தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு என்பது இராஜதந்திரத்திற்கும் மேல் -வாணி ராவ், எலிசபெத் ஃபாரே

 தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு (South-South and Triangular Cooperation (SSTC)) என்பது மிகவும் சமமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான பாதையாகும்.


2030ஆம் ஆண்டு நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development) அடைய மூன்றில் ஒரு பங்கு நேரம் மட்டுமே மீதமுள்ள நிலையில், அவசரம் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக, உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்பதில் இது காணப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 12 அன்று தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு (South-South and Triangular Cooperation (SSTC)) தினமாகக் கொண்டாடுகிறது. 


வளரும் நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப உதவியைத் தொடங்கிய 1978ஆம் ஆண்டு பியூனஸ் அயர்ஸ் செயல் திட்டத்தை (Buenos Aires Plan of Action (BAPA)) இந்த நாள் நினைவுகூர்கிறது. பியூனஸ் அயர்ஸ் செயல் திட்டம் என்பது உதவிக்கான திட்டத்தைவிட அதிகமானதாகும்; இது நட்பு, மரியாதை மற்றும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வது போன்ற கருத்துக்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, இந்த யோசனைகள் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் அடித்தளமாக மாறியுள்ளன. மேலும், உலகம் மாறிவரும் நிலையில், ஒன்றாக வேலை செய்வதற்கான புதிய வழிகள் தேவைப்படுவதால் இப்போது இது இன்னும் முக்கியமானது.


புவிசார் மோதல்கள், காலநிலை மாற்றம் மற்றும் வளர்ந்துவரும் சமத்துவமின்மையை எதிர்கொண்டுள்ள நிலையில், வழக்கமான உதவிக்கு தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு முக்கியமானதாக மாறியுள்ளது. இது செலவு குறைந்ததாகவும், நகலெடுக்க எளிதாகவும், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்றதாகவும் உள்ளது. மனிதாபிமான மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கான நிதி குறைந்து வருவதால் தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.


இந்தியாவின் பங்கு மற்றும் தத்துவம்


இந்தியாவின் வளர்ச்சி, உலகம் ஒரு பெரிய குடும்பம் என்ற "உலகம் ஒரே குடும்பகம் (Vasudhaiva Kutumbakam) என்ற கருத்தைக் காட்டுகிறது. உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்பு வலைகளில் ஒன்றைக் கொண்ட நாடாகவும், உணவு உபரி பொருளாதாரத்திற்கு மாறிய நாடாகவும், இறையாண்மை, உள்ளடக்கம் மற்றும் பரஸ்பர மரியாதைக்கான முன்னணிக் குரலாக SSTC-யை ஆதரிக்கும் தனித்துவமான நிலையில் இந்தியா உள்ளது.


இந்தியாவின் பங்களிப்புகள் பரந்த அளவில் உள்ளன: உலகளாவிய தெற்கு உலக தெற்கின் குரல் மாநாட்டை(Voice of the Global South Summit) நடத்துதல்; ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கான அதன் G-20 தலைமையின் போது முயற்சிகளை வழிநடத்துதல்; வெளியுறவு அமைச்சகத்தில் மேம்பாட்டு கூட்டாண்மை நிர்வாகத்தை நிறுவுதல்; மற்றும் 160-க்கும் மேற்பட்ட நாடுகள் திறன்களை வளர்க்க உதவும் ஒரு திட்டத்தை நடத்துதல் போன்ற பல முக்கியப் பங்களிப்புகளை இந்தியா செய்துள்ளது. 


இந்தியா-ஐ.நா.மேம்பாட்டு கூட்டாண்மை நிதியை இந்தியா அறிமுகப்படுத்தியது. ஆதார் மற்றும்  ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)) போன்ற அதன் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மாதிரிகளை உலகளவில் ஊக்குவித்தது. மேலும், பல பன்முக தளங்கள் மூலம் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துகிறது.


இந்தியா புதுமைக்கான மையமாக உள்ளது, டிஜிட்டல் மாற்றம், காலநிலை மீள்தன்மை, சுகாதாரம் மற்றும் நிலையான நிதியுதவி ஆகியவற்றிற்கு மலிவு விலையில், உள்ளூரில் பொருத்தமான தீர்வுகளை உருவாக்குகிறது.


இந்தச் சூழலில், ஐ.நா. நிறுவனமான உலக உணவுத் திட்டத்துடனான (World Food Programme (WFP)) இந்தியாவின் உற்பத்தித் திறன் கூட்டாண்மை, பொது முதலீட்டிற்கான வாய்ப்புகளை உருவாக்கி இந்தியா முழுவதும் சிறந்த நடைமுறைகளை அளவிடும் புதுமைகள் மற்றும் தீர்வுகளின் கூட்டு வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். 60 ஆண்டுகளுக்கும் மேலாக, டிஜிட்டல் கருவிகள், சிறந்த உணவு விநியோகம் மற்றும் காலநிலை மாற்றத்தைக் கையாளக்கூடிய விவசாய முறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, உலகளவில் பயனுள்ள உலக உணவுத் திட்டங்களை இந்தியா சோதித்துப் பார்த்தது. 


அன்னபூர்த்தி அல்லது தானிய தானியங்கி இயந்திரம் (Automated Teller Machine (ATM)), உணவு பொது விநியோக முறைக்குள் தேசிய விநியோகச் சங்கிலியை மேம்படுத்துதல், பெண்கள் தலைமையிலான வீட்டிற்கு எடுத்துச் செல்லும் குடிமைப் பொருட்கள் திட்டம் (Take-Home Ration programme) மற்றும் தேசிய அரிசி செறிவூட்டல் திட்டம் (national rice fortification project) போன்ற குறிப்பிடத்தக்க இந்திய கண்டுபிடிப்புகளை முன்னோட்டமாக செயல்படுத்த இந்தியாவும் WFP-யும் இணைந்து செயல்பட்டன. இந்தத் திட்டங்கள் இந்தியாவில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த உதவின. மாற்ற வளரும் நாடுகளுக்கும் பிரதிபலிக்கக்கூடிய மாதிரிகளை வழங்குகின்றன.


கூட்டாண்மைகளை மறுவரையறை செய்தல்


இன்றைய சவால்களின் சிக்கலான தன்மை பன்முகப்படுத்தப்பட்ட கூட்டாண்மைகளைக் கோருகிறது. முக்கோண ஒத்துழைப்பு வளரும் நாடுகளையும் நன்கொடையாளர்களையும் ஒன்றிணைத்து நல்ல யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், வளங்களைக் கண்டறியவும், நம்பிக்கையை வளர்க்கவும் உதவுகிறது. 


கூட்டாண்மைகளில் அரசாங்கங்கள் மட்டுமல்ல, சமூகக் குழுக்கள், வணிகங்கள் மற்றும் உள்ளூர் மக்களும் அடங்கும். இந்த வழியில் ஒன்றாகச் செயல்படுவது மக்களின் தேவைகளை மையமாகக் (people-centred development models) கொண்ட சிறந்த, நீடித்த தீர்வுகளை உருவாக்குகிறது.


தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு (South-South and Triangular Cooperation (SSTC)) செலவுகளைக் கவனமாகக் கையாளுவதாலும், இதே போன்ற சூழ்நிலைகளில் இதைப் பயன்படுத்த முடியும் என்பதாலும், செலவழிக்கப்பட்ட பணத்திற்கு சிறந்த பலன்களைத் தருகிறது. மக்களுக்கு உதவுவதற்கும் மேம்பாட்டிற்கும் நிதி குறைந்து வருவதால் இது மிகவும் முக்கியமானது.


கடந்த 30-ஆண்டுகளாக, 47 அரசாங்கங்கள் தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான ஐ.நா. நிதிக்கு பங்களித்துள்ளன. அவை 70-க்கும் மேற்பட்ட நாடுகளை அடைந்து 155 நாடுகளில் உள்ள மக்களுக்கு பயனளித்த முயற்சிகளை ஆதரித்தன. 2017ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, இந்தியா-ஐ.நா. மேம்பாட்டு கூட்டாண்மை நிதியம் 56 வளரும் நாடுகளில், குறிப்பாக குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் சிறிய தீவு வளரும் நாடுகளில் 75-க்கும் மேற்பட்ட உருமாறும், தேவை சார்ந்த திட்டங்களுக்கு நிதியளித்துள்ளது.


2024ஆம் ஆண்டில், நிலையான வளர்ச்சி இலக்கு 2: பூஜ்ஜிய பசியுடன் இணைந்த தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு திட்டங்களை ஆதரிப்பதற்காக, உலக உணவுத் திட்டத்துடன் (World Food Programme (WFP)) உலகளாவிய தெற்கு நாடுகள் மற்றும் தனியார் துறையிலிருந்து $10.9 மில்லியனுக்கும் அதிகமான நிதியைத் திரட்டியது. 


ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள் நேபாளத்தில் அரிசி வலுவூட்டல் மற்றும் உணவு விநியோகத்தை மேம்படுத்துதல் போன்ற சமீபத்திய இந்தியா-WFP திட்டங்கள் மற்றும் லாவோஸில் ஐ.நா. இந்தியா மேம்பாட்டு நிதித் திட்டம், திட்டங்களை உண்மையான உதவியாக மாற்றுவதற்கான வலுவான பகிரப்பட்ட வாக்குறுதியைக் காட்டுகின்றன.


தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான 2025 ஐ.நா. தினத்திற்கான கருப்பொருள் - ‘தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு’ மூலம் புதிய வாய்ப்புகள் மற்றும் புதுமை’ என்று நாம் எதிர்கொள்ளும் சவாலைக் காட்டுகிறது. உண்மையான முன்னேற்றத்தை அடைய, நமக்கு வலுவான அமைப்புகள், போதுமான பணம் மற்றும் புதிய யோசனைகளை முயற்சிக்க தைரியம் தேவைப்படுகிறது. 


அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், நிதிக்கான அணுகலை மேம்படுத்தவும், கற்றுக்கொள்வதையும் பொறுப்புடன் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் மீள்தன்மை ஆகியவற்றில் பிராந்திய மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இந்தியா தனது தலைமையை உறுதிப்படுத்துகிறது.


கூட்டாண்மையின் புதிய உணர்வு


ஒவ்வொரு நாட்டின் பங்கையும் மதிக்கும், நியாயத்தை ஊக்குவிக்கும் மற்றும் புதிய யோசனைகளை ஊக்குவிக்கும் புதிய கூட்டாண்மைகள் உலகிற்குத் தேவைப்படுகிறது. தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு (South-South and Triangular Cooperation (SSTC)) என்பது வெறும் சொல் அல்ல - இது உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும், பில்லியன் கணக்கான மக்களுக்கு உதவுவதற்கும், அனைவருக்கும் நியாயமான, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் ஒரு வழியாகும்.


வாணி ராவ் இத்தாலிக்கான இந்திய தூதராக உள்ளார். எலிசபெத் ஃபாரே, இந்தியாவில் உலக உணவுத் திட்டத்தின் நாட்டு இயக்குநர்.



Original article:

Share:

தலைமுறை இடைவெளியைக் குறைத்தல் -கிரண் கர்னிக், ரோஹித் பிரசாத்

 இந்தியாவின் மக்கள்தொகை மாற்றம் ஒரு தேர்வை முன்வைக்கிறது: வயதானதை நிர்வகிக்க வேண்டிய சவாலாகப் பார்ப்பதா அல்லது நீண்டகாலமாக நமது பலமாக இருந்த தலைமுறைகளுக்கு இடையேயான தொடர்பை மீண்டும் உறுதிப்படுத்தவும் புதுப்பிக்கவும் ஒரு வாய்ப்பாகப் பார்ப்பதா என்பது தான்.


'தலைமுறை இடைவெளி'  (generation gap) என்ற சொல் பெரும்பாலும் வயதுக் குழுக்களிடையே ஒரு பெரிய இடைவெளியைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. ஆனால், இந்தியாவில், வலுவான குடும்ப விழுமியங்களும் மரபுகளும் தலைமுறைகளை இணைக்க உதவியுள்ளன. இருப்பினும், இன்று நாடு மக்கள்தொகை ரீதியாக ஒரு மாற்றங்களைக் கண்டு வரும் நிலையில், இந்த இணைப்புகள் மாற்றத்தின் அழுத்தங்களையும் டிஜிட்டல் ஏற்றத்தையும் தாங்குமா அல்லது மாறிவரும் தேவைகள் மற்றும் உண்மைகளின் கீழ் செயலிழந்து போகுமா என்று ஒருவர் கேட்க வேண்டும்.


இந்தியாவின் மக்கள்தொகை எதிர்பார்த்ததைவிட வேகமாக வளர்ந்து வருகிறது. இன்று, 10%-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். மேலும், 2050-ஆம் ஆண்டில், இது 20%-ஆக உயரக்கூடும் - ஒவ்வொரு ஐந்து நபர்களில் ஒருவர் வயதானவர்களாக மாறுவர். இது எண்ணிக்கையைப் பற்றியது அல்ல, நாம் யார், குடும்பங்களாய் எவ்வாறு வாழ்கிறோம், ஒருவருக்கொருவர் எவ்வாறு ஆதரிக்கிறோம், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் இருவருக்கும் அன்றாட வாழ்க்கை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.


உணர்ச்சி ரீதியான பாதிப்பு


'வயதானதைப் புரிந்துகொள்வது மற்றும் உணர்தல்' (Understanding Intergenerational Dynamics & Perceptions on Ageing) என்ற தலைப்பில் ஹெல்ப் ஏஜ் இந்தியா நடத்திய சமீபத்திய ஆய்வு, ஒரு முரண்பாடான எண்ணிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்தக் கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் 10 நகரங்களில் இருந்து 5,700-க்கும் மேற்பட்ட பதிலளித்தவர்களை (18-30 வயதுக்குட்பட்ட 70% இளைஞர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் 30%) உள்ளடக்கியது.


இளம் இந்தியர்கள் பெரும்பாலும் தங்கள் மூத்த குடிமக்களை ஞானிகளாக  51% பேர் கூறுகிறார்கள். மரியாதைக்கு தகுதியானவர்களாகவும் 43% பேர் பார்க்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், அதே நேரத்தில், பலர் அவர்களை தனிமையாகவும் 56% பேர் மற்றும் சார்புடையவர்களாகவும் 48% பேர் விவரிக்கிறார்கள். இளைஞர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதற்கும் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதற்கும் இடையே தெளிவான இடைவெளியை இது காட்டுகிறது - எங்களுக்கு திட்டம் சொல்லப்படுகிறது, இருப்பினும் எங்களது கருத்துக்கள் கேட்கப்படுவதில்லை என்று பல வயதானவர்கள் அடிக்கடி கூறுகிறார்கள்.


இது ஒரு உணர்ச்சி இடைவெளிக்கு வழிவகுக்கிறது. இதை எண்கள் ஓரளவு மட்டுமே விளக்குகின்றன. பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்ட வயதானவர்கள் 54% பேர் வயதானதைப் பற்றிய எதிர்மறை உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். இது பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாத உணர்வில் வேரூன்றியுள்ளது. தொழில்நுட்பம், ஒரு பாலமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, மற்றொரு போர்க்களமாக மாறுகிறது. 


குழந்தைகள் இனி உட்கார்ந்து பேசப்போவதில்லை. அவர்கள் எப்போதும் தங்கள் தொலைபேசிகளில் இருக்கிறார்கள் என்பது பெரியவர்கள் அடிக்கடி வெளிப்படுத்தும் மற்றொரு உணர்வாகும். 78% இளைஞர்கள் டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதில் வயதானவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்று நினைத்தாலும், 71% வயதானவர்கள் இளைஞர்கள் பொறுமையிழந்து, அவர்களுக்குப் போதுமான உதவி செய்யாததால் சிரமப்படுவதாகக் கூறுகிறார்கள்.


இணைப்புகளை உருவாக்குதல்


சில மோதல்கள் இருந்தபோதிலும், வயதானவர்களும் இளையவர்களும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்வார்கள் என்று நம்பிக்கையுடன் உள்ளனர். வயதானவர்களில் 49% பேர் மற்றும் பெரும்பாலான இளைஞர்களில் 57% பேர் முன்னேற்றம் நிச்சயமாக ஏற்படும் என்று நினைக்கிறார்கள்.

 தரமான நேரத்தை ஒன்றாகச் செலவிடுவதும், திறந்த, மரியாதைக்குரிய பேச்சுக்களை நடத்துவதும் ஒன்றாக இணைந்து செயல்படுவதறகான சிறந்த வழிகள் என்று அவர்கள் (84% பெரியவர்கள், 86% இளைஞர்கள்) ஒப்புக்கொள்கிறார்கள். இந்த நுண்ணறிவு பகிரப்பட்ட உணவுகள், சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்களின் பாரம்பரிய இந்திய நெறிமுறையுடன் எதிரொலிக்கிறது. உண்மையில், இந்த தருணங்களில்தான் சொந்தம் என்பது உருவாகிறது, தனிமை தடுக்கப்படுகிறது.


வயது தொடர்பான கவலைகள், தலைமுறை தலைமுறையாக ஒரே மாதிரியாக இருப்பது தெரியவந்துள்ளது. தனிமை மிகப்பெரியதாக உள்ளது. இதை 69% இளைஞர்களும் 68% வயதானவர்களும் மேற்கோள் காட்டுகின்றனர். அதைத் தொடர்ந்து உடல்நலம் மற்றும் நிதி பாதுகாப்பின்மை பற்றிய கவலைகள் உள்ளன. குடும்பத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கையின் இலட்சியம் வலுவாக உள்ளது, 10 இளைஞர்களில் 9 பேர் (88%) வயதான காலத்தில் குடும்பத்துடன் வாழ விரும்புகிறார்கள். 


இது அவர்களின் பெரியவர்களின் தேவைகளை பிரதிபலிக்கிறது - அவர்களில் 83% பேர் தற்போது குடும்பத்துடன் வாழ்கிறார்கள் அல்லது வாழத் திட்டமிடுகிறார்கள். நகரமயமாக்கல் மற்றும் இடம்பெயர்வு அவர்களின் மீள்தன்மையை சோதிக்கும் போதும், இத்தகைய ஒருங்கிணைப்பு தலைமுறைகளுக்கு இடையேயான குடும்பங்களின் தொடர்ச்சியான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


இந்த பிணைப்புகள் ஏன் முக்கியம்? உணர்ச்சிபூர்வமான ஆதரவைவிட, பல நவீன சமூகங்களில் காணப்படும் தனிமையிலிருந்து பாதுகாக்க குடும்பம் உதவுகிறது. தனிமையே மிகப்பெரிய பிரச்சனை என்று கூறும் 47% வயதானவர்களுக்கு, குடும்பம் அவர்களுக்கு ஆறுதலையும் நிலைத்தன்மையையும் தருகிறது. இந்த ஆதரவு இரு வழிகளிலும் செல்கிறது - பெரியவர்கள் குழந்தை பராமரிப்புக்கு ஞானத்தையும் உதவியையும் பகிர்ந்து கொள்கிறார்கள். 


அதே, நேரத்தில் இளைஞர்கள் நவீன வாழ்க்கை மற்றும் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ள வயதானவர்களுக்கு உதவுகிறார்கள். பொறுமையுடன் அணுகும்போது, ​​தொழில்நுட்பமே ஒரு உதவியாக மாறும். கோவிட்-19 தொற்றுநோய் போன்ற கடினமான காலங்களில், குடும்ப ஒற்றுமை மிகவும் முக்கியமானதாக மாறியது. முறையான பராமரிப்பு முறைகளில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்தது.


செயலுக்கான நோக்கம்

இருப்பினும், நல்ல நோக்கங்களை நிலையான செயலாக மாற்றுவதற்கு நினைவேக்கங்களைவிட (nostalgia) அதிகம் தேவைப்படுகிறது. உதாரணமாக, டிஜிட்டல் உள்ளடக்கம் (Digital inclusion), என்பது அணுகலை வழங்குவதைவிட அதிகம் தேவைப்படுகிறது; அதற்கு பொறுமை மற்றும் வயதானவர்களின் தேவைகளுக்கு ஏற்ற கற்றலும் தேவைப்படுகிறது. பெரும்பாலான இளம் இந்தியர்கள் (75%) வயதானவர்களுக்கு உதவ விரும்புகிறார்கள். 


ஆனால், அவர்கள் பயனுள்ள வகையில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை. குடும்பத்தைவிட அதிகமாக ஆதரிக்கும் சமூகங்கள் முக்கியம். குறிப்பாக வீடு என்ற யோசனை மாறும்போது இது உடனடியாக தேவைப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இன்னும் குடும்ப பராமரிப்பை விரும்புகிறார்கள் என்றாலும், 30% இளைஞர்கள் பராமரிப்பு இல்லங்களை ஒரு விருப்பமாகப் பார்க்கிறார்கள், 19% வயதானவர்ககள் மட்டுமே உள்ளனர்.


 இது துண்டு துண்டாக இல்லாமல், இணைப்புகளை வளர்க்கும் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட தலைமுறைகளுக்கு இடையேயான இடைவெளிகளின் தேவையை இது குறிக்கிறது.


கல்வியும் ஒரு பங்கை வகிக்கிறது. வாழ்நாள் முழுவதும் வயதானது பற்றி அனுதாபம், அக்கறை மற்றும் எழுத்தறிவைக் கட்டியெழுப்புவது வயது சார்ந்த அணுகுமுறைகளை எதிர்கொள்ளவும் வரவிருக்கும் மாற்றத்திற்கு சமூகத்தை தயார்படுத்தவும் உதவும். கொள்கை கட்டமைப்புகள் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், புதிய பராமரிப்பு மாதிரிகளைப் புதுமைப்படுத்தி, அவற்றை மாற்றியமைக்க வேண்டும்.


இந்தியாவின் மக்கள்தொகை மாற்றம்: வயதானதை நிர்வகிக்க வேண்டிய சவாலாகப் பார்ப்பதா அல்லது நீண்டகாலமாக நமது பலமாக இருந்த தலைமுறைகளுக்கு இடையேயான தொடர்பை மீண்டும் உறுதிப்படுத்தவும் புதுப்பிக்கவும் ஒரு வாய்ப்பாகப் பார்ப்பதா என்ற ஒரு தேர்வை முன்வைக்கிறது. சான்று, ஆபத்து மற்றும் வாக்குறுதி இரண்டையும் பரிந்துரைக்கின்றன. தனிநபர்களாகவோ, சமூகங்களாகவோ அல்லது தலைவர்களாகவோ இருந்தாலும், தலைமுறைகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுவாக வைத்திருப்பதும், எதிர்காலத்திற்கு அவற்றை இன்னும் சிறப்பாக்குவதும் நமது பொறுப்பாகும்.


கிரண் கார்னிக், ஹெல்ப் ஏஜ் இந்தியா தலைவர்; ரோஹித் பிரசாத், தலைமை நிர்வாக அதிகாரி, ஹெல்ப் ஏஜ் இந்தியா



Original article:

Share:

நீர் பாதுகாப்பு திட்டங்களுக்கான செலவினத்தை புதிய MGNREGA திருத்தம் எவ்வாறு வலியுறுத்துகிறது? -ஹரிகிஷன் ஷர்மா

 நிலத்தடி நீர் எடுப்பின் நிலையை அடிப்படையாகக் கொண்டு - ‘அதிக சுரண்டப்பட்ட’ (Over-exploited), ‘முக்கியமான’ (Critical), ‘அரை-முக்கியமான’ (Semi-critical) மற்றும் ‘பாதுகாப்பான’ (Safe) - தொகுதி மட்டத்தில் குறைந்தபட்ச செலவினத்தை விதிமுறைகள் குறிப்பிட்டுள்ளன.


கிராமப்புற தொகுதிகள் அல்லது துணைப்பிரிவுகளில் நீர் பாதுகாப்பு மற்றும் அறுவடை பணிகளுக்கு குறைந்தபட்ச தொகை செலவிடப்படும் வகையில், 2005ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MG-NREGA)) முதலாவது அட்டவணையை ஒன்றிய அரசு திருத்தியுள்ளது. ஊரக மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Rural Development (MoRD)) செப்டம்பர் 23 அன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.


இப்போது இந்த மாற்றத்தைத் தூண்டியது எது, எந்த மாநிலங்கள் இதனால் பயனடைய வாய்ப்புள்ளது? 


MGNREGA-வின் அட்டவணை-I என்றால் என்ன?


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்ட  விதிமுறைகளின்படி, ஒவ்வொரு மாநில அரசும் ஊரக பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு தேவையின் அடிப்படையில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் உத்தரவாத வேலைவாய்ப்பை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.


திட்டத்தின் குறைந்தபட்ச அம்சங்கள் சட்டத்தின் அட்டவணை-I-ல் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், வேலை வழங்குவதற்காக மேற்கொள்ளக்கூடிய அனுமதிக்கப்பட்ட பொதுப் பணிகளின் பட்டியலும் இதில் உள்ளது. சட்டத்தில் எந்த திருத்தமும் செய்ய நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படும் அதே வேளையில், அரசாங்கம் ஒரு அறிவிப்பு மூலம் அட்டவணையில் மாற்றங்களைச் செய்யலாம். இன்றுவரை, அட்டவணை சுமார் 24 முறை திருத்தப்பட்டுள்ளது.


சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் என்ன?


பத்தி 4-ன் கீழ் உள்ள துணைப்பத்தி (2)-க்குப் பிறகு புதிய விதிப்பிரிவை சேர்க்க ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. துணைப்பத்தி (2) பணிகளின் முன்னுரிமை வரிசை (order of priority of works) ஒவ்வோர் கிராம பஞ்சாயத்தாலும் கிராம சபை கூட்டங்களில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இது உள்ளூர் பகுதியின் சாத்தியக்கூறுகள், தேவைகள் மற்றும் வளங்களை கருத்தில் கொண்டு செய்யப்பட வேண்டும். கிராம சபைகள் என்பது கிராமப்புறத்தில் உள்ள அனைத்து பெரியவர்களையும் உள்ளடக்கிய ஒரு உள்ளூர் சபை ஆகும்.


மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளில் குறைந்தபட்சம் 60 சதவீதம் செலவின் அடிப்படையில் நிலம், நீர் மற்றும் மரங்களின் வளர்ச்சி மூலம் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளுடன் நேரடியாக இணைக்கப்பட்ட உற்பத்தி சொத்துக்களை உருவாக்குவதற்கு இருக்க வேண்டும் என்பதை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (District Programme Coordinator) உறுதி செய்ய வேண்டும் என்று ஜூலை 2024ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (National Democratic Alliance (NDA) அரசாங்கத்தால் சேர்க்கப்பட்ட விதிமுறை கூறுகிறது.


நீர் தொடர்பான பணிகளுக்கு செலவிடப்பட வேண்டிய பணத்தின் விகிதத்தை ஒன்றிய அரசு இப்போது குறிப்பிட்டுள்ளது. தற்போதுள்ள, விதிமுறை மாவட்ட அளவில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளின் சொத்துக்களுக்கு செலவிடுவதை கட்டாயமாக்கியுள்ள நிலையில், புதிய விதிமுறைகள் நிலத்தடி நீர் பிரித்தெடுக்கும் நிலையின் அடிப்படையில் தொகுதி அளவில் குறைந்தபட்ச செலவினத்தை குறிப்பிட்டுள்ளன அவை அதிக சுரண்டப்பட்ட, முக்கியமான, அரை-முக்கியமான மற்றும் பாதுகாப்பானது போன்ற காரணிகளாகும்.


புதிய விதிமுறைகளின்படி, ஒன்றிய நிலத்தடி நீர் வாரியத்தால் (Central Ground Water Board (CGWB)) "அதிக சுரண்டப்பட்ட" மற்றும் "முக்கியமான" என்று வகைப்படுத்தப்பட்ட கிராமப்புற பகுதிகளில், குறைந்தபட்சம் 65 சதவீத MGNREGS பணிகள் (செலவின் அடிப்படையில்) நீர் பாதுகாப்பு, நீர் சேகரிப்பு மற்றும் பிற நீர் தொடர்பான பணிகளுக்காக மேற்கொள்ளப்பட வேண்டும். அரை-முக்கியமான மற்றும் பாதுகாப்பான தொகுதிகளுக்கு, குறைந்தபட்ச விகிதம் முறையே 40 சதவீதம் மற்றும் 30 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


"மேலும், ஒன்றிய நிலத்தடி நீர் வாரியத்தால் (CGWB) கிடைக்கக்கூடிய சுழற்சி நிலையான நிலத்தடி நீர்வள மதிப்பீட்டு அறிக்கையில் 'அதிகப்படியான சுரண்டல்', 'முக்கியமான', 'அரை-முக்கியமான' மற்றும் 'பாதுகாப்பான' என வகைப்படுத்தப்பட்ட மதிப்பீட்டு அலகுகள் (தொகுதிகள்) தலையீட்டிற்கான முன்னுரிமைப் பகுதிகளாகக் கருதப்படும்" என்று விதிமுறை கூறுகிறது.


தொகுதிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?


ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒன்றிய நிலத்தடி நீர் வாரியம், நிலத்தடி நீர் பயன்பாட்டின் அடிப்படையில் பகுதிகளை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கிறது. 'அதிகமாக சுரண்டப்படும்' (Over-exploited) பகுதிகளில், இயற்கையாகவே மாற்றக்கூடியதைவிட அதிகமான நிலத்தடி நீர் வெளியேற்றப்படுகிறது, பிரித்தெடுத்தல் 100% விட அதிகமாகும்.


90-100% நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் பகுதிகள் 'முக்கியமானவை' (critical) என்று அழைக்கப்படுகின்றன. 70-90% பயன்படுத்தும் பகுதிகள் 'அரை-முக்கியமானவை' (semi-critical) என்று அழைக்கப்படுகின்றன. 70% அல்லது அதற்கும் குறைவாகப் பயன்படுத்தும் பகுதிகள் 'பாதுகாப்பானவை' (safe) என்று அழைக்கப்படுகின்றன.


அமைச்சகம் ஏன் இந்த முடிவை எடுத்தது?


பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் தனது ‘எதிர்பார்ப்புகளை’ வெளிப்படுத்தியதை அடுத்து, அமைச்சகம் இந்த முடிவை எடுத்ததாக ஒன்றிய ஊரக மேம்பாட்டு அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MG-NREGA)) கீழ் நீருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நாம் செலவிட வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் தனது எதிர்பார்ப்பை தெரிவித்தார். எனவே, இன்று, ஊரக தேவைகளுக்கு அமைச்சகம் நீர் பாதுகாப்புக்கான புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது. நீர் தொடர்பான பணிகளுக்கான குறைந்தபட்ச செலவினம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று சவுஹான் வியாழக்கிழமை ஒரு நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்தார்.


2025-26 நிதியாண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் மொத்த ஒதுக்கீடு ரூ. 86,000 கோடி ஆகும். இந்த தொகையில் எவ்வளவு நீர் தொடர்பான பணிகளுக்கு கிடைக்கும் என்பது தெளிவாக இல்லை. இருப்பினும், ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். படேல், புதிய விதிமுறைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் நீர் தொடர்பான பணிகளுக்கு ரூ.35,000 கோடி கிடைக்கும் என்று தெரிவித்தார்.


எந்த மாநிலங்கள் அதிகம் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது?


ஒன்றிய நிலத்தடி நீர் வாரியத்தின் (Central Ground Water Board (CGWB)) இந்திய சுழற்சி நிலையான நிலத்தடி நீர் வளங்கள் குறித்த தேசிய தொகுப்பு, 2024-ன் படி, நாட்டில் உள்ள மொத்த 6,746 தொகுதிகளில், 751 (11.13%) 'அதிகப்படியான சுரண்டல்' ஏற்பட்டுள்ளது என்றும், 206 தொகுதிகள் (3.05%) 'முக்கியமானவை' என்றும், 711 தொகுதிகள் (10.54%) 'அரை-முக்கியமானவை' என்றும், 4,951 தொகுதிகள் (73.39%) 'பாதுகாப்பானவை' என்றும் 2024ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்டது. மீதமுள்ள 127 தொகுதிகள் உப்புத்தன்மை (salinity) கொண்டவை என மதிப்பிடப்பட்டன.


புதிய விதிமுறைகளின்படி, 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 'அதிகமாக சுரண்டப்பட்ட' பகுதிகளில் எவ்வளவு பணம் செலவிடப்படலாம் என்பதற்கான வரம்புகளை நிர்ணயிக்கின்றன. பெரும்பாலானவை ராஜஸ்தான் (214), பஞ்சாப் (115), தமிழ்நாடு (106), ஹரியானா (88) மற்றும் உத்தரபிரதேசம் (59) ஆகிய மாநிலங்களில் உள்ளன. இந்த மாநிலங்களிலும் பல 'முக்கியமான' தொகுதிகள் உள்ளன. இதன் காரணமாக, புதிய விதிகளின் கீழ் நீர் திட்டங்களுக்கு அவர்களுக்கு அதிக நிதி கிடைக்கும்.

                    

Original article:

Share:

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சோனம் வாங்சுக்: தேசிய பாதுகாப்புச் சட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை. -தீப்திமான் திவாரி

 முன்பு பிரிவினைவாதிகள், குண்டர்கள் மற்றும் தீவிர போதகர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் (National Security Act (NSA), பொது ஒழுங்கு அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் நபர்களுக்கு எதிராக அரசாங்கங்கள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கிறது. 

லடாக்கிற்கு மாநில அங்கீகாரம் மற்றும் 6-வது அட்டவணையின் கீழ் (Sixth Schedule) பாதுகாப்புகளைக் கோரும் இயக்கத்தின் முன்னணியில் இருக்கும் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், கடந்த வெள்ளிக்கிழமை அன்று லேயில் உள்ள காவல்துறையினரால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். சோனம் வாங்சுக் ஜோத்பூரில் உள்ள சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவரது மனைவி தெரிவித்தார்.


புதன்கிழமை லேயில் வெடித்த வன்முறைப் போராட்டங்களைத் தூண்டியதற்கு அவர் மீது ஒன்றிய அரசு முன்னதாக குற்றம் சாட்டியிருந்தது. அந்த வன்முறையில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் நான்கு நபர்கள் உயிரிழந்தனர். மேலும், 50 பேர் காயமடைந்தனர்.

குற்றங்களைத் தடுக்க மக்களைத் தடுத்து வைக்க அனுமதிக்கும் இந்தியாவின் கடுமையான சட்டங்களில் ஒன்றின்மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துவது பற்றிய கவனத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. முன்பு பிரிவினைவாதிகள், குண்டர்கள் மற்றும் தீவிர போதகர்களுக்கு (radical preachers) எதிராகப் பயன்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம், பொது ஒழுங்கு அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் நபர்களுக்கு எதிராக அரசாங்கங்கள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கிறது. 


இந்தியாவில் தடுப்புக்காவல் சட்டம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. காலனித்துவ காலம் முதல் போர்களின்போது எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்த இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, நாடாளுமன்றத்தால் 1950ஆம் ஆண்டின் தடுப்புக்காவல் சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 1971ஆம் ஆண்டின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் (Maintenance of Internal Security Act (MISA)) இயற்றப்பட்டது. இது அவசரநிலையின்போது தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்காக பெயர் பெற்றது. MISA சட்டம் 1978ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. பின்னர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.


1980ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் (National Security Act), ‘இந்தியாவின் பாதுகாப்பு, வெளிநாட்டு அதிகாரங்களுடனான உறவுகள், பொது ஒழுங்கு அல்லது அத்தியாவசிய பொருட்கள் வழங்கலைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு விரோதமான முறையில் செயல்படுவதைத் தடுக்க ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு தனிநபர்களைத் கைது செய்ய அதிகாரம் அளிக்கிறது. அதிகாரம் வழங்கப்படும்போது மாவட்ட ஆட்சியர்கள் (District Magistrates) மற்றும் காவல்துறை ஆணையர்களும் (Police Commissioners) இந்த அதிகாரங்களைப் பயன்படுத்தலாம். குற்றவியல் சட்டத்தின்கீழ் கைது செய்வது போலல்லாமல், தேசிய பாதுகாப்புச் சட்டம் தடுப்புக்காவல் என்பது தண்டனைக்குரியது அல்ல. அது ஒரு தடுப்பு நடவடிக்கையாகும் - இது ஒரு தனிநபர் தீங்கு விளைவிக்கும் செயலைச் செய்பவரைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அரசாங்கத்திற்கு பரந்த அளவிலான அதிகாரங்களை வழங்குவதும், சில நடைமுறைப் பாதுகாப்புகளை உருவாக்குவதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கமாகும்.


தேசிய பாதுகாப்புச் சட்டம் எதை உள்ளடக்குகிறது?


தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு கைது வாரண்ட் போல் செயல்படுத்தப்படலாம். ஒருமுறை தடுப்பு காவலில், ஒரு நபரை குறிப்பிட்ட இடங்களில் வைத்திருக்கலாம். மாநிலங்கள் முழுவதும் அந்த நபரை நகர்த்தலாம். மேலும், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்படுத்தலாம்.


தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதற்கான காரணத்தை ஐந்து நாட்களுக்குள் தெரிவிக்கப்பட வேண்டும். அதிகபட்சம் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் கட்டாயப்படுத்துகிறது. மேலும், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவருக்கு அரசாங்கத்திற்கு மனுத் தெரிவிக்கும் உரிமை உண்டு என்றும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஆலோசனைக் குழு (Advisory Board) 3 வாரங்களுக்குள் வழக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சட்டம் கூறுகிறது. போதுமான காரணம் இல்லை என்று அந்தக் குழு கண்டறிந்தால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நபரை விடுவிக்க வேண்டும். தடுப்புக் காவல் பொதுவாக 12 மாதங்களுக்குமேல் இருக்கக்கூடாது. இருப்பினும், தடுப்புக் காவல் முன்னதாகவே ரத்து செய்யப்படலாம்.


இருப்பினும், கடுமையான வரம்புகள் உள்ளன. ஆலோசனைக் குழுவின் முன் தடுத்து வைக்கப்பட்டவருக்கு சட்ட பிரதிநிதித்துவ உரிமை இல்லை. மேலும், அரசாங்கம் ‘மக்களின் நலனுக்காக’ (public interest) உண்மைகளை மறைக்கலாம். இந்த விதிகள் அதிகாரிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நிறைய சுதந்திரத்தை அளிக்கின்றன.


வாங்சுக்கின் விருப்பங்கள்


சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ளபடி, வாங்சுக் அரசாங்கத்திற்கு ஒரு பிரதிநிதித்துவத்தை தாக்கல் செய்வதன் மூலம் தடுப்புக்காவல் உத்தரவை சவால் செய்யலாம் அல்லது மூன்று வாரங்களுக்குள் ஆலோசனைக் குழுவின் மறுஆய்வுக்காக காத்திருக்கலாம். ஆலோசனைக் குழு போதுமான காரணத்தைக் கண்டறியவில்லை என்றால், அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.


இதற்கு மாற்றாக, அவர் தனது தடுப்புக்காவலின் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தை (அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 226/32-ஐ) பயன்படுத்தி அணுகலாம். எந்தவொரு கட்டத்திலும் தடுப்புக்காவல் தேவையற்றது என்று அரசாங்கமே முடிவு செய்தால், அவர் தடுப்புக்காவலை  ரத்து கோரி மனுதாக்கல் செய்யலாம்.


இருப்பினும், இந்த தீர்வுகள் நடைமுறைக்கு வரும் வரை, தேசிய பாதுகாப்புச் சட்டம் அதிகாரிகளுக்கு முறையான குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்யாமல் அல்லது திறந்த நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் அவரை தடுப்புக்காவலில் வைத்திருக்க அனுமதிக்கிறது.


தேசிய பாதுகாப்புச் சட்டம் முன்பு எவ்வாறு பயன்படுத்தப்பட்டது?


இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்ட புதிய முக்கியமான வழக்கு வாங்சுக் ஆகும். சமீபத்திய ஆண்டுகளில், பல முக்கிய வழக்குகளில் இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2023-ல், 'வாரிஸ் பஞ்சாப் தே' அமைப்பின் தலைவரான தீவிர சீக்கிய போதகர் அம்ரித்பால் சிங் (Amritpal Singh), தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு அசாமின் திப்ருகர் சிறைக்கு மாற்றப்பட்டார்.


2017ஆம் ஆண்டில், பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவணன் மீது உத்தரபிரதேசத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தை விசாரணைக்கு வந்த பிறகு அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, செப்டம்பர் 2018-ல் அவர் விடுவிக்கப்பட்டார். மேலும், 2020ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்ட (Citizenship Amendment Act (CAA)) எதிர்ப்பு போராட்டங்களின்போது, ​​உத்தரபிரதேசத்தில் பல போராட்டக்காரர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


குடிமை உரிமை குழுக்கள் மற்றும் நீதிமன்றங்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளன.


2020ஆம் ஆண்டில், குழந்தைகள் மருத்துவர் டாக்டர் கஃபீல் கான் ஒரு தூண்டுதல் பேச்சு என்று குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச அரசாங்கத்தால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றம் தடுப்பு காவலுக்கான காரணங்களைக் கேள்வி எழுப்பி அவரை விடுவிக்க உத்தரவிட்டபிறகு அவரது வழக்கு பரவலான கவனத்தைப் பெற்றது.


மத்தியப் பிரதேசத்தில், ‘லவ் ஜிஹாத்’ வழக்குகளில் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உத்தரப் பிரதேசத்தில், இது வகுப்புவாத வன்முறை சம்பவங்களின் போது இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.


தேசிய பாதுகாப்புச் சட்டம் பசுவதை அல்லது பழக்கமான குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகவும் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ‘தேசிய பாதுகாப்பு’ (national security) அச்சுறுத்தல் என்ற வரையறையை நீட்டிக்கிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.


2012-ஆம் ஆண்டில், மண்ணெண்ணெய் கறுப்புச் சந்தை (black-marketing kerosene) வணிகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரின் தேசிய பாதுகாப்புச் சட்டக் காவலை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. காரணங்கள் நியாயமற்றவை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


ஒன்றாக, இந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழும் ஒரு வடிவத்தை எடுத்துக்காட்டுகின்றன: அரசாங்கங்கள் இந்தச் சட்டத்தை பாதுகாப்புக்குத் தேவையான கருவி என்று பாதுகாக்கின்றன. அதே, வேளையில் விமர்சகர்கள் இந்த சட்டம் மிகவும் கடுமையானதாகவும் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் கருதுகின்றனர்.



Original article:

Share:

உயிர்க்கோளக் காப்பகம் என்றால் என்ன? உயிர்க்கோள காப்பகத்தின் 3 மண்டலங்கள் யாவை? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


- ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) 21 நாடுகளில் 26 புதிய உயிர்க்கோள இயற்கைப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். உயிர்க்கோள இருப்புக்களின் உலகளாவிய வலையமைப்பு (World Network of Biosphere Reserves (WNBR)) இப்போது 142 நாடுகளில் 785 தளங்களை உள்ளடக்கியது. மேலும், 2018-ஆம் ஆண்டு முதல் கூடுதலாக ஒரு மில்லியன் சதுர கி.மீ இயற்கை பகுதிகள் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன - இது பொலிவியாவின் அளவிற்கு சமமானது என்று ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


- பாரிஸில் நடைபெற்ற யுனெஸ்கோவின் மனிதன் மற்றும் உயிர்க்கோளம் (Man and the Biosphere (MAB)) சர்வதேச ஒருங்கிணைப்பு கவுன்சிலின் 37-வது அமர்வின் போது, ​​இந்தியாவின் குளிர் பாலைவன உயிர்க்கோளக் காப்பகம் யுனெஸ்கோவின் உயிர்க்கோள இருப்புக்களின் உலகளாவிய வலையமைப்பில் (WNBR) சேர்க்கப்பட்டது என்று ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் X-பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


- டிரான்ஸ்-இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள குளிர் பாலைவன உயிர்க்கோளக் காப்பகம், ஸ்பிதி வனவிலங்குப் பிரிவு மற்றும் பாரலாச்சா கணவாய், பரத்பூர் மற்றும் சர்ச்சு உள்ளிட்ட லாஹௌல் வனப் பிரிவின் சில பகுதிகளை உள்ளடக்கியது. இது 3,300 முதல் 6,600 மீ உயரம் கொண்டது.


- இது பின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, கிப்பர் வனவிலங்கு சரணாலயம், சந்திரதால் ஈரநிலம் மற்றும் சர்ச்சு சமவெளிகளை ஒருங்கிணைக்கிறது. காற்று வீசும் பீடபூமிகள், பனிப்பாறை பள்ளத்தாக்குகள், ஆல்பைன் ஏரிகள் மற்றும் உயரமான பாலைவன பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இது WNBR-ல் மிகவும் குளிரான மற்றும் வறண்ட சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும்.


- குளிர் பாலைவனம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது - கோர் (2,665 சதுர கிமீ), தாங்கல் (3,977 சதுர கிமீ) மற்றும் மாற்றம் (1,128 சதுர கிமீ) ஆகும்- இந்த அமைப்பு இயற்கையைப் பாதுகாக்கவும், வளங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தவும், உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்தவும் உதவுகிறது. சூழலியல் ரீதியாக, இது 655 மூலிகைகள், 41 புதர்கள் மற்றும் 17 மர இனங்கள், சோவா ரிக்பா/அம்ச்சி அமைப்புக்கு முக்கியமான 14 உள்ளூர் மற்றும் 47 மருத்துவ தாவரங்கள் உட்பட பல வகைகள் இடம்பெற்றிருக்கும். வனவிலங்குகளில் 17 பாலூட்டிகள் மற்றும் 119 பறவை இனங்கள் அடங்கும். பனிச்சிறுத்தை முதன்மை இனமாக உள்ளது. ஸ்பிதி பள்ளத்தாக்கில் 800-க்கும் மேற்பட்ட நீல செம்மறி ஆடுகள் உயிர் வாழ்கின்றன. இவை பனிச்சிறுத்தைகளுக்கு போதுமான உணவை வழங்குகின்றன. விலங்கினங்களில் (fauna) இமயமலை ஐபெக்ஸ் மற்றும் இமயமலை ஓநாய் ஆகியவை அடங்கும்.


7,770 சதுர கிமீ பரப்பளவு லாஹவுல்-ஸ்பிதி மாவட்டத்தில் பரவியுள்ளது. வனவிலங்குகளில் முதன்மையான இனமாக பனிச்சிறுத்தை உள்ளது.


- அங்குள்ள சிறிய கிராமங்களில் 12,000 பேர் வசிக்கின்றனர். அவர்கள் யாக் மற்றும் ஆடுகளை மேய்த்தல், பார்லி, பட்டாணி விவசாயம் செய்தல் மற்றும் திபெத்திய மூலிகை மருத்துவத்தைப் பயன்படுத்துதல் போன்ற பாரம்பரிய நடவடிக்கைகளைப் பயிற்சி செய்கிறார்கள். அவர்களின் அறிவு மென்மையான மலை சூழலைப் பாதுகாக்க உதவும் புத்த துறவிகள் மற்றும் சமூகத் தலைவர்களிடமிருந்து வருகிறது என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.


- இது இந்தியாவின் முதல் உயரமான குளிர் பாலைவன உயிர்க்கோளக் காப்பகம் ஆகும். சுற்றுலா மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மலைப் பகுதிகளைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது என்று ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) தெரிவித்துள்ளது.


- வளர்ச்சியை வரவேற்று, வனவிலங்கு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (Principal Chief Conservator of Forests (Wild Life)) மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைமை வனவிலங்கு பாதுகாவலர் அமிதாப் கவுதம், இந்த பதவி சர்வதேச ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை அதிகரிக்கும், பொறுப்பான சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் மற்றும் இமயமலையில் காலநிலை மீள்தன்மை (resilience) முயற்சிகளை வலுப்படுத்தும் என்றார். 


உங்களுக்குத் தெரியுமா?


- மனிதன் மற்றும் உயிர்க்கோள (Man and the Biosphere (MAB)) திட்டம் என்பது பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் முதன்மை முயற்சியாகும். இது மக்களின் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.


— மனிதன் மற்றும் உயிர்க்கோள திட்டம் என்பது மக்களுக்கும் அவர்களின் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான அறிவியல் அடித்தளத்தை உருவாக்க முயலும் அரசுகளுக்கிடையேயான அறிவியல் முயற்சியாகும்.


— மனிதன் மற்றும் உயிர்க்கோள திட்டம் 1975ஆம் ஆண்டில் உயிர்க்கோள இருப்புக்கள் என்ற கருத்தை உருவாக்கியது. இது சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் அதில் உள்ள மரபணு வளங்களைக் கையாள்கிறது. உயிர்க்கோள இருப்புக்களின் குறிப்பிடத்தக்க அம்சம் உள்ளூர் சமூகங்களை அதில் சேர்ப்பதாகும்.


- உயிர்க்கோள இருப்புக்களின் உலக வலையமைப்பு என்பது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் மனிதன் மற்றும் உயிர்க்கோளம் திட்டத்தால் பராமரிக்கப்படும் விதிவிலக்கான இடங்களின் ஆற்றல்மிக்க மற்றும் பங்கேற்பு வலையமைப்பாகும்.



Original article:

Share:

அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்பு சட்டம், 2010 (CLNDA) மற்றும் அணுசக்தி சட்டம் 1962 பற்றி . . . -ரோஷ்னி யாதவ்

 

CLNDA :  Civil Liability for Nuclear Damage Act (CLNDA) - அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்பு சட்டம்


Atomic Energy Act : அணுசக்தி சட்டம்


முக்கிய அம்சங்கள் :


வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை புதுப்பிக்க அமெரிக்காவில் இந்திய வர்த்தக பேச்சுவார்த்தையாளர்கள் குழுவை வழிநடத்தும் கோயல் அவர்கள், சிறிய மட்டு உலை (small modular reactor (SMR)) கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் ஆர்வத்தை எடுத்துரைத்தார். இதில், இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்றும் அணுசக்தித் துறையில் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தும் என்றும் அவர் கூறினார். மேலும், இந்தியாவில் "தீர்க்கப்பட வேண்டிய" (needed to be resolved) சில சட்டப் பிரச்சினைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.


இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் பொறுப்புரீதியில் கவலைகளை (liability concerns) நிவர்த்தி செய்வது இதில் அடங்கும். இருப்பினும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது எளிதல்ல.


கோயல் நியூயார்க்கில் பேசியது போல், இந்தியாவில் சட்டமன்றப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தியாவின் அணுசக்தித் துறையை நிர்வகிக்கும் இரண்டு முக்கிய சட்டங்களுக்கு பல திருத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த சட்டங்களை உலகளாவிய சட்டத் தரங்களுடன் இணைப்பதே இதன் முக்கியக் குறிக்கோளாகும்.


இது, முதலீட்டாளர்களின் கவலைகளை நிவர்த்தி செய்து, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் (Indo-US nuclear deal) கையெழுத்திடப்பட்டு ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் சிவில் அணுசக்தித் துறையை (civil nuclear sector) படிப்படியாக திறப்பதற்கும் இது வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


முதல் திருத்தம் இந்தியாவின் அணுசக்தி பொறுப்புச் சட்டமான அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டம், 2010 (CLNDA)-ல் உள்ள விதிகளை தளர்த்துவதில் கவனம் செலுத்துகிறது. இது அணு விபத்தால் ஏற்படும் நாடுகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒரு செயல்முறையை உருவாக்க முயன்றது. மேலும், இதற்கான பொறுப்புகளை ஒதுக்கீடு செய்தல் மற்றும் இழப்பீட்டுக்கான நடைமுறைகளைக் குறிப்பிடுகிறது. இந்தச் சட்டம், செயல்படுத்துபவரின் உதவிக்கான உரிமை (right of recourse of the operator) என்ற விதியின் மூலம் விநியோகர்களுக்கு செயல்படுத்துபவரின் பொறுப்பை வழிப்படுத்துகிறது என்ற அடிப்படையில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் (US-based Westinghouse Electric) மற்றும் பிரெஞ்சு அணுசக்தி நிறுவனமான ஃப்ராமடோம் (French nuclear company Framatome) போன்ற வெளிநாட்டு கருவிகள் விற்பனையாளர்களால் இது ஒரு தடையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்பு சட்டத்திற்காக (CLNDA) சுமார் 11 சட்ட திருத்தங்களின் தொகுப்பு இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றில் இரண்டு முக்கியமானவை. ஒன்று, CLNDA-ன் பிரிவு 17 (b) ஒரு குறிப்பிட்ட விதியை நீர்த்துப்போகச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு திருத்தமாகும். இது உலகம் முழுவதும் இயற்றப்பட்ட அணுசக்தி பொறுப்புச் சட்டங்களுடன் முரண்படுவதாகக் காணப்படுகிறது.


இரண்டாவது பெரிய திருத்தம் தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் அணுமின் நிலையங்களை (nuclear power plant) இயக்க அனுமதிக்கும் நோக்கம் கொண்டது. மேலும், வரவிருக்கும் அணு மின் திட்டங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் சிறுபான்மை பங்குகளை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் அமைக்கலாம். 


இதுவரை, அணுசக்தி இந்தியாவின் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட துறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு, அதன் வணிகத் திறனை மேம்படுத்த உதவும் ஒரு சீர்திருத்த உந்துதலாக சட்டத் திருத்தங்களின் தொகுப்பு பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் DC உடனான ஒரு பரந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டு வெளிப்பாட்டின் ஒரு பகுதியாக இதைத் தொகுக்க இந்தியா ஆர்வமாக உள்ளது. இது இறுதியில் தற்போது பேச்சுவார்த்தையில் இருக்கும் வர்த்தக உடன்படிக்கையுடன் முடிவடையும்.


இரண்டாவது முக்கிய சட்டமான அணுசக்தி சட்டம் 1962-ல் திருத்தங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன, இதன் மூலம் தனியார் நிறுவனங்கள், ஒருவேளை வெளிநாட்டு நிறுவனங்கள்கூட அணுசக்தி உற்பத்தியில் ஆபரேட்டர்களாக நுழைய முடியும். இது தற்போது, இந்திய அணுசக்திக் கழகம் (Nuclear Power Corporation of India(NPCIL)) அல்லது NTPC Ltd போன்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. 


அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்பு சட்டத்தில் (CLNDA) உள்ள திருத்தங்கள், உலகளாவிய பொறுப்பு ஆட்சியை நிறுவ முயன்ற அணுசக்தி சேதத்திற்கான துணை இழப்பீடு (Compensation for Nuclear Damage (CSC)) 1997 உடன்படிக்கையின் விதிகளுக்கு ஏற்ப இந்தியாவின் அணுசக்தி பொறுப்பு சட்ட கட்டமைப்பை திறம்பட கொண்டு வரும். 


CSC-ன் கீழ், 1963 வியன்னா மாநாடு அல்லது 1960 பாரிஸ் மாநாட்டில் ஒரு உறுப்பினராக இருக்கும் ஒரு நாடு தானாகவே CSC-ல் ஒரு உறுப்பினராக மாறலாம். அதே சமயம், இந்த இரண்டு மாநாடுகளிலும் ஒரு உறுப்பினராக இல்லாத ஒரு நாடு அணுசக்தி பொறுப்பு தொடர்பான அதன் தேசிய சட்டம் CSC மற்றும் அதன் பிற்சேர்க்கையின் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்றால் CSC-ன் ஒரு உறுப்பினராக மாறும்.


இந்தியா, வியன்னா அல்லது பாரிஸ் மாநாடுகளில் ஒரு உறுப்பினராக இல்லாமல், அதன் தேசிய சட்டமான CLND சட்டத்தின் அடிப்படையில் அக்டோபர் 29, 2010 அன்று CSC-ல் கையெழுத்திட்டது மற்றும் பிப்ரவரி 4, 2016 அன்று ஒப்புதல் அளித்தது. அதன் மூலம், CSC-க்கு 'நாட்டின் உறுப்பினர்' (State Party) என்ற தரநிலையானது. CLND சட்டத்தில் இப்போது முன்மொழியப்பட்ட மாற்றங்கள் CSC விதிகளுடன் மேலும் சீரமைப்பதை நோக்கமாகக் கொண்டதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.


உங்களுக்குத் தெரியுமா?:


சிறிய மட்டு உலைகள் (SMR) ஒரு யூனிட்டுக்கு 30-300 MWe மின் உற்பத்தியை வழங்கும் சிறிய உலைகளாகும். அவை அடிப்படை சுமை மின்சாரத்தை (base load power) உற்பத்தி செய்வதற்கு மட்டுமல்லாமல், பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்களால் வழங்கப்படும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளுடன் ஒப்பிடும்போது அதிக கார்பன்-நடுநிலை விருப்பமாகவும் பயனுள்ளதாக இருக்கும்.


சிறிய மட்டு உலைகள், அவற்றின் அமைப்புகளும் கூறுகளும் கட்டுப்படுத்தப்பட்ட தொழிற்சாலை சூழலில் தயாரிக்கப்பட்டு, பின்னர் நேரடியாக நிறுவப்படும் திட்டத் தளத்திற்குக் கொண்டு செல்லப்படும் வகையில் கருத்தாக்கப்படுகின்றன. இந்த அணுகுமுறை கட்டுமான நேரத்தை மேம்படுத்துகிறது மற்றும் திட்ட செலவுகளைக் குறைக்கிறது. இது பாரம்பரிய பெரிய உலைகளுக்கு முக்கிய பிரச்சினைகளாகும்.


அவை அவசர திட்டமிடல் மண்டலத்தின் குறைக்கப்பட்ட அளவு (தளத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு பகுதிகள்) மற்றும் செயலற்ற பாதுகாப்பு அமைப்பு போன்ற சாத்தியமான வரிசைப்படுத்தல் நன்மைகளைக் கொண்டுள்ளன. அவை, பெரிய அணு உலை அடிப்படையிலான திட்டங்களைவிட ஒப்பீட்டளவில் பாதுகாப்பானவை.



Original article:

Share: