வன்முறை, வீடற்ற தன்மை மற்றும் பெண்களின் மன ஆரோக்கியம் - வந்தனா கோபிகுமார், லட்சுமி நரசிம்மன்

 மனநலப் பிரச்னையின் பல வெளிப்பாடுகள் பாதகமான வாழ்க்கை நிகழ்வுகளின் யதார்த்தத்தில் பொதிந்திருப்பதாகத் தெரிகிறது.


இந்தியாவில் பல பெண்கள் வன்முறையை எதிர்கொள்வதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (National Family Health Survey (NFHS-5)) காட்டுகிறது. 18-49 வயதுடைய பெண்களில் சுமார் 30% பேர் 15 வயதிலிருந்து உடல் ரீதியான வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். மேலும் 6% பேர் பாலியல் வன்முறைக்கு எதிராக புகாரளித்துள்ளனர். வன்முறை மற்றும் மனநலப் பிரச்சனைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு பிரச்சனை மற்றொரு பிரச்சனைக்கு  வழிவகுக்கும். இந்த இரு காரணிகளும் பெண்களை வீடற்றவர்களாக மாறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட வீடற்ற பெண்களுக்கு தி பனியன் (The Banyan) உதவியதில், பெண்களுக்கு எதிரான வன்முறை, வீடற்ற தன்மை மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவை எவ்வாறு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது  என்பதைக் காட்டுகிறது . 


முக்கிய கண்டுபிடிப்புகள்:


தி பனியன் (The Banyan) வெளிநோயாளர் சேவைகளில் 346 பெண்களிடம் மேற்கொண்ட ஓர் ஆய்வில்,  பெண்கள் தங்கள் மன ஆரோக்கியத்திற்காக உதவியை நாடினாலும், உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள், பெரும்பாலும் வன்முறையுடன் தொடர்புடையது, வீடற்ற நிலைக்கு வழிவகுக்கும் என்று ஆய்வில் கண்டறிந்தனர். இது உலகெங்கிலும் உள்ள பிற ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளுடன் பொருந்துகிறது. மற்றொரு ஆய்வு முடிவு  வீடற்ற பெண்கள் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சி அனுபவங்களை வெளி கொண்டு வந்தது. வன்முறை, தனிமை, அவமானம் மற்றும் வறுமை பற்றிய பற்றிய விவரங்கள் அடங்கியிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். பெண்களால் விவரிக்கப்பட்ட அனுபவங்கள் மனநலக் கோளாறுகளின் நோயறிதல்  மற்றும் புள்ளியியல் கையேட்டில், அதிர்ச்சி எவ்வாறு வரையறுக்கப்படுகிறது என்பதை முழுமையாக காட்டவில்லை.

 

மனநலம் பாதிக்கப்பட்ட பல பெண்கள் வீடற்றவர்களாக மாறிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். சிலருக்கு, இது உதவிக்கான அணுகல் இல்லாதது மட்டுமல்ல, நடந்துகொண்டிருக்கும் வன்முறையிலிருந்து தப்பிக்க ஒரு வழியாகவும் இருந்தது. இந்த வன்முறை வெவ்வேறு நபர்களிடமிருந்து வந்தது.  இந்த வன்முறை ஒரு கட்டுப்படுத்தும் கணவர் அல்லது சாப்பாட்டுக்கு பணம் கொடுக்க அடிமையாக விற்கப்படுவாய் என்று மிரட்டல் விடுத்த ஒரு அத்தை  போன்ற குடும்ப உறுப்பினர்களிடமிருந்து வரக்கூடும். குழந்தை பருவ பாலியல் வன்முறை மற்றும் கூட்டாளர்களிடமிருந்து வன்முறையை அனுபவிப்பது அவர்களின் மன ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும்  அதனால் அவர்கள் அடிக்கடி வீடற்றவர்களாக மாறினர் என்பதையும் பற்றி பெண்கள் பேசினர்.  


லீலாவின் (Leela) கதை இந்தப் போராட்டத்தைக் காட்டுகிறது. இவருக்கு 5 வயதாக இருந்தபோது, அவரது தாய் ஜெயா (Jaya) மற்ற உடன்பிறப்புகளை விட்டுவிட்டு அவரை ஒரு பாலியல் வன்முறை செய்யப்பட்ட வீட்டிலிருந்து அழைத்துச் சென்றார்.  இரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள நினைத்த தாயின் எண்ணங்களை முழுமையாக புரிந்து கொள்ளாத லீலா, பயத்தில் அவளை தடுத்தாள். தெருக்களில் உயிர்வாழ்வதற்கும், உணவு மற்றும் தூங்குவதற்கு பாதுகாப்பான இடங்களைக் கண்டுபிடிப்பதற்கும் அவர்கள் தினசரி சவால்களை எதிர்கொண்டனர். ஜெயாவின் காயமடைந்த கை அவர்கள் அனுபவித்த வன்முறையை நினைவூட்டுகிறது. 

 

வறுமை மற்றும் சாதி போன்ற கட்டமைப்பு தடைகள், வன்முறை மற்றும் உதவியற்ற உணர்வுகளுடன் சேர்ந்து, பெரும்பாலும் மக்களை தங்கள் வீடுகள் மற்றும் உறவுகளிலிருந்து விலக்கி வைக்கின்றன. அங்கு அவர்கள் பாதுகாப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறார்கள். எலன்கோரின் (Ellen Corrin’s) ஆராய்ச்சி ஸ்கிசோஃப்ரினியாவில் (schizophrenia) சமூக விலகலை (social withdrawal) ஆராய்கிறது. எதிர்மறை அறிகுறிகளில் எளிமையான பார்வைகளை இது சவால் செய்கிறது. சமூகத்தில் ஒருவர் எவ்வளவு நன்றாக பொருந்துகிறார் என்பதைப் பார்ப்பதற்குப் பதிலாக, அறிகுறிகளாகக் காணப்படும் நடத்தைகளுக்குப் பின்னால் உள்ள தனிப்பட்ட அர்த்தங்களைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துகிறார். இந்த அணுகுமுறை பெண்களின் மன ஆரோக்கியம், வீடற்ற தன்மை மற்றும் வன்முறை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளைப் புரிந்துகொள்ளவும் உதவும்.

குடை போன்ற முத்திரை 


வரலாறு முழுவதும், பெண்கள் புத்திசாலி, உறுதியான அல்லது சுதந்திரமான பண்புகளைக் காட்டும்போது, ​​அவர்களை இழிவுபடுத்துவதற்காக மனநலம் பாதிக்கப்பட்டோர் (Madness)  என்று நியாயமற்ற முறையில் முத்திரை குத்தியுள்ளனர். ஆர்வம் அல்லது தன்முனைப்பு போன்ற குணாதிசயங்களைக் காட்டும் பெண்கள் சூனிய வேட்டை முதல் புகலிடங்களில் அடைக்கப்படுவது வரை மனநலம் பாதிக்கப்பட்டோர்  என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். இன்றைய ஆணாதிக்க சமூகத்தில், பெண்கள் இன்னும் குறுகிய பாத்திரங்களுக்குள் பொருந்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எதிரான வன்முறை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த சூழலில், மனநலம் பாதிக்கப்பட்டோர்  என்பது ஒரு தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல, பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறையின் எதிர்வினையாகவே பார்க்கப்படுகிறது.


சில பெண்கள் தங்கள் மனநலம் பாதிக்கப்பட்டதை சமூகம் தங்களிடமிருந்து எதிர்பார்ப்பதற்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்கான ஒரு வழியாக கருதுகின்றனர். சமூகம் பெண்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை நிராகரிக்கும் ஒரு வழியாக அவர்கள் இதைப் பார்க்கிறார்கள். இந்த நிராகரிப்பு பாரம்பரிய விதிகளுக்கு அப்பாற்பட்ட புதிய அடையாளங்களை எடுக்க அவர்களை அனுமதிக்கிறது. 100 ஆண் குழந்தைகளின் தாய் அல்லது ஒரு சிக்கலான சடங்கைச் செய்வதன் மூலம் சிறப்பு சக்திகளுடன் ஒரு தெய்வமாக மாற முடியும் என்று அவர்கள் நினைக்கின்றனர். இதன் மூலம், சிலர் உயர்ந்த நோக்கத்தையும் கலாச்சார மரியாதையையும் பெறுகிறார்கள். இந்த மரியாதை சமூகம் மதிக்கும் மற்றும் உயர்ந்த அந்தஸ்துடன் இணைக்கும் ஒன்று. இதற்கிடையில், சில பெண்கள் அவமானம், பயம் மற்றும் குறைத்து மதிப்பிடப்படுவது போன்ற உணர்வுகளிலிருந்து தப்பிக்க தங்களை மனநலம் பாதிக்கப்பட்டோராக பயன்படுத்திக்கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு, மனநலம் பாதிக்கப்பட்டோர் என்பது உள்நோக்கிய பயணம். ஆன்மீக கேள்விகளை ஆராய்வதற்கான ஒரு வழியாக குரல்களைக் கேட்பதையும், விஷயங்களை வித்தியாசமாகப் பார்ப்பதையும் அவர்கள் அனுபவிக்கிறார்கள். சமூகம் வழக்கமாக விதிக்கும் வரம்புகள் இல்லாமல் இந்த ஆய்வு நிகழ்கிறது.


வன்முறையுடன் இணைக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோரின் விளக்கங்கள் சிக்கலானவை. ஆனால் பெண்களின் மன ஆரோக்கியம் பற்றிய விவாதங்கள் முக்கியமாக மனச்சோர்வு, பதட்டம், உணவுக் கோளாறுகள் மற்றும் பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வு போன்ற பிரசவம் தொடர்பான சிக்கல்களில் கவனம் செலுத்துகின்றன. இந்த தலைப்புகள் முக்கியமானவை, ஆனால் அவை பரந்த படத்தை மறைக்கக் கூடாது. பெரும்பாலும், பெண்களின் துன்பம் மருத்துவ லென்ஸ் மூலம் மட்டுமே பார்க்கப்படுகிறது, அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறையின் விளைவுகளை புறக்கணித்து, சமூகத்தை கொக்கியை விட்டுவிடுகிறார்கள். இருப்பினும், மனநலப் பிரச்சினைகள் பெரும்பாலும் கடினமான வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து உருவாகின்றன என்பதை அனுபவம் காட்டுகிறது. எனவே, மனநல சுகாதாரத்திற்கான அணுகலை அதிகரிப்பது மட்டும் போதாது. வன்முறையின் மூல காரணங்களை களைய கூட்டு நடவடிக்கை தேவை.


பெண்களுக்கு எதிரான வன்முறையின் பின்னணியில் உள்ள பல்வேறு காரணங்களைப் புரிந்துகொண்டு அதைத் தடுப்பதற்கான தீர்வுகளை நாம் உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். வீட்டில் செய்யும் வேலைக்கு பெண்களை அங்கீகரித்து ஊதியம் கொடுப்பது ஒரு வழி. மேலும், நாம் ஆதரவான நெட்வொர்க்குகள் மற்றும் வெவ்வேறு குடும்ப கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும், அவை வழக்கமான நெட்வொர்க்குகள் அல்ல. அடிப்படை வருமானம், வீட்டுவசதி மற்றும் நில உரிமையை வழங்குவது பெண்கள் நிதி ரீதியாக மிகவும் சுதந்திரமாக இருக்கவும், வீடற்றவர்களாக இருப்பதைத் தவிர்க்கவும் உதவும். பள்ளிகளில், தீங்கு விளைவிக்கும் பாலின விதிமுறைகளைப் பற்றி இளைஞர்களுக்குக் கற்பிப்பது சமத்துவத்தை மதிப்பிடுவதற்கும் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிராகரிப்பதற்கும் வளர உதவும்.


உயிரியலாளர் ராபர்ட் சபோல்ஸ்கி (Robert Sapolsky) கூறுகையில், நமது செயல்கள் எப்போதும் நமது நனவான தேர்வுகளால் அல்ல. ஆனால் நமது மரபணுக்கள் (genes) மற்றும் மூளை வேதியியல் (brain chemistry) போன்ற விஷயங்களால் பாதிக்கப்படுகின்றன. குழந்தை பருவத்தில் பாலியல் வன்முறை மற்றும் வறுமை போன்ற அனுபவங்கள் நம் மூளை எவ்வாறு உருவாகின்றன என்பதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறுகிறார். நாம் இளமையாக இருக்கும்போதே வன்முறையைக் குறைப்பதற்கான கொள்கைகளும் திட்டங்களும் நமக்குத் தேவை என்பதை இது காட்டுகிறது.



பன்முக அணுகுமுறையை பின்பற்றுங்கள்


வீடற்ற நிலைக்கும் மனநோய்க்கும் இடையிலான தொடர்பு உலகளவில் நன்கு அறியப்பட்டதாகும். ஆனால் நாம் விவரங்களை நெருக்கமாக பார்க்க வேண்டும். இந்த சூழலில் பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. முக்கிய காரணங்களைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, மன ஆரோக்கியத்தைச் சுற்றியுள்ள சிக்கலான பிரச்சினைகளை நாம் ஆழமாக ஆராய வேண்டும். இதன் பொருள் புதிய யோசனைகளை முயற்சிப்பது, வெவ்வேறு நிபுணர்களுடன் பணிபுரிவது, ஆக்கபூர்வமான ஆராய்ச்சி செய்வது மற்றும் அதைக் கடந்து வந்தவர்களைக் கேட்பது. பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் பலவிதமான வலுவான தீர்வுகளைக் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக வீடற்ற பெண்களுக்கு ஒரே ஒரு எளிய பதில் இல்லை. ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பல சிறுபான்மை குழுக்களின் ஒரு பகுதியாக இருப்பது போன்ற வெவ்வேறு விஷயங்கள் மன ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி நாம் படிக்க வேண்டும். பெண்ணிய நிலைப்பாட்டுக் (feminist standpoint) கோட்பாட்டைப் பயன்படுத்தி நமது புரிதலை மேம்படுத்துவதையும் நாம் பரிசீலிக்க வேண்டும். 


வந்தனா கோபிகுமார் ஒரு  சமூகப் பணி பயிற்சியாளர்,  ஆராய்ச்சியாளர் மற்றும் தி பனியன் (The Banyan) ஒரு மனநல சேவை அமைப்பு மற்றும் தி பனியன் அகாடமி ஆஃப் லீடர்ஷிப் இன் மென்டல் ஹெல்த் (The Banyan Academy of Leadership in Mental Health) ஆகியவற்றின் இணை நிறுவனர் ஆவார்.




Original article:

Share:

MIRV முன்னேற்றத்துடன் இந்தியாவின் அணுசக்தி தடுப்பு திறன் - ஹர்ஷ் வி.பந்த், கார்த்திக் பொம்மகாந்தி

 அக்னி-5 பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகன (multiple independently targetable reentry vehicle (MIRV)) ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை இந்தியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த ஏவுகணை, குறிப்பாக, சீனாவிற்க்கு போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation (DRDO)) சமீபத்தில் நடத்திய அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணையின் (Agni-5 ballistic missile)  "திவ்யாஸ்திரா" (Divyastra) சோதனையானது  குறிப்பிடத்தக்க இராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அக்னி-5 ஆனது 5,000 கிலோமீட்டர்களுக்கு மேல் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இது இன்றுவரை சோதிக்கப்பட்ட இந்தியாவின் ஏவுகனைகளில் மிக நீண்ட தூர இலக்கை தாக்கும் ஏவுகணையாகும். இந்தியாவின் அணுசக்தி தடுப்பு திறன்களை கணிசமாக உயர்த்தும் பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு  (Multiple Independently Targetable Re-entry Vehicles (MIRVs)) ஏவுகணை இந்த சோதனையை முக்கியமாக்குகிறது.


சீனாவுடன் ஒப்பிடுகையில்


பல்வேறு இலக்குகளைத் பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகன (MIRVs) ஏவுகணை தொழில்நுட்பம் உலகிற்கு புதியதல்ல. ஆனால், இது இந்தியாவுக்கு புதிது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகியவை ஐந்து முக்கிய அணுசக்தி நாடுகள் மட்டுமே இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகனங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளைக் கொண்டுள்ளன. இந்த ஏவுகணைகளை அந்த நாடுகள் தங்கள் அணு ஆயுத அமைப்புகளில் பயன்படுத்துகின்றனர். இப்போது, பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகனங்களை (MIRVs) சுமந்து செல்லக்கூடிய ஏவுகணையையும் இந்தியா உருவாக்கியுள்ளது. இது இந்த மேம்பட்ட ஏவுகணை தொழில்நுட்பத்தைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் இனைந்துள்ளது.


பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகனங்கள் (MIRV) இன்றியமையாதவை, ஏனெனில் அவை ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் மற்றும் இதனால் எதிரிகள் தங்களை தற்காத்துக் கொள்வது கடினம். சீனா Hongqi (HQ-19) தரை அடிப்படையிலான இடைமறிப்பான்கள் போன்ற பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்புகளை உருவாக்கி வருகிறது, ஆனால் அக்னி-5 போன்ற ஏவுகணைகளுக்கு எதிரான அவற்றின் செயல்திறன் நிச்சயமற்றது. இருப்பினும், இந்த விஷயத்தில் சீனா முன்னேறி வருகிறது. இந்த பாதுகாப்புகள் அக்னி ஏவுகணையின் முந்தைய பதிப்புகளை இடைமறிக்கக்கூடும். குறிப்பாக, அவை ஒரே ஒரு போர்க்கப்பலை மட்டுமே கொண்டு சென்றால். சீனா தனது அணு ஆயுதங்களை கட்டமைத்து, அதை பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்புடன் இணைத்தால், அணு ஆயுத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் திருப்பி தாக்கும் திறனை அது குறைக்கலாம். அக்னி-5ல் பல போர்க்கப்பல்களை ஒருங்கிணைப்பதன் மூலம், சீனாவுடனான அணுசக்தி உறவில் இந்தியா ஓரளவு சமநிலையை மீட்டுள்ளது. இருப்பினும், பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகனங்களுடனான (MIRV) அக்னி-5 இன் கூடுதல் சோதனை இந்தியாவின் அணு ஏவுகணை ஆயுதக் திறனைக் மிகவும் நம்பகமானதாக மாற்றுவதற்கு அவசியமாகிறது. ஏனெனில், இந்திய இராணுவம் அதன் திறன்களில் நம்பிக்கையுடன் இருக்க அதிக சோதனைகள் தேவைப்படலாம்.


அவசியமான தேவைகள்


பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகன (MIRV) பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குவது கடினம், ஏனெனில் இது கடினமான தொழில்நுட்ப தரநிலைகளை பூர்த்தி செய்வதை உள்ளடக்கியது. இந்த தரநிலைகளில் அணு ஆயுதங்களை சிறியதாக்குவது, போஸ்ட் பூஸ்ட் வாகனத்திலிருந்து (Post Boost Vehicle (PBV)) வெளியிடப்படுவதற்கு முன், சுமந்து செல்லும் கொள்கலன் எடை குறைந்ததாக இருப்பதை உறுதிசெய்து, ஏவுகணைக்குள் பொருத்தி, போஸ்ட் பூஸ்ட் வாகனத்திலிருந்து பிரிந்து செல்லும் வகையில், மறு நுழைவு வாகனங்களை துல்லியமாக கட்டமைப்பது ஆகியவை அடங்கும். வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் போது இந்த வாகனங்களுக்கு வழிகாட்டுதல் துல்லியமாக இருக்க வேண்டும். ஒரு பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகனத்தை (MIRV) அதன் வரம்பிற்குள் உள்ள பல இடங்களை மட்டுமே குறிவைக்க முடியும். சமீபத்திய அக்னி-5 சோதனை மூலம், இந்தியா இந்த சவாலான தொழில்நுட்ப இலக்குகளில் வெற்றி பெற்றுள்ளது. 

ஆரம்பத்தில், இந்தியா தனது அணுசக்தி திறன்களில் இரண்டு முக்கிய பிரச்சினைகளை எதிர்கொண்டது. முதலாவதாக, போதுமான அணுகுண்டு சோதனை இல்லை, சிறிய போர்க்கப்பல்களை தயாரிப்பதில் இந்தியாவிற்கு பல சிரமங்கள் இருந்தன. வெவ்வேறு இலக்குகளைத் தாக்க ஒரே ஏவுகணையில் பலவற்றை பொருத்துவதற்கு இந்தியாவிற்கு சிறிய போர்க்கப்பல்கள் அவசியம். இரண்டாவதாக, சோதனைகள் இல்லாததால் ரீ-என்ட்ரி வாகனங்களின் வடிவமைப்பையும் பாதித்தது. பூமியின் வளிமண்டலத்தில் ஏவுகணைகளை எடுத்துச் செல்ல இந்த வாகனங்கள் தேவைப்படுகின்றன.


இருப்பினும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் அதனுடன் தொடர்புடைய முகமைகள் இந்தத் தடைகளைத் தாண்டிவிட்டன. ஏவுகணைகளுடன் போர்க்கப்பல்களை ஒருங்கிணைக்கும் டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகம் (Terminal Ballistics Research Laboratory (TBRL)) மற்றும் அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (Advanced Systems Limited (ASL)) ஆகியவை இந்த நிறுவனங்கள், அக்னி-5 ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றனர்.  

      

சீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் அக்னி-5 ஏவுகணையை அதன் விமானத்தின் நடுவானில் இடைமறிக்க முயற்சி செய்யலாம். இருப்பினும், இந்தியாவின் அணுசக்தி ஆணையம், குறிப்பாக பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC), சிறிய அணு ஆயுதங்களை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போர்க்கப்பல்கள் ஏவுகணைகளில் பலவற்றை சுமந்து செல்லும் அளவுக்கு சிறியவை, இது ஒரு ஏவுகணை மூலம் பல இலக்குகளை தாக்குவதற்கு அவசியமானது. அக்னி-5 சீனாவை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, இது சீன இராணுவ முன்னேற்றத்திற்கு எதிரான ஒரு இராஜதந்திர நடவடிக்கை என்பதைக் குறிக்கிறது.


இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் அணுசக்தி ஆணையம் (Atomic Energy Commission (AEC)) ஆகியவற்றிலிருந்து இன்னும் முன்னேற்றங்கள் இருக்கலாம். நீண்ட தூர நீர்மூழ்கிக் கப்பல் மூலம் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி (Submarine Launched Ballistic Missile (SLBM)) பரிசோதிப்பதன் மூலம் தனது அணுசக்தித் திறனை மேலும் வலுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த வகை ஏவுகணையை இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவ முடியும்.


அக்னி-5 ஏவுகணை சேர்க்கப்பட்டது, குறிப்பாக பல போர்க்கப்பல்களில் எளிதாக கொண்டு செல்லும் திறன் கொண்டது, சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் அணுசக்தி நிலையை கணிசமாக மேம்படுத்துகிறது. ஏவுகணை தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் சீனாவின் முன்னேற்றத்தை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்ற தெளிவான செய்தியை அந்நாட்டிற்கு இது தெரிவிக்கிறது. அக்னி-5 பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகன (MIRV) ஏவுகணை சோதனையின் மூலம், இந்தியா ஒரு பெரிய அணுசக்தி மற்றும் ஏவுகணை சக்தியாகக் கருதப்படும் இலக்கில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. 


ஹர்ஷ் வி.பந்த், புது தில்லியில் உள்ள அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (Observer Research Foundation) ஆய்வுகளுக்கான துணைத் தலைவர். கார்த்திக் பொம்மகாந்தி, அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் மூத்த ஆய்வாளர்.




Original article:

Share:

காலநிலை மாற்றம் (Climate change) : 3 பெரும் சவால்கள் -அஜய் ஷா

 இந்திய சமூகம் மூன்று சவால்களில் பகிரப்பட்ட ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டியது அவசியம். 


இந்தியாவில், கார்பன் உமிழ்வைக் (carbon emission) குறைப்பதை நோக்கிய பயணமானது மின்சாரத் துறையை மாற்றியமைப்பதைக் கணிசமாக உள்ளடக்கியது. தற்போது, இந்தியாவின் கார்பன் டை ஆக்சைடு (carbon-di-oxide) வெளியேற்றத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு இந்தத் துறையே காரணமாகும். மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கும் போது, மற்ற துறைகளும் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து மின்சாரத்திற்கு மாறி வருகின்றன. எவ்வாறாயினும், புதைபடிவ எரிபொருள் (fossil fuel) துறையில் குறிப்பிடத்தக்க சொத்துக்கள் மற்றும் பணியாளர்கள் காரணமாக கார்பன்  இல்லாத மின்சாரத் துறையை அடைவது சவாலானது. அவை சமூகத்தின் வாழ்க்கை முறையில் வேரூன்றிவிட்டன மற்றும் காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கின்றன.


நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு இல்லாத எதிர்காலத்தை கற்பனை செய்ய கொள்கை வகுப்பாளர்கள் போராடுவதால், தேவையான மாற்றங்களைக் கொண்டுவர மத்திய திட்டமிடல் மட்டும் போதுமானதாக இருக்காது. ஆயினும்கூட, மில்லியன் கணக்கான வணிகங்கள் மற்றும் தனிநபர்களின் கூட்டு முயற்சிகளுடன், சரியான சலுகைகளுடன், கார்பன் குறைப்பை (Decarbonisation) அடைவது சாத்தியமாகும். 2070 க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவது, 2005 முதல் 2030 வரை உமிழ்வு தீவிரத்தை 45% குறைப்பது மற்றும் புதைபடிவ எரிபொருள் அல்லாத மின்சார திறனை அதிகரிப்பது போன்ற லட்சிய இலக்குகளை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. இந்த இலக்குகளை அடைய அல்லது நிகர பூஜ்ஜியத்தை (onet zero) அடைவதற்கான காலக்கெடுவை முன்னெடுக்க, ஒரு விரிவான ராஜதந்திர நடவடிக்கை தேவை. 


பொறியாளர்கள் தொழில்நுட்பங்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஆற்றல் உற்பத்தி அல்லது பயன்பாட்டிற்கான வணிகத் திட்டங்களை உருவாக்குவதற்கும் விரைந்து செல்லக்கூடாது. மத்திய திட்டமிடல் நன்றாக வேலை செய்யாது, ஏனெனில் இந்தியா பரந்த மற்றும் சிக்கலானது. மேலும், சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் வணிக மாதிரிகளைக் கண்டறிய தனிநபர் அல்லது நிறுவன மட்டங்களில் பல சிறிய அளவிலான மேம்பாடுகள் தேவை. காலநிலை மாற்றம் உலகளவில் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. எனவே தீர்வுகளைக் கண்டறிய நிறைய ஆராய்ச்சிகள் உள்ளன. இந்தியா நேரடியாகப் பணம் செலுத்தாமல் இந்த ஆராய்ச்சியின் மூலம் பயனடைகிறது. பிளாஸ்டிக் பேனல்களை விட சோலார் பேனல்களை (solar panel) மலிவாக உருவாக்குவது போன்ற தொழில்நுட்பத்தை மேம்படுத்த இந்த உலகளாவிய குழுப்பணி உதவியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பற்றிய ஆராய்ச்சி சிறப்பாகவும் வேகமாகவும் வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இன்னும் சிறந்த தீர்வுகளை எதிர்பார்க்கலாம். காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திலும், மேலும் நிலையான எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதற்கும் இந்த ஆராய்ச்சி பெரிதும் உதவுகிறது.


எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் வணிக மாதிரிகள் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ராஜதந்திர சிந்தனை என்பது சோலார் பேனல்கள் (solar panels), மின்சார வாகனங்கள் (electric vehicles) அல்லது பேட்டரி தொழில்நுட்பம் (battery tech- nology) போன்றவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல. இந்த சக்தி வாய்ந்த சக்திகள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எவ்வாறு வழிநடத்தப்படுகின்றன என்பதை வழிகாட்டும் நிறுவனங்கள் மற்றும் ஊக்கங்களைக் கருத்தில் கொள்வது பற்றியது. 


மூன்று பெரிய சவால்கள் தெளிவாக உள்ளன. 


சவால் 1 - ஒன்றிய (Union) மற்றும் மாநில (state) அரசுகளின் பங்குகள்: மின்சாரத் துறை (electricity sector) சிக்கலானது, மாநிலங்களுக்கு முதன்மை பொறுப்புகள் உள்ளன மற்றும் ஒன்றியம் ஒரு துணைப் பாத்திரத்தை வகிக்கிறது. அரசாங்கத்தின் இரண்டு மட்டங்களும் ஒருவருக்கொருவர் தலையிடாமல் எவ்வாறு திறம்பட செயல்பட முடியும்? தேசிய தேர்தல்கள் பல்வேறு பிரச்சினைகளில் கவனம் செலுத்தினாலும், மாநிலத் தேர்தல்கள் பெரும்பாலும் மின்சாரத்தைச் சுற்றியே சுழல்கின்றன. பல மாநிலங்கள் மின்சார திருட்டு மற்றும் இலவச அல்லது மானிய விலையில் மின்சாரம் வழங்குவது போன்ற சவால்களை எதிர்கொள்கின்றன. இது நிதி இழப்புக்கு வழிவகுக்கிறது. சில வணிக நிறுவனங்கள் தனியார் ஈடுபாட்டைக் கொண்டிருந்தாலும், பெரும்பாலானவை இன்னும் அரசுக்கு சொந்தமானவை. இந்த அமைப்பு அதிக விலைகள் மற்றும் மானியங்கள் காரணமாக திறமையின்மையை ஏற்படுத்துகிறது, இது மாநிலத்தின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், மின்சாரம் தொடர்பான நிதிப் பிரச்சினைகள் நீண்டகால நிதித் திட்டமிடலை பாதிக்கின்றன.


சவால் 2 - இந்தியாவும் உலகளாவிய (India and the world) உறவுகளும்: காலநிலை மாற்றம் சர்வதேச விவகாரங்களுடன் மிகவும் பின்னிப்பிணைந்ததாகி வருகிறது. நிகர பூஜ்ஜிய (net-zero) உமிழ்வுக்கு மாறுவதற்கான இந்தியாவின் திறன் உலகளாவிய காலநிலை முயற்சிகளுக்கு முக்கியமானது. காலநிலை மாற்றம் குறித்து உலகளாவிய கவலை அதிகரித்து வருவதால், உலகளவில் மூன்றாவது பெரிய உமிழ்ப்பாளராக  இந்தியா மாறியுள்ளதால் இந்தியா அழுத்தத்தை எதிர்கொள்கிறது. பருவநிலை சவால்களை எதிர்கொள்வதில் முன்னணியில் இருக்க, பருவநிலை நிதியுதவிக்கான நடைமுறை தீர்வுகளை இந்தியா முன்மொழிய முடியும். பாரிஸ் ஒப்பந்தம் (ParisAgreement) போன்ற கட்டமைப்புகளை மேம்படுத்துவதும், மற்ற நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை உருவாக்குவதும் இதில் அடங்கும்.


சவால் 3 - அரசாங்கத்தையும் சந்தையையும் சமநிலைப்படுத்துதல் : மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அரசு சொன்னால் காலநிலை மாற்றம் தீர்க்கப்படாது. கார்பன் டை ஆக்சைடு (carbon dioxide) வெளியேற்றம் போன்ற முக்கிய சந்தை பிரச்சனைகளை அரசு கையாளும் போது, மக்கள் தாங்களாகவே நடவடிக்கை எடுத்தால் அது தீர்க்கப்படும். சரியான சமநிலையைக் கண்டறிவதே சவால். சந்தைப் பிரச்சனைகள் என்றால் அரசு தன் அதிகாரத்தை தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். பின்னர், கோடி கணக்கான மக்கள் தங்களுக்கு எது சிறந்தது என்பதை தீர்மானிக்க முடியும். தற்போது, மின்சாரத் துறையில் பெரும்பாலான முடிவுகள் அதிகாரிகளால் எடுக்கப்படுகின்றன. அவர்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குகிறார்கள். இந்த அணுகுமுறை தனியார் கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்காது.


அபாயங்களை எதிர்கொள்ளுவதில் தனிநபர்களின் பங்கு பெரும்பாலும் குறுகிய கால ஒப்பந்தங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது மின்சார சந்தையில் 12 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது. காலநிலை மாற்றம் என்பது நிபுணர்களால் மட்டும் தீர்வு காணக்கூடிய பிரச்சனை அல்ல.  இது அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கும் ஒரு பெரிய பிரச்சினை. மூன்று சவால்களை எதிர்கொள்ள விவாதிப்பதற்கும் (debate), விமர்சிப்பதற்கும்(criticism), புதிய யோசனைகளை (invention) கொண்டு வருவதற்கும் பல்வேறு மனங்கள் நமக்குத் தேவை. ஒவ்வொரு சவாலுக்கும் வெவ்வேறு நிபுணத்துவம் தேவை. ஒவ்வொரு சவாலுக்கும் யோசனைகள் பொருந்துகின்றன மற்றும் நிகர பூஜ்ஜியத்தை விரைவாக அடைய பங்களிக்கும் பலதுறை வேலைகளும் தேவை. நிகர பூஜ்ஜிய உமிழ்வை (net zero emission) அடைய ஒட்டுமொத்த உத்தி எவ்வளவு விரைவாக, வளங்களைத் திரட்ட முடியும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 


ஷாஹி KDR மன்றத்தில் பணிபுரிகிறார், ஜேட்லி ஒரு வியூகம் மற்றும் கொள்கை ஆலோசகராக உள்ளார்.




Original article:

Share:

கர்நாடக அரசு தனது ஹூக்கா தடையை (hookah ban) எவ்வாறு நியாயப்படுத்தியுள்ளது? -அஜய் சின்ஹா கற்பாரம்

 கர்நாடக அரசு பொது சுகாதாரத்தை பாதுகாக்க உணவகங்கள் மற்றும் பார்களுக்கு தடை விதித்தது. இந்த தடை சட்டவிரோதமானது என்று உணவகங்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.


ஹூக்கா பார்கள் தீ பாதுகாப்பு விதிகளை மீறுவதாகவும், உணவை பாதுகாப்பற்றதாக மாற்றுவதாகவும் அரசாங்கத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த, விதிகளை மீறுபவர்கள் 2003 ஆம் ஆண்டின் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தின் (Cigarettes and Other Tobacco Products Act of 2003 (COTPA)) கீழ் மாநில மற்றும் தேசிய சட்டங்களுடன் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அது கூறுகிறது.


பிப்ரவரி 20ம் தேதி கர்நாடக அரசு ஒரு மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதா ஹூக்கா பார்களை "எந்த இடத்திலும்" திறப்பதை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டது மற்றும் பிற கட்டுப்பாடுகளை உள்ளடக்கியது. மறுநாள் மசோதா நிறைவேற்றப்பட்டது. இது சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தில் (COTPA) சில  திருத்தங்களைக் கொண்டுவந்தது. இதன் மூலம், மாநிலத்தில் ஹூக்கா பார் (hookah bar) திறக்கும் எவருக்கும் 1 முதல் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.


இந்த அறிவிப்பிற்குப் பிறகு, பல உணவக உரிமையாளர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்திற்குச் சென்றனர். அவர்கள் தங்கள் வழக்கை பிப்ரவரி 13 அன்று தொடங்கினர். இதன் தீர்ப்பு மார்ச் 11 அன்று ஒத்தி வைக்கப்பட்டது.


கர்நாடக அறிவிப்பை உணவக உரிமையாளர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?


ஆர் பரத், தலைமை மனுதாரர்ரானவர், இந்த அறிவிப்பானது "சட்டவிரோத தலையீடு" (illegal interference) என்று கூறினார். சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம் (COTPA) பொது புகைபிடித்தல், புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்துதல் மற்றும் சிறார்களுக்கு விற்பனை செய்வதை மட்டுமே தடை செய்கிறது என்று அவர் விளக்கினார். சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தின் (COTPA) பிரிவு 4 இன் கீழ் நியமிக்கப்பட்ட புகைபிடிக்கும் பகுதியில் (designated smoking area) ஹூக்கா புகைத்தல் அனுமதிக்கப்படுகிறது. அதாவது, அது தடை செய்யப்படவில்லை என்பதை மனு எடுத்துக்காட்டுகிறது.


கர்நாடக சுகாதாரத் துறை (Karnataka health department) சட்டப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட முடியாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், பரத் தனது தொழிலை சட்டப்பூர்வமாக நடத்த தேவையான அனைத்து வர்த்தக உரிமங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 19(1)(g) பிரிவின் கீழ் வணிக உரிமையாளர்களின் உரிமைகளை இந்த அறிவிப்பு மீறுவதாக அவர் கூறுகிறார். மேலும், இந்தக் கட்டுரை குடிமக்களுக்கு எந்த வேலையையும் செய்ய அல்லது எந்த வியாபாரத்தையும் நடத்துவதற்கான உரிமையையிம் வழங்குகிறது.


சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படும் மற்ற புகையிலை மற்றும் நிகோடின் சார்ந்த பொருட்களைப் புறக்கணிக்கும் அதே வேளையில், குறிப்பாக ஹூக்கா செயல்பாடுகளை குறிவைத்து, அரசியலமைப்பின் 14 வது பிரிவின் கீழ் சமத்துவத்திற்கான உரிமையை தடையை மீறுகிறது என்றும் தனி மனுதாரர்கள் கூறினர்.


இந்த காரணங்களால், அரசின் அறிவிப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர்கள் கோருகின்றனர். தங்கள் வணிகங்களில் மாநில அரசு தலையிடுவதை நீதிமன்றம் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஹூக்கா தடையை கர்நாடக அரசு எப்படி நியாயப்படுத்தியது?


“பொது சுகாதாரம் மற்றும் சுகாதாரம்; மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள்” மாநில பட்டியலின் (State List) கீழ் வருவதால், இந்த அறிவிப்பை வெளியிட தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக மாநில அரசு கூறியது.  அரசியலமைப்பின் 7வது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலின் நுழைவு 6 இன் கீழ். மாநிலப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் மீது மாநில சட்டமன்றங்கள் சட்டங்கள் இயற்றலாம். 


அரசாங்கமானது, அரசியலமைப்பின் 162 வது பிரிவைப் பயன்படுத்தியது. இந்த பிரிவு, சட்டமன்றத்தால் சட்டங்களை இயற்றக்கூடிய பகுதிகளில் மாநில அரசுகளுக்கு "நிர்வாக அதிகாரத்தை" (executive power) வழங்குகிறது. இதன் பொருள் ஹூக்கா விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றை தடை செய்வதற்கான அறிவிப்பை அரசாங்கம் வெளியிடலாம்.


மேலும், அரசியலமைப்பின் 47 வது பிரிவை அரசாங்கம் குறிப்பிட்டது. இது "மருத்துவ நோக்கங்களுக்காக போதை தரும் பானங்கள் (intoxicating drinks) மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்களைத் தவிர நுகர்வுகளைத் தடைசெய்ய முயற்சிக்கும்" அரசாங்கத்தின் மீது கடமையாக வைக்கிறது.


அரசியலமைப்பு பிரிவு 47 என்பது அரசியலமைப்பின் கீழ் "அரசு கொள்கையின் வழிகாட்டுதல் கொள்கை" (directive principle of state policy) ஆகும். இவை மாநிலங்களுக்கும், ஒன்றியத்திற்கும் சட்டங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டும் கொள்கைகளாகச் செயல்படுகின்றன. ஆனால், அவை மீறப்பட்டால் குடிமக்களுக்கு எதிராகச் செயல்படுத்த முடியாது.


மற்ற மாநிலங்களிலும் இதே போன்ற ஹூக்கா தடை உள்ளதா?


சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்திற்கு (COTPA) கர்நாடகா திருத்தம் பிரிவு 4A என்ற புதிய விதியை சேர்த்துள்ளது. இதில், ஒரு உணவகம் அல்லது பார் போன்ற எந்த இடத்திலும் ஹூக்கா பார்களை யாரும் தனக்காகவோ அல்லது வேறு ஒருவருக்காகவோ திறக்கவோ அல்லது நடத்தவோ முடியாது என்று கூறுகிறது. 


  மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் முறையே 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஒரே மாதிரியான திருத்தங்களை நிறைவேற்றின. தமிழ்நாடு சட்டமன்றம் 2022 இல் அதே திருத்தத்தை இயற்றியது, இது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


Original article:

Share:

2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன: இதன் அர்த்தம் என்ன? -விளக்கப்பட்ட மேசை

 தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நடத்தை விதிகளை (Mode Code of Conduct (MCC)) கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பாக அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியலை இது வழங்குகிறது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நடைபெரும், முடிவுகள் ஜூன் 4 அன்று அறிவிக்கப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் நடத்தை விதிகளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை உள்ளிட்ட இந்த நெறிமுறையை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை ராஜீவ் குமார் வலியுறுத்தினார். இந்த காலகட்டத்தில் அரசாங்கம் புதிய கொள்கை முடிவுகளை அறிவிக்க முடியாது என்பது ஒரு முக்கிய விதி.  


தேர்தல் நடத்தை  விதிகள்  என்றால் என்ன?


தேர்தல் நடத்தை விதிகளை என்பது இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல்களுக்கு முன் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை ஒழுங்குபடுத்துவதற்காக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் தொகுப்பாகும். இவற்றில், தேர்தல் பரப்புரை, வாக்குப்பதிவு நாள், வாக்குச் சாவடிகள், இலாகாக்கள், தேர்தல் அறிக்கைகளின் உள்ளடக்கம், ஊர்வலங்கள் மற்றும் பொது நடத்தை தொடர்பானவை வரை விதிகள் உள்ளன. இதனால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.


தேர்தல் நடத்தை  விதி எப்போது அமலுக்கு வரும்?


தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் தொடங்கி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் முடிவடைகிறது. எனவே, இன்று மாலை முதல் தேர்தல் நடைமுறை முடியும் வரை இது அமலில் இருக்கும்.


தேர்தல் நடத்தை  விதிகள் என்ன கட்டுப்பாடுகளை விதிக்கின்றன?


தேர்தல் நடத்தை விதிகள் எட்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த பகுதிகள் பொதுவான நடத்தை, கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் வாக்குப்பதிவு நாளில் நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. வாக்குச் சாவடிகள், பார்வையாளர்கள், அதிகாரத்தில் உள்ள கட்சி மற்றும் தேர்தல் அறிக்கைகளுக்கான விதிகளையும் அவை உள்ளடக்குகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தவுடன், ஆளும் கட்சி தனது அதிகாரத்தை தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தக்கூடாது. வாக்காளர்களை திசைதிருப்பக்கூடிய புதிய கொள்கைகளையோ அல்லது திட்டங்களையோ அது அறிவிக்க முடியாது. தனது சாதனைகளை விளம்பரப்படுத்த பிரச்சார விளம்பரங்களுக்கோ அல்லது அதிகாரப்பூர்வ ஊடகங்களுக்கோ பொதுப் பணத்தைப் பயன்படுத்தக்கூடாது.


அமைச்சர்கள் அதிகாரப்பூர்வ வருகைகளை தேர்தல் பணிகளுடன் கலக்கவோ அல்லது அதற்காக அதிகாரப்பூர்வ இயந்திரங்களைப் பயன்படுத்தவோ முடியாது என்று விதிகள் கூறுகிறது. ஆளுங்கட்சியினர் அரசு வாகனங்களையோ, இயந்திரத்தையோ பிரசாரத்துக்கு பயன்படுத்த முடியாது. எதிர்க்கட்சிகள் தேர்தல் கூட்டங்களுக்கு மைதானம், ஹெலிபேட் போன்ற பொது இடங்களை பயன்படுத்துவதைப் போலவே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மேலும், செய்தித்தாள்கள் அல்லது ஊடகங்களில் விளம்பரங்களுக்காக பொது பணத்தை பயன்படுத்துவது தவறு. வாக்காளர்களை பாதிக்கும் வகையில் அரசாங்க பதவிகளில் திடீர் நியமனங்களை ஆளும் அரசாங்கம் செய்ய முடியாது.


அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களை அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் மட்டுமே விமர்சிக்க முடியும், வாக்குகளைப் பெறுவதற்காக சாதி அல்லது வகுப்புவாத உணர்வுகளைப் பயன்படுத்தி அல்ல. மசூதிகள், தேவாலயங்கள், கோயில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. லஞ்சம் கொடுப்பது, பயமுறுத்துவது அல்லது வாக்காளர்களைப் போல பாசாங்கு செய்வது அனுமதிக்கப்படாது. வாக்குப்பதிவு முடிவடைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன் சிந்திக்க பிரச்சாரங்கள் இல்லாமல் நேரம் கொடுக்க இந்த காலம் "தேர்தல் மௌனம்" (election silence) என்று அழைக்கப்படுகிறது.


தேர்தல் நடத்தை விதிகள் சட்டப்படி செல்லுபடியாகுமா?


நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளின் முக்கிய பகுதியாக தேர்தல் நடத்தை  விதிகளில் உள்ளது. இது முக்கிய அரசியல் கட்சிகளின் உடன்பாட்டின் மூலம் உருவாக்கப்பட்டது. ஆனால், தேர்தல் நடத்தை  விதிகளுக்கு சட்ட வலிமை இல்லை. இதன் பொருள்மாதிரி நடத்தை விதிகளை மீறுவதற்கு சட்ட விளைவுகள் எதுவும் இல்லை. அதை அமல்படுத்த தேர்தல் ஆணையம் தார்மீக அழுத்தத்தை நம்பியுள்ளது.


தேர்தல் நடத்தை விதிமீறல் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கலாம். இந்த நடவடிக்கை அதன் சொந்த முயற்சியாலோ, அல்லது ஒரு கட்சி, அல்லது தனிநபரின் புகாரின் அடிப்படையில் இருக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க வேண்டும். அவர்கள் மீறலை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கலாம் அல்லது குற்றச்சாட்டுக்கு எதிராக வாதிடலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வ எச்சரிக்கை விடுக்கலாம். பலர் இந்த எச்சரிக்கையை ஒரு சிறிய விளைவு என்று கருதுகின்றனர்.


முந்தைய தேர்தல் நடத்தை  விதி  'மீறல்கள்'


நவம்பர் 2023 இல், மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, இந்திய தேர்தல் ஆணையம் (ECI) காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர் தனது உரையில், பிரதமர் நரேந்திர மோ, பெரிய தொழிலதிபர் நண்பர்களுக்கு ஏன் BHEL ஐ வழங்கினார் என்று கேள்வி எழுப்பினார்.


சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைத் தடைசெய்யும் மாதிரி நடத்தை விதிகளில் உள்ள விதியைக் குறிப்பிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் பிரியங்கா காந்தி வத்ராவின் அறிக்கையை தெளிவுபடுத்துமாறு கோரியது.


இதற்கு முன்பு, 2017 குஜராத் தேர்தலின் போது, தேர்தல் நடத்தை  விதிகளை மீறியதாக பாஜகவும் காங்கிரஸும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டின. வாக்குப்பதிவுக்கு முன் 48 மணி நேர அமைதியான நேரத்தில் ராகுல் காந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்ததாக பாஜக விமர்சித்துள்ளது. இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்த பின்னர் அகமதாபாத்தில் 'ரோட்ஷோ' (roadshow) மூலம் விதிகளை மீறியதாக காங்கிரஸ் கூறியது.


தேர்தல் ஆணையம் பெரும்பாலும் தேர்தல் நடத்தை  விதிகளை  அமல்படுத்த கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை. இருப்பினும், 2014 மக்களவைத் தேர்தலில், அமித் ஷா இப்போது பாஜக தலைவர் மற்றும் சமாஜ்வாதி தலைவர் ஆசம் கான் ஆகியோர் பிரச்சாரம் செய்ய தடை விதித்தது. அவர்களின் பேச்சுக்கள் தேர்தல் சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்பட்டது. இதைச் செய்ய, தேர்தல் ஆணையம் அரசியலமைப்பின் 324வது பிரிவின் கீழ் தனது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தியது. இரு தலைவர்களும் மன்னிப்பு கேட்டு நெறிமுறையைப் பின்பற்ற ஒப்புக்கொண்டதை அடுத்து அந்த தடை நீக்கப்பட்டது.




Original article:

Share:

தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவோ அல்லது கருப்புப் பணத்தை ஒழிக்கவோ தவறிவிட்டன -தவ்லீன் சிங்

 கடந்த வாரம், இந்தியா டுடே மாநாட்டில் (India Today conclave) நிதியமைச்சர், 'கருப்பு' (‘black’) பணத்தை சட்டப்பூர்வ அரசியல் நன்கொடைகளாக மாற்றும் திட்டம், 'சரியானது அல்ல' (‘not perfect’) என்று ஒப்புக்கொண்டார். 


'மூத்த பத்திரிகையாளர்' ('veteran journalist') என்று அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ஏனென்றால் அது என்னை வயதானவராக உணர வைக்கிறது. ஆனால், நான் நீண்ட காலமாக பத்திரிகைத் துறையில் இருக்கிறேன். அதன் நன்மைகள் உள்ளன. நான் நிறைய வரலாறு மற்றும் தேர்தல்களைப் பார்த்திருக்கிறேன். இது அரசியல் நிகழ்வுகளை தூரத்திலிருந்து பார்க்க உதவுகிறது. இதனால்தான் தேர்தல் பத்திரங்கள் திட்டம் குறித்து எனக்கு ஒரு பார்வை உள்ளது. என்னை தவறாக எண்ண வேண்டாம், இந்த ஏமாற்று திட்டத்தை நான் பாதுகாக்கவில்லை. உச்ச நீதிமன்றம் பதில்களைக் கோரியது மற்றும் நன்கொடையாளர்களின் பெயர்களை அவர்களின் நன்கொடைகளுடன் பகிரங்கப்படுத்தியது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.


'கறுப்பு' பணத்தை அரசியல் நன்கொடையாக மாற்றிய இந்தத் திட்டம் சரியானதல்ல என்று நிதியமைச்சர் சமீபத்தில் ஒப்புக்கொண்டார். ஆனால் முந்தைய அமைப்பு மோசமாக இருந்தது என்று அவர் சொல்வது சரிதான். நீண்ட காலமாக ஒரு பிரச்சினையாக இருந்த ஊழலைத் தடுக்க அது அதிகம் செய்யவில்லை.


1970கள் மற்றும் 1980களில் நடந்த தேர்தல்கள் எனக்கு நினைவிருக்கிறது. அதற்கும் சமீபத்தில், சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் தொழிலதிபர்களை பெரிய நன்கொடைகளை அளிக்குமாறு கட்டாயப்படுத்தினர். அவர்கள் வெற்றி பெற்றால் அதற்குப் பதிலாக உதவிகள் தருவதாக வாக்குறுதி அளித்தனர். அரசியல்வாதிகளின் வீடுகளிலும், அவர்களது கூட்டாளிகளின் வீடுகளிலும் பணப் பதுக்கல்கள் இன்னும் தவறாமல் காணப்படுகின்றன. இது இந்த நடைமுறை இன்னும் நடக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த பணம் பொதுவாக அழுக்காக இருக்கும். தேர்தல் பத்திரங்கள் அரசியல் நன்கொடைகளை வெளிப்படையானதாக மாற்றுவதற்காக இருந்தன. ஆனால் அவை செய்யவில்லை. அவர்கள் நினைத்தபடி கறுப்புப் பணத்தை தடுக்கவில்லை. மாறாக, கறுப்புப் பணத்தைக் கையாள்வதில் அரசியல் கட்சிகள் தூய்மையாக இருக்க ஒரு வழியைக் கொடுத்தனர். 


காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர்கள் பிஜேபியை விமர்சிக்கின்றனர். ஆனால் அவர்கள் கடந்த காலத்தை மறந்துவிடுகின்றனர். 1970 மற்றும் 1980 களில், தேர்தல்களின் போது சோவியத் யூனியனில் இருந்து பணம் வருவதாக (suitcases of cash’) வதந்திகள் இருந்தன. இது உண்மையா என்பதை யாரும் உறுதிப்படுத்தவில்லை. பின்னர், கேஜிபி உளவாளி வாசிலி மிட்ரோகின் (Vasili Mitrokhin), இந்திரா காந்தியின் அமைச்சரவையில் சில உறுப்பினர்கள் கேஜிபி - யின் ஊதிய பட்டியலில் (KGB payroll) இருப்பதாக குறிப்பிட்டார். மிட்ரோகின் (Mitrokhin) வெளிப்பாடுகள், மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் ஒரு பெரிய கொந்தளிப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், எதிர்பார்க்கப்பட்ட சீற்றம் பலிக்கவில்லை. ஏனெனில் வெளிப்படுத்தல்கள் யாரையும் பாதுகாப்பாகப் பிடிக்கவில்லை.


இந்திய அரசியலில், தேர்தல் நிதி பெரும்பாலும் பணக்கார வணிகர்களிடமிருந்து பெறப்படுகிறது. நன்கொடைகள் சில சமயங்களில் ஒப்பந்தங்கள் அல்லது உதவிகளைப் பெறுவதுடன் தொடர்புடையது. தேர்தல் பத்திரங்கள் (election bonds) மூலம் நன்கொடைகள் வழங்குவதில் உள்ள கவலை என்னவென்றால், சிலர் சுற்றுச்சூழல் விதிகளை (evade environmental clearances) மீற முயற்சிக்கிறார்கள். மேலும், சில நன்கொடையாளர்கள் அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate (ED)) அல்லது வருமான வரித் துறை (income tax (I.T)) போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்து கவலைப்படுவதால், இந்தப் பத்திரங்களைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. அரசியல் நிதியுதவி மற்றும் ஒழுங்குமுறை எவ்வாறு ஒருவரையொருவர் பாதிக்கலாம் என்பதை இது காட்டுகிறது. தேர்தல்களுக்கு எவ்வாறு நிதியளிக்கப்படுகிறது என்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய கவலைகளை எழுப்புகிறது.


உலகளவில், பணத்திற்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பை உடைப்பது கடினம். ஆனால், சிறந்த கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலைகளைக் கொண்ட நாடுகள் சிறப்பாக நிர்வகிக்கின்றன. இந்தியாவின் அரசியல் இன்னும் கருப்புப் பணத்தை நம்பியிருக்கிறது என்றால், அது பெரும்பாலும் நம் தலைவர்களின் தவறுதான். லஞ்சம் வாங்காமல் தொழிலதிபர்கள் வேலை செய்வதை எளிதாக்கினால், கறுப்புப் பணம் குறையும். இது ஏன் இன்னும் நடக்கவில்லை? அரசியல்வாதிகள் தங்கள் தேர்தல்களுக்கு மறைமுக நிதியிலிருந்து பயனடைவதால் இருக்கலாம்.


தேர்தல் பத்திரங்கள் உண்மையை மறைப்பதற்காக உருவாக்கப்பட்டதே தவிர, வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக அல்ல, அதனால்தான் உச்ச நீதிமன்றம் கடுமையாக நிராகரிக்கிறது. விரைவில் நிலைமை மாறுமா? அநேகமாக இல்லை, ஏனென்றால் நமது அரசியல் அமைப்பில் ஊழல் மேலிருந்து கீழ் வரை நடக்கிறது. கிராமப்புறங்களில், உள்ளூர் தலைவர்கள் அதிகாரத்தை வேண்டப்பட்டவர்களுக்கு ஒப்படைக்கும் வரை ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அரசியல் மிகவும் லாபகரமானது. அவர்கள் மற்றவர்களின் பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துகிறார்கள். 


தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்கள் மற்றும் அவற்றால் பயனடையும் கட்சிகளை வெளிப்படுத்துவதற்கான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு  ஒரு முக்கியமான முதல் படியாகும். ஆனால் உண்மையான மாற்றத்திற்கு, நமது அரசியல் கலாச்சாரம் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும். நரேந்திர மோடி முதன்முதலில் பிரதமரானபோது, கறுப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். அவர் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால், அவர் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நாம் நம்ப வேண்டும். ஏனென்றால் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற மாற்றம் தேவை. தேர்தலுக்கு கறுப்புப் பணத்தை நம்பியிருக்கும் நாடுகள் என்றென்றும் ஊழல் நிறைந்த அரசியலில் எப்போதும் சிக்கித் தவிக்கின்றன.




Original article:

Share:

சுதந்திரம் மற்றும் வளர்ச்சிக்காக வாக்களிக்கலாமா? -பி சிதம்பரம்

 பிராந்திய கட்சிகளின் வெற்றி வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான தூரத்தை மோசமாக்கியுள்ளது.


தேசிய அரசாங்கத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஒரு பொது நோக்கத்திற்காக மக்களை ஒன்றிணைக்க வேண்டும். மக்கள் 'ஏ' அல்லது 'பி' போன்ற வெவ்வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கலாம். சில நேரங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு வாக்களிக்கலாம். ஆனால், அவர்கள் ஒரு பொதுவான இலக்கைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். வாக்குகள் இப்படி பிரிந்து செல்வது இயல்பானது, ஆரோக்கியமானது, அது நீடித்த பிளவுகளை ஏற்படுத்தாது.


ஆரம்பத்தில், இந்தியத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் மற்றும் நேரு ஒரு முக்கிய நபராக இருந்ததால் ஒருதலைப்பட்சமாக இருந்தன. இருப்பினும், இரண்டு சமமான கட்சிகளுக்கு இடையிலான முதல் குறிப்பிடத்தக்க போட்டி 1977 இல் இருந்தது. நெருக்கடி நிலைக்குப் பிறகு ஜெயப்பிரகாஷ் நாராயணன் (jeyaprakash Narayanan) எதிர்க்கட்சிகளை ஒரே பாதையில் கீழ் ஒன்றிணைத்தார். ஜனதா கட்சி உறுதியாக வெற்றி பெற்றது. ஆனால் அது இந்தியர்களிடையே பிளவை ஏற்படுத்தியது. வட மாநிலங்கள் ஒரு விதமாகவும், தென் மாநிலங்கள் வேறு விதமாகவும் வாக்களித்தன.


வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான பிளவு 1977 முதல் நீடித்து வருகிறது 


பிந்தைய தேர்தல்களில், வட மாநிலங்கள் வழக்கமாக ஒரு வழியில் வாக்களித்தன. அதே, நேரத்தில் தென் மாநிலங்கள் வித்தியாசமாக வாக்களித்தன. இந்தி பேசும் வட மாநிலங்களில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.  ஆனால் தென் மாநிலங்களில் நிலைமை வேறு. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக, ஆந்திராவில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கானாவில் டிஆர்எஸ், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், கேரளாவில் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி போன்ற பிராந்திய கட்சிகள் காங்கிரஸுக்கு சவால் விடுத்தன. கலவையான வெற்றி பெற்ற கர்நாடகாவைத் தவிர பாரதீய ஜனதா கட்சியால் இங்கு பெரிதாக முன்னேற முடியவில்லை.


பிராந்திய கட்சிகளின் வெற்றி வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்துள்ளது. காங்கிரஸைப் போலல்லாமல், இந்தி, இந்துத்துவம் மற்றும் இந்துத்துவாவை ஆதரிக்கும் கட்சி என்று தென்னிந்திய பிராந்திய கட்சிகள் பாஜகவை முத்திரை குத்துகின்றன. தென் மாநிலங்களில் உள்ள மக்கள் தங்கள் பிராந்திய மொழிகளில் பெருமிதம் கொள்கிறார்கள். அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்கிறார்கள், சமூக சீர்திருத்தவாதிகளின் பாரம்பரியத்தை மதிக்கிறார்கள். நியாயமற்ற வருவாய் விநியோகம், இந்தி ஆதிக்கம் மற்றும் சில நம்பிக்கைகளைத் திணிப்பது ஆகியவற்றிலிருந்து அவர்களின் சந்தேகங்கள் உருவாகின்றன.


மேலும், மாநில சுயாட்சியை குறைக்கும் சட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் மாநிலங்கள் மீதான மத்திய கட்டுப்பாட்டை பாஜக பலப்படுத்தியுள்ளது. பிராந்தியக் கட்சிகளை வெளிப்படையாக பலவீனப்படுத்த அல்லது நசுக்குவதற்கு அது சட்டங்களைப் பயன்படுத்தியுள்ளது. இதனால், வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான இடைவெளி விரிவடைந்துள்ளது.                


காங்கிரஸிடம் இருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்பதே பாஜகவின் லட்சியம். ஜனதா கட்சி, அகாலி தளம், இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவற்றுடன் செய்ததைப் போல காங்கிரஸ் அல்லாத கட்சிகளையும் துடைத்தெறிவதை பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிராந்திய கட்சிகளின் அடையாளங்களை அழித்து, மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ், ஒய்.ஆர்.எஸ்.சி.பி, பாரத ராஷ்டிர சமிதி மற்றும் பிறவற்றை அகற்ற முயற்சிக்கிறது. இந்த திட்டம் மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா மற்றும் ஹரியானாவுக்கும் பொருந்தும். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற சில கட்சிகள் இதை ஆரம்பத்திலேயே உணர்ந்தன. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், ஜனநாயக்க ஜனதா கட்சி போன்ற கட்சிகள் பின்னர் உணர்ந்தன. ராஷ்டிரிய லோக் தளம், பிஜு ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் ஆகியவை பாஜக ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை விரைவில் பார்ப்போம்.


பாரதீய ஜனதா கட்சி 370 இடங்களைக்  பிடித்து விடுவோம் என்ற அதீத நம்பிக்கையில் உள்ளது. அதன் வலுவான இந்துத்துவா பிரச்சாரம் அயோத்தி மற்றும் காசியுடன் நின்றுவிடாது. இந்து கோவில்களுக்கு அருகில் மசூதிகள் கட்டுவது குறித்து விவாதங்கள் நடக்கும். நகரங்களும் சாலைகளும் மறுபெயரிடப்படும். குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 (Citizenship Amendment Act, 2019) செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உத்தரகண்டில் (Uttarakhand) சோதிக்கப்பட்ட பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். "ஒரே நாடு ஒரே தேர்தல்" (“One Nation One Election”) அரசியலமைப்பை மாற்றுவதன் மூலம் சட்டமாக மாறும். இது கூட்டாட்சி மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி, இந்திய அரசாங்கத்தை ஒரு ஜனாதிபதி அமைப்பைப் போல மாற்றும்.


துரதிர்ஷ்டவசமாக, சிலர் மத்தியத்துவத்தை வரவேற்பார்கள், ஏனென்றால் ஜனநாயக விழுமியங்கள் நம் சமூகத்தில் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வளர்ச்சி என்ற பெயரில், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள், அதே நேரத்தில் கீழே உள்ள 50% பேர் செல்வம் மற்றும் வருமானத்தில் ஒரு சிறிய பங்கைக் கொண்டு திருப்தி அடையச் சொல்கிறார்கள். சமூக மற்றும் கலாச்சார ஒடுக்குமுறை நீடிக்கிறது, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மோசமடைகின்றன.


இது ஒரு பயமுறுத்தும் கதை மட்டுமல்ல. சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்ய, நாம் அவ்வப்போது தலைவர்களை மாற்ற வேண்டும் என்பதை வரலாறு நமக்கு காட்டுகிறது. ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தலைவர்களுக்கான பதவிக் கால வரம்புகள் உள்ளன. தென் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள பல நாடுகள் சர்வாதிகார அரசாங்கங்களின் கீழ் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவில், நாம் ஒரு காலத்தில் இதைப் புரிந்துகொண்டோம். ஆனால், மறந்துவிட்டோம் என்று தோன்றுகிறது. சீனா, ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் போன்ற உதாரணங்கள் ஆபத்துக்களை நமக்குக் காட்டுகின்றன. இந்தியாவின் தேர்தலை உலகமே உற்று நோக்குகிறது.




Original article:

Share: