உயர்நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளைக் கையாள தற்காலிக நீதிபதிகளை (ad-hoc judges) நியமிக்கலாம் : உச்சநீதிமன்றம்

 2021-ம் ஆண்டு தீர்ப்பை ஓரளவு மாற்றியமைக்க முடியும் என்று உச்சநீதிமன்ற அமர்வு கூறியது. இதில், குற்றவியல் தொடர்பான மேல்முறையீடுகளைத் தீர்ப்பதற்கு தற்காலிக நீதிபதிகள் நியமிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதிமன்ற சிறப்பு அமர்வு முடிவு செய்யும்.


2025 ஜனவரி 21 செவ்வாய்க்கிழமை, உச்சநீதிமன்றமானது உயர் நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளை நியமிக்க பரிந்துரையை வழங்கியது. இந்தப் பரிந்துரை, குற்றவியல் தொடர்பான மேல்முறையீடுகளின் பெரும் தேக்கத்தை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் குறித்த தரவுகளை மதிப்பாய்வு செய்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மட்டும் 63,000 குற்றவியல் மேல்முறையீடுகள் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன என்று அவர்கள் குறிப்பிட்டனர்.


ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்குகளின் எண்ணிக்கை 13,000 ஆக இருப்பதாக இந்திய தலைமை நீதிபதி (CJI) குறிப்பிட்டார். இதேபோல், கர்நாடகாவில் 20,000 வழக்குகளும், பாட்னாவில் 21,000 வழக்குகளும், ராஜஸ்தானில் 8,000 வழக்குகளும், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் 21,000 குற்ற வழக்குகளும் நிலுவையில் இருப்பதாகவும் தலைமை நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.


2021-ம் ஆண்டு தீர்ப்பை ஓரளவு மாற்றியமைக்கலாம் என்று நீதிமன்ற அமர்வு கூறியது. இது தற்காலிக நீதிபதிகள் (ad-hoc judges) குற்றவியல் மேல்முறையீடுகளைக் கையாள அனுமதிக்கும். இந்த மேல்முறையீடுகள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான நீதிமன்ற சிறப்பு அமர்வு தீர்மானிக்கப்படும்.


அங்கீகரிக்கப்பட்ட நீதிபதிகளில் 80% உடன் உயர்நீதிமன்றம் இயங்கினால், அதில் தற்காலிக நீதிபதியை நியமிக்கக் கூடாது என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.


"குற்றவியல் வழக்குகளைக் கையாளும் அமர்வுகளில் ஒரு வழக்கமான நீதிபதி தலைமை நீதிபதியாக இருப்பதோடு, தற்காலிக நீதிபதிகள் அமரும் சூழ்நிலையை மட்டுமே நாம் கவனிக்க வேண்டும். இந்த மாற்றம் எங்களுக்குத் தேவை" என்று நீதிமன்ற அமர்வு மேலும் கூறியது. ஜனவரி 28 அன்று அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியை உதவுமாறு நீதிமன்ற அமர்வு கேட்டுக் கொண்டது.


ஏப்ரல் 20, 2021 அன்று, உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை தற்காலிக நீதிபதிகளாக நியமிக்கலாம் என்று அது உத்தரவிட்டது. அவர்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை பணியாற்றலாம். இந்த நடவடிக்கை வழக்குகளின் தேக்கத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


விசாரணையின் போது, ​​இந்திய தலைமை நீதிபதி வழக்கு பட்டியலிடப்பட்டதற்கான காரணத்தை விளக்கினார். சில உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்றவியல் மேல்முறையீடுகளின் எண்ணிக்கையே இதற்குக் காரணம் என்று அவர் மேலும் கூறினார்.


2019-ம் ஆண்டு லோக் பிரஹாரி vs இந்திய ஒன்றியம் (Lok Prahari vs Union of India) என்ற வழக்கை இந்த நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கிற்கான தீர்ப்பு 2021-ம் ஆண்டு வழங்கப்பட்டது.


2021-ம் ஆண்டு தீர்ப்பை சுமூகமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதில் நீதிமன்ற அமர்வு இப்போது கவனம் செலுத்தி வருகிறது.


உயர் நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக ஒன்றிய அரசு பரிந்துரைத்த செயல்முறை "மிகவும் சிக்கலானது" என்று உச்சநீதிமன்றம் கூறியது. மேலும், எளிமையான நடைமுறையின் அவசியத்தை அது வலியுறுத்தியது. தற்காலிக நீதிபதிகளை நியமிப்பதன் உண்மையான நோக்கம் தோற்கடிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.


அரசியலமைப்பின் பிரிவு 224A அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. இது உயர் நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளை நியமிப்பது குறித்து கையாள்கிறது. ஒரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒருவரை நீதிபதியாகச் செயல்படுமாறு கோரலாம் என்று அரசியலமைப்பு விதி கூறுகிறது. இது எந்த நேரத்திலும் நடக்கலாம். இருப்பினும், தலைமை நீதிபதி முதலில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். மேலும், இதில் பரிந்துரைக்கப்பட்ட நபர், அந்த உயர் நீதிமன்றத்திலோ அல்லது வேறு ஏதேனும் உயர் நீதிமன்றத்திலோ முன்பு நீதிபதியாகப் பதவி வகித்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.


நியமனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.


இந்த வழிகாட்டுதல்கள் பல சிக்கல்களைக் கையாண்டன. நியமன செயல்முறை எப்போது தொடங்கலாம் என்பதை அவை கோடிட்டுக் காட்டின. அவை பதவிக்காலம், நியமன நடைமுறை, சம்பளம் மற்றும் சலுகைகளையும் உள்ளடக்கியது. வழிகாட்டுதல்கள் அதிகபட்ச தற்காலிக நீதிபதிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டன. இறுதியாக, வழக்குகளைக் கையாள்வதில் அவர்களின் பங்கை அவர்கள் வரையறுத்தனர்.




Original article:

Share:

வெற்றிக்கான விலை : கேரளாவின் மக்கள் தொகை மாற்றம் குறித்து…

 கேரளாவில் அதிகரித்து வரும் மகப்பேறு இறப்பு விகிதம் (maternal mortality ratio) இன்னும் கவலைக்குரியதாக இல்லை.


சில நேரங்களில், அதிகப்படியான நல்ல விஷயம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். நாட்டை வழிநடத்திய கேரளாவின் மக்கள்தொகை மாற்றம், இப்போது மாநிலத்திற்கு சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. மாநிலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதம் உயரத் தொடங்கியுள்ளது. குறைந்த கருவுறுதல் மற்றும் குறைந்த இறப்பு என்ற கட்டத்திற்கு நகர்ந்த முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது. கருவுறுதல் அளவு (fertility level) குறைந்ததால், பிறப்பு எண்ணிக்கையும் குறைந்தது. இது நாட்டிலேயே சிறந்ததாக இருந்த கேரளாவின் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை அதிகரிக்க வழிவகுத்தது. 1987-88ஆம் ஆண்டில் மொத்த மாற்று நிலை கருவுறுதல் விகிதத்தை எட்டுவதன் மூலம் கேரளா மக்கள்தொகை மாற்றத்திற்கு வழிவகுத்தது.  2000-களின் நடுப்பகுதியில் பிற தென் மாநிலங்கள் கேரளாவைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் இருந்தன. 2.1 என்ற மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate (TFR)) மாற்று நிலையாகக் கருதப்படுகிறது. அதன்படி, ஒரு பெண் தனது மக்கள்தொகை அளவைப் பராமரிக்க 2.1 குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டும். கருவுறுதல் விகிதம் இதற்குக் கீழே இருந்தால், மக்கள்தொகை அளவு குறையும். இது தென் மாநிலங்களுக்கு அரசியல் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த கருவுறுதல் விகிதங்களுடன், மக்களவை இடங்கள் மக்கள்தொகை அடிப்படையில் மறுபகிர்வு (delimitation) செய்யப்படும்போது அது அவர்களுக்கு பாதகமாக இருக்கும் என்று கவலைப்படுகிறார்கள். மக்கள்தொகை மாற்றம் என்பது அதிக பிறப்பு விகிதங்கள் மற்றும் அதிக இறப்பு விகிதங்களிலிருந்து குறைந்த பிறப்பு விகிதங்கள் மற்றும் குறைந்த இறப்பு விகிதங்களுக்கு மாறுவதாகும். இந்த மாற்றம் கல்வி, பொருளாதார மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்களுடன் நிகழ்கிறது. இந்த மாற்றம் ஏற்கனவே உலகின் பெரும்பாலான பகுதிகளில் நிகழ்ந்துள்ளது. இது உலக மக்கள்தொகையை நிலைப்படுத்த உதவியது. இது மால்தஸின் கூற்றுப்படி வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வளர்த்த பிறகு, மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் பிறப்பு விகிதங்கள் குறையத் தொடங்கின.


மக்கள்தொகை மாற்றக் கோட்பாடு நான்கு நிலைகளைக் கொண்டுள்ளது:


1. நிலையான மக்கள்தொகை


2. விரைவான மக்கள்தொகை வளர்ச்சி


3. மக்கள்தொகை வளர்ச்சி சமநிலையில் உள்ளது


4. மக்கள்தொகை வளர்ச்சியில் சரிவு


தென்கொரியா போன்ற நாடுகள் இந்த நிலையை எட்டியுள்ள நிலையில், மக்கள்தொகை வளர்ச்சியை அதிகரிக்க போராடி வருகின்றன. குழந்தை பெறுவதை ஊக்குவிக்கும் முயற்சிகள்கூட பலனளிக்கவில்லை. ஏனெனில் கருவுறுதல் விகிதங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. மக்கள்தொகை மாற்றம் தொடங்கியவுடன் அதை நிறுத்துவது சாத்தியமில்லை. இருப்பினும், அரசாங்கங்கள் விளைவுகளுக்கு தயாராக இருக்க வேண்டும். இவை பொருளாதாரம் மற்றும் சமூகம் இரண்டையும் பாதிக்கும். வேலை செய்யும் வயது மக்கள் தொகை குறைந்து, முதியோர் மக்கள் தொகை அதிகரிக்கும் போது, ​​தேசிய வளங்கள் மீது அதிக அழுத்தம் இருக்கும். அரசாங்கங்கள் பொது நிதி மற்றும் சமூக ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். மேலும், அரசாங்கங்கள் சுகாதார நிதியையும் (Health-care financing) மேம்படுத்த வேண்டும். வீட்டு வேலைகளில் சமமான பங்களிப்பை ஊக்குவிக்கும் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.




Original article:

Share:

மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது… -டி. சுரேஷ் குமார்

 பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அவர் அசாமில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1993ஆம் ஆண்டு, அவரை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இருப்பினும், மன்மோகன் சிங் அசாமின் "சாதாரண குடியிருப்பாளர்" (an ordinary resident) அல்ல என்று மனுதாரர் கூறினார். மனுதாரரின் கூற்றை நீதிமன்றம் நிராகரித்தது.


கடந்த மாதம் காலமான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் ஒரு சர்ச்சையை எதிர்கொண்டார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தார். 1991-ல், அவர் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அவரை நிதியமைச்சராக நியமித்தார். அதன் பிறகு, மன்மோகன் சிங் அசாமில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அந்த நேரத்தில், மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு வேட்பாளர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று சட்டம் கூறியது. முன்னாள் அசாம் முதல்வர் ஹிதேஷ்வர் சைகியாவுக்குச் சொந்தமான கவுகாத்தியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்ததாக மன்மோகன் சிங் கூறினார். இருப்பினும், தேர்தலுக்கு முன்பு, அவர் அசாமில் வசிக்கும் ஒரு சாதாரண குடியிருப்பாளராக இல்லை.


நான்கு பிரதிநிதித்துவங்கள்

1993 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், மெட்ராஸ் குடிமக்கள் முன்னேற்றக் குழுவின் தலைவரான கஸ்தூரி ராதாகிருஷ்ணன், குடியரசுத்தலைவருக்கு நான்கு மேல்முறையீடு மனுக்களை அனுப்பினார். மன்மோகன் சிங்கை மாநிலங்களவையிலிருந்து  தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவருக்கு எந்த பதிலும் கிடைக்காததால், அவர் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை அணுகினார். அரசியலமைப்பின் பிரிவு 103(2)-ன் படி, தனது மேல்முறையீடு மனுக்களை தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கருத்துக்காக அனுப்புமாறு குடியரசுத்தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். 


மன்மோகன் சிங் அசாமின் "சாதாரண குடியிருப்பாளர்" அல்ல என்பது அவரது வாதமாக இருந்தது. எனவே, அவர் சட்டப்பூர்வமாக மாநிலத்தில் வாக்காளராகப் பதிவு செய்ய முடியாது. இதன் அடிப்படையில், அரசியலமைப்பின் பிரிவு 102(1)(e)-ன் கீழ் மன்மோகன் சிங் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகக் கருத வேண்டும் அவர் கூறினார்.


இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்குமுன், நீதிமன்றம் மூன்று விஷயங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. முதலாவதாக, அரசியலமைப்பின் 361வது பிரிவால் வழங்கப்பட்ட விலக்குரிமையைக் கருத்தில் கொண்டு, குடியரசுத்தலைவருக்கு எதிராக ஒரு நீதிப் பேராணை (writ) மனுவை  தாக்கல் செய்ய முடியுமா என்பதை நீதிமன்றம் பரிசீலித்தது. இரண்டாவதாக, மனுதாரர், கஸ்தூரி ராதாகிருஷ்ணனுக்கு பொது நல வழக்காக நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்ய உரிமை உள்ளதா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்தது. மூன்றாவதாக, மனுதாரர் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கான தெளிவான கோரிக்கையை முன்வைத்தாரா என்பதை நீதிமன்றம் பரிசீலித்தது. இது அரசியலமைப்பின் பிரிவு 102(1)(e)-ஐ அடிப்படையாகக் கொண்டது. அத்தகைய கோரிக்கை முன்வைக்கப்பட்டால், மனுதாரரின் கோரிக்கையின்மீது குடியரசுத்தலைவர்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கடந்தகால வழக்குகளை முன்னுதாரணமாக மேற்கோள் காட்டி வாதிட்டார். தகுதி நீக்க குற்றச்சாட்டு இருக்கும்போது, ​​அது சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு முன்பு குடியரசுத்தலைவர் தேர்தல் ஆணையத்தின் கருத்தைப் பெற வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜு ஒரு குறிப்பிட்ட கேள்வியைக் கேட்டபோது, ​​மனுதாரரின் வழக்கறிஞர் கடந்த கால வழக்கை மேற்கோள் காட்டினார். அந்த வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி நியமித்தது ரத்து செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், நீதிமன்றம் மனுவை விசாரிப்பதற்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்று வழக்கறிஞர் வாதிட்டார்.


விலக்கு நீட்டிக்கப்பட்டது


சமர்ப்பிப்புகளை மதிப்பாய்வு செய்த பிறகு, நீதிபதி ராஜு, "இந்த நீதிப் பேராணை மனுவில் கோரப்படும் நிவாரணத்தை  நிதிமன்றத்தால் இந்தக் கட்டத்தில் வழங்க முடியாது என்று கூறினார். பிரிவு 361 குடியரசுத்தலைவருக்கு விலக்குரிமை அளிக்கிறது (immunity conferred) என்று நீதிபதி விளக்கினார். இந்த விலக்குரிமை குடியரசுத்தலைவருக்கு தனது அதிகாரப்பூர்வ கடமைகளில் செய்யும் செயல்களுக்கு மட்டுமல்ல, தனது அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் செய்வதாகக் கூறப்படும் செயல்களுக்கும் பொருந்தும். 


“மனுதாரர் தனது கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து குடியரசுத் தலைவருக்கு ஒரு குறிப்பிட்ட வழிகாட்டுதலைக் கேட்கிறார். பிரிவு 361-ன் படி, மனுதாரரின் வேண்டுகோளுக்கு ஏற்ப இதைச் செய்ய முடியாது. மேலும், வழக்கின் உண்மைகளின் அடிப்படையில், மனுதாரர் எதிர்பார்த்த அளவுக்கு அல்லது விரைவாக பதில் அளிக்காததால், குடியரசுத்தலைவர் தனது கடமைகளை செய்ய தவறினர் என்று கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் இது நீதிமன்றத்தின் தலையீட்டை நியாயப்படுத்தாது" என்று நீதிபதி குறிப்பிட்டார்.


மனுதாரருக்கு நீதிப் பேராணை  மனுவை பராமரிக்க உரிமை இல்லை என்றும் நீதிமன்றம் நம்பியது. சென்னையில் உள்ள ஒரு சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிய மனுதாரர், அசாம் மக்களுக்காகப் பேச முடியாது என்று கூறினார். அசாம் மக்களால் நீதிமன்றத்தை தாங்களாகவே அணுக முடியவில்லை என்பது போல்  இந்த மனு  சித்தரிப்பதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். இந்த மனு விளம்பரம் பெறுவதை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது என்றும் நீதிபதி நினைத்தார்.


குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை


"இறுதியாக, மனுதாரர் பிரிவு 102(1)(e)-ன் கீழ் எந்தவொரு தகுதியிழப்பும் இருப்பதாகக் காட்டவோ அல்லது நிரூபிக்கவோ இல்லை". இந்தத் தகுதியிழப்புக்கு பிரிவு 103(2)-ன் கீழ் குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதி நீக்கம் நிரூபிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை முதலில் முடிவெடுப்பது நீதிமன்றமோ அல்லது குடியரசுத்தலைவரோ அல்ல என்பது உண்மைதான். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கருத்தைப் பெற்ற பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும். இருப்பினும், ஒவ்வொரு மனுவும், பிரிவு 102(1)(e)-ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை அல்லது குற்றம் சாட்டப்படவில்லை என்றாலும், பிரிவு 103(2)-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை" என்று நீதிபதி கூறினார்.


நான்காவது பிரதிவாதியான மன்மோகன் சிங், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட எந்தவொரு சட்டத்தின் கீழும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்ற எந்தவொரு குறிப்பிட்ட கூற்றையும் பிரதிநிதித்துவங்களிலும் பிரமாணப் பத்திரத்திலும் சேர்க்கப்படவில்லை என்று நீதிபதி கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தகுதி நீக்கம் குறித்த சட்டம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (Representation of the People Act) பிரிவுகள் 8, 8A, 9, 9A, 10, 10A மற்றும் 11A-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. 


நான்காவது பிரதிவாதியான மன்மோகன் சிங்கை எந்தச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும், பிரிவு 103(2)-ன் கீழ் குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். எனவே, இந்த நீதிப் பேராணை (writ) மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது என்றும் இந்த மனுவை நிராகரிப்பதாக நீதிபதி தனது உரையை முடித்தார். 2003ஆம் ஆண்டு, மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற தேவையை நீக்கி நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றியது. 2004ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர், பாஜக வேட்பாளராக சொந்த மாநிலம் அல்லாத வேறு மாநிலத்திலிருந்து (மத்தியப் பிரதேசம்)  மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதன்மையான நபர்களில் ஒருவராக இருந்தார்.




Original article:

Share:

2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த வேளாண் பொருளாதாரத்தை உருவாக்க 7 இன்றியமையாத தேவைகள் -அக்ஷிதா அகர்வால்

 இந்தியா தனது விவசாய முறைகளை நவீனமயமாக்குவதில் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. இதற்கு முதலீடுகள், கொள்கை மாற்றங்கள் மற்றும் உள்ளூர் மட்டத்தில் தீவிர ஈடுபாடு ஆகியவற்றின் கலவை தேவைப்படும்.


இந்திய விவசாயம் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. சவால்கள் இருந்தபோதிலும் உணவுப் பாதுகாப்பு, கிராமப்புற வாழ்வாதாரம் மற்றும் நிலைத்தன்மையை சமநிலைப்படுத்த முயற்சிக்கிறது. உற்பத்தித்திறனில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்தியா இன்னும் பின்தங்கியுள்ளது. 2047ஆம் ஆண்டுக்குள் வெற்றிகரமான விவசாயப் பொருளாதாரத்தை உருவாக்க, தொழில்துறைக்கான ஏழு முக்கிய நடவடிக்கைகள் இங்கே விளக்கப்பட்டு உள்ளது.


வானிலை முன்னறிவிப்பு, பூச்சி கண்டறிதல் மற்றும் பயிர் விளைச்சலை மேம்படுத்துதல் போன்ற முக்கியமான பணிகளுக்கு இந்தியா விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இருப்பினும், தொழில்நுட்ப ஆர்வமுள்ள விவசாயிகளின் ஒரு சிறிய குழு மட்டுமே இதைப் பயன்படுத்துகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், நிகழ்நேர நுண்ணறிவுகளை வழங்க பெரிய தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் பெரிய அளவிலான துல்லியமான விவசாயத்திற்கு AI கருவிகள் உதவுகின்றன.   இந்தியாவில் AI-ஐ மேலும் அணுகக்கூடியதாக மாற்ற, சிறு விவசாயிகளுக்கு உள்ளூர் மொழிகளில் AI தளங்களை உருவாக்குவது, மலிவு விலையில் தீர்வுகளை உருவாக்க AgTech நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் அரசாங்க திட்டங்கள் மூலம் AI அடிப்படையிலான ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.


இந்தியா சில பகுதிகளில் கரிம வேளாண்மை மற்றும் பூஜ்ஜிய பட்ஜெட் இயற்கை வேளாண்மை போன்ற மீளுருவாக்க விவசாய முறைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இருப்பினும், பெரும்பாலான விவசாயம் இன்னும் ஒற்றைப் பயிர் சாகுபடி மற்றும் அதிக இரசாயனங்கள் மற்றும் உரங்களைப் பயன்படுத்துவதை நம்பியுள்ளது. இது மண் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. கொள்கைகள், விவசாயி ஊக்கத்தொகைகள் மற்றும் நிலையான முறைகள் குறித்த ஆராய்ச்சியில் பிரான்சும் அமெரிக்காவும் மீளுருவாக்க விவசாயத்தில் முன்னணியில் உள்ளன. மீளுருவாக்க விவசாயத்திற்கான (regenerative agriculture) தேசிய கொள்கையை உருவாக்குவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் மற்றும் செலவு குறைந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய நடைமுறைகள் குறித்த தனியார் துறை ஆராய்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.


கிராமப்புறங்களில் அதிக செலவுகள் மற்றும் அதிக தொழிலாளர் சக்தி காரணமாக இந்தியாவில் ரோபோட்டிக்ஸை ஏற்றுக்கொள்வது குறைவாகவே உள்ளது. விதை எந்திரங்கள் மற்றும் தெளிப்பான்கள் போன்ற அடிப்படை ஆட்டோமேஷன் கருவிகள் பொதுவானவை என்றாலும், ரோபோ அறுவடை எந்திரங்கள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பெரும்பாலான விவசாயிகளுக்கு மலிவு விலையில் இல்லை. ரோபோட்டிக்ஸை ஆதரிக்க, இந்தியா சிறிய பண்ணைகளுக்கு குறைந்த விலை தீர்வுகளை உருவாக்க வேண்டும். ஆட்டோமேஷனை சோதித்து பயன்படுத்துவதற்கு AgTech மையங்களை அமைக்க வேண்டும். மேலும், புதுமைகளை அளவிட பொது-தனியார் கூட்டாண்மைகளை ஊக்குவிக்க வேண்டும்.


நான்காவதாக, இந்தியாவின் மாற்று புரோட்டீன் சந்தை அதன் ஆரம்ப நிலையில் உள்ளது. மலிவு மற்றும் அளவிடுதல் ஆகியவை தத்தெடுப்புக்கு முக்கிய தடைகளாக உள்ளன. அரசாங்க ஆதரவுடன் கூடிய முயற்சிகள் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி மூலம் மாற்று புரதங்களில் ஐரோப்பிய ஒன்றியம் முன்னணியில் உள்ளது.  உற்பத்தி, உருவாக்க நுட்பங்கள் மற்றும் ஆய்வகத்தால் வளர்க்கப்படும் புரதங்கள் பற்றிய பொது விழிப்புணர்வை மேம்படுத்த உலகளாவிய தலைவர்களுடன் கூட்டு சேருவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.


ஐந்தாவது, இந்திய விவசாயத்தில் டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பங்கள் குறைவாகவே உள்ளது. களச் சோதனைகள் கைமுறை மற்றும் நேரத்தைச் செலவழிக்கும், செலவுகளை அதிகரிக்கும் மற்றும் புதிய பயிர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் தாமதமும் உள்ளன. யுஎஸ் டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, களச் சோதனைகளை கிட்டத்தட்ட மாதிரியாகக் கொண்டு, செலவுகளைக் குறைத்து, விவசாய உள்ளீடுகளை விரைவுபடுத்துகிறது. இந்தியாவில், AgTechs உடன் இணைந்து இத்தகைய திட்டங்களை முன்னோக்கி செலுத்துவது, டிஜிட்டல் மாடலிங்கில் ஆராய்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் டிஜிட்டல் ட்வின் தீர்வுகளில் முதலீடு செய்வதற்கான வரிச் சலுகைகளை ஆராய்வது ஆகியவை வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும்.


ஆறாவது, பிளாக்செயின் தொழில்நுட்பம் இன்னும் இந்தியாவில் சோதனை நிலையில் உள்ளது. உணவு கண்டுபிடிப்பில் முன்னோடித் திட்டங்கள் உள்ளன. உள்கட்டமைப்பு மற்றும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு இல்லாததால் பரவலான தத்தெடுப்பு தடைபட்டுள்ளது. சீனா பல விவசாய விநியோகச் சங்கிலிகளில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தினை ஒருங்கிணைத்துள்ளது.  வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது. மோசடியைக் குறைத்து சந்தை அணுகலை மேம்படுத்துகிறது. ஏற்றுமதி பயிர்கள், விவசாயிகளுக்கு விலையை உணர்தல் பொருள் ரீதியாக மேம்படுத்த, இந்தியா பிளாக்செயின் தொழில்நுட்பத்தினை அளவை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.


ஏழாவது, காலநிலை-ஸ்மார்ட் வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது ஆகும். PM-KUSUM போன்ற திட்டங்கள் நீர்ப்பாசனத்திற்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிக்கும் அதே வேளையில், பெரிய அளவிலான காலநிலை-ஸ்மார்ட் முயற்சிகள் குறைவாகவே உள்ளன.  இந்தியா நுண்ணீர் பாசன தொழில்நுட்பங்களை அதிகரிக்க வேண்டும், காலநிலையை எதிர்க்கும் விதை வகைகள் மற்றும் உயிர் சார்ந்த பயிர் பாதுகாப்பு தயாரிப்புகளில் முதலீடு செய்ய வேண்டும். மேலும், உள்ளூர்மயமாக்கப்பட்ட காலநிலை ஆலோசனை அமைப்புகளை உருவாக்க AI முறையினைப் பயன்படுத்த வேண்டும்.


இந்தியா தனது விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது. புதிய யோசனைகளை ஏற்றுக்கொள்வதன் மூலமும், பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலமும், உலகை நிலையான மற்றும் மேம்பட்ட விவசாயத்தில் வழிநடத்த முடியும். மற்ற நாடுகளின் தீர்வுகளை நகலெடுப்பது இதன் குறிக்கோள் அல்ல. மாறாக, இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப விவசாய முறைகளை சரிசெய்வதாகும். இதை அடைவதற்கு முதலீடு, கொள்கை மாற்றங்கள் மற்றும் வளர்ந்த இந்தியாவில் சிறு விவசாயிகள் பின்தங்கியிருக்காமல் இருப்பதை உறுதிசெய்ய உள்ளூர் ஈடுபாடு, முதலீடுகள் மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் கலவை தேவைப்படும்.


அக்ஷிதா அகர்வால் எழுத்தாளர் மற்றும் McKinsey & Company நிறுவனத்தில் நிர்வாக ஆலோசகராக உள்ளார்.




Original article:

Share:

ஆர்ஜி கர் பலாத்கார வழக்கு குற்றவாளிக்கு ஏன் மரண தண்டனை வழங்கப்படவில்லை? -அஜோய் சின்ஹா ​​கற்பூரம்

 தீவிரத்தை குறைக்க அல்லது அதிகரிக்கக்கூடிய காரணிகளைப் பற்றிய புரிதல் காலப்போக்கில் மாறிவிட்டது. பல்வேறு முடிவுகள் மூலம் புதிய காரணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.


மேற்கு வங்காளத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய, வாரக்கணக்கில் மருத்துவர்களின் போராட்டங்களுக்கும் வேலைநிறுத்தங்களுக்கும் வழிவகுத்த ஒரு வழக்கில், சிபிஐ மரண தண்டனையை கடுமையாக வலியுறுத்தியது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொலையாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


"மோசமான" மற்றும் "தணிக்கும்" சூழ்நிலைகளை நீதிமன்றம் பரிசீலித்த பிறகு, "அரிதினும் அரிதான" (“rarest of rare”) வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது (பச்சன் சிங் vs பஞ்சாப் மாநிலம், (Bachan Singh vs State of Punjab) 1980).


'அரிதினும் அரிதான' சோதனை


பச்சன் சிங்கின், மரண தண்டனையை அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஒரு சவாலாக உச்சநீதிமன்றம் கருதியது. இருப்பினும், உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது. ஆனால், சீர்திருத்தம் சாத்தியம் இல்லாத "அரிதினும் அரிதான" வழக்குகளில் மட்டுமே அது விதிக்கப்பட வேண்டும் என்று கூறியது.


ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமா? என்பதைத் தீர்மானிப்பதற்கான தரநிலைகளைக் குறிப்பிடவில்லை. ஆனால், முடிவெடுக்கும் போது நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய "மோசமான" மற்றும் "தணிக்கும்" சூழ்நிலைகளின் முழுமையற்ற பட்டியல்களை வகுத்தது.


மரண தண்டனை குறித்த நீதிமன்றத்தின் முடிவை பாதிக்கக்கூடிய காரணிகள்:


  • கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, கணக்கிடப்பட்டு, மிகவும் கொடூரமாக இருந்தால்,


  • கொலை "விதிவிலக்கான ஒழுக்கக்கேட்டை" வெளிப்படுத்தினால்,


  • குற்றம் சாட்டப்பட்டவர், பணியில் இருக்கும் ஒரு பொது ஊழியர், காவல்துறை அதிகாரி அல்லது ஆயுதப்படை உறுப்பினரைக் கொலை செய்ததாகக் கண்டறியப்பட்டால் அல்லது அவர்கள் தங்கள் கடமையைச் சட்டப்பூர்வமாகச் செய்திருக்கக்கூடிய ஏதாவது செயல் காரணமாக இருத்தல்  போன்ற காரணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.


மரண தண்டனைக்கான வாய்ப்பைக் குறைக்கக்கூடிய தணிக்கும் காரணிகள்:


  • குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் நடந்த நேரத்தில் மிகுந்த மன அல்லது உணர்ச்சி ரீதியான துயரத்தில் இருந்தால்,


  • குற்றம் சாட்டப்பட்டவரின் வயது - அவர்கள் மிகவும் சிறியவர்களாகவோ அல்லது மிகவும் வயதானவர்களாகவோ இருந்தால் அவர்களுக்கு மரணம் கொடுக்கப்படாது.


  • குற்றம் சாட்டப்பட்டவர்களை சீர்திருத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தால்.


  • குற்றம் சாட்டப்பட்டவர் மற்றொரு நபரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டிருந்தால்;


  • குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் செயல்கள் தார்மீக ரீதியாக நியாயமானவை என்று நம்பினால்,


  • குற்றம் சாட்டப்பட்டவர் மனதளவில் பாதிக்கப்பட்டு, அவர்களின் செயல்களின் குற்றத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருத்தல் போன்றவை பட்டியலிடப்பட்டுள்ளன.


பச்சன் சிங்கிற்குப் பிறகு


தீவிரத்தை குறைக்க அல்லது அதிகரிக்கக்கூடிய காரணிகளைப் பற்றிய புரிதல் காலப்போக்கில் மாறிவிட்டது. பல்வேறு முடிவுகள் மூலம் புதிய காரணிகள் சேர்க்கப்பட்டுள்ளது போன்றவை இவற்றில் அடங்கும்:


குற்றம் சாட்டப்பட்டவர்களின் வயது:  ராம்நரேஷ் மற்றும் பிறர் vs சத்தீஸ்கர் மாநிலம் (2012) மற்றும் ரமேஷ் vs  ராஜஸ்தான் மாநிலம் (2011) (Ramnaresh and Ors vs State of Chhattisgarh (2012) and Ramesh vs State of Rajasthan (2011)) உள்ளிட்ட பல வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் இளம் வயதை (இந்த வழக்குகளில் 30 வயதுக்குக் கீழே) உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டது. அவை சீர்திருத்தப்படலாம் என்பதற்கான அறிகுறி.


இருப்பினும், இந்திய சட்ட ஆணையம் தனது 262வது அறிக்கையில் (2015) குறிப்பிட்டுள்ளபடி, மரணதண்டனை, வயது குறைக்கும் காரணியாக "மிகவும் சீரற்ற முறையில் பயன்படுத்தப்படுகிறது". ஷங்கர் கிசன்ராவ் காடே vs மகாராஷ்டிரா மாநிலம் (2013) (Shankar Kisanrao Khade vs State of Maharashtra) வழக்கில், உச்சநீதிமன்றம் ஒரே மாதிரியான உண்மைகளைக் கொண்ட பல வழக்குகளை இரண்டு குழுக்களாகப் பிரித்தது. அவை வயது குறைக்கும் காரணியாகக் கருதப்பட்டது. மேலும், வயது புறக்கணிக்கப்பட்ட அல்லது பொருத்தமற்றதாகக் கருதப்பட்டது. மரண தண்டனை வழக்குகளில் தண்டனை "நீதிபதியை மையமாகக் கொண்டது" என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

 

ஆர்ஜி கார் வழக்கில், குற்றவாளி சஞ்சாய் ராய்க்கு 35 வயது என்பது குறிப்பிடத்தக்கது.


குற்றத்தின் தன்மை: சங்கர் காடேவில், தண்டனையை நிர்ணயிப்பதற்கு முன்பு நீதிமன்றங்கள் இதே போன்ற குற்றங்கள் தொடர்பான வழக்குகளின் தொகுப்போடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இல்லையெனில், "அரிதினும் அரிதான" கோட்பாட்டைப் பயன்படுத்துவது "அகநிலை" ஆகிவிடும் என்று நீதிமன்றம் கூறியது. சட்டக் கமிஷன் அறிக்கை, சிறு குழந்தை பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பான வழக்குகளின் உதாரணத்தைப் பயன்படுத்தியது. மேலும், இது "சில சந்தர்ப்பங்களில் நீதித்துறை மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது" என்பதைக் காட்ட எடுத்துக்காட்டுகளை முன்வைத்தது.


மச்சி சிங் vs பஞ்சாப் மாநிலம் (Machhi Singh vs State of Punjab) (1983), நீதித்துறை மரண தண்டனையை விதிக்கும் என எதிர்பார்க்கும் அளவுக்கு சமூகத்தின் "கூட்டு மனசாட்சி" (“collective conscience”) மிகவும் அதிர்ச்சியடைந்தால் மரணம் அளிக்கப்படலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது.


இந்த முடிவும், எதிர்காலத்தில் அது தாக்கத்தை ஏற்படுத்திய முடிவுகளும் குற்றத்தின் சூழ்நிலைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. குற்றவாளியின் சூழ்நிலைகள் மற்றும் சீர்திருத்த சாத்தியக்கூறுகள் அல்ல என்று சட்ட ஆணையம் குறிப்பிட்டது.


சீர்திருத்தத்தின் சாத்தியம்: பச்சன் சிங் வழக்கில், சீர்திருத்தத்திற்கான சாத்தியம் இல்லை என்பதை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என்றும், அத்தகைய தண்டனைக்கு எதிராக அனுமானம் இருக்கும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. சந்தோஷ் பாரியார் vs மகாராஷ்டிரா மாநிலம் (Santosh Bariyar vs State of Maharashtra) (2009), "குற்றவாளி எந்த வகையான சீர்திருத்த மற்றும் மறுவாழ்வு திட்டத்திற்கும் ஏன் தகுதியானவர் அல்ல என்பதற்கு நீதிமன்றம் தெளிவான ஆதாரங்களை வழங்க வேண்டும்" என்று உச்சநீதிமன்றம்  கூறியது.


சட்டக் கமிஷன் அறிக்கை, பாரியாரில் "தண்டனை வழங்கும் செயல்பாட்டில் ஒரு புறநிலை கூறுகளை அறிமுகப்படுத்துவதற்கு" ஆதாரத்திற்கான தேவை "அத்தியாவசியமானது" என்று கூறியது.


விசாரணையின் நிலை


இந்த சூழ்நிலைகளை நீதிமன்றம் எப்போது பரிசீலிக்க வேண்டும்?


பச்சன் சிங் வழக்கில், ஒரு குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, மரண தண்டனை ஏன் வழங்கப்படக்கூடாது என்பதை தீர்மானிக்க நீதிமன்றங்கள் தனி விசாரணையை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


இந்தத் தனி விசாரணை எப்போது நடக்க வேண்டும்? சில வழக்குகளில் ஒரே நாளில் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், மற்ற வழக்குகளில், மரண தண்டனை வழக்குகளில் தண்டனை விதிக்கும்போது "உண்மையான, பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள விசாரணை" தேவை என்பதை வலியுறுத்தியுள்ளது.


தத்தராய vs மகாராஷ்டிரா மாநிலம் (Dattaraya vs State of Maharashtra) (2020), நீதிமன்றம் அத்தகைய விசாரணை நடைபெறவில்லை என்றும், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற இது ஒரு சரியான காரணம் என்றும் கூறியது.


2022ஆம் ஆண்டு தானாக முன்வைக்கப்பட்ட நடவடிக்கைகளில் (மரண தண்டனைகளை விதிக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய சாத்தியக்கூறுகளைத் தணிக்கும் சூழ்நிலைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை உருவாக்குதல்), தண்டனை விதிக்கப்பட்ட அதே நாளில் வழங்கப்பட்ட தண்டனைகள் அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள விசாரணையின் தேவையை பூர்த்தி செய்யுமா என்று உச்ச நீதிமன்றம் கேட்டது.


மோசமான சூழ்நிலைகள் ஒரு வழக்குப் பதிவின் ஒரு பகுதியாகும் மற்றும் அவை எப்போதும் நீதிபதிக்குக் கிடைக்கும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, தணிப்பு சூழ்நிலைகள் தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பும் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன.


"இது குற்றவாளியை கடுமையான சூழ்நிலைக்கு உள்ளாக்குகிறது. இதனால் அவருக்கு நிலைமை நியாயமற்றதாகிறது" என்று கூறிய அமர்வு, மரண தண்டனை வழக்குகளில் தண்டனை வழங்குவதற்கான நிலையான அணுகுமுறையை நிறுவ வழக்கை ஒரு பெரிய அமர்விற்கு பரிந்துரைத்தது.




Original article:

Share:

டாவோஸில் தொடங்கவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் என்றால் என்ன?

 உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் 2025: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தியக் குழுவுக்குத் தலைமை தாங்குவார். உலகளாவிய கூட்டம் ஏன் நடத்தப்படுகிறது? அதன் ஒரு பகுதியாக என்ன நடக்கிறது?


உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் 2025 டாவோஸில்: 


உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum (WEF)) அதன் ஆண்டுக் கூட்டத்தை ஜனவரி 20 முதல் 24 வரை சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடத்துகிறது. பங்கேற்பாளர்களில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், சீனாவின் துணைப் பிரதமர் டிங் சூக்ஸியாங் மற்றும் வணிகம் மற்றும் அரசியலில் உள்ள பிற தலைவர்கள் அடங்குவர்.


இந்தியக் குழுவுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமை தாங்குவார். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். "WEF வருடாந்திரக் கூட்டத்தில் உலக பொருளாதார மன்றத்தில் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக, உடல் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் ஜனநாயகமயமாக்கல் தொழில்நுட்பத்தில் முதலீடு பற்றி விரிவான விவாதம் இருக்கும்" என்று வைஷ்ணவ் கூறினார்.


உலகளாவிய கூட்டம் ஏன் நடத்தப்படுகிறது, அதன் ஒரு பகுதியாக என்ன நடக்கிறது? 


உலகப் பொருளாதார மன்றத்தை (WEF) தொடங்கியவர் யார்?


ஜெர்மன் பேராசிரியர் கிளாஸ் ஸ்வாப் WEF அமைப்பை  நிறுவினார். அவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி ஆவார். பின்னர், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஜான் எஃப். கென்னடி அரசு பள்ளியில் முதுகலை பொது நிர்வாக பட்டம் பெற்றார்.


1972 முதல் 2003ஆம் ஆண்டு வரை, ஸ்வாப் ஜெனீவா பல்கலைக்கழகத்தில் வணிகக் கொள்கை பேராசிரியராக இருந்தார். அவர் 1971ஆம் ஆண்டில் WEF அமைப்பை நிறுவினார். முதலில், இந்நிறுவனம் ஐரோப்பிய மேலாண்மை மன்றம் என்று அழைக்கப்பட்டது. இது "பங்குதாரர் முதலாளித்துவம்" (“stakeholder capitalism.”) என்ற கருத்தை அறிமுகப்படுத்தியது. ஸ்வாப்பின் கூற்றுப்படி, "இது முதலாளித்துவத்தின் ஒரு வடிவமாகும். இதில் நிறுவனங்கள் பங்குதாரர்களுக்கு குறுகிய கால லாபத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் அனைத்து பங்குதாரர்கள் மற்றும் சமூகத்தின் தேவைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு நீண்ட கால மதிப்பு உருவாக்கத்தை நாடுகின்றன."


WEF வலைத்தளம், ஒரு நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு மட்டுமல்ல, ஊழியர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் சமூகம் உட்பட அதன் அனைத்து பங்குதாரர்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்று கூறுகிறது.  வணிகம், அரசு மற்றும் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் இங்கு கூடி முக்கிய உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும், அவற்றைத் தீர்க்க தீர்வுகளை ஆராயவும் கூடுகிறார்கள் என்று கூறுகிறது.


WEF  என்ன நடக்கிறது?


ஆரம்பத்தில், பேராசிரியர் ஷ்வாப், அமெரிக்க நிர்வாக நடைமுறைகளை ஐரோப்பிய நிறுவனங்கள் எப்படிப் பிடிக்கலாம் என்பதில் கூட்டங்களில் கவனம் செலுத்தினார். 1973ஆம் ஆண்டு நிகழ்வுகள், அதாவது பிரெட்டன் வூட்ஸ் நிலையான மாற்று விகித பொறிமுறையின் சரிவு மற்றும் அரபு-இஸ்ரேலியப் போர், ஆண்டுக் கூட்டம் அதன் கவனத்தை நிர்வாகத்திலிருந்து பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு விரிவுபடுத்தியது.


இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அமைப்பு 'உலகின் 1,000 முன்னணி நிறுவனங்களுக்கு' உறுப்பினர் அமைப்பை அறிமுகப்படுத்தியது. ஐரோப்பிய மேலாண்மை மன்றம் 1979ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார மேம்பாட்டுக் அமைப்புகளுடன் கூட்டாண்மையைத் தொடங்கிய முதல் அரசு சாரா நிறுவனமாகும். அதே ஆண்டில், சீனாவும் அமெரிக்காவும் அதன் இராஜதந்திர உறவுகளை நிறுவின.


டாவோஸில், முதலீட்டாளர்கள், வணிகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள், பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என சுமார் 3,000 பங்கேற்பாளர்களைக் (பணம் செலுத்தும் உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அழைப்பாளர்கள் உட்பட) கொண்டு ஐந்து நாட்கள் வரை 500 அமர்வுகளில் உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கிறது. எனவே, WEF ஆனது பல்வேறு பங்குதாரர்களை சந்தித்து உலகளாவிய மற்றும் பிராந்திய சமூக-பொருளாதார பிரச்சினைகளை விவாதிக்கும் ஒரு மன்றமாக மாறியுள்ளது.


கடந்த ஆண்டு, நிகழ்வின் முக்கிய கருப்பொருள்கள் செயற்கை நுண்ணறிவு, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை, காலநிலை மாற்றம் மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் ஆகியவை ஆகும்.


WEF-க்கு யார் நிதியுதவி செய்கிறார்கள் மற்றும் WEF கூட்டம் ஏன் டாவோஸில் நடத்தப்படுகிறது?


WEF பெரும்பாலும் அதன் கூட்டு நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகிறது. இவை பொதுவாக $5 பில்லியனுக்கும் அதிகமான வருடாந்திர வருவாய் கொண்ட உலகளாவிய நிறுவனங்களாகும். தாமஸ் மானின் "தி மேஜிக் மவுண்டன்" நாவலின் பின்னணி டாவோஸ் ஆகும். இந்தக் கதை, டாவோஸுக்குச் சென்று மூன்று வாரங்கள் ஒரு சுகாதார நிலையத்தில் தங்கி, ஏழு ஆண்டுகள் அங்கேயே தங்கும் ஒரு இளைஞனைப் பற்றியது.


அதன் அமைதியான சூழலில், உலகளாவிய அரசியலின் கவனச்சிதறல்களுக்கு அப்பால் கவனம் செலுத்துவதையும், மேலும் வளமான உலகளாவிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அதன் இலக்கை அடைவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


கடந்த காலங்களில், டாவோஸ் முக்கியமான சர்வதேச ராஜதந்திரத்திற்கான ஒரு முக்கிய இடமாக இருந்து வருகிறது. பதட்டங்களைத் தணிக்க தலைவர்கள் இந்த நகரத்தைப் பயன்படுத்தினர். WEF வலைத்தளத்தின்படி, வட மற்றும் தென் கொரியாக்கள் தங்கள் முதல் அமைச்சர் சந்திப்புகளை டாவோஸில் நடத்தின. அதே நிகழ்வின்போது, ​​கிழக்கு ஜெர்மன் பிரதமர் ஹான்ஸ் மோட்ரோவும் ஜெர்மன் சான்சலர் ஹெல்முட் கோலும் ஜெர்மன் மறு ஒருங்கிணைப்பு குறித்து விவாதித்தனர்.


1992-ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்க ஜனாதிபதி டி கிளார்க், நெல்சன் மண்டேலா மற்றும் ஜூலு இளவரசர் மங்கோசுது புத்தெலெசி ஆகியோர் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இது தென்னாப்பிரிக்காவிற்கு வெளியே அவர்கள் இணைந்து பங்கேற்ற முதல் நிகழ்வு மற்றும் நாட்டின் அரசியல் மாற்றத்தில் ஒரு முக்கியமான படியாகும்.


1998ஆம் ஆண்டில், முக்கிய வளரும் நாடுகளை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தை பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர். ஒரு திட்டம் 20 நாடுகளைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்குவதாகும், அதில் பாதி வளர்ந்த பொருளாதார நாடுகளாகவும், மற்ற பாதி வளரும் நாடுகளாகவும் இருக்கும். பின்னர் G20 என்று அழைக்கப்பட்ட இந்தக் குழு, அந்த ஆண்டு ஜெர்மனியின் பான் நகரில் தனது முதல் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சர்கள் மட்டுமே கலந்து கொண்டனர், மேலும் உலகளாவிய நிதிப் பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்தினர்.


G20 கூட்டம் இறுதியில் உச்சிமாநாட்டாக உயர்த்தப்பட்டது. உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை நிவர்த்தி செய்ய 2008ஆம் ஆண்டில் அமெரிக்கா G20 உச்சி மாநாட்டை வாஷிங்டன் நகரத்தில் நடத்தியபோது இது நடந்தது.


உலகளாவிய போட்டித்தன்மை அறிக்கை மற்றும் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை (Global Gender Gap Report) போன்ற உலகளாவிய தரவரிசைகள் (Global Competitiveness Report) மற்றும் குறியீடுகளை WEF தொடர்ந்து வெளியிடுகிறது.




Original article:

Share: