விரைவான வேகத்தில் முடுக்கிவிடப்படும் ஒரு பசுமை மாற்றம் -ஈஷான் ஷர்மா

 சிறப்பாக செயல்படுத்தப்பட்டால், கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான (decarbonisation plan) இந்திய ரயில்வேயின் திட்டம், நிதி ரீதியாகப் பொறுப்புடன் செயல்பட்டு, அரசாங்க அமைப்புகள் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதைக் காட்டுகிறது.


இந்தியா தனது முதல் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் பெட்டியை ஜூலை 2025-ல் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (Integral Coach Factory (ICF)) வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த சாதனை புதிய தொழில்நுட்பத்தை விட அதிகமானது. இது இந்திய ரயில்வேயின் விரைவுபடுத்தப்பட்ட பசுமை மாற்றத்திற்கு ஒரு சான்றாகும்.


உலகின் மிகப்பெரிய ரயில் வலையமைப்புகளில் ஒன்றாக உள்ள இந்திய ரயில்வே, உலக அளவில் ஒப்பிடக்கூடிய சில மாற்றங்களுடன் ஒரு மாற்றத்தை மேற்கொண்டு வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதை நோக்கமாகக் கொண்டு, இது தேசிய இலக்கைவிட 40 ஆண்டுகள் முன்னதாக உள்ளது.


இந்த லட்சிய மாற்றம் சுத்தமான எரிசக்தியை ஏற்றுக்கொள்வதற்கு மட்டுமல்ல. இது உள்கட்டமைப்பு, தினசரி செயல்பாடுகள் மற்றும் நிதி முறைகளின் முழுமையான மாற்றமாகும். இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளில் (sustainable development agenda) இந்திய ரயில்வேயை முன்னணியில் நிறுத்துகிறது.


தினமும் 24 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் மற்றும் மூன்று மில்லியன் டன் சரக்குகள் கொண்டு செல்லப்படுவதால், இந்தியாவின் ரயில்வேயின் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான தேசிய காலநிலை இலக்குகளுக்கு நேரடி தாக்கங்களை ஏற்படுத்துகிறது.


மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்


கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே தனது அகலப் பாதை வலையமைப்பில் சுமார் 45,000 கிலோமீட்டர் தூரத்தை மின்மயமாக்கியுள்ளது. இதன் விளைவாக, அதன் அகலப் பாதை வலையமைப்பில் 98%-க்கும் மேல் மின்மயமாக்கப்பட்டு, டீசல் பயன்பாடு குறைக்கப்பட்டு, உமிழ்வு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பு நிறைவு செய்கிறது, இதில் 553 மெகாவாட் சூரிய சக்தி, 103 மெகாவாட் காற்றாலை சக்தி மற்றும் 100 மெகாவாட் கலப்பு திறன் (மொத்தம் 756 மெகாவாட்) ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. 


2,000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் சேவைக் கட்டடங்கள் சூரிய சக்தியால் இயக்கப்படுகின்றன, அதேசமயம் வடகிழக்கு எல்லைப் பகுதி உட்பட பல ரயில்வே கட்டடங்கள் ஆற்றல் திறன் பணியகத்தின் “ஷூன்ய” (Shunya) நிகர-பூஜ்ய முத்திரையைப் பெற்றுள்ளன. சுத்தமான இழுவை தொழில்நுட்பத்தில் புதுமையாக, முதல் ஹைட்ரஜன் இயக்க ரயில் உருவாக்கப்பட்டுள்ளது, இது 35 இத்தகைய அலகுகளைப் பயன்படுத்துவதற்கான “பாரம்பரியத்திற்கு ஹைட்ரஜன்” (Hydrogen for Heritage) முயற்சியின் ஒரு பகுதியாகும்.


2030ஆம் ஆண்டுக்குள் ரயில்கள் 45% சரக்குகளை எடுத்துச் செல்லும் வகையில் லாரிகளில் இருந்து ரயில்களுக்கு அதிக பொருட்களை மாற்றுதல், உயிரி எரிபொருள் கலவைகளைப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடங்களைக் கட்டுதல் மற்றும் சிறப்பு சரக்கு ரயில் பாதைகளைத் தொடங்குதல் ஆகியவை பிற முக்கிய நடவடிக்கைகளில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் 30 ஆண்டுகளில் 457 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை குறைக்கக்கூடும். இந்த நடவடிக்கைகள், இந்திய ரயில்வேயை தேசிய இயக்கத்தின் காலநிலைக்கு ஏற்ற அடித்தளமாக கருதி, தொழில்நுட்ப மாற்றத்தையும், முறையான மறு ஆலோசனயையும் குறிக்கின்றன.


காலநிலை நிதி முக்கியப் பாதையை எடுக்கிறது


கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முயற்சி வலுவான மற்றும் மேம்படுத்தப்பட்ட பசுமை நிதி அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறது. 2023-ஆம் ஆண்டு முதல், அரசாங்கம் பசுமைப் பத்திரங்களை விற்பதன் மூலம் ரூ.58,000 கோடியை திரட்டியுள்ளது. மேலும், போக்குவரத்துத் துறை இந்த நிதியில் பெரும்பகுதியைப் பெற்றுள்ளது. மின்சார ரயில்களை வாங்கவும், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் சேவைகளை விரிவுபடுத்தவும் ஏறக்குறைய ரூ.42,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஒதுக்கீடுகள் மூலதன செலவுத் திட்டமிடலின் அடிப்படையில் காலநிலை குறிக்கோள்களை ஒருங்கிணைக்கின்றன..


நிறுவன அளவில், இந்திய ரயில்வே நிதிக் கழகம் (Indian Railway Finance Corporation (IRFC)), காலநிலைக்கு ஏற்ற மூலதனத்தைத் திரட்டுவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் மின்சார இன்ஜின்களை மறு நிதியளிப்பு கொள்முதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட $500 மில்லியன் பசுமைப் பத்திர வெளியீட்டில் (Green bond issuance) தொடங்கி, இந்திய ரயில்வே நிதிக் கழகம் அதன் பசுமை நிதி தடத்தை படிப்படியாக விரிவுபடுத்தியுள்ளது. 


சில நாட்களுக்கு முன்னர், புதுப்பிக்கத்தக்க மின் திறனை மேம்படுத்துவதற்காக தேசிய அனல் மின் கழகம் (National Thermal Power Corporation (NTPC)) பசுமை எரிசக்திக்கு ரூ.7,500 கோடி கடனை வழங்கியது. இது இந்தியாவின் குறைந்த கார்பன் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு துறைகளுக்கு இடையேயான நிதியுதவியின் வளர்ந்து வரும் போக்கைக் குறிக்கிறது.


இந்திய ரயில்வேயின் பசுமை மாற்றத்திற்கு பலதரப்பு நிறுவனங்களும் ஆதரவளித்துள்ளன. 2022-ஆம் ஆண்டு மாதத்தில், உலக வங்கி ரயில் சரக்கு போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், நடைபாதைகளின் நெரிசலை குறைத்தல் மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ரயில் சரக்குப் போக்குவரத்து திட்டத்திற்காக (Rail Logistics Project) $245 மில்லியன் கடன் வழங்குவதற்கு ஒப்புதல்


இருப்பினும், பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும். முதல் முன்னுரிமை மின்மயமாக்கலை கார்பன் நீக்கம் செய்யப்பட்ட மின்சாரத்துடன் பொறுத்த வேண்டும். கூடுதல் ரயில் மின்சாரம் பெரும்பாலும் நிலக்கரியிலிருந்து வந்தால், அது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் சூரிய மற்றும் காற்றாலை நிறுவனங்களிடமிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகம் வாங்குவதே இதற்கு ஒரு தீர்வாகும். இது ‘பசுமை ரயில்கள்’ தூய்மையான ஆற்றலைப் பயன்படுத்துவதை உறுதி செய்யும். எனவே, மாசுபாட்டைக் குறைப்பது என்பது வெறும் கூற்று அல்ல, அது உண்மையான குறிகாட்டியாகும்.


இரண்டாவதாக, கடைசிப் பகுதியின் இணைப்பை காலநிலைக்கு ஏற்ப அணுக வேண்டும். ரயில்வே நிலையங்கள் மின்னணு பேருந்துகள், மிதிவண்டி பகிர்வு அமைப்புகள் மற்றும் பாதசாரிகளுக்கு ஏற்ற உள்கட்டமைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். சரக்கு போக்குவரத்தைப் பொறுத்தவரை, மின்சார லாரிகள், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்கள் அல்லது வளர்ந்து வரும் ஹைட்ரஜன் இயக்கம் தீர்வுகள் மூலம், முதல் மற்றும் இறுதி தூர இணைப்புகளை சுத்தம் செய்வதன் மூலம் ரயிலின் குறைந்த கார்பன் நன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.


மூன்றாவதாக, ரயில் தொழில்நுட்பம் உலகத் தரத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். மின்சார கம்பிகள் மிகவும் விலை உயர்ந்த சில சிறிய அல்லது பழைய ரயில் பாதைகளில் ஹைட்ரஜன் எரிபொருள் செல் ரயில்களை சோதிக்கலாம். அதே நேரத்தில், இதற்கு இணையாக, இலகுரக ரயில் பெட்டிகள், காற்றியக்கவியல் இயந்திர வடிவமைப்புகள் (aerodynamic locomotive designs) மற்றும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் ஆற்றல் அமைப்புகள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்வது இழுவை ஆற்றல் தேவைகளைக் குறைத்து செயல் திறனை மேம்படுத்தும்.


இறுதியாக, தொழில்நுட்பம் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தாது; மக்களின் பழக்கவழக்கங்களும் மாற வேண்டும். ரயில்களுக்கான பசுமை சான்றிதழ், சரக்கு சேவைகளின் கார்பன் குறிகள் மற்றும் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பயணிகள் மற்றும் வணிகங்களை காலநிலை நடவடிக்கையில் உணர்வுள்ள பங்கேற்பாளர்களாக மாற்ற முடியும். இந்திய ரயில்வே தினமும் ஏராளமான மக்களுக்கு சேவை செய்வதால், சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணம் குறித்த மக்களின் சிந்தனையை வேறு எந்த போக்குவரத்து அமைப்பையும்விட சிறப்பாக மாற்ற முடியும்.


சவாலை எதிர்கொள்வது


2030ஆம் ஆண்டுக்குள், இந்தியா தனது நிகர பூஜ்ஜிய இலக்கை அடைந்தால், இந்திய ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் 60 மில்லியன் டன்களுக்கு மேல் CO2 உமிழ்வைத் தடுக்க முடியும். இது 13 மில்லியன் கார்களை சாலையில் இருந்து அகற்றுவது போன்றது. பணத்தை சேமிக்கும் காரணமும் முக்கியமானது: பத்தாண்டுகளின் இறுதிக்குள் மின்மயமாக்கல் மற்றும் எரிசக்தி திறன் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த எரிபொருள் செலவு சேமிப்பை ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவால் இலக்குகளை நிர்ணயிப்பதில் இல்லை. மாறாக அவற்றை அடைய மூலதனத்தைத் திரட்டி நிர்வகிப்பதில் உள்ளது. சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவின் ரயில்வே பசுமைத் திட்டம் உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறும். பெரிய அரசு போக்குவரத்து அமைப்புகள் தங்கள் நிதிகளின் கட்டுப்பாட்டை இழக்காமல் குறைந்த கார்பனை வெளியிட முடியும் என்பதைக் காட்டுகிறது.


இஷான் சர்மா ஒரு இந்திய ரயில்வே கணக்கு சேவை (Indian Railway Accounts Service (iras)) அதிகாரி, தற்போது தென்மேற்கு ரயில்வேயில் துணை நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். அவர் 2023ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கத்திடமிருந்து செவனிங்  (Chevening) உதவித்தொகையைப் பெற்றுள்ளார்.



Original article:

Share:

அனைத்து நெறிமுறை எதிர்பார்ப்புகளும் அரசியலமைப்பு ஆணைகளாக இருக்க முடியாது -வன்ஷாஜ் ஆசாத்

 130-வது அரசியலமைப்பு திருத்த மசோதா, பிரதமர், முதலமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள் சில குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்கள் ராஜினாமா செய்யவேண்டும் என்று முன்மொழிகிறது. இது அரசியலமைப்பு சட்டத் தேவைக்காக அல்ல, அரசியல் தீர்ப்புக்காக விட்டுச்செல்லும் ஒரு பகுதியில் தலையிடுகிறது.


ஒவ்வொரு நாடாளுமன்ற அவையிலும், அமைச்சர்கள் சந்தேகத்தின் பேரில் இராஜினாமா செய்த கதைகள் ஏராளமாக உள்ளன. இதில், சிலர் தார்மீக நம்பிக்கையால் மற்றும் மற்றவர்கள் அரசியல் நிர்பந்தத்தின்கீழ் ராஜினாமா செய்தனர். இரண்டு நிகழ்வுகளிலும், ராஜினாமா என்பது ஒரு அரசியல் முடிவு, அரசியலமைப்பு விதி அல்ல. ஆகஸ்ட் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட 130-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா-2025, பிரதமர், முதல்வர்கள் அல்லது அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு, குறைந்தது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றச்சாட்டின்பேரில் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால், அவர்கள் பதவியை காலி செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறது.


கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும்போது, உயர் அரசியலமைப்பு பதவியில் இருப்பவர்கள் அதிகாரத்தில் நீடிப்பது தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மசோதாவின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். உள்துறை அமைச்சர் மசோதாவை ஆதரித்து, அமைச்சர்கள் சிறையில் இருந்தாலும் பதவியில் இருக்கும்போது பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படுவதாகக் கூறினார். தலைவர்களிடமிருந்து நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கும் குடிமக்கள் இந்த நடவடிக்கையை அவசியமாகக் கருதுகின்றனர். பொறுப்புணர்வு என்பது பெரும்பாலும் காணாமல் போகும் ஒரு அரசியல் கலாச்சாரத்திற்கு தேவையான திருத்தமாக இந்த நடவடிக்கையை பார்க்கிறார்கள்.


சமீபத்திய ஆண்டுகளில், முதலமைச்சர்களும் அமைச்சர்களும் காவலில் இருக்கும்போது பதவியில் இருப்பது பொதுமக்களின் கோபத்தையும் ஆட்சி குறித்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. கட்டாய தகுதியிழப்பு விதியை (mandatory disqualification rule) உருவாக்குவதன் மூலம், அரசாங்கம் ஒருமைப்பாட்டை ஒரு நிர்வாகக் கொள்கையாக மீண்டும் உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


அரசியலமைப்பின் 75(1) பிரிவின்படி, குடியரசுத் தலைவர் பிரதமரை நியமிக்கிறார். பிரதமரின் ஆலோசனையின் பேரில், குடியரசுத் தலைவர் மற்ற அமைச்சர்களை நியமிக்கிறார் என்றும் கூறுகிறது. அதேபோல், மாநிலங்களில், 164(1) பிரிவின்கீழ், கவர்னர் முதலமைச்சரையும், அவரது ஆலோசனையின் பேரில் மற்ற அமைச்சர்களையும் நியமிக்கிறார். மனோஜ் நருலா vs இந்திய ஒன்றியம்-2014 (Manoj Narula vs Union of India) வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பால் கொள்கை வலுப்பெற்றது. அரசியலமைப்புச் சட்டம் அல்லது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் கீழ் அவர் தகுதி நீக்கம் செய்யப்படாவிட்டால், ஒருவரை அமைச்சராக நியமிப்பதில் பிரதமரின் ஆலோசனை குடியரசுத் தலைவருக்குக் கட்டுப்படும் என ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு திட்டவட்டமாக கூறியது.


வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியில் (Westminster model), ஒரு அமைச்சர் மக்களவைக்குப் பதில் சொல்ல வேண்டியவர். ஆங்கிலச் சட்டத்திலிருந்து பெறப்பட்ட இந்த மரபு இப்போது இந்தியாவின் அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். இந்திய அரசியலமைப்பு பிரிவு 75(3) ஒன்றிய நிர்வாகத்திற்கும், பிரிவு 164(2) மாநில நிர்வாகத்திற்கும் பொருந்தும். மேலும், ராய் சாஹிப் ராம் ஜவாயா கபூர் vs பஞ்சாப் மாநிலம்-1955 (Rai Sahib Ram Jawaya Kapur vs State of Punjab) என்ற மற்றொரு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


இந்த விதிகள் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியின் சாரத்தை பிரதிபலிக்கின்றன. அங்கு நிறைவேற்று அதிகாரம் பெறப்பட்டு சட்டமன்றத்திற்கு பொறுப்பு வகிக்க வேண்டும். அமைச்சர்களை நியமிக்கும் அல்லது நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநருக்கு மட்டுமே அரசியலமைப்பு வடிவமாக உள்ளது. பொதுவாக, நடைமுறையில் இது பிரதமர் அல்லது முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் செயல்படுத்தப்படுகிறது. அரசியலமைப்புத் திருத்தம் உட்பட, இந்த நுட்பமான கட்டமைப்பை மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியும், அரசியலமைப்பு வடிவம் மற்றும் ஜனநாயகப் பொருளுக்கு இடையிலான சமநிலையை சீர்குலைக்கும் அபாயம் உள்ளது.


இந்தச் சூழலில், டிசம்பர் 30, 1948 அன்று அரசியலமைப்பு சபையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கூறிய வார்த்தைகளை நினைவு கூர்வது மதிப்புக்குரியது.  அன்று, குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அமைச்சர்களாக மாறுவதை அரசியலமைப்பு ரீதியாகத் தடை செய்ய வேண்டும் என்று கே.டி. ஷா முன்மொழிந்தார். இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ள தார்மீக நோக்கத்தை டாக்டர் அம்பேத்கர் ஒப்புக்கொண்டார். டாக்டர் அம்பேத்கர், தார்மீக நோக்கத்தை ஒப்புக்கொண்டு, ஒவ்வொரு நெறிமுறை எதிர்பார்ப்பையும் அரசியலமைப்பு ஆணையாக மாற்றுவதற்கு எதிராக எச்சரித்தார். 


இதுபோன்ற விஷயங்களை "பிரதமர் மற்றும் சட்டமன்றத்தின் நல்லெண்ணத்திற்கு" விட்டுவிடுவது நல்லது என்று அவர் நம்பினார். பொதுமக்கள் அவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பார்கள். டாக்டர் அம்பேத்கரின் பகுத்தறிவு, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தார்மீக மற்றும் அமைப்பின் வலுவான நம்பிக்கையைக் காட்டியது. தற்போதைய திருத்தம் விருப்புரிமையை தகுதியிழப்பு (automatic disqualification) மற்றும் அரசியல் பொறுப்புணர்வை நடைமுறை கட்டாயத்தால் மாற்றுவதன் மூலம் குறைக்கும் அபாயம் உள்ளது.


பாதுகாப்புகள் மிகைப்படுத்தப்பட்டதாக மாறும்போது


இந்த மசோதா பொது அலுவலகத்தில் நேர்மையை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள அதே வேளையில், ஆனால் அது சட்ட நிர்ப்பந்தத்திற்கு அல்ல, அரசியல் தீர்ப்புக்காக அரசியலமைப்பு விட்டுச் சென்ற இடத்தில் ஊடுருவுகிறது. சட்டமன்ற நம்பிக்கையை அரசியலமைப்பு தகுதி நீக்கக் கேள்வியாக மாற்றுவதன் மூலம், அது வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியின் நுட்பமான சமநிலையை சீர்குலைக்கக்கூடும். இந்த மாதிரி சட்ட ஆணையால் அல்ல, அரசியல் மூலம் ஒழுக்கத்தை அமல்படுத்துகிறது.


தடுப்பு (Detention) என்பது தண்டனைக்கு (conviction) சமமானதல்ல. இருப்பினும், அது நீண்டது. வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியின் பலம் நம்பிக்கையின் மூலம் அரசியல் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது. சட்ட அனுமானத்தின் அடிப்படையில் தானாக அகற்றப்படுவதில்லை. அத்தகைய விதியை அரசியலமைப்பில் குறிப்பிடுவது சந்தேகத்தை குற்ற உணர்வோடு இணைக்கும் அபாயம் உள்ளது. இது ஜனநாயகப் பொறுப்பை பலவீனப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும்.


அரசியலமைப்பு ஏற்கனவே பதவியில் உள்ள தவறான நடத்தைகளைக் கையாள போதுமான வழிகளை வழங்குகிறது. தார்மீக நம்பகத்தன்மையை இழக்கும் ஒரு பிரதமர் அல்லது முதலமைச்சர் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்படலாம். இது நாடாளுமன்ற அழுத்தம் (parliamentary pressure) அல்லது நம்பிக்கை இழப்பு (loss of confidence) மூலம் நிகழலாம். இருப்பினும், மசோதா ஒரு கடுமையான ஒரு மாத காலக்கெடுவைச் சேர்க்கிறது. இது கூட்டுப் பொறுப்பின் கொள்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு நடைமுறை ஆயுதத்தை உருவாக்குகிறது.


இது கடுமையான அரசியலமைப்பு கவலைகளை எழுப்புகிறது. சட்டமன்றம் மட்டுமே நிர்வாகத்தின் பதவிக் காலத்தை தீர்மானிக்கிறது என்ற கருத்தை இது சவால் செய்கிறது. இது பெரும்பாலும் தடுப்பு அல்லது அரசியல் நோக்கம் கொண்ட தடுப்புக்காவலை நீக்குவதற்கான காரணமாகக் கருதுகிறது. இது குற்றமற்றவர் என்ற அனுமானத்திற்கு எதிரானது. இது ஒரு கவலைக்குரிய முன்னுதாரணத்தையும் அமைக்கிறது. சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாக ஒழுக்கத்தை அமல்படுத்த அரசியலமைப்பை மாற்றலாம். வெஸ்ட்மின்ஸ்டர் நெறிமுறையில் இருந்து வரையப்பட்ட வடிவமைப்பாளர்கள், இதைத் தவிர்த்தனர். நடவடிக்கைகளை வழிநடத்த மரபுகள், பொது ஆய்வு மற்றும் சட்டமன்ற பொறுப்புணர்வு ஆகியவற்றை அவர்கள் நம்பினர்.


அரசியலமைப்பு சமநிலையை சீர்குலைத்தல்


இந்த மசோதாவின் முதல் சிக்கல் என்னவென்றால், அது குற்றமற்றவர் என்ற அனுமானத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. விசாரணை அல்லது தண்டனை இல்லாமல் தடுப்புக்காவலின் காரணமாக ஒருவரை பதவியில் இருந்து நீக்குவது, குற்றச்சாட்டை குற்றமாகக் கருதுகிறது. தடுப்புக்காவல்கள் பின்னர் சட்டவிரோதமானவை அல்லது அரசியல் நோக்கம் கொண்டவை என்று கண்டறியப்படலாம். பதவி நீக்கத்திற்கான காரணமாக காவலைப் பயன்படுத்துவது பொறுப்புணர்வுக்கு முன் விசாரணை தண்டனைக்கும் இடையிலான கோட்டை மங்கலாக்குகிறது. இந்த மசோதா எந்தவொரு கைது நடவடிக்கையையும், வெறும் 30 நாட்களுக்குக் கூட, குற்றத்திற்கான சான்றாக திறம்பட நடத்துகிறது. கைது செய்யப்பட்ட ஒரு பிரதமர், முதலமைச்சர் அல்லது அமைச்சர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்று இது கருதுகிறது.


இரண்டாவது கவலை அதிகாரங்களைப் பிரிப்பது (separation of powers) ஆகும். யார் அமைச்சர் பதவியை வகிக்க முடியும் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை இந்த மசோதா புலனாய்வு அமைப்புகளுக்கும் நிர்வாகத்திற்கும் வழங்குகிறது. அரசியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்ட சூழலில், நீண்டகால காவலில் வைப்பது அரசியல் பழிவாங்கும் கருவியாக மாறக்கூடும். 


இது நீதித்துறை சுதந்திரம் மற்றும் சட்டமன்ற மேலாதிக்கம் இரண்டையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு சூழ்நிலையாகும். உச்சநீதிமன்றம், வினீத் நரேன் vs இந்திய ஒன்றியம்-1998 (Vineet Narain vs Union of India), சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க, புலனாய்வு அமைப்புகளின் சுதந்திரம் அரசியல் கட்டுப்பாட்டிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது. தடுப்புக்காவலில் தொடர்ந்து அமைச்சர் பதவியை வழங்குவதன் மூலம், சட்டமூலம் அந்தக் கொள்கையை மாற்றியமைக்கும் விசாரணை செயல்முறையையே அரசியல் ஆயுதமாக மாற்றும் அபாயம் உள்ளது. முதலமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்களை தடுத்து வைக்கும் அதிகாரம் மத்திய அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசில் பதவி நீக்கத்தை எதிர்க்கும் கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்கள் எச்சரிப்பதற்கு சரியான காரணங்கள் உள்ளன. மிகப்பெரிய அச்சம் என்னவென்றால், இந்த மசோதா நாடாளுமன்ற நிர்வாகத்தின் முக்கிய மரபுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. ஒரு முதலமைச்சர் 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால், அந்த மசோதாவில் அவர்கள் இராஜினாமா செய்ய வேண்டும் என்று கோருகிறது. 


ஆனால், ஒரு நாடாளுமன்ற அவையில், சபைத் தலைவர் ராஜினாமா செய்வது, பிரதமராக இருந்தாலும் சரி, முதலமைச்சராக இருந்தாலும் சரி, அமைச்சர் சபையையும் முழுவதும் இராஜினாமா செய்யத் தூண்டுகிறது. அவர்கள் ஒன்றாகச் செயல்படுகிறார்கள். அத்தகைய விதி தவறாகப் பயன்படுத்தப்படலாம். நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லாமல் அரசாங்கங்களை நீக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஆர். பொம்மை vs இந்திய ஒன்றியம்-1994 (S.R. Bommai vs Union of India), அவையின் பலம் சட்டமன்றத்தில் சோதிக்கப்பட வேண்டும் என்று கூறியது. அதை தடுப்புக்காவல் மூலம் தீர்மானிக்கக்கூடாது.


முன்னோக்கி செல்லும் வழி


பொது வாழ்க்கையில் ஒருமைப்பாட்டை (integrity) மீட்டெடுப்பதே குறிக்கோள் என்றால், சிறந்த வழிமுறைகள் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது, வெறும் தடுப்புக்காவல் அல்ல என்ற நீதித்துறை தீர்ப்பையாவது பதவியில் இருந்து நீக்க வேண்டும். புலனாய்வு முகமைகள் அரசியல் செல்வாக்கிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், அத்தகைய எந்தவொரு சீர்திருத்தமும் துஷ்பிரயோகத்தைத் தடுக்க துல்லியமான வரையறைகள் மற்றும் பாதுகாப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.


அரசியலைத் தூய்மைப்படுத்தும் உந்துதல் பாராட்டத்தக்கது. ஆனால், அரசியலமைப்புத் திருத்தங்கள் தார்மீக குறியீடுகளுக்கான விதிமுறைகள் அல்ல. அவை நாட்டின் அடிப்படை சாசனத்தை மறுவடிவமைக்கின்றன. ஆனால், அவசரமாக அல்ல, விவாதத்தை கோருகின்றனர். சந்தேகத்தை நீக்குவதற்கான அளவுகோலாக மாறினால், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சாராம்சமே சிதைந்துவிடும். மசோதா மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும், பொறுப்புக்கூறலை குறைப்பதற்காக அல்ல, மாறாக சீர்திருத்தம் கட்டுப்பாட்டுடன் இணைந்து செல்வதை உறுதி செய்யவே. பிரதமர் அல்லது முதலமைச்சர் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கும் திறன் கொண்டிருக்கும் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்ட மரபுகளைப் புரட்டிப்போடுவது, கூட்டுப் பொறுப்பு என்ற கோட்பாட்டை ஆபத்தில் ஆழ்த்தும், ஏனெனில் பிரதமர் அல்லது முதலமைச்சர் சிறிய குழுவிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.


இந்த மசோதாவின் தலைவிதியை இப்போது முடிவு செய்யவிருக்கும் கூட்டு நாடாளுமன்றக் குழுவில் ஞானம் வெற்றி பெறட்டும். அதுவரை, இந்திய நாடாளுமன்ற அமைப்பை கடவுள் காப்பாற்றட்டும்.


வான்ஷாஜ் ஆசாத் உச்ச நீதிமன்றத்தில் சட்ட எழுத்தராகவும் ஆராய்ச்சி கூட்டணி அமைப்பில் பணியாற்றுகிறார்.



Original article:

Share:

சாதி அடிப்படையிலான கொடுமைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் -ஹரிஷ் எஸ்.வான்கடே

 சாதி விதிமுறைகளை மீறியதற்காக, கிராமப்புறங்களில் நடத்தப்படும் தாக்குதல்கள் முதல், வீட்டு வசதி மற்றும் வேலைவாய்ப்பில் நகர்ப்புற பாகுபாடு வரை, சாதியானது குடிமக்களின் கண்ணியத்தையும் வாய்ப்பையும் தொடர்ந்து மறுக்கிறது. 


சமத்துவத்திற்கான அரசியலமைப்பு வாக்குறுதிகள் இருந்தபோதிலும், பட்டியலிடப்பட்ட வகுப்பினர்கள் (Scheduled Castes (SC)), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (Scheduled Tribes (ST)), மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Classes (OBC)) தொடர்ந்து சாதி அடிப்படையிலான வன்முறை மற்றும் ஒதுக்கீட்டை எதிர்கொள்கின்றனர். செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau (NCRB)) அறிக்கை, 2023-ல் பட்டியலிடப்பட்ட வகுப்பினர்களுக்கு (SC) எதிராக 57,789 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2022-ல் பதிவான 57,582 வழக்குகளைக் காட்டிலும் 0.4% அதிகரித்துள்ளது. 


மேலும் 2023-ல் 12,960 வழக்குகள் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்களுக்கு (ST) எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2022-ல் 10,064 வழக்குகளுடன் ஒப்பிடும்போது 28.8% கடுமையான உயர்வைக் காட்டுகிறது. சாதி விதிமுறைகளை மீறியதற்காக கிராமப்புறங்களில் நடத்தப்படும் தாக்குதல்கள் முதல் வீட்டுவசதி மற்றும் வேலைவாய்ப்பில் நகர்ப்புற பாகுபாடு வரை, சாதியின் அடிப்படையில் குடிமக்களின் கண்ணியத்தையும் வாய்ப்பையும் தொடர்ந்து மறுக்கிறது.



சாதிப் படிநிலைகள் இன்னும் அப்படியே உள்ளன


சமூக சீர்திருத்தவாதிகளான மகாத்மா பூலே, பி.ஆர். அம்பேத்கர், பெரியார், மகாத்மா காந்தி ஆகியோர் பிராமணிய சாதிய அமைப்பிற்கு சவால் விட்டவர்கள். இதனால், இவர்கள் நம்பிக்கையின் ஒளிவிளக்காக இருக்கிறார்கள். அவர்களின் இயக்கங்கள், பட்டியலிடப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம்-1989 (Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act) போன்ற அரசியலமைப்பு பாதுகாப்புகளுடன் இணைந்து, சாதி படிநிலைகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. 


இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், இதற்கான முன்னேற்றம் சமமாகவோ அல்லது சீராகவோ இல்லை. பலர் இன்னும், சாதி அடிப்படையிலான மேன்மையின் மீதான நம்பிக்கை நம்புகிறார்கள். தலித்துகளை சிறுநீர் குடிக்க வற்புறுத்துவது முதல் நில உரிமையை நிலைநாட்டியதற்காக ஆதிவாசிகளை விரட்டியடிப்பதுவரை பயங்கரமான தண்டனையின்றி வன்முறைச் செயல்களைச் செய்ய சமூக உயரடுக்கு பிரிவினர்களை அனுமதிக்கிறது. இத்தகைய செயல்கள் தனிப்பட்ட பாரபட்சத்தை (personal prejudice) மட்டுமல்ல, மனிதாபிமான விழுமியங்களை உள்வாங்குவதில் சமூகத்தின் தோல்வியையும் பிரதிபலிக்கின்றன. இது இந்தியா உண்மையிலேயே நாகரிக சமூகம் என்ற கூற்றில் சந்தேகங்களை எழுப்புகிறது.


பாரதீய ஜனதா கட்சியின் (BJP) தலைமையிலான தற்போதைய ஆட்சி இந்த நெருக்கடியை எதிர்கொள்வதில் பின்னடைவை சந்தித்துள்ளது. சில நேரங்களில், அது மதச் சடங்குகளில் தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளைச் சேர்ப்பது போன்ற குறியீட்டு சைகைகளைப் பயன்படுத்துகிறது, ஆனால் இந்த செயல்களில் உண்மையான மாற்றம் இல்லை. இந்துத்துவா கதைகள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் எதிர்ப்பை கலாச்சார ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக வடிவமைக்கின்றன. அவர்கள் பெரும்பாலும் ஆர்வலர்களை "இந்துவெறுப்பாளர்கள்" (Hinduphobic) என்று முத்திரை குத்துகிறார்கள். 


இந்த சொல்லாட்சி நீதிக்கான நியாயமான கோரிக்கைகளை முடக்குகிறது. உதாரணமாக, வன்கொடுமைச் சட்டத்தை பலவீனப்படுத்திய உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியபோது, ​​அவர்கள் விமர்சிக்கப்பட்டனர் மற்றும் இழிவுபடுத்தப்பட்டனர். இந்தி திரைப்படமான ”பூலே” (Phule) வெளியீட்டின் போது தலித்-பகுஜன் கலாச்சார வெளிப்பாடுகள் மீதான கட்டுப்பாடுகள், இந்த சமூகங்களை பிரதான சமூகத்திலிருந்து மேலும் தள்ளிவைக்கின்றன. கூடுதலாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு போன்ற சமூக நீதியை ஊக்குவிக்கும் கொள்கைகள் சீரற்ற முறையில் செயல்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, சமூக உயரடுக்குகள் இன்னும் முக்கியமான நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன மற்றும் அதிகாரத்தின் மீது தங்கள் கட்டுப்பாட்டைப் பேணுகின்றன.


சமூக உயரடுக்கு (social elites) மற்றும் பிற்படுத்தப்பட்ட குழுக்களுக்கு (subaltern groups) இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க வலுவான கொள்கை கட்டமைப்பு இல்லாதது மிகவும் தெளிவாக உள்ளது. பாஜகவும் அதன் கூட்டணி அமைப்புகளும் சாதிப் பாகுபாட்டை எதிர்த்துப் போராடவோ அல்லது வெவ்வேறு சாதிகளிடையே ஒற்றுமையை வளர்க்கவோ ஒரு தேசிய பிரச்சாரத்தைத் தொடங்கவில்லை. அத்தகைய முயற்சிகள் ஆதிக்க சாதிகளின் சலுகைகளை பலவீனப்படுத்தக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். 


மாறாக, பிராமணிய கலாச்சாரக் கதைகளை ஊக்குவிப்பது, தலித் மற்றும் ஆதிவாசி சமூகங்களின் போராட்டங்களை பின்னுக்குத் தள்ளுகிறது மற்றும் இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் சமமான கண்ணியத்திற்கான போராட்டங்களாகக் காட்டப்படுவதற்குப் பதிலாக பாரம்பரிய அதிகாரத்தின் மீதான தாக்குதல்களாகக் காட்டப்படுகின்றன. இந்துத்துவ சித்தாந்தவாதிகளால் ஆதரிக்கப்படும் இந்த அணுகுமுறை, சமமான மற்றும் நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்கான அரசியலமைப்பு இலக்கிற்கு எதிரானது. 


வரலாற்றுரீதியாக, சாதிய இயக்கவியலை மறுவடிவமைத்த சக்திவாய்ந்த எதிர்ப்பு இயக்கங்களை இந்தியா கண்டது. 1970-களில் தலித் சிறுத்தைகள் இயக்கம் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அரசியல் அதிகாரத்தையும் சமூக மரியாதையையும் கோர தூண்டியது. வட இந்தியாவில் பகுஜன் சமாஜ் கட்சியின் எழுச்சி தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு (OBC) மேலும் அதிகாரம் அளித்தது. ஆட்சி மற்றும் பொது உரையாடல்களில் அவர்களின் குரல்களை வலுப்படுத்தியது. 


தலித் இலக்கியம் மற்றும் ஆதிவாசி கலை போன்ற கலாச்சார மற்றும் அறிவுசார் முயற்சிகள் இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகின்றன. இருப்பினும், இன்று இந்த இயக்கங்கள் சிதறடிக்கப்பட்டு பலவீனமாக உள்ளன. சமூக அநீதியை எதிர்த்துப் போராடுவதற்கு அவர்களுக்கு இனி அதே சக்தி இல்லை. சாதி அடிப்படையிலான வன்முறைக்கு சிவில் சமூகத்தின் எதிர்வினையும் குறைவாகவே உள்ளது.


தற்போதைய அரசியலமைப்பு வழிமுறைகள் மற்றும் சட்டமன்ற உத்தரவுகள் தெளிவான வரம்புகளைக் கொண்டுள்ளன. சட்டங்கள் இருந்தாலும், தாமதமான விசாரணைகள், குறைந்த தண்டனை விகிதங்கள் மற்றும் நீதித்துறை மற்றும் காவல்துறையில் உள்ள சமூக சார்பு ஆகியவற்றால் அமலாக்கம் பலவீனமாக உள்ளது. உதாரணமாக, தலித் மனித உரிமைகள் மீதான தேசிய பிரச்சாரத்தின் 2023 ஆய்வில், வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் 60% வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. இது சட்ட விதிகளுக்கு அப்பால் முறையான சீர்திருத்தங்களின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


பன்முக அணுகுமுறை


சாதிய வன்கொடுமைகளை நிவர்த்தி செய்வதற்கு வலுவான அரசியல் விருப்பம் மற்றும் சமூக சீர்திருத்தத்தின் அடிப்படையில் பல ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுகிறது. முதலாவதாக, அரசாங்கம் தற்போதுள்ள சட்டங்களை மிகவும் திறம்பட செயல்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனையை உறுதி செய்ய வேண்டும் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புளுக்கு சாதி அடிப்படையிலான பாகுபாட்டைப் புரிந்துகொண்டு செயல்பட பயிற்சி அளிக்க வேண்டும். இரண்டாவதாக, அரசியல் தலைவர்கள் சமத்துவத்தை ஊக்குவிக்கும் ஒரு தேசிய பிரச்சாரத்தை வழிநடத்த வேண்டும். 


பாரம்பரிய சாதி படிநிலைகள் மற்றும் பாரபட்சங்களை சவால் செய்ய அவர்கள் கல்வி, ஊடகங்கள் மற்றும் பொது தளங்களைப் பயன்படுத்தலாம். மூன்றாவதாக, மத நிறுவனங்கள், கலாச்சார அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உட்பட சிவில் சமூகம் சமூகங்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்த உரையாடலை வளர்க்க வேண்டும். நான்காவதாக, உறுதியான நடவடிக்கைக் கொள்கைகள் கண்டிப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தக் கொள்கைகளைக் கண்காணிக்கவும், அனைவருக்கும் கல்வி, வேலைகள் மற்றும் வளங்கள் நியாயமான முறையில் கிடைப்பதை உறுதி செய்யவும் வெளிப்படையான அமைப்புகள் இருக்க வேண்டும். மிக முக்கியமாக, தலித், ஆதிவாசி மற்றும் பகுஜன் குரல்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். சாதி அமைப்புக்கு எதிரான அவர்களின் நீண்ட போராட்ட வரலாற்றுக்கு புதிய தலைவர்களும் புதிய தளங்களும் தேவை. சாதி எதிர்ப்பு சமூக இயக்கங்களின் மறுமலர்ச்சி, பிற்படுத்தப்பட்ட சமூகக் குழுக்களிடையே ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதுடன், சமூக நீதி செயல்திட்டத்தை முதன்மைக் கவலையாக மீண்டும் நிலைநாட்டும்.


ஹரிஷ் எஸ். வான்கடே, உதவிப் பேராசிரியர், அரசியல் ஆய்வு மையம், சமூக அறிவியல் பள்ளி, ஜேஎன்யு, புது தில்லி



Original article:

Share:

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை : இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகள் குறித்து...

 பயங்கரவாதக் குழுக்கள் (terror groups) அதிகாரத்தில் இருந்தாலும், அவர்கள் மீது இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


சர்ச்சைகளால் நிறைந்த ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகியின் இந்திய பயணமானது, இந்தியாவுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு பெரிய மறுசீரமைப்பைக் குறிக்கும். 2021-ல் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் அவர் சந்தித்த முதல் பயணம் இதுவாகும். 2001-ம் ஆண்டு முதல் அனுமதிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் பட்டியலில் உள்ள அமைச்சர் அமீர் கான் முத்தாகி மீதான பயணத் தடையை விலக்கிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடைகள் குழுவால் (UN Security Council’s Sanctions committee) இந்த வருகையை சாத்தியமாக்கியது. ஆப்கானிஸ்தான் அமைச்சரை வரவேற்கவும், தாலிபான்களுடனான உறவுகளை மேம்படுத்தவும் இந்தியாவுக்கு வலுவான இராஜதந்திர காரணங்கள் உள்ளன. 

அதாவது, இந்தியாவின் மேற்கு எல்லையிலிருந்து வரும் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் குறைக்க இருநாடுகளின் உறவுகள் ஒரு நல்ல வரவேற்பை அளிக்கிறது. அவை இந்திய பணியாளர்களையும் ஆப்கானிஸ்தானில் முதலீடுகளையும் பாதுகாக்க உதவுகின்றன. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் உறவுகளின் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், தலிபான்களை ஒரு "எதிரியின் எதிரியாக" (enemy’s enemy) ஆக்குகிறது. இது இந்தியாவிற்கு சாதகமாக செயல்படக்கூடும். தலிபான்கள் இப்போது கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதியை தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் போன்ற பிற பிராந்திய சக்திகளைப் போலவே, அவர்களுடன் இந்தியாவும் ஈடுபடுவது நடைமுறைக்குரியது. காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை "தொழில்நுட்ப திட்டமாக" (technical mission) மேம்படுத்துவதாகவும், இருநாட்டு தரப்பினரும் இராஜதந்திரிகளை பரிமாறிக் கொள்வதாகவும் இந்தியா அறிவித்துள்ளது. 


தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிப்பதில் இந்தியா ஒரு படி மேலே செல்கிறது. இது இதுவரை ரஷ்யா மட்டுமே எடுத்துள்ள ஒரு நடவடிக்கையாகும். அதாவது மருத்துவமனைகளை கட்டுவதற்கும், மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும், வர்த்தக நிலைகளை மேம்படுத்துவதற்கும் இந்தியா முன்முயற்சிகளை அறிவித்தது. குறிப்பிடத்தக்க வகையில், இரு தரப்பினரும் "ஒருவருக்கொருவர் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதையை வலியுறுத்தினர்". இந்த அறிக்கை, பாகிஸ்தானின் பிராந்திய உரிமைகோரல்களை இரு தரப்பினரும் ஏற்கவில்லை என்பதைக் குறிக்கிறது. 2001-21-ல் தலிபான் படைகள் இந்தியாவின் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை குறிவைத்ததில் இருந்து கணிசமான மாற்றமாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அதன் பிரதேசத்தை இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்காது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாகி உறுதிப்படுத்தினார்.


கூட்டு அறிக்கையில் நிறைய முக்கியமான உள்ளடக்கங்கள் இருந்தபோதிலும், பயணத்தின் முக்கியச் செய்திகள் பல தவறான கருத்துக்கள் மற்றும் மோசமான கட்டமைக்கப்பட்ட விளக்கக்காட்சியால் மறைக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்பு, மற்றும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் கொடியை உயர்த்த முயற்சி செய்யப்பட்டது. 

மேலும், பெண் பத்திரிகையாளர்கள் யாரும் அழைக்கப்படவில்லை என்பதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாகி அனைவரையும் உள்ளடக்கிய மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அரசாங்கம், இந்த நிகழ்விலிருந்து தன்னை விலக்கிக் கொண்டதால், தலிபான்களின் பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தடை, உள்ளடக்கமான அரசியல் செயல்முறையின் பற்றாக்குறை, சிறுபான்மையினரின் மீதான நடத்தை மற்றும் குழுவின் முந்தைய தாக்குதல்கள் போன்ற பரந்த பிரச்சினைகளில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வாய்ப்பை தவறவிட்டது. தலிபான்களுடன் உரையாடுவது பிராந்திய பாதுகாப்பிற்கு முக்கியமானது மற்றும் அவசியமானது என்றாலும், இந்தியா இந்த குழுவை எந்த அளவுக்கு சமரசம் செய்ய திட்டமிடுகிறது, மற்றும் அதற்காக தனது நற்பெயரை பணயம் வைக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.



Original article:

Share:

புகையிலை தொற்றுநோயைக் கையாளுதல் -ரித்மா கவுல்

 உலகளாவிய புகையிலை பயன்பாடு குறித்த சமீபத்திய WHO அறிக்கை, புகையிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2000-ஆம் ஆண்டில் 1.38 பில்லியனில் இருந்து 2024-ல் 1.2 பில்லியனாகக் குறைந்துள்ளதாகக் காட்டுகிறது.


2010-ஆம் ஆண்டு முதல், புகையிலை பயன்பாடு 120 மில்லியன் மக்களால் குறைந்துள்ளது. இது 27% சரிவு அடைந்துள்ளது. அனைத்து வயதினரையும் சேர்ந்த ஆண்களும் பெண்களும் 2000 மற்றும் 2024-ஆம் ஆண்டுக்கு இடையில் புகையிலை பயன்பாட்டை படிப்படியாகக் குறைத்துள்ளனர்.


புகையிலையை விட்டு வெளியேறும் முயற்சியில் பெண்கள் முன்னணியில் உள்ளனர். அவர்கள் 2025-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய குறைப்பு இலக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அடைந்து, 2020-ல் 30% குறைப்பை அடைந்தனர். பெண்களிடையே புகையிலை பயன்பாடு 2010-ல் 11% இருந்து 2024-ல் 6.6% ஆகக் குறைந்தது. மேலும், பெண் புகையிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 277 மில்லியனில் இருந்து 206 மில்லியனாகக் குறைந்தது.


புகையிலை தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று அறிக்கை கூறுகிறது. உலகளவில் ஐந்து பெரியவர்களில் ஒருவர் இன்னும் புகையிலையைப் பயன்படுத்துகிறார். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான தடுக்கக்கூடிய இறப்புகள் ஏற்படுகின்றன. நுரையீரல், தலை மற்றும் கழுத்து புற்றுநோய்கள் உட்பட பல புற்றுநோய்களுக்கு புகையிலை முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


அதிக வருமானம் உள்ள நாடுகளில் குறைந்தது 86 மில்லியன் பெரியவர்கள் இன்னும் புகையிலையைப் பயன்படுத்துகிறார்கள் என்று தரவு காட்டுகிறது. இது ஒரு தீவிர பொது சுகாதார கவலையாகும்.


புதிய தயாரிப்புகள் பயனர்களையும், குறிப்பாக குழந்தைகளையும் ஈர்க்கின்றன. 13-15 வயதுடைய குறைந்தது 15 மில்லியன் குழந்தைகள் ஏற்கனவே மின்-சிகரெட்டுகளைப் பயன்படுத்துகின்றனர். தரவுகளின் படி, உலகளாவிய புகையிலை கட்டுப்பாட்டு முயற்சிகள் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் புகையிலையை விட்டுவிடுகிறார்கள் அல்லது தவிர்க்கிறார்கள்," என்று WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார். இந்த முன்னேற்றத்திற்கு எதிர்வினையாக, புகையிலைத் தொழில் புதிய நிக்கோடின் தயாரிப்புகளை ஊக்குவித்து இளைஞர்களை குறிவைத்து வருகிறது. அரசாங்கங்கள் வேகமாகச் செயல்பட வேண்டும் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட புகையிலை கட்டுப்பாட்டுக் கொள்கைகளை அமல்படுத்த வேண்டும்.


புகையிலைத் தொழில் சிகரெட்டுகள், மின்-சிகரெட்டுகள், நிக்கோடின் பைகள் மற்றும் சூடான புகையிலை பொருட்கள் உள்ளிட்ட புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் WHO தெரிவித்துள்ளது.


"மின்-சிகரெட்டுகள் நிக்கோடின் போதைப்பொருளின் புதிய அலையை உருவாக்குகின்றன," என்று WHO சுகாதார மேம்பாடு மற்றும் தடுப்பு இயக்குனர் எட்டியென் க்ரூக் கூறினார். "அவை பாதுகாப்பான விருப்பமாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், அவை உண்மையில் குழந்தைகளை நிக்கோடினுக்கு அடிமையாக்குகின்றன. மேலும்,  அவர்களின்  முன்னேற்றத்தை அழிக்கக்கூடும்."


என்ன செய்ய வேண்டும்? WHO அரசாங்கங்களை புகையிலை கட்டுப்பாட்டை வலுப்படுத்தக் கேட்டுக்கொள்கிறது. இதில் புகையிலை வரிகளை உயர்த்துவது, விளம்பரங்களைத் தடை செய்வது மற்றும் புகைபிடிப்பதை நிறுத்த விரும்பும் மக்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவது ஆகியவை அடங்கும்.


புகையிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலமும், வலுவான புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலமும் இந்தியா நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது.


"புகையிலை தொடர்பான உடல்நலக் பாதிப்புகளிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்க இந்தியா தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் புகையிலை சித்தரிப்பை ஒழுங்குபடுத்துவதில் முன்னணியில் இருப்பது, சுகாதார எச்சரிக்கைகள் மற்றும் புகையிலை எதிர்ப்பு செய்திகள் பல்வேறு பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும். புகையிலையின் வரம்பை மேலும் கட்டுப்படுத்த, அனைத்து வகையான புகையிலை விளம்பரம், ஊக்குவிப்புகள் மற்றும் ஆதரவு நிகழ்ச்சிகள் ஆகியவை கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. அனைத்து புகையிலை பெட்டிகளில் பெரிய படங்களுடன் சுகாதார எச்சரிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இது உலகளவில் வலுவான ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ”என்று வியாழக்கிழமை டெல்லியில் புகையிலை இல்லாத இளைஞர் பிரச்சாரம் 3.0-ன் மூன்றாவது பதிப்பைத் தொடங்கி வைத்து சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் கூறினார்.


"18 வயதுக்குட்பட்ட எவருக்கும் பள்ளிகளிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மின்-சிகரெட்டுகளை தயாரிப்பது, விற்பனை செய்வது, கொண்டு செல்வது மற்றும் சேமிப்பதும் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது," என்று படேல் கூறினார்.


"புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதிலும், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதிலும் இந்தியா உலகளாவிய தலைவராக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று படேல் மேலும் கூறினார்.



Original article:

Share:

அரிய மண் தாதுக்கள்: விதிமுறைகள் அடிப்படையிலான கட்டமைப்பு ஏன் தேவைப்படுகிறது?

 பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (Organization of the Petroleum Exporting Countries (OPEC)) போன்ற ஒரு கூட்டமைப்பைச் சார்ந்திருப்பதைத் தடுக்க, அரிய மண் மற்றும் முக்கியமான தாதுக்கள் மீதான தேசிய பணிகளும் அவசியம்.


அரிய மண் தாதுக்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை சீனா கடுமையாக்கியதை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா மீது 100% கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார். அன்றாடப் பொருட்கள் முதல் மேம்பட்ட தொழில்நுட்பம் வரை பல பொருட்களை உற்பத்தி செய்வதற்கு இந்தக் கனிமங்கள் அவசியம். டிரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு அப்பால், நாடுகள் தங்கள் அரிய மண் மற்றும் முக்கியமான கனிம வளங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதும், அவற்றின் விநியோகத்தை நிர்வகிக்க ஒரு உலகளாவிய ஒழுங்குமுறை அமைப்பின் தேவையும்தான் பெரிய பிரச்சினை. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பலதரப்பு முடிவெடுப்பதில் தற்போதைய சரிவு இந்தப் பணியை கடினமாக்குகிறது. இருப்பினும், இந்த தாதுக்கள் ஆற்றல் மாற்றம், AI மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங்கிற்கு மிக முக்கியமானவை என்பதால், உலகம் அவற்றின் விநியோகத்தை வளங்களை வைத்திருக்கும் நாடுகளின் அரசியல் முடிவுகளுக்கு விட்டுவிடவோ அல்லது ஒரு கூட்டமைப்பை உருவாக்க அனுமதிக்கவோ முடியாது.


சீனாவின் நிலைமை சிக்கலைத் தெளிவாகக் காட்டுகிறது. உலகின் அரிய மண் தாதுக்களில் 61% சீனா உற்பத்தி செய்கிறது மற்றும் அவற்றில் 92%-ஐ செயலாக்குகிறது. இது பிற ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மேம்படுத்தப்படும் வரை விநியோகத்தின்மீது கிட்டத்தட்ட முழுமையான கட்டுப்பாட்டை அளிக்கிறது. சீனாவின் புதிய விதிகள் இந்த தாதுக்களின் ஏற்றுமதியை மட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றை ஆராய்வதற்கும், சுரங்கப்படுத்துவதற்கும், சுத்திகரிப்பதற்கும் தேவையான தொழில்நுட்பங்களுக்கான அணுகலையும் கட்டுப்படுத்துகின்றன. அதே நேரத்தில், சீனா மற்ற நாடுகளில் இருப்புக்களில் அதிக முதலீடு செய்கிறது. இது சீனாவிற்கு இரண்டு வழிகளில் ஒரு நன்மையை அளிக்கிறது. முதலாவதாக, அரிய மண் தாதுக்கள் எவ்வளவு மற்றும் எவ்வளவு விரைவாக வழங்கப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தலாம், விலைகளை பாதிக்கலாம் மற்றும் அமெரிக்காவுடனான கடந்தகால பேச்சுவார்த்தைகளில் காணப்பட்டபடி, வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இந்த சக்தியைப் பயன்படுத்தலாம். இரண்டாவதாக, தொழில்நுட்பத்தில் அமெரிக்காவைவிட இது முன்னிலை பெறுகிறது. இது சீனாவை உலகளாவிய வல்லரசாக மாற்ற உதவும்.


இந்த வளங்களின் மிகப்பெரிய செல்வாக்கு உலகளாவிய ஒழுங்குமுறைக்கு அழைப்பு விடுகிறது. ஆனால், இதை எதிர்பார்ப்பது நடைமுறைக்கு மாறானது. எண்ணெய் மற்றும் எரிவாயுவில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (Organization of the Petroleum Exporting Countries (OPEC)) போன்ற அமைப்பின் கட்டுப்பாட்டைத் தடுப்பது முக்கியம். ஆனால், இது நடக்குமா என்பது நிச்சயமற்றது. எடுத்துக்காட்டாக, சீனாவின் கட்டுப்பாடுகள் இந்தியாவின் மின்சார வாகனத் திட்டங்கள், சுத்தமான எரிசக்தி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உற்பத்தியை மெதுவாக்கலாம். இந்த சூழ்நிலையில், இந்தியா போன்ற நாடுகள் பிரேசிலில் உள்ள COP30 போன்ற சர்வதேச மன்றங்களைப் பயன்படுத்தி முக்கியமான மற்றும் அரிய மண் தாதுக்களின் விதிகள் அடிப்படையிலான மேலாண்மைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்கள் தங்கள் சொந்த எல்லைகளுக்குள் இந்த வளங்களை ஆராய்ந்து மேம்படுத்த வேண்டும், பயன்படுத்தப்படாத வைப்புத்தொகைகளைக் கொண்ட நாடுகளுடன் கூட்டாண்மைகளை உருவாக்க வேண்டும் மற்றும் மாற்று ஆதாரங்களைக் கண்டறிய வேண்டும்.



Original article:

Share:

சர்க்கரை அல்லாமல், தானியங்கள் எவ்வாறு இந்தியாவின் எத்தனால் உற்பத்தியை இயக்குகின்றன? -ஹரிஷ் தாமோதரன்

 கரும்பு வேளாண் செய்யும் உழவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டம் இப்போது ரூ.40,000 கோடி மதிப்புள்ள முதலீடுகளை ஈர்த்துள்ளது. மேலும், இது முழுமையான தானிய அடிப்படையிலான எத்தனால் உற்பத்தியாளர்களுக்கு இன்னும் அதிக பயனளிக்கிறது.


எத்தனால் கலப்புத் திட்டம் முக்கியமாக சர்க்கரை ஆலைகள் கரும்பு பதப்படுத்துதலில் இருந்து கூடுதல் வருமான ஆதாரத்தை உருவாக்குவதன் மூலம் உழவர்களுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்த உதவும் வகையில் தொடங்கப்பட்டது.


2017-18ஆம் ஆண்டு வரை, சர்க்கரை ஆலைகள் C-வகை அடர் பாகுவிலிருந்து (C-heavy molasses) மட்டுமே எத்தனாலை உற்பத்தி செய்தன. இது சர்க்கரையை பிரித்தெடுத்த பிறகு மீதமுள்ள இறுதி அடர் பழுப்பு திரவமாகும். இந்த துணைப் பொருளில் சில சுக்ரோஸ் உள்ளது. ஆனால், அதை சர்க்கரையாக பதப்படுத்த முடியாது.


2018-19 விநியோக ஆண்டிலிருந்து, ஆலைகள் B-வகை அடர் பாகு (B-heavy molasses) எனப்படும் முந்தைய கட்டத்தில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யத் தொடங்கின. இது நொதித்தலுக்கு அதிக சுக்ரோஸைக் கொண்டுள்ளது. 


B-வகை அடர் பாகுவிலிருந்து (B-heavy molasses) தயாரிக்கப்பட்ட எத்தனாலுக்கு அதிக விலைகளை வழங்குவதன் மூலமும், நேரடி கரும்பு சாறு இந்த மாற்றத்தை அரசாங்கம் ஊக்குவித்தது. சர்க்கரையை குறைவாகவோ அல்லது இல்லாமலோ உற்பத்தி செய்வதன் மூலம் ஆலைகள் எதிர்கொள்ளும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய இது செய்யப்பட்டது.


விளைவு: 


2013-14 மற்றும் 2018-19 நிதியாண்டுக்கு இடையில், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு (oil marketing companies (OMC)) மொத்த எத்தனால் வழங்கல் வெறும் 38 கோடியிலிருந்து கிட்டத்தட்ட 189 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. பெட்ரோலில் அகில இந்திய சராசரி எத்தனால் கலப்பதும் 1.6%-லிருந்து 4.9% ஆக உயர்ந்துள்ளது.


சர்க்கரை முதல் தானியம் வரை


இது கரும்பு மட்டுமல்ல.


2018–19 நிதியாண்டு முதல், மோடி அரசாங்கம் அரிசி, சோளம் மற்றும் சேதமடைந்த உணவு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கு தனித்தனி முன்-வடிகட்டுதல் விலைகளையும் (ex-distillery prices) நிர்ணயித்தது. இந்த நடவடிக்கை முக்கியமாக சர்க்கரை ஆலைகளை ஆதரிப்பதற்காக இருந்தது. பல சர்க்கரை ஆலைகள், அறுவடை பருவத்தில் (நவம்பர் முதல் ஏப்ரல் வரை) பாகு மற்றும் சாறு பயன்படுத்தி செயல்படக்கூடிய வடிகட்டுதல் ஆலைகளை உருவாக்கின.  மேலும், கரும்பு கிடைக்காத பருவத்தில் (மே முதல் அக்டோபர் வரை) தானியங்களைப் பயன்படுத்துவதற்கு மாறின.


எத்தனால் உற்பத்தியில் ஈஸ்ட்கள் மூலம் சர்க்கரை நொதித்தல் முறையும் அடங்கும். பாகு அல்லது கரும்புச் சாற்றில், சர்க்கரை சுக்ரோஸாக உள்ளது. இருப்பினும், தானியங்களில் ஸ்டார்ச் உள்ளது. ஒரு சிக்கலான கார்போஹைட்ரேட், இது முதலில் பிரித்தெடுக்கப்பட்டு, நொதித்தல், வடிகட்டுதல் மற்றும் நீரிழப்புக்கு முன் எளிய சர்க்கரைகளாக மாற்றப்பட்டு 99.9% ஆல்கஹால் செறிவுடன் எத்தனாலை உற்பத்தி செய்ய வேண்டும்.


ஊக்கத்தொகைகள் சர்க்கரை ஆலைகள் பருவம் இல்லாத காலத்தில் தானியங்களை மாற்று மூலப்பொருளாகப் பயன்படுத்த ஊக்குவித்தன. விரைவில், பஞ்சாப், ஹரியானா, பீகார், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் தானியங்களை மட்டுமே பயன்படுத்தும் பல புதிய எத்தனால் ஆலைகள் அமைக்கப்பட்டன.


இதில் பயன்படுத்தப்படும் முக்கிய தானியங்கள் மக்காச்சோளம் மற்றும் அரிசி ஆகும். இவற்றில் இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India (FCI)) மற்றும் திறந்த சந்தையிலிருந்து உபரி மற்றும் உடைந்த அல்லது சேதமடைந்த தானியங்களும் இதில் அடங்கும்.


2023–24 விநியோக ஆண்டில் (நவம்பர்–அக்டோபர்), எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMC) 672.49 கோடி லிட்டர் எத்தனாலை வாங்கின. இந்தியா முழுவதும் சராசரி கலப்பு விகிதம் 14.6% ஐ எட்டியது.


மொத்த 672.49 கோடி லிட்டரில், 270.27 கோடி லிட்டர் (40.2%) மட்டுமே கரும்பு சார்ந்த பொருட்களிலிருந்து வந்தது. இதில் 57.56 கோடி லிட்டர் C-வகை அடர் பாகுவிலிருந்தும், 148.81 கோடி லிட்டர் B-வகை அடர் பாகுவிலிருந்தும் மற்றும் 63.90 கோடி லிட்டர் கரும்பு சாறுலிருந்தும் வந்தது.


மீதமுள்ள 402.22 கோடி லிட்டர் தானியங்களிலிருந்து வந்தது. 286.47 கோடி லிட்டர் மக்காச்சோளத்திலிருந்தும், 115.62 கோடி லிட்டர் உடைந்த அல்லது சேதமடைந்த உணவு தானியங்களிலிருந்தும், 0.13 கோடி லிட்டர் இந்திய உணவுக் கழக (Food Corporation of India (FCI)) அரிசியிலிருந்தும் வந்தது. மக்காச்சோளம் மட்டும் அனைத்து கரும்பு சார்ந்த பொருட்களையும் சேர்த்து உற்பத்தி செய்ததை விட அதிக எத்தனால் உற்பத்தி செய்தது.


நடப்பு விநியோக ஆண்டிலும் இதே போக்கு தொடர்கிறது. எதிர்பார்க்கப்படும் 920 கோடி லிட்டரில், 300 கோடி லிட்டர் மட்டுமே (மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானது) கரும்பு சார்ந்த மூலங்களிலிருந்து வரும். மீதமுள்ள 620 கோடி லிட்டர் தானியங்களிலிருந்து வரும், மக்காச்சோளம் சுமார் 420 கோடி லிட்டருக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தானியங்கள் சர்க்கரைக்கு பதிலாக எத்தனாலின் முக்கிய ஆதாரமாக மாறியதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.


முதல் காரணம் வறட்சி. இது 2023–24 மற்றும் 2024–25ஆம் ஆண்டுகளில் கரும்பு அறுவடை மோசமாக வழிவகுத்தது. எத்தனால் உற்பத்திக்கு B-வகை பாகு மற்றும் கரும்பு சாறு அல்லது சிரப் பயன்பாட்டை அரசாங்கம் மட்டுப்படுத்தியது. இதன் காரணமாக, எத்தனாலுக்கு மாற்றப்பட்ட சர்க்கரையின் அளவு 2022–23-ஆம் ஆண்டில் 45 லட்சம் டன் (லிட்டர்) இலிருந்து அடுத்த இரண்டு பருவங்களில் 24 லிட்டராகவும், அடுத்த இரண்டு பருவங்களில் 35 லிட்டராகவும் குறைந்தது.


இதன் விளைவாக, இந்தியாவின் சர்க்கரை உற்பத்தியும் 2021–22-ஆம் ஆண்டில் 359.25 லிட்டராகவும், 2022–23 ஆம் ஆண்டில் 330 லிட்டராகவும் இருந்து 2023–24 ஆம் ஆண்டில் 319 லிட்டராகவும், 2024–25-ஆம் ஆண்டில் 261.1 லிட்டராகவும் குறைந்தது.


இரண்டாவது காரணம் எத்தனால் மூலங்களுக்கான வெவ்வேறு விலைகள் பற்றியது.


2024-25 விநியோக ஆண்டில், மக்காச்சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலின் விலை லிட்டருக்கு ரூ.71.86 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இது C-வகை பாகு (ரூ.57.97), B-வகை பாகு(ரூ.60.73), கரும்பு சாறு அல்லது சிரப் (ரூ.65.61), இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India (FCI)) உபரி அரிசி (ரூ.58.50) மற்றும் உடைந்த அல்லது சேதமடைந்த தானியங்கள் (ரூ.64) போன்ற பிற மூலங்களிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கு எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCகள்) செலுத்தும் விலைகளைவிட அதிகமாகும்.


சர்க்கரைத் தொழிலுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டம், தானிய அடிப்படையிலான எத்தனால் உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக மக்காச்சோளத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மாறியுள்ளது.


கொள்கை தாக்கங்கள்


2025-26-ஆம் ஆண்டிற்கு, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) 1,050 கோடி லிட்டர் எத்தனால் வழங்க ஒப்பந்தப்புள்ளிகள் விடுத்தன. இது சராசரியாக 20% கலப்பு இலக்கின் அடிப்படையில் அமைந்தது. நவம்பர் முதல் ஆகஸ்ட் 2024-25 வரை, அடையப்பட்ட உண்மையான கலப்பு விகிதம் 19.12% ஆகும்.


அக்டோபர் 7-ஆம் தேதி முடிவடைந்த டெண்டருக்கு பதிலளிக்கும் விதமாக, வடிகட்டும் தொழிற்சாலைகள் (distilleries) மொத்தம் 1,776.49 கோடி லிட்டர் எத்தனால் வழங்கின. இதில் 1,304.86 கோடி லிட்டர் தானியங்கள் மற்றும் 471.63 கோடி லிட்டர் கரும்பு சார்ந்த மூலங்களிலிருந்து அடங்கும்.


தானிய அடிப்படையிலான மூலங்களில், மக்காச்சோளம் 831.89 கோடி லிட்டர்களுடன் மிகப்பெரிய பங்கை அளித்தது. அதைத் தொடர்ந்து இந்திய உணவுக் கழகத்திலிருந்து (FCI) 396.60 கோடி லிட்டர் உபரி அரிசியை வழங்கியது.


எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (oil marketing companies (OMC)) தேவையான 1,050 கோடி லிட்டர்களை மட்டுமே வாங்கும் என்று தெரிகிறது. இது தானியத்திலிருந்து 650 கோடி லிட்டர்களுக்கும் கரும்பிலிருந்து 400 கோடி லிட்டர்களுக்கும் இடையில் பிரிக்கப்படும்.


கொள்கைக் கண்ணோட்டத்தில், இரண்டு முக்கியப் பிரச்சினைகள் உள்ளன. முதலாவது அதிகப்படியான திறன். இந்தியாவில் தற்போது சுமார் 499 வடிகட்டும் தொழிற்சாலைகள் (distilleries) உள்ளன. அவை ஆண்டுக்கு 1,822 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தித் திறனை உருவாக்க சுமார் 40,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. இருப்பினும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு எத்தனால் பெட்ரோலில் கலக்கப்படலாம் என்பதற்கு வரம்புகள் உள்ளன.


இரண்டாவது பிரச்சினை, நன்கு அறியப்பட்ட "எரிபொருள் எதிராக உணவு மற்றும் தீவனம்" (“fuel versus food and feed”) பற்றிய விவாதம் ஆகும். எத்தனால் கலப்பு திட்டம், சோள தானியங்களுக்கு ஒரு புதிய சந்தையை உருவாக்குவதன் மூலம் மக்காச்சோள உழவர்களுக்கு உதவியுள்ளது, இது பொதுவாக கோழி மற்றும் கால்நடை தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.


ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து சுமார் 380 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய முடியும். எனவே, 2024–25-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 420 கோடி லிட்டர் எத்தனால் 11 மில்லியன் டன்களுக்கு மேல் சோளத்தைப் பயன்படுத்தியிருக்கும். இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 42 மில்லியன் டன் மக்காச்சோளத்தை உற்பத்தி செய்கிறது. ஆனால் பால், முட்டை மற்றும் இறைச்சிக்கான தேவை அதிகரித்து வருவதால் இதற்கும் விலங்கு தீவனமாக மக்காச்சோளம் தேவைப்படுகிறது. எத்தனால் தயாரிப்பதற்கு இதைப் பயன்படுத்துவது நிலைத்தன்மை கவலைகளை எழுப்புகிறது.

அரிசிக்கும் இதே பிரச்சினை பொருந்தும். 2025–26-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட 396.60 கோடி லிட்டர் எத்தனால், இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India (FCI)) கிடங்குகளில் சேமிக்கப்படும் அரிசியின் கூடுதல் இருப்புகளைப் பொறுத்தது. இருப்பினும், இந்த உபரி ஒவ்வொரு ஆண்டும் கிடைக்காமல் போகலாம். சர்க்கரையைப் பொறுத்தவரை, "உணவு vs. எரிபொருள்" (“food vs. fuel”) பிரச்சனை சிறியது. ஏனெனில், உள்நாட்டு சர்க்கரை நுகர்வு அதிகமாக வளரவில்லை. இது உயிரி எரிபொருளை உருவாக்குவதற்கு அதிக கரும்புகளை கிடைக்கச் செய்கிறது.



Original article:

Share: