ஆந்த்ரோபிக்கின் (Anthropic) புதிய Claude 3 ஐ 'மிகவும் புத்திசாலித்தனமான' (‘most intelligent’) செயற்கை நுண்ணறிவு மாதிரி (artificial intelligence (AI)) என்று அழைப்பது ஏன் ? - பிஜின் ஜோஸ்

 ஆந்த்ரோபிக் (Anthropic) ஆனது ChatGPT ஐ வெளியிட்டுள்ள நிறுவனமான OpenAI இன் முன்னாள் உறுப்பினர்களால் நிறுவப்பட்டது. அதன் புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் குடும்பம் மேம்பட்ட செயல்திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது. சில சிறப்பம்சங்களில் GPT-4 போன்றவற்றை முறியடிக்கிறது.  


ஆந்த்ரோபிக் (Anthropic) என்று அழைக்கப்படும் தொடக்க நிலை நிறுவனம் (start-up), சமீபத்தில் Claude 3 என்ற புதிய  செயற்கை நுண்ணறிவு மாதிரியை அறிமுகப்படுத்தியது. மார்ச் 4 திங்கட்கிழமை அன்று அவர்கள் இதை அறிவித்தனர். Claude 3 மிகவும் மேம்பட்டது மற்றும் பல அறிவாற்றல் பணிகளில் சிறப்பாக செயல்படுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர். 


இந்த தொகுப்பில் வெவ்வேறு நிலை திறன் கொண்ட மூன்று செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் உள்ளன. அவை Claude 3ஹைக்கூ (Claude 3 Haiku) , கிளாட் 3 சொனட் (Claude 3 Sonnet) மற்றும் கிளாட் 3 ஓபஸ் (Claude 3 Opus) என்று பெயரிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு, மாதிரியும் கடைசியை விட சக்தி வாய்ந்தது. அவை புத்திசாலித்தனம், வேகம் மற்றும் அவற்றின் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கான செலவு ஆகியவற்றை சமநிலைப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன. 


முன்னாள் OpenAI உறுப்பினர்களால் நிறுவப்பட்ட ஆந்த்ரோபிக் (Anthropic), மேம்படுத்தப்பட்ட  செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை அறிமுகப்படுத்துகிறது. ப்ளூம்பெர்க் டெக்னாலஜி (Bloomberg Technology) நேர்காணலில் ஆந்த்ரோபிக் (Anthropic) இன் தலைவர் மற்றும் இணை இயக்குநருமான டேனிலா அமோடி (Daniela Amodei),  தவறான தகவல்களை உருவாக்கும் சிக்கலைத் தீர்க்க, ஒத்த சாட்போட் (chatbots) உடன்  ஒப்பிடும்போது கேள்விகளுக்கு பதிலளிப்பதில் இந்த மாதிரிகள் இரட்டிப்பு துல்லியம் கொண்டவை என்று குறிப்பிட்டார். பிரச்சினைகளைத் தீர்ப்பதில்  ஆந்த்ரோபிக் (Anthropic) கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். நிறுவனங்கள் தங்கள் வேலையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த முயற்சிக்கும்போது ஏற்படும் சிக்கல்கள் இவை.


கிளாட் 3 (Claude 3) என்றால் என்ன?


Claude 3என்பது ஆந்த்ரோபிக் (Anthropic) உருவாக்கிய பெரிய மொழி மாதிரிகளின் (large language models (LLMs)) தொகுப்பாகும். இந்த சாட்போட்டானது(chatbot), உரை, குரல் செய்திகள் மற்றும் ஆவணங்களுடன் வேலை செய்ய முடியும். தி இந்தியன் எக்ஸ்பிரஸின் மதிப்புரைகளின்படி, சாட்போட் (chatbot) ஒத்த கருவிகளை விட வேகமான மற்றும் பொருத்தமான பதில்களை உருவாக்க முடியும்.


சமீபத்திய வெளியீட்டில், மூன்று மாதிரிகள் உள்ளன: கிளாட் 3 ஓபஸ் (Claude 3 Opus), கிளாட் 3 சொனட் (Claude 3 Sonnet) மற்றும் கிளாட் 3 ஹைக்கூ( Claude 3 Haiku) . கிளாட் 3 ஓபஸ் மிகவும் மேம்பட்டது, சக்திவாய்ந்த செயல்திறனை வழங்குகிறது. கிளாட் 3 சொனட் (Claude 3 Sonnet) நடுவில் உள்ளது. இது, திறன் மற்றும் செலவு ஆகியவற்றின் நல்ல கலவையை வழங்குகிறது. கிளாட் 3 ஹைக்கூ ( Claude 3 Haiku) விரைவான பதில்கள் தேவைப்படும் சூழ்நிலைக்கு ஏற்ப  வடிவமைக்கப்பட்டுள்ளது.


தற்போது, கிளாட் 3 சொனட் (Claude 3 Sonnet)  இலவச Claude.ai சாட்போட்டை (chatbot) இயக்குகிறது. பயனர்கள் ஒரு மின்னஞ்சல் உள்நுழைவு மூலம் அதை அணுகலாம். மறுபுறம், ஓபஸ் ஆந்த்ரோபிக் (Opus Anthropic) வலை அரட்டை இடைமுகம் (web chat) மூலம் கிடைக்கிறது. ஓபஸைப் (Opus) பயன்படுத்த, பயனர்கள் Anthropic இணையதளத்தில் கிளாட் புரோ (Claude Pro) சேவைக்கு குழுசேர வேண்டும். இந்த சந்தா ஒரு மாதத்திற்கு $20 செலவாகும்.


அனைத்து புதிய மாதிரிகளும் 2,00,000-டோக்கன் சாளரத்தை (window), வழங்குகின்றன. இந்த அம்சம் சிறந்த செயல்திறன் மற்றும் துல்லியத்திற்கு வழிவகுக்கும். பயனர்கள் தங்கள் தேடுதல்களுக்கு ஏற்ப கூடுதல் தகவல்களை இது வழங்குகிறது.

     

கிளாட் 3 (Claude 3) எப்படி இருந்தது?


ஆந்த்ரோபிக் (Anthropic) ஆனது Claude 3 என்ற புதிய செயற்கை நுண்ணறிவை வெளியிட்டுள்ளது. இது OpenAI இன் சமீபத்திய செயற்கை நுண்ணறிவு, GPT-4 டர்போவைப் போல மேம்பட்டதாக இருக்கலாம். இந்த ஒப்பீடு ஆந்த்ரோபிக் (Anthropic) பகிர்ந்து கொண்ட திறனளவு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டது. 


இருப்பினும், இந்த திறனளவு மதிப்பெண்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு சிறந்த வெளிச்சத்தில் வெளிப்படுத்த ஆந்த்ரோபிக்கால் (Anthropic) தேர்ந்தெடுக்கப்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


கிளாட் 3 (Claude 3) அறிவாற்றல் பணிகளில் அதன் உயர் செயல்திறனுக்காக அறியப்படுகிறது. இந்த பணிகளில் பகுத்தறிவு, நிபுணத்துவ அறிவு, கணிதம் மற்றும் மொழி சரளம் ஆகியவை அடங்கும். செயற்கை நுண்ணறிவு உண்மையிலேயே "பகுத்தறிவாக"  இருக்க முடியுமா என்பது குறித்து விவாதம் இருந்தாலும், இந்த சொற்கள் பொதுவாக செயற்கை நுண்ணறிவின் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகின்றன.


கிளாட் 3 (Claude 3) இன் ஓபஸ் (Opus) மாதிரி சிக்கலான பணிகளுக்கான புரிதல் மற்றும் சரளத்தில் "மனித நிலைகளுக்கு அருகில்" அடைகிறது என்று ஆந்த்ரோபிக் (Anthropic) கூறுகிறது. இந்த கூற்று குறிப்பிட்ட வரையறைகளில் அதிக மதிப்பெண்களால் ஆதரிக்கப்படுகிறது. ஆனால், ஓபஸுக்கு (Opus) மனிதனைப் போன்ற பொது நுண்ணறிவு  இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


கிளாட் 3 (Claude 3) vs GPT-4


Claude 3 Opus பத்து வெவ்வேறு பொது நுண்ணறிவு வரையறைகளில் GPT-4 ஐ விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்த வரையறைகள் இளங்கலை நிலை அறிவு, பெரும்படியான பல மொழி புரிதல்கள் (Massive Multitask Language Understanding (MMLU), குறியீட்டு முறை (HumanEval), பொது அறிவு (coding) மற்றும் தர பள்ளி கணிதம் (grade school maths (GSM8K) போன்ற பகுதிகளை உள்ளடக்கியது.


இந்த வரையறைகளில், Claude 3 இன் செயல்திறன் அதன் போட்டியாளர்களை விட சற்று சிறப்பாக உள்ளது. உதாரணமாக, ஐந்து எடுத்துக்காட்டுகளுடன் ஐந்து-எறிவு, பெரும்படியான பல மொழி புரிதல்கள் (Massive Multitask Language Understanding) ஒரு சோதனையில், கிளாட் 3 (Claude 3) 86.8% மதிப்பெண்ணைப் பெற்றது, GPT-4 86.4% மதிப்பெண்களைப் பெற்றது.


கிளாட் 3 (Claude 3)  GPT-4 ஐ விட கணிசமாக சிறப்பாக செயல்படும் பகுதிகளும் உள்ளன. பன்மொழி கணிதம் (Multilingual Maths (MGSM)) அளவுகோலில், கிளாட் 3  (Claude 3) 90.7% ஐ பெற்றது. GPT-4 இன் 74.5% ஐ விட மிக அதிகமாக உள்ளது.


இந்த முடிவுகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், அவை பயனர் அனுபவத்தை எவ்வாறு பாதிக்கும் என்று சொல்வது கடினம்.  பெரிய மொழி மாதிரிகளின் (large language models (LLMs)) முடிவுகளுடன் எச்சரிக்கையாக இருக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த முடிவுகள் முக்கியமானவை, ஏனெனில் கிளாட் 3 (Claude 3), GPT-4 ஐ தாண்டியுள்ளது. இருப்பினும், இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே அவற்றின் நடைமுறை பயன்பாட்டு எளிமையை மதிப்பிடுவது சவாலானது.


இந்த வரையறைகளுக்கு அப்பால், கிளாட் 3 (Claude 3) பகுப்பாய்வு, முன்னறிவிப்பு, உள்ளடக்க உருவாக்கம், பன்மொழி உரையாடல்கள் மற்றும் குறியீடு உருவாக்கம் ஆகியவற்றில் மேம்பட்டுள்ளது. ஆந்த்ரோபிக் (Anthropic) தனது மாதிரி குடும்பத்தை பார்வை திறன்களுடன் மேம்படுத்தியுள்ளது. இதன் பொருள் Claude 3 இப்போது GPT-4V ஐப் போன்ற புகைப்படங்கள், விளக்கப்படங்கள் மற்றும் வரைபடங்களைச் செயலாக்க முடியும்.


கிளாடின் 3  (Claude 3) வரம்புகள்


ஆரம்பகால பயனர்கள் கிளாட் 3 (Claude 3) உண்மை கேள்விகளுக்கு பதிலளிப்பது மற்றும்  ஒளிவழி எழுத்துரு அறிதல் (optical character recognition (OCR)) செய்வது போன்ற பணிகளில் திறமையானது என்று தெரிவிக்கின்றனர். ஒளிவழி எழுத்துரு அறிதல் என்பது படங்களிலிருந்து உரையைப் படிக்கும் திறன். ஷேக்ஸ்பியரின் சொனட்டுகளை (Shakespearean sonnets) எழுத முடிந்த வழிமுறைகளை நன்றாகப் பின்பற்றியதற்காகவும் இந்த மாதிரி பாராட்டப்படுகிறது.  


இருப்பினும், கிளாட் 3 (Claude 3) சில நேரங்களில் சிக்கலான பகுத்தறிவு மற்றும் கணித சிக்கல்களுடன் போராடுகிறது. ஒரு குழுவை மற்றொன்றுக்கு ஆதரவாக நடத்துவது போன்ற அதன் பதில்களில் ஒரு சார்பாக காட்டியுள்ளது. 


இதேபோன்ற சிக்கல்கள் இதற்கு முன்பு மற்றசெயற்கை நுண்ணறிவு மாடல்களில் காணப்பட்டன. எடுத்துக்காட்டாக, கூகிளின்செயற்கை நுண்ணறிவு சாட்போட் ஜெமினி (Google’s AI chatbot Gemini) சார்பு மற்றும் வரலாற்று தவறுகளுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டது. அது தவறாக வெள்ளை இன மக்களின் படங்களை உருவாக்க மறுத்தது. அது அந்த நபர்களை நிறமுள்ளவர்களாக சித்தரித்தது.

கிளாட் 3  (Claude 3) இன் ஒரு முக்கிய பாதுகாப்பு அம்சம், அது, தீங்கு விளைவிக்கும் அல்லது சட்டவிரோத உள்ளடக்கத்தை உருவாக்க மறுப்பதாகும்.  இந்த அணுகுமுறை செயற்கை நுண்ணறிவுக்கு தொடர்ச்சியான மதிப்புகளை அமைப்பதை உள்ளடக்கியது. இது, அரசியல் மற்றும் சமூக பொறுப்புள்ள வழிகளில் செயல்படுவதை உறுதி செய்கிறது.


தற்போது, கிளாட் 3 (Claude 3) மிகவும் விலையுயர்ந்த மாதிரியாக உள்ளது. ஆனால், Anthropic விரைவில் மிகவும் மலிவு பதிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஆரம்ப அணுகல் கருத்து, செயல்திறன் வரையறைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சமூகத்தின் நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், Claude 3 பெரிய மொழி மாதிரிகளில் (large language module (LLM)) குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.


பிஜின் ஜோஸ் (Bijin Jose) ஒரு தொழில்நுட்ப பத்திரிகையாளர், தற்போது புது தில்லியில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைனில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.




Original article:

Share:

இலட்சத்தீவில் இந்தியாவின் புதிய கடற்படை தளமான ஐ.என்.எஸ். ஜடாயு (INS Jatayu) ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? - அம்ரிதா நாயக் தத்தா

 மொரீஷியஸின், அகலேகாவில் இந்தியா கட்டிய விமான ஓடுதளம் மற்றும் ஜெட்டி (jetty-நிலத்திலிருந்து தண்ணீருக்குள் செல்லும் ஒரு அமைப்பு) திறக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்திய கடற்படை கப்பல் ஜடாயு (INS Jatayu) ஈடுபடுத்தப்படுகிறது. இது இந்தியப் பெருங்கடலில் கடற்படையின் செயல்பாட்டுத் திறனை விரிவுபடுத்துவதில், இராஜதந்திர ரீதியாக முக்கியமானது. குறிப்பாக சீனாவானது, பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள சூழலில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. 


இந்தியாவா, 1980-களில் இருந்து இலட்சத் தீவுக்கூட்டத்தின் தெற்கே உள்ள மினிகாய் தீவில் ஒரு கடற்படைப் பிரிவை பராமரித்து வருகிறது. இருப்பினும், ஐஎன்எஸ் ஜடாயு முக்கியமாக இலட்சத்தீவில் நாட்டின் இரண்டாவது கடற்படை தளமாக செயல்படும். இந்த தீவுகளில், கடற்படையின் ஆரம்ப தளமான கவரத்தியில் உள்ள ஐஎன்எஸ் த்வீப்ராக்ஷக் (INS Dweeprakshak) 2012 இல் நிறுவப்பட்டது.


பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரீஷியஸின் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இணைந்து,  மேற்கு இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவின் கரையோரத்தில் அமைந்துள்ள மொரிஷியஸ் தீவான அகலேகாவில் இந்தியாவால் கட்டப்பட்ட விமான ஓடுதளம் மற்றும் ஜெட்டியை (jetty-நிலத்திலிருந்து தண்ணீருக்குள் செல்லும் ஒரு அமைப்பு) அவர்கள் திறந்து வைத்தனர்.


இந்திய கடற்படையின் கப்பல்கள், தளங்கள் மற்றும் படைப்பிரிவுகள் "இந்திய கடற்படை கப்பல் (INS)" என்ற முன்னொட்டுடன் பெயரிடப்பட்டுள்ளன.


இலட்சத்தீவு தீவுகள்


இலட்சத்தீவு என்ற வார்த்தை சமஸ்கிருதம் மற்றும் மலையாள மொழிகளில் "ஒரு லட்சம் தீவுகள்" (a hundred thousand islands) என்று பொருள்படும். இது கொச்சியிலிருந்து 220 கிமீ முதல் 440 கிமீ தொலைவில் அமைந்துள்ள 36 தீவுகளின் தொகுப்பாகும். இந்த தீவுகளில் 11 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். இந்த தீவுகளின் மொத்த பரப்பளவு 32 சதுர கி.மீ மட்டுமே ஆகும்.


இலட்சத்தீவு தீவுகள் இந்தியப் பெருங்கடலில் உள்ள பவளத் தீவுகளின் தொகுப்பின் ஒரு பகுதியாகும். இந்த தொகுப்பில் தெற்கே மாலத்தீவுகளை உள்ளடக்கியது மற்றும் பூமத்திய ரேகைக்கு தெற்கே அமைந்துள்ள சாகோஸ் தீவுக்கூட்டம் வரை நீண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளதால் இலட்சத்தீவுகள் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.


மினிகாய் (Minicoy) ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இது, உலகளவில் முதன்மையான கடல்வழிப் பாதைகளான முக்கியமான கடல் வழித் தொடர்புகளை (Sea Lines of Communications (SLOC)) உள்ளடக்கியது. இதில் 8° அளவில் கால்வாய் மினிகோய் மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையேயும் மற்றும் 9° அளவில் கால்வாய் மினிகாய் மற்றும் இலட்சத்தீவுகளின் முக்கிய குழுவிற்கு இடையேயும் ஆகியவை அடங்கும். அவற்றின் இருப்பிடம் காரணமாக, லட்சத்தீவுகள் கடல் மாசுபாட்டால் பாதிக்கப்படலாம்.


ஐஎன்எஸ் ஜடாயு (INS Jatayu) கடற்படை தளம்


கடற்படை படைப்பிரிவான மினிக்காய் தீவு, தற்போது லட்சத்தீவில் உள்ள கடற்படை பொறுப்பு அதிகாரியின் (Naval Officer-in-Charge) கட்டுப்பாட்டில் உள்ளது. இது விரைவில் ஐஎன்எஸ் ஜடாயு (INS Jatayu) என்ற பெயரில் இயக்கப்பட உள்ளது.


ஒரு கடற்படை படைப்பிரிவு நிர்வாக, தளவாடங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை உள்ளடக்கியது. INS ஜடாயு ஒரு கடற்படை தளமாக மேம்படுத்தப்பட்டு, விமானநிலையம், வீடுகள் மற்றும் பணியாளர்கள் போன்ற கூடுதல் உள்கட்டமைப்பை உள்ளடக்கியது. தேவையான சுற்றுச்சூழல் மற்றும் பிற ஒப்புதல்களைப் பெற்ற பிறகு இந்த மாற்றம் நடைபெறும்.


இலட்சத்தீவின் நுட்பமான சூழல், ஒரு ஜெட்டியை (jetty-நிலத்திலிருந்து தண்ணீருக்குள் செல்லும் ஒரு அமைப்பு) உருவாக்குவதை சவாலானதாக மாற்றக்கூடும். இது ஒருபுறம் இருக்க, இராணுவ மற்றும் சிவில் விமானங்கள் இரண்டையும் ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட புதிய விமானநிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


கடற்படை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல்


கடற்படையின் கூற்றுப்படி, தேவையான உள்கட்டமைப்பு மற்றும் வளங்களுடன் ஒரு சுதந்திரமான கடற்படை பிரிவை நிறுவுவது தீவுகளில் அதன் ஒட்டுமொத்த செயல்பாட்டு திறனை அதிகரிக்கும். இந்தத் தளத்தை அமைப்பது தீவுகளின் முழுமையான வளர்ச்சிக்கு, அரசாங்கத்தின் முக்கியத்துவத்துடன் ஒத்துப்போகிறது.


கடற்படை தளம், அதன் செயல்பாட்டு வரம்பை விரிவுபடுத்துகிறது. மேலும், மேற்கு அரபிக்கடலில் கடற்கொள்ளையர் எதிர்ப்பு (anti-piracy) மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு (anti-narcotics) நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் மற்றும் பிராந்தியத்தில் முதன்மை பதிலளிப்பவராக அதன் பங்கை வலுப்படுத்தும் என்று கூறியுள்ளது.


ஐஎன்எஸ் ஜடாயு (INS Jatayu), இந்திய கடற்படையின் ஒரு முக்கிய பகுதியாக மாறுவதன் மூலம், இந்தியாவின் மேற்குப் பகுதியில் கடற்படையின் இருப்பு மற்றும் திறன்களை அதிகரிக்கும். திட்டமிடப்பட்ட விமான தளம் பல்வேறு விமானங்களை ஆதரிக்கும். இதில் P8I கடல்சார் உளவு விமானங்கள் (maritime reconnaissance aircraft) மற்றும் போர் விமானங்களும் (fighter jets) அடங்கும். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதை இந்தியா நோக்கமாகக் கொண்டிருப்பதால், இந்தத் திறன்களின் விரிவாக்கம் கடற்படையின் வரம்பையும் செயல்பாட்டுக் கண்காணிப்பையும் மேம்படுத்தும்.


இந்த முயற்சி இப்போது மிகவும் பொருத்தமானது. மாலத்தீவு உடனான இந்தியாவின் உறவு பதட்டமானது. சீன ஆதரவாளரான அதிபர் முகமது முய்ஸு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இந்த பதற்றம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




Original article:

Share:

மீத்தேன்சாட் (MethaneSAT) : மீத்தேன் வெளியேற்றங்களை அடையாளங்காணும் ஒரு செயற்கைக்கோள் -அலிந்த் சௌஹான்

 புவி வெப்பமடைதலுக்கு கார்பன் டை ஆக்சைடுக்கு அடுத்தபடியாக மீத்தேன் இரண்டாவது பெரிய காரணியாக உள்ளது. வெவ்வேறு இடங்களிலிருந்து எவ்வளவு மீத்தேன் வெளியிடப்படுகிறது, அதை யார் வெளியிடுகிறார்கள், காலப்போக்கில் அந்த உமிழ்வு அதிகரிக்கிறதா, அல்லது குறைகிறதா, என்பதை மீத்தேன்சாட் (MethaneSAT) கண்டுபிடிக்கும்.


உலகளவில் மீத்தேன் உமிழ்வைக் கண்காணிக்கவும் அளவிடவும் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோள் மீத்தேன்சாட்(MethaneSAT), கலிபோர்னியாவிலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் (SpaceX Falcon9 rocket) மூலம் திங்கள்கிழமை மார்ச் 4 விண்ணில் ஏவப்பட்டது.


சலவை இயந்திரத்தின் (washing-machine)  அளவிலான செயற்கைக்கோள் மீத்தேன் உமிழ்வைக் கண்டறிந்து அளவிடும் முதல் விண்கலம் அல்ல என்றாலும், இது கூடுதல் விவரங்களை வழங்கும் மற்றும் அதன் முன்னோடிகளை விட மிகவும் பரந்த பார்வையைக் கொண்டிருக்கும். 


மீத்தேன்சாட் (MethaneSAT) பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது.


முதலில், மீத்தேன் உமிழ்வுகளை நாம் ஏன் கண்காணித்து அளவிட வேண்டும்?


மீத்தேன் ஒரு சக்திவாய்ந்த பசுமை இல்ல  வாயு, இது புவி வெப்பமடைதலை ஏற்படுத்துவதில் கார்பன் டை ஆக்சைடுக்கு அடுத்தபடியாக உள்ளது. தொழில்துறை புரட்சிக்குப் பிறகு புவி வெப்பமடைதலில் சுமார் 30% க்கு இந்த மீத்தேன் வாயு பொறுப்பாகும். ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் படி (United Nations Environment Programme), 20 ஆண்டு காலங்களில் கார்பன் டை ஆக்சைடை விட மீத்தேன் புவி வெப்பமயமாதலில் 80 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.


கூடுதலாக, மீத்தேன் பூமியின் மேற்பரப்புக்கு சற்று மேலே உள்ள தீங்கு விளைவிக்கும் வாயுவான தரை மட்ட ஓசோனை உருவாக்க பங்களிக்கிறது. 2022 ஆம் ஆண்டின் ஒரு அறிக்கை, தரை மட்ட ஓசோனின் வெளிப்பாடு ஆண்டுதோறும் சுமார் ஒரு மில்லியன் அகால மரணங்களுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறது.


எனவே, மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைப்பது முக்கியம். மற்றும் முக்கிய உமிழ்வுகள் புதைபடிவ எரிபொருள் செயல்பாடுகள், இது மனிதனால் ஏற்படும் மீத்தேன் உமிழ்வுகளில் சுமார் 40 சதவீதம் ஆகும். இந்த இலக்கை அடைய உதவுவதே மீத்தேன்சாட் (MethaneSAT) இன் நோக்கம்.


மீத்தேன்சாட் (MethaneSAT) என்றால் என்ன?


சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியம் (Environmental Defense Fund (EDF)), அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற சுற்றுச்சூழல் வாதிடும் குழு, மீத்தேன்சாட்டுக்கு பொறுப்பாகும். அவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (Harvard University), ஸ்மித்சோனியன் வானியற்பியல் ஆய்வுக்கூடம்(Smithsonian Astrophysical Observatory), மற்றும் நியூசிலாந்து விண்வெளி நிறுவனம் (New Zealand Space Agency) ஆகியவற்றுடன் இணைந்து செயற்கைக்கோளை உருவாக்கினர்.


எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் கவனம் செலுத்தும் மீத்தேன்சாட் தினமும் 15 முறை பூமியை சுற்றி வரும். மீத்தேன் எங்கிருந்து வருகிறது, யார் பொறுப்பு, உமிழ்வு அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பன போன்ற ஏராளமான தரவுகளை இது சேகரிக்கும்.


மீத்தேன்சாட் சேகரிக்கும் தரவு நிகழ்நேரத்தில் இலவசமாகக் கிடைக்கும். இது மீத்தேன் உமிழ்வைக் குறைக்க பங்குதாரர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் உடனடியாக செயல்பட உதவும்.


மீத்தேன்சாட்டின் சிறப்பம்சங்கள் என்ன?


மீத்தேன் உமிழ்வைக் கண்காணிப்பது மற்றும் அவற்றை அளவிடுவது வரலாற்று ரீதியாக கடினமாக உள்ளது. சில செயற்கைக்கோள்கள் விரிவான தரவை வழங்குகின்றன, ஆனால் குறிப்பிட்ட தளங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. மற்றவைகள் பெரிய பகுதிகளை உள்ளடக்கியது. ஆனால், பல பிராந்தியங்களில் அதிக உமிழ்விற்க்கு பங்களிக்கும் சிறிய ஆதாரங்களைக் கண்டறிய முடியாது என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியம் தெரிவித்துள்ளது.


இந்த முரண்பாட்டின் காரணமாக, சர்வதேச ஆற்றல் முகமை (IEA) அறிக்கையின்படி, உலகளாவிய மீத்தேன் உமிழ்வு தேசிய அரசாங்கங்களால் அறிவிக்கப்பட்ட அளவை விட 70 சதவீதம் அதிகமாக உள்ளது.


மீத்தேன்சாட் இந்த சிக்கலை தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உயர் தெளிவுத்திறன் கொண்ட அகச்சிவப்பு சென்சார் (high-resolution infrared sensor) மற்றும் ஸ்பெக்ட்ரோமீட்டர் (spectrometer) மூலம், மீத்தேன் செறிவுகளில் உள்ள சிறிய வேறுபாடுகளைக் கூட பில்லியனுக்கு மூன்று பகுதிகள் வரை கண்டறிய முடியும். இது முந்தைய செயற்கைக்கோள்களால் தவறவிடப்பட்ட சிறிய உமிழ்வு மூலங்களைக் கண்டறிய அனுமதிக்கிறது. மீத்தேன்சாட் "சூப்பர் உமிழ்ப்பான்கள்" (super emitters) என்று அழைக்கப்படும் பெரிய உமிழ்ப்பான்களைக் கண்டறிய 200 கிமீ முதல் 200 கிமீ வரை பரந்த பார்வையைக் கொண்டுள்ளது.


சேகரிக்கப்பட்ட தரவுகள் திட்ட பங்காளி (mission partner) நிறூவனமான கூகுள் உருவாக்கிய மேகக்கணினி (cloud-computing) மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்படும்.  மேலும் தரவு கூகுளின் எர்த் எஞ்சின் இயங்குதளம் (Google’s Earth Engine platform) மூலம் பகிரங்கப்படுத்தப்படும் என்று தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.


மீத்தேன்சாட்டால்  சேகரிக்கப்பட்ட தரவு மேகக் கணினி (cloud computing) மற்றும் செயற்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்படும், இதை திட்டத்தின் ஒரு பங்குதாரரான கூகுள் வழங்கும். தி நியூயார்க் டைம்ஸின் (New York Times) அறிக்கையின்படி, கூகிளின் எர்த் எஞ்சின் தளத்தின் (Google's Earth Engine platform) மூலம் தகவல் பொதுமக்களுக்கு அணுகப்படும்.





இது ஏன் முக்கியமானது?


மீத்தேன் தொடர்பான விதிகளை உலகம் கடுமையாக்கியுள்ள நிலையில், மீத்தேன்சாட் விண்ணில் ஏவப்படுகிறது. 150 க்கும் மேற்பட்ட நாடுகள் 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய மீத்தேன் உறுதிமொழியில் கையெழுத்திட்டன, இது 2030 க்குள் 2020 நிலைகளில் இருந்து அவற்றின் ஒருங்கிணைந்த மீத்தேன் உமிழ்வை குறைந்தது 30%ஆக குறைக்கும் நோக்கில் உள்ளது. கடந்த ஆண்டு COPஇல், 50 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீத்தேன் உமிழ்வு மற்றும் வழக்கமான எரிப்பு தன்மையை கிட்டத்தட்ட அகற்றுவதாக உறுதியளித்தன. இந்த இலக்குகளை அடைய மீத்தேன்சாட் (MethaneSAT) அவர்களுக்கு உதவும்.


இந்த செயற்கைக்கோள் வெளிப்படைத் தன்மையின் புதிய சகாப்தத்தையும் கொண்டு வரும். உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் அதன் தரவு, அரசாங்கங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அளித்த மீத்தேன் குறைப்பு வாக்குறுதிகளைக் கண்காணிக்கும்.


இருப்பினும், மாசுபடுத்துபவர்களை அவற்றின் உமிழ்வைக் கட்டுப்படுத்த தரவு கட்டாயப்படுத்தும் என்று அர்த்தமல்ல. மீத்தேன்சாட் (MethaneSAT) உடன் தொடர்பில்லாத டியூக் பல்கலைக்கழகத்தின் (Duke University) பூவி அறிவியல் பேராசிரியர் (earth-science professor) ட்ரூ ஷிண்டெல் (Drew Shindell) தி நியூயார்க் டைம்ஸிடம் "இந்த தகவல் நடத்தையின் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்று கூறினார்.




Original article:

Share:

சட்டம் மற்றும் ஒழுங்கின்மை

 மணிப்பூரி சமூகத்தில் தீவிரமயமாக்கலின் அதிகரிப்பு கவலையளிக்கிறது.


மக்களாட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு மட்டுமே சட்டம் மற்றும் ஒழுங்கிற்கான அமைப்பை பயன்படுத்த உரிமை உண்டு. அரசு சாரா குழுக்கள் தண்டிக்கப்படாமல், சட்டம் மற்றும் ஒழுங்கிற்கான அமைப்பை பயன்படுத்தும்போது, அது சட்டம் ஒழுங்கு குறித்த கவலைகளை எழுப்புகிறது. மணிப்பூரில், மெய்தேயி சமூகத்தினருக்கு (Meitei chauvinist) ஆதரவளிக்கும் அரம்பாய் தெங்கோல் (Arambai Tenggol) என்ற குழு, ஒரு போலீஸ் அதிகாரியைக் கடத்தியது. அவரை தாக்கி அவரது வீட்டையும் சேதப்படுத்தினர். அந்த குழு மீது நடவடிக்கை எடுக்க முடியாததால் போலீசார் அதிருப்தி அடைந்தனர். இந்த குழு கடந்த மே மாதம் இன மோதல்களின் போது காவல் நிலையங்களில் இருந்து  ஆயுதங்களை திருடியது. அரசாங்கம் ஆயுதங்களை திரும்ப ஒப்படைக்க கூறியும் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை. 


இப்பகுதியில் உள்ள போலீஸ் படையில் குக்கி-சோ (Kuki-Zo) சிறுபான்மை குழுவைச் சேர்ந்த காவலர்கள் அதிகம் இல்லை. ஆயினும்கூட, அரும்பை தெங்கோல் (Arambai Tenggol)  ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராகச் செயல்பட்டது மற்றும் சமீப காலங்களில் எதிர்க்கட்சித் தலைவரைத் தாக்கியது. எவ்வாறாயினும், ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மீதான தாக்குதல்கள் மற்றும் பள்ளத்தாக்கு சட்டமன்ற உறுப்பினர்களை அதன் காரணத்தை ஆதரிக்க கட்டாயப்படுத்துவது உட்பட அரம்பை தெங்கோலின் நடவடிக்கைகள், மாநில அரசாங்கம் அத்தகைய நடவடிக்கைகளை அங்கீகரிக்கிறது அல்லது புறக்கணிக்கிறது என்பதைக் குறிக்கிறது. பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள இனப் பதட்டங்கள், அரம்பை தெங்கோல் போன்ற குழுக்களை பிரபலமாக்கி, சட்ட அமலாக்கத்தை சவாலாக ஆக்கியுள்ளன.


இந்திய அரசாங்கமும், பாரதிய ஜனதா கட்சியும் இப்போது  உருவாகியுள்ள கடுமையான இனப் பிளவுகள் மற்றும் அமைதி மற்றும் ஒழுங்கிற்கான அச்சுறுத்தலை கருத்தில் கொள்ள வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் பற்றிய பிரச்சினைகளுக்கு அப்பால், பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதிகள் இரண்டிலும் சட்டத்திற்கு வெளியே உள்ள குழுக்களின் செல்வாக்கு, சட்டம் மற்றும் ஒழுங்கிற்கான அமைப்பைப் பயன்படுத்துவதற்கான அரசாங்கத்தின் பிரத்தியேக உரிமைக்கான ஒரு சவாலைக் காட்டுகிறது. இது பரவலான தீவிரவாத கருத்துக்கள் மணிப்பூரில், குறிப்பாக பள்ளத்தாக்கில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகக் குரல்களை இந்த குழுக்களின் கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக பேச அனுமதிக்கின்றன.

 

முதலமைச்சர் என்.பிரேன் சிங், ஆரம்பாய் தெங்கோலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், மணிப்பூரில் தீவிரமயமாக்கல் தொடர்ந்து வளரும். இது ஜனநாயகத்திற்க்கு எதிரானதாகும். இருப்பினும், சிங் ஒரு நடுநிலை முதல்வராக இருப்பதை விட பெரும்பான்மை குழுவிற்கு ஆதரவாக செயல்படுவதால், பாஜக தலைமை மணிப்பூரில் தங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்வது முக்கியம்.




Original article:

Share:

இலஞ்சத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்தல்

 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு முடிவுகளை எடுப்பதில்லை என்பது பற்றி வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


25 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு பலரை வருத்தமடையச் செய்துள்ளது. நன்கு அறியப்பட்ட ஜே.எம்.எம் லஞ்ச வழக்கில் (JMM bribery case) 'லஞ்சம் கொடுப்பவர்கள்' (bribe-givers) மற்றும் 'லஞ்சம் வாங்குபவர்கள்' (bribe-takers) இடையே அது உருவாக்கிய வேறுபாடு அதிருப்தியை ஏற்படுத்தியது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பி.வி.நரசிம்மராவ் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெரும் தொகையை வழங்கியவர்கள் மீது, ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் மீது வழக்குத் தொடர அனுமதித்தது. எவ்வாறாயினும், பணத்தை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கோ அல்லது வாக்களிப்பதற்கோ சட்டப்படி தண்டிக்க முடியாது என்று இந்த விதி கூறியது. லஞ்சம் வாங்கியவர்களில் ஒருவரான அஜித் சிங்கிற்கு மட்டும் விதிவிலக்கு இருந்தது. லஞ்ச ஒப்பந்தத்தின்படி (bribery agreement) அஜித் சிங், வாக்களிக்காமல் இருந்ததால் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதனால், உண்மையில் வாக்களித்தவர்களுக்கு இருந்த பாதுகாப்பு பறிக்கப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. நாடாளுமன்ற அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்ச குற்றச்சாட்டுகளில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு (Constitution Bench) இந்த முடிவை எடுத்துள்ளது. பி.வி. நரசிம்மராவ் vs மாநில (சிபிஐ / எஸ்பிஇ) (P.V. Narasimha Rao vs State (CBI/SPE)) 1998 வழக்கில் முந்தைய தீர்ப்பை அவர்கள் ரத்து செய்தனர். நாடாளுமன்றத்தின் செயல்பாட்டிற்கு நேர்மை முக்கியம் என்று இந்த அமர்வு வலியுறுத்தியுள்ளது.


அரசியலமைப்பின் 105 மற்றும் 194 வது பிரிவுகளின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமைகள் அவர்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் அவையில் சுதந்திரமாக செயல்படுவதைப் பாதுகாப்பதற்கானது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த உரிமைகளுக்குள் லஞ்சத்தை உள்ளடக்காது. ஏனெனில், வாக்குகளின் அடிப்படையில் இந்த முடிவுகளை எடுப்பதற்கு இது அவசியமில்லை. 1998 ஆம் ஆண்டில், அரசியலமைப்பு அமர்வானது, உறுப்பினர்கள் தங்கள் உரைகள் அல்லது வாக்குகளுக்காக நியாயமற்ற முறையில் ஒதுக்கப்படுவதிலிருந்து பாதுகாக்க இந்த உரிமைகள் முக்கியம் என்று கூறிகிறது. இந்த உரிமைகளைக் கட்டுப்படுத்துவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பெரும்பான்மையானவர்கள் கவலைப்பட்டனர். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் வாங்குவது குறித்த பொதுமக்களின் கோபம் அரசியலமைப்பின் குறுகிய விளக்கத்திற்கு வழிவகுக்கக்கூடாது என்றும் அவர்கள் நினைத்துள்ளனர். பாராளுமன்ற சிறப்புரிமைக்கு வரம்புகளை வைப்பது குறிப்பிடத்தக்க பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று பெரும்பான்மையினர் கவலை தெரிவித்தனர். எவ்வாறாயினும், லஞ்சத்திற்காக ஒரு உறுப்பினர் மீது வழக்குத் தொடர நீதிமன்றத்தை அனுமதிப்பது, துஷ்பிரயோகத்தின் அபாயத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியாது என்று ஏழு பேர் கொண்ட புதிய அரசியல் சாசன அமர்வு (Constitution Bench) முடிவு செய்துள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிப்பது ஒரு சட்டமன்ற உறுப்பினரின் கடமைகளின் முக்கிய பகுதியாகும் என்றும் முடிவு செய்துள்ளனர். எனவே, இது ஒரு அரசியலமைப்பின் சிறப்பு உரிமையாக பிரிவு 194 இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது. சட்ட நடவடிக்கைக்கு பயப்படாமல் உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்களிக்க இந்த பாதுகாப்பு முக்கியமானது. ஒட்டுமொத்தமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பணத்தால் பாதிக்கப்படக்கூடாது என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுடன் இந்த முடிவு ஒத்துப்போகிறது.




Original article:

Share:

பசுமை வேலைகளில் பாலின சமத்துவமின்மை -அனன்யா சக்ரபோர்த்தி,பாவனா அஹுஜா,அறிவுடை நம்பி அப்பாதுரை

 பசுமை வேலைகளில் (green jobs) பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது, குறைந்த கார்பன் (low-carbon) மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நீடித்த நிலையான பொருளாதாரத்தை (sustainable economy) அதிகரிப்பது போன்ற நன்மைகளுக்கு வழிவகுக்கும்.


சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சியை நோக்கி இந்தியா மாறினால், 2047 ஆம் ஆண்டில். இந்தியா, சுமார் 35 மில்லியன் பசுமை வேலைகளை உருவாக்க முடியும். பசுமை வேலைகள், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, அல்லது மீட்டெடுக்க உதவும் நல்ல வேலைகள் என விளக்கப்படுகிறது. அது, உற்பத்தி, கட்டுமானம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் திறன், மற்றும் ஆட்டோமொபைல்கள் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. இந்த துறைகளில், பெண்கள் வரலாற்று ரீதியாக குறைவாகவே பிரதிநிதித்துவப் படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


உலகளவில், பெண்களை விட ஆண்கள் பசுமை வேலைகளுக்கு வேகமாக மாற வாய்ப்புள்ளது. 2015 முதல் 2021 வரை இந்தியா தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை (renewable energy) 250% அதிகரித்த போதிலும், சூரிய கூரை திட்டங்களில் (solar rooftop sector) 11% மட்டுமே பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 2019-20ஆம் ஆண்டுத் தொழில்கள் கணக்கெடுப்பு (Annual Survey of Industries), பெண் தொழிலாளர்கள் பெரும்பாலும் ஆடை, ஜவுளி, தோல், உணவு மற்றும் புகையிலை போன்ற தொழில்களில் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிடுகிறது. இதற்கு நேர்மாறாக, இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் 2019 அறிக்கை (Confederation of Indian Industry (CII) 2019 report), உள்கட்டமைப்பு, போக்குவரத்து, கட்டுமானம், மற்றும் உற்பத்தி. போன்ற துறைகளில் 85% பணியாளர்கள் ஆண்கள் என்பதைக் காட்டுகிறது.


இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பசுமை தொழில்நுட்பம்


பசுமை வேலைகளுக்கான திறன் கவுன்சில் (Skill Council for Green Jobs), 2023 ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வில், பசுமைத் திறன்களுக்கான பயிற்சியில் 85% ஆண்களுக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. அதே நேரத்தில், 90% க்கும் அதிகமான பெண்கள் சமூக விதிமுறைகள் காரணமாக அத்தகைய பயிற்சியிலிருந்து பின்வாங்கியதாக உணர்ந்தனர். இந்த விதிமுறைகளில், தொழில்நுட்ப வேலைகள், பாதுகாப்பு கவலைகள், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் பெண்களின் குறைந்த பிரதிநிதித்துவம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடுகள் போன்ற காரணிகள் அடங்கும்.


சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை நோக்கி இந்தியா நகர்ந்து வரும் நிலையில், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதும், சுற்றுச்சூழல் முயற்சிகளில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதும் மிகவும் முக்கியமானதாகும். பசுமை வேலைகளில் அதிகமான பெண்கள் இருப்பது பல நன்மைகளைத் தருகிறது. இது முக்கியமானது, ஏனெனில் குறைந்த கார்பன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருளாதாரத்திற்கு கூடுதல் நன்மைகளை கொண்டு வர முடியும். குறுகிய காலத்தில், இந்தியாவின் வேலை சந்தையில் பாலின சார்புகளை சரிசெய்யவும், பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது உதவும். காலப்போக்கில், இந்த முயற்சி பெண்களுக்கு பொருளாதார, தொழில்நுட்ப, மற்றும் சமூக வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் சிறந்த அதிகாரம், மற்றும் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும்.


தரவுகளில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்தல்


போதுமான தரவு இல்லாததால் இந்தியாவில் பசுமை வேலைகளில் பெண்களின் பங்களிப்பை புரிந்துகொள்வது குறைவாகவே உள்ளது. பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த, பசுமை வளர்ச்சிக்கான பகுதிகளை அடையாளம் காண வேண்டும் மற்றும் இந்த வேலைகளில் பெண்களின் ஈடுபாடு குறித்த தரவுகளையும் சேகரிக்க வேண்டும். குறைந்த கார்பன் மாற்றங்கள், பெண் தொழிலாளர்கள், மற்றும் தொழில்முனைவோரை எவ்வாறு பாதிக்கின்றன. என்பதைப் அறிந்து கொள்வது முக்கியம், குறைந்த கார்பன் முறைகளுக்கான நகர்வு வேலை செய்யும், மற்றும் வணிகங்களை நடத்தும் பெண்களை, எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய தகவல்களை நாம் சேகரிக்க வேண்டும். பல்வேறு தொழில்கள் மற்றும் இடங்களில் பெண்கள் செய்யும் வேலைகளை, வெளிப்படையாகத் தெரியாமல் கூட பார்க்க வேண்டும் என்பதே இதன் பொருள். மேலும் பாலின பகுப்பாய்வை நடத்துதல், தொழிலாளர் ஆய்வுகள் (periodic labour force surveys) மூலம் பாலினம் சார்ந்த தரவை சேகரித்தல் மற்றும் பசுமை மாற்றத்தில் பெண்களுக்கு ஆதரவளிக்க அதிக வளங்களை ஒதுக்குதல் ஆகியவை இதை நிவர்த்தி செய்வதற்கான வழிகளாகும்.


உலகளவில், காலநிலை மற்றும் நிலைத்தன்மை இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளில் இருந்து பெண்கள் பெரும்பாலும் வெளியேறுகிறார்கள். குறிப்பாக, குறைந்த கார்பன் பொருளாதாரத்திற்கு மாறுவதில். புதிய வாய்ப்புகள் உருவாகும் அதே வேளையில், வேலை, இடப்பெயர்வு, மற்றும் மாற்றமும் உள்ளது. COP 28 இல், மாற்றம் திட்டமிடலில் நேர்மை மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றிற்காக ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  'பாலினம்-பொறுப்புக்கூறக்கூடிய மாற்றங்கள் மற்றும் காலநிலை நடவடிக்கைக்கான கூட்டாண்மை' ('Gender-Responsive Just Transitions and Climate Action Partnership') தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு, தரவை மேம்படுத்துதல், இலக்கு நிதி வழங்குதல் மற்றும் அனைவருக்கும் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.


பசுமை வேலைகளில் பெண்களுக்கு சம வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்ய, தற்போதைய நிலைமையை நாம் மதிப்பாய்வு செய்ய வேண்டும். பெண்களின் நிலைகளை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் வேலைவாய்ப்புக்கான தடைகளை நீக்க வேண்டும், மற்றும் அவர்களின் பங்கேற்புக்கு ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும்.


இந்தியாவில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளின் பட்டதாரிகளில் 42.7% பெண்கள் என்றாலும், பசுமை மாற்றத்திற்கு அவசியமான பொறியியல், உற்பத்தி மற்றும் கட்டுமானம் போன்ற முக்கிய துறைகளில் அவர்கள் 30.8% மட்டுமே உள்ளனர். இந்த இடைவெளியை குறைக்க, பசுமை வேலைகள் தொடர்பான துறைகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க ஆரம்பகால நடைமுறைகளான கற்றல், வழிகாட்டுதல், உதவித்தொகை, நிதி உதவி, மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மிக முக்கியம்.


பெண் தொழில்முனைவோரை ஆதரித்தல்


பெண் தொழில்முனைவோர் பசுமை சந்தையில் சேர உதவுவதற்கு, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப நிதிக் கொள்கைகள் மற்றும் தயாரிப்புகள் நமக்குத் தேவை. பினையம் தேவைப்படாமல் கடன்களை வழங்குதல், நிதிக் கல்வியை வழங்குதல் மற்றும் உதவும் அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். கடன் தகுதியை மதிப்பிடுவதற்கும், கடன்களை வழங்குவதற்கும், பெண்களுக்குச் சொந்தமான வணிகங்களுக்கான செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பதற்கும் பொருத்தமான நிலைகளை உருவாக்கப்பட வேண்டும்.


இறுதியாக, தலைமைப் பொறுப்புகளுக்கு அதிகமான பெண்களைக் ஊக்குவித்தல், குறைந்த கார்பன் மேம்பாட்டு உத்திகளில் பாலின-குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்ய உதவும் மற்றும் பெண்களை பசுமை வேலைகளில் சேர ஊக்குவிக்கு ம்.  


பாலினம் சார்ந்த மாற்றமானது வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, கவனிப்புப் பணியின் சுமையைக் குறைத்தல், மற்றும் திறன் மேம்பாட்டை செயல்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல்முனை உத்தியைக் கோருகிறது. பெண் தொழில்முனைவோர், மற்றும் தொழிலாளர்களுக்கு புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் நிதியின் பலன்களைப் பெறுவதற்கு, அரசு, தனியார் துறை, மற்றும் பிற பங்குதாரர்கள் இடையேயான கூட்டாண்மை அவசியம்.


வணிகங்கள் பாலின நீதியின் மையத்தன்மையை அங்கீகரிக்க வேண்டும் மற்றும் ஒரே மாதிரியான அல்லது பாலின சார்பு காரணமாக இருக்கும் தடைகளைத் தணிப்பதன் மூலம் மற்றும் அனைவருக்கும் பயனளிக்கும் நியாயமான மாற்றத்திற்கான சமமான வேலை வாய்ப்புகளை வளர்ப்பதன் மூலம் பசுமை மாற்றத்தின் செயல்முறை முழுவதும் சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள் திறன்களைப் பெறுவதற்கும், மாறிவரும் வேலைச் சந்தைக்கு ஏற்றவாறு அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இதுவே நேரம். அனைவரும் சேர்ந்து, அனைவருக்கும் சம வாய்ப்புகள் மற்றும் உள்ளடக்கம் உள்ள எதிர்காலத்தை உருவாக்க முடியும்.


அனன்யா சக்ரவர்த்தி, பாவ்னா அஹுஜா மற்றும் அறிவுடை நம்பி அப்பாதுரை ஆகியோர்World Resources Institute, India இல் பணிபுரிகிறார்கள். 




Original article:

Share:

இரண்டில் ஒரு பயணிகளின் பயணப்பொருட்களை சேதப்படுத்தும் விமான நிறுவனங்கள் : ஆய்வில் தகவல் -தி இந்து தரவுக் குழு

 இழந்த மற்றும் சேதமடைந்த பயணப்பொருட்களின் (luggage) எண்ணிக்கை காலப்போக்கில் அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளரை கையாளுதலில்  முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.   


உள்ளூர் வட்டாரங்களின் கணக்கெடுப்பின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் இரண்டு பயணிகளில் ஒருவருக்கு, ஒரு முறையாவது  பயணப்பொருட்கள் (luggage) சேதமடைந்துள்ளன. அதே காலக்கட்டத்தில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஐந்து பயணிகளில் இருவருக்கு, ஒருமுறையாவது, ஒரு விமான நிறுவனத்திடமிருந்து தங்கள் லக்கேஜ்களில் தாமதம் அல்லது இழப்புகளை சந்தித்துள்ளனர். கூடுதலாக, நான்கு விமானப் பயணிகளில் ஒருவருக்கு, ஒரு விமான நிறுவனத்தால் (இழந்த, தாமதமான அல்லது சேதமடைந்த) பயணத்தின் போது அவர்களின் பயணப்பொருட்கள் (luggage) பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் புகார் அளிக்கும் போது, வாடிக்கையாளர் சேவை (customer service) மற்றும் விமான சேவையின் பதிலளிக்கும் தன்மை (responsiveness of the airline) மோசமாக அல்லது பரிதாபமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.


2024 ஆம் ஆண்டில் உள்ளூர் வட்டாரங்களின் தள ஆய்வின் மூலம் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, இந்தியாவின் 303 மாவட்டங்களில் 41,000 க்கும் மேற்பட்ட விமான பயணிகளிடமிருந்து இதற்கான பதில்களைப் பெற்றது. அவர்களில் 67% ஆண்கள் மற்றும் 33% பெண்களாக இருந்தனர். கணக்கெடுப்பில் பங்கேற்பாளர்கள், பல்வேறு புவியியல் பகுதிகளில் பரவியுள்ளனர். அவர்களில் 41% பேர் அடுக்கு-1 பகுதிகளிலிருந்தும், 30% பேர் அடுக்கு-2 பகுதிகளிலிருந்தும், 29% பேர் அடுக்கு-3, கிராமப்புற பகுதிகளிலிருந்து அடுக்கு-4 ல் உள்ளன. இந்த கணக்கெடுப்பில் பங்கேற்க, தனிநபர்கள் உள்ளூர் வட்டாரங்களில் பதிவுசெய்யப்பட்ட குடிமக்களாக இருந்தனர்.


சமீபத்தில், பயணிகளிடமிருந்து தொடர்ச்சியான புகார்களைத் தொடர்ந்து, ஒழுங்குமுறைகளை மேற்பார்வையிடும் சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம் (Bureau of Civil Aviation Security), ஏழு முன்னணி இந்திய விமான நிறுவனங்களுக்கு தங்கள் ஊழியர்களை அதிகரிக்க அறிவுறுத்தல்களை வழங்கியது. இந்த உத்தரவு பிப்ரவரி 26 காலக்கெடுவுக்கு முன்னர் விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாளும் செயல்முறையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இணங்கத் தவறினால் மேலும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று அது எச்சரித்துள்ளது.


    விளக்கப்படம் 1 இல்,  கடந்த இரண்டு ஆண்டுகளில் (2022-2024) பயணிகளின் தாமதமான அல்லது இழந்த பயணப்பொருட்களைப் (luggage) பற்றி இந்த விளக்கப்படுகிறது. இதில், பதிலளித்தவர்களில், 18% பேர் இதை ஒன்றுக்கு மேற்பட்ட முறை தங்களின் பயணப்பொருட்களில் சேதத்தை அனுபவித்ததாகவும், மேலும், 24% பேர் அதை ஒரு முறை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர். மொத்தத்தில், 42% பேர் இந்த பிரச்சனைகளை ஒரு முறையாவது அனுபவித்துள்ளதாகவும், அதில், 56% பேர் மட்டுமே தங்கள் பயணப்பொருட்களை (luggage) சரியான நேரத்தில் பெற்றதாகக் கூறியுள்ளனர்.


   2020 முதல் 2022 வரையிலான ஆண்டுகளை உள்ளடக்கிய 2022 கணக்கெடுப்பில், இதே கேள்வியை விளக்கப்படம் 2-ல் ஒப்பீட்டைக் காட்டுகிறது. 2022 ஆம் ஆண்டில், 11% பேர் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட முறை இழந்த/தாமதமான லக்கேஜ்களை அனுபவித்ததாகவும், அதே நேரத்தில் 14% பேர் மட்டுமே ஒரு முறை அவ்வாறு எதிர்கொண்டதாகவும் கூறியுள்ளனர். மேலும், அவர்களில் 75% பேர் எப்போதும் சரியான நேரத்தில் அதைப் பெற்றுள்ளனர். எனவே, விமான நிறுவனங்களால் பயணப்பொருட்களை (luggage) இழந்த அல்லது தாமதப்படுத்திய பயணிகளின் பங்கு கடுமையாக அதிகரித்துள்ளது. இருப்பினும், 2022 கணக்கெடுப்பு கோவிட் -19 தொற்றுநோய்களின் போது விமான நிறுவனங்கள் சிறிது நேரம் செயல்படாத போது நடத்தப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


       விளக்கப்படம் 3, கடந்த இரண்டு ஆண்டுகளில் (2022-2024) பயணிகள் சேதமடைந்த லக்கேஜ்களை அனுபவித்த நேரங்களைக் காட்டுகிறது. அதில் பதிலளித்தவர்களில், 26% பேர் சேதமடைந்த லக்கேஜ்களை ஒன்றுக்கு மேற்பட்டவையாகவும், 24% பேர் ஒரு முறையாகவும் சேதமடைந்ததாகவும் கூறியுள்ளனர். ஒட்டு மொத்தமாக, 50% பேர் இந்த லக்கேஜ்களின் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மேலும், 48% பேர் மட்டுமே தங்கள் சாமான்கள் ஒருபோதும் சேதமடையவில்லை என்று கூறினர்.


    2022 ஆம் ஆண்டில் இந்த ஆய்வு நடத்திய கணக்கெடுப்பிலும் இதே கேள்வி கேட்கப்பட்டதுடன், இதற்கான விளக்கப்படம் 4 ஒப்பீட்டைக் காட்டுகிறது. 2022 ஆம் ஆண்டில், 35% பேர் மட்டும் ஒரு முறையாவது பயணப்பொருட்கள் (luggage) சேதமடைந்துள்ளதாக கூறியுள்ளனர். அதே நேரத்தில் 65% பேர் தங்கள் பயணப்பொருட்கள் (luggage) ஒருபோதும் சேதமடையவில்லை என்றும் கூறியுள்ளனர். எனவே, விமான நிறுவனங்கள் பயணப்பொருட்களை (luggage) சேதப்படுத்தியதால் விமான் பயணிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.


2024இல் தாமதங்கள், இழப்புகள் அல்லது சேதங்கள் போன்ற சிக்கல்களை எதிர்கொண்ட விமானப் பயணிகளின் கருத்துக்களை விளக்கப்படம் 5 காட்டுகிறது. 10% பேர் மட்டுமே விமான நிறுவனங்களின் பதிலளிக்கும் தன்மையை சிறப்பாக மதிப்பிட்டுள்ளனர். இதில், 27 சதவீதம் பேர் நன்றாக இருப்பதாகவும், 31 சதவீதம் பேர் சராசரியாகவும், 12 சதவீதம் பேர் மோசமானது என்றும் கூறியுள்ளனர்.


2022 இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பிலும் இதே கேள்வியானது, விளக்கப்படம் 6 இன் ஒப்பீட்டுக் காட்டுகிறது. 2022 ஆம் ஆண்டில், 50% பேர் விமான நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவையை மோசமானதாக அல்லது பரிதாபகரமானதாக மதிப்பிட்டனர். எனவே, கடந்த இரண்டு ஆண்டுகளில் வாடிக்கையாளர் சேவை கணிசமாக மேம்பட்டுள்ளது. 


எனவே, விமான நிறுவனங்களால் பயணப்பொருட்கள் (luggage) தொலைந்த அல்லது சேதமடைந்த அல்லது தாமதமான பயணிகளின் பங்கு அதிகரித்தாலும், நெருக்கடிக்கான பதில் பல ஆண்டுகளாக மேம்பட்டுள்ளது. 




Original article:

Share:

குடும்பங்களின் நுகர்வின் இயக்கவியல் - ஹர்ஷ்வர்தன் சிங் கர்வால், சுபாஷ் சந்திர மாலிக்

 2022-23 குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) பாரம்பரியம் மற்றும் புதுமைகளை ஒருங்கிணைக்கும் ஒரு வலுவான புள்ளிவிவர அமைப்பிற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.


புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (National Sample Survey Office (NSSO)) சமீபத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) சுருக்க அறிக்கையை (fact sheet) வெளியிட்டது. 2011-12 இல் வீட்டு நுகர்வு செலவுகள் குறித்த கடைசி முடிவுகள் வெளியிடப்பட்டதால், கணக்கெடுப்பின் முடிவுகள் இப்போது தேவைப்படுகின்றன.


கணக்கெடுப்பு என்ன செய்கிறது


குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) இந்திய குடும்பங்கள் ஒரு காலகட்டத்தில் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு எவ்வாறு பணத்தை செலவிட்டன என்பதை சுட்டி காட்டுகிறது. இது வீடுகள் மற்றும் அவற்றின் குணாதிசயங்கள் பற்றிய கூடுதல் விவரங்களையும் சேகரிக்கிறது. இந்தத் தரவு நுகர்வோர் விலை குறியீடுகளுக்கான விளக்கப்படத்தை உருவாக்க உதவுகிறது. இது கடைகளில் விலைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதைக் கண்காணிக்கிறது. குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) பிற பொருட்களுடன் ஒப்பிடும்போது, குடும்பங்கள் எவ்வளவு செலவழிக்கிறார்கள் என்பதன் அடிப்படையில், வெவ்வேறு பொருட்கள் மற்றும் சேவைகள் எவ்வளவு முக்கியம் என்பதை சுட்டி  காட்டுகிறது.


இது 1950-51 தொடங்கப்பட்டதிலிருந்து, குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமானது. இது செலவழிக்கும் பழக்கத்தைக் காட்டுவது மட்டுமல்லாமல், எத்தனை பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள் என்பதைக் கண்டறியவும் உதவுகிறது. கூடுதலாக, பொருளாதாரம் மற்றும் சமூகவியல் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார நிலைமை பற்றிய நமது புரிதலை மேம்படுத்துகிறது.


குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) 2020-21 இல் நடத்த திட்டமிடப்பட்டது. COVID-19 காரணமாக குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பு தாமதமானது. இது,  இறுதியாக ஆகஸ்ட் 2022 இல் தொடங்கி ஜூலை 2023 வரை நீடித்தது. இது, துன்பங்களை எதிர்கொள்வதில் பின்னடைவு மற்றும் மாற்றியமைக்கும் தன்மையைக் குறிக்கிறது. 2023-24 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பின் மற்றொரு பகுதி, முதல் கணக்கெடுப்பு முடிந்த பிறகு தொடங்கியது. சவால்களின் போது கூட இந்திய குடும்பங்கள் பணத்தை எவ்வாறு செலவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கான உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.


குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பு பற்றி  


குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) 2022-23 இல், ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு, பாரம்பரிய காகித அடிப்படையிலான நேர்காணல்களிலிருந்து நவீன கணினி-உதவியுடன் கூடிய  தனிப்பட்ட நேர்காணல்களுக்கு மாறியது. தொடுதிரை கணினி பயன்படுத்தி தரவு உள்ளீட்டிற்கு மாறியது. பின்னர், இந்த மாற்றம் தரவு சேகரிப்பு மற்றும் செயலாக்கத்தை வேகப்படுத்தியது. மேலும், இது புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய மாதிரி ஆய்வு அலுவலக (National Sample Survey Office (NSSO)) பிரிவுகளில் மிகவும் திறமையான ஆய்வு செயல்முறையை அறிமுகப்படுத்தியது.


இந்தியாவில் நவீன நுகர்வு பழக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 2,61,746 குடும்பங்களின் பெரிய மாதிரியை இந்த ஆய்வு உள்ளடக்கியது. பன்னீர், எல்இடி பல்புகள் மற்றும் ஹெட்ஃபோன்கள் போன்ற புதிய பொருட்களுடன் கேள்வித்தாள் புதுப்பிக்கப்பட்டது. அதே நேரத்தில் பழைய பொருட்கள் அகற்றப்பட்டன. தரவு சேகரிப்பை மிகவும் திறமையாகவும் துல்லியமாகவும் செய்ய, கணக்கெடுப்பு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, காலாண்டில் ஒரு மாதத்திற்கு மூன்று முறை வீடுகளுக்குச் சென்றது. மக்கள் எதற்காக பணத்தை செலவிடுகிறார்கள் என்பது குறித்த விரிவான மற்றும் விரிவான தகவல்களை சேகரிக்க இது உதவியது. இது கணக்கெடுப்பை விரைவுபடுத்தியது மற்றும் பதில் தரத்தை உயர்த்தியது. 407 பொருட்களுக்கான முழுமையான செலவினங்களை உள்ளடக்கியது.

 

இந்த முழுமையான தரவு சேகரிப்பு முறையானது, பழைய மற்றும் புதிய நடைமுறைகளை ஒருங்கிணைத்து, வீட்டு செலவினங்களை துல்லியமாக புரிந்து கொள்வதில் குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) அமைப்பின்  அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. வலுவான மாதிரித் திட்டம் மற்றும் புதுமையான நுட்பங்கள் அதிகாரப்பூர்வ புள்ளிவிவர மாற்றங்களுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன. தேசிய மற்றும் மாநில அளவில் மாதாந்திர செலவின மதிப்பீடுகளில் குறைந்தபட்ச பிழைகளுடன், கணக்கெடுப்பு முடிந்த ஆறு மாதங்களுக்குள் முக்கிய புள்ளிவிவரங்கள் சுருக்க அறிக்கையில்  (fact sheet) வழங்கப்பட்டுள்ளன.


நவீன முறைகளைப் பின்பற்றினாலும், வீட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் பரிசுகள், கடன்கள் ஆகியவற்றின் மதிப்பை மதிப்பிடுவது போன்ற சில பாரம்பரிய நடைமுறைகளை கணக்கெடுப்பு இன்னும் உள்ளடக்கியது. கூடுதலாக, சமூக நலத் திட்டங்கள் மூலம் பெறப்பட்ட பொருட்களின் மதிப்பை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (National Sample Survey Office (NSSO)) மதிப்பிட்டது இதுவே முதல் முறையாகும்.


மாற்றங்கள், போக்குகள் பற்றிய நுண்ணறிவு


சுருக்க அறிக்கை (fact sheet),  இந்தியாவின் பொருளாதாரம் பற்றிய விரிவான நுண்ணறிவுகளை வழங்குகிறது. ஒரு நபரின் சராசரி மாதாந்திர செலவு கிராமப்புறங்களில் ₹3,773 மற்றும் நகர்ப்புறங்களில் ₹6,459 என்று இது காட்டுகிறது. இலவச பொருட்களின் மதிப்பைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த எண்கள் ₹3,860 மற்றும் ₹6,521 ஆக சற்று அதிகரிக்கின்றன. மக்கள் என்ன வாங்குகிறார்கள், வீட்டு வகையின் அடிப்படையில் சராசரி செலவு மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தரவு உள்ளிட்ட பல பகுதிகளை சுருக்க அறிக்கை (fact sheet)  உள்ளடக்கியது.


1999-2000 முதல் 2022-23 வரையிலான ஆண்டுகளின் போக்குகளைப் பார்க்கும்போது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் மக்கள் பணத்தை செலவழிப்பதில் பெரிய மாற்றங்களைக் காண்கிறோம். உணவு, குறிப்பாக தானியங்களுக்கான செலவு குறைந்துவிட்டது. அதே நேரத்தில், புதிய பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான செலவு அதிகரித்துள்ளது. உணவு அல்லாத செலவினங்கள, குறிப்பாக நீடித்து நிலைத்து நிற்கும் பொருட்களின் மீது, மேம்பட்ட வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்க்கை முறை மேம்பாட்டிற்கான விருப்பங்கள் அதிகரித்து வருவதைக் குறிக்கிறது.


குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) ஒரு நம்பகமான ஆதாரமாகும். இந்திய புள்ளியியல் சேவை அதிகாரிகள், துணை புள்ளிவிவர சேவை அதிகாரிகள் மற்றும்  அனைத்து ஊழியர்களின் கடின உழைப்புக்கும் நன்றி. இது இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளை சிறப்பாக வடிவமைக்க உதவுகிறது. 


சுபாஷ் சந்திர மாலிக் ஒரு ஐ.எஸ்.எஸ் அதிகாரி, தற்போது புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)), கள செயல்பாட்டு பிரிவின் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.




Original article:

Share: