தமிழக முதல்வரின் தொகுதி மறுவரையறைக் கூட்டத்தின் மையமாக, ஒன்றிய அரசின் அதிகரித்து வரும் அதிகார மையப்படுத்தலுக்கான எதிர்ப்பு -சேலம் தரணிதரன் மற்றும் தக்ஷனா இந்துமதி

 இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு அதன் பரந்த பன்முகத்தன்மைக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதிநிதித்துவம் மக்கள்தொகை அளவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டால், அது அவற்றைத் தீர்ப்பதற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்.


தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழு (Joint Action Committee (JAC)) கூட்டம் நடைபெற்றது. இதில் மூன்று முதலமைச்சர்கள், ஒரு துணை முதலமைச்சர் மற்றும் ஏழு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், நியாயமற்ற எல்லை நிர்ணயத்தை எதிர்க்க JAC மாநிலங்களை ஒன்றிணைத்தது. இந்தக் கூட்டம், நமது நாட்டின் முக்கியப் பிரச்சினைகளான மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவது மற்றும் ஒன்றிய அரசாங்கத்தால் அதிகார மையப்படுத்தப்படுவது அதிகரித்து வருவது குறித்தும் விவாதித்தது.


அரசியலமைப்பின் 82-வது பிரிவு, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களவை இடங்கள் மக்கள்தொகை அடிப்படையில் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் சரிசெய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது. கடைசியாக 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பயன்படுத்தி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. 1976-ஆம் ஆண்டில், இந்திரா காந்தியின் அரசாங்கம் மக்கள்தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்த செயல்முறையை 25 ஆண்டுகளுக்கு முடக்கிவைத்தது.


2001-ஆம் ஆண்டில், வாஜ்பாய் அரசாங்கம், பிராந்தியங்களுக்கு இடையே மக்கள்தொகை வளர்ச்சியில் ஏற்பட்ட வேறுபாடுகள் காரணமாக, தொகுதி மறுவரையறை முடக்கத்தை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டித்தது. இந்த முடக்கம் 2026-ல் முடிவடையும். அதன் பிறகு, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை சரிசெய்ய ஒரு தொகுதி மறுவரையறை ஆணையத்தை (Delimitation Commission) என்று உருவாக்க வேண்டும் அரசியலமைப்பின் பிரிவு 82 கோருகிறது.


மக்கள்தொகை கட்டுப்பாட்டை திறம்படக் கொண்ட மாநிலங்கள் ஊக்கமில்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த முடக்கம் மேற்கொள்ளப்பட்டாலும், வட மாநிலங்கள் தங்கள் ஒரு வாக்கு விகிதாச்சாரத்தில் குறைவாக இருப்பதாக வாதிட்டன. உதாரணமாக, உத்தரபிரதேசத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மூன்று முதல் நான்கு மில்லியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். சிக்கிமில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 0.6 மில்லியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.


2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு தாமதப்படுத்துவதால், 2031-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் மற்றொரு திருத்தம் அறிமுகப்படுத்தப்படாவிட்டால், தொகுதி மறுவரையறைப் பணி ஆரம்ப காலக்கெடுவைவிட மிக விரைவாக திட்டமிடப்படும். தொகுதி மறுவரையறை ஆணையம் அரசியலமைப்பு ஆணையின் கீழ் செயல்படுவதால், அதன் முடிவுகளை நீதிமன்றத்தில் சவால் செய்வது கடினமாக இருக்கும். இதனால்தான் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் 2026 காலக்கெடுவிற்கு முன்னர் பிரிவு 82-ல் திருத்தம் செய்யக் கோரிக்கை விடுத்துள்ளன.


பிரச்சனை எங்கே இருக்கிறது?


இந்த பிரச்சினையின் முக்கிய அம்சம் மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்களில் உள்ள ஏற்றத்தாழ்வு ஆகும். முதலாவதாக, மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate (TFR)) ஒரு பெண் தனது வாழ்நாளில் சராசரியாகப் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையை மதிப்பிடுகிறது. இந்த விகிதம் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையே பெரிதும் வேறுபடுகிறது.


2000-களின் முற்பகுதியில் தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்கள் நிலையான மக்கள்தொகை வளர்ச்சியை எட்டின. தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை 1.4–1.8 குறைந்த கருவுறுதல் விகிதங்களைக் கொண்டுள்ளன. இது மக்கள்தொகை அளவைப் பராமரிக்கத் தேவையான 2.1-ஐ விடக் குறைவு. ஆனால் பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் இன்னும் அதிக பிறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளன. மேலும், அவை நிலைப்படுத்த அதிகநேரம் எடுக்கும். 1970-களில் இருந்த மக்கள்தொகை வேறுபாடுகள் இன்னும் இந்தியாவிற்கு சவால்களை உருவாக்குகின்றன.


மக்கள்தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் நாடாளுமன்ற இடங்களை இழக்கும். அதே, நேரத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சியை திறம்பட கட்டுப்படுத்தாததால் அதிக இடங்களைப் பெறும்.


தொகுதி மறுவரையறை தாக்கங்கள்: எண்களுக்கு அப்பால் 


புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவின்போது, ​​அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கும் வகையில் மக்களவையை விரிவுபடுத்துவது குறித்து பிரதமர் மறைமுகமாகத் தெரிவித்தார். மக்கள்தொகை அடிப்படையில் மட்டும் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் (மொத்த இடங்களின் எண்ணிக்கை 848 ஆக அதிகரிக்கும் என்று வைத்துக் கொண்டால்), ஐந்து மாநிலங்கள் (குஜராத், பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான்) மொத்த இடங்களில் 47 சதவீதத்தை உருவாக்கும் 367 இடங்களைக் கொண்டிருக்கும். மேலும், ஐந்து தென் மாநிலங்கள் 19 சதவீத பிரதிநிதித்துவத்தில் வெறும் 164 இடங்களைக் கொண்டிருக்கும் (தற்போதைய 24 சதவீதத்திலிருந்து குறைந்து விடும்.) மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், குறைந்த பிறப்பு விகிதங்களைக் கொண்ட தென் மாநிலங்கள் அரசியல் செல்வாக்கை இழந்து கொண்டே இருக்கும். இதனால் நாடாளுமன்றத்தில் அவற்றின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருக்கும்.


தொகுதி மறுவரையறை பிரச்சினை எண்களுக்கு அப்பாற்பட்டது. இது மாநிலங்கள் மற்றும் இந்திய கூட்டாட்சி அமைப்பின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் ஏற்படும் குறைப்பு நீண்டகால மீளமுடியாத விளைவுகளை ஏற்படுத்தும்.


முதலாவதாக, பிரதிநிதித்துவ இழப்பு தென் மாநிலங்களை தேர்தல் ரீதியாக அபாயத்தை ஏற்படுத்தும். மொத்த இடங்களில் 19 சதவீத இடங்களை மட்டுமே கொண்டுள்ளதால், தென் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசாங்கத்தை அமைப்பதிலோ அல்லது முக்கிய கொள்கைகளை வகுப்பதிலோ குறைந்தபட்ச பங்கையோ கொண்டிருப்பார்கள். இது பொருளாதாரக் கொள்கைகள் முதல் நிர்வாக முடிவுகள் வரை மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கும்.


2024-2025 மாநில பட்ஜெட்டுகளின் பகுப்பாய்வு, பீகாரின் வருவாயில் 72 சதவீதமும், உத்தரபிரதேசத்தின் வருவாயில் 54 சதவீதமும் ஒன்றிய அரசிடமிருந்து ஒன்றிய வரிகள் மற்றும் மானிய உதவிகளில் பங்கு வடிவில் வந்ததாகக் காட்டுகிறது. அதே நேரத்தில் தமிழ்நாடு 24% மட்டுமே பெற்றது. நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் குறைவதால், அதிக மக்கள்தொகைக் கொண்ட மாநிலங்கள் பட்ஜெட் முடிவுகளில் அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும். இது தென் மாநிலங்களின் வளர்ச்சியை மெதுவாக்கும். மேலும், நாட்டின் நிதிக்கு பங்களிக்கும் மாநிலங்கள் தாங்கள் உருவாக்கும் வருவாயில் குறைவான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் ஒரு ஏற்றத்தாழ்வை உருவாக்கும்.


ஒன்றிய அரசின் கொள்கை மீறலைப் பொறுத்தவரை, தேசிய கல்விக் கொள்கை (NEP) ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். சமக்ர சிக்ஷா அபியானுக்கு நிதி மறுக்கப்படுவதற்கு தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக அங்கீகரிக்க தமிழ்நாடு மறுத்ததே காரணம் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார். இது ஒரு மாநிலமாக தமிழ்நாட்டின் உரிமைகளை வழங்க மறுப்பதாகும். கேரளாவிலும் இதே போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அங்கு நிதிக் கொள்கைகள் மாநிலத்திற்கு எதிராக நியாயமற்ற முறையில் பயன்படுத்தப்பட்டன.


இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு அதன் பரந்த பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பன்முகத்தன்மை வெறும் கலாச்சார மற்றும் மொழியியல் சார்ந்தது மட்டுமல்ல, வளர்ச்சி சார்ந்ததும் கூட. பிரதிநிதித்துவம் மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்பட்டால், அது அவற்றைத் தீர்ப்பதற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். தொகுதி மறுவரையறைக் கருத்து முதலில் அரசியலமைப்பில் உருவாக்கப்பட்டபோது, ​​இந்தியாவின் மக்கள்தொகை நிலப்பரப்பு இன்றைய நிலையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. மக்கள்தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்வது மற்றும் அதன் தாக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல், இந்தியாவில் ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் பலவீனப்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.


முதல்வர் ஸ்டாலின் கூட்டிய கூட்டு நடவடிக்கைக் குழு (Joint Action Committee (JAC)) கூட்டம் கூட்டாட்சி முறையைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய தருணமாகும். அவர் விவரித்தது போல, மக்கள்தொகை அளவை கருத்திக்கொள்ளாமல் பெரிய அல்லது சிறிய அனைத்து மாநிலங்களும் நிர்வாகத்தில் குரல் கொடுப்பதை உறுதி செய்வதற்கான "மைல்கல் நிகழ்வு" என்று அவர் அழைத்தார். தொகுதி மறுவரையறை, மாநில உரிமைகள் மற்றும் கட்டுப்படுத்தப்படாத மையப்படுத்தல் கொள்கைகளைக் கட்டுப்படுத்துவதில் சீர்திருத்தங்கள் இல்லாமல், நமது அரசியலமைப்பில் உள்ள "மாநிலங்களின் ஒன்றியம்" (Union of States) என்ற கொள்கை நிரந்தரமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.


தரணிதரன் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில துணைச் செயலாளர்; இந்துமதி ஒரு அரசியல் ஆலோசகர்.



Original article:

Share:

இந்தியாவில் வக்ஃப் சொத்துக்கள் எவ்வாறு முறைப்படுத்தப்படுகின்றன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி : வக்ஃப் (திருத்தம்) மசோதா, 2024-க்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board (AIMPLB)) அறிவித்துள்ளது. முதல் கட்டமாக, மார்ச் 26-ஆம் தேதி பாட்னாவிலும், மார்ச் 29-ஆம் தேதி விஜயவாடாவிலும் உள்ள மாநில சட்டமன்றங்களுக்கு முன்பாக பெரிய அளவிலான உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


• பாட்னாவில் முதல்வர் நிதீஷ் குமார் உட்பட ஜே.டி.(யு), ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மற்றும் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக AIMPLB செய்தித் தொடர்பாளர் SQR இல்யாஸ் தெரிவித்தார்.


• ஆந்திராவில், ஆளும் தெலுங்கு தேசம் கட்சி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அனைத்து முஸ்லிம் அமைப்புகள், குடிமை சமூகக் குழுக்கள் மற்றும் தலித், ஆதிவாசி, இதர பிற்ப்படுத்த வகுப்பினர் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு வாரியத்தின் சார்பாக இலியாஸ் நன்றி தெரிவித்தார்.


• அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் (All India Muslim Personal Law Board (AIMPLB)) 31 உறுப்பினர்களைக் கொண்ட நடவடிக்கைக் குழு, "சர்ச்சைக்குரியது, பாரபட்சமானது மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடியது" என்று விவரித்த மசோதாவை எதிர்க்க அனைத்து அரசியலமைப்பு, சட்ட மற்றும் ஜனநாயக வழிமுறைகளையும் பின்பற்ற தீர்மானித்துள்ளது.


• முதல்கட்ட போராட்டத்தின் ஒரு பகுதியாக, மார்ச் 26-ம் தேதி பாட்னாவிலும், மார்ச் 29-ம் தேதி விஜயவாடாவிலும் மாநில சட்டசபைக்கு முன்பாக பெரிய முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. AIMPLB-ன் மூத்த தலைவர்கள், தேசிய மற்றும் மாநில அளவிலான மத மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பார்கள் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


• 2024-ஆம் ஆண்டு மசோதாவின்படி, சட்டம் தொடங்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் அனைத்து வக்ஃப் சொத்துக்களும் ஒரு மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். தரவுத்தளத்தில் உள்ள எந்தவொரு சொத்தும் அரசு சொத்து என்று குறிக்கப்பட்டால், மாவட்ட ஆட்சியர் விசாரணையை மேற்கொண்டு மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்.


•  ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலேஷ்வர் கமைத் முன்மொழிந்த திருத்தத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஏற்றுக்கொண்டது. இந்த மாற்றம் சில சூழ்நிலைகளில் வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான காலக்கெடுவை மிகவும் நெகிழ்வானதாக ஆக்குகிறது. “தரவுத்தளத்தில் வக்ஃப் விவரங்களை தாக்கல் செய்யாததற்கு போதுமான காரணத்தை” முத்தவல்லி (Property managers) வழங்குகிறது.


• திருத்தப்பட்ட மசோதா, தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகளில் காலக்கெடுவை நீட்டிக்கும் அதிகாரத்தை வக்ஃப் தீர்ப்பாயத்திற்கு வழங்குகிறது. எவ்வாறாயினும், "போதுமானவை" என்று கருதக்கூடிய சூழ்நிலைகள் மற்றும் நீட்டிப்பு காலம் குறிப்பிடப்படவில்லை என்பதால், தீர்ப்பாயம் அதன் விருப்பப்படி செயல்பட வேண்டும்.


• பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராதா மோகன் தாஸ் அகர்வால் செய்த மற்றொரு விளைவாக திருத்தத்தையும் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஏற்றுக்கொண்டது. 2024-ஆம் ஆண்டு மசோதாவில், முன்மொழியப்பட்ட சட்டம் தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒன்றிய அரசின் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படாவிட்டால், வக்ஃப்களால் வழக்கு, மேல்முறையீடுகள் அல்லது சட்ட நடவடிக்கைகள் எதுவும் தாக்கல் செய்ய முடியாது.


• 2024-ஆம் ஆண்டு மசோதா, வக்ஃப் தீர்ப்பாயத்திற்கு முன்பு இருந்த அதிகாரங்களை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கியது.


சட்டம் தொடங்குவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ வக்ஃப் சொத்து என்று பெயரிடப்பட்ட எந்தவொரு அரசு சொத்தும் வக்ஃப் சொத்தாக கருதப்படாது என்று மசோதா கூறுகிறது. இருப்பினும், முடிவை எடுக்கவேண்டியது வக்ஃப் தீர்ப்பாயம் அல்ல, மாவட்ட ஆட்சியர்தான்.



Original article:

Share:

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான நீதித்துறையின் உள்விசாரணை எவ்வாறு இருக்கும்? -அபூர்வா விஸ்வநாத்

 டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை மூன்று பேர் கொண்ட குழு விசாரிக்க உள்ளது. உச்ச நீதிமன்றம் 30 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணை செயல்முறையை அமைத்து, 2014-ல் மீண்டும் அதை மறுபரிசீலனை செய்தது.


மார்ச் 14 அன்று ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பண மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளார்.


நீதித்துறையின் உள் விசாரணை அரசியலமைப்பின் கீழ் உள்ள பதவி நீக்க நடவடிக்கையிலிருந்து வேறுபட்டது. இது தலைமை நீதிபதி ஷீல் நாகு (பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றம்), தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா (இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம்) மற்றும் நீதிபதி அனு சிவராமன் (கர்நாடக உயர் நீதிமன்றம்) ஆகியோரால் நடத்தப்படும்.


ஒரு நீதிபதியை நீக்குவதற்கான வழிமுறைகள்


உச்ச நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் (impeachment of a judge) செய்வதற்கான நடைமுறை இந்திய அரசியலமைப்பின் பிரிவு 124(4)-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 218, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இதே விதிகள் பொருந்தும் என்று கூறுகிறது.


டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு ஆராய்ந்து பார்க்கும். இத்தகைய விசாரணைக்கான நடைமுறை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவால் வகுக்கப்பட்டது, மேலும் 2014ல் உச்ச நீதிமன்றம் இதை மீண்டும் பரிசீலித்தது.


அரசியலமைப்பின் பிரிவு 124(4)-ன் கீழ், "நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை" (proved misbehaviour) அல்லது "இயலாமை" (incapacity) ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டுமே ஒரு நீதிபதியை நாடாளுமன்றம் பதவி நீக்க முடியும்.


உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய, மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் கலந்து கொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அதை ஆதரிக்க வேண்டும். மேலும், ஆதரவாக வாக்குகள் ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களில் 50%-க்கும் அதிகமாக இருக்க வேண்டும்.


நாடாளுமன்றம் வாக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்தால், நீதிபதியை பதவி நீக்கம் செய்ய குடியரசுத்தலைவர் உத்தரவிடுவார். இருப்பினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலோ அல்லது அதன் பதவிக்காலம் முடிவடைந்தாலோ, பதவி நீக்கத் தீர்மானம் தோல்வியடையும்.


ஒரு நீதிபதிக்கு எதிரான புகார் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து மட்டுமே வரவோ அல்லது அவர்களிடம் செல்லவோ தேவையில்லை. ஒரு நீதிபதிக்கு எதிரான புகாரை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் அழைக்கப்படலாம்.


1995-ஆம் ஆண்டில், மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எம். பட்டாச்சார்ஜி மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, உள் அமைப்பின் தேவை எழுந்தது.


அப்போது மூத்த வழக்கறிஞர் இக்பால் சாக்லா தலைமையிலான மும்பை வழக்கறிஞர் சங்கம், நீதிபதியை ராஜினாமா செய்யக் கோரி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. பின்னர், வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதைத் தடுக்க உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.


வழக்கை விசாரிக்கும் போது, ​​உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே. ராமசாமி மற்றும் பி.எல். ஹன்சாரியா ஆகியோர் மோசமான நடத்தைக்கும் பதவி நீக்கத்தை நியாயப்படுத்தும் நடத்தைக்கும் இடையிலான இடைவெளியைக் சி. ரவிச்சந்திரன் ஐயர் VS  நீதிபதி ஏ.எம். பட்டாச்சார்ஜி  வழக்கில் குறிப்பிட்டனர்.


அரசியலமைப்பின் 124-வது பிரிவின் கீழ், பதவி நீக்க நடவடிக்கைக்கு தகுதியற்ற, பொருத்தமற்ற நடத்தைக்கு நீதிபதிகளை பொறுப்பேற்க வைக்கும் எந்த நடைமுறையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.


நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தைக்கும் உயர் பதவிக்கு தகுதியற்ற மோசமான நடத்தைக்கும் இடையிலான ஒரு பெரிய இடைவெளியை" குறைப்பதற்க்காக உச்சநீதிமன்றம் ஒரு உள்ளக நடைமுறையை உருவாக்க முடிவு செய்தது.


நீதித்துறை மதிப்புகளை நிலைநிறுத்தத் தவறும் நீதிபதிகளைக் கையாள்வதற்கான செயல்முறையை உருவாக்க ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.சி. அகர்வால், ஏ.எஸ். ஆனந்த் மற்றும் எஸ்.பி. பருச்சா, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பி.எஸ். மிஸ்ரா மற்றும் டி.பி. மொஹபத்ரா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். உச்சநீதிமன்றத்தின் மதிப்புகளை மறு மதிப்பீடு செய்வதில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, நீதித்துறை நெறிமுறைகளைப் பின்பற்றாத நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.


இந்தக் குழு தனது அறிக்கையை அக்டோபர் 1997-ல் சமர்ப்பித்தது. இது டிசம்பர் 1999-ல் உச்ச நீதிமன்றத்தின் முழு நீதிமன்றக் கூட்டத்தில் திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


2014-ல் செயல்முறை மீண்டும் பார்க்கப்பட்டது


2014-ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, உயர்நீதிமன்றத்தின் பதவியில் இருக்கும் நீதிபதி மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தபோது, ​​உச்சநீதிமன்றம் அதன் உள்ளக நடைமுறையை மறுபரிசீலனை செய்தது.


நீதிபதிகள் ஜே.எஸ். கெஹர் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் இந்த செயல்முறையை "ஏழு படிகள்" (கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி 'X' VS மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல்) மூலம் விளக்கினர்.


அடிப்படையில், ஒரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது குடியரசுத்தலைவர் ஒரு புகாரைப் பெறும்போது இந்த செயல்முறை தொடங்குகிறது. உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அல்லது குடியரசுத்தலைவர் புகாரை தலைமை நீதிபதிக்கு அனுப்புவார்.


இந்த புகார் தலைமை நீதிபதியால் போதுமான அளவு தீவிரமாகக் கண்டறியப்படவில்லை என்றால் எந்த நிலையிலும் கைவிடப்படலாம். இருப்பினும், புகாரின் உண்மைத்தன்மையை சோதிக்க, தலைமை நீதிபதி சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடமிருந்து ஆரம்ப அறிக்கையைப் பெறலாம்.


முதற்கட்ட அறிக்கையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, "ஆழமான விசாரணை" தேவை என்று பரிந்துரைத்தால், தலைமை நீதிபதி பரிந்துரையையும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நீதிபதியின் அறிக்கையையும் ஆராய்ந்து, பின்னர் இரண்டு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை உள்ளடக்கிய மூன்று பேர் கொண்ட விசாரணைக்கு உத்தரவிட முடிவு செய்யலாம்.


உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் முதற்கட்ட அறிக்கை, ஆழமான விசாரணை தேவை என்று பரிந்துரைத்தால், தலைமை நீதிபதி பரிந்துரையையும் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதியின் அறிக்கையையும் மதிப்பாய்வு செய்வார். பின்னர், இரண்டு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்ட மூன்று பேர் கொண்ட விசாரணைக்கு தலைமை நீதிபதி உத்தரவிடலாம்.


இந்தக் குழு நியாயமான நீதி விதிகளைப் பின்பற்றி அதன் சொந்த நடைமுறையை வகுக்கும் அதிகாரங்களைக் கொண்டுள்ளது. இதில் நீதிபதி வர்மா தனது பக்கத்தை விளக்க ஒரு வாய்ப்பு வழங்குவதும் அடங்கும்.


விசாரணை முடிந்ததும், குழு தனது அறிக்கையை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்கும். இந்த அறிக்கையில் பின்வருவனவற்றைக் குறிப்பிட வேண்டும்:


நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையா என்று கண்டறிந்து குற்றச்சாட்டு, உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவை பதவி நீக்க நடவடிக்கைகளைத் தொடங்கும் அளவுக்கு தீவிரமானவையா கருத்தில் கொள்ள வேண்டும்.


அறிக்கை குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாகக் கண்டறிந்தால், அது சம்பந்தப்பட்ட நீதிபதிக்கும் அனுப்பப்படும். தவறான நடத்தை நீக்க நடவடிக்கைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் அளவுக்கு தீவிரமானது அல்ல என்று குழு முடிவு செய்தால், தலைமை நீதிபதி சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு "ஆலோசனை" வழங்கி, குழுவின் அறிக்கையை பதிவு செய்ய உத்தரவிடலாம்.


குற்றச்சாட்டுகள் நீக்கப்படும் அளவுக்கு தீவிரமானவை என்று குழு கண்டறிந்தால், சம்பந்தப்பட்ட நீதிபதியை ராஜினாமா செய்யவோ அல்லது தானாக முன்வந்து ஓய்வு பெறவோ தலைமை நீதிபதி அறிவுறுத்துவார்.


நீதிபதி ராஜினாமா செய்ய மறுத்தால், அவர்களுக்கு நீதித்துறைப் பணிகளையும் வழங்குவதை நிறுத்துமாறு தலைமை நீதிபதி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்துவார். (உதாரணமாக, நீதிபதி வர்மாவுக்கு எந்த நீதித்துறைப் பணியையும் ஒதுக்க வேண்டாம் என்று தலைமை நீதிபதி கன்னா ஏற்கனவே டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயாவிடம் கூறியுள்ளார்)


தலைமை நீதிபதியின் ராஜினாமா அல்லது ஓய்வு பெறுவதற்கான ஆலோசனையை குற்றச் சாட்டிற்கு உள்ளான நீதிபதி பின்பற்றவில்லை என்றால், பதவி நீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்ற குழுவின் முடிவை தலைமை நீதிபதி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரிவிப்பார்.



Original article:

Share:

சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக இருப்பு என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பதட்டங்கள் தணிந்து வருவதால், கொள்கை வகுப்பாளர்கள் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த அதிக விருப்பம் கொண்டுள்ளனர்.


முக்கிய அம்சங்கள்:


  • குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை வரிகளைக் குறைத்து வாஷிங்டனின் விதிமுறைகளை ஏற்குமாறு அழுத்தம் கொடுத்து வருவதால், இது சரியான நேரமாகக் கருதப்படுகிறது.

  • சில வர்த்தக மற்றும் முதலீட்டுக் கட்டுப்பாடுகளை தளர்த்த அல்லது நீக்குவதற்கான வழிகள் குறித்து அரசு துறைகள் விவாதித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2020ஆம் ஆண்டு கால்வானில் சீன மற்றும் இந்திய வீரர்களுக்கு இடையே நடந்த மோதல்களுக்குப் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.


  • தொழில்துறை கோரிக்கைகள் காரணமாக இந்த திட்டங்களில் சில முன்னேறியுள்ளன. சீன தொழிலாளர்களுக்கான விசா விதிகளை தளர்த்துவது மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீதான சில வர்த்தக கட்டுப்பாடுகளைக் குறைப்பது போன்ற எளிய பொருளாதார நடவடிக்கைகள் அவற்றில் அடங்கும்.


  • சில சீன செயலிகள் மீண்டும் அனுமதிக்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விமானங்களை மீண்டும் தொடங்கவும், சீன அறிஞர்களுக்கு விசா வழங்கவும் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.


  • இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்துவரும் வர்த்தக இடைவெளியைக் குறைக்க உதவும் வகையில், சீனாவின் முதலீடுகளை அனுமதிப்பது குறித்து இந்தியா இப்போது பரிசீலித்து வருகிறது.


உங்களுக்குத் தெரியுமா?:


  • IBEF வலைத்தளத்தின்படி, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் 2024 நிதியாண்டில் $118.40 பில்லியனை எட்டியது. இது 2023 நிதியாண்டில் $113.83 பில்லியனைவிட 4% அதிகமாக இருந்தது.


  • 2024 நிதியாண்டில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் $118.40 பில்லியன் எட்டியுள்ளது.  உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி (Global Trade Research Initiative (GTRI)) அறிக்கையின்படி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு , அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி,  சீனா மீண்டும் இந்தியாவின் சிறந்த வர்த்தக நாடாக மாறியுள்ளது. இந்தியாவின் மொத்த இறக்குமதியில், சீனாவின் பங்கு 15% ஆகும். இந்தியா உலகத்திலிருந்து $675.42 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்தது. இதில், $101.74 பில்லியன் சீனாவிலிருந்து  பெறப்பட்டது.


  • 2024 நிதியாண்டில், இந்தியாவின் மொத்த இறக்குமதியில் சீனா 15.06% ஆகும். இந்தியாவின் மொத்த இறக்குமதி 675.42 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதில் 101.74 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்கள் சீனாவிலிருந்து வந்தவை.


  • சீனாவுடனான வணிக உறவுகளை மேம்படுத்துவது அமெரிக்காவிற்கு ஒரு செய்தியை அனுப்பும் மற்றும் ஒரு பாதுகாப்பு உத்தியாக செயல்படும் என்று இந்தியாவில் பலர் நம்புகிறார்கள். 2020 கல்வான் மோதல்களுக்குப் பிறகு விதிக்கப்பட்ட சில வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.

  • இந்தியாவிற்குள் வரும் அந்நிய நேரடி முதலீட்டில் (FDI) சீனா 22வது இடத்தில் உள்ளது. ஏப்ரல் 2000 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2024 வரை, அது மொத்தம் $2.5 பில்லியன் முதலீடு செய்துள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் வளர்ந்திருந்தாலும், முதலீடுகள் அதே வேகத்தில் அதிகரிக்கவில்லை. ஆதாரங்களின்படி, சீனா இந்தியாவில் அதிக முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளது. எதிர்காலத்தில், சீன முதலீடுகளில் இந்தியா சிறிது அதிகரிப்பு அனுமதிக்கலாம்.


  • சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகம் 2020 ஆம் ஆண்டு முதல் வேகமாக வளர்ந்து வருகிறது. இருப்பினும், இது வேறு எந்த நாட்டுடனும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறையையும் உருவாக்கியுள்ளது. இந்த பற்றாக்குறை குறித்து இந்தியாவுக்கு இரண்டு முக்கிய கவலைகள் உள்ளன. முதலாவதாக, பற்றாக்குறை மிகப் பெரியது. இரண்டாவதாக, இது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2023 ஆம் ஆண்டில், இது $83 பில்லியனை தாண்டியது.


இந்த வளர்ந்து வரும் பற்றாக்குறைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன:


1. வரையறுக்கப்பட்ட ஏற்றுமதிகள் – இந்தியா முக்கியமாக சீனாவிற்கு ஒரு சிறிய அளவிலான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.


2. சந்தை கட்டுப்பாடுகள் – இந்தியாவின் போட்டித்திறன் இருந்தபோதிலும், விவசாயப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஐடி சேவைகள் போன்ற பல இந்தியப் பொருட்களுக்கு சீனா தடைகளை விதிக்கிறது.


  • பொருளாதாரக் கணக்கெடுப்பு 2023-24 இந்தியா சீனாவின் முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இருப்பினும், உள்ளூர் பொருளாதாரத்திற்கு சிறிய மதிப்பைச் சேர்ப்பதால், முடிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதியைக் குறைக்கவும் அறிவுறுத்தியது.


Original article:

Share:

பாலின பிரச்சார முழக்கங்களை கைவிட வேண்டிய நேரம் இது -குஷ்பு ஸ்ரீவஸ்தவா

 முழக்கங்கள் பெரும்பாலும் பாரம்பரிய அதிகார அமைப்புகளை வலுப்படுத்துகின்றன மற்றும் பெண்களின் கவலைகளைத் தேர்ந்தெடுத்து ஈடுபடுத்துகின்றன.


இந்தியாவில் தேர்தல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. கடந்த 10 ஆண்டுகளில், குறிப்பிடத்தக்க தேர்தல் நடவடிக்கைகள், கணிசமான நிதிச் செலவுகள் மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் வரிசையின் பங்கேற்பு ஆகியவற்றைக் கண்டுள்ளோம். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது அரசியல் தகவல்தொடர்பு மற்றும் பிரச்சார நடைமுறைகளின் பெண்ணியமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கலின் மாறும் தன்மையை சுட்டிக்காட்டுகிறது. இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும், தேர்தல் பிரச்சாரங்களில் முழக்கங்கள் இன்னும் முக்கியப் பகுதியாகும். அவை வாக்காளர்களைத் திரட்ட உதவுகின்றன.  இது பாலின நிலைப்பாடுகளில் உட்பொதிக்கப்பட்டுள்ளது. பல கோஷங்கள் வன்முறையை சாதாரணமாகக் காட்டுகின்றன. மேலும், பெண்களை தேர்தல்களில் தீவிரமாகப் பங்கேற்பவர்களாக இல்லாமல் செயலற்ற பெறுநர்களாக சித்தரிக்கின்றன.


தொடர்பு எப்படி வளர்ந்தது


இந்தியாவில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை சென்றடையும்விதம் காலப்போக்கில் நிறைய மாறிவிட்டது.


1950-1960: பிரச்சாரம் பெரும்பாலும் பேரணிகள், வீடுவீடாகச் சென்று பார்வையிடுதல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் செய்யப்பட்டது. உள்ளூர் கட்சி உறுப்பினர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.


1970: இந்திரா காந்தியின் புகழ்பெற்ற "வறுமையை நீக்குக" (Garibi Hatao) போன்ற முழக்கங்கள் முக்கியமானதாக மாறியது.


1980கள்: தொலைக்காட்சி மற்றும் வானொலி அறிமுகப்படுத்தப்பட்டன. இது பாரம்பரிய முறைகள் இன்னும் பயன்படுத்தப்பட்டாலும், அதிகமான மக்களைச் சென்றடைவதை எளிதாக்கியது.


1990-2000: இணையம் அரசியல் செய்தியிடலுக்கான ஒரு கருவியாக மாறியது. மொபைல் போன்கள் மற்றும் சமூக ஊடகங்களுடன் இன்னும் வளர்ந்தது.


2020: நிகழ்நேர வாக்காளர் ஈடுபாட்டிற்காக செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML) மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகியவற்றைப் பயன்படுத்தி பிரச்சாரங்கள் உயர் தொழில்நுட்பமாக மாறியது. அரசியல் கட்சிகள் தங்கள் உத்திகளை நிர்வகிக்க தேர்தல் வியூகத் திட்டமிடல் அறைகளை ("war rooms") அமைத்தன.


காலப்போக்கில், இந்தியாவில் தேர்தல் பிரச்சாரங்கள் எளிமையான, நேரடித் தொடர்பிலிருந்து மேம்பட்ட டிஜிட்டல் முறைகளுக்கு மாறிவிட்டன.


பொதுக் கருத்தை வடிவமைப்பதில் முழக்கங்கள் எப்போதும் முக்கியப் பங்கு வகித்துள்ளன. சில எடுத்துக்காட்டுகளில் 'மின்சாரம், சாலைகள், தண்ணீர்' (electricity, roads, water), 'இந்தியா ஒளிர்கிறது' (‘India Shining), 'நான் ஊழலில் ஈடுபட மாட்டேன், மற்றவர்களையும் ஈடுபட விடமாட்டேன்' (I won’t indulge in corruption, nor let others), மற்றும் 'ஒன்றாக, அனைவரின் வளர்ச்சிக்காக' (together, for everyone’s growth) ஆகியவை இதில் அடங்கும். இந்த குறுகிய சொற்றொடர்கள் சித்தாந்தங்கள், வாக்குறுதிகள் மற்றும் உணர்ச்சிகளைப் படம்பிடித்து, அரசியல் கட்சிகள் அடையாளங்களை உருவாக்கவும், வாக்காளர்களை ஈர்க்கவும் மற்றும் தேர்தல்களில் செல்வாக்கு செலுத்த உதவுகின்றன.


இருப்பினும், பெரும்பாலான முழக்கங்கள் ஆண் தலைமை மற்றும் நிர்வாகத்தில் கவனம் செலுத்துகின்றன. பெண்கள் பிரச்சினைகள் பெரும்பாலும் பிரச்சாரங்களின் முக்கியப் பகுதியாக இருப்பதற்குப் பதிலாக, வசதியான நேரங்களில் மட்டுமே சேர்க்கப்படுகின்றன. இதன் விளைவாக, முழக்கங்கள் பெண்களின் கவலைகளுக்கு குறிப்பிட்ட அளவில் மட்டும் கவனம் செலுத்துகின்றன. அதே நேரத்தில் பாரம்பரிய அதிகார அமைப்புகளையும் ஆதரிக்கின்றன.


பாலியல் ரீதியான உட்குறிப்புகள்


இந்த சொற்றொடர்கள் சமூகத்திலும் அரசியலிலும் பெண்கள் எவ்வாறு பார்க்கப்படுகிறார்கள் என்பதை வடிவமைக்கின்றன:


  • "வீட்டின் தெய்வம்" (goddess of the household) ஒரு பெண்ணின் முக்கிய பங்கு அரசியலில் பங்கேற்பது அல்ல, வீட்டை கவனித்துக்கொள்வதாகும் என்பதைக் குறிக்கிறது.


  • "பெண்கள் மேம்பாட்டிற்காக வாக்களியுங்கள்" (vote for women’s development) பெண்களை முடிவெடுப்பவர்களாக அல்லாமல் உதவி பெறுபவர்களாகக் காட்டுகிறது.


  • "அதிகாரத்தின் சின்னம், ஒரு தாயின் வடிவம் (symbol of power, form of a mother)" பெண் தலைவர்களை தாய்மார்களுடன் ஒப்பிடுகிறது. இது பாரம்பரிய பாலின பாத்திரங்களை வலுப்படுத்துகிறது.


  • "நான் ஒரு பெண், என்னால் போராட முடியும் (I am a girl, I can fight)" பெண்கள் அரசியலில் போட்டியிடும் திறனை நிரூபிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


  • "பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம் ((Save the girl child, educate the girl child)" சமூக கட்டமைப்புகளை மாற்றுவதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக பெண்களுக்கு பாதுகாப்பு தேவை என்று கூறுகிறது.

  • "பெண்களுக்கான அரசாங்கம், பாதுகாப்பு மற்றும் மரியாதையை உறுதி செய்தல் (a government for women, ensuring safety and respect)" பெண்களை முக்கியமாக பாதிக்கப்பட்டவர்களாக சித்தரிக்கிறது. 


இந்த சொற்றொடர்கள் அரசியலில் பெண்கள் எவ்வாறு உணரப்படுகிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் ஒரே மாதிரியான கருத்துக்களை வலுப்படுத்துகின்றன.


2014ஆம் ஆண்டு தேர்தலின் போது அரசியல்வாதிகளின் பாலியல் ரீதியான கருத்துக்கள் வெளிப்பட்டன.


1. முலாயம் சிங் யாதவின் கருத்து, "ஆண்கள் ஆண்களே, தவறுகள் நடக்கத்தான் செய்யும்" (Boys are boys, mistakes happen) என்று கூறினார். இந்த அறிக்கை பாலியல் வன்கொடுமையை அற்பமாக்கியது. இது போன்ற குற்றங்களை வெறும் தவறுகள் என்று தோன்றச் செய்தது. இது ஆணாதிக்கத்தையும் வலுப்படுத்தியது. ஆண்கள் தங்கள் விருப்பப்படி செயல்பட சுதந்திரம் உள்ளது என்றும், பெண்கள் விளைவுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது.


2. சிவசேனா தலைவரின் கருத்து, "ஒரு வாக்கின் மரியாதை ஒரு மகளின் மரியாதையை விட அதிகம்" (The respect of a vote is more than that of a daughter) என்று கூறினார். இந்த அறிக்கை பெண்களின் கண்ணியத்தைக் குறைத்தது. ஒரு பெண்ணின் கௌரவத்தை விட அரசியல் அதிகாரம் முக்கியமானது என்று அது பரிந்துரைத்தது.


3. பாலியல் ரீதியான பெண் உடல்களின் ஒப்பீடு, இந்த ஆண்டின் தொடக்கத்தில், மற்றொரு அரசியல்வாதி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். தனது கட்சி ஒரு பெண் அரசியல்வாதியின் கன்னங்களைப் போல சாலைகளை மென்மையாக்கும் என்று அவர் கூறினார். ஒரு பெண்ணின் உடலை உள்கட்டமைப்போடு ஒப்பிடுவது பெண்களை புறநிலைப்படுத்துகிறது மற்றும் அவர்களின் தோற்றத்தை வளர்ச்சிக்கான குறிப்பாகக் கருதுகிறது.


கறைப்படுத்தும்  பிரச்சாரங்கள்


பெண் வாக்காளர்கள் பெரும்பாலும் உதவியற்ற பாதிக்கப்பட்டவர்களாகக் காட்டப்படுகிறார்கள். அதே நேரத்தில், பெண் தலைவர்கள் தங்கள் குணத்தைத் தாக்கும் அவதூறு பிரச்சாரங்களை எதிர்கொள்கின்றனர்.


இந்தியாவில், அரசியலில் பெண்கள் தொடர்ந்து மதிப்பிடப்படுகிறார்கள். மக்கள் அவர்களின் தோற்றம், வாழ்க்கை முறை, நடத்தை, உடை மற்றும் திருமண நிலை குறித்து கருத்து தெரிவிக்கின்றனர். பெண் அரசியல்வாதிகள் பாரம்பரிய சமூக விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தை இது வலுப்படுத்துகிறது.


அவர்கள் வலுவான அரசியல் பார்வைகள் மற்றும் சாதனைகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் பெண்களாக மட்டுமே பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் பாலினம் அவர்களின் தலைமை, திறமைகள் மற்றும் ஆட்சி செய்யும் திறனை மறைக்கிறது.


உண்மையான மாற்றம் ஏற்பட, முழக்கங்கள் இருப்பதைவிட அதிகமாக செயல்பட வேண்டும். அவை அமைப்பில் உண்மையான மாற்றங்களால் ஆதரிக்கப்பட வேண்டும். பெண்கள் என்ன செய்ய முடியும் அல்லது என்ன செய்ய முடியாது என்பது பற்றிய பழைய கருத்துக்களையும் அவை சவால் செய்ய வேண்டும்.


இந்தியத் தேர்தல்களில், செய்திகள் பகிரப்படும் விதம் விரைவாக மேம்பட்டு வருகிறது. இதன் பொருள் தேர்தல் முழக்கங்கள் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவரும் சக்தியைக் கொண்டுள்ளன.


பெண்களை அவமதிக்கப் பயன்படுத்தப்படாமல் இருக்க, முழக்கங்களை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவை ஆணாதிக்க நம்பிக்கைகளை ஆதரிக்கவோ அல்லது பாலின அடிப்படையிலான வன்முறையை முக்கியமற்றதாகக் காட்டவோ கூடாது. அதற்குப் பதிலாக, முழக்கங்கள் பெண்களை அரசாங்கத் திட்டங்களிலிருந்து நன்மைகளைப் பெறுபவர்களாக மட்டுமல்லாமல், மாற்றத்தை இயக்கும் தலைவர்களாகக் காட்ட வேண்டும்.


குஷ்பு ஸ்ரீவஸ்தவா, உதவி பேராசிரியர், தேர்தல் மேலாண்மை ஆய்வுகள் மையம், மேம்பாட்டு ஆய்வுகள் பள்ளி, டாடா சமூக அறிவியல் நிறுவனம், மும்பை.



Original article:

Share:

சீனா உறவுகளை தடையின்றி சமரசம் செய்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் -அர்சான் தாராபூர்

 சீனாவுடன் நிலையான உறவுகளைப் பேணுவதற்கு வலுவாகவும் சவால்களுக்குத் தயாராகவும் இருப்பது அவசியம் என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்.


சீனாவுடனான இந்தியாவின் அணுகுமுறை மாறி வருவதாகத் தெரிகிறது. மார்ச் மாத மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு பாட்காஸ்டில் சீனாவைப் பற்றி நேர்மறையாகப் பேசினார். உலகளாவிய நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கு முக்கியமான ஒரு நிலையான மற்றும் கூட்டுறவு உறவுக்கு உரையாடல் முக்கியம் என்று அவர் கூறினார். சீன அதிகாரிகள் அவரது கருத்துக்களை வரவேற்றனர்.


இந்த நிலைமை திடீரென ஏற்படவில்லை. 2020ஆம் ஆண்டு முதல் இந்தியாவும் சீனாவும் தங்கள் உறவுகளை மெதுவாக மேம்படுத்தி வருகின்றன. அந்த ஆண்டு, சீனா உண்மையான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைத் தாண்டி (Line of Actual Control) லடாக்கிற்கு துருப்புக்களை அனுப்பியது.  இதனால்,  20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். பல பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெற இராணுவப் பேச்சுவார்த்தைகள் உதவியது. இருப்பினும் பதட்டங்கள் தொடர்ந்தன. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் தொடர்ந்து வளர்ந்து வந்தது. பின்னர், கடந்த ஆண்டு அக்டோபரில், இந்தியாவும் சீனாவும் எதிர்பாராத விதமாக கடைசி இரண்டு மோதல் பகுதிகளிலிருந்து துருப்புக்களை திரும்பப் பெற ஒப்புக்கொண்டன. இது அதிகாரப்பூர்வமாக நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவந்தது. மேலும், இரு நாடுகளும் இயல்பான உறவுகளை மீட்டெடுக்கத் தொடங்கின.


இந்தியாவின் நிலைப்பாடு குறித்து


 பிரதமர் மோடியின் கருத்துக்கள் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தை பிரதிபலிக்கிறதா அல்லது புதிய மாற்றத்தை பிரதிபலிக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. புது தில்லி இன்னும் எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கலாம். மேலும், அதன் விருப்பத் தேர்வுகளைத் திறந்தே வைத்திருக்கலாம். அரசாங்கம் சீனாவுடன் கூட்டுறவு உறவை நாடியபோதும், பொதுவான நிலையைக் கண்டறிய அதிபர் ஜி ஜின்பிங்குடன் உச்சிமாநாடுகளை நடத்தியபோதும் அதன் முந்தைய அணுகுமுறைக்குத் திரும்பக்கூடும். இருப்பினும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டி ஆழமாகவும் நீண்ட காலமாகவும் உள்ளது. மோடியின் வெளியிட்ட கருத்துக்கு சில நாட்களுக்குப் பிறகு, இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான், இந்தியாவின் குவாட் கூட்டாளிகளான ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவத் தலைவர்களைச் சந்தித்தார்.


இந்தியாவின் முக்கிய கவனம் எப்போதும் பொருளாதார வளர்ச்சியிலேயே இருந்து வருகிறது. இதை ஆதரிக்க, இந்தியா தனது மிகப்பெரிய வர்த்தக நாடுகளுடன் இராணுவ மோதல்களைத் தவிர்ப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்.


சீனாவின் பொருளாதாரம் இந்தியாவைவிட நான்கு மடங்கு பெரியது. எனவே, இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியது போல், இந்தியா சீனாவுடன் நிலையான மற்றும் நன்மை பயக்கும் உறவைப் பேணுவது அர்த்தமுள்ளதாக இருக்கும்.



மூன்று அமைப்பு பிரச்சனை


இந்தியா சொந்தமாக கொள்கையை வகுப்பதில்லை. மோடி அரசாங்கம் புதிய டிரம்ப் நிர்வாகத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. வாஷிங்டனில் இருந்து வரும் சமீபத்திய அறிகுறிகள் தெளிவற்ற கொள்கை திசையைக் காட்டுகின்றன.


அதிபர் டிரம்ப் அச்சுறுத்தியது போல் சீனா மீது வரிகளை விதித்துள்ளார். இருப்பினும், வர்த்தகம் குறித்த அவரது கடுமையான நிலைப்பாடு பாதுகாப்புக் கொள்கைக்கு பொருந்தாது. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை தங்கள் பாதுகாப்புச் செலவினங்களை பாதியாகக் குறைக்க வேண்டும் என்று அவர் பலவீனமாகக் கூறினார்.


பென்டகனில் உயர் கொள்கை வகுப்பாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட எல்பிரிட்ஜ் கோல்பி, ஜப்பான் மற்றும் தைவான் போன்ற முன்னணி நட்பு நாடுகள் தங்கள் இராணுவத்திற்காக அதிக செலவு செய்ய வேண்டும் மற்றும் தங்கள் சொந்த பாதுகாப்பிற்கு அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறினார்.


சீனாவைத் தவிர,  அதிபர் டிரம்ப் சக்திவாய்ந்த நாடுகளுடன் பெரிய ஒப்பந்தங்களைச் செய்ய விரும்புகிறார். உக்ரைனில் அமைதிக்கான அவரது திட்டத்தில் ரஷ்யாவிற்கு சில இராஜதந்திர நன்மைகளை வழங்குவதும், அமெரிக்காவிற்கு பெரிய லாபத்தை ஈட்டுவதும் அடங்கும். அவர் நீண்டகால கொள்கைகளை மாற்றவும், பழைய பாணியிலான அதிகார ஒப்பந்தத்தை உருவாக்க ரஷ்யாவிற்கு அதிக செல்வாக்கை வழங்கவும் தயாராக உள்ளார். பொருளாதார நன்மைகள் மற்றும் தவறான அமைதி உணர்வுக்கு ஈடாக அமெரிக்க இராஜதந்திர செல்வாக்கை விட்டுக்கொடுத்து சீனாவுடன் அவர் அதையே செய்ய முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை.


அதிபர் டிரம்ப் உக்ரைனை ஆதரிப்பதை கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறுத்திவிட்டார். கியேவை ஒரு ஒப்பந்தம் செய்ய அழுத்தம் கொடுக்க பொதுமக்கள் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்த உளவுத்துறை எச்சரிக்கைகளையும் அவர் துண்டித்தார். இது அமெரிக்காவின் ஐரோப்பிய நட்பு நாடுகள் அதன் பாதுகாப்பு வாக்குறுதிகள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்தது.


இந்தியா இந்த முறைகளை கவனித்திருக்கலாம். இந்தியா அமெரிக்க பாதுகாப்பைச் சார்ந்திருக்கவில்லை என்றாலும், எல்லையில் சீனாவின் அச்சுறுத்தல்களைக் கையாள அமெரிக்காவின் உதவியை, குறிப்பாக உளவுத்துறையை எதிர்பார்க்கிறது என்று முன்னாள் இந்திய பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமானே கூறினார். இப்போது, சீனாவுடனான உறவை மேம்படுத்த இந்தியாவுக்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன. ஒரு நெருக்கடியின்போது அமெரிக்கா அதை ஆதரிக்குமா என்று அது சந்தேகிக்கிறது. சீனாவை வலிமையாக்கக்கூடிய ஒரு அமெரிக்க-சீனா ஒப்பந்தத்திற்கான ஒரு சிறிய வாய்ப்பும் உள்ளது.


இராணுவத்தை வலுப்படுத்துதல் 


இந்தியா ஒரு புதிய முறையையும், புதிய சமரசக் கொள்கையையும் ஏற்றுக்கொள்ளக்கூடும். இந்தியாவில் சிலர் இதன் பொருள் இந்தியா இராணுவ முதலீடுகளையும் கூட்டாளர்களுடனான ஒத்துழைப்பையும் குறைக்க முடியும் என்று நினைக்கலாம். இருப்பினும், உண்மை அதற்கு நேர்மாறானது. லடாக் நெருக்கடி அவசரத்தின் அவசியத்தைக் காட்டிய பின்னரும் இந்தியாவின் இராணுவ ஏற்பாடுகள் பலவீனமாகவே உள்ளன. கடந்த பத்தாண்டுகளில், தேசிய பட்ஜெட் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக பாதுகாப்புச் செலவு படிப்படியாகக் குறைந்துள்ளது.


ஒரு உறுதிப்படுத்தல் கொள்கை, புது தில்லி மிகவும் தேவையான இராணுவ மேம்பாடுகள் மற்றும் சீர்திருத்தங்களை தாமதப்படுத்த அனுமதிக்கலாம். இது பெய்ஜிங்கிற்கு பயனளிக்கும்.  இந்தியா பின்னர் இராணுவ விருப்பங்களைப் பெற, இப்போது அதன் இராணுவத்தை வலுப்படுத்த வேண்டும். நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் போன்றவற்றை உருவாக்குவதற்கு நீண்ட காலம் ஆகலாம்.


இதற்கிடையில், அமெரிக்கா எதிர்பாராத விதமாகச் செயல்பட்டாலும் அல்லது இந்தியா தனது அணுகுமுறையை மாற்றினாலும், இந்திய இராணுவம் அதன் நட்பு நாடுகளுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இவை நிலத்திலும் கடலிலும் கூட்டுப் பயிற்சிகள் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்தவும் உதவுகின்றன. திட்டமிடுதல் மற்றும் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்படுவது, இந்தியாவையோ அல்லது அதன் கூட்டு நாடுகளையோ எந்தவொரு குறிப்பிட்ட கொள்கையையும் பின்பற்ற கட்டாயப்படுத்தாமல், இந்தியாவின் வலிமையை மேலும் மேம்படுத்தும்.


இறுதியில், இராணுவ பலத்தின் முக்கிய குறிக்கோள், ஆக்கிரமிப்பைத் தடுப்பதும், தேவைப்பட்டால், தோற்கடிப்பதும் ஆகும். பிரதமம் மோடி மற்றும் அதிபர்  ஜின்பிங் சந்திப்புகளுக்குப் பிறகும், பல காலங்களாக  சீனா எதிர்கொண்டது போலவே, எதிர்காலத்தில் சீனாவிடமிருந்து அதிக முற்றுகைகைய இந்தியா  எதிர்பார்க்கலாம். இந்தியா நிலைத்தன்மையை விரும்பினால், அதன் அமைதியான அணுகுமுறையை வலுவான இராணுவ பலத்துடன் இணைக்க வேண்டும். இல்லையெனில், நிலைத்தன்மை பலவீனமாக மாறக்கூடும்.


அர்சான் தாராபூர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சி அறிஞராகவும், அமெரிக்க ராணுவப் போர்க் கல்லூரியில் சிறப்பு ஆராய்ச்சிப் பேராசிரியராகவும் உள்ளார்.



Original article:

Share: