ஒரு காலநிலை நெருக்கடி (climate crisis) செயல்திட்டம் முக்கியமானதாகவே தொடர்கிறது. -ஜெரின் ஓஷோ

 வாக்காளர்களின் கோரிக்கைகளில் சேர்க்கப்பட்டிருந்தாலும், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காலநிலை நெருக்கடி புறக்கணிக்கப்பட்டது. 


2030-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் காலநிலை இலக்குகளுக்கு அடுத்த ஐந்தாண்டுகள் முக்கியமானவை. சூரிய சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், இந்தியா இன்னும் நிலக்கரியை பெரிதும் நம்பியுள்ளது. சுத்தமான ஆற்றல் மின்சாரத்தில் 22% மட்டுமே உள்ளது. வெப்ப அழுத்தத்தைக் குறைத்தல், காற்றின் தரத்தை மேம்படுத்துதல், கழிவுகளை நிர்வகித்தல் மற்றும் ஆற்றல் செயல்திறனை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எரிசக்தி தேவை அதிகரித்து வருவதால்,  இந்தப் பிரச்சனைகளை விரைவாகச் சமாளிக்க இந்தியாவுக்கு வலுவான கொள்கைகள் தேவை. காலநிலை நடவடிக்கையை  கருத்தில் கொண்டு  இந்தியாவின் கார்பன் சந்தையில் விரைவாகச் செயல்படுதல் மற்றும்  வணிகங்களை ஊக்குவித்தல்  முக்கியம். இந்தியா தனது கார்பன் சந்தையை  மேம்படுத்த விரைந்து செயல்பட வேண்டும். 


 மாசுபடுத்திகளைத் தணித்தல்


இந்தியா வெப்ப அலைகளால் மிகவும் பாதிக்கப்படுகிறது. விரைவில், இது மனித உயிர்வாழ்வதற்கு ஆபத்தான வெப்ப அலைகளை விரைவில் எதிர்கொள்ளக்கூடும். இதை நிவர்த்தி செய்ய, கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகள் மற்றும் மீத்தேன், கருப்பு கார்பன் மற்றும் ஹைட்ரோஃப்ளூரோ கார்பன்கள் (hydrofluorocarbons) போன்ற குறுகிய கால மாசுபாடுகள் இரண்டையும் குறைப்பது முக்கியம். இந்த மாசுபடுத்திகள், குறிப்பாக மீத்தேன், குறுகிய காலத்தில் கார்பன் டை ஆக்சைடை விட அதிக வெப்பத்தை சிக்க வைக்கிறது. இந்த மாசுபடுத்திகளை வெட்டுவது  கார்பன் டை ஆக்சைடைக் குறைப்பதை விட உடனடி வெப்பமயமாதலை நிறுத்தலாம். 


காலநிலை பிரச்சனையை மாசுபடுத்திகள் அல்லது துறைகள் போன்ற சிறிய பகுதிகளாக பிரிப்பது தீர்வுகளை மிகவும் பயனுள்ளதாக மாற்றும். பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு நியாயமான தனிப்பயனாக்கப்பட்ட ஒப்பந்தங்கள் சிறந்த முடிவுகளுக்கு பாரிஸ் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படலாம். மாண்ட்ரீல் நெறிமுறை வெற்றிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதி வலிமையான F-வாயுக்களை (F-gases) குறிவைக்கும் அதன் கிகாலி திருத்தம், நூற்றாண்டின் இறுதியில் 0.5°C வெப்பமயமாதலை தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த கவனம் மீத்தேன் மீது இருக்க வேண்டும். இது 2040-ஆம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 0.3°C வெப்பமயமாதலை தடுக்கும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா தலைமையிலான ஒரு புதிய ஒப்பந்தம் 2030-ஆம் ஆண்டுக்குள் மீத்தேன் உமிழ்வை கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்கு நிறுவனங்கள் குறைக்கும்.


  எரிவாயு பிடிப்பு மற்றும் பயோகேஸ் போன்ற திட்டங்கள் மூலம் மீத்தேன் உமிழ்வைக் குறைப்பது மலிவு மற்றும் மிகவும் தீங்கு விளைவிக்கும் பசுமை இல்ல வாயுக்களில் (greenhouse gases (GHGs)) ஒன்றைக் குறைக்கும். இதன் மூலம் நகர்ப்புற சுகாதாரத்தையும் மேம்படுத்த முடியும். கருப்பு கார்பன் போன்ற குறுகிய கால காலநிலை மாசுபாட்டைக் (short-lived climate pollutants) குறைப்பது மற்றும் தேசிய தூய்மையான காற்று திட்டத்தை (National Clean Air Programme) வலுப்படுத்துவது காற்றின் தரம் மற்றும் பொது சுகாதாரத்தை பெரிதும் மேம்படுத்தும். காற்று மாசுபாடு என்பது ஆண்டு முழுவதும் ஏற்படும் பிரச்சினை மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை தேவை என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். 


காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கு ஐந்து முக்கியமான நடவடிக்கைகள் தேவை: கூட்டுப் பொறுப்பு, தூய்மையான காற்று முயற்சிகளில் முதலீடு, நிலையான வளர்ச்சியை ஒருங்கிணைத்தல், துல்லியமான நடவடிக்கைகளுக்கு தரவைப் பயன்படுத்துதல் மற்றும் சுத்தமான காற்றை பொருளாதார இயக்கியாகப் பார்த்தல். பயனுள்ள தீர்வுகளுக்கு ஒருங்கிணைந்த முயற்சிகள், சிறந்த கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் தேவை. அனைவருக்கும் சுத்தமான காற்றின் பொருளாதார மற்றும் சுகாதார நன்மைகளை முன்னிலைப்படுத்துவது முக்கியம். கிகாலி திருத்தத்தின்படி, சிறந்த எரிசக்தி செயல்திறனுக்கு, விரைவான டிகார்பனைசேஷன் (decarbonisation) மற்றும் குறைந்த புவி வெப்பமடைதல் குளிர்பதனங்களை ஏற்றுக்கொள்வது ஆகியவை பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கு முக்கியம். 


 கார்பன் சந்தைகளின் (Importance of carbon markets) முக்கியத்துவம் 


கார்பன் சந்தைகள் உமிழ்வைக் குறைப்பதற்கான நிதி வெகுமதிகளை வழங்குவதன் மூலம் பசுமை இல்ல வாயுக்களை (greenhouse gases (GHGs)) குறைக்க உதவும். உலக வெப்பநிலை 1.5-2 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்வதைத் தடுக்க, குறைந்தபட்சம் 43% பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்க வேண்டும். இந்தக் குறைப்புகளைச் செய்வதற்கு கார்பன் சந்தைகள் முக்கியமானவை. இந்தியா 2026--ஆம் ஆண்டில் 'இந்திய கார்பன் சந்தையை' (‘India Carbon Market’) தொடங்க திட்டமிட்டுள்ளது. இது அதன் காலநிலை இலக்குகளை அடையவும், 2030--ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய உமிழ்வு வர்த்தக அமைப்பாக மாறவும் உதவும். இந்தியாவில் வலுவான கார்பன் சந்தை அடுத்த 50 ஆண்டுகளில் $35 டிரில்லியன் காலநிலை தொடர்பான செலவுகளை சேமிக்கும்.  


விரைவான காலநிலை நடவடிக்கையை ஊக்குவிக்க, நாம் நிதி ஊக்குவிப்பு மற்றும் கார்பன் வர்த்தகத்திற்கான விரிவான அணுகுமுறையை உருவாக்க வேண்டும். தற்போது, ​​அனைத்து காலநிலை மாசுபடுத்திகளும் கார்பன் டை ஆக்சைடு சமமானவைகளாக அளவிடப்படுகின்றன. ஆனால், பல்வேறு மாசுபடுத்திகளின் பல்வேறு விளைவுகளை மறைக்கிறது. மீத்தேன் மற்றும் கருப்பு கார்பன் போன்ற குறுகிய கால மாசுக்களிலிருந்து தனித்தனியாக கார்பன் டை ஆக்சைடு போன்ற நீண்ட கால மாசுபடுத்திகளை அளவிடுவது ஒரு சிறந்த முறையாகும். இந்த வழியில், ஒவ்வொரு மாசுபாட்டிற்கும் வெவ்வேறு நடவடிக்கைகளை உருவாக்கலாம் மற்றும் அவற்றின் குறிப்பிட்ட தாக்கங்களைப் புரிந்து கொள்ளலாம்.


இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அவசியமானவை மற்றும் நல்ல ஒருங்கிணைப்புடன் பெரிய அளவில் செய்யப்பட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதையும், காலக்கெடுவை உறுதிசெய்வதையும் வலுவான அதிகாரங்களைக் கொண்ட அதிகாரம் இந்தியாவுக்குத் தேவை. அரசாங்கத்தின் வெவ்வேறு மட்டங்களுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்புக்கு இது அவசியம்.

 

தவறவிட்ட வாய்ப்பு


2024 மக்களவைத் தேர்தலில், வளர்ந்து வரும் பருவநிலை நெருக்கடி குறித்து வாக்காளர்கள் கேள்விகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டது. காலநிலை நடவடிக்கைக்கான கட்சி வாக்குறுதிகள் மிகவும் பலவீனமாக இருந்தன.  வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் போது இந்த புறக்கணிப்பு நடக்கிறது.  கடுமையான வெப்பம் காரணமாக குறைந்த வாக்குப்பதிவு ஏற்பட்டது. ஏழைகள், வேலையின்மை, விவசாயப் பிரச்சினைகள் மற்றும் அதிக வாழ்க்கைச் செலவுகளை எதிர்கொள்கின்றனர். இது சமத்துவமின்மையை அதிகரிக்கும். மேலும், உயிர்வாழ்வில் கவனம் செலுத்துகிறது. மேற்கு நாடுகளைப் போலன்றி, இந்தியாவில் 'பசுமைக் கட்சி' ( ‘green party’) இல்லை.  மேலும்,  காலநிலை பிரச்சினைகள் அன்றாட வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்பட்டதாகத் தெரிகிறது.


காலநிலை முன்னேற்றத்தில் (Climate-progressive) கவனம் செலுத்தும் தலைவர்கள் இந்தியாவின் சுற்றுச்சூழலை மேம்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும். அவர்கள் அதற்கான செயல்களை  இன்னும் அதிகமாக செய்ய வேண்டும். காலநிலை நடவடிக்கையை அவர்களின் அரசியல் திட்டங்களின் முக்கிய பகுதியாக மாற்ற வேண்டும்.

 

ஜெரின் ஓஷோ ஆளுகை மற்றும் நிலையான மேம்பாட்டு நிறுவனத்தில் இந்தியா திட்டத்தின் இயக்குநர்.



Original article:

Share:

இந்தியாவின் அதிக மக்கள்தொகை, இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்கிறது -சுப்ரகாந்த் பாண்டா

 இளைஞர்கள் மற்றும் நாட்டில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகளை  அனைவருக்கும் வழங்குவது கடினம். தற்போது இந்தியா எதிர்கொள்ள கூடிய மிக பெரிய  சவாலாக  இது உள்ளது. 


இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடக மாறி வருகிறது. இது உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் மற்றும் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இந்த வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் இந்தியாவின் மக்கள்தொகை. சராசரி வயது சுமார் 28 ஆண்டுகள், மற்றும் மக்கள்தொகையில் 63% வேலை செய்யும் வயதுடையவர்கள் ஆவர்.


இருப்பினும், 2022-ல், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 55.2% ஆக இருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization (ILO)) அறிக்கையின்படி, உற்பத்தி துறையை விட சேவைத் துறையில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால் இந்த குறைந்த விகிதம் சாத்தியம் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு குறிப்பிடுகிறது. எனவே, "வேலையில்லா வளர்ச்சியை" எதிர்கொள்ளவில்லை என்றாலும், இளைஞர்கள் முழுமையாகப் பயனடைய இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


சீர்திருத்த கொள்கைகளை தொடரவும் 


முதலாவதாக, இந்தியா தனது வளர்ச்சியைத் தக்கவைக்க அல்லது விரைவுபடுத்த அதன் தற்போதைய சீர்திருத்தங்களைத் தொடர வேண்டும்.  இது பல புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நிதிநிலை அறிக்கை உரையில் இதை குறிப்பிட்டு, உற்பத்தியை மேம்படுத்தி, சந்தைகள் மற்றும் துறைகளை மேலும் திறமையாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.


ஒன்றிய அரசு வணிகத்தை எளிதாக்கியுள்ளது. மாநில அரசுகள் இப்போது உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தச் சீர்திருத்தங்களைத் தொடரவும் விரிவுபடுத்தவும் ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

 

2023-24-ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை, தொழில்நுட்பம் மூலதனத்தையும் உழைப்பையும் பயன்படுத்துவதை மாற்றியுள்ளது என்று கூறுகிறது. உற்பத்தியின் ஒவ்வொரு அலகுக்கும் தேவையான மூலதனத்தின் அளவு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் ஒரு தொழிலாளிக்கான மூலதனத்தின் அளவு அதிகரித்து வருகிறது. 16-வது நிதிக் குழுவின் தலைவரான பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகாரியா (Arvind Panagariya), இந்தியாவில் ஏராளமான உழைப்பாளிகள் இருப்பதால், மூலதனம் சார்ந்த வளர்ச்சி ஏற்படும் என்ற எண்ணம் இந்தியாவுக்கு உகந்தது அல்ல என்று சமீபத்தில் குறிப்பிட்டார்.

 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (Micro, Small, and Medium Enterprises (MSMEs)) பல்வேறு பணிகளுக்கு முக்கியமானவை. பழைய தொழிலாளர் சட்டங்களின் அதிக சுமை மற்றும் செலவுகள் காரணமாக பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சியடையவில்லை. பெரிய நிறுவனங்களும் இதே காரணத்திற்காக உழைப்பு மிகுந்த துறைகளைத் தவிர்க்கின்றன. நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய தொழிலாளர் குறியீடுகளை அமல்படுத்துவதில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களுக்கு தவறான செய்திகளை அனுப்புகிறது. வலுவான உற்பத்தித் துறைகளைக் கொண்ட சில மாநிலங்கள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதும் முக்கியம்.

 

45% தொழிலாளர்கள் விவசாயத்தில் உள்ளனர். ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 18% மட்டுமே பங்களிப்பதால் உற்பத்தியை அதிகரிக்க ஒன்றிய அரசின் பங்களிப்பு வருகிறது. விவசாய உற்பத்தியை மேம்படுத்துவது முக்கியம் என்றாலும், அமைப்புசாரா மற்றும் விவசாயம் அல்லாத துறைகளில் உள்ள 19% தொழிலாளர்கள் மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்தத் துறைகள் குறைந்த உற்பத்தித் திறன் கொண்டவை. பொம்மைகள், ஆடைகள், சுற்றுலா மற்றும் தளவாடங்கள் போன்ற உயர் வளர்ச்சித் துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியா சிறந்த வேலைகளை உருவாக்க முடியும். திறன்கள் மேம்படும்போது, மதிப்புச் சங்கிலியை நகர்த்துவதற்கும் அதிக ஊதியம் பெறும் வேலைகளை வழங்குவதற்கும் வாய்ப்புகள் உருவாகும். 

 

திறன் வளர்ப்பு என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை


எதிர்கால சந்ததியினரை உற்பத்தி செய்யத் தயார்படுத்துவதில் திறன் மிக முக்கியமானது. 15-29 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களில் 4.4% பேர் மட்டுமே முறையாக திறமையானவர்கள் என்று பொருளாதார ஆய்வு காட்டுகிறது. பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான வலுவான கூட்டாண்மை மூலம் அதிக உழைப்பு மற்றும் திறன் குறைபாடு ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்ய வேண்டும். வணிகங்கள் பயிற்சித் திட்டங்களை வடிவமைக்கவும், அனுபவத்தை வழங்கவும் உதவ வேண்டும். கூடுதலாக, திறன் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக இருக்க வேண்டும், நெகிழ்வான அமைப்புகளை கற்பிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.  


அடிப்படை மற்றும் விமர்சன சிந்தனை திறன்களை வலியுறுத்தும் 2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட  புதிய கல்விக் கொள்கை (New Education Policy (NEP)) ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும். இருப்பினும், வேகமாக மாறிவரும் உலகில், கொள்கை தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டும். 


 செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI)) மற்றும் இயந்திர கற்றலின் (machine learning (ML)) தாக்கம்


செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் யுகத்தில், அடிக்கடி மேற்கொள்ளப்படும் வேலைகள் மிகவும் ஆபத்தில் உள்ளன. இருப்பினும், இந்த வேலைகளை மேற்பார்வை செய்வதற்கு மனிதனின் உதவி தேவைப்படும்.   செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலின் நன்மைகள் மற்றும் சவால்கள் இரண்டையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். அதன் பயன்பாட்டை வழிநடத்தவும் அதன் நன்மைகளைப் பயன்படுத்தவும் சரியான விதிமுறைகளை உருவாக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் கணிசமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


2030-ஆம் ஆண்டுக்குள் $826.73 பில்லியன் சந்தையாக மாறும் என்று Statista மதிப்பிடுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலில் இந்தியா ஏற்கனவே இரண்டாவது பெரிய திறமைக் நிலையைக் கொண்டுள்ளது என்று நாஸ்காம் குறிப்பிடுகிறது. ஆனால், விநியோகத்திற்கும் தேவைக்கும் இடையே 51% இடைவெளி உள்ளது. எனவே, இது மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இளைஞர்களை குறிப்பிட்ட ஊதியத்துடன் வேலையில் அமர்த்துவது என்பது எளிதானது அல்ல. ஆனால், வயதான ஒருவரை உதவியாளராக அமர்த்துதல் என்பது  சவாலானது.  இந்தியா இதில் சிறப்பான இடத்தில் உள்ளது.  இந்தியாவின் மக்கள்தொகை உலகத்தின் நன்மைக்காகப் பயன்படுத்துவதற்காக ஒரு முழுமையான அணுகுமுறையைப் பயன்படுத்த வேண்டும்.


சுப்ரகாந்த் பாண்டா, இந்தியன் மெட்டல்ஸ் மற்றும் ஃபெர்ரோ அலாய்ஸ் லிமிடெட் (Indian Metals and Ferro Alloys Limited (IMFA) நிர்வாக இயக்குநர்.



Original article:

Share:

மின்சார வாகனங்களுக்கான இ-டிரைவ் ஊக்கத்தொகை குறைவாக உள்ளது

 இந்த ஏப்ரல் மாதத்துடன் இந்த ஏப்ரலில் முடிவடைந்த ஐந்தாண்டு FAME-2 திட்டத்தின் கீழ் அனைத்து தனியார் வாகனங்களுக்கான ஊக்கத்தொகை குறைவாக உள்ளது.


பிரதமரின் E-DRIVE திட்டம் (புதுமையான வாகன மேம்பாட்டில் மின்சார இயக்கி புரட்சி (Electric Drive Revolution in Innovative Vehicle Enhancement)) கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த திட்டம் நிதி ஒதுக்கப்படும் விதத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. தனியார் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நிதி இப்போது மின் பேருந்துகள், கட்டணம் வசூலிக்கும் உள்கட்டமைப்பு மற்றும் சோதனை முகவர் ஆகியவற்றை ஆதரிக்கும்.


₹10,900 கோடி நிதிநிலை அறிக்கை கொண்ட இந்த இரண்டு ஆண்டு திட்டத்தின் ஆச்சரியமான பகுதி என்னவென்றால், இதில் இ-கார்களுக்கான எந்த ஆதரவையும் சேர்க்கவில்லை.


உண்மையில், ஏப்ரலில் முடிவடைந்த ஐந்தாண்டு FAME-2 (மின்சார வாகனங்களின் விரைவான கடைபிடிப்பு மற்றும் உற்பத்தி) திட்டத்துடன் ஒப்பிடுகையில், தனியார் வாகனங்களுக்கான ஊக்கத்தொகை இப்போது குறைவாக உள்ளது. மின்சார வாகனங்களை (EV) மேம்படுத்துவதற்கான புதிய கொள்கையின் முயற்சிகள் பலவீனமாகத் தெரிகிறது. தனியார் வாகனங்களுக்கான மின்சார வாகனங்களுக்கான ஆதரவு படிப்படியாக தேவையின் அடிப்படையில் மானியங்களிலிருந்து பிரிக்கப்படும் என்று தெரிகிறது. இங்கே இரண்டு முக்கிய யோசனைகள் இருப்பதாகத் தெரிகிறது:


1. எரிபொருளில் இயங்கும் பேருந்துகள் மற்றும் லாரிகளை மாற்றுவது முக்கியம். ஏனெனில், அவை அதிக மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.


2. கார் உரிமையாளர்கள் வாகனத்தின் விலையை விட ‘தொலைவை எட்டும் கவலை’ (range anxiety) எனும் அருகிலுள்ள சார்ஜிங் ஸ்டேஷனுக்கான தூரம் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள்.


இதில், முதல் யோசனை ஏற்கத்தக்கக்கூடியதாக உள்ளது. ஆனால், இரண்டாவது ஏற்புடையதாக இல்லை.


E-DRIVE இன் கீழ் e-2Ws இன் தனிப்பட்ட வாங்குபவர்களுக்கான மானியங்கள் ஜூன் 2023 இல் குறைக்கப்பட்டது. இருப்பினும், e-2W விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படவில்லை. இது e-2Ws இன் பங்கு நிதியாண்டின் இறுதிக்குள் 5% லிருந்து 7% ஆகவும் FY26 க்குள் 10% ஆகவும் இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.


e-2W விற்பனையை இயக்கும் முக்கிய காரணி பெட்ரோல் விலை. பேட்டரி விலை குறைந்தால், குறைந்த மானியங்களுடன் கூட e-2Ws போட்டித்தன்மையுடன் இருக்கும்.


இதன் காரணமாக, e-2Ws (25%) உடன் ஒப்பிடும்போது, ​​இ-பேருந்துகளுக்கான அதிக ஒதுக்கீடு (E-DRIVE பட்ஜெட்டில் 40%) கவனமாகக் கருதப்பட வேண்டும். மின்-பேருந்துகள் ஆற்றலின் திறமையான பயன்பாடு, குறைக்கப்பட்ட உமிழ்வுகள் மற்றும் பேட்டரி உற்பத்தியில் சாத்தியமான பொருளாதாரங்கள் போன்ற பலன்களை வழங்குகின்றன. இது மேம்பட்ட பேட்டரி கலங்களுக்கான இந்தியாவின் ஊக்கத் திட்டத்தை ஆதரிக்கும்.


இ-டிரைவ் திட்டத்தில் இருந்து கார்களை விலக்குவது புதிராக உள்ளது. FAME-2 நிதிநிலை அறிக்கையில் ₹11,500 கோடியில் கார்களுக்கு சுமார் 6 சதவீதம் ஒதுக்கப்பட்டது. இ-டிரைவ் திட்டமானது, FAME 2-ல் 10 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, ​​உள்கட்டமைப்பை சார்ஜ் செய்வதற்கு 18 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் உள்கட்டமைப்புக்கான இந்த அதிகரித்த ஒதுக்கீடு மறைமுகமாக மின்சார-கார்களுக்கு பயனளிக்கும். ஆனால், அது போதுமானதாக இல்லை. 


ஆற்றல் திறன் பணியகம் (Bureau of Energy Efficiency) இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மின்-கார்களுக்கு மென்மையான ஆணைகளை அமைத்தது. இ-டிரைவ் திட்டத்தில் இருந்து இ-கார்களை விலக்குவது தற்போதுள்ள உள் எரிப்பு இயந்திரம் (Internal Combustion Engine) வாகன உற்பத்தியாளர்களுக்கு பயனளிக்கும். மின்சார வாகன ஏற்பு வளர்ந்து வருவதால், உலகளாவிய வாகன மையமாக மாறுவதற்கான இந்தியாவின் இலக்கையும் இந்த கொள்கை மாற்றம் தடுக்கக்கூடும். 


ஆணைகள் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். மேலும், இ-டிரைவ் திட்டத்தில் மின்-கார்களுக்கான மானியம் பரிசீலிக்கப்பட வேண்டும். கூடுதலாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கூறு பகல் நேரங்களில் அதிகமாக இருப்பதால், பகலில் சார்ஜ் செய்வதை ஊக்குவிப்பது நல்லது. ஒட்டுமொத்தமாக, ஒரு விரிவான தூய்மையான வாகனக் கொள்கை இன்னும் உருவாக்கப்பட்டு வருகிறது மற்றும் இன்னும் பல கூறுகள் இறுதி செய்யப்படவில்லை.



Original article:

Share:

மத்திய கிழக்கு மீதான பார்வை | இந்தியா - ஐக்கிய அரபு அமீரக உறவுகள் குறித்து . . . -பஷீர் அலி அப்பாஸ்

 இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் (மற்றும் பிரான்ஸ்) இதற்கு முன்பு (2022 முதல்) அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து விவாதித்திருந்தாலும், Emirates Nuclear Energy Corporation (ENEC)-Nuclear Power Corporation of India Limited (NPCIL) ஒப்பந்தம் முன்னோடியில்லாதது. 


செப்டம்பர் 9 அன்று, அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது, இந்தியாவிற்கு இரண்டுநாள் பயணத்தை மேற்கொண்டார். அவருடன் வணிகத்துறை அதிகாரிகளும் வந்திருந்தனர். இந்த பயணத்தின்போது, ​​இந்திய தொழில் அதிபர்களை சந்தித்து பேசியதுடன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேசினார்.


மோடி குறைந்தபட்சம் ஏழு முறை ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பயணம் மேற்கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அதிபர்களைச் சந்தித்துள்ளார். இருப்பினும், அபுதாபி பட்டத்து இளவரசரின் முதல் இந்தியா வருகை இதுவாகும். ஐக்கிய அரபு அமீரகம் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சிறந்த வர்த்தக நட்பு நாடுகளில் ஒன்றாக உள்ளது. இது மிகப்பெரிய இந்திய புலம்பெயர்ந்த மக்களைக் கொண்டுள்ளது. இது பணம் அனுப்புவதில் சுமார் 18% பங்களிக்கிறது. ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவுடனான தனது பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளை படிப்படியாக விரிவுபடுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே 2022 முதல் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (Economic Partnership Agreement) மற்றும் பிப்ரவரி 2024-ல் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவமான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தையும் (unique Bilateral Investment Treaty) கொண்டுள்ளது.


இயற்கையாகவே, ஷேக் காலித்தின் புது தில்லி பயணம் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கும் (Abu Dhabi National Oil Company), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corporation Limited) நிறுவனத்திற்கும் இடையிலான 15 ஆண்டுகால ஒப்பந்தம் உட்பட பல கணிசமான ஒப்பந்தங்களை உருவாக்கியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பராக்கா அணுமின் நிலையத்தின் (Barakah Nuclear Power Plant) செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக இந்திய அணுமின் கழகம் மற்றும் அமீரக அணுசக்தி நிறுவனம் (Emirates Nuclear Energy Corporation (ENEC)) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகம் (மற்றும் பிரான்ஸ்) இதற்கு முன்பு (2022 இல் முதல்) அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து விவாதித்திருந்தாலும், ENEC-NPCI ஒப்பந்தம் முன்னோடியில்லாதது. 


புவிசார் அரசியல் பிரதிபலிப்பின் வரலாறு 


கடந்த 10 ஆண்டுகளில், ஷேக் முகமது பின் சயீத்துடன், பிரதமர் மோடி ஒரு சிறப்பு உறவைப் பெற்றுள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரியில் அவரை தனது "சகோதரர்" (brother) என்று அழைத்தார். MBZ, சவுதி அரேபியாவின் MBS போன்றது, அபுதாபியின் பட்டத்து இளவரசராக இருக்கும்போதே அமீரகத்தின் தலைமை நிர்வாகியாக ஆனார். அவரது தலைமையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற நாடுகளுக்கு இடையேயான உறவு வளர்ந்துள்ளது. இது மத்திய கிழக்கில் மிகப் பெரிய இந்துக் கோயிலான அபுதாபியில் BAPS கோயில் கட்ட வழிவகுத்தது. அதற்கு பதிலாக, சந்தர்ப்பம் எழும்போதெல்லாம் ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறப்புத் தேவைகளுக்கு சேவை செய்யும் திறனை இந்தியா காட்டியுள்ளது. இந்திய கடற்படை கமாண்டோக்கள் துபாயின் மகுட இளவரசரின் மகளை (இளவரசி லத்தீஃபா) 2018-ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு "திருப்பித் தர" (return) உதவியதாகக் கூறப்படுகிறது. 


மிக முக்கியமாக, இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் பிராந்தியங்களில் புதிய உள்ளூர் புவிசார் அரசியல் ஒழுங்குகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரை, புதிய பிராந்திய கட்டமைப்புகளை உருவாக்குவதில் இந்தியா ஒரு ஆரம்ப மற்றும் நெருங்கிய நட்பு நாடாக இருந்தது. இந்த கட்டமைப்புகள் இஸ்ரேலுடனான ஆபிரகாம் ஒப்பந்தங்களிலிருந்து (Abraham Accords) பயனடைந்தன. அவை அமெரிக்காவால் எளிதாக்கப்பட்டன. ஜூலை 2022-க்குள் I2U2 கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தக் கூட்டாண்மை குறிப்பாகத் தெளிவாகத் தெரிகிறது.



I2U2 குழு - என்பது இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் குழுவாகும்.


இந்தியாவைப் பொறுத்தவரை, அபுதாபி புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய இரண்டுடனும் வலுவான உறவுகளைப் பேணி வந்தாலும், பாகிஸ்தானுக்கு எதிரான காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஐக்கிய அரபு அமீரகம் தீர்க்கமாக சாய்ந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் ஜம்மு & காஷ்மீர் மீதான இந்திய உணர்வுகளை மதிக்கும் குறிப்பிடத்தக்க திறனைக் காட்டியது மட்டுமல்லாமல், காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் ஜம்மு & காஷ்மீரில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் ஒரு நட்பு நாடாக இருந்து வருகிறது. 


2019-ம் ஆண்டில் A370 ரத்து செய்யப்பட்ட 19 நாட்களுக்குப் பிறகு ஒரு பயணத்தின்போது மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயர்ந்த குடிமகன் விருதைப் (highest civilian honour) பெற்றாலும், ஐக்கிய அரபு அமீரகம் தளமாகக் கொண்ட இந்திய வணிக முதன்மையாளரான யூசுப் அலி 2019-க்குப் பிந்தைய புதிய பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொள்ளும் முக்கிய முதலீட்டாளர்களில் ஒருவராக உள்ளனர். அலியின் லுலு குழுமம் 2023-ம் ஆண்டில் புதிய ஸ்ரீநகர் மாலில் ஜம்மு & காஷ்மீரின் முதல் ஹைப்பர் மார்க்கெட்டைத் திறக்க 250 கோடி திட்டத்தை அறிவித்துள்ளது. இதேபோல், பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தொடர்ச்சியான நடந்து வரும் மற்றும் விரிவடைந்து வரும் போர், இந்தியா-மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor (IMEEC)) எந்த நேரத்திலும் விரைவில் தொடங்கும் என்ற நம்பிக்கையை முற்றிலும் சிதைத்தாலும், இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கண்டம் விட்டு கண்டம் தாண்டிய வர்த்தக வழித்தடத்தை தொடங்க முன்னெடுத்துள்ளன. 


இஸ்ரேல், அரபு நாடுகள் மற்றும் ஈரானுக்கு இடையில் இந்தியா ஒரு சமநிலையை உருவாக்கியிருந்தாலும், அதன் மிக விரிவான கூட்டாண்மை அரேபியர்களுடன் (குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம்) உள்ளது. இஸ்ரேலுடனான பாதுகாப்பு-கனரக கூட்டாண்மை (defence-heavy partnership) மற்றும் ஈரானுடனான சபாஹார்-மையப்படுத்தப்பட்ட (Chabahar-focused relationship) தொடர்பு ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவை. 


2022-2023 நிதியாண்டில் இந்தியா-இஸ்ரேல் வர்த்தகம் 10.77 பில்லியன் டாலராக உயர்ந்திருந்தாலும், அது 2023-2024 நிதியாண்டில் 6.53 பில்லியன் டாலராக கடுமையாக சரிந்துள்ளது. இது பிராந்திய மோதலுக்கு இருதரப்பு வர்த்தகத்தின் பாதிப்பை அம்பலப்படுத்தியது. இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா-இஸ்ரேல் இடையேயான ஒட்டுமொத்த வர்த்தக அளவுகள் ஒப்பிட முடியாத அளவில், வெவ்வேறு துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், இரண்டு நிதியாண்டுகளுக்கு இடையிலான பிராந்திய உறுதியற்ற தன்மையின் விளைவாக விகிதாச்சார அளவில் வர்த்தக வீழ்ச்சியில் உள்ள வேறுபாடு குறிப்பிடத்தக்கது. இந்தியா - ஐக்கிய அரபு அமீரக வர்த்தக அளவு 2022-2023-ல் 84.84 பில்லியன் டாலரிலிருந்து 2023-2024-ல் 83.65 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. 


வளைகுடாவில் அணுசக்தி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. மார்ச் 2020-ல், ஐக்கிய அரபு அமீரகம் தனது நான்கு புதிய அணு உலைகளில் ஒன்றில் பராக்கா ஆலையில் எரிபொருள் கம்பிகளை ஏற்றியது. இந்த நடவடிக்கை மற்ற வளைகுடா முடியாட்சிகள் மற்றும் பரந்த பிராந்தியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பணக்கார அரபு எண்ணெய் பொருளாதாரம் அணுசக்தியை நோக்கி நகர்வது இதுவே முதல் முறையாகும். பஹ்ரைன், ஓமன் மற்றும் குவைத் ஆகியவை அணுமின் நிலையங்களுக்கான திட்டங்களை ரத்து செய்ய வழிவகுத்த ஃபுகுஷிமா பேரழிவின் தொடர்ச்சியான கவலைகள் இருந்தபோதிலும் இது நடந்தது. கூடுதலாக, 2012 முதல் தென்கொரியாவின் உதவியுடன் அணு உலைகளை உருவாக்கும் செயல்முறை சிக்கலில் உள்ளது.


மார்ச் 2024க்குள், அரபு உலகின் முதல் அணுமின் நிலையத்தின் நான்கு அலகுகளும் செயல்பட்டன. இந்த ஆலை ஈரானின் புஷெர் ஆலைக்குப் பிறகு வளைகுடாவில் இரண்டாவது ஆலை ஆகும். மார்ச் 2020-ல், கத்தார் அதிகாரப்பூர்வமாக சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடன் (IAEA) பராக்கா பற்றிய பாதுகாப்பு கவலைகளை எழுப்பியது. 2017-ல் ஹூவுதிகள் நடத்தியதைப் போன்ற ஏவுகணைத் தாக்குதலின் தீவிர அபாயங்கள் குறித்து மற்றவர்கள் எச்சரித்தனர். கடந்த நான்கு ஆண்டுகளில், பரக்காவின் அலகுகள் ஒவ்வொன்றாகத் தொடங்கியதால், வளைகுடாவில் உள்ள ஈரானிய அணுஉலைகள் ஆயுதங்கள் தர செறிவூட்டலை அணுகியுள்ளன.


சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் நடவடிக்கைகள் நிலைமையை மோசமாக்கியது. ரியாத் ஏற்கனவே தனது சொந்த சிவிலியன் அணுசக்தி திட்டத்தை பாதுகாக்க போராடி வரும் நிலையில், 2023 -ம் ஆண்டுக்குள் ஈரான் ஒரு அணுசக்தி "முறிவை" (breakout) எட்டினால், அணு ஆயுத திட்டத்திற்கு MBS உறுதியளித்தார். இது மேலும் சிக்கல்களை உருவாக்கியது. அரபு அணுமின் நிலையங்கள் பற்றி இஸ்ரேல் கவலைப்பட்டது. ஆபிரகாம் உடன்படிக்கையின் முதல் ஒப்பந்தத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, அணுசக்தியைப் பாதுகாப்பதற்கான சவுதி அரேபியாவின் முயற்சிகளுக்கு இஸ்ரேல் எதிர்ப்புத் தெரிவித்தது.


அக்டோபர் 7, 2023-க்கு சற்று முன்பு சவூதி அரேபியா அமெரிக்க அணுசக்தி நிபுணத்துவத்தை நாடியபோதும், ஆபிரகாம் ஒப்பந்தங்கள் நிலைமையை கணிசமாக மாற்றவில்லை. காசா போர் ரியாத் மற்றும் டெல் அவிவ் இடையே பிளவை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், சேதத்தை குறைக்க வாஷிங்டன் சவுதி அரேபியாவிற்கு புதிய பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க முயற்சிக்கிறது. இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், சவூதி அரேபியாவின் அணுசக்தி திட்டம் இன்னும் தொடங்குவதற்கு போராடி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம் பராக்கா ஆலையைத் தொடர்ந்தது மற்றும் இப்போது அதன் ஆற்றல் தேவைகளுக்காக இரண்டாவது அணு மின் நிலையத்தை பரிசீலித்து வருகிறது. மாறாக, சவூதி அரேபியா இன்னும் முக்கிய சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் (IAEA) தேவைகளை மறுக்கிறது.


சவூதி அரேபியாவின் பொருளாதாரத்தை பன்முகப்படுத்த MBS இந்த முயற்சிகளை முன்னெடுத்து வருவதால், இது எண்ணெயை பெரிதும் நம்பியுள்ளது. அவர் எதிர்கொள்ளும் ஒரு சவால், இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கு எதிர்ப்பைக் கையாளும் அதே வேளையில் ஒரு சிவில் அணுசக்தி திட்டத்தைப் பாதுகாப்பதாகும். அணுசக்தி ஒத்துழைப்பின் சாத்தியம் உட்பட அதிகரித்த பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஊக்குவிப்புகளுடன் ரியாத்தை சமாதானப்படுத்த வாஷிங்டன் முயற்சிக்கிறது.


இதற்கிடையில், மற்ற நாடுகளுடன் அணுசக்தி ஒத்துழைப்புகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகிறது. 2023-ல், ஐக்கிய அரபு அமீரகம் சீனாவுடன் மூன்று முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இந்தியாவுடனான ஒப்பந்தம் குறிப்பிடத்தக்கது. ஏனெனில், பரவல் தடை ஒப்பந்தம் அல்லாத (Non-Proliferation Treaty) அணு ஆயுத அரசு இப்போது அணுமின் நிலையங்களை இயக்குவதில் அதன் நிபுணத்துவத்தை எவ்வாறு நிரூபிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. ஐக்கிய அரபு அமீரகம் அதன் முந்தைய நிலையைத் தாண்டி 'அணுசக்தி பரியா' (nuclear pariah) என்று கணிசமாக முன்னேறியுள்ளது. சுவாரஸ்யமாக, 2005-ல் இந்தியா அவ்வாறு செய்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.


மத்திய கிழக்கின் மீதமுள்ள அணுசக்தி ஆர்வலர்களுக்கு (எகிப்து, துருக்கி மற்றும் ஜோர்டானுடன் சவுதி அரேபியா தலைமையில்), மோதல் நிறைந்த பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஈடு முக்கிய கவலையாக உள்ளது. இது விமர்சகர்களால் உடனடியாக முன்னிலைப்படுத்தப்படுகிறது. அப்போதைய மத்திய கிழக்கின் பல வளர்ச்சிப் பிரச்சினைகளைப் போலவே, அணுசக்தியின் எதிர்காலமும் அரசியல் நிலைத்தன்மையைச் சார்ந்துள்ளது. இதில், மிக முக்கியமான கேள்வியானது பாலஸ்தீனம் மற்றும் ஆயுதமேந்திய இராணுவ குழுக்களின் மீதான அதன் செல்வாக்கு முக்கிய கேள்வியாக உள்ளது.


பஷீர் அலி அப்பாஸ் புது தில்லியில் உள்ள இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சிலில் ஆராய்ச்சி உறுப்பினராகவும், அவர் வாஷிங்டன் டிசியில் உள்ள ஸ்டிம்சன் மையத்தில் தெற்காசிய விசிட்டிங் ஃபெலோவாகவும் உள்ளார்.



Original article:

Share:

வாடகைத் தாய்களுக்கான இழப்பீடு குறித்து உச்சநீதிமன்றம் ஏன் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும்? -சினேகா பானர்ஜி

 சட்டமன்ற தலையீடு இந்த முக்கியமான பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துள்ளது. தடைக்கான குறிப்பிட்ட காரணங்களில் இருந்து மாறுபட்ட இழப்பீட்டில் நியாயமானதாக உச்சநீதிமன்றம் பார்க்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) சட்டம் மற்றும் உதவி இனப்பெருக்க தொழில்நுட்பங்கள் (ஒழுங்குமுறை) சட்டம்-2021, (Surrogacy (Regulation) Act and the Assisted Reproductive Technologies (Regulation) Act-2021) ஆகியவை அமல்படுத்தப்பட்டதிலிருந்து, பல குறைகள் எழுந்துள்ளன. இந்தச் சட்டங்களில் உள்ள சில விதிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த சவால்கள் விதிகளின் அரசியலமைப்புத் தன்மை பற்றியது.


2000-களில், இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் வாடகைத் தாய் முறையைக் கொண்டு வந்த முதல் முயற்சிகள், நாடுகடந்த வாடகைத் தாய் முறைகளில் இருந்து பிறக்கும் குழந்தைகளை நாடற்றவர்களாக மாற்றும் அபாயத்தை எதிர்கொண்ட வழக்குகளை கையாண்டனர். 2016 முதல், சர்வதேச வாடகைத் தாய் முறை (international surrogacy) திறம்பட தடை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், மகப்பேறு விடுப்பு மற்றும் பெற்றோர்கள் மற்றும் வாடகைத் தாய்மார்களை பணியமர்த்துவதற்கான தகுதி போன்ற வாடகைத் தாய் தொடர்பான பிரச்சினைகளையும் நீதிமன்றங்கள் ஆய்வு செய்தன. ஜெயஸ்ரீ வாட் vs யூனியன் ஆஃப் இந்தியா-2016 (Jayashree Wad vs Union Of India) வழக்கு, வணிக வாடகைத் தாய் முறையைத் தடை செய்ய வாதிட்டதுடன், இது வாடகைத் தாய்ச் சட்டத்திற்கு வழிவகுத்தது. எவ்வாறாயினும், வாடகைத் தாய்மார்களுக்கான பணம் வழங்குவது தொடர்பாக எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது பற்றிய விரிவான ஆய்வு, அவர்களின் பணியின் தன்மையை இந்த ஆய்வில் கருத்தில் கொள்ளவில்லை.


வாடகைத் தாய் சேவைகளை வாங்குவது அல்லது வர்த்தகம் செய்வதை வாடகைத் தாய் சட்டம் தடை செய்கிறது. வாடகைத் தாய், அவரைச் சார்ந்தவர்கள் அல்லது அவரது பிரதிநிதிக்கு நீங்கள் பணம், வெகுமதிகள், சலுகைகள், கட்டணங்கள் அல்லது பண ஊக்கத்தொகைகளை பணமாகவோ அல்லது பொருளாகவோ வழங்க முடியாது. வாழ்நாள் முழுவதும், அது நற்பண்புடன் செய்யப்பட வேண்டும். இதன் பொருள் அவர்களுக்கு மருத்துவச் செலவுகள் மற்றும் காப்பீடு வழங்கப்படலாம். அவளுடைய உரிமைகள் மற்றும் கடமைகளை விளக்கும் படிவத்தின் மூலம் அவளது தகவலறிந்த ஒப்புதல் சேகரிக்கப்படுகிறது. இந்த படிவத்தில் குழந்தை பிறந்த பிறகு அனைத்து உரிமைகளையும் விட்டுக்கொடுக்கும் ஒப்பந்தம் உள்ளது. வாடகைத் தாய்மை பெற விரும்பும் பெண்களுக்கு அவர் உதவி செய்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கருவுறாமை சிகிச்சைக்கான (infertility treatment) விருப்பமாக வாடகைத் தாய் முறையை வழங்கிய தனியார் சுகாதாரத் துறையில் வாடகைத் தாய்களுக்கு பணம் செலுத்துவது என்பது பொதுவானதாக உள்ளது. வாடகைத்தாய் முறையை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (Assisted Reproductive Technology (ART)) மசோதாக்களின் பல்வேறு வரைவுகளும் இந்த நடைமுறையை ஒப்புக்கொண்டன. 2016-ம் ஆண்டில், ஒரு தனி வாடகைத்தாய் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இது வாடகைத் தாய்களுக்கு பணம் செலுத்துவதைத் தடைசெய்ய முன்மொழியப்பட்டது. தம்பதிகள் மற்றும் கிளினிக்குகளுக்கு இடையே உள்ள உறவில் சாத்தியமான சுரண்டல் பற்றிய சரியான கவலைகள் ஒருபுறம் உள்ளன. மறுபுறம் ஏழை அல்லது துன்பத்தில் இருக்கும் பெண்கள் வாடகைத் தாய்மார்களாகச் செயல்படுகிறார்கள். இடைத்தரகர்களின் அழுத்தம் காரணமாகவே இந்தப் பெண்கள் பெரும்பாலும் வாடகைத் தாய்மார்களாக வேலை செய்கிறார்கள். இந்த வாடகைத் தாய்மார்களுக்கு பணம் செலுத்துவதற்கான விதிகளை நீக்குவது இந்த சிக்கலை தீர்க்குமா என்பது இன்னும் விவாதிக்கப்படுகிறது.


பணம் செலுத்தும் மாதிரிக்கு எதிரான மற்றொரு முக்கியமான வாதம், அது குழந்தைகளை விற்பனை செய்வதாகும். இதை நிவர்த்தி செய்ய, வரைவு உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (Assisted Reproductive Technology (ART)) மசோதாக்கள் கர்ப்பத்தின் பல்வேறு கட்டங்களில் பணம் செலுத்துவதற்கான அட்டவணையை முன்மொழிந்தன. குழந்தையை சுமக்கும் "சேவைக்கு" பணம் செலுத்தப்படுகிறது என்பதை இது தெளிவாக்குகிறது.


வாடகைத் தாய்மை என்பது மருத்துவ தலையீட்டை உள்ளடக்கிய ஒரு நடைமுறையாகும். குறிப்பாக, கர்ப்பகால வாடகைத்தாய் முறையை குறிப்பிடுகிறது. இது இப்போது உள்ளூர், மாநில மற்றும் தேசிய வாரியங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த வாரியங்கள் விண்ணப்பங்களைக் கையாள்கின்றன, தகுதிச் சான்றளிக்கின்றன மற்றும் குறைகளை நிவர்த்தி செய்கின்றன. இந்த சட்டத்தில், வாடகைத் தாய் முறை "நடைமுறை" (practice) மற்றும் "செயல்முறை" (procedure) என குறிப்பிடப்படுகிறது. "சேவை" (service) என்ற சொல் கவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக "வாடகை தாய்மையின் சேவைகள்" (services of surrogate motherhood) போன்ற வணிக வாடகைத் தாய்மையை வரையறுக்கும் சூழலில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, "சேவை" (service) என்பது பணம் செலுத்துவதைக் குறிப்பதால், வாடகைத் தாய்மைகளால் வழங்கப்படும் உதவி ஒரு வகையான உதவியாகக் கருதப்படுகிறது. செலவுகள் காப்பீட்டில் ஈடுசெய்யப்படுகின்றன. இந்த காப்பீடு சேதங்களை நிவர்த்தி செய்கிறது மற்றும் மோசமான நிலையில், இறப்புக்கான இழப்பீட்டை வழங்குகிறது. இங்கே கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று: இந்த உழைப்பால் ஒரு பெண் இறந்ததற்கு இழப்பீடு வழங்கப்பட்டால், அவள் உயிருடன் இருக்கும்போது ஏன் இழப்பீடு வழங்க முடியாது?


வாடகைத் தாய் மசோதாக்கள் (Surrogacy Bills) நிறைவேற்றப்படுவதற்கு முன், அவை குறைந்தபட்சம் இரண்டு நாடாளுமன்றக் குழுக்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டன. இவை மாநிலங்களவையின் துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 102-வது அறிக்கை, 2016 மசோதாவுக்கு முக்கியமான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.


கர்ப்பம் (pregnancy) என்பது விரைவான செயல்முறை அல்ல என்பதை அறிக்கை உயர்த்தி காட்டுகிறது. இது ஒன்பது மாதங்கள் நீடிக்கும் மற்றும் ஒரு பெண்ணின் ஆரோக்கியம், நேரம் மற்றும் குடும்பத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒரு ஆரோக்கியமான வாடகைத் தாய் ஏற்பாட்டில், சம்மதிக்கும் தம்பதியினர் ஒரு குழந்தையைப் பெறுகிறார்கள். மேலும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவமனைகள் ஊதியம் பெறுகிறார்கள். இருப்பினும், வாடகைத் தாய்மார்கள் எந்தப் பணமும் பெறாமல் நற்பண்புடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மருத்துவச் செலவுகள் மற்றும் காப்பீட்டுத் தொகையுடன் கூடுதலாக "நியாயமான இழப்பீட்டை" (reasonable compensation) அனுமதிக்குமாறு அறிக்கை பரிந்துரைத்தது. அது சம்பந்தப்பட்ட தரப்பினரின் பேச்சுவார்த்தையானது அதிகாரத்தால் அல்ல, ஒழுங்குமுறை அமைப்புகளால் இழப்பீடு தீர்மானிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இந்த இழப்பீடு கர்ப்ப காலத்தில் இழந்த ஊதியம், மருத்துவ பரிசோதனை, மாற்றுத் திறனாளிகளுக்கான உளவியல் ஆலோசனை, குழந்தை பராமரிப்பு அல்லது மாற்றுத் திறனாளிகளின் சொந்த குழந்தை/குழந்தைகளுக்கான ஆலோசனை, உணவுப் பொருட்கள், மருந்துகள், மகப்பேறுக்கான ஆடைகள் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு ஆகியவற்றை ஈடுகட்ட வேண்டும்.


கிளினிக்குகள் மற்றும் இடைத்தரகர்கள் வாடகைத் தாய்மை தொடர்பான ஏற்பாடுகளைக் கையாண்ட ஒரு அமைப்பிலிருந்து, வருங்கால பெற்றோர்கள் விருப்பமுள்ள வாடகைத் தாயைக் கண்டுபிடிக்க வேண்டிய நிலைக்கு மாறுவது சவாலானதாக உள்ளது. இதில் மோசடிகள் வெளிவருவதாக செய்திகள் வந்துள்ளன. அதே நேரத்தில், வாடகைத்தாய் முறையை விரும்பும் பலர், உதவி செய்யத் தயாராக இருக்கும் வாடகைத் தாயைக் கண்டுபிடிக்கப் போராடியுள்ளனர். இந்த சிக்கல்கள் நியாயமான இழப்பீட்டு விதிமுறைகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன. இந்த சட்டம் இந்தப் பிரச்சினைகளை நேரடியாகக் கையாளவில்லை என்றாலும், உச்ச நீதிமன்றம் சில நடைமுறைகளைத் தடைசெய்வதற்கான காரணங்களிலிருந்து தனித்தனியாக இழப்பீட்டில் நியாயத்தன்மையைக் கருத்தில் கொள்ளுமா என்பது நிச்சயமற்றதாகப் பார்க்கப்படுகிறது.


எழுத்தாளர் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியர்.



Original article:

Share:

டெல்லி சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புகிறார். சட்டம் என்ன சொல்கிறது? -தாமினி நாத்

 மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுடன் டெல்லி சட்டசபை தேர்தலையும் நடத்த வேண்டும் என கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில், நவம்பர் 26-ம் தேதிக்கு முன் புதிய சட்டமன்றம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இருப்பினும், டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி 23, 2025 அன்று முடிவடைகிறது.


செவ்வாய்கிழமை மாலை 4.30 மணிக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவை சந்திக்கும் போது அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ஞாயிற்றுக்கிழமை, ஆம் ஆத்மி கட்சி (Aam Aadmi Party (AAP)) தொண்டர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கையில், கலால் கொள்கை ஊழல் வழக்கில் தான் நிரபராதி என்பதை நிரூபிக்க ராஜினாமா செய்வதாகவும், "அக்னி பரீக்ஷா" (agnipariksha-நெருப்பு விசாரணை) நடத்தப்படும் என்றும் கூறினார். இந்த வழக்கில் கடந்த வாரம் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது என்பது குறிப்பிடப்பட்டது. 


மகாராஷ்டிராவுடன் சேர்த்து டெல்லியில் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார், அங்கு நவம்பர் 26-ம் தேதிக்கு முன் ஒரு புதிய சட்டசபை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இருப்பினும், டெல்லி சட்டமன்றத்தின் பதவிக்காலம் பிப்ரவரி 23, 2025 அன்று முடிவடைகிறது.


அரசியலமைப்பின் 324-வது பிரிவின் கீழ், தேர்தல்களை மேற்பார்வையிடுதல், வழிநடத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகிய அதிகாரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) வழங்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள சட்டசபையின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடையும் தேதியிலிருந்து இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பின்னோக்கிச் செயல்படுகிறது. அதற்கு முன் தேர்தல் செயல்முறை (election process) முடிவடைவதை உறுதி செய்கிறது.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 15(2) கூறுவதாவது, மாநில சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தலை அறிவிக்க முடியாது. இருப்பினும், சட்டமன்றம் அதன் பதவிக்காலம் முடிவதற்குள் கலைக்கப்பட்டால் இதற்கான விதியில் திருத்தம் கொண்டுவரலாம்.


அரசியலமைப்புச் சட்டத்தின் 174(2)(பி) பிரிவு ஆளுநர் எந்த நேரத்திலும் சட்டசபையைக் கலைக்க அனுமதி அளிக்கிறது. மேலும், மாநில சட்டசபையை அதன் பதவிக்காலம் முடிவதற்குள் கலைக்குமாறு ஆளுநருக்கு அமைச்சர்கள் குழு ஆலோசனை வழங்கலாம். சட்டமன்றம் கலைக்கப்பட்டவுடன், இந்திய தேர்தல் ஆணையம் ஆறு மாதங்களுக்குள் புதிய தேர்தலை நடத்த வேண்டும்.


செப்டம்பர் 2018-ல், அப்போதைய முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான அமைச்சரவையானது, மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2019 ஜூன் மாதத்தில் முடிவடைவதற்கு முன்பே சட்டசபையை கலைக்க பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், 2018-ல் மீண்டும் தேர்தல் நடத்த பரிந்துரைந்தார். 


டெல்லி முழு மாநிலமாக அல்ல. எனவே, இதற்கு சிறப்பு சட்டங்கள் பொருந்தும். டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டம்-1991, இங்கு முக்கிய சட்டமாகும். இந்த சட்டத்தின் பிரிவு 6(2)(b) இன் படி, துணைநிலை ஆளுநர் (Lieutenant Governor (LG) சட்டசபையை கலைக்க முடியும். இருப்பினும், சட்டசபையை கலைக்க டெல்லி முதல்வர் பரிந்துரை செய்தாலும், இறுதி முடிவானது துணைநிலை ஆளுநர் மூலம் செயல்படும் ஒன்றிய அரசிடம் தான் உள்ளது.

 

முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ள கெஜ்ரிவால், முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், சட்டசபையை கலைக்க அவர் பரிந்துரைக்கவில்லை. செவ்வாய்கிழமை காலை கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூடிய பிறகு புதிய முதல்வரின் பெயர் அறிவிக்கப்படலாம்.


தேர்தல் அட்டவணையை முடிவு செய்வதற்கு முன் தேர்தல் ஆணையம் என்னென்ன விஷயங்களைப் பரிந்துரைக்க வேண்டும்?


தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் முடிவதற்குள் புதிய சட்டசபை அல்லது மக்களவை தயாராக இருக்க வேண்டும். அதாவது வெற்றியாளர்களுக்கு தேர்தல் சான்றிதழ் வழங்குவது மற்றும் அனைத்து நிபந்தனைகளை முடிப்பது உள்ளிட்ட தேர்தல் செயல்முறை அந்த தேதிக்கு முன்னதாக முடிக்கப்பட வேண்டும்.


வானிலை (weather), பாதுகாப்புப் படையினரின் இருப்பு (availability of security forces), திருவிழாக்கள் (festivals), அதிகாரிகளின் பயிற்சி (training of officers) மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கொள்முதல் (procurement of EVM) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது. 


தேர்தல் ஆணையம் நிர்வாக மற்றும் காவல்துறை இயந்திரங்களிலிருந்து உள்ளீடுகளுக்காக மாநிலங்களுக்குச் சென்று அதே நேரத்தில் வரவிருக்கும் தேர்தல்கள் உள்ள மாநிலங்களில் வாக்குப்பதிவைத் திட்டமிட முயற்சிக்கிறது. 


தேர்தல் அட்டவணையை அமைப்பதற்கு முன், இந்திய தேர்தல் ஆணையம் மாநிலத்திற்கு வருகை தருகிறது. இது உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கருத்துக்களை சேகரிக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் முடிந்தால், ஒரே நேரத்தில் பல மாநிலங்களில் வாக்களிக்க திட்டமிடவும் முயற்சிக்கிறது.


தற்போது, ​​தேர்தல் ஆணையம் டெல்லியில் கவனம் செலுத்தவில்லை. ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18-ம் தேதி நடக்கிறது. மேலும் இரண்டு கட்டங்கள் செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.

 

ஹரியானாவில் அக்டோபர் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மேலும்,  ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ம் தேதி நடைபெறும். 


மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபைகளுக்கு அடுத்ததாக தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த இரு அவைகளின் பதவிக்காலம் முறையே நவம்பர் மற்றும் ஜனவரி 2025-ல் முடிவடையும்.


வழக்கமாக, தேர்தல் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியலின் சிறப்பு திருத்தம் கொண்டுவரப்படும். மகாராஷ்டிரா மாநிலத்திற்கான வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்தப் பட்டியலுக்கான வாக்களிப்பதற்கான தகுதித் தேதி ஜூலை 1-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேதிக்குள் 18 வயது நிரம்பிய எந்தவொரு நபரும் இந்த பட்டியலில் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.


ஜம்மு காஷ்மீர், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் பட்டியல்கள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டன. டெல்லி உட்பட மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும், வருடாந்திர தேர்தலுக்கான திருத்தம் ஜனவரி 6, 2025 அன்று வெளியிடப்படும். இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அறிவுறுத்தியபடி, இந்தத் திருத்தம் ஜனவரி 1, 2025 அன்று வாக்களிப்பதற்கான தகுதித் தேதியைக் கொண்டிருக்கும்.



Original article:

Share:

பிரதமர் மோடி தொடங்கவுள்ள ஒடிசாவின் சுபத்ரா திட்டம் பற்றி . . . -சுஜித் பிஸ்யி

 இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் பெண் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு 10,000 ரூபாய்  இரண்டு தவணைகளில் மாற்றப்படும்.  இதற்கு யார் தகுதி பெற்றவர்கள், இந்தத் திட்டத்தின் மூலம் பாஜக அரசு என்ன முறையை  முன்னெடுத்து செல்ல உள்ளது?


செப்டம்பர் 17, 2024 அன்று, பிரதமர் நரேந்திர மோடி சுபத்ரா யோஜனாவை (Subhadra Yojana) தொடங்குவார்.  இது ஒடிசா அரசாங்க திட்டமாகும்.  இது 21 முதல் 60 வயதுக்குட்பட்ட மாநிலத்தில் தகுதியான பெண்களுக்கு ஆண்டுதோறும் 10,000 ரூபாய்  இரண்டு தவணைகளில் வங்கி  கணக்கில்  மாற்றப்படும். 


இந்த திட்டம் புவனேஸ்வரின் ஜனதா மைதானத்தில் தொடங்கப்படும். ஒடிசா முழுவதிலும் இருந்து பெண்கள் பெருமளவில் கூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பஞ்சாயத்து மற்றும் தொகுதி மட்டங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். 


விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலம் தழுவிய பிரச்சாரங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அனைத்து அரசாங்கத் துறைகளும் தங்கள் தகவல்தொடர்புகளிலும் சமூக ஊடகங்களிலும் சுபத்ரா லோகோவைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. 


இந்த திட்டம் ஒடிசாவில் ஒரு முக்கிய தெய்வமாக இருக்கும் ஜெகந்நாதரின் இளைய சகோதரி சுபத்ரா தேவியின் பெயரிடப்பட்டது. பகவான் ஜகந்நாதர், சுபத்ரா மற்றும் அவர்களின் மூத்த சகோதரர் பாலபத்ரா ஆகியோர் ஒன்றாக மதிக்கப்படுகிறார்கள். 


ஐந்து ஆண்டுகளில், 2024-25 ஆண்டு முதல் 2028-29 ஆண்டு வரை, இந்த திட்டம் ஒடிசாவில் 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு உதவும். ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 10,000 ரூபாய் கிடைக்கும். இது தலா 5,000 ரூபாய் வீதம் இரண்டு தவணைகளாக பிரிக்கப்படும். ஆண்டுதோறும் ராக்கி பூர்ணிமா (ஆகஸ்ட்) மற்றும் சர்வதேச மகளிர் தினம் (மார்ச் 8) ஆகிய நாட்களில் இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படும். 


50 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பதிவு செய்துள்ளனர். பணம் பயனாளியின் ஆதார் இனைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரைவு வைக்கப்படும். இதற்கு மின்னணு உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் செயல்முறை (Electronic Know Your Customer eKYC) கட்டாயமாகும். மேலும் சுபத்ரா டெபிட் கார்டு (Debit Card) வழங்கப்படும். 


ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்ட முதல் 100 பயனாளிகளுக்கு கூடுதலாக 500 ரூபாய் கிடைக்கும். 


வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள பெண்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் போன்றோர் இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்கள்.  பிற அரசாங்க திட்டங்களிலிருந்து மாதத்திற்கு 1,500 ரூபாய் அல்லது அதற்கு மேல் (அல்லது ஆண்டுக்கு 18,000 ரூபாய்) பெறும் பெண்களும் விலக்கு அளிக்கப்படுவார்கள். 


பெண்கள் தங்கள் ஆதார் விவரங்களை பதிவு செய்ய அல்லது புதுப்பிக்க வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் பொதுசேவை மையங்களில் பதிவு செய்கின்றனர். பதிவு செய்வதற்கான காலக்கெடு இல்லை; தகுதியுள்ள அனைத்து பயனாளிகளும் பதிவு செய்யப்படும் வரை இது தொடரும். 


 திட்டத்திற்கு நிதியளித்தல்: 


2024-25 ஆண்டு முதல் 2028-29 ஆண்டு வரை இந்த திட்டத்திற்காக அரசாங்கம் 55,825 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. 2024-25 நிதியாண்டில், ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டத்திற்கு எந்த நிதி பற்றாக்குறையும் இருக்காது என்றும், அதை செயல்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் மாநில நிதித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.



Original article:

Share: