இந்தியாவின் அறிவுசார் மற்றும் கலாச்சார நிலப்பரப்பை கட்டமைப்பதில் நாளந்தா, விக்ரம்ஷிலா மற்றும் ஓடந்தபுரி போன்ற பண்டைய பல்கலைக்கழகங்களின் வரலாற்று முக்கியத்துவம். -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


  • இந்திய தொல்லியல் துறை (ASI) கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல், அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், பழங்கால விக்ரம்ஷிலா பல்கலைக்கழகத்தின் தளத்தை மேம்படுத்தி வரும் நிலையில், பீகார் அரசு சமீபத்தில் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஆன்டிசாக் கிராமத்தில் 202.14 ஏக்கரை மத்திய பல்கலைக்கழகத்திற்காக அடையாளம் கண்டுள்ளது.


  • இந்த திட்டத்திற்கு 2015ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்து ₹500 கோடியை அனுமதித்தது. இருப்பினும், மாநில அரசால் பொருத்தமான நிலத்தைக் கண்டுபிடிக்க முடியாததால் முன்னேற்றம் மெதுவாக இருந்தது.


  • பிப்ரவரி 24 அன்று பாகல்பூரில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விக்ரம்ஷிலா பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் உலகிற்கு ஒரு சிறந்த கற்றல் மையமாக இருந்தது என்று கூறினார். புதிய நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவுவதன் மூலம் அரசாங்கம் ஏற்கனவே பண்டைய நாளந்தா பல்கலைக்கழகத்தை மீட்டெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதனால், தற்போது ​​அவர்கள் விக்ரம்ஷிலாவில் கவனம் செலுத்தி அங்கு ஒரு மத்திய பல்கலைக்கழகத்தை தொடங்க வாய்ப்புள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?:


  • விக்ரம்ஷிலா மகாவிஹார், கி.பி 8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 9 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பால வம்சத்தின் மன்னர் தர்மபாலரால் நிறுவப்பட்டது. இது நாளந்தா இருந்த அதே காலத்தில் இருந்தது மற்றும் செழித்து வளர்ந்தது.


  • நாளந்தா பல்கலைக்கழகம் குப்தர் காலம் (கி.பி. 320-550) முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை இருந்தது, அதே நேரத்தில் விக்ரம்ஷிலா பல்கலைக்கழகம் பாலர் காலத்தில் (8 முதல் 12ஆம் நூற்றாண்டு வரை) செழித்து வளர்ந்தது. பல்வேறு பாடங்களைக் கற்பிப்பதற்காக நாளந்தா உலகளவில் மிகவும் பிரபலமானது. இதற்கு நேர்மாறாக, விக்ரம்ஷிலா தாந்த்ரீக மற்றும் அமானுஷ்ய ஆய்வுகளில் மட்டுமே கவனம் செலுத்தியது. தர்மபாலரின் ஆட்சியின் போது, ​​விக்ரம்ஷிலா மிக முக்கியமான பல்கலைக்கழகமாக இருந்தது. மேலும், நாளந்தாவின் விவகாரங்களைக்கூட கட்டுப்படுத்தியது என்று ASI தொல்பொருள் ஆய்வாளர் (பாட்னா வட்டம்) சுஜித் நயன் தெரிவித்தார்.


  • இரண்டு பல்கலைக்கழகங்களிலும் நாளந்தா தான் பழமையானது. ஒரு காலத்தில், இரண்டு பல்கலைக்கழகங்களும் ஒரு பொதுவான புரவலரான தர்மபாலனைப் பகிர்ந்து கொண்டன. அவர்கள் அறிவையும், ஆச்சார்யர்கள் என்று அழைக்கப்படும் ஆசிரியர்களையும் கூட பரிமாறிக்கொண்டனர்.


  • அதன் உச்சத்தில், விக்ரம்ஷீலா இறையியல், தத்துவம், இலக்கணம், மெட்டாபிசிக்ஸ் மற்றும் தர்க்கம் போன்ற பாடங்களைக் கற்பித்தது. இருப்பினும், மிக முக்கியமான பாடம் தந்திரங்களைப் பற்றிய ஆய்வு ஆகும். ஏனென்றால், புத்த மதம் மற்றும் இந்து மதம் இரண்டிலும் அமானுஷ்ய அறிவியல் மற்றும் மந்திரம் படிக்கப்பட்ட தாந்த்ரீகத்தின் காலத்தில் விக்ரம்ஷீலா இருந்தது.


  • இந்தப் பல்கலைக்கழகம் பல சிறந்த அறிஞர்களை உருவாக்கியது. அவர்களில் ஒருவர் திபெத்தில் புத்த மதத்தை நிலைநாட்ட உதவிய அதிசா திபங்கரா ஆவார்.


  • இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 400 ஆண்டுகளாக செழித்து வளர்ந்தது. ஆனால், 13ஆம் நூற்றாண்டில் நாளந்தாவுடன் சேர்ந்து வீழ்ச்சியடையத் தொடங்கியது. இந்து மதத்தின் எழுச்சி, புத்த மதத்தின் வீழ்ச்சி மற்றும் பக்தியார் கல்ஜியின் படையெடுப்பு உள்ளிட்ட பல காரணங்களால் இது நடந்ததாக நிபுணர்கள் நம்புகின்றனர்.


  • விக்ரம்ஷிலாவின் இடிபாடுகள், அதில் உள்ள ஸ்தூபிகள், அறைகள் மற்றும் ஒரு பெரிய நூலகம் ஆகியவை அதன் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைக் காட்டுகின்றன. தளத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நூலகத்தில், ஆசிரியர்களும் மாணவர்களும் கையெழுத்துப் பிரதிகளை நகலெடுத்து மொழிபெயர்த்தனர் என அறியப்படுகிறது.


Original article:

Share:

கூகுள் வரி என்றறியப்படும் வரி எது? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


. நிதி மசோதா, 2025-ல் செய்யப்பட்ட மாற்றங்களின் ஒரு பகுதியாக, இணைய வழி விளம்பரங்களுக்கான சமன்படுத்தல் வரியை (equalisation levy) நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, புதிய அமெரிக்க நிர்வாகத்தின் வரிகள் மீதான அழுத்தத்தின் கீழ், சில வணிக வரிகளை எளிதாக்குவதற்கான இந்தியாவின் அறிவிப்புக்குறியாக நிபுணர்கள் பார்க்கின்றனர்.


• நிதி மசோதா, 2025-ல் திருத்தங்களின் ஒரு பகுதியாக இணைய வழி விளம்பரங்களுக்கான சமன்படுத்தும் வரியை ரத்து செய்ய அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இது வணிகங்கள் மீதான சில வரிகளை நீக்குவதற்கான ஒரு அறிவிப்புக்குறியாக இந்தியாவிடமிருந்து நிபுணர்கள் பார்க்கின்றனர். குறிப்பாக, புதிய அமெரிக்க நிர்வாகத்தின் கட்டணங்கள் மீதான அழுத்தத்தின் காரணமாக இதை செய்தனர்.


• 2025 நிதி மசோதாவின் 35 திருத்தங்களின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 1, 2025 முதல் டிஜிட்டல் விளம்பரங்களுக்கு விதிக்கும் 6 சதவீத சமன்படுத்தும் வரியை (equalisation levy (EL)) நீக்க ஒன்றிய அரசு விரும்புகிறது. 2016 முதல் நடைமுறையில் உள்ள இந்த வரி, இணைய வழி விளம்பரங்களுக்காக வெளிநாட்டு சேவை வழங்குநர்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சத்திற்கு மேல் செலுத்தும் தொகைக்கு பொருந்தும்.


• கடந்த ஆண்டு, அமெரிக்காவுடனான பதட்டங்களுக்குப் பிறகு கூகுள், மெட்டா மற்றும் அமேசான் போன்ற வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான 2% வரியை இந்தியா கடந்த ஆண்டு நீக்கியது. இருப்பினும், இணைய வழி விளம்பரங்களுக்கான 6% வரி அமலில் இருந்தது.


• மேலும், பிரிவு 143(1)-ல் ஒரு புதிய துணைப்பிரிவு (iia) சேர்க்கப்பட்டுள்ளது. இது வரித் துறை தற்போதைய வருமான வரி வருவாயை முந்தைய ஆண்டு வருவாயுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும், ஏதேனும் முரண்பாடுகளைக் குறிக்கவும் அனுமதிக்கிறது.


உங்களுக்குத் தெரியுமா?


• இன்வெஸ்டோபீடியாவின் படி, கூகுள் வரி, திசைதிருப்பப்பட்ட லாப வரி  (diverted profits tax) என்றும் அழைக்கப்படுகிறது. இது சில நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி-தவிர்ப்பு எதிர்ப்பு விதிகளைக் குறிக்கிறது. குறைந்த அல்லது பூஜ்ஜிய வரி விகிதங்களைக் கொண்ட பிற அதிகார வரம்புகளுக்கு லாபம் அல்லது பங்குவீத உரிமைகளை (royalties) நிறுவனங்கள் திருப்பி விடுவதைத் தடுக்க பல அதிகார வரம்புகள் விதியை செயல்படுத்தின. உதாரணமாக, இணைய ஜாம்பவான் ஆல்பாபெட். கூகுள் UK-வில் $6.5 பில்லியன் வருவாய் ஈட்டிய போதிலும், அயர்லாந்தின் குறைந்த வரி நகரமான டப்ளினில் அதன் பரிவர்த்தனைகளை முடிப்பதன் மூலம் இங்கிலாந்தில் மிகக் குறைந்த அளவிலான வரிகளைச் செலுத்தியது.



Original article:

Share:

முற்கால சோழர் தலைநகரின் வளமான வரலாற்றை வெளிக்கொணரும் மற்றொரு நகர்வு. -என். சாய் சரண்

 தமிழ்நாடு அரசு காவேரிபூம்பட்டினம் என்றும் அழைக்கப்படும் பூம்புகாருக்கும், தெற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினத்திற்கும் ஆழ்கடல் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் விரிவான குறிப்புகளைக் கொண்ட பூம்புகாரின் புகழ்பெற்ற கடந்த காலத்தைப் பற்றிய நுண்ணறிவுகளை இந்த அகழ்வாராய்ச்சிகள் வெளிக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பண்டைய தமிழர்களின் கடல்சார் வர்த்தகத் திறமையை வெளிக்காட்டும் முயற்சியாக, தமிழ்நாடு தொல்லியல் துறை மாநில கடற்கரையில் தொடர்ச்சியான ஆழ்கடல் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக்கான திட்டத்தை வகுத்துள்ளது.


2025-26ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்யும்போது, ​​நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, புதிய அகழ்வாராய்ச்சிகளை அறிவித்தார். இதில் பண்டைய சோழர்களின் தலைநகரான காவேரிபூம்பட்டினம் என்றும் அழைக்கப்படும் பூம்புகார் மற்றும் 50 கிலோமீட்டர் தெற்கே உள்ள ஒரு முக்கியமான துறைமுக நகரமான நாகப்பட்டினம் இடையேயான ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியின் முதல் கட்டமும் அடங்கும்.


இந்த ஆழ்கடல் அகழ்வாராய்ச்சிகள் புதையல்களைக் (treasures) கண்டுபிடித்து பூம்புகாரின் வளமான வரலாற்றைப் பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை வெளிக்கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நதி வங்காள விரிகுடாவில் சந்திக்கும் இந்த பண்டைய நகரம், சங்க இலக்கியத்திலும் எரித்ரேயன் கடலின் பெரிப்ளஸிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரிப்ளஸ் (Periplus) என்பது துறைமுகங்கள் மற்றும் கடலோர அடையாளங்களை பட்டியலிட்ட ஒரு பண்டைய கையெழுத்துப் பிரதியாகும். இது ஒரு நில வரைபடம் மற்றும் பயண வழிகாட்டியாக செயல்படுகிறது. பூம்புகார் மற்றும் நாகப்பட்டினம் ஆகியவை முக்கிய வர்த்தக மற்றும் கலாச்சார பரிமாற்ற மையங்களாக இருந்தன. குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவுடன் ஒரு முக்கிய நுழைவாயிலாக செயல்பட்டன. பூம்புகார் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாகவும், பின்னர் கடல் அலைகளின் காரணமாக நீரில் மூழ்கியதாகவும் நம்பப்படுகிறது.


முந்தைய ஆய்வுகள்


பூம்புகார் கடற்கரையில் ஆழ்கடல் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் திட்டமிடப்படுவது இது முதல் முறை அல்ல. 1980-களில், தொல்பொருள் ஆய்வாளர் எஸ்.ஆர். ராவ் தலைமையிலான தமிழ்நாடு தொல்லியல் துறை மற்றும் தேசிய கடல்சார் நிறுவனம் (National Institute of Oceanography (NIO)) ஆகியவை கடல்தள ஆய்வுகளை மேற்கொண்டன. இந்த ஆய்வுகள் 20-30 மீட்டர் ஆழத்தில் உள்ள கட்டமைப்புகளைக் கண்டறிய பக்கவாட்டு ஸ்கேன் சோனார் (Side-scan sonar), எதிரொலி ஆழ அளப்பான்கள் மற்றும் காந்தமானிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தின. இது பூம்புகாரின் பண்டைய கடந்த காலத்தைப் பற்றிய முக்கியமான தடயங்களை வழங்கியது.


ஏப்ரல் 6, 1990 அன்று தி இந்துவில் வெளியான ஒரு செய்தி, பூம்புகாருக்கு அருகில் உள்ள வானகிரி அருகே 19.5 மீட்டர் ஆழத்தில் 4.5 கி.மீ தொலைவில் ஒரு கப்பல் விபத்து கண்டுபிடிக்கப்பட்டதை விவரித்ததாக தமிழ்நாடு தொல்லியல் துறை அப்போதைய இயக்குநரான நடன காசிநாதன் சுட்டிக்காட்டினார். இரும்பினால் ஆன அந்தக் கப்பல் இரண்டாக உடைந்து கடல்வாழ் உயிரினங்களால் மூடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதி கடற்பரப்பிற்கு மேலே தெரியும். அதே நேரத்தில் அதன் பெரும்பகுதி கடல் தளத்தின் கீழ் புதைந்துள்ளது. பூம்புகாரில் இருந்து 20 கி.மீ தெற்கே உள்ள தரங்கம்பாடியில் கோட்டை அருங்காட்சியகத்திற்கு அருகில், கடற்கரையில் சுமார் 500 மீட்டர் தொலைவில், 7 மீட்டர் ஆழத்தில் ஒரு மெகாலிதிக் அமைப்பு இருப்பதாக அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது. அகழ்வாராய்ச்சிகள் உள்புற மற்றும் வெளிப்புற கல் வட்டங்களையும், கூழாங்கல் கெய்ன் போன்ற உறையையும் வெளிப்படுத்தின. இது 10 மீட்டர் அகலமுள்ள மெகாலிதிக் அமைப்பை உருவாக்கியது.


மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள்


1991 முதல் 1993 வரை நீருக்கடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், கடலுக்கு அடியில் மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் மற்றும் செங்கல் அமைப்புகளைக் கண்டறிந்ததாக இந்து நாளிதழின் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த செங்கற்கள் கிமு 2ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 4ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை என்று நடனா காசிநாதன் மதிப்பிட்டார். நீரில் மூழ்கிய கட்டமைப்புகளுக்கு அருகில் கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்களும் காணப்பட்டன. 1997-ஆம் ஆண்டில், லேட்டரைட் கற்களால் ஆன ஒரு கட்டமைப்பின் எச்சங்களை டைவர்ஸ் கண்டுபிடித்தார்.


2004-ஆம் ஆண்டில், பூம்புகார் கடற்கரையில் கிழக்கு கடற்படை கட்டளையால் அனுப்பப்பட்ட ஹைட்ரோகிராஃபிக் ஆய்வுக் கப்பலான INS Darshak, 23 மீட்டர் ஆழத்தில் ஒரு U-வடிவ அமைப்பைக் கண்டுபிடித்தது. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்களால் மூழ்கடிக்கப்பட்டதாக நம்பப்படும் டச்சு கப்பலின் எச்சங்களையும் அந்தக் கப்பல் மீட்டது. மீட்கப்பட்ட கலைப்பொருட்களில் மூன்று ஈய இங்காட்கள் (lead ingots) இருந்தன. ஒவ்வொன்றும் சுமார் ஒரு மீட்டர் நீளமும் 80 கிலோ எடையும் கொண்டவை. இங்காட்களில் W. Blackett' என்ற குறி இருந்தது, இது பிரிட்டிஷ் உற்பத்தியாளரின் பெயராக இருக்கலாம். மற்றொரு குறி, 1792 என்றும் குறிக்கப்பட்டிருந்தது. ஒருவேளை உற்பத்தி ஆண்டாகவும் இருக்கலாம். அவற்றில் டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் சின்னமான வயர் என்ற இதய வடிவிலான கல்வெட்டும் இருந்தது. ஏப்ரல் 9, 2004 அன்று தி இந்து செய்தித்தாளில் செய்தி வெளியானது போல, கடல் தளத்தில் இரண்டு மீட்டர் நீளமுள்ள பீரங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.


அரசாங்கத்தின் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சித் திட்டத்தை நிபுணர்கள் ஆதரிக்கின்றனர். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறைத் தலைவர் வி. செல்வகுமார், பூம்புகார் அருகே மேலும் ஆய்வுகள் நடத்தினால் தமிழ் கடல்சார் பாரம்பரியம் குறித்த புதிய விவரங்கள் வெளிப்படும் என்று கூறுகிறார்.


கடல்வழி சமூகம்


புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் கே. ராஜன் கூறுகையில், தமிழர்கள் தங்கள் சாகசப் பயணங்களுக்குப் பெயர் பெற்ற கடல்சார் சமூகமாக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர். குறிப்பாக, சிலப்பதிகாரம் மற்றும் பட்டினப்பாலை சங்க இலக்கியங்கள் பண்டைய துறைமுக நகரமான பூம்புகாரைப் பற்றி விரிவாக குறிப்பிடுகின்றன.


சங்க காலத்திற்குப் பிந்தைய இலக்கியங்கள் பூம்புகார் ஒரு முக்கிய துறைமுகமாக இருந்ததையும் பின்னர் நீரில் மூழ்கியதையும் உறுதிப்படுத்துகின்றன. பண்டைய பூம்புகார் ஒரு செழிப்பான வர்த்தக மையமாக இருந்ததை வெளிநாட்டு பயணிகளின் கணக்குகள் உறுதிப்படுத்துகின்றன. தொல்பொருள் ஆய்வுகள் நகரத்தின் அம்சங்கள் மற்றும் கடல்சார் வரலாறு பற்றிய கூடுதல் விவரங்களை வழங்கக்கூடும். பாண்டியர்களின் பண்டைய துறைமுகம் மற்றும் ஆரம்பகால தலைநகரான கொற்கையில் நீருக்கடியில் அகழ்வாராய்ச்சிகளில் தமிழ்நாடு   தொல்லியல் துறை பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது.



Original article:

Share:

நிலக்கரி மீதான டிரம்பின் அழுத்தம் இந்தியாவிற்கு பயனளிக்கக்கூடும். -ரிச்சா மிஸ்ரா

 இந்தியாவின் பொருளாதாரம், குறிப்பாக அதன் மின் துறை, நிலக்கரியை பெரிதும் நம்பியுள்ளது. நிலக்கரிக்கு டிரம்பின் ஆதரவு இந்தியாவிற்கு நன்மை பயக்கும்.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை தொடர்ந்து ஆதரித்து வருகிறார்.


எரிசக்தித் துறையிலிருந்து நிலக்கரியை அகற்றுவதற்கான காலநிலை ஆதரவாளர்களின் எந்தவொரு முயற்சியும் குறைந்தபட்சம் இப்போதைக்கு ஒரு தொலைதூரக் கனவாகவே இருக்கும்.


இதன் அடிப்படையில் டிரம்ப் பதிவில் குறிப்பிட்டதாவது, “சீனா போன்ற நாடுகள் பல நிலக்கரி எரிமின் உற்பத்தி நிலையங்களைத் திறப்பதன் மூலம் பொருளாதார நன்மையைப் பெற அனுமதித்த சுற்றுச்சூழல் தீவிர ஆதரவாளர்கள் (Environmental Extremists), பைத்தியக்காரர்கள் (Lunatics), தீவிரவாதிகள் (Radicals) மற்றும் குண்டர்களால் (Thugs) பல ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, அழகான, சுத்தமான நிலக்கரியுடன் எரிசக்தியை உற்பத்தி செய்யத் தொடங்க எனது நிர்வாகத்தை நான் அங்கீகரிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். 

— @TrumpDailyPosts.


டிரம்பின் முடிவுகளானவை, நிலக்கரி உற்பத்தியாளர்களுக்கும் காலநிலை ஆதரவாளர்களுக்கும் இடையே ஒரு விவாதத்தைத் தூண்டின. இந்தியாவும் அமெரிக்காவும் வரிச் சிக்கல்களைத் தீர்த்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், நிலக்கரி என்பது இரு நாடுகளும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு பகுதி உள்ளது.


நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்கவும், அனல் ஆலைகளை மறுபரிசீலனை செய்யவும் அழுத்தம் கொடுக்கும் இந்தியாவுக்கு டிரம்பின் நிலைப்பாடு பலனளிக்குமா? இந்தியா நிலக்கரியை ஆதரிக்கிறது, ஆனால் அதை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்த முடியும்?


"இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தக் கொள்கை அமெரிக்காவிலிருந்து ஒரு சிறிய அளவு நிலக்கரியை மட்டுமே இறக்குமதி செய்வதால் வரையறுக்கப்பட்ட நேரடி தாக்கத்தையே கொண்டுள்ளது" என்று NT-Live/NinjaTrader Group, LLC-ன் மூத்த பொருளாதார நிபுணர் டிரேசி ஷுசார்ட் கூறுகிறார். இருப்பினும், அமெரிக்க கொள்கைகள் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவின் எரிசக்தி உத்தியைப் பாதிக்கலாம். இந்தியா அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளுடன் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை சமநிலைப்படுத்த வேண்டும்.


நிலக்கரித் துறைக்கான கண்ணோட்டம்


2025-ம் ஆண்டில் நிலக்கரித் துறைக்கான S&P குளோபல் கமாடிட்டி இன்சைட்ஸின் கண்ணோட்டத்தின்படி, "சீனாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான தீவிரமுனைப்பு மற்றும் புவிசார் அரசியல் போட்டி மிகவும் கவனிக்கத்தக்கதாகி வருகிறது. சீனா உலகளாவிய செல்வாக்கைப் பெற சுத்தமான தொழில்நுட்பத்தில் அதன் முன்னணியைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் தங்கள் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க கட்டணங்களை அதிகரித்து வருகின்றன."


2025-ம் ஆண்டில், சீனாவின் புதுப்பிக்கத்தக்க நிலையங்கள் சற்று குறையும். ஆனால், இன்னும் 250 GW-க்கு மேல் இருக்கும் என்று S&P குளோபல் எதிர்பார்க்கிறது. கூடுதலாக, சீனாவில் நிலக்கரி எரியும் உற்பத்தி ஆண்டுதோறும் தொடர்ந்து உயர்ந்து புதிய சாதனையை எட்டும்.


பல வளரும் பொருளாதாரங்களில், நிலக்கரி தேவை 2025-ல் தொடர்ந்து உயரும் என்று S&P குளோபல் கமாடிட்டி இன்சைட்ஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வளர்ச்சி அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைவிட மிகவும் மெதுவாக இருக்கும் இந்தியாவில் மிக முக்கியமான அதிகரிப்பு இருக்கும்.


பிற எரிசக்தி ஆதாரங்களுக்கு மாற அழுத்தம் இருந்தபோதிலும், நிலக்கரி இந்தியாவின் மின்சார உற்பத்திக்கான முதன்மை எரிபொருளாக உள்ளது.


மார்ச் 19 அன்று, நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மக்களவையில், 2024-25 நிதியாண்டில் (பிப்ரவரி 2025 வரை) 764.56 மில்லியன் டன் நிலக்கரி (தற்காலிகமாக) மின்துறைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார். அதே காலகட்டத்தில், உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் 757.70 மில்லியன் டன் (தற்காலிகமாக) பயன்படுத்தியுள்ளன.


இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. நிதியாண்டு 2025-ம் ஆண்டில், நாடு ஏற்கனவே 1 பில்லியன் டன்களைத் தாண்டியுள்ளது. இதில், முக்கியமாக வணிகச் சுரங்கங்களில் இருந்து அதிக உற்பத்தி காரணமாக இதன் செயல்பாடு அமைந்துள்ளது. கோல் இந்தியா லிமிடெட் (Coal India Ltd (CIL)) இந்த உற்பத்தியில் 75 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.


உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக, சமீபத்திய மாதங்களில் நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது. வலுவான உள்ளூர் விநியோகம், நாணய மதிப்பு தேய்மானத்துடன் இணைந்து, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை வாங்குபவர்களுக்கு குறைந்த ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் நிலக்கரி அமைச்சகம் 'திட்டம் கோக்கிங் நிலக்கரி'யை (Mission Coking Coal) அறிமுகப்படுத்தியுள்ளது.


எஃகுத் தொழிலுக்கு நிலக்கரி விநியோகத்தை மேம்படுத்த, கோல் இந்தியா லிமிடெட் அதன் சுத்திகரிப்புக்கான திறனை விரிவுபடுத்துகிறது. இந்த புதிய சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதன் மூலமும், ஏற்கனவே உள்ள சிலவற்றை மேம்படுத்துவதன் மூலமும், பழையவற்றிலிருந்து பணமாக்குவதன் மூலமும் இதைச் மேற்கொள்கிறது.


2030 நிதியாண்டில், தற்போதைய திறன் விரிவாக்கத் திட்டத்தின் கீழ், 18 என்ற சாம்பல் சதவீதத்தில் ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் டன்கள் சுத்திகரிக்கப்பட்ட கோக்கிங் நிலக்கரியை CIL உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


திட்டமிடப்பட்ட 11 புதிய கோக்கிங் நிலக்கரி சுத்திகரிக்கப்பட்ட நிலையங்களில், மூன்று ஏற்கனவே இயக்கப்பட்டுள்ளன. மேலும், எட்டு செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் இரண்டு கட்டுமானத்தில் உள்ளன. மீதமுள்ளவை வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.


Coking : கோக்கிங் என்பது ஒரு வெப்ப செயல்முறையாகும், இது முதன்மையாக எஃகு உற்பத்தி மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது, அங்கு நிலக்கரி அல்லது கச்சா எண்ணெயின் அடிப்பகுதி போன்ற பொருட்கள் ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் வெப்பப்படுத்தப்பட்டு கோக், அதிக கார்பன், நுண்துளை எரிபொருள் மற்றும் பிற துணை தயாரிப்புகளை உற்பத்தி செய்கின்றன


சுத்தமான நிலக்கரி ஆராய்ச்சி


சமீபத்தில், கோல் இந்தியா லிமிடெட் (CIL) ஹைதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் (IIT-H) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது. அவர்கள் ஹைதராபாத்தில் சுத்தமான நிலக்கரி ஆற்றல் மற்றும் நிகர பூஜ்ஜிய மையத்தை (Centre of Clean Coal Energy and Net Zero (CLEANZ)) நிறுவுவார்கள். சுத்தமான நிலக்கரி தொழில்நுட்பங்களை உருவாக்குவதும் நிலக்கரி பயன்பாட்டை பல்வகைப்படுத்துவதும் இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். நிலக்கரித் துறையில் ஆராய்ச்சி மேம்பாட்டை நிலக்கரி அமைச்சகம் ஆதரிக்கிறது.


குறைந்த தர மற்றும் நிராகரிக்கப்பட்ட நிலக்கரியில் கவனம் செலுத்தி நிகர பூஜ்ஜிய பயன்பாட்டை அடைவதை CLEANZ நோக்கமாகக் கொண்டுள்ளது.


நிலக்கரி படுகை மீத்தேன் மற்றும் நிலக்கரி சுரங்க மீத்தேன் மீட்பு (coal mine methane recovery), கார்பன் பிடிப்பு தொழில்நுட்பங்கள் (carbon capture technologies), நிலக்கரி வாயுவாக்கம் மற்றும் சின்கேஸ் பயன்பாடு (coal gasification and syngas use), ஆற்றல் திறன் மற்றும் பாதுகாப்பு (energy efficiency and conservation), மற்றும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) மற்றும் இயந்திர கற்றல் (machine learning) போன்ற பகுதிகளில் CLEANZ செயல்படும்.


டிரம்பின் அறிக்கையானது காலநிலை ஆதரவாளர்களை தெளிவாகக் குறிக்கிறது. இருப்பினும், இந்த திட்டங்களுக்கு நிதியளிப்பது குறித்து, குறிப்பாக வளரும் நாடுகளுக்கு, சில நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது.


இந்தியாவைப் பொறுத்தவரை, இது ஒரு பிரச்சனையாக இருக்காது. ஏனெனில், அது போதுமான நிலக்கரி இருப்புகளைக் கொண்டுள்ளது. கூடுதலாக, ஒரு சுரங்கத்தை உருவாக்குவதில் எந்தவொரு முதலீடும் நீண்ட காலமாகும். மேலும் இந்தியாவின் மின்சாரத் துறை நிலக்கரியை பெரிதும் சார்ந்துள்ளது.


இப்போது டிரம்ப் நிலக்கரியை வலியுறுத்தியதால், இந்தியா இதை தனது நன்மைக்காகப் பயன்படுத்தலாம். இது, ஏற்கனவே உள்ள பரிமாற்ற நெட்வொர்க்குகளை மற்ற எரிசக்தி ஆதாரங்களுடன் ஒருங்கிணைத்து சேமிப்புக்கான வசதிகளை உருவாக்க முடியும்.



Original article:

Share:

இந்தியாவில் வங்கிச் சேவையை, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) எவ்வாறு மேம்படுத்தியுள்ளது? -வச்சஸ்பதி சுக்லா, சந்தோஷ் குமார் தாஷ்

 அரசாங்கத்தின் முதன்மைத் திட்டம், அனைவருக்குமான நிதி உள்ளடக்கத்தை (universal financial inclusion) அடைய உதவியிருந்தாலும், வங்கிச் சேவைகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கணக்குகளைப் பயன்படுத்துவதில் சவால்கள் உள்ளன.


கடந்த காலங்களில் பல முன்முயற்சிகள் இருந்தபோதிலும், குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களில், அதிக ஆவணத் தேவைகள், விழிப்புணர்வு இல்லாமை மற்றும் குறைந்தபட்ச இருப்பு ஆணைகள் ஆகியவற்றின் காரணமாக நிதி உள்ளடக்கம் ஒரு சவாலாகவே இருந்தது. இந்த தடைகளைப் போக்க, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) திட்டத்தை அரசாங்கம் ஆகஸ்ட் 28, 2014 அன்று அனைவருக்குமான நிதி உள்ளடக்கத்தை அடையும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. வங்கிக் கணக்கு இல்லாத தனிநபர்கள் குறைந்தபட்ச இருப்புத் தேவை இல்லாமல் எந்த வங்கியிலும் அடிப்படை சேமிப்புக் கணக்கைத் திறக்க இந்தத் திட்டம் அனுமதிக்கிறது. ஜனவரி 2015-க்குள், 12.5 கோடிக்கும் அதிகமான கணக்குகள் திறக்கப்பட்டன. ஜனவரி 2025 வரை, மொத்தம் 54.5 கோடியை எட்டியது. இதில் 61% பெண்கள் கணக்குகளை வைத்திருக்கிறார்கள். இந்த விரைவான வளர்ச்சி மக்களுக்கு சேமிப்பு, பணம் அனுப்புதல், கடன், ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு சேவைகளை அணுக அனுமதித்துள்ளது. இதனால், வங்கிச் சேவை அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைக்கிறது.


சில தனிநபர்கள் பல கணக்குகளை வைத்திருப்பதால், வங்கிச் சேவைகளில் முன்னேற்றத்தைப் புரிந்து கொள்ள, குடும்பங்கள் அல்லது வங்கிக் கணக்குகளைக் கொண்ட தனிநபர்களின் விகிதத்தை ஆய்வு செய்ய வேண்டும். இந்த பகுப்பாய்வு முக்கியமானது. ஏனெனில், வங்கிகளுக்கான அணுகல் பரவலாக மாறுபடலாம். சில வீடுகளில், அனைத்து உறுப்பினர்களுக்கும் கணக்குகள் இருக்கலாம், மற்றவற்றில், யாருக்கும் கணக்குகள் இருக்காது. ஜனவரி-டிசம்பர் 2013 தரவுகளின்படி, தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் (NSSO) 70-வது சுற்று ‘கடன் மற்றும் முதலீட்டு ஆய்வு’ (Debt and Investment Survey) குடும்ப அளவிலான தரவை வழங்கும் அதே வேளையில், 77-வது சுற்று (ஜனவரி-டிசம்பர் 2019) தனிப்பட்ட அளவிலான தரவை மட்டுமே வழங்குகிறது. இருப்பினும், ஒரு அலகுக்கான பதிவுத் தரவைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளைக் கொண்ட குடும்பங்களின் சதவீதத்தை நாம் மதிப்பிடலாம்.


கிராமப்புறங்களில் குறைந்தது ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் குடும்பங்களின் விகிதம் 2013-ல் 68.8%-லிருந்து 2019-ல் 97.8% ஆக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன. நகர்ப்புறங்களில், இந்த அதிகரிப்பு 79.5%-லிருந்து 96.9% ஆக அதிகரித்துள்ளது.


இது, 2019-ம் ஆண்டளவில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் வங்கிக் கணக்குகளுக்கான அணுகல் கிட்டத்தட்ட உலகளாவியதாகிவிட்டது என்பதைக் காட்டுகிறது. 2013 மற்றும் 2019-க்கு இடையில் வங்கி சேவைகள் கணிசமாக மேம்பட்டன. அதேநேரத்தில், மாநிலங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகள் குறைந்தன. 2019-ம் ஆண்டில், ஒவ்வொரு மாநிலத்திலும் 95 சதவீதத்திற்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்கள் வங்கிக் கணக்குகளைக் கொண்டிருந்தன. வங்கி சேவைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு முதன்மையான PMJDY திட்டமே காரணமாக இருக்கலாம்.


மாநிலங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு குறைந்தது


பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டம் குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் அசாம் போன்ற பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையாத மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு பயனளித்துள்ளது. அடிப்படை வங்கி சேவைகளுக்கான அணுகல் குறைவாக உள்ள கிராமப்புற மக்களைக் கொண்ட இந்த மாநிலங்களில், வங்கிக் கணக்குகள் உள்ள கிராமப்புற குடும்பங்களின் சதவீதத்தில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டது. உதாரணமாக, 2013-2019-ம் ஆண்டில், பீகார் 55.1 சதவீதம், ஜார்க்கண்ட் 47.9 சதவீதம், மேற்கு வங்கம் 43.4 சதவீதம், ஒடிசா 38.4 சதவீதம், சத்தீஸ்கர் 38.3 சதவீதம், மத்திய பிரதேசம் 38 சதவீதம், மற்றும் அசாம் 37.1 சதவீதம் அதிகரித்தன. PMJDY-லிருந்து நகர்ப்புறத் துறையும் குறிப்பிடத்தக்க அளவில் பயனடைந்தது. 2019-ம் ஆண்டுக்குள், அனைத்து மாநிலங்களும் நகர்ப்புற குடும்பங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வங்கிக்கான அணுகலைப் பதிவு செய்துள்ளன. கேரளாவைத் தவிர, 2013-ம் ஆண்டில் அதிக அணுகலை எட்டியது. இந்த எண்ணிக்கைகள், வசதியான மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலங்களுக்கு இடையேயான வங்கி அணுகலில் உள்ள இடைவெளியைக் குறைப்பதில் PMJDY முக்கியப் பங்காற்றியதாகக் கூறுகின்றன.


நிதி உள்ளடக்கம் (Financial inclusion)


தனிநபர் அளவில், தேசிய மாதிரி கணக்கெடுப்பு (NSS) 77-வது சுற்றில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வங்கிச் சேவைகள் ஒப்பீட்டளவில் சமமாக அணுகக்கூடியதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இது, கிராமப்புறங்களில் 84.4 சதவீதம் மற்றும் நகர்ப்புறங்களில் 85.2 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு வங்கிக் கணக்கையாவது கொண்டுள்ளனர். NSS 78வது சுற்று பல குறிகாட்டி கணக்கெடுப்பு (Multiple Indicator Survey) 2021-க்குள், வங்கிக் கணக்குகள் கொண்ட தனிநபர்களின் விகிதம் 89.4 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 89.3 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 89.6 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. 2023-ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 94.6 சதவீதமாக அதிகரித்தது. கிராமப்புறங்களில் 94.6 சதவீதம்  மற்றும் நகர்ப்புறங்களில் 94.4 சதவீதம் ஆகும். NSS 79-வது சுற்று விரிவான வருடாந்திர மட்டு கணக்கெடுப்பின்படி, இந்த விகிதம் ஆண்களுக்கு 96.2 சதவீதமாகவும், பெண்களுக்கான 92.8 சதவீதமாகவும் இருந்தது .


அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சண்டிகர் 100% வங்கிக் கணக்குக்கான பாதுகாப்பை அடைந்துள்ளது. 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 21 மாநிலங்களில் 95%-க்கும் அதிகமான தனிநபர்கள் வங்கிக் கணக்குகளைக் கொண்டிருந்தனர். ஆறு மாநிலங்களில் மட்டுமே 90%-க்கும் குறைவான பாதுகாப்பு இருந்தது. இந்த எண்ணிக்கைகள் இந்தியா தனிநபர் நிலையில் நிதி உள்ளடக்கத்தை கிட்டத்தட்ட அடைந்துவிட்டதைக் காட்டுகின்றன.


குறிப்பிடத்தக்க சாதனைகள்


பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டத்தின் கீழ், வைப்புத்தொகையாக மார்ச் 2015-ல் ₹15,670 கோடியிலிருந்து மார்ச் 2024-ல் ₹2,32,502 கோடியாக அதிகரித்துள்ளது. இது 1,380 சதவீத வளர்ச்சி அல்லது கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் (compound annual growth rate (CAGR)) 40 சதவீதமாக உள்ளது. ஒரு கணக்கிற்கான சராசரி வைப்புத்தொகையிலும் இது தெளிவாகத் தெரிகிறது. இது ₹1,065 இலிருந்து ₹4,467 ஆக உயர்ந்துள்ளது. இது, 20 சதவீத CAGR உடன் 4.2 மடங்கு உயர்வு ஆகும்.


விசா (Visa) மற்றும் மாஸ்டர்கார்டு (MasterCard) போன்ற உலகளாவிய அமைப்புகளுக்கு மாற்றாக உள்நாட்டு கட்டண வலையமைப்பை நிறுவுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, டிசம்பர் 2024 வரை PMJDY திட்டத்தின் கீழ் 37 கோடிக்கும் அதிகமான RuPay கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. RuPay PMJDY கடன் அட்டைகளின் குறிப்பிடத்தக்க அம்சம், தனிப்பட்ட விபத்து மரணம் மற்றும் மொத்த ஊனமுற்றோர் பாதுகாப்பு ₹2 லட்சம் வரை காப்பீட்டை உள்ளடக்கியது. இந்தத் திட்டம் சேமிப்பு அல்லது வைப்புத்தொகை பற்றியது மட்டுமல்ல, இது சாதாரண மனிதர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த உதவியுள்ளது. 2018-19ல் 2,338 கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2023-24ல் 16,443 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், ₹34 லட்சம் கோடி நேரடி பலன் பரிமாற்றங்கள் PMJDY கணக்குகள் மூலம் செயல்படுத்தப்பட்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்வதன் மூலம் இந்தியாவில் அரசுத் திட்டங்களில் கசிவுகளைக் குறைக்க உதவுகிறது.


பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டமானது, மக்களை வங்கி மூலமாக சேமிக்க உதவுவது மட்டுமல்லாமல், நிதி வரலாறு இல்லாதவர்களுக்கு கடன் அணுகலையும் வழங்குகிறது. அவர்களின் சேமிப்பு முறைகளைக் காண்பிப்பதன் மூலம், கணக்கு வைத்திருப்பவர்கள் இப்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, முத்ரா கடன் அனுமதிகள் 2018-19 முதல் 2023-24 வரை 9.8% கூட்டு வருடாந்திர விகிதத்தில் வளர்ந்தன. இந்தக் கடன் அணுகல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் இது தனிநபர்கள் தங்கள் வருமானத்தை வளர்க்க அதிகாரம் அளிக்கிறது.


நிலையான டிஜிட்டல் பங்கீடு


தொழில்நுட்பத்தின் பரவலான பயன்பாடு இணையவழி வங்கி பரிவர்த்தனைகளை கணிசமாக ஊக்குவித்துள்ளது. இது பணமில்லா பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் கருப்பு பணம் மற்றும் ஊழலைக் குறைப்பதற்கும் இது முக்கியமானது. தேசிய மாதிரி கணக்கெடுப்பு 79-வது சுற்று விரிவான வருடாந்திர மாடுலர் சர்வேயின்படி (Comprehensive Annual Modular Survey), 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 37.8 சதவீதம் பேர் இணையவழி வங்கி பரிவர்த்தனைகளைச் செய்ய முடிந்தது. இருப்பினும், பாலின வேறுபாடுகளாக 25.2 சதவீத பெண்கள் மற்றும் 47.1 சதவீத ஆண்கள் இணையவழி வங்கித் திறனைக் கொண்டுள்ளனர். கிராமப்புறங்களுடன் (30 சதவீதம்) ஒப்பிடும்போது நகர்ப்புறங்கள் அதிக தேர்ச்சியை (50.6 சதவீதம்) காட்டுகின்றன.


NSS 79-வது சுற்று கணக்கெடுப்பு இணையவழி வங்கித் திறன்களில் (online banking capabilities) கணிசமான மாநில அளவிலான ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டியது. சண்டிகர் மற்றும் தெலுங்கானா மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் இணையவழி வங்கி பரிவர்த்தனைகளை நடத்தும் திறன் கொண்டவர்கள் என்று தெரிவித்தாலும், பல மாநிலங்கள் கணிசமாக பின்தங்கி உள்ளன. இதற்கான, புள்ளிவிவரங்கள் 30 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளன. உதாரணமாக, திரிபுரா 12.8 சதவீதம், மேகாலயா 17.9 சதவீதம், சத்தீஸ்கர் 19.1 சதவீதம், மேற்கு வங்கம் 21.5 சதவீதம், உத்தரபிரதேசம் 24.4 சதவீதம், அஸ்ஸாம் 27 சதவீதம், ஜார்கண்ட் 27.4 சதவீதம், ஒடிசா 29.2 சதவீதம், குஜராத் 2.8 சதவீதம், 29.7 சதவீதம் இது டிஜிட்டல் நிதி கல்வியறிவின் சீரற்ற முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது மற்றும் டிஜிட்டல் பங்கீட்டைத் தீர்ப்பதற்கான இலக்குகளின் தலையீடுகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


முன்னோக்கி செல்லும் வழி


PMJDY வங்கிச் சேவைக்கான அணுகலை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது ஒரு கணக்கையாவது வைத்திருக்கும். இருப்பினும், உலகளாவிய Findex தரவுத்தளம் 2021 இந்தியாவில் 35 சதவீத கணக்குகள் செயலற்ற நிலையில் இருப்பதாகக் காட்டுகிறது. 2023-ம் ஆண்டு ஆய்வறிக்கையில், அகந்த் ஜே திவாரி மற்றும் கிரஹாம் ஏ.என். ரைட் ஆகியோர் பல PMJDY கணக்குகளைத் திறப்பது ஒரு முக்கியக் காரணம் என அடையாளம் கண்டுள்ளனர். அதே சமயம், மானுவேலா குந்தரின் 2017-ம் ஆண்டு ஆய்வில், ‘இந்தியாவில் நிதிச் சேர்க்கையின் முன்னேற்றம்: பல அலைகள் கணக்கெடுப்புத் தரவுகளின் நுண்ணறிவு’ (The Progress of Financial Inclusion in India: Insights from Multiple Waves of Survey Data), PMJDY கணக்கு வைத்திருப்பவர்களில் 51% பேர் PMJDY அல்லாத கணக்குகளையும் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது.


அதிகமான அளவில், மக்கள் கணக்குகளை வைத்திருந்தாலும், வங்கி சேவைகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அவற்றைப் பயன்படுத்துவதில் சவால்கள் உள்ளன. மாநிலங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் டிஜிட்டல் பரிவர்த்தனை, பின்தங்கிய பகுதிகளில் கல்வியறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகின்றன. இதன் மூலம், விழிப்புணர்வை உருவாக்குதல், நிதிக் கல்வி, நிதி தொழில்நுட்ப கூட்டாண்மைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் போன்ற இலக்குக்கான தீர்வுகள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.


இந்தியாவில் நிதி உள்ளடக்கம் பொருளாதார வளர்ச்சியை இயக்கும். இதை அடைய, கணக்கு செயலற்ற தன்மையைக் குறைத்து, மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை திறன்களை வளர்க்க உதவுவது முக்கியம். இது உள்ளடக்கிய வங்கியின் நன்மைகளை அதிகரிக்கும், நிதி பங்கேற்பை அதிகரிக்கும் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும்.


எழுத்தாளர்கள், சர்தார் படேல் பொருளாதாரம் மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனம் (SPIESR) மற்றும் கிராமப்புற மேலாண்மை நிறுவனம், ஆனந்த் (IRMA) ஆகியவற்றில் உதவிப் பேராசிரியர்கள் ஆவர்.



Original article:

Share:

பிரதிநிதித்துவத்தில் சமபங்கு தொடர்பான பிரச்சினை

 தொகுதி மறுவரையறை (delimitation) தொடர்பாக, தேசிய ஜனநாயக கட்சி அல்லாத கட்சிகளின் சென்னைக் கூட்டத்தின் விரிவான அறிக்கையில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும்.


தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்கள் மற்றும் ஒடிசா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவின் (joint action committee (JAC)) சென்னை கூட்டத்தில் இருந்து பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதில் ஒன்று, இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது, நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுவரையறை மேலும் 25 ஆண்டுகளுக்கு முடக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்றொன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) தொகுதி மறுவரையறைக்கு எதிரானது அல்ல என்றும், "நியாயமான மற்றும் சரியான செயல்முறையை" (fair and just process) மட்டுமே கோருகிறது என்றும், "நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களித்த மாநிலங்களைத் தங்களின் திறமையான மக்கள்தொகைக் கட்டுப்பாட்டின் மூலம் தண்டிக்கக் கூடாது" என்றும் தெரிவித்தார். ஆனால், ஒன்றிய பாஜக எதிர்ப்பு முன்னணியில் NDA அல்லாத கட்சிகளை அணிதிரட்டுவதில் தொகுதி மறுவரையறைக்கான எதிர்ப்பு செயல்திட்டத்தின் வரம்பையும் சென்னையில் அமைக்கப்பட்ட கலந்துரையாடல் குழு அம்பலப்படுத்தியது. சமாஜ்வாதி கட்சி (SP), ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) போன்ற முக்கிய NDA அல்லாத கட்சிகள் குறிப்பிடத்தக்க வகையில் பங்கேற்கவில்லை. உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் அதிக மக்களவை இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இது குறிப்பிடத்தக்கது.


இருந்தபோதிலும், தொகுதி மறுவரையறை செயல்முறை குறித்து தென்னிந்தியாவில் உள்ள பாதிப்புகளை கூட்டம் வெற்றிகரமாக எடுத்துக்காட்டியது. தற்போது வரை, ஒன்றிய அரசு இன்னும் தெளிவான திட்டத்தை அறிவிக்கவில்லை. மேலும், மத்திய உள்துறை அமைச்சர் தென்னிந்தியாவில் தொகுதி மறுவரையறை செயல்முறை தோல்வியடையாது என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் இது பிரதிநிதித்துவம் அல்லது விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மக்களவையின் தொகுதி எண்ணிக்கையை  சரிசெய்யும் திட்டமானது 2026-ல் நிர்ணயிக்கப்பட்டது. இதில் புதிய நாடாளுமன்றத் தொகுதிகளை உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள சிலவற்றை மாற்றுதல் அல்லது நீக்குதல் ஆகியவை அடங்கும். இது 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதமாகிவிட்டது. மக்கள் தொகை முக்கிய அளவுகோலாக இருந்தால், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் மக்களவை இடங்களின் எண்ணிக்கை கடுமையாக உயரும் என்று அரசியல் முதன்மையாளர்கள்   தெரிவிக்கின்றனர். இது தென்னிந்தியா வைத்திருக்கும் இடங்களின் விகிதத்தைக் குறைக்கும். பிரதிநிதித்துவத்தில் இத்தகைய ஏற்றத்தாழ்வு கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதிக்கலாம். குறிப்பாக நிதி விஷயங்களில், அதிகார சமநிலையானது பலவீனமடைந்து வருகிறது.


அரசியல் பிரதிநிதித்துவத்தில் சமத்துவப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மக்கள் தொகை மட்டுமே ஒரே அளவுகோலாக இருக்க வேண்டுமா என்பது ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது. ஒரு நபர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு என்ற கொள்கை அதற்கு சாதகமாக உள்ளது. ஆனால், சுதந்திரம் அடைந்ததில் இருந்து தொகுதி மறுவரையறைக்கான இந்திய அனுபவம் வேறுபட்டது. பிரத்தியேகமாக மக்கள்தொகையின் பார்வையில் மட்டுமே சிக்கலைப் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு பிராந்தியமும் பிரதிநிதித்துவப்படுவதில் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, தனிப்பட்ட வாக்காளரைக் காட்டிலும் மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் அலகுக்கு சிறப்புரிமை வழங்கும் கட்டமைப்பை நிர்வாகிகள் விரும்பினர். எனவே, இலட்சத்தீவு மற்றும் லடாக் சிறிய மக்கள் தொகையாக இருந்தாலும் மக்களவைத் தொகுதிகள் ஒப்பீட்டளவில் அவற்றிற்கு கிடைத்தன. கல்வி மற்றும் சுகாதாரத்தில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்து, மக்கள்தொகையை நிலைப்படுத்தவும், தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளுக்கு திறமையான பணியாளர்களை உருவாக்கவும், அவர்களின் பாரம்பரிய சமூக சீர்திருத்தங்களிலிருந்து பெறப்பட்ட தென் மாநிலங்களுக்கு அபராதம் விதிப்பதில் நியாயமற்ற நிலை உள்ளது.


தொகுதி மறுவரையறை விவாதம் இந்தியாவின் முன்னேற்றத்தை அச்சுறுத்தும் பொருளாதாரம் மற்றும் மக்கள்தொகை ஆகிய இரண்டு முக்கிய பிரச்சனைகளை எடுத்துக்காட்டுகிறது. வடக்கு-தெற்கு மாநில ஏற்றத்தாழ்வு (North-South disparity) தொடர்பான வேறுபாடு ஒரு சாதகமற்ற அரசியல் சண்டையாக மாறாமல் இருக்க, ஒன்றிய அரசு கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) குறிப்பிடுவதை கவனம் செலுத்த வேண்டும்.



Original article:

Share:

இந்தியாவின் வெப்ப செயல் திட்டங்களில் என்ன குறை இருக்கிறது? -அலிந்த் சவுகான்

 நீண்டகாலத் திட்டங்கள் இல்லாமை, வெப்ப அலைகள் மோசமடைவதால் வெப்பம் தொடர்பான இறப்புகளை அதிகரிக்கலாம்.


பெரும்பாலான இந்திய நகரங்களின் வெப்ப செயல் திட்டங்கள் (heat action plans (HAPs)) கடுமையான வெப்பத்தைக் கையாள நீண்டகால உத்திகளைக் கொண்டிருக்கவில்லை என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. திட்டங்களைக் கொண்ட நகரங்கள்கூட அவற்றை முறையாக செயல்படுத்தவில்லை என்றும் அது கூறியது.


திட்டமிடுதலில் இத்தகைய இடைவெளிகள் வரும் ஆண்டுகளில் வெப்ப அலைகள் அடிக்கடி, தீவிரமாக மற்றும் நீண்டதாக மாறும்போது அதிகமான வெப்பம் தொடர்பான இறப்புகள் ஏற்படக்கூடும்  என்று பகுப்பாய்வு கூறுகிறது.


"வெப்பமயமாதல் உலகத்திற்கு இந்தியா தயாரா?" என்ற தலைப்பிலான இந்த ஆய்வு, அதிக ஆபத்துள்ள இந்திய நகரங்களில் வெப்ப அலைகளுக்கான எதிரான நடவடிக்கைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஆய்வு செய்தது. இது நகர்ப்புற மக்கள்தொகையில் 11%-ஐ உள்ளடக்கியது. இது புது டெல்லியில் உள்ள ஒரு ஆராய்ச்சி குழுவான நிலையான எதிர்கால கூட்டுப்பணியால் (Sustainable Futures Collaborative (SFC)) நடத்தப்பட்டது. லண்டன் கிங்ஸ் கல்லூரி, ஹார்வர்ட் பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் எழுதப்பட்டது.


இந்த கண்டுபிடிப்புகள் வரவிருக்கும் விஷயங்களின் வடிவம் பற்றிய எச்சரிக்கையாகும். தொடர்ச்சியான வெப்ப அலைகளுக்கு அமைப்புகளில் முன்னேற்றம் அவசியமானது மற்றும் அவசரமானது என்றாலும், எதிர்காலத்திற்குத் தயாராக இருப்பதிலும் சமமான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று SFC-ன் வருகை பேராசிரியர் ஆதித்ய வலியாதன் பிள்ளை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


முதலில், வெப்ப செயல் திட்டம் என்றால் என்ன?


வெப்ப செயல் திட்டம் என்பது கடுமையான வெப்பத்தை எச்சரிக்கவும், தயார்படுத்தவும் ஒரு அமைப்பாகும். வெப்பம் தொடர்பான உடல்நல அபாயங்களிலிருந்து பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்க, தயார்நிலையை மேம்படுத்துதல், தகவல்களைப் பகிர்தல் மற்றும் பதில்களை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்கான குறுகியகால மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை இது உள்ளடக்கியது என்று அரசாங்க ஆவணம் கூறுகிறது.


ஜூலை 2024-ல் மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) வெப்ப அலை நிலைமைகளுக்கு ஆளாகக்கூடிய 23 மாநிலங்களில் மாநில அதிகாரிகளுடன் இணைந்து வெப்ப செயல் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறியிருந்தார்.


இந்தியாவில் வெப்பத் தாக்கத்தால் ஏற்படும் இறப்புகள் எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டில் 530-ஆக இருந்த நிலையில், 2022-ஆம் ஆண்டில் இது 730-ஆக உயர்ந்தது. இருப்பினும், 2024-ஆம் ஆண்டில், வெப்பத் தாக்கத்தால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் இறப்புகள் 269 ஆகவும், வெப்பத் தாக்கத்தால் ஏற்பட்ட இறப்புகள் 161 ஆகவும் குறைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.


குறிப்பிடத்தக்க வகையில், இலாப நோக்கற்ற அமைப்பான ஹீட்வாட்ச் 2024-ஆம் ஆண்டு அறிக்கையில், கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் இடையே இந்தியாவில் 17 மாநிலங்களில் வெப்ப பக்கவாதம் (heatstroke) காரணமாக 733 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறியது.


புதிய ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது?


1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு) உள்ள நகரங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர், அவை கடந்த கால சராசரிகளுடன் ஒப்பிடும்போது ஆபத்தான வெப்ப அளவுகளில் (வெப்பநிலை + ஈரப்பதம்) மிகப்பெரிய உயர்வைக் காணக்கூடும்.


இந்த நகரங்கள் பெங்களூரு, டெல்லி, ஃபரிதாபாத், குவாலியர், கோட்டா, லூதியானா, மீரட், மும்பை மற்றும் சூரத் ஆகும். இந்த ஒன்பது நகரங்களில் வெப்ப நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு பொறுப்பான நகரம், மாவட்டம் மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் ஆராய்ச்சியாளர்கள் 88 நேர்காணல்களை நடத்தினர். பேரிடர் மேலாண்மை, சுகாதாரம், நகரத் திட்டமிடல், தொழிலாளர் துறைகள் மற்றும் நகர மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் பிரதிநிதிகளையும் அவர்கள் நேர்காணல் செய்தனர்.


ஆய்வில் என்ன கண்டறியப்பட்டது?


இந்த ஆய்வில், ஒன்பது நகரங்களிலும் குடிநீர் வசதி, சரிசெய்யப்பட்ட பணி அட்டவணைகள் போன்ற குறுகியகால அவசர நடவடிக்கைகள் இருந்ததாகக் கண்டறியப்பட்டது. இருப்பினும், நீண்டகால தீர்வுகள் காணவில்லை அல்லது மோசமாக செய்யப்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.


வீடு அல்லது தொழில்சார் குளிர்ச்சியை அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு கிடைக்கச் செய்தல், இழந்த வேலைக்கான காப்பீட்டுத் தொகையை உருவாக்குதல், வெப்ப அலைகளுக்கான தீ மேலாண்மை சேவைகளை விரிவுபடுத்துதல், பரிமாற்ற நம்பகத்தன்மை மற்றும் விநியோக பாதுகாப்பை மேம்படுத்த மின்சார கட்ட மறுசீரமைப்புகள் போன்ற நீண்டகால நடவடிக்கைகள் அனைத்து நகரங்களிலும் இல்லை என்று ஆய்வு தெரிவித்துள்ளது.


பகுப்பாய்வின்படி, நகரங்கள் நகர்ப்புற நிழல் மற்றும் பசுமைப் போர்வையை விரிவுபடுத்துதல் மற்றும் அதிக வெப்ப ஆபத்தை அனுபவிக்கும் மக்கள் தொகை மற்றும் பகுதிகள் மீது கவனம் செலுத்தாமல் திறந்தவெளிகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்தின.


நீண்டகால உத்திகள் வெப்பம் தொடர்பான பிரச்சினைகளைத் தடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை. சுகாதாரப் பராமரிப்பில் கவனம் செலுத்துகின்றன என்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. நீண்டகால தீர்வுகளை ஆதரிக்க அதிக நிதி தேவை என்பதையும் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.


நிறுவன வரம்புகள் நீண்ட கால நடவடிக்கைக்கு தடையாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, உள்ளூர், மாவட்ட மற்றும் மாநில அளவில் அரசாங்கத் துறைகளுக்கு இடையேயான மோசமான ஒருங்கிணைப்பு.



Original article:

Share: