தன்னாட்சியிலிருந்து ஒன்றிய கட்டுப்பாட்டிற்கு? ISI வரைவு மசோதா-2025 'தேசிய வளர்ச்சி' என்ற குறிப்பை நீக்குகிறது. -பாஸ்கர் பசவா

 

ISI : Indian Statistical Institute (ISI) - இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI)


முதன்மையான நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றுவதற்கான முக்கிய சீர்திருத்தங்களை முன்மொழியும் ISI மசோதா-2025 வரைவு குறித்து புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) பொதுமக்களின் கருத்துக்களை கோருகிறது.


அக்டோபர் 24 வரை நடைபெறும் சட்டமன்றத்திற்கு முந்தைய ஆலோசனை செயல்முறையின் ஒரு பகுதியாக, புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமானது (MoSPI) இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI) மசோதா-2025 வரைவு குறித்த தங்கள் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. பிரசாந்த சந்திர மஹலனோபிஸ் நிறுவிய கொள்கை மற்றும் மேம்பாட்டிற்காக (policy and development) புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துவதற்கான இந்தியாவின் ஆரம்பகால முயற்சிகளுக்கு ஒத்ததாக இருக்கும் 94 ஆண்டு பழமையான முதன்மையான நிறுவனமான இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு (ISI) இந்த வரைவு மசோதா முக்கிய கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்மொழிகிறது.


இந்த வரைவு மசோதா, பதிவுசெய்யப்பட்ட சமூகத்திலிருந்து (registered society) நிறுவனத்தை ஒரு சட்டப்பூர்வ நிறுவனமாக மாற்றுவதையும், தேசத்தைக் கட்டியெழுப்பும் மற்றும் நலன்சார்ந்த இலக்குகளிலிருந்து அதன் நோக்கங்களை உலகளாவிய சிறப்பு, நிறுவன முத்திரை மற்றும் புதுமைகளை மையமாகக் கொண்ட ஒன்றாக மாற்றுவதையும் மற்றும் அதன் உள்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்தில் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IITகள்) போன்ற நிறுவனங்களைப் போலவே அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட நிர்வாகக் குழுவுடன் மாற்றுவதன் மூலம் அதன் நிர்வாகக் கட்டமைப்பை மறுசீரமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வரைவு மசோதா நிறைவேற்றப்பட்டவுடன், 1959-ம் ஆண்டு இந்திய புள்ளிவிவர நிறுவனச் சட்டத்தை (Indian Statistical Institute Act) மாற்றும்.


இந்த சட்டம் நிறுவப்பட்டதிலிருந்து, நான்கு முக்கிய குழுக்கள் இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் (ISI) செயல்பாட்டை மதிப்பாய்வு செய்துள்ளன. அவற்றின் சில பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டன, மற்றவை நிறுவனத்தால் கவனிக்கப்படாமல் விடப்பட்டன. 2020-ம் ஆண்டில் ஆர்.ஏ.மஷேல்கர் தலைமையிலான சமீபத்திய மதிப்பாய்வானது, நிறுவனத்தின் படிப்படியான தேக்கநிலை என்று கடுமையாக விமர்சித்தது. அது "அதன் முந்தைய புத்திசாலித்தனத்தை இழந்துவிட்டது" (lost much of its earlier brilliance) என்றும் அதன் ஆற்றலை மீட்டெடுக்க "தீவிர மாற்றங்களை" (radical changes) பரிந்துரைத்தது என்றும் கூறியது. புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) கூற்றுப்படி, தற்போதைய வரைவு மசோதா-2031-ஆம் ஆண்டில் அதன் நூற்றாண்டு விழாவை நெருங்கும்போது "நிறுவனத்தின் கட்டமைப்பை நவீனமயமாக்குவது" (modernise the Institute’s structure) இந்த பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டது.


பட்டப்படிப்பு திட்டங்களுக்கு கூடுதல் பாடங்களைச் சேர்க்க, 1995-ம் ஆண்டில் ISI சட்டம் ஒரே ஒரு முறை மட்டுமே திருத்தப்பட்டது. தற்போதைய முயற்சி 1959-ம் ஆண்டு உண்மையான சட்டத்திற்குப் பிறகு செய்யப்பட்ட மிக முக்கியமான மாற்றங்களின் தொகுப்பாகும். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் அல்லது முன்னர் தொடர்புடைய சில பேராசிரியர்கள் இந்த மாற்றங்களை சமகால யதார்த்தங்களுக்கு அவசியமான தழுவலாகக் கருதினாலும், மற்றவர்கள் அவற்றை நிறுவனத்தின் தன்னாட்சியை நீர்த்துப்போகச் செய்வதற்கான தொடக்கமாகவும், நீட்டிப்பின் மூலம், நேருவியன் கால நிறுவனத்தின் (Nehruvian-era institute) தன்மை குறைந்து வருவதாகப் பார்க்கிறார்கள்.


நேருவியன் நிறுவனத்தின் தோற்றம்


பி.சி. மஹாலனோபிஸிடம் படித்து, பின்னர் உலகின் மிகவும் பாராட்டப்பட்ட புள்ளியியல் வல்லுநர்களில் ஒருவராக நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிறுவனத்தில் பணியாற்றிய சி.ஆர். ராவ் நினைவுக் குறிப்புகளில் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவில் புள்ளியியல் ஒரு துறையாக கிட்டத்தட்ட அறியப்படவில்லை என்பதை நினைவு கூர்ந்தார். இந்தத் துறையில் பல்கலைக்கழக படிப்புகள் இல்லை, ஆராய்ச்சி இல்லை, புள்ளியியல் சமூகம் இல்லை, எந்த பத்திரிகையும் இல்லை. கிடைக்கக்கூடிய சிறிய தரவு பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகத்தின் துணை விளைபொருளாக மட்டுமே வந்தது.


இந்த சூழ்நிலையில், 1931-ம் ஆண்டு காலகட்டத்தில், பி.சி. மஹலனோபிஸ் மற்றும் இளம் பங்களிப்பாளர்கள் குழு, புள்ளியியல் ஆராய்ச்சிக்கும் நடைமுறை சிக்கல்களுக்கு அதன் பயன்பாட்டிற்கும் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மையம் என்ற கருத்தை உருவாக்கினர். கல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரியில் உள்ள மஹலனோபிஸின் அறையில் உள்ள ஒரு சிறிய புள்ளியியல் ஆய்வகத்திலிருந்து, டிசம்பர் 1931-ல் ஒரு பொதுக் கூட்டம் மற்றும் 28 ஏப்ரல் 1932 அன்று சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (XXI of 1860) கீழ் ஒரு இலாப நோக்கமற்ற கல்விச் சங்கமாக இந்திய புள்ளியியல் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்ததன் மூலம் இந்த யோசனை நிறுவன வடிவம் பெற்றது.


சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், இந்த நிறுவனம் வேகமாக வளர்ந்தது. பிரதமர் ஜவஹர்லால் நேரு, நிதியமைச்சர் சி.டி. தேஷ்முக் மற்றும் டெல்லியில் நேருவின் செயலாளராகவும் பின்னர் பி.சி. மஹாலனோபிஸின் நெருங்கிய நண்பராகவும் இருந்த பீதாம்பர் பந்த் ஆகியோரிடமிருந்து இது வலுவான ஆதரவைப் பெற்றது. ஒரே ஆய்வகத்திலிருந்து நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பாக இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி பி.சி. மஹாலனோபிஸின்" கற்பனை திட்டமிடல்" (imaginative planning) காரணமாக இருந்தது என்று ராவ் குறிப்பிடுகிறார்.


வரலாற்றாசிரியர் நிகில் மேனன் தனது ”திட்டமிடல் ஜனநாயகம்: ஒரு பேராசிரியர், ஒரு நிறுவனம் மற்றும் ஒரு யோசனை இந்தியாவை எவ்வாறு வடிவமைத்தன” (Planning Democracy: How a Professor, an Institute, and an Idea Shaped India) என்ற புத்தகத்தில் 1954-ம் ஆண்டு ஹைதராபாத் இல்லத்தில் நடந்த முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றும்போது, ​​பிரதமர் நேரு, இந்தியா சிறிது காலமாக "திட்டமிடும் திசையில் தடுமாறிக் கொண்டிருந்தது" (groping in the direction of planning) என்று குறிப்பிட்டார். சமீப காலம் வரை "திட்டமிடுவதற்கு அவசியமான அனைத்து தகவல்களும், தரவுகளும், மற்றும் புள்ளிவிவரங்களும்" இல்லாததால், நாடு கண்மூடித்தனமாக முன்னேறி வந்தது. முன்னதாக, அவர்களிடம் "போதுமான தரவு இல்லை," ஆனால் இப்போது, ​​"நமக்கு இன்னும் நிறைய கிடைத்துள்ளது நாம் ஒரு கட்டத்தில், ஒரு திட்டவட்டமான கட்டத்தில் இருக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.


1950-களின் பிற்பகுதியில், "தரவு உள்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் அரசின் செயல்முறைகளில் மிக வலுவாக ஒருங்கிணைக்கப்பட்டது" என்று நிகில் மேனன் மேலும் குறிப்பிடுகிறார். பி.சி. மஹலனோபிஸின் புள்ளிவிவரங்கள் மற்றும் தரவு அடிப்படையிலான திட்டமிடல் துறையின் முன்னோடிப் பணிகள் தேசிய மாதிரி கணக்கெடுப்பை (National Sample Survey) நிறுவுதல் மற்றும் முந்தைய திட்டக் குழுக்கான 2-வது ஐந்தாண்டுத் திட்டத்தை வகுப்பதில் அவரது பங்கு உள்ளிட்ட தேசியக் கொள்கைகளை தொடர்பான முக்கிய திட்டகளை வடிவமைத்தார்.


1959-ம் ஆண்டில், பிரதமர் நேரு இந்திய புள்ளியியல் நிறுவன மசோதாவை (Indian Statistical Institute Bill) நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக வழிநடத்தி, நிறுவனத்தில் செய்யப்படும் பணிகளை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதை "மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்று விவரித்தார், மேலும் "பெரிய அளவில் புள்ளிவிவரப் பணிகள் இல்லாமல் எந்தத் திட்டமிடலும் இருக்க முடியாது" என்றும் கூறினார்.


இந்தக் கண்ணோட்டம் 1959-ம் ஆண்டு இந்திய புள்ளியியல் நிறுவனச் சட்டத்தை உருவாக்க வழிவகுத்தது. இது, ISI-ஐ தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தன்னாட்சி நிறுவனமாக அறிவித்து பட்டங்களை வழங்க அதற்கு அதிகாரம் அளித்தது. இருப்பினும் முக்கியமாக, நிறுவனம் ஒரு பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகத் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. அதன் விவகாரங்கள் ஒரு பொதுக்குழுவால் நிர்வகிக்கப்பட்டன. அதன் சங்கப் பதிவுக் குறிப்பு (Memorandum of Association (MoA)), ஒழுங்குமுறைகள் மற்றும் துணைச் சட்டங்கள் ஆகியவை சங்கத்தின் செயல்பாடுகளை நிர்வகிக்கும் நிறுவன கட்டமைப்பை உருவாக்கியது.


கட்டமைப்பு மற்றும் தன்னாட்சியை மாற்றுதல்


ISI ஒரு பதிவுசெய்யப்பட்ட அமைப்பாக செயல்பட்டபோது, ​​அதன் நிர்வாக உறுப்பினர் அமைப்பு மற்றும் உள் தேர்தல்களின் அடிப்படையில் அமைந்தது. இந்த நிறுவனத்தில் மூன்று வகையான உறுப்பினர்கள் இருந்தனர். இதில் வழக்கமான உறுப்பினர்கள் (Regular Members), மாணவர் உறுப்பினர்கள் (Student Members) மற்றும் நிறுவன உறுப்பினர்கள் (Institutional Members) ஆகியோர் துணைச் சட்டங்களில் வகுக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி மன்றத்தால் அனுமதிக்கப்பட்டனர். அதன் உறுப்பினர்களில் இருந்து, தேசத்திற்கு அல்லது புள்ளிவிவரங்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பான சேவையைச் செய்த ஒருவரை நிறுவனத்தின் தலைவராக இரண்டு ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்க முடியும்.


இந்த மன்றம் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவாகச் செயல்படுகிறது. மேலும், இதில் 33 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில், 6 அரசு பிரதிநிதிகள், நிறுவனத்தால் பணியமர்த்தப்படாத 9 விஞ்ஞானிகள், நிறுவனத்தால்  தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பிரதிநிதிகள் மற்றும் இயக்குனர் மற்றும் பிரிவுகளின் பொறுப்புப் பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் போன்ற 12 முன்னாள் அலுவல் உறுப்பினர்கள் உட்பட இதில் அடங்குவர். இந்த மன்றம் அதன் தலைவரை இரண்டு ஆண்டு காலத்திற்கு வெளியிலிருந்து புகழ்பெற்ற  நபர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கிறது.


ஐந்து வருட காலத்திற்கு இயக்குநரை நியமிப்பது, மன்றத்தின் (Council) தலைவர் (தலைவராக) மற்றும் மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு நிபுணர்களைக் கொண்ட தேர்வுக் குழுவின் (Selection Committee) பரிந்துரையின்பேரில் இந்த மன்றம் செயல்படும். சமூக கட்டமைப்பின்கீழ், மன்றம் முக்கிய முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்தது. இது கல்வி, நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்களையும் இணைத்தது. நிறுவனத்தை நடத்துவதில் மன்றம் குறிப்பிடத்தக்க உள்-தன்னாட்சியைப் பராமரித்தது. அரசாங்கத்திற்கு மன்றத்தில் ஆறு வேட்பாளர்கள் மட்டுமே இருந்தனர். இருப்பினும், ISI சட்டம், 1959-ன் பிரிவுகள் 7, 11 மற்றும் 12 மத்திய அரசாங்கத்திற்கு இருப்பு அதிகாரங்களை வழங்குகின்றன. இந்த அதிகாரங்களில் ஒப்புதல், வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவை அடங்கும்.


எந்தவொரு பெரிய மாற்றங்களுக்கும் பிரிவு-7-க்கு அரசாங்கத்தின் முன் அனுமதி தேவை. இதில் நிறுவனத்தின் நோக்கங்கள், குறிப்பாணைகள் அல்லது விதிமுறைகளைத் திருத்துதல் அல்லது அரசாங்க நிதியுடன் கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை அப்புறப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். பிரிவு-11 பொது நலனுக்காக பிணைப்பு உத்தரவுகளை (binding directions) வெளியிட அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இதில் நிறுவனத்தின் விதிகளைத் திருத்துதல் அல்லது அதன் பணிக்கான முன்னுரிமைகளை மாற்றுதல் ஆகியவை அடங்கும். பிரிவு-12 மன்றமானது அத்தகைய உத்தரவுகளுக்கு இணங்கத் தவறினால் அல்லது அதன் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததாகக் கண்டறியப்பட்டால், நிறுவனத்தின் கட்டுப்பாட்டை எடுக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.


தீவிரமான மறுசீரமைப்பு


இந்திய புள்ளியியல் நிறுவன வரைவு மசோதா-2025-ன் கீழ், நிறுவனத்தின் நிர்வாக அமைப்பு முழுமையான மாற்றத்தை முன்மொழிகிறது. மசோதா நிறைவேற்றப்பட்டவுடன், ISI இனி பதிவுசெய்யப்பட்ட மன்றமாக செயல்படாது. இது ஒரு பொதுக்குழு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்தால் நிர்வகிக்கப்படுவதை நிறுத்திவிடும். அதற்கு பதிலாக, அதன் நிர்வாகம் மசோதாவின் அத்தியாயம் III-ன் கீழ் நிறுவப்பட்ட நிர்வாக வாரியமாக (Board of Governance) மாற்றும். இது நிறுவனத்தின் மிக உயர்ந்த நிர்வாக அதிகாரியாக செயல்படும்.


இந்த புதிய கட்டமைப்பின் உச்சபட்சமாக பார்வையாளர் (Visitor) இருக்கிறார். அவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருப்பார். இது நிறுவனத்தின் பணிகளை மதிப்பாய்வு செய்யவும், ஆய்வுகள் அல்லது விசாரணைகளுக்கு உத்தரவிடவும், அந்த மதிப்பாய்வுகளின் அடிப்படையில் அவசியமானதாகக் கருதப்படும் உத்தரவுகளை வழங்கவும் பார்வையாளருக்கு அதிகாரம் இருக்கும்.


பார்வையாளருக்குக் கீழே, நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு முந்தைய மன்றத்தை மாற்றும் தற்போதைய நிர்வாக வாரியத்திடம் இருக்கும். இந்த வாரியம் இப்போது மூன்று ஆண்டு காலத்திற்கு 11 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இதில் முக்கியமாக மத்திய அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர்கள், தலைவர் (மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்), புள்ளிவிவரம், கல்வி மற்றும் நிதி அமைச்சகங்களிலிருந்து ஒரு பிரதிநிதி மற்றும் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று புகழ்பெற்ற நபர்கள் உட்பட இதன் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர். முக்கியமாக, நிறுவனத்திற்குள் இருந்து மூன்று உறுப்பினர்கள் மட்டுமே வாரியத்தில் பணியாற்றுவார்கள். அவர்கள் இயக்குனர் (Director), கல்வித் துறைத் தலைவர் (Dean of Studies) மற்றும் ஒரு மையத் தலைவர் (one Head of Centre) போன்றோர் ஆவர்.


கொள்கைகளை உருவாக்குதல், வரவு-செலவு திட்டத்தை அங்கீகரித்தல், பதவிகளை உருவாக்குதல் மற்றும் நீக்குதல், சொத்து மற்றும் நிதிகளை நிர்வகித்தல் மற்றும் அனைத்து கல்வி மற்றும் நிர்வாக விஷயங்களையும் மேற்பார்வையிடுதல் ஆகியவற்றுக்கு வாரியம் பொறுப்பாகும். நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரமும் வாரியத்திற்கு இருக்கும்.


"இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI) ஒரு குறிப்பிட்ட அளவிலான சுதந்திரத்தை அனுபவித்து வருவதாக ஒரு பேராசிரியர் கூறினார். மேலும், தேர்தல்களும் மன்றங்களும் மிகவும் ஜனநாயக அமைப்பை உருவாக்குகின்றன. இது இயற்கையாகவே ஒரு சுதந்திர சந்தை மற்றும் சுதந்திரமான தேர்வு உணர்வோடு ஒத்துப்போகிறது. மத்திய கட்டுப்பாடு அந்த உணர்விற்கு எதிரானது என்று பேராசிரியர் மேலும் கூறினார்.


மற்றொரு கல்வியாளர் கூறுகையில், இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI) மீது கடுமையான நிர்வாகக் கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சி, அரசின் தலையீட்டைக் குறைப்பதில் அதன் தனிப்பட்ட முறையில் கூறப்பட்ட நம்பிக்கைக்கு முரணானது. அரசாங்கம் திட்டமிடலில் இருந்து விலகிச் செல்ல விரும்புவதாகக் கூறும்போது, ​​அது அடிப்படையில் கட்டுப்பாட்டைக் குறைக்க விரும்புவதாகக் கூறுகிறது என்று பேராசிரியர் விளக்கினார். "எனவே, இப்போது இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI) மீது கூடுதல் கட்டுப்பாட்டை விதிக்க முயற்சித்தால், அது முரண்பாடாக இருக்கும்."


இருப்பினும், கடந்த ஐம்பதாண்டுகளாக சமூகத்தின் கட்டமைப்பின் காரணமாக நிறுவனம் பலவீனமடைந்துள்ளது என்றும், தேர்தல்கள் மற்றும் மன்றத்தில் பிரதிநிதித்துவம் என்ற பெயரில் அரசியல் குழுக்கள் மற்றும் உள் அதிகார மையங்கள் தோன்ற அனுமதித்துள்ளது என்றும் மற்ற பேராசிரியர்கள் கருதுகின்றனர். “சுதந்திரம் என்பது பொதுப் பணத்தைக் கொண்டு நீங்கள் விரும்பியதைச் செய்யலாம், எந்தக் கேள்விகளையும் எதிர்கொள்ளக்கூடாது என்று அர்த்தமல்ல. இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI) அதன் பெரும்பாலான நிதியை அரசாங்கத்திடமிருந்து பெறுகிறது. அதனால், ஒரே நேரத்தில் முழு நிதி உதவியையும், முழுமையான சுதந்திரத்தையும் எதிர்பார்க்க முடியாது” என்று பேராசியரியர் குறிப்பிடுகிறார்.

தேசிய வளர்ச்சிக்கு சேவை செய்வதாக எந்த உரிமையும் இல்லை.


சங்கத்தின் குறிப்பாணையின்படி (Memorandum of Association), நிறுவனத்தின் நான்கு நோக்கங்களை பட்டியலிடுகிறது. முதலாவதாக, புள்ளியியல் பற்றிய ஆய்வு மற்றும் அறிவைப் பரப்புவதை ஊக்குவித்தல், புள்ளியியல் கோட்பாடு மற்றும் முறைகளை உருவாக்குதல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் நடைமுறைப் பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக "தேசிய வளர்ச்சி மற்றும் சமூக நலன்" தொடர்பான விஷயங்களில் அவற்றைப் பயன்படுத்துதல்.


இரண்டாவதாக, புள்ளிவிவரங்கள் மற்றும் இந்த துறைகளின் பரஸ்பர வளர்ச்சியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, இயற்கை மற்றும் சமூக அறிவியல்களில் ஆராய்ச்சியை மேற்கொள்வது ஆகும். மூன்றாவதாக, திட்டமிடல் மற்றும் மேலாண்மை மற்றும் உற்பத்தியின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக தகவல்களைச் சேகரித்து விசாரணைகள், திட்டங்கள் மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சிகளை நடத்துவது ஆகும். இறுதியாக, இந்த நோக்கங்களை அடைய தேவையான வேறு எந்த நடவடிக்கைகளையும் நிறுவனம் மேற்கொள்கிறது.


வரைவு இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI) மசோதா-2025, முந்தைய நோக்கங்களுக்கு முக்கிய மையமாக இருந்த தேசிய மேம்பாடு, சமூக நலன் மற்றும் திட்டமிடல் பற்றிய அனைத்து வெளிப்படையான குறிப்புகளையும் தவிர்த்து, அவற்றின் இடத்தில், உலகளாவிய சிறப்பு, துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, புதுமை மற்றும் நிதி சுய-நிலைத்தன்மை போன்ற புதிய முன்னுரிமைகளை அறிமுகப்படுத்துகிறது.


புள்ளிவிவர அறிவியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளைப் படிப்பதற்கான உலகளாவிய சிறந்த மையமாக இந்த நிறுவனத்தை மாற்றுவதே இந்த மசோதாவின் நோக்கமாகும். இந்த துறைகளில் அறிவை மேம்படுத்தவும் பரப்பவும், புள்ளியியல், கணிதம், பொருளாதாரம், கணினி அறிவியல் மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் இடைநிலை ஆராய்ச்சியை வளர்க்கவும் இது முயல்கிறது. புதுமையான கல்வி முறைகளை உருவாக்குதல் மற்றும் அதிநவீன ஆராய்ச்சி வசதிகளை நிறுவுதல் ஆகியவையும் இந்த நிறுவனத்தின் பொறுப்பாகும்.


மேலும், பொது நலனுக்காக அறிவின் நடைமுறைப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக தொழில்துறை, கல்வித்துறை மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், முடிந்தவரை நிதி ரீதியாக தன்னிறைவு பெறும் நோக்கத்துடன், வளங்களை திறம்பட உருவாக்கி நிர்வகிப்பதாகும். இறுதியாக, நிறுவனம் தன்னை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த மையமாக நிலைநிறுத்துவதற்கு உகந்த எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.


உலகளாவிய போக்கு


"மஹாலனோபிஸின் மரபு திட்டமிடலில் கவனம் செலுத்தியது," என்று ஒரு மூத்த கல்வியாளர் குறிப்பிடுகிறார். அரசாங்கம் இந்த அணுகுமுறையை நீண்டகாலத்திற்கு முன்பே கைவிட்டதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இது திட்டக் குழுவைக் கலைத்து நிதி ஆயோக்கை உருவாக்குவதைக் குறிப்பிடுகிறது. "இன்று, அரசாங்கம் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவதில்லை; அது சந்தைப் பொருளாதாரத்தை நம்பியுள்ளது."


முந்தைய திட்டமிடல் காலகட்டத்தில், "என்ன உற்பத்தி செய்ய வேண்டும், எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும், எங்கு உற்பத்தி செய்ய வேண்டும்" என்பதை தீர்மானிப்பதில் அரசு ஒரு வழிகாட்டும் பங்கை வகித்தது என்று மற்றொரு பேராசிரியர் விளக்கினார். ரூர்கேலா, துர்காபூர் மற்றும் பிலாய் போன்ற பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிடப்பட்ட வளர்ச்சி மாதிரியை உள்ளடக்கியிருந்தன. "அந்த நாட்கள் முடிந்துவிட்டன. இப்போது தனியார் நிறுவனங்களுடன் சந்தை சார்ந்த அமைப்பு நம்மிடம் உள்ளது. இந்த மாற்றம் இந்தியாவில் மட்டுமல்ல; இது உலகளவில் நடக்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.


Original article:

Share:

இந்தியாவின் தூய எரிசக்தி லட்சியங்களில் 'முக்கியக் காரணி' -அல்கேஷ் குமார் ஷர்மா

 புவிசார் அரசியல் பதற்றங்கள், வர்த்தக கட்டுப்பாடுகள் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை ஆகியவை முக்கியமான தனிமங்களுக்கான தன்னிறைவு வழங்கல் சங்கிலியை உருவாக்குவதன் அவசரத்தை எடுத்துக்காட்டுகின்றன.


லித்தியம், கோபால்ட் மற்றும் அரிய மண் தனிமங்கள் (Rare Earth Elements (REEs)) போன்ற முக்கியமான தனிமங்களைப் பாதுகாப்பதில்தான் இந்தியாவின் தூய்மையான எரிசக்தியில் உலகளாவிய முன்னணியாக இருக்கும் லட்சியமும் நிலையான வளர்ச்சியும் தங்கியுள்ளன. இந்த தனிமங்கள் முக்கிய தொழில்நுட்பங்களை இயக்குகின்றன — மின்சார வாகனங்கள் (electric vehicles (EV)), சூரிய மின்கலன்கள், காற்றாடிகள் (wind turbines) மற்றும் ஆற்றல் சேமிப்பு — இவை இந்தியாவின் பசுமை மாற்றத்திற்கும் நீண்டகால எரிசக்தி இலக்குகளுக்கும் மிகவும் முக்கியமானவை. 2030ஆம் ஆண்டுக்குள் 500 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைவதையும், 2070ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை (net zero emissions) எட்டுவதையும் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளதால், முக்கியமான தனிமங்கள் மற்றும் அரிய மண் தனிமங்களின் வழங்கலை உறுதி செய்வது முக்கியமானதாகிறது. உலகளாவிய போட்டிக்கு மத்தியில் இந்தியா இறக்குமதி செய்யப்பட்ட முக்கிய தனிமங்களை நம்பியிருப்பதால், வலுவான உள்நாட்டு சுரங்கம், சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகள் தேவைப்படுகின்றன.


சுரங்கங்களிலும் நவீன மறுசுழற்சி தொழில்நுட்பங்களிலும் முதலீடு செய்வது மீள்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலிகளை உருவாக்கும் மற்றும் தூய்மையான எரிசக்தி போட்டியில் சுயநிறைவை அடைந்த இந்தியா (Atmanirbhar Bharat) தொலைநோக்கை முன்னெடுத்துச் செல்லும்.


இந்தியாவின் பசுமை மாற்றத்தில் முக்கியமான கனிமங்கள்


இந்தியாவின் தூய்மையான எரிசக்தி இலக்குகளுக்கு முக்கியமான தனிமங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. மின்சார வாகன மின்கலன்களுக்கு லித்தியமும் கோபால்ட்டும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவின் மின்சார வாகன சந்தை 2023 முதல் 2030 வரை 49% கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் (compound annual growth rate (CAGR)) வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2024ஆம் ஆண்டு மின்சார இயக்கத்துறை மேம்பாட்டுத் திட்டம் (Electric Mobility Promotion Scheme (EMPS)) போன்ற அரசாங்க முயற்சிகளால் இயக்கப்படும். 2023ஆம் ஆண்டில், இந்தியாவின் மின்கள சேமிப்பு சந்தை $2.8 பில்லியன் மதிப்புடையதாக இருந்தது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாடு அதிகரிக்கும் போது மின்கலன்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இருப்பினும், லித்தியம், கோபால்ட், நிக்கல் ஆகியவற்றிற்கு 100% மற்றும் அரிய பூமி தனிமங்களுக்கு 90%-க்கும் அதிகமான இறக்குமதியை இந்தியா நம்பியிருப்பது, விநியோகச் சங்கிலி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது இந்தியாவின் விநியோகச் சங்கிலியை பலவீனமாகவும் ஆபத்தானதாகவும் ஆக்குகிறது. அரசியல் பதட்டங்கள், வர்த்தக வரம்புகள் மற்றும் கடுமையான போட்டி (குறிப்பாக, அரிய மண் தனிமங்களுக்கு உற்பத்தி மற்றும் செயலாக்கத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் சீனாவிலிருந்து பெறப்படும் தனிமங்கள்) போன்ற உலகளாவிய பிரச்சினைகள், இந்தியா ஏன் அதன் சொந்த வலுவான மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலியை உருவாக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன. தூய்மையான எரிசக்தி இலக்குகள், தொழில் வளர்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்பை அடைய ஒரு சுயசார்பு விநியோகச் சங்கிலியை உருவாக்குவது முக்கியமானது.


இந்தியாவில் பயன்படுத்தப்படாத பரந்த தனிமங்கள் உள்ளன. ஜம்மு காஷ்மீரிலும் ராஜஸ்தானிலும் லித்தியமும், ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் அரிய மண் தனிமங்களும் உள்ளன. 2016-இல் தொடங்கப்பட்ட தேசிய கனிம ஆய்வுக் கொள்கையும் (National Mineral Exploration Policy (NMEP)), 2021-ல் சுரங்கங்கள் மற்றும் தனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் மூலம் அடுத்தடுத்த முன்னேற்றங்களும் தனியார் பங்கேற்பை ஊக்குவிப்பதன் மூலமும் மேம்பட்ட புவி இயற்பியல் ஆய்வுகளைப் பயன்படுத்துவதன் மூலமும் ஆய்வை துரிதப்படுத்தியுள்ளன. 2023-ல், இந்திய புவியியல் ஆய்வுத்துறை (Geological Survey of India) ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் அனுமான லித்தியம் வளங்களை அடையாளம் கண்டது. இது உள்நாட்டு உற்பத்திக்கு ஒரு நம்பிக்கை அளிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும், லித்தியம், கிராஃபைட் மற்றும் அரிய மண் தனிமங்கள் உள்ள 20 முக்கியமான தனிமப் பகுதிகள் ஏலத்திற்கு வைக்கப்பட்டன. இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் ஏலம் எடுப்பதில் ஆர்வம் காட்டின. இது இந்தத் துறையில் அதிக முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விரும்புவதைக் காட்டுகிறது.


ஆய்வு என்பது முதல்படி மட்டுமே. உலகளாவிய அரிய மண் தனிமங்கள் உற்பத்தியில் இந்தியா 1%-க்கும் குறைவாக பங்களிப்பதால், அரசு-தனியார் கூட்டுறவு மூலம் செயலாக்கம் மற்றும் சுத்திகரிப்பு திறனை விரைவாக உருவாக்க வேண்டும். தனியார் கூட்டாளர்கள் மேம்பட்ட செயலாக்க தொழில்நுட்பங்களைக் கொண்டு வரலாம் மற்றும் மறுசுழற்சி உள்கட்டமைப்பை ஆதரிக்கலாம். அதே, நேரத்தில் உள்நாட்டு லித்தியம் மற்றும் கோபால்ட் பரிசோதனை திட்டங்களுக்கு மானியங்கள், வரிச் சலுகைகள் மற்றும் ஆராய்ச்சி மானியங்கள் மூலம் அதிக அரசாங்க ஆதரவு தேவைப்படுகிறது.


சுரங்கங்களில் முதலீடு


முக்கியமான தனிமங்களைப் பெறுவதற்கு இந்தியாவிற்குள் இருக்கும் சுரங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம். 2 சுரங்கங்கள் மற்றும் தனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2023 தனியார் ஆய்வுக்கு வழிவகுத்தது. ஆனால், இந்தத் துறை இன்னும் அதிக செலவுகள், ஒழுங்குமுறை தடைகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. 2022ஆம் ஆண்டில், சுரங்கத் துறை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% மட்டுமே பங்களித்தது. ஆஸ்திரேலியாவில் இது 13.6% ஆக இருந்தது. இந்த இடைவெளியைக் குறைக்க, அரசாங்கம் உரிய செயல்முறைகளை நெறிப்படுத்த வேண்டும் மற்றும் தனியார் மூலதனத்தை ஈர்க்க உற்பத்தி தொடர்பான மானியங்கள் போன்ற நிதி சலுகைகளை வழங்க வேண்டும். ஆய்வு, சுரங்கம், பதப்படுத்துதல் மற்றும் இறுதிக்காலப் பொருட்களிலிருந்து மீள்வது ஆகியவற்றில் மதிப்புச் சங்கிலிகளை வலுப்படுத்த இந்திய அரசு ரூ.34,300 கோடி திட்டத்துடன் தேசிய முக்கியமான தனிம திட்டத்தை  (National Critical Mineral Mission (NCMM)) தொடங்கியுள்ளது.


NMDC போன்ற அரசாங்க ஆதரவு பெற்ற நிறுவனங்கள் தங்கள் ஆஸ்திரேலிய கிளை மூலம் விரிவடைந்து முக்கியமான தனிமத்துறையில் நுழையத் திட்டமிட்டுள்ளன. IREL (இந்தியா) லிமிடெட் நியோடைமியம் மற்றும் டிஸ்ப்ரோசியம் போன்ற முக்கியமான கனிமங்களை பிரித்தெடுக்க தயாராகி வருகிறது. ஆனால், இரு நிறுவனங்களுக்கும் புதிய திட்டங்களுக்கு தனியார் நிறுவனங்களுடன் வலுவான கூட்டாண்மைகள் தேவை. வெளிநாடுகளில் கனிம சொத்துக்களை வாங்குவதற்காக 2019-ல் உருவாக்கப்பட்ட கானிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (KABIL), அதன் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மின்னணு கழிவு மறுசுழற்சி குறித்த புதிய விதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டில் கனிம விநியோகத்தையும் அரசாங்கம் மேம்படுத்தி வருகிறது.


சுழற்சி பொருளாதாரத்தை நோக்கி நகர்தல்


இந்தியாவின் சுரங்க மற்றும் செயலாக்க வசதிகளை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது. உள்கட்டமைப்பை நவீனமயமாக்க இயந்திர சுரங்க உபகரணங்கள், தானியங்கி செயலாக்க ஆலைகள் மற்றும் கழிவு மேலாண்மை அமைப்புகளில் முதலீடு தேவைப்படுகிறது. உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மறுசுழற்சி வரை நீட்டிக்கப்படுகின்றன. இந்தியா ஆண்டுக்கு நான்கு மில்லியன் மெட்ரிக் டன் மின்-கழிவுகளை (e-waste) உருவாக்குகிறது. ஆனால், 10% மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. மேம்பட்ட மறுசுழற்சி வசதிகள் முக்கியமான கனிமங்களை மீட்டெடுக்கலாம், சுழற்சி பொருளாதாரத்தை (circular economy) வலுப்படுத்தலாம். 2022-ஆம் ஆண்டு மின்கல கழிவு மேலாண்மை விதிகள் (Battery Waste Management Rules) மறுசுழற்சி இலக்குகளை நிர்ணயிக்கின்றன. ஆனால், பலவீனமான செயல்படுத்தல் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு சவால்களை முன்வைக்கின்றன. அரசு-தனியார் மையங்கள் மறுசுழற்சி தொழில்நுட்பங்களை அதிகரிக்கலாம், செலவுககள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைக்கலாம்.


இந்தியாவின் சுத்தமான எரிசக்தி மாற்றமும் தொழில்துறை வளர்ச்சியும் சுரங்க மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பொருளாதாரத்தின் மூலம் முக்கியமான கனிமங்களைப் பாதுகாப்பதைப் பொறுத்தது. சுரங்கக் குத்தகைகளை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், சுரங்கங்களில் முதலீடு செய்ய வேண்டும், மறுசுழற்சியை மேம்படுத்த வேண்டும், சத்தீஸ்கரில் ஆய்வுகளை துரிதப்படுத்த வேண்டும், நகர்ப்புற சுரங்கத்தை ஊக்குவிக்க வேண்டும், மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை அதிகரிக்க வேண்டும். இதனால் இறக்குமதி சார்பு குறைக்கப்படுவதோடு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, புதுமைகள் உந்தப்படும்.


தேசிய முக்கிய தனிம திட்டம் மற்றும் சமீபத்திய ஏலங்கள் நேர்மறையான நடவடிக்கைளாகும். ஆனால், அவற்றின் வெற்றிக்கு வலுவான மாநில ஆதரவு, தெளிவான கொள்கைகள் மற்றும் அரசு-தனியார் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. வலுவான தனிம சுற்றுச்சூழல் அமைப்பு இந்தியாவின் மின்சார வாகனம், சூரிய மற்றும் சேமிப்பு இலக்குகளை இயக்கும் அதே நேரத்தில் அதை பசுமை பொருளாதார முன்னணியாக நிலைநிறுத்தும்.


அல்கேஷ் குமார் சர்மா, பொது நிறுவனங்கள் தேர்வு வாரிய உறுப்பினராகவும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னாள் செயலாளராகவும் உள்ளார்.



Original article:

Share:

நீதிமன்றங்களில் பாலின சமத்துவத்திற்கான பாதை -அர்ச்சனா ராமசுந்தரம்

 தேசிய அளவிலான போட்டி மூலம் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது உயர்நீதிமன்றங்களில் உள்ள பாலின ஏற்றத்தாழ்வை (gender imbalance) சரி செய்யும்.


குறிப்பாக, இந்தியா உயர்நீதிமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பது தொடர்ந்து கவலைக்குரியதாக உள்ளது. இந்திய நீதி அறிக்கை 2025-ல் எடுத்துக்காட்டப்பட்டுள்ளபடி, உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளில் பெண்கள் 14% மட்டுமே உள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில், ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டுமே உள்ளார். இந்தியாவின் முதல் பெண் தலைமை நியமிக்கப்படுவது ஒரு நல்ல செய்தியாகும். ஆனால், அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு வேறு எந்தப் பெண்ணும் சேர்க்கப்படாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பெண்களே இல்லாமல் போகலாம். மேலும், 25 உயர் நீதிமன்றங்களில், ஒரே ஒரு நீதிமன்றத்திற்கு மட்டுமே பெண் தலைமை நீதிபதி உள்ளார்.


இந்தக் கடுமையான குறைபாடு கடந்த காலங்களிலும் வெளிப்பட்டது. மேலும், சில நீதிபதிகளும் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய எந்த வலுவான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், நிலைமை மோசமாகவே உள்ளது.


இந்த பாலின வேறுபாட்டிற்கு முக்கிய காரணம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றங்களுக்கு நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் தற்போதைய கொலீஜியம் அமைப்பு ஆகும். கொலீஜியம் தலைமை நீதிபதி மற்றும் ஒரு சில மூத்த நீதிபதிகளைக் கொண்டது. இந்த அமைப்பு ஒரு நெருக்கமான, உயரடுக்கு குழுவாக (‘elitist club’) செயல்படுகிறது. பெண்கள் மற்றும் சமூகத்தின் பிற பின்தங்கிய பிரிவுகள் அதிக அளவு பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.


சீர்திருத்தம் தேவை


இந்த விவகாரத்தில் கீழ் நீதிமன்றங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன. ஏனெனில், இந்த மட்டத்தில் நீதிபதிகள் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமாக வாய்ப்புகளை வழங்குகிறது. இதன் விளைவாக, கீழ் நீதிமன்றங்களின் ஒட்டுமொத்தமாக பெண்கள் 38% உள்ளனர்.


பதவி உயர்வுக்கான சிறந்த வாய்ப்புகள் மற்றும் பெண்களுக்கு தேவையான வசதிகள் இருந்தால் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். உச்ச நீதிமன்றத்தின் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் மையம் (Centre for Research and Planning of the Supreme Court) வெளியிட்ட அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில் 20% மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் பெண்களுக்கு தனிக் கழிப்பறைகள் இல்லை.


உயர் நீதித்துறையில் உள்ள இந்த பாலின சமமின்மை, இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service (IAS)), இந்திய காவல் பணி (Indian Police Service (IPS)), மற்றும் இந்திய வெளியுறவு சேவை (Indian Foreign Service (IFS)) போல, திறந்த தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள் மூலம் நீதிபதிகள் நியமிக்கப்படும் முறையால் சரிசெய்ய முடியும். இந்த பரிந்துரை புதியதல்ல.


கடந்த சில ஆண்டுகளில், இந்த யோசனை அதிக கவனம் பெற்றது. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் ஆதரவைப் பெற்றுள்ளது. நவம்பர் 2023-ல் உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியலமைப்பு தின விழாவில் அவர் ஆற்றிய உரையில், அகில இந்திய நீதித்துறை சேவையை (All-India Judicial Service) உருவாக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். நியாயமான மற்றும் திறந்த போட்டியின் மூலம் தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அமைப்பாக இது இருக்கும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். அத்தகைய அமைப்பு குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட சமூகக் குழுக்களுக்கும் வாய்ப்புகளை வழங்கும்.


துரதிர்ஷ்டவசமாக, இந்த பரிந்துரை நீதித்துறை மற்றும் வழக்கறிஞர்கள் சங்கம் இரண்டிலிருந்தும் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளது; அவர்களின் பார்வையில், இது நிர்வாகத் தலையீட்டிற்கு வழிவகுக்கும் மற்றும் நீதித்துறை சுயாட்சியை பாதிப்பை ஏற்படுத்தலாம். இருப்பினும், இந்த வாதம் நம்பத்தகுந்ததாக இல்லை. போட்டித் தேர்வுகள் (competitive exams) மூலம் கீழ் நீதிமன்றங்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்தவொரு நிர்வாகத் தலையீட்டிற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்றால், இதேபோன்ற அமைப்பு உயர் நீதித்துறையின் சுதந்திரத்தை எவ்வாறு பாதிக்கும்? உண்மையில், ஒரு திறந்த போட்டித் தேர்வு நீதிபதிகள் தகுதியின் அடிப்படையில் நியாயமாகத் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்யும். இது வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும், பாரபட்சம் மற்றும் சார்புநிலையைக் குறைக்கும். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய நீதித்துறையை உருவாக்க உதவும்.


ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission (UPSC)), ஒரு மாதிரியாக 


இந்த கவலைகளை நிவர்த்தி செய்ய, ஒன்றிய அரசுப்பணியாளர் ஆணையத்தின் (UPSC) முக்கியப் பங்கை அங்கீகரிப்பது முக்கியம். ஒவ்வொரு ஆண்டும், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம், குடிமைப் பணி தேர்வுகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்க நாடு தழுவிய போட்டித் தேர்வை நடத்துகிறது.


பல ஆண்டுகளாக, ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணி தேர்வுகளுக்கு வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களின் சுயவிவரங்கள் அவர்களின் சமூக மற்றும் பொருளாதார பின்னணியில் குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மையைக் கண்டன. 2024-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,009 வேட்பாளர்களில், 318 பேர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்தும் 160 பேர் பட்டியல் பிரிவிலிருந்தும், 87 பேர் பட்டியல் பழங்குடியின பிரிவிலிருந்தும், மற்றும் 109 பேர் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவிலிருந்தும் வந்துள்ளனர். பெண்கள் ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளனர்; முதல் 25 வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களில் 11 பேர் பெண்கள் உள்ளனர். உண்மையில், முதல் மற்றும் இரண்டாம் தரவரிசைகள் இரண்டையும் பெண்களே பெற்றுள்ளனர்.


இந்தியா காவல் பணியில் உள்ள சூழ்நிலை இன்னும் மகிழ்ச்சியளிக்கிறது. 2024ஆம் ஆண்டில், 54 பெண்கள் இந்தியா காவல் பணியில் சேர்ந்தனர். இது மொத்த பலத்தில் 28% ஆகும்.


முன்னோக்கிச் செல்லும் வழி


அரசியலமைப்பின் 312வது பிரிவு, சீரான ஆட்சேர்ப்பு, பயிற்சி மற்றும் சேவை தரங்களை உறுதி செய்வதற்காக, அகில இந்திய நீதித்துறை சேவை உட்பட புதிய அகில இந்திய சேவைகளை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. அத்தகைய சேவை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று ஒருவர் நம்புகிறார். இது போன்ற அமைப்புகள் அமைக்கப்பட்டதும், இந்திய நீதித்துறை சேவை மீதான கட்டுப்பாடு உச்சநீதிமன்றத்திடம் இருக்க வேண்டும்.


இருப்பினும், இந்தத் தேர்வு அனைத்து இந்தியர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். மேலும், உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த தகுதித் தரநிலைகள் மற்றும் பிற அளவுகோல்களின் அடிப்படையில் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட வேண்டும். இது நீதித்துறையின் தேர்வு செயல்பாட்டில் மிகவும் தேவையான பாரபட்சமற்ற தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பன்முகத்தன்மையை உருவாக்கும்.


தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வழக்கு எதுவாக இருந்தாலும், உச்ச நீதிமன்றம் அல்லது சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்ற வேண்டும். நிச்சயமாக, அவர்களின் தேர்வுக்குப் பிறகு ஒரு விரிவான அடிப்படை பயிற்சித் திட்டம் தொடர்பான நடைமுறைகள் உட்பட, இந்த நீதிமன்றங்களால் தீர்மானிக்கப்படும்.


போர் என்பது தளபதிகளிடம் மட்டும் விடப்பட வேண்டிய மிக முக்கியமான விவகாரம் என்று முன்னாள் பிரெஞ்சு பிரதமர் ஜார்ஜஸ் கிளெமென்சியோ கூறியுள்ளார். அதேபோல நீதி என்பது நீதிபதிகளிடம் மட்டும் இருக்க வேண்டிய  முக்கியமான விவகாரம். 


இந்த விவகாரத்தில் இந்த நாட்டின் குடிமக்களுக்கும் பங்கு உண்டு. மேலும், அனைவரையும் உள்ளடக்கிய நீதித்துறையை உறுதி செய்வதற்காக தேர்வு செயல்முறைக்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.


அர்ச்சனா ராமசுந்தரம் ஓய்வு பெற்ற காவல்துறை தலைவர் ஆவார். மேலும், லோக்பால் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.



Original article:
Share:

நகராட்சிகளின் நிதிக் கட்டமைப்பு ஏன் குறைபாடுடையதாக உள்ளது? -திகேந்தர் சிங் பன்வார்

 நகராட்சி பத்திரங்கள் (municipal bonds) உள்ளூர் நிதியின் புதிய எல்லையா? ஒன்றிய அரசு வரிகளை அதிகமாகக் கட்டுப்படுத்துவது ஒரு பிரச்சனையா?


தற்போதைய செய்தி: நகர்ப்புற இந்தியா (Urban India) தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கை உருவாக்குகின்றன. ஆனால், நகராட்சிகள் நாட்டின் வரி வருவாயில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே பெறுகின்றன. இந்திய நகரங்கள் போதுமான நிதியை உருவாக்கவில்லை. அதற்குக் காரணம் நிர்வாக ரீதியான செயல்பாடுகள் அல்ல. மாறாக, நிதி மற்றும் வரிவிதிப்பு முறைகள் அவற்றுக்கு போதுமான ஆதரவு வழங்காதது இதற்கு முக்கிய காரணியாகும். இன்று, நகராட்சி நிதி, அரசுகளுக்கிடையேயான பரிமாற்றங்கள், கடன்கள் மற்றும் திட்டங்களைச் சார்ந்துள்ளது. ஒன்றிய அரசு வரிகளை அதிகமாகக் கட்டுப்படுத்துவது முக்கியப் பிரச்சனையாக உள்ளது.


நகரங்கள் தங்கள் வரி வருவாயை எவ்வாறு இழந்தன?


சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்திய நகரங்கள் தங்கள் சொந்த வருவாய் ஆதாரங்களில் ஏறக்குறைய 19% இழந்தன. நகராட்சி பட்ஜெட்டுகளின் பாரம்பரிய உயிர்நாடிகளான நகராட்சி வரி (Octroi), நுழைவு வரி மற்றும் உள்ளூர் கூடுதல் கட்டணங்கள் சரக்கு மற்றும் சேவை வரி கட்டமைப்பிற்குள் சேர்க்கப்பட்டன. வாக்குறுதியளிக்கப்பட்ட இழப்பீட்டு வழிமுறைகள் (compensatory mechanisms) பெரும்பாலும் நகராட்சிகளைத் தவிர்த்துவிட்டது. இதனால், நகரங்கள் மாநில மற்றும் ஒன்றிய அரசாங்கங்களின் பணத்தை இன்னும் அதிகமாக நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


எனவே, நகராட்சிகளுக்கு நிதி சுயாட்சி மற்றும் கணிக்கக்கூடிய வருவாய் வழிகள் இரண்டும் இல்லை. இது ஜனநாயகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலையை (Peculiar inversion) உருவாக்குகிறது. அதிகாரம் ஒன்றிய அரசிடம் உள்ளது. ஆனால், பொறுப்பு உள்ளூர் அரசாங்கங்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், நகரங்கள் திடக்கழிவு மேலாண்மை, குறைந்த விலை வீடுகள், காலநிலை மீள்தன்மை மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவற்றை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அத்தகைய சேவைகளுக்கு நிதியளிக்க போதுமான வளங்கள் இல்லை.


நகராட்சி பத்திரங்கள் என்றால் என்ன?


நிதி ஆயோக்கின் நகர உத்தி மற்றும் புதிய மானியங்கள் போன்ற பல முக்கியமான அரசாங்கத் திட்டங்கள், நகரங்கள் பணம் திரட்டுவதற்கான ஒரு முக்கிய வழியாக பத்திரங்கள் இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இந்திய நகர பத்திரங்கள் இன்னும் அதிகம் நம்பப்படுவதில்லை. நகரங்கள் தங்கள் பத்திரங்களை ஆதரிக்க போதுமான பணத்தை திரட்ட முடியாது என்பதால் மட்டுமல்ல, இந்தப் பத்திரங்கள் எவ்வளவு நம்பகமானவை என்பதை தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் அமைப்பு நியாயமற்றதாக இருப்பதன் காரணத்தினால் இந்த சூழல் உருவாகிறது.


ஒரு நகரத்தின் கடனளிக்கத் தகுதியான நிலை (Creditworthiness) பெரும்பாலும் அதன் ‘சொந்த வருவாய்’ (own revenue) செயல்திறன் - சொத்து வரிகள், பயனர் கட்டணங்கள் மற்றும் கட்டணங்கள் மூலம் குறுகிய அளவில் தீர்மானிக்கப்படுகிறது. அதே, நேரத்தில் மானியங்கள் மற்றும் இடமாற்றங்கள் மூலம் உயர் அரசாங்க மட்டங்களிலிருந்து பெறும் நிலையான நிதியைப் புறக்கணிக்கிறது. இது வெறும் கணக்கீட்டில் ஏற்பட்ட தவறு மட்டுமல்ல - இது தவறான சிந்தனை முறையைக் காட்டுகிறது. ரிசர்வ் வங்கி அல்லது மதிப்பீட்டு நிறுவனங்கள் அரசாங்க மானியங்கள் வெறும் ‘தொடர்ச்சியற்ற வருமானம்’ என்று கூறும்போது, ​​நகரங்கள் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்துள்ளது என்று தவறாகக் கூறுகின்றன. ஆனால், இந்த மானியங்கள் சட்டபூர்வமான உரிமைகள், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மறுபகிர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.


74வது திருத்தச்சட்டம், நகரங்களை மாநிலம் அல்லது ஒன்றிய அரசிடம் நிதிக்காக காத்திருப்பவர்களாக கருதவில்லை. மாறாக வரித்தொகையில் ஒரு பங்கைப் பெற உரிமையுள்ள சமமான நிர்வாக அடுக்குகளாகவே கருதுகிறது. இதேபோல், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற நிறுவனங்கள், சொத்து வரி வசூல் மற்றும் பயனர் கட்டணங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நகரங்கள் ‘தன்னிறைவை’ (self-reliant) அடைய வேண்டும் என்று நீண்டகாலமாக வாதிட்டு வருகின்றன.

சொத்துவரி சீர்திருத்தம் முக்கியமானது. ஆனால், அதை மட்டுமே சார்ந்திருப்பது நியாயமானதாக இருக்காது. சொத்து வரி போதாது. ஏனெனில், அது பொதுவாக ஒரு நகரம் ஈட்டக்கூடிய பணத்தில் 20–25% மட்டுமே தருகிறது. மேலும் அதை வசூலிப்பது பெரும்பாலும் அரசியல் மற்றும் நிர்வாகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது நியாயமற்றது. ஏனெனில், இது நகரங்களை நடத்துவதற்கான செலவில் பெரும்பகுதியை மக்கள்மீது, குறிப்பாக ஏற்கனவே மோசமான சேவைகளைப் பெறும் ஏழை சமூகங்கள் மீது சுமத்துகிறது. பயனர்கள் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் (user pays) என்ற எண்ணம் அடிப்படை பொது சேவைகளை வாங்க வேண்டிய பொருட்களாக மாற்றுகிறது. ஆனால், தூய்மையான நீர், கழிப்பறைகள், தெரு விளக்குகள் மற்றும் போக்குவரத்து ஆகியவை பொருட்கள் அல்ல - அவை அனைவரும் பெற வேண்டிய அடிப்படை உரிமையாகும்.


முன்னோக்கி செல்லும் வழி என்ன?


இந்தியா நிதி ஒப்பந்தத்தை (fiscal contract) ஜனநாயகப்படுத்த வேண்டும். டென்மார்க், ஸ்வீடன் மற்றும் நார்வே போன்ற Scandinavian நாடுகளில், உள்ளூர் வரிகள் மிகவும் முக்கியமானவை என்பதால் நகரங்கள் நல்ல நிதி நிர்வாகத்தைக் கொண்டுள்ளன. இந்த நகரங்கள் வருமான வரிகளை நேரடியாக வசூலிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. இது மக்களுக்கும் அவர்களின் உள்ளூர் அரசாங்கங்களுக்கும் இடையே வெளிப்படையான மற்றும் பொறுப்பான தொடர்பை உருவாக்க உதவுகிறது.


Scandinavian  நாடுகள் என்றால் என்ன?


Scandinavian நாடுகள் என்பது வரலாற்று, கலாச்சார மற்றும் மொழியியல் உறவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வடக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளின் குழுவைக் குறிக்கிறது.


இந்தப் பரவலாக்கப்பட்ட மாதிரியானது செயல்திறன் (efficiency) மற்றும் சமத்துவம் (equity) இரண்டையும் உருவாக்கியுள்ளது: குடிமக்கள் தங்கள் பணம் எங்கு செல்கிறது என்பதைப் பார்க்க முடியும். மேலும், நகரங்கள் நீண்ட காலத்திற்குத் திட்டமிட நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளன. முக்கியமாக, அரசாங்கத்தின் உயர் மட்டங்களிலிருந்து வரும் இடமாற்றங்கள் பகிரப்பட்ட நிதி சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன.  அவை விருப்பமான சலுகைகளாக அல்ல. இந்தியாவால் இதிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். நகராட்சிகள் கணிக்கக்கூடிய, போதுமான மற்றும் கட்டப்படாத வருவாயைக் கொண்ட - அவற்றின் சொந்த ஆதாரங்களிலிருந்தும், அரசியலமைப்பு ரீதியாக கட்டாயப்படுத்தப்பட்ட இடமாற்றங்களிலிருந்தும் - மறுவடிவமைக்கப்பட்ட ஒரு நிதி கூட்டாட்சி (fiscal federalism) மாதிரியாகும்.


இதேபோல், நகரப் பத்திரங்கள் நம்பகமானதாக இருக்க வேண்டுமென்றால், முதலில் மானியங்களும் பகிரப்பட்ட வரிகளும் (recognise grants and shared taxes) ஒரு நகரத்தின் வருமானத்தின் உண்மையான பகுதிகள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது நகரங்கள் நம்பகமான நிதிப் பதிவை உருவாக்க உதவுகிறது. இரண்டாவதாக, மதிப்பீட்டு முறை நிதி அளவீடுகளை மட்டுமே நம்புவதற்குப் பதிலாக, ஒரு நகரத்தின் நிர்வாகத் திறனை - வெளிப்படைத்தன்மை, தணிக்கை விதிமுறைகளை பின்பற்றல் (audit compliance), குடிமக்கள் பங்கேற்பு போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, நகரங்கள் தங்கள் சரக்கு மற்றும் சேவை வரி அல்லது மாநில நிதிகளில் சிலவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும். இந்த மாற்றங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் திட்டமிடப்பட்ட அரசாங்கங்களுக்கு இடையிலான குழுப்பணியை மீண்டும் கொண்டு வரும்.


இந்தியாவின் நகர்ப்புற எதிர்காலம் நிதி நீதியைச் (fiscal justice) சார்ந்தது. நகர நிதியை வெறும் கணிதமாக மட்டும் பார்க்காமல், ஒரு தார்மீக மற்றும் அரசியல் பிரச்சினையாக பார்க்க வேண்டும். நகரங்களுக்கு வழங்கப்படும் பணம் ஒரு பரிசு அல்ல; அது ஒரு சமூக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். நகரங்கள் தாங்கள் ஈட்டும் பணம் தொண்டு அல்ல; அது அவர்களின் உரிமை. நகரங்கள் வெறும் செலவுகள் மையங்கள் அல்ல - அவை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்பதை இந்தியா ஏற்றுக்கொள்ளும் போதுதான் உண்மையான சீர்திருத்தம் தொடங்கும்.


திகேந்தர் சிங் பன்வார் சிம்லாவின் முன்னாள் துணை மேயர் ஆவார், தற்போது கேரள நகர்ப்புற ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.



Original article:

Share:

அகதிகள் மற்றும் ஊடுருவல்காரர்கள்: இந்தியாவின் அகதி சமூகத்திற்கான வெவ்வேறு அளவுகோல்கள் குறித்து . . .

 இந்தியாவிற்கு பாகுபாடற்ற (non-discriminatory) அகதிகள் கொள்கை ஆவணம் தேவை.


ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அகதிகளுக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் இடையே வேறுபாடு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இது சரியானதாக இருந்தாலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் வேறுபாட்டைக் கண்டறிய நடுநிலையான அளவுகோல்களைப் (objective parameters) பயன்படுத்துவதில்தான் பிரச்சனை உள்ளது. சரியான கொள்கையும் சட்ட கட்டமைப்பும் இருக்கும் இடத்தில், சில நேரங்களில் பிரச்சனைகள் எழக்கூடும். அரசாங்க அதிகாரிகளின் புரிதல் நிலையும் இதில் பங்கு வகிக்கிறது. 1951ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளின் நிலை தொடர்பான மாநாட்டிலும் (UN Convention on the Status of Refugees), 1967-ஆம் ஆண்டு நெறிமுறையிலும் இந்தியா கையெழுத்திடவில்லை. இதன் காரணமாக, அகதி யார் என்பதை வரையறுக்கும் ஒரு தெளிவான சட்டம் இந்தியாவில் இல்லை. இது சீரற்ற முடிவுகளுக்கு வழிவகுக்கும். 


மார்ச் 2025 இறுதி வரை, குடியுரிமைச் சட்டம் 1955 (Citizenship Act) மற்றும் கடவுச்சீட்டு சட்டம் 1967 (Passports Act) தவிர, மூன்று சட்டங்கள் 1946-ஆம் ஆண்டு வெளிநாட்டவர் சட்டம் (Foreigners Act), 1939-ஆம் ஆண்டு வெளிநாட்டவர் பதிவு சட்டம் (Registration of Foreigners Act) மற்றும் 1920ஆம் ஆண்டு கடவுச்சீட்டு (இந்தியாவிற்குள் நுழைவு) சட்டம், (Passport (Entry into India) Act)) அகதிகள் உட்பட வெளிநாட்டு குடிமக்களை கையாள பயன்படுத்தப்பட்டன. ஏப்ரல் முதல், குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் சட்டம், சுதந்திரத்திற்கு முந்தைய மூன்று சட்டங்களை மாற்றியது மற்றும் 2000 ஆம் ஆண்டின் குடியேற்ற (பயணிகள் பொறுப்பு) (Immigration (Carriers’ Liability) Act, 2000) சட்டத்தை உள்ளடக்கியது. 


இது சட்ட கட்டமைப்பை ஒழுங்குபடுத்திய போதிலும், அகதிகள் கொள்கை ஆவணம் இல்லாதது இந்தியாவில் உள்ள அகதிகள் சமூகத்திற்கு வெவ்வேறு அளவுகோல்களை ஏற்படுத்தியுள்ளது. இது சட்டக் கட்டமைப்பை நெறிப்படுத்தியிருந்தாலும், இந்தியாவிடம் தெளிவான அகதிக் கொள்கை இல்லாததால், வெவ்வேறு அகதிக் குழுக்கள் வித்தியாசமாக நடத்தப்படுகின்றன. 


2014-ஆம் ஆண்டில், 63,000 திபெத்திய அகதிகளுக்கு உதவித் திட்டம் இருந்தது. ஆனால், 90,000 இலங்கைத் தமிழர்களுக்கு அத்தகைய ஆவணம் இல்லை. ஜூன் 2023-ல், மியான்மர், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் உட்பட இந்தியாவில் 2.11 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் இருந்தனர். ஒரு அகதியிடம் முறையான ஆவணங்கள் இல்லையென்றால் அல்லது அதிக காலம் தங்கியிருந்தால், அவர்கள் சட்டத்தின்கீழ் சட்டவிரோத குடியேறிகளாகக் (illegal migrant) கருதப்படுவார்கள். அவர்கள் ஊடுருவல்காரர்கள் (infiltrator) என்றுகூட அழைக்கப்படலாம். இதன் காரணமாக, அப்பாவி மற்றும் அமைதியான அகதிகள் கூட பிரச்சனையை சந்திப்பார்கள்.


2019ஆம் ஆண்டு குடியுரிமை (திருத்த) சட்டம், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆறு மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டியதால் பலர் இந்த சட்டத்தை விமர்சித்தனர். இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள் அல்லது ரோஹிங்கியாக்கள் தங்கள் நாடுகளில் சிறுபான்மையினராக இருந்தாலும், இந்த சட்டத்தில் அவர்களை சேர்க்கவில்லை. ஆனால். கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஆவணமற்ற அல்லது காலாவதியாகி தங்கியிருக்கும் தமிழ் அகதிகள், அதிகாரிகளிடம் தங்களைப் பதிவு செய்து கொண்டவர்கள், ஜனவரி 9, 2015 அன்று அல்லது அதற்கு முன்னர் இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்தால், குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் (Immigration and Foreigners Act) தண்டனை விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டனர். மற்ற குழுக்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், மதத்தின் அடிப்படையில் மக்களை ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைகள் இன்னும் மாறவில்லை. பொதுவாக அகதிகளுக்கு அமைதியாக உதவுவது தவறல்ல. ஆனால், அது அனைவருக்கும் நியாயமான, தெளிவான மற்றும் சமமான முறையில் செய்யப்பட வேண்டும்.


Original article:

Share:

இந்தியா-கனடா உறவின் நிலை என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— ஞாயிற்றுக்கிழமை இரவு புது டெல்லியை அடைந்த கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், திங்கட்கிழமை வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரவு மும்பைக்குச் செல்வதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.


— புது டெல்லி மற்றும் ஒட்டாவா பல நடவடிக்கைகளில் உடன்பட்டன. இதில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த அமைச்சர்கள் அளவிலான விவாதங்களைத் தொடங்குதல், 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா-கனடா தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தை மீண்டும் தொடங்குதல், எரிசக்தி உரையாடலை மீண்டும் தொடங்குதல், பொது அணுசக்தி ஒத்துழைப்பு குறித்த விவாதங்கள் மற்றும் உயர்கல்வியில் இணைந்து பணியாற்ற ஒரு குழுவை அமைத்தல் போன்ற பணிகள் போன்றவை அடங்கும்.


— இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கனடா வெளியுறவு அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறை. 2023ஆம் ஆண்டில், கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்கள் ஈடுபட்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில் இடைவெளி ஏற்பட்டது. இதை இந்தியா கடுமையாக மறுத்தது. இது பொய்யானது மற்றும் அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறியது. இதன் விளைவாக, இரு நாடுகளும் தங்கள் இராஜதந்திர உறவுகளை குறைத்துக் கொண்டன.


— ஒட்டாவாவில் பாதுகாப்பு மாற்றத்தைத் தொடர்ந்து, ஜூன் மாதம் கனனாஸ்கிஸில் நடந்த G7 தலைவர்கள் உச்சிமாநாட்டின் போது பிரதமர் மார்க் கார்னி பிரதமர் மோடியைச் சந்தித்தார். மேலும், இரு தலைவர்களும் தங்கள் அதிகாரிகளிடம் உறவுகளை சரி செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.


— இரு நாடுகளிலிருந்தும் முன்னணி வணிக நிர்வாகிகளை ஒன்றிணைத்து உறுதியான தன்மையை அடையாளம் காணும் கனடா-இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தை மீண்டும் தொடங்குவது குறித்தும் அவர்கள் பேசினார்.


— எரிசக்தியைப் பொறுத்தவரை, கனடா-இந்தியா அமைச்சகத்தின் எரிசக்தி உரையாடலை (Canada-India Ministerial Energy Dialogue (CIMED)) மீண்டும் நிறுவவும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு & திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவையுவிற்கான இருவழி வர்த்தகத்தை ஊக்குவிக்கவும், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தித் துறையில் முதலீடு செய்யவும் அவர்கள் ஒப்புக்கொண்டதாக கூட்டு அறிக்கை தெரிவித்தது.


— கனடாவின் சுரங்க நிபுணத்துவம் இந்தியாவிற்கு எரிசக்தி பாதுகாப்பிற்குத் தேவையான முக்கியமான தனிமங்களை எவ்வாறு வழங்க முடியும் என்பதை அடையாளம் காண அரசாங்கம், தொழில்துறை மற்றும் நிபுணர்களிடையே உரையாடலை ஊக்குவிக்க முடிவு செய்தனர்.


— 2026ஆம் ஆண்டு  மார்ச் மாதத்தில் டொரண்டோவில் நடைபெறும்  Prospectors and Developers Association Conference மாநாட்டின் போது, முதல் முக்கிய தனிமங்கள் ஆண்டு உரையாடலை (Critical Minerals Annual Dialogue) நடத்த இரு நாடுகளும் முடிவுசெய்தன.


— செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய எல்லைகள் குறித்து, கூட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக் குழுவை மீண்டும் தொடங்க அவர்கள் முடிவு செய்தனர்.


உங்களுக்குத் தெரியுமா:


—உலகின் மிகப்பெரிய இந்திய சமூகங்களில் ஒன்றான கனடாவில், 1.6 மில்லியன் இந்திய வம்சாவளி மக்கள் வசிக்கின்றனர். கனடாவின் மக்கள் தொகையில் அவர்கள் 3%-க்கும் அதிகமானோர் உள்ளனர். கனடாவில் 700,000 வெளிநாட்டு இந்தியர்களும் உள்ளனர். 2022ஆம் ஆண்டில் 230,000 இந்திய மாணவர்களுடன், கனடாவிற்கு மாணவர்களை அனுப்பும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.


— 2021-22 ஆம் ஆண்டில் கனடாவுடனான இந்தியாவின் மொத்த வர்த்தகம் $11.68 பில்லியனாக இருந்தது. இது இருக்கக்கூடியதை விட மிகக் குறைவு. இருப்பினும், இந்தியாவின் மொத்த பருப்பு இறக்குமதியில் 30% கனடாவிலிருந்து வருகிறது. இது இந்தப் பிரிவில் குறிப்பிடத்தக்க பங்கைக் காட்டுகிறது.


— 2021 கனடா மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சீக்கியர்கள் கனடாவின் மக்கள்தொகையில் 2.1 சதவீதமாக உள்ளனர். மேலும், அவர்கள் நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் மதக்குழுவினர்களாக உள்ளனர். இந்தியாவிற்குப் பிறகு, உலகிலேயே அதிக சீக்கியர்கள் வசிக்கும் நாடக கனடா உள்ளது.



Original article:

Share: