மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணயம்

 மிகவும் தாமதமான மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் அதன் எல்லை நிர்ணயம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.


கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பாக என்ன பிரச்சினை?


இந்திய அரசாங்கம், நீண்டகாலமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதமாகி வரும் நிலையில் 2026-ம் ஆண்டிற்குள் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அடுத்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு குறிப்பிடத்தக்க விளைவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்று, கடந்த ஐம்பது ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம். இரண்டாவது, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதுடன் இணைக்கப்படுவது. இதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணயத்தின் பங்கைப் புரிந்துகொள்வது முக்கியம்.


மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன?


மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டில் உள்ள மக்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தல், ஒழுங்கமைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு செயல்முறையாகும். இது ஒவ்வொரு நபரைப் பற்றிய மக்கள்தொகை, சமூக மற்றும் பொருளாதாரத் தரவை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சேகரிக்கிறது. இந்தியாவில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இது ஒன்றியப் பட்டியலில் இதைப் பற்றி 69-ல் பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது, ஒன்றிய அரசுக்கு மட்டுமே இதை செயல்படுத்த அதிகாரம் உள்ளது. நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற தொகுதிகளை மறுசீரமைத்தல் போன்ற நோக்கங்களுக்காகவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவைப்படுகிறது.


இருப்பினும், மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறவில்லை. இது எவ்வளவு விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிடவில்லை. இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டம்-1948 (Census of India Act) மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான சட்டக் கட்டமைப்பை அமைக்கிறது. இருப்பினும், மக்கள் தொகை கணக்கெடுப்பின் நேரம் அல்லது குறிப்பிட்ட கால அளவு பற்றிய விவரங்களும் இதில் இல்லை. இதன் காரணமாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு அரசியலமைப்பு அல்லது சட்டரீதியான தேவை இல்லை.


மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம்


மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சட்டப்பூர்வ தேவையாக இருக்காது. இருப்பினும், அதன் பயன்பாடானது நாட்டின் மக்கள்தொகை, பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் தனிப்பட்ட பண்புகளின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதால், வழக்கமான மற்றும் அத்தியாவசியமான பயிற்சியாக அதை நிறுவியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவதும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.


1. நகரங்களுக்கான கிராமம் மற்றும் வார்டு மட்டங்களில் அடிப்படை மற்றும் நம்பகமான தரவுகளை இது வழங்குகிறது. இந்த தரவு அனைத்து புள்ளிவிவர நடவடிக்கைகளுக்கும் அடித்தளமாக செயல்படுகிறது. இது திட்டமிடல், நிர்வாகம் மற்றும் பொருளாதார முடிவெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


2. பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச முகமைகள், அறிஞர்கள் மற்றும் வணிக வல்லுநர்கள் இந்தத் தரவை கொள்கைகளைத் திட்டமிடவும் வடிவமைக்கவும் பயன்படுத்துகின்றனர்.


3. மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவு அனைத்து சமூக மற்றும் பொருளாதார குறிப்பீடுகளுக்கும் அடித்தளமாக உள்ளது. ஏனெனில், 15 ஆண்டுகள் பழமையான புள்ளிவிவரங்கள் போன்ற காலாவதியான தரவுகளை நம்பியிருப்பது, தொடர்ந்து மாறிவரும் சூழலில் நம்பகத்தன்மையற்றது. இந்த நம்பகத்தன்மையின்மை இந்தியா தொடர்பான பல்வேறு குறிப்பீடுகளை சீர்குலைத்து, அனைத்து வகையான வளர்ச்சித் திட்டங்களின் செயல்திறனையும் எதிர்மறையாக பாதிக்கும்.


4. மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு முழுவதும் பல்வேறு ஆய்வுகளை நடத்துவதற்கான அடித்தளத்தை வழங்குகிறது. உண்மை ஆதாரங்களின் அடிப்படையில் தகவலறிந்த முடிவுகளை எடுப்பது அவசியம். தேர்தலுக்கு தொகுதிகளை வரையறுப்பது போன்ற ஜனநாயக செயல்முறைகள், இட ஒதுக்கீடு போன்ற உறுதியான செயல் முயற்சிகளும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தரவைச் சார்ந்துள்ளது.





இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எவ்வாறு வரலாற்று ரீதியாக வளர்ச்சியடைந்துள்ளது? 


இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நீண்ட மற்றும் குறிப்பிடத்தக்க வரலாற்றைக் கொண்டுள்ளது. முக்கிய நிகழ்வுகளின் காலவரிசை மூலம் இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரலாற்றைப் புரிந்துகொள்வோம்:


1872-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு : 1866-67 ஆண்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது பொதுவாக 1872-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்று அழைக்கப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்களைக் கணக்கிடுகிறது. ஆனால், இது பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கவில்லை. இது ஒரு ஒத்திசைவற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதாவது எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படவில்லை.


1881-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு : மக்கள்தொகை கணக்கெடுப்பு  பிப்ரவரி 17, 1881 அன்று W.C ப்லோடன், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரால் நடத்தப்பட்டது. 1881-ம் ஆண்டின் நடந்த இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு பெரிய முன்னேற்றத்தை குறிக்கிறது. மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு இது மிகவும் நவீனமான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை நோக்கி நகர்ந்தது. 1881-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு முழுமையான கணக்கெடுப்பு மட்டுமல்ல, மக்கள்தொகை, பொருளாதாரம் மற்றும் சமூக பண்புகளின் வகைப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு காஷ்மீர் தவிர பிரிட்டிஷ் இந்தியாவின் முழுப் பகுதியையும் உள்ளடக்கியது. அதில் இந்திய அரசாங்கத்துடன் அரசியல் ரீதியாக இணைக்கப்பட்ட மாநிலங்களும் அடங்கும். இருப்பினும், பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசிய காலனித்துவ பிரதேசங்கள் சேர்க்கப்படவில்லை.


1921-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு : இந்த கணக்கெடுப்பு, இந்தியப் பேரரசு என அழைக்கப்படும், இந்திய அரசாங்கத்தால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும் முழுப் பகுதியையும் உள்ளடக்கியது. பொதுவாக, பிரிட்டிஷ் இந்தியா என்று குறிப்பிடப்படும் இந்திய மாநிலங்கள், அரசியல் தொடர்பாக இந்தியத் தலைவர்களால் நிர்வகிக்கப்படும் பகுதிகளை உள்ளடக்கியது. இது, ஒன்றிய அரசுடன் அல்லது பல்வேறு மாகாண அரசுகளுடன் அரசியல் உறவைக் கொண்டிருந்தனர்.


1951-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு : சுதந்திர இந்தியாவின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1951-ம் ஆண்டில் நடத்தப்பட்டது. இது நாட்டின் தற்போதைய தொடரில் ஏழாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் குறிக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், ஜம்மு & காஷ்மீரின் முழுப் பகுதியும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து விலக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின் தரவுகளைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டது.


1971-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு : இது தொடர்ச்சியான 11-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். இடைக்கால நாடாளுமன்றத் தேர்தலுடன் முரண்படுவதைத் தவிர்க்க இது வழக்கத்தை விட வேறு நேரத்தில் நடத்தப்பட்டது.


2011-ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு : 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பால் நடத்தப்பட்ட 15-வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். இது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. இவை, வீடுவாரியான பட்டியல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவை ஆகும்.


குறிப்பிடத்தக்க வகையில், கோவிட்-19 தொற்றுநோய் பரவலால் 2021-ம் ஆண்டு (16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு) ஒத்திவைக்கப்பட்டது. மேலும், இது அடுத்த ஆண்டு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






உங்களுக்கு தெரியுமா?

          1951-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் தற்காலிக அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அமைப்பு அமைக்கப்பட்டது. 1948-ம் ஆண்டில், மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்கியது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. மே 1949-ம் ஆண்டில், இந்திய அரசு மக்கள்தொகையின் அளவு மற்றும் மேம்பாடு பற்றிய தரவுகளை சேகரிக்க ஒரு முறையான அணுகுமுறையை உருவாக்க முடிவு செய்தது. இதைச் செய்ய, அவர்கள் உள்துறை அமைச்சகத்திற்குள் ஒரு அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பு இந்தியத் தலைமைப் பதிவாளர் (Registrar General of India) கீழ் இருந்தது. அவர், முன்னாள் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையராகவும் பணியாற்றுகிறார்.


இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது?


இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது உலகின் மிகப்பெரிய நிர்வாக மற்றும் புள்ளிவிவரப் பயிற்சியாகும். பத்தாண்டு கால மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான பொறுப்பு, இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தியத் தலைமைப் பதிவாளர் (Registrar General of India) மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையரிடம் உள்ளது.


ஒன்றிய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச (UT) அரசாங்கங்களுடன் இணைந்து, நாடு முழுவதும் இந்த விரிவான நிர்வாக செயல்பாட்டை நடத்துகிறது. ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகம், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கும், மேம்பாடான தரவைப் பராமரிப்பதற்கும், அந்தந்தப் பகுதிகளின் முழுமையான கணக்கெடுப்பை உறுதி செய்வதற்கும் பொறுப்பாகும்.


மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு முக்கிய படிகளைக் கொண்டுள்ளது. அவை, வீடுவாரியான பட்டியல் மற்றும் எண்ணும் பயிற்சி, அதைத் தொடர்ந்து உண்மையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகும். மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆண்டுக்கு முந்தைய ஆண்டின் நடுப்பகுதியில் வீடுவாரியான பட்டியலிடுதல் மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் நிகழ்கின்றன. பிப்ரவரியில் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆண்டின் மார்ச் 1 அன்று இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு எண்ணிக்கையில் பிரதிபலிக்கின்றன.


சமூக-பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு 2011

        சமூக-பொருளாதார மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களின் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றிய ஆய்வு மற்றும் முன் வரையறுக்கப்பட்ட அளவுகளின் அடிப்படையில் குடும்பங்களின் தரவரிசையை அனுமதிக்கிறது. 


பிப்ரவரி மாத கணக்கெடுப்பின் போது ஏற்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளை நிவர்த்தி செய்ய, கணக்கெடுப்பாளர்கள் மார்ச் முதல் வாரத்தில் வீடுகளுக்கு சென்று தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தயாரிப்புகள் பொதுவாக மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கும். இந்த செயல்முறை பல இடைநிலை படிகளை உள்ளடக்கியது. முழுத் தரவையும் தொகுத்து வெளியிட பல மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை ஆகலாம்.


மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு மற்றும் எல்லை நிர்ணயம் எவ்வாறு தொடர்புடையது?


மிக சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளின் மாநிலங்களில் தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிக்கும் அல்லது மறுவரையறை செய்யும் செயல்முறையே எல்லை நிர்ணயம் ஆகும். எல்லை நிர்ணயத்தின் முக்கிய நோக்கம் மக்கள்தொகையின் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதாகும்.


எல்லை நிர்ணயத்திற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் இடையே தெளிவான தொடர்பு உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 82, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் எல்லைகளை மாற்றியமைக்க வேண்டும். "ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்ததும், மாநிலங்களுக்கு மக்கள் மன்றத்தில் இட ஒதுக்கீடு மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிகளாகப் பிரிப்பது ஆகியவை அத்தகைய அதிகாரத்தால் மறுசீரமைக்கப்படும் மற்றும் நாடாளுமன்றம் சட்டத்தால் தீர்மானிக்கும் முறையாகும்" என்று இந்தப் பிரிவு கூறுகிறது


42-வது அரசியலமைப்பு திருத்தம் 1976-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திருத்தம் 170-வது பிரிவை மாற்றியது மற்றும் எல்லை நிர்ணய செயல்முறையை நிறுத்தி வைத்தது. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் கிடைக்கும் வரை எல்லை நிர்ணயம் நடைபெறாது. 2001-ம் ஆண்டில், எல்லை நிர்ணயம் மீதான தடை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. 2001-ம் ஆண்டில் 84 வது அரசியலமைப்பு திருத்தம் 2026-ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே அடுத்த எல்லை நிர்ணயம் செய்ய முடியும் என்று கூறியது. சட்டப்பிரிவு 170 சட்டமன்றங்களின் கட்டமைப்பை உள்ளடக்கியது. இது "மக்கள் தொகை" என்ற வார்த்தையின் விளக்கத்தை உள்ளடக்கியது. இந்த சொல் முக்கியமானது, ஏனெனில் இது பிராந்திய தொகுதிகளைப் பிரிப்பதற்கான அடிப்படையாகப் பயன்படுத்தப்படுகிறது.



எல்லை நிர்ணயம் செய்வது யார்?

      எல்லை நிர்ணயம் என்பது எல்லை நிர்ணய ஆணைய சட்டத்தின் விதிகளின் கீழ் இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு சுதந்திரமான எல்லை நிர்ணய ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது. எல்லை நிர்ணய ஆணையம் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்படுகிறது. இது பின்வருவனவற்றை உள்ளடக்கியது. இவை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் அந்தந்த மாநில தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் அடங்கும். ஆணையத்தின் உத்தரவுகள் இறுதியானவை என்றும், எந்த நீதிமன்றத்தின் முன்பும் கேள்வி கேட்க முடியாது என்றும், அது தேர்தலை காலவரையின்றி நடத்தும் என்றும் அரசியலமைப்புச் சட்டம் கட்டளையிடுகிறது.






எல்லை நிர்ணயத்தின் வரலாறு


சுதந்திரத்திற்குப் பிறகு (1951 முதல் 2011 வரை) பத்தாண்டு கால மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏழு முறை நடத்தப்பட்டாலும், எல்லை நிர்ணயம் நான்கு முறை மட்டுமே (1952, 1953, 1973 மற்றும் 2002 இல்) மேற்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடைசி எல்லை நிர்ணயம், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எல்லைகளை மட்டுமே மறுசீரமைத்தது. மேலும், 1976 முதல் நிலையான இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கவில்லை.




Original article:

Share:

இந்தியாவின் லட்சியப் பயிற்சித் திட்டம் குறுகியதாக உள்ளது -மிலிந்த் குமார் சர்மா

 முதுகலைப் பட்டதாரிகளை பிரதம மந்திரியின் பயிற்சித் திட்டத்தில் (Prime Minister’s Internship Scheme) இருந்து விலக்குவது குறுகிய நோக்கமுடைய முடிவாகும்.


21 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இப்போது பிரதம மந்திரி பயிற்சித் திட்டத்திற்கு (Prime Minister’s Internship Scheme (PMIS)) விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு அனைவருக்கும் நம்பிக்கையளிக்கிறது. இந்தத் திட்டம் இளம் மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதையும், இந்திய இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், முதுகலை பட்டம் பெற்றவர்களைத் தவிர்த்து இருப்பது கவலைக்குரியதாக மாறியுள்ளது. முதுகலை மாணவர்களையும் சேர்த்து இந்தத் திட்டத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றியிருக்கலாம். அவர்களின் சிறப்பு அறிவு பயிற்சிகுப் பிறகு இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் பயனளிக்கும். பதிவு வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளபடி, 737 மாவட்டங்கள் மற்றும் 24 துறைகளில் 80,000-க்கும் மேற்பட்ட வேலை  வாய்ப்புகளை இந்த பயிற்சித் திட்டம் வழங்குகிறது.


குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய தொழில்மயமான மாநிலங்கள் பட்டியலிடப்பட்ட மொத்த வேலைவாய்ப்புகளில் 56% பங்கைக் கொண்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் நேரடி பயன் பரிமாற்றம் மூலம் அரசாங்கத்திடம் இருந்து மாதாந்திர உதவித்தொகையாக  ₹4,500 பெறுவார்கள்.  பயிற்சி வழங்கும் நிறுவனம் அதன் தனியார்  சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து மாதம் ₹500 செலுத்தும். கூடுதலாக, பயிற்சியாளர்களின் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட அரசாங்கம் ஒரு முறை மானியமாக ஆண்டுக்கு ₹6,000 வழங்கும்.


முதுகலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது


2021-22-ஆம் ஆண்டு  உயர்கல்விக்கான அகில இந்திய ஆய்வு (All-India Survey for Higher Education (AISHE)) அறிக்கை முதுகலை சேர்க்கையில் குறிப்பிடத்தக்க உயர்வைக் காட்டுகிறது. 46 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் முதுகலை படிப்புகளை மேற்கொள்கின்றனர். இது இந்தியாவின் மொத்த உயர்கல்வி சேர்க்கையில் 10.81% ஆகும். 2019-20 முதல், முதுகலை மாணவர் சேர்க்கை 26% அதிகரித்துள்ளது. சிறந்த முதுகலை பிரிவுகள்:


- அறிவியல் (18.6%)

- பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் (8.61%)

- மேலாண்மை மற்றும் வணிகம் (22.7%)

- மருத்துவ அறிவியல் (11.08%)

- சமூக அறிவியல் (5.30%)

- மற்றவை (23.08%)


அறிவியல் மாணவர் சேர்க்கையில் ஆண் மாணவர்களின் 38.8% உடன் ஒப்பிடும்போது, 61.2% பெண் மாணவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பல முதுகலை மாணவர்கள் தங்கள் முதுகலை படிப்பை முடித்த பிறகு முனைவர் ph.D திட்டங்களைத் தொடரத் தேர்வு செய்கிறார்கள்.  ph.D. படிப்பில் மொத்தம் 2,12,474 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். திட்டங்களுக்கு மத்தியில் Ph.D. மாணவர்கள், 24.8% பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்திலும், 21.3% அறிவியலிலும் சேர்ந்துள்ளனர். 


பிரதம மந்திரி பயிற்சித் திட்டம் ஐந்தாண்டுகளில் முதல் 500 நிறுவனங்களில் உள்ள 1 கோடி மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், முதுகலை மாணவர்களைத் தவிர்த்து, நாட்டிற்கு அறிவுசார்ந்த இழப்பை ஏற்படுத்தலாம். வேலை வாய்ப்பு பெற முதுகலை மாணவர்களை இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய சூழலை அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தும். நிஜ உலக பிரச்சனைகளை வெளிப்படுத்தாமல், முதுகலை மாணவர்களின் மேம்பட்ட அறிவு பயன்படுத்தப்படாமல் இருக்கும். 


இது பிரதம மந்திரி பயிற்சித் திட்டத்தின் கீழ் உள்ள எண்ணெய், எரிவாயு, எரிசக்தி, வாகன தொழில்நுட்பம், மின்னணுவியல், வங்கி, நிதி, பயணம் மற்றும் விருந்தோம்பல் போன்ற முக்கிய துறைகளை பாதிக்கும். இதன் விளைவாக, இது அவர்களின் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புத் திறனைத் தடுக்கும், அறிவு சார்ந்த பொருளாதாரம் மற்றும் உலகளாவிய தலைமைக்கு இந்தியா மாறுவதை மெதுவாக்கும்.


இந்த ஆண்டு  ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ஓராண்டு பயிற்சித் திட்டம், மாணவர்களின் திறன் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், புதிய யோசனைகளுக்கு வெளிப்படுத்தும் முதுகலை மாணவர்களைத் தவிர்ப்பதால், அவர்களை அறிவு சார்ந்த பலன் பெறுவதை தடுக்கிறது. இந்த பயிற்சி அனுபவமின்மை முதுகலை பபட்டதாரிகளுக்கு பல்வேறு வழிகளில் பின்னடைவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக தொழில் தேக்கநிலை ஏற்படுகிறது. அவர்கள் தொடர்பில்லாத தொழில்களுக்கு மாற சூழல் உருவாகுகிறது. முரண்பாடாக, ஆன்லைன் அல்லது தொலைதூரக் கற்றல் படிப்புகளில் வேலையில்லாத விண்ணப்பதாரர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.


தேசிய விளைவுகள்


ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள பல திறமையான முதுகலை மாணவர்கள் ஒன்றிய மற்றும் மாநில நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டப் படிப்புகளில் சேருகிறார்கள். உதாரணமாக, வேதியியல், இயற்பியல் மற்றும் மின் பொறியியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், குறைக்கடத்தி துறையில் (semiconductor industry) பிரதம மந்திரி பயிற்சித் திட்டம் மூலம் பயிற்சி பெற்றால், அது எதிர்காலத்தில் நாட்டிற்கு பெரிதும் பயனளிக்கும். இந்த மாணவர்கள் இளங்கலை பயிற்சியாளர்களுக்கு வழிகாட்டலாம். 


அறிவு-பகிர்வு மற்றும் சக கற்றலை மேம்படுத்தலாம். பயிற்சிகுப் பிறகு சிலர் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கலாம். இது தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் மற்றும் இந்தியாவின் தொடக்க நிலை சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தும். எனவே, முதுகலை பட்டம் வைத்திருப்பவர்களைத் தவிர்த்தது இந்தியாவின் உலகளாவிய போட்டித்தன்மையை பலவீனப்படுத்தலாம் மற்றும் ஒரு அறிவு மையமாகவும் உலகளாவிய தொழில்துறையின் தலைவராக  மாறுவதற்கான இலக்கைத் தடுக்கலாம்.


முக்கியமான திட்டங்களுக்கு பெரும்பாலும் நிபுணர் அறிவு இல்லை. இது இந்தியாவின் வளர்ச்சியைக் குறைக்கிறது மற்றும் 2047-க்குள் விக்சித் பாரத் ஆக வேண்டும் என்ற அதன் நோக்கத்தை பாதிக்கிறது. முதுகலை பட்டதாரி மாணவர்களைத் தவிர்த்து விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். இது ஒட்டுமொத்தமாக திட்டத்தை குறைந்த செயல்திறன் கொண்டதாக மாற்றலாம்.


சரிசெய்ய வேண்டிய திருத்தம்


துல்லியமான உற்பத்தி, செயல்முறைகள், குறைக்கடத்திகள், மின்சார வாகனங்கள், பேட்டரிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற துறைகளில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிற்சி திட்டத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்களையும் சேர்த்தால், திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் பல்வேறு திறன்கள், அனுபவம் மற்றும் நுண்ணறிவுகளைக் கொண்டு வருவார்கள். இது பயிற்சியாளர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு பயனளிக்கும். இது முதுகலை மாணவர்கள் இந்த நிறுவனங்களில் சுமூகமாக மாறவும், குறிப்பாக பெண்களிடையே தொழிலாளர் பங்கேற்பை அதிகரிக்கவும் உதவும். சர்வதேச தொழிலாளர் அமைப்பு "இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை (India Employment Report) 2024"-ல் குறிப்பிட்டுள்ளபடி, முதுகலை பட்டம் பெற்றவர்களை பிரதம மந்திரி பயிற்சி திட்டத்தில் சேர்ப்பது இந்த சிக்கலை தீர்க்க உதவும் என்று பரிந்துரைக்கிறது.


பிரதம மந்திரி பயிற்சி திட்டம் என்பது ₹800 கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட ஒரு முன்னோடி திட்டமாகும். முதுகலை பட்டதாரிகளையும் சேர்த்து இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். குறிப்பிட்ட துறைகளில் முதுகலை பட்டதாரிகளை சேர்க்க அரசு பரிசீலிக்க வேண்டும். அவர்கள் திட்டத்தை மதிப்பாய்வு செய்யும் போது, ​​அது முழுமையான கொள்கைத் திட்டமாக மாறுவதற்கு முன் இந்த மாற்றம் நிகழ வேண்டும். முதுகலை பட்டம் பெற்றவர்களைச் சேர்ப்பது அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (Anusandhan National Research Foundation (ANRF)) இலக்குகளை ஆதரிக்கும். இது இந்தியா முழுவதும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை வலுப்படுத்தும். 


சமீபத்திய 2022-23-ஆம் ஆண்டு  உயர்கல்வி குறித்த அகில இந்திய கணக்கெடுப்பு தரவு, முதுகலை பட்டம் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் காட்டுகிறது. இந்த வளர்ச்சியைப் பார்க்கும்போது, ​​கொள்கை வகுப்பாளர்கள் பிரதம மந்திரி பயிற்சி திட்டத்தை இன்னும் திறந்ததாகவும் அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும் வேண்டும். இத்திட்டத்தில் முதுகலை மாணவர்களுக்கு சரியான வாய்ப்புகளை வழங்க வேண்டும். இது அவர்களின் திறமைகளைப் பயன்படுத்தவும், இந்தியா தனது இலக்குகளை அடையவும் உதவும்.


மிலிந்த் குமார் சர்மா, ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள MBM பல்கலைக்கழகத்தின் உற்பத்தி மற்றும் தொழில்துறை பொறியியல் துறையில் ஆசிரியராக உள்ளார்.




Original article:

Share:

அனைவரின் கவனமும் பாகு மற்றும் காலநிலை நிதி இலக்கு மீது - விபா தவான், ஷைலி கெடியா

 வளரும் நாடுகள் பருவநிலை நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அவை அவ்வாறு ஏற்படவில்லை என்றாலும், உலகளாவிய காலநிலை நிதி பேச்சுவார்த்தைகள் உண்மையான நடவடிக்கைக்கு வழிவகுக்குமா அல்லது வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்குமா? என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.


COP-29 அமைப்பை வெற்றிகரமாக்குவதில் புதிய கூட்டு அளவுகோல் (New Collective Quantified Goal (NCQG)) ஒரு முக்கிய பங்கு வகிக்கும். இது, COP29 காலநிலை நிதி சிக்கல்களில் கவனம் செலுத்துவதால் இவை "நிதி COP" (finance COP) என்றும் அழைக்கப்படுகிறது. காலநிலை நிதி நடவடிக்கைகள் "வளரும் நாடுகளின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை" நிவர்த்தி செய்வதில் ஒரு முக்கிய மையமாக உள்ளது. இந்த தேவை, பாரிஸ் உடன்படிக்கையின் 9-வது பிரிவில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. COP29 அமைப்பில் இறுதி செய்யப்படும் புதிய கூட்டு அளவுகோல் (NCQG), காலநிலை நிதியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். COP29 நவம்பர் 11 முதல் 22, 2024 வரை அஜர்பைஜானின் பாகுவில் நடைபெறும்.


தீர்க்கப்படாத போர்கள்


புதிய கூட்டு அளவுகோல் (New Collective Quantified Goal (NCQG)) பற்றிய விவாதத்தில், வெவ்வேறு நலன்களைக் கொண்ட நாடுகள் மிகவும் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. COP29 அமைப்புக்கு முன் NCQG பற்றிய சமீபத்திய உயர்மட்ட அமைச்சர்கள் பேச்சுவார்த்தையின்போது இது தெளிவாக்கப்பட்டது. இன்னும், முக்கிய தீர்க்கப்படாத பிரச்சனைகளில் NCQG-ன் கட்டமைப்பு மற்றும் நோக்கம், நிதி பங்களிப்புகளின் அளவு மற்றும் கால அளவுகள் மற்றும் ஆதாரங்கள் ஆகியவை அடங்கும். வளரும் நாடுகள் நிதிச்சுமையானது தங்கள் மீது அநியாயமாக மாறக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். தகவமைப்பு மற்றும் தணிப்பு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையுடன், காலநிலை நிதியத்தில் சமத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தி, ஆதரவை வழங்குவதற்கு வளர்ந்த நாடுகளின் பொறுப்பை அவை வலியுறுத்துகின்றன. அவர்களின் நிலைப்பாடு, 5 அல்லது 10 ஆண்டுகளில் குறிப்பிட்ட, கணிக்கக்கூடிய காலக்கெடுவுடன், பொது நிதி, மானியங்கள் மற்றும் சலுகைக் கடன்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் தெளிவான, அளவிடக்கூடிய இலக்குகளை ஆதரிக்கின்றன.


இதற்கு நேர்மாறாக, வளர்ந்த நாடுகள் காலநிலை நிதிக்கு அதிக நாடுகள் பங்களிக்க வேண்டும் என்று விரும்புகின்றன. மேலும், காலநிலை நிதிக்கு நாடுகள் உள்ளடக்கிய அணுகுமுறையை பரிந்துரைக்கின்றன. புதுமையான நிதியளிப்பு மற்றும் நெகிழ்வான, பல அடுக்கு நிதிக் கட்டமைப்புகளை ஆராயும் அதே வேளையில், குறைந்த உமிழ்வு மற்றும் காலநிலை மீள்தன்மையை இலக்காகக் கொண்டு, விளைவு-உந்துதல் உத்திகளுக்கு அவை முன்னுரிமை அளிக்கின்றன.


$100 பில்லியன் வருடாந்திர காலநிலை நிதிக்கான உறுதிமொழி, 2009-ம் ஆண்டில் செய்யப்பட்டு 2025-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், அவநம்பிக்கையின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. வளர்ந்த நாடுகள் 2020-ம் ஆண்டில் உண்மையான காலக்கெடுவைத் தவறவிட்டன. 2022-ம் ஆண்டில் $100 பில்லியன் இலக்கை மட்டுமே அடைந்தன. இந்த தாமதம், தங்கள் கடமைகளின் மீதான நம்பிக்கையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது மற்றும் தாமதமான நடவடிக்கையின் விளைவுகளுடன் வளரும் நாடுகளை சிரமப்படுத்துகிறது. கூடுதலாக, $100 பில்லியன் இலக்கு மிகவும் போதுமானதாக இல்லை. உண்மையில் டிரில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது. 98 நாடுகளில் 48% செலவுத் தேவைகளுக்கு, காலநிலை நடவடிக்கைக்குத் தேவையான தொகை $5.036 டிரில்லியன் மற்றும் $6.876 டிரில்லியன் வரை இருக்கும் என்று நிதிக்கான நிலைக்குழு (Standing Committee on Finance) மதிப்பிட்டுள்ளது.


2022-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் இலக்கு முதன்முறையாக எட்டப்பட்டதாக, பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development (OECD)) தெரிவித்தாலும், வளர்ந்த நாடுகள் $115.9 பில்லியனைத் திரட்டியுள்ள நிலையில், கடுமையான சிக்கல்களுக்கு உட்படுத்துகிறது. தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப போதுமான ஆதாரங்கள் இல்லை. பெரும்பாலான நிதி மானியங்களுக்கு பதிலாக கடன் வடிவில் வருகிறது. இந்த கடன்களை நம்பியிருப்பது பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு கடனை அதிகரிக்கிறது.


காலநிலை நிதியானது மானிய அடிப்படையிலான பொது நிதியில் கவனம் செலுத்த வேண்டும். சலுகைக் கடன்கள் இதை ஆதரிக்கலாம் ஆனால் மானியங்களை மாற்றக்கூடாது. தனியார் முதலீடு சுத்தமான எரிசக்தி திட்டங்களுக்கு உதவுகிறது, ஆனால் இது தழுவல் திட்டங்களுக்கு குறைவான செயல்திறன் கொண்டது. அங்கு வருமானம் குறைவாக இருக்கும். காலநிலை தணிப்பு மீதான இந்த கவனத்தினால், உள்கட்டமைப்பு பின்னடைவு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற அத்தியாவசிய தகவமைப்புத் திட்டங்களுக்கு நிதி இல்லை. வளரும் நாடுகள் பசுமை காலநிலை நிதி மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி போன்ற மூலங்களிலிருந்து நிதியை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன. இது காலநிலை தாக்கங்களுக்கு ஏற்ப அவர்களின் திறனைக் கட்டுப்படுத்துகிறது.


காலநிலை நிதிக்கான பங்களிப்பாளர் தளத்தை விரிவுபடுத்துவது காலநிலை பேச்சுவார்த்தைகளில் நியாயம் மற்றும் செயல்திறன் பற்றிய முக்கியமான கவலைகளை எழுப்புகிறது.


கார்பன் உமிழ்வு மற்றும் தனிநபர் மொத்த தேசிய வருமானம் (வாங்கும் திறனுக்காக சரிசெய்யப்பட்டது) போன்ற காரணிகளின் அடிப்படையில், காலநிலை நிதி பங்களிப்புகளில் அதிக நாடுகளைச் சேர்க்க சுவிட்சர்லாந்து மற்றும் கனடா நாடுகள் முன்மொழிந்துள்ளன. அவர்களின் முன்மொழிவுகள் முக்கியமாக சீனா போன்ற நாடுகளையும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான பஹ்ரைன், புருனே, குவைத், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளையும் குறிவைக்கின்றன. இந்த விவாதங்கள் காலநிலை பாதிப்பு, ஆற்றல் வறுமை மற்றும் மனித மேம்பாடு போன்ற காரணிகளையும் கருத்தில் கொள்கின்றன, அவை காலநிலை மாற்ற தாக்கங்களை எதிர்கொள்ளும் போது முக்கியமானவை.


பங்களிப்பாளர் தளத்தை விரிவுபடுத்துவது பற்றிய விவாதங்கள் புதியவை அல்ல. பாரீஸ் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் போதும் இது எழுப்பப்பட்டது. அந்த நேரத்தில், வளர்ந்த நாடுகள், உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களைச் சுட்டிக்காட்டி, பணக்கார நாடுகள் அதிக பங்களிக்க வேண்டும் என்று வாதிட்டன. வளரும் நாடுகள் எதிர்த்தன, இது நியாயமான கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு வழியாகக் கருதியது மற்றும் காலநிலை பேச்சுவார்த்தைகளுக்கு மையமான பகிரப்பட்ட ஆனால் வேறுபட்ட பொறுப்புகள். காலநிலை நெருக்கடிக்கு வரலாற்று ரீதியாக பொறுப்பானவர்களுக்கான பொறுப்புணர்வை இது குறைக்கும் என்று அவர்கள் கருதினர். காலநிலை பங்களிப்பாளர் தளத்தை விரிவுபடுத்துவது காலநிலை நிதி பேச்சுவார்த்தைகளின் உண்மையான இலக்குகளுக்கு அப்பாற்பட்டது. இது முக்கிய பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தும் அபாயம் உள்ளது. காலநிலை நடவடிக்கைக்கான அவசரத் தேவையுடன், இந்த விவாதம் COP29-ல் முன்னேற்றத்தைத் தடுக்கலாம்.


புதிய கூட்டு அளவுகோல் (NCQG) மற்றும் காலநிலை நிதி உறுதிப்பாடுகள் பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 9-ன் அடிப்படையில் தொகுக்கப்பட வேண்டும். இந்த பிரிவு-9, தழுவல் மற்றும் தணிப்புக்கான நிதிக்கு இடையே சமநிலை தேவைப்படுகிறது. வளரும் நாடுகளில் அதிகரித்து வரும் கடனைத் தடுப்பதற்குத் தழுவலுக்கு பொது மற்றும் மானிய அடிப்படையிலான நிதியின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.


இருப்பினும், வளர்ந்த நாடுகள் வித்தியாசமான கருத்தை முன்வைக்கின்றன. அவர்கள் "குறைந்த பசுமை இல்ல வாயு வெளியேற்றம் மற்றும் காலநிலை-எதிர்ப்பு வளர்ச்சியை" வலியுறுத்துகின்றனர். பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் கீழ் அவர்களின் சட்டப் பொறுப்புகளுக்கு இந்த கவனம் முக்கியமான அரசியல் தாக்கங்களைக் கொண்டுள்ளது.


விளக்கத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துவதன் மூலம் வெளிப்படையான பொறுப்புகளைத் தவிர்ப்பதற்கான முயற்சியாக இந்த மாற்றம் தோன்றுகிறது. அத்தகைய மாற்றமானது பாரிஸ் ஒப்பந்தத்தின் 9-வது பிரிவின் நோக்கம் மற்றும் குறிப்பிட்ட தேவைகள் இரண்டையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இது உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்கள் நல்ல நம்பிக்கையுடன் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று கோரும் பாக்டா சன்ட் சர்வாண்டா (pacta sunt servanda) கொள்கையை மீறுகிறது.


pacta sunt servanda - பாக்டா சன்ட் சர்வாண்டா என்பது ஒரு லத்தீன் சொற்றொடர், இதன் பொருள் "ஒப்பந்தங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும்". இது சர்வதேச சட்டத்தின் கொள்கையாகும், இது கட்சிகள் தங்கள் ஒப்பந்தங்கள் மற்றும் கடமைகளை மதிக்க வேண்டும். இது சர்வதேச சட்டத்தின் பழமையான கொள்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது மற்றும் வழக்கமான சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படை சட்டமாகும்.


நிதி நிலைக்குழு (SCF) காலநிலை நிதிக்கான செயல்பாட்டு வரையறையை புதுப்பித்துள்ளது. காலநிலை நிதியத்தின் தற்போதைய வரையறை "காலநிலை நிதி என்பது கார்பன் உமிழ்வைக் குறைத்தல் மற்றும் பசுமை இல்ல வாயுக்களின் குறைப்பை மேம்படுத்துதல், பாதிப்பைக் குறைத்தல், தகவமைப்புத் திறனை அதிகரிப்பது மற்றும் எதிர்மறையான காலநிலை தாக்கங்களுக்கு மனித மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் முக்கிய நீரோட்டம் மற்றும் பின்னடைவை அதிகரிப்பது மற்றும் செயல்களுக்கான நிதியுதவி ஆகியவற்றை உள்ளடக்கியது. ஒரு நாட்டின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு (nationally determined contribution), தழுவல் தொடர்பு (adaptation communication), தேசிய தழுவல் திட்டம் (national adaptation plan), நீண்டகால குறைந்த உமிழ்வு மேம்பாட்டு உத்தி (long-term low-emission development strategy), அல்லது பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகள் மற்றும் மாநாட்டின் குறிக்கோள்களை செயல்படுத்த மற்றும் இதை அடைவதற்கான பிற தேசிய திட்டத்தில் அடையாளம் காணப்பட்டது.


இந்த குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறையில் கூடுதலுக்கான வெளிப்படையான குறிப்பு இல்லாதது ஒரு முக்கியமான மேற்பார்வையாகும். ஏனெனில், இந்த காலநிலை நிதியானது புதிய மற்றும் கூடுதல் ஆதரவை உருவாக்குகிறதா என்பதில் நிச்சயமற்ற தன்மைக்கு இடமளிக்கிறது. "நிதி" என்பது வளரும் நாடுகளுக்கு காலநிலை தணிப்பு மற்றும் தழுவல் ஆகியவற்றுடன் உதவ, வளர்ந்த நாடுகளின் பொது நிதியை இலக்காகப் பயன்படுத்துவதாகும். மாறாக, முதலீடு என்பது காலநிலை முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகாத லாபத்தை எதிர்பார்த்து மூலதனத்தை ஒதுக்கீடு செய்வதை உள்ளடக்கியது. புதிய கூட்டு அளவுகோலின் (NCQG) ஒரு பகுதியாக தனியார் முதலீடுகளைக் கணக்கிடுவது, தெளிவான, இலக்கு மற்றும் சமமான காலநிலை நிதியை வழங்குவதற்கான வளர்ந்த நாடுகளின் பொறுப்பை நீர்த்துப்போகச் செய்கிறது. ஏனெனில், தனியார் மூலதனமானது சர்வதேச காலநிலை தொடர்பான இலக்குகளை, குறிப்பாக தழுவல், பொது நோக்கத்தையும், மேற்பார்வையையும் பெரும்பாலும் கொண்டிருக்கவில்லை. எனவே, பொதுவான கணக்கியல் கட்டமைப்பைக் கொண்டிருப்பது தொடர்ந்து முக்கியமானதாக உள்ளது.


புதிய கூட்டு அளவுகோலின் (NCQG) அடிப்படையில்,


வளரும் நாடுகளுக்கு நிதியுதவி மட்டுமல்ல, அவர்களுக்கு தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை தேவை. இதில், கார்பன் உமிழ்வைக் குறைத்தல் (தணித்தல்) மற்றும் காலநிலை தாக்கங்களுக்கு (தழுவல்) சரிசெய்தல் ஆகிய இரண்டிற்கும் உத்திகளைச் செயல்படுத்த உதவுவதற்கு இவை அவசியம். இருப்பினும், பலதரப்பு நிதி செயல்முறைகள் பெரும்பாலும் நடைமுறை தடைகளை உள்ளடக்கியது. இந்தத் தடைகள் நிதிக்கான அணுகலைக் கட்டுப்படுத்தலாம். ஏனெனில், அவை "பணத்திற்கான மதிப்பு" (value-for-money) என்பதற்குப் பதிலாக "பணத்திற்கான தேவை" (need-for-money) என்பதில் கவனம் செலுத்துகின்றன.


COP29 நெருங்கி வருவதால், காலநிலை நிதிக்கான புதிய கூட்டு அளவீட்டு இலக்கு (NCQG) இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் ஏற்படுத்தாத காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ளும் வளரும் நாடுகளின் அவசரத் தேவைகளை காலநிலை நிதி உண்மையிலேயே பூர்த்தி செய்யுமா என்பதை பேச்சுவார்த்தைகள் தீர்மானிக்கும்.


புதிய கூட்டு அளவுகோலின் (NCQG) வெற்றியானது பலதரப்பு வாதத்தில் நம்பிக்கையை மீட்டெடுக்கிறதா மற்றும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே பலவீனமான நம்பிக்கையை மீண்டும் உருவாக்குகிறதா என்பதைப் பொறுத்து அமைகிறது. வரலாற்றுப் பொறுப்பு, வளரும் நாடுகளின் தனித்துவமான சவால்கள் மற்றும் திறன் மேம்பாட்டின் தேவை ஆகியவற்றைக் கணக்கிடுவதில் செயல்முறை தவறினால், அது பிளவுகளை விரிவுபடுத்தும் அபாயம் உள்ளது. உலகம் பாகுவில் நடைபெற்ற மாநாட்டை நோக்கிச் செல்லும்போது, ​​முக்கியமான கேள்வி எஞ்சியுள்ளது. உலகளாவிய காலநிலை நிதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் உண்மையான நடவடிக்கைக்கு வழிவகுக்குமா அல்லது வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்குமா? என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.




Original article:

Share:

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் -அன்வர் சதாத்

 இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரையொருவர் நம்பாததால், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் மாற்றங்களை செய்து (Indus Waters Treaty (IWT)) மறுபரிசீலனை செய்வது கடினமாக இருக்கலாம்.


சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் (Indus Waters Treaty (IWT)) பிரிவு XII (3)-ன் அடிப்படையில், ஆகஸ்ட் 30, 2024 அன்று, பாகிஸ்தானுக்கு இந்தியா முறையான அறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கை இந்தியாவின் வளர்ந்து வரும் நீர் தேவைகள் மற்றும் அவற்றை எவ்வாறு நிலையான முறையில் பூர்த்தி செய்வது என்பது பற்றிய இந்தியாவின் அக்கறையை எடுத்துக்காட்டுகிறது. மக்கள்தொகை வளர்ச்சி, அதிகரித்து வரும் விவசாயத் தேவைகள் மற்றும் உமிழ்வு இலக்குகளை அடைவதற்கு அதிக சுத்தமான எரிசக்தி தேவை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒப்பந்தத்தை மதிப்பாய்வு செய்து மாற்றங்களை மேற்கொள்ள இந்தியா விரும்புகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஒப்பந்தத்தின் சுமுகமான செயல்பாட்டை சீர்குலைப்பதாகவும், சிந்து நதியின் மீதான உரிமையை முழுமையாகப் பயன்படுத்துவதை கடினமாக்குவதாக இந்தியா அறிக்கையில் சுட்டிக்காட்டியது.


பிரிவு XII ஒப்பந்தத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இந்த மாற்றங்களை காலத்திற்க்கேற்ப மேற்கொள்ளலாம். இருப்பினும், மாற்றங்களை மேற்கொள்ள கடுமையான நிபந்தனை தேவைப்படுகிறது. எந்தவொரு மாற்றத்தையும் செய்வதற்கு இரு நாடுகளும் ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்கி முறைப்படி அதை அங்கீகரிக்க வேண்டும். 2013-ஆம் ஆண்டு கிஷெங்கங்கா நடுவர் மன்றத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் முன்வைத்த வாதங்களின் அடிப்படையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இரு தரப்பினரையும் திருப்திப்படுத்தும் ஒரு திட்டத்தை அவர்கள் உருவாக்குவது சாத்தியமில்லை என்றும் இரு தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு உடன்பாட்டை எட்டுவது கடினமாக இருக்கும் என்றும்  தெளிவாக தெரிந்தது.


மாறுபட்ட அணுகுமுறைகள்


 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் படி இந்தியா, மேல் கரையோரமாக (upstream country), தண்ணீரைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதாகக் கருதுகிறது. பாகிஸ்தான், கீழ் கரையோரமாக (lower riparian) அதன் பக்கத்திற்கு தடையின்றி நீர் பாய்வதை உறுதி செய்வதே ஒப்பந்தத்தின் நோக்கம் என்று நம்புகிறது. நீர் உபயோகம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே உள்ள சர்ச்சைகளுக்கு இந்த விளக்க வேறுபாடு ஒரு முக்கிய காரணமாகும்.


ஹேக்கில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றம் (Permanent Court of Arbitration (PCA)) சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் பிரிவு IV (6)-ன் கீழ் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்கவில்லை. கிஷன்கங்கா நதியில் நீர்மின் திட்டங்களை அமைக்க இந்தியாவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இருப்பினும், இந்தியா ஒரு வினாடிக்கு குறைந்தபட்சம் ஒன்பது கன மீட்டர் நீர் வரத்தை பராமரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இந்தியா தற்போது சிந்து நதியின் மேற்கு துணை நதிகளில் 33 நீர்மின் திட்டங்களைக் கொண்டுள்ளது. அவை கட்டுமானத்தில் அல்லது திட்டமிடல் நிலையில் உள்ளன. சிந்து நதி நீர் ஒப்பந்தம், இந்தியா மேற்கு நதிகளை நீர்மின் உற்பத்திக்கு பயன்படுத்த அனுமதிக்கிறது. இருப்பினும், நதியின் குறைந்தபட்ச நீர் ஓட்டத்தை பராமரிப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும்.


வளங்களை நிர்வகிப்பதில் உள்ள சவால்கள்


சிந்து நதி நீரை திறமையாகப் பயன்படுத்தவும், குறைந்தபட்ச ஓட்டத்தை பராமரிக்கவும், சிந்து நீர்ப் படுகையில் சிறந்த மேலாண்மை தேவைப்படுகிறது. அவ்வாறு செய்தால் நீர் வளம் மேம்படும். இருப்பினும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் தற்போதைய கட்டமைப்பின் கீழ் இந்த இலக்குகளை அடைவது கடினமாக இருக்கும்.  சிந்து நதி நீர் ஒப்பந்தம் சிந்துப் படுகையை கிழக்கு மற்றும் மேற்கு நீராகப் பிரிக்கிறது. கிழக்கு நதிகள் மீது இந்தியா முழு உரிமை பெற்றுள்ளது: கிழக்கு நதிகள் ரவி, சட்லஜ் மற்றும் பியாஸ் ஆகியவை பிரிவு II-ல் இடம்பெற்றுள்ளன. மேற்கு நதிகள் மீது பாகிஸ்தானுக்கு முழு உரிமை பெற்றுள்ளது: சிந்து, ஜீலம் மற்றும் செனாப்  ஆகியவை பிரிவு III-ல் இடம்பெற்றுள்ளன.  நதிகளை பிரிப்பதற்கான காரணம் வரலாற்று நிகழ்வுகளின் விளைவாக இருந்தது. குறிப்பாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின் தாக்கத்தால் ஏற்பட்டது. அப்போது, இந்திய மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் இருவரும் இதை ஒரே நடைமுறை தீர்வாகக் கருதினர். நதிகளை பிரிப்பதன் தாக்கம் இந்த பிரிவு ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகளுக்கு இடையிலான இயற்கை இணைப்புகளை துண்டித்தது. இதன் விளைவாக, நீர் மேலாண்மை தொடர்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே குறைந்தபட்ச ஒத்துழைப்பு இல்லை.


சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் பாதிப்பு இல்லை என்ற விதி இல்லை. ஆனால், இந்தியாவும் பாகிஸ்தானும் அதை பின்பற்ற வேண்டும். ஏனெனில், இது சர்வதேச சட்டத்தின் ஒரு பகுதியாகும். இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளக்கூடிய நதிகளை பாதிக்கக்கூடிய நீர்மின் திட்டங்களுக்கு பயன்படுத்தும் போது பிரச்சனை ஏற்படுவதை தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். 2010-ஆம் ஆண்டு பல்ப் மில்ஸ் வழக்கில், சர்வதேச நீதிமன்றம் மற்ற நாடுகளை பாதிக்கக்கூடிய திட்டங்களுக்கு சர்வதேச சட்டத்தின்படி எல்லை தாண்டிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை (environmental impact assessment (EIA)) நடத்த வேண்டும் என்று கூறியது. இருப்பினும், போதுமான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்ன விதிகளை கொண்டிருக்க வேண்டும் என்பதை சர்வதேச நீதிமன்றம் குறிப்பிடவில்லை.


1997 ஐநா நீர்வழிகள் மாநாட்டின் பிரிவு 5-ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சர்வதேச நீர்வழிகளின் சமமான மற்றும் நியாயமான பயன்பாட்டு விதி (equitable and reasonable utilization (ERU)), எதிர்பாராத சூழ்நிலைகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு வழிகாட்ட உதவும். பிரிவு 6 ERU-ஐ அடைவதற்கு கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகளை பட்டியலிடுகிறது. பனிப்பாறைகள் உருகுதல் சிந்து நதியின் நீர் ஓட்டத்தை 30%-40% குறைக்கக்கூடிய பருவநிலை மாற்றம் போன்ற எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள இந்த விதி பயனுள்ளதாக இருக்கும். ஒப்பந்தத்தை மதிப்பாய்வு செய்யும் போது, ​​பிரிவு VII.1c கருத்தில் கொள்ள வேண்டும். இந்த  பிரிவு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டால் நதிக்கரையோர பொறியியல் திட்டங்களில் இணைந்து செயல்பட இந்தக் கட்டுரை அனுமதிக்கிறது. நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்காக நிர்வகிக்கப்பட்ட கூட்டுத் திட்டங்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நீர்ப் பிரச்சினைகளைக் குறைக்க உதவும்.



சில பரிந்துரைகள்


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நம்பிக்கை இல்லாததால், மாற்றங்களைச் செய்வதற்கான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது கடினமாக இருக்கலாம். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் முறையான பேச்சுவார்த்தை செயல்முறையைப் பயன்படுத்தி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் அல்லது ஒத்துழைப்பதற்கான பிற வழிகளை உருவாக்குவது ஒரு பரிந்துரை. சிந்துப் படுகையில், என். ஜவாஹிரி மற்றும் டி. மைக்கேல் பரிந்துரைத்தபடி, 2018 சிந்துப் படுகையின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒப்பந்தத்தைப் பயன்படுத்தும் அதே வேளையில், சிக்கல்கள் வரும்போது அவற்றைத் தீர்க்க இது உதவும்.




Original article:

Share:

பொருளாதாரத்தில் எதிர்மறைகளை விட நேர்மறைகள் அதிகம் என்கிறார் ஆர்பிஐ ஆளுநர்

 நிதித் துறையின் தலைவர்கள் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் நேர்மறையான கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள்.


அக்டோபர் மாதம், நிதிக் கொள்கை மதிப்பாய்வில் "நடுநிலையான" (neutral) நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பிறகும், RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ், வட்டி விகிதக் குறைப்பு விரைவில் நடக்காது என்று பரிந்துரைத்தார். மேலும், பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்தும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

வளர்ச்சி குறித்த தரவுகள் கலவையானவை என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், எதிர்மறைகளை விட நேர்மறையான அம்சங்கள் வலுவானவையாக உள்ளன என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

 

அவர் மேலும் கூறியதாவது, "நகர்ப்புறத் துறையில் தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் (index of industrial production (IIP)) எண்ணிக்கை மற்றும் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களின் விற்பனை மட்டுமே கணிசமாக குறைந்துள்ளது. மூன்று நாட்களாக நடந்த Business Standard BFSI உச்சிமாநாடு 2024-ன் முதல் நாளில் நடந்த fireside chat உரையாடலின் போது இதை தெரிவித்தார்.


ஆனால் அது தவிர, சரக்கு மற்றும் சேவை வரி (goods and services tax), இ-வே பில் (e-way bills), சுங்கச் சாவடி வசூல் (toll collection), விமானப் பயணிகள் போக்குவரத்து இடையூறு (air passenger traffic) மற்றும் எஃகு, சிமென்ட் மற்றும் ஆட்டோமொபைல் தொழில்களின் செயல்திறன் மிகவும் சிறப்பாக உள்ளது. உள்வரும் தரவு நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களைக் காட்டுகிறது. இருப்பினும், எதிர்மறையானவற்றைவிட நேர்மறையான அம்சங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

 

அக்டோபர் கொள்கை மதிப்பாய்வில் "நடுநிலையான" (neutral) என்ற நிலைப்பாட்டை மாற்றியபோது, ​​இந்த கொள்கையில் ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாக மாறாமல் இருந்தது. அடுத்த கொள்கை மறுஆய்வு, டிசம்பர் 4-6 தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது.

 

செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 5.5 சதவீதமாக இருந்தது. இது அக்டோபரில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது செப்டம்பர் மாதத்தை விட அதிகமாக இருக்கலாம். இருப்பினும், அடுத்த கட்டமாக வரவிருக்கும் கூட்டத்தில் வரிக் கட்டணக் குறைப்பு இருக்கும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை.


உச்சிமாநாட்டில் நடந்த fireside chat உரையாடலின் போது, ​​ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைவர் சி.எஸ்.செட்டி, வாடிக்கையாளர் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளில் (value-added services) வங்கிகள் அதிக கவனம் செலுத்துவதாகவும், வாடிக்கையாளரின் உறவுகளை வலுப்படுத்தவும் அவர்கள் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


"இன்று நாம் அனைவரும் வைப்புத்தொகை திரட்டுவதில் (deposit mobilisation) கவனம் செலுத்துகிறோம்," என்று சி.எஸ்.செட்டி கூறினார்.

 

குழு விவாதத்தில் ஈடுபட்ட பொதுத்துறை வங்கியாளர்களால் வளர்ச்சியில் ஆளுநரின் நம்பிக்கை பகிர்ந்து கொள்ளப்பட்டது. இடர் மேலாண்மையை மேம்படுத்துவதை அவர்கள் வலியுறுத்தினார்கள்.

 

கடந்த இரண்டரை ஆண்டுகளில், வைப்புத்தொகைக்கான வளர்ச்சி (deposit growth) மெதுவாக உள்ளது. இது வங்கிகள் தங்கள் வளங்களை அதிகரிக்க புதிய வழிகளைக் கண்டறியத் தூண்டியது.

 

சமீபத்திய தரவு, வைப்புத்தொகையின் வளர்ச்சி, கடன் வளர்ச்சியை விட சற்று அதிகமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.

 

பேங்க் ஆஃப் பரோடாவின் நிர்வாக இயக்குனரும் (MD) மற்றும் CEOவுமான தேபாதத்தா சந்த், "வங்கிகளாகிய நாங்கள் பொருளாதாரத்தை பிரதிபலிக்கிறோம். பொருளாதாரம் வலுவாக இருக்கும் வரை, வங்கித் துறை நல்ல நிலையில் இருக்கும்" என்று விளக்கினார்.

 

தனியார் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிகள் அதிக வைப்புத்தொகைக்கான விகிதங்களை வழங்குவதைவிட வாடிக்கையாளர் சேவையில் அதிக கவனம் செலுத்தினர்.

 

YES வங்கியின் MD மற்றும் CEO, பிரசாந்த் குமார் கருத்துப்படி, தனியார் வங்கிகள் எப்போதும் வைப்புத்தொகையை ஈர்ப்பதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டிருக்கின்றன. இதைச் செய்ய, அவர்கள் வாடிக்கையாளர்களை தீவிரமாக அணுகியுள்ளனர்.

 

அரசு மற்றும் பெருநிறுவன அமைப்புகள் இரண்டும் காலப்போக்கில் மிகவும் திறமையானதாக மாறிவிட்டதாக குமார் விளக்கினார். இதன் விளைவாக, வங்கிகளில் இருந்து அதிக பணம் மற்ற வகை முதலீடுகளுக்கு நகர்கிறது. இந்த மாற்றம் வங்கிகளுக்கு கடன் வழங்குவதற்குப் பயன்படுத்தக்கூடிய வைப்புத்தொகையை பெறுவதை கடினமாக்கியுள்ளது. மற்ற தனியார் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடலின் போது அவர் இதைப் பற்றி கூறினார்.

 

இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் பலன்களைப் பார்க்கின்றன. இந்த வங்கிகளின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தியா இன்னும் அவர்களுக்கு ஒரு முக்கியமான சந்தையாக உள்ளது. இருப்பினும், பெரும்பாலான வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் சில்லறை வங்கியில் கவனம் செலுத்துவதில்லை.

 

ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கி நிறுவனத்தின் (HSBC) இந்திய தலைமை நிர்வாக அதிகாரி ஹிதேந்திர டேவ், சில வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் உள்ள தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏன் சேவை செய்கின்றன என்பதை விளக்கினார். 1.4 பில்லியன் இந்தியர்களில், சுமார் 2-3 சதவீதம் இந்தியர்களுக்கு  உலகளாவிய வங்கிகள் மட்டுமே பூர்த்தி செய்யக்கூடிய தனித்துவமான தேவைகளைக் கொண்டுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார். உதாரணமாக, சிலர் தங்கள் குழந்தைகளை கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப விரும்புகிறார்கள் அல்லது பிற நாடுகளுக்கு இடமாற்றத்தின் மூலம் தேவைப்படும் வேலைகளில் வேலை செய்ய விரும்புகிறார்கள். இந்தியாவில் இன்னும் சில்லறை விற்பனையில் இருக்கும் சில முக்கிய உலகளாவிய வங்கிகளில் HSBC ஒன்றாகும்.


சிறு நிதி வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உலகளாவிய வங்கி உரிமத்தை இலக்காகக் கொண்டுள்ளனர். இது, இந்த ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றத்திற்கான கட்டுப்பாட்டாளரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறது. இந்த சிஇஓக்கள் தாங்கள் ஏற்கனவே மாற்றத்திற்கு தேவையான அமைப்புகளை வைத்திருப்பதாக கூறினர். இந்த அமைப்புகளில் முக்கிய வங்கியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக நடைமுறைகள் ஆகியவை அடங்கும்.

 

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் MD & CEO அஜய் கன்வால், “ஒரு திட்டமிடப்பட்ட வணிக வங்கி ஆகும். சிறு நிதி வங்கிகளுக்கான அனைத்து கொள்கைகளும் விதிமுறைகளும் ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 

ஒரு விவாதத்தில், Razorpay-ன் இணை நிறுவனர் ஷஷாங்க் குமார், இந்தியாவின் நிதி தொழில்நுட்பச் (fintech) சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சிக்கு கட்டுப்பாடுகள் அவசியம் என்று குறிப்பிட்டார். இந்த விதிகள் புதிய நிறுவனங்களில் கண்டுபிடிப்புகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று அவர் விளக்கினார். பாரம்பரிய வங்கிகள் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ்  கட்டுப்பாட்டாளராக இருக்க வேண்டும் என்று குமார் வலியுறுத்தினார்.

 

"ஒழுங்குமுறை சில நேரங்களில் சில பகுதிகளில் பின்தங்கியுள்ளது. ஆனால், அது புதுமைகளை ஊக்குவிக்கிறது. தொழில்நுட்பமானது சில துறைகளில் ஒழுங்குமுறையை விட வேகமாக நகரும், சில கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன. ஒழுங்குமுறையில் அடிப்படையில் சில வேண்டுமென்றே புதுமைகள் உள்ளன. இது நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உதாரணமாக, எப்படி நாம் பணம் செலுத்துதல் மற்றும் வங்கியை ஊக்குவிக்க முடியும்?" என்று குமார் குறிப்பிடுகிறார்.

 

நான்கு நிறுவனங்களுக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய நடவடிக்கைகள் ஒட்டுமொத்தத் துறையையும் பாதிக்காது என்று வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (Non-Banking Financial Companies (NBFC)) CEO க்கள் நம்புகின்றனர். ஏனென்றால், இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் இந்த தனிப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான குறிப்பிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தியிருந்தன.

 

“வங்கிகளின் நிழலில் இருந்து வெளிவருவது?” (Coming out of the Shadow of Banks?) என்ற தலைப்பில் ஒரு குழு விவாதத்தின் போது, ​​பிரமல் கேபிடல் & ஹவுசிங்கைச் சேர்ந்த ஜெய்ராம் ஸ்ரீதரம், கடந்த ஒன்றரை வருடங்களாக இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களை பாதித்துள்ளது (NBFC) என்று குறிப்பிட்டார்.

 

“சமீபத்திய நடவடிக்கை நம் மனதில் இன்னும் கொஞ்சம் அதிகமாக உள்ளது. ஆனால், பொதுவாக, இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அனைத்து கடன் வழங்குநர்களின் விவகாரங்களையும் மிகவும் சரியான முறையில் நடத்துவதில் அக்கறை கொண்டுள்ளது” என்று ஸ்ரீதரம் கூறினார்.

 

இந்திய ரிசர்வ் வங்கி எழுப்பியுள்ள கவலைகள் குறித்து ஒட்டுமொத்த கடன் வழங்கும் துறையும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

 

அவர் மேலும் கூறுகையில், "பொதுவாக, இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை எந்தவொரு குறிப்பிட்ட கட்டமைப்பிற்கும் சாதகமாக இல்லை. மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் அணுகுமுறை ஜனநாயகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

 

டாடா கேபிட்டலின் ராஜீவ் சபர்வால் கூறியதாவது, எனது அனுபவத்தில், இந்திய ரிசர்வ் வங்கி ஒருபோதும் ஆச்சரியப்படுத்துவதில்லை. எது சரி எது தவறு என்பதற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது. கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அப்போதுதான் இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும்.

                   


Original article:

Share: