உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்த பாரத்போல் (Bharatpol) தளம், நாடுகடந்த குற்றங்களை விசாரிக்க எவ்வாறு உதவும்? - மகேந்திர சிங் மன்ரல்

 பாரத்போல் (Bharatpol) என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படும்? அது பல்வேறு விசாரணை அமைப்புகளுக்கு எவ்வாறு உதவும்? 


உள்துறை அமைச்சர் அமித் ஷா  ஜனவரி 7, செவ்வாய்க்கிழமை அன்று  “பாரத்போல்” (Bharatpol) தளத்தை தொடங்கிவைத்தார். இது சட்ட விசாரணை அமைப்புகளுக்கான சர்வதேச ஒத்துழைப்பை சீராக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


பாரத்போல் என்பது சர்வதேச குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுவதற்காக ஒன்றிய புலனாய்வு அமைப்பால் (Central Bureau of Investigation (CBI)) உருவாக்கப்பட்ட தளமாகும். இந்த தளம் ஒன்றிய மற்றும் மாநில அமைப்புகளை பன்னாட்டு முகமையுடன் (Interpol) விரைவாக தொடர்பு கொள்ளவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் அனுமதிக்கும்.

 

பாரத்போல் (Bharatpol) என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படும்? அது பல்வேறு விசாரணை அமைப்புகளுக்கு எவ்வாறு உதவும்? ஒன்றிய புலனாய்வு  அமைப்பு அதை ஏன் உருவாக்கியது? 


ஒன்றிய புலனாய்வு  அமைப்பு, பன்னாட்டு முகமைக்கான இந்தியாவின் தேசிய பணியகமாகும். இந்திய சட்ட செயலாக்கம் 195 நாடுகளில் உள்ள பன்னாட்டு முகமைகளுடன் இணைக்கிறது. தற்போது, ​​ஒன்றிய புலனாய்வு  அமைப்பு, பன்னாட்டு முகமை அதிகாரிகள் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளுடன் ஒன்றிய அமைப்புகள் மற்றும் மாநில காவல்துறை கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைநகல் மூலம் தொடர்பு கொள்கின்றன. இதனால், அவர்களின் விசாரணையில் அடிக்கடி தாமதம் ஏற்படுகிறது.

 

பாரத்போல், சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பை மிகவும் தடையற்றதாகிறது. 


சைபர் குற்றங்கள், நிதிக் குற்றங்கள், ஆன்லைன் தீவிரமயமாக்கல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனித கடத்தல் போன்ற சர்வதேச குற்றங்கள் அதிகரித்து வருவதால் இந்த இணையதளத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.  இந்த வழக்குகளின், விசாரணைகளுக்கு சர்வதேச உதவி தேவைப்படுகிறது.


ஐந்து முக்கிய அம்சங்கள்: 


ஒருங்கிணைந்த தளம் (Unified Platform): இந்த தளம் ​​ஒன்றிய புலனாய்வு அமைப்பை பன்னாட்டு முகமைகளை (Interpol-NCB-New Delhi) இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட அமலாக்க அதிகாரிகளுடனும், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை ஆணையர்கள் வரை ஒருங்கிணைக்கிறது. 


எளிமைப்படுத்தப்பட்ட கோரிக்கை செயல்முறை (Simplified Request Mechanism): தரப்படுத்தப்பட்ட படிவங்களைப் பயன்படுத்தி 195 பன்னாட்டு முகமை உறுப்பு நாடுகளிடம் இருந்து சர்வதேச உதவியை விரைவாகவும் எளிதாகவும் பெற இந்த தளம் காவல்துறை அதிகாரிகளை அனுமதிக்கிறது. 


விரைவான தகவல் பரப்புதல் (Rapid Information Dissemination): இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட அமலாக்க நிறுவனங்களுடனும் 195 நாடுகளின் குற்றவியல் தகவல்களை விரைவாகப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.


பன்னாட்டு முகமையின் உடனடி அறிவிப்பிகளின் பயன்பாட்டை அதிகப்படுத்துதல் (Increase utilisation of Interpol notices): இந்த  தளம் சிவப்பு வண்ண உடனடி அறிவிப்புகள் (Red Corner Notice)  மற்றும் பிற  பன்னாட்டு முகமை அறிவிப்புகளை உருவாக்குவதை எளிதாக்கும். இது உலகம் முழுவதும் உள்ள குற்றங்கள், குற்றவாளிகள் மற்றும் அவர்களின் சொத்துக்களை கண்காணிக்க உதவும்.


திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி (Capacity Building and Training): இந்த இணையதளம் தொடர்புடைய ஆவணங்கள், வார்ப்புருக்கள் (templates) மற்றும் பயிற்சி ஆதாரங்களுக்கான அணுகலை வழங்குகிறது. இதன் மூலம் அவர்கள் வெளிநாடுகளில் விசாரணை நடத்தவும், பன்னாட்டு முகமை மூலம் வெளிநாட்டு உதவியை பெறவும் உதவும்.


புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தப்பியோடியவர்களை பிடிக்க இந்திய புலனாய்வு அமைப்புகள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய நேரம் இது என்று கூறினார். உலகளாவிய சவால்கள் மற்றும் உள் அமைப்புகளை மேம்படுத்துவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பாரத்போல் முக்கியத்தை  அவர் விளக்கினார். பன்னாட்டு முகமையில் உள்ள 195 நாடுகளில் இருந்து ஒன்றிய மற்றும் மாநில முகமைகள் தேவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும் பெறவும் புதிய தளம் உதவும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விரிவாக விளக்கினார். 


மேலும், இதில் இணைத்தல் (Connect), பன்னாட்டு முகமை அறிவிப்புகள் (INTERPOL Notices), குறிப்புகள் (References), தொலைப்பரப்பு (Broadcast) மற்றும் ஆதாரங்கள் (Resources) என ஐந்து முக்கிய தொகுதிகள் உள்ளன.  

"இணைத்தல் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட அமலாக்க முகவர்களும் பன்னாட்டு முகமையின் உடன் நெருக்கமாக செயல்படும் வாய்ப்பு உருவாகும். மேலும், இந்த அமைப்பு விரைவாகவும் பாதுகாப்பாகவும் பன்னாட்டு முகமை அறிவிப்புகளுக்கான கோரிக்கைகளை அனுப்பும். இது இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள குற்றவாளிகளைக் கண்டறிய உதவும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டார். 


பன்னாட்டு முகாமையில் உள்ள 195 உறுப்பு நாடுகளின் உதவிக்கான கோரிக்கைகள் தொலைப்பரப்பு தொகுதியில் கிடைக்கும். பின்பு, ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை எளிதாகப் பரிமாறிக்கொள்ளவும் நிர்வகிக்கவும் ஆதாரங்கள் தொகுதியானது பயன்படுகிறது.




Original article:

Share:

அரசியலமைப்பு அமைப்புகளுக்கும் சட்டப்பூர்வ அமைப்புகளுக்கும் இடையிலான வேறுபாடு -நிதேந்திர பால் சிங்

 அரசியலமைப்பு அமைப்புகள்:


  • அரசியலமைப்பு அமைப்புகள் (Constitutional bodies) என்பது அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட அமைப்புகளாகும். இத்தகைய அமைப்புகளின் அமைப்பு முறை, அதிகாரங்கள் மற்றும் கடமைகள் அதில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. அமைப்புகள் நிர்வாகப் பணிகளுக்காக மட்டும் உருவாக்கப்படவில்லை. இந்த அமைப்புகள்  அரசாங்க அதிகாரத்தின் மீதான சரிபார்ப்புகள் மற்றும் சமநிலையுடன்  செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளன.


  • இந்திய தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC), நிதி ஆணையம், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்(CAG), பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியின வகுப்பினர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையங்கள் மற்றும் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் ஆகியவை அரசியலமைப்பு அமைப்புகளின் எடுத்துக்காட்டுகள் ஆகும்.



சட்டப்பூர்வ அமைப்புகள் (Statutory bodies):


  • நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் சட்டப்பூர்வ அமைப்புகள் (Statutory bodies) முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த அமைப்புகள் நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களின் சட்டத்தால் நிறுவப்பட்ட அமைப்புகளாகும். அவை அரசியலமைப்பிலிருந்து நேரடியாக இல்லாமல் சட்டத்திலிருந்து தங்களுக்கு தேவையான அதிகாரத்தைப் பெறுகின்றன.


சட்டப்பூர்வ அமைப்புகளின் எடுத்துக்காட்டுகள்: 


  • இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT), இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI), மத்திய கண்காணிப்பு ஆணையம் (CVC), பல்கலைக்கழக மானியக் குழு (UGC), தேசிய மகளிர் ஆணையம் (NCW), இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகியவை ஆகும்.


சட்டப்பூர்வமற்ற அமைப்புகள் (Non-statutory bodies):


  •  சட்டப்பூர்வமற்ற அமைப்புகள், நிர்வாக அல்லது ஆலோசனை அமைப்புகள் (executive or advisory bodies) என்றும் அழைக்கப்படுகின்றன. அவை நிர்வாக உத்தரவுகள் அல்லது நிர்வாகத் தீர்மானங்களால் உருவாக்கப்படுகின்றன. அவை குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், சட்டப்பூர்வ அமைப்புகள் போன்று அதற்கு சட்டப்பூர்வ ஆதரவு இல்லை.


  • சட்டப்பூர்வமற்ற அமைப்புகளின் எடுத்துக்காட்டுகளில் திட்டக் குழு இப்போது இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனமாக (National Institution for Transforming India (NITI Aayog)) மாற்றப்பட்டுள்ளது.  பணிக்குழுக்கள் மற்றும் சமூக மேம்பாடு அல்லது பொருளாதார சீர்திருத்தம் போன்ற சிக்கல்களைச் சமாளிக்க உருவாக்கப்பட்ட நிபுணர் குழுக்கள் ஆகியவை இதில் அடங்கும்.



Original article:

Share:

மக்களவை பற்றி… - நிதேந்திர பால் சிங்

 

  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 79வது பிரிவு மக்களவையை நாடாளுமன்றத்தின் கீழ் சபை (lower house of parliament) என்று கூறுகிறது. மக்களவை வயது வந்தோருக்கான வாக்குரிமை மூலம் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டுள்ளது.


  • அரசியலமைப்பின்படி, மக்களவையில் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 552 ஆகும்.


  • அரசியலமைப்பின் 81வது பிரிவின்படி, 331வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிவிலக்குகளுடன், மக்களவையில் குறிப்பிடப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்.


 (அ) ​​மாநிலங்களில் உள்ள பிராந்திய தொகுதிகளில் இருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 530 உறுப்பினர்கள் மக்களவையில் இருக்க வேண்டும்.

 (ஆ)  யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்த, பாராளுமன்றம் முடிவு செய்யும் விதத்தில் 20 உறுப்பினர்கள் வரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


  • அக்டோபர் 25, 1951 ஆண்டு முதல் பிப்ரவரி 21, 1952 ஆண்டு வரை நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மக்களவை ஏப்ரல் 17, 1952 ஆண்டு  முதலில் உருவாக்கப்பட்டது.


  • தற்போது, ​​மக்களவையில் 543 உறுப்பினர்கள் உள்ளனர். அதன் பதவிக்காலம்  ​​மக்களவை முன்னதாகவே கலைக்கப்படாவிட்டால் முதல் கூட்டம் தொடங்கியதிலிருந்து ஐந்து ஆண்டுகள் நீடிக்கும். 


  • அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டால், நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் மக்களவையின் காலத்தை நீட்டிக்க முடியும். இந்த நீட்டிப்பு ஒரு வருடம் வரை நீடிக்கும் மற்றும் அவசரநிலை முடிந்த பிறகு ஆறு மாதங்களுக்கு மேல்  நீடிக்கக்கூடாது.



Original article:

Share:

பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்கள் அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் பெரும் சவால்களை கொண்டுள்ளது. - மிலிந்த் குமார் சர்மா

 விரைவுபடுத்தப்பட்ட மற்றும் நீட்டிக்கப்பட்ட பட்டப்படிப்புகள் இந்தியக் கல்வி முறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. இருப்பினும், இந்த மாற்றங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன. 

 

சமீபத்திய, பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission (UGC)) வழிகாட்டுதல்கள் இந்தியாவில் உயர்கல்வியில் பெரிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. மற்ற சீர்திருத்தங்களுக்கிடையில், பல்கலைக்கழக மானியக் குழு இளங்கலை மாணவர்களுக்கு விரைவுபடுத்தப்பட்ட பட்டப்படிப்பு திட்டம் (accelerated degree programme) மற்றும் நீட்டிக்கப்பட்ட பட்டப்படிப்பு திட்டத்தை (extended degree programme) அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பை முடிக்க அனுமதிக்கும். 

 

நன்மைகள் மற்றும் சவால்கள் 


இந்தப் புதிய அணுகுமுறை இந்தியாவில் கல்வியை உலக அளவில் போட்டித்தன்மையுடன் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மாணவர்களுக்கு அவர்களின் படிப்பைத் திட்டமிட அதிக சுதந்திரத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் அளிக்கிறது. இது இந்தியாவின் நிலையான கல்வி முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றமாகும்.

 

விரைவுபடுத்தப்பட்ட பட்டப்படிப்பு, விரைவாக பணிபுரிய விரும்பும் மாணவர்களுக்கு பயனளிக்கிறது.  ஆரம்பகால தொழில்முறை அனுபவத்தைப் பெற அல்லது கல்விக் கட்டணத்தில் பணத்தைச் சேமிக்க விரும்புவோருக்கும் இது உதவியாக இருக்கும். நீட்டிக்கப்பட்ட பட்டப்படிப்புத் திட்டம் மாணவர்களுக்கு வெவ்வேறு பாடங்களை ஆராயவும், பயிற்சி பெறவும், ஆராய்ச்சித் திட்டங்களில் பணிபுரியவும், பயணம் செய்யவும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், தனிப்பட்ட அல்லது தொழில்முறை கடமைகளுடன் சமநிலை ஆய்வுகளை மேற்கொள்ளவும் அதிக நேரத்தை வழங்குகிறது. தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) 2020 பலதரப்பட்ட கற்றல் முறையை ஆதரிக்கிறது. இந்த அணுகுமுறையால் மாணவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் திறமையான பட்டதாரிகளை உருவாக்க முடியும். இது அவர்களுக்கு நுண் திறன்கள் (soft skills), படைப்பு திறன்கள் மற்றும் புதுமையான யோசனைகளை வளர்க்க உதவும்.

 

கூடுதலாக, சீர்திருத்தங்கள் இந்தியாவில் இளங்கலைக் கல்வியை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன் மூலம் இந்திய மாணவர்கள் இந்தியாவிற்குள்ளும் வெளிநாடுகளுக்கும் செல்ல அதிக வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நெகிழ்வான கடன் அமைப்பு மாணவர்களை சுயமாக முன்னேற அனுமதிக்கிறது. மாணவர்கள் தங்கள் தேவைகள், ஆர்வங்கள் மற்றும் தொழில் இலக்குகளுக்கு ஏற்றவாறு தங்கள் படிப்பை மேற்கொள்ளலாம். இந்த சுதந்திரம் மாணவர்களுக்கு முக்கியமானது.

 

இருப்பினும், இதில் சவால்கள் உள்ளன. விரைவுபடுத்தப்பட்ட  பட்டப்படிப்பு திட்டம் கல்வியின் ஆழம் மற்றும் தரம் பற்றிய கேள்விகளை  எழுப்புகிறது. குறைந்த நேரத்தில் ஒரே பாடத்திட்டத்தை மாணவர்கள் கற்றுக்கொண்டால், மாணவர்கள் முக்கியமான கருத்துக்களை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை எனில், அது மாணவர்களின் கற்றலை பாதிக்கும். மறுபுறம், நீட்டிக்கப்பட்ட பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்க அதிக நேரம் எடுக்கலாம். இது அவர்களின் பட்டத்தின் மதிப்பைக் குறைக்கலாம்.

 

புதிய கட்டமைப்பை சரிசெய்தல்


புதிய கட்டமைப்பிற்கு ஏற்ப தொழில்நுட்பக் கல்வி மிகவும் கடினமாக உள்ளது. பொறியியல் திட்டங்களுக்கு கொள்கை மற்றும் நடைமுறை திறன்கள் இரண்டையும் பற்றிய ஆழமான புரிதல் தேவை. இடைநிலைக் கல்வி மாணவர்களுக்கு உதவும் அதே வேளையில், பொறியியல் படிப்புகள் மாணவர்களுக்கு குறிப்பிட்ட தொழில்களுக்கு சிறப்பு கல்வியை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன.


விரைவுபடுத்தப்பட்ட பொறியியல் பட்டங்கள் தொழில்நுட்பக் கற்றலை எளிதாக்கும். பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் மேம்பட்ட பொறியியல் கொள்கைகள் போன்ற பாடங்களின் ஆழமான ஆய்வு தேவை. இந்தப் பாடங்களுக்கான நேரத்தைக் குறைப்பது, நடைமுறைத் திட்டங்கள், ஆய்வகப் பணிகள், பயிற்சிகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் போன்ற முக்கியமான நடவடிக்கைகளுக்கான நேரத்தைக் குறைக்கலாம். இந்தத் துறையில் தேவைப்படும் தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்கு இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை. பொறியியல் மாணவர்கள் பெரும்பாலும் நிகழ்நேர உலக பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். பட்டப்படிப்புகளை விரைவாக முடிக்க வேண்டும் என்ற அழுத்தம், அவர்களின் தொழிலுக்குத் தேவையான பிரச்சனைகளைத் தீர்க்கும் நுட்பங்களில் தேர்ச்சி பெறுவதை கடினமாக்கும்.


மறுபுறம், பொறியியல் துறையில் நீட்டிக்கப்பட்ட பட்டப்படிப்பை விரும்பும் மாணவர்களுக்கு நிபுணத்துவம், ஆராய்ச்சி மற்றும் நடைமுறை அனுபவத்தைப் பெற அதிக வாய்ப்புகளை அளிக்கும். இருப்பினும், இது மாணவர்களுக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்தலாம் மற்றும் ஏற்கனவே பொருளாதார தடைகளை எதிர்கொள்பவர்களை தன்னம்பிக்கை இழக்கச் செய்யலாம்.

 

நடைமுறை சிக்கல்கள் 


விரைவுபடுத்தப்பட்ட மற்றும் நீட்டிக்கப்பட்ட பட்டப்படிப்பு வடிவங்களுக்கு ஏற்ப மாறுவதற்கு பெரிய மாற்றங்கள் தேவை. பல்கலைக்கழகங்கள் தங்கள் பாடத்திட்டங்கள், கற்பித்தல் முறைகளை மறுசீரமைக்க வேண்டும் மற்றும் தொடர்புடைய அமைப்புகளிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். ஏற்கனவே, குறைந்த வளங்களைக் கொண்ட பல்கலைக்கழகங்களுக்கு இது சவாலாக இருக்கலாம். கூடுதலாக, இந்த சீர்திருத்தங்களுடன் வரும் டிஜிட்டல் கல்வியை நோக்கிய மாற்றம் டிஜிட்டல் பிரிவை அதிகரிக்கலாம்.


விரைவுபடுத்தப்பட்ட மற்றும் நீட்டிக்கப்பட்ட பட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு, மாணவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும், அவற்றை மதிப்பீடு செய்வதற்கும், நன் மதிப்பு பரிமாற்றங்களை நிர்வகிப்பதற்கும், கல்விச் சாதனைகளை அங்கீகரிப்பதற்கும் அமைப்புகள் தேவைப்படுகின்றன. இந்தப் பணிகளைக் கையாள கல்வி நிறுவனங்கள் வலுவான நிர்வாக அமைப்புகளை உருவாக்க வேண்டும்.


இந்தச் சீர்திருத்தங்களின் சமத்துவத்தன்மையின் தாக்கம் கவலைக்குரியது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள், போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால் புதிய முறைக்கு ஏற்ப மாறுவதற்கு அவர்கள் சிரமப்படுவார்கள். அவர்களால் கல்வியைத் தொடர முடியவில்லை என்றால் பட்டப்படிப்பை கைவிடலாம்.


புதிய கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு உதவுவது மற்றொரு சவால். நெகிழ்வான, இடைநிலைப் படிப்புகளை நிர்வகிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி தேவை. இந்த சீர்திருத்தங்களின் வெற்றியானது மாணவர்களின் மாற்றியமைக்கும் திறன் மற்றும் அவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களின் திறன் ஆகிய இரண்டையும் சார்ந்துள்ளது.


இந்த சவால்களை கவனமாக திட்டமிடுதல், முறையான முதலீடு, சரியான நேரத்தில் பணியாளர்களை பணியமர்த்துதல் மற்றும் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றின் மூலம் தீர்க்கப்பட்டால், புதிய சீர்திருத்தங்கள் மூலம் வலுவான கல்வி முறையை உருவாக்க முடியும். இது சந்தை தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்து 2047 ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா (Viksit Bharat) என்ற இலக்கை அடைய இந்தியாவிற்கு உதவும்.


மிலிந்த் குமார் சர்மா, ஜோத்பூரில் உள்ள முக்னீரம் பங்கூர் நினைவு பல்கலைக்கழகத்தின் உற்பத்தி மற்றும் தொழில்துறை பொறியியல் துறையில் ஆசிரியராக உள்ளார்.




Original article:

Share:

பெண்களுக்கான பணிகள் பற்றிய விவரங்கள் - சி.பி.சந்திரசேகர்ஜெயதி கோஷ்

பெண்களின் தொழிலாளர் பங்களிப்பில் சமீபத்திய அதிகரிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், தரவு மிகுந்த எச்சரிக்கையுடன் விளக்கப்பட வேண்டும். 


NSSOவின் காலமுறை தொழிலாளர் நலன் கணக்கெடுப்புகளின் மிக சமீபத்திய வருடாந்திர அறிக்கை, 2011-12 முதல் நீண்டகால சரிவு மற்றும் / அல்லது தேக்கத்திற்குப் பிறகு, மொத்த வேலைவாய்ப்பு விகிதங்களில் அதிகரிப்பு இருப்பதைக் குறிக்கிறது. இதற்கு முக்கியமாக குறிப்பிடத்தக்க மீட்பு மற்றும் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பில் அதிகரிப்பு காரணமாகும். இது 1990–ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் ஏற்கனவே குறைந்த மட்டத்திலிருந்து 2017-18 வரை குறைந்துள்ளது. 

 

புதிய காலாண்டு காலமுறை தொழிலாளர் நலன் ஆய்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, 2023-24 ஆண்டு வரைலயில் பெண்களின் பங்கேற்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.


ஆண்களின் வேலை பங்கேற்பு விகிதங்கள் 2017-18ஆம் ஆண்டில் 71.2 சதவீதத்திலிருந்து 2023-24ஆம் ஆண்டில் 76.1 சதவீதமாக சற்று உயர்ந்துள்ளது என்பதை படம் 1 காட்டுகிறது. ஆனால், பெண்களுக்கான எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறுகிய காலமான ஆறு ஆண்டுகளில் மிகவும் வியத்தகு முறையில் அதிகரித்தது. இந்த விகிதம் 2017-18ஆம் ஆண்டில் 22 சதவீதமாக மட்டுமே இருந்தது. மேலும், 80 சதவீதத்திற்கும் மேலாக அல்லது 26 சதவீத புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 2023-24ஆம் ஆண்டில் 40.3 சதவீதத்தை எட்டியது. (அனைத்து புள்ளிவிவரங்களும் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையின் பங்குகளைக் குறிக்கின்றன.) 

 

இந்த அதிகரிப்பு கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தெளிவாகத் தெரிந்தது. குறிப்பாக, கிராமப்புற இந்தியாவில் பெண்களின் வேலை பங்கேற்பு அதிகரித்துள்ளது என்பதை படம் 2 காட்டுகிறது. இந்த காலகட்டத்தின் கடைசி இரண்டு ஆண்டுகள் மிகப்பெரிய அதிகரிப்புகளைக் காட்டின. 

 

மேலோட்டமாகப் பார்த்தால், இது வரவேற்கத்தக்க நிகழ்வு என்பது வெளிப்படையாக உள்ளது. சமீப காலம் வரை பெண்களின் வேலை பங்கேற்பு குறைந்து வருவது இந்தியாவில் பெண்களின் நிலை மற்றும் பொருளாதாரத்தில் தொழிலாளர் சந்தை நிலைமைகள் ஆகிய இரண்டின் மீதும் ஒரு சாதரண கருத்தாக இருந்தது. இது ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் சக்தியில் நுழையும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஒருபுறம் இருக்க, தற்போதுள்ள தொழிலாளர் சக்தியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான உற்பத்தி வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. 

 

வேலையில்லாத் திண்டாட்டம் குறைகிறதா? 


சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக பெண்களிடையே அதிகரித்து வரும் இந்த வேலைப் பங்கேற்பு, வேலையின்மை வளர்ச்சியின் காலம் இறுதியாக குறைந்து வருவதைக் குறிக்க முடியுமா? மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின் நன்மைகள் இறுதியாக அதிக வேலைவாய்ப்பாக மொழிபெயர்க்கப்படுவதும், குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதும் சாத்தியமா? 

 

அப்படியானால், இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. இருப்பினும், NSSO "வேலை" என்பதை வரையறுக்கும் மற்றும் வகைப்படுத்தும் வழிகள் காரணமாக, அத்தகைய தரவு போக்குகளை மிகவும் கவனமாக விளக்குவது அவசியம். 

 

குறிப்பாக, உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்டதைப் போல, இது உண்மையில் தொழிலாளர் சந்தை சுறுசுறுப்பு மற்றும் பெண்களின் வேலைவாய்ப்புக்கான மேம்பட்ட நிலைமைகளின் அறிகுறியா என்பதை தீர்மானிக்க எந்த குறிப்பிட்ட வகையான வேலைகள் அதிகரித்துள்ளன என்பதைக் கண்டறிய நாம் அவற்றைத் திறக்க வேண்டும். 

 ஏனென்றால், NSSO அதன் தொழிலாளர்களின் வகைப்பாட்டில், "குடும்ப அமைப்புகளில் ஊதியம் பெறாத உதவியாளர்கள்" என்று விவரிக்கப்படுபவர்களை உள்ளடக்கியது. மேலும், இந்த வகையில்தான் பெண்களின் "வேலைவாய்ப்பில்" பெரும்பாலான அதிகரிப்பு ஏற்படுகிறது என்று மாறிவிடும். 

 

தரவு வகைப்பாடு 


மேலும், இந்திய தரவுகளில் வீடுகளுக்குள் செய்யப்படும் ஊதியம் பெறாத வேலைகளை உள்ளடக்கிய செயல்பாட்டு வகைப்பாடுகளும் இதில் அடங்கும். குறிப்பாக குறியீடு 92 (வீட்டுக் கடமைகளில் ஈடுபடுதல் - முக்கியமாக வீட்டிற்குள் பராமரிப்பு வேலை) மற்றும் குறிப்பாக குறியீடு 93 (வீட்டு கடமைகள் மற்றும் விறகு எடுப்பது, தண்ணீர் எடுப்பது, சமையலறைத் தோட்டம் மற்றும் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு போன்ற நீட்டிக்கப்பட்ட எஸ்.என்.ஏ நடவடிக்கைகள்). 

 

இந்த நடவடிக்கைகள் பணம் செலுத்துவதற்காக செய்யப்படலாம், மேலும் அவை பெரும்பாலும் இருக்கும். NSSO குறியீடுகள் 92 மற்றும் 93 இல் உள்ளவர்களை "தொழிலாளர் நலன் அமைப்பில் இல்லை" என வகைப்படுத்துகிறது. எனவே, அவர்கள் வேலைவாய்ப்பு தரவுகளில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், இந்த நடவடிக்கைகளுக்கும் "குடும்ப வணிகங்களில் ஊதியம் பெறாத உதவியாளர்களின்" செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு சிறியதாக உள்ளது மற்றும் சில நேரங்களில் தெளிவாக இல்லை. இதில் சில செயல்பாடுகள் ஒரு வகை அல்லது மற்றொன்றில் தவறாக வைக்கப்படலாம்.

 

பரிமாற்றம், வீட்டு உபயோகம் அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்கும் எந்தவொரு செயலையும் ILO வரையறுக்கிறது. இருப்பினும், வேலைவாய்ப்பு என்பது ஊதியம் பெறும் வேலையை மட்டுமே குறிக்கிறது. "குறிப்பிட்ட  உதவியாளர்கள்" பணம் பெறாததால், அவர்களை  "வேலை செய்பவர்களாக" கருதப்படக்கூடாது.

 




தரவு பிரித்தல் 

படங்கள் 3 மற்றும் 4   பெண்களின் நடவடிக்கைகளின் இந்த பிரிவினையை விவரிக்கின்றன. மேலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்திய பெண்களுக்கு இந்த சமீபத்திய காலகட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களை தனித்தனியாக விவரிக்கின்றன. முதலில் கிராமப்புற பெண்கள் 2023-24ஆம் ஆண்டில், ஊதியம் பெறாத தொழிலாளர்களில் (குறியீடுகள் 92 மற்றும் 93) வியத்தகு சரிவு ஆனது 2017-18 மட்டத்தில் பாதியாக இருந்தது. 

 

அதே நேரத்தில், சுய வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தது. இது பதிவு செய்யப்பட்ட "வேலைவாய்ப்பில்" 95 சதவீத அதிகரிப்பாகும். எனவே, ஊதியம் பெறாத பெண் தொழிலாளர்களின் (குறியீடுகள் 92 மற்றும் 93, NSSO தொழிலாளர் நலன் முறையில் சேர்க்கப்படவில்லை) விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி சுய வேலைவாய்ப்பின் அதிகரிப்பால் கிட்டத்தட்ட முழுமையாக விளக்கப்படுகிறது. இதில் குடும்ப நிறுவனங்களில் ஊதியம் பெறாத உதவியாளர்களாக பணியாற்றுபவர்கள் மற்றும் தங்கள் சொந்த கணக்கில் ஊதியத்திற்காக பணிபுரிபவர்கள் இருவரும் அடங்குவர். 


நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களின் பங்கு அரிதாகவே அதிகரிக்கிறது. எப்படியிருந்தாலும், அவர்கள் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கிராமப்புற பெண்களில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே உள்ளனர். பெண்களின் "வேலைவாய்ப்பு" விகிதங்களில் பாதி அதிகரிப்பை உருவாக்கும் இரண்டு வகைகளிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விகளை இது வெளிப்படையாக எழுப்புகிறது. 

 

நகர்ப்புறங்களில் இந்த முறை வேறு வகையில் உள்ளது. இங்கே, பெண்களின் பதிவு செய்யப்பட்ட வேலை பங்கேற்பில் 8 சதவீத புள்ளி அதிகரிப்பு மற்றும் ஊதியம் பெறாத தொழிலாளர்களில் 6 சதவீத புள்ளி குறைவு இருந்தது. இந்த முறையில், பெண்களின் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பின் அதிகரிப்பு வழக்கமான தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு இடையில் சமமாக பிரிக்கப்பட்டது. இது ஒரு வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும், ஆனால், வழக்கமான தொழிலாளர்கள் இன்னும் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களில் 13 சதவீதத்திற்கும் குறைவாகவும், சுயதொழில் செய்யும் பெண்கள் 7.4 சதவீதமாகவும் உள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குடும்ப நிறுவனங்களில் தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் ஊதியம் பெறாத உதவியாளர்களின் விகிதத்தில் சரிவு ஏற்பட்டது. 

 

வழக்கமான வேலையின் தரத்தை மதிப்பிடுவதற்கு முன்பு, அதிகமான பெண்களை ஈடுபடுத்திய வழக்கமான வேலையின் தன்மையை அடையாளம் காண மேலும் பிரித்தல் தேவைப்படுகிறது. ஆனால் அட்டவணை 1 ஏற்கனவே சில குழப்பமான போக்குகளைச் சுட்டிக்காட்டுகிறது. பெண் நிரந்தர தொழிலாளர்களின் உண்மை ஊதியங்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வீழ்ச்சியடைந்தன. 


இதில் பெரும்பாலானவை மோசமான நிலைமைகளுடன் கூடிய துயரமான வேலைவாய்ப்பு என்று தெரிவிக்கின்றன. இது நகர்ப்புற இந்தியாவில் ஏழைப் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பு ஆதாரங்களாக இருந்த வீட்டு வேலை மற்றும் அதையொத்த தொழில்களில் இருந்திருக்கலாம். எவ்வாறாயினும், பெண்களுக்கான சுய வேலைவாய்ப்பிலிருந்து உண்மையான வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி இன்னும் அதிகமாக இருந்தது. இது அவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் சில வருமானங்களை உறுதி செய்வதற்கான உயிர்வாழும் உத்தியின் ஒரு பகுதியாக அதிகமான பெண் தொழிலாளர்களை ஒப்பீட்டளவில் வரையறுக்கப்பட்ட வகையான நடவடிக்கைகளில் கூட்டமாக ஈடுபடுத்துவதை மீண்டும் பரிந்துரைக்கிறது. 

 

இந்த துரதிர்ஷ்டவசமான போக்குகளின் விளைவாக, வருவாயில் பாலின இடைவெளி இந்த காலகட்டத்தில் கணிசமாக வளர்ந்தது. குறிப்பாக கிராமப்புறங்களில், படம் 4-ல் காட்டப்பட்டுள்ளது. சுயதொழில் செய்பவர்களுக்கு இந்த இடைவெளி அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகமாக உள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்கள் ஆண்கள் சம்பாதிக்கும் சுய வேலைவாய்ப்பில் இருந்து மூன்றில் ஒரு பங்கை மட்டுமே பெறுகிறார்கள். 

 

ஒட்டுமொத்தமாக, தொழிலாளர் சந்தைகள் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. உத்தியோகப்பூர்வ ஆதாரங்கள் இந்தியாவில் பெண்களின் வேலையின் உண்மையான சூழ்நிலையில் ஒரு யதார்த்தமற்ற படத்தை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களுக்கான வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்.


Original article:

https://www.thehindubusinessline.com/opinion/the-fine-print-on-womens-jobs/article69069154.ece 

 

Share:

பிரவாசி பாரதிய திவாஸ் (வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்) - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்: 


  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜனவரி 10ஆம் தேதி நிறைவு உரையை நிகழ்த்துவார். மேலும், சமூக சேவை, மனிதாபிமான முயற்சிகள் மற்றும் இந்தியாவின் உலகளாவிய நிலையை மேம்படுத்துதல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் பிரவாசி பாரதிய சம்மான் விருதை வழங்குவார். 


  • அமெரிக்கா, பிஜி, கயானா, மொரீஷியஸ், மால்டோவா, மியான்மர், ரஷ்யா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 27 தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் இந்த ஆண்டு கௌரவிக்கப்பட உள்ளன. 


  • ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில், வெளியுறவு அமைச்சகம் (Ministry of External Affairs (MEA)) ஜனவரி 9-10 மாநாட்டிற்கு முன்னதாக, ஜனவரி 8-ஆம் தேதி இளைஞர் பிரவாசி பாரதிய திவாஸ் (வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்) (Youth Pravasi Bharatiya Divas) அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 


  • ஒட்டுமொத்தமாக, இந்த மூன்று நாள் நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சிறந்த தொழிலதிபர்கள், தொழில்முனைவோர் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டு இந்தியர்கள் பங்கேற்பார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


  • இந்தியாவுக்கும் அதன் வெளிநாடு வாழ் இந்திய சமூகத்திற்கும் இடையிலான பிணைப்பைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட "வளர்ந்த இந்தியாவிற்கு புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு" (“Diaspora’s Contribution to a Viksit Bharat”) என்பதே இந்த ஆண்டு கருப்பொருளாகும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  • இந்த மாநாடு, இந்திய அரசாங்கத்திற்கும் அதன் வெளிநாட்டு குடிமக்களுக்கும் இடையிலான உரையாடலுக்கான வாய்ப்பையும் வழங்கும். இது புலம்பெயர்ந்தோரை பாதிக்கும் கொள்கைகள், விசா விதிமுறைகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சமூகநலன் குறித்த விவாதங்களை அனுமதிக்கும். 


  • முதலீடு, புதுமைப் படைப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான மையமாக இந்தியாவின் திறனை இது வெளிப்படுத்துவதுடன், வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க ஊக்கமளிக்கும். 


  • அயோத்தியில் ராம் கோயில் திறப்பு விழாவின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, 'விஸ்வரூப் ராம் - ராமாயணத்தின் உலகளாவிய மரபு' (‘Vishwaroop Ram — The Universal Legacy of Ramayana’) என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியையும் பிரதமர் திறந்து வைப்பார். 


  • தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்த இந்தியா ஆகியவற்றில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பு குறித்த மற்றொரு கண்காட்சியும், இந்திய வெளிநாடுவாழ் இந்தியர்களின் பரவல் மற்றும் பரிணாமம் குறித்த மூன்றாவது கண்காட்சியும் நடைபெறும். குஜராத்தின் மாண்ட்வியில் இருந்து ஓமனில் உள்ள மஸ்கட்டுக்கு குடிபெயர்ந்த மக்களின் அரிய ஆவணங்கள் இதில் காட்சிப்படுத்தப்படும். 


  • வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டில் 'வாய்ப்புகளை உருவாக்குதல், தடைகளை உடைத்தல்: புலம்பெயர்ந்தோர் திறன்களின் கதைகள்' உட்பட ஐந்து கருப்பொருள் கொண்ட முழுமையான அமர்வுகள் இடம்பெறும். 


 உங்களுக்கு தெரியுமா?


  • 1915-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பியதைக் குறிக்கும் வகையில் ஜனவரி 9ஆம் தேதி பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படுகிறது. 


  • 1915-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய தேதி என்பதால் ஜனவரி 9 தேர்ந்தெடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, பல்வேறு அரசியல்வாதிகளால் மிகவும் பிரபலமான முதல் வெளிநாடுவாழ் இந்தியர் (Non-Resident Indian) என்று அவர் அடிக்கடி குறிப்பிடப்படுகிறார். 


  • இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, "இது ஒரு வெளிநாடு வாழ் இந்தியர், இந்திய வம்சாவளி நபர் அல்லது அவர்களால் நிறுவப்பட்டு நடத்தப்படும் ஒரு அமைப்பு அல்லது நிறுவனத்துக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமாகும்." 


  • டயஸ்போரா (diaspora) என்ற சொல் கிரேக்க புலம்பெயர்ந்தோரில் இருந்து தோன்றியது. அதாவது, கிழக்கு பசிபிக் மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள மாவட்டங்களுக்கு 'கிர்மிட்டியா' ஏற்பாட்டின் கீழ் ஒப்பந்தத் தொழிலாளர்களாக முதல் தொகுதி இந்தியர்கள் அழைத்துச் செல்லப்பட்டதிலிருந்து இந்திய புலம்பெயர்ந்தோர் பன்மடங்கு அதிகரித்துள்ளனர். 


  • 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளின் முற்பகுதியில், 1833-34ஆம் ஆண்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதால் தொழிலாளர் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் காலனிகளில் உள்ள தோட்டங்களில் வேலை செய்ய ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். 


  • இரண்டாவது முறை இடப்பெயர்வின் ஒரு பகுதியாக, சுமார் 20 லட்சம் இந்தியர்கள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு பண்ணைகளில் வேலை செய்ய சென்றனர். மூன்றாவது மற்றும் நான்காவது முறைகளில் தொழில் வல்லுநர்கள் மேற்கத்திய நாடுகளுக்கும், தொழிலாளர்கள் வளைகுடா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கும் சென்றனர். 


  • வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறார்கள்: வெளிநாடுவாழ் இந்தியர்கள் (Non-Resident Indians (NRI)), இந்திய வம்சாவளியினர் (Persons of Indian Origin (PIOs)), இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்கள் (Overseas Citizens of India (OCIs)). 


  • NRI என்பது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள். 


  • 2015-ஆம் ஆண்டில் PIO வகை நீக்கப்பட்டு OCI வகையுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும், தற்போதுள்ள PIO கார்டுகள் டிசம்பர் 31, 2023 வரை செல்லுபடியாகும். இதன் மூலம் இந்த அட்டைகளை வைத்திருப்பவர்கள் OCI கார்டுகளைப் பெற வேண்டும். 


  • வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், சீனா, ஈரான், பூட்டான், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைத் தவிர, இந்திய வம்சாவளி நபரை (PIO) ஒரு வெளிநாட்டு குடிமகனாக வரையறுக்கிறது.  இந்திய அரசு சட்டம், 1935ன் படி, PIO என்பது இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் அல்லது யாருடைய பெற்றோர், தாத்தா, பாட்டி அல்லது கொள்ளு தாத்தாக்கள் இந்தியாவில் பிறந்து வாழ்ந்தவர்கள் மற்றும்  இந்திய குடிமகனின் மனைவியும் இதில் அடங்குவர். 


  • 2006-ஆம் ஆண்டில், OCI (Overseas Citizen of India) என்ற தனி வகை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்வரும் நிபந்தனைகளில் ஒன்றைப் பூர்த்தி செய்த வெளிநாட்டினருக்கு OCI அட்டை வழங்கப்பட்டது. அவை:


1. அவர்கள் ஜனவரி 26, 1950 அன்று இந்திய குடிமக்களாக இருக்க தகுதி பெற்றவர்கள்.

2. ஜனவரி 26, 1950 அன்று அல்லது அதற்குப் பிறகு இந்தியாவில் பிறந்த  குடிமக்கள்.

3. ஆகஸ்ட் 15, 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் ஒரு பகுதியாக மாறிய ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள்.


  • பாகிஸ்தான் அல்லது வங்கதேச குடிமகனாக இருந்தவர்களைத் தவிர, அத்தகைய நபர்களின் மைனர் குழந்தைகளும் OCI அட்டைகளுக்கு தகுதியுடையவர்கள். 


  • வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் ஆகஸ்ட் 22, 2022 அறிக்கையின்படி, டிசம்பர் 31, 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, 4.7 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இந்த எண்ணிக்கையில் NRIகள், PIOக்கள், OCIகள் மற்றும் மாணவர்கள் போன்றோர் உள்ளனர். மாணவர்களைத் தவிர்த்து, 1.87 கோடி PIOகள் மற்றும் 1.35 கோடி NRIகள் உட்பட இந்த எண்ணிக்கை 3.22 கோடியாக உள்ளது. 


  • ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தயாரித்த உலக இடம்பெயர்வு அறிக்கையின்படி, இந்தியா உலகின் மிகப்பெரிய புலம்பெயர்ந்த மக்களைக் கொண்டுள்ளது. இது உலகளவில் சிறந்த வம்சாவளி நாடாக உள்ளது. அதைத் தொடர்ந்து மெக்ஸிகோ, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை உள்ளன. 


  • 2022-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தால் பகிரப்பட்ட எண்ணிக்கைகள், இந்திய புலம்பெயர்ந்தோரின் புவியியல் பரவல் மிகப்பெரியது என்பதைக் காட்டுகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாடு வாழ் இந்தியர்களைக் கொண்ட நாடுகளில், அமெரிக்கா (44 லட்சம்), ஐக்கிய இராச்சியம் (17.6 லட்சம்), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (34 லட்சம்), இலங்கை (16 லட்சம்), தென்னாப்பிரிக்கா (15.6 லட்சம்), சவுதி அரேபியா (26 லட்சம்), மியான்மர் (20 லட்சம்), மலேசியா (29.8 லட்சம்), குவைத் (10.2 லட்சம்) மற்றும் கனடா (16.8 லட்சம்) மக்கள் வாழ்கின்றனர். 


  • உலக வங்கியின் கூற்றுப்படி, இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு பணம் அனுப்புவது குடும்ப வருமானத்தின் முக்கிய ஆதாரமாகும். நவம்பர் 2022-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சமீபத்திய உலக வங்கியின் இடம்பெயர்வு மற்றும் மேம்பாட்டு அறிக்கையில், "முதல் முறையாக இந்தியா ஒர் தனி நாடாக வருடாந்திர பண அனுப்புதலில் $100 பில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பெறும் பாதையில் உள்ளது" என்று கூறியுள்ளது. 


  • உலக புலம்பெயர்வு அறிக்கை (World Migration Report), இந்தியா, சீனா, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகியவை பணம் அனுப்பும் முதல் ஐந்து நாடுகளில் (இறங்கு வரிசையில்) உள்ளன. "இருப்பினும் இந்தியாவும் சீனாவும் மற்றவற்றைவிட மேலே உள்ளன". 2020-ஆம் ஆண்டில், இரு அண்டை நாடுகளும் ஆசியாவில் மிகப்பெரிய அளவிலான சர்வதேச பண அனுப்புதல்களைப் பெற்றன. அவை மொத்தம் 140 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும். 



Original article:

Share: