அருந்ததி ராயின் சமீபத்திய புத்தகத்தின் அட்டைப்படம் ஏதேனும் சட்டத்தை மீறுகிறதா? -வினீத் பல்லா

 புகையிலை பொருட்களின் விளம்பரத் தடை மற்றும் வர்த்தக, வணிகம், ஒழுங்குமுறை சட்டம் புகையிலை பொருட்களின் (Cigarettes and Other Tobacco Products (Prohibition of Advertisement and Regulation of Trade and Commerce, Production, Supply and Distribution)) விளம்பரத்தைத் தடை செய்கிறது மற்றும் அவற்றின் விற்பனையை ஒழுங்குபடுத்துகிறது. அருந்ததி ராய் பீடி புகைக்கும் அட்டைப் படத்துடன் கூடிய அவரது சமீபத்திய புத்தகம் இந்தச் சட்டத்தை மீறுகிறதா?


எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான அருந்ததி ராய், தனது சமீபத்திய புத்தகமான ‘Mother Mary Comes to Me’ என்ற நூலின் அட்டைப்படம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.


ராஜசிம்ஹன் என்ற வழக்கறிஞர் ஒருவர், இளம் வயது ராய் பீடி புகைப்பதாகக் காணப்படும் அட்டைப் படத்தின் காரணமாக, புகைத்தல் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அல்லது புகையிலை புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற சட்டப்படி எச்சரிக்கை இல்லாமல், புத்தகத்தின் விற்பனை, பரவல் மற்றும் காட்சிப்படுத்துதலைத் தடை செய்யக் கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.


செப்டம்பர் 17, புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின்படி, 2003-ஆம் ஆண்டு சட்டத்தின்படி சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (விளம்பரத் தடை மற்றும் வர்த்தகம், வாணிபகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோக ஒழுங்குமுறை) சட்டம் (COTPA) என்ற சட்டத்தை மீறுவதாகும்.


எனினும், புத்தகங்களில் வெளியிடப்படும் படங்களை குறிப்பாக நிர்வகிக்கும் அல்லது தடை செய்யும் எந்த ஒரு பிரிவும் இந்தச் சட்டத்தில் இல்லை. இது சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விளம்பரத்தையும், அவற்றின் திரைப்பட சித்தரிப்பையும் மட்டுமே நிர்வகிக்கிறது. இந்தச் சட்டம் என்ன கூறுகிறது மற்றும் ஏன் இது ராயின் புத்தக அட்டைப்படத்திற்கு பொருந்தாமல் இருக்கலாம் என்பதை இங்கே பார்ப்போம்.


2003-ஆம் ஆண்டு  சட்டம்


புகையிலை விளம்பரங்களை நிறுத்தவும், சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை பொருட்களின் விற்பனை, தயாரிப்பு மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தவும் COTPA சட்டம் உருவாக்கப்பட்டது.


இது பொது இடங்களில் புகைத்தலைத் தடை செய்கிறது. சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களின் விளம்பரத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் மற்றும் சிறார்களுக்கு அவற்றின் விற்பனையையும் தடை செய்கிறது. மேலும், இந்த பொருட்களின் பொதிகளில் உடல்நல எச்சரிக்கைகளைக் காட்சிப்படுத்துவதை கட்டாயமாக்குகிறது.


The Indian Express பெற்ற மனுவின் நகலின்படி, இந்த புத்தகம் COTPA-வின் பிரிவுகள் 5, 7 மற்றும் 8-ஐ மீறுவதாகக் கூறப்பட்டுள்ளது.


 பிரிவு 5 சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விளம்பரத்தைத் தடை செய்கிறது.


 பிரிவு 7 சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களின் உற்பத்தி, வழங்கல், விநியோகம், வர்த்தகம் அல்லது வர்த்தக பொருளின் பேக்கேஜிங் அல்லது சிறப்புறு பிரதி சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களின் பயன்பாட்டிற்கு எதிரான எச்சரிக்கைகள் இருக்கும்போது மட்டுமே கட்டுப்படுத்துகிறது.


பிரிவு 8, சிகரெட் அல்லது புகையிலை தயாரிப்புப் பொட்டலங்களில் உள்ள சுகாதார எச்சரிக்கைகள் எவ்வாறு தெளிவாகவும், தடித்ததாகவும், படிக்க எளிதாகவும் இருக்க வேண்டும். பொட்டலம் திறக்கப்படுவதற்கு முன்பு அவை அளவு மற்றும் நிறத்தில் தனித்து நிற்க வேண்டும் மற்றும் நுகர்வோருக்குத் தெரியும்படி இருக்க வேண்டும்.


இந்தப் பிரிவுகள் எதுவுமே புத்தக அட்டைக்குப் பொருந்தாது. ஏனெனில், அவை குறிப்பாக புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் விளம்பரத்தைக் கையாள்கின்றன. ராயின் புத்தக அட்டைப்படத்தில் புகையிலை பொருள் காட்டப்பட்டிருந்தாலும், அது பீடிகளுக்கான விளம்பரமாகவோ அல்லது அட்டையாகவோ செயல்படவில்லை.


எனினும், அட்டைப்படம் புத்தகத்தின் விளம்பரமாகவும், புகைத்தல் மற்றும் புகையிலை பொருட்களின் மறைமுக விளம்பரம் மற்றும் ஊக்குவிப்பாகவும் அமைகிறது. குறிப்பாக, அருந்ததி ராய் உலகளாவிய அளவில் புகழ்பெற்ற பொது சிந்தனையாளர் என்பதாலும், அவரது செயல்கள் இளைஞர்கள் மற்றும் வாசகர்கள் மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


அதேசமயம், ராயின் புத்தகத்தின் பின் அட்டைப்படத்தில் பின்வரும் மறுப்பு அறிக்கை உள்ளது: இந்த புத்தகத்தில் புகைத்தலின் எந்தவொரு சித்தரிப்பும் பிரதிநிதித்துவ நோக்கங்களுக்காக மட்டுமே என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா (வெளியீட்டாளர்) புகையிலை பயன்பாட்டை ஊக்குவிக்கவோ அல்லது அனுமதிக்கவோ இல்லை என்று கூறியது.


சட்டத்தின் கீழ் உள்ள  விதிகள்


இந்த மனுவில், 2004-ஆம் ஆண்டு சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் விதிகளின் விதி4 குறிப்பிடப்பட்டுள்ளது. இது விளம்பரங்களைத் தடைசெய்து புகையிலைப் பொருட்களின் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துகிறது.


மேலும், விதி 4-ன் படி, கடைகள் மற்றும் கிடங்குகளால் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களின் விளம்பரத்திற்காக பயன்படுத்தப்படும் பலகையின் அளவு மற்றும் பிற விவரங்களை குறிப்பிடுகிறது. — புகையிலை புற்றுநோயை உண்டாக்கும் (Tobacco causes cancer) அல்லது ‘புகையிலை உயிரைக் கொள்ளும்’ (Tobacco kiils) என்ற  எச்சரிக்கைகளை கொண்டிருக்க வேண்டும். சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒரு கதாபாத்திரம் புகைக்கும் சூழ்நிலைகள் மற்றும் பிற வகை புகையிலை பயன்பாட்டுடன் காட்சிகளைக் கொண்டிருக்கும்போது, திரையின் கீழ்ப்பகுதியில் உடல்நல எச்சரிக்கை இருக்க வேண்டும் என்றும் அது கூறுகிறது. இந்த திரைப்படங்கள் கட்டாயமாக 'A' சான்றிதழைப் பெறும்.


விதியின் மற்றொரு பிரிவு, எந்தவொரு அச்சு அல்லது வெளிப்புற ஊடக வடிவத்திலும் அச்சிடப்பட வேண்டிய படங்கள் அல்லது எந்தவொரு மின்னணு ஊடக வடிவத்திலும் ஒளிபரப்பப்பட வேண்டிய காட்சிகளிலும் புகையிலை பொருட்களின் அடையாளப் பெயர்கள் அல்லது அடையாளங்கள் எப்போதும் நீக்கப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.


இந்த விதி புகையிலை பொருட்களின் விளம்பரம் மற்றும் சினிமாவில் அவற்றின் காட்சிப்படுத்துதல், மற்றும் பொது வெளியில் காட்சிப்படுத்தப்படும் படங்களில் இத்தகைய பொருட்களின் அடையாளப் பெயர்கள் அல்லது அடையாளங்களின் காட்சிப்படுத்துதலைக் கையாள்வதால், புத்தக அட்டையில் அதன் பயன்பாடு தெளிவாக இல்லை. புத்தக அட்டையில் ராய் பீடி புகைக்கும் புகைப்படம் மட்டுமே உள்ளது. பீடியின் அடையாள பெயரோ அல்லது சின்னமோ தெரியவில்லை.


2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு சட்டத்தின் பிரிவு 5-ன் மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 17 உறுப்பினர் வழிநடத்தல் குழுவை அமைத்தது. இதில் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் செயலாளர் (Union Ministry of Health and Family Welfare) தலைவராக உள்ளார். ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு, சட்டம் மற்றும் நீதி மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகங்களின் பிரதிநிதிகளுடன், பத்திரிகை தகவல் பணியகம், இந்திய விளம்பரக் குழு மற்றும் இந்திய பத்திரிகைக் குழுவிலும்  உள்ளனர்.


மனு இந்தக் குழுவைப் பற்றி குறிப்பிடவில்லை அல்லது மனுதாரர் மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்பு இந்த குழுவை அணுகினாரா என்பதையும் குறிப்பிடவில்லை.



Original article:

Share:

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஏன் பல மாநிலங்கள் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும்? -அமால் ஷேக்

 அரசியலமைப்பின் பிரிவு 21A வழங்கிய உரிமைகளின் அடிப்படையில், தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அல்லது அவர்களின் நீண்ட பணி அனுபவத்தை ஒரு தகுதியாகக் கணக்கிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


1 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வை (Teaching Eligibility Test (TET)) கட்டாய தகுதியாக்கிய உச்ச நீதிமன்றத்தின் செப்டம்பர் 1 தீர்ப்புக்கு எதிராக பல மாநிலங்கள் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.


நீதிபதி திபங்கர் தத்தா மற்றும் நீதிபதி மன்மோகன் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வின் சட்ட நிலையை தெளிவுபடுத்தியது. இதிலிருந்து வெளிப்படும் சட்ட நிலைமை தெளிவானது: ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது வெறும் நடைமுறைத் தேவையல்ல. மாறாக குறைந்தபட்ச தகுதி அளவுகோல்களின் அத்தியாவசிய பகுதியாகும் என்று நீதிமன்றம் அறிவித்தது.


நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கடந்த காலத்திற்குப் பயன்படுத்துவதற்கான முடிவு, ஏற்கனவே பணிபுரியும் பல ஆசிரியர்களின் வேலைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆசிரியர் குழுக்கள் மாநில அரசாங்கங்களுக்கு அனுப்பிய செய்திகளில் தெரிவிக்கின்றன. இந்த ஆசிரியர்களில் பலர் கல்வி உரிமைச் சட்டம் (Right to Education (RTE)) தொடங்குவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே பணியில் சேர்ந்துள்ளனர். தற்போது கேரளா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்வதை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளன.


இந்த நவடிக்கை, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21A-ன் கீழ், பணியில் உள்ள ஆசிரியர்களை தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் அல்லது நீண்டகால சேவையை மாற்று தகுதியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற ஆசிரியர் அமைப்புகளின் பல ஆண்டுகால கோரிக்கைகளின் பின்னணியில் வருகிறது.


ஆசிரியர் தகுதித் தேர்வு  (Teaching Eligibility Test) என்றால் என்ன?


ஆசிரியர் தகுதித் தேர்வு (Teaching Eligibility Test) கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் பிரிவு 23-ன் மூலம் செயல்படுத்தப்பட்டது. இது ஆசிரியர்களை நியமிப்பதற்கான ‘குறைந்தபட்ச தகுதிகளை’ (minimum qualifications) நிர்ணயிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. 2010ஆம் ஆண்டில், தேசிய ஆசிரியர் கல்வி குழு  (National Council for Teacher Education (NCTE)) இந்த தரங்களை வகுக்கும் கல்வி மையமாக அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டே வெளியிடப்பட்ட தேசிய ஆசிரியர் கல்வி குழுவின் வழிகாட்டுதலின்ப்படி, 1 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை ஆசிரியராக நியமனம் பெற விரும்பும் அனைவரும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கட்டாயமாக்கியது.


கல்வி உரிமைச்சட்டத்தின் 2017 திருத்தம், மார்ச் 31, 2015 நிலவரப்படி குறைந்தபட்ச தகுதிகள் இல்லாத அனைத்து ஆசிரியர்களும் நான்கு ஆண்டுகளுக்குள் அந்த தரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரியது. தேசிய ஆசிரியர் கல்வி குழுவின் 2010ஆம் ஆண்டு  அறிவிப்பு ஏற்கனவே 1 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை கற்பிப்பதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வை முக்கியமான  தகுதியாக அறிமுகப்படுத்தியிருந்தது.


பிரிவு 21A-ல் குறிப்பிட்டுள்ளபடி, ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு உதவுகிறது என்பதால், அரசியலமைப்பின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆசிரியரின் தரத்தில் சமரசம் செய்வது அவசியமாக கல்வியின் தரத்தில் சமரசத்தை ஏற்படுத்தும். மேலும், இது அரசியலமைப்புச் சட்டம் 21A-ஆல் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமையுடன் அவசியமான ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.


இந்த வழக்கு எதைப் பற்றியது?


நீதிமன்றம் இரண்டு ஒன்றோடொன்று தொடர்புடைய பிரச்சினைகள் பற்றிய மனுக்களை விசாரித்துக் கொண்டிருந்தது: சிறுபான்மை பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா, மற்றும் கல்வி உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்துவதற்கு (Right to Education (RTE)) முன்பு ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் வேலையைத் தக்கவைக்க அல்லது பதவி உயர்வு பெற தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா .


சிறுபான்மை பள்ளிகள் பற்றிய கேள்விக்கு, முந்தைய ஒரு முக்கியமான வழக்கு காரணமாக, அதை மறுபரிசீலனை செய்ய நீதிபதிகள் குழுவை அழைக்க நீதிமன்றம் முடிவு செய்தது. ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்கள் உட்பட பதவி உயர்வு விரும்பும் அனைவருக்கும் இது பொருந்தும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


உச்சநீதிமன்றம் கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 23, ஆசிரியர்கள் முதல் நியமனத்திற்கு மட்டுமன்றி பதவி உயர்வுகளுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில்  தேர்ச்சி பெற வேண்டும் என்று கோருகிறது என்று தீர்ப்பளித்தது. இதன் பொருள், ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற விரும்பினால், இந்த விதிக்கு முன்பு எவ்வளவு காலம் பணியாற்றியிருந்தாலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


‘ஆட்சேர்ப்பு’ (recruitment) மற்றும் ‘நியமனம்’ (appointment) ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைக் குறிப்பிட்ட நீதிமன்றம், ஆட்சேர்ப்பு என்பது உள் மற்றும் வெளிப்புற ஆதாரங்களிலிருந்து தேர்வு செய்வதை உள்ளடக்கிய ஒரு பரந்த செயல்முறை என்றும், நியமனம் என்பது இறுதி தேர்வு செயல்முறையை குறிக்கிறது என்றும் கூறியது. தேவையான தகுதி மற்றும் தகுதி ஒன்றே என்பதன் அடிப்படையில் அவை ஒரே மாதிரியானவை என்றும், தேவையான தகுதியை பெற்றிருப்பது ஒரு ஆசிரியரை நியமனத்திற்கு தகுதியுடையவராக ஆக்குகிறது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


கல்வி உரிமைச் சட்டம் (Right to Education (RTE)) அமலுக்கு வருவதற்கு முன் நியமிக்கப்பட்ட நீண்டகால சேவை ஆசிரியர்களுக்கு இந்த தீர்ப்பு ஏற்படுத்தும் சவால்களை ஒப்புக்கொண்ட நீதிமன்றம், சட்டபூர்வ செயல்பாட்டை அநீதியாக பார்க்க முடியாது என்று வலியுறுத்தியது. ஓய்வுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் தொடர்ந்து பணியாற்ற அல்லது பதவி உயர்வு பெற விரும்பினால் இந்த ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில்  தேர்ச்சி பெற வேண்டும்.


நீதிமன்றம் ஏன் இந்த தேர்வை கட்டாயமாக்கியது?


நீதிமன்றம் பணியில் உள்ள ஆசிரியர்களை இரண்டு வகைகளாக பிரித்தது. ஓய்வுக்கு ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலம் உள்ளவர்கள் பதவி உயர்வு தேடாத வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஓய்வு வரை தொடரலாம். ஆனால், ‘ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியை தொடர உள்ளவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற வேண்டும். இவ்வாறான ஆசிரியர்களில் யாராவது நாங்கள் அனுமதித்த நேரத்திற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறத் தவறினால், அவர்கள் பணியிலிருந்து விலக வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தி ஓய்வு பெற வைக்கலாம் என்றும், அவர்களுக்கு உரிய இறுதி ஊதியம் வழங்கப்பட வேண்டும்’ என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


நீதிமன்றம் ஒரு பாதுகாப்பு விதியைச் சேர்த்தது: ஆசிரியர்கள் தங்கள் இறுதி ஊதியத்தைப் பெற, விதிகளின்படி, தேவையான நேரம் வேலை செய்திருக்க வேண்டும் என்ற விதியைச் சேர்க்கிறோம் என்றும் எந்தவொரு ஆசிரியரும் தகுதிவாய்ந்த சேவையில் சேர்க்கப்படாமல், ஏதேனும் குறைபாடு இருந்தால், அவர்/அவள் அளிக்கும் பிரதிநிதித்துவத்தின் பேரில், அவரது வழக்கை அரசுத் துறை பரிசீலிக்கலாம்.


மார்ச் 2015 முதல் நான்கு ஆண்டு காலக்கெடுவுக்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (Central Teacher Eligibility Test (CTET)) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குறித்த வழக்கை செப்டம்பர் 11 அன்று பம்பாய் உயர் நீதிமன்றம் விசாரித்தது. செப்டம்பர் 1, 2025-ஆம் தேதிக்கு முன்னர் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தங்களது பணியைத் தொடரலாம் என்று நீதிமன்றம் கூறியது. தேர்ச்சி பெறாதவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதிபெற வேண்டும். இதன் காரணமாக, சில ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு ஆதரவு பெற்ற பள்ளிகளுக்கு மாற நீதிமன்றம் அனுமதித்தது. மேலும், புதிய உத்தரவுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.


இந்தத் தீர்ப்பு ஏன் விமர்சிக்கப்பட்டது?


உச்ச நீதிமன்றத்தின் ஆசிரியர் தகுதித் தேர்வு  (Teaching Eligibility Test)  தீர்ப்பு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மாநில அரசுகளிடமிருந்து எதிர்வினைகளை அதிகரிக்க செய்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவதையும், தகுதி பெற்றவர்கள் தொடர்ந்து முன்னேறுவதையும் சுட்டிக்காட்டி, சங்கங்கள் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்ய கோரிக்கை விடுத்துள்ளன.


செப்டம்பர் 8 ஆம் தேதி, கேரள கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி ஒன்றிய அரசு தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஒரு செய்திக்குறிப்பில், இந்தத் தேவையை ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்குப் பின்னோக்கிப் பயன்படுத்துவது கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியது. அத்தகைய நடவடிக்கை ‘பள்ளி அமைப்பில் உறுதியற்ற தன்மையை உருவாக்கும்’ என்றும், ஆசிரியர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்றும் தமிழ்நாடு வலியுறுத்தியது.


உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நீண்ட கால சேவை ஆசிரியர்களின் அனுபவத்தை கருத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மாநில கல்வித்துறையை மறுஆய்வு மனு தாக்கல் செய்யுமாறு கேட்டுள்ளார்.


டெல்லியில், அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கம் செப்டம்பர் 18 அன்று முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு கடிதம் எழுதியது, ஆசிரியர்களின் திறன் ஏற்கனவே முடிவுகள், ஆய்வுகள் மற்றும் செயல்திறன் மதிப்பீடுகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது, மேலும் அவர்களை மீண்டும் தகுதி பெற வேண்டும் என்பது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டது.


“கற்பித்தல் என்பது மாணவர்களுக்கு முழு அர்ப்பணிப்புடன் செய்யப்பட வேண்டிய ஒரு தொழில். ஒவ்வொரு ஆசிரியரின் திறனும் ஏற்கனவே கல்வி முடிவுகள், ஆய்வுகள் மற்றும் செயல்திறன் மதிப்பீடுகள் மூலம் மதிப்பிடப்படுகிறது. இப்போது ஆசிரியர்களை மத்திய TET மூலம் மீண்டும் தகுதி பெற வற்புறுத்துவது தன்னிச்சையானது மற்றும் ஏற்கனவே தங்கள் கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்யும் பணியாளர்களுக்கு தேவையற்ற உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது,” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



Original article:
Share:

குடியரசுத்தலைவர் ஆட்சி தொடர்பான அரசியலமைப்பு விதிகள் என்ன? -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி என்ன?


மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி தொடங்கி எட்டு மாதங்கள் ஆகின்றன. பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 13 அன்று மாநிலத்திற்குச் சிறிது நேரம் பயணம் செய்து மெய்ட்டே மற்றும் குகி-சோ சமூகங்களுக்கிடையில் அமைதிக்கு அழைப்பு விடுத்தார். மே 2023-ல் இன வன்முறை வெடித்ததிலிருந்து இது அவரது முதல் வருகையாகும். சமீபத்திய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது, ​​மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.




முக்கிய அம்சங்கள்:


— சுதந்திரத்திற்குப் பிறகு, 1953-ல் தொடங்கி, 135 முறை குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அது முடிவடைந்த பிறகு, ஆட்சியில் இருந்த கட்சி 87 முறை அதிகாரத்தை இழந்தது. இவற்றில், 69 முறை புதிய தேர்தல்கள் நடந்தன. இதன் பொருள், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு முறை, குடியரசுத்தலைவர் ஆட்சிக்குப் பிறகு ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்தது.


— பஞ்சாப் (படியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் மாநிலங்கள் ஒன்றியம் அல்லது PEPSU என்று அறியப்பட்ட காலங்களையும் சேர்த்து) மாநில அரசு, குடியரசுத் தலைவர் ஆட்சி நீக்கப்பட்ட பிறகு ஆட்சி மாற்றம் நிகழ்ந்த மிக அதிகமான நிகழ்வுகளை, ஏழு முறை, கண்டுள்ளது.


— பஞ்சாபில், அரசியல் நிலைத்தன்மை காரணமாக குடியரசுத்தலைவர்ஆட்சியின் ஆரம்ப காலங்கள் குறுகியதாக இருந்தன. ஆனால், மிக நீண்டகாலங்கள் 1980 மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில் போர்க்குணத்தின் உச்சத்தில் இருந்தன. மொத்தத்தில், பஞ்சாப் 3,878 நாட்கள் குடியரசுத்தலைவர் ஆட்சியின் கீழ் இருந்தது. ஜம்மு & காஷ்மீருக்கு அடுத்தபடியாக 4,668 நாட்கள் என்ற அளவில் உள்ளது.


— மணிப்பூர் மாநிலத்தில் அதிகபட்சமாக 11 முறை குடியரசுத் தலைவர் ஆட்சியும், உத்தரப் பிரதேசத்தில் 10 முறை குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பஞ்சாப், ஜம்மு & காஷ்மீர் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் தீவிரவாதக் காலகட்டங்கள் காரணமாக குடியரசுத் தலைவர் ஆட்சியை எதிர்கொண்டன. அதே நேரத்தில் உத்தரப் பிரதேசத்தில் அரசியல் நிலைத்தன்மை காரணமாக இது ஏற்பட்டது.


— யூனியன் பிரதேசத்தின் முதல் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, 1967ஆம் ஆண்டு மணிப்பூரில் முதல் முறையாக குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.


— 1957-ஆம் ஆண்டு காங்கிரஸ் அல்லாத அரசாங்கத்தை கொண்ட முதல் மாநிலம் கேரளா ஆகும். அப்போது, ​​ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, குடியரசுத்தலைவர் ஆட்சி காலத்திற்குப் பிறகு காங்கிரஸ்   அரசாங்கத்தை மாற்றியது.


உங்களுக்குத் தெரியுமா?


இந்திய அரசியலமைப்பின் பிரிவு 356(1)-ன் படி, குடியரசுத் தலைவர் ஒரு மாநில ஆளுநரிடமிருந்து அறிக்கையைப் பெற்றாலோ அல்லது மாநில அரசு அரசியலமைப்பின்படி செயல்பட முடியாது என்று வேறுவிதமாக நம்பினாலோ, குடியரசுத் தலைவர் பின்வருவனவற்றிற்கு ஒரு அறிவிப்பை வெளியிடலாம்:


(அ) ​​மாநில அரசாங்கத்தின் அனைத்து அல்லது ஏதேனும் பணிகளை தனக்கு உரிமையாக்கிக் கொள்ளுதல் மற்றும் மாநில ஆளுநர் அல்லது மாநிலத்தில் உள்ள எந்தவொரு அமைப்பு அல்லது அதிகார அமைப்பால் பயன்படுத்தப்படும் அல்லது செயல்படுத்தப்படும் அனைத்து அல்லது ஏதேனும் அதிகாரங்களை தனக்கு உரிமையாக்கிக் கொள்ளுதல், மாநில சட்டமன்றம் தவிர;


(ஆ) மாநில சட்டமன்றத்தின் அதிகாரங்கள் பாராளுமன்றத்தால் அல்லது அதன் அதிகாரத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தல்;


(இ) பிரகடனத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கு தேவையானதாகவோ அல்லது விரும்பத்தக்கதாகவோ தோன்றும் தற்செயலான மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் விதிமுறைகளை உருவாக்குதல், இதில் மாநிலத்தில் உள்ள எந்தவொரு அமைப்பு அல்லது அதிகார அமைப்பு தொடர்பான இந்த அரசியலமைப்பின் ஏதேனும் விதிகளின் செயல்பாட்டை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இடைநிறுத்துவதற்கான விதிகள் அடங்கும்.



Original article:

Share:

யார் பணம் செலுத்துகிறார்கள், யாருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது, இன்னும் தெளிவாகத் தெரியாதது என்ன? -விதிஷா குந்தமல்லா

 H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு $100,000 நுழைவுக் கட்டணம்: வெள்ளை மாளிகை திட்டத்தின் விவரங்கள் எவ்வாறு செயல்படக்கூடும் என்பதை அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர்கள் மூலம் விளக்குகிறது.


H-1B விசாக்களில் அமெரிக்காவிற்குள் நுழைபவர்களுக்கு $100,000 நுழைவுக் கட்டணத்தை வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இது பல இந்திய தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் மாணவர்களை கவலையடையச் செய்துள்ளது. ஏனெனில், அவர்கள் இந்த விசாவைப் பயன்படுத்துபவர்கள்.


செப்டம்பர் 21 நள்ளிரவில் இந்த விதி தொடங்கியது. புதிய H-1B விசாவில் அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். ஏற்கனவே அமெரிக்காவில் உள்ளவர்கள் தங்கள் விசாவை நீட்டிப்பவர்கள் அல்லது மாற்றுபவர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள்.


செய்தி பரவிய பிறகு, வெள்ளை மாளிகையின் விரைவான பதில் குழு X-ல் இந்த விதி ஏற்கனவே செல்லுபடியாகும் விசா வைத்திருக்கும் எவருக்கும் பொருந்தாது என்று தெளிவுபடுத்தியது.


இது அமெரிக்காவிற்கு வெளியே இருக்கும் பிப்ரவரியில் இருந்து வரும் எதிர்கால விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அவர்கள் விளக்கினர். 2025ஆம் ஆண்டு விசா நடைமுறையில் பங்கேற்ற எவரையும் அல்லது அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்கும் தற்போதைய விசா வைத்திருப்பவர்களையும் இது பாதிக்காது.


ஏற்கனவே H-1B விசா வைத்திருப்பவர்கள், வெளிநாடு சென்று மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைந்தால் $100,000 கட்டணம் பொருந்துமா?


இந்த மாற்றம் ஏற்கனவே செல்லுபடியாகும் H-1B விசா வைத்திருப்பவர்களை பாதிக்காது.


செப்டம்பர் 20 தேதியிட்ட அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை (USCIS) குறிப்பாணையில், புதிய பிரகடனம் இன்னும் தாக்கல் செய்யப்படாத மனுக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. பிரகடனம் அமலுக்கு வரும் தேதிக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பயனாளிகள், தற்போது அங்கீகரிக்கப்பட்ட மனுக்களின் பயனாளிகள் அல்லது ஏற்கனவே செல்லுபடியாகும் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது.


இருப்பினும், இன்னும் சில குழப்பங்கள் உள்ளன. டெக்சாஸைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்த் பர்வதனேனி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், தற்போதைய H-1B வைத்திருப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கைகள் தெரிவித்தாலும், பிரகடனத்தின் வார்த்தைகள் வழக்கறிஞர்களிடையே விவாதிக்கப்படுகின்றன. அரசாங்கம் அதை எவ்வாறு விளக்குகிறது என்பதைப் பொறுத்தது.


ஹூஸ்டனைச் சேர்ந்த குடிவரவு வழக்கறிஞர் ராகுல் ரெட்டி மேலும் கூறுகையில், இந்த விதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:01 மணிக்கு அமலுக்கு வருவதால், மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தொடங்கியவுடன் உண்மையான தாக்கம் தெரியும். அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் ஊழியர்களை பயணம் செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளன.


$100,000 கட்டணம் குறித்தும் நிச்சயமற்ற தன்மை உள்ளது. செப்டம்பர் 21 தேதிக்குப் பிறகு H-1B விசா முத்திரையிடப்படுபவர்களுக்கு, இது ஒரு முறை கட்டணமா அல்லது வருடாந்திர கட்டணமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. முன்னாள் அதிபர் டிரம்ப் இதேபோன்ற நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டபோது, ​​அது வருடாந்திர கட்டணமாக இருக்க வேண்டும் என்று ரெட்டி நினைவு கூர்ந்தார். தற்போதைய பிரகடனம், ஒருவர் அமெரிக்காவிற்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் கட்டணம் பொருந்தும் என்று கூறுகிறது.


இது $100,000 வருடாந்திர கட்டணம் என்று பர்வதனேனி விளக்கினார். ஆனால், யாராவது நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் நுழையும்போது மட்டுமே இது பொருந்தும். இந்த கட்டணம் அமெரிக்க அரசாங்கத்திற்கோ அல்லது வெளியுறவுத்துறை செயலாளருக்கோ எவ்வாறு செலுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


அமெரிக்காவில் ஏற்கனவே H-1B விசாவில் இருப்பவர்களுக்கு நீட்டிப்பு மட்டுமே தேவைப்பட்டால், $100,000 கட்டணம் பொருந்துமா?


அமெரிக்காவிற்குள் செய்யப்படும் மாற்றங்கள், நீட்டிப்புகள் அல்லது இடமாற்றங்களுக்கு கட்டணம் பொருந்தாது.


யாராவது அமெரிக்காவில் இருந்து தங்கள் H-1B-ஐ மாற்ற விரும்பினால், நிறுவனங்களை மாற்ற விரும்பினால் அல்லது தங்கியிருப்பதை நீட்டிக்க விரும்பினால், அவர்கள் நாட்டில் இருக்கும்போது இந்த நடவடிக்கைகள் நடக்கும் வரை அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பர்வதனேனி விளக்கினார்.


அதிபர் அதிகாரத்தின் மீதான வரம்புகளைத் தவிர்ப்பதற்காக இந்த அறிவிப்பு கவனமாக எழுதப்பட்டது என்று ரெட்டி மேலும் கூறினார். நிர்வாகத்தால் H-1B விதிகளை மாற்ற முடியாது. ஏனெனில், நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது. நாட்டிற்குள் நுழையும் மக்கள் தொடர்பான விஷயங்களை மட்டுமே நிர்வாகம் கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் அது நாட்டின் பாதுகாப்பை உள்ளடக்கியது.


அமெரிக்காவில் தங்கியிருக்கும்போது H-1Bக்கு மாறத் திட்டமிடும் F-1 மாணவர்களுக்கு, $100,000 கட்டணம் பொருந்துமா?


"அந்த நபர் அமெரிக்காவில் இருக்கும்போது இந்த அனைத்து நடவடிக்கைகளும் நடக்கும் வரை, அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்," என்று பர்வதனேனி கூறினார். ரெட்டி மேலும் கூறினார், "நீங்கள் அமெரிக்காவிற்குள் H-1Bக்கு மாறும் F-1 மாணவராக இருந்தால், இந்த விதி பொருந்தாது."


ஆனால், அமெரிக்காவிற்கு வெளியே உள்ள ஒரு F-1 மாணவர் H-1B நடைமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன செய்வது?


அப்பொழுது, $100,000 கட்டணம் பொருந்தும் என்று பர்வதனேனி விளக்கினார். "யாராவது அமெரிக்காவிற்கு வெளியே இருந்தால், ஒரு நிறுவனம் அவர்களுக்காக H-1B மனுவை தாக்கல் செய்தால், நிறுவனம் உடனடியாக $100,000 கட்டணம் செலுத்த வேண்டும்."


இந்தக் கொள்கை சில ஆட்சேர்ப்பு நடைமுறைகளை இலக்காகக் கொண்டது என்று ரெட்டி கூறினார். "இது இந்திய நிறுவனங்களை இலக்காகக் கொண்டதாகத் தெரிகிறது. ஏனெனில், அவை வழக்கமாக இந்தியா அல்லது பிற நாடுகளிலிருந்து புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்துகின்றன."

ஏதேனும் விலக்கு உள்ளதா?


எனினும், மிகச் சிலரே பாதிக்கப்படுவார்கள். அதற்கான விளக்கம் தெளிவாக இல்லை. ரெட்டி கூறுகையில், "தேசிய நலனுக்காக இருந்தால், சில தனிநபர்களுக்கு $100,000 விலக்கு அளிக்கப்படலாம் என்று அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால் 'தேசிய நலன்' என்றால் என்ன என்பதை அவர்கள் விளக்கவில்லை. "உதாரணமாக, மருத்துவர்கள் போன்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம்" என்று அவர் மேலும் கூறினார்.


இது O-1, L-1 அல்லது பிற அமெரிக்க விசா வகைகளை நோக்கி தேவையை அதிகரிக்குமா?


L-1 மற்றும் H-1B விசாக்களில் ஒன்றைத் தேர்வு செய்வது பற்றி யோசிக்கும் எவரும் H-1B-ஐத் தவிர்ப்பார்கள் என்று ரெட்டி கூறினார். ஏனெனில், நிறுவனங்கள் $100,000 கட்டணத்தைச் செலுத்தத் தயாராக இல்லை.


ஒரு நிறுவனத்துடனான L-1 விசாவில், நீங்கள் மற்றொரு நிறுவனத்திற்கு மாற முடியாது. H-1B விசாவில், நீங்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறலாம். அவர், நிறுவனங்கள் ஏற்கனவே செலுத்திய எந்த அரசாங்க கட்டணத்தையும் ஊழியரிடமிருந்து வசூலிக்க முடியாது என்ற  ஒரு விதியையும் சுட்டிக்காட்டினார்.


அமெரிக்காவில் தொழில் வாழ்க்கையை உருவாக்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு நீண்டகால தாக்கங்கள் என்ன?


இது STEM குடியேற்ற செயல்முறையை கணிசமாக மாற்றக்கூடும். திட்டமிட்டபடி செயல்படுத்தப்பட்டால், அது தொழில்நுட்பத் துறையையும் மாணவர்களின் வாய்ப்புகளையும் பாதிக்கும் என்று பர்வதனேனி எச்சரித்தார்.


ஆனால், தற்போதைய OPT மாணவர்களுக்கு ஒரு குறுகிய கால நன்மையைக் குறிப்பிட்டார்: குழுவில் குறைவான நபர்களுடன், அவர்களுக்கு இப்போது சிறந்த வாய்ப்புகள் இருக்கலாம். இருப்பினும், அவர் பெரிய பிரச்சனையையும் சுட்டிக்காட்டினார்: பலர் தங்கள் நிறுவனம் H-1B விசாவிற்கு நிதியுதவி செய்யும் என்று நம்பி பல ஆண்டுகளாக வேலை செய்கிறார்கள். ஆனால், இப்போது அவர்கள் அதற்காக $100,000 செலவிடத் தயாராக இல்லாமல் இருக்கலாம்.


என்ன சட்ட சவால்கள் எதிர்பார்க்கப்படுகின்றன?


வழக்கறிஞர்கள் ஏற்கனவே வழக்குகளுக்குத் தயாராகி வருகின்றனர். "இது ஏற்கனவே தயாராகி வரும் வழக்குகளுக்கு வழிவகுக்கும். நீதிமன்றங்கள் தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்தால், அது மக்களுக்கு சிறிது நேரம் கொடுக்கும்" என்று பர்வதனேனி கூறினார்.


ரெட்டி இதை 2017-ஆம் ஆண்டு முஸ்லிம் பயணத் தடையுடன் ஒப்பிட்டு, இது ஒரு பயணக் கட்டுப்பாட்டாக முன்வைக்கப்பட்டதாகக் கூறினார். இதற்கு மசோதா மூலம் உருவாக்கப்பட்ட தேவையில்லை, மாறாக அதிபரின் பிரகடனம் போதுமானது என்றார்.


"அவர்கள் அதை கவனமாக செய்கிறார்கள். ஏனெனில், இது நீதிமன்றத்தில் சவால் செய்யப்படும். மேலும், அது நிச்சயமாக அங்கு சோதிக்கப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.


சட்டப்பூர்வமாக ஒரு பிரகடனம் என்றால் என்ன? அது இறுதிச் சட்டமா?


இல்லை, இது ஒரு சட்டம் அல்ல. ஆனால், நீதிமன்றத்தில் சவால் செய்யப்படும்வரை அதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் உண்டு. அதிபரின் பிரகடனம் என்பது ஒரு சட்டம் அல்ல, ஆனால் கூட்டாட்சி நிறுவனங்களுக்கு ஒரு உத்தரவு என்று பர்வதனேனி விளக்கினார். அது அதிபரின் அதிகாரங்களை மீறாத வரை, அது செல்லுபடியாகும்.


நாடாளுமன்றம் மட்டுமே H-1B விதிகளை மாற்ற முடியும் என்று ரெட்டி மேலும் கூறினார். ஆனால், டிரம்ப் நிர்வாகம் இது பாதுகாப்பு பற்றியது, அதிபருக்கு அதிகாரம் உள்ள ஒரு பகுதி என்று வாதிடுகிறது. நீதிமன்றங்கள் முடிவு செய்யும் வரை, பிரகடனம் நடைமுறையில் இருக்கும். மேலும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் அதற்கேற்ப திட்டமிட வேண்டும்.

Original article:

Share:

யுரேனிய அமைதியின்மை: மேகாலயாவில் யுரேனிய சுரங்கம் பற்றி...

 வளத்தை பிரித்தெடுக்கும் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பு மக்களிடம் கருத்துக்களை  கேட்க வேண்டும்.


உள்ளூர் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பின்னரும், மேகாலயாவில் யுரேனியத்தை வெட்டி எடுக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பது இந்தியாவின் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் ஒரு கவலைக்குரிய நடவடிக்கையாகும். 1980-களில் இருந்து டோமியாசியாட் மற்றும் வஹ்காஜியில் யுரேனியம் வெட்டியெடுப்பதை காசி சமூகங்கள் எதிர்த்து வருகின்றன. சமீபத்தில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அணு, முக்கியமான கனிமங்களை வெட்டியெடுப்பதற்கு இனி பொது மக்களின் ஒப்புதல் தேவையில்லை என்று அறிவிப்பை வெளியிட்டது. உள்ளூர் குழுக்கள் ஏற்கனவே இந்த புதிய விதியை விமர்சித்துள்ளன. ஆளும் கட்சியுடன் கட்சியுடன் தொடர்புடைய ஒரு குழு பழங்குடி உரிமைகளைப் பாதுகாக்க காசி மலைகள் தன்னாட்சி மாவட்ட குழு (Khasi Hills Autonomous District Council) அதன் 6-வது பட்டியல் அதிகாரங்களை பயன்படுத்த அழைப்பு விடுத்துள்ளது. அலுவலக குறிப்புகள் (Office Memorandums) என்பது முக்கியமான விதிகளை பலவீனப்படுத்தும் நிர்வாகக் கருவிகளாகும் மற்றும் அவை எந்தவொரு வெளிப்புற சரிபார்ப்பு அல்லது தன்னிச்சையான ஆய்வும் (independent scrutiny) இல்லாமல் பிறப்பிக்கப்படுகின்றன.  இந்த வழக்கில், அலுவலக குறிப்புகள் உள்ளூர் சமூகங்களை ஓரங்கட்டி, அவர்களை ஆழமாகப் பாதிக்கும் தேர்வுகளில் அவர்களைப் பார்வையாளர்களாகக் கருதுகிறது. யுரேனியம் பிரச்சினைகளில் அரசாங்கம் வலுக்கட்டாயமாகச் செயல்படுவது இது முதல்முறை அல்ல. ஜார்க்கண்டின் சிங்பூம் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் செயல்பட்டு வருகிறது. புதிய சுரங்கங்களை விரிவுபடுத்தவோ அல்லது திறக்கவோ முயன்றபோது, ​​கதிர்வீச்சு மற்றும் வீடுகள் மற்றும் வேலைகளை இழப்பது குறித்து மக்கள் கவலைப்பட்டதால் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தங்களுக்குப் புரியாத மொழிகளில் மாநகராட்சி அறிவிப்புகளை அனுப்பி, தங்கள் கவலைகளைப் புறக்கணித்ததாகவும் கிராமவாசிகள் தெரிவித்தனர். இந்தியாவின் பிற பகுதிகளுக்கு தங்கள் நிலம் இன்னும் ஒரு ‘வள எல்லையாக’ (resource frontier) பார்க்கப்படுவதாக பழங்குடி சமூகங்கள் உணர்கின்றன.


உள்ளூர் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளில், அரசு அவர்களின் மறுப்பை மதித்திருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக 'இல்லை' என்று சொல்வது இனி அனுமதிக்கப்படாது என்பதைக் காட்டியது. யுரேனியம் சுரங்கம் அதிக மாசுபாட்டை ஏற்படுத்துகிறது மற்றும் நிலத்தை நிரந்தரமாக சேதப்படுத்தும். இது போன்ற காரணிகளால் தான், உலகளாவிய விதிகள் கூறுவது போல், ஒரு திட்டத்தை தொடங்குவதற்கு முன் மக்களிடமிருந்து அனுமதியைப் பெறுவது முக்கியம்.  அத்தகைய ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால், ஜனநாயக பாதுகாப்புகளை நிறுவிய அதே அரசு, தேசியப் பாதுகாப்பு அல்லது வளர்ச்சிக்கான ஒரே வழியாக யுரேனியத்தைக் கருதுவதை நிறுத்திவிட்டு, பிற வைப்புத்தொகைகள், மாற்றீடுகள் அல்லது மின் உற்பத்தி உத்திகளை மேம்படுத்த வேண்டும். 2013ஆம் ஆண்டு  நியம்கிரி வழக்கை உதாரணமாகக் கொண்டும், அரசியலமைப்பின் 5-வது மற்றும் 6-வது அட்டவணைகளின் கீழ் பாதுகாப்புகளைக் குறிப்பிட்டும், அலுவலக குறிப்புகளை சமூகங்கள் நீதிமன்றத்தில் சவால் செய்யலாம். இரண்டாவதாக, அமைச்சகம் அதன் அலுவகக் குறிப்புகளை திரும்பப் பெற வேண்டும்: பல கனிமங்களை வெட்டியெடுப்பதை பொது ஆலோசனையிலிருந்து விலக்குவதன் மூலம், இந்தியா முழுவதும் சுரங்க நிர்வாகத்தை மறுவடிவமைக்கக்கூடிய ஒரு முன்னுதாரணத்தை இது அமைக்கிறது. இறுதியாக, உள்ளூர் போராட்டங்கள் அதிகரித்தால், அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலம் பதிலளிக்க வேண்டும், வலுக்கட்டாயமாக அல்ல. வற்புறுத்தல் தற்காலிகமாக வேலை செய்தாலும், பின்னர் அது வெறுப்பை உருவாக்கும். அரசாங்கம் ஒழுங்கைப் பராமரிப்பது மட்டுமல்லாமல், நடைமுறையில் அரசியலமைப்பு பாதுகாப்புகள் நிலைநிறுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.


Original article:

Share:

மறுசுழற்சி சீர்தர இயக்கச் செய்முறையானது(Sops), மின்கல வணிகங்களுக்கு உத்வேகம் அளிக்குமா? -பாரதி கிருஷ்ணன்டிபி பிரபு

 

Sops :  Standard Operating Procedure -  இதற்கு சீர்தர இயக்கச் செய்முறை அல்லது நிலையான இயக்க முறைமை என்று பொருள். இது ஒரு நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட வேலையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான படிப்படியான வழிமுறைகளையும், பின்பற்ற வேண்டிய தரங்களையும் விவரிக்கும் ஒரு ஆவணமாகும்.


இந்த திட்டம், செயல்பாட்டு செலவு ஆதரவில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் நிறுவனங்கள் பொருள் மீட்பு தொடங்கியவுடன் அவை அளவிட ஊக்குவிக்கப்படும்.


தேசிய முக்கியமான கனிமங்கள் திட்டத்தின் (National Critical Minerals Mission) கீழ் ₹1,500 கோடி ஊக்கத் திட்டத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. லித்தியம்-அயன் மின்கலங்கள், மின்-கழிவுகள் மற்றும் பிற கனிம வளம் மிக்க கழிவுகளின் உள்நாட்டு மறுசுழற்சியை அதிகரிப்பதே இதன் குறிக்கோள். மேலும், இந்தத் திட்டம் ஆறு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். இதில், ₹8,000 கோடி தனியார் முதலீட்டை ஈர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் 270,000 டன் மறுசுழற்சி திறனை உருவாக்கி, ஒவ்வொரு ஆண்டும் 40,000 டன் முக்கியமான கனிமங்களை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளது.


2025 நிதியாண்டில் இந்தியாவின் மின்கல தர முக்கியமான கனிமங்களுக்கான (battery-grade critical minerals) தேவை 800 டன்கள் ஆகும். மின்சார வாகனங்கள் மற்றும் சுத்தமான எரிசக்தி விரிவடைவதால், இந்த தேவை 2047-ம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 2.6 லட்சம் டன்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த மானியம் முக்கியமான கனிமங்களை பிரித்தெடுப்பதற்கு மட்டுமே பொருந்தும், கோபால்ட், மாங்கனீசு மற்றும் லித்தியம் ஆகியவற்றின் தூள் கலவையை உருவாக்கும் இடைநிலை செயல்முறைகளுக்கு அல்ல. பெரிய மறுசுழற்சி நிறுவனங்கள் ₹50 கோடி வரை பெறலாம். அதே நேரத்தில், சிறிய நிறுவனங்கள் ₹25 கோடி வரை பெறலாம். இந்த ஆதரவு மூலதனம் மற்றும் இயக்க செலவுகள் இரண்டையும் உள்ளடக்கியது. இந்தத் திட்டம் இந்தியாவின் இளம் மின்கல மறுசுழற்சித் துறையை ஊக்குவிக்குமா மற்றும் அமெரிக்காவில் உள்ள ரெட்வுட் மெட்டீரியல்ஸ் அல்லது அசென்ட் எலிமென்ட்ஸ் போன்ற பில்லியன் டாலர் வணிகங்களை உருவாக்க உதவுமா என்பது முக்கிய கேள்வி.


இந்தியாவின் மின்கல மறுசுழற்சி தொழில் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவானது. முறைசாரா ஆபரேட்டர்கள் (informal operators) ஆதிக்கம் செலுத்தும் பிற கழிவு நீரோடைகளைப் (waste streams) போலல்லாமல், மின்கல மறுசுழற்சிக்கு தொழில்நுட்பம் மற்றும் மூலதனம் இரண்டும் தேவை. இதன் காரணமாக, இவை முன்னிலை வகிக்கிறது. இருப்பினும், பெரும்பாலான மின்கல சேகரிப்பு இன்னும் முறைசாரா அமைப்புகள் வழியாகவே நடக்கிறது.


அட்டெரோ (Attero), லோஹம் க்ளீன்டெக் (Lohum Cleantech), பேட்எக்ஸ் எனர்ஜிஸ் (BatX Energies), மினி மைன்ஸ் (Mini Mines), எக்ஸிகோ (Exigo) உள்ளிட்ட சில நிறுவனங்கள் இன்று செயல்பாட்டில் உள்ளனர். இதில், ஒரு வருடத்திற்கு 200 டன்களுக்கும் குறைவான மொத்த சுத்திகரிக்கப்பட்ட உற்பத்தியை மேற்கொள்கின்றன. இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை கருப்புப் பொருளை உற்பத்தி செய்வதை நிறுத்துகின்றன. இதில், முக்கியமாக மின்கல தூள் ஆகும். சுத்திகரிப்பு மற்றும் உலோக பிரித்தெடுத்தலை சோதிக்க அவர்கள் உற்பத்தி ஆலைகளையும் (pilot plants) நடத்தி வருகின்றனர். சுத்திகரிப்பு தொழில்நுட்பம் உலகளவில் நன்கு நிறுவப்பட்டுள்ளது. ஆனால், ஆய்வகத்திலிருந்து சந்தைக்கு செல்வது கடினம். மறுசுழற்சியாளர்கள் பல வேறுபட்ட மின்கல வேதியியல்களை கையாள வேண்டும். அவர்கள், 90 சதவீதத்திற்கு மேல் மகசூல் பெற வேண்டும் மற்றும் விநியோகத்தின் தரத்தை பூர்த்தி செய்யும் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். இந்த செயல்முறை ஆபத்தானது மற்றும் தீ விபத்துக்குள்ளாகும். எனவே சிறிய விபத்துகள் கூட செயல்பாடுகளை நிறுத்தலாம்.


ஆண்டுக்கு 5,000 டன் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பது விலை உயர்ந்தது. ₹100 கோடிக்கு மேல் செலவாகும். கழிவுப்பொருள் (scrap) வாங்குவதற்கும் சுத்திகரிக்கப்பட்ட பொருளை விற்பனை செய்வதற்கும் இடையே மூன்று மாதங்கள் வரை ஆகலாம் என்பதால், பணி மூலதனத் தேவைகளும் அதிகமாக உள்ளன. விலைகள் கணிக்க முடியாதவை. ஏனெனில், அவை கழிவுப்பொருள் (scrap) அல்ல, புதிய கனிமங்களின் விலையைப் பின்பற்றுகின்றன. இதனால் லாபம் நிச்சயமற்றதாகிறது.


இருப்பினும், சுத்திகரிப்புக்கான யூனிட் பொருளாதாரம் மின்கல பொருளை விற்பனை செய்வதை விட மிகச் சிறந்ததாக உள்ளது. எடுத்துக்காட்டாக, 1 கிலோ மின்கல கழிவுப்பொருள்களின் (scrap) விலை ₹100–150 ஆகும். இரண்டு கிலோ கழிவுப்பொருள் ஒரு கிலோ மின்கல பொருளை உற்பத்தி செய்கிறது. இது சுமார் ₹300/கிலோவுக்கு விற்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட எந்த லாபத்தையும் அளிக்காது. இருப்பினும், கழிவுப்பொருள் (scrap) பொருளை சுத்திகரித்தால், 1 கிலோ ₹300 வரை மதிப்புள்ள சுமார் 20 கிராம் லித்தியத்தை உற்பத்தி செய்யலாம். இது நிக்கல், கோபால்ட் மற்றும் தாமிரத்தையும் உற்பத்தி செய்வதுடன், கூடுதலாக  ₹380–680 சேர்க்கிறது. சுத்திகரிப்பு உண்மையான மதிப்பை உருவாக்குகிறது என்பதை இது காட்டுகிறது.


VC (வென்ச்சர் கேபிட்டல்) ஆர்வம்


மின்கல மறுசுழற்சி ஒரே நேரத்தில் இரண்டு பிரச்சினைகளை தீர்க்கிறது. இது, வளர்ந்து வரும் மின்கல கழிவுகளை கையாளுவது மற்றும் வீட்டிலேயே கனிம தேவைகளை பூர்த்தி செய்வது போன்ற நிலைகளை முன்வைக்கிறது. அதனால்தான், இந்த துறை ஏற்கனவே வென்ச்சர் கேபிட்டலை ஈர்த்துள்ளது. லோஹம் க்ளீன்டெக் சீரிஸ் பி (Series B) நிதியுதவியை திரட்டியுள்ளது. அதே நேரத்தில், பேட்எக்ஸ் எனர்ஜிஸ், மெட்டாஸ்டேபிள் மெட்டீரியல்ஸ் (Metastable Materials) மற்றும் மினி மைன்ஸ் ஆரம்பகால மூலதனத்தை பெற்றுள்ளன. சுத்திகரிப்பு ஆலைகளை கட்டுவதற்கு VC-கள் மட்டும் வழங்க முடியாத அளவுக்கு அதிக மூலதனம் தேவைப்படுகிறது. சாத்தியமான பாதை என்னவென்றால், புத்தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் சுத்திகரிப்பை காட்டியதும், ரிலையன்ஸ், டாட்டா, அதானி, க்ளென்கோர் (Glencore) அல்லது CATL போன்ற இராஜதந்திர நிறுவனங்களில் வாங்குபவர்கள் நுழைவார்கள்.


உலகளவில், பல பெரிய மறுசுழற்சி நிறுவனங்கள் உள்ளன. சில துணிகர ஆதரவு பெற்ற யூனிகார்ன்கள், சில பொதுவில் பட்டியலிடப்பட்டுள்ளன. வென்ச்சர் ஆதரவு பெற்ற யூனிகார்ன்களில் அமெரிக்காவில் ”ரெட்வுட் மெட்டீரியல்ஸ்” (Redwood Materials) அடங்கும். கேத்தோடு ஆக்டிவ் மெட்டீரியல் (CAM) மற்றும் செப்பு படலம் தயாரிக்க இது $3.8 பில்லியனுக்கும் அதிகமாக திரட்டியுள்ளது. மற்றொன்று அசென்ட் தனிமங்கள் (Ascend Elements), இது $1.5 பில்லியனை திரட்டி பெரிய CAM ஆலைகளை உருவாக்குகிறது. கனடாவில் லித்தியம்-மறுசுழற்சி (Li-Cycle) ஒரு காலத்தில் $1.6 பில்லியனாக மதிப்பிடப்பட்டது. அதன் ரோசெஸ்டர் வசதியில் செலவு அதிகரிப்பு மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இது இப்போது போராடி வருகிறது.


பொதுவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், பெல்ஜியத்தில் உமிகோர் (Umicore) வினையூக்கிகள், மின்கலங்கள் மற்றும் மின்-கழிவுகளை மறுசுழற்சி செய்து புதிய பொருட்களை உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில், சீனாவில் ஜெம் (GEM) லித்தியம்-அயன் மின்கலங்கள், மின்-கழிவுகள் மற்றும் தொழில்துறை கழிவுப்பொருள்களை (scrap) கையாள்வதன் மூலம் கேத்தோடு பொருள் மற்றும் சிறப்பு உலோகக் கலவைகளை உற்பத்தி செய்கிறது.


இந்தியாவின் புதிய மறுசுழற்சி திட்டம் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும் : நிதி விநியோகத்திற்கு தெளிவான மற்றும் வெளிப்படையான செயல்முறையை உருவாக்க வேண்டும். மூலதன செலவை விட செயல்பாட்டு செலவு ஆதரவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால், பொருள் மீட்பு தொடங்கியவுடன் இது நிறுவனங்களை அளவிட ஊக்குவிக்கும். 

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (R&D) ஒரு பட்ஜெட்டை வழங்க வேண்டும். இது மறுசுழற்சியாளர்களுக்கு மட்டுமல்லாமல் சிறப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கும் தனிநபர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கும் திறக்கப்பட வேண்டும்.



Original article:

Share:

சர்க்கரை பானங்கள் மீது தீவினை வரி (Sin tax), விதிப்பது ஒரு ஆரோக்கியமான நடவடிக்கை. -அஞ்சு விர்மணி ரேகா ஹரிஷ்டிசிஏ அவ்னி

 இந்த வரி, அடையாள குறியீடுகளில் ஊட்டச்சத்து எச்சரிக்கைகள் மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் மீதான வரம்புகளுடன் இணைந்து, பொது நல்வாழ்வை மேம்படுத்த உதவும்.


இந்தியாவில் வாழ்க்கை முறை நோய்களை எதிர்த்துப் போராட உதவும் வகையில், அதிக பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை கலந்த பானங்கள் மீதான வரி விகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில் அதிகரித்துள்ளது. சர்க்கரை கொண்ட காற்றூட்டப்பட்ட பானங்கள், பழங்களை அடிப்படையாகக் கொண்ட கார்பனேற்றப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் கலந்த பானங்கள் மீதான ஜிஎஸ்டி 28% இலிருந்து 40% ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் மற்ற மது அல்லாத பானங்கள் இப்போது 18% க்கு பதிலாக 40% வரி விதிக்கப்படுகின்றன.  அதிக வரிகள் போன்ற நிதி நடவடிக்கைகள் "தேர்வு தண்டிப்பு" (punishing choice) பற்றியது அல்ல, மாறாக நுகர்வுக்கான உண்மையான சமூக செலவுகள் பெரும்பாலும் மறைக்கப்படும் சந்தையின் ஏற்றத்தாழ்வை சரிசெய்வது ஆகும். சோடாக்கள், குளிர்ந்த தேநீர், புத்துணர்ச்சி பானங்கள் மற்றும் அதுபோன்ற தயாரிப்புகள் மீது "தீவினை வரிகளை" (sin taxes) விதிப்பதன் மூலம், அரசாங்கம் ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் ஆரோக்கியம் முதன்மையானதாக உள்ளது.


சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் தொழில்களை ஒழுங்குபடுத்துவது எப்போதும் கடினம். பண விளையாட்டு தளங்களை குறிவைத்து உருவாக்கப்பட்ட இணையவழி விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம், 2025 தொடர்பான விவாதங்கள் இந்த சவாலை காட்டுகின்றன. இது அரசாங்கத்தின் அத்துமீறல் என்றும், வேலை இழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், குறைந்த வளர்ச்சி கொண்ட பொருளாதாரத்தை உருவாக்கக்கூடும் என்றும் விமர்சகர்கள் வாதிட்டனர். இருப்பினும், போதைப்பொருள், நிதி இழப்பு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் போன்ற கட்டுப்பாடற்ற சந்தைகளின் கடுமையான தீங்குகளை அவர்கள் பெரும்பாலும் கவனிக்கவில்லை.


சர்க்கரை பானங்கள் அதிகமாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. மேலும், அவை குழந்தைகளுக்கு எளிதில் கிடைக்கின்றன. இருப்பினும், அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். 2019ஆம் ஆண்டு BMJஇல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஒரு நாளைக்கு நான்கு முறைக்கு மேல் பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது இறப்பு அபாயத்தை 62 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு லான்செட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சர்க்கரை பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் புற்றுநோய் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்கு முக்கிய பங்களிப்பதாக காட்டப்பட்டுள்ளது. சர்க்கரை போதைப்பொருள், மேலும் வலுவான விளம்பரங்களுடன் இணைந்து, சர்க்கரை பானங்கள் மீண்டும் மீண்டும் உட்கொள்வதை ஊக்குவிக்கின்றன. இயற்கை உணவுகளைப் போலல்லாமல், இந்த தயாரிப்புகள் குறிப்பாக கவர்ச்சிகரமானதாகவும் எதிர்க்க கடினமாகவும் இருக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.


உடல் பருமன் அதிகரிக்கும்


அதிகரித்து வரும் உடல் பருமன், வகை 2 நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் ஆரம்பகால இறப்புகள் ஆகியவற்றுக்கான செலவுகளை நிறுவனங்கள் ஏற்கவில்லை. மாறாக குடும்பங்கள் மற்றும் பொது சுகாதார அமைப்புகளே ஏற்கின்றன. அதிகரித்து வரும் உடல் பருமனால், குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே, இந்தியா கடுமையான உடல்நலம் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. அதன் விளைவுகளைக் கையாள முடியாத ஏழை சமூகங்களிடையே இந்தப் பிரச்சினை மோசமாக உள்ளது. 


ICMR-NIN உணவுமுறை வழிகாட்டுதல்கள் (2024) படி, இந்தியாவின் நோய் சுமையில் 56 சதவீதத்திற்கும் அதிகமானவை ஆரோக்கியமற்ற உணவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த காரணத்திற்காக, பொது சுகாதார நிபுணர்கள் நீண்ட காலமாக தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்கள் மீதான "விரும்பதாகத வரிகளை" ஆதரித்து வருகின்றனர். அவை சிறிய ஊட்டச்சத்தை வழங்குகின்றன. ஆனால், பெரும் தீங்கு விளைவிக்கின்றன. மக்களுக்கு ஊட்டச்சத்துக்காக சேர்க்கப்பட்ட சர்க்கரை தேவையில்லை என்றும், சர்க்கரை பானங்களின் விலையை குறைந்தது 20 சதவீதம் அதிகரிப்பது அவர்களின் நுகர்வைக் குறைக்கும் என்றும் WHO குறிப்பிட்டுள்ளது.


சமீபத்திய தரவுகள் அவசர நடவடிக்கை தேவை என்பதைக் காட்டுகின்றன. பிரதமர் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஆய்வறிக்கை, வீட்டுச் செலவினங்களை பகுப்பாய்வு செய்து, அனைத்து வருமானப் பிரிவுகளிலும் உள்ள மக்கள் அதிக அளவில் பேக் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்குவதாகக் கண்டறிந்துள்ளது. கிராமப்புறங்களில், கீழ்மட்ட 20% குடும்பங்கள் 2011-12ஆம் ஆண்டில் 3.2%ஆக இருந்த செலவினத்தை 2022-23ஆம் ஆண்டில் 5.5% ஆகவும், மேல்மட்ட 20% குடும்பங்கள் 4.7% இலிருந்து 6.9% ஆகவும் அதிகரித்துள்ளன. நகர்ப்புறங்களில், கீழ்மட்ட 20% குடும்பங்கள் 3.7% இலிருந்து 6.4% ஆகவும், மேல்மட்ட 20% குடும்பங்கள் 6.1% இலிருந்து 8.2% ஆகவும் உயர்ந்துள்ளன. தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளின் இந்த வளர்ந்து வரும் நுகர்வு கவலைக்குரியது. ஏனெனில், இது குடும்ப ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது, சுகாதாரச் செலவுகளை அதிகரிக்கிறது மற்றும் உற்பத்தித்திறனைக் குறைக்கிறது.


GST கவுன்சிலின் சமீபத்திய துணிச்சலான நடவடிக்கை இந்தியாவின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார உத்திகளை ஆதரிக்கிறது. அத்தகைய உணவுகள் மீதான வரிகளை உயர்த்துவது முக்கியமாக வருவாய்க்காக அல்ல. இது ஒரு பொது சுகாதார தலையீடாகும். தொழில்துறை எதிர்ப்பை எதிர்பார்த்த போதிலும், குறுகிய கால நிறுவன லாபத்தை விட குடிமக்களின் நீண்டகால ஆரோக்கியத்தை அரசாங்கம் மதிப்பதாகக் காட்டியுள்ளது. இது பிரதமர் மோடியால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்துடன் (Swasth Bharat mission) ஒத்துப்போகிறது. இது ஆரோக்கியமான உணவு முறைகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் வலுப்படுத்துகிறது. இது தினை மற்றும் பிற கரிமப் பொருட்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளின் உற்பத்தி மற்றும் நுகர்வை ஊக்குவிக்கிறது.


சர்க்கரை அட்டவணைகள்


போஷன் 2.0, பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மான் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM-POSHAN)), மற்றும் ”சரியாக சாப்பிடுங்கள் என்ற இந்தியாவின் பிரச்சாரம்” (Eat Right India campaign) போன்ற முதன்மைத் திட்டங்கள், சத்தான உணவுக்கான அணுகலை விரிவுபடுத்தவும், சமச்சீர் உணவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மிகவும் பாதிக்கப்படக்கூடிய வயதினரிடையே ஊட்டச்சத்து விழிப்புணர்வை உறுதி செய்வதற்காக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில் சர்க்கரை தொடர்பான அட்டவணைகளை கட்டாயமாக்கியது. அனைத்து பள்ளிகளிலும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் பிற பொதுவான இடங்களில் தகவல் காட்சிகள், அதிக சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கும், ஆரோக்கியமான மாற்று வழிகளை பரிந்துரைப்பதற்கும் நோக்கமாக உள்ளது. சுகாதார கல்வியறிவை தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம், ஆரோக்கியமான விருப்பங்களை மலிவு விலையில் ஆக்குவதன் மூலம், மற்றும் தீங்கு விளைவிக்கும் UPF நுகர்வுகளை ஊக்கப்படுத்துவதன் மூலம், இந்தியா ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குகிறது.


இந்தப் பின்னணியில், வரிவிதிப்பு என்பது, சர்க்கரை கலந்த பானங்களின் (SSB) உண்மையான சமூகச் செலவை அவற்றின் விலையில் இணைத்து, ஆரோக்கியமான தேர்வுகளைச் செய்வதற்கும், சந்தைகளை அதிகப் பொறுப்பான தயாரிப்பு கண்டுபிடிப்புகளை நோக்கித் தள்ளுவதற்கும் அதிகாரம் அளிக்கிறது. எவ்வாறாயினும், பொதுவாக UPF-ஐச் சமாளிக்க கூடுதல் அழுத்தம் தேவைப்படுகிறது. இதில், கவலைக்குரிய பிற ஊட்டச்சத்துக்களான உப்பு மற்றும் கொழுப்பை, குறிப்பாக முன்-தொகுப்பு செய்யப்பட்ட உணவுகளில் (pre-packaged foods) பாதுகாப்பான நுகர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சமையல் எண்ணெயை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என்று இந்தியர்களுக்கு மோடி அறிவுறுத்தியது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். NAPi ஆனது, மொழித் தடைகளை மிஞ்சும் கடுமையான முன்-தொகுப்பு அடையாள குறியீடுகள் (Front-of-Package Labelling (FOPL)) ஊட்டச்சத்து எச்சரிக்கைகள் மற்றும் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகள் மீதான ஜிஎஸ்டியை அதிகரித்ததன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.


உணவுகள் மீதான வரி நடவடிக்கைகள் வளர்ந்த நாடுகளில் செயல்படுத்துவது மிகவும் கடினம். அதிக வருமானம் உள்ள நாடுகளில் கூட கடினம்; இந்தியாவில், சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பாதிக்கும் என்ற கவலைகள் காரணமாக இது இன்னும் கடினமாக உள்ளது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை, FOPL எச்சரிக்கைகள், நுகர்வோர் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்துதல், சந்தைப்படுத்தல் விதிமுறைகளை கடுமையாக்குதல் மற்றும் குறிப்பாக குழந்தைகளை இலக்காகக் கொண்ட தவறான விளம்பரங்களுக்கு வலுவான தடைகளை பரிந்துரைக்கிறது.


சிலி முதல் மெக்சிகோ வரையிலான சர்வதேச அனுபவம், தெளிவான எச்சரிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான கல்வியுடன் இணைந்தால் வரிகள் சிறப்பாக செயல்படும் என்பதைக் காட்டுகிறது. பலதரப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சீர்திருத்தம், இந்தியாவின் உணவு மற்றும் சுகாதாரப் பழக்கவழக்கங்களில் ஒரு தலைமுறை மாற்றத்தைத் தொடங்கக்கூடும்.


விர்மானி புது தில்லியில் உள்ள மேக்ஸ் ஸ்மார்ட் & ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனைகளில் குழந்தை மருத்துவ உட்சுரப்பியல் இயக்குநராக உள்ளார். ஹரிஷ் பொது நலனுக்கான ஊட்டச்சத்து  உறுப்பினராகவும், ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முன்னாள் பேராசிரியராகவும், குழந்தை மருத்துவத் தலைவராகவும் உள்ளார். அவ்னி இந்திய அரசின் நிதி அமைச்சகத்தில் உதவி ஊடக ஆலோசகராக உள்ளார்.



Original article:

Share: