மழையால் வாக்கெடுப்பு பாதிப்பிற்குள்ளாவது பற்றி . . . -அசோக் லவாசா

 சூரத் மற்றும் அருணாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் வாக்களிக்காத போது தேர்தல் உண்மையிலேயே நியாயமானதா (free and fair) என்ற கேள்வியை எழுப்புகிறது.  


தற்போதைய தேர்தல் சட்டங்கள், தேர்தலில் வேட்பாளர்கள்  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதை அனுமதிக்கிறது. வாக்குச்சீட்டு   முறையில் பங்கேற்காமல்  மக்களின் பிரதிநிதியாக  போட்டியின்றி  தேர்வு செய்யப்படுகிறார்கள். தேவையான முயற்சி இல்லாமல் எதையோ சாதித்ததைப் போன்ற எண்ணம் வேட்பாளர் மனதில்  தோன்றுகிறது. 


அருணாச்சல பிரதேசத்தில் நடந்த 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் வேட்பாளர்கள் இதேமுறையில் போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்டனர். 


தேர்தல் நடத்தை விதிகள் 1961 (Conduct of Election Rules 1961) இன் விதி 11 , (1) தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலின் நகலைக் காட்ட வேண்டும். அவர் இந்தப் பட்டியலைத் தனது அலுவலகத்தில் கவனிக்கத்தக்க இடத்தில் வைப்பார். வேட்பாளர்களின் எண்ணிக்கை ஒரே மாதிரியாகவோ அல்லது அதற்குக் குறைவாகவோ இருந்தால், அவர் தேர்தல் முடிவுகளை அறிவிப்பார். பட்டியலை இடுகையிட்ட பிறகு, அவர் 53 இன் துணைப் பிரிவு (2) அல்லது துணைப் பிரிவு (3) இன் படி முடிவுகளை அறிவிப்பார். Forms 21 to 21B, பிரிவு இதற்கு பொருத்தமானது என்று கூறுகிறது. 


ஜனநாயக உரிமைகள் (Democratic rights), செயல்முறை


இந்த சூழ்நிலையில், ஒரு தரப்பு வெற்றி பெறுகிறது. ஆனால் தெளிவான தோல்வியாளர் இல்லை. சிலர் விதிகளின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள். மற்றவர்கள் திரும்பப் பெறத் தேர்வு செய்கிறார்கள். சூரத் மக்களவைத் தொகுதியின் சமீபத்திய விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்: இரண்டு வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். எட்டு பேர் தானாக முன்வந்து தங்களின் வேட்புமனுவை திரும்பப் பெற்றனர். 


அருணாச்சல பிரதேசத்தில் மேலும் 10 சட்டசபை தொகுதிகள் இதே முறையில் கைப்பற்றப்பட்டன. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 53 (Section 53 of Representation of the People Act, 1951) தேர்தல் செயல்முறையை விளக்குகிறது:


1. நிரப்பப்படும் இடங்களை விட அதிக வேட்பாளர்கள் இருந்தால், வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.


2. வேட்பாளர்களின் எண்ணிக்கை, இடங்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருந்தால், தேர்தல் நடத்தும் அலுவலர் உடனடியாக அனைத்து வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பார்.


இந்த செயல்முறை வாக்காளர்களை ’மேலுள்ள எதுவும் இல்லை’ (None of the Above (NOTA)) என்ற விருப்பத்தினைத் தேர்வு செய்ய அனுமதிக்கிறதா என்று சிலர் கேட்கிறார்கள். முதலில், நோட்டா சட்டத்தில் இல்லை. மக்களின் கருத்துக்களை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தெரிவிக்க நீதிமன்றங்கள் இதைச் சேர்த்தன.


NOTA தேர்தலைப் பாதிக்காது என்பது சிலரின் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தலாம். இது அரசியல் கட்சிகளை பாதிக்கவே இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. NOTA ஒரு நேர்மறையான மாற்றமாக இருக்க வேண்டும். ஆனால் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதது, ஒரு தேவதை எந்த விளைவும் இல்லாமல் பறக்க முயற்சிப்பது போன்றது.


ஆனால் யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை அல்லது எல்லோரும் வாக்களிக்க மறுத்து, அந்த இடத்தை நிரப்பாமல் விட்டால் என்ன செய்வது?


அரசாங்க கொள்முதலில் பதிலளிக்கப்படாத ஏலங்கள் அல்லது ஏலம் பெறப்படவில்லை என்று கூறும்போது, இந்தியத் தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு நபரைத் தேர்ந்தெடுக்க தொகுதிக்கு அழைப்பு விடுக்க வேண்டுமா?  


நிதி விதிகள் இணையாக உள்ளன


பொது நிதியைக் கையாளும் போது அனைவரும் பின்பற்ற வேண்டிய விதிகளான இந்திய அரசின் பொது நிதி விதிகள் (General Financial Rules (GFRs)) நான் ஒன்றிய நிதி மற்றும் செலவினச் செயலாளராக இருந்தபோது புதுப்பிக்கப்பட்டது. பொது கொள்முதலில் நியாயமான மற்றும் வெளிப்படையான நடைமுறைகளின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.


விதி 166 'ஒற்றை டெண்டர் விசாரணையை' ('Single Tender Enquiry') அனுமதிக்கிறது. விநியோகஸ்தர் அசல் உற்பத்தியாளராக இருந்தாலோ, அவசரநிலை ஏற்பட்டாலோ அல்லது தரநிலைப்படுத்துதலுக்கான தொழில்நுட்பத் தேவை இருந்தாலோ இது நிகழலாம்.


மற்றொரு விதி, விதி 173(xx), போட்டியின் பற்றாக்குறையை ஏலதாரர்களின் எண்ணிக்கையால் மட்டுமே மதிப்பிடக்கூடாது என்று குறிப்பிடுகிறது. ஒரே ஒரு ஏலம் மட்டுமே பெறப்பட்டாலும், கொள்முதல் சரியாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தால், ஏலதாரர்களுக்கு போதுமான நேரம் இருந்தால், தகுதி அளவுகோல்கள் மிகவும் கண்டிப்பானதாக இல்லை மற்றும் சந்தை மதிப்புகளுடன் ஒப்பிடும்போது விலைகள் நியாயமானதாக இருந்தால், செயல்முறை செல்லுபடியாகும்.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ( Representation of the People Act (RPA)) சில விதிகளைப் பின்பற்றுகிறது. இந்த விதிகள் இணைக்கப்படவில்லை. இரண்டும் ஒரே மாதிரியாகத் தோன்றலாம். ஏனெனில், இரண்டுமே விருப்பத்தேர்வுகளில் இருந்து தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களை உள்ளடக்கியது. ஒருவர் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்றால், வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (Representation of the People Act (RPA)) படி, ஒரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு நபர் "தேர்ந்தெடுப்பவர்" என வரையறுக்கப்படுகிறார். எவ்வாறாயினும், இந்த வாக்காளர் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையிலிருந்து முற்றிலும் விலக்கி வைக்கப்படுகிறார். ஒரு வாக்கு கூட பெறாத ஒருவர் பாராளுமன்ற நடைமுறைகளில் பங்கேற்க முடியும். அவர் தனது தொகுதியின் கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்கலாம். 


இந்த நிலை தற்போதைய தேர்தல் நடைமுறையில் உள்ள முரண்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. செயல்முறை நடைமுறைக்குரியது ஆனால் முற்றிலும் நியாயமானதாகத் தெரியவில்லை. உண்மையான விருப்பங்கள் இல்லாதபோதும் வாக்காளர்கள் தேர்வு செய்ததாகக் கருதப்படுகிறது. இது ஒரு கேள்வியை எழுப்புகிறது: தேர்தல் செயல்முறையை ஒரு சில வேட்பாளர்களால் கட்டுப்படுத்த முடியுமா அல்லது கையாள முடியுமா? இந்த வேட்பாளர்கள் மில்லியன் கணக்கான வாக்காளர்களின் உரிமைகளை மீறலாம்.


ஒரு மோசமான சூழ்நிலையில், 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் (அவர்களில் 10,000 பேர் வெவ்வேறு கட்சிகள் அல்லது சுயேச்சைகள் இருந்தாலும்) அமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது ஒரு பில்லியன் வாக்காளர்கள் தங்கள் சட்டப்பூர்வ உரிமையைப் பயன்படுத்துவதைத் தடுக்கும்.  ஜனநாயகத்தின் நடைமுறையை இது கடுமையாக பாதிக்கும்.

 

இந்த  பிரச்சனையைச் சரிசெய்ய என்ன செய்ய முடியும்?


தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் இல்லை என்றால், வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த முடியாது. ஜனநாயக நடைமுறை செயல்பட வேண்டுமானால், மக்கள் தேர்தலில் போட்டியிடுவதிலும், வாக்களிப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். யாராவது ஓட்டு கேட்டால் மட்டுமே வாக்களிக்க கூடாது.

 

முன்னணியில் வேட்பாளர் 


இந்த அமைப்பு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஏனென்றால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி, முழுமையான புறக்கணிப்பு இருந்தால், அது ஒவ்வொரு வேட்பாளரும் பூஜ்ஜிய வாக்குகளைப் (zero vote) பெற்றது போல் கருதப்படுகிறது. இந்த நிலைமை சட்டத்தின் பிரிவு 65 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. "வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றால், ஒரு வாக்கைச் சேர்ப்பது அவர்களில் ஒருவரை வெற்றி பெறச் செய்யும் என்றால், தேர்தல் அதிகாரி உடனடியாக சீட்டுக் குலுக்கல் முறை (Method of Lottery)  மூலம் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது அந்த அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிப்பார். ஜனநாயகம் என்பது "மக்களால், மக்களால் மற்றும் மக்களுக்கான அரசாங்கம்" (“government of the people, by the people and for the people”) என்று வரையறுக்கப்படுவதால் இந்த தேர்தல் முறை அதற்கு எதிராக உள்ளது.  


முதல் முறை வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால், புதிய அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் குறிப்பிடுகிறது. இருப்பினும், எந்தவொரு வேட்பாளரும் இரண்டாவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்பதை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் குறிப்பிடவில்லை. கூடுதலாக, தேர்தல் செயல்பாட்டில் NOTA விருப்பத்தை முக்கியமற்றதாக ஆக்குவதன் மூலம் வாக்களிப்பதைத் தவிர்ப்பவர்களை இந்த சட்டம் விலக்குகிறது. NOTA மூலம் மக்கள் கூட்டாக தேர்தலை ரத்து செய்ய முடியாது. 


இந்த நிலைமை ஒரு கேள்வியை எழுப்புகிறது: ஒரு வேட்பாளர் வெற்றி பெற குறைந்தபட்ச சதவீத வாக்குகளைக் கோரும் வகையில் ஃபர்ஸ்ட்-பாஸ்ட்-தி-போஸ்ட் (first-past-the-post) (பெரும்பான்மையை பொருட்படுத்தாமல், அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுவது) முறையை மாற்றுவது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டுமா? அத்துடன், இரண்டாவது வேட்புமனுவில் எந்தவொரு வேட்பாளரும் முன்வரவில்லை என்றால், அந்த இடத்தை ஜனாதிபதி நியமனம் மூலம் நிரப்ப வேண்டுமா? இந்த வழக்கில், இந்திய ஜனாதிபதி அரசாங்கத்தை கலந்தாலோசிக்காமல் குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் ஒருவரை நியமிக்க முடியும்.


இவ்விடயங்கள் தொடர்பில் நாம் பரந்துபட்ட கலந்துரையாடலை நடத்த வேண்டும். தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்காத சூழ்நிலைகளைத் தடுக்க இது உதவும். உதாரணமாக, மழை மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கும் சூழ்நிலைகளை நாம் தவிர்க்க வேண்டும். கட்சிகள் நியாயமற்ற முறையில் செயல்படும் சூழ்நிலைகளை நாம் தடுக்க வேண்டும். மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வாய்ப்பளிக்க வேண்டும். 


அசோக் லவாசா முன்னாள் தேர்தல் ஆணையர் (Election Commissioner) மற்றும் இந்தியாவின் முன்னாள் நிதிச் செயலாளர் (former Finance Secretary) ஆவார்.




Original article:

Share:

காலநிலை மாற்றம் குறித்த செய்தி அறிக்கையில் உள்ள சவால்கள் -வாசுதேவன் முகுந்த்

 காலநிலை மாற்றம் என்பது பல நகரும் பகுதிகளைக் கொண்ட சிக்கலான நிகழ்வுகளின் தொகுப்பாகும்.


இந்தியத் தேர்தல்களில் காலநிலை மாற்றம் முக்கியமா என்று நிறைய பேர் ஆச்சரியப்படுகிறார்கள். மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலநிலை மாற்றம் குறித்து வாக்காளர்கள் அக்கறை காட்டுகிறார்களா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள்.


பத்திரிகையாளர்கள் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை மக்கள் உடனடியாக மாற்றியமைக்கத் தொடங்குவது முக்கியம். இந்தத் தழுவல்களுக்கு கொள்கை மற்றும் நடத்தை இரண்டிலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இந்த மாற்றங்களுக்கு அரசு ஆதரவு அளிக்க  வேண்டும்.


ஒரு பத்திரிக்கையாளராக, எனது பணி பெரும்பாலும் மக்களை அவர்களின் மனதை மாற்றும்படி சமாதானப்படுத்துகிறது. இந்த பணி சவாலானது மற்றும் பெரும்பாலும் தோல்வியுறுகிறது. சில நேரங்களில், காலநிலை செய்தி அறிக்கையில் சில அம்சங்கள் எவ்வளவு எளிதாக இருக்கும் என்று கற்பனை செய்யலாம். காலநிலை பிரச்சினைகளின் அடிப்படையில் மக்கள் திடீரென்று வாக்களிக்க முடிவு செய்வதைப் பற்றி நான் கனவு காண்கிறேன். 


காலநிலை மாற்றம் சிக்கலானது மற்றும் பல கூறுகளை உள்ளடக்கியது. இது காலப்போக்கில் மற்றும் வெவ்வேறு இடங்களில் நிகழ்கிறது. செய்தி ஊடகவியலாளர்கள் இந்த மாற்றங்களைப் பின்பற்ற முயற்சிக்கின்றனர். அவர்கள் ஒரு நேரத்தில் ஒரு நிகழ்வையும் ஒரு நாளையும் அறிக்கை செய்கிறார்கள். 


பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி சேகரித்தல் மற்றும் வெளியிடுதல் போன்ற வழக்கமான பணிகள் உள்ளன. இந்த பணிகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் சிக்கலான தன்மை காரணமாக, ஒவ்வொரு நிகழ்வையும் எல்லா நேரத்திலும் உள்ளடக்குவது அவர்களுக்கு கடினமாக உள்ளது. காலநிலை மாற்றம் பல விஷயங்களை பாதிக்கிறது. இது நீர், காற்று, நிலம் மற்றும் ஊட்டச்சத்துக்கான மக்களின் அணுகலை மாற்றுகிறது. இது பாலினம், சாதி, வர்க்கம் மற்றும் இருப்பிடம் போன்ற பிரச்சனைகளுடனும் கலந்துவிடுகிறது. இந்த கலவையானது அதன் விளைவுகளை அடையாளம் காண்பதை கடினமாக்குகிறது.


பெரும்பாலும், இந்த விளைவுகளில் பலவற்றை நாம் இழக்கிறோம். பின்னர், அதைப் பெற முயற்சிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மத்தியில், காலநிலை மாற்றம் ஒரு செயலில் உள்ள சக்தி என்பதை மறந்துவிடுவது எளிது.


கடந்த பத்தாண்டுகளில் சுந்தரவன டெல்டா பகுதியில் குழந்தைக் கடத்தல் அதிகரித்துள்ளது. இது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை சுட்டிக்காட்டுகிறது. ஒரு பத்திரிகையாளரின் விசாரணையில் காலநிலை மாற்றம் மற்றும் பலவீனமான அரசு ஆகியவை முக்கிய காரணங்களாக கண்டறியப்பட்டது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஆம்பன் மற்றும் யாஸ் புயல்கள் 2009 இல் ஆலியா சூறாவளியால் இந்த பகுதிகளின் நிலைமைகளை மோசமாக்கின. உள்ளூர் வருமானத்தை ஆதரிப்பதற்குப் பதிலாக, அரசு பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தது. இது தன்னிறைவு பெற்ற சமூகங்கள், ஒவ்வொரு புயலுக்குப் பிறகும் தங்களை குறைவாக நம்புவதற்கு வழிவகுத்தது மற்றும் கடினமான மாற்றங்களை எதிர்கொண்டது.


பருவநிலை மாற்றம் வாக்காளர்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் கவலையாக உள்ளதா என்பதை நாங்கள் மதிப்பிடுகிறோம். இந்த மதிப்பீடு வாக்காளர்கள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் மற்றும் எங்கள் செயல்திறனை மதிப்பீடு செய்வதை பாதிக்கிறது. இருப்பினும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நிஜ வாழ்க்கை அனுபவங்களை நாம் அடிக்கடி இழக்கிறோம். இதன் விளைவாக, வாக்களிப்பதில் அதன் தாக்கத்தை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். 


சுந்தரவனக் காடுகளில் வசிக்கும் ஒருவர், குறைந்த ஊதியம், ஆனால் நிலையான வேலைகளை வழங்கும் வேட்பாளரை விரும்பலாம். ஆற்றின் குறுக்கே கரை கட்டுவதற்கு நிதி உள்ள ஒரு வேட்பாளரை அவர் தேர்ந்தெடுக்காமல் இருக்கலாம். இதேப்போல், ஒரு கிராமத்துப் பெண், வீட்டிற்க்கு கழிப்பறை அமைத்து கொடுக்கும் வேட்பாளரை ஆதரிக்கலாம். அதிக வெப்பம் காரணமாக அவள் அதிக தண்ணீர் குடிக்க விரும்புவதால் இந்த விருப்பம் இருக்கலாம். வெளிப்புற கழிப்பறைகளைப் பயன்படுத்துவதையும் உள்ளூர் ஆண்களிடமிருந்து ஏற்படும் துன்புறுத்தலில் இருந்து தம்மை பாதுகாப்பதற்க்காகவும்  கூட இந்த விருப்பம் இருக்கலாம்.


காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொள்ளாமல் இந்தத் தேர்வுகளைப் புரிந்துகொள்வது முழுமையடையாது. குறுகிய காலத்தில் அல்லது சிறிய பகுதியில் ஏற்படும் அசாதாரண வானிலையுடன் காலநிலை மாற்றத்தை நேரடியாக இணைப்பது கடினம். இருப்பினும், காலநிலை மாற்றம் புதிய பகுதிகளில் மற்றும் நீண்ட காலத்திற்கு இத்தகைய அசாதாரண வானிலையை ஏற்படுத்துகிறது. எதிர்பாராத விதத்தில் அது நம்மையும் பாதிக்கிறது. முடிவுகளை எடுக்கும்போது இந்த பரந்த தாக்கங்களை நினைவில் வைப்பதே சிறந்த அணுகுமுறை.




Original article:

Share:

புதிய மின்சார வாகனக் கொள்கை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு நியாயமானதாக இருக்க வேண்டும் -தலையங்கம்

 இறக்குமதிக்கான வரியை அரசு குறைத்து வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய ஊக்குவிக்க வேண்டும். அதே நேரத்தில், உள்நாட்டில்  ஒர் அசல் உபகரண உற்பத்தியாளர் (Original equipment manufacturer(OEM)) நிறுவனங்களுக்கும், முதலில் சந்தையில் நுழைந்த நிறுவனங்களுக்கும் நியாயமான வாய்ப்பு இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். 


அடுத்த வாரம், டெஸ்லாவின் நிறுவனரான எலான் மஸ்க் இந்தியாவுக்கு வருகை தருகிறார். இது மின்சார வாகனங்களை ஊக்குவிக்க இந்தியா தனது உத்தியை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இப்போது வரை, ஹைபிரிட் மற்றும் மின்சார வாகனங்களை விரைவாக தத்தெடுப்பு மற்றும் உற்பத்தி செய்தல் (Fast Adoption and Manufacturing of Hybrid & Electric Vehicles(FAME)) என்ற திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால், அது பின்னர் படிப்படியாக அகற்றப்படுகிறது. FAME திட்டம், முக்கியமாக மின்சார வாகனங்களை, குறிப்பாக இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை வாங்க மக்களை ஊக்குவிக்க மானியங்களை வழங்கியது.


இப்போது,  வழங்கல் பக்க முன்முயற்சிகளின் (supply-side initiatives) கலவை - ஒரு உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகையைப் (production linked incentive (PLI))   பயன்படுத்தி 2030 ஆம் ஆண்டிற்கான தனது மின்சார வாகனங்களின் இலக்குகளை அடைவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆட்டோ, ஆட்டோ பாகங்கள் மற்றும் பேட்டரிகளுக்கான உற்பத்திக்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (production linked incentive (PLI)) மற்றும் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட மின்சார வாகனங்களுக்கான இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் (Make in India plan) ஆகியவை இதில் அடங்கும். மின்சார வாகனத்துக்கான தேவையை அதிகரிப்பதில் இருந்து அதன் விநியோகத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவது சரியான நேரத்தில் தெரிகிறது. குறிப்பாக, அதிக எரிபொருள் விலைகளுடன், இது மின்சார வாகனங்களை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது. இருப்பினும், இந்த மாற்றத்தை சுமூகமாக நிர்வகிப்பதில் சவால் உள்ளது. மே 2022 இல் NITI ஆயோக்கின் அறிக்கை, 2030 ஆம் நிதியாண்டுக்குள் வருடாந்திர விற்பனையில் மின்சார வாகனங்களின் (EV) ஊடுருவல் சுமார் 30-35% ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. தற்போது, நிதியாண்டு-24 இல், மின்சார வாகனங்கள் (EV) விற்பனையில் 7% மட்டுமே உள்ளன. இதில், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் சந்தையில் 94% ஆதிக்கம் செலுத்துகின்றன. கார்கள் மற்றும் பேருந்துகள் இன்னும் மின்சார வாகனங்களுக்கு மாறவில்லை. மின்சார பேருந்துகளை (e-buses) ஊக்குவிப்பதற்காக, பிரதான் மந்திரி மின்சார பேருந்து சேவை (PM e-Bus Seva) திட்டத்தின் கீழ் வரிசைப்படுத்தலை விரைவுபடுத்தவும், மாநில போக்குவரத்து பிரிவுகள் பணம் செலுத்தத் தவறினால் உற்பத்தியாளர்களின் கட்டண பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அடுத்த நிலையின் முக்கியபடி பயணிகள் கார்களை மின்சாரத்திற்கு மாற்றுவதில் கவனம் செலுத்துவதாகும்.


மார்ச் 2024 திட்டம் (2024 scheme) உலகளவில் மின்சார-கார்களில் இந்தியாவை முதலிடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வெளிநாட்டு முதலீட்டை வரவேற்று ஏற்றுமதியை அதிகரிக்கிறது. இதில் பகிர்ந்து கொள்வதற்கு நிறுவனங்கள் குறைந்தது 500 மில்லியன் டாலர் முதலீடு செய்து மூன்று ஆண்டுகளுக்குள் தொழிற்சாலைகளைத் தொடங்க அனுமதி அளிக்கிறது. இவை மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து 25-50% மதிப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முடிக்கப்பட்ட மின்சார கார்களை (finished e-car அல்லது  CBU என்றும் அழைக்கப்படும்) இறக்குமதி செய்வதற்கான ஒப்புதல் விண்ணப்பதாரருக்கு சில நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்போது கார்களை கொண்டு வந்து, வழக்கமான 70-100%க்கு பதிலாக 15% குறைந்த சுங்க வரி செலுத்தலாம். இது அவர்களுக்கு ஒரு வெகுமதி போன்றது. இது, இந்தியாவில் விரிவாக்கம் செய்ய விரும்பும் டெஸ்லா (Tesla) போன்ற பெரிய நிறுவனங்களுக்கு பயனளிக்கிறது. சுங்க வரியைக் குறைத்து வெளிநாட்டு நிறுவனங்கள் பொருட்களை இறக்குமதி செய்வதை எளிதாக்கவும், உள்நாட்டில் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில், உள்ளூர் நிறுவனங்களுக்கு, குறிப்பாக முதலில் இருந்த நிறுவனங்களுக்கு போட்டியிட நியாயமான வாய்ப்பு இருப்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.


சில இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே டெஸ்லாவுக்கு உதிரிபாகங்களை விநியோகம் செய்கின்றன. இதில் சில கூறுகள் சுற்றுச்சூழலுக்கு சமமான பலன்களை உறுதிசெய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளூர்மயமாக்கல் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இறக்குமதிகளுக்கு குறைந்தபட்ச செலவு, காப்பீடு மற்றும் சரக்கு (Cost, insurance, and freight (CIF)) மதிப்பான $35,000ஐ நடைமுறைப்படுத்துவது உள்நாட்டு நலன்களைப் பாதுகாக்கும். மேலும், இந்த விதிமுறைகள் பலவீனமடைவதைத் தவிர்ப்பது முக்கியம். நகரத்தை மையமாகக் கொண்ட மின்சார-ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார-ரிக்க்ஷாக்கள் போலல்லாமல், மின்சார கார்கள் மற்றும் நீண்ட தூர மின்சார-பேருந்துகளை விரிவுபடுத்துவதற்கு நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் நிலையங்கள் (Charging networks) தேவை. இந்த நிலையங்கள் கார்பன் உமிழ்வு இலக்குகளை அடைய சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். சரியான பாதுகாப்புகளுடன் அதிக உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்க இது ஒரு நல்ல நேரமாகத் தெரிகிறது.




Original article:

Share:

பிலிப்பைன்ஸுக்கு வழங்கப்பட்ட இந்திய பிரமோஸ் ஏவுகணையின் முக்கியத்துவம் -Explained Desk

 பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் (BrahMos Aerospace Private Limited (BAPL)) ஜனவரி 28, 2022 அன்று பிலிப்பைன்ஸுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அவர்கள் கரை அடிப்படையிலான கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை (Anti-Ship Missile System) வழங்க ஒப்புக்கொண்டனர். பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட்  என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கூட்டு நிறுவனமாகும். பிரம்மோஸ் மேம்பாடு செயல்முறை கீழே விவாதிக்கப்படுகிறது.  


2022 இல் கையெழுத்திடப்பட்ட 375 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 19 அன்று இந்தியா பிரமோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணைகளை (BrahMos supersonic cruise missiles) பிலிப்பைன்ஸுக்கு அனுப்பியது. மத்தியப் பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”இந்தியா ஆயுத ஏற்றுமதியாளராக அறியப்படுகிறது. இந்த ஆண்டு ரூ.21,000 கோடி மதிப்பிலான ஆயுதங்களை மற்ற நாடுகளுக்கு இந்தியா விற்றுள்ளது. இப்போது, நான் தாமோவில் (Damoh) பேசிக் கொண்டிருக்கையில், பிரமோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணைகள் (BrahMos supersonic cruise missiles) பிலிப்பைன்ஸுக்கு அனுப்பப்படுகின்றன." என்று குறிப்பிட்டார். 


இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் (BAPL),  கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை (Anti-Ship Missile System) வழங்குவதற்காக ஜனவரி 28, 2022 அன்று பிலிப்பைன்ஸுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.


பிரம்மோஸ் ஏவுகணைகளின் வளர்ச்சிக்கு எது வழிவகுத்தது, இந்தியாவுக்கு இது என்ன முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது? நாங்கள் விளக்குகிறோம்.


பிரம்மோஸ் எப்படி  உருவானது ? 


1980 களில், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தை வழிநடத்தினார். இந்த திட்டம் பிருத்வி (Prithvi), அக்னி (Agni), திரிசூல் (Trishul), ஆகாஷ் (Akash) மற்றும் நாக் (Nag) போன்ற ஏவுகணைகளை உருவாக்கியது. 


முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் ஜூன் 2007 இல் புது தில்லியில் பிரம்மோஸ் ஏவுகணையின் மாதிரியை ஆய்வு செய்தனர்.   


1990களின் முற்பகுதியில், இந்தியாவின் தலைவர்கள் நீண்ட தூரத்திற்கு சீராகவும் துல்லியமாகவும் பறக்கும் கப்பல் ஏவுகணைகளின் தேவையை உணர்ந்தனர். 1991 வளைகுடாப் போரில் கப்பல் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த தேவை முதன்மையாக உணரப்பட்டது.


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு (DRDO) தலைமை தாங்கிய டாக்டர் கலாம் மற்றும் ரஷ்யாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் என்.வி.மிகைலோவ் ஆகியோர் 1998 இல் மாஸ்கோவில் கப்பல் ஏவுகணைகளில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் ரஷ்ய நிறுவனமான என்.பி.ஓ மஷினோஸ்ட்ரோயேனியா (NPO Mashinostroyenia (NPOM)) கைகோர்த்தபோது பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் (BrahMos Aerospace) உருவாக்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) 50.5% மற்றும் ரஷ்ய நிறுவனம் 49.5% பங்குகளை வைத்துள்ளனர். இது இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மோஸ்க்வா (Moskva) நதிகளின் பெயரால் அழைக்கப்படுகிறது. அரசாங்கங்கள் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸுக்கு நிதியளித்த பின்னர் 1999 ஆம் ஆண்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் என்.பி.ஓ மஷினோஸ்ட்ரோயேனியா (NPO Mashinostroyenia (NPOM)) ஆய்வகங்களில் ஏவுகணைகளின் பணிகள் தொடங்கின. முதல் வெற்றிகரமான சோதனை 2001 இல் தனிப்பயன் நில அடிப்படையிலான செலுத்துதல் வாகனத்தில் நடந்தது.


பிரம்மோஸின் ராஜதந்திரத்தின் முக்கியத்துவம்


பிரம்மோஸ் ஒரு ஏவுகணை. இது இரண்டு நிலைகளைக் கொண்டது. முதல் கட்டத்தில் திட உந்து ஊக்கி இயந்திரம் (solid propellant booster engine) உள்ளது. இது ஏவுகணையை ஒலியின் வேகத்தை விட வேகமாக செல்ல வைக்கிறது. பின்னர், அதன் பாகம் பிரிகிறது. இரண்டாவது கட்டம் ஒரு திரவ ராம்ஜெட் (liquid ramjet) ஆகும். இது ஏவுகணையை இன்னும் வேகமாக, ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு வேகத்தில் செல்ல வைக்கிறது.


ஏவுகணை சிறிய குறியீட்டைக் கொண்டிருப்பதால் ரேடாரில் கண்டறிவது கடினம். இது வெவ்வேறு வழிகளில் பறக்க முடியும். 'fire and forget' ஏவுகணை 15 கிமீ உயரம் வரை பறந்து 10 மீட்டர் உயரம் வரை சென்று இலக்கைத் தாக்கும். 


"ஸ்டாண்ட்ஆஃப் ரேஞ்ச் ஆயுதங்கள்" (standoff range weapons) என்று அழைக்கப்படும் பிரம்மோஸ் போன்ற கப்பல் ஏவுகணைகள், தாக்குபவர் தற்காப்பு எதிர்த் தாக்குதலைத் தவிர்ப்பதற்கு போதுமான தூரத்தில் இருந்து ஏவப்படுகின்றன. இவை உலகின் மிகப் பெரிய இராணுவங்களின் ஆயுதக் கிடங்கில் உள்ளன.


பிரமோஸ் ஏவுகணை மற்ற க்ரூஸ் ஏவுகணைகளை விட வேகமாகவும், அதிக தூரம் செல்லக்கூடியதாகவும் இருக்கும். இது மூன்று மடங்கு வேகமானது மற்றும் 2.5 மடங்கு தூரம் பறக்க முடியும். பாதுகாப்பு இராஜதந்திரத்தில் இது ஒரு பெரிய விஷயமாகும். ஏனெனில், இது மற்ற நாடுகளுக்கு விற்கப்படலாம்.


2022 ஆம் ஆண்டில், SU-30MKI விமானத்திலிருந்து நீண்ட தூர பிரமோஸ் ஏவுகணை சோதிக்கப்பட்டது. அதே ஆண்டு, ஐ.என்.எஸ் விசாகப்பட்டினத்தில் (INS Visakhapatnam) இருந்து பிரமோஸின் புதிய கடல் பதிப்பாக சோதிக்கப்பட்டது.


அந்த நேரத்தில், மார்ச் 9, 2022 இல், பாகிஸ்தான் ஒரு இந்திய ஏவுகணை தங்கள் பிராந்தியத்தில் இறங்கியதாக கூறியபோது ஒரு சர்ச்சை எழுந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்செயலாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஏவுகணையானது  அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என்றாலும், அதன் பறக்கும் பாதையின் அடிப்படையில் இது பிரமோஸாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்பினர்.


பிரம்மோஸின் நிகழ்காலமும் எதிர்காலமும்


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) மூத்த விஞ்ஞானிகள் கூறுகையில், பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பு மிகவும் துல்லியமானது மற்றும் பல்துறை திறன் கொண்டது. எல்லைகளில் நிலம் சார்ந்த அமைப்புகள், வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் உள்ள தளங்களில் பிரமோஸ் பொருத்தப்பட்ட சுகோய் -30 (Sukhoi-30) கள் மற்றும் கடலில் பிரமோஸ் திறன்களைக் கொண்ட கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த கலவையானது ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பை உருவாக்குகிறது.


வளர்ந்து வரும் போர் தேவைகளுக்கு ஏற்ப, பிரம்மோஸ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அவர்கள் நீண்ட தூரம், சிறந்த சூழ்ச்சித்திறன் மற்றும் அதிக துல்லியம் கொண்ட பதிப்புகளில் வேலை செய்கிறார்கள். சோதனை செய்யப்படும் புதிய பதிப்புகள் ஆரம்பத்திலிருந்த 290 கிமீ உடன் ஒப்பிடும்போது 350 கிமீ வரையான இலக்குகளை அடையலாம்.  800 கிமீ தூரம் வரை செல்லக்கூடிய மற்றும் ஹைப்பர்சோனிக் வேகம் கொண்ட பதிப்புகளையும் உருவாக்க  திட்டமிடப்பட்டுள்ளது.  ஏவுகணையின் திறன்களை மேம்படுத்தும் போது தற்போதுள்ள பதிப்புகளை சிறியதாகவும், குறைவாக கண்டறியக்கூடியதாகவும் மாற்ற முயற்சிக்கின்றனர்.


ஆயுதப் படைகளின் மூன்று கிளைகளும் பயன்படுத்தும் பதிப்புகளையும், தற்போது வளர்ச்சியில் உள்ள பதிப்புகளையும் அவர்கள் இன்னும் சோதித்து வருகின்றனர்.  


நில அடிப்படையிலானது: பிரம்மோஸ் நில அடிப்படையிலான அமைப்பில் நான்கு முதல் ஆறு செலுத்து வாகனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும், மூன்று ஏவுகணைகளைக் கொண்டுள்ளன. இந்த ஏவுகணைகள் மொபைல் மற்றும் இந்தியாவின் எல்லைகளில் பயன்படுத்தப்படலாம். ஏவுகணைகளை ஏறக்குறைய ஒரே நேரத்தில் ஏவ முடியும்.  


மேம்படுத்தப்பட்ட நில தாக்குதல் பதிப்பு ஒலியின் வேகத்தை விட 2.8 மடங்கு வேகத்தில் பறக்கும் மற்றும் 400 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்க முடியும். பிரம்மோஸ் ஏவுகணைகளின் வேகமான மற்றும் சக்திவாய்ந்த பதிப்புகள், 5 மேக் (5 Mach) வேகத்தை எட்டும் வகையில் உருவாக்கப்படுகின்றன. பிரம்மோஸ் தரை அமைப்புகள் சில பகுதிகளை மட்டுமே கொண்டிருப்பதால் அவை 'நேர்த்தியானவை' (tidy) என்று அழைக்கப்படுகின்றன.  


கப்பல் அடிப்படையிலானது: கடற்படை 2005 ஆம் ஆண்டில் அதன் முக்கிய போர்க்கப்பல்களில் பிரமோஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தத் தொடங்கியது. இந்த ஏவுகணைகள் ரேடார் எல்லைக்கு அப்பால் இருந்தாலும் கடலில் உள்ள இலக்குகளை தாக்க முடியும். பிரம்மோஸின் கடற்படை பதிப்பு கடலில் இருந்து கடல் மற்றும் கடலில் இருந்து நிலம் ஆகிய இரண்டிலும் பயனுள்ளதாக இருந்தது. ஒரே நேரத்தில் எட்டு ஏவுகணைகளை ஏவ முடியும். ஒவ்வொரு ஏவுதலுக்கும் இடையில் 2.5 வினாடிகள் இடைவெளி இருக்கும். இந்த ஏவுகணைகள் நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்ட போர்க்கப்பல்களின் குழுக்களை குறிவைக்க முடியும்.


வானிலிருந்து ஏவப்படக்கூடியது : நவம்பர் 22, 2017 அன்று, வங்காள விரிகுடாவில் ஒரு கடல் இலக்குக்கு எதிராக சுகோய் -30 எம்கேஐ (Sukhoi-30MKI) மூலம் பிரமோஸ் சோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் இது பல முறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.


பிரம்மோஸ் ஏவுகணை கொண்ட சுகோய்-30 போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பாமல் 1,500 கி.மீ. நில எல்லைகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் எதிரிகளைத் தடுப்பதில் அவை முக்கியமானவை. பிரமோஸ் ரக விமானங்களுடன் 40 சுகோய்-30 போர் விமானங்களை இணைக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.


பிரம்மோஸ் பொருத்தப்பட்ட சுகோய்-30 விமானங்கள், நடுவானில் எரிபொருள் நிரப்பாமல் 1,500 கிமீ தூரம் வரை செல்லக்கூடியவை.  நில எல்லைகள் மற்றும் இராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள எதிரிகளுக்கு முக்கிய இராஜதந்திரத் தடையாகக் கருதப்படுகிறது. இந்திய வான்படை (IAF) பல்வேறு தளங்களில் 40 சுகோய்-30 போர் விமானங்களுடன் பிரம்மோஸை ஒருங்கிணைத்து வருவதாக கூறப்படுகிறது.

 

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படக்கூடியது : இந்த ஏவுகணையின் இந்த பதிப்பை தண்ணீருக்கு அடியில் சுமார் 50 மீட்டர் ஆழத்தில் இருந்து ஏவ முடியும். இது ஒரு குப்பியில் சேமிக்கப்பட்டு நீர்மூழ்கிக் கப்பலின் ஹல்லில் இருந்து நேராக ஏவப்படுகிறது. இது நீருக்கடியில் மற்றும் தண்ணீருக்கு மேலே பறக்க தனித்தனி அமைப்புகளைக் கொண்டுள்ளது. இந்த பதிப்பு முதன்முதலில் மார்ச் 2013 இல் விசாகப்பட்டினத்தின் கடற்கரைக்கு அருகிலுள்ள நீர் மூழ்கித் தளத்திலிருந்து (submerged platform) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.


Original article:

Share:

இந்திய இளைஞர்கள் ஏன் வாக்களிப்பதில்லை? -அமீதா முல்லா வட்டல்

 பல இளைஞர்களுக்கு அரசியல் கட்சிகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. இளைஞர்களை மையமாகக் கொண்ட போதிய செயல்திட்டங்கள் இல்லை என்பதும் ஒரு காரணம். யாருக்கு, ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை கற்றுத்தரும்  கல்வி முறையும் இல்லை. 


உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வரும் வெள்ளிக்கிழமை 18-வது மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும், நாடு முழுவதும் 2024 தேர்தலுக்கு 18 முதல் 19 வயதுக்குட்பட்ட தகுதியான வாக்காளர்களில் 40% க்கும் குறைவானவர்களே தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.  


இளம் வாக்காளர்கள் வாக்களிக்க தயங்குவது ஏன்? மிகக் குறைந்த சேர்க்கை விகிதங்களைக் கொண்ட மாநிலங்கள் டெல்லி, பீகார் மற்றும் உத்தரபிரதேசம் ஆகும். இந்த மாநிலங்களில் கணிசமான அளவு  இளைஞர்கள் உள்ளனர். என் இந்த இளைஞர்கள் வாக்களிக்க ஆர்வம்  காட்டவில்லை?


அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தாங்கள் கொள்கைகளை பற்றி பேசுவதில்லை என்று பல இளைஞர்கள் நினைக்கிறார்கள். அரசியலில் தற்போது சென்று கொண்டு இருக்கும் விதம் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவில்லை. அரசியல் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நாம் எப்போதும் புரிந்து கொள்ள அவர்களுக்கு வழிகாட்டி எதுவும் இல்லை. 


பள்ளியில், பழைய மாணவர்கள் கூட ஆழமாக சிந்திப்பது அல்லது அவர்களின் தேர்வுகள் விஷயங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது பற்றி அதிகம் கற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக, அவர்கள் முதல் முறையாக வாக்களிக்கும்போது அவர்களின் முடிவுகளுக்கு அர்த்தம் கொடுக்கும் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளைப் பற்றி அவர்களுக்கு கற்பிக்கப்படுவதில்லை. விஷயங்களை நன்கு புரிந்துகொள்ள உதவும் தங்களுக்கு வெளியே உள்ள வெவ்வேறு செயல்முறைகள் மற்றும் இணைப்புகளைப் பற்றியும் அவர்கள் கற்றுக்கொள்வதில்லை.

இந்தியாவில், ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர். ஒரு இளைஞனின் வாக்கு மற்றும் குரல் முக்கியம். அவர்கள் வாக்களிக்கும்போது, அவர்களின் விரலில் உள்ள குறி அவர்கள் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காட்டுகிறது. 

 

இளைஞர்கள் வாக்களிக்கும்போது, அவர்கள் தங்களை விட பெரிய ஒன்றின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். வாக்களிப்பது மிகவும் முக்கியமானது என்பதை நாம் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.


வாக்களிப்பதற்கு முன், அவர்கள் உள்ளூர் மற்றும் தேசிய பிரச்சினைகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க முடியும். 


வாக்களிப்பது ஜனநாயக கடமை. வாக்களிக்கவில்லை என்றால், ஜனநாயகம் சரியாக இயங்காது. எல்லோரும் வாக்களித்தால் தான்  நல்ல ஆட்சி நடக்கும். 


அரசியல்வாதிகள் பொதுவாக வயதான வாக்காளர்களில் கவனம் செலுத்துகிறார்கள். பள்ளியை விட்டு வெளியேறிய இளைஞர்களை மறந்துவிடுகிறார்கள். கட்டணம் குறைந்த உயர்க்கல்வி, நல்ல வேலைகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற இளைஞர்களுக்கு முக்கியமான விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை. இதனால் பல இளைஞர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை.

 

மக்கள் பெரும்பாலும் தற்போதைய தலைமுறையை,  அக்கறையற்றவர்கள், மற்றும் சோம்பேறிகள் என்று ஒரே மாதிரியாகக் கருதுகின்றனர். ஆனால் ஒரு கல்வியாளராக எனது அனுபவத்திலிருந்து, அவர்கள் உண்மையில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை நான் கண்டேன். அவர்கள் சமூக நடவடிக்கைகளில் ஆர்வமாக உள்ளனர் மற்றும் முந்தைய தலைமுறையை விட தன்னார்வத் தொண்டு அதிகமாக செய்கிறார்கள். இளைஞர்களின் போராட்டங்கள், இயக்கங்கள் மற்றும் அழுத்தக் குழுக்களின் எழுச்சியை காண்கிறோம்.  இந்த தலைமுறை தொற்றுநோய் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொண்டது. அவை அவர்களின் வாழ்க்கையை வடிவமைத்தன. 



ஜெனரேஷன் Z (Gen Z)  என்றால் என்ன?


ஜெனரேஷன் இசட் (பெரும்பாலும் Gen Z என்று சுருக்கப்பட்டது). இது ஜூமர்ஸ் (Zoomers) என்று பேச்சுவழக்கில் அறியப்படுகிறது. இது 1990 களின் நடுப்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை மற்றும் 2010 களின் முற்பகுதியில் பிறந்தவர்களைக் குறிக்கிறது.


இளைஞர்கள் சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள் மற்றும் தகவல்களுக்கு அதை நம்பியிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் அரசியல் மீம்கள் அவர்களின் தேர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், அவர்கள் பெரும்பாலும் இணைய வழி  பிரச்சாரங்களில் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கு தொழில்நுட்பம் மிகவும் வசதியாக இருப்பதால், வாக்களிப்பது இணைய வழியில் இல்லாதது விசித்திரமானது. இளைஞர்கள் இணையத்தை அதிகம் பயன்படுத்தும் போது வாக்களிக்க வரிசையில் காத்திருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறனது அவர்களில் 90% க்கும் அதிகமானோர் வாரத்திற்கு ஐந்து முறையாவது இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இணைய வழியில் வாக்களிப்பது என்றால், அதிகமான இளைஞர்கள் வாக்களிப்பார்கள். இணைய வங்கி பாதுகாப்பானதாக இருந்தால், இணைய வழியில் வாக்களிக்கும் வசதியை அறிமுகப்படுத்தலாம். 

 

மற்றொரு பிரச்சனை என்னவென்றால், அரசியல் கட்சிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள இளைஞர்கள் போராடுகிறார்கள். ஒரு காரணம் என்னவென்றால், பல அரசியல் கட்சிகள் இளைஞர்களுக்கு போதிய வாய்ப்பளிக்கவில்லை. மேலும், பள்ளிகள் ஏன் வாக்களிக்க வேண்டும், எப்படி வாக்களிக்க வேண்டும் என்று  கற்றுக்கொடுப்பதில்லை. இன்றைய இளைஞர்கள் சமூகத்தில் இருந்து அரசியல் நடத்தை பற்றி அதிகம் கற்றுக்கொள்வதில்லை.


இன்றைய இளைஞர்கள் புதிய யோசனைகளைக் கொண்டுள்ளனர். முன்பை விட இப்போது  அதிக ஆர்வத்துடன் உள்ளனர். தொழில்நுட்பம் அவர்களின் தனிப்பட்ட திறமைகளை குறைக்கிறது. அவர்கள் வேலை செய்வதில் ஆர்வமாக உள்ளனர். முற்போக்கான பள்ளிகளில், விவாதங்களில், மாணவர்கள் தங்களுக்காக, சுற்றுச்சூழல், ஓரங்கட்டப்பட்ட குழுக்கள், LGBTQIA+ உரிமைகள், சிறுபான்மை நீதி மற்றும் கல்வி அணுகல் பற்றி பேசுகிறார்கள். ஒவ்வொரும் தங்கள் குரலால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். அவர்கள் பொறுப்பாகவும், உணர்ச்சியுடனும், அதைப் பயன்படுத்த அதிகாரம் பெற்றவர்களாகவும் உணர்கிறார்கள்.  


இன்றைய இளம் வாக்காளர்களுக்கு: முந்தைய தலைமுறையை விட உங்கள் குரலை சத்தமாக கேட்க வைக்க உங்களிடம் கருவிகள் இருப்பதால் தயவுசெய்து வாக்களியுங்கள். 


கட்டுரையாளர்  DLF பள்ளிகள் மற்றும் உதவித்தொகை திட்டங்களின் (DLF Schools and Scholarship Programmes) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார்.




Original article:

Share:

இன்றைய நவீன, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டிற்க்கு காமராஜரின் பங்கு என்ன ? - ஆர்.ஜி.சந்திரமோகன்

 முதல்வராக தமிழ்நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளித்தார் காமராஜர். அவரது ஆட்சிக் காலத்தில், மாநிலத்தின் கல்வியறிவு விகிதம் அதிகரித்தது. குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தையும், பல்வேறு தொழில்துறை மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களையும் அவர் தொடங்கினார். 


குமாரசாமி காமராஜர், அப்போது மெட்ராஸ் மாநிலம் என்று அழைக்கப்பட்ட தமிழகத்தின் முதலமைச்சராக, ஏப்ரல் 13, 1954 முதல் அக்டோபர் 2, 1963 வரை ஒன்பதரை ஆண்டுகள் இருந்தார். சுவாரஸ்யமாக, அவர் பதவியில் இருந்து விலகிய தேதி மற்றும் அவர் இறந்த தேதி (அக்டோபர் 2, 1975) இரண்டுமே காந்தி ஜெயந்தி அன்று. இந்த தற்செயல் நிகழ்வு, மாநிலத்தின் முதலமைச்சராக உண்மையாக "சேவை" செய்த ஒரு மனிதனின் தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

 

சிறப்பு சலுகைகளை மறுத்த முதல்வர்


காமராஜருக்கு அவரது தாயார் சிவகாமி அம்மாளைத் தவிர பெரிய குடும்பம் இல்லை. காமராஜர் முதல்வராக இருந்தபோதும் அவரின் தாயார் விருதுநகரில் தான் வாழ்ந்தார். ஒருமுறை, அதிகாரிகள் அனுமதியின்றி காமராஜர் தாயரின் வீட்டில் குழாய் போட்டனர். பொதுவாக, விருதுநகர் மக்கள் தெருக் குழாய்களில் தண்ணீர் சேகரிப்பது வழக்கம். கோபமடைந்த காமராஜர் அதை அகற்றச் சொன்னார். அவர் நியாயத்தை நம்பினார் மற்றும் அவரது குடும்பத்திற்கு சிறப்பு சலுகைகளை விரும்பவில்லை.


காமராஜரின் வாழ்க்கையின் மற்றொரு நிகழ்வு அவரது பணிவையும் நேர்மையையும் காட்டுகிறது. ஒருமுறை, குற்றாலம் அருவியில் குளிக்க சென்றார். இரண்டு காவலர்கள் மற்றும் ஒரு காவல்துறை ஆய்வாளருடன் வந்த அவர், அவருக்கு தனியுரிமை வழங்குவதற்காக மற்ற அருவிகளில் பொது மக்கள் குளிப்பதற்க்கு அதிகாரிகள் அனுமதி வழங்க வில்லை என்பதை அறிந்தார். உடனே பொதுமக்கள் அனைவரையும் உள்ளே குளிப்பதற்க்கு அனுமதிக்குமாறு கவல்துறை ஆய்வாளருக்கு அறிவுறுத்திய அவர், காவல் நிலையத்தில் தனது பணிக்குத் திரும்பும்படியும் கூறினார். நீர்வீழ்ச்சியை தனக்காக ஏகபோகமாக்கி, அதன்மூலம் மற்றவர்களை காத்திருக்க வைக்கும் எண்ணம் அவருக்கு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது.


உணர்திறன்மிக்க மற்றும் விவேகமான ஆட்சி


காமராஜர் பொது வாழ்வில் நேர்மையையும், எளிமையையும் கடைப்பிடித்தார். அவருக்கு பொது அறிவும் மக்கள் நலனில் அக்கறையும் இருந்தது.  அது அவர் ஆட்சி செய்த விதத்தில் வெளிப்பட்டது.


சிறப்பு முதல்வர் ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு ஐந்து பேரை காமராஜர் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. உடனடியாக ஐந்து நபர்களை தேர்வு செய்து தலைமைச் செயலாளரை வியப்பில் ஆழ்த்தினார். எப்படி என்று கேட்டபோது, பெற்றோரின் கையெழுத்தின் அடிப்படையில் தேர்வு செய்ததாக காமராஜர் விளக்கினார். முதல் தலைமுறை மாணவர்களைக் குறிக்கும் கட்டைவிரல் ரேகைகளுடன் கூடிய விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளித்தார்.


அதிகாரிகள் அமெரிக்கா சென்று நகரமைப்பு திட்டம் பற்றி அறிந்து கொள்ள நிதி ஒதுக்க வேண்டும் என்று காமராஜரிடம் கேட்கப்பட்டது. மாறாக முதலில் மதுரை செல்லுமாறு யோசனை கூறினார். 13, 14 ஆம் நூற்றாண்டுகளில் பாண்டிய மன்னர்களால் மதுரை எவ்வாறு கட்டப்பட்டது என்பதையும், அதன் நடுவில் மீனாட்சி அம்மன் கோயிலும், அதிலிருந்து தெருக்களும் விரிந்து கிடக்கின்றன என்பதையும் படிப்பதன் மூலம் அவர்கள் மேலும் கற்றுக்கொள்ள முடியும் என்று அவர் நம்பினார். நியூயார்க், சிகாகோவை விட மதுரை சிறந்த பாடங்களை வழங்குவதாக அவர் நினைத்தார்.


நேர்மைக்கான எடுத்துக்காட்டு


காமராஜர் திறமையான நிர்வாகத்திற்கும், பொது நிதியை திறமையாக நிர்வகிப்பதற்கும் பெயர் பெற்றவர். அவர் முதலமைச்சராக இருந்த ஒவ்வொரு காலத்திலும், அவர் உட்பட எட்டு அமைச்சர்கள் கொண்ட சிறிய அமைச்சரவையுடன் பணியாற்றினார். அவர் நேர்மை மற்றும் திறமைக்கு பெயர் பெற்ற நபர்களை  அமைச்சர்களாக தேர்ந்தெடுத்தார். குறிப்பிடத்தக்க வகையில், காமராஜர் தனது வாழ்நாளின் முடிவில் தனது பெயரில் சுமார் ரூ 200 மட்டுமே வைத்திருந்தார். இது  பொது சேவையில் அவரது தனிப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் எளிமையான வாழ்க்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


விவசாயத்துறை அமைச்சராக இருந்த திரு கே கக்கன் போன்ற அவரது அமைச்சர்களிடமும் இந்த அர்ப்பணிப்பு பிரதிபலித்தது. கக்கன் ஒரு எளிமையான நபர், வாடகை வீட்டில் வசித்தார், போக்குவரத்துக்கு பொதுப் பேருந்துகளைப் பயன்படுத்தினார், இறுதியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மதுரை அரசு மருத்துவமனையின் வராண்டாவில் காலமானார். இந்தத் தலைவர்களின் தனிப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கும் சமகால அரசியல்வாதிகளின் பொதுவான நடைமுறைகளுக்கும் இடையே உள்ள அப்பட்டமான வேறுபாட்டை இந்தக் கதைகள் எடுத்துக்காட்டுகின்றன.


காமராஜரின் அமைச்சரவையில் ஆர்.வெங்கட்ராமன், சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்சலம் போன்ற குறிப்பிடத்தக்க நபர்கள் இருந்தனர். வெங்கடராமன் பின்னர் இந்தியாவின் குடியரசுத்தலைவர் ஆனார். சுப்பிரமணியம் மத்திய உணவு மற்றும் வேளாண் அமைச்சராக பசுமைப் புரட்சிக்கு முக்கிய பங்கு வகித்தார் மற்றும் பக்தவத்சலம் காமராஜருக்குப் பிறகு முதலமைச்சரானார். 


சுப்பிரமணியம், சி.ராஜகோபாலாச்சாரியின் ஆதரவாளராக இருந்தார். இருப்பினும் சுப்பிரமணியத்தை தனது அமைச்சரவையில் நிதியமைச்சராக காமராஜர் நியமித்தார்.


நவீன தமிழகத்தை உருவாக்குதல்


காமராஜர் எப்போதும் தமிழ்நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வந்தார். இதை விளக்கும் ஒரு உதாரணம் உள்ளது. புதிய பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (Bharat Heavy Electricals Ltd (BHEL)) கொதிகலன் தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தைக் கண்டறிய மத்திய குழு ஒன்று தமிழகம் வந்திருந்தது. உள்ளூர் அதிகாரிகள் காட்டிய இடங்களில் குழு திருப்தி அடையவில்லை. அவர்களுக்கு போதுமான தண்ணீர் கொண்ட ஒரு இடம் தேவைப்பட்டது, மேலும் ரயில் பாதைக்கு அருகிலும், ஒரு நகரத்திற்கு அருகிலும் இருக்க வேண்டும் என பரிந்துறைத்தது இதனால் அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் குடும்பங்கள் ஆலைக்கு அருகிலேயே வசிப்பதை எளிதாக்கும்.


குழு வெளியேற இருந்த நிலையில்,  காமராஜர் திருச்சிராப்பள்ளியின் புறநகரில் உள்ள திருவெறும்பூரை பரிந்துரைத்தார். இந்த இடம் அவர்களின் அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்தது. இதன் விளைவாக, அங்கு BHEL தொழிற்சாலை அமைக்கப்பட்டது. காமராஜர் இந்தத் திட்டத்தை விருதுநகரிலோ அல்லது மதுரையிலோ அமைக்க வற்புறுத்தியிருக்கலாம், ஆனால் அவர் செய்யவில்லை.


காமராஜர் காலத்தில் நிறுவப்பட்டது BHEL தொழிற்சாலை மட்டுமல்ல. வேறு பல பொதுத்துறை நிறுவனங்களும் நிறுவப்பட்டன. பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (Integral Coach Factory at Perambur), ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை (Heavy Vehicles Factory), நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (Neyveli Lignite Corporation), ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் (Hindustan Photo Films) மற்றும் ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) ஆகியவை இதில் அடங்கும்.

 

மேலும், சென்னைக்கு அருகிலுள்ள கிண்டி, அம்பத்தூர் மற்றும் திருவொற்றியூர் ஆகிய தொழிற்பேட்டைகள் இவரது தலைமையின் கீழ் தொடங்கப்பட்டன. டி.வி.எஸ் (TVS), எம்.ஆர்.எஃப் (MRF), டி.ஐ சைக்கிள்ஸ் (TI Cycles), அசோக் லேலண்ட் (Ashok Leyland) மற்றும் என்பீல்ட் இந்தியா (Enfield India) போன்ற பெரிய தனியார் நிறுவனங்கள் இந்த தொழிற்பேட்டைகளில் ஆலைகளை அமைத்துள்ளன. வெங்கட்ராமன் தொழில்துறை அமைச்சராகவும், சுப்பிரமணியம் நிதியமைச்சராகவும் காமராஜரின் அமைச்சரவையில் திறமையான அமைச்சர்களாக இருந்தனர். அவர்களின் ஒத்துழைப்பு மிகவும் வெற்றிகரமாக இருந்தது. 


காமராஜர் ஆட்சிக் காலத்தில் 13 பெரிய நீர்ப்பாசன அணைத் திட்டங்கள் கட்டப்பட்டன. இவற்றில் கீழ் பவானி, வைகை, பரம்பிக்குளம், கிருஷ்ணகிரி மற்றும் சாத்தனூர் ஆகியவை அடங்கும். அவரது பதவிக்காலத்தில் சமூகத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க முதலீடுகள் காணப்பட்டன. தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம் 7 சதவீதத்திலிருந்து 37 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1960 ஆம் ஆண்டு காமராஜர் அரசால் நாடு தழுவிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான முதல் மதிய உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த யோசனை அவரது சொந்த ஊரில் உள்ள க்ஷத்திரிய வித்யாசலா பள்ளியில் இதேபோன்ற திட்டத்தினால் பள்ளி செல்லும் குழந்தைகளின் என்னிக்கை  அதிகரித்ததை அவர் கண்டார்.

 

நினைவில் கொள்ள வேண்டிய மரபு


அதிர்சிகரமாக, காமராஜர் மற்றும் பக்தவத்சலம் இருவரும் 1967 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தனர். காமராஜர் தனது விருதுநகர் தொகுதியிலும், பக்தவத்சலம் தனது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் தோற்கடிக்கப்பட்டார். கோபிசெட்டிபாளையம் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலிலும் சுப்பிரமணியம் தோல்வியடைந்தார்.


இருப்பினும், நல்ல தலைவர்களின் பங்களிப்புகள் அவர்கள் மறைந்த பின்னரும் நீண்ட காலத்திற்கு நினைவுகூரப்படுகின்றன. காமராஜர், வெங்கட்ராமன், சுப்பிரமணியம் ஆகியோர் இன்று தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்சி நிலைக்கு அடித்தளம் அமைத்தவர்கள். அவர்களின் முயற்சிகள் மறக்கப்படவில்லை.


கட்டுரையாளர் சென்னையைச் சேர்ந்த ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர்.




Original article:

Share: