இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை உருவாக்குவது ஏன் ? -அஞ்சலி மாறார்

 குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுகளத்திற்கான கட்டுமானப் பணிகள் முடிவடைய இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் கடந்த வாரம் தெரிவித்தார். இந்த புதிய வசதி மூலம் ஆண்டுக்கு 20 முதல் 30 சிறிய செயற்கைக்கோள்களை ஏவ முடியும்.   


குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 28 அன்று அடிக்கல் நாட்டினார். தமிழ்நாட்டின் கடலோர தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த வசதி ரூ.986 கோடி செலவில் ஏற்படுத்தப்பட உள்ளது. இது முதன்மையாக வர்த்தரீதியான, தேவைக்கேற்ப மற்றும் சிறிய செயற்கைக்கோள் ஏவுதல்களைக் கையாளும்.


இந்தியாவுக்கு ஏன் ஒரு புதிய ஏவுதளம் தேவை?


ஒன்றிய அரசின் சமீபத்திய கொள்கை தனியார் நிறுவனங்களை விண்வெளித் துறையில் நுழைய அனுமதிக்கிறது. இது, வணிக ரீதியான ஏவுதல்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. இஸ்ரோவின் முதல் ஏவுதளமான, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம் (Satish Dhawan Space Centre (SDSC -SHAR)), அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளைக் கையாள்வதில் உள்ள சிரமங்களை குறைப்பதற்காக,  இந்திய விண்வெளி நிறுவனம் மற்றொரு ராக்கெட் ஏவுதளத்தை  உருவாக்க முடிவு செய்துள்ளது. 


ஷார் (SHAR) பெரிய மற்றும் அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை ஏவும் திட்டங்களுக்கு (heavy-lift-off missions) மட்டுமே பயன்படுத்தப்படும். குலசேகரப்பட்டினம் ஏவுதளம் சிறிய எடையுள்ள ராக்கெட்டுகளை ஏவுவதற்கு பயன்படுத்தப்படும். சந்திரன், வெள்ளி மற்றும் மனித-விமான பயணமான ககன்யான்  ஆகியவற்றிற்கான குறிப்பிடத்தக்க பயணங்களுக்கும் ஷார் (SHAR)பயன்படுத்தப்படும்.


தனியார் நிறுவனங்கள், புதிய ஏவுதளத்தில் விண்வெளிக்கு தயாரான பாகங்களை உருவாக்கலாம். செயற்கைக்கோள்களை உருவாக்கலாம் மற்றும் வாகனங்களை ஏவலாம். கூடுதலாக, இது தேவைக்கேற்ப வணிக ரீதியான புத்தொழில்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பை வழங்கும். 


தமிழ் நாட்டில் புதிய ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது ஏன்?


குலசேகரப்பட்டினம் ஏவுதளம் இஸ்ரோவின் எதிர்கால சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (Small Satellite Launch Vehicle (SSLV)) திட்டங்களுக்கு புவியியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் இயற்கை நன்மைகளை வழங்குகிறது. 


இந்த வசதி, சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனங்களை நேரடி தெற்கு நோக்கி செல்ல அனுமதிக்கிறது. இது குறுகியது மற்றும் குறைந்த எரிபொருள் தேவைப்படும் பயணப் பாதையாகும். குலசேகரப்பட்டின ஏவுதள வசதி,  சுமைகளின் திறனை மேம்படுத்தும் இஸ்ரோவின் முயற்சிகளை அதிகரிக்கும்.


தற்போது, ஷாரிலிருந்து (SHAR) ஏவப்படும் ஏவுகணைகள் நீண்ட பாதையைப் பின்பற்றி, தெற்கு நோக்கிச் செல்வதற்கு முன்பு இலங்கையைச் சுற்றி கிழக்கு நோக்கிச் செல்கின்றன. இது அதிக எரிபொருளைப் பயன்படுத்துகிறது. கொழும்புக்கு மேற்கே அமைந்துள்ள குலசேகரப்பட்டினம், நேராக தெற்கு நோக்கி பறக்க அனுமதிக்கிறது. இது சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகன பணிகளுக்கு எரிபொருளை மிச்சப்படுத்துகிறது.   


முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகளால் தொகுக்கப்பட்ட ‘From Fishing Hamlet to Red Planet: India’s Space Journey’  என்ற புத்தகத்தின்படி, "பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள ஏவுதளத்திற்கு, பூமியின் சுழற்சியால் வழங்கப்படும் வேகத்தின் அளவு சுமார் 450 மீ/வி ஆகும். கொடுக்கப்பட்ட ஏவுகணை வாகனத்திற்கான பேலோடில் சுமைகளை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். புவிநிலை செயற்கைக்கோள்கள் பூமத்திய ரேகைத் தளத்தில் இருக்க வேண்டும். எனவே, அத்தகைய செயற்கைக்கோள்களுக்கு, ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக இருந்தால், அது சிறந்தது.


புதிய ஏவு தளத்தின் நிலை என்ன?


குலசேகரப்பட்டினத்தில் 2,000 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது. இது இஸ்ரோவிடம் வழங்கப்பட்டுள்ளது.


இஸ்ரோவின் தலைவர் எஸ்.சோமநாத், அந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் முடிவடைய இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கடந்த வாரம் கூறினார். இந்த புதிய வசதி ஒவ்வொரு ஆண்டும்  20 முதல் 30 சிறிய செயற்கைக்கோள் வாகன ஏவுதல்களை அனுமதிக்கும் என்று கூறினார். 


சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனங்கள்  (Small Satellite Launch Vehicle (SSLV)) என்றால் என்ன, அவை எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன? 

சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தை (Small Satellite Launch Vehicle (SSLV)) இஸ்ரோ உருவாக்கியது. இது சுமார் 120 டன் எடையுள்ள மூன்று நிலை ராக்கெட் ஆகும். இது 34 மீட்டர் நீளமும் 2 மீட்டர் விட்டமும் கொண்டது. சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் திட மற்றும் திரவ உந்துவிசையின் கலவையைப் பயன்படுத்துகிறது. 


சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் பொதுவாக 10 முதல் 500 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்துகின்றன. இந்த செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் மினி, மைக்ரோ அல்லது நானோ செயற்கைக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை செலவு குறைந்தவை மற்றும் விரைவாக சுற்றுப்பாதையை அடையக்கூடியவை .


சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் வணிக மற்றும் தேவைக்கேற்ப ஏவுவதற்கு ஏற்றது. கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் விண்வெளி திட்டங்கள் பெரும்பாலும் சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனப்  பயணங்களை பயன்படுத்துகின்றன.


முதல் சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகன (Small Satellite Launch Vehicle (SSLV))  திட்டம் - SSLV-D1 - ஆகஸ்ட் 2022 இல் EOS-02 மற்றும் ஆசாதிசாட் (AzaadiSat) உட்பட இரண்டு செயற்கைக்கோள்களைச் சுமந்துசென்று, தோல்வியடைந்தது. ஒரு குறைபாடற்ற ஏவுதல் மற்றும் அடுத்தடுத்த நிலைகளில் சீரான முன்னேற்றம் இருந்தபோதிலும், இரண்டு செயற்கைக்கோள்களும் பிரிக்கப்பட்ட பிறகு உத்தேசிக்கப்பட்ட நீள்வட்ட சுற்றுப்பாதைக்கு பதிலாக 356 கிமீ வட்ட சுற்றுப்பாதையில் வைக்கப்பட்டன. 


ஆறு மாதங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 2023 இல் SSLV-D2 உடன் அதன் இரண்டாவது முயற்சியில், இஸ்ரோ  (Indian Space Research Organisation ISRO)) வெற்றியை ருசித்தது. ராக்கெட் 15 நிமிட பயணத்தைத் தொடர்ந்து 450 கிமீ வட்ட சுற்றுப்பாதையில் மூன்று செயற்கைக்கோள்களை உள்நோக்கிச் செலுத்தியது.


ஷார் (SHAR) இன் அம்சங்கள் என்ன?


 ’SHAR’ ஆனது ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 80 கிமீ தொலைவில்  உள்ளது. இது தற்போது அனைத்து இஸ்ரோ பணிகளுக்கும் ஏவுதல் உள்கட்டமைப்பை வழங்கி வருகிறது. இது திடமான உந்துசக்தி செயலாக்க அமைப்பு, நிலையான சோதனை மற்றும் ஏவுதல் வாகன ஒருங்கிணைப்பு வசதிகள், தொலைத்தொடர்பு சேவைகள், கண்காணிப்பு மற்றும் ஏவுதலை மேற்பார்வையிட  இணை சேவை மற்றும் ஒரு திட்ட கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.  


SHAR இரண்டு ஏவுகணை வளாகங்களைக் கொண்டுள்ளது, அவை துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (Polar Satellite Launch Vehicle (PSLV)),  ஜியோசின்க்ரோனஸ் ஸ்பேஸ்  ஏவுதல் வாகனம் (Geosynchronous Space Launch Vehicles GSLV)) மற்றும் ஜியோசின்க்ரோனஸ் ஸ்பேஸ்  ஏவுதல் வாகனம் Mk-III (geosynchronous Satellite Launch Vehicle (Mk-Ill)) - இப்போது LVM3 என மறுபெயரிடப்பட்டுள்ளது ஆகியவற்றை ஏவுவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன. முதல் ஏவுதளம், 1990 களின் முற்பகுதியில் கட்டப்பட்டது மற்றும் 1993 இல் செயல்படத் தொடங்கியது. இரண்டாவது ஏவுதளம் 2005 முதல் செயல்பட்டு வருகிறது.




Original article:

Share:

தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரிவு, துறை மற்றும் பிராந்தியத்தின் விருப்பங்களை மாநில பட்ஜெட் பூர்த்தி செய்தது -சஞ்சய் விஜயகுமார் சங்கீத கந்தவேல்

 தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர், 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டுக்கான திட்டமிடல் செயல்முறை, கடன் அளவுகள் மற்றும் 16 வது நிதி ஆணையத்தின் எதிர்பார்ப்புகள் குறித்து விவாதிக்கிறார். நிதிப் பொறுப்பைப் பேணும் அதே நேரத்தில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதையும் பற்றி அவர் குறிப்பிடுகிறார். 


தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரிவு, துறை மற்றும் பிராந்தியத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதை அவர் நோக்கமாகக் கொண்டிருந்தார் மற்றும் இலட்சிய இலக்குகளையும் நிர்ணயித்திருந்தார். தி இந்து நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் இங்கே.    


இது, நிதியமைச்சராக உங்களது முதல் பட்ஜெட். திட்டமிடலின் போது உங்களது எண்ணங்கள் என்ன? 

1967-68 பட்ஜெட் பற்றிப் பேசிய முன்னாள் நிதியமைச்சர் பேரறிஞர் அண்ணா, "இந்த பட்ஜெட்டில் உள்ள 64 பக்கங்களால் 3.5 கோடி மக்களின் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. எங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் அதில் ஊற்றியுள்ளோம். நம்மைத் தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பங்களும், கனவுகளும் அதில் அடங்கியுள்ளன.” என்று கூறினார். அண்ணாவின் இந்த அர்த்தமுள்ள வார்த்தைகள் இந்த பட்ஜெட்டில் என்னை வழிநடத்தின. முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன், நிதிப் பொறுப்பைத் தக்கவைத்துக் கொண்டு, கோடிக்கணக்கான தமிழ் மக்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற நான் பணியாற்றியுள்ளேன். 


இந்தத் தேர்தல் ஆண்டில், பணத்தை கவனமாக நிர்வகிப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டதா அல்லது கவர்ச்சிகரமான கொள்கைகளுடன் பொதுமக்களை மகிழ்விப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டதா? முக்கிய அறிவிப்புகள் எதையும் வெளியிடாமல் இருப்பது திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டதா? 


கிராமப்புறங்களில் உள்ள எட்டு லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு பாதுகாப்பான, நிரந்தர கான்கிரீட் வீடுகளை வழங்குவதற்காக கலைஞர் கனவு இல்ல திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். ஒரு வீட்டிற்கான செலவு ரூ.3.5 லட்சம். முதற்கட்டமாக, 3,500 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசின் உதவி இல்லாமல் எந்த மாநிலத்திலும் இல்லாத மிகப்பெரிய கிராமப்புற வீட்டுவசதி திட்டம் இதுவாகும். 


இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மிகவும் தேவையான வீட்டு மாராமத்து திட்டத்தையும் முதல்வர் அறிவித்தார். 2001-ம் ஆண்டுக்கு முன்பு அரசு உதவியுடன் கட்டப்பட்ட பழைய வீடுகளை பழுது பார்க்க ஒரு குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். இதற்கு ₹2,000 கோடி செலவாகும். நாட்டிலேயே முதன்முறையாக மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழ் புதல்வன் (Tamil Pudhalvan) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த சுமார் 3 லட்சம் உயர்கல்வி மாணவர்களுக்கு மாதத்திற்கு  ரூபாய் ₹1,000 வழங்கப்படும். 


இன்னும் பல முயற்சிகள் உள்ளன. இந்த பட்ஜெட் நமது மாநிலத்தின் ஒவ்வொரு பிரிவு, துறை மற்றும் பிராந்தியத்தின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. மத்திய அரசின் சவால்கள் இருந்தபோதிலும், நிதிப் பொறுப்புடன் நாங்கள் சிறந்த பாதையில் இருக்கிறோம். 


2023-24 ஆம் ஆண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயை வெள்ளம் பாதித்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் 14.71% வளர்ச்சியை நீங்கள் கணித்துள்ளீர்கள். வெள்ளம் என்பது ஒரு பொதுவான நிகழ்வு என்பதாலும், உலகளாவிய மந்தநிலை இருப்பதாலும், மதிப்பீடுகள் உயர்ந்த பக்கத்தில் இருப்பதாக நீங்கள் நினைக்கவில்லையா?


இந்த ஆண்டு (2023-24), மோட்டார் வாகனங்கள், மதுபானம் மற்றும் பதிவு மீதான வரிகளில் ஏற்பட்ட மாற்றங்களுடன், தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும் இழப்புகளைத் தடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால், வளர்ச்சி விகிதம் மிகவும் நியாயமானது என்று நான் நினைக்கிறேன். 


2023-24ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் வருவாய் பற்றாக்குறை ரூ 44,907 கோடியாக உயர தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் (Tamil Nadu Generation and Distribution Corporation Ltd (Tangedco)) முன்னெப்போதும் இல்லாத நிதி இழப்பு மற்றும் சொந்த ஆதாரங்களைப் பயன்படுத்தி மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியளித்ததை நீங்கள் மேற்கோள் காட்டியுள்ளீர்கள்.  2024-25 ஆம் ஆண்டில் இது ₹49,278.73 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் 2025-26 இல் ₹18,098 கோடியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது? தடைகளைப் பார்க்கும்போது, 2025-26 இலக்கு லட்சியமானது என்று நீங்கள் நினைக்கவில்லையா?

 

2025-26 திட்டத்தை நடுத்தர கால நிதித் திட்டத்தில் காணலாம், இது எதிர்கால திட்டங்கள் மற்றும் கணிப்புகளை கோடிட்டுக் காட்ட சட்டத்தால் தேவைப்படும் ஆவணமாகும். 2025-26 ஆம் ஆண்டில் மொத்த வருவாய் ரசீதுகள் 14.33% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நியாயமானதாகத் தெரிகிறது.


சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி செலுத்துதல் போன்ற செலவுகள் 9.5% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


மானியங்கள் மற்றும் இடமாற்றங்கள் மீதான செலவினங்களில் பெரும் சரிவைக் காணலாம். ஏனெனில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கான (Tamil Nadu Generation and Distribution Corporation (Tangedco)) இழப்பு நிதியளிப்பு குறைக்கப்பட்டது. பெரிய இழப்புகளை ஈடுசெய்வதற்கான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஆதரவு, மாநில அரசாங்கங்களுக்கு வழங்கப்படும் 0.5% கூடுதல் கடன் கொடுப்பனவைப் (extra borrowing allowance) பொறுத்தது. இந்த கடன் வாங்கும் வாய்ப்பு 2024-25ல் நின்றுவிடும். அதையும் தாண்டி நஷ்டத்தை ஈடுகட்ட அரசாங்கம் செய்வது நியாயமாக இருக்காது.


இந்த ஆண்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு கணிசமான அளவு இழப்பு நிதியை அரசாங்கம் வழங்குகிறது. இந்த நிதியைத் தவிர்த்து, 2023-24 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் வருவாய் பற்றாக்குறை ₹27,790 கோடியாக இருக்கும். இது, பட்ஜெட் மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது ₹8,227 கோடி குறைவாகும். இரண்டு பேரழிவுகளை எதிர்கொண்ட போதிலும், 2024-25 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ₹1.32 லட்சம் கோடியாகவும், 2025-26 ஆம் ஆண்டில் ₹1.40 லட்சம் கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்களுடன், ரூ .18,098 கோடி வருவாய் பற்றாக்குறையை அடைவது சாத்தியமாகத் தெரிகிறது.


மாநிலத்தின் அதிக கடன் நிலைக்கு டான்ஜெட்கோவும் (Tangedco) ஒரு காரணம். நீங்கள் ஒரு பசுமை நிறுவனத்தை உருவாக்குவதன் மூலம் சீர்திருத்தங்களைத் தொடங்கியுள்ளீர்கள். நீங்கள் பார்க்கும் பிற நடவடிக்கைகள் என்ன?

எங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். சந்தையில் இருந்து மின்சாரத்தை வாங்குவதைக் குறைப்பதற்காக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். எங்கள் மின் உற்பத்தி நிலையங்களில் குறைந்த இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் எங்கள் செயல்பாடுகளை மிகவும் திறமையானதாக மாற்ற முயற்சிக்கிறோம். கூடுதலாக, அதிக விலை கடன்களை மலிவான கடன்களுடன் மாற்றுவதற்கு எங்கள் கடனை மறுசீரமைப்பது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

16வது நிதிக் கமிஷனிடம் இருந்து உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசு எந்த ஒரு தென் மாநிலத்தையும் வரிப்பங்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டவில்லை என்றும், மாநிலம் பாதிக்கப்படுவதாக உணர்ந்தால் 16வது நிதிக் குழுவிடம் தனது வாதத்தை தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.


மத்திய வரிகளில் தமிழகத்திற்கு உரிய பங்கை ரத்து செய்ய தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்திய வெளியீட்டில், ஐந்து தென் மாநிலங்களும் சேர்த்து ரூ 22,455 கோடியைப் பெற்றன, உத்தரபிரதேசத்திற்க்கு மட்டும் ரூ 25,495 கோடி கிடைத்தது. அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16வது நிதிக்குழு, இந்த அநீதியைத் திருத்தி, தமிழ்நாட்டின் பங்களிப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு நியாயமான பங்கு கிடைப்பதை உறுதி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.




Original article:

Share:

ப்ளே ஸ்டோரில் (Play Store) இருந்து சில இந்திய செயலிகளை கூகுள் (Google) நீக்கியது ஏன் ? -அரூன் தீப்

 இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கூகுள் (Google) இடையே  உள்ள கட்டணச் சிக்கல் என்ன? 


மார்ச் 1 ஆம் தேதி, கூகுள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இருந்து கிட்டத்தட்ட 12 செயலிகளை நீக்கியது. கூகுள் நிறுவனத்திற்கும் இந்திய நிறுவனங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த சிக்கல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த  சிக்கல்கள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டது.  மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Ministry of Electronics and Information Technology) தலையீட்டிற்குப் பிறகு, திங்களன்று பயன்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இருப்பினும், பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.       


என்ன பிரச்சனை?


முக்கிய பிரச்சனை, கூகுளின் இயங்குதளக் கட்டணத்தைச் சுற்றியே உள்ளது. பயனர்கள் மின்புத்தகம் வாங்குதல் அல்லது OTT சந்தா ஆகியவற்றிற்கு முற்றிலும் மின்னணு சேவையை உள்ளடக்கிய அனைத்து செயலிகள் சார்ந்த பயன்பாட்டிற்கு கூகுள் ஒரு பரிவர்த்தனைக்கு 11%  முதல் 30% வரை கட்டணம் வசூலிக்கும். இந்த கட்டணம், கூகுள் பிளே (Google Play) ஐ பராமரிக்கவும் ஆண்ட்ராய்டு  சூழல் (Android ecosystem) அமைப்பை  மேம்படுத்தவும் உதவுகிறது என்று கூகுள் கூறுகிறது. செயலி உருவாக்குநர் ஒருவர் கூகுளின் சொந்த சேவையை அல்லது தயாரிப்பைப் பயன்படுத்தினால், மற்றும் தொடர்ச்சியான சந்தா சேவையை வழங்குகிறார் அல்லது செயலி வழியிலான கட்டணம் செலுத்துதல்கள் (in-app payments) மூலம் வருடத்திற்கு $1 மில்லியனுக்கும் குறைவாக வருமானம் ஈட்டினால், நிறுவனம் பயன்பாட்டாளர்களிடம்  15% கட்டணம்  வசூலிக்கிறது. ஆனால், பெரிய நிறுவனங்களுக்கு செயலிகள் வாங்குவதற்கான (app purchases) கட்டணமாக 30%  கட்டணம்  வசூலிக்கிறது. இந்தியா மற்றும் தென் கொரியாவில், செயலிகளை உருவாக்குபவர்கள் கடுமையான சிக்கல்களை  எதிர்கொண்டு வருகின்றனர். மற்றொரு கட்டண முறையைத் தேர்வுசெய்தால், கூகிள், 11% அல்லது 26% கட்டணத்தை வசூலிக்கிறது. இந்தியாவில் செயலிகளை உருவாக்குபவர்கள், உலகளவில் பலரைப் போலவே,  இந்தக் கட்டணங்களை அதிகமாகக் காண்கிறார்கள். பாரத் மேட்ரிமோனி (Bharat Matrimony) மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) போன்றவை கட்டணத்தை முழுவதுமாக செலுத்துவதைத் தவிர்க்க சட்ட நடவடிக்கையை நாடியுள்ளன.


 "ஆப் ஸ்டோர் சூழல் அமைப்பை (app store ecosystem) இயக்குவதற்கு கூகுள் கட்டணம் வசூலிக்கலாம். ஆனால், அவை எவ்வளவு வசூலிக்கின்றன என்பதுதான் முக்கிய பிரச்சினை" என்று பொதுக் கொள்கை நிறுவனமான தி குவாண்டம் ஹப்பின் (public policy firm The Quantum Hub) நிறுவனர் ரோஹித் குமார் கூறினார்.


மற்ற சந்தைகளைப் பற்றி என்ன?


ஆப்பிள் (apple) இந்தியாவில் அதிக எதிர்ப்பை எதிர்கொள்ளவில்லை. ஏனெனில், இங்கு குறைவான மக்கள் அதன் தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், திறன்பேசி (smartphone) சந்தையில் ஆண்ட்ராய்டு ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும், செயலிகள் உருவாக்குபவர்கள் வாடிக்கையாளர்களை அடைய google play முக்கிய இடமாகும். ஆப்பிள் மற்றும் கூகிள் இரண்டும் இந்த கட்டணங்கள் தொடர்பாக உலகளவில் எதிர்ப்பை சந்தித்தன. இசை ஓட்ட (music streaming) சேவையான ஸ்போடிஃபை (Spotify), கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக ஆப் ஸ்டோருக்கு வெளியே அதன் சேவைக்கு பணம் செலுத்துமாறு பயனர்களிடம் சொல்வதை ஆப்பிள் நிறுத்தியபோது ஐரோப்பிய ஆணையத்திடம் (European Commission) புகார் அளித்தது. ஆப்பிள் மியூசிக் (apple music) அதே 30% கட்டணத்தை எதிர்கொள்ளாததால் இது நியாயமற்றது என்று Spotify வாதிட்டது. நியாயமற்ற வர்த்தகத்திற்காக ஐரோப்பிய ஆணையம் (European Commission) ஆப்பிள் நிறுவனத்திற்கு 1.84 பில்லியன் யூரோ அபராதம் விதித்தது.  இதேபோல், எபிக் கேம்ஸ் (epic games), பிரபலமான ஃபோர்ட்நைட் பிராஞ்சைஸ் (Fortnite franchise), ஆப்பிள் மற்றும் கூகுள் மீது 30% கட்டணத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. 

 ஆப்பிளைப் போலல்லாமல், கூகுள் உலகெங்கிலும் உள்ள மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களை (third party app stores) அனுமதிக்கிறது, இது செயலிகளை உருவாக்குபவர்களுக்கு இந்தக் கட்டணங்களைத் தவிர்ப்பதில் இன்னும் கொஞ்சம் வாய்ப்பளிக்கிறது. ஆனால் பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் ப்ளே இயல்பாகவே நிறுவப்படும்.  


கட்டுப்பாட்டாளர்கள் எவ்வாறு பதிலளித்துள்ளனர்?

2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் போட்டி ஆணையம் (Competition Commission of India (CCI)) கூகுளின் பிளே ஸ்டோர் கொள்கைகளுக்காக ₹936.44 கோடி அபராதம் விதித்தது. கூகுள் நிறுவனம் அந்த அபராதத்தை மேல்முறையீடு செய்ய  உள்ளது. அத்துடன் டெவலப்பர்களுக்கு பணம் செலுத்துவதற்கான விரிவான தேர்வுகளை வழங்கும்  இந்தியாவின் போட்டி ஆணையம் உத்தரவுகளையும் கொண்டுள்ளது. இந்த அபராதத்தை எதிர்த்து கூகுள் செய்த மேல்முறையீடு தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (National Company Law Appellate) நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், நீதிமன்றத்திற்குச் சென்ற இந்திய பயன்பாடுகள் இப்போது மீண்டும் மேடையில் உள்ளன. இந்தியாவில் உள்ள மின்னணு பொருளாதாரத்தின் முக்கியப் பகுதியான செயலிகளுக்குள் பணம் செலுத்துதல் (In-app payments) இன்னும் இல்லை. ஏனெனில், இந்திய வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தத் தயாராக இருக்கும் மின்னணு சேவைகள் உள்ளடக்க ஓட்டம்(content streaming), டேட்டிங் (dating) மற்றும் மேட்ரிமோனியல் (matrimonial) சேவைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.  எங்களுக்கு உண்மையில் தேவை என்னவென்றால், appstore சந்தையில் போட்டியை அதிகரிப்பதற்கான ஒழுங்குமுறையாகும். இது, பிற appstore களை ஏற்றுக்கொள்வதற்கான தடைகளை நீக்குவதை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். கூகுள் நிறுவனம்,  அதன் சொந்த செயலிகளுக்கு முன்னுரிமையை வழங்குவதற்காக அலைப்பேசி  உற்பத்தியாளர்களுடன் செய்யும் ஏற்பாடுகளின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது  இதில் அடங்கும்.




Original article:

Share:

'பணம் இருந்தால், அதிசய மருந்து வாங்கு' (have money, buy miracle drug) என்ற கதை -முரளி நீலகண்டன்,பார்த் சர்மா

 ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் இந்த 'மேஜிக் மருந்துகள்' (magic drugs) பல, இந்தியாவில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது ஒழுங்குமுறை மேற்பார்வை மற்றும் மருத்துவ நிபுணர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

 

சமீப காலமாக ஒவ்வொரு வாரமும் உடல் எடையை குறைக்கும் 'மேஜிக் ஊசிகள்' (magic injections) பற்றி செய்தித்தாள்கள் நிறைய எழுதி வருகின்றன. இந்த ஊசிகளில் செமகுளுடைடு (Semaglutide) என்ற மருந்து உள்ளது. இது முதலில், வகை 2-ஆன (Type 2) நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டது. அதேசமயத்தில், எடை இழப்புக்கும் உதவுகிறது. இருப்பினும், இந்த எடை குறிப்பு மருந்து இந்தியாவில் விற்பனைக்கு அங்கீகரிக்கப்படவில்லை என்பதை இந்த கட்டுரைகள் பெரும்பாலும் குறிப்பிட மறந்துவிடுகின்றன. இருப்பினும், பெரும்பாலும் வசதியான நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இதை வழங்குகிறார்கள்.


இந்தியாவில், இந்தத் தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கு எதிராக நோயாளிகளை எச்சரிக்கும் உலகளாவிய மருந்து நிறுவனங்களின் (global pharmaceutical companies) செய்தி வெளியீடுகளை ஊடகங்கள் புறக்கணிக்கின்றன. இந்த மருந்துகள் ஏற்படுத்தக்கூடிய கடுமையான பக்க விளைவுகளையும் ஊடகங்கள் தெரிவிப்பதில்லை. தீங்கு விளைவிக்கும் விளைவுகளை ஏற்படுத்திய ரிமோனாபன்ட் (Rimonabant)  மற்றும் ஃபென்-ஃபென் (Fen-Phen) போன்ற மருந்துகள் சம்பந்தப்பட்ட கடந்த கால சம்பவங்களை இந்த நிலைமை நினைவூட்டுவதாக சிலர் கருதுகின்றனர்.


அமெரிக்காவில் பல பத்தாண்டுகளுக்கு முன்பு, மற்றொரு எடை குறைப்பு மருந்து ஒரு அதிசய சிகிச்சையாக விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் அது பயனுள்ளதாக இல்லை என்று பின்னர் தெரியவந்தது. வழக்குகள் காரணமாக மருந்து நிறுவனங்கள் சுமார் 4 பில்லியன் டாலர் இழப்பீடுகளை செலுத்தின. இருப்பினும், அங்கீகரிக்கப்படாத எடை குறைப்பு மருந்துகள் அத்தகைய அங்கீகரிக்கப்படாத மருந்துகளில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே உருவாக்குகின்றன.


சோதனைகள், இந்தியாவில் விற்பனை ஒப்புதல், விதிவிலக்குகள்


இந்தியாவில், உள்ளூர் துணை நிறுவனம் அல்லது உலகளாவிய பிராண்ட் உரிமையாளரின் உரிமதாரர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரே மருந்துகள் பொதுவாக விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன. இந்த ஒப்புதலுக்குப் பிறகு, கட்டுப்பாட்டாளர் இரண்டு ஆண்டுகளுக்கு அனைத்து பக்க விளைவுகளையும் கண்காணித்து அறிக்கை செய்ய வேண்டும். சில நேரங்களில், உலகளாவிய மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை இந்தியாவில் விற்க வேண்டாம் என்று முடிவு செய்கின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நோயாளிகள் இந்த மருந்துகளை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்ய மருத்துவரின் பரிந்துரையுடன் மருந்து கட்டுப்பாட்டாளரிடமிருந்து அனுமதி பெறலாம். மருந்து இறக்குமதி அனுமதிகளுக்கு மருத்துவமனைகளும் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், ஒரு மருந்து இந்தியாவில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலுக்குப் பிறகு மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என்ற பொதுவான விதிக்கு இவை விதிவிலக்குகள்.

இந்த அங்கீகரிக்கப்படாத 'மேஜிக் மருந்துகள்' (magic drugs) இந்தியாவில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. எனவே, இந்தியர்கள் அவர்களுக்கு எவ்வாறு பதிலளிப்பார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. மற்ற நாடுகளில் பொதுவானதாக இல்லாத நீரிழிவு (diabetes) மற்றும் உயர் இரத்த அழுத்தம் (hypertension) போன்ற நிலைமைகளுக்கு பிற மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகளின் உடலானது இந்த ஊசிகளுக்கு எவ்வாறு பதிலளிக்கும் என்பது இந்திய மருத்துவர்களுக்குத் தெரியாது. இது புறக்கணிக்க முடியாத ஒரு பெரிய ஆபத்தாகும். இந்த ஆபத்தை துல்லியமாக மதிப்பிடுவதும் குறைப்பதும் கடினம்.


மருத்துவர்களுக்கான கேள்விகள்


இந்த சூழ்நிலையில், மருத்துவர்கள் பல கேள்விகளை எதிர்கொள்கின்றனர். இந்தியாவில் விற்பனைக்கு அங்கீகரிக்கப்படாவிட்டால் அவர்கள் ஒரு புதிய மருந்தை பரிந்துரைக்க வேண்டுமா? மருத்துவர்கள் இந்த மருந்துகளை பரிந்துரைக்கிறார்களா?, அல்லது சமீபத்திய அறிக்கைகள் காரணமாக நோயாளிகள் அவற்றைக் கேட்கிறார்களா? இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மருத்துவர்களுக்கு என்ன பொறுப்புகள் உள்ளன? மருத்துவர்களை எது ஊக்குவிக்கிறது? இந்த ஊசிகளைக் கொடுக்கும் மருத்துவர்களில் எத்தனை பேர் அவற்றின் விளைவுகளை முழுமையாக ஆய்வு செய்திருக்கிறார்கள்? பக்கவிளைவுகளை அடையாளம் கண்டு கையாள எத்தனை பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது? இந்தியாவில் விற்பனைக்கு இன்னும் அங்கீகரிக்கப்படாத நிலையில், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை நோயாளிகள் பயன்படுத்தக்கூடும் என்பதை மருத்துவர்கள் உணர்கிறார்களா? 


இரத்த புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் அட்செட்ரிஸ் (Adcetris) போன்ற போலி இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் சம்பந்தப்பட்ட சமீபத்திய ஊழல், இந்த சிக்கலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. செப்டம்பர் 2023 இல் உலக சுகாதார அமைப்பு (World Health Organization) அவ்வாறு செய்த பின்னரே மருந்து கட்டுப்பாட்டாளர் போலி மருந்துகள் குறித்து எச்சரித்தார். அக்டோபர் 2021 இல் மும்பை காவல்துறையினரால் செய்யப்பட்ட கைதுகள் இந்த சிக்கலை முன்பே வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததால் இந்த எச்சரிக்கையும் இரண்டு ஆண்டுகள் தாமதமானது. அவர்கள் வழங்கும் அங்கீகரிக்கப்படாத இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் ஆபத்தான போலிகள் அல்ல என்பதில் மருத்துவர்கள் உறுதியாக இருக்கிறார்களா என்ற கவலையை இது எழுப்புகிறது. இந்த மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றின் தோற்றத்தை மருத்துவர்கள் உறுதிப்படுத்த வேண்டாமா? செமக்ளூடைடுடன் (Semaglutide), இந்த மருந்துகளை தயாரிக்கும் மருந்து நிறுவனங்கள் எச்சரிக்கைகளை வெளியிட்டபோது மருத்துவர்கள் மோசடியில் ஈடுபட்டதில் ஆச்சரியமில்லை.


அரசாங்கமும், மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கும் கேள்விகள் உள்ளன. இந்த மருந்துகளின் இறக்குமதியை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? ஒரு சில மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டாலே மற்றவர்களை தடுக்க முடியும். 


இறுதியாக, நாம் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறோமா? இந்த மருந்துகளின் அதிக விலையைப் பார்த்தால், பணக்காரர்களுக்கு மட்டுமே இது ஒரு பிரச்சனையாகத் தோன்றலாம். ஒரு சில வசதி படைத்த நபர்கள் இந்த துரதிர்ஷ்டத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அதே நேரத்தில், அவர்களின் மருத்துவர்கள் இதனால் லாபம் ஈட்டினால் அது உண்மையில் முக்கியமா? இவை டிசைனர் வாட்ச்கள் அல்லது ஸ்காட்ச் விஸ்கி போன்றது. அவை சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதா அல்லது அவை போலியானவையாக மாறியதா என்பது முக்கியமா?

அரசுக்கு இதைவிட அவசர கவலைகள் இருக்கலாம். ஏழைகள் போலி இருமல் மருந்தை உட்கொண்டு அவதிப்படும் போது அலட்சியம் இருந்தது. இதனால் அரசாங்கம் யாருக்கு முன்னுரிமை அளித்து அக்கறை செலுத்துகிறது என்ற கேள்வி எழுகிறது. இது பாப் டிலனின் (Bob Dylan) "ப்ளோயின்' இன் தி விண்ட்" (Blowin’ in the Wind) என்ற பாடலை நினைவுக்குக் கொண்டுவருகிறது.

முரளி நீலகண்டன் அமிகஸ் (Amicus) நிறுவனத்தில் முதன்மை வழக்கறிஞர். 

டாக்டர் பார்த் சர்மா ஒரு பொது சுகாதார மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர்.




Original article:

Share:

புத்தொழில் (Startup) நிறுவனங்களின் மையம் -சிவராஜா ராமநாதன்

 ஆக்கப்பூர்வமான வழிகளில் முக்கியமான சிக்கல்களைத் தீர்ப்பதில் புத்தொழில்கள் (Startups) முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை தமிழ்நாடு அரசு புரிந்துகொண்டுள்ளது. மேலும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் புத்தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  


சமீபத்திய ஆண்டுகளில், புதுமையான யோசனைகளுடன் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, புதிய யோசனைகள் மூலம் உலகை மாற்றக்கூடிய ஒரு வடிவமைப்பான காலத்தில் நாம் வாழ்கிறோம்.  ஆரம்பத்தில், சந்தேகத்திற்குரிய பல யோசனைகள், இப்போது நம் அன்றாட வாழ்வில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.


புதுமைகளை மதிப்பிடுவது மற்றும் அவற்றை ஆதரிக்கும் சூழல் ஆகியவை புத்தொழில்களின் (Startups) வெற்றிக்கு முக்கியமானதாக உள்ளது. இதனால், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புதுமை திட்டம் (Tamil Nadu Startup and Innovation Mission)  (StartupTN என்றும் அழைக்கப்படுகிறது) மூலம், தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கும் ஒட்டுமொத்த சமுதாயத்தை மேம்படுத்துவதற்குமான ஒரு சூழலை தீவிரமாக உருவாக்கி வருகிறது.


தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புதுமை திட்டமானது (StartupTN), தற்போதைய அரசாங்கத்திடமிருந்து சிறப்பான ஆதரவைப் பெற்றுள்ளது. இது, புதுமை (innovation) மற்றும் புத்தொழில்களை (Startup) ஆதரிக்கக்கூடிய, சூழலை உருவாக்குவதற்கு நிதி ஒதுக்கீடு மற்றும் சிறந்த திறமைகளை அனைத்தையும் ஒன்றிணைக்க நோக்கமாக கொண்டுள்ளது.  இந்த திட்டமானது, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறையின் (Micro, Small, and Medium Enterprises Department) கீழ் செயல்படுவதுடன், மாநில அரசின் சமூக நீதி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக் கொள்கைகளையும் பின்பற்றுகிறது.  


தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை திட்டம் 2023 (Tamil Nadu Startup and Innovation Policy 2023) இலட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இது, 2032 ஆம் ஆண்டிற்குள், 15,000 புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கி, உலகளவில் முதல் 20 புத்தொழில் மையங்களில் ஒன்றாக தமிழகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புதுமை திட்டத்தின் (StartupTN) மூலம், குறிப்பிட்ட கொள்கைகள் மற்றும் ஆதரவை வழங்க அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்த கொள்கை ஒரு வெற்றிகரமான தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் அமைப்புக்கு அவசியமான, புத்தாக்க நிலப்பரப்பு (Innovation Landscape), சந்தைக்கான அணுகல் (Access to Market), பங்குதாரர்களின் ஈடுபாடு (Stakeholder Engagement), தொடக்க ஆதரவு மையங்கள் (Startup Support Centres), முதலீட்டு சுற்றுச்சூழல் அமைப்பு (Investment Ecosystem) மற்றும் சமமான வளர்ச்சி (Equitable Growth)  ஆகிய ஏழு முக்கிய காரணிகளில் கவனம் செலுத்துகிறது. 


StartupTN புத்துயிர் பெற்ற இரண்டே ஆண்டுகளில், மத்திய அரசின் புத்தொழில்  இந்தியா தரவரிசையில் (Startup India ranking) தமிழகம் 'சிறந்த செயல்திறன்' (Best Performer) கொண்டதாக மாறியுள்ளது. இந்த தரவரிசையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு மாநிலம் கடைசி இடத்தில் இருந்ததை கருத்தில் கொண்டு இந்த சாதனை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) கீழ் பதிவு செய்யப்பட்ட புத்தொழில்களின் எண்ணிக்கை, மார்ச் 2021 இல் 2300 ஆக இருந்தது. இது, பிப்ரவரி 28, 2024 நிலவரப்படி 8000 ஆக அதிகரித்துள்ளது. 


தொழில்முனைவோர் அடைகாப்பகங்களின் (incubators) எண்ணிக்கையில், தமிழ்நாடு தேசிய அளவில் முன்னணி மாநிலமாக உள்ளது. மேலும், நிதி ஆயோக்கின் (NITI Aayog) கீழ் அடல் புதுமை இயக்கத்தின் (Atal Innovation Mission (AIM)) புதிய கண்டுபிடிப்புகளுக்கான முதன்மை மாநிலமாக தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 


அவுட்லுக் பிசினஸ் இதழ் (Outlook Business Magazine) வெளிப்படுத்தியபடி, புத்தொழிலில் சிறந்து விளங்குபவர்களின் 2023 ஆம் ஆண்டிற்கான தரவரிசையில், நாட்டின் முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். அவுட்லுக் பிசினஸ் கணக்கெடுப்பின்படி, நிதி, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் ஒட்டுமொத்த வணிகச் சூழல் மாநிலத்தின் மிகப்பெரிய பலமாக சிறந்து விளங்குகிறது. 

 

சர்வதேச அளவில், தமிழ்நாடு ஒரு புத்தொழில் மையமாக தனது நிலையை மேம்படுத்தி வருகிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டார்ட்அப் ஜீனோமின் (Startup Genome) அறிக்கை, 2021 மற்றும் 2023 க்கு இடையில் தமிழகம் 108 வது இடத்தில் இருந்து 78 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பதை சூட்டிக்காட்டுகிறது. 2023 ஆம் ஆண்டில், மாநிலத்தின் புத்தொழிலின் சுற்றுச்சூழல் அமைப்பின் மதிப்பு 2021 இல் $3.9 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து $10.8 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.


 StartupTN திட்டம், அதன் வளர்ச்சிக்கு ஆதரவாக பல்வேறு முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. சமூகத்தின் அனைத்து பிரிவினரிடையே சமத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தமிழ்நாடு எஸ்சி / எஸ்டி புத்தொழில் நிதியானது (SC/ST Startup Fund) அத்தகைய ஒரு முயற்சியில் குறிப்பிடத்தக்கதான ஒன்றாகும். 2022-23 ஆம் ஆண்டில், முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின சமூகத்தினரால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக ரூ.30 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். அதன் சிறப்பான பயன்பாட்டின் காரணமாக, இந்த நிதி 2023-24 ஆம் ஆண்டில் ரூ.50 கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போது, இந்தத் திட்டத்தின் கீழ் 30 புத்தொழில் நிறுவனங்களின்  முதலீட்டைப் பெற்றுள்ளன. 


தமிழ்நாடு தொழில் தொடங்குவோர்  ஊக்குவிப்பு நிதியம் (Tamil Nadu Startup Seed Fund (TANSEED)) என்பது ஆரம்ப கட்ட புத்தொழில்களுக்கு நிதி உதவி வழங்கும் ஒரு திட்டமாகும். இது பெண்கள் தலைமையிலான, கிராமப்புற மற்றும் பசுமை தொழில்நுட்ப தொழில்முனைவு திட்டங்களுக்கு ரூ.15 லட்சமும், மற்ற புத்தொழில் திட்டங்களுக்கு ரூ.10 லட்சமும் ஒதுக்குகிறது. இதுவரை, 132 புத்தொழில் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளன. மேலும், அதன் பயனாளிகளை அடையாளம் காணும் செயல்முறை நடந்து வருகிறது.


மண்டல புத்தொழில் மையம் (Regional Startup Hub) தமிழ்நாட்டின் மற்றொரு தனித்துவமான முயற்சியாகும். மதுரை, திருநெல்வேலி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் ஏற்கனவே இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், அவற்றை சேலம், தஞ்சாவூர், ஓசூர் மற்றும் கடலூரில் செயல்படுத்த அவை திட்டமிடப்படவுள்ளன.


புத்தொழில்முனைவோர் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு உதவ தமிழ்நாடு புத்தொழில் (StartupTN) திட்டம் 155343 என்ற ஒரு உதவி எண்ணை அறிவித்துள்ளது.  இந்த உதவி எண்ணின் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மக்கள் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.  கடந்த எட்டு மாதங்களில் 3500 க்கும் மேற்பட்டோர் இந்த சேவையால் பயனடைந்துள்ளனர்.


முதலீட்டாளர்களுடன் புத்தொழில்களை இணைக்கும் TANFUND போர்டல், என்ற தரவுத்தளம் தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு (Tamil Nadu Global Investors Meet) 2024 இன் போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது, இந்த தளத்தில் 250 பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் 3,350 க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் உள்ளனர்.


MentorTN என்பது அனுபவம் வாய்ந்த நிபுணர்களுடன் புத்தொழில் நிறுவனங்களை இணைக்கும் ஒரு தளமாகும். இதில், 250க்கும் மேற்பட்ட நிபுணர்கள் வழிகாட்டிகளாக இணைந்துள்ளனர். மேலும் 650 புத்தொழில்கள் பதிவு செய்துள்ளன. இந்த தளம் 165 மணிநேர வழிகாட்டுதல் அமர்வுகளையும் ஏற்பாடு செய்துள்ளது.


தமிழ்நாடு 115க்கும் மேற்பட்ட புத்தொழில் காப்பகங்களைக் (incubators) கொண்ட துடிப்பான புத்தொழிலின் சூழல் (startup ecosystem) அமைப்பைக் கொண்டுள்ளது. இது நாட்டிலேயே மிகப்பெரியது.  பெரு நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகள் சவால்களை எதிர்கொள்ளவும், புத்தொழில்கள், புதுமையாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து தீர்வுகளைப் பெறவும் உதவிடும் நோக்கில்  ”Open Innovation Portal” என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு புத்தொழில் திட்டம் (StartupTN), ஒரு மாநில அரசின் சார்பாக முதன்முறையாக தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவை ஏற்பாடு செய்கிறது. இது ஒரு மாநில அரசின் முதல் முயற்சியாகும். நிறுவனர்களின் தகுதியின் அடிப்படையில் புத்தொழிலுக்கு நிதியளிக்க முதலீட்டாளர்களுக்கு உதவுவதையும், தொழில்முனைவோர் மற்றும் புத்தொழில்  சூழல் அமைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.   


AngelsTN என்பது தமிழ்நாடு புத்தொழில் திட்டத்தின் (StartupTN) மற்றொரு முயற்சியாகும். இது ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கு அதிகாரம் மற்றும் கல்வியை அளிக்கும் தளமாக செயல்படுகிறது. முதலீடுகளின் சிக்கலான உலகில் நம்பிக்கையுடன் செல்ல தேவையான அறிவு மற்றும் திறன்களின் அடிப்படையில் வழங்குவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், முதலீட்டாளர்களாக ஆவதற்கு ஊக்குவிப்பதையும், உள்ளூர் புத்தொழில்களுக்கு ஆதரவாக நிதி வழங்குவதையும் இந்த தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.  


புத்தொழில் நிறுவனங்கள் எளிதாக அணுகுவதற்கும், முதலீடுகளை ஈர்க்கவும் உலகின் பல்வேறு பகுதிகளில் உலகளாவிய திறன் மையங்களை நிறுவி வருகிறது. அவர்கள் ஏற்கனவே துபாயில் ஒரு மையத்தை அமைத்துள்ள நிலையில், மேலும் பிற முக்கியமான இடங்களில் அதிக மையங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மண்டல மற்றும் பொருள்சார் நிதிகளில் (regional and thematic funds) ரூ.100 கோடி முதலீடு செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.  முதலீட்டாளர்களால் நிர்வகிக்கப்படும் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் திட்டத்தால் (StartupTN) ஒருங்கிணைக்கப்படும் இந்த நிதி மாநிலத்தின் புத்தொழில் சூழல் அமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


ஒரு வணிகத்தின் அடையாளத்தை நிறுவுவதற்கும், தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் அடிப்படையில் போட்டியாளர்களிடமிருந்து அதை வேறுபடுத்துவதற்கும் பிராண்ட்டிங் (Branding) முக்கியமானது. புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் பிராண்ட் அடையாளத்தை வளர்க்க உதவும் வகையில் பிராண்ட்லேப் முன்முயற்சியின் (BrandLab initiative) கீழ் Nil-Brand-Sell என்ற பிராண்டிங் பாடத்தை தமிழ்நாடு புத்தொழில் (StartupTN)  அறிமுகப்படுத்தியது.

 

தமிழ்நாடு புத்தொழில் திட்டம் (StartupTN), அதன் சமீபத்திய முயற்சிகளின் ஒரு பகுதியாக புத்தொழில்களுக்கான நுண்ணறி அட்டைகளை (Smart card) அறிமுகப்படுத்தியுள்ளது. இது, அவர்களின் தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்து, மானிய விலையில் பலவிதமான சேவைகள் மற்றும் தயாரிப்புகளுடன் தொடக்க நிலைகளில் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.


2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய தமிழ்நாடு முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த தொலைநோக்கை நனவாக்குவதில் தமிழ்நாடு புத்தொழில் திட்டம் (StartupTN) முக்கிய பங்கு வகிக்க உறுதிபூண்டுள்ளது. 




Original article:

Share:

இலவச காலை உணவு திட்டம் மற்றும் ஆரோக்கியமான சமுதாயம் - சதீஷ் லட்சுமணன்

 தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட இலவச காலை உணவு திட்டம் வெறும் இலவசம் மட்டுமல்ல, குடிமக்களின் நலனில் அக்கறை கொண்ட  ஓர் அரசின் கடமையாகும்.


வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்தில் உள்ள வசந்தநாடை என்ற சிறிய கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் கோபிநாத் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். அவர் காலை உணவு திட்டத்தின் வெற்றியைப் பற்றி பேசுகிறார். வழக்கமாக காலை உணவை உண்ணாமல் வரும் சுமார் 25 நரிக்குறவர் மாணவர்கள் தற்போது இந்த திட்டம் மூலம் பயனடைகின்றனர். முன்பு, அவர்கள் அருகிலுள்ள உணவகத்தில் அவசரமாக உணவு உண்பார்கள். ஆனால், பசியுடன்தான் இருப்பார்கள். மேலும், சுமார் 40 முதல் 45 மாணவர்களின் பெற்றோர்கள் கட்டுமானத் தொழிலாளர்களாக உள்ளனர். பெற்றோர்கள் காலையில் சீக்கிரமாக வேலைக்கு செல்கின்ற காரணத்தினால், மாணவர்கள் காலை உணவை உண்ணாமல், மதிய உணவை மட்டுமே உணவாக நம்பியிருந்தனர். ஆனால், இப்போது, அரசின் காலை உணவுத் திட்டத்தால், இந்த மாணவர்கள் பள்ளிக்கு சீக்கிரம் வருகிறார்கள். அவர்கள் அதிக ஆற்றலுடனும், பாடம் கற்றுக்கொள்வதில் ஆர்வமாகவும் காணப்படுகிறார்கள். இந்தத் திட்டம் அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதாக உள்ளது என கோபிநாத் நினைக்கிறார்.


ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கம் தட்டு மற்றும் டம்ளர்களை வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார். இது சிறியதாகத் தோன்றலாம், ஆனால் முக்கியமானது. அணைக்கட்டு வட்டத்தில், மலைச்சரிவுகளில் பல கிராமங்கள் உள்ளன. மேலும், மாணவர்கள் பள்ளிக்கு சிறிது தூரம் நடந்துதான் வர வேண்டும். அவர்களுக்கு உணவு அளிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் பாத்திரங்களை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது. இதனால் மாணவர்களின் வருகையும், கல்வியில் ஆர்வமும் அதிகரித்துள்ளது.


ஒரு அரசாங்க நலத்திட்டமானது, அதன் அசல் இலக்குகளைத் தாண்டி அதிகமான மக்களுக்கு உதவும்போது, அது மற்றவர்கள் பின்பற்றுவதற்கான ஒரு முன்மாதிரி திட்டமாக மாறும். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தமிழ்நாட்டின் மக்கள் நல திட்டங்களில் ஒரு குறிப்பிடத்தக்க திட்டமாகும். இது, முழு நாட்டிற்குமே ஒரு முன்மாதிரி. தெலுங்கானா ஏற்கனவே இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. 1,543 பள்ளிகளில் 6 மாதங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, தற்போது 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளில் 16.85 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டம், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் ஆரோக்கியம், வருகை மற்றும் கற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் சத்தான காலை உணவை வழங்குகிறது. இது வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு பேருதவியாய் இருப்பதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தலை ஊக்குவிக்கிறது.


தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் வாசிக்க வேண்டிய  உரையில் இந்த திட்டம் இடம்பெற்றிருந்தது. இந்த உரை மாநில அரசால் தயாரிக்கப்பட்டது. சமீபத்திய சட்டசபை கூட்டத்தின் முதல் நாளின் போது கவர்னர் அதை படிக்கவில்லை. 2022 மே மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்றார். இது அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் நடக்கும். காலை உணவை வழங்குவது, தலை சிறந்த ஐந்து திட்டங்களில் ஒன்றாகும். திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.


ஒவ்வொரு குழந்தைக்கும் தினமும் 50 கிராம் உணவு கிடைப்பதாக சமூக நலத்துறை கூறுகிறது. உள்ளூர் சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட காலை உணவுகள் வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது பயன்படுத்தப்படுகின்றன. இது ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் 293.40 கலோரிகள், 9.85 கிராம் புரதம், 5.91 கிராம் கொழுப்பு, 1.64 கிராம் இரும்பு, மற்றும் 20.41 கிராம் கால்சியம்,  ஆகியவற்றை வழங்குகிறது.


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் நிறுவனருமான சி.என்.அண்ணாதுரையின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று மதுரையில் இந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக, தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின் (National Family Health Survey (NHFS-5)) தரவுகளிலிருந்து அதிக இரத்த சோகை விகிதங்களைக் கொண்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகள், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியில் (State Balanced Growth Fund (SBGF)) இருந்து பொருளாதார ரீதியாக பின்தங்கிய தொகுதிகள், பழங்குடியினர் மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்தனர். இத்திட்டம் 1,937 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 1,48,315 மாணவர்களை உள்ளடக்கியது.


தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு நடத்திய ஆய்வில், முதல் கட்டத்தில் 1,543 தொடக்கப் பள்ளிகளில், 1,319 பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. 624 பள்ளிகளில் 10% ஆகவும், 462 பள்ளிகளில் 20% ஆகவும், 193 பள்ளிகளில் 30% ஆகவும் வருகை அதிகரித்துள்ளது. திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.


இத்திட்டத்தின் வெற்றிகரமான முடிவுகளுக்குப் பிறகு, மார்ச் 2023 இல், அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையின் போது, "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து 30,122 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்" என்று அறிவித்தார். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், இத்திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 2.5 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இத்திட்டத்தின் விரிவாக்கம் அதே ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.


பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் ஆரோக்கியம் வழங்க மதிய உணவுத் திட்டம், 1922 இல் நீதிக்கட்சியால் தொடங்கப்பட்டது. பின்னர் வந்த பல்வேறு அரசாங்கங்களால் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமானது, மாணவர்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்களின் குறிப்பாக தாய்மார்களின் பணிச்சுமையையும் குறைத்துள்ளது.


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் மிகவும் பயனுள்ள நலத்திட்டங்களில் ஒன்றாக இருக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டது போல, இந்தத் திட்டம் ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்கான முதலீடாகும்.




Original article:

Share:

அதிகப்படியான ஏகபோக நடைமுறைகளைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் சந்தைகள் சட்டம் (Digital markets law) தேவை -தலையங்கம்

 பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை நிறுவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை (EU’s Digital Markets Act) போன்ற ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.


டிஜிட்டல் பொருளாதாரத்தின் எழுச்சி அதை ஒழுங்குபடுத்துபவர்களுக்கு சில சவால்களைக் கொண்டுவருகிறது. பெரிய நிறுவனங்கள் போட்டிக்கு இடையூறாக இல்லை என்பதை உறுதி செய்யும் அதே நேரத்தில் அவர்கள் மேம்பட்டு வரும் டிஜிட்டல் சந்தையை ஆதரிக்க வேண்டும். இந்த சவாலுக்கு ஒரு எடுத்துக்காட்டு, Google- இன் விதிகளைப் பின்பற்றாததற்காக அதன் Playstore-லிருந்து செயலிகளை அகற்றுவதற்கான சமீபத்திய நடவடிக்கை ஆகும். Google-ன் ஆன்லைன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் விரிவான அணுகலைக் கொண்டுள்ளன. இது, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க ஆற்றலை அளிக்கிறது. அவை,  நுகர்வோரின் நடத்தையில் செல்வாக்கு செலுத்துவதற்கும், உலகளாவிய அளவில் அரசியல் தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் Google ஐ பயன்படுத்துகின்றன.


இந்தியாவில், கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் (Google's Android operating system) திறன்பேசி சந்தையில் (smartphone market) கிட்டத்தட்ட 85% ஆதிக்கம் செலுத்துகிறது.  வாடிக்கையாளர்களுக்கான செயலியை உருவாக்கும்  இந்திய நிறுவனங்கள் மீது அதிகக் கட்டணங்களைச் சுமத்துவது போன்ற நுழைவுக்கானத் தடைகளை அமைத்து, அதன் PlayStore-ன் செல்வாக்கை Google நிறுவனம் பயன்படுத்துகிறது. இந்நிறுவனங்களின் செயலிகளை  PlayStore லிருண்டு  Google அகற்றுவது அதன் ஏகபோக சக்தியை (monopolistic muscle) பிரதிபலிக்கிறது. புத்தொழில் நிறுவனங்களின் புகார்கள் இருந்தபோதிலும், இந்திய போட்டி ஆணையம் (Competition Commission of India (CCI)) நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டி வருகிறது. பிரச்சினை எழுப்பப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இதற்கு நேர்மாறாக, தங்கள் ஆப் ஸ்டோர்களில் போட்டிக்கு எதிரான நடைமுறைகளுக்காக Google மற்றும் ஆப்பிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக ஐரோப்பிய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்க இந்தியா நிறுவனங்களையும் பொறுப்பாக்க வேண்டும். நியாயமற்ற நுழைவுத் தடைகள் இல்லாத நியாயமான சந்தை, இந்தியாவின் வளர்ந்து வரும் புத்தொழில் தொடங்குவதற்கான சூழலுக்கு முக்கியமானது.


இந்தியா பன்முக அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். முதலாவதாக, ஏகபோக நடைமுறைகளைத் தடுக்க, புத்தொழில் நிறுவனங்களுக்கு Google வசூலிக்கக்கூடிய கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியமானது. வணிகத்தின் மீதான பொதுவாக சந்தையானது அதிகாரத்தால் வழிநடத்தப்பட்டாலும், ஏகபோக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போது அரசின் தலையீடு அவசியமாகிறது. 11% முதல் 26% வரையிலான கட்டணத்தை Google நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பல புதிய தொடக்கங்களுக்கு அதிகமாக இருக்கலாம். இருப்பினும், செயலியை உருவாக்குபவர்கள் தங்கள் விற்பனையில் 40-50% க்கும் அதிகமான பகுதியை PlayStore-ன் விரிவான வரம்பிற்குக் காரணம் என்று குறிப்பிடுவது முக்கியம். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தலைமையில் நடந்து வரும் முயற்சிகள், கூகுள் தனது சேவைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டணத்தை நிர்ணயிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவை, நியாயமான மற்றும் சமநிலையான தீர்வுக்காக பாடுபட வேண்டும். இரண்டாவதாக, இயங்குதளங்கள் (operating systems) அல்லது வன்பொருள் பிராண்டுகளைப் (hardware brands) பொருட்படுத்தாமல், PlayStore-க்கு இந்தியா தொழில்துறை சார்ந்த ஒரு மாற்றத்தை அரசாங்கம் உருவாக்கவும் மற்றும் அனைத்து சாதனங்களிலும் அதன் அணுகலை உறுதி செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை உள்ளூர் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் மற்றும் நியாயமான நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள கூகுளைத் தூண்டும். இந்தியாவின் இருப்பு தயாரிப்புகளான  UPI (Unified Payments Interface) மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க் (Open Network for Digital Commerce (ONDC)) போன்றவை டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் மின்-வர்த்தகத்தை கணிசமாக முறைப்படுத்தியுள்ளன. இதே மாதிரி ஒரு இந்திய செயலியை நிறுவ நாம் பயன்படுத்தலாம்.


மூன்றாவதாக, ஜெயந்த் சின்ஹா தலைமையிலான நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு (Parliamentary Standing Committee) முன்வைத்த பரிந்துரைகளை அரசு ஆராய வேண்டும். அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தைகள் சட்டம் (Digital Markets Act (DMA)) போன்ற ஒரு சட்டத்தை உருவாக்க முன்மொழிகிறார்கள். இது பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பை கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு தனித்துவமான டிஜிட்டல் போட்டிச் சட்டத்தின் (Digital Competition Law) அவசியத்தை ஆராய பெருநிறுவன விவகார அமைச்சகம் (Ministry of Corporate Affairs) பிப்ரவரி 2023 இல் டிஜிட்டல் போட்டிச் சட்டம் (Digital Competition Law) குறித்த குழுவை நிறுவியது. ஆனால், அந்தக் குழு இன்னும் அதன் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. ஒரு சட்ட கட்டமைப்பு இல்லாமல், நியாயமற்ற சந்தை நடைமுறைகளை எதிர்கொள்வது சவாலானதாக இருக்கும்.




Original article:

Share:

டெல்லி அரசு மக்கள் நலனில் கவனம் செலுத்துகிறது. ஆனால் இடைவெளிகள் நீடிக்கின்றன -தலையங்கம்

 டெல்லியின் 2025 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், அரசியல் நோக்குநிலை ஆச்சரியப்படுவதற்கில்லை. இது தேர்தல் ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட். நிதியமைச்சர் அதிஷியின் "ராம ராஜ்ஜியம்" பற்றிய குறிப்பு, அதன் நலனில் கவனம் செலுத்துவதையும் பெரும்பான்மை சமூகத்தை ஈர்க்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. ஆம் ஆத்மி அரசாங்கம் பெண் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கிறது. இலவச பேருந்து பயணத்தைத் தொடர்ந்து வரி விதிக்கக்கூடிய அளவிற்குக் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் ₹1,000 பண உதவி வழங்குகிறது. மதிப்பிடப்பட்ட ஐந்து கோடி பயனாளிகளுடன், இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்க தேர்தல் செல்வாக்கைக் கொண்டுள்ளது.


டெல்லியில் 2025 நிதியாண்டிற்கான பட்ஜெட் முந்தைய ஆண்டின் பட்ஜெட்டை விட சற்று சிறியது, 2024நிதியாண்டி இல் ₹78,800 கோடியுடன் ஒப்பிடும்போது மொத்தம் ₹76,000 கோடி. இந்த குறைப்பு இருந்தபோதிலும், ஆம் ஆத்மி அரசாங்கம் கல்வி, சுகாதாரம் மற்றும் பயன்பாடுகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த பகுதிகள் பத்து ஆண்டிற்கு மேலாக கட்சியின் கொள்கைகளின் மையமாக இருந்து வருகின்றன. நடப்பு நிதியாண்டில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டாலும், கல்விதான் வரவு செலவுத் திட்டத்தில் மிகப் பெரிய பகுதியைப் பெறுகிறது. இந்த கவனம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


வரவுசெலவுத் திட்டம் தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்கான செலவினங்களை கணிசமாக அதிகரிக்கிறது. குறைந்த நுகர்வு உள்ள வீடுகளுக்கான இலவச குடிநீர் திட்டமும் இதில் அடங்கும். அங்கீகரிக்கப்படாத காலனிகளில் குடிமை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கம். இருப்பினும், அதிக கவனம் செலுத்தக்கூடிய பகுதிகள் உள்ளன. சுற்றுச்சூழலுக்கு இருக்க வேண்டிய அளவுக்கு கவனம் செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, போக்குவரத்துக்கான குறைக்கப்பட்ட பட்ஜெட் ஆச்சரியமாக உள்ளது. நகரமயமாக்கலின் அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, பசுமை போக்குவரத்து தீர்வுகளில் அதிக முதலீடு செய்வதற்கான எதிர்பார்ப்பு இருந்தது. இவை கவனிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகள்.




Original article:

Share: