ஆரவல்லி மலைத்தொடர் வரையறை குறித்த உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு, ஹரியானாவின் லட்சியத் திட்டமான 'வன உலா’ (Jungle Safari) திட்டத்தை எவ்வாறு முடக்கியுள்ளது -வரீந்தர் பாட்டியா

 ஆரவல்லி மலைத்தொடர் என்பது எதைக் குறிக்கிறது என்பதை நிபுணர்கள் குழு தெளிவாக வரையறுக்கும் வரை, அந்தப் பகுதியில் மலைத்தொடரைப் பாதிக்கும் எந்த ஒரு செயலையும் மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு, ஹரியானா மாநில அரசு குருகிராம் மற்றும் நூ (Nuh) மாவட்டங்களில் செயல்படுத்தவிருந்த பிரம்மாண்டமான 'வன உலா’  (Jungle Safari) திட்டத்திற்குத் தற்காலிகத் தடையை ஏற்படுத்தியுள்ளது.


ஆரவல்லி மலைத்தொடர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் மேற்கொண்டுள்ள சமீபத்திய தலையீடு, குருகிராம் மற்றும் நுஹ் (Nuh) அருகே ஹரியானா அரசு திட்டமிட்டிருந்த பிரம்மாண்டமான 'வன உலா’  (Jungle Safari) திட்டத்திற்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


உலகின் மிகப்பெரிய வன உலா பூங்காக்களில் ஒன்றாக அமையவிருந்த இத்திட்டத்தை, ஒரு முக்கியமான சூழல் சுற்றுலா மற்றும் பல்லுயிர் பெருக்க முன்முயற்சியாக மாநில அரசு முன்மொழிந்திருந்தது.


ஆனால், கடந்த வியாழக்கிழமை பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி இது குறித்துத் தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம், "ஆரவல்லி மலைத்தொடர்" என்பதன் சரியான வரைமுறை என்ன என்பதை நிபுணர்கள் குழு முடிவு செய்யும் வரை, அந்தப் பகுதியில் மலைத்தொடரைப் பாதிக்கும் எந்தவொரு செயல்பாட்டையும் முன்னெடுக்கக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது.


இந்த நீதிமன்ற உத்தரவு அந்தப் பிரம்மாண்ட திட்டத்திற்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும், குறுகிய மற்றும் நீண்டகால அடிப்படையில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதையும் இது விளக்குகிறது.


ஹரியானா அரசின் 'வன உலா’  (Jungle Safari) திட்டம் என்ன?


ஆரவல்லி விலங்கியல் பூங்கா அல்லது ஆரவல்லி சஃபாரி பூங்கா என்று அழைக்கப்படும் இந்த 'வன உலா’ திட்டம், 2021–22 ஆம் ஆண்டில் ஹரியானா அரசால் உருவாக்கப்பட்டது.


சமீபத்திய ஆண்டுகளில் அதிவேக நகரமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை கண்டுள்ள குருகிராம் மற்றும் நூஹ் (Nuh) மாவட்டங்களில் பரவியுள்ள ஆரவல்லி மலை அடிவாரத்தில், சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டது.


பின்னர் அரசாங்கம் இதன் அளவை சுமார் 3,000-3,500 ஏக்கராகக் குறைத்த போதிலும், இந்தத் திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது உலகின் மிகப்பெரிய வன உலா பூங்காக்களில் ஒன்றாகத் திகழும் என்று கூறப்பட்டது. பொதுவாக ஒரு வன உலா பூங்கா என்பது மிருகக்காட்சிசாலையைவிடப் பெரியதாகவும், வனவிலங்கு காப்பகத்தைவிடச் சிறியதாகவும் இருக்கும் என்கின்றனர். 


மாநில அரசு இந்தத் திட்டத்தை வெறும் சுற்றுலா முயற்சியாக மட்டும் பார்க்காமல், பல்லுயிர்ப் பெருக்கத்தைப் புதுப்பிக்கும் மற்றும் புறக்கணிக்கப்பட்ட நிலங்களை முறையாக நிர்வகிக்கப்படும் சூழலியல் மண்டலங்களாக மாற்றும் ஒரு பாதுகாப்பு சார்ந்த திட்டமாக வடிவமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆரவல்லி மலைத்தொடரில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான மேம்பாட்டுப் பணிகள், "சுற்றுச்சூழல் சுற்றுலா" (Eco-tourism) என்ற பெயரில் நடந்தாலும், அவை வனவிலங்கு நடமாட்டப் பாதைகளைத் துண்டிக்கும் மற்றும் கூடுதல் சூழலியல் அழுத்தத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகக் கூறுகின்றனர்.


ஆரவல்லி திட்டத்தின் மீதான சட்டப் போராட்டம்


ஐந்து ஓய்வுபெற்ற இந்திய வனப்பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் People for Aravallis என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் இணைந்து தொடர்ந்த வழக்கைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரவல்லி திட்டத்தை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. ஏற்கனவே மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ள ஆரவல்லி மலைத்தொடருக்கு, இந்தத் திட்டம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் வாதிட்டனர்.


வியாழக்கிழமையன்று, இந்தச் வன உலா திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கையை, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்திய உயர்மட்டக் குழுவிடம் (Central Empowered Committee (CEC)) சமர்ப்பிக்க அனுமதி கோரி ஹரியானா அரசு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இருப்பினும், இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு (நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோரை உள்ளடக்கியது), அரியானா மாநில அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. ‘வன உலா’ திட்டத்தின் அறிக்கையைச் சமர்ப்பித்தல் மற்றும் ஆய்வு செய்தல் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு ஹரியானா அரசு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.


சுற்றுச்சூழல் எல்லைகளை நிர்ணயிப்பது நீதித்துறையின் பணி அல்ல என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. ஆரவல்லி மலைத்தொடரை வரையறுக்கும் பணியானது, நிபுணர்களின் ஆலோசனை மற்றும் அறிவியல் பூர்வமான ஆய்வின் மூலமே செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.


ஆரவல்லி மலைத்தொடரின் எந்தெந்தப் பகுதிகள் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்டவை என்பதில் தெளிவு கிடைக்கும் வரை, அங்குள்ள நிலப்பரப்பை மாற்றக்கூடிய எந்தவொரு வளர்ச்சிப் பணிகளையும் அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


ஆரவல்லி மலைத்தொடர்களுக்கான வரையறை


ஆரவல்லி மலைத்தொடர் உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாகும். இது ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்கள் வரை பரவியுள்ளது. இது மிகவும் பாதிப்படையக்கூடிய சூழலியல் அமைப்பைக் கொண்டது. சுரங்கத் தொழில், நிலச் சேதம் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான பல நீதிமன்ற வழக்குகளில் இந்த மலைத் டர் இடம்பெற்றுள்ளது.


ஆரவல்லி மலைத்தொடரை எவ்வாறு வரையறுப்பது என்பது குறித்துப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. இதனைச் சரிசெய்ய, கடந்த ஆண்டு அரசாங்கம் உயரத்தின் அடிப்படையில் ஒரு சீரான வரையறையை முன்மொழிந்தது. அதன்படி, சுற்றியுள்ள பகுதியைவிட 100 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தில் இருக்கும் எந்தவொரு நிலப்பகுதியும், அதன் சரிவுகள் மற்றும் அருகிலுள்ள நிலங்களுடன் சேர்த்து ஆரவல்லி மலைத்தொடரின் ஒரு பகுதியாக வரையறுக்கப்பட்டது.


இந்த வரையறையினால் பல மலைப்பகுதிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை இழக்க நேரிடும் என்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக, அரசின் அந்த வரையறையை ஏற்றுக்கொண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி தான் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் டிசம்பர் மாதத்தில் நிறுத்தி வைத்தது.


நீதிமன்றத்தின் தலையீடு இந்தத் திட்டத்திற்கு என்ன விளைவை ஏற்படுத்தும்?


ஹரியானா அரசு இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை நீதித்துறை மற்றும் சுற்றுச்சூழல் ஆய்விற்காக சமர்ப்பிக்கத் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், தற்போதைய நிலையில் அத்தகைய அறிக்கையைச் சமர்ப்பிக்கக்கூட உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.


நடைமுறையில் பார்த்தால், ஆரவல்லி மலைத்தொடரின் வரையறை குறித்த தெளிவான முடிவு எடுக்கப்படும் வரை, இந்த 'வன உலா’ (Jungle Safari) திட்டத்தைத் தொடர முடியாது. அந்தத் தெளிவு இல்லாமல், சுற்றுச்சூழல் அனுமதிகள், நிலப் பயன்பாட்டு முடிவுகள் மற்றும் சட்டபூர்வமான அங்கீகாரங்கள் போன்றவை கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கும் என்கின்றனர்


ஆரவல்லி மலைத்தொடருக்கான வரையறை (Definition) நிர்ணயிக்கும் பணி எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைப் பொறுத்து, இந்தத் தாமதமானது பல மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் கூட நீடிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.


இது ’வன உலா’ திட்டத்தை மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பிற உள்கட்டமைப்பு அல்லது சுற்றுலாத் திட்டங்களையும் பாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்தத் திட்டத்தின்கீழ் ஹரியானா அரசு என்ன திட்டமிட்டிருந்தது?


ஹரியானா அரசின் ’வன உலா’ (Jungle Safari) திட்டத்திற்கான வரைபடம் மிகவும் விரிவானது. கடந்த சில ஆண்டுகளில் வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, இந்தத் திட்டத்தில் பின்வருவன இடம்பெற உள்ளன:


தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளுக்கான பெரிய திறந்தவெளி பகுதிகள்.


புலிகள், சிங்கங்கள் போன்ற பெரிய பூனை வகை விலங்குகள் மற்றும் வெளிநாட்டு வகை விலங்குகளுக்கான பிரத்யேக இடங்கள்.


பறவை பூங்காக்கள், ஊர்வன மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கான பிரிவுகள்.


உள்ளூர் தாவரங்களைப் பாதுகாக்கும் மண்டலங்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்கள்.


விளக்க மையங்கள், சுற்றுச்சூழல் தங்குமிடங்கள் மற்றும் வழிகாட்டிகளுடன் கூடிய சஃபாரி பயணங்கள்.


இந்தத் திட்டம் கனமான சிமெண்ட் கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நிலத்தின் இயற்கையான அமைப்பைப் பின்பற்றியே அமையும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், இதற்காகக் கண்டறியப்பட்ட நிலங்களில் பெரும்பாலானவை தரம் குறைந்த அல்லது காடு அல்லாத நிலங்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறிவியல் ரீதியான காடு வளர்ப்பு மற்றும் வாழ்விடங்களை உருவாக்குவதன் மூலம், அந்தப் பகுதியில் பசுமைப் போர்வையை (செடி, கொடி, மரங்கள்) அதிகரிக்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


இந்தத் திட்டத்திற்கு அரசாங்கத்திடமிருந்து பெரும் முதலீடு தேவைப்படும் என்றும், அநேகமாக பொது-தனியார் பங்களிப்பு மூலம் இது செயல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.


குறுகிய கால பொருளாதார தாக்கம்


குறுகிய காலத்தில், இந்தத் தாமதமானது குருகிராம் மற்றும் நுஹ் (Nuh) மாவட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலா சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளைப் பாதிக்கலாம். கட்டுமானப் பணி மற்றும் செயல்பாட்டு காலங்களில் போக்குவரத்து, பராமரிப்பு, வனவிலங்கு மேலாண்மை மற்றும் உள்ளூர் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மாநில அரசு திட்டமிட்டிருந்தது. இதுதவிர தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் பயண முகவர்கள் போன்ற வணிகங்களும் இதன் மூலம் பயனடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


குறிப்பாக, ஹரியானாவின் குறைந்த வளர்ச்சியடைந்த பகுதிகளில் ஒன்றாக நுஹ் மாவட்டம் உள்ளது. கொள்கை வகுப்பாளர்கள் இந்தச் ‘வன உலா’ திட்டத்தை, அப்பகுதியின் வளர்ச்சிக்கும் மற்றும் விவசாயத்தைத் தாண்டி பிற தொழில்களில் ஈடுபடுவதற்கான ஒரு பெரிய வாய்ப்பாகவும் கருதியிருந்தனர்.


நீண்ட கால தாக்கம்


சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலா (Eco-tourism) மூலம் கிடைக்கும் பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையைச் சார்ந்தே இருக்கிறது. ராஜஸ்தானின் தார் பாலைவனம் மேலும் விரிவடைவதைத் தடுப்பதிலும், நிலத்தடி நீரைப் பெருக்குவதிலும், டெல்லி பகுதியின் 'பசுமை நுரையீரலாக' (Green lung) செயல்படுவதிலும், பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிப்பதிலும் ஆரவல்லி மலைத்தொடர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.


முறையற்ற வளர்ச்சியினால் சுற்றுச்சூழல் சீரழிந்தால், நீர் பற்றாக்குறை, மாசுபாடு அல்லது காலநிலை மாற்ற பாதிப்புகள் போன்ற நீண்டகாலப் பொருளாதார இழப்புகள், சுற்றுலாவால் கிடைக்கும் குறுகிய கால லாபத்தை விட அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கின்றனர். 


உச்சநீதிமன்றம் கூறியது என்ன?


கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்ற விசாரணையின் போது, தலைமை நீதிபதி காந்த் அவர்கள் பேசுகையில், ஒரு சார்பற்ற நிபுணர் குழு, நீதிமன்றம் ஏற்கும் வகையில் ஒரு அறிவியல் பூர்வமான மற்றும் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்கும் வரை, ஆரவல்லி மலைத்தொடரில் எந்தவொரு செயல்பாட்டையும் நீதிமன்றம் அனுமதிக்காது என்று தெரிவித்தார். இந்த நிபுணர் குழுவிற்கான பெயர்களைப் பரிந்துரைக்குமாறு ஒன்றிய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 


மேலும், நீதிமன்றம் நிபுணர்களால் ஆனது அல்ல என்றும் ஒரு சுதந்திரமான அமைப்பின் வழிகாட்டுதலையே நீதிமன்றம் சார்ந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


நிபுணர் குழுவின் கருத்து வந்த பின்னரே, ‘வன உலா’ திட்டம் குறித்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்கும் என்று நீதிபதி காந்த் கூறினார். அவர் மேலும் கூறுகையில், முக்கியமான விஷயங்களில் நீதிமன்றம் முழுமையாக திருப்தி அடையும் வரை, இன்று ஒரு அங்குல நிலத்திற்கு கூட அனுமதி வழங்கப்படாது  என்று நீதிபதி தெரிவித்துள்ளார். 


நாங்கள் இதனை எப்போதும் அனுமதிக்க மாட்டோம் என்பது பொருளல்ல, இந்த முழு விவகாரத்தையும் நாங்கள் விரிவாக ஆய்வு செய்து வருகிறோம். ஆரவல்லி மலைத்தொடர் ஹரியானாவில் தொடங்கி அங்கேயே முடிவடைவது இல்லை என்றும் அது ராஜஸ்தானில் தொடங்கி அங்கேயே முடிவடைவதும் இல்லை. ஆரவல்லி என்பது ஒரு நீண்ட மலைத்தொடர், எனவே, ஆரவல்லியின் அனைத்து அம்சங்களையும் அதன் ஒட்டுமொத்தப் பரப்பையும் கருத்தில் கொண்டு, ஒரு முழுமையான ஆய்வுக்குப் பின்னரே ஒரு தெளிவான தீர்வு வழங்கப்படும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.


original article : How Supreme Court stance on Aravalli definition stalls Haryana’s ambitious Jungle Safari project?. -Varinder Bhatia

Share:

தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் ஊதியங்களை மறுவரையறை செய்கின்றன மற்றும் தொழிலாளர்களுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்குகின்றன -ஆர். முகுந்தன்

 தொழிலாளர் சலுகைகளின் விரிவாக்கம், அவர்களின் நிதி உள்ளடக்கம் மற்றும் அவர்களின் நீண்டகால சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவை உறுதி செய்யப்படும்.


இந்தியா கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் (Labour Codes), தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, வருமானப் பாதுகாப்பு மற்றும் நீண்டகால நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் நிதிநிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சிதறிக் கிடந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலம், தொழிலாளர் நிர்வாகத்தை நவீனப்படுத்தவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் தொழிலாளர்களுக்குச் சமமாகச் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்தச் சட்டங்கள் முயல்கின்றன.


சில தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள போதிலும், இந்தத் தொழிலாளர் சட்டங்களை உற்று நோக்கினால், இந்தச் சீர்திருத்தங்கள் முக்கியமாக நீண்டகாலமாக உள்ள இடைவெளிகளைச் சரிசெய்யவும், லட்சக்கணக்கான தொழிலாளர்களை முறையான நிதி மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்புகளுக்குள் கொண்டு வருவதற்காகவுமே வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


ஒரு வரையறையின் சீர்திருத்தம்


நிதி உள்ளடக்கத்தின் (Financial inclusion) ஒரு முக்கிய விளைவு "ஊதியம்"  என்பதற்கான வரையறையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகும். இதற்கு முன்பு, பல நிறுவனங்கள் சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகளைக் (social security contributions) குறைப்பதற்காக, அடிப்படை ஊதியம் (basic pay, அகவிலைப்படி (dearness allowance) மற்றும் இருப்புப்படி (retaining allowance) ஆகியவற்றை மொத்தச் சம்பளத்தில் வெறும் 30% முதல் 35% வரை மட்டுமே வைத்திருந்தன. தற்போது, இந்த ஊதியமானது மொத்த வருமானத்தில் குறைந்தபட்சம் 50% ஆக இருக்க வேண்டும். இந்த மாற்றத்தால் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை போன்ற பலன்களுக்கான பங்களிப்பு அதிகரிக்கும் என்றும் இது ஊழியர்களின் நீண்டகால சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


மேலும், தற்போது குறிப்பிட்ட காலப் பணியாளர்கள் (Fixed-term employees) ஓராண்டு பணி முடித்தாலே பணிக்கொடை (Gratuity) பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இது நவீன தொழிலாளர் சந்தையின் உண்மை நிலையைப் பிரதிபலிப்பதோடு, குறுகிய கால ஒப்பந்தப் பணிகளிலும் பணிக்கொடை கிடைப்பதை உறுதி செய்கிறது.


பல ஆண்டுகளாக, ஒரு குறிப்பிட்ட கால ஒப்பந்தத்தில் (fixed-term) பணிபுரிந்த தொழிலாளர்கள் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பங்களித்தனர். ஆனால், பணிக்காலம் முடிந்து செல்லும்போது அவர்களுக்கு எந்தவிதமான நிதிப்பலன்களும் கிடைப்பதில்லை. தற்போது பணிக்கொடை (Gratuity) வசதியை இவர்களுக்கும் நீட்டிப்பதன் மூலம், குறுகிய கால வேலையும் சேமிப்பிற்கும் மற்றும் வருமான பாதுகாப்பிற்கும் ஒரு வழியாக மாறுகிறது. வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை ஆகியவை வெறும் ஓய்வுக்கால பலன்களாக மட்டுமல்லாமல், நிதி உள்ளடக்கம் மற்றும் சேமிப்பிற்கும் உதவும் கருவிகளாகச் செயல்படும் என்கின்றனர். இது தொழிலாளர்கள் பணத்தைச் சேமிக்கவும், நிதி அபாயங்களை குறைக்கவும் மற்றும் பணி மாற்றங்களின் போது பாதுகாப்பாக இருக்கவும் பெரிதும் உதவுவதாகவும் கூறப்படுகிறது.


இந்த மாற்றங்கள் TCS, Infosys, HCLTech மற்றும் L&T போன்ற பெரிய நிறுவனங்களுக்கு நிதிச்சுமையை அதிகரித்துள்ளன. ஏனெனில், இந்த நிறுவனங்களில் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதோடு குறிப்பிட்ட காலத்திற்கான ஒப்பந்தப் பணிகளில் அதிகப்படியானோர் ஈடுபட்டுள்ளனர்.


பணிக்கொடை வழங்க வேண்டிய கட்டாயத்தால் நிறுவனங்களுக்கு 'கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு' ஏற்பட்டுள்ளதாக வரும் செய்திகளைச் சரியான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். இந்த கூடுதல் செலவானது தொழிலாளர்களின் வருமானப் பாதுகாப்பையும், வாங்கும் திறனையும் மேம்படுத்துகிறது. இது அதிக நுகர்வு, சேமிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும். சமூகப் பாதுகாப்புப் பலன்கள் அதிகரிப்பது என்பது, நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு அல்ல என்றும் மாறாக, உழைப்புக்குக் கிடைக்கும் நியாயமான பங்கு என்கின்றனர். மேலும், இது வேலைவாய்ப்பில் சமநிலை, கண்ணியம் மற்றும் நீண்டகால உறுதித் த்தன்மையை மேம்படுத்துவதில் தொழிலாளர் சட்டங்களின் பங்கினை மிகச்சரியாக எடுத்துக் காட்டுகிறது.


பேரியல் பொருளாதார தாக்கம்


தொழிலாளர் சட்டங்களின்கீழ் உள்ள நிதி உள்ளடக்கம் என்பது, ஒழுங்கமைக்கப்பட்ட துறை தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு நன்மைகளைத் தாண்டி விரிவடைந்துள்ளது. தற்காலிகத் தொழிலாளர்கள் (Gig workers), இணையம் சார்ந்த தொழிலாளர்கள் (platform workers) மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கப்படுவது ஒரு மிக முக்கியமான சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. இந்திய தொழிலாளர் சட்ட வரலாற்றில் முதன்முறையாக, இந்தத் தொழிலாளர்கள் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு காப்பீடு, வருங்கால வைப்புநிதி (PF) மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயோ அல்லது வேலை மாறும்போதோ இந்தச் சலுகைகளைத் தொடர்ந்து பெறும் வசதி, குறிப்பாக புலம்பெயர்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மிகவும் முக்கியமானது. இவர்கள் நீண்டகாலமாக நிலையான நிதி அமைப்புகளிலிருந்து விலக்கியே வைக்கப்பட்டிருந்தனர். 'ஊதியச்  சட்டத் தொகுப்பு' (Code on Wages)  அனைத்து துறைகளுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்கிறது. மேலும், ஊதியத்தில் தேவையற்ற பிடித்தங்களை தவிர்ப்பதோடு, சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதையும் இது கட்டாயமாக்குகிறது.


ஒட்டுமொத்தமாக, இந்த நடவடிக்கைகள் தொழிலாளர்களின் வருமானத்தை நிலைப்படுத்துவதுடன், முறையான பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்புத் திறனையும்  மேம்படுத்துகின்றன.


வருமானத்தை தொழிலாளர்களுக்குப் பிரித்தளிப்பது முக்கியமான பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்துகிறது. வருமானப் பாதுகாப்பு அதிகரிப்பது தொழிலாளர்களின் வாங்கும் திறனை உயர்த்துகிறது. இது அதிக நுகர்வு, மேம்பட்ட சேமிப்புப் பழக்கம் மற்றும் முறையான நிதி நிறுவனங்களுடன் (வங்கிகள் போன்றவை) அதிகத் தொடர்பை ஏற்படுத்த வழிவகுக்கிறது. பங்குதாரர்களின் வருமானம் பெரும்பாலும் நிதிச் சந்தைகளிலோ அல்லது வெளிநாட்டுச் சொத்துக்களிலோ முதலீடு செய்யப்படலாம். ஆனால், தொழிலாளர்களின் வருமானம் பெருமளவில் உள்நாட்டுப் பொருளாதாரத்திலேயே சுழற்சிக்கு உள்ளாகிறது, இது நாட்டின் தேவையை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சியை உருவாக்குகிறது. இந்தக் கோணத்தில் பார்த்தால், தொழிலாளர் சட்டங்கள் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கருவிகளாகச் செயல்படுகின்றன. தொழிலாளர்களின் நிதிநிலையை வலுப்படுத்துவதன் மூலம், அவை பொருளாதார அதிர்ச்சிகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதோடு, சமூக நிலைத்தன்மைக்கும் பங்களிக்கின்றன.


முந்தைய தொழிலாளர் சட்டங்கள் காலாவதியானவை. 


இந்த மேம்பாடுகள் இருந்தபோதிலும், சில தொழிற்சங்கங்கள் இன்னும் இந்தத் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை (Labour Codes) எதிர்ப்பதோடு, அவை தொழிலாளர்களுக்கு எதிரானது என்றும் விவரிக்கின்றன. முறையான அமலாக்கம் குறித்த சிக்கல்கள் நியாயமானவை என்றாலும், அவற்றை முற்றிலுமாக எதிர்ப்பது அந்தச் சட்டங்களில் உள்ள உண்மையான நன்மைகளைப் புறக்கணிப்பதாக அமையும் என்கின்றனர். சில சமயங்களில், வேலைநிறுத்த அழைப்புகள் சட்டத்தின் உண்மையான விதிகளுக்கு எதிராக இருப்பதைவிட, சீர்திருத்தங்களை நோக்கிய எதிர்ப்பினால் தூண்டப்படுவதாகவே தெரிகிறது. இது பெருமளவு தொழிலாளர் சார்புடைய மற்றும் நலன் சார்ந்த சீர்திருத்தங்கள் குறித்த பொதுமக்களின் புரிதலைப் பலவீனப்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்தியா போன்ற ஒரு பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், தொழிலாளர் சட்டச் சீர்திருத்தங்கள் மாற்றமின்றி அப்படியே இருக்க முடியாது. முந்தைய தொழிலாளர் சட்டங்கள் காலாவதியானதாகவும் வேகமாக மாறிவரும் தொழிலாளர் சந்தைக்குப் பொருந்தாததாகவும் மாறியிருந்தன. அவற்றை நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக ஒருங்கிணைப்பது, விதிமுறைகளைப் பின்பற்றுவதை எளிதாக்குகிறது, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துகிறது. மேலும், இது தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் இருவருக்கும் பயனளிக்கும் ஒரு தெளிவான முறையை உருவாக்குகிறது.


இந்தியாவின் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், வெறும் ஒழுங்குமுறை மாற்றங்களாக மட்டும் பார்க்கப்படாமல், நிதி உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய ஒரு முக்கியமான கட்டமைப்பாகக் கருதப்பட வேண்டும். பணிக்கொடை சலுகையை விரிவுபடுத்துதல், சமூக பாதுகாப்பு வளையத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நீண்டகாலமாக இருந்த சட்டரீதியான தடைகளை நீக்குதல் ஆகியவற்றின் மூலம், இந்தச் சட்டங்கள் பொருளாதார மதிப்பை மூலதனத்திலிருந்து உழைப்பாளர்களுக்கு அர்த்தமுள்ள வகையில் மாற்றியமைக்கின்றன. இது வருமானப் பாதுகாப்பை மேம்படுத்தி, நிதி சார்ந்த கண்ணியத்தை உறுதிப்படுத்துவதோடு, பொருளாதார வளர்ச்சியை சமூக நீதியுடன் இணைக்கிறது. இந்தத் தொழிலாளர் சட்டங்களின் உண்மையான வெற்றி, வெறும் எதிர்ப்பிலோ அல்லது வெற்றுப் பேச்சிலோ இல்லை என்றும் மாறாக, இந்தியாவின் வளர்ச்சியில் ஒவ்வொரு தொழிலாளியும் ஆக்கப்பூர்வமாகப் செயல்படுவதிலேயே அடங்கியுள்ளது என்கின்றனர்.


ஆர். முகுந்தன், இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் (CII) நியமிக்கப்பட்ட தலைவராகவும், டாடா கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகவும்  உள்ளார்.


original article : The labour codes redefine wages, empower the worker -R. Mukundan

Share:

உரிமை மீறல் தீர்மானம் என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— "ஒரு தனித் தீர்மானம் (Substantive Motion) என்பது சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் ஒரு தனித்துவமான மற்றும் சுதந்திரமான முன்மொழிவாகும். இது அவையின் முடிவை வெளிப்படுத்தும் வகையில் தெளிவாக வடிவமைக்கப்பட்டிருக்கும்," என்று எம்.என். கவுல் மற்றும் எஸ்.எல். ஷக்தேர் ஆகியோர் தங்களது புகழ்பெற்ற ‘Practice and Procedure of Parliament’ என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளனர். இந்தப் புத்தகம் பல்வேறு வகையான தீர்மானங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.


— சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானங்கள், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்த ஒத்திவைப்புத் தீர்மானங்கள், பிற தீர்மானங்கள், பொது நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்த விவாதத்திற்கான தீர்மானங்கள், அமைச்சர்கள் குழு மீதான நம்பிக்கை அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள், சபாநாயகர் அல்லது துணை சபாநாயகரை பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானங்கள் மற்றும் அவையின் அனுமதி பெறாமல் நீண்டகாலம் வராத ஒரு உறுப்பினரின் பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கும் தீர்மானங்கள் ஆகிய அனைத்தும் மக்களவையில் கொண்டுவரப்படும் 'தனித் தீர்மானங்களுக்கு' சிறந்த உதாரணங்களாகும் என்று அவர்கள் எழுதியுள்ளனர்.


— தனித் தீர்மானங்கள் என்பவை மற்றொரு விஷயத்தைச் சாராமல், ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் சபையின் கருத்தை அறிய கொண்டு வரப்படுகின்றன.


— ஒரு தனித் தீர்மானம் குறித்து முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்பட வேண்டும். அந்த அறிவிப்பை கொடுத்த உறுப்பினர் மட்டுமே அந்தத் தீர்மானத்தை முன்மொழிய முடியும். இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு.  அதாவது, தீர்மானம் ஒரு அமைச்சரின் பெயரில் இருந்தால், அவருக்குப் பதிலாக மற்றொரு அமைச்சர் அதனை முன்மொழியலாம். ஆனால், தான் அந்த அமைச்சரின் சார்பாகவே இதைச் செய்கிறேன் என்பதை அவர் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.


— இந்தச் சூழலில், துபே ஒரு அமைச்சராக இல்லாத காரணத்தால், அவைத் தலைவர் அனுமதி அளிக்கும்போது அவரே அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும். மேலும், சபாநாயகர் அல்லது துணைச் சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானங்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஆகியவற்றைத் தவிர, ஏனைய 'தனித் தீர்மானங்களுக்கு'  வழிமொழிதல் தேவையில்லை என்று கூறப்படுகிறது. 


— தீர்மானத்தைக் கொண்டுவரும் உறுப்பினருக்கு விவாதத்தின் இறுதியில் பதிலளிக்கும் உரிமை உண்டு, எனவே துபே அவர்களுக்கும் அந்த உரிமை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


— 2005-ஆம் ஆண்டில், மக்களவையின் 10 உறுப்பினர்கள் அவையிலிருந்து நீக்கப்பட்டனர். ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால் அம்பலப்படுத்தப்பட்ட 'கேள்வி கேட்க பணம்' (Cash-for-query) ஊழல் வழக்கில், அவர்கள் குற்றவாளிகள் என விசாரணைக்குழு கண்டறிந்ததையடுத்து, மக்களவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இரகசிய காணொளி ஆதாரங்கள் ஒளிபரப்பப்பட்ட பிறகு, இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அந்த உறுப்பினர்கள் அவைக்கு வரக்கூடாது என்று சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும், இந்த புகார்களை விசாரிக்க பவன் குமார் பன்சால் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவையும் அவர் அமைத்தார்.


— டிசம்பர் மாதம் 2005-ஆம் ஆண்டில், ஒரு தொலைக்காட்சி நிறுவனம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தைச் (Members of Parliament Local Area Development Scheme (MPLADS)) செயல்படுத்துவதில் சில மக்களவை உறுப்பினர்கள் முறைகேடாக நடந்துகொண்டதாக மற்றொரு குற்றச்சாட்டை முன்வைத்தது. இதனையொட்டி, பன்சால் தலைமையிலான ஏழு பேர் கொண்ட விசாரணைக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்யும் வரை, சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் அவைக்கு வர வேண்டாம் என்று சபாநாயகர் மீண்டும் கேட்டுக்கொண்டார். இக்குழுவின் அறிக்கை மார்ச் மாதம் 14-ஆம் தேதி, 2006-ஆம் ஆண்டு அவையில் சமர்ப்பிக்கப்பட்டது.


உங்களுக்குத் தெரியுமா:


— நாடாளுமன்ற ஆட்சி முறை என்பது ஒரு ஜனநாயக அமைப்பாகும். இதில் நிர்வாகக் கிளையானது தனது அதிகாரத்தை சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்திடமிருந்து பெறுகிறது. மேலும், அது தனது செயல்பாடுகளுக்காக நாடாளுமன்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டிய கடமையையும் கொண்டுள்ளது.


— எனவே, இது 'பொறுப்புள்ள அரசாங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த முறையில், பொதுவாக பிரதம மந்திரி அரசாங்கத்தின் தலைவராக இருப்பார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட கட்சி அல்லது கூட்டணியை அவரே வழிநடத்துவார்.


— நாடாளுமன்ற முறையில் நிர்வாகத் துறையும்  மற்றும் சட்டமன்றத் துறையும்  ஒன்றோடு ஒன்று நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, அதிகாரம் இவ்விரு துறைகளுக்கிடையே ஒருங்கிணைக்கப்படுகிறது. பிரதமரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவை, ஒட்டுமொத்தமாக மக்களவைக்கு பொறுப்பானதாகும். அதாவது, மக்களவையில் அரசாங்கம் தனது பெரும்பான்மையை இழந்து, 'நம்பிக்கையில்லா தீர்மானம்' நிறைவேற்றப்பட்டால், ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும்.


— இந்த முறையானது ஒரு மாற்று அரசாங்கத்திற்கும் வழிவகை செய்கிறது. ஆளுங்கட்சி கீழவையின் (Lower House) நம்பிக்கையை இழந்தால், எதிர்க்கட்சி ஆட்சியைப் பொறுப்பேற்கத் தயாராக இருக்கும். இது ஆட்சியில் தொடர்ச்சியையும் நிலையான தன்மையையும் உறுதி செய்கிறது.


— நாடாளுமன்ற முறையானது பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. அவை, நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை ஒரு அரசாங்கம் இழந்தால், உடனடியாக அந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கு இந்த முறை வழிவகை செய்கிறது. விரைவான முடிவுகளை எடுப்பதற்கும், சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வதற்கும் இது ஏதுவாக இருக்கிறது.  பெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கங்கள் தங்களுடைய கொள்கைகளைத் தடையின்றி, திறம்பட நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அதிகாரத்தை இந்த முறை வழங்குகிறது. 


— இருப்பினும், இந்த முறையில் சில குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக, அதிகாரம் அனைத்தும் பிரதமரிடமும் அமைச்சரவையிடமும் மட்டுமே குவிந்திருப்பது, நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்க போதுமான கட்டுப்பாடுகள் இல்லாதது மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஆகியவை இதில் அடங்கும். மேலும், கூட்டணிக் கட்சிகளின் ஆட்சிக் காலங்களில் நிலையற்ற தன்மை ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது என்கின்றனர்.


original article :  What is privilege motion? -Khushboo Kumari

Share:

இந்தியாவில் AI-உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய விதிகள்: மதிப்பீட்டுக்கும் தணிக்கைக்கும் இடையிலான எல்லை எது? -சுபிமல் பட்டாச்சார்ஜி

 சுருக்கப்பட்ட காலக்கெடு 'முதலில் நீக்குதல், பின்னர் கேள்வியெழுப்புதல் சூழ்நிலையை' (take-down-first, question-later atmosphere) உருவாக்குகிறது. இது பொதுவாக சிக்கலானது மட்டுமல்ல, இது அரசியலமைப்பு உரிமைகளை மீறும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.


கடந்த பிப்ரவரி 10 அன்று, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது (MeitY) தகவல் தொழில்நுடப (IT) இடைநிலை விதிகளில் திருத்தங்களை அறிவித்தது. இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை ஒழுங்குமுறை மேற்பார்வையின்கீழ் முறையாகக் கொண்டுவருகிறது. பிப்ரவரி 20 முதல் அமலுக்கு வரும் இந்த விதிகள், செயற்கையாக உருவாக்கப்பட்ட தகவல்களின் தெளிவான அடையாளங்கள் அவற்றிற்கு தேவை. அத்தகைய உள்ளடக்கத்தைக் கண்டறிய நிரந்தர இடைநிலைத்தரவும் அவற்றிற்கு தேவைப்படுகிறது. கூடுதலாக, அவை அகற்றுதல் காலக்கெடுவைக் குறைக்கின்றன. சில சந்தர்ப்பங்களில், உள்ளடக்கம் மூன்று மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும். இந்த விதிகளின் குறிக்கோள் நேர்மறையானது. அவை குடிமக்களை டீப்ஃபேக்குகள், தேர்தல் கையாளுதல் மற்றும் ஒருமித்த கருத்து இல்லாத நெருக்கமான படங்களிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இருப்பினும், இந்த விதிகள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதில்தான் முக்கிய சிரமம் உள்ளது.


இந்தியா ஒழுங்குபடுத்தப்படாத AI உள்ளடக்கத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை இந்தியா ஏற்கனவே கண்டிருக்கிறது. டீப்ஃபேக் காணொளிகள் பிரபலங்களையும், சாதாரண குடிமக்களையும் குறிவைத்துள்ளன. இதில் புனையப்பட்ட அரசியல் பேச்சுக்கள் தேர்தல் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தியுள்ளன. மேலும், செயற்கையான குழந்தை துஷ்பிரயோகப் நிலைகளும் கட்டுப்பாடில்லாமல் பரவியுள்ளன. "செயற்கையாக உருவாக்கப்பட்ட தகவல்" (synthetically generated information) என்பதை செயற்கையாக உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட உள்ளடக்கம் என்று உண்மையானதாகத் தோன்றச் செய்வதன் மூலம், அரசாங்கம் உண்மையான தீங்குகளை நிவர்த்தி செய்கிறது. இவற்றில் AI-ஆல் திருத்தப்பட்ட காணொளிகள் மற்றும் மாற்றப்பட்ட ஒலித்துணுக்குகள் ஆகியவை அடங்கும். இதன் விளைவாக, அத்தகைய உள்ளடக்கத்தை அனுமதிக்கும் தளங்கள் இப்போது இந்தியாவின் இணக்கக் கட்டமைப்பின் கீழ் தெளிவாக வருகின்றன.


கட்டமைப்பு விரிவானது மற்றும் பரந்த அளவிலானது. தளங்கள் AI உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை தெளிவாக அடையாளப்படுத்தப்பட வேண்டும். இதனால் பயனர்கள் உடனடியாக அதன் செயற்கை தன்மையை அடையாளம் காண முடியும். தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமான இடங்களில், உள்ளடக்கத்தை அதன் உண்மையான மூலத்திற்குத் திரும்பக் கண்டறிய தனித்துவமான அடையாளங்காட்டிகளுடன் நிரந்தர இடைநிலைத்தரவை (metadata) சேர்க்க வேண்டும். முக்கியமாக, இந்த அடையாளங்களை அகற்றவோ அல்லது நீக்கவோ முடியாது. குறிப்பிடத்தக்க சமூக ஊடக இடைத்தரகர்கள் உயர்ந்த கடமைகளை எதிர்கொள்கின்றனர். உள்ளடக்கம் வெளியிடப்படுவதற்கு முன்பு பயனர் அறிவிப்புகளைக் கோர வேண்டும் மற்றும் அந்த அறிவிப்புகளைச் சரிபார்க்க தானியங்கி கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளை தவறாக பயன்படுத்தல், ஒருமித்த கருத்து இல்லாத படங்கள் அல்லது ஏமாற்றும் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்திற்கு, தளங்களின் கணக்கு இடைநீக்கங்கள், உள்ளடக்க நீக்கம் மற்றும் சட்ட அமலாக்கத்திற்கு கட்டாய அறிக்கையிடல் மூலம் விரைவாகச் செயல்பட வேண்டும்.


இந்த நோக்கங்களுக்கு தெளிவான தகுதிகள் உள்ளன. உள்ளடக்கம் எப்போது செயற்கையானது என்பதை அறிய பயனர்களுக்கு உரிமை உண்டு. பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான தீர்வுகள் மற்றும் பாதுகாப்பு தேவை. ஜனநாயகத்திற்கு உண்மையான அரசியல் சொற்பொழிவு மற்றும் புனையப்பட்ட அறிக்கைகளை வேறுபடுத்துவது அவசியம். தொழில்துறையால் எழுப்பப்பட்ட கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, செயற்கை உள்ளடக்க வரையறையிலிருந்து வண்ணத் திருத்தம் மற்றும் சத்தத்தைக் குறைத்தல் போன்ற வழக்கமான திருத்தங்களைத் தவிர்த்து, அரசாங்கம் நடைமுறைவாதத்தைக் காட்டியுள்ளது. AI அடையாளங்கள் திரை இடத்தில் 10 சதவீதத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற முந்தைய திட்டத்தை நீக்குவது வரவேற்கத்தக்க நெகிழ்வுத்தன்மையை பிரதிபலிக்கிறது.


இருப்பினும், துஷ்பிரயோகம் உண்மையான வாழ்க்கையில் எவ்வாறு செயல்படும் என்பதைப் பார்க்கும்போது நல்ல நோக்கங்கள் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்கின்றன. தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் குறித்த அவசர கவலைகளை பிரதிபலிக்கும் அதே வேளையில், மணிநேர காலக்கெடு பல தளங்களுக்கு தொழில்நுட்பரீதியாக சாத்தியமற்றதாக இருக்கலாம். இத்தகைய குறைக்கப்பட்ட காலக்கெடு "முதலில் நீக்குதல், பின்னர் கேள்வி எழுப்பும் சூழ்நிலையை" உருவாக்குகிறது. இது பொதுவாக சிக்கலானது மட்டுமல்ல இது அரசியலமைப்பு மீறல்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. தளங்கள் தண்டனைகளைத் தவிர்க்க அதிகப்படியான உள்ளடக்கத்தை தானாகவே அகற்றக்கூடும். இது பேச்சு மீதான முன் கட்டுப்பாடு போல செயல்படக்கூடும். இது பிரிவு 19(1)(a)-ன் கீழ் சுதந்திரமான பேச்சுரிமையை இது மீறக்கூடும். தண்டனைகள் கடுமையாகவும் காலக்கெடு இறுக்கமாகவும் இருக்கும்போது, ​​தளங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட முனைகின்றன. இதன் விளைவாக, சட்டப்பூர்வ உள்ளடக்கம் கூட அகற்றப்படலாம்.


தொழில்நுட்ப சவால்களும் மிகவும் தீவிரமானவை. தற்போதைய AI கண்டறிதல் அமைப்புகள் அதிநவீன டீப்ஃபேக்குகளை அடையாளம் காண இன்னும் போராடுகின்றன. தளங்கள் நிரந்தர இடைநிலைத் தரவைச் சேர்க்க வேண்டும் என்ற விதி முதலில் எளிமையானதாகத் தெரிகிறது. ஆனால் தளங்களில் உள்ளடக்கம் பகிரப்படும்போது, ​​ஸ்கிரீன்ஷாட் செய்யப்படும்போது அல்லது மீண்டும் பதிவேற்றப்படும்போது சிக்கல்கள் எழுகின்றன. இந்த செயல்முறைகளின் போது இடைநிலைத் தரவு அப்படியே இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அடையாளங்களை சேதப்படுத்துவதை விதிகள் தடைசெய்கின்றன. இருப்பினும், பில்லியன் கணக்கான தினசரி உள்ளடக்கத்தில் இதைச் செயல்படுத்துவது நம்பகத்தன்மையைக் குறைக்கிறது. கூடுதலாக, தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களை, நையாண்டி உள்ளடக்கத்திலிருந்து பிரிப்பதற்கு சூழல் மற்றும் நோக்கத்தைப் புரிந்துகொள்வது அவசியம். தானியங்கி அமைப்புகள் இன்னும் பெரிய அளவில் இதைச் செய்வது மிகவும் கடினமாகக் காண்கின்றன.


இந்தச் சுமை சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள அனைவருக்கும் சமமாக வராது. மெட்டா மற்றும் கூகிள் போன்ற பெரிய தளங்கள் விரிவாக்கப்பட்ட இணக்கக் குழுக்கள் மற்றும் அதிநவீன தானியங்கி கருவிகளுக்கான வளங்களைக் கொண்டுள்ளன. ஆனால் சிறிய புத்தொழில் நிறுவனங்கள், பிராந்திய தளங்கள் மற்றும் வளர்ந்து வரும் AI நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட இணக்கச் செலவுகளை எதிர்கொள்கின்றன. இது சந்தையில் நுழைவதற்கு பெரிய தடைகளை உருவாக்கக்கூடும். இதன் விளைவாக, இந்தியாவின் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பில் புதுமைகள் மெதுவாகலாம்.


பயனர் நடத்தை மற்றும் தளப் பொறுப்பு பற்றிய சிக்கலான கேள்விகளையும் விதிகள் எழுப்புகின்றன. செயற்கை உள்ளடக்கம் என்றால் என்ன என்பதை பயனர்களே புரிந்து கொள்ளாதபோது, ​​தளங்கள் பயனர் அறிவிப்புகளை எவ்வாறு சரிபார்க்கின்றன? வண்ண தரப்படுத்தலுக்காக AI-உதவி செயலிகளைப் (AI-assisted filters for colour grading) பயன்படுத்தும் ஒரு தன்னார்வல படைப்பாளர், அவர்கள் செயற்கை உள்ளடக்கத்தை உருவாக்காமல், அவர்கள் தங்கள் உள்ளடக்கத்தைத் திருத்துவதை மட்டுமே நம்பலாம். எளிய மேம்பாட்டிற்கும் உண்மையான AI உருவாக்கத்திற்கும் இடையிலான வேறுபாடு பெரும்பாலும் தெளிவாக இருக்காது. நிபுணர்கள்கூட சில நேரங்களில் இந்த விதியை வரையறுப்பது கடினம். வெளியீட்டிற்கு முன் இந்த வேறுபாட்டை தளங்கள் கண்காணிக்க வேண்டும் என்பது அவர்களை நடுநிலை இடைத்தரகர்களிடமிருந்து உள்ளடக்கம் வெளியீட்டிற்கு முன் இந்த வேறுபாட்டைக் கண்காணிக்க தளங்களை கட்டாயப்படுத்துவது அவர்களை நடுநிலை இடைத்தரகர்களிடமிருந்து செயலில் உள்ள நுழைவாயில் பாதுகாவலர்களாக மாற்றுகிறது. தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதில் இது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.


செயல்படுத்துவதற்கான சமச்சீரற்ற தன்மை மற்றொரு கவலையை முன்வைக்கிறது. பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பிற புதிய குற்றவியல் சட்டங்களுடன் ஒத்துப்போக அரசாங்கம் சட்ட குறிப்புகளைப் புதுப்பித்திருந்தாலும், நடைமுறை கேள்விகள் இன்னும் உள்ளன. யார் மீது வழக்குத் தொடரப்படும், எப்படி? உள்ளடக்கத்தை தவறாக அடையாளப்படுத்தும் தனிப்பட்ட பயனர்களை குறிவைக்குமா அல்லது மீறல்களைக் கண்டறியத் தவறும் தளங்களுக்கு குறிவைக்குமா? செயற்கை உள்ளடக்கத்தை நல்லெண்ணத்துடன் அகற்றும்போது தளங்கள் பாதுகாப்பை இழக்காது என்ற தெளிவுபடுத்தல் உறுதியளிக்கிறது. ஆனால் நடுநிலை இடைத்தரகராக இருப்பதற்கும் உள்ளடக்க உருவாக்கத்தை தீவிரமாக கண்காணிப்பதற்கும் இடையிலான அடிப்படை பதற்றத்தை தீர்க்காது.


ஒருவேளை மிகவும் கவலைக்குரியதாக, "தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின்" மீறல்களைத் தடுக்க தானியங்கி கருவிகளைப் பயன்படுத்த தளங்களை கோருவது சாத்தியமற்ற இணக்கச் சுமையை உருவாக்குகிறது. இந்தியாவின் சட்ட அமைப்பில் அவதூறு, தேர்தல் சட்டங்கள், வகுப்புவாத நல்லிணக்க விதிகள் மற்றும் மாநிலங்கள் முழுவதும் பல்வேறு உள்ளடக்க விதிமுறைகள் ஆகியவை அடங்கும். தானியங்கி அமைப்புகள் இத்தகைய நுணுக்கங்களை எவ்வாறு பகுப்பாய்வு செய்ய முடியும்? இது தொழில்நுட்ப மீறல் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அமலாக்கத்திற்கு சிக்கலுக்கு வழிவகுக்கிறது. இரண்டு விளைவுகளும் நியாயமான நீதியை ஆதரிக்காது.


உலகளாவிய சூழ்நிலையைப் பார்க்கும்போது, இந்த சிக்கல்களை எதிர்கொள்ளும் ஒரே நாடு இந்தியா அல்ல. பல நாடுகள் இதே போன்ற பிரச்சினைகளைக் கையாளுகின்றன. எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஒன்றியம் அதன் AI சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், பல மாநிலங்கள் டீப்ஃபேக் சட்டங்களை உருவாக்கியுள்ளன. எல்லா இடங்களிலும் உள்ள ஜனநாயக நாடுகள் புதுமை மற்றும் பாதுகாப்பை சமநிலைப்படுத்த முயற்சிப்பதை இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. இந்தியாவின் அணுகுமுறை இரண்டு வழிகளில் தனித்து நிற்கிறது. இது மிகவும் பரந்த அளவிலான நோக்கத்தைக் கொண்டுள்ளது. இது விரைவான காலக்கெடுவையும் கொண்டுள்ளது. மற்ற நாடுகளில், பங்குதாரர்களுக்கு அதிக நேரம் வழங்கப்பட்டது. தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்கவும் இணக்க கட்டமைப்புகளைத் தயாரிக்கவும் அவர்களுக்கு நேரம் வழங்கியுள்ளன.


முன்னோக்கிச் செல்ல கவனமான சரிசெய்தல் தேவை, பின்வாங்கல் அல்ல. அரசாங்கம் படிப்படியாக செயல்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும். இது மிகவும் தீங்கு விளைவிக்கும் வகைகளுடன் தொடங்கலாம். இதில் குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துதல் தொடர்பான உள்ளடக்கம், ஒருமித்த கருத்து இல்லாத நெருக்கமான படங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான டீப்ஃபேக்குகள் ஆகியவை அடங்கும். அதன் பிறகு, இது மற்ற வகையான செயற்கை உள்ளடக்கங்களுக்கும் விரிவடையும். மூன்று மணிநேர நீக்குதல் விதி உண்மையிலேயே அவசர வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். பிற மீறல்களுக்கு நியாயமான காலக்கெடு இருக்க வேண்டும். மெட்டாடேட்டா சேர்த்தல் மற்றும் அடையாளம் செய்வதற்கான தொழில்நுட்ப தரநிலைகள் தொழில்துறையுடன் இணைந்து உருவாக்கப்பட வேண்டும். இது தளங்கள் மற்றும் பல்வேறு வகையான உள்ளடக்கங்களில் அவற்றை உண்மையில் செயல்படுத்த முடியும் என்பதை உறுதி செய்யும்.


பயனர் கல்வி மிகவும் முக்கியமானது. மக்கள் தாங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளும்போது மட்டுமே அடையாளங்கள் பயனுள்ளதாக இருக்கும். தண்டனைகள் குறித்த காலாண்டு எச்சரிக்கைகள் தேவை. மேலும் அவை ஒரு நல்ல முதல் படியாகும். இருப்பினும், பரந்த மின்ன்ணு கல்வியறிவு திட்டங்கள் மேலும் உதவும். AI நிறைந்த தகவல் சூழலைச் சமாளிக்க அவை குடிமக்களை தயார்படுத்தும்.


இந்தத் திருத்தங்கள், செயற்கை யதார்த்தத்தை ஒழுங்குபடுத்துவதில் இந்தியாவின் நகர்வைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இந்த நடவடிக்கை உண்மையான தீங்குகளுக்கு பதிலளிக்கிறது. இந்த தீங்குகள் ஜனநாயக ஒருமைப்பாடு, தனிப்பட்ட கண்ணியம் மற்றும் பொது பாதுகாப்பு பற்றிய கவலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், தொழில்நுட்பரீதியாக லட்சியத் தேவைகளுக்கு கிட்டத்தட்ட உடனடியாக இணங்க வேண்டும் என்று கோருவது, காகிதத்தில் சுவாரஸ்யமாகத் தோன்றும் ஆனால் நடைமுறையில் செயல்பட முடியாததாக நிரூபிக்கப்படும் ஒரு கட்டமைப்பை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. இது கவனமாகவும் சீரானதாகவும் ஒழுங்குமுறைக்கு பதிலாக அதிகப்படியான தணிக்கைக்கு வழிவகுக்கும்.


இந்த விதிகள் அடுத்த வாரம் நடைமுறைக்கு வருவதால், அரசாங்கமும் இணைய தளங்களும் செயல்படுத்தலை நெகிழ்வுத்தன்மையுடனும் நல்ல நம்பிக்கையுடனும் அணுக வேண்டும். உடனடியாக சரியான அமலாக்கத்தை அடைவதே நோக்கம் அல்ல. மாறாக, தொழில்நுட்பத்துடன் வளரும் ஒரு ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்குவதே நோக்கம். இந்த அமைப்பு குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். அதேநேரத்தில், அது புதுமைகளை கட்டுப்படுத்தக்கூடாது. இந்த சமநிலையை அடைவது முக்கியம். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக எடுத்தாலும், அதை நோக்கிச் செயல்படுவது மதிப்புக்குரியது.


எழுத்தாளர் ஒரு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பக் கொள்கை ஆலோசகர். இந்தியாவில் இணையத்தின் 30 ஆண்டுகளை மையமாகக் கொண்ட வரவிருக்கும் புத்தகமான தி டிஜிட்டல் டிகேட்ஸின் ஆசிரியரும் ஆவார்.


Original article : New rules to regulate AI-generated content in India: Where is the line between calibration and censorship? -Subimal Bhattacharjee

Share:

இரு தரப்பிலும் சிறந்தது | AI தாக்கம் குறித்து, இந்தியா உலகிற்கு முக்கியமான படிப்பினையைக் கொண்டுள்ளது. -இக்பால் தலிவால், ஷோபினி முகர்ஜி

 இந்திய AI தாக்க உச்சிமாநாடு-2026 (India AI Impact Summit) இந்தியாவின் தொழில்நுட்ப பணியாளர்கள், குடிமை சமூக அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பணிகளைகள் மற்றும் திறமையையும், அரசாங்கத்தின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்தும். முதலில் வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது. இப்போது, ​​இது செயற்கை நுண்ணறிவை வளர்ப்பதில் கவனம் செலுத்தும்.


இன்னும் சில நாட்களில், உலகெங்கிலும் உள்ள தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்பத் தலைவர்கள், மற்றும் இலாப நோக்கற்ற பிரதிநிதிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) உச்சிமாநாட்டிற்காக புதுதில்லியில் கூடுவார்கள். உலகம் செயற்கை நுண்ணறிவை  எவ்வாறு புரிந்துகொள்கிறது என்பதில் இந்த நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இது உலகளாவிய தெற்கில் நடைபெறும் முதல் உலகளாவிய AI உச்சி மாநாடு மற்றும் AI-ன் சமூக தாக்கத்தில் கவனம் செலுத்தும் முதல் மாநாடு ஆகும்.


AI பற்றி தெளிவுபடுத்த பல காரணங்கள் உள்ளன. இது மிக வேகமாக முன்னேறி வரும், பல்துறை தொழில்நுட்பத்தில் நாம் எப்படி வாழ்கிறோம், கற்றுக்கொள்கிறோம், வேலை செய்கிறோம் என்பதை இது மாற்றுகிறது. இது வாழ்க்கையின் பல பகுதிகளையும் பாதிக்கிறது. இன்று, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய மொழி மாதிரிகளை உருவாக்க போட்டியிடுகின்றன, மேலும் இந்த இனம் பெரும்பாலான கவனத்தைப் பெறுகிறது. அதே நேரத்தில், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், சமூக நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கற்ற குழுக்கள் செயற்கை நுண்ணறிவில் அதிக முதலீடு செய்கின்றன. அத்தியாவசிய பொதுத் திட்டங்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதை AI மேம்படுத்த முடியும் என்பதால் அவர்கள் இதைச் செய்கிறார்கள். AI கவனமாகப் பயன்படுத்தப்படும்போது சமூக விளைவுகளை பல வழிகளில் மேம்படுத்த முடியும். இந்தத் திட்டங்கள் சரியான நபர்களை இலக்காகக் கொண்டிருப்பதை உறுதிசெய்யவும், தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் செயல்படக்கூடிய தகவல்களை வழங்கவும், முன்னணி பணியாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், நிறுவன செயல்திறனை அதிகரிக்கவும், முடிவெடுப்பதில் சார்புகளைக் குறைக்கவும், அரசாங்கங்களுக்கான வளங்களை மிகவும் திறம்பட திரட்ட உதவும்.


இந்தியா இந்தத் துறையில் வலுவான நன்மைகளைக் கொண்டுள்ளது. இது திறமையான தொழில்நுட்ப திறமையாளர்களின் ஒரு பெரிய தொகுப்பைக் கொண்டுள்ளது. அரசாங்கம் உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளது. இது கணினி சக்தி மற்றும் சிறப்பு ஆராய்ச்சி மையங்களில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. இந்த பலங்கள் காரணமாக, இந்தியா ஒரு உலகளாவிய AI சக்தி மையமாக மாறுவதற்கு ஏற்ற நிலையில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள சமூகத் திட்டங்களில் AI மிகவும் முக்கியத்துவம் பெறுவதால், இந்தியாவின் அனுபவம் மதிப்புமிக்கது. வசதி குறைந்த சமூகங்களுக்கு சேவை செய்ய மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அதன் பணி மற்ற நாடுகளுக்கு முக்கியமான பாடங்களை வழங்குகிறது.


மிக முக்கியமான பாடங்களில் ஒன்று. செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் அவற்றின் உண்மையான தாக்கத்தைப் புரிந்துகொள்ள எந்தவொரு மேம்பாட்டுத் திட்டத்திற்கும் பயன்படுத்தப்படும் அதே அளவிலான கடுமையுடன் சோதிக்கப்பட வேண்டும். உலகின் "AI பயன்பாட்டு மூலதனமாக" தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் பாதையில் இந்தியா உள்ளது. இதன் பொருள் என்ன வேலை செய்கிறது, என்ன வேலை செய்யவில்லை, ஏன் என்பதைப் புரிந்துகொள்ள உலகின் "AI மதிப்பீட்டு மூலதனமாக" மாறுவதற்கான வாய்ப்பையும் இது கொண்டுள்ளது.


சிறந்த இலக்குகளை கருத்தில் கொள்ளுங்கள். வீடுகளுக்கு AI- இயங்கும் வெள்ள முன்னறிவிப்புகளை அனுப்புவதற்கான உத்திகளை மதிப்பிடுவதற்காக பீகார் அரசாங்கம் J-PAL உடன் இணைந்த ஆராய்ச்சியாளர்களான Google.org மற்றும் உள்ளூர் அரசு சாரா நிறுவனமான யுகாந்தருடன் (NGO, Yuganta) கூட்டு சேர்ந்துள்ளது. வெள்ள எச்சரிக்கைகளைப் பரப்புவதற்கு உள்ளூர் சமூக தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிப்பது முன்னறிவிப்புகளுக்கான அணுகலை அதிகரித்துள்ளது. முன்னறிவிப்பு அணுகுவதில் நம்பிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்தது என்பதை தற்போதைய மதிப்பீட்டின் ஆரம்பகால முடிவுகள் குறிப்பிடுகின்றன. தமிழ்நாட்டில், இதய நோய் அதிக ஆபத்தில் உள்ளவர்களை அடையாளம் காண குறைந்த விலை, AI அடிப்படையிலான கருவியின் தாக்கத்தை சோதிக்க J-PAL உடன் இணைந்த ஆராய்ச்சியாளர்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.


இரண்டாவதாக, உண்மையான உலக நிலைமைகளின் குழப்பத்தில் செயல்படும் வகையில் AI பயன்பாடுகள் வடிவமைக்கப்பட வேண்டும். கர்நாடக அரசாங்கத்தில், அரசு நடத்தும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கைரேகை வருடிகள் (scanners) அறிமுகப்படுத்தப்பட்டன. மருத்துவர் வருகையை மேம்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது. இருப்பினும், ஸ்கேனர்கள் வெற்றிபெறவில்லை. வராத மருத்துவர்களை அரசாங்கத்தால் தண்டிக்க முடியவில்லை. அவ்வாறு செய்வது கிராமப்புறங்களில் மருத்துவர் பற்றாக்குறையை மோசமாக்கியிருக்கலாம். இதன் காரணமாக, திட்டத்தை விரிவுபடுத்த வேண்டாம் என்று மாநிலம் முடிவு செய்தது.


மூன்றாவதாக, மனித திறன்களுடன் AI-ஐ இணைப்பது தொழில்நுட்பத்தின் முழுத் திறனையும் வெளிப்படுத்தும். ராஜஸ்தானில் உள்ள அரசு பள்ளிகளில் தனிப்பயனாக்கப்பட்ட அறிவுறுத்தலை வழங்கும் கணினி அடிப்படையிலான மென்பொருளின் மதிப்பீடு ஆசிரியரின் திறன் மற்றும் கற்றல் விளைவுகள் இரண்டிலும் கணிசமான லாபங்களைக் கண்டறிந்தது. இந்த லாபங்கள், மாணவர்கள் மென்பொருளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்த ஒரு வசதியாளரைச் சார்ந்தது. குறைவான மேற்பார்வையுடன், மாணவர் ஈடுபாடு குறைந்தது. இதன் விளைவாக, ஒட்டுமொத்த கற்றல் ஆதாயங்களும் குறைந்தன. இருப்பினும், மாணவர்கள் அதை முறையாகப் பயன்படுத்தும்போது மென்பொருள் இன்னும் சிறப்பாக செயல்பட்டது.


தொழில்நுட்பம் மட்டும் போதாது என்பதே முக்கிய கருத்து. நிறுவன அமைப்புகள், மனித நடத்தை மற்றும் உண்மையான கள நிலைமைகள் சமமாக முக்கியம். கடந்த இருபது ஆண்டுகளில், பல நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பங்கள் முழுமையாக வெற்றிபெறவில்லை. மக்கள் சூழல், விநியோக சவால்கள் மற்றும் மனித ஊக்கங்களை புறக்கணித்ததால் இது நடந்தது. வகுப்பறைகளுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள், புகைபிடிக்காத சமையல் அடுப்புகள் மற்றும் உட்புற காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான திட்டங்கள் ஆகியவை எடுத்துக்காட்டுகளில் அடங்கும். வலுவான ஆதாரங்களில் முதலீடு செய்வது AI முதலீடுகள் மற்றும் விரிவாக்க முடிவுகளுக்கு வழிகாட்டும். இது அரசாங்கங்கள், நிதி வழங்குநர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் அதிக சமூக நன்மைகளை உருவாக்கக்கூடிய வளங்களைப் பயன்படுத்த உதவும். இது எதிர்பாராத எதிர்மறை விளைவுகளையும் குறைக்க உதவும்.


இந்திய AI தாக்க உச்சிமாநாடு-2026 (India AI Impact Summit) இந்தியாவின் தொழில்நுட்ப பணியாளர்கள், குடிமை சமூக அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பணிகளைகள் மற்றும் திறமையையும், அரசாங்கத்தின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்தும். முதலில் வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது. உச்சிமாநாட்டின் மையத்தில் தாக்கத்தை வைப்பதன் மூலம், இந்தியா ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது. மக்களின் வாழ்க்கையில் அளவிடக்கூடிய முன்னேற்றங்களைக் கொண்டுவரும் திறனால் AI மதிப்பிடப்பட வேண்டும். உண்மையிலேயே இந்த தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு கடுமையான மற்றும் ஒரே நேரத்தில் கள மதிப்பீடுகள் மற்றும் பாடங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். இது சிறப்பாகச் செய்யப்பட்டால், AI தாக்கத்தில் உலகளாவிய தலைவராக இந்தியா தனது இடத்தைப் பெற முடியும்.


தலிவால் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் J-PAL-ன் உலகளாவிய நிர்வாக இயக்குநராக உள்ளார். முகர்ஜி IFMR-ல் J-PAL தெற்காசியாவின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.


Original article : Best of Both Sides | On AI impact, India has important lessons for the world. -Iqbal Dhaliwal, Shobhini Mukerji

Share:

மோசடி பரிவர்த்தனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது: திட்டம் குறித்து இதுவரை தெரிய வந்தவை. -சித்தார்த் உபாசனி

 சைபர் பரிவர்த்தனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? எந்தளவு பாதிக்கப்பட்டவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்? பணம் எங்கிருந்து வரும்? இதைப் பற்றி கீழே குறிப்பிட்டுள்ளது.


இந்திய ரிசர்வ் வங்கி (RBI), கடந்த வாரம், புதிய திட்டங்களின் அடிப்படையில் குடிமக்களை மையமாகக் கொண்ட புதுமையான முயற்சிகளில் ஒன்றான ஒரு விரிவான விளக்கத்தை அறிவித்தது. இதில் பிப்ரவரி 6 அன்று பணவியல் கொள்கைக் குழு (Monetary Policy Committee) கூட்டத்திற்குப் பிறகு தனது உரையில், சிறிய மதிப்புள்ள மோசடி பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு மக்கள் எவ்வாறு இழப்பீடு பெறுவார்கள் என்பதை நிர்வகிக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்க மத்திய வங்கி திட்டமிட்டுள்ளதாக RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார்.


புதன்கிழமை நடந்த நாடாளுமன்ற கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் தரவுத்தளத்தில் (National Cyber Crime Reporting Portal) நிதி மோசடி புகார்களின் எண்ணிக்கை 2025-ல் 25% அதிகரித்து 24.03 லட்சம் புகார்களை எட்டியது.


இதுவரை தெரிய வந்தவை


அனைத்து புகார்களும் இந்திய ரிசர்வ் வங்கியின் இழப்பீட்டுத் திட்டத்தின்கீழ் உள்ளடக்கப்படக்கூடாது. இதன் அமைப்பின் அடிப்படையில், இன்னும் வெளியிடப்படாத இந்த கட்டமைப்பைப் பற்றி இதுவரை நமக்குத் தெரிந்தவை பின்வருமாறு.


ஒன்று : மொத்த இழப்பீடு ரூ.25,000 அல்லது மோசடி மதிப்பில் 85%, எது குறைவாக இருக்கிறதோ அதுவாக இருக்கும். எனவே, பாதிக்கப்பட்டவர் இன்னும் குறைந்தது 15% இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்.


இரண்டு : மோசடி செய்யப்பட்ட தொகையில் 70%-ஐ இந்திய ரிசர்வ் வங்கியே தடுத்து நிறுத்தும், மீதமுள்ள 15% ஐ வங்கிகள் வழங்கும்.


மூன்று : மோசடி செய்பவர்களுடன் தங்கள் ஒரு முறை கடவுச்சொல்லை (One-Time Password (OTP)) பகிர்ந்து கொண்டு பணத்தை இழந்தவர்களுக்கும் இந்த திட்டம் உதவும். இது தற்போதைய சூழ்நிலையிலிருந்து ஒரு பெரிய மாற்றமாகும். தற்போது, ​​ஒருவர் தவறுதலாக OTP-ஐப் பகிர்ந்து கொண்டால் பணத்தை மீட்டெடுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. OTP என்பது பொதுவாக ஆறு இலக்க எண்ணாகும். இது ஒரு பரிவர்த்தனையை அங்கீகரிக்கப் பயன்படுகிறது. இதன் காரணமாக, வங்கி அதிகாரி என்று கூறினாலும், OTP-கள் அல்லது பிற முக்கியமான வங்கி விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று வங்கிகள் வாடிக்கையாளர்களை தொடர்ந்து  எச்சரிக்கின்றன.


நான்கு : இந்தத் திட்டத்தில் "கேள்விகள் கேட்கப்படாது" மற்றும் ஒரு முறை மட்டுமே செய்யப்படும் நடவடிக்கையாக இருக்கும். இதன் பொருள் பல முறை பாதிக்கப்பட்டவருக்கு தொடர்ந்து இழப்பீடு கிடைக்காது.


"ஒரு முறை தவறு செய்த பிறகு, வாடிக்கையாளர் விழிப்புடன் இருந்து தனது தவறை சரிசெய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஒரு தவறை ஒரு முறை மன்னிக்க முடியும். இதனால், அந்தத் தவறிலிருந்து ஏற்படும் இழப்பை திருப்பிச் செலுத்த முடியும். அதனால்தான் நாங்கள் ஒரு முறை வரம்பை நிர்ணயித்துள்ளோம். அது வாழ்நாள் முழுவதும், ஆண்டுதோறும் அல்ல. மக்கள் மற்றவர்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், குறைந்தபட்சம் (அவர்கள்) தங்கள் சொந்த தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வார்கள்," என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் பிப்ரவரி 6 அன்று விளக்கினார்.



தர்க்கம் மற்றும் எண்ணிக்கைகள்


முதலில் பார்க்கும்போது, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்மொழியப்பட்ட இழப்பீட்டுத் திட்டம் ஒரு மகத்தான பயிற்சியாகும். மத்திய வங்கியின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, 2024-25-ஆம் ஆண்டில் வங்கித் துறையில் 13,516 அட்டை மற்றும் இணைய மோசடி (card and internet frauds) வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளில் சுமார் ₹520 கோடி இழப்புகள் ஏற்பட்டன. இது 2023-24-ஆம் ஆண்டில் இருந்து கடுமையான சரிவைக் குறிக்கிறது. இதில் ரூ.1,457 கோடி மதிப்புள்ள 29,082 வழக்குகள் காணப்பட்டன. இருப்பினும், இந்த தரவு ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகைகளை உள்ளடக்கிய மோசடிகள்  மட்டுமே அடங்கும். சிறிய மதிப்புள்ள மோசடிகள் மிகவும் அடிக்கடி நிகழ்கின்றன. மேலும், இந்த இழப்பீட்டுக் கட்டமைப்பு பெரிய மோசடிகளுக்கானது அல்ல.


இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் சுவாமிநாதன் ஜே கருத்துப்படி, சிறிய மதிப்புள்ள மோசடிகளின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமாக இருந்தாலும், அவை ரூபாய் அடிப்படையில் மொத்தத் தொகையில் 15%-க்கும் குறைவாகவே உள்ளன. இதன் காரணமாக, இழப்பீடு ₹25,000-ஆக நிர்ணயிக்கப்பட்டாலும், இந்திய ரிசர்வ் வங்கி இன்னும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். மோசடி வழக்குகளில் 65% ₹50,000-க்கும் குறைவான தொகைகளைக் கொண்டுள்ளது என்றும் ஆளுநர் மல்ஹோத்ரா கூறினார்.


2024-25-ஆம் ஆண்டில் ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட அட்டை மற்றும் இணைய மோசடிகள் (card and internet frauds) குறைந்திருக்கலாம் என்றாலும், ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)) மூலம் செய்யப்படும் சிறிய மதிப்புள்ள மோசடிகள் அதிகரித்து வருகின்றன.


ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மோசடிகள் ஒரு குறியீடுகள்


2024-25-ஆம் ஆண்டில், ரூ.981 கோடி மதிப்புள்ள 12.64 லட்சம் UPI மோசடி சம்பவங்கள் நடந்தன. இது 2023-24-ஆம் ஆண்டில் ரூ.1,087 கோடி மதிப்புள்ள 13.42 லட்சம் வழக்குகளிலிருந்து குறைந்திருந்தாலும், 2025-26 மோசமான ஆண்டாக மாறக்கூடும் என்று கூறுகின்றன.

டிசம்பர் 2025-ல் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நிதி அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, 2025-26-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ரூ.805 கோடி மதிப்புள்ள 10.64 லட்சம் UPI மோசடிகள் நடந்துள்ளன. இந்த ஆண்டின் கடைசி நான்கு மாதங்களில் அதே விகிதத்தில் மோசடிகள் நடந்ததாகக் கருதினால், 2025-26-ஆம் ஆண்டில் வழக்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 16 லட்சமாக உயர்ந்து ரூ.1,200 கோடியைத் தாண்டக்கூடும். இந்த புள்ளிவிவரங்கள் UPI தொடர்பான மோசடிகளை மட்டுமே உள்ளடக்கியது.


வங்கிகள் (banks) மற்றும் வங்கி அல்லாத கடன் அட்டைகள் (non-bank issuers of credit cards) மற்றும் முன்பணம் செலுத்தும் கருவிகளை (pre-paid instruments) வழங்குபவர்களால் புகாரளிக்கப்பட்ட அனைத்து பணம் செலுத்துதல் தொடர்பான மோசடிகளையும் ஒருவர் கணக்கிட்டால், 2023-24 ஆம் ஆண்டில் வழக்குகளின் எண்ணிக்கை 42% அதிகரித்து 28.22 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன் மொத்த தொகை 74% அதிகரித்து ரூ.4,403 கோடியாக உள்ளது. 2024-25 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கான தரவுகளின்படி, 2023-24 இல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கைகள் அதிகமாக இருக்கலாம் என்று நிதி அமைச்சகம் மார்ச் 2025-ல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகள் தெரிவிக்கின்றன. 2022-23 இல் ரூ.12,723, 2023-24 இல் ரூ.15,602, மற்றும் 2024-25 இல் ரூ.17,769 என்ற அளவில் இந்த பணப்பரிமாற்ற மோசடிகளின் சராசரி அளவு அதிகரித்து வருகிறது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் ரூ.25,000 வரம்பை மிகவும் நியாயமானதாக ஆக்குகிறது.


எவ்வளவு குறைவான பணம் மீட்கப்படுகிறது என்பதன் காரணமாக ஒரு முறை இழப்பீட்டுத் திட்டமும் முக்கியமானது. UPI மோசடி மீட்புகள் பற்றிய தரவு கிடைக்கவில்லை என்றாலும், ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட அட்டை மற்றும் இணைய வங்கி வழக்குகளுக்கு சில யோசனைகளைத் தருகிறது. 2023-24-ஆம் ஆண்டில், ரூ.1,457 கோடி மதிப்புள்ள 29,082 வழக்குகளில், ரூ.139 கோடி மட்டுமே மீட்கப்பட்டது.


இந்திய ரிசர்வ் வங்கி திட்டத்தில் பதிலளிக்கப்படாத கேள்விகள்


இந்திய ரிசர்வ் வங்கியின் மோசடி இழப்பீட்டு கட்டமைப்பில் இதுவரை மிகக் குறைந்த விவரங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஏராளமான கேள்விகள் உள்ளன. அவற்றில் இரண்டு முக்கியமானவை. இந்தத் திட்டம் கடந்தகால மோசடிகளுக்குப் பொருந்துமா அல்லது விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு நடக்கும் மோசடிகளுக்கு மட்டும் பொருந்துமா என்பது ஒரு கேள்வி. மற்றொரு கேள்வி நிதியின் ஆதாரம். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய வங்கி எங்கிருந்து பணம் பெறும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


இந்திய ரிசர்வ் வங்கியைப் பொறுத்தவரை, சில ஆயிரம் கோடிகள் அதன் மிகப்பெரிய நிதி ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது மிகச் சிறிய தொகையாகும். 2024-25 ஆம் ஆண்டில், மத்திய வங்கியின் மொத்த வருமானம் ரூ.3.38 லட்சம் கோடியாக இருந்தது மற்றும் ரூ.2.69 லட்சம் கோடி ஈவுத்தொகையை மத்திய அரசுக்கு மாற்றியது. ஆனால், அதன் வருவாயிலிருந்து அனைத்து மோசடி கோரிக்கைகளையும் திருப்பித் தர முடியும் என்று அர்த்தமல்ல. இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அதன் வைப்புத்தொகை கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியை இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் இன்னும் தெளிவான உறுதிப்படுத்தல் இல்லை. இது மற்றும் பிற அம்சங்கள் குறித்த விவரங்கள் இன்னும் காத்திருக்கின்றன.


Original article : RBI plans to compensate victims of fraud transactions: What we know of the scheme so far. -Siddharth Upasani

Share: