'வைர முக்கோணத்திற்கு' ரத்னகிரி எப்படி முக்கியமானது? - குஷ்பு குமாரி

 இரத்னகிரியில் 60 வருட இடைவெளிக்குப் பிறகு, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணியானது, ஒரு குறிப்பிடத்தக்க பௌத்த தலமாக கவனத்தை ஈர்த்துள்ளது.


இரத்னகிரியில் உள்ள 5-13ஆம் நூற்றாண்டு புத்த வளாகத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிப் பணியின்போது ஒரு பிரம்மாண்டமான புத்தரின் தலை, ஒரு பிரம்மாண்டமான பனை மரம், ஒரு பழங்கால சுவர் மற்றும் பொறிக்கப்பட்ட புத்த நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, இவை அனைத்தும் கி.பி 8 மற்றும் 9ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தையவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


முதல் அகழ்வாராய்ச்சிகள் 1958 மற்றும் 1961-க்கு இடையில் நடந்தன. அவை தொல்பொருள் ஆராய்ச்சியாளரான டெபாலா மித்ராவால் (Debala Mitra)  வழிநடத்தப்பட்டன. பின்னர் அவர் 1981 முதல் 1983 வரை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் (Archaeological Survey of India (ASI)) முதல் பெண் இயக்குநர் ஜெனரலாக இருந்தார். 1961-க்குப் பிறகு, இந்த இடத்தில் அகழ்வராய்ச்சி தொடர்பாக எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. இருப்பினும், வேறு சில கட்டமைப்புகள் மற்றும் சிற்பங்கள் ஓரளவு தெரிந்தன. அதற்குப் பதிலாக, ASI ஆனது ஒடிசாவில் உள்ள பிற பௌத்த தளங்கள் மீது தனது கவனத்தைத் திருப்பியது.


முக்கிய அம்சங்கள் :


1. ரத்னகிரி என்றால் "நகைகளின் மலை" (Hill of Jewels) என்று பொருள்படும். இது புவனேஸ்வரிலிருந்து 100 கி.மீ வடகிழக்கில் அமைந்துள்ளது. இந்த இடம் பிருபா மற்றும் பிராமணி நதிகளுக்கு இடையில் ஒரு மலையில் அமைந்துள்ளது. இது ஒடிசாவின் மிகவும் பிரபலமான பௌத்த தளம் மற்றும் அதிகளவில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட ஒன்றாகும்.


2. இரத்னகிரி ஒடிசாவில் சிறந்த அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பௌத்த தளங்களில் ஒன்றாகும். இது உதயகிரி (Udaygiri) மற்றும் லலித்கிரியுடன் (Lalitgiri) சேர்ந்து பிரபலமான வைர முக்கோணத்தின் (Diamond Triangle) ஒரு பகுதியாகும். இந்த மூன்று பௌத்த பாரம்பரிய தளங்களும் தென்கிழக்கு ஒடிசாவின் ஜஜ்பூர் (Jajpur) மற்றும் கட்டாக் மாவட்டங்களில் (Cuttack districts) ஒன்றுக்கொன்று நெருக்கமாக அமைந்துள்ளன.


3. ஒடிசா சுற்றுலாத் தளத்தின்படி, உள்ளூர்வாசிகள் லலித்கிரியை (Lalitgiri) நால்டிகிரி (Naltigiri) என்றும் அழைக்கின்றனர். மேலும், இது ஒடிசாவின் புத்த வைர முக்கோணத்தில் (Buddhist diamond triangle) மிகப் பழமையான ஒன்றாகும். இந்த இடத்திலிருந்து கிடைத்த முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று, கோண்டலைட், ஸ்டீடைட், வெள்ளி மற்றும் தங்கத்தால் ஆன நான்கு கொள்கலன்களைக் கொண்ட நினைவுச்சின்ன கலசம் (relic casket) ஆகும். இந்த நினைவுச்சின்னங்கள் புத்தருக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது.


4. உதயகிரி தளமானது மற்ற மூன்று தளங்களில் மிகப்பெரியது ஆகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் இரண்டு மலைத்தொடர்களின் அடிவாரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த இடம் பெரும்பாலும் புவனேஸ்வரில் உள்ள உதயகிரி குகை மற்றும் கந்தகிரி குகைகளாக தவறாகக் கருதப்படுகிறது. ஒடிசா சுற்றுலா தளத்தின்படி, உதயகிரி பற்றிய ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், இரத்னகிரி மற்றும் லலித்கிரியைப் போலல்லாமல், இங்கு எந்த சிற்பங்களோ அல்லது வேதங்களோ காணப்படவில்லை. இந்த சிற்பங்களும் வேதங்களும் பொதுவாக வஜ்ராயண தாந்த்ரீக வழிபாட்டுத் தலங்களுடன் (Vajrayana tantric cult) இணைக்கப்பட்டுள்ளன.


5. இரத்னகிரி தளம் வஜ்ராயன (அல்லது தந்திரயான) புத்த மதப் பள்ளியின் ஒரு முக்கியமான ஆரம்பகால மையமாக நம்பப்படுகிறது. "இடிமின்னல் வாகனம்" (Thunderbolt Vehicle) என்றும் அழைக்கப்படும் வஜ்ராயன பௌத்தம், மாய நடைமுறைகள் மற்றும் கருத்துக்களை உள்ளடக்கியது. இந்த புத்தமத வடிவம் இறுதியில் இமயமலைப் பகுதியிலும் அதற்கு அப்பாலும் பரவியது.


6. இரத்னகிரி மடாலயம் இந்தியாவில் வளைந்த கூரையைக் கொண்ட ஒரே புத்த மடாலயமாகும். ஒரு காலத்தில் இது சுமார் 500 துறவிகளை தங்க வைத்திருந்ததாக வரலாற்று சான்றுகள் காட்டுகின்றன. இந்த துறவிகள் தந்திரயான புத்த வடிவத்தைப் (Tantrayana form of Buddhism) பின்பற்றினர்.

தளத்திலிருந்து கண்டுபிடிப்புகள்


1. புதுப்பிக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் பிரம்மாண்டமான புத்தர் தலைகளை தளத்தின் கலாச்சார சூழலில் வைக்க உதவும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவன (ASI) அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தளத்தின் செராமிக் சேகரிப்பு பற்றிய சிறந்த புரிதலைப் பெறவும் அவர்கள் நம்புகிறார்கள்.


செராமிக் தொகுப்பு (Ceramic assemblage)

இது ஒரு தொல்பொருள் தளத்தில் காணப்படும் மட்பாண்டங்கள் மற்றும் மட்பாண்ட கலைப்பொருட்களின் தொகுப்பாகும். இந்த மட்பாண்டங்கள் மனித நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அவை, பண்டைய காலங்களில் கலாச்சார நடைமுறைகள், பொருளாதார பரிமாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் காட்ட முடியும்.


3. தாமஸ் டொனால்ட்சனின் கூற்றுப்படி, ரத்னகிரி ஒரு கற்றல் மையத்தைப் (learning center) போலவே நாளந்தாவும் முக்கியமானது. இதில், சில திபெத்திய நூல்களும் அங்கு காணப்பட்டன. புத்த மதத்தின் மகாயான (Mahayana) மற்றும் தந்திரயான (Tantrayana) பிரிவுகள் தொடங்கிய இடமும் இதுவாகும். வஜ்ராயானம் (Vajrayana) என்றும் அழைக்கப்படும் தந்திரயானம், மாய நடைமுறைகள் (mystical practices) மற்றும் கருத்துக்களை (concepts) உள்ளடக்கியது.


4. சுனில் பட்நாயக் போன்ற அறிஞர்கள் சமீபத்திய கண்டுபிடிப்புகள் முக்கியமானவை என்று நம்புகிறார்கள். ஒடிசா ஒரு காலத்தில் பௌத்த கற்றலுக்கான முக்கிய மையமாக இருந்தது என்பதை அவர்கள் காட்டுகிறார்கள். ஒடிசாவில் 100க்கும் மேற்பட்ட பழங்கால பௌத்த தளங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


5. சில ஆய்வுகள், பிரபல சீன புத்த துறவி மற்றும் பயணி ஹியூன் சாங் இரத்னகிரிக்கு பயணம் செய்திருக்கலாம் என்று கூறுகின்றன. அவர் கி.பி 638-639 காலத்தில் ஒடிசாவிற்கு பயணம் செய்தார். இந்த இடத்தில் புதிய அகழ்வாராய்ச்சிகள் வெவ்வேறு காலங்களில் வாழ்க்கை முறை, கலாச்சாரம், மதம், கலை மற்றும் கட்டிடக்கலை பற்றிய விவரங்களை வெளிப்படுத்தும். 5-ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த ஏதேனும் பழங்கால நினைவுச்சின்னங்கள் அந்த இடத்தில் இருந்ததா என்பதையும் அவை காட்டக்கூடும் என்று ஒரு அதிகாரி கூறுகிறார்.


ஒடிசா - ஒரு முக்கியமான பௌத்த மையம்


1. ஒடிசாவில், பௌமகார வம்சத்தின் (Bhaumakara dynasty) கீழ் பௌத்தம் செழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வம்சம் 8 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மாநிலத்தின் சில பகுதிகளை ஆட்சி செய்தது.


2. ஒடிசா நீண்ட காலமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் கடல் மற்றும் வர்த்தக தொடர்புகளைக் கொண்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவுடனான பிரபலமான வர்த்தகப் பொருட்களில் மிளகு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், பட்டு, கற்பூரம், தங்கம் மற்றும் நகைகள் ஆகியவை அடங்கும்.


3. இந்த மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் பலியாத்ராவை (Baliyatra) நடத்துகிறது. அதாவது, 'பாலிக்கு பயணமான' (voyage to Bali), ஏழு நாள் திருவிழாவாக கொண்டாடுகிறது. கலிங்கத்திற்கும், பாலிக்கும் இடையிலான 2,000 ஆண்டுகள் பழமையான கடல்சார் மற்றும் கலாச்சார உறவுகளை இந்த விழா கொண்டாடுகிறது. இது பிற தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களுடனான தொடர்புகளையும் மதிக்கிறது. இதில் ஜாவா, சுமத்ரா, போர்னியோ, பர்மா (மியான்மர்) மற்றும் சிலோன் (இலங்கை) ஆகியவை அடங்கும்.


4. புத்தர் தனது வாழ்நாளில் ஒடிசாவிற்கு பயணம் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், பௌத்தத்தைப் பரப்புவதில் கலிங்கம் முக்கியப் பங்கு வகித்தது. தபசு (Tapassu) மற்றும் பல்லிகா (Bhallika) ஆகியோர் புத்தரின் முதல் சீடர்கள் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த இரண்டு வணிக சகோதரர்களும் (merchant brothers) ஒடிசாவின் பண்டைய பெயரான உத்கலாவிலிருந்து வந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.


5. அசோகர் கிமு 268 முதல் 232 வரை மகதத்தின் மௌரியப் பேரரசராக இருந்தார். கிமு 261-ல் கலிங்கத்தை அவர் படையெடுத்ததாக நம்பப்படுகிறது. இந்தப் போர் பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தியது. அது அவரை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இதன் விளைவாக, அவர் பௌத்தத்திற்குத் திரும்பி அகிம்சை பாதையை ஏற்றுக்கொண்டார். அவர் தனது பேரரசுக்குள் மட்டுமல்ல, இலங்கை, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் பௌத்தத்தைப் பரப்பினார்.


வஜ்ராயன பௌத்தம் (Vajrayana Buddhism)

1. வஜ்ராயன பௌத்தம் கி.பி 6-7ஆம் நூற்றாண்டில் மகாயான பௌத்தத்திலிருந்து (Mahayana Buddhism) உருவானது. இது முக்கியமாக வங்காளம், பீகார் மற்றும் திபெத்தில் செழித்து வளர்ந்தது மற்றும் இது இந்தப் பகுதிகளில் நிலைத்திருக்கிறது.


2. வஜ்ராயன பௌத்தத்தில் (Vajrayana Buddhism), இடி அல்லது வைரம் என்று பொருள்படும் வஜ்ர (Vajra) எனப்படும் மந்திர சக்திகளைப் பெறுவதன் மூலம் மோட்சத்தைச் (salvation) சிறப்பாக அடைய முடியும் என்று நம்பப்படுகிறது. இந்தப் பிரிவைப் பின்பற்றுபவர்கள் வஜ்ராயன பௌத்தம் பெண் தெய்வங்களை மையமாகக் கொண்டது என்று நம்பினர். இந்தத் தெய்வங்கள் ஆண் தெய்வங்களுக்குப் பின்னால் உள்ள சக்தி அல்லது ஆற்றலை (சக்தி) பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இந்தப் பிரிவில் புத்தர்கள் அல்லது போதிசத்துவர்களின் பெண் 'துணைவர்கள்' தங்கள் பின்பற்றுபவர்களுக்கு இரட்சகர்களாக-saviouresses (தாராக்கள்) கருதப்பட்டனர்.


3. தாந்த்ரீக பௌத்தம் (Tantric Buddhism) பல வழிமுறைகளைக் கொண்டுள்ளது. மிகவும் பிரபலமான ஒன்று "ஓம் மணி பத்மே ஹம்" (Om mani padme hum) ஆகும். இந்த வழிமுறைகள் வழிபாட்டாளருக்கு மந்திர சக்தியைக் கொடுப்பதாக நம்பப்பட்டது. அவை, உயர்ந்த பேரின்பத்தையும் தருவதாகக் கருதப்பட்டது. இந்த சொற்றொடர் "ஆ! ரத்தினம் உண்மையில் தாமரையில் உள்ளது" (Ah! The jewel is indeed in the lotus) என்று பொருள்படும் என்று வரலாற்றாசிரியர் ஏ.எல். பாஷாம் விளக்குகிறார்.




Original article:

Share:

தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (NRIDA) என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


1. செலவினத் துறை (Department of Expenditure (DoE)) தேசிய கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (National Rural Infrastructure Development Agency (NRIDA)) மற்றும் தேசிய கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் (National Rural Livelihoods Promotion Society (NRLPS)) ஆகியவற்றை மார்ச் மாத இறுதிக்குள் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்துடன் (Ministry of Rural Development (MoRD)) இணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த இரண்டு தன்னாட்சி அமைப்புகளுக்கும் மேலும் நிதியை விடுவிப்பது "கடினமாக இருக்கலாம்" என்று செலவினத் துறை (DoE) கூறியது.


2. அதே நேரத்தில், ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு முக்கியமாக சிந்தனைக் குழுவாகச் (think tank) செயல்படும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் (MoRD) தேசிய கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தின் (National Institute of Rural Development & Panchayati Raj (NIRD&PR)) பட்ஜெட்டை 2025-26 நிதியாண்டிற்கான 1 லட்ச ரூபாயாகக் குறைத்துள்ளது. இது 2024-25 நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் ரூ.73.68 கோடியாகவும், 2023-24ல் ரூ.75.69 கோடியாகவும் இருந்தது.


உங்களுக்குத் தெரியுமா? :


1. தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (NRIDA) : தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (National Rural Infrastructure Development Agency (NRIDA)), பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனாவுக்கு (Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)) தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது. இது ஒரு சிறப்பு நோக்க வாகனம் (special purpose vehicle) ஆகும். இந்த வாகனம் நபார்டு (NABARD) வங்கியிலிருந்து மாநிலங்களுக்கு நிதி உதவியை விநியோகிக்க உதவுகிறது. 


கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (MoRD) நிர்ணயித்த இலக்குகளில் நிதி இடைவெளிகளைக் குறைப்பதே இதன் குறிக்கோள் ஆகும். 2022-23 நிதியாண்டில், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (MoRD) தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்திற்கு (NRIDA) ரூ.2,765 கோடியை ஒதுக்கியது. இது கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் "நபார்டு கடனுக்கான வட்டி செலுத்துதலுக்கான" மானியமாக வழங்கப்பட்டது. "சம்பளம் மற்றும் பொது" செலவுகளுக்காக மானியமாக ரூ.47 கோடியையும் MoRD ஒதுக்கியது.


2. தேசிய ஊரக வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் (NRLPS) : தீனதயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தை (Deendayal Antyodaya Yojana (DAY) - (National Rural Livelihoods Mission(NRLM)) ஆதரிப்பதற்காக தேசிய கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் (National Rural Livelihoods Promotion Society (NRLPS)) நிறுவப்பட்டது. 

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (MoRD) NRLPS-க்கு ரூ.60.71 கோடி தொடர்ச்சியான மானியத்தை வழங்கியது. இந்த நிதி 2017-18 முதல் 2021-22 வரை ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்டது.


3. தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் (NIRD&PR) : தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் (National Institute of Rural Development & Panchayati Raj (NIRD&PR)) கடுமையான பட்ஜெட் குறைப்பை எதிர்கொள்கிறது. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் (MoRD) கூற்றுப்படி, இது "கிராமப்புற வளர்ச்சியில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான உச்ச நிறுவனம்" ஆகும். 


NIRD&PR பயிற்சி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் கொள்கை வக்காலத்து ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இது கிராமப்புற மேம்பாட்டு மேலாண்மையில் டிப்ளமோ மற்றும் பழங்குடி மேம்பாட்டு மேலாண்மை (Diploma in Rural Development Management) போன்ற கல்வித் திட்டங்களையும் நடத்துகிறது. கூடுதலாக, இது MoRDக்கான ஒரு சிந்தனைக் குழுவாகவும் (think tank) செயல்படுகிறது.


4. நான்காவது தன்னாட்சி அமைப்பான பாரத் கிராமப்புற வாழ்வாதார அறக்கட்டளை (Bharat Rural Livelihoods Foundation (BRLF)), 2013-14 நிதியாண்டில் உருவாக்கப்பட்டது. இது இடர்பாடுகளால் பாதிக்கப்படவில்லை. BRLF ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. 


இதன் கவனம் கிராமப்புற ஏழைகள் மீது, முக்கியமாக பழங்குடிப் பகுதிகளில் உள்ளது. இந்த பகுதிகளில் ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகியவை அடங்கும்.




Original article:

Share:

‘டெல்லியில் வாகன காற்று மாசுபாட்டைத் தடுத்தல் மற்றும் குறைத்தல், 2021’ என்ற சமீபத்திய CAG அறிக்கை எதைக் குறிப்பிடுகிறது? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


1. "டெல்லியில் வாகன காற்று மாசுபாட்டைத் தடுத்தல் மற்றும் குறைத்தல், 2021" (Prevention and Mitigation of Vehicular Air Pollution in Delhi) என்ற அறிக்கை, நடந்து வரும் கூட்டத்தொடரின் போது டெல்லி சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். பாஜக தனது ஆட்சிக் காலத்தில் ஆம் ஆத்மி கட்சி "அடக்கிவிட்டதாக" (suppressing) குற்றம் சாட்டிய 14 தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) அறிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.


2. டெல்லி மாசு கட்டுப்பாட்டுக் குழுவின் (Delhi Pollution Control Committee) கீழ் உள்ள 13 தொடர்ச்சியான சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையங்களின் (Continuous Ambient Air Quality Monitoring Stations (CAAQMS)) செப்டம்பர் 2020 தணிக்கையை CAG அறிக்கை குறிப்பிடுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனைத்து நிலையங்களும் "பல பக்கங்களில் உள்ள மரங்களுக்கு" (trees on multiple sides) அருகில் அமைந்திருப்பது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது, இது மத்திய விதிமுறைகளை மீறுகிறது.


3. அறிக்கையை நன்கு அறிந்த வட்டாரங்கள், "மத்திய மாசு கட்டுப்பாட்டுக் குழுவின் வழிகாட்டுதல்கள் மரங்கள் துகள்களின் மூலங்களாகவும் இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றன. இதில் கழிவு நீர்கள் (detritus), மகரந்தம் (pollen) அல்லது பூச்சி பாகங்கள் (insect parts) அடங்கும்" என்று கூறியுள்ளன.


4. அக்டோபர் 2021-ம் ஆண்டில் சுற்றுச்சூழல் துறை அளித்த பதிலில், விதிமுறைகளுக்கு இணங்க தேவையான நடவடிக்கை எடுப்பதாகக் கூறியது. தணிக்கை அறிக்கை மாசு கட்டுப்பாட்டுக்குள் உள்ள சான்றிதழ் (Pollution Under Control Certificate(PUCC)) வழங்குவதில் உள்ள சிக்கல்களையும் எடுத்துக்காட்டுகிறது. இந்தச் சான்றிதழ்கள் ஒரு வாகனம் சாலைகளில் ஓடுவதற்குத் தகுதியானதா என்பதைத் தீர்மானிக்கின்றன.


5. பார்க்கிங் கட்டணங்கள் (parking charges) எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் அறிக்கை ஆராய்கிறது. போதுமான பார்க்கிங் இடங்கள் இருப்பது சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்கிறது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவுகிறது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதிலும் இது ஒரு முக்கியமான படியாகும்.





உங்களுக்குத் தெரியுமா? :


1. அரசியலமைப்பின் பகுதி 5-ல் உள்ள பிரிவுகள் 148 முதல் 151 வரை தணிக்கைத் தலைவரின் நியமனம், கடமைகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை உள்ளடக்கியது. இதில், குடியரசுத் தலைவர் தணிக்கைத் தலைவரை (auditor general) நியமிக்கிறார்.


2. தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (Comptroller and Auditor General’s (CAG)) சேவை நிபந்தனைகள் “CAG (கடமைகள், அதிகாரங்கள் மற்றும் சேவை நிபந்தனைகள்) சட்டம், 1971” (CAG (Duties, Powers and Conditions of Service) Act) ஆல் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டம் CAG அலுவலகத்தின் கடமைகள் மற்றும் அதிகாரங்களையும் கோடிட்டுக் காட்டுகிறது. இந்தச் சட்டத்துடன் கூடுதலாக, பல சட்டங்களும் CAG-க்கு அதிகாரங்களை வழங்குகின்றன.


3. அரசியலமைப்புப் பிரிவு 151 ஆனது, CAG அறிக்கைகளை நாடாளுமன்றத்திலோ அல்லது மாநில சட்டமன்றங்களிலோ சமர்ப்பிக்க அனுமதிக்கிறது. இருப்பினும், இது எந்தவொரு காலக்கெடுவையும் குறிப்பிடவில்லை. இதன் காரணமாக, அரசாங்கங்கள் பெரும்பாலும் CAG தணிக்கை அறிக்கைகளை வழங்குவதை தாமதப்படுத்துகின்றன.


4. CAG அறிக்கை அரசியல் நிர்ணய சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே பொதுமக்களின் பார்வைக்கு கவனத்தில் கொண்டுசென்றுள்ளது. பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee(PAC)) தேர்ந்தெடுக்கப்பட்ட அறிக்கைகளை மதிப்பாய்வு செய்து அரசாங்கத்திடம் பதிலைக் கேட்கிறது. அரசாங்கம் அதன் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோருகிறது. 2019 முதல், பொதுக் கணக்குக் குழு (PAC) கடந்த ஆண்டு ஜூலை வரை மக்களவையில் 152 அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கைகளில் CAG தணிக்கை கண்டுபிடிப்புகள் மற்றும் அவற்றின் மீதான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.




Original article:

Share:

தெலுங்கானா பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒதுக்கீடு (BC Quota) : 50% இடஒதுக்கீடு வரம்புக்கு பின்னிருக்கும் 3 உச்சநீதிமன்ற தீர்ப்புகள். -அஜோய் சின்ஹா ​​கற்பூரம்

 தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ், 1992-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 50% வரம்பிற்கு மேல் மாநிலத்தில் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் மசோதாவை தாக்கல் செய்ய தயாராகி வருகிறது.


மார்ச் மாதத்தில், தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (Backward Classes) இடஒதுக்கீட்டை 25%-லிருந்து 42%ஆக உயர்த்துவதற்கான மசோதாவை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இது நிறைவேற்றப்பட்டால், மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீடு 62%ஆக அதிகரிக்கும். இந்த இடஒதுக்கீடு உள்ளாட்சி அமைப்புகள், பொது வேலைவாய்ப்பு மற்றும் பொதுக் கல்வி ஆகியவற்றிற்குப் பொருந்தும். 2023 தேர்தலுக்கு முன்பு, முதல்வர் ரேவந்த் ரெட்டி ‘காமரெட்டி பிரகடனத்தில்’ (Kamareddy Declaration) கையெழுத்திட்டார். இது இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக உறுதியளித்தது.


இருப்பினும், மசோதா நிறைவேற்றப்பட்டாலும், கடந்த ஆண்டு பீகார் அரசு எதிர்கொண்ட அதே சவாலை எதிர்கொள்ளும். அதாவது, பீகார் அரசானது அதன் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டை அதிகரிக்க முயன்றது. இது, 1992-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீடுகளுக்கு 50% வரம்பை நிர்ணயித்தது. இந்த வரம்பைப் பயன்படுத்தி ஜூலை 2024-ம் ஆண்டில் பீகார் சட்டத்தை ரத்து செய்தது பாட்னா உயர் நீதிமன்றம் ஆகும்.


50% உச்சவரம்புக்கு பின்னால் உள்ள வரலாறு என்ன? அது எப்போதாவது மீறப்பட்டதா?


இறுதியில், இந்திய அரசியலமைப்பின் 16-வது பிரிவாக மாறவிருந்த அரசியலமைப்பு நிர்ணய சபை விவாதத்தின்போது, ​​டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் "வாய்ப்பு சமத்துவம்" (equality of opportunity) என்ற கருத்தை விரிவாக விவாதித்தார். பொதுச் சேவைகளில் போதுமான அளவு பிரதிநிதித்துவம் பெறாத எந்தப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் ஆதரவாக நியமனங்கள் அல்லது பதவிகளை மாநிலங்களுக்கு ஒதுக்குவதற்கு அரசியலமைப்புப் பிரிவு 16 அனுமதிக்கிறது. டாக்டர் அம்பேத்கர் தெளிவாகவும் உறுதியாகவும் இடஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக இருந்தபோதும், அத்தகைய நடவடிக்கைகளை முதலில் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று நம்புபவர்களின் நலன்களை அவர் சமநிலைப்படுத்த வேண்டியிருந்தது.


டாக்டர் அம்பேத்கர் சட்டமன்றத்தில் பொதுவாக ஒரு கேள்வியை எழுப்பினார். இங்கு, 70% வேலைகள் ஒதுக்கப்பட்டு, 30% மட்டுமே அனைவருக்கும் திறந்திருந்தால் என்ன நடக்கும்? என்று அவர் யோசித்தார். இது இன்னும் "வாய்ப்பு சமத்துவம்" (equality of opportunity) என்ற கொள்கையைப் பின்பற்றுமா? என்று குறிப்பிட்டு அவரே தனது கேள்விக்கு விரைவாக பதிலளித்தார். அதாவது, "என் தீர்ப்பில் அது இருக்க முடியாது" என்றார். பின்னர், அவர் ஒரு யோசனையை பரிந்துரைத்தார். "எனவே, ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் சிறுபான்மை இடங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.


"சிறுபான்மை இடங்களுக்கு" (a minority of seats) இடஒதுக்கீடு வரையறுக்கப்பட வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். இந்த யோசனை பின்னர் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த 50% வரம்பிற்கு அடிப்படையாக அமைந்தது. இந்த 50% இடஒதுக்கீடு விதியை வடிவமைப்பதில் மூன்று உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன. அவை,


  1.  M R பாலாஜி vs மைசூர் மாநிலம் 1962 (M R BALAJI vs STATE OF MYSORE)


1962-ம் ஆண்டு, மைசூர் மாநிலத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த உத்தரவு பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் 68% இடங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (backward classes), பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (Scheduled Castes (SC)), மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (Scheduled Tribes (ST)) போன்ற மாணவர்களுக்கு ஒதுக்கியுள்ளது. எம்.ஆர். பாலாஜி vs மைசூர் மாநிலம் (M R Balaji vs State of Mysore) வழக்கில், 23 மாணவர்கள் மாநில அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இந்த உத்தரவு, அமலில் இல்லாதிருந்தால் தாங்கள் சேர்க்கப்பட்டிருப்போம் என்று அவர்கள் கூறினர்.


அதன் தீர்ப்பில், அரசியலமைப்புப் பிரிவுகள் 15 மற்றும் 16-ன் கீழ் இடஒதுக்கீடு "நியாயமான வரம்புகளுக்குள்" (reasonable limits) இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பொதுவாக, சிறப்பு விதிகள் 50%-க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் அது மேலும் விளக்கியது. இது, டாக்டர் அம்பேத்கர் முதலில் அறிமுகப்படுத்திய ஒரு கொள்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான வரம்பை நிர்ணயித்தது. இருப்பினும், "உண்மையான சதவீதம் ஒவ்வொரு வழக்கிலும் உள்ள தொடர்புடைய சூழ்நிலைகளைப் பொறுத்தது" என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


  1. கேரள மாநிலம் vs என் எம் தாமஸ் 1976 (STATE OF KERALA vs N M THOMAS)


1976-ம் ஆண்டில், ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு கேரள அரசு vs N M தாமஸ்” (State of Kerala vs N M Thomas) வழக்கை விசாரித்தது. பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியின ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக விலக்கை இந்த வழக்கு சவால் செய்தது. இந்த விலக்கு, அவர்கள் பதவி உயர்வுகளுக்குத் தேவையான சிறப்புத் துறைத் தேர்வைத் தவிர்க்க அனுமதித்தது.


ஐந்து நீதிபதிகள் பெரும்பான்மையை உருவாக்கி தற்காலிக விலக்கை (temporary exemption) உறுதி செய்தனர். இதில், இந்த விலக்கு "முழுமையாக நியாயமானது" (fully justified) என்று நீதிபதி ஃபசல் அலி ஒப்புக்கொண்டார்.


அரசியலமைப்புப் பிரிவுகள் 14 மற்றும் 16-ல் உள்ள சமத்துவத்தின் இலக்கை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே அடைய முடியும் என்று அவர் விளக்கினார். அவர்களுக்கு சலுகைகள், தளர்வுகள் மற்றும் வசதிகளை வழங்குவதன் மூலம் இதைச் செய்ய முடியும். இது அவர்களின் குறைபாடுகளை நீக்கி பொருத்தமான இடஒதுக்கீடுகளை வழங்குவதையும் அவசியமாக்கியது. இந்த நடவடிக்கைகள் பின்தங்கிய பிரிவுகள் (weaker sections) மேம்பட்ட குழுக்களுடன் போட்டியிட உதவும். காலப்போக்கில், இது அவர்களை சமமாக்கி பின்தங்கிய நிலையை என்றென்றும் நீக்கும்.


எம் ஆர் பாலாஜிக்கு முன்மொழியப்பட்ட 50% உச்சவரம்பு குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதாவது, நீதிபதி ஃபசல் அலி 50% உச்சவரம்பு என்பது "கவனமான விதி" (a rule of caution) என்று கூறினார். மேலும், உச்சவரம்பு எப்போது மீறப்படலாம் என்பதை விளக்க தனது சொந்த எண்கள் அடிப்படையிலான அனுமானத்தைப் பயன்படுத்தினார். ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையில் 80% பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடிமக்களைக் கொண்ட ஒரு சூழ்நிலையில், அரசாங்கம் 80% இடஒதுக்கீட்டை வழங்கினால், “இடஒதுக்கீட்டின் சதவீதம் தவறானது என்றும், அரசியலமைப்புப் பிரிவு 16(4)-ன் விதியின் வரம்புகளை மீறுவதாகவும் கூற முடியுமா?


இதற்கு அவர் பதிலளித்ததாவது, "பதில் அவசியம் இல்லை என்று இருக்க வேண்டும்."


  1. இந்திரா சாவ்னி vs இந்திய ஒன்றியம் 1992 (INDRA SAWHNEY vs UNION OF INDIA)


இந்திரா சாவ்னி vs இந்திய ஒன்றியம் (1992) வழக்கில், ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிரான ஒரு சவாலை நீதிமன்றம் விசாரித்தது. மண்டல் ஆணையத்தின் (Mandal Commission) பரிந்துரைகளை செயல்படுத்த ஒன்றியம் விரும்பியது. இந்தப் பரிந்துரைகளில் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீடு ஆகியவை அடங்கும்.


நீதிமன்றம் இந்த ஒதுக்கீட்டை உறுதி செய்தது. ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வானது, பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (Backward Class) 50% இடஒதுக்கீடு உச்சவரம்பையும் உறுதி செய்தது. இருப்பினும், இந்த வரம்பை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டுமா என்பது குறித்து நீதிபதிகள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.


நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி தனக்கும் பெரும்பான்மையில் உள்ள மற்ற மூன்று பேருக்கும் தீர்ப்பை எழுதினார். இது, 50% இடஒதுக்கீடு வரம்பு எப்போதும் கடுமையானது அல்லது மாற்ற முடியாதது அல்ல என்று அவர் கூறினார். சில விதிவிலக்கான சூழ்நிலைகளில், இந்த வரம்பை மீறலாம். இது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதாகும்.


காலப்போக்கில், மாநிலங்கள் பெரும்பாலும் 50% வரம்பிற்கு மேல் இடஒதுக்கீடுகளை வழங்க முயற்சித்துள்ளன. இருப்பினும், நீதிமன்றங்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட பின்னர் இந்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.


2021-ம் ஆண்டில், மகாராஷ்டிராவில் சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கான வகுப்புகள் சட்டம் (Educationally Backward Classes Act), 2018-ஐ உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்தச் சட்டம் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கி, இது 50% இடஒதுக்கீடு வரம்பை மீறுவதற்கு வழிவகுத்தது. நீதிபதி அசோக் பூஷண் உள்ளிட்டோர், இந்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்ப்பளித்தனர். இதற்கிடையில், 50% உச்சவரம்பு சட்டமாகிவிட்டது என்று அவர் கூறினார். 50% வரம்பை மீறுவதற்கு நியாயப்படுத்தக்கூடிய 'விதிவிலக்கான சூழ்நிலைகள்' (exceptional circumstances) எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


மறுபுறம், இந்திரா சாவ்னி தீர்ப்பிற்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு ஒரு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. 1990-ம் ஆண்டில், தமிழ்நாடு அரசு அதன் மொத்த இடஒதுக்கீட்டு ஒதுக்கீட்டை 69% ஆக உயர்த்தியது. 1993-ம் ஆண்டில், முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா இந்தச் சட்டத்தை அரசியலமைப்பின் 9-வது அட்டவணையின் கீழ் கொண்டுவருவதற்கு அழுத்தம் கொடுத்தார். இந்த அட்டவணையில் உள்ள சட்டங்களை அடிப்படை உரிமைகளை மீறுவதாக சவால் செய்ய முடியாது.




Original article:

Share:

மழுங்கிய ஆயுதம்: இணையம் நிறுத்தப்படுவது குறித்து...

 இந்தியா இணைய அணுகலைக் கட்டுப்படுத்துவதை நிறுத்த வேண்டும். குறிப்பாக, கட்டுப்பாடுகளுக்கு சரியான காரணம் இல்லாதபோது அதை செய்யக்கூடாது.


இந்தியாவின் மென்பொருள் சுதந்திர சட்ட மையம் (Software Freedom Law Center (SLFC)) 2023ஆம் ஆண்டை விட 2024ஆம் ஆண்டில் இணைய முடக்கங்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இணைய உரிமைகள் ஆதரவு குழுவான Access Now-ன் தனி அறிக்கை, அரசாங்கத்தால் உத்தரவிடப்பட்ட இணைய முடக்கங்களின் எண்ணிக்கையில் இந்தியா இன்னும் உலகிலேயே முன்னணியில் உள்ளது என்று கூறுகிறது. சட்ட ஒழுங்கைப் பராமரிக்க அலைபேசி இணைய முடக்கங்கள் ஒரு அத்தியாவசிய கருவியாக இருப்பதாக ஒன்றிய அரசு வாதிடுகிறது. 


இந்தியாவில் பெரும்பாலான இணைய பயனர்கள் அலைபேசிகள் மூலம் இணையத்தை அணுகுவதால், இந்த முடக்கங்கள் இணைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2024-ஆம் ஆண்டில் இணைய முடக்கம் குறித்து விரிவாகப் பார்த்தால், சில சந்தேகத்திற்குரிய உண்மைகள் தெரியவரும் அதன் படி: இந்தியாவில் 84 இணைய முடக்கங்களில், 41 போராட்டங்களின் போது விதிக்கப்பட்டன. 23 இணைய முடக்கங்கள் வகுப்புவாத மோதல்கள் காரணமாக விதிக்கப்பட்டன. 5 இணைய முடக்கங்கள் தேர்வுகளில் மோசடி செய்வதைத் தடுக்க விதிக்கப்பட்டன.


வன்முறைச் சூழ்நிலைகளின் போது, தவறான தகவல்கள் விரைவாகப் பரவும் இடங்களில், அதிகாரிகள் தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளை ஒரு தடுப்பு நடவடிக்கையாகக் கருதலாம். வன்முறை பற்றிய தாமதமான தகவல்கள் அவசரகால நடவடிக்கையை மெதுவாக்கும். அனுராதா பாசின் VS இந்திய ஒன்றியம் வழக்கில் (Anuradha Bhasin vs Union of India), ஒவ்வொரு இணைய முடக்கமும் அவசியமாகவும் விகிதாசாரமாகவும் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. 


இணைய முடக்கம் மக்களின் வேலைகள், சுகாதாரம் மற்றும் கல்வியைப் பாதிக்கிறது. இது ஒரு கடுமையான நடவடிக்கை, எனவே அரசாங்கம் அதன் தாக்கத்தை மதிப்பிட்டு மிகவும் தேவைப்படும்போது மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக, இந்த விளைவுகளை ஆய்வு செய்ய நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர், ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.


அவசரகால காவல் பணிகளுக்கான ஒரு கருவியாக இணைய முடக்கத்தை சிலர் ஆதரிக்கின்றனர். இருப்பினும், முடக்கங்கள் செயல்படுத்தப்படும் விதம் ஒரு பெரிய கவலையாக உள்ளது. Access Now மற்றும் இந்தியாவின் மென்பொருள் சுதந்திர சட்ட மையத்தின் அறிக்கைகள் கடுமையான பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகின்றன. தொலைத்தொடர்பு (சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்தல்) விதிகள், 2024 மற்றும் அதன் முந்தைய விதிகள் 2017-ன் படி, கால அளவு மற்றும் காரணங்களை விரிவாக விவரிக்கும் எந்த செல்லுபடியாகும் உத்தரவும் அரசாங்க வலைத்தளங்களில் பதிவேற்றப்படவில்லை. ஒவ்வொரு இணைய முடக்கத்திற்குப் பிறகும், ஒரு தீவிர மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.  அது அவசியமா மற்றும் அதன் தாக்கம் என்ன என்பதை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். 


எந்தவொரு நாட்டிலும் முடக்கங்களின் சிறந்த எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருக்க வேண்டும். இருப்பினும், கடந்த ஆண்டு உலகளவில் 296 முடக்கங்கள் விதிக்கப்பட்டன. இது மில்லியன் கணக்கானவர்களை பாதித்தது. இந்தியாவின் இணைய முடக்கங்கள், எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு அவசரமாகத் தேவையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்தியா முன்னிலை வகிக்க விரும்பாத பகுதிகளில் இணைய முடக்க குறியீடும்  (Internet shutdowns index) ஒன்றாகும்.




Original article:

Share:

இரவில் பெண்களைக் கைது செய்வது குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன? -ஆர்.கே.விஜ்

 சூரியன் மறைந்த பிறகும் சூரிய உதயத்திற்கு முன்பும், பெண்களைக் கைது செய்வதைத் தடுக்கும் விதி முழுமையானதா? காவலில் உள்ள பெண்கள் குறித்த இந்திய சட்ட ஆணையத்தின் 135-வது அறிக்கை என்ன பரிந்துரைத்தது?


பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)), 2023 தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தீர்ப்பளித்தது. அதன்படி, சூரியன் மறைந்த பிறகும் சூரிய உதயத்திற்கு முன்பும் இடையில் பெண்களைக் கைது செய்ய முடியாது என்று பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 கூறுகிறது. இருப்பினும், இந்த விதி ஒரு வழிகாட்டுதல், கடுமையான விதி அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இந்த வழக்கில், இரவு 8 மணிக்கு ஒரு பெண் கைது செய்யப்பட்டார். இது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Code of Criminal Procedure (CrPC)) பிரிவு 46(4)-ஐ மீறுவதாக ஒரு தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இருப்பினும், மேல்முறையீட்டில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 46(4) ஒரு வழிகாட்டுதல் மட்டுமே, கடுமையான விதி அல்ல என்று முடிவு செய்தது.


சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் என்னென்ன?


பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 43(5)-ன் கீழ் ஒரு பெண்ணை காவல்துறை கைது செய்வதற்கு இரண்டு பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதலாவதாக, விதிவிலக்கான சூழ்நிலைகளில் தவிர, சூரியன் மறைந்த பிறகும், சூரிய உதயத்திற்கு முன்பும் ஒரு பெண்ணைக் கைது செய்யக்கூடாது. 


இரண்டாவதாக, விதிவிலக்கான சூழ்நிலைகளில், ஒரு பெண் காவல் அதிகாரி எழுத்துப்பூர்வ அறிக்கையைத் தயாரித்து, அதிகார வரம்புக்குட்பட்ட குற்றவியல் நீதிபதியிடம் (jurisdictional magistrate) முன் அனுமதியைப் பெற வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 46-(4) என்பது கைதுகளின் போது பெண்களின் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இருப்பினும், இரவில் ஒரு பெண்ணைக் கைது செய்வதற்கு விதிவிலக்கான சூழ்நிலையாகக் கருதப்படுவதை இது வரையறுக்கவில்லை. கைது செய்யும்போது ஒரு ஆண் காவல்துறை அதிகாரி பெண்ணைத் தொடக்கூடாது. சூழ்நிலை வேறுவிதமாக இருந்தால் மட்டுமே ஒரு பெண் காவல்துறை அதிகாரி அவ்வாறு செய்ய முடியும்.


சென்னை உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது?


இது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Code of Criminal Procedure (CrPC)) பிரிவு 46(4) பின்பற்றாததன் விளைவைக் குறிப்பிடவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. இந்த விதி பின்பற்றப்படாவிட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து சட்டம் எதுவும் குறிப்பிடவில்லை. இந்த விதி கட்டாயமாக இருக்க வேண்டும் என்றால், சட்டமியற்றுபவர்கள் அதைப் பின்பற்றாததற்காக அபராதங்களைச் சேர்த்திருப்பார்கள். 


ஒரு பெண் இரவில் கடுமையான குற்றத்தைச் செய்யலாம். இரவில் அந்த பெண்ணைக் கைது செய்வதற்கு முன்பு குற்றவியல் நீதிபதியின் அனுமதியைப் பெறுவது சட்டத்தின்படி அவசியம். இருப்பினும், அந்த நேரத்தில் நீதிபதி அந்த இடத்தில் இல்லாமல் இருக்கலாம். காவல்த்துறை அதிக நேரம் காத்திருந்தால், அந்தப் பெண் தப்பிக்க நேரிடும். இருப்பினும் இது போன்ற சூழல்களில் நடைமுறையை கண்டிப்பாகப் பின்பற்றுவது பொதுப் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும்.


குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Code of Criminal Procedure (CrPC)) பிரிவு 46(4) வரலாறு என்ன சொல்கிறது ?


1989-ஆம் ஆண்டு இந்திய சட்ட ஆணையத்தின் 135-வது அறிக்கை காவலில் உள்ள பெண்கள் குறித்த அறிக்கையில், பொதுவாக எந்தப் பெண்களும் சூரியன் மறைந்த பிறகும் சூரிய உதயத்திற்கு முன்பும் கைது செய்யப்படக்கூடாது என்று பரிந்துரைத்துள்ளது. 


விதிவிலக்கான வழக்குகள் இருந்தால், உடனடியாக உயர் அதிகாரியின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் அல்லது வழக்கு மிகவும் அவசரமாக இருந்தால், காரணங்களுடன் கூடிய கைது அறிக்கை உடனடி உயர் அதிகாரி மற்றும் குற்றவியல் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 1996-ஆம் ஆண்டு சட்ட ஆணையத்தின் 154-வது அறிக்கையிலும் இதே போன்ற பரிந்துரைகள் செய்யப்பட்டன. மேலும், 2005-ஆம் ஆண்டு சில மாற்றங்களுடன் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 46(4) சேர்க்கப்பட்டது.


உச்ச நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது?


ஒரு வழக்கில், பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு, அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், பெண் காவலர்கள் இல்லாமல் எந்த ஒரு பெண்ணையும் காவலில் வைக்கக் கூடாது என்றும், சூரியன் மறைந்த பிறகும் சூரிய உதயத்திற்கு முன்பும் காவலில் வைக்கக் கூடாது என்றும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கூறப்பட்ட உத்தரவை கண்டிப்பாக கடைபிடிப்பது நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் இங்கு கவனித்தது.

விதியை நீர்த்துப் போகச் செய்யுமா இந்த தீர்ப்பு?


குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 43(5) பிரிவு 46(4)-ஐ ஒரு வழிகாட்டியாகவும் கட்டாயமாகவும் கருதவில்லை என்றாலும், காவல்துறையினரால் இந்த விதியை பயனற்றதாகக் கருத முடியாது என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. காவல்துறையினர் விதியைப் பின்பற்றவில்லை என்றால், கைது சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. 


இருப்பினும், அதை ஏன் பின்பற்ற முடியவில்லை என்பதை அதிகாரி விளக்க வேண்டும். இரவில் பெண்களைக் கைது செய்வதற்கான விதிவிலக்கான சூழ்நிலைகளாகக் கருதப்படுவது குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை உருவாக்கவும் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது.


ஆர்.கே. விஜ் முன்னாள் இந்திய காவல்துறை அதிகாரி.




Original article:

Share:

மூன்றாவது மொழி கட்டாயமாக்கப்பட வேண்டுமா? -ரங்கராஜன் ஆர்.

 சமக்ர சிக்ஷா அபியான் (Samagra Shiksha Abhiyan) திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கான நிதியை வழங்குவதில் ஏன் தாமதம் செய்கிறது? மும்மொழிக் கொள்கை எப்போது முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, அது எதைக் கட்டாயப்படுத்தியது? அரசுப் பள்ளிகளில் கூடுதல் மொழிப் படிப்புகளைச் சேர்ப்பதால் என்னென்ன சிக்கல்கள்உருவாகும்? 


2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் (New Education Policy (NEP)), கீழ் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைத் தொடர்பாக ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதி பெற பள்ளிகள் இந்தக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. இருப்பினும், இந்தக் கொள்கை இந்தியைத் திணிப்பதற்கான ஒரு வழியாக இருக்கலாம் என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது. தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கையைத் தொடர முடிவு செய்துள்ளது.


அரசியலமைப்பு விதிகள் என்ன சொல்கிறது?


அரசியலமைப்புச் சட்டம் இந்தி ஒன்றிய அரசின் அலுவல் மொழி (official language) என்று கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டம் தொடங்கியதிலிருந்து 15 ஆண்டுகளுக்கு மட்டுமே, 1965 வரை ஆங்கிலம் அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இருப்பினும், 1963-ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டம், எந்த காலக்கெடுவும் இல்லாமல், இந்தியுடன் ஆங்கிலத்தையும் அலுவல் பயன்பாட்டிற்குத் தொடர அனுமதித்தது. ஒரு மாநில சட்டமன்றம் அரசாங்கப் பணிகளுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளூர் மொழிகளையோ அல்லது இந்தியையோ அதன் அலுவல் மொழியாகத் தேர்வு செய்யலாம்.


மேலும், அரசியலமைப்புச் சட்டம், இந்தி மொழியை மேம்படுத்துவது மத்திய அரசின் கடமை என்று கூறுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஒரு பொதுவான மொழியாக இந்தி இருக்க வேண்டும்.


மும்மொழிக்கொள்கை என்றால் என்ன?


மும்மொழிக் கொள்கை 1968ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கை, 1968ஆம் ஆண்டு அலுவல் மொழித் தீர்மானத்துடன் சேர்ந்து, இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியை ஒரு பாடமாகக் கற்பிப்பதை கட்டாயமாக்கியது. தமிழ்நாடு இந்த விதியை கடுமையாக எதிர்த்தது. மாநிலத்தில் இதற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. மும்மொழிக் கொள்கையை பின்பற்றுவதற்குப் பதிலாக, தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்தது. 


அரசுப் பள்ளிகளில், தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. 2020-ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், எந்த மாநிலத்தையும் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்துவதில்லை. மாநிலங்கள், பிராந்தியங்கள் மற்றும் மாணவர்கள் எந்த மொழிகளைக் கற்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய அனுமதிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மொழிகளில், குறைந்தது இரண்டு மொழிகள் இந்தியாவை பூர்விகமாகக் கொண்டிருக்க வேண்டும்.


என்னென்ன பிரச்சினைகள் உள்ளன?


வருடாந்திர கல்வி நிலை ஆராய்ச்சி (Annual Status of Education Research (ASER)) பிரபல அரசு சாரா நிறுவனமான பிரதம் மூலம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. 2022 அறிக்கை மாணவர்களிடையே மோசமான கற்றல் திறன்களைக் எடுத்துக்காட்டுகிறது. ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் சுமார் 60% பேர் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தைப் படிக்க முடியவில்லை. 2023 அறிக்கை 14-18 வயதுடைய இளைஞர்களிடையே மோசமான எழுத்தறிவுத் திறனை எடுத்துக்காட்டுகிறது. 




அவர்களில் 25% பேர் தங்கள் பிராந்திய மொழியில் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தை சரளமாகப் படிக்க முடியவில்லை. அவர்களில் 40%-க்கும் அதிகமானோர் ஆங்கிலத்தில் வாக்கியங்களைப் படிக்க சிரமப்பட்டனர். கழித்தல் மற்றும் வகுத்தல் போன்ற அவர்களின் அடிப்படை கணிதத் திறன்களும் மோசமாக உள்ளன.


2022ஆம் ஆண்டில் இந்திய அரசின் கல்வி அமைச்சகம் தயாரித்துள்ள “கல்விக்கான பட்ஜெட் செலவினங்களின் பகுப்பாய்வு” (‘Analysis of Budgeted expenditure on Education’) அறிக்கையின்படி, தொடக்கக் கல்விக்கான மொத்த வருவாய் செலவீனமான ₹3.03 லட்சம் கோடியில் (2019-20) 15% ஒன்றிய அரசாலும் 85% மாநிலங்களாலும் செலவிடப்படுகிறது. 


ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் தொடக்க, இடைநிலை, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான மொத்தச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  4-4.5% ஆகும். தேசிய கல்விக் கொள்கை  2020 கல்விச் செலவினத்திற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% என்ற நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு எதிராக உள்ளது. தற்போதைய, செலவினம் இந்த இலக்கை விடக் குறைவாகவே உள்ளது.


முன்னோக்கி செல்லும் வழி என்னவாக இருக்க முடியும்?


ஆங்கிலம் தாய்மொழி இல்லையென்றாலும், அதன் தேர்ச்சி பல்வேறு சேவைத் தொழில்களில் உலகளவில் போட்டித்தன்மையுடன் இருக்க நமக்கு பல்வேறு வழிகளில் உதவியுள்ளது. இந்தியா பல்வேறு மொழிகளை கொண்ட நாடு. நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப இந்திய மொழிகளைக் கொள்வது ஒரு நல்ல யோசனையாகும். 


இருப்பினும், அரசுப் பள்ளிகள் மோசமான கற்றல் விளைவுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்கள் போன்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றன. எனவே, இந்த பள்ளிகளில் தாய்மொழி/உள்ளூர் மொழி, ஆங்கிலம் மற்றும் அடிப்படை கணிதத் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில், மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை மூன்றாம் மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அந்த மொழியில் மாணவர்கள் பெறும் தேர்ச்சி குறைவாகவே உள்ளது.


2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள், இந்தியாவில் சுமார் 26% பேர் இருமொழி பேசுபவர்கள் என்றும், 7% பேர் மூன்று மொழிகளைப் பேசுபவர்களாக உள்ளனர் என்று சுட்டிக்காட்டியது. நகர்ப்புறங்களுக்கான தொடர்புடைய புள்ளிவிவரங்கள் 44% மற்றும் 15%, கிராமப்புறங்களில் 22% மற்றும் 5% ஆகவும் உள்ளது. இந்தியா விரைவான நகரமயமாக்கலையும், நாடு முழுவதும் தொழிலாளர்களின் இடம்பெயர்வையும் சந்தித்து வருகிறது. 


மொழி கற்றலில் எதிர்பார்க்கப்படும் இந்த மாற்றங்கள் காரணமாக, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருமொழி மற்றும் மும்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப இளைஞர்கள் புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வார்கள். இது இளைஞர்கள் மற்றும் வயது வந்தோர் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் மொழிகளைக் கற்றுக்கொள்வார்கள் என்பதைக் குறிக்கிறது.


நிதி வழங்குவதில் தாமதம் ஏற்படாமல் இருக்க, ஒன்றிய அரசுக்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.


மாநிலங்கள் செலவிடும் செலவினப் பங்கையும், பிராந்திய பன்முகத்தன்மையையும் கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வி தொடர்பான கொள்கை விவகாரங்களில் மாநிலங்களுக்கு அதிக சுயாட்சி வழங்குவது குறித்து ஒரு ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தப்பட வேண்டும்.


ரங்கராஜன். ஆர் முன்னாள் இந்திய குடிமைப் பணி அதிகாரி மற்றும் “எளிமைப்படுத்தப்பட்ட அரசியல்” என்ற நூலின் ஆசிரியர்.




Original article:

Share: