தென்னிந்தியா தனது முதியோர் மக்கள் தொகையை எவ்வாறு கையாள வேண்டும்? - உதித் மிஸ்ரா

 தென்னிந்தியாவில் முதியோர்களின் நிலைமை குறித்து ஏன் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன? இந்த நிலைமை சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கத்தால், அதிக குழந்தைகளைப் பெற மக்களை ஊக்குவிக்க முடியுமா? உள்-இடப்பெயர்வு என்ன விதமான பங்கை வகிக்க முடியும்? 


ஆந்திரப் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள், அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டத்தை உருவாக்கி வருவதாக ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். மேலும், எங்கள் மாநிலம் ஏற்கனவே மக்கள்தொகையில் பற்றாக்குறையில் உள்ளோம் எனவும், ஒரு குடும்பத்தில் இரண்டுக்கும் குறைவான குழந்தைகளைப் பெற்றிருப்பது இளைஞர்களின் எண்ணிக்கையின் விரைவான வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்று இவர் குறிப்பிட்டிருந்தார்.


முன்னதாக, தென் மாநிலங்களின் கவலைகள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளதாவது, மாநிலங்களில் தொகுதி எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு குறைவான மக்கள்தொகையால் நாடாளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதித்துவத்தை பாதிக்கலாம் என்று கவலைப்படுவதாகவும், தென்னிந்தியாவில் கருவுறுதல் விகிதம் குறைவாக இருப்பதாகவும், மேலும் ஏற்கனவே முதியோர்களின் பிரச்சினையை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலைமை, படிப்படியாக வட இந்தியாவையும் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.


திங்களன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தால், தென்னிந்தியாவின் நாடாளுமன்றத் தொகுதிகளில் பங்கு குறையும் சாத்தியம் குறித்து பேசுகையில் "ஏன் 16 குழந்தைகளை இலக்காகக் கொள்ளக்கூடாது?" என்று கேலி செய்தார்.


மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-ம் ஆண்டில் தாமதமாகியுள்ள நிலையில், மிக சமீபத்தில் கிடைக்கக்கூடிய மக்கள் தொகை கணிப்புகள், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்குள் உள்ள ஒரு தொழில்நுட்பக் குழுவின் 2020-ம் ஆண்டு அறிக்கையிலிருந்து வந்துள்ளன. 


இந்தியாவின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகளவு முதியோர்களை கொண்டுள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் சதவீதம் ஒட்டுமொத்தமாக உயரும். இருப்பினும், தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் முதியோர்களின் அதிகரிப்பு குறைவாக இருக்கும். ஏனென்றால், பெரும்பாலான தென் மாநிலங்கள் வட மாநிலங்களை விட விரைவில் குறைந்த கருவுறுதல் விகிதத்திற்கு (lower fertility rate) மாறிவிட்டன. உதாரணமாக, ஆந்திராவின் 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான், உத்தரப் பிரதேசம் கருவுறுதலின் மாற்று நிலையை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 


2011 முதல் 2036-ம் ஆண்டு வரை, இந்தியாவின் மக்கள் தொகை 31.1 கோடி கூடுதலாக அதிகரிக்கும். இந்த அதிகரிப்பில் கிட்டத்தட்ட பாதி, அதாவது 17 கோடி - பீகார், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களின் எண்ணிக்கையின் கூடுதலாக இருக்கும். இந்த காலகட்டத்தில், மொத்த மக்கள்தொகை அதிகரிப்பில் உத்தரப்பிரதேசம் 19% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


* 2011-2036 ஆம் ஆண்டில் மொத்த மக்கள் தொகை அதிகரிப்பில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து தென் மாநிலங்களின் பங்களிப்பு 2.9 கோடி மட்டுமே பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மொத்த அதிகரிப்பில் 9% ஆகும்.


* கருவுறுதல் குறைந்து வருவதாலும், சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பதாலும், மக்கள்தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 2011-ம் ஆண்டில் 10 கோடியிலிருந்து 2036-ம் ஆண்டில் 23 கோடியாக இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில், மக்கள்தொகையில் முதியோர்களின் பங்கு 8.4% முதல் 14.9% வரை உயரும். 


* கேரளாவில், மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைந்த கருவுறுதல் மற்றும் இறப்பு விகிதங்கள் முன்னதாகவே எட்டப்பட்டன. இதன் விளைவாக, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் விகிதம் 2011-ம் ஆண்டில் 13% ஆக இருந்து 2036-ம் ஆண்டில் 23% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 4-ல் ஒருவர் முதியவராக இருப்பார். மாறாக, உத்தரபிரதேசத்தின் மக்கள் தொகை இளைஞர்களைக் கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்திரப் பிரதேசத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களின் பங்கு 2011-ம் ஆண்டில் 7% ஆக இருந்து 2036-ம் ஆண்டில் 12% ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


முதியோர்களைப் பற்றிய சந்திரபாபு நாயுடுவின் கவலை மற்றும் குறைந்த  மக்கள்தொகை பற்றிய ஸ்டாலினின் குறிப்பு போன்ற இரண்டு வேறுபட்ட பிரச்சினைகளை குறிப்பிட்டுள்ளன.


பொதுவாக, மொத்த மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு உழைக்கும் மக்களை கொண்டுள்ளதால், அது "பிளவு" (dividend) என்று பரிந்துரைக்கிறது. ஏனென்றால், மக்கள் தொகையில் வருமான ஈட்டாத மற்றும் மற்றவர்களைச் சார்ந்திருக்கும் சதவீதத்தை அளவிடும் சார்பு விகிதம் 50% க்கும் குறைவாக உள்ளது.


இரண்டு வகையான சார்புநிலைகள் உள்ளன. அவை, 15 வயதுக்குட்பட்ட தனிநபர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார். முதியோர்களின் அதிக சதவிகிதம், இந்த வளர்ந்து வரும் மக்கள்தொகையை கவனித்துக்கொள்வதற்கு அரசு அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதைக் குறிக்கிறது.


ஒரு மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைவாக இருப்பது வேறுபட்டது. தேர்தல் எல்லை நிர்ணயம் (electoral delimitation) குறித்த பொது விவாதங்களில் இந்த கவலை கவனம் பெற்றுள்ளது. மக்களவையில் குறைவான இடங்களுடன் தென் மாநிலங்களுக்கு பாகுபாடு விதிக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. இது வடக்கு மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ​​குறிப்பாக "BIMARU" மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அவர்களின் முந்தைய மக்கள்தொகை மாற்றத்தின் காரணமாகும்.


ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நாடுகள் போன்ற சில நாடுகளும் முதியோர்களுடன் போராடுகின்றன என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார். இருப்பினும், மேம்பாடாக மற்றும் கல்வியறிவு பெற்றவர்கள் அதிக குழந்தைகளைப் பெற ஊக்குவிக்க முடியும் என்பதற்கு உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை.


சமூக மக்கள்தொகை ஆய்வாளர் சோனால்டே தேசாய், மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர் எமரிட்டா மற்றும் ஜே.என்.யூவின் பி.எம்.குல்கர்னி மற்றும் தீபக் மிஸ்ரா போன்ற கல்வியாளர்கள் மகப்பேறு சார்பு கொள்கைகள் (pro-natalist policies) மிகக் குறைந்த வெற்றியையே பெற்றுள்ளன என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். 


மகப்பேறு ஆதரவு கொள்கைகள் உலகில் எங்கும் திறம்பட செயல்படவில்லை என்று சோனால்டே தேசாய் சுட்டிக்காட்டினார். இதில் ஜப்பான், சீனா, கொரியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அடங்கும். ஸ்காண்டிநேவிய நாடுகளில் இந்தக் கொள்கைகள் சில நேர்மறையான விளைவைக் கொண்ட ஒரே இடமாக உள்ளது. இந்த நாடுகளில், இந்த கொள்கைகள் குடும்ப ஆதரவு, குழந்தை பராமரிப்பு ஆதரவு, பாலின சமத்துவம் மற்றும் தந்தைவழி விடுப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றன.


இந்தக் கருத்துக்கள், மக்கள் தொகைப் பிரச்சினை தொடர்பான அரசியல்வாதிகளின், குறிப்பாக தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன.


ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா எதிர்கொள்ளும் முக்கிய கவலை அதிகமான மக்கள்தொகை வளர்ச்சியாகும். இது அதிக அளவு கருவுறுதல் (ஒரு பெண்ணுக்கு பிறப்பு) மூலம் தூண்டப்பட்டது. ஒரு காலத்தில் இதன் நிலைமை மிகவும் கடுமையானதாகக் கருதப்பட்டது. ஏனெனில், இந்தியா தனது மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவளிக்க போதுமான உணவு இருக்குமா என்று பலர் கவலைப்பட்டனர். 


பல ஆண்டுகளாக, இந்தியா அதன் மக்கள்தொகை வளர்ச்சியைக் குறைக்க முடிந்தது. குறிப்பாக, பல தென் மாநிலங்களில் இந்த வெற்றி குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, 2004-ம் ஆண்டில், ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2.1 குழந்தைகள் என்ற விகிதத்தில் கருவுறுதலின் மாற்று நிலையை ஆந்திரப் பிரதேசம் அடைந்தது. கேரளா (1988), தமிழ்நாடு (2000), இமாச்சல பிரதேசதம் (2002) மற்றும் மேற்கு வங்காளத்தைத் (2003) தொடர்ந்து இந்த மைல்கல்லை எட்டிய ஐந்தாவது இந்திய மாநிலமாக அமைந்தது. ஆந்திராவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலுக்கு போட்டியிடுவதைத் தடுக்கும் சட்டம் முன்பு இருந்தது. இருப்பினும், சந்திரபாபு நாயுடு இந்த சட்டத்தை ரத்து செய்துள்ளார்.


இருப்பினும், தனிப்பட்ட மாநிலங்கள் கடந்த காலங்களை விட கணிசமாக குறைந்த அளவிலான கருவுறுதலைக் கொண்டிருந்தாலும், இந்தியாவின் மக்கள்தொகையின் வேகம் என்பது இப்போது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. 


இருப்பினும், குடும்பங்கள் அதிக குழந்தைகளைப் பெறுவதற்கு நிதி உதவி வழங்குவதற்கு போதுமானதாக இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.


"எளிமையான தீர்வு (உள்) இடப்பெயர்வு" என்று தேசாய் கூறினார். மொத்த மக்கள்தொகைக்கு பங்களிக்கும் மூன்று காரணிகள் உள்ளன: கருவுறுதல், இறப்பு மற்றும் இடம்பெயர்வு ஆகியவை ஆகும். தேசாய் மற்றும் குல்கர்னி இருவரும் வடக்கு மற்றும் தென்னிந்தியாவிற்கு இடையிலான மக்கள்தொகை மாற்றத்தின் சீரற்ற வேகத்தால் ஏற்படும் மக்கள்தொகை வேறுபாட்டை சமப்படுத்துவதற்கு உள்-இடப்பெயர்வு உதவும் என்று குறிப்பிட்டுள்ளனர்.


இடப்பெயர்வு ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. "மேலும், தென் மாநிலங்களில் உழைக்கும் வயதில் உள்ளவர்கள் கிடைப்பார்கள்" என்று தேசாய் கூறினார். சுருக்கமாக, இதற்கான இலக்கு மாநிலங்கள் ஒரு இளைஞர்களை, அல்லது இவர்களின் கல்வியை உயர்த்துவதில் முதலீடு செய்ய வேண்டியதில்லை. உழைக்கும் வயதினர் புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து அவர்கள் உடனடியாக பயனடைவார்கள்.


இந்த மாதிரியைத்தான் அமெரிக்கா பல பத்தாண்டுகளாக பயன்படுத்தியுள்ளது. இது புலம்பெயர்ந்தோர், அவர்களின் பொருளாதார பங்களிப்பு மற்றும் கருவுறுதல் ஆகியவை அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கத்தை உலகளவில் தக்கவைக்க உதவியுள்ளன.


குல்கர்னி மற்றும் மிஸ்ரா இருவரும் இந்தியா தனது தொழிலாளர்களின் பொருளாதார உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதிக குழந்தைகளைப் பெறுவதற்குப் பதிலாக, இந்தியா அதன் தற்போதைய மக்கள்தொகையின் பிளவின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.




Original article:

Share:

ஒடிசா, மேற்கு வங்கத்தை தாக்கும் டானா புயல்: புயல்களுக்கு எப்படி, ஏன் பெயரிடப்படுகிறது?

 டானா புயல்: புயல்களுக்கு எவ்வாறு பெயரிடப்படுகிறது. அவற்றின் பெயர்களைத் தேர்ந்தெடுப்பதில் என்ன மரபுகள் பின்பற்றப்படுகின்றன?  


இந்திய வானிலை ஆய்வு மையம் அக்டோபர் 21-ஆம் தேதி  அன்று கிழக்கு-மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புதன்கிழமைக்குள் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக அறிவித்தது. "டானா" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வியாழக்கிழமை இரவு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் வடக்கு கடற்கரை இடையே கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்திய வானிலை ஆய்வு மையம் தனது சமூக வலைதள  பக்கத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை காலை ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புதன்கிழமை ஒரு தீவிர புயலாகவும் உருவாகும் என்றும்,  இது வடமேற்கு திசையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகரும் என்றும் காற்றின் வேகம் மணிக்கு 120 கிமீ வேகத்தை எட்டும் என்றும், புயல்  வியாழன் இரவு அல்லது  வெள்ளிக்கிழமை காலை பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று கணித்துள்ளது. ஆகஸ்ட் பிற்பகுதியில் அஸ்னா புயலைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்குள் வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் இரண்டாவது புயல் டானா ஆகும். 


"டானா" என்ற பெயர் அரபு மொழியில் "பெருந்தன்மை" (‘generosity’) என்று பொருள் மற்றும் அப்பகுதியில் உள்ள வெப்பமண்டல புயல்களுக்கு பெயரிடும் வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி கத்தார் நாட்டினால் இந்த பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. சூறாவளிகள் எவ்வாறு பெயரிடப்படுகின்றன, அவற்றின் பெயர்களைத் தேர்ந்தெடுப்பதில் என்ன மரபுகள் பின்பற்றப்படுகின்றன? 


புயல்களுக்கு பெயர் வைப்பது யார்? 


2000 ஆம் ஆண்டில், உலக வானிலை அமைப்பு/ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (World Meteorological Organization/United Nations Economic and Social Commission for Asia and the Pacific (WMO/ESCAP)) எனப்படும் நாடுகளின் குழு, இப்பகுதியில் உள்ள சூறாவளிகளுக்கு பெயரிட முடிவு செய்தது. இந்த குழுவில் வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு நாடும் பெயர் பரிந்துரைகளை அனுப்பியது. மேலும், WMO/ESCAP Panel on Tropical Cyclones (PTC) இறுதிப் பட்டியலை உருவாக்கியது.


2018-ஆம் ஆண்டில் இந்த அமைப்பு ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை குழுவில் உறுப்பினர்களாக சேர்த்து. ஏப்ரல் 2020-ல், இந்திய வானிலை ஆய்வு மையம் 169 புயல் பெயர்களின் பட்டியலை வெளியிட்டது. 13 நாடுகளில் ஒவ்வொன்றும் 13 பெயர் பரிந்துரைகளை அளித்தன.


புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க வேண்டும்? 


புயல்களுக்குப் பெயரிடுவது, எண்கள் அல்லது தொழில்நுட்பச் சொற்களைப் பயன்படுத்துவதை விட, மக்கள் அவற்றை நினைவில் வைத்திருப்பதை எளிதாக்குகிறது. இது பொதுமக்களுக்கு மட்டுமல்ல, விஞ்ஞானிகள், ஊடகங்கள் மற்றும் பேரிடர் மேலாளர்களுக்கும் உதவுகிறது. பெயரிடுவது புயல்களை அடையாளம் காண உதவும்.  அவற்றின் வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகிறது மற்றும் விரைவான எச்சரிக்கைகளை உருவாக்குகிறது. இது ஒரே நேரத்தில் பல புயல்கள் உருவாகும் போது குழப்பத்தை தவிர்க்க உதவுகிறது. மற்ற பகுதிகளும் வெப்பமண்டல புயல்களுக்கு இந்த பெயரிடும் முறைகளைப்  பின்பற்றுகின்றன.


புயல்களுக்கு  பெயரிடும் மரபுகள்


நாடுகள் புயல்களுக்கு பெயர்களை பரிந்துரைக்கும் போது, ​​அவை சில வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்:


1. அரசியல் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மத நம்பிக்கைகள், கலாச்சாரங்கள் மற்றும் பாலினம் தொடர்புடையதாக பெயர் இருக்கக்கூடாது:

2. பெயர் எந்தக் குழுவையும் புண்படுத்தக் கூடாது.

3. அது கொடூரமாக இருக்கக்கூடாது.

4. இது குறுகியதாகவும், உச்சரிக்க எளிதாகவும், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

5. இது எட்டு எழுத்துக்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

6. உச்சரிப்பு தெளிவாக இருக்க வேண்டும் மற்றும் குரல்வழியுடன் இருக்க வேண்டும்.

7. ஒவ்வொரு பெயரும் தனித்துவமாக இருக்க வேண்டும் மற்றும் மீண்டும் மீண்டும் வரக்கூடாது.


எடுத்துக்காட்டாக,  மகாராஷ்டிராவை பாதித்த புயல் நிசர்கா வங்கதேசத்தால் பரிந்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சோமாலியாவைத் தாக்கிய இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட கதி. பின்னர், ஈரானால் பரிந்துரைக்கப்பட்ட நிவார் புயல் தமிழ்நாட்டைப் தாக்கியது.


ஒரு நெடுவரிசையில் உள்ள அனைத்து பெயர்களும் பயன்படுத்தப்பட்டவுடன், அடுத்த நெடுவரிசையின் பெயர்கள் மீண்டும் பங்களாதேஷிலிருந்து தொடங்கி தேர்ந்தெடுக்கப்படும். உதாரணமாக, மோச்சாக்குப் பிறகு, அடுத்த புயல்க பைபர்ஜாய் என பெயரிடப்படும். இந்தப் பட்டியல் பயன்படுத்தப்பட்டதும், வெப்ப மண்டல சூறாவளிகள் குழு (Panel on Tropical Cyclones (PTC)) உறுப்பினர்களால் புதிய பட்டியல் உருவாக்கப்படும்.




Original article:

Share:

இந்தியாவில் ஒரு இயற்கை மறுசீரமைப்பு சட்டத்தை அமல்படுத்துவது பற்றி… -துஹின் ஏ. சின்ஹா, கவிராஜ் சிங்

 அண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் இயற்றப்பட்ட சட்டம் பின்பற்றப்பட வேண்டிய ஒரு முன்மாதிரியாகும். 


இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளின் சீரழிவு ஒரு அவசர உலகளாவிய பிரச்சினையாகும். மேலும், இந்தியா இதன் பரந்த புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மையுடன், இந்த சிக்கலையும் எதிர்கொள்கிறது. அதன் மொத்த புவியியல் பரப்பளவில் கிட்டத்தட்ட 30% நில சீரழிவைக் கொண்டிருப்பதால், இந்தியா ஒரு விரிவான இயற்கை மறுசீரமைப்பு சட்டத்தை (nature restoration law) ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தால் இயற்றப்பட்ட இயற்கை மறுசீரமைப்பு சட்டம் (Nature Restoration Law (NRL)), இந்தியா தனது வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளைக் குறைக்க செயல்படுத்தப்படும் ஒரு எழுச்சியூட்டும் மாதிரியாகும். 


ஜூன் 17, 2024 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுச்சூழல் அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயற்கை மறுசீரமைப்பு சட்டம் (NRL), ஐரோப்பாவின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறப்பான சட்டமாகும். 


ஐரோப்பிய ஒன்றிய மக்கள்தொகையில் 66.07%-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளால் இந்த ஒழுங்குமுறை அங்கீகரிக்கப்பட்டது. இது, உலகளாவிய சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது. 2030-ம் ஆண்டிற்குள் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலம் மற்றும் கடல் பகுதிகளில் குறைந்தது 20% மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் கோருகிறது. இது, 2050-ம் ஆண்டுக்குள் மறுசீரமைப்பு தேவைப்படும் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளையும் முழுமையாக மீட்டெடுப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.


இயற்கை மறுசீரமைப்பு சட்டம் (NRL) என்பது 2030-ம் ஆண்டிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்லுயிர்க்கான உத்தி மற்றும் ஐரோப்பிய பசுமை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். ஐரோப்பாவின் 80% வாழ்விடங்கள் மோசமான நிலையில் இருப்பதால், பல்லுயிர்க்கான ஆபத்தான இழப்பின் போக்கை மாற்றியமைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. காடுகள், விவசாய நிலங்கள், ஆறுகள் மற்றும் நகர்ப்புற இடங்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளில் இயற்கை மறுசீரமைப்பு சட்டம் (NRL) கவனம் செலுத்துகிறது. 25,000 கிலோமீட்டர் ஆறுகளை மீட்டெடுப்பது போன்ற குறிப்பிட்ட நடவடிக்கைகளை செயல்படுத்துகிறது. கூடுதலாக, 2030-ம் ஆண்டுக்குள் மேலும் மூன்று பில்லியன் மரங்களை நடவும் திட்டமிட்டுள்ளது.


இந்தியாவுக்கான சுற்றுச்சூழல், பொருளாதாரம் தொடர்பானவை 


இந்தியா கடுமையான சுற்றுச்சூழல் தொடர்பான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organisation (ISRO)) நிலச் சீரழிவு குறித்த அறிக்கையை வெளியிட்டது. இது, 2018-19 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 97.85 மில்லியன் ஹெக்டேர் அல்லது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 29.7% பாதிப்பை சந்தித்துள்ளது என்பதை ஆய்வு காட்டுகிறது. 


இந்த ஒப்பீடு, 2003-05 ஆம் ஆண்டில் 94.53 மில்லியன் ஹெக்டேரில் இருந்து கடிமையான அதிகரிப்பாக உள்ளதால், பாலைவனமாக்கலாக மாறி வருவதை  இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 2018-19 ஆம் ஆண்டில், இது 83.69 மில்லியன் ஹெக்டேர்களை பாதித்துள்ளது. இது, முக்கிய மாநிலமான குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் போன்றவற்றில் நிலப் பாதிப்பு என்பது  பொதுவானது என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இமொத்தத்தில், இந்தியாவின் பாலைவனமான நிலப்பரப்பில் இதன் பங்கு 23.79% ஆகும்.


இந்தப் பிரச்சினைகளைச் சமாளிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. பசுமை இந்தியா திட்டம் (Green India Mission), பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா (Pradhan Mantri Krishi Sinchayee Yojana), ஒருங்கிணைந்த நீர்நிலை மேலாண்மை திட்டம் (Integrated Watershed Management Programme), இது உலகின் இரண்டாவது பெரிய நீர்நிலை திட்டமாகும் மற்றும் தேசிய காடு வளர்ப்பு திட்டம் (National Afforestation Programme) உட்பட பல முயற்சிகளை இது வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. 


இருப்பினும், பாதிப்புகளின் அளவிற்கு ஏற்றாற்போல் ஒரு பரந்த உத்தி தேவைப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் NRL போன்ற இயற்கை மறுசீரமைப்புச் சட்டம் (Nature Restoration Law (NRL)) இந்தியாவுக்குத் தேவை. இது சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்புக்கான சட்டப்பூர்வ இலக்குகளை அமைக்கிறது. இந்தச் சட்டம் பாதிப்படைந்த நிலப்பரப்புகளை மீட்டெடுப்பதை கட்டாயமாக்கும் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்கிறது.


இந்தியாவில் ஒரு சட்டம் எப்படி அமைக்க முடியும்? 


ஐரோப்பிய ஒன்றியத்தின் மாதிரியால் ஈர்க்கப்பட்ட இந்தியாவில் ஒரு இயற்கை மறுசீரமைப்பு சட்டம், பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம். 


முதலில், மறுசீரமைப்புக்கான இலக்குகள் (restoration targets) உள்ளன. இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் 20% தரம் குறைந்த நிலத்தை மீட்டெடுப்பதை இலக்காகக் கொள்ள வேண்டும். மேலும், 2050-ம் ஆண்டிற்குள் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மீட்டெடுப்பது நீண்ட கால இலக்கான திட்டமாகும். இதில் காடுகள், ஈரநிலங்கள், ஆறுகள், விவசாய நிலங்கள் மற்றும் நகர்ப்புற பசுமையான இடங்கள் ஆகியவை அடங்கும்.


இரண்டாவதாக, ஈரநில மறுசீரமைப்பு (wetland restoration) உள்ளது. இந்தியாவில் மக்கும் நிலங்கள் (peatlands) குறைவாகவே காணப்பட்டாலும், சுந்தரவனக் காடுகள் மற்றும் சிலிகா ஏரி போன்ற முக்கியமான ஈரநிலங்கள் பல்லுயிர் மற்றும் கார்பன் வரிசைப்படுத்தலுக்கு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. ஒரு புதிய சட்டம் 2030க்குள் 30% சிதைந்த ஈரநிலங்களை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


மூன்றாவதாக, விவசாயத்தில் பல்லுயிர் பெருக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். விவசாயம் இந்தியாவின் நிலத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. வேளாண் காடுகள் மற்றும் நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பது விவசாய நிலங்களை மீட்டெடுக்க உதவும். எங்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் பட்டாம்பூச்சி குறியீடு அல்லது பறவைக் குறியீடு போன்ற குறிபீடுகள் முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவும்.


நான்காவது, ஆறுகளின் மறுசீரமைப்பு (river restoration) ஆகும். சுதந்திரமாக ஓடும் ஆறுகளை மீட்டெடுப்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இந்த முயற்சியால் கங்கை, யமுனை போன்ற முக்கிய ஆறுகளில் தொடங்கி, மாசுபாட்டை நிவர்த்தி செய்வதிலும், தடைகளை அகற்றுவதிலும் கவனம் செலுத்தப்படும்.


ஐந்தாவது, நகர்ப்புற பசுமையான இடங்கள் (urban green spaces) ஆகும். நகர்ப்புறங்களின் பாதிப்பை எதிர்த்துப் போராட, பசுமையான இடங்களின் வனங்களின் நிகரளவில் இழப்பு இல்லை என்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும். பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களில் நகர்ப்புறங்களில் உள்ள  வனங்களை ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில், இந்த நகரங்கள் வெப்ப தீவுகள் மற்றும் காற்றின் தரம் குறைதல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன.


மறுசீரமைப்பின் பொருளாதார மற்றும் சமூக நன்மைகள் 


இத்தகைய சட்டத்தின் நன்மைகள் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பதற்கு அப்பாற்பட்டவை ஆகும். 2030ஆம் ஆண்டுக்குள் இயற்கை மறுசீரமைப்பு உலகளவில் 10 டிரில்லியன் டாலர் வரை பொருளாதார வருவாயை ஈட்டக்கூடும் என்று உலகப் பொருளாதார மன்றம் கூறுகிறது. இந்தியாவில், பாதிப்படைந்த நிலங்களை மீட்டெடுப்பது விவசாய உற்பத்தியை மேலும் அதிகரிக்கும். 


இது நீர் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, குறிப்பாக கிராமப்புறங்களில் மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியா தனது நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals (SDGs)) மேம்படுத்த இந்த சட்டம் உதவும். குறிப்பாக, இது இலக்கு 15-ஐக் குறிக்கிறது. இந்த இலக்கு காடுகளின் நிலையான மேலாண்மையில் கவனம் செலுத்துகிறது. மேலும், இது பாலைவனமாக்குதலை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


சுற்றுச்சூழல் அமைப்புகளை மறுசீரமைப்பது காலநிலை மாற்றத்திற்கான விளைவுகளை குறைக்க உதவும். இந்த காலநிலை மாற்றம் நிலத்தின் மீதான பாதிப்பை மோசமாக்குகிறது. நிலம் பாதிப்படைவதால், கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் திறனை இழக்கிறது. இந்த இழப்பு புவி வெப்பமடைதலுக்கு பங்களிக்கிறது. சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலம், இந்தியா தனது கார்பன் குளங்களை (carbon sinks) மேம்படுத்த முடியும். இது பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா தனது கடமைகளை நிறைவேற்ற உதவும்.


ஐரோப்பிய ஒன்றியத்தின் இயற்கை மறுசீரமைப்புச் சட்டம் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு ஆகும். இதில், நிலச் சீரழிவு மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை இந்தியா எதிர்கொள்கிறது. இந்தியாவில் இதேபோன்ற சட்டத்தை அமல்படுத்துவது, பாதிப்படைந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்க உதவும். 


இது சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கும், பருவநிலையை எதிர்க்கும் தன்மையை மேம்படுத்துவதற்கும் துணைபுரியும். காலநிலை தொடர்பான அவசரம் தெளிவாக உள்ளது. ஆனால், இதற்கான நடவடிக்கை இப்போது தேவை.


செய்தி தொடர்பாளராக துஹின் ஏ.சின்ஹா ​​உள்ளார். கவிராஜ் சிங் எர்த்வுட் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார்.




Original article:

Share:

கலந்தாய்வுக்கு அனுமதியுங்கள் : லடாக்கின் நியாயமான கோரிக்கைகள் குறித்து . . .

 லடாக்கில் சட்டமன்றம் மற்றும் பிராந்திய தன்னாட்சி இல்லாதது தற்போதைய போராட்டங்களுக்கு வழிவகுத்தது. 


லடாக் மாகாணத்தில் உள்ள மக்களுக்கு, தொகுதி உறுப்பினர்களின் வெளிப்படையான உடன்பாடு அல்லது அவர்களின் ஆலோசனை இல்லாமல் முடிவுகள் எடுக்கப்படும்போது, தொகுதி உறுப்பினர்கள் ஆரம்பத்தில் நம்பிக்கையுடன் மாற்றங்களை வரவேற்றாலும் கூட ஒரு எதிர்மறையான சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது. இதில், ஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ஒரு தெளிவான உதாரணம் ஆகும். இந்த முடிவானது, லடாக் மாநிலத்தின் முந்தைய பகுதியை உள்ளடக்கிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழிவகுத்தது. 


இந்த இரண்டு முடிவுகளாலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் அதிருப்தி நன்கு ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும், லோக்நிதி கணக்கெடுப்பின் (Lokniti survey) படி, ஜம்மு குடியிருப்பாளர்களில் பத்தில் நான்கு பேர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதை எதிர்க்கிறார்கள் மற்றும் பெரும்பான்மையானவர்கள் மாநிலத்தின் அந்தஸ்தை மீட்டெடுக்கக் கோருகிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறது. லடாக் யூனியன் பிரதேசமாக மாறியதும், லடாக் குடியிருப்பாளர்களின் கோரிக்கையை இது பிரதிபலிப்பதாக கூறி அரசாங்கம் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியது. குறிப்பாக லே பகுதி வாசிகள், முந்தைய சட்டமன்றத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ஜம்முவின் ஆதிக்கம் குறித்து கவலைப்பட்டனர். 

ஆயினும்கூட, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், லடாக்கில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் மாநில அந்தஸ்து அல்லது அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று கோருகின்றனர். இந்த அட்டவணையில் சில வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் பகுதிகளை நிர்வகிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசு எடுக்கும் முடிவுகள் மக்கள் விரும்பத்தகாதவை என்பதையே தற்போது நடைபெறும் இந்த போராட்டங்கள் காட்டுகின்றன. 


லே மற்றும் கார்கிலின் இரண்டு தன்னாட்சி மலைப்பகுதி கவுன்சில்களுக்கு லடாக் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், யூனியன் பிரதேசத்தில் அதிகாரம் பெற்ற சட்டமன்றம் இல்லாததை, புது டெல்லியின் அதிகாரத்துடன் ஒப்பிடுகையில் உள்ளூர் நிர்வாகத்திற்கு குறைவான செல்வாக்கு உள்ளதால் இது எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையிலான போராட்டங்கள், புதுடெல்லியில் எதிரொலித்தது. தற்போதைய, நிலைமைக்கு வழிவகுத்த 2019-ம் ஆண்டில் காணப்பட்ட ஒற்றை மேலாதிக்கத்தின் மாக்கியவெல்லியன் வழியை ஒன்றிய அரசு தவிர்த்திருக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. 


2019 முதல் லடாக்கை, புது டெல்லி எப்படிப் பார்க்கிறது என்பது ஒரு பெரிய கேள்வி உள்ளது. இந்த மாற்றம் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control (LAC)) வழியாக சீன ஊடுருவல் மற்றும் பிராந்தியத்தில் நடந்து வரும் பதட்டங்களைத் தொடர்ந்து, லடாகானது பெரும்பாலும் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 


வாழ்வாதாரம் தொடர்பான உள்ளூர் கவலைகள், நீர் பற்றாக்குறை, கழிவு மேலாண்மை மற்றும் மாசு போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் மேய்ச்சல் சமூகங்களுக்கான நிலத்தை அணுகுவது போன்ற குடிமைப் பிரச்சினைகள் நிர்வாகத் திட்டத்தில் ஒப்பீட்டளவில் கவனிக்கப்படாமல் உள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசத்தில் (UT) சட்டமன்றம் இல்லாததால், குடியிருப்பாளர்கள் கவலையடைவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். 


மேலும், இவர்கள் தங்கள் கவலைகளைப் பற்றி விவாதிக்கவோ அல்லது புகார்களைப் பதிவு செய்யவோ போதுமான வசதி இல்லை. ஒன்றிய அரசு லடாக்கின் நியாயமான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து அதற்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். கூடுதலாக, இந்த அதிருப்தி இந்தியாவின் பயனுள்ள “சமச்சீரற்ற கூட்டாட்சி” (asymmetric federalism) முறையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. இந்த அமைப்பு குறைகளை தீர்க்க  வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.




Original article:

Share:

முன்பதிவு காலத்தை குறைக்கும் இந்திய இரயில்வேயின் முடிவு குறித்து... -மைத்ரி போரேச்சா

 இதற்கு முன்பு, முன்பதிவு காலத்தை இரயில்வே குறைத்துள்ளதா? நீண்டகால முன்பதிவு காத்திருப்பு எவ்வாறு மோசடிகளுக்கு வழிவகுக்கின்றன? இந்த விதிகள் வெளிநாட்டு பயணிகளுக்கும் பொருந்துமா?


பயணிகள் நீண்ட தூரப் பயணங்களுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே இரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி இருந்தது. இருப்பினும், இந்த விதியானது மாறிவிட்டது. இப்போது, ​​இரண்டு மாதங்களுக்கு முன்பே இரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதை, இரயில்வே வாரியம் இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்கூட்டிய முன்பதிவுக் காலம் (Advance Reservation Period (ARP)) எப்போது நடைமுறைக்கு வரும்? 


புதிய முன்கூட்டிய முன்பதிவு காலம் (Advance Reservation Period (ARP)) விதிகள் நவம்பர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 60 நாட்களுக்கு முன்பே (உண்மையான பயண நாளைத் தவிர) திறக்கப்படும் என்றும் சுற்றறிக்கை கூறுகிறது. இருப்பினும், ஒரு பயணி அக்டோபர் 31-ம் தேதிக்கு முன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தால், அந்த முன்பதிவுகள் செல்லுபடியாகும். இது முந்தைய 120 நாள் கால விதிக்கு பொருந்தும். பயணிகள் எப்போது வேண்டுமானாலும் இந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து கொள்ளலாம்.


முன்பதிவு காலத்தை 60 நாட்களாகக் குறைப்பதன் மூலம், 2008 மே 1 முதல் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் 16 ஆண்டு கால கொள்கையை இரயில்வே வாரியம் மாற்றியுள்ளது. இதற்கு முன்பு, 1995 முதல் 2007-ம் ஆண்டு வரை, முன்பதிவுக்கான அவகாசம் 60 நாட்களுக்கு குறைக்கப்பட்டது. சுவாரஸ்யமாக, 1988 முதல் 1993-க்கு இடையில், இரயில்வே டிக்கெட்டுக்கான முன்பதிவு அவகாசம் 45 நாட்களுக்குள் குறைக்கும் முயற்சியை மேற்கொண்டது. இதற்கு முன், 1981 முதல் 1985-ம் ஆண்டு வரை, இரயில்வே 90 நாள் அவகாசமாக முன்கூட்டிய முன்பதிவு காலத்தை (ARP) திறந்து வைத்தது.


ஏன் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது? 


பொதுவாக, பயணிகள் தங்கள் பயணங்களைத் திட்டமிடுவதற்கு 120 நாட்கள் என்பது மிக நீண்ட காலம் என்றும், இது அதிக அளவு டிக்கெட்டுகளை ரத்து செய்ய வழிவகுத்தது என்றும் இரயில்வே அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது, ​​டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளில் 21% நபர்கள் வரை டிக்கெட்டை ரத்து செய்கிறார்கள்." இருக்கைகள் / படுக்கைகளை முன்பதிவு மூலம் ஒதுக்கும்போது, பயணிகள் குறித்த நேரத்தில் பயணங்களுக்கு வராததால் இருக்கைகள் / படுக்கைகள் வீணாவதையும், அதே நேரத்தில் டிக்கெட்டுகளை ரத்து செய்யவதை பயணிகள் கவலைப்படாததையும் அதிகாரிகள் குறிப்பிடிருந்தனர். 4% முதல் 5% பயணிகள் முன்பதிவு செய்து குறித்த நேரத்தில் வருவதில்லை என்றும், இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாகக் கருதப்படுகிறது என்று அதிகாரி மேலும் கூறினார். "இரயில்வே வாரியம் மேற்கொண்ட மற்றொரு போக்கு என்னவென்றால், 88% முதல் 90% வரை இரயில் முன்பதிவுகள் 60 நாட்களாக குறைத்துள்ளது சரியான போக்காக கருதப்பட்டது" என்று மற்றொரு மூத்த அதிகாரி தி இந்துவிடம் தெரிவித்திருந்தார். 


நீண்ட முன்பதிவு காத்திருப்பு மோசடிகளை அதிகரிக்குமா? 


புதிய முன்கூட்டிய முன்பதிவு காலத்தை (Advance Reservation Period (ARP)) குறைக்க அதிகாரிகள் கூறிய காரணம் என்னவென்றால், பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை ரத்து செய்யாமலும், பயணத்திற்கு வராமலும் இருந்தால், அது மோசடிக்கான வாய்ப்பை உருவாக்குகிறது. ஆள்மாறாட்டம் மற்றும் ரயில்வே அதிகாரிகள் காலிப் படுக்கைகளை ஒதுக்க சட்டவிரோதமாக பணம் பெறுவது போன்ற சிக்கல்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். முன்பதிவு மூலம், ஒதுக்கீடு செய்யப்படும்  இருக்கைகள் நீண்ட காலத்தை குறைப்பதன் மூலம் இதைத் தடுக்க முடியும்" என்று அந்த அதிகாரி கூறினார். 


விபத்துகளைத் தடுக்க இரயில்வே வாரியம் என்ன செய்ய வேண்டும்?  


இரண்டாவதாக, இரயில்வே நெட்வொர்க்கில் செயல்படும் தரகர்களைக் (touts) கட்டுப்படுத்துவதில் பெரும் சவால் உள்ளது. "முன்பதிவு காலம் நீண்டதாக இருக்கும்போது, தரகர்கள் கணிசமான அளவு டிக்கெட்டுகளைத் தடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முன்கூட்டிய முன்பதிவு காலத்தை (ARP)  குறைப்பது உண்மையான பயண நேரத்தில் பயணிகள் அதிக டிக்கெட்டுகளை வாங்குவதை ஊக்குவிக்கும்" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். 


இதேபோல், முன்கூட்டிய முன்பதிவு காலத்தை (ARP) குறைப்பது அல்லது அதிகரிப்பது என்ற முடிவு ஆலோசிக்கப்பட்டு வருவதாக இரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். "ARP-க்கான காத்திருப்பு நேரத்தை எவ்வாறு சரிசெய்வது என்று விவாதிக்கும் இரண்டு எதிரெதிர் முகாம்கள் உள்ளன. அமைச்சகத்தில் ஒரு முன்பதிவு செய்வதற்கான இரயில்வே முகாம் உள்ளது. இது, ஆண்டு முழுவதும் முன்கூட்டியே முன்பதிவு செய்வதை உறுதிபடுத்துகிறது. மேலும், பயணிகள் 365 நாட்களில் ஆண்டு முழுவதும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், ரத்து செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆண்டு முழுவதும் முன்பதிவு செய்வதன் மூலம் இரயில்வேக்கு முன்கூட்டியே வருமானம் கிடைக்கும் என்று இந்த முகாம் நம்புகிறது. தற்போது, ​​இந்த விருப்பம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. அவர்கள், இந்தியாவில் தங்கள் இரயில் பயணத்தைத் திட்டமிட குறிப்பிட்ட ஒதுக்கீட்டைக் பெற்றுள்ளனர் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.


ஏஆர்பி-யின் விதியிலிருந்து எந்த பயணிகளின் குழுக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது? 


வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் பொது வகுப்பு டிக்கெட்டுகள் (General class tickets) பாதிக்கப்படாது என மத்திய இரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த டிக்கெட்டுகள் பொதுவாக இவர்களின் பயணத்திற்கு முன்பே வாங்கப்படும் என்பதால் இது சாத்தியம். தாஜ் எக்ஸ்பிரஸ் மற்றும் கோமதி எக்ஸ்பிரஸ் போன்ற சில ரயில்களுக்கு இந்த அமர்ந்து பயணிக்கும் ரயில்களில் பயணிக்க விரும்பும் பயணிகள் உடனடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தெரிய வந்தது என்றும் அது கூறியுள்ளது. "இந்த ரயில்களில் பயணிக்க விரும்பும் பயணிகள் உடனடியாக ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதால் அவர்களுக்கு ஏஆர்பி விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது" என்று முதல் அதிகாரி மேலும் கூறினார்.




Original article:

Share:

பண்பாடு மற்றும் சமூகம்: குடியுரிமைச் சட்டத்தின் 6A பிரிவை நிலைநிறுத்துவது குறித்து…

 அசாமின் குடியுரிமை சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு புதிய பிரச்சினைகளை தடுக்க உதவும்.


உச்ச நீதிமன்றம் குடியுரிமைச் சட்டத்தின் 6A பிரிவை உறுதி செய்துள்ளது. இந்த பிரிவு 1985-ல் அசாம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டது. நீதிமன்றம் 4:1 பெரும்பான்மையுடன் இந்த முடிவை எடுத்தது. ஜனவரி 1, 1966-க்கு முன் முன்னாள் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து அசாமிற்குள் நுழைந்த எந்த ஒரு நபருக்கும் இந்த பிரிவு குடியுரிமையை வழங்குகிறது. இரண்டாவதாக, ஜனவரி 1, 1966 மற்றும் மார்ச் 25, 1971-க்கு இடையில் குடியேறியவர்களுக்கு இது ஒரு பதிவு முறையை உருவாக்கியது. வங்காள தேசியவாத இயக்கத்தை ஒடுக்க ஆபரேஷன் சர்ச்லைட் (Operation Searchlight) தொடங்கப்பட்டது. 


 இந்த இரண்டாவது குழுவிற்கு, தனிநபர்கள் பொதுவாக அசாமில் வசிக்க வேண்டும் மற்றும் அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன் ஒரு தீர்ப்பாயத்தால் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட வேண்டும். எனினும், அவர்கள் வெளிநாட்டினர் என அடையாளம் காணப்பட்ட பின்னர் 10 ஆண்டுகளுக்கு வாக்களிக்க முடியாது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பிரிவு 6A சமநிலையைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று விளக்கினார். இது அசாமில் குடியேறிய மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குகிறது. அதே நேரத்தில் உள்ளூர் மக்களின் கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளையும் பாதுகாக்கிறது.


பெரும்பாலான நீதிபதிகள், பிரிவு 6A அரசியலமைப்பிற்கு எதிரானது என்ற கருத்தை நிராகரித்துள்ளனர். ஏனெனில், இது இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து அசாமை வித்தியாசமாகக் காட்டும். குறிப்பிட்ட தேதிகளில் இருந்து குறிப்பிட்ட குழுக்களுக்கு வெவ்வேறு குடியுரிமை விதிகளை உருவாக்க அரசியலமைப்பு நாடாளுமன்றத்தை அனுமதிக்கிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். மக்கள்தொகை மாற்றங்கள் சில குழுக்களின் கலாச்சார உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்வது, மாநிலங்களுக்கு இடையேயான குடியேற்றத்திற்கு எதிராக அதிக சவால்களுக்கு வழிவகுக்கும் என்று நீதிபதி சூர்ய காந்த் கூறினார். இந்த சவால்கள் உள்ளூர் கலாச்சாரங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளாக முன்வைக்கப்படலாம். தற்போது, ​​அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டை இறுதி செய்யும் செயல்முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 19 லட்சம் பேர் குடிமக்கள் அல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் நிலை குறித்த அறிவிப்புகள் எதுவும் இல்லை. பிரிவு 6A ரத்து செய்யப்பட்டால், அது புதிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.




Original article:

Share:

அரசியலமைப்பு நிர்வாகத்தில் ஒரு புதிய மைல்கல் -சி.ராஜ்குமார்

 அரசியலமைப்பு நிர்வாகத்தின் (constitutional governance) 75 ஆண்டை கொண்டாட இந்தியாவுக்கு பல காரணங்கள் உள்ளன.

 

நவம்பர் 26 அன்று, இந்தியா தனது அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட 75-வது நிறைவு விழாவை கொண்டாட இருக்கிறது. இந்த சாதனையை இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் கொண்டாட வேண்டும். இந்தியாவில் அரசியலமைப்பு நிர்வாகம் என்பது ஜனநாயக நிறுவனங்களுக்கு வழிகாட்டும் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மட்டுமல்ல. பல்வேறு கலாச்சாரங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை பொருட்படுத்தாமல், அனைத்து இந்தியர்களை பாதுகாக்கும் வலுவான அரசியலமைப்பு கலாச்சாரத்தை உருவாக்குவதும் இதில் அடங்கும். நிறுவனங்களுக்கான மரியாதை மற்றும் அதிகாரத்தின் சுமுகமான மாற்றங்கள் இதில் அடங்கும்."

 

அரசியலமைப்பு தினத்தை கொண்டாட நாடு தயாராகி வருவதால், இந்தியாவின் அரசியலமைப்பு கலாச்சாரத்தை வடிவமைத்துள்ள முக்கிய அரசியலமைப்பு மதிப்புகளை அடையாளம் காண வேண்டிய நேரம் இது. இந்த ஐந்து மதிப்புகளும் காலப்போக்கில் நீடித்து வருகிறது. 


முதலாவதாக, ஜனநாயக அமைப்புகளுக்கு மக்கள் மரியாதை செலுத்த வேண்டும். இந்திய அரசியலமைப்பு நவம்பர் 26, 1949-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது, இந்தியாவில் சராசரி மனிதனின் ஆயுட்காலம் 32 ஆண்டுகளாக இருந்தது. இன்று, சராசரி மனிதனின் ஆயுட்காலம் 70 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.  ஜனநாயக அமைப்புகள் மக்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளாக பொதுக் கொள்கையை திறம்பட செயல்படுத்துவதை சுட்டி காட்டுகிறது. பல இந்தியர்கள் உள்ளூர், மாநில அல்லது தேசிய தேர்தல்களில் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் பிரதிநிதிகளிடமிருந்து சிறந்த செயல்திறனை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். உள்ளூர், மாநிலம் அல்லது பொதுத் தேர்தல் என ஒவ்வொரு தேர்தலிலும் இந்தியர்கள் ஏன் இவ்வளவு பெரிய மற்றும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தொடர்ந்து பங்கேற்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 1951-52 முதல் தேர்தல்களில் 60% இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். 2024 பொதுத் தேர்தலில், 65.79% வாக்குகள் பதிவாகியிருந்தன. ஜனநாயகத்திற்கான மரியாதை மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் மீதான நம்பிக்கை ஆகியவை காலங்காலமாக நீடித்து வரும் இந்தியாவின் முக்கிய அரசியலமைப்பு மதிப்புகள் ஆகும். 


இரண்டாவதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களில் சுமுகமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த எழுபது ஆண்டுகளில், இந்தியா தேசிய  மற்றும் அளவில் அளவில் பல தேர்தல் நடந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பல்வேறு முக்கிய பதவிகளை பெற்றுள்ளனர். பல்வேறு கொள்கைகளை கொண்ட அரசியல் தலைவர்கள் தேர்தல்களில் வெற்றி பெற்று மாநிலங்களிலும் தேசிய அளவிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஆனால், இந்தியாவின் ஜனநாயக மரபுகளின் தனித்துவம் என்னவென்றால், தேர்தலுக்குப் பிறகு ஆட்சியை சுமுகமாக நடத்துவதை உறுதி செய்ய ஒவ்வொரு அரசியல் கட்சியின்  வலுவான அர்ப்பணிப்பு ஆகும். 


தேர்தல்களில் தீவிர பிரச்சாரம் மற்றும் சில சமயங்களில் பிளவுபடுத்தும் செய்திகள் இருந்தாலும், தேர்தல் முடிவுகள் எப்போதும் சிறந்த அனுபவமாக இருக்கும். இருப்பினும், ஒவ்வொரு தேர்தலிலும், இறுதியில் வெற்றி பெறுபவர்கள் வாக்காளர்களாகிய மக்கள். இந்திய வாக்காளர்கள் தங்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதே அவர்களின் வாக்களிக்கும் முடிவுகளை வடிவமைக்கிறது என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டாக உள்ளனர். இந்திய மக்கள் தேர்தலின் முக்கியத்துவத்தை மதிக்கிறார்கள் மற்றும் ஒரு அரசாங்கத்திடமிருந்து மற்றொரு அரசாங்கத்திற்கு அதிகாரத்தை சுமுகமாக மாற்றுவதை தங்களின் வாக்குகள் மூலம் உறுதி செய்கிறார்கள்.


உரிமைகளை நிலைநிறுத்துதல் 


மூன்றாவதாக, உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பது நீதிமன்றங்கள் மூலம்  மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட நிறுவனங்களான அடிப்படை உரிமைகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை அரசியலமைப்பு உறுதி செய்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று சுதந்திரத்திற்கு முக்கிய பங்காற்றினார். ஆங்கிலேயரின் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடி இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தனர். அடிப்படை உரிமைகளுக்கான விதிகளை உருவாக்கும் போது, ​​அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்கள் அரசு மற்றும் அதன் அமைப்புகளின் அதிகாரத்தைப் பற்றி தெரிந்து வைத்திருந்தனர்.


 அவர்கள் கருணையுள்ள அரசு (benevolent state) என்ற கருத்தை ஆதரித்திருக்கலாம். சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் அரசின் அதிகாரத்தில் சந்தேகம் கொண்டிருந்தனர். தனிமனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் கவனமாக இருந்தனர். இது அவர்களின் நீண்ட காலப் பார்வையை சுட்டிக் காட்டியது. ஆனால், உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மிக முக்கியமானவை என்பதை புரிந்துகொள்வதன் மூலம் அரசியலமைப்பின் மதிப்பு பல ஆண்டுகளாக வளர்ந்துள்ளது.


நான்காவதாக, கூட்டாட்சி (federalism) என்பது அரசியலமைப்பு நிர்வாகத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நாட்டின் பல மொழிகள் மற்றும் கலாச்சார வேறுபாடுகள் உட்பட நாட்டின் பன்முகத்தன்மையை புரிந்து கொண்டனர். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் வரலாறு மற்றும் மரபுகளை அவர்கள் அறிந்திருந்தனர். இந்த விழிப்புணர்வு மாநிலங்களின் தனித்துவமான அடையாளம், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்க உதவியது, அதே நேரத்தில் தேசிய அடையாளத்தையும் உருவாக்கியது.


 பல்வேறு வகையான சுயாட்சி மற்றும் சிறப்பு சலுகைகளை உருவாக்கினார். ஒவ்வொரு மாநிலத்திற்கும், தனித்துவமான வரலாறுகள் மற்றும் கலாச்சாரங்களைக் கருத்தில் கொண்டு, சில பிராந்தியங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை திறம்பட நிவர்த்தி செய்ய, இந்திய அரசியலமைப்பு சட்டம் நேர்மை மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் சிறப்பு நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டுகிறது.


கடந்த ஏழுபது ஆண்டுகளாக, கூட்டாட்சி கொள்கை இரண்டு முக்கிய வழிகளில் வளர்ந்துள்ளது:


1. இந்தியாவில் மாநில அளவிலான அரசியல் கட்சிகளின் எழுச்சி தேசிய அளவில் விழிப்புணர்வை அதிகரிக்க உதவியுள்ளது. இந்த வலுவான மாநில கட்சிகள் மாநில மற்றும் தேசிய அளவில் கூட்டணி அரசாங்கங்களை அமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன.


2. கூட்டாட்சி (federalism) கொள்கை 73 மற்றும் 74 வது அரசியலமைப்பு திருத்தங்களை நிறைவேற்ற வழிவகுத்தது. இந்த திருத்தங்கள் கிராம சபை மற்றும் நகர சபைகளை (nagarpalikas) நிறுவ வழிவகுத்தது. 


ஊடகங்கள், குடிமை சமூங்கள் ஆற்றிய பங்கு 


ஐந்தாவதாக, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை வளர்ப்பதில் ஊடகங்களும் குடிமை சமூகமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்திய ஊடகங்கள் பல்வேறு மொழிகளில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கண்ணோட்டங்களை வெளிக்காட்டுகிறது. அச்சிலிருந்து ஒளிபரப்பு ஊடகம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறுவது தகவல்களை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது. ஊடக நிறுவனங்களுக்கு  எவ்வாறு நிதியளிக்கப்படுகின்றன மற்றும் நிர்வகிக்கப்படுகின்றன என்பது தொடர்பான முக்கிய சவால்கள் உள்ளன. 


ஊடகங்களும் குடிமை சமூகமும் இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை வளர்க்க உதவுகின்றன. ஊடக சுதந்திரத்தை பாதிக்கும் பிரச்சினைகளை நாம் விமர்சிக்க வேண்டும். ஆனால், அதன் முக்கியத்துவத்தையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். ஊடகக் கலாச்சாரத்தில் வெளிப்படைத்தன்மை, பல்வேறு ஊடக ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின் மூலம், இந்திய வாக்காளர்கள் ஊடகங்கள் மற்றும் குடிமை சமூகத்தின் பாத்திரங்களைப் பற்றி நன்கு அறிந்துள்ளனர்.


அரசியலமைப்பு நிர்வாகத்தின் 75-வது நிறைவு விழாவை கொண்டாடுவதற்கு இந்தியர்கள் அனைவருக்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன.


சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய இராணுவத்தின் கடைசி ஆங்கிலேய தளபதியான ஜெனரல் கிளாட் ஆச்சின்லெக் (Claude Auchinleck), சீக்கியர்கள் ஒரு தனி ஆட்சியை உருவாக்க முயற்சி செய்யலாம் என்று கூறினார். இது ஒரு பொதுவான பரவலாக்கத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் நம்பினார். ஐரோப்பா ஒரு இத்தாலியனிலிருந்து வேறுபட்டது போல, பஞ்சாபி ஒரு மதராசியிலிருந்து வேறுபட்டது. ஆங்கிலேயர்கள் இந்த குழுக்களை ஒருங்கிணைக்க முயன்றனர். ஆனால், அவர்களின் முயற்சி வெற்றிபெறவில்லை. பல்வேறு நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு கண்டத்திலிருந்து நீங்கள் ஒரு தேசத்தை உருவாக்க முடியாது என்று கூறினார். 


அரசியலமைப்பு இலட்சியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு தேசத்தின் தேசிய அடையாளத்தை உருவாக்குவதில் பலரை நாம் தவறென நிரூபித்தோம், ஆனால் அரசியலமைப்பை சமூக மனசாட்சியையும் அரசியல் உணர்வையும் வலுப்படுத்தும் கருவியாகவும் மாற்றியுள்ளோம்.

சி.ராஜ்குமார் ஓ.பி.ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்




Original article:

Share: