சட்டவிரோத வெளியேற்றத்தைத் தடுக்கவும், வேளாண்மையில் முதலீடு செய்யவும் பொது விநியோக முறை (PDS) சீர்திருத்தப்பட வேண்டும் - அசோக் குலாட்டி, ராயா தாஸ்

 மிகவும் ஏழ்மை நிலையில் மேல் (above antyodaya) உள்ளவர்கள் உணவுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் (Minimum Support Price (MSP)) பாதியையாவது செலுத்த வேண்டும். இதன் மூலம் அரசு பணத்தை சேமித்து, மீண்டும் விவசாயத்தில் முதலீடு செய்ய வழிவகுக்கலாம்.


பொதுவாக, நன்கு அறியப்பட்ட ஒன்றான, "ஒரு மனிதனுக்கு ஒரு மீன் கொடுங்கள், அதன்மூலம் அவருக்கு ஒரு நாள் உணவளிக்கிறீர்கள். ஒரு மனிதனுக்கு மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பதன் மூலம், அவருக்கு வாழ்நாள் முழுவதும் உணவளிக்கிறீர்கள் என்ற ஒரு பழமொழி உள்ளது. முந்தைய தலையங்கத்தில் ('இலவச உணவின் பிரச்சனைப் பற்றி', இந்திய எக்ஸ்பிரஸ், அக்டோபர் 18), உணவு மானியத்தின் ஒரு பகுதியை, 2023-ம் நிதியாண்டில் ரூ.2.7 லட்சம் கோடியை விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன், கிராமப்புற சாலைகள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டது. 


இந்த பகுதிகள் உணவு மானியங்களை விட அதிக வருமானத்தை ஈட்ட முடியும். பதிலுக்கு மிலிந்த் முருகர் ஒரு கட்டுரையில், (‘ஒரு முதலீடு வீணாகாது’, IE, அக்டோபர் 25) உணவு மானியங்களை வீணாக்காமல் முதலீடுகளாகவே பார்க்க வேண்டும் என்று வாதிட்டார். இவருடைய கருத்தை ஆதரிக்கிறோம். இச்சூழலில், மூன்று முக்கிய விஷயங்களை முன்னிலைப்படுத்த விரும்புகிறோம்.


முதலாவது, வீட்டு வருமானத்தை ஆதரிப்பதே குறிக்கோள் என்றால், இலவச உணவு விநியோகத்தின் பெரிய தொகுதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மிலிந்த் முருகர் பரிந்துரைக்கிறார். தற்போது, ​​கிட்டத்தட்ட 57 சதவீத மக்கள் இந்த திட்டத்தின் கீழ் உள்ளனர். மக்கள்தொகையில் இவ்வளவு பெரிய தொகுதியை நாம் உண்மையிலேயே ஆதரிக்க வேண்டும் என்றால், வறுமையைக் குறைப்பது பற்றிய கோரிக்கைகளை நாம் கேள்வி கேட்க வேண்டியிருக்கும். 


தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 248 மில்லியன் மக்களின் வறுமையைக் குறைப்பது பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பல நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டுள்ளார்.


இரண்டாவதாக, ஏறத்தாழ 28 சதவீத இலவச உணவுவானது, தேவைப்படும் பயனாளிகளைச் சென்றடைவதில்லை என்று தெரிந்தால், முருகர் இந்த பொது விநியோக முறையை (Public Distribution System (PDS)) ஆதரிப்பாரா? மேலும்,  பொது விநியோக முறையில் (PDS) இன்னும் சட்டவிரோத வெளியேற்றத் தீர்வு  தொடர்பான முக்கிய சிக்கல்கள் உள்ளன. ஆனால், இதைப் பற்றி பின்னர் விவாதிப்போம். இந்த இழப்புகளைத் தடுக்க ஒரு சிறந்த வழியாக பயனாளிகளின் கணக்குகளுக்கு நேரடி பணப் பரிமாற்றங்களை அவர் ஆதரிக்க மாட்டார் அல்லவா? மூன்றாவதாக, இலவச அரிசி மற்றும் கோதுமை ஊட்டச்சத்து தொடர்பான பாதுகாப்பு பிரச்சினையை தீர்க்க முடியுமா? 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியமானது. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் அவர்கள் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கின்றனர்.


2022-ம் ஆண்டு, உலக வங்கியின் தரவுகள், 12.9 சதவீத இந்தியர்கள் ஒரு நாளைக்கு $2.15 (வாங்கும் திறன் சமநிலை (PPP)) டாலருக்கும் குறைவான அளவாகவே வாழ்கின்றனர். இது ஒரு தீவிர வறுமை நிலையாகக் கருதப்படுகிறது. 2013-14 முதல் 2022-23 வரை பல பரிமாண வறுமைக் குறியீடு (multidimensional poverty index (MDPI)) 29.17 சதவீதத்திலிருந்து 11.28 சதவீதமாகக் குறைந்து, கடந்த 9 ஆண்டுகளில் 248 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து மீண்டதாக 2024-ம் ஆண்டு NITI ஆயோக் அறிக்கை குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக, மிகவும் வறுமையில் வாடும் 15% மக்களுக்கு அரசாங்கம் இலவச உணவு வழங்க விரும்பினால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், ஆனால் தற்போதைய பாதுகாப்பான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவின் (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana (PMGKAY)) கீழ் மக்கள் தொகையில் சுமார் 57 சதவீதத்தை உள்ளடக்கியது. 


1997-1998-ஆம் ஆண்டில் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களால் தொடங்கப்பட்ட இலக்கு பொது விநியோகத் திட்டத்தின் (Targeted PDS) கீழ் மேற்கொள்ளப்பட்டது போல், தீவிர வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் (minimum support price (MSP)) பாதி வசூலிக்க வேண்டாமா? இது உணவு மானியச் செலவைக் கட்டுப்படுத்தவும், காலநிலையை எதிர்க்கும் விவசாயத்தில் முதலீடு செய்வதற்கான வளங்களை விடுவிக்கவும் உதவும்.


சட்டவிரோத வெளியேற்றத்தால், பொது விநியோக முறையின் (PDS) பிரச்சனை இந்தக் கட்டுரையின் முக்கிய அம்சமாகும். ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பின் (Household Consumption Expenditure Survey (HCES)) நிலை அளவிலான தரவை பகுப்பாய்வு செய்ததில், இந்தத் தரவு, மாநில அரசுகளிடமிருந்து கூடுதல் விநியோகம் உட்பட, பொது விநியோக முறை (PDS) மூலம் மக்கள் பெற்ற அரிசி மற்றும் கோதுமையின் அளவைக் காட்டுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (National Food Security Act (NFSA)) கீழ் இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India (FCI)) வழங்கிய அரிசி மற்றும் கோதுமையின் அளவுடன், மாநில அளவிலான ஒதுக்கீடுகளுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தோம். 


இந்த ஒப்பீடு ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான குறிப்பிட்டக் காலத்துடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளதால், குறிப்பிடத்தக்க முரண்பாட்டை வெளிப்படுத்துகின்றன. ஒதுக்கப்பட்ட தானியங்களில் 28 சதவீதம், சுமார் 19.69 மில்லியன் மெட்ரிக் டன் (million metric tonnes (MMT)) அரிசி மற்றும் கோதுமை, வரையறுக்கப்பட்ட பயனாளரைச் சென்றடையவில்லை. இதன் காரணமாக, அரிசி மற்றும் கோதுமையின் சட்டவிரோத வெளியேற்றத்தால் சுமார் ரூ.69,108 கோடி நஷ்டம் ஏற்படுத்துகிறது. மேலும், இது ஒரு வருடாந்திர இழப்பு, இது செலவுகள் அதிகரிக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து கொண்டே இருக்கும். இருப்பினும், ஏழைகளுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் ஆண்டுதோறும் நடக்கும் மிகப்பெரிய மோசடிகளில் இதுவும் ஒன்றாகும்!


சாந்த குமாரின் கீழ் தானிய மேலாண்மை குறித்த உயர் அதிகாரக் குழுவின் 2015-ம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பொது விநியோக அமைப்பில் (PDS) பெரிய அளவில் சட்டவிரோத வெளியேற்றம் இருப்பதை இந்திய அரசாங்கம் அறிந்திருந்தது. அந்த நேரத்தில், 2011-12-ன் குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பு (HCES) அடிப்படையில், இந்த வெளியேற்றங்கள் சுமார் 46 சதவீதம் என மதிப்பிடப்பட்டது. 2016-ம் ஆண்டில், அரசாங்கமானது நியாய விலைக் கடைகளில் (Fair Price Shops (FPS)) பாயின்ட்-ஆஃப்-சேல் (Point-of-Sale (PoS)) எனும் விற்பனை இயந்திரங்களை அறிமுகப்படுத்தியது. இந்த இயந்திரங்கள் பயோமெட்ரிக் அங்கீகாரம் மற்றும் நிகழ்நேர பரிவர்த்தனை கண்காணிப்பு மூலம் இந்த வெளியேற்றங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இன்று, நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் (FPS) கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பாயின்ட்-ஆஃப்-சேல் (PoS) இயந்திரங்களைக் கொண்டுள்ளன. இந்த மாற்றம் சட்டவிரோத வெளியேற்றத்தை 46 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாகக் குறைக்க உதவியது. ஆனால், இந்த விகிதம் இன்னும் அதிகமாக உள்ளது. மாநிலங்களில் சட்டவிரோத வெளியேற்றம் கடுமையாக வேறுபடுகின்றன என்பதை விளக்கப்படம் காட்டுகிறது. அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் குஜராத் ஆகியவை பொது விநியோக அமைப்பில், சட்டவிரோத வெளியேற்றத்தின் அடிப்படையில் முதல் மூன்று மாநிலங்களில் உள்ளன. இருப்பினும் அகில இந்திய அளவில், இந்த வெளியேற்றம் 28 சதவீதமாக உள்ளது. இது PDS-ஐ சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை இவை மேலும் எடுத்துக்காட்டுகிறது.


இப்போது ஊட்டச்சத்து பாதுகாப்பில் கவனம் செலுத்துவோம். 2011-12ஆம் ஆண்டை விட 2022-23ஆம் ஆண்டில் பருப்பு மற்றும் காய்கறிகளுக்கான செலவு குறைந்துள்ளதாக குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பின் (HCES) தரவு காட்டுகிறது. தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு (2019-21) தரவுகள்படி, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 35.5 சதவீதம் வளர்ச்சி குன்றியவர்களாகவும், 19.3 சதவீதம் பேர் வீண்விரயமடைந்தவர்களாகவும், 32.1 சதவீதம் பேர் எடை குறைவாகவும் உள்ளனர். ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சமாளிக்க, சில நியாய விலைக் கடைகளை (FPS) "ஊட்டச்சத்து மையங்களாக" (nutrition hubs) மாற்ற வேண்டும். இந்த மையங்கள் தானியங்களுக்கு கூடுதலாக முட்டை, பருப்பு வகைகள், தினை மற்றும் பழங்கள் போன்ற பல்வேறு பொருட்களை வழங்க முடியும். டிஜிட்டல் உணவு கூப்பன் அமைப்பு (coupon system) பயனாளிகள் இந்த கூப்பன்களை மையங்களில் பரந்த அளவிலான சத்தான உணவுக்காக மீட்டெடுக்க அனுமதிக்கும்.


சுருக்கமாக, பொது விநியோக அமைப்பில் (PDS) சீர்திருத்தம் தேவை. 57% மக்களுக்கு இலவச உணவு வழங்குவது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். மிகவும் ஏழ்மை நிலையில் மேல் (above antyodaya) உள்ளவர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் (Minimum Support Price (MSP)) பாதியையாவது செலுத்த வேண்டும். இதில் கிடைக்கும் சேமிப்பை மீண்டும் விவசாயத்தில் முதலீடு செய்யலாம். சட்டவிரோத வெளியேற்றத்தை குறைக்க, பயனாளிகளின் கணக்குகளுக்கு நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்வதைக் கருத்தில் கொள்ளலாம். நியாய விலைக் கடைகளில் (FPS) ஊட்டச்சத்து மையங்கள் மூலம் ஆரோக்கியமான உணவுக்கான டிஜிட்டல் கூப்பன்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.


குலாட்டி புகழ்பெற்ற பேராசிரியர் மற்றும் தாஸ் ICRIER இல் ஒரு ஆராய்ச்சி பணியாளர் ஆவார்.


Original article:


Share:

தேசிய சட்ட சேவைகள் தினம் 2024 -ரோஷ்னி யாதவ்

 தேசிய சட்ட சேவைகள் தினம் (National Legal Services Day) ஆண்டுதோறும் நவம்பர் 9 அன்று அனுசரிக்கப்படுகிறது.


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9 அன்று தேசிய சட்ட சேவைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இது சட்ட விழிப்புணர்வை மேம்படுத்தவும், அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவும், பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களின் மூலம், இந்த நாள் தனிநபர்களுக்கு அவர்களின் சட்ட உரிமைகள் பற்றிய அறிவை மேம்படுத்துவதையும், மேலும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதற்கும் மோதல்களை தீர்ப்பதற்கான வழிமுறைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


முக்கிய எடுத்துக்காட்டுகள்:


1. சமூகத்தின் மிகவும் ஆபத்தில் இருக்கக் கூடிய பிரிவினருக்கு இலவச சட்ட உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்திய உச்சநீதிமன்றம் 1995-ல் தேசிய சட்ட சேவைகள் தினத்தை நிறுவியது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய சமூகங்களுக்கு அதிகாரமளித்தல், நீதிக்கான சமமான அணுகலை உறுதி செய்தல் மற்றும் நிதிச் சிக்கல்கள் காரணமாக யாருக்கும் சட்ட உதவி மறுக்கப்படுவதை உறுதி செய்வதில் இந்த நாள் கவனம் செலுத்துகிறது.


2. சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் முகாம்கள் உட்பட தேசிய சட்ட சேவைகள் தினம் மற்றும் பிற சட்ட நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு செயல்பாடுகள் மூலம் சட்டத்திற்கும் மிகவும் தேவைப்படும் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. 1987-ல் சட்ட சேவைகள் அதிகாரிகள் சட்டம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான முறையில் சட்ட உதவித் திட்டங்களுக்கு ஒரு சட்டப்பூர்வமான அடிப்படையை நிர்ணயம் செய்ய இயற்றப்பட்டது. 1994-ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்தின் மூலம் சில திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இந்த சட்டம் இறுதியாக நவம்பர் 9, 1995 அன்று அமல்படுத்தப்பட்டது. அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.என். மிஸ்ரா இந்த சட்டத்தை செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.

தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (National Legal Services Authority (NALSA))

1. சமூகத்தின் பின்தங்கிய குழுக்களுக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குவதற்காக 1987-ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகார சபைச் சட்டத்தின் கீழ் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது. பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீர்க்க உதவும் லோக் அதாலத்தை ஏற்பாடு செய்கிறது. இது பல்வேறு சட்ட உதவி திட்டங்களை கண்காணித்து மதிப்பாய்வு செய்கிறது மற்றும் சட்டத்தின்கீழ் சட்ட சேவைகளுக்கான விதிகள் மற்றும் கொள்கைகளை வழங்குகிறது.

2. தேசிய சட்ட சேவைகள் ஆணையம் சட்ட உதவி அமைப்புகள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்த மாநில சட்ட சேவைகள் அதிகாரிகள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு நிதி மற்றும் மானியங்களை வழங்குகிறது.

3. இந்தியாவின் மாண்புமிகு தலைமை நீதிபதி தலைமை புரவலர் மற்றும் NALSA உச்ச நீதிமன்றத்தில் அமைந்துள்ளது.

சட்ட சேவைகள் அதிகாரிகளின் நோக்கங்கள்

இலவச சட்ட உதவி மற்றும் ஆலோசனை வழங்குதல், சட்ட விழிப்புணர்வை பரப்புதல், தகராறுக்கு மாற்று தீர்வு வழிமுறைகள் மூலம் தகராறுகளின் தீர்வுகளை ஊக்குவித்தல். மத்தியஸ்தம், சமரசம், நீதித்துறை தீர்வு, லோக் அதாலத் மூலம் தீர்வு அல்லது மத்தியஸ்தம் உட்பட பல்வேறு வகையான தகராறுக்கு மாற்று தீர்வு வழிமுறைகள். பிரச்சனைகளை தீர்ப்பதற்கு லோக் அதாலத்-ஐ ஏற்பாடு செய்தல்.



1. NALSA கொள்கைகளை செயல்படுத்தவும், லோக் அதாலத் உள்ளிட்ட இலவச சட்ட சேவைகளை வழங்கவும் மாநில சட்ட சேவைகள் ஆணையம் (State Legal Services Authority) ஒவ்வொரு மாநிலத்திலும் நிறுவப்பட்டுள்ளது.


2. அந்தந்த உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு தலைமை நீதிபதி மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைவராக உள்ளார்.


3. இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்டத்தில் சட்ட சேவைகள் திட்டங்களை செயல்படுத்த மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் (District Legal Services Authority) அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட சட்ட சேவைகள் ஆணையமானது அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட நீதிபதியின் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது.


4. இவை தவிர, தாலுகா/ துணைப் பிரிவு சட்டப் பணிகள் குழு (ஒரு மூத்த சிவில் நீதிபதி தலைமையில்), நீதிமன்ற சட்ட சேவைகள் குழு மற்றும் உச்ச நீதிமன்ற சட்ட சேவைகள் குழு ஆகியவையும் உள்ளன.


சட்ட சேவைகள் அதிகாரிகள் சட்டத்தின் 12-வது பிரிவின் கீழ் ஒரு வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டிய அல்லது வாதிட வேண்டிய ஒவ்வொரு நபரும் இந்தச் சட்டத்தின்கீழ் சட்டப்பூர்வ சேவைகளைப் பெற தகுதியுடையவராக இருப்பார் என்றால்:

- பெண்கள் மற்றும் குழந்தைகள்

-பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின உறுப்பினர்கள்

- தொழில்துறை தொழிலாளர்கள்

- பேரழிவு, வன்முறை, வெள்ளம், வறட்சி, பூகம்பம், தொழில்துறை பேரழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.

- ஊனமுற்றோர்

- காவலில் உள்ள நபர்கள்

- சிறார் நீதிச் சட்டம் (Juvenile Justice Act), 1986 பிரிவு 2 தொடர்பான நபர்கள் அல்லது மனநல மருத்துவமனை அல்லது மனநல மருத்துவ இல்லத்தில் உள்ளவர்கள், மனநலச் சட்டம், 1987-ல்  (Mental Health Act) வரையறுக்கப்பட்டுள்ளது.


-மாநில அரசு நிர்ணயித்த ஒரு குறிப்பிட்ட வரம்புக்குக் கீழே ஆண்டு வருமானம் உள்ளவர்கள் உச்சநீதிமன்றத்தைத் தவிர வேறு நீதிமன்றத்தில் வழக்கு இருந்தால் அல்லது ரூ. 5 லட்சம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருந்தால் 


-மனித கடத்தல் அல்லது கட்டாய உழைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் (பிச்சைக்காரர்).


உங்களுக்கு தெரியுமா?

"நியா தீப்" NALSA-ன் அதிகாரப்பூர்வ செய்திமடல், நாடு முழுவதும் உள்ள சட்ட சேவை அதிகாரிகளுக்கு இடையே ஆரோக்கியமான பணி உறவை உருவாக்க உதவுகிறது. கருத்து பரிமாற்றம் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (National Legal Services Authority (NALSA)) தொடர்பான அரசியலமைப்பு விதிகள்

1. பிரிவு 39A இந்திய அரசியலமைப்புச் சட்டம்: சட்ட அமைப்பு அனைவருக்கும் சமமாக நீதி வழங்குவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறுகிறது. நிதி அல்லது பிற குறைபாடுகள் காரணமாக எந்த ஒரு நபருக்கும் நீதியைப் பாதுகாப்பதற்கான இலவச சட்ட உதவியும் வழங்க வேண்டும் என்று கூறுகிறது. 

2. பிரிவுகள் 14 மற்றும் 22(1)-சட்டத்தின் முன் அனைவரும் சமம்  (equality before law) மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்பு (equal opportunity to all) என்ற அடிப்படையில் அனைவருக்கும் நீதிக்கான சம வாய்ப்புகள் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.


Original article:

Share:

இந்தியா முதுமை அடையும் முன் வளம் பெற முடியுமா? -ஹர்ஷித் ரகேஜா, யுவராஜ் கைதான்

 இந்தியா அதன் மக்கள்தொகை ஈவுத்தொகையிலிருந்து (demographic dividend) பயனடைய உற்பத்தி வேலைகளை உருவாக்க வேண்டும்.


பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவின் மக்கள்தொகை ஈவுத்தொகை கவனம் பெற்றது. இந்தியா தனது சோசலிச பொருளாதார மாதிரியிலிருந்து விலகியபோது இது நடந்தது. மக்கள்தொகை ஈவுத்தொகை (Demographic dividend) ஒரு நாட்டின் பொருளாதார நன்மைகளை குறிக்கிறது. பெரும்பாலான மக்கள் வேலை செய்யும் வயதில் இருக்கும்போது இந்த நன்மைகள் கிடைக்கும். உழைக்கும் மக்கள் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும்.  இன்று, மக்கள்தொகை ஈவுத்தொகை தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியின் தெளிவற்ற வாக்குறுதியாகக் காணப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, ஏதோ ஒன்று என்றென்றும் நிலைத்திருக்கும் என்று நம்பப்படும்போது, ​​மக்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்கிறார்கள். கல்வி, வேலை மற்றும் வீட்டு வசதிக்காக போட்டியிடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதுவே மனக்கசப்பாக இருக்கலாம்.


நடுத்தர வருமானப் பொறி


ஒரு உண்மை சோதனை தேவை. இந்தியாவின் மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கு 15 முதல் 64 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருந்தாலும், மக்கள்தொகை ஈவுத்தொகை நினைத்தது போல் சக்தி வாய்ந்ததாகவோ முடிவற்றதாகவோ இல்லை. இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (total fertility rate (TFR)) ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்ற குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட வேகமாக குறைந்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில், உழைக்கும் வயதினரின் விகிதம் குறையத் தொடங்கும் என்று கணிப்புகள் காட்டுகின்றன. இது இந்தியாவின் மக்கள்தொகை ஈவுத்தொகையில் பாதிப்பை ஏற்படுத்தும். 


பெரும்பாலான மாநிலங்களில் இப்போது ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் என்ற மாற்று நிலைக்குக் கீழே கருவுறுதல் விகிதம் (fertility rate) உள்ளது. இது நிலையான மக்கள்தொகையை பராமரிக்க தேவைப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள், 1.75-க்கும் குறைவான கருவுறுதல் விகிதங்களுடன், முன்னணியில் உள்ளன. பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் போன்ற பிற மாநிலங்களும் இதே போன்ற சரிவைக் காண்கின்றன. இந்த போக்கு நாடு முழுவதும் நடந்து வருவதை இது காட்டுகிறது.


மொத்த கருவுறுதல் விகிதத்தில் (total fertility rate (TFR)) ஏற்பட்ட சரிவு, குறைந்த பிறப்பு விகிதம் சிறந்த கல்வி மற்றும் வருமானத்துடன் நடக்கும் என்ற வழக்கமான கருத்தை சவால் செய்கிறது. இந்தியாவின் தனிநபர் வருமானம் சற்று மேம்பட்டிருந்தாலும், இந்திய இன்னும் குறைந்த நடுத்தர வருமானம் (lower-middle-income countries) கொண்ட நாடாகவே கருதப்படுகிறது. 2010-ல் 2.6-ஆக இருந்த மொத்த கருவுறுதல் விகிதம் இன்று 1.99-ஆகக் குறைந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறிவரும் நிலையில், இந்த சரிவு வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முதுமை அடையும் முன் வளம் பெற முடியுமா என்பது கேள்வி மட்டும் அல்ல. இது ஒரு தீவிர கவலையாக மாறியுள்ளது.


இன்னும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மக்கள் குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட விவசாய வேலைகளில் சிக்கித் தவிப்பதாலும் அல்லது போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் போது மாணவர்கள் வேலையில்லாமல் இருப்பதாலும் நமது ஈவுத்தொகை வீணாகி வருகிறது. தாராளமயமாக்கலுக்குப் பிறகு, குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட விவசாயத்தில் இந்தியா தனது தொழிலாளர்களின் விகிதத்தை வெறும் 17 சதவீத புள்ளிகளால் 63%-லிருந்து 46%-ஆகக் குறைத்துள்ளது.


 சீனாவில் தாராளமயமாக்கல் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, விவசாயத்தில் நாட்டின் தொழிலாளர்களின் பங்கு 32 புள்ளிகள், 70%-ல் இருந்து 38%-ஆகக் குறைந்துள்ளது. இதற்கிடையில், நகர்ப்புறங்களில் இந்தியாவின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (labour force participation rate (LFPR)) 50%-கீழ் மோசமாக உள்ளது. இந்தப் பாதையில் தொடர்ந்தால், ஒரு சில நாடுகள் மட்டுமே தப்பித்த நடுத்தர வருமான வலையில் விழும் அபாயம் உள்ளது. சீனாவும் கூட, பல ஆண்டுகளாக வேகமான வளர்ச்சிக்குப்பிறகு, வளர்ச்சி குறைந்து வருகிறது. மக்கள்தொகை வேகமாக குறைவதால், இந்தியா சிறப்பாக செயல்படும் என்று கருதக்கூடாது.


உற்பத்தியில் கவனம் செலுத்துங்கள்


எனவே, மக்கள்தொகை ஈவுத்தொகை மிகவும் தாமதமாக வருவதற்கு முன்பு நாம் என்ன செய்ய வேண்டும்? வரலாறு முழுவதும், பொருளாதார வளர்ச்சிக்கான நிரூபிக்கப்பட்ட பாதை விவசாயம் போன்ற குறைந்த உற்பத்தித் துறைகளில் இருந்து உற்பத்தி மற்றும் சேவைகளில் அதிக உற்பத்தித் திறன் கொண்ட வேலைகளுக்கு தொழிலாளர்களை நகர்த்துவதாகும். சேவைத் துறை கணிசமாக வளர்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தியாவில் உற்பத்தி தேக்கமடைந்துள்ளது. இது கவனிக்கப்பட வேண்டும். ஏனெனில் உற்பத்தி, குறிப்பாக உழைப்பு மிகுந்த தொழில்களில், சேவைகளைவிட அதிக வேலைகளை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக, $150 பில்லியன் ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலில் 45 மில்லியன் மக்கள் பணியாற்றுகின்றனர். அதே நேரத்தில் $250 பில்லியன் IT-BPM துறையில் 5.5 மில்லியன் பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். ஜவுளித் தொழிற்சாலைகள் 60-70% பெண்களை வேலைக்கு அமர்த்துகின்றன. தற்போது, ​​பணிபுரியும் வயதுடைய இந்தியப் பெண்களில் 10 பேரில் மூன்று பேர் மட்டுமே தொழிலாளர் தொகுப்பில் உள்ளனர்.


இந்தியாவில் உற்பத்தியாளர்கள் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கின்றனர். சமீபத்திய உலக வங்கி ஆய்வுகளின்படி, இந்தியாவில் உள்ள ஆறில் ஒரு உற்பத்தியாளர் வணிக உரிமம் மற்றும் அனுமதி பெற  போராடுகிறார். அதே நேரத்தில் வியட்நாமில் உற்பத்தியாளர்களில் 3% க்கும் குறைவானவர்கள் இதே பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். 


நிலத்திற்கான தேவை  மற்றும் சிக்கலான மற்றும் வர்த்தக விதிகள் ஆகியவை முக்கிய பிரச்சினைகளாகும். இந்தியாவில், 17% உற்பத்தியாளர்கள் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வியட்நாமில் வெறும் 3% மட்டுமே இந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்த தடைகள் உற்பத்தியின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க, இந்தியா தனது வர்த்தக சூழலை மேம்படுத்த வேண்டும்.


இந்திய உற்பத்தியாளர்களுக்கு மலிவாகவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் ஒன்றிய அரசு கட்டணத்தை குறைக்க வேண்டும். இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை முடிப்பது இந்திய தயாரிப்புகளுக்கான சந்தை தேவைகளை விரிவுபடுத்த மற்றொரு முன்னுரிமையாக இருக்க வேண்டும். மாநில அரசாங்கங்கள் தொழிலாளர் சீர்திருத்தங்களில் அதிக முனைப்புடன் இருக்க வேண்டும். 


தொழிலாளர்கள் நெகிழ்வான பணி ஏற்பாடுகளை தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும், தொழிற்சாலைகளுக்கான நிலம் மற்றும் கட்டிட விதிகளையும் அவர்கள் மறுஆய்வு செய்ய வேண்டும். ப்ரோஸ்பெரிட்டியின் (Prosperiti) சமீபத்திய அறிக்கையின்படி, கட்டுப்பாடான கட்டிடத் தரங்களால் பல தொழிற்சாலைகள் தங்கள் நிலத்தில் பாதியை மட்டுமே பயன்படுத்த முடியும், இது உற்பத்தி செலவுகளை அதிகரிக்கிறது. கூடுதலாக, தொழில்துறை பகுதிகளில்தொழிலாளர் குடியிருப்புகளை உருவாக்குவதற்கான கட்டுப்பாடுகள் பணியமர்த்தல் செலவுகளை அதிகரிக்கின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதும் முதலீட்டுச் சூழலை மேம்படுத்துவதும் இந்தியாவின் முதன்மையான முன்னுரிமைகளாக இருக்க வேண்டும்.


நமது மக்கள்தொகை ஈவுத்தொகையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். 1980-களில், சீனா இந்தியாவைப் போன்ற தனிநபர் வருமானத்தைக் கொண்டிருந்தது மற்றும் கோடிகணக்கான மக்களை விவசாயத்திலிருந்து உற்பத்திக்கு மாற்றியது. இந்தியா தனது குறுகியகால "மக்கள்தொகை ஈவுத்தொகையை" (‘demographic dividend’) கொண்டாடுவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. மாறாக, அதை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.


ஹர்ஷித் ரகேஜா, பொருளாதார வளர்ச்சிக்கான அறக்கட்டளையின் தகவல் தொடர்பு மேலாளர்; யுவராஜ் கேதன், பொருளாதார மேம்பாட்டுக்கான அறக்கட்டளையின் திட்ட மேலாளர்




Original article:

Share:

மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசுகளின் நிகர கடன் உச்சவரம்புகள் மீதான கட்டுப்பாடுகள் -வித்யா வி.தேவன், மீனு மோகன்

 நிகர கடன் உச்சவரம்புகள் (Net Borrowing Ceiling (NBC)) குறித்த ஒன்றிய அரசின் முடிவு கேரளா அரசை நீதிமன்றத்தில் வழக்கு தொடர  வழிவகுத்துள்ளது. அரசியலமைப்பின், 293-வது பிரிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.


2023-ஆம் ஆண்டில் கேரளாவிற்கு நிகர கடன் வாங்கும் உச்சவரம்பை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. இந்த உச்சவரம்பு கேரளாவின் 2023-24-ஆம் ஆண்டுக்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில்  (Gross State Domestic Product (GSDP)) 3% வரை கடன் வாங்குவதை கட்டுப்படுத்துகிறது. உச்சவரம்பு அனைத்து கடன் வகைகளையும் உள்ளடக்கியது. திறந்த சந்தைக் கடன்கள், நிதி நிறுவனக் கடன்கள் மற்றும் பொதுக் கணக்குப் பொறுப்புகள் ஆகியவை இதில் அடங்கும். இப்போது உச்சவரம்பில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் கடன்களும் அடங்கும்.


இந்த உச்சவரம்பு கேரளாவிற்கு பெரும் நிதி சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசு தனது செலவுகளை சமாளிக்க போராடுகிறது. இந்த நடவடிக்கை மாநில அரசை வளர்ச்சி மற்றும் நலத் திட்டங்களில் முதலீடு செய்வதை  தடுத்துள்ளது. இது கேரளாவுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. கேரளா அரசு இந்த பிரச்சனையை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. அரசியலமைப்பின் 293-வது பிரிவை ஒன்றிய அரசு மீறியதாக கேரளா அரசு தெரிவித்தது. இந்தச் சட்டப்பிரிவு மாநிலங்களுக்கு அவர்களின் ஒருங்கிணைந்த நிதியைப் (guarantee of the Consolidated Fund) பாதுகாப்பாகப் பயன்படுத்தி கடன் வாங்கும் அதிகாரத்தை வழங்குகிறது. அரசமைப்புச் சட்டம் வழங்கிய நிதி சுதந்திரத்தை (fiscal autonomy)  ஒன்றிய அரசு சட்டவிரோதமாக குறைப்பதாக கேரளா கூறுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்  293-வது பிரிவை  பற்றி உச்ச நீதிமன்றம் முதல் முறையாக விளக்கியுள்ளது.


கடன் வாங்குவதற்கான அதிகாரங்கள் மற்றும் ஏற்பாடுகள்


அரசியலமைப்பின் பகுதி XII, அத்தியாயம் II கடன் வாங்கும் அதிகாரங்களை பற்றி பேசுகிறது. சட்டப்பிரிவு 292, இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியைப்  (Consolidated Fund of India) பாதுகாப்பாகப் பயன்படுத்தி மத்திய அரசு கடன் வாங்க அனுமதிக்கிறது. அரசியலமைப்பின் பிரிவு 293 மாநிலங்கள் தங்கள் மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தி இந்தியாவிற்குள் கடன் வாங்க அனுமதிக்கிறது. பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் சட்டங்கள் மூலம் கடன் வரம்புகளை நிர்ணயிக்கலாம். அரசியலமைப்பின் பிரிவு 293(2)-ன் கீழ், இந்திய அரசு எந்த மாநிலத்திற்கும் கடன் கொடுக்கலாம். 292-வது பிரிவின் கீழ் இந்தக் கடன்களுக்கான நிபந்தனைகளையும் வரம்புகளையும் நாடாளுமன்றம் உருவாக்கலாம்.


இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியைப் பயன்படுத்தி மாநிலங்கள் எடுக்கும் கடனுக்கு ஒன்றிய அரசு உத்தரவாதம் அளிக்க முடியும். பிரிவு 293(3) மாநிலங்களுக்கு இந்தியாவிடமிருந்து கடன்கள் அல்லது உத்தரவாதங்கள் நிலுவையில் இருந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் புதிய கடன்களுக்கு ஒன்றிய அரசின் அனுமதியை மாநிலங்கள் பெற வேண்டும். இந்த அனுமதிக்கு ஒன்றிய அரசு எந்த நிபந்தனைகளையும் விதிக்கலாம்.


சட்டப்பிரிவு 293, இந்திய அரசு சட்டம், 1935–ன் பிரிவு 163-ஐ அடிப்படையாகக் கொண்டது. ஆகஸ்ட் 10, 1949 அன்று, சட்டப்பிரிவு 293 மீதான அரசியல் நிர்ணய சபை விவாதத்தின் போது உறுப்பினர் அனந்தசயனம் அய்யங்கார் கடன் வாங்குவது குறித்து கூடுதல் ஆய்வு தேவை என்றார். இந்த கடன்கள் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் என்று தனது கவலைகளை வெளிப்படுத்தினர். நிதி ஆயோக் போன்ற ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்று  அனந்தசயனம் அய்யங்கார் பரிந்துரைத்தார்.


1935 சட்டத்தின் பிரிவு 163(4) “ஒப்புதல்” (‘consent’) பற்றிய தெளிவான விதிகளைக் கொண்டிருந்தது. கூட்டமைப்பு நியாயமான காரணமின்றி கடன்களை மறுக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ முடியாது என்று கூறுகிறது. மாகாணங்கள் சரியான காரணத்தைக் காட்டினால், கூட்டமைப்பு நியாயமற்ற நிபந்தனைகளையும் விதிக்க முடியாது. இருப்பினும் சர்ச்சை எழுந்தால், அது மாகாண ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும். இவ்விவகாரத்தில் மாகாண ஆளுநரின் முடிவே இறுதியானது.


இந்த விதி அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காரணம், 1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சட்டம் இருந்தது. இந்தியர்கள் அல்லாத வெளிநாட்டு நிறுவனம் நிர்வாகத்தை கையாளும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் இந்த விதிமுறை சேர்க்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த சட்டம் இனி தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது. மாநில அரசுகள் மாகாணங்களை மாற்றி, தேசிய அரசாங்கம் ஒன்றியத்தில்  அமைந்தது.


வருவாய் பற்றாக்குறையை நீக்குதல்


 2003-ஆம் ஆண்டு, நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (Fiscal Responsibility and Budget Management (FRBM) Act) சட்டம் 292-வது பிரிவின் படி நிதிக் கட்டுப்பாட்டைப் பராமரிக்க உருவாக்கப்பட்டது. வருவாய் பற்றாக்குறையை நீக்குவது மற்றும் நிதி பற்றாக்குறையை குறைப்பது போன்ற இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இதைச் செய்ய, ஒன்றிய அரசு தனது ஆண்டு நிதிப் பற்றாக்குறை விகிதத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% இலக்கை நிர்ணயித்துள்ளது. ஒன்றிய அரசின் முன்மாதிரியைப் பின்பற்றி மாநிலங்களும் தங்கள் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த தங்கள் சொந்தச் சட்டங்களை இயற்றின. 


2018-ஆம் ஆண்டு,  நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை திருத்தச் சட்டம் புதிய வரம்புகளை நிர்ணயித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% குறைவாகவும் மற்றும் 2025-26-க்குள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறையை 4.5%-க்குக் கீழ் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த, மாநிலங்களுக்கான கடன் வரம்புகளுக்கு ஒன்றிய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், மாநில சுயாட்சியில் தலையிடுவதாகவே பார்க்கப்படுகிறது. இது அவர்களின் வரவு செலவுத் திட்டங்களை திறம்பட சமநிலைப்படுத்தும் திறனைக் குறைக்கின்றன.


சட்டப்பிரிவு 293-ன் கீழ் மாநிலங்கள் கடன் வாங்கும் அதிகாரம் குறித்த கேரளாவின் வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது. அதை அரசியல் சாசன அமர்வு பரிசீலனை செய்யும். இந்த வழக்கில் நிதிப் பரவலாக்கம் (fiscal decentralisation) மற்றும் மாநில சுயாட்சி ஆகியவை அடங்கும். நிதி ஒருங்கிணைப்பு மீதான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டை ஒன்றிய அரசின் விதிகள் பாதித்ததா என்று கேள்வி எழுந்துள்ளது.


இந்தியாவின் பொருளாதார, அரசியல் மற்றும் நிதி நிலைமை மாறிவிட்டது. கட்டுரை 293-ஐ மதிப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இது. 1935 சட்டத்தின் பிரிவு 163(4) தேவையற்ற தாமதம் அல்லது ஒன்றிய அரசு கடன்களை மறுப்பது குறித்து எச்சரித்தது. கடன் வாங்குவது தொடர்பான சிக்கல்களை கையாள அரசியலமைப்பில் இந்த விதியை சேர்த்திருக்கலாம்.


இந்த சட்டத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது


பிரிவு 293 வலுப்படுத்தப்பட வேண்டும். அய்யங்கார் கூறியது போல், நிதி ஆணையம் போன்ற அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். கடன் பிரச்சினைகளை முடிவு செய்யும் போது மாநில நிதி மற்றும் ஒன்றிய அரசின் பற்றாக்குறை இலக்குகள் இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


பிரிவு 293(4) அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு ஒன்றிய அரசிற்கு தெளிவான வழிகாட்டுதல்கள் தேவை. இது ஒன்றிய-மாநில நிதிகளை சமநிலைப்படுத்த உதவும் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சியை வலுப்படுத்தும். வழிகாட்டுதல்கள் இல்லாமல், முடிவுகள் தன்னிச்சையாக இருக்கலாம். இது அதிகப்படியான கடன் அல்லது பல கட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்கும்.


பிரிவு 293(4)-க்கான வழிகாட்டுதல்கள் பின்வருமாறு: அரசு கடன்களை ஏற்கும் அல்லது நிராகரிப்பதற்கான விதிகள் தெளிவாகவும், பொதுமக்களுக்கு திறந்ததாகவும் இருப்பதை மையம் உறுதி செய்ய வேண்டும். கடன் வாங்கும் விதிகளை அமைக்கும் முன் மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு ஆலோசனை செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை கூட்டாட்சியை ஊக்குவிக்கிறது. கடன் வாங்கும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். மாநிலங்கள் தங்கள் நிதி மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். கட்டுப்பாடுகள் நியாயமானதாக இருக்க வேண்டும் மற்றும் மாநிலங்கள் தங்கள் நிதியை திறம்பட நிர்வகிப்பதில் இருந்து தடுக்கக்கூடாது. 


இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் பிரிவு 293(4)-ன் கீழ் உள்ள ஒன்றிய அரசின் அதிகாரங்கள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும். இது சமநிலையான நிதி நிர்வாகத்தை  பராமரிக்கவும் கூட்டுறவு கூட்டாட்சியை உறுதிப்படுத்தவும் உதவும்.


வித்யா வி. தேவன், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள குலாட்டி நிதி மற்றும் வரித்துறை நிறுவனத்தில் சட்டப் பேராசிரியராக உள்ளார். மீனு மோகன் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள குலாட்டி நிதி மற்றும் வரித்துறை நிறுவனத்தில் சட்டத்துறையில் உதவி பேராசிரியராக உள்ளார்.




Original article:

Share:

டிஜிட்டல் கைதைத் தவிர்த்தல் - சாகர் விஷ்னோய் சுபம் சிங்

 தகவலறிந்து இருங்கள். தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம்.


பிரதமர் நரேந்திர மோடி தனது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் புதிய இணையவழி மோசடி குறித்து குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இது "டிஜிட்டல் கைது" (digital arrest) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊழலில், மோசடி செய்பவர்கள் தங்களை சட்ட அமலாக்க அல்லது அரசாங்க அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து தனிநபர்களை பயமுறுத்தி பணம் பறிக்கிறார்கள்.


2023-ம் ஆண்டின், முதல் காலாண்டில் டிஜிட்டல் கைது மோசடிகளால் மட்டும் இந்திய குடிமக்கள் ₹120.3 கோடியை இழந்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் (Ministry of Home Affairs (MHA)) சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையத்தில் (Indian Cybercrime Coordination Centre) I4C ஆவணத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இணைய மோசடிகளில் இது தொடர்பான மோசடிகளும் அடங்கும். இது இணைய குற்றவியல் புகார்களைக் கையாளும் பொறுப்பு இந்த மையத்திற்கு உண்டு. மொத்தத்தில், 2023-ம் ஆண்டின் தொடக்கத்தில் இணைய மோசடிகள் ₹1,776 கோடியாக இருந்தது. இவற்றில், 46 சதவீத வழக்குகள் மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியாவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.


தேசிய இணைய குற்றவியல் அறிக்கையிடல் தளமானது (National Cybercrime Reporting Portal (NCRP)), இதன் அறிக்கையில் இணையகுற்றவியல் புகார்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 2023-ம் ஆண்டு, முதல் நான்கு மாதங்களில், 740,000 புகார்கள் வந்துள்ளன. இது 2021-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 4,52,000 புகார்களை விட குறிப்பிடத்தக்க உயர்வாகும்.


இது எப்படி வேலை செய்கிறது?


டிஜிட்டல் கைது மோசடியில், மோசடி செய்பவர்கள் ஒரு போலியான காட்சியை உருவாக்குகிறார்கள். அதாவது, பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் அல்லது இதுபோன்ற குற்றங்களை அவர்கள் குறிப்பிடலாம். மோசடி செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பாதிக்கப்பட்டவரை எச்சரிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவரின் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் குற்றச் செயலில் ஈடுபட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.


மோசடி செய்பவர்கள் சீருடை அணிந்த நிலையில், சட்ட அமலாக்க அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். பாதிக்கப்பட்டவரை "வழக்கு" என்று குறிப்பிட்டு, இதை மூடுவதற்கு ஈடாக அவர்கள் பணம் செலுத்த வேண்டும். இணையகுற்றவாளிகள் பயன்படுத்தும் நிலையான முறையாக இது மாறிவிட்டது.


I4C-ன் படி, டிஜிட்டல் கைது மோசடிகள் பொதுவாக ஒரு திட்டமிட்ட வரிசையைப் பின்பற்றுகின்றன.


முதலில், அவர்கள் பாதிக்கப்பட்டவரை அடையாளம் காண்கிறார்கள். அவர்கள் தங்கள் மோசடியை மேலும் உறுதிப்படுத்த தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கின்றனர்.


ஆள்மாறாட்டம் : மோசடி செய்பவர்கள் காவல்துறை, சிபிஐ அல்லது பிற முகமைகளின் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். அவர்கள் போலி சீருடைகளை அணியலாம் அல்லது பயத்தை உருவாக்க அரங்கேற்றப்பட்ட பின்னணியைப் பயன்படுத்தலாம்.


அழுத்தத்தைப் பயன்படுத்துதல் : கைது செய்யப்படுவதைத் தவிர்க்க, பாதிக்கப்பட்டவர் விரைவாகச் செயல்படுமாறு வலியுறுத்தப்படுகிறது. வழக்கை "மூட" பணம் கேட்கப்படுகிறது.


இத்தகைய மோசடிகளுக்கு எதிரான சிறந்த பாதுகாப்புக்கான விழிப்புணர்வு அவசியம். சட்ட அமலாக்க அதிகாரிகள் அல்லது அரசாங்க அதிகாரிகளிடமிருந்து எதிர்பாராத ஆடியோ அல்லது வீடியோ அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். அழைப்பு மோசடியானது என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக இணைப்பைத் துண்டிக்கவும். தெரியாத எண்களில் இருந்து வீடியோ அழைப்புகளைத் தவிர்க்கவும்.


உங்கள் நெட்வொர்க்கில் உள்ள மற்றவர்களை குறிவைப்பதில் மோசடி செய்பவர்களுக்கு உதவக்கூடிய தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், கூறப்படும் வழக்கைத் தீர்ப்பதற்கு பணத்தை மாற்ற வேண்டாம். அதற்குப் பதிலாக, அதிகாரப்பூர்வ உதவிக்கரம் எண்களில் (official helplines) உள்ளூர் காவலைத் தொடர்பு கொள்ளவும், தேவைப்பட்டால், உங்கள் வங்கிக் கணக்குகளைத் தற்காலிகமாகத் தடுக்கவும்.


அறிக்கையிடுவதற்கு ஸ்கிரீன்ஷாட்கள் அல்லது அழைப்புக்கான பதிவுகள் போன்ற எந்தவொரு ஆதாரத்தையும் வைத்திருங்கள். உங்களிடம் உள்ள அனைத்து விவரங்களுடன் உங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்வதே சிறந்த நடவடிக்கையாகும்.


மோசடிகளைத் தவிர்க்க இந்திய கணினி அவசரநிலைப் பதில் குழு (Indian Computer Emergency Response Team (CERT-In)) குறிப்பிட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளது. முதலில், நிறுவனத்தை நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம், அரசாங்க நிறுவனத்தைச் சேர்ந்ததாகக் கூறும் எந்தவொரு அழைப்பாளரின் அடையாளத்தையும் உறுதிப்படுத்தவும். இரண்டாவதாக, தெரியாத அழைப்பாளர்களுடன் அல்லது ஆன்லைனில் தனிப்பட்ட அல்லது நிதி விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். மூன்றாவதாக, அழுத்தத்தின் கீழ் ஒருபோதும் பணத்தை மாற்ற வேண்டாம். நான்காவதாக, மரியாதைக்குரிய முகமைகள் உடனடியாக பணம் கேட்காது. இறுதியாக, சந்தேகம் இருந்தால், 1930 என்ற தேசிய சைபர்-செக்யூரிட்டி ஹெல்ப்லைனுக்கு அல்லது சைபர் கிரைம் இணையதளம் மூலம் சம்பவங்களைப் புகாரளிக்கவும்.


நீங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளீர்கள் என நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு, மறுபரிசீலனை சாத்தியமா என்பதைப் பார்க்கவும். மேலும், இழப்புகளைத் தடுக்க தற்காலிக கணக்கை முடக்கவும்.


உங்கள் உள்ளூர் இணையகுற்றவியல் துறை மற்றும் தேசிய இணையகுற்றவியல் அறிக்கையிடல் தளத்தில் (National Cybercrime Reporting Portal (NCRP)) முறையான அறிக்கையைச் சமர்ப்பிக்கவும், மோசடிக்கான ஏதேனும் ஆதாரங்களை வழங்கவும்.


டிஜிட்டல் மோசடிகளின் இந்த யுகத்தில் தகவல் மற்றும் விழிப்புடன் இருப்பது அவசியம். ஏனெனில், மோசடி செய்பவர்கள் சந்தேகத்திற்கு இடமில்லாது நபர்களை ஏமாற்றுவதற்கு தொடர்ந்து புதிய முறைகளை வகுக்கிறார்கள்.


சாகர் ஃபியூச்சர் ஷிப்ட் லேப்ஸின் இணை நிறுவனர், மற்றும் ஷுபம் ஒரு எத்திகல் ஹேக்கிங் நிபுணர் ஆவார்.




Original article:

Share: