நெகிழி மாசுபாடு (plastic pollution) பிரச்சினை குறித்து…

 பிளாஸ்டிக்கைத் தடைசெய்வதால் ஏற்படும் பொருளாதாரச் செலவுகள் மற்றும் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும் விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


ஒரு வார கால இழுபறி நீடித்த போதிலும், நெகிழியை படிப்படியாக ஒழிக்க ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Programme) முன்னெடுத்த லட்சிய முயற்சி தோல்வியில் முடிந்தது. உலகளாவிய நெகிழி ஒப்பந்தம் (Global Plastics Treaty) என்பது 2022-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளைவாகும். 'கடல் சுற்றுச்சூழல் உட்பட பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருங்கள்' என்பது அதன் முக்கிய முழக்கமாகும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாடுகள் ஒரு பரந்த கட்டமைப்பு ஒப்பந்தத்தை உருவாக்க சமீபத்திய சந்திப்பு (இறுதி ஒன்று என்று கூறப்படுகிறது) உட்பட ஐந்து முறை சந்தித்தன. 2022-ஆம் ஆண்டின் ஐ.நா தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கதாகக் கருதப்பட்டது. ஏனெனில், இது உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் மட்டுமே பிளாஸ்டிக் மாசுபாட்டை தீர்க்க முடியும் என்பதில் உலகம் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தது.  


இருப்பினும், இது பிளவுபடுத்துவதாக நிரூபிக்கப்பட்ட பிரச்சினைக்கான தீர்வாகும். பூசானில் நடந்த ஐந்தாவது சுற்று கூட்டங்களில் கூடியிருந்த கிட்டத்தட்ட 170 நாடுகளில், ஏறக்குறைய பாதி நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையிலான மற்றும் பசிபிக் தீவு நாடுகளின் ஆதரவுடன் நவீன காலத்தில் நுகர்வை செயல்படுத்துவதில் பிளாஸ்டிக்கின் குறிப்பிடத்தக்க பங்கு இருந்தபோதிலும், அதன் ஒப்பீட்டளவில் அழிக்க முடியாத தன்மை இப்போது சுற்றுச்சூழல் ஆபத்தாக உள்ளது என்று கருதினர். அது நிலத்திலும் கடலிலும் உள்ள விலங்குகளின் உடல்களுக்குள் ஊடுருவத் தொடங்கியிருந்தது.  மேலும், நகராட்சியின் மறுசுழற்சி முறைகளிலிருந்து அதிக அளவு குப்பைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

  சிறந்த மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு போன்றவை இந்த சிக்கலை தீர்க்க முடியும் என்ற கூற்று சில நாடுகளால் நம்ப முடியாத செய்தியாகக் கருதப்படுகிறது. எனவே, நெகிழிக்கான மூலப்பொருளான விர்ஜின் பாலிமரின் (virgin polymer) உற்பத்தியை படிப்படியாகக் குறைப்பதே நெகிழி மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரேவழி என்று அவர்கள் நம்புகிறார்கள். எவ்வாறாயினும், பல பெரிய வளரும் நாடுகளும், எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு பிரித்தெடுப்பதை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரங்களைக் கொண்டுள்ள நாடுகளும் அத்தகைய முன்மொழிவை எதிர்க்கின்றன. நெகிழி உற்பத்தியைக் குறைப்பதற்கான அழைப்புகளை சுற்றுச்சூழல்வாதம் என்ற போர்வையில் வர்த்தகத் தடைகளாக அவர்கள் பார்க்கிறார்கள். 


நெகிழி மாசுபாடு பிரச்சினையை வடிவமைப்பதை 2022 தீர்மானத்தின் நோக்கத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக உற்பத்தியை ஒழுங்குபடுத்த வேண்டிய ஒன்றாக அவர்கள் பார்க்கிறார்கள். இது குறித்த பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், நாடுகள் அடுத்த ஆண்டு மீண்டும் கூடும். ஒருவேளை ஒரு புதிய முன்னேற்றம் ஏற்பட்டால் மேலும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு அப்பால் செல்லும். நெகிழி உற்பத்தியை குறைக்கும் நாடுகளுக்கு ஆதரவளிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. 


இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யும் நெகிழியில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே மறுசுழற்சி செய்ய முடியும் என்பதை அது அங்கீகரிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருளாதாரத்திற்கு முக்கியமானதாக இருந்தாலும், இந்தியாவில் உள்ள மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களில் அதன் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும். வரலாற்றில் பின்தங்குவதை விட நெகிழிப் பயன்பாட்டை குறைக்க திட்டமிடுவது நல்லது.




Original article:

Share:

மேற்கு ஆப்பிரிக்கா மீது இந்தியாவின் இராஜதந்திர கவனம் -ஹர்ஷ் வி.பந்த், சமீர் பட்டாச்சார்யா

 நிதியளிப்பு மற்றும் உட்கட்டமைப்பை உருவாக்குவதில் சீனாவின் ஆர்வம் அதிகரித்துள்ள போதிலும், இந்தியா இன்னும் நைஜீரியாவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக உள்ளது.


கடந்த மாதம், G-20 உச்சி மாநாட்டிற்காக பிரேசில் செல்லும் வழியில் நைஜீரியாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு இராஜதந்திர பயணத்தை மேற்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் இரண்டு பதவிக் காலத்தில் உகாண்டா உட்பட 10 ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்றார். உகாண்டாவில், ஆப்பிரிக்கா மீதான இந்தியாவின் பார்வையை கோடிட்டுக் காட்டும் வரலாற்று உரையை நிகழ்த்தினார். இருப்பினும், அவரது நைஜீரியா பயணம் மிகவும் முக்கியமானது. அவர் மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும்போது ஆப்பிரிக்காவுக்குச் செல்வது இதுவே முதல் முறை. மேலும், 17 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.

 

அபுஜா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அதிபர் போலா அகமது டினுபு வரவேற்றபோது நைஜீரியா இந்தியாவுக்கு மரியாதை காட்டியது. பின்னர், மோடிக்கு நைஜீரியாவின் இரண்டாவது மிக உயர்ந்த தேசிய விருதான கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் (Grand Commander of the Order of the Niger) விருது வழங்கப்பட்டது. ராணி இரண்டாம் எலிசபெத்துக்குப் பிறகு, 1969 முதல் இந்த விருதைப் பெறும் இரண்டாவது வெளிநாட்டுத் தலைவர் ஆவார். இது இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய முக்கியத்துவத்தையும், உலகளாவிய தெற்கின் ஆதரவிற்காக பிரதமர் மோடி பெற்றுள்ள நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது.

 

இந்தியா-நைஜீரியா உறவு 


நைஜீரியா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரம் மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். இது மேற்கு ஆபிரிக்காவில் ஒரு பெரிய சக்தி மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நைஜீரியா ஒரு ஜனநாயகத் தலைமையாகக் கருதப்படுகிறது மற்றும் ஆப்பிரிக்காவில் மோதல்களைத் தீர்க்க உதவியது. நைஜீரியாவுடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்துவது நைஜீரியாவைத் தாண்டி நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

 

அதிபர் டினுபுவுடனான தனது கலந்துரையாடலில், நைஜீரியாவுடனான தனது கூட்டாண்மைக்கான இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை பிரதமர் மோடி வலியுறுத்தினார். பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், வர்த்தகம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார். பயங்கரவாதம், பிரிவினைவாதம், கடற்கொள்ளையர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றுடன் நைஜீரியாவின் சவால்களைக் கருத்தில் கொண்டு, தொடர்ந்து பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். குறிப்பாக, போகோ ஹராம் போன்ற குழுக்களுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளில் இணைந்து செயல்படுவது ஆகியவை இதில் அடங்கும்.


பிரதமர் மோடியின் பயணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் லாகோஸுக்கு இந்திய பாதுகாப்புத் துறைக் குழுவின் வருகையைத் தொடர்ந்து வருகிறது. அந்த பயணத்தின் போது, ​​அதிபர் டினுபு இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டினார். எகிப்து, அல்ஜீரியா, மொராக்கோ, தான்சானியா மற்றும் மொசாம்பிக் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் ஆப்பிரிக்காவிற்கான முக்கியமான பாதுகாப்பு சப்ளையராக இந்தியா மாறி வருகிறது.


இந்தியாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான 60 ஆண்டுகால நெருக்கமான கூட்டுறவில், நைஜீரியாவின் வளர்ச்சிக்கு இந்தியாவும் இரண்டு முக்கிய வழிகளில் ஆதரவளித்துள்ளது. இந்தியா $100 மில்லியன் மதிப்பிலான சலுகைக் கடன்களை வழங்கியுள்ளது மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை வழங்கியுள்ளது. இந்த கூட்டாண்மை இந்தியாவின் தனித்துவமான அணுகுமுறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது "இந்திய வழி" (India Way) என்று அழைக்கப்படுகிறது.


நைஜீரியாவின் சீன தொடர்பு 


நைஜீரியா 200க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களைக் கொண்டுள்ளது மற்றும் சீனாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தை மற்றும் ஆப்பிரிக்காவில் இரண்டாவது பெரிய வர்த்தக நட்புநாடாகும். நைஜீரியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி சந்தையாகவும் சீனா உள்ளது. நைஜீரியாவில் 22 பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு $47 பில்லியன்களுக்கு மேல் சீனா நிதியளித்துள்ளது. மார்ச் 31, 2020 நிலவரப்படி, நைஜீரியாவிற்கான சீனக் கடன்கள் மொத்தம் $3.121 பில்லியன் ஆகும். இது நைஜீரியாவின் மொத்த வெளிநாட்டுக் கடனான $27.67 பில்லியனில் 11.28% ஆகும். நைஜீரியா தேசிய பொது பாதுகாப்பு தகவல் தொடர்பு அமைப்பு, அபுஜா லைட் ரயில் மற்றும் விமான நிலைய முனைய விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு சீன நிதியைப் பயன்படுத்தியுள்ளது.


2023ஆம் ஆண்டில், சரக்கு நெரிசலைக் குறைத்து 170,000-க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மேற்கு ஆபிரிக்காவின் மிகப்பெரிய லெக்கி ஆழ்கடல் துறைமுகத்திற்கு சீனா நிதியளித்தது. இந்த துறைமுகம் நைஜீரியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சீன தொழில்நுட்ப நிறுவனமான Huawei நைஜீரியாவில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. 2019 முதல், Huawei 2,000 நைஜீரிய இளைஞர்கள் மற்றும் 1,000 ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. மேலும், சைபர் பாதுகாப்பில் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது. Huawei நைஜீரியாவில் 27,500 மொபைல் போன் டவர்களையும் 10,000 கிமீ ஃபைபர் ஆப்டிக் கேபிளையும் அமைத்துள்ளது. கூடுதலாக, நாட்டின் நில எல்லைகளில் மின்னணு கண்காணிப்பு அமைப்பை நிறுவ நைஜீரியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.


நைஜீரியாவின் சுரங்கத் துறையில் சீனாவும் ஈடுபட்டுள்ளது. பிப்ரவரியில், கடுனா, நைஜீரியாவின் முதல் லித்தியம் செயலாக்க ஆலையை உருவாக்க சீனாவின் மிங் சின் மினரல் செப்பரேஷன் நிக் லிமிடெட் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தது. இது மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், நாட்டிலிருந்து கச்சா லித்தியம் வாங்கும் டெஸ்லாவின் திட்டத்தை நைஜீரியா சமீபத்தில் நிராகரித்தது. சீனா சினோமா சர்வதேச பொறியியல்  மற்றும் நைஜீரியாவின் டாங்கோட் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை ஒகுன் மாநிலத்தில் ஆண்டுக்கு 6 மில்லியன் டன் திறன் கொண்ட சிமென்ட் ஆலையை உருவாக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.


நைஜீரியாவின் உட்கட்டமைப்பில் வளர்ந்துவரும் சீன ஈடுபாடு இருந்தபோதிலும், இந்தியா நைஜீரியாவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்தியாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான வர்த்தகம் 2021-22-ல் $14.95 பில்லியலிருந்து 2023-24-ல் $7.89 பில்லியகக் குறைந்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக எண்ணெய் இறக்குமதி செய்வதே இதற்கு முக்கிய காரணம். இருந்த போதிலும், இந்தியாவும் நைஜீரியாவும் பல விஷயங்களில் தொடர்ந்து இணைந்து செயல்படுகின்றன. உலகளவில் தெற்கின் தலைவர்களாக, விளங்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவு, உலகளாவிய தெற்கிற்கு அதிகம் பயனளிக்கும்.


பிரதமர் மோடியின் நைஜீரியா பயணம் நாட்டை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. இருப்பினும், நல்லெண்ணத்தை உண்மையான முடிவுகளாக மாற்ற நிறைய தொடர்ச்சியான முயற்சிகள் இன்னும் தேவைப்படுகிறன.


ஹர்ஷ் வி பந்த், புது தில்லியில் உள்ள அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆய்வுகளுக்கான துணைத் தலைவர்; சமீர் பட்டாச்சார்யா, இணை ஆய்வாளர், ஆப்பிரிக்கா, அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன், புது தில்லி 




Original article:

Share:

புதிய தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கான பணப் பரிமாற்றத் திட்டங்கள் - அபிஜித் நாயர், ஸ்ரேயா கே.சுகதன்

 காட்சிகள் நன்றாக இருப்பது போல் தோன்றினாலும், ஏழைகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளும் சூழலை அரசு உருவாக்குவதாக தோன்றுகிறது.

 

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல்களில், இரு மாநிலங்களும் தங்கள் அரசியல் பிரச்சாரங்களில் பெண்களுக்கான பணப் பரிமாற்றத் திட்டங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் ஒரே மாதிரியான முறையைப் பின்பற்றின. மகாராஷ்டிர அரசு, ஆகஸ்ட் மாதத்தில் “முதலமைச்சரின் மஜி லட்கி பஹின் யோஜனா” (Mukhyamantri Majhi Ladki Bahin Yojana’) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் தகுதியுள்ள பெண்கள் தங்கள் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் மாதம் ₹1,500 பெறுவார்கள். இதேபோல், ஜார்க்கண்ட் அரசாங்கம் ஆகஸ்ட் மாதம் ஜார்கண்ட் முதலமைச்சர் மைய சம்மான் யோஜனா (Jharkhand Mukhyamantri Maiya Samman Yojana) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது, தகுதியான பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்குகிறது.


  நேரடி பணப் பரிமாற்றத் திட்டங்கள் அரசியலில் புதிதல்ல. ஆக்சிஸ் வங்கியின் கூற்றுப்படி, 14 மாநிலங்கள் ஏற்கனவே இத்தகைய திட்டங்களைக் கொண்டுள்ளன. இந்த திட்டங்கள் இந்தியாவின் வயது வந்த பெண் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கை உள்ளடக்கியது. எனவே, பெண்களுக்கான பணப் பரிமாற்றத் திட்டங்கள் மாநிலங்கள் முழுவதும் ஏன் பிரபலமடைந்து வருகின்றன? இது கொள்கை கற்றல் காரணமா, அல்லது மாநில அரசுகள் தவறவிடுவதைப் பற்றி கவலைப்படுகிறதா? நலனுக்காக வேறு யோசனைகள் இல்லாத நிலையை நாம் அடைகிறோமா? மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த வகையான நலன்களை ஏற்றுக்கொள்வதற்கு நான்கு காரணங்கள் இருக்கலாம். 


பொது-அரசியல் வெளியில் அதிக பெண்கள் 


முதலாவதாக, அதிகமான பெண்கள் இந்தியாவின் அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக மாறி வருகின்றனர். 1962-ல், 47% பெண்கள் மட்டுமே வாக்களித்தனர். ஆனால், 2024-ல் அந்த எண்ணிக்கை 66% ஆக உயர்ந்துள்ளது. மாநில சட்டசபை தேர்தல்களிலும் இதே போக்கு காணப்படுகிறது. அதிகமான பெண்கள் தாங்களாகவே வாக்களிப்பதால், “பெண்களுக்கான தொகுதி” என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா விரைவாக நிறைவேற்றப்படுவதும், “பெண் சக்தி” (Nari Shakti) மீதான கவனம் இந்த மாற்றத்திற்கு பதிலளிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் மீது அழுத்தம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. தேர்தல்களில், பெண்களின் வாக்குகளில் ஏற்படும் மாற்றமே முடிவைத் தீர்மானிக்கும். பெண் வாக்காளர்களை புறக்கணிப்பது பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

 

இடைத்தரகர்களை புறக்கணித்தல் 


இரண்டாவதாக, நேரடி பயன் பரிமாற்றம் (Direct Benefit Transfer (DBT)) இப்போது மிகவும் பிரபலமாக உள்ளது. வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்வதால் அரசுக்குப் பலன்கள் உண்டு. நன்மைகளை வழங்குவதை அடிக்கடி தடுக்கும் இடைத்தரகர்களைத் தவிர்க்க அவை உதவுகின்றன. இந்தியாவில் ஊழல் என்பது சாதாரணமாக உள்ளது அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் போராடுகிறது. DBT மூலம், அரசாங்கம் நேரடியாக மக்களின் கணக்குகளுக்கு பணத்தை அனுப்பலாம், அமைப்பில் உள்ள பிழைகளை குறைக்கலாம். அரசியல் கட்சிகள் தனிப்பட்ட தலைவர்கள் மீது அதிக கவனம் செலுத்துவதால், DBT தலைவருக்கும் மக்களுக்கும் இடையே நேரடித் தொடர்பை உருவாக்க உதவுகிறது. யாமினி ஐயர் மற்றும் நீலஞ்சன் சிர்கார் இதை "தொழில்நுட்ப-தேசபக்தி" (techno-patrimonial) என்று அழைக்கிறார்கள். அதன் படி தொழில்நுட்பம் தலைவர் மீதான விசுவாசத்தை அதிகரிக்க உதவுகிறது.

 

மூன்றாவது காரணம் முந்தைய புள்ளியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதைக் காட்டுவதற்கு பணப் பரிமாற்றம் எளிதான வழியாகும். அரசு நடத்தும் பள்ளிகள், மருத்துவமனைகள் அல்லது புதிய உள்கட்டமைப்பைக் மேம்படுத்துவதற்கு சிறிது காலம் தேவைப்படும். இந்த திட்டங்களுக்கு கவனமாக திட்டமிடல், முதலீடு மற்றும் முடிவுகளைக் காண்பிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது.


கூடுதலாக, இந்தியாவில் ஏழைகள் ஒரு குறிப்பிடத்தக்க தொகுதியை உருவாக்குகிறார்கள். பொருளாதார வளர்ச்சியின் ஆதாயங்கள் சமமாக பகிர்ந்து கொள்ளப்படவில்லை. இதன் விளைவாக, பல வாக்காளர்கள் பணப் பரிமாற்றம் போன்ற பொதுத் திட்டங்களை மதிக்கின்றனர். பயனாளிகளின் கணக்குகளுக்கு வழக்கமான பணம் செலுத்துவது தலைவர்களின் நன்மை செய்யும் மனநிலையை காட்டுகிறது. இது கட்சியின் நிலையை உயர்த்த உதவும்.


முக்கிய பிரச்சினை 


நான்காவதாக, இது இந்தியாவின் நலன்புரி நிலப்பரப்பில் உள்ள பெரிய சிக்கலையும் சுட்டிக்காட்டுகிறது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் ஒரே மாதிரியான திட்டங்களைக் கொண்டு வருவதால், நலன்களின் சீரான நிலை, இந்தியாவில் நலனுக்கான கற்பனையின் குறைபாட்டைக் குறிக்கிறது. சிலர் இதை "கொள்கை கற்றல்" (policy learning) என்று அழைக்கலாம். இருப்பினும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள்கூட நேரடி பலன் பரிமாற்ற முறைக்கு மாற்று வழிகளை வழங்கவில்லை. பாரதீய ஜனதா கட்சி நாடு முழுவதும் இந்த அமைப்பை முழுமையாக்கியுள்ளது என்பது கவலைக்குரியது.

 

பணப் பரிமாற்றத் திட்டங்கள் வறுமைக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வாகத் தோன்றினாலும், அவை சிக்கல்களுடன் வருகின்றன. தொழில்நுட்பத்தின் மூலம் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், இந்திய அரசு தனது சொந்த திறனை மேம்படுத்துவதைத் தவிர்க்கிறது என்று அறிஞர்கள் வாதிடுகின்றனர். ஏழைகளுக்கு பணத்தை வழங்குவதன் மூலம், அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு தனியார் மாற்றுகளை நம்புவதற்கு அரசு அவர்களை ஊக்குவிக்கிறது. இந்தியாவில் பணக்காரர்கள் ஏற்கனவே தனியார் சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள். இப்போது, ஏழைகளும் அதையே செய்கிறார்கள். இருப்பினும், ஏழைகள் அரசில் இருந்து விலக முடியுமா? பணப் பரிமாற்றம் தற்காலிக நிவாரணம் மட்டுமே அளிக்கும். பெரிய பிரச்சனைகள் இன்னும் மோசமடைவதற்கு முன்பு, அவை ஏற்கனவே தீர்க்கப்படாவிட்டால், அவற்றை அரசு தீர்க்க வேண்டும்.

 

வரும் நாட்களில், “லட்கி பஹின்” மற்றும் “மையன் சம்மான்” போன்ற திட்டங்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கும். அப்படியென்றால், இது தான் முன்னோக்கி செல்லும் புதிய வழியா? அல்லது இந்த முறையில் மாற்றம் வருமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் எதிர்கால நலனை வடிவமைக்கும்.


அபிஜித் நாயர், லண்டன் கிங்ஸ் கல்லூரியின் கிங்ஸ் இந்தியா இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சி அறிஞராக உள்ளார். ஸ்ரேயா கே.சுகதன் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையில் ஆராய்ச்சி அறிஞர். 




Original article:

Share:

சாதிவாரி கணக்கெடுப்பு பயனுள்ளதாக இருக்குமா? -அனிஷ் குப்தா, சுபம் சர்மா

 சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை ஆதரிப்பவர்கள் அது குறிப்பிடத்தக்க பலன்களைக் கொண்டிருப்பதாக நம்புகிறார்கள். ஒவ்வொரு சாதியினருக்கும் அரசு வேலைகள் மற்றும் பிற வாய்ப்புகளில் நியாயமான இடஓதுக்கீட்டைப்பெற சாதிவாரி கணக்கெடுப்பு உதவும்.  இருப்பினும், ஒரு விரிவான ஆய்வு இரண்டு முக்கிய சிக்கல்களை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், சாதிவாரி கணக்கெடுப்பு நடைமுறைக்கு மாறானது மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தைப் (proportional representation) பயன்படுத்துவது முன்னேற்றத்தைக் குறைத்து புதிய சவால்களை உருவாக்கலாம்.


சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிக்கை அரசியல் விவாதமாக மாறியுள்ளது. இந்த விவாதம் எதிர்க்கட்சித் தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமீபத்தில் விவாதத்தில் இணைந்த ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் மூலம் இயக்கப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிப்பவர்கள் அதன் பலன்களை எடுத்துரைக்கின்றனர். ஒவ்வொரு சாதியினரின் மக்கள் தொகையையும் துல்லியமாக கணக்கிட முடியும். இந்த எண்கள் பின்னர் வளங்களை நியாயமான முறையில் ஒதுக்கீடு செய்ய பயன்படுத்தப்படலாம். இதில் அரசு வேலைகள், நிலம் மற்றும் செல்வம் ஆகியவை அடங்கும். ஒவ்வொரு, சாதியினரும் அவர்களுக்கு தேவையான  விகிதாசார பங்கைப் பெறுவதை சாதிவாரி கணக்கெடுப்பு உறுதி செய்யும் என்று அதன் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.


சாதிவாரி கணக்கெடுப்பு :  வரலாற்றுப் பின்னணி 


  இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கியது. முதல் விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு 1871-72ல் நடத்தப்பட்டது. இது சாதி அடிப்படையிலான தகவல்களைச் சேகரிக்கவும், பல்வேறு குழுக்களை வகைப்படுத்தவும் முயற்சி செய்தது. மேலும், வடமேற்கு மாகாணங்கள், மத்திய மாகாணங்கள், வங்காளம் மற்றும் சென்னை ஆகிய நான்கு முக்கிய பிராந்தியங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 


சாதி பற்றிய அடிப்படை மற்றும் வரையறுக்கப்பட்ட புரிதலின் அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு பல குழுக்களை உருவாக்கியது. பிராமணர்கள், ராஜபுத்திரர்கள், பனியாக்கள் மற்றும் "இந்துக்களின் பிற சாதிகள்”. வடமேற்கு மாகாணங்களில், நான்கு குழுக்களாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டன.  மத்திய மாகாணங்களில், "வேலைக்காரர்கள் மற்றும் தொழிலாளர்கள்" மற்றும் "பணியாளர்கள் மற்றும் பக்தர்கள்" போன்ற பிரிவுகள் தோராயமாக இந்தக் குழுக்களில் சேர்க்கப்பட்டன. வங்காளத்தில், பிச்சைக்காரர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் சமையல்காரர்கள் போன்ற குழுக்கள் சேர்க்கப்பட்டன. மெட்ராஸில், "கலப்பு சாதிகள்" மற்றும் "பிறசாதியினர்" போன்ற புதிய பிரிவுகள் தனித்தனி வகைகளாக சேர்க்கப்பட்டன.

 

1881ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையைத் தயாரித்த டபிள்யூ. சிச்செல் ப்லோடன் (W. Chichele Plowden) சாதியைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல்களால் விரக்தியடைந்தார். சாதி பற்றிய முழுக் கேள்வியையும் 'குழப்பம்' என்று குறிப்பிட்டார். மேலும், எதிர்கால மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதி மற்றும் பழங்குடி தகவல்களை சேகரிக்க முயற்சிக்காது என்று அவர் நம்பினார். இருப்பினும், 1931ஆம் ஆண்டு சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பில் 4,147 சாதிகளை அடையாளப்படுத்திய பின்னரும் அதே பிரச்சினைகள் தொடர்ந்தன. வெவ்வேறு பகுதிகளில் சாதிக் குழுக்கள் வித்தியாசமாக அடையாளம் காணப்படுவதைக் கண்டு அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர். 


இந்த சவால்கள் இன்றும் உள்ளன மேலும் இந்தியாவிற்கு சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது கடினமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, 2011ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார மற்றும் சாதி மக்கள்தொகை கணக்கெடுப்பு (Socio-Economic and Caste Census (SECC)) 46.7 லட்சத்திற்கும் அதிகமான சாதிகள் மற்றும் துணை சாதிகளை அடையாளம் கண்டுள்ளது. ஆனால், 8.2 கோடி பிழைகள் இருந்தன. சமீபத்திய எடுத்துக்காட்டாக, 2022ஆம் ஆண்டின் பீகார் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 'ஹிஜ்ரா' மற்றும் 'கின்னரை' வகைகளாகச் சேர்ப்பதில் சர்ச்சை ஏற்பட்டது. 


துல்லியமான தரவை அணுகுவதற்கான சவால்கள் 


மேல்நோக்கிச் செல்லும் சாதிய இயக்கத்தின் கூற்று, குறிப்பிட்ட சமூகக் குழுக்களின் கௌரவம் மற்றும் வர்ணப் படிநிலையில் அவர்களின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் தங்கள் சாதியைப் புகாரளிக்கலாம் என்று அறிவுறுத்துகிறது. 1921 மற்றும் 1931 மக்கள்தொகை கணக்கெடுப்புகளுக்கு இடையே சாதி அறிக்கையிடலில் ஏற்பட்ட மாற்றங்களில் இதைக் காணலாம். 1921-ல் வர்ண அமைப்பில் தாழ்ந்த நிலைகளைச் சேர்ந்ததாக அறிவித்த சில சமூகங்கள் பின்னர் 1931-ல் உயர் பதவிகளைக் கோரின. மற்றொரு முக்கியமான கண்டறிதல் என்னவென்றால், சோனார் (Sonar) போன்ற ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு சமூகப் பிரிவுகளைப் புகாரளித்தனர். 1921-ல், சிலர் க்ஷத்ரியர் மற்றும் ராஜ்புத் எனப் புகாரளித்தனர், மற்றவர்கள் 1931-ல் பிராமணர் மற்றும் வைசியர்களாக அடையாளம் காணப்பட்டனர். அனைவரும் ஒரே பிராந்தியத்தில் உள்ளனர். இந்த மாற்றங்கள் காலனித்துவ மக்கள்தொகை கணக்கெடுப்பில் காணப்பட்டன, அவற்றின் தாக்கம் இன்றும் முக்கியமானது. 


சிலர் தொடர்புடைய சாத்தியமான நன்மைகளை அவர்கள் அறிந்திருக்கும் போது தாங்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்று கோரலாம். இந்தப் போக்கு பெரும்பாலும் சுதந்திரத்திற்குப் பிறகு தொடங்கியது. இட ஒதுக்கீடு கொள்கைகளுடன் இணைக்கப்பட்ட நன்மைகள் காரணமாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, சில உயர் சாதியினர் இதர பிற்படுத்தப்பட்ட நிலையைக் கோரலாம் அல்லது சில இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் இந்த நன்மைகளை அணுக பழங்குடியின  நிலையைக் கோரலாம்.


ஒரே மாதிரி ஒலிக்கும் சாதிகள் மற்றும் குடும்பப்பெயர்கள் பெரும்பாலும் சாதி வகைப்பாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ராஜஸ்தானில், 'தனக்', 'தாங்கியா' மற்றும் 'தனுக்' போன்ற குடும்பப்பெயர்கள் படியிலிடப்பட்ட சாதிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே, நேரத்தில் 'தங்கா' பழங்குடியின சாதிகள் என பட்டியலிடப்பட்டுள்ளது. வங்காளத்தில், 'சென்' என்பது உயர் சாதி குடும்பப் பெயராகும். அதே சமயம் 'செயின்' என்பது இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் முடிதிருத்தும் சமூகத்துடன் தொடர்புடையது. கணக்கெடுப்பாளர்கள் இத்தகைய குடும்பப்பெயர்களைத் தவறாகப் பதிவுசெய்து, தவறான வகைகளில் மக்களை வைக்கலாம். சாதி என்பதும் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். இது பதிலளிப்பவர்கள் மற்றும் கணக்கீட்டாளர்கள் இருவருக்கும் சிரமங்களை உருவாக்குகிறது. இது போன்ற சூழல்கள், கணக்கீட்டாளர்கள் சாதி பற்றிய நேரடியான கேள்விகளைத் தவிர்ப்பதற்கு வழிவகுக்கும். அதற்குப் பதிலாக குடும்பப்பெயர்களின் அடிப்படையில் சாதியைக் கருதி, தவறான வகைப்படுத்தலின் வாய்ப்பை அதிகரிக்கும்.


விகிதாச்சார பிரதிநிதித்துவம் (proportional representation)


இடஒதுக்கீடுகளில் விகிதாசார பிரதிநிதித்துவம் நியாயமானதாக தோன்றலாம். ஆனால், அது நடைமுறைக்கு மாறானது மற்றும் பிற்போக்குத்தனமானது. ஒவ்வொரு பிரிவினருக்கும் இடஒதுக்கீட்டின் சதவீதத்தால் 100ஐப் பிரிப்பதன் மூலம் இட ஒதுக்கீடு முறை செயல்படுகிறது. அந்த குழுவிற்கு எத்தனை பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை இது விளக்குகிறது. எடுத்துக்காட்டாக, OBC இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு (OBC) 27% இட ஒதுக்கீடு இருப்பதால், காலியிடங்களின் பட்டியலில் ஒவ்வொரு 4வது இடமும் பிரிவில் இடம்பெற்றுள்ள நபருக்கு செல்லும் (100/27 = 3.7, தோராயமாக 4இடம் பெறுவார்கள்). இதேபோல், பட்டியலிடப்பட்ட சாதி விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு 7வது இடத்தையும் (100/15 = 6.7, தோராயமாக 7 இடம் பெறுவார்கள்) பழங்குடியின விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு 14வது (100/7.5 = 13.3, தோராயமாக 14 இடம் பெறுவார்கள்), மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (Economically Weaker Section (EWS)) ஒவ்வொரு 10வது (100/10 = 10 இடத்தை) இடத்தைப் பெறுவார்கள்.


இருப்பினும், தனிப்பட்ட சாதிகளுக்கு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழுகின்றன. இந்தியாவில் சுமார் 6,000 சாதிகள் உள்ளன. மேலும், 1.4 பில்லியன் மக்கள் தொகையில் ஒவ்வொரு சாதியிலும் சராசரியாக 2.3 லட்சம் மக்கள் இருப்பார்கள். 


எடுத்துக்காட்டாக, ஒரு சாதியில் 10,000 பேர் மட்டுமே இருந்தால் (மொத்த மக்கள் தொகையில் 0.0007%), ஒரு ஒதுக்கப்பட்ட காலியிடத்தைப் பெற 1,40,845 பதவிகள் தேவைப்படும். ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) பொதுவாக ஆண்டுக்கு 1,000 காலியிடங்களை விளம்பரப்படுத்துவதால், இந்த சாதியினர் ஒரு காலியிடத்தைப் பெற 141 ஆண்டுகள் ஆகும். 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சமூக-பொருளாதார மற்றும் சாதி மக்கள்தொகை கணக்கெடுப்பில் (Socio-Economic and Caste Census (SECC)) பதிவாகியுள்ள 46.7 லட்சம் சாதிகள்/துணை சாதிகளைக் கருத்தில் கொண்டால், காலியிடங்களின் எண்ணிக்கை 46,73,034-ஆக இருக்கும். மேலும், UPSC குறைந்த மக்கள்தொகை கொண்ட சாதியினருக்கு ஒரு காலியிடத்தை வழங்க 7,000 ஆண்டுகளுக்கு மேல் எடுக்கும்.


எனவே, தனிநபர் சாதி அளவில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் என்பது பிற்போக்குத்தனமானது. இடஒதுக்கீட்டில் இருந்து பயனடைவதிலிருந்து குறைந்த மக்கள்தொகை கொண்ட சாதிகளை இது நியாயமற்ற முறையில் ஒதுக்கும்.


அனிஷ் குப்தா டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரம் கற்பிக்கிறார். சுபம் சர்மா நொய்டாவில் உள்ள கல்வி மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்தில் தொழில் வல்லுநராக உள்ளார்.




Original article:

Share:

போபால் விஷவாயு பேரழிவின் நீடித்த சோகம் -என்.டி.ஜெயபிரகாஷ்

 பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை அதிகரிப்பது என்னவென்றால், அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் இன்றுவரை கவனிக்கப்படாமல் உள்ளன.


40 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 2-3, 1984 இடைப்பட்ட இரவில் நிகழ்ந்த போபால் வாயுப் பேரழிவில் 25,000-க்கும் அதிகமானோர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5,50,000 பேர் பல்வேறு நிலைகளில் காயங்களுக்கு உள்ளாகினர். இன்றும் நகர மக்களிடையே நச்சு விளைவுகள் காணப்படுகின்றன. அதன் தாக்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. பேரழிவின் மையமான யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் (Union Carbide Corporation (UCC)) பூச்சிக்கொல்லி ஆலையைச் சுற்றி ஒரு மில்லியன் டன் மண் மாசுபட்டுள்ளது. நிலத்தடி நீர் மற்றும் நீர்நிலை மாசுபாட்டின் முழு அளவு இன்னும் சரியாக அளவிடப்படவில்லை.


பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை அதிகரிப்பது என்னவென்றால், அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் இன்றுவரை கவனிக்கப்படாமல் உள்ளன. தற்போதைய சுகாதாரப் பாதுகாப்பு, இழப்பீடு, மறுவாழ்வு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடுத்தல் மற்றும் சுற்றுச்சூழலை சரிசெய்தல், தொடர்ந்த கோரிக்கைகளுக்கு எதிராகப் படிக்கப்பட்டவை சுருக்கமாக கீழே விவரிக்கப்பட்டுள்ளன.


மருத்துவ கவனிப்பில் உள்ள இடைவெளிகள் : போபால் நினைவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (Bhopal Memorial Hospital and Research Centre (BMHRC)) மருத்துவ சிகிச்சை பெற 450,000-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். வருந்தத்தக்க வகையில், அவர்களுக்கும், மாநில அரசின் எரிவாயு நிவாரணத் துறையின் கீழ் உள்ள மற்ற மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சையகங்களில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கும் சிறந்த சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட ₹1,200 கோடி கடந்த 12 ஆண்டுகளாக மத்திய சுகாதார அமைச்சகத்திடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

BMHRC இன்னும் ஒரு தன்னாட்சி நிறுவனமாக தரம் உயர்த்தப்பட காத்திருக்கிறது. இந்த மேம்படுத்தல் நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களை சரியான ஊதியத்துடன் பணியமர்த்த உதவும். பேரழிவு நடந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும், பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவப் பதிவுகளின் டிஜிட்டல் மயமாக்கல் இன்னும் மோசமாக உள்ளது. இதன் விளைவாக, பேரழிவின் முழுத் தாக்கமும் துல்லியமாக பிரதிபலிக்கப்படவில்லை மற்றும் பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.


சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் 2018-ம் ஆண்டு முதல் போபால் பேரழிவு தொடர்பான அனைத்து மருத்துவ ஆராய்ச்சிகளையும் நிறுத்தியுள்ளது. ஒன்றைத் தவிர, 1986-ம் ஆண்டில் 95,000 பேருடன் ஆறுமாத தொற்றுநோயியல் ஆய்வாக இது தொடங்கியது. 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் கூட்டாளியின் அளவு 8,759 நபர்களாக குறைந்தது. மீதமுள்ளவர்களின் தற்போதைய தலைவிதி அல்லது அவர்கள் விலக்கப்பட்டதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் பற்றிய விளக்கம் எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை.


போதிய இழப்பீடு இல்லை : உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ், UCC மற்றும் மையத்திற்கு இடையேயான தீர்வு விதிமுறைகள் பிப்ரவரி 14-15, 1989-ல் இறுதி செய்யப்பட்டன. அப்போது, ​​இழப்பீடாக ₹715 கோடி (அப்போதைய மாற்று விகிதங்களின் அடிப்படையில்) ஒதுக்கப்பட்டது. எரிவாயு கசிவில் 3,000 பேர் இறந்தனர் மற்றும் 102,000 பேர் காயமடைந்தனர் என்ற அனுமானத்தின் அடிப்படையில் இந்தத் தொகை கணக்கிடப்பட்டது. எவ்வாறாயினும், 1992 மற்றும் 2004-க்கு இடையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கோரிக்கைகளை உரிமைகோரல் நீதிமன்றங்கள் பரிசீலித்தபோது, ​​இறந்தவர்கள் உட்பட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 573,000 என கண்டறியப்பட்டது.


இதன் விளைவாக 105,000க்கான இழப்பீடு ஐந்து மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டவர்களிடையே பகிர்ந்துகொள்ளப்பட்டது. ஒவ்வொரு வாயு பாதிக்கப்பட்டவருக்கும், குறைத்து மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில், ₹68,095 பெற வேண்டும். இருப்பினும், நியாயமற்ற இழப்பீடு பேச்சுவார்த்தைகளின் கீழ், மாநிலத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு பாதிக்கப்பட்டவருக்கும் ₹12,478 மட்டுமே கிடைத்தது (இரண்டு தொகைகளும் பிப்ரவரி 1989 டாலர்-ரூபாய் மாற்று விகிதங்களை அடிப்படையாகக் கொண்டவை). மார்ச் 17, 2010 அன்று, போபால் கேஸ் பீடிட் மகிளா உத்யோக் சங்கதன் (Bhopal Gas Peedit Mahila Udyog Sangathan (BGPMUS)) மற்றும் போபால் கேஸ் பீடிட் சங்கர்ஷ் சஹ்யோக் சமிதி (Bhopal Gas Peedit Sangharsh Sahyog Samiti (BGPSSS)) ஆகிய எட்டு உறுப்பினர்களால் உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு 14 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.


குற்றவியல் வழக்கின் நிலை : 2010-ம் ஆண்டில், யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் மற்றும் ஏழு அதிகாரிகள் போபால் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தால் (judicial magistrate) தண்டிக்கப்பட்டனர். எனினும், அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கடந்த 14 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். தற்போதைய நிலவரப்படி, ஏழு பேரில் நான்கு பேர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மற்றும் ஆர்வலர் குழுக்களின் அயராத முயற்சியின் காரணமாக, இப்போது UCC-ஐ முழுமையாக வைத்திருக்கும் டவ் கெமிக்கல் நிறுவனம் (Dow Chemical Company) குற்றவியல் வழக்கில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பது மட்டுமே நேர்மறையான வளர்ச்சியாகும். இது போபால் மாவட்ட நீதிமன்றத்தில் அக்டோபர் 3, 2023 அன்று தொடங்கியது.


நிவாரணம் இல்லை : 40 ஆண்டுகளுக்குப் பிறகும், மண் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக மதிப்பிடவில்லை. அதையும் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகஸ்ட் 9, 2012 அன்று உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை வழங்கியது. பாதிக்கப்பட்ட மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கூட்டுக் கூட்டம் நடத்துவதற்கான முன்மொழிவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கூட்டத்தின் நோக்கம் ஒரு திட்டத்தை உருவாக்குவது, பொறுப்பை வழங்குவது மற்றும் சுத்தம் செய்வதற்கான சிறந்த அறிவியல் விருப்பங்களை பரிந்துரைப்பது. இதற்கிடையில், ஆலையில் சேமிக்கப்பட்டுள்ள 337 டன் நச்சுக் கழிவுகளை எரிக்க மையம் திட்டமிட்டுள்ளது. இதற்கு ₹126 கோடி செலவாகும். அதாவது, ஒவ்வொரு டன் நச்சுக் கழிவுகளையும் அகற்ற ₹37 லட்சம் செலவிடப்படும்.


என்.டி.ஜெயபிரகாஷ் போபால் கேஸ் பீடித் சங்கர்ஷ் சஹாயோக் சமிதியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆவார்.

          



Original article:


Share:

PAN 2.0 திட்டம் குறித்து… - சிந்து ஹரிஹரன்

 இதற்காக அரசு ரூ.1,435 கோடி ஒதுக்கியுள்ளது. இது தற்போதைய PAN/TAN அமைப்பை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், இது இம்முறையை முற்றிலும் காகிதமற்றதாக மாற்றும்.


PAN 2.0 என்றால் என்ன? 


நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number (PAN)) மற்றும் வரி பிடித்தம் மற்றும் சேகரிப்பு கணக்கு எண் (Tax Deduction and Collection Account Number (TAN)) ஆகியவற்றை வழங்குதல் மற்றும் நிர்வகிக்கும் செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கும் நவீனப்படுத்துவதற்கும் அரசாங்கம் PAN 2.0 திட்டத்தை தொடங்கியுள்ளது. PAN தொடர்பான பிரச்சினை மற்றும் நிர்வாகத்தை மிகவும் பயனர்களுக்கு ஏற்றதாக மாற்றுவதும், பான் சேவைகளில் ஈடுபட்டுள்ள பல தளங்கள் / போர்ட்டல்களை ஒருங்கிணைப்பதும் அரசாங்கத்தின் நோக்கமாகும். தற்போது, இந்த சேவைகள் மூன்று வெவ்வேறு போர்ட்டல்களில் (e-Filing போர்டல், UTIITSL போர்டல் மற்றும் Protean e-Gov போர்டல்) செய்யப்படுகின்றன. ஆனால், பான் 2.0 உடன், அனைத்து சேவைகளும் வருமான வரித் துறையின் ஒற்றை ஒருங்கிணைந்த போர்ட்டலில் செய்யப்படும். நிறுவனங்களுக்கான பொதுவான வணிக அடையாளங்காட்டியாக பான்-ஐப் பயன்படுத்துவதும் இதன் யோசனையாகும். இதனால், அவர்கள் பல அடையாளங்களுக்குப் பதிலாக ஒரு ஒற்றை அடையாளத்தை பராமரிக்க முடியும். 


பான் 2.0 திட்டத்தின் செலவு என்ன? 


இதற்காக அரசு ரூ.1,435 கோடி ஒதுக்கியுள்ளது. இது தற்போதைய PAN/TAN அமைப்பை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், இது இம்முறையை முற்றிலும் காகிதமற்றதாக மாற்றும்.


எனது தற்போதைய பான் கார்டு இப்போது செல்லாததாகி விடுமா? பான் 2.0-ன் கீழ் நான் புதிய பான் கார்டு பெற வேண்டுமா? 

இல்லை, இது செல்லாததாகிவிடாது, மேலும் மக்கள் ஏற்கனவே இருக்கும் பான் கார்டை மாற்ற வேண்டியதில்லை. தற்போதுள்ள பான் கார்டில் ஏதேனும் புதுப்பித்தல் / திருத்தம் காரணமாக பான் வைத்திருப்பவரான நீங்கள் கோராவிட்டால் அதிகாரிகள் எந்த புதிய பான் கார்டையும் வழங்க மாட்டார்கள். தற்போதுள்ள செல்லுபடியாகும் பான் கார்டுகள் பான் 2.0 இன் கீழ் தொடர்ந்து செல்லுபடியாகும். 


பான் கார்டில் QR குறியீட்டின் நோக்கம் என்ன? 


QR குறியீடு பான் கார்டுகளில் ஒரு புதிய அம்சம் அல்ல, மேலும் இது 2017-18 முதல் கார்டுகளில் இணைக்கப்பட்டுள்ளது. இதேநிலை தொடரும் அதே வேளையில், PAN 2.0 இன் கீழ், PAN தரவுத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவைக் காண்பிக்க டைனமிக் QR குறியீடு இருப்பது போன்ற சில மேம்பாடுகள் உள்ளன. தற்போது, ​​QR ரீடர் செயலி உள்ளது, QR குறியீட்டை ஸ்கேன் செய்ய செயலியைப் பயன்படுத்தியதும், புகைப்படம், கையொப்பம், பெயர், தந்தையின் பெயர் / தாயின் பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற ஐடி வைத்திருப்பவரின் முழு விவரங்கள் காட்டப்படும்.


ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருப்பவர்களின் நிலை என்ன? 


வருமான வரிச் சட்டம், 1961-ன் விதிகளின் கீழ், எந்தவொரு நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட பான்களை வைத்திருக்க முடியாது. மேலும், ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் வைத்திருந்தால், அவர்கள் அதை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து கூடுதல் பான் செயலிழப்பு செய்ய வேண்டும். பான் 2.0 திட்டம் அத்தகைய நகல் பான்களை அதன் டிஜிட்டல் தர்க்கம் மற்றும் PAN-க்கான சாத்தியமான நகல்

கோரிக்கைகளை அடையாளம் காண்பதற்கான மையப்படுத்தப்பட்ட செயல்முறையுடன் களையெடுக்க உதவும். பான் குடிமகனின் தனிப்பட்ட அடையாளங்காட்டியாக இருப்பதால், பான் 2.0 சிறந்த இணக்கம் மற்றும் வரி ஏய்ப்பைக் குறைப்பதற்கான ஒரு படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 




புதிய பான் எண் வேண்டுமென்றால் அவர்களுக்கு எவ்வளவு செலவாகும்? 


QR குறியீடு இல்லாமல் பழைய பான் கார்டு வைத்திருப்பவர்கள் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. பான் ஒதுக்கீடு அல்லது புதுப்பித்தல் அல்லது திருத்தம் இலவசமாக செய்யப்படும் மற்றும் இ-பான் பதிவு செய்யப்பட்ட மெயில் அடையாள அட்டை அனுப்பப்படும். பிசிக்கல் பான் கார்டுக்கு (physical PAN card), விண்ணப்பதாரர் பரிந்துரைக்கப்பட்ட கட்டணமான ₹50 (உள்நாட்டு விநியோகத்திற்கு) உடன் ஒரு கோரிக்கையை செய்ய வேண்டும். இந்தியாவுக்கு வெளியே அனுப்பிட, பொருந்தக்கூடிய ₹15 + பொருந்தக்கூடிய அஞ்சல் கட்டணங்களை விண்ணப்பதாரர் ஏற்க வேண்டும்.




Original article:

Share:

குறைந்த கருவுறுதல் விகிதங்களை ஆய்வு செய்வது, ஏன் எல்லை நிர்ணய நெருக்கடிக்கு தீர்வாகாது? -C ரங்கராஜன், J K சதியா

 அரசுகளுக்கிடையேயான சமூகப் பொருளாதார நிலைமைகளில் உள்ள பெரும் வேறுபாடுகள் அவற்றுக்கிடையேயான இணக்கமான உறவுகளுக்கு உகந்ததல்ல. மாறுபட்ட மக்கள் வளர்ச்சி விகிதங்களுக்கு பன்முக பதில் அவசியம். 


மக்கள்தொகை பிரச்சினைகள் மீண்டும் விவாதத்தில் உள்ளன. அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு நாடாளுமன்ற இடங்களுக்கான எல்லை நிர்ணய நடவடிக்கை நடத்தப்பட வாய்ப்புள்ளது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்கள், தங்கள் மாநிலங்களில் இருந்து நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதிகள் குறையக்கூடும் என்று கவலை கொண்டுள்ளனர். தங்கள் மக்களுக்கு அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்துவோம் என்று கூறும் அளவிற்கு சென்றுள்ளனர். இந்த அறிக்கைகள் ஒருவேளை தீவிரமாக அறிவுறுத்தப்படவில்லை. கருவுறுதல் விகிதத்தைக் குறைப்பதில் வெற்றி பெறுவது ஒரு பாதகமாக மாறக்கூடாது. அதைப் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். 


மக்கள்தொகை வளர்ச்சி மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கிறது. இருப்பினும், இந்திய அரசியலின் கூட்டாட்சி கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு அதன் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விளைவுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த பிரச்சினைக்கான எந்தவொரு பதிலும் மாநிலங்களுக்கிடையேயான மாறுபட்ட மக்கள் தொகை வளர்ச்சி விகிதங்களின் பல்வேறு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 


25 ஆண்டுகளாக மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற இடங்களின் எல்லை நிர்ணயத்தை முடக்குவதே இன்றுவரை அரசியல் பிரதிபலிப்பாக இருந்து வந்துள்ளது. இது முதன்முதலில் 1976-ம் ஆண்டில் தொடங்கியது. பின்பு, 2001-ம் ஆண்டில் இந்த முடக்கம் மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. இப்போது ஒரு சாத்தியமான பதில் இதை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இருக்கும். இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும், ஏனெனில் முடக்க வைக்கும் இருக்கைகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாது என்பதை கடந்த கால அனுபவம் காட்டுகிறது. மிகவும் சிக்கலான தீர்வுகள் தேர்தல் முறையை மாற்றுவதை உள்ளடக்கியதாக இருக்கலாம். கட்சிகளின் வாக்குப் பங்கின் அடிப்படையில் நாடாளுமன்ற இடங்களை ஒதுக்குவது என்பது ஒரு யோசனை. இருப்பினும், அத்தகைய நடவடிக்கைகள் நடைமுறை அல்லது பொருத்தமானதாக இருக்காது.


ஒன்றியத்திலிருந்து மாநிலங்களுக்கு வளங்கள் செல்வதைத் தீர்மானிப்பதில் மக்கள் தொகை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படும் நிதி ஆணையம், வளங்களின் ஓட்டத்தின் அளவையும், மாநிலங்களுக்கு இடையே அவை எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன என்பதையும் தீர்மானிக்கிறது. மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை தீர்மானிப்பதில், மக்கள் தொகை ஒரு அளவுகோல் ஆகும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் மற்றும் கருவுறுதல் விகிதத்தைக் குறைக்க குறைந்த முயற்சி எடுத்தவர்கள் பயனடைவார்கள். 


அதன் 14-வது பதிப்பிற்கு முன்பு, நிதி ஆணையத்தின் கணக்கீடுகள் 1971-ம் ஆண்டின் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டவை. இது எல்லை நிர்ணயக் கொள்கை பயன்படுத்தப்படும் முடக்கத்துடன் ஒப்பிடத்தக்கது. ஆனால், 14-வது நிதிக்குழு தற்போதைய மக்கள் தொகையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. கருவுறுதல் விகிதத்தைக் குறைத்த மாநிலங்களுக்கு ஏற்பட்ட பாதகத்தை ஈடுசெய்ய, ஆணையம் மக்கள்தொகை தவிர "மக்கள்தொகை மாற்றம்" என்று அழைக்கப்படும் கூடுதல் மாறியையும் சேர்த்தது. இந்த நடைமுறையை 15-வது ஆணையமும் பின்பற்றியது. 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மக்கள் தொகைக்கு 15.0 சதவீதமும், மக்கள் தொகை மாற்றத்திற்கு 12.5 சதவீதமும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மக்கள்தொகை மாற்றம் போன்ற ஒரு மாறியின் சேர்க்கை மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் குறைத்த மாநிலங்களுக்கு ஆதரவாக சமநிலையை கணிசமாக சாய்க்கும். 


பின்தங்கியுள்ள மாநிலங்களில் விரைவான பொருளாதார வளர்ச்சியை நாடுவது மற்றொரு முக்கியமான பதிலாக இருக்கும். இந்த விஷயத்தில் தற்போது பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஆர்வமுள்ள மாவட்ட முன்முயற்சி ஏற்கனவே நடந்து வருகின்றன. இருப்பினும், அதிக வேலை தேவைப்படுகிறது. இதற்கான ஆக்கபூர்வமான உத்திகளை உருவாக்க தற்போதைய நிதி ஆணையம், மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் இந்த கட்டத்தில், அது ஒரு நம்பிக்கை மட்டுமே இருக்கும். 


மற்றொரு பதில் மக்கள் பிரச்சினையை நேரடியாகக் கையாள்வது. மாநிலங்களுக்கு இடையே அதிக இடப்பெயர்வை ஊக்குவிப்பதன் மூலம் மக்கள் தொகையை மறுபங்கீடு செய்வது ஒரு பரிந்துரையாகும். தொழிலாளர்களுக்கான வழங்கல் மற்றும் தேவை காரணமாக இது நடந்தாலும், பெரிய அளவிலான, நிரந்தர மக்கள் தொகை மறுபகிர்வு சாத்தியமற்றதாகத் தெரிகிறது மற்றும் தீவிர சமூகப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.


கடைசியாக, மக்கள் தொகை வளர்ச்சி பிரச்சினைகளை நேரடியாக நிவர்த்தி செய்யலாம். இந்தியாவின் மக்கள்தொகை நிலைமையை விரைவாகப் பார்ப்போம். இந்தியாவின் மக்கள்தொகை 2070-ம் ஆண்டில் 170 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அது குறையத் தொடங்குகிறது. மக்கள்தொகை வளர்ச்சி பெரும்பாலும் மொத்த கருவுறுதல் விகிதத்தால் (TFR) அளவிடப்படுகிறது. 


இது தற்போதைய கருவுறுதல் முறையைப் பின்பற்றினால் ஒரு பெண் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த TFR 2-ஐ எட்டியுள்ளது. இது மாற்று கருவுறுதல் விகிதமான 2.1-ஐ விட சற்று குறைவாக உள்ளது. இதன் பொருள் ஒவ்வொரு தாய்க்கும் ஒரு மகள் இருக்கிறார். கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மாற்று அல்லது குறைவான கருவுறுதல் விகிதங்களைக் கொண்ட மாநிலங்களில் வாழ்கின்றனர். மீதமுள்ள மூன்றாவது கருவுறுதல் விகிதம் மாற்று அளவை விட அதிகமாக உள்ள மாநிலங்களில் வாழ்கிறது.


NFHS 5-ன் படி 1.5 முதல் 3.0 வரையிலான இந்திய மாநிலங்களில் TFR பெரிதும் மாறுபடுகிறது. இந்த வேறுபாட்டை நிவர்த்தி செய்ய இரண்டு வழிகள் உள்ளன. குறைந்த விகிதங்களைக் கொண்ட மாநிலங்களில் TFR-ஐ அதிகரிக்கவும் அல்லது அதிக விகிதங்களைக் கொண்ட மாநிலங்களில் குறைக்கவும். இருப்பினும், குறைந்த TFR மாநிலங்களில் கருவுறுதல் விகிதத்தை உயர்த்துவது ஒரு புத்திசாலித்தனமான அணுகுமுறை அல்ல. 


இந்தியாவில் ஏற்கனவே மக்கள்தொகை அதிகமாக உள்ளது, மேலும் தற்போதைய மக்கள்தொகைக்கு ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த எங்களுக்கு அதிக பொருளாதார வளர்ச்சி தேவை. குறைந்த கருவுறுதல் விகிதங்களைக் கொண்ட மாநிலங்கள் இந்த நிலையை எட்டியது, ஏனெனில் அவர்கள் பெரிய குடும்பங்களைக் கொண்டிருப்பதன் சிரமங்களைப் புரிந்து கொண்டனர். இந்த முறையை மாற்ற முயற்சிக்கக் கூடாது. இந்த மாநிலங்களில் உள்ளவர்களும் மாற விரும்ப மாட்டார்கள்.


அதிக கருவுறுதல் நிலைகளில் கருவுறுதல் விகிதங்களைக் குறைப்பதே மிகவும் சாத்தியமான மற்றும் முக்கியமான முன்முயற்சியாக இருக்கும். இது இரண்டு வழிகளில் செய்யப்படலாம். முதலாவதாக, பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதன் மூலம், இது குழந்தைகளுக்கான தேவையை குறைக்கிறது, மற்றும் இரண்டாவது, இனப்பெருக்க சுகாதார சேவைகளை மேம்படுத்துவதன் மூலம், இது தம்பதிகள் விரும்பிய குடும்ப அளவை அடைய உதவுகிறது. 


தற்போது, ​​ஐந்து மாநிலங்களில் மட்டுமே மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 2.1-ஐ விட அதிகமாக உள்ளது. கருவுறுதல் விகிதங்களைக் குறைக்க இந்த மாநிலங்களில் கவனம் செலுத்தும் முயற்சிகள் தேவை. மாநிலங்களுக்கிடையேயான சமூகப் பொருளாதார நிலைமைகளில் பெரிய வேறுபாடுகள் அவர்களுக்கு இடையேயான உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, மாறுபட்ட மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்களை நிவர்த்தி செய்ய பல்முனை அணுகுமுறை அவசியம்.


ரங்கராஜன், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவர், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் மற்றும் சதியா காந்திநகரில் உள்ள இந்திய பொது சுகாதார நிறுவனத்தின் மாண்பமை பேராசிரியர் (முன்னாள்) ஆவார்.




Original article:

Share: