சட்டப்பூர்வமாக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான போராட்டங்கள் நியாயமானவையா?
லக்விந்தர் சிங் : காலப்போக்கில் விவசாயிகளுக்கான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. 2018 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவிலிருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தெருக்களில் இறங்கி போராடினர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை, மாநில அரசுகளோ, மத்திய அரசோ பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலை என்ன?
இந்த நிலைமைக்கு ஒரு வரலாறு உண்டு. 1991 ஆம் ஆண்டில், இந்தியா பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது. இதில் குறிப்பிட்டவை என்னவென்றால், விரைவில் நாம் தொழில்மயமாகிவிடுவோம், இதன் தாக்கம் குறைவான நபர்களை விவசாயத்தில் ஈடுபடுத்தியது. ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், விவசாயம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. ஆனால், இன்னும் இந்த விவசாய நெருக்கடியைப் பற்றி அதிகம் பேசப்படவில்லை.
போராடும் விவசாயிகளின் ஒரு பெரிய கோரிக்கையானது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிப்பதாகும். பொது விநியோக முறை மூலம் விவசாயிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஆதரவு அளித்தது மற்றும் நாட்டிற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்தது. இப்போது, இந்தியா உணவுப் பாதுகாப்பிலிருந்து ஊட்டச்சத்து பாதுகாப்பை நோக்கி நகர்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை உறுதிசெய்வது இதைத் தீர்க்கும். உலக வர்த்தக அமைப்பில் (WTO) இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்றும் விவசாயிகள் விரும்புகின்றனர். உலகமயமாக்கலின் ஒரு கட்டத்தில் நாம் இருக்கிறோம். உதாரணமாக, நமக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படும்போது, உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு (உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாட்டையும் மீறி) அரசாங்கம் தடை விதிக்கிறது. ஒருவகையில், விவசாயிகளின் கோரிக்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலையின் உத்தரவாதம் விவசாயிகளை அரிசி மற்றும் கோதுமையை விட அதிகமாக மாற்று பயிரை பயிரிட ஊக்குவிக்கும். இதனால், அவர்களின் வருமானத்தையும், நுகர்வையும் அதிகரிக்கும்.
சிராஜ் ஹுசைன் : பல்வேறு பயிர்களுக்கு விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை எந்த அரசும் உடனடியாக ஏற்காது. வேளாண் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் உற்பத்தியை (agricultural trade policies and production) நாம் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். அடுத்த 20-25 ஆண்டுகளில் விவசாயத்தின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும்.
2020-2021 போராட்டங்களுக்குப் பிறகு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான பிரச்சினையை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க அரசாங்கம் ஏழு மாதங்கள் எடுத்தது. ஆனால், ஒன்றரை ஆண்டுகளாகியும், அந்த குழு இடைக்கால அறிக்கையை கூட சமர்ப்பிக்கவில்லை.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் என்பது விவசாயிகளை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய பங்களிப்பாக மாற்றும் என்று ராகுல் காந்தி வலியுறுத்துகிறார்.
இந்த அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டுமா? பொது கொள்முதல் இல்லாமல் குறைந்தபட்ச ஆதரவு விலை தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா?
சிராஜ் ஹுசைன்: வேளாண் உற்பத்தி சந்தை குழுக்கள் (Agricultural Produce Market Committees (APMC)) பிரதிநிதித்துவப்படுத்தும் சேமிப்பு கிடங்கு அமைப்பு (mandi system) ஒரு சில மாநிலங்களில் மட்டுமே சிறப்பாக செயல்படுகிறது. மற்ற மாநிலங்களில், இது பயனுள்ளதாக இல்லை. இந்தியாவின் பயிர் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே சேமிப்பு கிடங்கு மூலம் விநியோகப்படுகிறது. மீதமுள்ளவை சிறு விவசாயிகளால் உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்கப்படுகின்றன. எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு சட்டமாக மாறினாலும், அதை அமல்படுத்துவது கடினம், ஏனென்றால் யார் வாங்குகிறார்கள், விற்கிறார்கள், என்ன விலையில் வாங்குகிறார்கள் என்பதற்கான பதிவு எதுவும் இல்லை. கோதுமை மற்றும் அரிசி போன்ற பிரதான உணவுகள் உட்பட 23 பயிர்களையும் கொள்முதல் செய்வதில் அரசாங்கம் சிரமங்களை எதிர்கொள்கிறது.
லக்விந்தர் சிங்: குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவது தேசிய நலனில் உள்ளது. பல விவசாயிகள் தற்போது முறைசாரா சந்தை பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவது, அதன் பரந்த நோக்கங்களுக்கு ஏற்ப பரிவர்த்தனைகளை டிஜிட்டல்மயமாக்குதல் மற்றும் முறைப்படுத்துதல் ஆகியவற்றின் அரசாங்கத்தின் நோக்கங்களுடன் ஒத்துப்போகிறது. 1991 சீர்திருத்தங்களுக்குப் பிறகு, விவசாயத் துறையில் முதலீடு கணிசமாகக் குறைந்துள்ளது. இது விவசாயிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவதன் மூலம் இதைத் தணிக்க உதவும். அனைத்து 23 பயிர்களையும் அரசாங்கம் வாங்க வேண்டியதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், அது 5-10% விளைபொருட்களை வாங்கினாலும், அது விலையை நிலைப்படுத்த உதவும் ஒரு சிறிய தலையீட்டாக அமையும்.
அரசாங்கம் கூறுவது போல, குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை நாடு முழுவதற்கும், குறிப்பாக வாழ்வாதார விவசாயிகளுக்கு விரிவுபடுத்த முடியுமா?
சிராஜ் ஹுசைன்: ஆம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகியவை கொள்முதல் முறையை விரிவுபடுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளன. பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சமீப காலமாக அரிசிக்கான கொள்முதல் அதிகரித்துள்ளது இதுபோன்ற கணிசமான தொகையை அரசாங்கம் தொடர்ந்து வாங்க வேண்டுமா? என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. தற்போதைய கொள்கையானது 50-60 மில்லியன் டன் அரிசியை கொள்முதல் செய்வதை உள்ளடக்கியது. மேலும், பொது விநியோக முறையை இலவசமாக்குவதற்கான சமீபத்திய முடிவு அரசாங்கத்தால் கோதுமை மற்றும் அரிசியை தொடர்ந்து பெரிய அளவில் கொள்முதல் செய்வதைக் குறிக்கிறது. இந்த கொள்கை ஆட்சிக்கு பலனளிக்குமா?
எழுப்பப்பட்ட மற்றொரு கவலை என்னவென்றால், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவது, உயர்ந்த விலைகளுக்கு வழிவகுக்கும். இது நுகர்வோரை எதிர்மறையாக பாதிக்கும்.
சிராஜ் ஹுசைன்: எந்தவொரு அரசாங்கமும் எல்லா பயிர்களையும் வாங்கவோ அல்லது எல்லாவற்றிற்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கவோ முடியும் என்று நான் நினைக்கவில்லை. விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை எப்படி உறுதி செய்வது என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது. இதை ஒவ்வொரு மாநிலமும் முடிவு செய்ய வேண்டும் என்று நாம் நம்புகிறோம். நம் கருத்து என்னவென்றால், அது மாநிலத்திற்கு ஒரு கொள்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு ஆட்சி உள்ளது. உதாரணமாக, பஞ்சாபில், சேமிப்பு கிடங்கு அமைப்பு நன்கு வளர்ந்திருப்பதாலும், இரண்டு சேமிப்பு கிடங்களுக்கு இடையேயான தூரம் 6 கிமீ மட்டுமே என்பதாலும், அனைத்திந்திய அளவில் 12 கிமீ மட்டுமே இருப்பதாலும், விலைக் கட்டணக் குறைபாடு முறையை, மாநிலங்களும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்யும் கொள்கையை வல்லுநர்கள் உருவாக்க வேண்டும்.
விவசாயிகளின் போராட்டம் எங்கே செல்கிறது?
பேரியல் (macroeconomists) பொருளாதார வல்லுநர்களிடம் கேட்க வேண்டிய மற்றொரு கேள்வி உணவு விலைகள் அதிகரிப்பது பற்றியது ஆகும். அதில், நுகர்வோரையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் உள்நாட்டில் குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அமைப்பதற்கு இடையே அவர்கள் சமநிலைக்கு முயற்ச்சிக்க வேண்டும்.
லக்விந்தர் சிங்: குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) சட்டபூர்வமாக்க அரசாங்கம் விரும்பாதபோது, அதே சமயத்தில் ஆய்வாளர்கள் இந்த பிரச்சினைகளைப் பற்றி பேசாதபோது, நுகர்வோர்கள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். இது விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே ஒரு பிளவை உருவாக்குகிறது. அரசாங்கம் ஒரு இடைத்தரகராக இருந்து, நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
விவசாயிகள் போராட்டம் 2024
மிக முக்கியமான பிரச்சினை உணவு பணவீக்கம் ஆகும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை குறைந்த விலைக்கு விற்பதுடன், அது அவர்களின் உற்பத்தி செலவை ஈடுகட்ட போதுமனதாக இல்லை. இதற்கிடையில், நுகர்வோர் கணிசமான விலை உயர்வை அனுபவித்து வருகின்றனர். பணவீக்கத்தைக் குறைப்பதற்கும், நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும், விவசாயிகளுக்கு நியாயமான வருமானத்தை வழங்குவதற்கும் ஒரு நடவடிக்கையாக குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) சட்டப்பூர்வமாக்குவது முன்மொழியப்பட்டது.
மேலும், சந்தைகளை ஒழுங்குபடுத்துவது முக்கியம். ஒழுங்குமுறை செயல்முறையிலிருந்து அரசாங்கம் விலகியுள்ளது. எனவே ஒழுங்கமைக்கப்படாத சந்தைகளில், இடைத்தரகர்கள் செயலில் உள்ளனர் மற்றும் பொருளாதாரத்தின் மீது பணவீக்க அழுத்தங்களை உருவாக்குகின்றனர்.
A2+FL மற்றும் C2+50% போன்ற உள்ளீட்டு செலவு கணக்கீட்டு முறைகள் குறித்தும் விவசாயிகள் கவலைப்படுகிறார்கள். உள்ளீட்டு செலவுகளைக் கணக்கிடுவதற்கான சிறந்த வழிமுறை எதுவாக இருக்கும்?
லக்விந்தர் சிங்: C2 + 50% செலவு என்ற கருத்து தொழில்துறையில் இருந்து வருகிறது. விவசாயத்திற்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். விவசாயப் பயிர்களுக்கான செலவுகளின் C2 மதிப்பீடு பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் உள்ள விலைகளுடன் கிட்டத்தட்ட ஒப்பிடத்தக்கதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
சிராஜ் ஹுசைன்: சாகுபடிச் செலவைக் கணக்கிடும் முறைகளில் சாத்தியமான மாற்றங்கள் குறித்து டாக்டர் ரமேஷ் சந்தின் அறிக்கை உட்பட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த மாற்றங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பிரச்சினை என்னவென்றால், பிரச்சனை என்னவென்றால், நீங்கள் எந்த விலையை நிர்ணயித்தாலும், A2+FL விலையை உங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. சில சமயங்களில், சாகுபடிச் செலவைக் காட்டிலும் சில சமயங்களில் விலை குறைவாக இருக்கும்.
ஆர்.எஸ்.எஸ் விவசாயிகள் அமைப்பு (RSS farmers body), பேச்சு வார்த்தைக்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதை பலவீனத்தின் அடையாளமாக அரசாங்கம் உணரக்கூடாது என்று வலியுறுத்துகிறது.
விவசாயிகளுக்கு உதவ கூட்டுறவு அமைப்புகள் ஒரு மாற்று வழியா?
சிராஜ் ஹுசைன்: குஜராத்தின் வெண்மைப் புரட்சியில் (White Revolution) பால் துறை போன்ற சில துறைகளில் கூட்டுறவு அமைப்புகள் வெற்றி பெற்றுள்ளன. கூட்டுறவு சங்கங்களின் தோல்வியால் தான், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (farmer-producer organisations (FPO)) என்ற யோசனையை அரசாங்கம் கொண்டு வந்தது. இப்போது, விவசாயிகள் கூட்டுறவுகளுக்கு திரும்புகிறோம். விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க உதவும் எந்த வகையான குழு முயற்சியும் நல்லது. ஆனால் கூட்டுறவுகள் (cooperatives) மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (farmer-producer organisations (FPOs)) இரண்டும் கிராமப்புறங்களில் உள்ள செல்வாக்கு மிக்க கந்து வட்டிக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நியாயமான விலையில் சேமித்து வைக்கவும், பருவம் இல்லாத காலத்தில் அதிக விலைக்கு விற்கவும் கூட்டுறவு சங்கங்கள் சேமிப்பு வசதிகளை உருவாக்க முடிந்தால், அவை வரவேற்கத்தக்கது.
லக்விந்தர் சிங்: நாம், மாற்று வழிகளை ஆராய்வதற்கு பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது, ஏனெனில் ஒற்றை தலையீட்டை நம்புவது போதாது. கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கு சட்டப்பூர்வ ஆதரவு மற்றும் மேம்படுத்தப்பட்ட சேமிப்பு திறன் தேவை. அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் கூட்டுறவு சங்கங்களின் தோல்விகள் பெரும்பாலும் ஊழலுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் வாக்குறுதிகளை வைத்திருக்கும் அதே வேளையில், ஒரு சாதகமான சட்ட கட்டமைப்பு மற்றும் ஆதரவான உள்கட்டமைப்பு ஆகியவை அவற்றின் வெற்றிக்கு இன்றியமையாதவை.
லக்விந்தர் சிங், புது தில்லியில் உள்ள மனித மேம்பாட்டு நிறுவனத்தின் வருகைப் பேராசிரியர் மற்றும் பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆவார்.
சிராஜ் ஹுசைன் முன்னாள் மத்திய வேளாண் செயலாளர் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் ஆலோசகர் ஆவார்.
Original article: