லா நினா எங்கே? உலகளாவிய மாதிரிகள் ஏன் தங்கள் கணிப்பில் தவறின? - அஞ்சலி மரார்

 வானிலை மாதிரிகள் செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே லா நினா தொடங்கும் என்று கணித்திருந்தன. ஆனால், அது நடக்கவில்லை. லா நினா ஏன் தாமதமாகிறது என்பது பற்றியும், உலகளாவிய மாதிரிகள் தங்கள் கணிப்பில் ஏன் தவறு செய்தன என்பதும் பற்றியும் காண்போம். 


  இந்த ஆண்டு முடிய சில நாட்கள் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில், 2016-ஆம் ஆண்டை விஞ்சும் வகையில் 2024-ஆம் ஆண்டு இதுவரை பதிவு செய்யப்பட்ட வெப்பமான ஆண்டாக இருக்கலாம் என்பதற்கு போதுமான காரணங்களும் தரவுகளும் உள்ளன. இதற்கு நேர்மாறான கணிப்புகள் இருந்தபோதிலும், லா நினா உருவாகவில்லை. 


காலநிலை நிகழ்வு ஏன் அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கிவிட்டது ?


லா நினா என்றால் என்ன? 


லா நினா என்பது எல் நினோ தெற்கு அலைவு (El Niño Southern Oscillation (ENSO)) என்று அழைக்கப்படும் ஒரு நிலையாகும். இது மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வகைப்படுத்தப்படும் ஒரு காலநிலை நிகழ்வு ஆகும். வளிமண்டலத்தில் ஏற்ற இறக்க நிகழ்வுடன், ENSO உலகளாவிய வளிமண்டல சுழற்சியில் ஆதிக்கம் செலுத்துகிறது.  இதனால் இது உலகளவில் வானிலையை பாதிக்கிறது. 


ENSO மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. சூடான (எல் நினோ), குளிர் (லா நினா) இரண்டும் முதல் ஏழு ஆண்டுகள் ஒழுங்கற்ற சுழற்சிகளில் நிகழ்கின்றன.  லா நினா கடைசியாக 2020-2023 ஆம் ஆண்டிலும், எல் நினோ 2023-24 ஆம் ஆண்டிலும் நிகழ்ந்தன. 


நடுநிலை கட்டத்தில், பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதி (தென் அமெரிக்காவின் வடமேற்கு கடற்கரைக்கு அருகில்) மேற்குப் பக்கத்தை (பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவுக்கு அருகில்) விட குளிராக இருக்கும். கிழக்கிலிருந்து மேற்காக நகரும் காற்று அமைப்புகள்,  இந்தோனேசிய கடற்கரையை நோக்கி வெப்பமான மேற்பரப்பு நீரை அடித்துச் செல்வதே இதற்குக் காரணம். இந்த இடம்பெயர்ந்த நீருக்கு பதிலாக கீழிருந்து ஒப்பீட்டளவில் குளிர்ந்த நீர் மேலே வருகிறது. 


எல் நினோ கட்டத்தில், இந்த காற்று அமைப்புகள் பலவீனமடைகின்றன. இது தென் அமெரிக்க கடற்கரையில் வெப்பமான நீரின் குறைந்த இடப்பெயர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, கிழக்கு பசிபிக் வழக்கத்தைவிட வெப்பமாகிறது. லா நினா கட்டத்தில் இது இதற்கு நேர்மாறானது நிகழ்கிறது. இதனால் வியாபாரக் காற்றுகள் (trade winds) வழக்கத்தைவிட வலுவாகிறது. மேலும், அதிக அளவு தண்ணீரை மேற்கு பசிபிக் கடலை நோக்கி செலுத்துகிறது. 


இந்தியாவில், எல் நினோ குறைந்த மழைப்பொழிவு மற்றும் அதிக வெப்பநிலையுடன் தொடர்புடையது. அதே நேரத்தில் லா நினா அதிகரித்த மழைப்பொழிவுடன் தொடர்புடையது மற்றும் குறைந்த வெப்பநிலையுடன் தொடர்புடையது. 


கடலின் தற்போதைய நிலை என்ன? இந்த ஆண்டு ENSO கணிப்புகள் என்ன? 


அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் ( National Oceanic and Atmospheric Administration (NOAA)) அறிவிப்பின் படி, டிசம்பர் 9 நிலவரப்படி, மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகை கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியைவிட குறைவாக இருந்தது. இதனால், நவம்பர் மற்றும் டிசம்பர் தொடக்கத்தில் லா நினா 'கண்காணிப்பு' தொடர்ந்ததால், ENSO நடுநிலை நிலைமைகளும் தொடர்ந்து நிலவின. 


கடந்த வாரம், நினோ 3.4 பகுதியில் ஓசியானிக் நினோ இன்டெக்ஸ் (ONI) மைனஸ் 0.3 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலின் நான்கு முக்கிய பிராந்தியங்களில் ஒன்றாகும். இது ENSO நிலையினை அறிவிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


பூமத்திய ரேகை பசிபிக் பகுதியில் மூன்று மாத சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியின், வெப்பநிலை கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக, இந்த பகுதியில் ONI மைனஸ் 0.5 டிகிரி அல்லது அதற்கும் கீழே வரும் போது லா நினா தொடக்கம் அறிவிக்கப்படுகிறது. 


இந்த ஆண்டு, சேகரிக்கப்பட்ட கடலின் தரவுகளின் அடிப்படையிலான வானிலை மாதிரிகள், ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் லா நினா தோன்றக்கூடும் என்று பரிந்துரைத்தன.  பின்னர் அக்டோபர்-டிசம்பரில் லா நினா உருவாகும் என்று  இந்த கணிப்புகள் புதுப்பிக்கப்பட்டன.  இருப்பினும், சமீபத்திய கணிப்புகள், இப்போது டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் ஒரு குறுகிய மற்றும் பலவீனமான லா நினா உருவாகும் என்று கூறுகின்றன. 


ONI மதிப்புகள் தேவையான வரம்பு மதிப்பைத் தொட்டாலும், வெப்பநிலை சிறிது நேரத்திற்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இது லா நினா அத்தியாயத்தை சுருக்கமாகவும் லேசாகவும் மாற்றுகிறது. பலவீனமான லா நினா 2025-ஆம் ஆண்டு மார்ச்-மே மாதங்களில் ENSO-நடுநிலைக்கு மாறக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் பொருள் லா நினா இந்த ஆண்டு இந்திய குளிர்காலத்தில் குறைந்தபட்ச தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 


லா நினா கணிப்புகள் இந்த ஆண்டு தவறியது ஏன்? 


பொதுவாக, கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் மாற்றங்களின் நிகழ்வுகளில், அதாவது வலுவான எல் நினோ அல்லது லா நினா இருக்கும்போது வானிலை மாதிரிகளின் துல்லியம் அதிகமாக இருக்கும். இந்த முறை இது சாத்தியமில்லை.  இது வானிலை மாதிரிகள் செய்திகளை சரியாகப் பெறாததற்கு வழிவகுத்தது. ஏனெனில், அவற்றின் உள்ளீடுகளில் நிமிட வெப்பநிலை மாறுபாடுகளை அவர்களால் ஒரு காரணியாக கருத முடியவில்லை. 


இதனால் காலநிலை தொடர்பான பிற காரணிகளும் அதன் மாதிரிகளும்  துல்லியமற்றதாக இருக்கக்கூடும்.


  1. கடல்-வளிமண்டல இணைப்பு 


இந்த ஆண்டு, கடலுக்கும் வளிமண்டலத்திற்கும் இடையிலான தொடர்பு எதிர்பார்த்தபடி இல்லை. இது பூமத்தியரேகை பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலையை அதிகமாகவோ அல்லது இயல்புக்கு அருகிலோ இருக்க வழிவகுத்தது. எல் நினோ நிலைமைகள் 2024ஆம் ஆண்டு வரை தொடர்ந்ததால் இது இருக்கலாம். அதாவது கடல் வெப்பநிலையின் அடிப்படையில் அதன் தாக்கம் தொடர்ந்து மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது. 


  1. மேற்கு காற்று முரண்பாடுகள் 


கடல் மேற்பரப்பு வெப்பநிலையை பராமரிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் வளிமண்டலம் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில், லா நினா கட்டத்திற்கு மாறுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், மேற்கு காற்று சில முரண்பாடுகளால் ஆதிக்கம் செலுத்ப்பட்டன. காலநிலை ரீதியாக, மேற்கு காற்று முரண்பாடுகள் லா நினாவின் வளர்ச்சிக்கு சாதகமற்றவையாக உள்ளன. 


  1. பருவமழை மற்றும் ENSO 


எல் நினோ கட்டம் முடிவடைந்து, ENSO நடுநிலை கட்டம் இந்திய கோடை பருவமழையின் தொடக்கத்துடன் ஒத்துப்போனதால், இந்த ஆண்டு ஜூன்-செப்டம்பர் மாதங்களில் இந்தியாவில் ஏராளமான மற்றும் இயல்பான மழை பொழிவு இருந்ததது. இதன் மூலம் பருவமழையும் ENSO ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன.  ஒரு நல்ல பருவமழை மேற்கு காற்று முரண்பாடுகளை பாதிக்கும்.  இது லா நினாவின் தொடக்கத்தை தாமதப்படுத்தலாம் அல்லது  பாதிக்கலாம். 




Original article:

Share:

தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA) என்றால் என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்


1. குறிப்பிடத்தக்க ஏற்றுமதி ஆதாயங்கள் எதிர்பார்க்கப்படும் நாடுகளில் இந்தியா கவனம் செலுத்துகிறது. இதனால்தான், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட உந்துதல் உள்ளது. பங்குதாரர்கள் நாட்டிற்கு அதிக சந்தைக்கான அணுகலை வழங்கினாலும், சிறிய நாடுகளுடன் ஒப்பந்தங்களை எந்த நாடும் பின்பற்றவில்லை.


2. இதற்கான முயற்சியை ஆதரிக்க, வணிக அமைச்சகம் ஒரு புதிய நிலையான இயக்க நடைமுறையை (Standard Operating Procedure (SOP)) உருவாக்குகிறது. எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்துவதற்கான செயல்முறைகளை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.


3. இது பிப்ரவரி 2022-ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த ஐக்கிய அரபு அமீரக ஒப்பந்தம் (pact with the UAE) மற்றும் 2010-ம் ஆண்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்புகளுடன் (ASEAN) கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் உட்பட பல வர்த்தக ஒப்பந்தங்களைப் பின்பற்றுகிறது. இதன் விளைவாக ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிக இறக்குமதியும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆரம்பகால விதிகளை மீறுவது குறித்த கவலைகளை எழுப்புகிறது. 


4. கரிம எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. அமைச்சரின் கூற்றுப்படி, நிலைத்தன்மை குறித்த எந்தவொரு விவாதமும் 'பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள் (Common but Differentiated Responsibilities (CBDR))' கொள்கையைப் பின்பற்ற வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை செயல்படுத்துவது பல்வேறு வளர்ச்சிப் பாதைகளை கருத்தில் கொள்ளவேண்டும்.


5. 2022-23ஆம் ஆண்டில், இந்தியா-இங்கிலாந்து இருதரப்பு வர்த்தகம் 16 சதவீதம் அதிகரித்து 20.36 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2022-23ஆம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 11.4 பில்லியன் டாலராக இருந்தது. இது முந்தைய ஆண்டில் 10.5 பில்லியன் டாலராக இருந்தது. மேலும், அதன் இறக்குமதி 2021-22ஆம் ஆண்டில் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது 2022-23ஆம் ஆண்டில் 8.96 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


உங்களுக்குத் தெரியுமா? 


1. இந்தியாவும் இங்கிலாந்தும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்த ஜனவரி 2022-ம் ஆண்டில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கான (Free Trade Agreement (FTA)) பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. இந்த ஒப்பந்தத்தில் பொருட்கள், சேவைகள், முதலீடுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள் உள்ளிட்ட 26 அத்தியாயங்கள் உள்ளன. இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2022-23ஆம் ஆண்டில் 20.36 பில்லியனிலிருந்து 2023-24ஆம் ஆண்டில் 21.34 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. 


2. கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)), அல்லது கார்பன் வரி (carbon tax), ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படும். இருப்பினும், எஃகு, சிமென்ட், உரம், அலுமினியம் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் போன்ற ஏழு கார்பன்-தீவிரத் துறைகளில் உள்ள நிறுவனங்கள், தரவைப் பகிர வேண்டும். அக்டோபர் 1, 2023 முதல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கார்பன் உமிழ்வு தொடங்குகிறது.


3. ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலவே, இங்கிலாந்தும் கார்பன் உமிழ்வின் அடிப்படையில் உலோக இறக்குமதிக்கு வரி விதிக்க விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றிய பாணியிலான கரிம எல்லை சரிசெய்தல் செயல்முறை (carbon border adjustment mechanism (CBAM)) இந்தியா கணிசமான கட்டணங்களை நீக்கினாலும் இங்கிலாந்துக்கான இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்கும். இங்கிலாந்தின் கார்பன் வரி கடுமையானதாக இருக்கலாம். ஏனெனில், அதன் நோக்கங்களில் ஒன்று ரஷ்ய எரிசக்தி இறக்குமதிகளை சார்ந்திருப்பதைக் குறைப்பதாகும். 


4. பேச்சுவார்த்தையின் ஆரம்ப கட்டத்தில் எஃகு, கண்ணாடி மற்றும் உரம் போன்ற கார்பன்-தீவிரமான பொருட்களுக்கு விதிக்கப்பட்ட CBAM, வரி பற்றி இந்தியா கவலைகளை எழுப்பியது. இந்த வரியானது இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய முயற்சிக்கும் இந்திய எஃகு உற்பத்தியாளர்களை பாதிக்கும்.


5. ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டணி அமைப்பாகும். இது, 2021-ம் ஆண்டில், அவர்களுக்கு இடையேயான வர்த்தகம் 88 பில்லியன் யூரோக்கள் அல்லது இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் 10.8% ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் 10-வது பெரிய வர்த்தக நட்பு நாடாக இந்தியா உள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த வர்த்தகத்தில் 2.1% ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான சேவைகளின் வர்த்தகம் 2020-ம் ஆண்டில் 30.4 பில்லியன் யூரோக்களை எட்டியது.


6. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி (Global Trade Research Initiative (GTRI)), பொருளாதார சிந்தனைக் குழுவானது, இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற, அதன் ஒப்பந்தங்களை உலகளாவிய முதலீட்டு நடைமுறைகளுடன் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. தீவிரமான உடன்படிக்கை ரத்துகளால் ஏற்படும் எதிர்மறையான உணர்வை அது நிவர்த்தி செய்து அதன் பேச்சுவார்த்தை திறன்களை மேம்படுத்த வேண்டும். 2016-ம் ஆண்டிற்குள் இந்தியா தனது 80-க்கும் மேற்பட்ட இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களில் (Bilateral Investment Treaties (BIT)) 77 இந்தியாவின் நலன்களுடன் ஒத்துப்போகவில்லை என்று உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சியின் (GTRI) தரவு குறிப்பிட்டது.



7. ஒரு தயாரிப்பின் தேசிய மூலத்தைத் தீர்மானிக்கும் தோற்ற விதிகள், இங்கிலாந்து உடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்த (FTA) பேச்சுக்களில் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இந்த விதிகள் முக்கியமானவை. ஏனெனில், நாடுகள் அவற்றின் வளங்களின் அடிப்படையில் தயாரிப்புகளுக்கு வரிகள் அல்லது கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. கூடுதலாக, இந்திய வர்த்தகம் மற்றும் வரித்துறை அதிகாரிகள் இங்கிலாந்தில் இருந்து மதுபானம் மற்றும் விஸ்கி இறக்குமதிக்கான வரி குறைப்புகளை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த கட்டுப்பாடுகள் உள்ளூர் பாட்டில் தொழிலை பாதிக்கலாம். இதனால், பேச்சுவார்த்தை வேகம் குறைந்துள்ளது.


8. ஐரோப்பிய சுதந்திர வர்த்தக அமைப்பு (EFTA) நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பகுதியாக இல்லை. EFTA என்பது தடையில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்கும் மற்றும் தீவிரப்படுத்தும் ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். ஐரோப்பிய சமூகத்தில் சேர விரும்பாத மாநிலங்களுக்கு மாற்றாக இது உருவாக்கப்பட்டது. ஏப்ரல்-பிப்ரவரி 2022-23ல் EFTA நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 1.67 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 2021-22ல் 1.74 பில்லியன் டாலர்களாக இருந்தது. 2021-22ல் 25.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இறக்குமதிகள் 11 மாத காலப்பகுதியில் மொத்தம் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. வர்த்தக இடைவெளி EFTA குழுவிற்கு சாதகமாக உள்ளது.




Original article:

Share:

பாரிஸ் ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்கள் என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்


1. கடந்த ஒன்பது ஆண்டுகளில், உலகளாவிய உமிழ்வு 8% அதிகரித்துள்ளது. அவை, சுமார் 49 பில்லியன் டன்கள் CO2-லிருந்து 53 பில்லியன் டன்களுக்குச் சமமாக உயர்ந்தன. சராசரி உலக வெப்பநிலையும் உயர்ந்துள்ளது. அவை தொழில்துறைக்கு முந்தைய நிலைகளைவிட 1.1 டிகிரி செல்சியஸிலிருந்து 1.45 டிகிரி செல்சியஸுக்கு மேலே சென்றன.


2. சமீபத்திய மதிப்பீடுகள் 2024-ம் ஆண்டு 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை மீறும் முதல் ஆண்டாக இருக்கும் என்று காட்டுகின்றன.


3. பாரிஸ் ஒப்பந்தத்தின் முக்கிய குறிக்கோளானது, உலகளாவிய வருடாந்திர சராசரி வெப்பநிலையை தொழில்துறைக்கு முந்தைய சராசரியின் 1.5 டிகிரி செல்சியஸுக்குள் வைத்திருப்பது, மோசமான சூழ்நிலையில் இரண்டு டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு உள்ளது. இருப்பினும், முன்னெப்போதையும்விட தொலைவில் இருப்பதாகத் தெரிகிறது. 


4. இந்த ஒப்பந்தத்தில் வளர்ந்து வரும் விரக்தியின் தெளிவான அறிகுறியாக, சிறிய தீவு நாடுகளின் தலைமையில் பல வளரும் நாடுகள், காலநிலை மாற்றத்திற்கு எதிரான மிகவும் பயனுள்ள போராட்டத்திற்கான மாற்று அணுகுமுறைகளை ஆராயத் தொடங்கியுள்ளன. 


5. சர்வதேச நீதிமன்றம் ஒரு வழக்கை விசாரித்து வருகிறது. காலநிலை மாற்றம் தொடர்பாக நாடுகளுக்கு இருக்கும் கடமைகளை வரையறுக்க இந்த வழக்கு முயல்கிறது. அந்தக் கடமைகளின் விளைவுகளைத் தீர்மானிப்பதும் இதன் நோக்கமாகும்.


6. பாரிஸ் ஒப்பந்தம் அனைவரையும் பங்களிக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், இது காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்தியது.


7. ஒவ்வொரு நாடும் தங்களது பாரிஸ் உறுதிமொழிகளை நிறைவேற்ற குறைந்தபட்ச முயற்சியை மட்டுமே செய்து வருகின்றன. இதன் விளைவாக, புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த தேவையான கரிம உமிழ்வு குறைப்புகளுடன் உலகளாவிய காலநிலை நடவடிக்கை இனி பொருந்தாது.


8. வளர்ந்த நாடுகள், காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) சட்டப்பூர்வ கடமையின் கீழ், வளரும் நாடுகளுக்கு காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு நிதி மற்றும் தொழில்நுட்பத்தை வழங்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக 2020-ம் ஆண்டில் தொடங்கி ஆண்டுதோறும் $100 பில்லியன் திரட்ட இந்த நாடுகள் உறுதியளித்தன. பாரிஸ் ஒப்பந்தம் 2025-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தத் தொகையை அதிகரிக்க ஒரு விதியை உள்ளடக்கியது.


9. டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு மீண்டும் ஆட்சிப் பதவியேற்க வாய்ப்புள்ள நிலையில், அமெரிக்கா மீண்டும் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பொதுவாக, காலநிலை தாக்கங்களால் அதிகம் அச்சுறுத்தப்படும் நாடுகளில், பாரிஸ் ஒப்பந்தத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. 


உங்களுக்குத் தெரியுமா?


1. பாரிஸ் ஒப்பந்தம் ஒரு சர்வதேச ஒப்பந்தம். இது 2015-ம் ஆண்டில் ஏறக்குறைய அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் பருவநிலை மாற்றம் மற்றும் அதன் எதிர்மறையான விளைவுகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வை கணிசமாகக் குறைப்பதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். இது இந்த நூற்றாண்டில் புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்துவதாகும். தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 2 டிகிரி செல்சியஸ் "மிகக் கீழே" (well below) வைத்திருப்பதே இலக்காக கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் வெப்பமயமாதலை 1.5 டிகிரிக்கு கட்டுப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறியவும் முயற்சிக்கிறது.


2. இந்த ஒப்பந்தம் 1.5 டிகிரி பாதுகாப்பான வரம்பைக் குறிப்பிடுகிறது. இந்த வரம்பு உண்மை கண்டறியும் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்த வரம்பை மீறுவது சில பகுதிகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு அதிக ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. இந்த அபாயங்கள் பல காலங்களாக நீடிக்கும். பாரிஸ் உடன்படிக்கைக்கு முன், 1997-ம் ஆண்டில் நிறுவப்பட்ட கியோட்டோ நெறிமுறை (Kyoto Protocol) இருந்தது. கியோட்டோ நெறிமுறை சமபங்கு கொள்கைகளைப் பின்பற்றியது மற்றும் 1992 காலநிலை மாற்றம் தொடர்பான UN கட்டமைப்பு மாநாட்டில் (UNFCCC) இருந்து வேறுபட்ட பொறுப்புகளைக் கொண்டது. காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் பொறுப்பை பணக்கார மற்றும் வளர்ந்த நாடுகளின் மீது சுமத்தியது. அதே நேரத்தில், வளரும் நாடுகளின் திறன்களின் அடிப்படையில் பங்களிக்குமாறு கேட்டுக் கொண்டது.


3. இருப்பினும், வளர்ந்த நாடுகள் சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார சக்தி குறித்து கவலையடைந்தன. காலநிலைக் கடமைகள் தங்கள் சொந்தப் பொருளாதாரங்களில் விதிக்கும் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் குறித்தும் அவர்கள் கவலைப்பட்டனர். இதன் விளைவாக, அவர்கள் கியோட்டோ ஒப்பந்தத்தை சிதைக்க கடுமையாக உழைத்தனர்.


4. கியோட்டோ நெறிமுறை, குறிப்பிட்ட உமிழ்வு குறைப்பு இலக்குகளை வளர்ந்த நாடுகளை மேற்கொள்ள வழிவகை செய்தது. இருப்பினும், இது உலகின் பிற பகுதிகளுக்கு கிட்டத்தட்ட எந்தப் பொறுப்பும் வைக்கவில்லை. பாரிஸ் ஒப்பந்தத்தின்படி அனைவரும் காலநிலை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு நாடும் அதன் சொந்த அணுகுமுறையைத் தீர்மானிக்க அனுமதித்தது. இது அடிப்படையில் வளர்ந்த நாடுகளை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் இருந்து விடுவித்தது.




Original article:

Share:

இரயில்வே திருத்த மசோதா 2024 ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?, அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றினர்? -தீரஜ் மிஸ்ரா

 அரசாங்கத்திற்கும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சூடான விவாதத்தைத் தொடர்ந்து மக்களவையில் புதன்கிழமை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 


நாடாளுமன்றத்தில் அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் வாக்குவாதங்களுக்கு மத்தியில், மக்களவையில் புதன்கிழமை (டிசம்பர் 13) இரயில்வே (திருத்தம்) மசோதா (Railways (Amendment) Bill) 2024 நிறைவேற்றப்பட்டது.


இந்த மசோதா இந்திய ரயில்வே வாரியச் சட்டம் (Indian Railway Board Act), 1905-ஐ ரத்து செய்து, அதன் விதிகளை இரயில்வே சட்டம், (Railways Act) 1989-ம் ஆண்டில் இணைக்க முற்படுகிறது. புதிய சட்டத்தின் உள்ளடக்கங்கள் அதிக விமர்சனங்களைப் பெறவில்லை என்றாலும், பாதுகாப்பு, காலியிடங்கள் மற்றும் மண்டல மற்றும் பிரிவு மட்டங்களில் அதிகாரப் பரவலாக்கம் உள்ளிட்ட இரயில்வே தொடர்பான பெரிய பிரச்சினைகளை இந்த மசோதா தீர்க்கத் தவறிவிட்டதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். 


இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க்கின் கட்டுமானம் சுதந்திரத்திற்கு முன் பொதுப்பணித் துறையின் ஒரு பகுதியாக தொடங்கியது. நெட்வொர்க் வளர்ந்தவுடன், இந்திய ரயில்வே சட்டம், 1890 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் பல்வேறு இரயில்வே நிறுவனங்களின் சரியான செயல்பாட்டை உறுதி செய்தது. பின்னர், இரயில்வே அமைப்பு பொதுப்பணித்துறையில் இருந்து பிரிக்கப்பட்டது. இதை நிர்வகிக்க, இந்திய இரயில்வே வாரிய சட்டம் (Indian Railway Board Act), 1905 இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் இந்திய ரயில்வே சட்டம், (Indian Railways Act) 1890-ம் ஆண்டின் கீழ் இரயில்வே வாரியத்திற்கு சில அதிகாரங்களையும் செயல்பாடுகளையும் வழங்கியது.


இந்திய ரயில்வே சட்டம், 1890 ஆனது 1989ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக இரயில்வே சட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், இரயில்வே வாரியச் சட்டம் (Railway Board Act), 1905, நடைமுறையில் இருந்தது. இந்த சட்டத்தின் கீழ், இரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தொடர்ந்து நியமிக்கப்பட்டனர்.


 

புதிய மசோதா சட்டத்தை எளிதாக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இரயில்வே வாரியத்தை (1905 சட்டம்) ரயில்வே சட்டத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம் இதை மேற்கொள்ளும். இது இரண்டு சட்டங்களைக் குறிப்பிட வேண்டிய தேவையைக் குறைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த மசோதா ஆகஸ்ட் 9, 2024 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.


"இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், ரயில்வேயின் செயல்திறன் மற்றும் வளர்ச்சி ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் காணும்" என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மசோதாவை பரிசீலிப்பதற்கான தீர்மானத்தை முன்மொழியும்போது கூறினார். 


இந்த மசோதா ரயில்வே சட்டம், 1989 இன் பிரிவு 2-ஐ திருத்துகிறது மற்றும் இரயில்வே வாரியம் தொடர்பான புதிய அத்தியாயம் IA ஐ சேர்க்கிறது. இது ரயில்வே வாரியத்திற்கு "ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்பட்டபடி" சில அதிகாரங்களை வழங்க வழிவகை செய்கிறது. 


இந்த சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் அனைத்து அல்லது சில அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை ரயில்வே வாரியத்திற்கு ஒன்றிய அரசு வழங்கலாம். இது அனைத்து அல்லது எந்த இரயில்வேக்கும், நிபந்தனைகளுடன் அல்லது இல்லாமல் பொருந்தும்.


இதனுடன், 1905 சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் இந்த சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்டவர்களாக கருதப்படுவார்கள். இரயில்வே வாரியம் ஏற்கனவே உள்ளது. மேலும், புதிய வாரியம் அல்லது அமைப்பை உருவாக்க மசோதா முன்மொழியவில்லை.


பயணிகளுக்கு, புதிய மசோதா, இரயில்வே வாரியத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இரயில்வே நெட்வொர்க்கின் திறமையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.


இருப்பினும், புதிய சட்டம் இரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை பாதிக்கும் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தை புறக்கணித்து, வாரியம் தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசு தன்னிடம் வைத்திருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.


ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்த பாஜக எம்.பி அபராஜிதா சாரங்கி, புதிய சட்டம் இந்திய ரயில்வேயை நவீனமயமாக்குவதற்கும், எளிமைப்படுத்துவதற்கும், பலப்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்று கூறினார். "இந்த மசோதா மூலம் ரயில்வே வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் சுதந்திரம் மேம்படுத்தப்படும்," என்று அவர் கூறினார். 


இருப்பினும், சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த மசோதா போதுமான விவாதம் இல்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டதாக கருதினர். 


"1905-ம் ஆண்டில் இரயில்வே வாரியம் நிறுவப்படுவதற்கு முன்பு, சர் தாமஸ் ராபர்ட்சன் கருத்துக்களைச் சேகரிக்க ஒரு குழுவைக் கூட்டினார். அதன் அடிப்படையில், வாரியம் அமைக்கப்பட்டது. இந்த விஷயத்தை விவாதிக்க ஒரு அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து பின்னர் திருத்தங்களை அறிமுகப்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று உத்தரபிரதேசத்தின் ஆன்லாவைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி. "ரயில்வே வாரியம் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்துடன் ஒரு சுதந்திரமான அமைப்பாக மாற்றப்பட வேண்டும். அது அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார். 


பல ஆண்டுகளாக நிபுணர் குழுக்கள் அளித்த பரிந்துரைகள் எதுவும் இந்த மசோதாவில் இல்லை என்று AIMIM எம்பி அசாதுதீன் ஓவைசி கூறினார். 2015-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இரயில்வேயின் மறுசீரமைப்புக் குழுவைப் (Committee on Restructuring of Railways) பற்றி அவர் குறிப்பிட்டார். இந்தக் குழு ஒரு சுதந்திரமான ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க பரிந்துரைத்தது. இருப்பினும், தற்போதைய மசோதா அத்தகைய ஒழுங்குமுறையை நிறுவவில்லை.


உத்திர பிரதேசத்தில் உள்ள நாகினாவைச் சேர்ந்த ஆசாத் சமாஜ் கட்சியைச் சேர்ந்த கன்ஷி ராம் எம்.பி., சந்திர சேகர், ரயில்வே வாரியத்தில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பெண்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்களா என்ற கேள்வியை எழுப்பினார். அரசியல் சித்தாந்தங்களின் அடிப்படையில் அல்லாமல் தகுதி மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இரயில்வே வசதியாகவும், மலிவானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.


திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கூறுகையில், "இரண்டு சட்டங்களை இணைப்பது பற்றிய கேள்வியானது, ரத்து செய்யப்பட்ட சட்டம் இந்திய ரயில்வே எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளுமா? இந்த சவால்களில் செயல்பாட்டு தாமதங்கள், விபத்துக்கள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் அடங்கும். இதில் அதிகாரத்துவ திறமையின்மை, மெதுவான தொழில்நுட்ப தத்தெடுப்பு ஆகியவை அடங்கும். மற்றும் PPA மாதிரியின் சிக்கலான தன்மை மற்றும் முதலீடுகள் கூடுதலாக, மண்டலத்திற்கு அதிகாரங்களை தளர்த்துவதில் சிக்கல் உள்ளது."




Original article:

Share:

கோவிந்த் குழு பரிந்துரைகள் - பிரியா குமாரி சுக்லா

 1. கோவிந்த் குழு (Kovind panel) ஒரே நேரத்தில் வாக்கெடுப்புக்கு செல்ல உதவும் "ஒரு முறை இடைநிலை நடவடிக்கையை" (one-time transitory measure) பரிந்துரைத்தது. இந்த நடவடிக்கை "நியமிக்கப்பட்ட தேதியை" (appointed date) அடையாளம் காணும். இந்த தேதி "பொதுத் தேர்தலுக்குப் பிறகு மக்களவையின் முதல் அமர்வு தேதி" என வரையறுக்கப்படும். இந்த "நியமிக்கப்பட்ட தேதிக்குப்" பிறகு தேர்தல்களை நடத்தும் அனைத்து மாநில சட்டசபைகளும் அவற்றின் விதிமுறைகள் மக்களவையுடன் இணைக்கப்படும். இதனால் ஒன்றிய மற்றும் மாநில அளவில் தேர்தல் சுழற்சிகளை சீரமைக்கப்படும்.


2. கோவிந்த் குழு (Kovind Committee) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்டது. இது அரசியல் கட்சிகள் உட்பட பங்குதாரர்களுடன் விரிவான ஆலோசனைகளை நடத்தியது. இந்தக் குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மார்ச் 14 அன்று சமர்ப்பித்தது. தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட 47 அரசியல் கட்சிகளில் 32 கட்சிகள் இந்த முன்மொழிவை ஆதரித்தன. ஆனால், இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.


3. தனது பரிந்துரையை அமல்படுத்த, இந்திய அரசியலமைப்பில் 15 திருத்தங்களை இந்தக் குழு பரிந்துரைத்தது. மேலும், இந்த திருத்தங்கள் புதிய விதிகள் மற்றும் ஏற்கனவே உள்ள விதிகளில் சில மாற்றங்கள் போன்ற இரண்டையும் உள்ளடக்கும். இந்த இரண்டு அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் மூலம் அவை நிறைவேற்றப்படும்.


4. முதல் மசோதா ஒரே நேரத்தில் தேர்தல் முறைக்கு மாறுவதில் கவனம் செலுத்தும். குறிப்பாக, மக்களவை அல்லது ஒரு மாநில சட்டசபைக்கு அவர்களின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவதற்குள் புதிய தேர்தல்களை நடத்துவதற்கான நடைமுறையையும் இது கோடிட்டுக் காட்டும்.


5. கோவிந்த் குழுவின் கூற்றுப்படி, இந்த மசோதாவை மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் அல்லது மாநில சட்டமன்றங்களின் ஒப்புதல் இல்லாமல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்ற முடியும். 


6. இரண்டாவது மசோதா நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களையும், இந்திய தேர்தல் ஆணையத்தால் (Election Commission of India (ECI)) ஒரு வாக்காளர் பட்டியலை உருவாக்குவதையும், ஒவ்வொரு வாக்காளரின் விவரங்களையும் அவர்கள் வாக்களிக்க தகுதியுள்ள இடத்தையும் கையாளும். 



7. கோவிந்த் குழுவானது, இந்த மசோதா மாநிலங்களுக்கு சட்டங்களை இயற்றும் முதன்மை அதிகாரம் உள்ள விஷயங்களைக் குறிக்கிறது என்று ஒப்புக்கொண்டது. எனவே, அது இயற்றப்படுவதற்கு முன் இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களின் ஒப்புதல் அல்லது அனுமதி தேவைப்படும்.




Original article:

Share:

பேரிடர் மேலாண்மை (திருத்த) மசோதா, 2024 - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்


1. இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவானது, தேசிய மற்றும் மாநில அளவில் பேரிடர் தொடர்பான தரவுத்தளங்களை உருவாக்க முன்மொழிகிறது. இது, மாநில தலைநகரங்கள் மற்றும் மாநகராட்சிகள் உள்ள பெரிய நகரங்களுக்கு நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையத்தை (Urban Disaster Management Authority) அமைத்தல் மற்றும் மாநில அரசுகள் மாநில பேரிடர் மீட்பு படையை (State Disaster Response Force) அமைத்தல் தொடர்பான மசோதாவாகும். 


2. உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், ‘இந்த மசோதா தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்பில் தெளிவு மற்றும் சீரான தன்மையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது’ என்றார். 


3. இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களை வலியுறுத்திய அவர், "பேரிடர் என்பது எந்தவொரு கட்சிக்கும் அல்ல, இது எந்தவொரு நபருக்கும் அல்ல, இது எந்த பகுதிக்கும் அல்ல. ஒரு பேரிடர் தாக்கும்போது, அது முழு நாட்டையும் தாக்குகிறது" என்றார்.


4. இந்த மசோதாவை எதிர்த்த திமுக உறுப்பினர் கனிமொழி, "இந்த மசோதா இந்த அவைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு அதிக கலந்தாய்வுகள், கலந்துரையாடல் மற்றும் விவாதங்கள் தேவை" என்று கூறினார். பேரிடர் மேலாண்மை என்பது மாநில விவகாரம் என்று கூறிய அவர், "தேசிய ஜனநாயகக் கூட்டணியால் நிறைவேற்றப்பட்ட பெரும்பாலான மசோதாக்களைப் போலவே, இந்த மசோதாவும் மாநிலங்களின் உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கும். பொதுவாக, தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் கூட்டுறவு கூட்டாட்சி என்பது உண்மையில் மோதல் கூட்டாட்சியாக மாறிவிட்டது” என்று கருத்து தெரிவித்தார்.


5. இந்த மசோதா பேரிடர் நிவாரணத்தை 'நியாயப்படுத்தக்கூடிய உரிமையாக' (justiciable right) உறுதி செய்யத் தவறிவிட்டது. மிச்சாங் புயலால் (cyclone Michaung) தமிழகம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பின்னர் உதவிக்காக உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது. 


6. இந்த மசோதாவை ஆதரித்த தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சிவநாத் (சின்னி) கூறுகையில், ‘அதிகரித்து வரும் இயற்கை பேரிடர்களை நிவர்த்தி செய்ய இது சரியான நேரத்தில் இயற்றப்பட்ட சட்டமாகும்’ என்றார். 


பேரிடர் தொடர்பான தகவல்கள் பற்றி


1. பேரிடர் மேலாண்மை (திருத்த) மசோதா, 2024 ஆகஸ்ட் 1, 2024 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 


2. இந்த மசோதா பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ஐ திருத்துகிறது. 


3. சட்டம் அதிகாரங்களை நிறுவுதல் : (i) தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA), (ii) மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (State Disaster Management Authority (SDMA)), மற்றும் (iii) மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் (District Disaster Management Authority) போன்ற மூன்று அதிகார ஆணையங்களை அமைக்கிறது. 


4. தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மைக்கு இந்த அதிகாரிகள் பொறுப்பு.


5. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மற்றும் மாநில மேலாண்மை ஆணையம் (SDMA) ஆகியன செயல்பட உதவும் வகையில் தேசிய நிர்வாகக் குழு (National Executive Committee) மற்றும் மாநில நிர்வாகக் குழுவை (State Executive Committee) அமைக்க இச்சட்டம் வகை செய்கிறது. 


6. இந்த குழுக்களின் முக்கிய செயல்பாடு முறையே தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை திட்டங்களை தயாரிப்பதாகும். 


7. NDMA மற்றும் SDMA ஆகியவை தங்களுக்குரிய திட்டங்களை அங்கீகரித்து, அவற்றைச் செயல்படுத்துவதை ஒருங்கிணைக்கின்றன.


8. NDMA மற்றும் SDMA ஆகியவை பேரிடர் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரிக்கும் என்று மசோதா கூறுகிறது.


9. இந்த மசோதா மாநில தலைநகரங்கள் மற்றும் மாநகராட்சியுடன் கூடிய நகரங்களுக்கு ஒரு தனி நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. நகர்ப்புற அதிகாரசபையில் நகராட்சி ஆணையர் தலைவராகவும், மாவட்ட ஆட்சியர் துணைத் தலைவராகவும், மாநில அரசால் குறிப்பிடப்பட்ட பிற உறுப்பினர்களும் இருப்பார்கள். 


10. பேரிடர் காலங்களில் சிறப்பு முறையில் செயல்படுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையை (National Disaster Response Force) அமைக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது. 


11. இந்த மசோதா மாநில பேரிடர் மீட்புப் படையை (State Disaster Response Force (SDRF)) அமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) செயல்பாடுகளை மாநில அரசு வரையறுத்து அதன் உறுப்பினர்களுக்கான சேவை தொடர்பான விதிமுறைகளை பரிந்துரைக்கும். 


12. தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு (National Crisis Management Committee (NCMC)) மற்றும் உயர்நிலைக் குழு (High Level Committee (HLC)) போன்ற தற்போதுள்ள அமைப்புகளுக்கு இந்த மசோதா சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்குகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய அளவில் தீவிரமான அல்லது தேசிய அளவிலான பெரிய பேரழிவுகளை எதிர்கொள்ளும் ஒருங்கிணைப்பு அமைப்பாக செயல்படும். பேரிடர் காலங்களில் மாநில அரசுகளுக்கு உயர்நிலைக் குழு நிதி உதவி வழங்கும். 


13. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தேவையானதாகக் கருதும் அதிகாரிகள், ஆலோசகர்கள் மற்றும் ஊழியர்களை ஒன்றிய அரசு வழங்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.




Original article:

Share:

ட்ரம்பின் மீள்வருகையும் தெற்காசியக் கண்ணோட்டமும் - ஹர்ஷ் வி.பந்த், ஆதித்யா கௌத்ரா சிவமூர்த்தி

 டிரம்ப் நிர்வாகத்தை தெற்காசிய நாடுகள் எவ்வாறு கையாளப்போகின்றன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் சீனா மற்றும் இந்தியாவையும் எப்படி சமப்படுத்துவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


2025 ஜனவரியில், அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ளார். அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் பதவிக்கு வருவது பல நாடுகளில் ஆர்வத்தையும் சில நாடுகளில் பதட்டத்தையும் அதிகரித்துள்ளது. இருப்பினும், தெற்காசியாவில், டிரம்ப் தொடர்ச்சியாக மாற்றங்களை கொண்டுவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது யோசனைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை இலக்குகள் தெற்காசியாவில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும். அதே சமயம், அவரது தலைமைப் பாணியும், முடிவெடுக்கும் முறையும், அவர் உலக அரசியலை எப்படி நிர்வகிக்கிறார் என்பதை வடிவமைக்கும். இது புதிய வாய்ப்புகளையும் சவால்களையும் கொண்டுவரும். 


அமெரிக்க-இந்திய உறவின் காரணிகள் 


2000களின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது. 2009-ல், அமெரிக்கா இந்தியாவை நிகர-பாதுகாப்பு வழங்குநராக (net-security provider) அங்கீகரித்தது, பிராந்தியத்தில் அதன் தலைமையை ஒப்புக் கொண்டது. பைடன் நிர்வாகம் (2021-24) இதே அணுகுமுறையைப் பின்பற்றியது. சீனா மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருவதால், இந்தியாவும் அமெரிக்காவும் தெற்காசியாவில் தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன. இந்தோ-பசிபிக் ராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம், சீனாவை எதிர்ப்பதற்கும் மதிப்புகள் அடிப்படையிலான ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும் இந்தியாவின் தலைமையை ஆதரிப்பதை அமெரிக்கா நோக்கமாகக் கொண்டுள்ளது. நேபாளத்தில் மிலேனியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் (Millennium Challenge Corporation (MCC)) திட்டங்களில் அவர்கள் இணைந்து பணியாற்றுவதிலும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதிலும் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு காட்டப்படுகிறது. கூடுதலாக, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு பாகிஸ்தானுடன் அமெரிக்கா அதிபர் பைடன் வரையறுக்கப்பட்ட உறவு  வைத்திருந்தார். இது இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படவும், பிராந்தியத்திற்கான பகிரப்பட்ட பார்வையை வளர்க்கவும் உதவியது.


இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் வேறுபாடுகள் உள்ளன. அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதில் இந்தியாவின் முக்கிய குறிக்கோள், சீனாவை எதிர்கொள்வது மற்றும் மாற்று வளர்ச்சி கூட்டாண்மைகளை வழங்குவதாகும். இருப்பினும், பைடன் நிர்வாகம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக சில நாடுகளில் கவனம் செலுத்தியது. அதே, நேரத்தில் மதிப்புகள் அடிப்படையிலான ஒழுங்கை ஆதரிப்பதாகவும் சீனாவை எதிர்ப்பதாகவும் கூறுகிறது. 


இந்தியா வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா அரசாங்கத்தை ஆதரித்தது மற்றும் மியான்மரின் இராணுவ ஆட்சியுடன் இணைந்து பணியாற்றியது. இதற்கிடையில், அமெரிக்கா இரு அரசாங்கங்களுக்கும் அழுத்தம் கொடுத்தது மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்தது, அவற்றை சீனாவுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியது. மேலும், ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்றும் இந்திய நிறுவனங்கள் மீதான பொருளாதாரத் தடைகள் மற்றும் அதானி குழுமத்திற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் இலங்கையில் இரண்டு இந்தியத் திட்டங்களை தோல்வியடையச் செய்தன. அதனால் ஏற்படும் விளைவுகளை இந்தியா எதிர்கொள்ள சூழல் ஏற்பட்டது.


குறைவான சிக்கல்கள் இருக்கலாம்


இருப்பினும், அதிபராக டிரம்ப் மீண்டும் பதவி ஏற்பது இந்தப் பிரச்சனைகளை குறைக்கும். அவரது முதல் பதவிக்காலத்தில், அவர் சுமைப் பகிர்வு, பரஸ்பரம் (reciprocity), தேசியவாதம் மற்றும் தனது வெளியுறவுக் கொள்கையில் சீனாவுடன் போட்டியிடுவதைக் தெரிவித்தார். டிரம்ப் இதைப் பின்பற்றினால், மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் தேசத்தை மீண்டும் உருவாக்குவதற்கு குறைவான முக்கியத்துவத்தைக் கொடுக்கும் அதே வேளையில் சீனாவை எதிர்கொள்வதில் கவனம் செலுத்துவார். இந்தியாவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்து, பிராந்தியத்தில் இந்தியா தலைமை தாங்க வேண்டும் என்றும் அவர் விரும்புவார். இது கருத்து வேறுபாடுகளைக் குறைத்து இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும். மற்றொரு, பிரச்சினை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் மீதான அவர்களின் கொள்கைகளாகும். 


தனது முதல் பதவிக் காலத்தில், ஆப்கானிஸ்தான் நெருக்கடியைத் தீர்ப்பதில் இந்தியா ஒரு தீவிரமான பங்கை வகிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அதே வேளையில், டிரம்ப் பாகிஸ்தானுக்கு தண்டனை அளித்து ஒத்துழைத்தார். இருப்பினும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் வெளியேறிய பிறகு  ராஜதந்திர முக்கியத்துவம் குறைந்தது. இந்த விவகாரம் இப்போது கவலைக்குரியதாக இல்லை.


டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில், திறன் மேம்பாடு, மேம்பாட்டு உதவி, பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் தெற்காசிய நாடுகளுடனான ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். சீனாவை எதிர்கொள்வது மற்றும் இந்தியாவை ஆதரிப்பது என்ற அவரது இலக்குகளின் காரணமாக இந்த அணுகுமுறை தொடரும். டிரம்ப் ஜனநாயகம், தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றில் அவரது முதல் பதவிக்காலத்தைப் போலவே சிறிதளவு கவனம் செலுத்துவது இலங்கைக்கும் பயனளிக்கும். இலங்கையின் புதிய அரசாங்கம் இன்னமும் பொருளாதார உதவியை நாடுவதுடன் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

 

இந்த அணுகுமுறை மியான்மர் மற்றும் தலிபான்களுக்கும் பயனளிக்கும். இருப்பினும், வாஷிங்டன் அவர்களை எந்த அளவிற்கு ஈடுபடுத்த விரும்புகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மறுபுறம், வங்காளதேசம் தனது புதிய ஆட்சியின் கீழ் ஒரு அரசியல் மாற்றத்தை  சந்தித்து  கொண்டிருக்கும் வேலையில் நாடு சவால்களை எதிர்கொள்ளும் மற்றும் உதவி குறைக்கப்படுவதைக் காணலாம்.

 





சீனாவும் பிராந்தியமும் 


டிரம்பின் சீனாவுடனான மோதல் அணுகுமுறை தெற்காசிய நாடுகளுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும். அவரது ஒழுங்கற்ற முடிவுகளைக் (erratic decisions) கருத்தில் கொண்டு, வாஷிங்டன் தெற்காசிய நாடுகள் ஒரு பெரிய சக்திக்கு எதிராக மற்றொரு வல்லரசுக்கு எதிராக செயல்படுவது சகிப்புத்ததன்மையை குறைக்கும். பிராந்தியத்தின் தற்போதைய அரசியல் பிரச்சனைகள் மற்றும் முதலீடுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ஒப்பந்தங்கள் பற்றிய தெளிவற்ற நிலைப்பாடு ஆகியவை பரஸ்பரம் பெறுவதற்கு அமெரிக்காவிடம் இருந்து அதிக அழுத்தத்திற்கு வழிவகுக்கும். எவ்வாறாயினும், டிரம்ப் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் அமைதியைக் கொண்டுவருவதிலும், மேற்கு ஆசியாவின் நெருக்கடியைத் தீர்ப்பதிலும் வெற்றி பெற்றால், அது போராடும் தெற்காசியப் பொருளாதாரங்களுக்கு உணவு மற்றும் எரிபொருள் பணவீக்கத்தை சமாளிக்க உதவும்.

 

உலகம், ட்ரம்ப் 2.0-க்கு தயாராகும் போது, ​​தெற்காசியா பல்வேறு மாற்றங்களை சந்திக்கும். இருப்பினும், இப்பகுதி தொடர்ச்சியாக மாற்றம் காண வாய்ப்புள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் தெற்காசியாவில் தங்கள் ஒத்துழைப்பை அதிகரித்து, தங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  டிரம்பின் சித்தாந்தம், தலைமைத்துவ பாணி மற்றும் உலகளாவிய அதிகாரத்தை நிர்வகிப்பதற்கான அணுகுமுறை ஆகியவை பிராந்தியத்திற்கு வாய்ப்புகள் மற்றும் சவால்களை கொண்டு வரும். புதிய நிர்வாகத்தை தெற்காசிய நாடுகள் எவ்வாறு கையாளப்போகின்றன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் சீனா மற்றும் இந்தியாவையும் எப்படி சமப்படுத்துவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


ஹர்ஷ் வி.பந்த், Observer Research Foundation (ORF)-யில் ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கான துணைத் தலைவராக உள்ளார். ஆதித்யா கௌடரா சிவமூர்த்தி, Observer Research Foundation (ORF)-யில் இணை ஆய்வாளராக உள்ளார்.




Original article:

Share:

வரவேற்கத்தக்க கவனக் குவிப்பு : மணிப்பூர் அரசுக்கு உச்சநீதிமன்ற உத்தரவு

 மணிப்பூர் நிலவரத்தை கண்காணிப்பதில் உச்சநீதிமன்றம் மீண்டும் கவனம் செலுத்துவது ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. 


மணிப்பூரில் நடந்து வரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. 18 மாதங்களுக்கு முன்னர் இனக்கலவரத்தின்போது அழிக்கப்பட்ட அல்லது கையகப்படுத்தப்பட்ட சொத்துக்கள் குறித்த விவரங்களை வழங்குமாறு மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, மாநிலத்தில் விசாரணைகள், மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரண முயற்சிகளை மேற்பார்வையிடும் நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழுவின் (Mittal-led Committee) காலத்தையும் நீதிமன்றம் நீட்டித்தது. இந்த நடவடிக்கைகள் மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் போன்ற  அரசாங்கங்களால் கையாளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மணிப்பூரில் நிலவும் மோசமான சூழல் காரணமாக உச்சநீதிமன்றம் தலையிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. பாலியல் வன்முறை, சொத்துக்கள் (வழிபாட்டுத் தலங்கள் உட்பட) அழித்தல் போன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் மற்றும் மாநிலத்தின் இரு இனக்குழுக்களுக்கு இடையே நடந்துவரும் மோதல்கள் நீதிமன்றத்தை நீதிபதி மிட்டல் கமிட்டி மூலம் மேற்பார்வைப் பொறுப்பில் நுழைய கட்டாயப்படுத்தியது. இரண்டு காரணங்களுக்காக நீதிமன்றத்தின் தலையீடு அவசியமானது. 


முதலாவதாக, நெருக்கடி குறித்து குடிமைச் சமூகம் மற்றும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க ஒன்றிய அரசு மறுக்கிறது. இரண்டாவதாக, மாநில அரசு பொறுப்புடன் செயல்படத் தவறியது மற்றும் இனப் பதற்றத்தைக் குறைக்க அவர்களால் முடியவில்லை. ஒரே கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள் இன ரீதியாகப் பிளவுபட்டுள்ளனர். இந்தப் பிரிவு மோதலை ஆழமாக்கியுள்ளது. இரண்டு எதிர் எதிர் முகாம்களின் அரசியல் கோரிக்கைகள் மிகவும் வேறுபட்டவை. இருப்பினும், அவர்களுக்கு இடையே சிறிய உடன்பாடு உள்ளது.


அரசு சாரா குழுக்கள் அதிகாரம் பெறுகின்றன. அவர்கள் மேம்பட்ட ஆயுதங்களுடன் ஆயுதம் ஏந்தியிருக்கிறார்கள். அவற்றில் பல அரசு ஆயுதக் களஞ்சியங்களிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் சட்டவிரோதமான முறையில் அரசியல் நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்துகின்றன. இதுவரை இனக்கலவரம் காணாத ஜிரிபாம் போன்ற இடங்களில் வன்முறைச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூரின் இனக்கலவரத்தின் வன்முறை தீவிரமானதாகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும் இருக்கும்போது மட்டுமே நாடு முழுவதும் கவனத்தைப் பெறுகிறது. சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும், அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் செயல்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. 


இருப்பினும், மே 2023க்கு முன் இருந்த நிலைமை மீண்டும் திரும்புவது வெகு தொலைவில் உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் மீண்டும் கவனம் செலுத்துவது ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்காமல், இந்த முயற்சி பலனளிக்காது. அரசாங்கத்தின் வழக்கறிஞர்கள் "தேசிய பாதுகாப்பு" என்று கூறி குழுவின் வேலை மற்றும் கண்டுபிடிப்புகளை இரகசியமாக வைத்திருக்க முயன்றனர். இந்த யுக்தி நீதிமன்றத்தை திசை திருப்பக்கூடாது. இது உண்மையான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதைவிட மோதலைத் தவிர்ப்பதற்கான முயற்சியாகத் தெரிகிறது. உலகம் முழுவதும், மோதல் தீர்வு பெரும்பாலும் "உண்மை மற்றும் நல்லிணக்கம்" செயல்முறைகளைப் பயன்படுத்துகிறது, அவை பொறுப்புடைமை மற்றும் நெறிமுறை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்றன. இந்த அணுகுமுறை மணிப்பூரில் இல்லை. நீதிபதி கீதா மிட்டல் குழுவின் கண்டுபிடிப்புகள் தேவையான வழிகாட்டுதலை வழங்கலாம்.




Original article:

Share: