)) நோக்கமாகக் கொண்டுள்ளது. நிர்வாக தவறுகள் இல்லாமல், உண்மையான ஏழை குடும்பங்களை பொது விநியோக முறையில் (PDS) சேர்ப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. தற்போது, 33,222 நியாய விலைக் கடைகள் 1.98 கோடி குடும்பங்களுக்கு சேவை செய்து வருகின்றன.  இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டம் தானியங்களை ஒரு உரிமையாக அணுகுவதன் மூலம் மக்களின் சுயமரியாதையை அதிகரிக்கிறது.

நான்காவது பகுதி, பாலின நீதியை அடைவது. பெண்களுக்கு வாரிசு உரிமை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீட்டை வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். குறைந்து வரும் கருவுறுதல் விகிதங்கள் மற்றும் மிகக் குறைந்த தாய்சேய் இறப்பு விகிதம் ஆகியவற்றில் பாலின சமத்துவம் தெளிவாகத் தெரிகிறது. இது உயர் கல்வி, திருமணம், வாழ்க்கைத் துணை தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகளில் பெண்களின் வாழ்க்கையில் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பாலின சமத்துவமின்மையும் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் சமூகக் குறிகாட்டிகள் ஈர்க்கக்கூடியவை, ஏனெனில் இந்தியாவின் பல பகுதிகளைப் போலல்லாமல், பிரிவினைக்கு பதிலாக சமூக ஒற்றுமைக்கு மாநிலம் முன்னுரிமை அளிக்கிறது. சமூக நீதி, சகிப்புத்தன்மை, அனைவருக்கும் சம உரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் திராவிட மாதிரி (Dravidian Model)  இந்தியாவுக்கே முன்மாதிரியாக மாறியுள்ளது.

திராவிட மாதிரியின் மூன்று தூண்கள்:


  • திறன்மிக்க திட்டங்கள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய கட்டமைப்பை உருவாக்குதல்

  • ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதன் மூலம் சமூக ஒற்றுமை அடையப்படுகிறது. இந்த செயல்முறை அறிவாற்றல் மற்றும் அறிவின் அடிப்படையில் ஒரு சமூகத்திற்கு ஏற்ற குடிமக்களை உருவாக்க உதவுகிறது.

  • மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகளை எதிர்த்துப் போராட நிறுவனங்கள் குறிப்பிட்ட முறைகளைப் பயன்படுத்துகின்றன. அந்நிறுவனங்கள் அமைதி மற்றும் ஒற்றுமையின் நீடித்த சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.



Original article:

Share: