இந்தியாவின் முதற்கட்ட தொழில்நுட்பக் குழு மாலத்தீவு சென்றடைந்தது -சுஹாசினி ஹைதர்

 நாட்டிற்கான மேம்பட்ட அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற விமானங்களை இயக்கும் ராணுவ வீரர்களுக்கு பதிலாக இந்த குழு செயல்படும் என்று வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறுவதைக் குறிக்கிறது. 


மாலத்தீவில் விமானங்களை இயக்கி வந்த இராணுவ வீரர்களுக்கு பதிலாக இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் (Indian technical personnel) குழு மாலத்தீவில் தரையிறங்கியுள்ளதாக அரசு வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது. தீவுக்கூட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்களின் சர்ச்சைக்குரிய பிரச்சினை தொடர்பாக நரேந்திர மோடி அரசாங்கத்திற்கும், மாலத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு தலைமையிலான புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளதை இந்த வளர்ச்சி அறிவுறுத்துகிறது. இந்த விஷயம் ஆளுங்கட்சி தலைமையிலான "இந்தியாவை வெளியேற்றுவோம்" (India Out) பிரச்சாரத்தின் மையமாக மாறியது.


"கானில் (Gan) மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரை இயக்குவதற்கான தொழில்நுட்ப பணியாளர்களின் ஆரம்பக் குழு மாலத்தீவுக்கு வந்துள்ளது. அவர்கள் இந்த தளத்தைக் கையாளும் தற்போதைய பணியாளர்களிடமிருந்து பொறுப்பேற்பார்கள். அதுதான் தற்போதைய நிலை" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதிலளித்தார். இந்த நடவடிக்கை பற்றிய விசாரணைகள், ஆரம்பத்தில் மாலைதீவு அரசாங்கத்தால் புதன்கிழமை வெளியிடப்பட்டது. மாலத்தீவில் நிறுத்தப்பட்டுள்ளதாக கருதப்படும் மொத்தம் 88 இந்திய இராணுவ வீரர்களின் முதல் தொகுதியில் மாற்றப்படும் வீரர்களின் எண்ணிக்கையை ஜெய்ஸ்வால் குறிப்பிடவில்லை.


2018 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் பல சந்தர்ப்பங்களில் இந்திய இராணுவத்தினரை அகற்றக் கோரியபோது, அவர்களின் விசாக்களை நீட்டிக்க மறுத்தது உட்பட, முன்னர் வீரர்களை திரும்பப் பெற மறுத்த இந்தியாவின் ஒரு பெரிய வீழ்ச்சியையும் இந்த உறுதிப்படுத்தல் குறிக்கிறது. அதிபர் இப்ராஹிம் சோலிஹ்யால் திரு. யாமீன் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பிறகு, பிரச்சினை தணிந்தது. ஆனால் 2023 நவம்பரில் தேர்தலில் வெற்றி பெற்று இந்திய இராணுவ வீரர்களை அகற்றுவதை  முன்னுரிமையாக்கினார் என்று திரு முய்ஸுவால் பிரச்சாரத் திட்டமாக புதுப்பிக்கப்பட்டது.


'காலக்கெடு'வுக்கு முன்னதாக


டிசம்பர் தொடக்கத்தில் பிரதமர் மோடி ஜனாதிபதி முய்சுவை சந்தித்த பின்னர் மாலத்தீவு அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்கியதாகக் கூறப்படும் மார்ச் 10  காலக்கெடுவை முன்னதாக முதல் தொகுதியில் மாற்றப்பட்டுள்ளதை குறித்த அறிவிப்பு வந்துள்ளது. இதில், வீரர்களுக்கு பதிலாக சிவிலியன் தொழில்நுட்ப பணியாளர்களை (civilian technical personnel) நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக மாலத்தீவு அரசாங்கம் மீண்டும் கூறிய அதேவேளை, இந்தியாவானது இந்த விஷயத்தில் இறுக்கமாக மௌனம் சாதிக்கிறது. இங்கு, இரு தரப்பினரும்  செயல்படக்கூடிய மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வுகளை நாடுவதாக மட்டுமே அது கூறியது.


பிப்ரவரி 4 அன்று, திரு. முய்ஸு மாலத்தீவு மஜ்லிஸில் (பாராளுமன்றத்தில்) ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்து பலரை ஆச்சரியப்படுத்தினார்.


"மிக சமீபத்திய விவாதங்களின்படி, மூன்று விமான தளங்களில் ஒன்றில் உள்ள இராணுவ வீரர்கள் மார்ச் 10, 2024-க்கு முன்னர் திரும்ப அழைக்கப்படுவார்கள். மீதமுள்ள இரண்டு தளங்களில் உள்ள இராணுவ வீரர்களும் மே 10, 2024 க்குள் திரும்ப அழைக்கப்படுவார்கள்," என்று திரு முய்சு கூறினார். அதைத் தொடர்ந்து, வீரர்கள், திறமையான தொழில்நுட்ப நபர்களால் (competent technical personnel) மாற்றப்படுவார்கள் என்று அமைச்சகம் கூறியது. ஆனால் அவர்கள் சிவிலியன்களா அல்லது இராணுவமா   என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.


நிலைநிறுத்தப்பட்ட வீரர்களின் பிரச்சினையில் கருத்து வேறுபாடுகள் ஜனவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான பரிமாற்றங்களை ஏற்படுத்தியது. இந்த காலகட்டத்தில், மாலத்தீவுகள் மொரிஷியஸில் ஒரு முக்கியமான பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க விரும்பவில்லை. கொழும்பு பாதுகாப்பு உரையாடல், மற்றும் பெர்த்தில் நடந்த இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் அதன் பிரதிநிதித்துவத்தை குறைத்தது. சர்ச்சைக்குரிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதல் படி எடுக்கப்பட்டதாகத் தோன்றும் நிலையில், இந்தியாவும் மாலத்தீவும் தங்கள் இராஜதந்திர ஒத்துழைப்பின் வேறு சில பகுதிகளில் முன்னேற்றத்தை மீட்டெடுப்பதாக சுட்டிக்காட்டின.

 

ஞாயிற்றுக்கிழமை, இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகியவை தங்கள் கடலோர காவல்படை சேவைகளுக்கு (coast guard services) இடையில் நடைபெற்ற "தோஸ்தி -16" (Dosti-16) என்று அழைக்கப்படும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முத்தரப்பு கடல்சார் பயிற்சிகளின் (trilateral maritime exercises) சமீபத்திய சுற்றை நிறைவு செய்தன. பங்களாதேஷ் ஒரு பார்வையாளராக பங்கேற்ற பயிற்சிகளின் தொடக்க விழாவில் பேசிய மாலத்தீவின் பாதுகாப்பு அமைச்சர் முகமது கஸ்ஸான் மௌமூன், முய்ஸு அரசாங்கம் "மாலத்தீவு மற்றும் அண்டை நாடுகளுக்கு இடையில் நெருங்கிய உறவுகள், அமைதி மற்றும் நிலைத்தன்மை பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதில் அதிக முன்னுரிமை அளிக்கிறது" என்று கூறினார்.




Original article:

Share:

முறைசாரா கழிவு சேகரிப்பாளர்களின் உலகத்தைப் புரிந்துகொள்வது -நீதி பி.துருபத் யு.

 மார்ச் 1, சர்வதேச கழிவு சேகரிப்போர் தினத்தில் (International Waste Pickers Day), 1992 ஆம் ஆண்டு கொலம்பியாவில் படுகொலை செய்யப்பட்ட சக பணியாளர்களுக்கு உலகெங்கிலும் உள்ள கழிவு சேகரிப்பாளர்கள் அஞ்சலி செலுத்துவார்கள். முறைசாரா கழிவு சேகரிப்பாளர்களின் உலகமானது, அடிக்கடி மறக்கப்படும், மிகை விளிம்புநிலை தொழிலாளர் கூட்டமைப்பாகும். அவை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை அல்லது பதிவு செய்யப்படுவதில்லை. மேலும், சமூக பாதுகாப்பு நன்மைகள் அல்லது சட்டப் பாதுகாப்பு ஒதுக்கப்பட்ட தொழிலாளர்களின் உலகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.


சர்வதேச தொழிலாளர் அமைப்பு முறைசாரா கழிவு மேலாண்மைத் துறையை  முறையான பதிவு இல்லாமல் கழிவு மேலாண்மையில் ஈடுபடும் தனிநபர்கள் அல்லது சிறு வணிகங்கள் என்று விவரிக்கிறது. இந்த தொழிலாளர்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை சேகரித்து வரிசைப்படுத்துகிறார்கள். மேலும், கழிவுகளை நிர்வகிப்பதிலும், வளங்களைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்கள் விலக்கி வைக்கப்படுகின்றனர். ஏனெனில், அவர்கள் சமூக பாதுகாப்பு திட்டங்களலோ  அல்லது சட்ட  கட்டமைப்புகளலோ அங்கீகரிக்கப்படவில்லை. 


தரவு என்ன காட்டுகிறது


எத்தனை முறைசாரா கழிவுகளை (informal waste pickers) சேகரிப்பவர்கள் உள்ளனர் என்பதை சரியாக அறிவது கடினம். ஆனால், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், அவர்கள், உலகளவில் நகர்ப்புற மக்கள்தொகையில் 0.5%–2%  என்று கூறுகிறது. பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட அவர்களில் பலர், நகரங்களில் உள்ள ஏழ்மையானவர்கள், பெரும்பாலும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். இந்தியாவில், காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு 2017-18 (Periodic Labour Force Survey 2017-18) நகர்ப்புறங்களில் கிட்டத்தட்ட 1.5 கோடி குப்பை எடுப்பவர்களைக் கண்டறிந்தது,  அவர்களில் பாதி பேர் பெண்கள்.


சராசரியாக, ஒரு கழிவு எடுப்பவர் 8 முதல் 10 மணி நேரத்தில் ஒரு நாளைக்கு 60 கிலோ முதல் 90 கிலோ வரை கழிவுகளை சேகரிக்கிறார். பெரும்பாலும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மற்றும் ஆபத்தான வேலையைச் செய்கிறார்கள். அவர்கள் வழக்கமான காயங்களுடன் தோல் (dermatological) மற்றும் சுவாச பிரச்சினைகள் (respiratory issues) போன்ற சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். சாதிய அமைப்பில் அவர்களின் நிலையால், குறைந்த வருமானமும், சமூக அந்தஸ்தும் கிடைப்பது இல்லை .


தனியார் நிறுவனங்கள் நகரக் கழிவுகளை நிர்வகிக்கின்றன.  இது அவர்களின் உரிமைகளையும் வருவாயையும் குறைப்பதன் மூலம் கழிவு சேகரிப்பாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும். இந்திய கழிவு சேகரிப்பாளர்கள் கூட்டணி (Alliance of Indian Waste Pickers (AIW)) 2023 இல் இந்த சிக்கலை முன்னிலைப்படுத்தியது. இந்த நிறுவனங்கள் விலையுயர்ந்த இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால், கழிவு உற்பத்தியாளர்களிடம் குறைந்த விலையை வசூலிக்கின்றன. இதன் விளைவாக, முறைசாரா குப்பை எடுப்பவர்கள் வெளியேறி, குப்பை கொட்டும் இடங்கள் போன்ற அபாயகரமான பகுதிகளிலிருந்து கழிவுகளை சேகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால், அவர்களின் உடல்நலம், வருவாய் மற்றும் சமூக நிலை பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில், தனியார் நிறுவனங்கள் மற்றும் நகர அதிகாரிகளால் தடுக்கப்படுகிறது. மேலும், கழிவு எடுப்பவர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது.


விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளயாளரின் பொறுப்பு (Extended Producer Responsibility (EPR))


பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்காக விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (Extended Producer Responsibility (EPR)) இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. இது கழிவுகளை நிர்வகிக்கும் கடமையை உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து வணிகக் கழிவு உற்பத்தியாளர்களுக்கு மாற்றுகிறது. விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு நம்பிக்கையுடன் உள்ளது. கழிவு எடுப்பவர்கள் மற்றும் பிற அடிமட்டத் தொழிலாளர்களை சேர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், முறைசாரா வேலையில் உள்ள பெண்களின்: உலகமயமாக்கல் மற்றும் ஒழுங்கமைத்தல் (Women in Informal Employment: Globalizing and Organizing WIEGO)) அமைப்பின் கூற்றுப்படி,  விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு உண்மையில் முறைசாரா துறையிலிருந்து கழிவுகளைத் திசைதிருப்புகிறது. முறைசாரா கழிவுப் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.


இந்தியாவில் விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு வழிகாட்டுதல்களின்படி  மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)), தயாரிப்பாளர்கள், உரிமையாளர்கள், தொழில்துறையினர், தொழில் சங்கங்கள், பொது சமூக அமைப்புகள் மற்றும் குடிமக்கள் போன்ற பல குழுக்களை உள்ளடக்கியிருப்பதை இந்திய கழிவு சேகரிப்பாளர்கள் கூட்டணி (Allied Industrial Workers (AIW)) கவனித்துள்ளது. இருப்பினும், இந்த குழுக்களில் முறைசாரா குப்பை எடுப்பவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதித்துவம்  உள்ளதா என்பது தெளிவாக இல்லை. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 (Solid Waste Management Rules 2016), குப்பை எடுப்பவர்கள் நகராட்சி கழிவு மேலாண்மையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று கூறினாலும், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தால் (Ministry of Environment, Forest, and Climate Change) வெளியிடப்பட்ட விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு வழிகாட்டுதல்கள் 2022, கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சியில் முறைசாரா கழிவு சேகரிப்பாளர்களின் பங்கை  புறக்கணித்துள்ளது.


பிளாஸ்டிக் ஒப்பந்தம் (Plastic Treaty) மற்றும் நியாயமான மாற்றம்


உலகளவில், கழிவு சேகரிப்பவர்கள் அனைத்து பிளாஸ்டிக்கிலும் 60% சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்கிறார்கள் என்று 2022 உலக பொருளாதார  மன்ற அறிக்கை (World Economic Forum report) தெரிவிக்கிறது. மறுசுழற்சியில் அவை முக்கிய பங்கு வகித்தாலும், அவற்றின் வேலை பெரும்பாலும் அங்கீகரிக்கப்படுவதில்லை. மேலும், அவர்கள் ஒரு நல்ல வருமானத்தை ஈட்ட போராடுகிறார்கள். ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (United Nations Development Programme (UNDP)) மற்றும் பியூ (Pew) ஆகியவற்றின் அறிக்கைகளின்படி, முறைசாரா கழிவு எடுப்பவர்கள் 2016 ஆம் ஆண்டில் மட்டும் 27 கோடி மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர்.  இது மறுசுழற்சிக்காக சேகரிக்கப்பட்ட அனைத்து பிளாஸ்டிக் பொருட்களில் 59% ஆகும். இது பிளாஸ்டிக் நிலப்பரப்புகளிலோ அல்லது கடலிலோ செல்வதைத் தடுக்கிறது. இருப்பினும், நுண் பிளாஸ்டிகக்கால் மாசுபடுத்தப்பட்ட குடிநீரை குடிப்பதால் மற்றும் பிளாஸ்டிக் எரிப்பதால் ஏற்படும் புகையை சுவாசிப்பதால் அவர்கள் உடல்நல அபாயங்களை எதிர்கொள்கின்றனர். பிளாஸ்டிக் மாசுபாட்டை நிறுத்துவதற்கான ஐ.நா (United Nations) தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கும்போது, 2024 க்குள் சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட ஒப்பந்தத்தை உருவாக்கும்போது, இந்த தொழிலாளர்கள் நியாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.


இந்தியா, ஒரு நபர் அதிக பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்வதால், கழிவு சேகரிப்பவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (Central Pollution Control Board CPCB)) சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவின் பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் ( plastic overshoot day for India) ஜனவரி 6 ஆகும்.  உலகின் மோசமாக நிர்வகிக்கப்படும் கழிவுகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றிற்கு பொறுப்பான 12 நாடுகளில் இந்தியாவும் ஏற்கனவே ஒன்றாகும். நீட்டிக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (Extended Producer Responsibility (EPR)) அமைப்பு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை மாசுபாட்டிற்கு பொறுப்பேற்க வைக்கிறது. முக்கியமாக பெரிய மறுசுழற்சி நிறுவனங்களை உள்ளடக்கியது, கழிவுகளை மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களாக மாற்றும் பல கழிவு சேகரிப்பவர்களை விட்டுவிடுகிறது.


கழிவு சேகரிப்பவர்கள், விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (Extended Producer Responsibility (EPR))  அமைப்பை மேம்படுத்தக்கூடிய கழிவுகளை கையாள்வது பற்றிய மதிப்புமிக்க அறிவைக் கொண்டுள்ளனர்.  விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு விதிகளை நாம் எவ்வாறு அமைக்கிறோம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் புதிய அமைப்பில் கோடி கணக்கான முறைசாரா கழிவு எடுப்பவர்களை சேர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்.


நீதி பி.துருபத்யு பெங்களூருவில் உள்ள இந்திய மனித குடியேற்றங்களுக்கான நிறுவனத்தின் (Indian Institute for Human Settlements  (IIHS)) மூத்த ஆராய்ச்சியாளரும், கர்நாடக தொழிலாளர் கொள்கைக் குழுவின் (Karnataka Labour Policy Committee)ஆலோசனை உறுப்பினரும் ஆவார்.




Original article:

Share:

குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டுமா? -ஏ.எம்.ஜிகீஷ்

 பிப்ரவரி 13 அன்று விவசாயிகள் குழுக்கள் புதுதில்லியை நோக்கி அணிவகுத்துச் செல்லத் தொடங்கின. தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலையில் (Minimum Support Price (MSP)) பயிர்களை கொள்முதல் செய்வதை சட்டமாக்குவது மற்றும் உலக வர்த்தக அமைப்பிலிருந்து (World Trade Organization (WTO)) இந்தியா வெளியேறுவது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், கொள்முதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான கொள்கைகளை உருவாக்க அரசாங்கத்தின் மீது உலக வர்த்தக அமைப்பு  அழுத்தம் கொடுக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். 23 விவசாய பொருட்களுக்கு அரசாங்கம் குறைந்தபட்ச ஆதரவு விலையை  நிர்ணயித்தாலும், இது முக்கியமாக அரிசி மற்றும் கோதுமைக்கு பொருந்தும். ஏனென்றால், இந்தியாவில் இந்த தானியங்களுக்கு நிறைய சேமிப்பு வசதிகள் உள்ளது மற்றும் அவற்றை அதன் பொது விநியோக முறைக்கு (Public Distribution System (PDS)) பயன்படுத்துகிறது.  குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக மாற்றுவதற்கு  சாத்தியமில்லை என்று அரசாங்கம் பல முறை கூறியுள்ளது. இந்நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டுமா? 


சட்டப்பூர்வமாக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான போராட்டங்கள் நியாயமானவையா?     


லக்விந்தர் சிங் : காலப்போக்கில் விவசாயிகளுக்கான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. 2018 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவிலிருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தெருக்களில் இறங்கி போராடினர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை, மாநில அரசுகளோ, மத்திய அரசோ பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.  




குறைந்தபட்ச ஆதரவு விலை என்ன?


இந்த நிலைமைக்கு ஒரு வரலாறு உண்டு. 1991 ஆம் ஆண்டில், இந்தியா பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது. இதில் குறிப்பிட்டவை என்னவென்றால், விரைவில் நாம் தொழில்மயமாகிவிடுவோம், இதன் தாக்கம் குறைவான நபர்களை விவசாயத்தில் ஈடுபடுத்தியது. ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், விவசாயம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. ஆனால், இன்னும் இந்த விவசாய நெருக்கடியைப் பற்றி அதிகம் பேசப்படவில்லை. 


போராடும் விவசாயிகளின் ஒரு பெரிய கோரிக்கையானது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிப்பதாகும். பொது விநியோக முறை   மூலம் விவசாயிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஆதரவு அளித்தது மற்றும்  நாட்டிற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்தது. இப்போது, இந்தியா உணவுப் பாதுகாப்பிலிருந்து ஊட்டச்சத்து பாதுகாப்பை நோக்கி நகர்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை உறுதிசெய்வது இதைத் தீர்க்கும். உலக வர்த்தக அமைப்பில் (WTO) இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்றும் விவசாயிகள் விரும்புகின்றனர். உலகமயமாக்கலின் ஒரு கட்டத்தில் நாம் இருக்கிறோம். உதாரணமாக, நமக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படும்போது, உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு (உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாட்டையும் மீறி) அரசாங்கம் தடை விதிக்கிறது. ஒருவகையில், விவசாயிகளின் கோரிக்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகிறது.  


குறைந்தபட்ச ஆதரவு விலையின் உத்தரவாதம் விவசாயிகளை அரிசி மற்றும் கோதுமையை விட அதிகமாக மாற்று பயிரை பயிரிட ஊக்குவிக்கும். இதனால், அவர்களின் வருமானத்தையும், நுகர்வையும் அதிகரிக்கும்.  

 

சிராஜ் ஹுசைன் : பல்வேறு பயிர்களுக்கு விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை எந்த அரசும் உடனடியாக ஏற்காது. வேளாண் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் உற்பத்தியை (agricultural trade policies and production) நாம் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். அடுத்த 20-25 ஆண்டுகளில் விவசாயத்தின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும்.


2020-2021 போராட்டங்களுக்குப் பிறகு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான பிரச்சினையை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க அரசாங்கம் ஏழு மாதங்கள் எடுத்தது. ஆனால், ஒன்றரை ஆண்டுகளாகியும், அந்த குழு இடைக்கால அறிக்கையை கூட சமர்ப்பிக்கவில்லை.


குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் என்பது விவசாயிகளை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய பங்களிப்பாக மாற்றும் என்று ராகுல் காந்தி வலியுறுத்துகிறார்.


இந்த அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டுமா? பொது கொள்முதல் இல்லாமல் குறைந்தபட்ச ஆதரவு விலை தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா?


சிராஜ் ஹுசைன்: வேளாண் உற்பத்தி சந்தை குழுக்கள் (Agricultural Produce Market Committees (APMC)) பிரதிநிதித்துவப்படுத்தும் சேமிப்பு கிடங்கு அமைப்பு (mandi system) ஒரு சில மாநிலங்களில் மட்டுமே சிறப்பாக செயல்படுகிறது. மற்ற மாநிலங்களில், இது பயனுள்ளதாக இல்லை. இந்தியாவின் பயிர் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே சேமிப்பு கிடங்கு மூலம் விநியோகப்படுகிறது. மீதமுள்ளவை சிறு விவசாயிகளால் உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்கப்படுகின்றன. எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு சட்டமாக மாறினாலும், அதை அமல்படுத்துவது கடினம், ஏனென்றால் யார் வாங்குகிறார்கள், விற்கிறார்கள், என்ன விலையில் வாங்குகிறார்கள் என்பதற்கான பதிவு எதுவும் இல்லை. கோதுமை மற்றும் அரிசி போன்ற பிரதான உணவுகள் உட்பட 23 பயிர்களையும் கொள்முதல் செய்வதில் அரசாங்கம் சிரமங்களை எதிர்கொள்கிறது.


லக்விந்தர் சிங்: குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவது தேசிய நலனில் உள்ளது. பல விவசாயிகள் தற்போது முறைசாரா சந்தை பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவது, அதன் பரந்த நோக்கங்களுக்கு ஏற்ப பரிவர்த்தனைகளை டிஜிட்டல்மயமாக்குதல் மற்றும் முறைப்படுத்துதல் ஆகியவற்றின் அரசாங்கத்தின் நோக்கங்களுடன் ஒத்துப்போகிறது. 1991 சீர்திருத்தங்களுக்குப் பிறகு, விவசாயத் துறையில் முதலீடு கணிசமாகக் குறைந்துள்ளது. இது விவசாயிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவதன் மூலம் இதைத் தணிக்க உதவும். அனைத்து 23 பயிர்களையும் அரசாங்கம் வாங்க வேண்டியதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், அது 5-10% விளைபொருட்களை வாங்கினாலும், அது விலையை நிலைப்படுத்த உதவும் ஒரு சிறிய தலையீட்டாக அமையும்.


அரசாங்கம் கூறுவது போல, குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை நாடு முழுவதற்கும், குறிப்பாக வாழ்வாதார விவசாயிகளுக்கு விரிவுபடுத்த முடியுமா?


சிராஜ் ஹுசைன்: ஆம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகியவை கொள்முதல் முறையை விரிவுபடுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளன. பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சமீப காலமாக அரிசிக்கான கொள்முதல் அதிகரித்துள்ளது இதுபோன்ற கணிசமான தொகையை அரசாங்கம் தொடர்ந்து வாங்க வேண்டுமா? என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. தற்போதைய கொள்கையானது 50-60 மில்லியன் டன் அரிசியை கொள்முதல் செய்வதை உள்ளடக்கியது. மேலும், பொது விநியோக முறையை இலவசமாக்குவதற்கான சமீபத்திய முடிவு அரசாங்கத்தால் கோதுமை மற்றும் அரிசியை தொடர்ந்து பெரிய அளவில் கொள்முதல் செய்வதைக் குறிக்கிறது. இந்த கொள்கை ஆட்சிக்கு பலனளிக்குமா?


எழுப்பப்பட்ட மற்றொரு கவலை என்னவென்றால், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவது, உயர்ந்த விலைகளுக்கு வழிவகுக்கும். இது நுகர்வோரை எதிர்மறையாக பாதிக்கும்.


சிராஜ் ஹுசைன்: எந்தவொரு அரசாங்கமும் எல்லா பயிர்களையும் வாங்கவோ அல்லது எல்லாவற்றிற்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கவோ முடியும் என்று நான் நினைக்கவில்லை. விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை எப்படி உறுதி செய்வது என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது. இதை ஒவ்வொரு மாநிலமும் முடிவு செய்ய வேண்டும் என்று நாம் நம்புகிறோம். நம் கருத்து என்னவென்றால், அது மாநிலத்திற்கு ஒரு கொள்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு ஆட்சி உள்ளது. உதாரணமாக, பஞ்சாபில், சேமிப்பு கிடங்கு அமைப்பு நன்கு வளர்ந்திருப்பதாலும், இரண்டு சேமிப்பு கிடங்களுக்கு இடையேயான தூரம் 6 கிமீ மட்டுமே என்பதாலும், அனைத்திந்திய அளவில் 12 கிமீ மட்டுமே இருப்பதாலும், விலைக் கட்டணக் குறைபாடு முறையை, மாநிலங்களும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்யும் கொள்கையை வல்லுநர்கள் உருவாக்க வேண்டும்.

 

விவசாயிகளின் போராட்டம் எங்கே செல்கிறது?


பேரியல் (macroeconomists) பொருளாதார வல்லுநர்களிடம் கேட்க வேண்டிய மற்றொரு கேள்வி உணவு விலைகள் அதிகரிப்பது பற்றியது ஆகும். அதில், நுகர்வோரையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் உள்நாட்டில் குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அமைப்பதற்கு இடையே அவர்கள் சமநிலைக்கு முயற்ச்சிக்க வேண்டும்.  


லக்விந்தர் சிங்: குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) சட்டபூர்வமாக்க அரசாங்கம் விரும்பாதபோது, அதே சமயத்தில் ஆய்வாளர்கள் இந்த பிரச்சினைகளைப் பற்றி பேசாதபோது, நுகர்வோர்கள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். இது விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே ஒரு பிளவை உருவாக்குகிறது. அரசாங்கம் ஒரு இடைத்தரகராக இருந்து, நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.


விவசாயிகள் போராட்டம் 2024


மிக முக்கியமான பிரச்சினை உணவு பணவீக்கம் ஆகும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை குறைந்த விலைக்கு விற்பதுடன், அது அவர்களின் உற்பத்தி செலவை ஈடுகட்ட போதுமனதாக இல்லை. இதற்கிடையில், நுகர்வோர் கணிசமான விலை உயர்வை அனுபவித்து வருகின்றனர். பணவீக்கத்தைக் குறைப்பதற்கும், நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும், விவசாயிகளுக்கு நியாயமான வருமானத்தை வழங்குவதற்கும் ஒரு நடவடிக்கையாக குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) சட்டப்பூர்வமாக்குவது முன்மொழியப்பட்டது.


மேலும், சந்தைகளை ஒழுங்குபடுத்துவது முக்கியம். ஒழுங்குமுறை செயல்முறையிலிருந்து அரசாங்கம் விலகியுள்ளது. எனவே ஒழுங்கமைக்கப்படாத சந்தைகளில், இடைத்தரகர்கள் செயலில் உள்ளனர் மற்றும் பொருளாதாரத்தின் மீது பணவீக்க அழுத்தங்களை உருவாக்குகின்றனர்.


A2+FL மற்றும் C2+50% போன்ற உள்ளீட்டு செலவு கணக்கீட்டு முறைகள் குறித்தும் விவசாயிகள் கவலைப்படுகிறார்கள். உள்ளீட்டு செலவுகளைக் கணக்கிடுவதற்கான சிறந்த வழிமுறை எதுவாக இருக்கும்?


லக்விந்தர் சிங்: C2 + 50% செலவு என்ற கருத்து தொழில்துறையில் இருந்து வருகிறது. விவசாயத்திற்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். விவசாயப் பயிர்களுக்கான செலவுகளின் C2 மதிப்பீடு பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் உள்ள விலைகளுடன் கிட்டத்தட்ட ஒப்பிடத்தக்கதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.


சிராஜ் ஹுசைன்: சாகுபடிச் செலவைக் கணக்கிடும் முறைகளில் சாத்தியமான மாற்றங்கள் குறித்து டாக்டர் ரமேஷ் சந்தின் அறிக்கை உட்பட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த மாற்றங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பிரச்சினை என்னவென்றால், பிரச்சனை என்னவென்றால், நீங்கள் எந்த விலையை நிர்ணயித்தாலும், A2+FL விலையை உங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. சில சமயங்களில், சாகுபடிச் செலவைக் காட்டிலும் சில சமயங்களில் விலை குறைவாக இருக்கும்.


ஆர்.எஸ்.எஸ் விவசாயிகள் அமைப்பு (RSS farmers body), பேச்சு வார்த்தைக்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதை பலவீனத்தின் அடையாளமாக அரசாங்கம் உணரக்கூடாது என்று வலியுறுத்துகிறது.


விவசாயிகளுக்கு உதவ கூட்டுறவு அமைப்புகள் ஒரு மாற்று வழியா?


சிராஜ் ஹுசைன்: குஜராத்தின் வெண்மைப் புரட்சியில் (White Revolution) பால் துறை போன்ற சில துறைகளில் கூட்டுறவு அமைப்புகள் வெற்றி பெற்றுள்ளன. கூட்டுறவு சங்கங்களின் தோல்வியால் தான், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (farmer-producer organisations (FPO)) என்ற யோசனையை அரசாங்கம் கொண்டு வந்தது. இப்போது, விவசாயிகள் கூட்டுறவுகளுக்கு திரும்புகிறோம். விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க உதவும் எந்த வகையான குழு முயற்சியும் நல்லது. ஆனால் கூட்டுறவுகள் (cooperatives) மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (farmer-producer organisations (FPOs)) இரண்டும் கிராமப்புறங்களில் உள்ள செல்வாக்கு மிக்க கந்து வட்டிக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நியாயமான விலையில் சேமித்து வைக்கவும், பருவம் இல்லாத காலத்தில் அதிக விலைக்கு விற்கவும் கூட்டுறவு சங்கங்கள் சேமிப்பு வசதிகளை உருவாக்க முடிந்தால், அவை வரவேற்கத்தக்கது.


லக்விந்தர் சிங்: நாம், மாற்று வழிகளை ஆராய்வதற்கு பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது, ஏனெனில் ஒற்றை தலையீட்டை நம்புவது போதாது. கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கு சட்டப்பூர்வ ஆதரவு மற்றும் மேம்படுத்தப்பட்ட சேமிப்பு திறன் தேவை. அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் கூட்டுறவு சங்கங்களின் தோல்விகள் பெரும்பாலும் ஊழலுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் வாக்குறுதிகளை வைத்திருக்கும் அதே வேளையில், ஒரு சாதகமான சட்ட கட்டமைப்பு மற்றும் ஆதரவான உள்கட்டமைப்பு ஆகியவை அவற்றின் வெற்றிக்கு இன்றியமையாதவை.


லக்விந்தர் சிங், புது தில்லியில் உள்ள மனித மேம்பாட்டு நிறுவனத்தின் வருகைப் பேராசிரியர் மற்றும் பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆவார். 


சிராஜ் ஹுசைன் முன்னாள் மத்திய வேளாண் செயலாளர் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் ஆலோசகர் ஆவார்.  




Original article:

Share:

மின்-சான்று (E-evidence), புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்துதல் -ஆர்.கே.விஜ்

 மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், இந்திய தண்டனைச் சட்டத்திற்க்கு மாற்றாக, பாரதிய நியாய் சன்ஹிதா (Bharatiya Nyay Sanhita),  குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்க்கு மாற்றாக, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita) மற்றும் இந்திய ஆதாரங்கள் சட்டத்திற்க்கு மாற்றாக, பாரதிய சாக்ஷயா அதினியம் (Bharatiya Sakshya Adhiniyam (BSA)) ஆகியவை  ஜூலை 1, 2024 முதல் நடைமுறை படுத்தப்பட உள்ளன. பாரதிய நியாய் சன்ஹிதாவின் (Bharatiya Nayay Sanhita (BNS)) பிரிவு 106(2)ஐ மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. உயிரிழக்கும் விபத்துகள் குறித்து உடனடியாக போலீசில் புகார் செய்யாவிட்டால், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என இப்பிரிவு கூறுகிறது.


உள்துறை அமைச்சகமும், மாநில அரசுகளும் இந்த மாற்றத்திற்கு தயாராகி வருகின்றன. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவில் (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS))  சில மாற்றங்கள் செய்யப் பட்டாலும் சில புதிய குற்றங்கள் மற்றும் பாரதிய நியாய் சன்ஹிதாவில் (Bharatiya Nayay Sanhita (BNS)) அறிமுகப்படுத்தப்பட்ட சில மாற்றங்கள், இந்திய சாட்சியச் சட்டம், (Indian Evidence Act) 1872இன் உள்ளடக்கங்களை சிறிதளவு மாறியுள்ளன. பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் (Bharatiya Sakshya Adhiniyam (BSA)) பெரும்பாலும் மாறாமல் உள்ளது. இரண்டாம் நிலை சான்றுகளில் சிறிய விரிவாக்கங்கள் மற்றும் மின்னணு சான்று விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.


வரையறைகள் பிரிவு தெளிவை வழங்குகிறது, எடுத்துக்காட்டாக மின்னஞ்சல்கள், சேவையக பதிவுகள், கணினி ஆவணங்கள், செய்திகள், வலைத்தளங்கள், இருப்பிடத் தரவு மற்றும் டிஜிட்டல் சாதனங்களில் சேமிக்கப்பட்ட குரல் அஞ்சல் செய்திகள் போன்ற மின்னணு மற்றும் டிஜிட்டல் பதிவுகள் ஆவணங்களாகக் கருதப்படுகின்றன.


பிரிவு 57இல், மின்னணு சான்றுகள் எவ்வாறு கையாள்வது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் விளக்கங்கள் உள்ளன. ஒரு வீடியோ மின்னணு முறையில் சேமிக்கப்பட்டு, அனுப்பப்பட்டால் அல்லது வேறு இடங்களில் காட்டப்பட்டால், சேமிக்கப்பட்ட ஒவ்வொரு பதிப்பும் முதன்மை ஆதாரமாகக் கணக்கிடப்படும் என்று ஒரு விளக்கம் கூறுகிறது. இது சைபர் குற்றவாளிகளைப் பிடிக்க உதவும். அவர்கள் அசல் ஆதாரங்களை அழிக்க முயற்சித்தாலும், மற்ற ஆதாரங்களில் இருந்து அதன் மதிப்பு குறையாமல் சேகரிக்கப்படலாம் என்பதால், குற்றவாளிகள் அவர் செய்த குற்றங்களில் இருந்து தப்பிப்பதை இது தடுக்கும் மேலும் விசாரணை நிறுவனங்களுக்கு உதவக்கூடும்.


பிரிவு 63 நீதிமன்றத்தில் என்ன மின்னணு ஆதாரங்களை (electronic records) ஏற்றுக்கொள்ள முடியும் என்பதைப் பற்றி பேசுகிறது. விஷயங்களை தெளிவுபடுத்த 'செமி-கண்டக்டர் மெமரி' (semiconductor memory) மற்றும் 'கம்யூனிகேஷன் டிவைஸ்' (communication device) போன்ற சொற்கள் இதில் அடங்கும். இது இது விதியின் தாக்கத்தை மாற்றாது, ஏனெனில் 2000 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (Information Technology (IT)) ஏற்கனவே இந்த விதிமுறைகளை உள்ளடக்கியது. எடுத்துக்காட்டாக, 'மின்னணு வடிவம்' (computer memory) என்பது கணினி நினைவகத்தில் சேமிக்கப்பட்ட தரவை உள்ளடக்கியது. இதேபோல், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 (Information Technology (IT) Act, 2000) இல் உள்ள 'கணினி நெட்வொர்க்' (computer network) தகவல் தொடர்பு சாதனங்களை உள்ளடக்கியது.


ரேம் (Random Access Memory (RAM)) மற்றும் கேச் மெமரி (cache memory) உள்ளிட்ட கணினி முதன்மை நினைவகம், கணினி செயல்பாடுகளை விரைவுபடுத்தும் குறைக்கடத்தி நினைவகம் (semi-conductor memory) என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இது தற்காலிகமானதாக இருந்தாலும், இயக்கப்பட்டிருக்கும் போது மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டால், இந்த நினைவகத்தில் முக்கியமான தகவல்கள் இருக்கும்.


டிஜிட்டல் பதிவுகளை ஏற்றுக்கொள்வது


மின்னணு பதிவுகளைப் பயன்படுத்துவது பற்றிய சட்டம் தெளிவாக உள்ளது. பாரதிய சாக்ஷ்ய ஆதினியத்தின் (Bharatiya Sakshya Adhiniyam (BSA)) பிரிவு 63 இல் சில மாற்றங்கள் இருந்தாலும், இது இந்திய சாட்சியச் சட்டத்தின் (Indian Evidence Act) பிரிவு 65-B போன்றது. இன்னும் புதிய விதிகளுக்குப் பொருந்தும். அர்ஜுன் பண்டித்ராவ் கோட்கர் vs கைலாஷ் குஷன்ராவ் கோரண்டியல் & ஓர்ஸ் (Arjun Panditrao Khotkar vs Kailash Kushanrao Gorantyal & Ors) வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 2020 வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் படி, மின்னணு பதிவுகளை ஆதாரமாக ஒப்புக்கொள்வதற்கு பிரிவு 65-B (4), இப்போது (Bharatiya Sakshya Adhiniyam (BSA)) பிரிவு 63 (4) இன் கீழ் ஒரு குறிப்பிட்ட சான்றிதழ் அவசியம் என்று நீதிமன்றம் கூறியது. இரண்டாம் நிலை சான்றுகளை ஒப்புக்கொள்வதற்கான பிற விதிகள் மின்னணு பதிவுகளுக்குப் பொருந்தாது, ஏனெனில் இந்திய சாட்சியச் சட்டத்தின் (Indian Evidence Act) சட்டத்தின் 65-B சட்டத்தின் பிற பகுதிகளை மீறும் ஒரு சிறப்பு விதி உள்ளது. இந்திய சாட்சியச் சட்டத்தின் (Indian Evidence Act) சட்டத்தின் 65-A மற்றும் 65-B பிரிவுகள் மின்னணு பதிவுகளுக்கான முழுமையான விதிகளை வழங்குகின்றன. பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் (Bharatiya Sakshya Adhiniyam (BSA))  இந்த சிறப்பு விதியை இந்திய சாட்சியச் சட்டத்தில் இருந்து கையாண்டுள்ளது. மின்னணு சாதனத்திற்கு தேவையான சான்றிதழை யாராவது வழங்க மறுத்தால், அதைப் பெற நீதிபதியிடம் விண்ணப்பிக்கலாம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


போலீஸ் அறிக்கையைத் தாக்கல் செய்யும் போது அல்லது விசாரணை தொடங்குவதற்கு முன்பு சான்றிதழை மற்ற ஆவணங்களுடன் வழங்க வேண்டும் என்றாலும், சரியான நேரத்தில் அதை வழங்காததை சரிசெய்ய முடியும் என்று நீதிமன்றம் கூறியது. பிரிவு 65-B இப்போது பாரதிய சாக்ஷ்ய ஆதினியத்தின் (Bharatiya Sakshya Adhiniyam (BSA)) பிரிவு 63 சான்றிதழ் எப்போது வழங்கப்பட வேண்டும் என்று கூறவில்லை என்பதால், குற்றம் சாட்டப்பட்டவரின் விசாரணைக்கு தீங்கு விளைவிக்காமல், தேவைப்பட்டால் நீதிமன்றம் பின்னர் அதை அனுமதிக்கலாம். சட்டத்தை பின்பற்றுவது சாத்தியமற்றது என்றால், அதை பின்பற்றாமல் இருப்பதை மன்னிக்க முடியும் என்றும் நீதிமன்றம் கூறியது. 


மின்னணு சாதனம் வைத்திருக்கும் நபரிடம் இருந்து தேவையான சான்றிதழைப் பெற முடியாவிட்டால், அவர்கள் நீதிபதியிடம் உதவி கேட்கலாம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. சாதனம் உள்ளவர் சான்றிதழை வழங்க மறுத்தால் இது பொருந்தும்.


பாரதிய சாக்ஷ்ய ஆதினியத்தின் (Bharatiya Sakshya Adhiniyam (BSA))  பிரிவு 63(4) ஒரு சான்றிதழில் இரண்டு கையொப்பங்கள் தேவை என்று கூறுகிறது. இது இந்திய சாட்சியச் சட்டத்திலிருந்து வேறுபட்டது. இதற்கு ஒரு கையெழுத்து மட்டுமே தேவை. முதல் கையொப்பம் கணினி அல்லது தகவல் தொடர்பு சாதனத்தை மேற்பார்வையிடும் நபரிடமிருந்து வர வேண்டும். அல்லது தொடர்புடைய செயல்பாடுகளை நிர்வகிக்கும் ஒருவரிடமிருந்து பெறப்பட வேண்டும். இரண்டாவது கையொப்பம் ஒரு நிபுணரிடமிருந்து இருக்க வேண்டும். பாரதிய சாக்ஷ்ய ஆதினியத்தின் இந்த சான்றிதழுக்கான ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பை அதன் அட்டவணையில் கொண்டுள்ளது.


நிபுணர் குறிப்பிட்ட ஹாஷ் மதிப்பைச் (hash value) சரிபார்க்க வேண்டும். இந்த மதிப்பு ஒரு குறிப்பிட்ட ஹாஷ் அல்காரிதத்தைப் (hash algorithm) பயன்படுத்தி வருகிறது. ஹாஷ் செயல்பாடு (hash function) என்பது ஒரு வகை கணினி வழிமுறையாகும் (algorithm). இது ஒரு பிட்களின் தொகுப்பை "ஹாஷ் முடிவு"  (hash result) எனப்படும் வித்தியாசமான சிறிய தொகுப்பாக மாற்றுகிறது. இந்த செயல்பாடு ஒரே உள்ளீடு எப்போதும் ஒரே ஹாஷ் முடிவை (hash result) அளிக்கிறது. இந்த செயல்முறையை மாற்றுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. 


மின்னணு பயன்பாட்டிற்கு எந்த ஹாஷ் அல்காரிதம்கள் (hash algorithm) பாதுகாப்பானவை என்பது குறித்து மத்திய அரசு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், சான்றிதழ் வடிவத்தில் 'SHA1, SHA256, MD5 மற்றும் பிற சட்டப்படி ஏற்றுக்கொள்ளக்கூடிய தரநிலை' ஆகியவை பொருத்தமான விருப்பங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.


MD5 மற்றும் SHA1 ஆகியவை அறியப்பட்ட பலவீனங்களைக் கொண்டுள்ளன. இருப்பினும், SHA256 மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. தரவு ஒருமைப்பாடு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய ஏஜென்சிகள் SHA256ஐப் பயன்படுத்த வேண்டும்.


புதிய வடிவத்தை ஏற்க தயார்நிலை


எலக்ட்ரானிக் பதிவுகளை அனுமதிப்பதில் நிபுணர் சான்றிதழ் நீதிமன்றத்திற்கு உதவக்கூடும் என்றாலும், இது இணைய ஆய்வகங்களின் பணிச்சுமையை அதிகரிக்கப் போகிறது. இப்போதெல்லாம், கிட்டத்தட்ட ஒவ்வொரு குற்றமும் ஸ்மார்ட்போனை உள்ளடக்கியது, மேலும் அழைப்பு பதிவுகள் மற்றும் இருப்பிடத் தரவு பெரும்பாலும் குற்றங்களைத் தீர்க்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு சான்றிதழுக்கும் ஒரு நிபுணரின் கையொப்பம் தேவைப்பட்டால், சைபர்லேப்ஸ் பணிச்சுமை திடீரென அதிகரிக்கும், ஏனெனில் அவர்களுக்கு போதுமான ஊழியர்கள் இல்லை. சத்தீஸ்கரில் உள்ளதைப் போன்ற சில சைபர்லேப்கள், மின்னணு பதிவுகள் குறித்த நிபுணர் கருத்துக்களை வழங்க தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.


விசாரணையின் போது கைப்பற்றப்பட்ட மின்னணு பதிவின் நேர்மையை எதிர் தரப்பு சவால் செய்தால் மட்டுமே நிபுணர்களின் கருத்தை கேட்பது நியாயமாக இருந்திருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில், நீதிமன்றங்கள் எப்போதும் நிபுணர் ஆலோசனையைப் பெறலாம். சான்றிதழுடன் சேகரிக்கும் முன், ஹாஷ் அல்காரிதம்களில் (hash algorithm) ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தியிருப்பதையும், அதில் மெசேஜ் டைஜஸ்ட் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதையும் விசாரணை அதிகாரி உறுதிசெய்திருந்தால் போதுமானதாக இருந்திருக்கும்.


இப்போது, குறியாக்கம் பற்றி மக்களுக்குக் கற்பிக்க ஒரு பொது விழிப்புணர்வு இயக்கம் இருக்க வேண்டும். குறிப்பாக, பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா அல்லது பிற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும் தனியார் ஏஜென்சிகள். அதே நேரத்தில், அமலாக்க முகவர் கூடுதல் பணிச்சுமைக்கு அவர்கள் தயாராக இருப்பதை உறுதிப்படுத்த ஜூலை மாதத்திற்கு முந்தைய நேரத்தைப் பயன்படுத்த வேண்டும்.


ஆர்.கே. விஜ் முன்னாள் இந்திய காவல் பணி அதிகாரி ஆவார்.




Original article:

Share:

தாராளமயமாக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீடு இந்தியாவை உலக விண்வெளி மையமாக மாற்றும் -தலையங்கம்

 இந்தியா, செயற்கைக்கோள்கள் தயாரிப்பிற்கான  சர்வதேச மையமாக மாற இதுவே சரியான தருணம்


விண்வெளித் துறைக்கான அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையை (foreign direct investment (FDI) policy for the space sector) மத்திய அரசு புதுப்பித்துள்ளது, பல்வேறு துறைகளில் ஒரு வெளிநாட்டு நிறுவனம் பெறக்கூடிய பங்குகளின் சதவீதத்தை மாற்றியுள்ளது. இப்போது, வெளிநாட்டு நிறுவனங்கள், ஏவுதல் வாகன உற்பத்தி (launch vehicle manufacture) மற்றும் விண்வெளி துறைமுகங்களில் (spaceports) 49% வரை, செயற்கைக்கோள் உற்பத்தியில் (satellite manufacture) 74% மற்றும் செயற்கைக்கோள்கள் மற்றும் தரை நிலைய வன்பொருட்களுக்கான கூறுகள் மற்றும் துணை அமைப்புகளில் 100% வரை முதலீடு செய்ய முடியும். இந்த சதவீதங்கள் அந்நிய நேரடி முதலீட்டு வரம்புகள் அல்ல; அரசாங்க அனுமதியுடன் அதிக உரிமைக்கு சாத்தியமாகும்.


ராக்கெட் உற்பத்திக்கு இந்த குறிப்பிட்ட விதிகளை ஏன் தேர்ந்தெடுத்தது என்பதை அரசாங்கம் தெளிவாக விளக்கவில்லை. ராக்கெட் உற்பத்தி, தானியங்கி பாதை மூலம் 49% வெளிநாட்டு முதலீட்டு வரம்புடன், ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பு (Missile Technology Control Regime (MCTR)) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பு என்பது நாடுகளுக்கு இடையேயான முறைசாரா ஒப்பந்தமாகும். ஏவுகணை தொடர்பான தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்துவதில் கவனக்குறைவை தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியா 2016 இல் ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் இணைந்தது. அதன் பிறகு, அதன் கொள்கைகள் அத்தகைய தொழில்நுட்பங்களைப் பரப்புவதற்கான எந்த அபாயத்தையும் பரிந்துரைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறது.


செயற்கைக்கோள் தயாரிப்பில் 'தானியங்கி' வழியின் (automatic’ route in satellite making) மூலம் 74% வெளிநாட்டு உரிமையை அனுமதிக்கும் முடிவானது, அதிகரித்து வரும் உலகளாவிய மோதல்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஆகிய இரண்டு முக்கிய காரணிகளால் பாதிக்கப்படுகிறது. உக்ரைன், ரஷ்யா மற்றும் சீனாவை உள்ளடக்கிய மோதல் செயற்கைக்கோள் துறையில் அவர்களின் மேலாதிக்க நிலைகளை சீர்குலைத்துள்ளது. இதற்கிடையில், செலவு குறைந்த செயற்கைக்கோள் தயாரிப்பிற்கு பெயர் பெற்ற இந்தியா, இந்தத் துறையில் தனது பங்கை விரிவுபடுத்த ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பு உள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில் பல செயற்கைக்கோள்கள் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியா தனது செயற்கைக்கோள் உற்பத்தி திறனை மேம்படுத்த இதுவே சரியான நேரமாகும்.


இந்தியாவில் செயற்கைக்கோள்களை தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் கொள்கை மாற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்திய நிறுவனங்களுக்கு இந்தத் துறையில் பங்கு இருப்பதை உறுதி செய்கிறது. இருப்பினும், செயற்கைக்கோள் உற்பத்தித் தொழில் பெரும்பாலும் உளவு மற்றும் ஸ்பைவேர் தொடர்பான கவலைகளுடன் தொடர்புடையது. இந்தக் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும் இன்னும் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கவும், செயற்கைக்கோள் கூறுகள் மற்றும் துணை அமைப்புகளின் உற்பத்தியில் 100% அன்னிய நேரடி முதலீட்டை (FDI) அரசாங்கம் அனுமதித்துள்ளது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த கூறுகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை முழுமையாக சொந்தமாக வைத்திருக்கவும் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கிறது.


இரண்டு முக்கிய போக்குகள் இன்னும் திறந்தவெளிக் கொள்கைக்கு வழிவகுத்தன. முதலில், 'சீனா-பிளஸ்-ஒன்' (China-plus-one) உத்தி உள்ளது. இந்த ராஜதந்திரம் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை சீனாவில் இருந்து விலகி இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்குப் பல்வகைப்படுத்த ஊக்குவிக்கிறது. செயற்கைக்கோள் தயாரிப்பில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா மாற விரும்புகிறது. இரண்டாவதாக, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கான இந்தியாவின் 'உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை' ('production-linked incentive' (PLI)) திட்டம் உள்ளது. இந்த திட்டம் இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு நன்மைகளை வழங்குகிறது. செயற்கைக்கோள் உற்பத்தி இந்த நிறுவனங்களுக்கு நேரடி வாய்ப்பை வழங்குகிறது. செயற்கைக்கோள் சந்தையை அன்னிய நேரடி முதலீட்டிற்கு (FDI) திறப்பதன் மூலம், இந்தியா தனது மின்னணுவியல் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடும் கருத்து பெரும்பாலும் ஸ்டார்ட்அப்களுடன் (startups) தொடர்புடையது. இருப்பினும், பல சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும் (small and medium-sized enterprises (MSMEs)) இந்த பகுதியில் செயல்படுகின்றன. இந்த சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இப்போது புதிய கொள்கைகளால் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க முடியும். இந்தக் கொள்கையை உருவாக்க சுமார் இரண்டு வருடங்கள் ஆனது என்று கூறப்படுகிறது. IN-SPAce, விண்வெளியில் தனியார் துறை ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காகப் பொறுப்பான முகமை, தொழில்துறையுடன் பல விவாதங்களுக்குப் பிறகு இந்தக் கொள்கையை உருவாக்கியது. ஒவ்வொரு அன்னிய நேரடி முதலீட்டு ஒப்பந்தத்தையும் அரசாங்கம் விரிவாக ஆராய வேண்டிய அவசியமில்லை. ஒரு பொதுவான கண்ணோட்டமே போதுமானதாக இருக்கும். விண்வெளித் துறையில் அன்னிய நேரடி முதலீடு மேலும் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த தொடக்க புள்ளியாக இருக்கும்.




Original article:

Share:

தேசிய அறிவியல் தினம் : சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு பெற்ற தந்த ராமன் விளைவு

 "ராமன் விளைவு" (Raman effect) கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வை நினைவு கூரும் வகையில், 1986 ஆம் ஆண்டில், இந்திய அரசு பிப்ரவரி 28-ம் தேதியை தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது. சி.வி.ராமன் மற்றும் அவரது புதிய கண்டுபிடிப்பு பற்றி மேலும் விரிவாக ஆராய்வோம்.


1986-ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கம் பிப்ரவரி 28 ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக (National Science Day) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நினைவேந்தல் "ராமன் விளைவு" (Raman Effect) கண்டுபிடிக்கப்பட்ட அறிவிப்பின் நினைவாக உள்ளது.


இந்தக் கண்டுபிடிப்பு இயற்பியலாளர் சர் சி.வி. ராமனுக்கு 1930-ல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. ஒரு எளிய சோதனையின் மூலம், ஒளியானது திரவத்தின் வழியாகச் செல்லும் போது, சிதறிய ஒளியின் ஒரு பகுதி வேறுபட்ட நிறத்தைக் கொண்டிருப்பதை ராமன் கண்டறிந்தார். நம், விஞ்ஞான சமூகம் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை உடனடியாக ஒப்புக் கொண்டது. அதன் அறிவிப்புக்குப் பிறகு முதல் ஏழு ஆண்டுகளுக்குள் 700 க்கும் மேற்பட்ட ஆவணங்களுக்கு வழிவகுத்தது.


"ராமன் விளைவு" (Raman Effect) என்றால் என்ன? இது ஏன் மிகவும் முக்கியமானது? மிக முக்கியமாக, இந்த கண்டுபிடிப்பின் பின்னணியில் உள்ள மனிதன் யார்?


சி.வி.ராமன் 1888 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் திருச்சியில்  சமஸ்கிருத அறிஞர்களின் குடும்பத்தில் பிறந்தார்.  16 வயதில், சென்னையிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் BA பட்டம் பெற்றார். பின்னர், 18 வயதில், MA பட்டப்படிப்பைத் தொடரும் போது, ராமன் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைப் பெற்றார். பிரசிடென்சி கல்லூரியால் வெளியிடப்பட்ட முதல் ஆய்வுக் கட்டுரையாக அவர் தனது படைப்புகளை தத்துவ இதழில் வெளியிட்டார்.


உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ராமனால் வெளிநாட்டில் கல்வி கற்க முடியவில்லை. இதன் விளைவாக, 1907 இல், அவர் திருமணம் செய்துகொண்டு, உதவி கணக்காளர் ஜெனரலாக கல்கத்தாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். முழுநேர அரசு ஊழியராக இருந்தபோதிலும், ராமன் இந்திய அறிவியல் மேம்பாட்டு சங்கத்தில் (Indian Association for the Cultivation of Science (IACS)) வழக்கமான மணிநேரங்களுக்குப் பிறகு ஆராய்ச்சியைத் தொடங்கினார். ராமன் இந்திய அறிவியல் மேம்பாட்டு சங்கத்தின் (IACS) நிலையை உயர்த்தினார். மேலும், விருது பெற்ற ஆராய்ச்சிகளை நடத்தி பொது பார்வையாளர்களை கவர்ச்சியுடன் கவர்ந்தார். 29 வயதில், அவர் தனது சிவில் சர்வீசஸ் பதவியை ராஜினாமா செய்து, கல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் (Presidency College) பேராசிரியராகப் பொறுப்பேற்றார்.


கடலைக் கடந்த பயணம் ஒளிச் சிதறலில் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

1921 ஆம் ஆண்டில், சி.வி.ராமன் இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் ஒரு முக்கிய அறிவியல் நபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அந்த ஆண்டு இங்கிலாந்துக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டு, அவர் திரும்பும் பயணத்தில் ஒரு முக்கியமான கவனிப்பின் மூலம், அவரது வாழ்க்கையையும் அறிவியல் துறையையும் ஆழமாக பாதிக்கும். மத்தியதரைக் கடல் வழியாகப் பயணித்த ராமன், கடலின் ஆழமான நீல நிறத்தைக் கண்டார். வானத்தின் நிறத்தின் பிரதிபலிப்புக்கு காரணமான வழக்கமான விளக்கத்தில் திருப்தியடையாமல், அவரது ஆர்வமுள்ள மனம் ஆழமான புரிதலை நாடியது. 

             

நீர் மூலக்கூறுகளால் சூரிய ஒளி சிதறியதால் கடலின் நிறம் உருவாகிறது என்பதை ராமன் விரைவில் கண்டுபிடித்தார். ஒளி சிதறல் நிகழ்வால் கவரப்பட்ட ராமன் மற்றும் கல்கத்தாவில் அவரது ஒத்துழைப்பாளர்கள் இந்த விஷயத்தில் விரிவான அறிவியல் சோதனைகளை மேற்கொண்டனர். இந்த சோதனைகள் இறுதியில் அவரது பெயரிடப்பட்ட கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது.


ராமன் விளைவு


ராமன் விளைவு என்பது ஒரு திரவத்தின் வழியாக செல்லும் ஒளி சிதறடிக்கப்படும்போது, சில சிதறிய ஒளி நிறத்தை மாற்றுகிறது. ஒரு ஒளிக்கற்றை மூலக்கூறுகளால் திசைதிருப்பப்படும்போது ஏற்படும் ஒளியின் அலைநீளத்தில் ஏற்படும் மாற்றத்தால் இது நிகழ்கிறது.   

 

ஒளி ஒரு பொருளைத் தாக்கும்போது, அது பிரதிபலிக்கலாம், விலகல் செய்யலாம் அல்லது கடத்தப்படலாம். ஒளி எவ்வாறு சிதறுகிறது என்பதை விஞ்ஞானிகளின் ஆய்வால், அது தொடர்பு கொள்ளும் துகள் அதன் ஆற்றலை மாற்றும் திறன் கொண்டதா என்பதை அவர்கள் ஆராய்கின்றனர். ராமன் விளைவு என்பது, ஒளியின் ஆற்றலில் ஏற்படும் மாற்றமானது, கண்காணிக்கப்படும் மூலக்கூறு அல்லது பொருளின் அதிர்வுகளால் அதன் அலைநீளத்தில் மாற்றத்திற்கு வழிவகுக்கும்.


"ஒரு புதிய வகை இரண்டாம் நிலை கதிர்வீச்சு" (A New Type of Secondary Radiation) என்ற தலைப்பில் அவர்களின் முதல் அறிக்கையில், சி.வி.ராமன் மற்றும் இணை ஆசிரியர் கே.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் 60 வெவ்வேறு திரவங்களை ஆய்வு செய்தனர். அனைத்து திரவங்களும் ஒரே முடிவைக் காட்டுவதை அவர்கள் கண்டறிந்தனர். ஒரு சிறிய அளவிலான சிதறிய ஒளியானது, உண்மையான ஒளியை விட வேறுபட்ட நிறத்தைக் கொண்டிருந்தது. இது ஒரு உலகளாவிய நிகழ்வு என்று ராமன் வலியுறுத்தினார். அவர் இந்த கண்டுபிடிப்புகளை நிறமாலைமானியைப் (spectroscope) பயன்படுத்தி உறுதிப்படுத்தினார் மற்றும் விரிவான முடிவுகளை மார்ச் 31, 1928 அன்று இந்திய இயற்பியல் இதழில் வெளியிட்டார்.


கண்டுபிடிப்பின் முக்கியத்துவம்


சி.வி.ராமனின் கண்டுபிடிப்பு உலகளவில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இது அவருடைய ஆரம்பகால நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது. ராமன் தனது 1930 நோபல் பரிசு உரையில் குறிப்பிட்டது போல், "சிதறல் கதிர்வீச்சுகளின் தன்மையானது சிதறல் பொருளின் இறுதி கட்டமைப்பைப் பற்றிய நுண்ணறிவைப் பெற உதவுகிறது." அந்த நேரத்தில் விஞ்ஞான சமூகத்தில் நிலவும் குவாண்டம் கோட்பாட்டின் (quantum theory) பின்னணியில், ராமனின் கண்டுபிடிப்பு முக்கியமான முக்கியத்துவம் வாய்ந்தது.


இந்த கண்டுபிடிப்பு வேதியியலில் நடைமுறை பயன்பாட்டைக் கண்டறிந்தது. இது ராமன் நிறமாலைமானி (Raman spectroscope) எனப்படும் ஒரு புதிய துறைக்கு வழிவகுத்தது. கரிம மற்றும் கனிம சேர்மங்களின் அழிவில்லாத வேதியியல் பகுப்பாய்வை நடத்துவதற்கு இது ஒரு அடிப்படை பகுப்பாய்வு கருவியாக மாறியது. ஒளிக்கதிர்களின் வருகையும், அதிக வலிமையான ஒளிக்கற்றைகளை மையப்படுத்தும் திறனும், காலப்போக்கில் ராமன் நிறமாலைமானியின் (Raman spectroscope) பயன்பாடுகளை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளன.


இன்று, இந்த முறை பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது, கலை மற்றும் கலாச்சார கலைப்பொருட்களின் ஆக்கிரமிப்பு அல்லாத ஆய்வுகள் முதல் சுங்க சாமான்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள போதைப் பொருட்களைக் கண்டறிவது வரை உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.




Original article:

Share: