கர்னல் போரில் நாதிர் ஷாவின் வெற்றி இந்தியாவில் முகலாய ஆட்சியை எப்படி முடிவுக்கு கொண்டு வந்தது?

 பிப்ரவரி 24, 1739-ல் நடந்த கர்னல் போரில், பாரசீகப் பேரரசர் நாதிர் ஷா படையானதும், முகலாயப் பேரரசர் முகமது ஷா ரங்கிலா படைகளின் தோல்வியானது இந்தியாவில் முகலாய அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.


ஈரானின் அஃப்ஷரித் வம்சத்தை நிறுவிய நாதிர் ஷாவின் படைகள், முகலாய பேரரசர் முகமது ஷா ‘ரங்கிலா’வின் படைகளை மூன்று மணி நேரத்திற்குள் போரில் தோற்கடித்தது. பின்னர், ஈரானின் ஷா முகலாய தலைநகரான டெல்லியைக் கைப்பற்றி, அரச கருவூலத்தைக் கொள்ளையடித்தார். மேலும், இந்த படையெடுப்பில், நாதிர் ஷா இந்த பேரரசிலிருந்து பிரபலமான மயில் சிம்மாசனத்தையும் (famous Peacock Throne), கோ-இ-நூர் (கோஹினூர்) வைரத்தையும் (Koh-i-noor diamond) எடுத்துக் கொண்டார்.


நாதிர் ஷா ரங்கீலாவின் உயிரைக் காப்பாற்றினார், மேலும் அவரது பெரும்பாலான பிரதேசங்களை மீட்டெடுத்தாலும், அவர் நிரந்தரமாக பலவீனப்படுத்தப்பட்ட முகலாயப் பேரரசை விட்டுச் சென்றார். முகலாயர்கள் டெல்லியை மேலும் 118 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். ஆனால், அவர்களின் அதிகாரம் படிப்படியாகக் குறைந்தது. கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா 'ஜாபர்' (Zafar) காலத்தில், அவரது அதிகாரம் செங்கோட்டைக்கு மட்டுமே இருந்தது.


இந்த வீழ்ச்சி எவ்வாறு தொடங்கியது மற்றும் முகலாயப் பேரரசின் தலைவிதியை முத்திரை குத்திய போர் பற்றிய சுருக்கமான வரலாறு இங்கே.


முகலாயர்களின் வீழ்ச்சி


வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்க்கார் 1922-ல் பாட்னா பல்கலைக்கழகத்தில் நாதிர் ஷாவின் படையெடுப்பு முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணம் அல்ல என்று கூறினார். மாறாக, அது வீழ்ச்சியின் தெளிவான அறிகுறிகளில் ஒன்றாகும். பல்கலைக்கழகத்தில் அவரது சொற்பொழிவுகள் பின்னர் ”இந்தியாவில் நாதிர் ஷா” (Nadir Shah in India) என்ற புத்தகமாக தொகுக்கப்பட்டன. இது முதலில் 1925-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.


ஒரு காலத்தில் வல்லரசாக இருந்த பேரரசின் வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பது குறித்து அறிஞர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இருப்பினும், அவுரங்கசீப்பிற்குப் பிறகு பலவீனமான பேரரசர்களைவிட கட்டமைப்பு காரணங்கள் முக்கியப் பங்கு வகித்தன என்பது பொதுவான உடன்பாடு ஆகும்.


உதாரணமாக, வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப், விவசாயிகள் மீதான அதிக வரிச்சுமையால் இந்த சரிவு ஏற்பட்டதாக நம்புகிறார். இது பல பகுதிகளில் கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தது. இந்தக் கிளர்ச்சிகளை அடக்க, அதிக வளங்கள் தேவைப்பட்டன. இதன் விளைவாக, அதிக வரிகள் வசூலித்தலால், அதிக கிளர்ச்சிகள் ஏற்பட்டன. முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு இந்தச் சுழற்சி முக்கிய மையமாக இருந்தது என்று ஹபீப் வாதிடுகிறார். (முகலாய இந்தியாவின் விவசாய அமைப்பு, 1963).


மறுபுறம், 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாய பிரபுக்களின் விரைவான வளர்ச்சியை M.அதர் அலி எடுத்துக்காட்டுகிறார். இந்த நேரத்தில், பல புதிய பிரபுக்கள் இந்த அமைப்பில் இணைந்தனர். இருப்பினும், அவர்களை ஆதரிக்க போதுமான "நல்ல ஜாகீர்-good jagirs" (நில வருவாய் ஒதுக்கீடுகள்) இல்லை. இந்தப் பற்றாக்குறை பிரபுக்களிடையே ஊழல் மற்றும் உள் சண்டைக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக, இராணுவத்தின் செயல்திறன் குறைந்தது. (அவுரங்கசீப்பின் கீழ் முகலாய பிரபுக்கள், 1966).


சர்க்காரின் சில வரலாற்றாசிரியர்கள் ஔரங்கசீப்பின் மதக் கொள்கைகளில் கவனம் செலுத்துகின்றனர். இந்தக் கொள்கைகள் இந்துக்களையும் பிற மத சிறுபான்மையினரையும் எவ்வாறு ஒடுக்கின என்பதை அவர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். இது அவர்களின் அந்நியப்படுத்தலுக்கு வழிவகுத்தது.


நாதிர்ஷாவின் படையெடுப்பு


ஔரங்கசீப்பின் காலத்தில், முகலாயப் பேரரசு தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டது. இதில், மராட்டியர்கள் தெற்கை அச்சுறுத்தினர், அதே நேரத்தில் அஹோம்கள் கிழக்கிலிருந்து தாக்கினர். வடக்கு மற்றும் மேற்கில், ஜாட்கள், ராஜபுத்திரர்கள், பந்தேலர்கள் மற்றும் சீக்கியர்களும் பேரரசுக்கு எதிராகப் போரிட்டனர். இந்தக் குழுக்கள் பல வழிகளில் பேரரசை பலவீனப்படுத்தின. அவர்கள் நிலத்தைக் கைப்பற்றினர், செல்வத்தைக் கைப்பற்றினர், மேலும் முகலாய கருவூலத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தினர்.


முகலாயப் பேரரசு அதுவரை எதிர்கொண்ட மிகப்பெரிய சவாலாக நாதிர் ஷாவின் படையெடுப்பு இருந்தது. அவர் ஒரு சிறந்த இராணுவத் தலைவராக இருந்தார். பின்னர், சில வரலாற்றாசிரியர்களால் "பாரசீக நெப்போலியன்" (Napoleon of Persia) என்று அழைக்கப்பட்டார். ஆளும் சஃபாவிட் வம்சத்தை (Safavid dynasty) வீழ்த்திய பிறகு நாதிர் ஷா ஈரானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினார். அவர் பெர்சியாவில் தனது அதிகாரத்தை வலுப்படுத்தினார் மற்றும் அதன் எல்லைகளுக்கு அப்பால் வெற்றிகரமான இராணுவ பிரச்சாரங்களை நடத்தினார். மேற்கில் ஒட்டோமான்கள் (Ottomans), வடக்கில் ரஷ்யர்கள் மற்றும் கிழக்கில் ஆப்கானிய பழங்குடியினருக்கு எதிராக அவர் போராடியதுடன், அவர்கள் முகலாயர்களுடனும் மோதினார்.


நாதிர் ஷா 1738-ம் ஆண்டில் காந்தஹாரைக் கைப்பற்றினார். அதன் பிறகு, அவர் இந்தியா மீது தனது பார்வையைத் திருப்பினார். அவர் கைபர் கணவாய் வழியாக இந்திய துணைக்கண்டத்திற்குள் நுழைந்தார். இது பல முன்னாள் படையெடுப்பாளர்கள் பயன்படுத்திய பாதையாகும். இவர்களில் அலெக்சாண்டர் மற்றும் தைமூர் ஆகியோரும் அடங்குவர். நாதிர் ஷா பல முகலாயர்களின் அடிமை  மாநிலங்களை விரைவாக தோற்கடித்தார். பின்னர், அவர் டெல்லியை நோக்கி அணிவகுத்துச் சென்றார்.


நாதிர் ஷாவின் படையெடுப்பிற்கு பதிலளிக்க ரங்கிலா நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். சர்க்காரின் கூற்றுப்படி, "நாதிர் படையெடுப்பின் போது அரச அவையின் [டெல்லி] நடவடிக்கைகள் அவமானகரமான திறமையின்மையால் குறிக்கப்பட்டன. அதாவது, கிட்டத்தட்ட முட்டாள் தனம் அளவிற்கு" என்று குறிப்பிட்டு  ரங்கிலா செயல்பட டிசம்பர் வரை காத்திருந்தார். ஜூன் மாதத்தில் நாதிர் ஷா ஏற்கனவே காபூலைக் கைப்பற்றி நவம்பர் மாத நடுப்பகுதியில் கைபர் கணவாயைக் கடந்திருந்தார். ஜனவரி மாதம் வரை நாதிர் ஷாவின் படையெடுக்கும் படைகளை எதிர்கொள்ள முகலாய இராணுவம் தயாராக இல்லை.


இந்த நேரத்தில், பாரசீகர்கள் லாகூரைக் கைப்பற்றி டெல்லியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். தலைநகரிலிருந்து சுமார் 125 கி.மீ தொலைவில் உள்ள கர்னாலில் இரு படைகளும் மோதத் தயாராக இருந்தன.


போர் மற்றும் அதற்கு அப்பால்


முகலாயப் படையில் 300,000 வீரர்கள் இருந்தனர். அதில் 2,000க்கும் மேற்பட்ட போர் யானைகள் மற்றும் 3,000 பீரங்கிகளும் அடங்கும்.  இதில் பொதுவாக, போரில் ஈடுபடாத அனைவரையும் கணக்கிட்டால், எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கிறது. ரங்கிலா ஒரு பெரிய அரண்மனை மற்றும் ஒரு பெரிய வேலைக்காரர் குழுவுடன் பயணம் செய்தார்.  மொத்த முகலாயப் படை ஒரு மில்லியன் மக்களாக இருந்திருக்கலாம் என்று சில கணக்குகள் தெரிவிக்கின்றன. நாதிர் ஷாவின் இராணுவம் மிகவும் சிறியதாக இருந்தது, 55,000 வீரர்கள் மட்டுமே இருந்தனர். இருப்பினும், அது மிகவும் ஒழுக்கமானதாகவும் அதிக அனுபவமுள்ளதாகவும் இருந்தது. அது நவீன இராஜதந்திர ரீதியில் பல மேம்பட்ட ஆயுதங்களையும் பயன்படுத்தியது. கூடுதலாக, நாதிர் ஷாவின் தனிப்பட்ட புத்திசாலித்தனம் முகலாயர்களால் அவரைத் தோற்கடிக்க முடியாமல் செய்தது.


முகலாய தளபதி சாதத் கானின் குதிரைப்படையை நாதிர் ஷா எவ்வாறு ஏமாற்றினார் என்பதை வரலாற்றாசிரியர் வில்லியம் டால்ரிம்பிள் மற்றும் அனிதா ஆனந்த் விவரித்தனர்.  முகலாயர்கள் முன்னோக்கிச் சென்றனர். ஆனால், நாதர் ஷாவின்,  லேசான குதிரைப்படை ஒதுங்கி நகர்ந்தது. மேலும், மேம்பட்ட சுழல் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய வீரர்களின் வரிசையை வெளிப்படுத்தியது. அவர்கள் மிக அருகில் இருந்து சுட்டனர். சில நிமிடங்களில் பல முகலாய வீரர்களைக் கொன்றனர். இதனால் சிறந்த வீரர்கள் பலர் போர்க்களத்தில் இறந்து கிடந்தனர் என்று வரலாற்றாசிரியர்கள் வில்லியம் டால்ரிம்பிள் மற்றும் அனிதா ஆனந்த் ”Koh-i-Noor: The History of the World’s Most Infamous Diamond” (2016) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதில், முகலாய இராணுவம் மூன்று மணி நேரத்திற்குள் தோற்கடிக்கப்பட்டது. பின்னர், முகமது ஷா டெல்லியை கைப்பற்றினார். பாரசீகர்கள் பின்னர் டெல்லிக்கு அணிவகுத்துச் சென்றனர். அங்கு அவர்கள் அரச புதையலைக் கொள்ளையடித்தனர். மேலும், டெல்லியின் வரலாற்றில் ஆயிரக்கணக்கான நிராயுதபாணிகளைக் கொன்றனர். இது டெல்லியின் வரலாற்றில் மிகவும் வன்முறை நிகழ்வுகளில் ஒன்றாக மாறியது.


டெல்லியில் சுமார் 30,000 பேர் கொல்லப்பட்டனர். வரலாற்றாசிரியர் குலாம் ஹுசைன் கான், பெர்சியர்கள் எல்லாவற்றையும் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றதாக குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் துணி, நகைகள் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களைக் கொள்ளையடித்தனர். ஆயிரக்கணக்கான பெண்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். தரிபா கலனைச் (Dariba Kalan) சுற்றியுள்ள முழு சுற்றுப்புறங்களும் எரிக்கப்பட்டன.


நாதிர் ஷா இறுதியில் ரங்கிலாவின் பிரதேசங்களை அவரிடம் திருப்பிக் கொடுத்தார். அவர் தனது மகனை ரங்கிலாவின் அக்கா மகளுடன் திருமணம் செய்து வைத்தார். இருப்பினும், எட்டு தலைமுறை முகலாய ஆட்சியின் போது சேகரிக்கப்பட்ட பரந்த செல்வத்தை அவர் எடுத்துச் சென்றார். டால்ரிம்பிள் மற்றும் ஆனந்த் இதை "முகலாய பேரரசின் எட்டு தலைமுறை வெற்றியின் குவிந்த செல்வம்" (accumulated wealth of eight generations of imperial Mughal conquest) என்று விவரித்தனர். இதன் விளைவாக, முகலாய கருவூலம் கிட்டத்தட்ட காலியாக இருந்ததால், டெல்லி தனது சொந்த பிரதேசத்தைக் கட்டுப்படுத்த வளங்கள் இல்லாமல் போனது.


அடுத்த 100 ஆண்டுகளில், 1857 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் அதன் ஆட்சியை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவரும் வரை முகலாயப் பேரரசு அதன் நிலப்பகுதிகளை இழந்து கொண்டே இருந்தது.




Original article:

Share:

கடல் மட்டம் ஏன் உயர்கிறது? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


1. கடந்த 25 ஆண்டுகளாக பனிப்பாறைகள் ஒவ்வொரு ஆண்டும் 273 பில்லியன் டன் அளவு பனியை இழந்து வருகின்றன. இந்த அளவானது பனிக்கட்டி, 30 ஆண்டுகளில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் தண்ணீருக்குச் சமம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2. பனி உருகுவதால், 2 செ.மீ கடல் மட்ட உயர்வானது சிறியதாகத் தோன்றலாம், ஆனால் அது உலகிற்கு கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். இங்கிலாந்தில் உள்ள நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தின் புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் தலைவர் ஆண்ட்ரூ ஷெப்பர்ட், தி கார்டியனிடம் குறிப்பிட்டுள்ளாவது, "ஒவ்வொரு சென்டிமீட்டர் கடல் மட்ட உயர்வு நமது பூமியில் எங்காவது ஆண்டுதோறும் 2 மில்லியன் மக்களை வெள்ளத்திற்கு ஆளாக்குகிறது" என்று அவர்கள் கூறினர்.


3. ”2000 முதல் 2023 வரையிலான உலகளாவிய பனிப்பாறை நிறை மாற்றங்களின் சமூக மதிப்பீடு” என்ற ஆராய்ச்சிக் கட்டுரை பிப்ரவரி 19 அன்று நேச்சர் இதழில் வெளியிடப்பட்டது. எடின்பர்க் பல்கலைக்கழகம் (ஸ்காட்லாந்து) மற்றும் சூரிச் பல்கலைக்கழகம் (சுவிட்சர்லாந்து) ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தி வருகின்றனர்.


உங்களுக்குத் தெரியுமா? :


1. கடல் மட்ட உயர்வு என்பது பூமியின் மையத்தில் இருந்து அளவிடப்படும் கடலின் மேற்பரப்பின் சராசரி உயரத்தின் அதிகரிப்பு ஆகும். தற்போது, கடல் மட்டம் உயர்வதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.


  • முதலில், புவி வெப்பமடைதல் பனிப்பாறைகள் மற்றும் பனிப்படலங்கள் உருகுவதற்கு காரணமாகிறது. பனிப்பாறைகள் நிலத்தின் மீது மெதுவாக நகரும் பனி மற்றும் பனிப்பொழிவால் உருவாகின்றன. பனிப்படலங்கள் 50,000 சதுர கி.மீ.க்கும் அதிகமான நிலப்பரப்பை உள்ளடக்கியது. சமீபத்திய ஆய்வு ஒன்று, 2000-ம் ஆண்டு முதல், பனிப்பாறைகள் பிராந்தியத்தைப் பொறுத்து 2% முதல் 39% வரை பனியை இழந்துள்ளதாக வெளிக்காட்டுகிறது. உலகளவில், பனிப்பாறைகள் சுமார் 5% பனியை இழந்துள்ளன. இது கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிப்படலங்கள் ஒரே நேரத்தில் இழந்ததை விட சுமார் 18% அதிகம் ஆகும்.


  • இரண்டாவது காரணி கடல் நீரின் வெப்ப விரிவாக்கம் (thermal expansion) ஆகும். நீர் வெப்பமடையும் போது இது நிகழ்கிறது. உலகளாவிய வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​கடல்கள் வெப்பமடைந்து வருகின்றன. இதன் விளைவாக, கடல் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. நாசாவின் கூற்றுப்படி, கடல் நீரின் வெப்ப விரிவாக்கம் உலகளாவிய கடல் மட்ட உயர்வில் மூன்றில் ஒரு பங்கு முதல் அதில் பாதி வரை காரணமாகும்.



Original article:

Share:

இந்தியாவின் வேளாண் வர்த்தகக் கொள்கைகள் உலக வர்த்தக அமைப்பு (WTO) விதிகளுடன் எவ்வாறு ஒத்துப்போகின்றன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


1. விவசாய வரிகள் குறித்த விவாதங்கள் இந்தியா-அமெரிக்க இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகளின் (India-US bilateral trade negotiations) ஒரு பகுதியாக இருக்கும். புதிய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விவசாய ஏற்றுமதிகளை முன்னுரிமையாகக் கருதுகிறது என்பதை ஆரம்பகாலத்திலிருந்து அறிகுறிகள் காட்டுகின்றன. இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒருவர் கூறுகையில், அமெரிக்க ஏற்றுமதியை அதிகரிப்பதே நிர்வாகத்தின் நோக்கமாகக் கொண்டுள்ளது.


2. ஒன்றிய பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களின் மீதான அடிப்படை சுங்க வரியை (basic customs duty) இந்தியா குறைத்தது. இருப்பினும், பரஸ்பர வரிகள் குறித்த வெள்ளை மாளிகையின் அறிக்கை ஒரு சிக்கலை எடுத்துக்காட்டியது. இது, விவசாயப் பொருட்களுக்கான இந்திய வரிகள் இன்னும் இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்கும் வரிகளைவிட மிக அதிகமாக இருப்பதாக அது கூறியது.


3. எவ்வாறாயினும், விவசாயப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைப்பது விவசாயப் பொருட்களின் ஒட்டுமொத்த வர்த்தகத்தை அதிகரிக்கும் என்று அரசாங்க அதிகாரிகள் நம்புகின்றனர். இது இந்திய விவசாய ஏற்றுமதிகள் அமெரிக்க சந்தையில் எளிதாக நுழைய உதவும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இந்தியா முக்கியமாக பாஸ்மதி அரிசி, மசாலாப் பொருட்கள், தானியங்கள், பால் மற்றும் கோழிப் பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது.


உங்களுக்குத் தெரியுமா? :


1. இந்தியாவில் விவசாயப் பொருட்கள் மிகவும் பாதுகாக்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. விவசாயத்திற்கான சந்தை அணுகலை பொதுவாக விரும்பும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடனான இந்த ஒப்பந்தங்களும் இதில் அடங்கும். இந்திய விவசாயப் பொருட்களுக்கான அதிக வரிகள் இந்தத் துறையை பாதிப்படையச் செய்கின்றன என்று வர்த்தக நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். இந்தத் துறையை பாதிக்கக்கூடிய பரஸ்பர வரிகளை ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.


2. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி (Global Trade Research Initiative (GTRI)) வெள்ளிக்கிழமை ஒரு குறிப்பை வெளியிட்டது. மீன், இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட கடல் உணவுத் துறை அமெரிக்க பரஸ்பர வரிகளால் மிகவும் பாதிக்கப்படும் என்று அது கூறியது. இந்தத் துறையிலிருந்து $2.58 பில்லியன் மதிப்புள்ள ஏற்றுமதிகள் 27.83% கட்டண வேறுபாட்டை எதிர்கொள்ளும்.


3. வர்த்தக அடிப்படையில், கட்டண வேறுபாடு (tariff differential) என்பது கட்டண விகிதங்களுக்கு (tariff rates) இடையிலான இடைவெளியைக் குறிக்கிறது. இது இந்திய ஏற்றுமதிகளுக்குப் பயன்படுத்தப்படும் விகிதங்களை மற்ற நாடுகள் அல்லது தயாரிப்பு வகைகளுடன் ஒப்பிடுகிறது.


4. டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் (United States–Mexico–Canada Agreement (USMCA)) கையெழுத்தானது. இது வட அமெரிக்க தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை (North American Free Trade Agreement (NAFTA)) மாற்றியது. அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கான சந்தை அணுகலை மேம்படுத்துவதே இதன் இலக்காக இருந்தது.


5. புதிய ஒப்பந்தம் அமெரிக்க பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கியதாக அமெரிக்க வேளாண்மைத் துறை (US Department of Agriculture (USDA)) கூறியது. கனேடிய சந்தையில் (Canadian market) அவர்களுக்கு அதிக அணுகலை அனுமதிப்பதன் மூலம் இந்த செயல்பாட்டை மேற்கொண்டது.




Original article:

Share:

தொற்றுநோய்க்குப் பிறகு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் இந்திய ரயில்வேயின் பயணிகள் சேவைகளை மாற்றுவதில் என்ன பங்கு வகித்தன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


1. AC 3-அடுக்கில் (AC 3-tier) பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 26 கோடி ஆகும். இது, புறநகர் உட்பட மொத்த 727 கோடி பயணிகளில் 3.5% மட்டுமே. இருப்பினும், AC 3-அடுக்கில் ரூ.30,089 கோடியை ஈட்டுகிறது. இது 2024-25 ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட ரூ.80,000 கோடி மொத்த பயணிகள் வருவாயில் 38% ஆகும்.


2. AC 3-அடுக்கிலிருந்து (AC 3-tier) அதிக வருவாய் என்பது 'மேல்நோக்கிய இயக்க' (upward mobility) வடிவத்தைக் காட்டுகிறது. இப்போது, அதிகமான மக்கள் சிறந்த நிலையில் பயணிக்க விரும்புகிறார்கள். இரயில்வேயின் சிறந்த விலை நிர்ணயத் தன்மையைத் தவிர, ஐந்து ஆண்டுகளில் ஏசி 3-அடுக்கு வருவாயில் 19.5 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (compounded annual growth rate (CAGR)) அதிக பணம் செலவழிக்க விரும்பும் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பிற்கு பெரும்பாலும் காரணமாக இருக்கலாம்.


3. 2019-20 ஆம் ஆண்டில், ஏசி 3-அடுக்கில் பயணிகள் AC (3-tier passengers) 11 கோடி பேர் இருந்தனர். இது மொத்த பயணிகளில் 1.4% ஆகும். 2024-25 ஆம் ஆண்டில், ஏசி 3-அடுக்கு பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 19% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (compound annual growth rate (CAGR)) வளர்ந்து 26 கோடியை எட்டியது. ஏசி 3-அடுக்கு பயணிகளிடமிருந்து வருவாய் 2019-20-ல் ரூ.12,370 கோடியிலிருந்து 2024-25-ல் ரூ.30,089 கோடியாக அதிகரித்தது.


4. 2019-20 ஆம் ஆண்டில், தொற்றுநோய்க்கு முன்பு, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி (Second Class Sleeper) பயணிகள் மொத்த பயணிகளின் வருவாயில் அதிக பங்களிப்பை வழங்கினர். இதன்மூலம், ₹13,641 கோடி ஈட்டப்பட்டது. இது மொத்த வருவாயான ₹50,669 கோடியில் 27% ஆகும். இருப்பினும், இந்த வகுப்பில் 37 கோடி பேர் மட்டுமே பயணம் செய்தனர். இது அந்த ஆண்டு மொத்த 809 கோடி இரயில் பயணிகளில் வெறும் 4.6% மட்டுமே.


உங்களுக்கு தெரியுமா? :


பயணிகள் முன்பதிவு அமைப்பு (Passenger Reservation System(PRS)) இந்தியாவின் கூற்றுப்படி, இந்திய இரயில்வே மூன்று முக்கிய ஆதாரங்களில் இருந்து பணத்தைப் பெறுகிறது :


  • சரக்குக் கட்டணங்கள், பயணிகள் டிக்கெட்டுகள் மற்றும் இரயில்வே நிலத்தை குத்தகைக்கு எடுப்பதன் மூலம் வரும் அதன் சொந்த வருவாய்.


  • மத்திய அரசாங்கத்திடமிருந்து நிதி உதவி.


  • கடன்கள், நிறுவன நிதி, பொது-தனியார் கூட்டாண்மை மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகியவற்றிலிருந்து கூடுதல் நிதி ஆகியவை அடங்கும்.


பயணிகள் முன்பதிவு அமைப்பு (Passenger Reservation System(PRS)) இந்தியாவின் கூற்றுப்படி, இரயில்வேயின் பணிச் செலவுகள், சம்பளம், ஊழியர்களின் வசதிகள், ஓய்வூதியங்கள் மற்றும் சொத்து பராமரிப்பு போன்றவை, அதன் உள் வளங்களால் ஈடுகட்டப்படுகின்றன. சரக்குப்பெட்டிகள் வாங்குதல் (buying wagons) மற்றும் நிலையங்கள் மறுமேம்பாடு (station redevelopment) போன்ற மூலதனச் செலவுகள் கூடுதல் பட்ஜெட் வளங்கள் (58%), மத்திய அரசின் ஆதரவு (33%) மற்றும் இரயில்வேயின் சொந்த உள் வளங்கள் மூலம் நிதியளிக்கப்படுகின்றன.


பயணிகள் போக்குவரத்து இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) இந்தியா கூறுகிறது : அவை, புறநகர் (suburban) மற்றும் புறநகர் அல்லாத போக்குவரத்து (non-suburban traffic) ஆகும்.புறநகர் இரயில்கள் (Suburban trains) என்பது 150 கி.மீ வரை குறுகிய தூரம் பயணிக்கும் பயணிகள் இரயில்கள் (passenger trains) ஆகும். அவை, நகரங்கள் மற்றும் அருகிலுள்ள புறநகர்ப் பகுதிகளுக்குள் மக்கள் பயணிக்க உதவுகின்றன. பயணிகள் வருவாயில் பெரும்பாலானவை புறநகர் அல்லாத போக்குவரத்திலிருந்து வருகின்றன. இதில் நீண்ட தூர பயணிக்கும் இரயில்களும் அடங்கும்.


புறநகர் அல்லாத போக்குவரத்தில், 2-ம் வகுப்பு (ஸ்லீப்பர் வகுப்பு உட்பட) வருவாயில் 67% பங்களிக்கிறது. ஏசி வகுப்பு (AC 3-tier, AC Chair Car மற்றும் AC sleeper ஆகியவை அடங்கும்) 32% பங்களிக்கிறது. மீதமுள்ள 1% AC முதல் வகுப்பிலிருந்து (நிர்வாக வகுப்பு மற்றும் முதல் வகுப்பு உட்பட) வருகிறது.


பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) இந்தியாவின் கூற்றுப்படி, மத்திய அரசு இரயில்வே தனது வலையமைப்பை விரிவுபடுத்தவும் மூலதன திட்டங்களில் முதலீடு செய்யவும் உதவுகிறது. முன்னதாக, இந்த அரசாங்க ஆதரவு இரயில்வே திட்டங்களுக்கான நிதியின் முக்கிய ஆதாரமாக இருந்தது. 2014-15ஆம் ஆண்டில், இது மூலதனச் செலவுகளில் 51%-ஐ ஈடுகட்டியது. இருப்பினும், 2015-16 முதல், இந்த செலவுகளில் 56%-க்கும் அதிகமானவை கடன்கள் மற்றும் வெளிப்புற முதலீடுகள் மூலம் நிதியளிக்கப்படுகின்றன.


பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) இந்தியாவின் கூற்றுப்படி, கூடுதல் பட்ஜெட் வளங்கள் (Extra Budgetary Resources (EBR)) சந்தை கடன்களிலிருந்து வருகின்றன. இதில் வங்கிகளிடமிருந்து நிதியளிப்பு, நிறுவன நிதி மற்றும் வெளிப்புற முதலீடுகள் ஆகியவை அடங்கும்.இந்திய ரயில்வேயில் வெளிப்புற முதலீடுகள் பொது-தனியார் கூட்டாண்மைகள் (public-private partnerships (PPP)), கூட்டு முயற்சிகள் அல்லது சந்தை நிதியுதவி மூலம் வரலாம். தனியார் முதலீட்டாளர்கள் இரயில்வேயில் பத்திரங்கள் அல்லது ஈக்விட்டி பங்குகளை (equity shares) வாங்க ஈர்க்கப்படலாம்.


இரயில்வே முக்கியமாக இந்திய இரயில்வே நிதிக் கழகம் (Indian Railways Finance Corporation (IRFC)) மூலம் நிதியைக் கடன் வாங்குகிறது.இந்திய இரயில்வே நிதிக் கழகம் (IRFC) வரி விதிக்கக்கூடிய மற்றும் வரி இல்லாத பத்திரங்களை வெளியிடுவதன் மூலமும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து காலக் கடன்களைப் பெறுவதன் மூலமும் சந்தையில் இருந்து நிதியைத் திரட்டுகிறது.


இந்திய இரயில்வே நிதிக் கழகம் (IRFC) பின்னர் இந்திய இரயில்வேயின் ரோலிங் ஸ்டாக் (rolling stock) மற்றும் சொத்து திட்டங்களுக்கு (project assets) நிதியளிக்க குத்தகை மாதிரியைப் பயன்படுத்துகிறது.




Original article:

Share:

பஞ்சாயத்து அதிகாரப் பரவலாக்கக் குறியீடு ஏன் முக்கியமானது? -ரோஷ்னி யாதவ்

 இந்தியாவில் பஞ்சாயத்துகள் எதிர்கொள்ளும் சவால்களை சமீபத்திய அரசாங்க அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு மாநிலமும் இந்த உள்ளூர் அமைப்புகளுக்கு அதிகாரங்களை எவ்வளவு சிறப்பாகப் பகிர்ந்தளித்துள்ளது என்பதையும் இது மதிப்பிடுகிறது.


ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சமீபத்தில் பஞ்சாயத்து அதிகாரப் பகிர்வு குறியீட்டை (Panchayat Devolution Index) வெளியிட்டது. இந்த குறியீடு இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் (Indian Institute of Public Administration (IIPA)) ஆய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த குறியீட்டின் கடைசி வெளியீடு 2014-ல் இருந்தது. கடந்த பத்தாண்டுகளில், தேசிய சராசரி மதிப்பெண் 39.92-லிருந்து 43.89 ஆக அதிகரித்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 2.62 லட்சம் பஞ்சாயத்துகள் உள்ளன. இது 2013-14-ல் 2.48 லட்சமாக இருந்தது. 2013-14 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான பஞ்சாயத்துகளைக் கொண்டுள்ளன.


2. இந்திய பொது நிர்வாக நிறுவனம் (Indian Institute of Public Administration (IIPA)) 8 மாவட்டங்களில் 172 பஞ்சாயத்துகளை அவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக ஆய்வு செய்தது. இந்த ஆய்வு ஆறு அளவுருக்களில் கவனம் செலுத்தியது: கட்டமைப்பு, செயல்பாடுகள், நிதி, செயல்பாட்டாளர்கள், திறன் மேம்பாடு மற்றும் பொறுப்புணர்வு ஆகும். இந்தத் தரவைப் பயன்படுத்தி, இந்திய பொது நிர்வாக நிறுவனம் பஞ்சாயத்து அதிகாரப் பகிர்வு குறியீட்டை உருவாக்கியது.


3. இந்தக் குறியீடு 0 முதல் 100 வரையிலான அளவுகோலில் மாநிலங்களுக்கு மதிப்பெண் வழங்குகிறது. முதல் மூன்று இடங்களில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் உள்ளன. அதே, நேரத்தில் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை சந்தித்துள்ளன.


4. சமீபத்திய குறியீட்டின்படி, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகியவை குறைந்த மதிப்பெண் பெற்ற மாநிலங்களாகும். கடந்த பத்தாண்டுகளில் மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்துள்ளன. முதல் 10 மாநிலங்களில், ஒட்டுமொத்தமாக 4-வது இடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் மதிப்பெண் மட்டுமே குறைந்துள்ளது.


5. 2013-14ல், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு, 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்தியுள்ளன. அதே நேரத்தில் 11 மாநிலங்கள் சரிவை சந்தித்துள்ளன.


6. பெண்களின் பிரதிநிதித்துவம் (Women’s Representation): பெரும்பாலான மாநிலங்களில் பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு உள்ளது. 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த வரம்புக்கு கீழே உள்ளன. இதில் மத்திய பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் திரிபுரா ஆகியவை அடங்கும்.


மறுபுறம், 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இட ஒதுக்கீடு வரம்பை சந்திக்கின்றன அல்லது மீறுகின்றன. பஞ்சாயத்து பிரதிநிதிகளில் பெண்களின் விகிதாச்சாரத்தில் ஒடிசா 61.51% அதிகமாகவும், இமாச்சலப் பிரதேசம் 57.5% ஆகவும், தமிழ்நாடு 57.32% ஆகவும் உள்ளது.


உத்தரப் பிரதேசத்தில் பெண் பிரதிநிதிகள் மிகக் குறைந்த விகிதத்தில் 33.33% உள்ளனர். ஏனெனில், அதன் விதிமுறைகள் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை மட்டுமே அனுமதிக்கின்றன.


தேசிய அளவில், பெண் பிரதிநிதிகளின் சராசரி விகிதம் 46.44% ஆகும். இது 2013-14ல் 45.9% ஆக இருந்தது. 2013-14-ல், 50% அல்லது அதற்கு மேற்பட்ட பெண் பிரதிநிதிகளைக் கொண்ட 11 மாநிலங்கள் இருந்தன. 2024-ல் இந்த எண்ணிக்கை 16 மாநிலங்களாக அதிகரித்துள்ளது.

7. பட்டியலிடப்பட்ட சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரதிநிதித்துவம் : பட்டியலிடப்பட்ட சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு முறையான இடஒதுக்கீடு இல்லை என்றாலும், குறிப்பிட்ட மாநிலங்கள் பஞ்சாயத்துகளில் இந்த குழுக்களின் குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவத்தைக் காட்டியுள்ளன.


பஞ்சாபில் 36.34% பட்டியலிடப்பட்ட சாதி பிரதிநிதிகள் அதிக அளவில் உள்ளனர்.


சத்தீஸ்கரில் 41.04% பட்டியலிடப்பட்ட பழங்குடியின பிரதிநிதிகளின் பங்கு அதிகமாக உள்ளது.


பீகாரில் 39.02% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக உள்ளது.


இதனுடன் ஒப்பிடுகையில், இந்த குழுக்களுக்கான தேசிய சராசரி பிரதிநிதித்துவம் பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கு 18.03%, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்களுக்கு 16.22% மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 19.15% ஆக உள்ளது.


8. முக்கிய சவால்கள்: நிலையான நிதி மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவை பஞ்சாயத்துகளுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


நிதி: 2023-24-ல், மாநில அரசுகள், பஞ்சாயத்துகளுக்கு, 47,018 கோடி ரூபாய் ஒதுக்கியதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2023 நவம்பர் வரை, 10,761 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.


உட்கட்டமைப்பு (Infrastructure): சில மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்துகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே தங்கள் பஞ்சாயத்து அலுவலகங்களில் 100% நிரந்தர கட்டிடங்களாக (pucca buildings) இருந்ததாகவும், 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், குறைந்தது நான்கில் மூன்று பங்கு பஞ்சாயத்து அலுவலகங்கள் திடமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளன.


இந்தியாவில் உள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள்: வரலாறு மற்றும் முக்கியத்துவம்

1. பஞ்சாயத்து ராஜ் அமைப்பு (Panchayati Raj System), அடிமட்ட ஜனநாயகம் மற்றும் கிராமப்புற மக்களை அதிகாரம் அளிப்பதை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். இது உள்ளூர் அமைப்புகளுக்கு தங்களைத் தாங்களே ஆள அதிகாரத்தை அளிக்கிறது. இது பங்கேற்பு ஜனநாயகத்தை ஊக்குவிக்கிறது (participatory democracy). மக்கள் தங்கள் சமூகங்களுக்கான முடிவெடுப்பதில் பங்கேற்க அனுமதிக்கிறது.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது 73-வது திருத்தச் சட்டத்திற்குப் பிறகு 1993-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் கிராமம், தொகுதி மற்றும் மாவட்ட அளவில் பஞ்சாயத்துகளுடன் மூன்று அடுக்கு அமைப்பை (three-tier system) அறிமுகப்படுத்தியது.

2. பஞ்சாயத்து ராஜ் அமைப்பு பண்டைய இந்தியாவிலிருந்து தொடங்குகிறது. அங்கு பஞ்சாயத்துகள் என்று அழைக்கப்படும் கிராம சபைகள் உள்ளூர் விவகாரங்களை நிர்வகித்தன. இருப்பினும், பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முன்பு இருந்தது. ஆனால், அதற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் இல்லை. 1993-ஆம் ஆண்டு, இது அரசியலமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. அந்த ஆண்டு முதல், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் இதை செயல்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டது.

3. ஏப்ரல் 24, 1993 அன்று நடைமுறைக்கு வந்த 1992-ஆம் ஆண்டின் 73-வது திருத்தச் சட்டம், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு (Panchayati Raj Institutions (PRIs)) அரசியலமைப்பு அங்கீகாரத்தை வழங்கியது. இது அரசியல் அதிகாரத்தை அடிமட்ட அளவிற்கு பரவலாக்குவதில் ஒரு முக்கியப் படியாகும்.

4. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அதிகாரத்தை மாற்றுவது ஜனநாயகத்தை நோக்கிய ஒரு படி மட்டுமல்ல. அது மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையாகப் பார்க்கப்படுகிறது. பஞ்சாயத்து ராஜ் அமைப்பை அவர் ஆதரித்தார். உள்ளூர் சமூகங்கள் தங்கள் சொந்த கிராமங்களை நிர்வகிக்க வேண்டும் என்று அவர் நம்பினார்.

5. 73-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பில் பகுதி IX-ஐச் சேர்த்தது. இந்தப் பிரிவு பஞ்சாயத்துகளின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை வரையறுக்கிறது. இது பிரிவுகள் 243 முதல் 243-O வரை உள்ளடக்கியுள்ளது.

6. கடந்த சில ஆண்டுகளாக, பஞ்சாயத்து ராஜ் அமைப்புககளின் பங்கு அதிகரித்துள்ளது. விரிவான வளர்ச்சிக்கு வலுவான உள்ளூர் நிர்வாகம் தேவைப்படுகிறது. பஞ்சாயத்துகள் காலநிலை மாற்றம் மற்றும் கிராமப்புற-நகர்ப்புற இடம்பெயர்வை சரி செய்ய உதவுகின்றன. உள்ளூர் மட்டத்தில் நியாயமான மற்றும் நிலையான வளர்ச்சியில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. உள்ளூர் தேவைகள் திறம்பட பூர்த்தி செய்யப்படுவதையும் அவை உறுதி செய்கின்றன.




Original article:

Share:

மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு வரலாற்று பின்னணி கொண்டது. அதை ஒன்றிய அரசு மதிக்க வேண்டும். -அமித் ரஞ்சன்

 தமிழ்நாட்டில், இந்தி பிராமண ஆதிக்கத்தை ஆதரிக்கும் மற்றும் தமிழ் அடையாளத்தை அடக்கும் ஒரு ஆரிய மொழியாகக் கருதப்படுகிறது. பெரியார் இந்தி, பிராமண கட்டுப்பாடு மற்றும் பிராமணிய மதிப்புகளுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தினார்.


மொழி என்பது அடையாளத்தின் ஒரு முக்கிய அடையாளமாகும். ஒரே மொழியைப் பேசும் மக்களிடையே இது ஒரு இணைப்பை உருவாக்குகிறது. மற்றொரு மொழி ஆதிக்கம் செலுத்தும் என்ற அச்சம் இருக்கும்போது இந்த தொடர்பு வலுவடைகிறது. இந்தி பேசும் மாநிலங்களில் நடுத்தர வர்க்க வீடுகளில் இந்தி பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால், ஆங்கிலம் அரை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு பரவியுள்ளது. இருப்பினும், தாய்மொழிகள் அனைத்து இடங்களிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.


சில நாட்களுக்கு முன்னர், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்தி மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால், சமக்ர சிக்ஷா நிதியின் கீழ் மாநிலத்திற்கு ரூ.2,150 கோடி கிடைக்காது என்று எச்சரித்தார். இருப்பினும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மும்மொழிக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறார். தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையில் அவர் உறுதியாக இருக்கிறார். தமிழ் மற்றும் ஆங்கிலம் - தமிழ்நாட்டின் அடையாளத்தை வடிவமைத்த மொழி இயக்கத்தின் வரலாற்றைப் படிக்க வேண்டும்.


காலனித்துவ இந்தியாவில், 1937-ல் காங்கிரஸ் ஒரு மாகாண அரசாங்கத்தை அமைத்த பிறகு, சென்னைப் பிரதமராக இருந்த சி. ராஜகோபாலாச்சாரி இந்தி மொழியை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டார். இது பரவலான எதிர்ப்பிற்கு வழிவகுத்தது. பெரியார் இந்தி திணிப்பு, பிராமண ஆதிக்கம் மற்றும் பிராமணிய மதிப்புகளை கடுமையாக எதிர்த்தார். 

இந்தி, பிராமண ஆதிக்கம் மற்றும் பிராமணிய விழுமியங்களுக்கு எதிரான தீவிரமான போரை "பெரியார்" ஈ.வெ.ராமசாமி வழிநடத்தினார். 


இந்திய அரசியலமைப்பு சபை மொழி குறித்து விவாதங்களை நடத்தியது. இறுதியில், இந்தி அதிகாரப்பூர்வ மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 15-ஆண்டுகளுக்குப் பிறகு மறு ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. 1948, 1952 மற்றும் 1965-ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மொழி எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. 1950-களில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர் மு. கருணாநிதி, வட இந்தியர்கள் நடத்தும் கடைகள் மற்றும் இந்தி அறிவிப்பு பலகைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்.


மொழி தொடர்பான மோதலைக் கண்டு, ஜவஹர்லால் நேரு 1963-ம் ஆண்டில் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தை இயற்றினார். இது, 1965-ஆம் ஆண்டு முதல், அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் இந்தியுடன் ஆங்கிலத்தையும் பயன்படுத்தலாம் என்று சட்டம் கூறியது. 1965ஆம் ஆண்டு நெருங்கி வரும்போது, ​​இந்தி பயன்பாட்டிற்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்தன. 


பிப்ரவரி 11, 1965 அன்று, தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். போராட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தி பேசாதவர்களுக்கு நேரு அளித்த வாக்குறுதியை தனது அரசாங்கம் மதிக்கும் என்று லால் பகதூர் சாஸ்திரி உறுதியளித்தார். 1967-ம் ஆண்டில், அலுவல் மொழிகள் சட்டம் (Official Languages Act) திருத்தப்பட்டது.


1964-ம் ஆண்டு, தௌலத் சிங் கோத்தாரி (Daulat Singh Kothari) தலைமையில் தேசிய கல்வி ஆணையம் (National Education Commission) அமைக்கப்பட்டது. அது மும்மொழிக் கொள்கையைப் (three-language formula) பரிந்துரைத்தது. 1968-ம் ஆண்டு, ஆணையத்தின் சில பரிந்துரைகளை செயல்படுத்த நாடாளுமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றியது. இந்தப் பரிந்துரைகள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றாலும், அவை பிற்கால கல்வி மற்றும் மொழிக் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின.


கடந்த 2014-ம் ஆண்டு முதல் பாஜக அரசு அதிகாரத்தை அதீதமாக மையப்படுத்தியதன் மூலம் மாநிலங்களை வலுவிழக்கச் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்துக் குழுக்கள் தங்கள் இந்து அடையாளத்தின் மாறுபாட்டை நாட்டின் பல்வேறு இந்து மக்கள் மீது திணிக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பலர், இந்தியைத் தழுவுவதற்கான மோடி அரசாங்கத்தின் முயற்சியை வரவேற்கவில்லை. 


உதாரணமாக, மார்ச் 2017-ல், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்கள் திடீரென ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மாறியது. அப்போது, அவரது கட்சியின் அப்போதைய செயல் தலைவர் ஸ்டாலின், “இது தமிழகத்தில் பின்கதவு வழியாக இந்தி மேலாதிக்கத்தை கொண்டு வருகிறது” என்றார். மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை மக்கள் மீது திணிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.


மொழி தொடர்பான மோதல், என்பது ஒருவரின் அடையாளத்தைப் பாதுகாக்க, மாற்ற மற்றும் வரையறுக்க ஒரு முக்கிய போராட்டமாகும். இந்தி, இந்து மதம் மற்றும் இந்துஸ்தானைப் பின்பற்றுபவர்கள் பலர், பாஜக ஆதரவாளர்கள் மற்றும் இந்தி தேசியவாதிகளுடன் சேர்ந்து, இந்தி தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். இருப்பினும், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த பல இந்துக்கள் தங்கள் தாய்மொழியில் பெருமை கொள்கிறார்கள்.


 உதாரணமாக, 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை மீறி BJP-ஐ தோற்கடித்தது. வங்காள கலாச்சாரம், அடையாளம் மற்றும் மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்ற அவரது செய்தி அவரது ஆதரவாளர்களிடையே எதிரொலித்தது. இதற்கிடையில், BJP தலைவர்கள் இந்தியில் பேசும் பேச்சுக்கள் TMC-யால் அவர்களை "வெளியாட்களாக" மாற்றுவதாகக் கருதப்பட்டன. தமிழ்நாட்டில், மொழிப் பிரச்சினையில் திராவிடக் கட்சிகளும் அதே கருத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. அவர்களுக்கு, இந்தி வட இந்திய ஆதிக்கத்தையும் பிராமணிய மதிப்புகளையும் குறிக்கிறது.


அரசியலுக்கு அப்பால், ஒவ்வொரு மொழியும் பேசாதவர்களிடையே ஒரு இடத்தை உருவாக்கி, அதைக் கற்றுக்கொள்ள மக்களை ஊக்குவிக்க முடியும். மொழிகள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்வதன் மூலம் வளர்ந்து மேம்படும். 



பிப்ரவரி 21 அன்று, 98-வது மராத்தி சாகித்ய சம்மேளனத்தில் (Marathi Sahitya Sammelan) பேசும்போது, ​​“எல்லா மொழிகளையும் அரவணைத்து வளப்படுத்துங்கள்” (embrace and enrich all languages) என்ற மோடியின் அழைப்பு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். முதிர்ந்த பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில், மொழியியல் பன்முகத்தன்மை மதிக்கப்பட வேண்டும். அது மோதலுக்கு வழிவகுக்கக்கூடாது.


எழுத்தாளர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுக் கழகத்தில் ஒரு ஆய்வாளராக உள்ளார்.




Original article:

Share:

தகவல் அறியும் உரிமை இப்போது தகவல் மறுக்கும் உரிமையாக உள்ளது -சைலேஷ் காந்தி

 குடிமக்களும் ஊடகங்களும் உண்மையான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். சட்டம் சரியாகப் பின்பற்றப்படுவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். அதன் நோக்கத்தை பலவீனப்படுத்தும் எந்த மாற்றங்களையும் அவர்கள் அனுமதிக்கக்கூடாது.


தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to Information (RTI)) குடிமக்களுக்கு நம்பிக்கையை அளித்தது. அது அவர்களை நாட்டின் உண்மையான ஆட்சியாளர்களாக அங்கீகரித்தது. இந்தச் சட்டம் அவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து கண்ணியத்துடனும் மரியாதையுடனும் தகவல்களைக் கேட்கும் அதிகாரத்தை வழங்கியது. குடிமக்கள் தவறவிட்ட “சுயராஜ்யத்தை” (swaraj) இறுதியாகப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையை தகவல் அறியும் உரிமைச் சட்டம் அளித்தது. இது அவர்களின் தகவல் அறியும் அடிப்படை உரிமையை சட்டமாக மாற்றியது. இது உலகின் சிறந்த வெளிப்படைத்தன்மை சட்டங்களில் ஒன்றாக மாறியது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊழலையும் அரசாங்க அதிகார துஷ்பிரயோகத்தையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குடிமக்கள் தங்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பாளர்களாக இருந்தனர்.  இருப்பினும், இந்தச் சட்டம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஜனநாயகத்தை மேம்படுத்தவில்லை.


தகவல் அறியும் உரிமைச் சட்டம் அதிகாரிகளிடமிருந்து குடிமக்களுக்கு அதிகாரத்தை மாற்றியதை அரசாங்கம் விரைவில் உணர்ந்தது. ஒரு வருடத்திற்குள், அதை பலவீனப்படுத்த சட்டத்தை மாற்ற முயன்றது. ஆனால், நாடு முழுவதும் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தேசத்தின் மனநிலையை உணர்ந்து, அரசாங்கம் திருத்தங்கள் மேற்கொள்வதை கைவிட்டது.




மெதுவாக பலவீனமடைதல்


சட்டத்தை அமல்படுத்துவதற்கான இறுதி அதிகாரமாக செயல்பட தகவல் ஆணையங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to Information (RTI)) சட்டம் உருவாக்கியது. இந்த ஆணையங்கள் மேல்முறையீடுகளைக் கையாள்வதற்கும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் பொறுப்பாக இருந்தன. பெரும்பாலான “தகவல் ஆணையர்” (information commissioner) பதவிகள் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த அதிகாரிகள் பல ஆண்டுகளாக மூத்த அதிகாரிகளாகப் பணியாற்றிய பிறகு, குடிமக்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதும், அவர்கள் அரசாங்கத்தின் உண்மையான உரிமையாளர்கள் என்பதை அங்கீகரிப்பதும் அவர்களுக்கு கடினமாக இருந்தது.


 உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆண்டுக்கு சராசரியாக 2,500 வழக்குகளைக் கையாளுகிறார்கள். இருப்பினும், தகவல் ஆணையர்கள் இதைவிடக் குறைவான வழக்குகளைக் கையாளுகிறார்கள். தகவல் ஆணையங்களுக்கு முன் உள்ள வழக்குகள் உயர் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளைவிட மிகவும் எளிமையானவை. ஒவ்வொரு ஆணையரும் ஆண்டுக்கு குறைந்தது 5,000 வழக்குகளை தீர்த்து வைத்திருக்க வேண்டும். தகவல் உரிமைச் சட்டம் தகவல்களை வழங்குவதற்கு 30 நாள் வரம்பை நிர்ணயிக்கிறது. தகவல் ஆணையங்களில் ஒரு வருடத்திற்கும் மேலாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தத் தாமதம் தகவல் அறியும் உரிமையை காலாவதியான தகவல்களுக்கான உரிமையாக மாற்றியது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதைச் செயல்படுத்த அபராத விதிகள் இருந்தன. ஆனால், பெரும்பாலான ஆணையர்கள் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தனர். புதிய ஆணையர்களை நியமிப்பதையும் அரசாங்கம் தாமதப்படுத்தியது. இதனால், நிலுவையில் உள்ள பணிகள் மேலும் மோசமடைந்தன.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள விலக்குகள் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையின் மீதான வரம்புகள் என்று உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவுபடுத்தின. இந்த விலக்குகள் சட்டத்தில் எழுதப்பட்டுள்ளபடி கண்டிப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும். பெரும்பாலான தகவல்களை வழங்குவதற்காக நாடாளுமன்றம் சட்டத்தை வடிவமைத்து விதிவிலக்குகளை கவனமாக உருவாக்கியது.


ஆகஸ்ட் 2011-ல், உச்சநீதிமன்றம் தகவல் அறியும் உரிமையை விளக்கும் விதத்தை மாற்றியது. ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் & வழக்கறிஞர் VS ஆதித்யா பந்தோபாத்யாய் & மற்றவர்கள் வழக்கில், தனது தீர்ப்பின் 33-வது பத்தியில் உச்ச நீதிமன்றம், சில உயர் நீதிமன்றங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8-ஐ எவ்வாறு விளக்கியுள்ளன என்பதைக் குறிப்பிட்டது. சில உயர் நீதிமன்றங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8, பிரிவு 3-க்கு விதிவிலக்கு என்று தீர்ப்பளித்தன. பிரிவு 3 குடிமக்களுக்கு தகவல் அறியும் உரிமையை வழங்குகிறது. இந்த உரிமை பேச்சு சுதந்திரத்திலிருந்து வருகிறது. பிரிவு 8 கடுமையான, நேரடியான வழியில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றங்கள் கூறின. இருப்பினும், இந்த அணுகுமுறை சரியாக இருக்காது என்று உச்சநீதிமன்றம் கூறியது.


பத்தி 37-ல், உச்சநீதிமன்றம் ஆதாரங்களை வழங்காமல் ஒரு கருத்தை வெளியிட்டது. பாகுபாடற்ற மற்றும் நடைமுறைக்கு மாறான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்படும் கோரிக்கைகள் தீங்கு விளைவிக்கும் என்று நீதிமன்றம் கூறியது. நீதிமன்றத்தின் கூற்றுப்படி, தேவையற்ற தகவல்களைக் கேட்பது, வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை அல்லது ஊழலை எதிர்த்துப் போராடுவதுடன் தொடர்பில்லாததாக இருந்தால் அது நிர்வாகத் திறனைக் குறைக்கும். அதிகாரிகள் முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக அத்தகைய தகவல்களைச் சேகரித்து அதற்கு தகவல் அளிப்பது நேரத்தை வீணாக்கலாம். 


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யவோ கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது. இது தேசிய வளர்ச்சி அல்லது ஒற்றுமையைத் தடுக்கும் ஒரு கருவியாக மாறக்கூடாது என்றும் எச்சரித்தது. குடிமக்களிடையே அமைதி, நல்லிணக்கம் அல்லது நிலைத்தன்மையைக் குலைக்க இதைப் பயன்படுத்தக்கூடாது. தங்கள் கடமையைச் செய்யும் நேர்மையான அதிகாரிகளைத் துன்புறுத்தவோ அல்லது அச்சுறுத்தவோ சட்டத்தை ஒரு ஆயுதமாக மாற்றக்கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.



இந்தக் கூற்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எதிர்மறையான செயலாகக் காண வழிவகுத்தது. தகவல் அறியும் உரிமைச் சட்ட பயனர்கள் பிரச்சனையை ஏற்படுத்துபவர்கள் என்ற கருத்தை அது உருவாக்கியது. தகவல்களை மறுப்பதையும், தகவல் அறியும் உரிமைச் சட்ட பயனர்கள் மீதான தாக்குதல்களையும் இது நியாயப்படுத்தியது.


“தனிப்பட்ட தகவல்”  என்ற தலைப்பு


இரண்டாவது, பெரிய பின்னடைவு அக்டோபர் 2012-ல் கிரிஷ் ராம்சந்திர தேஷ்பாண்டே VS ஒன்றிய தகவல் ஆணையர் & மற்றவர்கள் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டது.


ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பதாரர், கிரிஷ் ராமச்சந்திர தேஷ்பாண்டே என்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பதாரர், ஏ.பி. லூட் என்ற பொது ஊழியர் பற்றிய தகவல்களைக் கோரினார். அவர் அனைத்து குறிப்பாணைகள் (memos), காரணம் காட்டும் அறிவிப்புகள் மற்றும் லூட்டுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு தணிக்கை அல்லது தண்டனைகளின் நகல்களையும் கேட்டார். லூட்டின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களையும் அவர் கோரினார். கூடுதலாக, லூட்டின் முதலீடுகள், கடன்கள் மற்றும் வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுடனான நிதி பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் அவர் கோரினார்.


சில தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கும் பிரிவு 8(1)(j)-ன் கீழ் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தகவல் பொது நடவடிக்கை அல்லது பொது நலனுடன் தொடர்புடையதாக இல்லாவிட்டால் இது பொருந்தும். அதைப் பகிர்வது ஒரு நபரின் தனியுரிமையை பாதிக்கும் பட்சத்திலும் இந்த செயல்முறை பொருந்தும். இருப்பினும், ஒரு விதிவிலக்கு உள்ளது. தகவலை வெளியிடுவது பொது நலனுக்கு உதவும் என்று ஒன்றிய பொது தகவல் அதிகாரி (Central Public Information Officer) நம்பினால், அந்த தகவலைப் பகிரலாம். மேலும், நாடாளுமன்றத்திற்கோ அல்லது மாநில சட்டமன்றத்திற்கோ மறுக்க முடியாத தகவல், எந்தவொரு தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது.


இந்தப் பிரிவை எளிமையாகப் படித்தால், “தனிப்பட்ட தகவல்” பொதுச் செயல்பாடு அல்லது நலனுடன் எந்தத் தொடர்பும் இல்லாவிட்டால் அல்லது அதை வெளிப்படுத்துவது ஒரு நபரின் தனியுரிமையை எந்த விதமான காரணமும் இல்லாமல் பாதிப்பதாக கருதினால் தகவல் அளிப்பதை மறுக்க முடியும்.


இருப்பினும், கோரப்பட்ட தகவல் ஒரு பொது நடவடிக்கையிலிருந்து வந்ததா அல்லது அதைப் பகிர்வது ஒரு நபரின் தனியுரிமையை பாதிக்குமா என்பதை நீதிமன்றம் ஆராயவில்லை. அதற்கு பதிலாக, சட்ட விதியின் முதல் 7 வார்த்தைகளில் மட்டுமே கவனம் செலுத்தி அதை “தனிப்பட்ட தகவல்” என்று அழைப்பதன் மூலம் தகவலை மறுத்தது. பெரும்பாலான தகவல்கள் ஒரு வகையில் ஒரு நபருடன் தொடர்புடையது. பொதுத் தகவல் அதிகாரிகள் மற்றும் மேல்முறையீட்டு அதிகாரிகள் தனியுரிமையாகக் கருதப்படுவதைத் தீர்மானிக்க உதவுவதற்காக, நாடாளுமன்றம் ஒரு எளிய நடைமுறையை சேர்த்தது: நாடாளுமன்றத்திற்கோ அல்லது மாநில சட்டமன்றத்திற்கோ தகவலை மறுக்க முடியாவிட்டால், அது எந்தவொரு தனிநபருக்கும் மறுக்கப்படக்கூடாது  என்று சுட்டிக்காட்டுகிறது.


ஒரு சட்டம் நியாயமற்ற விளைவை உருவாக்காவிட்டால், அது எழுதப்பட்டபடியே சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். நசிருதீன் மற்றும் பிறர் VS சீதா ராம் அகர்வால் (2003) 2 SCC 577 வழக்கில், நீதிபதிகள் சட்டங்களை மீண்டும் எழுத முடியாது என்றும், ஒரு சட்டத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இருப்பதாகக் கருத வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


கிரிஷ் ராம்சந்திர தேஷ்பாண்டே வழக்கின் தீர்ப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை திறம்பட மாற்றியது. இது ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்ற தீர்ப்புகளில் ஒரு முன்னுதாரணமாகப் பயன்படுத்தப்பட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை மறுப்பதற்கான தரநிலையாக மாறியுள்ளது. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (Digital Personal Data Protection Act) அதே அணுகுமுறையைப் பின்பற்றுகிறது மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் திருத்துகிறது. பிற வழக்குகளும் சட்டங்களில் உள்ள சொற்களை தவறாகப் புரிந்துகொண்டு, அவற்றின் உண்மையான நோக்கம் கொண்ட அர்த்தத்தை மாற்றியுள்ளன.



குடிமக்களுக்கு ஒரு அழைப்பு


தகவல் அறியும் உரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டதன் உண்மையான நோக்கத்தை நிலையாக வைத்திருக்க, எந்த மாற்றங்களும் இல்லாமல் சட்டத்தைப் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். குடிமக்களும் ஊடகங்களும் அதைப் பற்றி விவாதித்துப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a)-ன் கீழ் தகவல் அறியும் நமது அடிப்படை உரிமை பலவீனமடைந்துவிடும்.


ஷைலேஷ் காந்தி முன்னாள் மத்திய தகவல் ஆணையர் ஆவார்.




Original article:

Share: