பணவீக்கத்தில் ஆரம்பகால வெற்றியை அறிவிப்பதில் ரிசர்வ் வங்கி ஏன் எச்சரிக்கையாக இருக்கிறது ? - தர்மகீர்த்தி ஜோஷி

 ஒட்டுமொத்த பொருளாதார நிலைமைகளும் சாதகமாகி வருவதால், கோடையின் இறுதிக்குள் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கலாம். 


ஏப்ரல் 5 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கப்பட்ட எதையும் மாற்றவில்லை. பொருளாதாரம் கணித்ததை விட சிறப்பாக செயல்படுகிறது, ஆனால் பணவீக்கம் விரும்பியதை விட அதிகமாக உள்ளது. எனவே, பெரும்பாலான மக்கள் ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யயது என்று நினைத்தார்கள். எதிர்பார்த்தப்படி, ரிசர்வ் வங்கியும் தனது வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை .எனவே, இந்த அறிவிப்பு யாருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.


பிப்ரவரியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (gross domestic product (GDP)) இரண்டாவது மதிப்பீடு முதல் மூன்று காலாண்டுகளில் பொருளாதாரம் 8% க்கும் அதிகமாக வளர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இது, நிதியாண்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை 7.6% ஆக உயர்த்தியது. இந்த வளர்ச்சியின்  வேகம் நான்காவது காலாண்டிலும் தொடர்ந்துள்ளது என்பதை சமீபத்திய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மார்ச் மாதத்திற்கான கொள்முதல் மேலாளர்களின் குறியீடு (Purchasing Managers’ Index (PMI)) 61.8 ஆக இருந்தது. இது வலுவான விரிவாக்கத்தைக் குறிக்கிறது. குறிப்பாக மார்ச் மாதத்தில் வரி வசூலும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. கட்டுமானம், உற்பத்தி மற்றும் நிதி சேவை போன்ற துறைகள் சிறப்பாக செயல்படுகின்றன என்பதை இது காட்டுகிறது. இருப்பினும், விவசாய வளர்ச்சி 2023-24 ஆம் ஆண்டில் 0.7% பலவீனமாக இருந்தது.


பணம் எங்கு செலவிடப்படுகிறது என்பதைப் பார்த்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின் பெரும்பகுதி முதலீடுகளிலிருந்து வருகிறது. சீரான மற்றும் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமான தனியார் நுகர்வு வளர்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது மெதுவாக உள்ளது. இருப்பினும், தனிப்பட்ட நுகர்வின் நடவடிக்கைகளை கண்காணிப்பது மிகவும் முக்கியம்.


இந்த ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8% ஆக குறையும் என்று இந்தியாவின் கடன் மதிப்பீட்டு தகவல் சேவைகள் லிமிடெட் (Credit Rating Information Services of India Limited (CRISIL)) நிறுவனம் கணித்துள்ளது. மே 2022 மற்றும் பிப்ரவரி 2023 க்கு இடையில் ரிசர்வ் வங்கியின் விகித உயர்வுகளின் விளைவுகள் காட்டத் தொடங்கியுள்ளன மற்றும் 2024-25 இல் தேவையை சற்று குறைக்கலாம். பாதுகாப்பற்ற கடன்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளும் கடன் வளர்ச்சியை பாதிக்கும். மேலும், குறைந்த நிதிப் பற்றாக்குறை என்பது குறைந்த அரசாங்க செலவினங்கள் இருக்கும் என்பதாகும், இது வளர்ச்சியை பாதிக்கும்.


2024-25 ஆம் ஆண்டில் வளர்ச்சி மற்றும் பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ரிசர்வ் வங்கி அதன் நோக்கத்தில் உறுதியாக உள்ளது பணவீக்கத்தை மேலும் குறைப்பது சவாலானது என்று ஆளுநர் சக்தி காந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார். நல்ல வளர்ச்சி வாய்ப்புகள் இருந்தபோதிலும், ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கண்காணித்து, அதை 4% ஆகக் குறைக்க பாடுபடும் என்று அவர் கூறினார்.


2024-25 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கான ரிசர்வ் வங்கியின் கணிப்பு 7% ஆக உள்ளது. இது இந்தியாவின் கடன் மதிப்பீட்டு தகவல் சேவைகள் லிமிடெட் எதிர்பார்ப்பதை விட சற்று அதிகமாகும். சாதாரண பருவமழை மற்றும் நிலையான கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பணவீக்கம் 4.5% ஆக குறையும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.


எல் நினோவின் (EL-NINO) தாக்கம் ஆண்டின் இரண்டாம் பாதியில் குறையும் என்றும், லா நினா (La-nina) நிலைமைகள் ஏராளமான மழையைக் கொண்டுவரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் நம்புகிறது. இது கவலைக்குரிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க உதவும். ஆண்டின் முதல் 11 மாதங்களில் உணவுப் பணவீக்கம் 7.4% ஆக உயர்ந்த அளவிலும், உணவல்லாத பணவீக்கம் 4.1% ஆகவும் இருந்தது.


பிப்ரவரியில், உணவு பணவீக்கம் 8.7% ஆகவும், உணவு அல்லாத பணவீக்கம் 2.9% ஆகவும் இருந்தது. உணவு மற்றும் எரிபொருள் தவிர்த்த முக்கிய பணவீக்கம் 3.4% ஆக குறைவாக இருந்தது. உணவு தானிய பணவீக்கம் சற்று குறைந்தது, ஆனால் காய்கறி விலை அதிகமாக இருந்தது. ஜனவரியில், 27.1% ஆக இருந்தது பிப்ரவரியில் 30.2% ஆக உயர்ந்தது.

ரிசர்வ் வங்கி பொதுவாக காய்கறி பணவீக்கத்தை (vegetable inflation) புறக்கணிக்கிறது. ஏனெனில், அவை பங்கு சந்தைகளை போல ஏற்ற இறக்கங்களை (volatility) கொண்டுள்ளன. ஆனால், இந்த முறை காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதால், தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது. உணவு தானிய பணவீக்கம் குறைவாக இருந்தாலும், பிப்ரவரி மாதத்தில் 9.8 சதவீதமாக இருந்தது. மத்திய வங்கியின் கொள்கைகளால் உணவு பணவீக்கத்தை ஏற்படுத்தும் விநியோக குறைக்க முடியாது. இந்தியாவைப் போலவே வளர்ச்சி அதிகமாகவும், உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயரும் போது, இது மிகவும் முக்கியமானதாக  பார்க்கப்படுகிறது. 


உணவு பொருள்களின் விலை உயர்வு பணக்காரர்களை விட ஏழைகளை அதிகம் பாதிக்கிறது. பிப்ரவரியில், நகர்ப்புற குறைந்த வருமானத்தை கொண்ட மக்கள் 5.5% பணவீக்கத்தை எதிர்கொண்டன. இது செல்வந்தர்களுக்கு 4.7% ஆக இருந்தது. ஏனெனில் அவர்களின் செலவினங்களில் உணவு ஒரு பெரிய பகுதியை உருவாக்குகிறது. கிராமப்புறங்களில் நிலைமை இப்படித்தான் இருந்தது. 2024-25ல் உணவுப் பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதிக உணவு விலைகள் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான வீட்டுச் செலவுகளைக் குறைக்கின்றன. அரசாங்க உணவுத் திட்டங்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவுகின்றன. ஆனால், ஒட்டுமொத்தமாக குறைந்த உணவு விலைகள் மேலும் உதவும். சாதாரண பருவமழை மற்றும் சிறந்த விவசாயம் ஆகியவை உணவு விலைகளைக் குறைக்க உதவும். இந்த ஆண்டு கிராமப்புற செலவினங்களை அதிகரிக்க வேண்டும். 

    

 2024-25 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் (Barrel) ஒன்றுக்கு $80-85 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், எரிபொருள் விலை அதிகமாக உயரும்  என்று  யாரும் எதிர்பார்க்வில்லை.  ஆனால், சமீபத்திய கச்சா விலை உயர்வு மற்றும் நிச்சயமற்ற புவிசார் அரசியல், சில கவலைகளை ஏற்படுத்திகிறது.


பெடரல் ரிசர்வ் (Federal Reserve) மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வங்கி (European Central Bank) ஆகியவை வட்டி விகிதங்களைக் குறைக்கவில்லை. ஏனெனில் விகிதங்கள் இன்னும் அதிகமாக உள்ளன. இருப்பினும், தற்பொழுது  அவை  குறையத்  தொடங்கியுள்ளன. மார்ச் கூட்டத்தில், ரிசர்வ் வங்கி விரைவில் விகிதங்களைக் குறைக்கலாம் என்று பரிந்துரைத்தது. S&P Global இன் கூற்றுப்படி, பணவீக்கம் 2024 வரை ஒன்றிய வங்கியின் இலக்கான 2 சதவீதத்திற்கு மேல் இருக்கும். முக்கியமாக அதிக சேவை விலை பணவீக்கம் (higher service price inflation) காரணமாக, பொருட்களின் விலைகள் சிறிது குறைந்தாலும் கூட ஒன்றிய வங்கி மற்றும் வெளி வணிக கடன்கள் (External Commercial Borrowings (ECB)) ஜூன் மாதத்தில் விகிதங்களைக் குறைக்கத் தொடங்கும் என்று  எதிர்பார்க்கிறாரகள்.




Original article:

Share:

சீனாவிற்கான இந்தியாவின் செய்தி : எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் விதிகளை மதிக்கவும் - ராம் மாதவ்

 அண்மையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிலிப்பைன்ஸ் சென்றார். அண்டை நாடுகளுக்கு எதிரான சீனாவின் ஆக்கிரமிப்பை அவர் கடுமையாக எதிர்த்தார். இதில், பெய்ஜிங்கின் பதில் யூகிக்கக்கூடியதாக இருந்தது.


2021 டிசம்பரில், அருணாச்சல பிரதேசத்தில் சில இடங்களுக்கு சீனா மறுபெயரிடுவதாக செய்தி வெளியானபோது, சில சமூக ஊடக பயனர்கள் சீன மற்றும் திபெத்திய நகரங்களுக்கு இந்திய பெயர்களை வழங்குவதன் மூலம் பதிலடி கொடுத்தனர். அவர்கள் பெய்ஜிங்கை புஜாங் நகர் (Bhujang Nagar) என்றும் லாசா நகரை லக்ஷ்மண்கர் (Laxmangarh) என்றும் அழைத்தனர். ஷாங்காயை சங்கிபூர் (Sanghipur) என்றும், நாஞ்சிங்கை நந்திகர் (Nandigarh) என்றும், யுனானை யானனாபுரம் (Yananapuram) என்றும், செங்டு புதிய சண்டிகராகவும் (New Chandigarh), ஹூபேயை ஹனுமன்கர் (Hanumangarh) என்றும், குவாங்சோவை காந்திநகர் (Gandhinagar) என்றும் பெயர் மாற்றம் செய்தனர். கோவிட்-19 கட்டுப்பாடுகளின் போது அவர்களுக்கு ஓய்வு நேரம் கிடைத்ததால் சமூக ஊடக ஆர்வலர்கள் இவற்றை கேலி செய்தனர்.


சீனர்கள் தங்கள் முயற்சியின் ஒரு பகுதியாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு பெயர் மாற்றத் தொடங்கினர். இது 2017 இல் ஆறு இடங்களுடன் தொடங்கிய இந்த முயற்சி, பின்னர், 2021ல் மேலும் 15 இடங்களுக்கும், 2023ல் 11 இடங்களுக்கும் பெயர் மாற்றம் செய்தனர். 2024ல், பட்டியலில் 30 புதிய இடங்களை இதனுடன் சேர்த்தனர். இவற்றில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், நான்கு ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு பகுதி நிலம் கூட இதில் அடங்கும்.


சீனாவின் பெயர் மாற்ற முயற்சிகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்தது. "இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்ற சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதுபோன்ற முயற்சிகளை நாம் உறுதியாக நிராகரிக்கிறோம்" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

 வரலாற்று உரிமை கோரல்களைக் (historical claims) கண்டுபிடித்துள்ள சீனா 


சீனா ஓர் அறிவுப்பூர்வமற்ற  முறையைப் பின்பற்றுகிறது. இது ஒரு வரலாற்று நினைவாற்றலைக் கொண்ட நாகரிகம். அதன் கூற்றுகள் நீண்ட காலத்திற்கு உள்ளன. உதாரணமாக, 1900 களின் முற்பகுதியில், ஒரு நாவல் பிரபல ஆய்வாளர் ஜெங் ஹீ பற்றி குறிப்பிடுகிறது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பகுதிகளின் மீது வரலாற்று உரிமையை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டு, Zheng He சென்ற பாதைகளை ஆராய சீனா இந்த நாவலை ஒரு அடிப்படையாகப் பயன்படுத்துகிறது. சமீபத்தில், 15 ஆம் நூற்றாண்டில் ஜெங் ஹீ இலங்கைக்கு விஜயம் செய்ததாகக் கூறி, அவர்கள் ஆராய்ச்சிக் கப்பல்களை இலங்கைக் கடற்கரைக்கு அனுப்பினர். இதேபோல், சீனா ஒருமுறை தங்கள் மூதாதையர்களின் கல்லறைகள் அருணாச்சல பிரதேசத்தில் இருப்பதாக வாதிட்டது, அவர்களின் சந்ததியினருக்கு அங்கு வழிபட உரிமை இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இந்தக் கூற்றுகள் இப்போது ஆதாரமற்றதாகவும் புனையப்பட்டதாகவும் தோன்றலாம், ஆனால் அவை பிராந்திய விரிவாக்கத்தை நியாயப்படுத்த வரலாற்றைப் பயன்படுத்தும் சீனாவின் இராஜதந்திரத்தை எடுத்துக்காட்டுகின்றன. சீனாவை சமாளிக்க, நாகரிகத்தின் மீதான அதன் கவனத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் திறம்பட பதிலளிக்க வேண்டும். எஸ்.ஜெய்சங்கர் மார்ச் மாதம் பிலிப்பைன்ஸ் பயணத்தின் போது இதை நிரூபித்தார்.


"இந்தப் பகுதி வளரவும் வெற்றிபெறவும் விதிகளைப் பின்பற்றுவதே சிறந்த வழியாகும் என்று நாங்கள் நம்புகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)) 1982 இன்றியமையாதது. ஏனெனில், இது கடல்களுக்கு விதிகளை அமைக்கிறது. அனைத்துத் தரப்பினரும் அதை முழுவதுமாக, எழுத்திலும், உள்ளத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். பிலிப்பைன்ஸின் தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதில் இந்தியா ஆதரிக்கிறது என்பது தெளிவாகிறது" என்று ஜெய்சங்கர் உறுதியாகக் கூறினார். பிலிப்பைன்ஸின் இறையாண்மையை இந்தியா ஆதரிக்கிறது என்று ஜெய்சங்கர் கூறினார். தென் சீனக் கடல் பிரச்சனைகளில் இந்தியா உறுதியாக நிற்கிறது என்றும், பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சீனாவின் உரிமையை நிராகரிக்கும் என்றும், இவை 2016 ஆம் ஆண்டு தீர்ப்பை ஏற்கிறது என்றும் அவர் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரிடம் உறுதியளித்தார். பிலிப்பைன்ஸுக்கு விளைவுகளை ஏற்படுத்தினாலும் கூட, தென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பிலிப்பைன்ஸை ஆதரிக்க இந்தியா தயாராக இருப்பதாக ஜெய்சங்கர் தெரிவித்தார். சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான பிலிப்பைன்ஸின் முயற்சிகளில் "பட்டய உறுப்பினராக" (charter member) இந்தியா தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இது இந்திய தலைவர்களின் மிகப்பெரிய நடவடிக்கையாகும். இந்தியாவுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும், ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)) விதிகளை இந்தியா எப்போதும் பின்பற்றுகிறது. ஆனால், கடந்த ஆண்டு, பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சருடன் நடந்த பேச்சு வார்த்தையின் போது, தீர்ப்பாயத்தின் 2016-ம் ஆண்டு தீர்ப்புக்குக் கீழ்ப்படியுமாறு சீனாவிடம் இந்தியா தனது முதல் நேரடிக் கோரிக்கையை முன்வைத்தது. கடந்த வாரம், ஜெய்சங்கர் நேரில் சென்று ஒரு அறிக்கையை மீண்டும் கூறினார். தொலைவில் உள்ள மோதலில் ஈடுபட இந்தியா தயாராக உள்ளது என்பதையும் அவர் காட்டினார். இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டிற்கு சீனாவின் பதில் எதிர்பார்க்கப்பட்டது. குளோபல் டைம்ஸ், ஜெய்சங்கரின் வருகை ராஜதந்திரம் மட்டுமல்ல. சீனாவுடன் பிரச்சனைகள் உள்ள நாடுகளுடன், குறிப்பாக நிலப்பிரச்சனைகள் தொடர்பாக இந்தியா கூட்டணி வைக்க முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.


”தென் சீனக் கடலில் சீனாவுடன் பிலிப்பைன்ஸ் தொடர்ந்து சிக்கலில் இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இதன் மூலம் சீனாவின் முக்கிய வளங்கள் பயன்படுத்தப்பட்டு, சர்வதேச அளவில் சீனாவின் நற்பெயர் கெடும். இதனால், சீனா இந்தியா மீது கவனம் செலுத்துவதை குறைக்கும் என இந்தியா நம்புகிறது” என்று சீன அரசு ஆதரவு நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.     

 

ஜெய்சங்கரின் அறிக்கை அவர் விரும்பிய விளைவை ஏற்படுத்தியது. தென் சீனக் கடலில் இந்தியாவின் தலையீடு சீன-இந்திய உறவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீன செய்தித் தொடர்பாளர்கள் மிரட்டல் விடுத்ததால் இது தெளிவாகிறது. இந்தியா மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில் சீனா எச்சரிக்கையாக இருக்கும் என்றும் அவர்கள் கூறினர். இந்தியா ஒரு பொறுப்பான நாடு, போர்களைத் தொடங்கும் நாடு அல்ல. அதன் தலைவர்கள் உலக விவகாரங்களில் பொறுப்பான மற்றும் செல்வாக்குமிக்க பங்கைக் கொண்டிருக்க விரும்புகிறார்கள்.


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனான சமீபத்திய தொலைப்பேசி அழைப்பின் போது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அமெரிக்காவுடனான நல்ல உறவுகளுக்கான மூன்று கொள்கைகளை கோடிட்டுக் காட்டினார்.  1) அமைதியை மதிப்பிடுதல், 2) நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் 3) நம்பகத்தன்மையை நிலைநிறுத்துதல் ஆகியவை அந்த மூன்று கொள்கைகளாகும். சீனத் தலைவர்கள் இந்தியாவுடனும் மற்ற நாடுகளுடனும் அதே வழியில் ஈடுபட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. சீனா உட்பட அனைத்து நாடுகளும் சர்வதேச விதிகளை பின்பற்ற வேண்டும் என இந்தியா விரும்புகிறது. இதுதான் மணிலாவிலிருந்து ஜெய்சங்கர் அனுப்பிய முக்கிய செய்தியாகும்.




Original article:

Share:

இஸ்ரேலின் நடவடிக்கைகளை அமெரிக்கா கட்டுப்படுத்த வேண்டும். அதே சமயம் ஈரான் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்

 டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீதான தாக்குதல் ஏப்ரல் 1 அன்று நடந்தது. அக்டோபர் 7, 2023 முதல் மேற்கு ஆசியா முழுவதும் நடந்து வரும் மோதலில் இது ஒரு குறிப்பிடத்தக்க விரிவாக்கம் ஆகும். தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஈரான் குற்றம் சாட்டியது. சிரியாவில் குத்ஸ் படை (Quds Force’s Syria) நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் உயர்மட்ட தளபதி முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 ஈரானியர்கள் தாக்குதலில் இறந்தனர். இத்தகைய தாக்குதல்களில் இஸ்ரேல் ஈடுபட்டதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. இருப்பினும், ஈரானிய இராணுவம் மற்றும் அணுசக்தி வீரர்களை குறிவைத்து இஸ்ரேல் பிராந்தியத்தில் நடவடிக்கைகளை நடத்தி வருகிறது என்பது பரவலாக அறியப்படுகிறது. டிசம்பர் 25 அன்று, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (Islamic Revolutionary Guard Corps (IRGC)) மூத்த ஆலோசகரான ராசி மௌசவி, சந்தேகத்திற்குரிய இஸ்ரேலிய தாக்குதலில் சிரியாவில் கொல்லப்பட்டார். ஏப்ரல் 1 தாக்குதல் பொதுவாக சர்வதேச சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் தூதரக வளாகத்தை குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பதால் அனைவராலும்  உற்றுநோக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது, விரோத சக்திகள் கூட இராஜதந்திர வளாகங்களைத் தவிர்த்துவிட்டன. 1999 இல், பெல்கிரேடில் உள்ள சீனத் தூதரகத்தின் மீது அமெரிக்கா தற்செயலாக குண்டுவீசித் தாக்கியபோது, ஜனாதிபதி பில் கிளிண்டன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். தாக்குதல் நடத்தியவர் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையில்  உள்ள நபர்களை துல்லியமாக குறிவைத்தார். இது ஒரு போர் நடவடிக்கையாக ஈரானில் பலரால் பார்க்கப்படுகிறது.


அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்கு முன்னரே, இஸ்ரேலும் ஈரானும் மேற்கு ஆசியாவில் ஒரு இரகசிய மோதலில் ஈடுபட்டிருந்தன. தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் இரட்டை தாக்குதலைத் தொடங்கியது 2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் காசா மீது ஒரு பெரிய அளவிலான படையெடுப்பு, மற்றும் ஈரான் மற்றும் அதன் கூட்டணி போராளிகளை இலக்கு வைத்து சிரியா மற்றும் லெபனானில் எண்ணற்ற வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஹமாஸ், ஹெஸ்பொல்லா, ஹௌதிகள் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிஹாத் உட்பட பிராந்தியத்தில் உள்ள பல்வேறு அரசு சாரா போராளிகளின் மைய ஆதரவாளராக ஈரானை இஸ்ரேல் பார்க்கிறது. 


காசா மீதான இஸ்ரேலின் போர் இஸ்ரேல் திட்டமிட்டபடி  நடக்கவில்லை. ஆறு மாதங்களில் 33,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், காசா ஒரு கல்லறை போல் மாறிவிட்டது. இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அக்டோபர் 7 அன்று நடந்த தாக்குதலின் காரணமாக சண்டையை நிறுத்தவும் பதவி விலகவும் அதிக அழுத்தங்களை எதிர் கொண்டார். ஆனால் விஷயங்களை அமைதிப்படுத்துவதற்குப் பதிலாக, அவர் நிலைமையை மோசமாக்க விரும்புவதாகத் தெரிகிறது. இஸ்ரேலும் ஈரானும் பெரிய போரில் ஈடுபட்டால், அது அமெரிக்காவையும் இழுக்கக்கூடும். அது முழு பிராந்தியத்திற்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் மிகவும் மோசமாக இருக்கும். இஸ்ரேலின் வலையில் ஈரான் சிக்கக்கூடாது. அவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். மேலும், இஸ்ரேலின் மிகப்பெரிய நண்பராக இருக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் பொறுப்பற்ற முறையில் செயல்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.




Original article:

Share:

அருணாச்சல பிரதேசத்தில் குடியேறாத குடியேற்றவாசிகள் -ராகுல் கர்மாகர்

 முதன்மையாக இராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸில் (Army and the Assam Rifles) பணியாற்றிய கூர்க்காக்களின் குடும்பங்களான குடியேறியவர்களுக்கும், பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்கப்பட்ட எல்லைக்கு அப்பாற்பட்ட சமூகமான யோபின்ஸுக்கும் (Yobins) இடையிலான பதட்டங்கள் 2020 முதல் விஜய்நகரில் அதிகரித்து வருகின்றன. ஒரு காலத்தில் எல்லைகளைக் காத்து வந்த குடியேற்றவாசிகள், இப்போது மாநிலத்திற்குள் பயணம் செய்வதற்கான அனுமதியைக் காட்டுமாறு சிலரால் கேட்டுக்கொள்ளப்படுவதால்,   வெளியேற்றப்படுவார்கள் என்று அஞ்சுவதாக ராகுல் கர்மாகர் தெரிவிக்கிறார். 


பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (Pradhan Mantri Gram Sadak Yojana) மூலம் நிதியளிக்கப்பட்ட இந்தியாவின் மிக நீளமான சாலையான மியாவ்-விஜய்நகர் சாலையின் (Miao-Vijaynagar Road) முடிவை கடக் பகதூர் சேத்ரி (Katak Bahadur Chhetri) அடையும் போது நிச்சயமற்றதாக உணர்கிறார். இது மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ளது. 157.56 கிலோமீட்டர் நீளமுள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் விஜயநகரில் இருந்து மியாவ் வரையிலான சாலை 2022 இல் திறக்கப்பட்டதிலிருந்து இந்த பாதைக்கான இணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சாலையை மண் பாதையில் இருந்து சிறிது மேம்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த முயற்சிகள் அந்த பகுதிகளில் 'குடியேறுபவர்களை' அகற்றுவதற்கான செயல்முறையுடன் ஒத்துப்போனது. இந்த குடியேறிகள், உள்ளூர்வாசிகளைப் போலவே, ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக இப்பகுதி மிகவும் தொலைவில் இருந்ததால் இவர்களை கவனிக்கப்படாமல் இருந்தனர்.


84 வயதான கடக் பகதூர், 2020 ஆம் ஆண்டு முதல் தனது சமூகத்திற்கும் யோபின்களுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களைப் பற்றி  கவலைப்படுகிறார். கடக் பகதூர் சமூகத்தில் முக்கியமாக இராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸில் (Army and the Assam Rifles) பணியாற்றிய கூர்க்கா குடும்பங்கள் உள்ளன. லிசு (Lisu) என்றும் அழைக்கப்படும் யோபின்கள், இந்தியாவில் அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடி அந்தஸ்தைக் கொண்ட எல்லை தாண்டிய சமூகம் ஆகும். இந்த இரு குழுக்களும் ஒருவரையொருவர் "வெளிநாட்டவர்களாக" பார்க்கிறார்கள்.


விஜயநகர் பள்ளத்தாக்கில் 1967-68 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் குடியேறிய அசாம் ரைபிள்ஸ் வீரர்கள், ஆரம்பத்தில் இருந்த 23 குடும்பங்களில் எஞ்சியிருக்கும் கடைசி உறுப்பினர்களில் கடக் பகதூரும் ஒருவர். 1972 ஜனவரியில் அருணாச்சலப் பிரதேசமாக மாறிய வடகிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள முக்கியமான வெற்று நிலத்தில் ராணுவ வீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் குடியமர்த்த அரசாங்கம் விரும்பியது. அவர்கள் மூன்று வெவ்வேறு தொகுதிகளாகப் பள்ளத்தாக்கில் இந்த ஒன்பது கிராமங்களில் 200 குடும்பங்களைக் குடியேற்றினர்.


கடக் பகதூர் தனது எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார். 2020 ஆம் ஆண்டில், அனைத்து யோபின் மாணவர் சங்கம் (All Yobin Students’ Union (AYSU)) தலைமையிலான ஒரு கும்பலால் அவரது வீட்டிற்கு அருகில் தாக்குதல் நடத்தப்பட்டது. விஜயநகரில் இருந்து குடியேறிய அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்றும், அதே ஆண்டு டிசம்பர் 22 அன்று நடந்த பஞ்சாயத்து தேர்தல்களில் பங்கேற்க தடை விதிக்கவும் என்றும் அது கோரியது. அருணாச்சல பிரதேச பட்டியல் பழங்குடியினர் (Arunachal Pradesh Scheduled Tribes (APST)) அல்லாத முன்னாள் இராணுவ வீரர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று அனைத்து யோபின் மாணவர் சங்கம் (All Yobin Students’ Union (AYSU)) வாதிட்டது. குடியேறியவர்களின் நிலத்தின் 30 ஆண்டு குத்தகை 2020 இல் முடிவடைந்ததாகவும் கூறினர். அனைத்து யோபின் மாணவர் சங்கம் (AYSA) யோபின் மக்களை (Yobin people) ஆதரிக்கிறது. அவர்களில், பெரும்பாலோர் விஜயநகரில் வசிக்கின்றனர்.


இந்த வன்முறைக்குப் பிறகு, விஜயநகரில் பஞ்சாயத்து தேர்தல்கள் எதுவும் நடைபெறவில்லை. அருணாச்சல பிரதேசத்தில் வன்முறை சம்பவங்களுக்குப் பிறகு நடைபெறவுள்ள முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். நில ஆவணங்கள் இல்லாததும், குடியிருப்பு சான்றிதழ்களை ரத்து செய்யச் சொல்வதும் தங்கள் வாக்களிக்கும் உரிமையை பாதிக்கும் என்று முன்னாள் ராணுவத்தினர் கவலை அடைந்துள்ளனர்.


அருணாச்சல பிரதேசத்தில் கூட விஜயநகரை விட்டு வெளியேறும்போது குடியேறியவர்கள் இப்போது உள்-நுழைவு அனுமதியை (inner-line permit (ILP)) காட்டுமாறு கேட்கப்படுகிறார்கள் என்று கடக் பகதூர் குறிப்பிடுகிறார். உள்-நுழைவு அனுமதி (ILP) என்பது மாநிலத்திற்கு வருகை தரும் குடியிருப்பாளர்கள் அல்லாதவர்களுக்கானது. இங்கு அவநம்பிக்கை சூழல் நிலவுவதாக அவர் கூறுகிறார்.


துயரங்களின் வரிசை 


சுதந்திரம் பெற்ற பிறகு பர்மாவுடன் (இப்போது மியான்மர்) தனது எல்லையைக் குறிக்க வேண்டிய அவசியத்தை இந்தியா உணர்ந்தது. 1960 ஆம் ஆண்டில், 7 வது அசாம் ரைபிள்ஸ் குழு (Assam Rifles team) மியாவோவிலிருந்து விஜயநகரை அடைய முயன்று தோல்வியடைந்தது. பின்னர், மேஜர் சுமர் சிங்கின் (Major Sumer Singh)  தலைமையிலான படையெடுப்பு பிப்ரவரி 1961 இல் காந்திகிராமத்தில் 22 கி.மீ தொலைவில் நிறுத்தி ஓரளவு வெற்றி பெற்றது. இறுதியாக, அக்டோபர் 1961 இல், மேஜர் ஜெனரல் ஏ.எஸ்.கௌராயாவின் (A.S. Gauraya) குழு விஜயநகரை அடைந்து அவரது மகனின் பெயரை வைத்தது. அசாம் ரைபிள்ஸ் அங்கு முகாம் அமைக்கப்பட்டு, அந்தப் பகுதியில் மக்களை குடியமர்த்த திட்டம் வகுக்கப்பட்டது.


மகாத்மா காந்தியின் சிலை இருக்கக்கூடிய காந்திகிராமம், விஜயநகரிலிருந்து 22 கி.மீ உள்நாட்டில் உள்ளது.

உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விவசாயத்திற்காக 10 ஏக்கர் நிலத்தையும், அவர்களின் வீடு மற்றும் தோட்டத்திற்கு கூடுதலாக ஒரு ஏக்கர் நிலத்தையும் வழங்க திட்டமிட்டது. இதில், முதல் வருடம், அவர்களுக்கு அரசாங்க விலையில் இலவச நியாய விலைப் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யும். இரண்டாவது ஆண்டில், அவர்கள் குறைந்தபட்சம் பாதி செலவை ஈடுகட்டுவார்கள், மூன்றாம் ஆண்டில் பாதியாக இருக்கும். நான்காவது ஆண்டில், குடியேறியவர்கள் தங்களை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.


இத்திட்டத்தின் கீழ், குடும்பங்கள் இருக்கக்கூடிய இப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் வீட்டுப் பொருட்களுக்கு ₹2,500 வழங்கப்படும். மேலும், ₹3,000 மதிப்புள்ள விவசாய கருவிகள், விதைகள், கால்நடைகள் போன்றவை வழங்கப்படும். மற்ற திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஒற்றை அறை குடியிருப்பை வழங்குவதாகும். விவசாயத்திற்கு நிலத்தை தயார்படுத்த இயந்திரங்களைப் பயன்படுத்தவும், காலனிகளுக்குள் மற்றும் அவற்றுக்கு இடையே உள்ள காலனிகளை இணைக்க சாலைகள் அமைக்கவும் அவர்கள் பரிந்துரைத்தனர்.


குடியேறியவர்களில் 95% பேர் கூர்க்காக்கள். அவர்கள் பெரும்பாலும் நேபாளத்திலிருந்து வந்தவர்கள். சிலர் உத்தரகாண்டில் உள்ள குமாவோன் மற்றும் கர்வால் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் மிசோரமைச் சேர்ந்தவர்கள். மேலும் சிலர், அசாமில் இருந்து கோச்-ராஜ்போங்ஷிகள். அனைத்து குடும்பங்களும் விமானத்தில் வந்த பிறகு,  பாதுகாவலர் இல்லாமல் விஜயநகரை விட்டு வெளியேற குடியேறியவர்கள் அனுமதிக்கப்படவில்லை.


10 ஆண்டுகளாக, குடியேறியவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட நிலச் சான்றிதழ்கள் மற்றும் நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ்கள் (permanent residence certificates (PRC)) போன்ற உரிமைகள் கிடைக்கவில்லை. ஆகஸ்ட் 1990 இல், அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது. 30 வருட குத்தகைக்கு நிலம் குடியேறியவர்களுக்கு 164 உத்தரவுகள் வழங்கப்பட்டதாக அது கூறவில்லை. 1980-ல், குடியேற்றவாசிகள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றனர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, குடியேற்றவாசிகளின் புகார்களைக் கேட்க ஒரு ஒன்றிய குழு விஜயநகருக்குச் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது. கூர்க்கா நலச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பகத் சேத்ரி இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டார்.


பிரச்சனை ஏப்ரல் 1990 வரை நீடித்தது. அப்போதுதான் மாநில அரசு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 30 ஆண்டுகளுக்கான குத்தகையாக நிலம் வழங்கியது. ஆகஸ்ட் 1990 இல், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை செய்தபோது, 30 ஆண்டு குத்தகைக்கு குடியேற்றவாசிகளுக்கு 164 நில ஒதுக்கீடு ஆணைகளை வழங்கியதாக அரசாங்கம் கூறவில்லை. 


புத்த மந்திர் கிராமத்தைச் சேர்ந்த சேத் நாராயண் உபாத்யாய் கூறுகையில், குத்தகை குறித்து உச்ச நீதிமன்றத்துக்குத் தெரியாது. குடியேறியவர்களை மிகவும் வருத்தியது என்னவென்றால், அவர்கள் குடியேறும்போது குத்தகை எவ்வளவு காலம் இருக்கும் என்று அவர்கள் பேசவில்லை. தெரிந்திருந்தால், அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு இவ்வளவு தூரத்தில் குடியேறியிருக்க மாட்டார்கள்.


2000 ஆம் ஆண்டின் அருணாச்சல பிரதேச (நில தீர்வு மற்றும் பதிவுகள்) சட்டம் (Arunachal Pradesh (Land Settlement and Records) Act) மாநிலத்தில் நிலம் எவ்வாறு ஒதுக்கப்பட்டது என்பதை மாற்றியது. இதற்கு முன்பு, நில உடைமை சான்றிதழ் (land possession certificate (LPC)) கொண்ட ஒருவர் நில உரிமையாளர் ஆனார். 2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் ஒரு திருத்தம் பழங்குடி சமூகங்களுக்கு மட்டுமே உரிமைகளை வழங்கியது. அனைத்து குடியேறியவர்களின் நலன்புரி சங்கம் (All Settlers Welfare Association) அவர்களின் 30 ஆண்டு குத்தகை ஒதுக்கீடுகளை நில உடைமை சான்றிதழ்கள் (LPC) அல்லது நிரந்தர தலைப்புகளாக மாற்ற முயன்றது. ஆனால், அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்தன.


குடியேற்றவாசிகள் பூர்வீக குடிமக்கள் அல்லாததால், அரசுத் திட்டங்களின் பயன்களைப் பெற முடியவில்லை என்று சங்கம் கூறுகிறது. “எங்களுக்கு குடியுரிமைச் சான்றிதழை வழங்குவதற்கான வழிமுறை எதுவும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, சாங்லாங் மாவட்ட நிர்வாகம் நிரந்தர குடியுரிமை சான்றிதழ் வழங்குவதை நிறுத்தியது. அதற்கு பதிலாக, அவர்கள் குடியிருப்பு சான்றிதழ்களை (residential certificates (RC)) வழங்கத் தொடங்கினர். குறிப்பாக மத்தியப் படைகளில் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டது. அசாம் ரைபிள்ஸில் குடியேறியவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு நீக்கப்பட்டது.


எளிமையாகச் சொன்னால், எங்களிடம் நிலம் இல்லை. பஞ்சாயத்து தேர்தலில் எங்களால் பங்கு கொள்ள முடியாது. எங்கள் பெற்றோருக்கு நிலம் தருவதாக வாக்குறுதி அளித்தும், அது கிடைக்காததால் நாங்கள் தொலைதூரப் பகுதியை நோக்கி வெளியேற வேண்டியிருக்கும். வழக்கறிஞரான எஸ்.செத்ரி, குடியிருப்பு சான்றிதழ்களை (residential certificates (RC)) கொடுக்க கோரிக்கைகள் உள்ளன. ஆனால், அதற்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லை என்று கூறுகிறார். நாங்கள் எங்கள் எல்லைகளை தனியாக, சரியான இணைப்புகள் இல்லாததால், இவற்றை  பாதுகாப்பதில் நாங்கள் கஷ்டப்படுகிறோம் என்று அவர் நம்புகிறார்.


இப்போது இங்குள்ள குடியேற்றவாசிகள், சில உரிமைகளுடன் தற்காலிக குடியிருப்பாளர்களாகப் பார்க்கப்படுவது ஏன் என்று கோர்க்கா இளைஞர் குழு (Gorkha Youth Committee) கேள்வி எழுப்புகிறது. அவர்கள் இந்தியாவிலோ அல்லது நேபாளத்திலோ தங்கள் நிலத்தை விட்டுக் கொடுத்தால், சில அதிகாரிகளால் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. 2010 களின் பிற்பகுதியில் வந்த வெளிநாட்டவர்களுக்கு அருணாச்சலப்பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (Arunachal Pradesh State Transport Services(APST)) அந்தஸ்து மற்றும் அரசாங்க திட்டங்களுக்கான அணுகல் வழங்கப்படுவதால் அவர்கள் குறிப்பாக வருத்தப்படுகிறார்கள். யோபின்கள் (Yobins) என்று குறிப்பிடப்படும் இந்த வெளிநாட்டவர்கள், குடியேறியவர்களுக்கு மறுக்கப்பட்ட நன்மைகளை அனுபவித்து வருகின்றனர்.


'சட்டப்படி நடக்கிறது'


வடகிழக்கில் உள்ள சாங்லாங் மாவட்டம் ஒரு தனித்துவமான மக்கள்தொகை அமைப்பைக் கொண்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1960 களில் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த சக்மாக்கள் (Chakmas) மற்றும் ஹஜோங்குகள் (Hajongs), மாவட்டத்தின் 1.48 லட்சம் மக்கள்தொகையில் 29% உள்ளனர். கூர்க்காக்கள், அவர்களில் பலர் இந்திய ஆயுதப் படைகளில் உள்ள நேபாள வீரர்களின் சந்ததியினர், 7% க்கும் அதிகமானவர்களாக உள்ளனர். கூடுதலாக, 2,600 க்கும் மேற்பட்ட திபெத்திய அகதிகளும் இதில் உள்ளனர். மேலும், யோபின்கள் விஜய்நகர் பகுதியில் குவிந்துள்ளன, அவற்றின் எண்ணிக்கை சுமார் 5,000 ஆகும்.


விஜயநகர் பள்ளத்தாக்கில் மீட்க குடியேற்றப்பட்டபோது யோபின் அல்லது லிசு குடும்பங்கள் (Yobin or Lisu families) மிகக் குறைவாகவே இருந்தன என்று முன்னாள் இராணுவத்தினர் குறிப்பிடுகின்றனர்.  


மியான்மர் மற்றும் சீனாவின் சில பகுதிகளில் தங்களுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிப்பதன் அடிப்படையில் அவர்கள் வெளிநாட்டினர் என்ற கோட்பாடு இருப்பதாக லிசு (Lisu) அமைப்புகள் கூறுகின்றன. ”"எங்கள் சமூகத்தில் சிலர் அண்டை நாடுகளில் வசிப்பதால் எங்களை வெளிநாட்டினர் என்று அழைப்பது நியாயமற்றது. இந்திய ஆயுதப்படைகள் வருவதற்கு பல தசாப்தங்களாக நாங்கள் விஜய்நகர் பகுதியில் இருந்தோம். இந்தியா-மியான்மர் எல்லைக்குப் பிறகுதான் எங்களில் பலர் நாங்கள் இந்தியர்கள் என்பதை உணர்ந்தோம். 1972 இல் வரையப்பட்டது" என்பதாக, அனைத்து யோபின் மாணவர் சங்கத்தின் (All Yobin Students’ Union (AYSU)) தலைவர் நக்வாசோசா யோபின் பகிர்ந்து கொண்டார்.

 

யோபின் பழங்குடி அடிப்படை உரிமைகள் மன்றத்தின் (general secretary of the Yobin Tribe Fundamental Rights Forum) பொதுச் செயலாளர்  அவியா நக்வாசா, எல்லையை வரையறுப்பதில் யோபின்களின் பங்கை மாநில அரசு அங்கீகரித்ததாகவும், எல்லையின் வரையறைக்கான இடங்களை பரிந்துரைத்ததற்காக 2019 ஆம் ஆண்டில் அகி யெலியேவுக்கு தங்கப் பதக்கம் வழங்கியதாகவும் குறிப்பிடுகிறார். 1962 ஆம் ஆண்டில் மேம்பட்ட தரையிறங்கும் தளத்திற்காக விஜயநகரில் உள்ள தாவோடியில் (Dawodi) நிலத்தையும், யெலியே நன்கொடையாக வழங்கினார். யெலியா ஒரு பதக்கம் பெற்றார். அவரும் மற்ற யோபின் ஆண்களும் இந்தியக் கொடியைப் பின்பற்றுவதாகவும், இந்தியாவுக்கு விசுவாசமாக இருப்பதாகவும் உறுதியளித்ததாக அதிலுள்ள மேற்கோள் கூறுகிறது.


யோபின் நலன்புரிச் சங்கத்தைச் (Yobin Welfare Society) சேர்ந்த டிஃபுசா யோபின் கூறுகையில், அவர்களின் சமூகம் சந்தேகத்தை எதிர்கொண்டதாகவும், வெளிநாட்டினர் என்ற சந்தேகத்தின் பேரில் பாதுகாப்புப் படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டதாகவும், ஏனெனில் அவர்களின் இருப்பு நீண்ட காலமாக அதிகாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்படவில்லை. அவர்களின் இந்திய குடியுரிமையும் 1970களில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அவர்கள் பிராந்தியத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்தாலும், அவர்கள் 1979 இல் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அருணாச்சலப் பிரதேச அட்டவணைப் பழங்குடியினர் (Arunachal Pradesh Scheduled Tribes (APST)) என அங்கீகரிக்கப்பட்டனர். 2015ல், அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக, 2017ல் மீண்டும் அந்தஸ்து பறிக்கப்பட்டது. பின்னர், 2018 டிசம்பரில், பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி (Tribal Affairs Ministry and the National Commission for Scheduled Tribes), யோபின்களுக்கு மீண்டும் ஒருமுறை மாநில அரசு பட்டியல் பழங்குடி சான்றிதழ்களை வழங்கத் தொடங்கியது.


கூர்க்காக்களையோ அல்லது முன்னாள் ராணுவத்தினரையோ தாங்கள் எதிர்க்கவில்லை என்று நவ்கசோசா கூறுகிறார். ஆனால், உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட அவர்களை அனுமதிப்பது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 73 வது மற்றும் அருணாச்சல பிரதேச பஞ்சாயத்து ராஜ் சட்டம் (Arunachal Pradesh Panchayat Raj Act), 1997க்கு எதிரானது. இந்த சட்டங்கள் உள்ளூர் மக்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன. மேலும், அவை மாநில சட்டத்தை பின்பற்றுகின்றன.


இணைப்பை மேம்படுத்துதல்


இந்து, பௌத்த மற்றும் கிறிஸ்தவ கூர்க்காக்கள் மற்றும் கிறிஸ்தவ யோபின்கள் உட்பட இப்பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தங்களுக்குள்ளும், பாதுகாப்புப் படையினர் மற்றும் வன அதிகாரிகளுடனும் மோதல்களைக் கொண்டுள்ளனர். தரைவழி மற்றும் தொலைத்தொடர்பு இரண்டிலும் மோசமான தகவல் தொடர்பு காரணமாக இது உலகளவில் கவனிக்கப்படாமல் உள்ளது. டிசம்பர் 11, 2020 அன்று நடந்த வன்முறையை சிறந்த தகவல்தொடர்பு மூலம் தவிர்த்திருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.


மியாவோ-விஜயநகர் சாலை (Miao-Vijaynagar road) பயண நேரத்தை குறைத்துள்ளது. இருப்பினும், பழங்குடி சமூகங்கள் வசிக்கும் தேசிய பூங்காவிற்குள் செப்பனிடப்படாத பகுதி, மழைக்காலத்தில் செல்ல கடினமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சாலையின் நிலை கணிசமாக மேம்பட்டுள்ளது என்று விஜயநகரின் துணை அதிகாரி (Vijaynagar’s Circle Officer) சௌனின் மாயோ தெரிவித்தார். தேசிய பூங்காவிலிருந்து சாலையை விரிவுபடுத்தி மாற்றியமைக்க திட்டங்கள் நடந்து வருகின்றன.


சாலையில் பயணம் செய்ய ஒரு பயணிக்கு ₹1,000 செலவாகும். ஒரு மானிய விலையில் ஹெலிகாப்டர் சேவை வாரத்திற்கு இரண்டு முறை இயங்குகிறது. இது, மலிவான விலையில் ஒரு மாற்றாக வழங்குகிறது. இருப்பினும், சீரற்ற வானிலை காரணமாக இது பெரும்பாலும் ரத்து செய்யப்படுகிறது. BSNL ஒரே நேரத்தில் 200 பயனர்களுக்கு 2ஜி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தியை வழங்குகிறது. கட்டண வாட்ஸ்அப் செய்தியிடலுக்கு  VSAT இணைய வசதிகளும் உள்ளன. சிறிய நீர்மின் திட்டங்கள் மற்றும் சூரிய மின் நிலையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இப்பகுதியில் மின்சார நிலைமை பெருமளவில் மேம்பட்டுள்ளது. கூடுதலாக, ஒரு புதிய எரிவாயு நிறுவனம் 752 வீடுகளுக்கு சேவை செய்கிறது. சிறப்பான போக்குவரத்து மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக யாஃபு யோபின் கூறுகிறார். இருப்பினும், 2022 இல் மியாவோவில் இருந்து விஜயநகரை அடைந்ததும் கூர்க்காக்கள் குறைவான பயனை அடைந்ததாக மக்கள் இன்னும் நம்புகிறார்கள்.


சிறந்த போக்குவரத்து மற்றும் வேலை வாய்ப்புகள் நமது உள்ளூர் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதாக யாஃபு யோபின் (Yaofu Yobin) கூறுகிறார்.  ஆனால் இன்னும் மாறாமல் இருப்பது என்னவென்றால், 2022 இல் மியாவோவிலிருந்து விஜயநகரை அடைந்தவுடன் கூர்க்காக்கள் குறைவான பயனை அடைந்தனர் என்ற எண்ணம் தான்.




Original article:

Share:

சுதந்திரமான, இறையாண்மை கொண்ட பாலஸ்தீனம் உருவாக சாத்தியமற்ற சூழல் - சின்மயியின் கரேகா

 உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வரவேண்டும். இருப்பினும் சூழ்நிலை தற்பொழுது  ஒப்பந்தத்திற்கு சாதகமாக இல்லை. 

 

இன்று மத்திய கிழக்கில், இரண்டு தெளிவான விஷயங்கள் உள்ளன: ஒன்று திட்டவட்டமானது, மற்றொன்று மிகவும் சாத்தியமானது. அக்டோபர் 7, 2023க்கு முன், நிபந்தனைகளுடன் பாலஸ்தீன அரசு உருவாகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போது, இஸ்ரேலுடன் இணைந்தால் சுதந்திரமான பாலஸ்தீன அரசு இருக்காது என்பது உறுதியாகிவிட்டது. இரு தரப்பினரும்  பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இரு  நாடுகளும் இணைந்து வாழ்வதற்கான விரிவான திட்டத்தை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. ஜனவரி 2001 இல், தாபாவில், நடை பெற்ற பேச்சுவார்த்தியில் இரு தரப்பினரும் ஒப்பந்தத்திற்கும் சம்மதம் தெரிவித்தனர்.

 

ஹமாஸ்  (Hamas) VS பாலஸ்தீன அதிகாரசபை (Palestinian Authority) 


அக்டோபர் 7 முதல், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையில்  போர் நிறுத்த  ஒப்பந்தம் பற்றி பேசத்தொடங்கி உள்ளன. ஆனாலும், இந்த அணுகுமுறை இப்போது காலாவதியானதாகத் தெரிகிறது. இப்பொழுது, இஸ்ரேலில் வெகு சிலரே பாலஸ்தீன நாடு என்ற கருத்தை ஆதரிக்கின்றனர். மேற்குக் கரையில் முன்பை விட இப்போது ஹமாஸ் மிகவும் பிரபலமாக உள்ளது. இதன் பொருள் என்னவென்றால், எந்தவொரு போரும் முடிவுக்கு வந்த பிறகு, ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு பாலஸ்தீன பகுதிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அக்டோபர் 7ஆம் தேதிக்கு முன்பே பல மேற்குக்கரை பாலஸ்தீனியர்கள் ஹமாஸை ஆதரித்தனர். இப்போது, ஹமாஸுக்கு அவர்களின் ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளது. இஸ்ரேலியர்கள் இந்த சூழ்நிலையை நிலையை எதிர்கொள்ள விரும்பவில்லை.


பாலஸ்தீன அதிகார சபை ரமல்லாவில் அமைந்துள்ளது. இது மற்ற குழுக்களை விட அமைதியானதாக கருதப்படுகிறது. இஸ்ரேலுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. இருப்பினும், இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் இருவரும் அதை ஊழல் மற்றும் பயனற்ற சபையாக  பார்க்கிறார்கள். நியாயமான முறையில் தேர்தல் நடந்தால், ஹமாஸ்  வெற்றி பெறும். ஹமாஸ் முற்றிலுமாக அகற்றப்பட்டால் மட்டுமே இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தை நாடாகக் கருதுவார்கள். ஆனால் இப்பொழுது அதற்கான சாத்திய கூறுகள் இல்லை. 


இதனால், மோதல் தொடரும். இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (Israel Defense Forces (IDF)) ரமல்லாவில் மீதமுள்ள ஹமாஸ் படை வீரர்களை அழிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த ராஜதந்திரம் சில இஸ்ரேலிய அறிஞர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களால் ஆதரிக்கப்படுகிறது.  


ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 80 அல்லது 90 பணயக் கைதிகளை திருப்பி அனுப்புவதற்கும் ஹமாஸை ஒழிப்பதற்கான இலக்கிற்கும் இடையில் எவ்வாறு முன்னுரிமை அளிப்பது என்பதில் இஸ்ரேலிய மக்கள் பிளவுபட்டுள்ளனர். பணயக் கைதிகளை மீண்டும் கொண்டு வருவது மிக முக்கியமானது என்று சிலர் நம்புகிறார்கள். மற்றவர்கள் ஹமாஸை அகற்றுவது முன்னுரிமை அளிக்க வேண்டும்  என்று நினைக்கிறார்கள். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மக்களுக்கு இரண்டு இலக்குகளையும் அடைவேன்  என்று உறுதியளித்தார். இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடான அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடனின் பகிரங்க எச்சரிக்கைக்குப் பிறகும், ரஃபா மீதான தாக்குதலைத் தொடர அவர் திட்டமிட்டுள்ளார்.


பரந்த மோதல் அபாயம்


காசா மோதல் ஒரு பரந்த பிராந்திய போராக அதிகரிக்கக்கூடும் என்று அனைவருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.  அமெரிக்கா ஜனாதிபதி பைடனுக்கு இது முக்கிய கவலையாக உள்ளது. இதைத் தடுக்கும் வகையில், போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி ஜே.பிளிங்கன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மார்ச் 25ம் தேதி உடனடி போர் நிறுத்தத்திற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் அது ரமலான் முடியும் வரை மட்டுமே நீடிக்கும். அமெரிக்கா இதற்கு வாக்களிக்கவில்லை, மற்ற 14 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு  ஆதரவாக வாக்களித்தனர். இருப்பினும், இந்தத் தீர்மானம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக திரு.பைடன் இந்த நடவடிக்கையை எடுத்தார். வெளிநாட்டுக் கொள்கையில் உள்நாட்டு அரசியல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


கணிசமான உயிர் இழப்பு மற்றும் அழிவுகளால் கலங்காத ஹமாஸ், ரமல்லாவில் நடவடிக்கையை மேற்கொள்வதற்கான பிரதம மந்திரி நெத்தனியாகுவின் தீர்மானத்தை குறைத்து மதிப்பிடுகின்றனர். போர் நிறுத்த விதிமுறைகளின் ஒரு பகுதியாக இஸ்ரேல் தனது படைகளை நிரந்தரமாக திரும்பப் பெற வேண்டும் என்று ஒப்பந்தம் கோருகிறது. விரைவான மற்றும் நீடித்த போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சர்வதேச ஆதரவை நம்பியுள்ளது. எவ்வாறாயினும், திரு. நெதன்யாகு தனது இலக்குகளை அடையும் வரை போரை நிறுத்த மாட்டார்.


லெபனானில் இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. இரு தரப்பினரும் உயிரிழப்புகளை சந்தித்து வருகின்றனர். ஹெஸ்பொல்லாவிடம் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளையும், ஏவுகணைகளையும் இஸ்ரேலை நோக்கி தயாராக வைத்துள்ளனர். நடந்து கொண்டிருக்கும் காசா போர் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது இன்னும் குறிப்பிடத்தக்க தாக்குதலை நடத்துவதற்கான வாய்ப்பாக ஹெஸ்பொல்லாவால் பார்க்கப்படலாம். ஹெஸ்பொல்லா ஷியா என்றும், ஹமாஸ் சுன்னி என்றும் குழுவாத வேறுபாடுகள் இருந்தபோதிலும், மோதல் இந்த குழுக்களை ஒரு பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்படுத்தியுள்ளது.


போர்கள் அசாதாரண கூட்டணிகளை உருவாக்குகின்றன. உதாரணமாக, ஒரு ஷியா குழு சன்னி குழுவை ஆதரிக்கிறது. வடக்கு இஸ்ரேலில் இருந்து பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய குடிமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஈரானிய தூதரகம் உட்பட சிரிய பிரதேசத்தை இஸ்ரேல் தாக்கியதால், சிரியாவும் ஈரானும் பதிலடி கொடுக்கக்கூடும். இதனால் இஸ்ரேல் மீண்டும் வலுவாக தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இது நடந்தால், எகிப்து  போரில் ஈடுபடுவதற்கான நிர்பந்தம் ஏற்படும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் படையெடுப்புகளின் போது  ரமல்லாவிலிருந்து மக்களை அதன் எல்லைக்குள் அனுமதிக்குமாறு எகிப்து வலியுறுத்தப்படுகிறது. இது, மற்ற அரபு நாடுகளின் அழுத்தத்துடன், எகிப்து நடுநிலை வகிக்க கடினமாக இருக்கும். இஸ்ரேலை வீழ்த்தும் திறன் கொண்ட ஏவுகணைகளை ஈரான் வைத்துள்ளது. இந்த நாடுகள், இதனை, இஸ்ரேலை ஒழிப்பதற்கான அரிய வாய்ப்பாக கருதலாம்.       


இது நடந்தால், அமெரிக்கா  இஸ்ரேலின் உதவிக்கு செல்லும். இது நடந்தால், ரஷ்யா அமைதியாக இருக்க முடியுமா? இந்த சூழ்நிலை ஆபத்தானது மற்றும் உலகளவில் மக்கள் அனைவரையும் கவலை அடைய செய்கிறது.  இது இப்போது சாத்தியமில்லை என்று தோன்றினாலும், அதன் வாய்ப்புகளைப் புறக்கணிப்பது மிகவும் ஆபத்தான சூழ்நிலைக்கு கொண்டு செல்லும்.  

  

சின்மயா ஆர்.கரேகான், ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தூதராகவும் (India’s Ambassador to the United Nations), மத்திய கிழக்கு நாடுகளுக்கான இந்தியாவின் சிறப்பு தூதராகவும் 2005-09 வரை பணியாற்றினார்.




Original article:

Share:

நாடாளுமன்றத்தின் கடந்த காலம், மாறிவரும் இயக்கவியலின் கண்ணாடி - பிரியங்க் நாக்பால் நேஹல் சர்மாவாக

 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுவரை நடைபெற்ற அலுவல்கள் நாடாளுமன்ற ஈடுபாட்டிற்கு புத்துயிர் அளித்தல் மற்றும் ஆக்கபூர்வமான விவாதத்தின் அவசியத்தை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றன.


17வது மக்களவை, 2019 முதல் 2024 வரை செயல்பட்டது, ஒரு சனிக்கிழமையன்று அதன் அமர்வு முடிவுற்றதன்  மூலம் அதன் பாரம்பரியமாக இருக்கும் வாரத்தில் ஐந்து வேலை என்பதிலிருந்து மாறியது. இந்த அசாதாரண திட்டமிடல் முந்தைய மக்களவையின் முடிவைப் பிரதிபலித்தது, அது அதன் இறுதி அமர்வையும் நீட்டித்தது. இந்தியாவில் பொதுத் தேர்தலை நெருங்கி வரும் நிலையில், இந்த முறை தொடருமா அல்லது புதிய போக்கு உருவாகுமா என்ற ஊகங்கள் உள்ளன. இந்த சூழ்நிலை இந்திய குடிமக்கள் 18வது மக்களவையின் துவக்க விழாவை எதிர்பார்க்கும் நிலையில், பாராளுமன்றத்தின் சமீபத்திய செயல்பாடுகளை சிந்திக்க தூண்டுகிறது.


அமைச்சகங்கள் எவ்வாறு செயல்பட்டன ?


அரசாங்கத்தின் அரசியல் சூழல் மாறி வருகின்றது. மாநிலங்களவை உறுப்பினர்களிடம் இருந்து 1,146 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், 28 பேருக்கு மட்டுமே பதில் கிடைத்தது. அதே போல், மக்களவையிலிருந்து பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் கேள்விகளும் குறைந்துள்ளன. 15 மற்றும் 16 வது மக்களவைகளின் போது 5,000 ஆக இருந்த கேள்விகளின்  எண்ணிக்கை 17 வது மக்களவையில் 1,700 ஆக குறைந்தது. அரசு உயர் அலுவலகத்திடம் குறைவான மக்களே கேள்வி கேட்பதை இது காட்டுகிறது.


நாடாளுமன்றத்தில், கொள்கைகள் மற்றும் தேசிய பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் நடக்கும்போது, குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் கடந்த மூன்று மக்களவைகளிலும் காணப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் நலன்களும் முன்னுரிமைகளும் எவ்வாறு மாறுகின்றன என்பதை இது காட்டுகிறது.


சுகாதாரம் மற்றும் குடும்பம், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் ஆகிய இரண்டு அமைச்சகங்கள் மிகவும் முக்கியமானவையாகியுள்ளன. அவர்கள் இப்போது அதிக கேள்விகளைப் பெறுகின்றன. சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் மீதான கவனத்தின் இந்த அதிகரிப்பு COVID-19 தொற்றுநோய்க்கு முன்பே தொடங்கியது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உன்னிப்பாக கவனித்து வருவதை இது காட்டுகிறது. இந்த அமைச்சகங்கள் அதிக கேள்விகளைப் பெற்றாலும், மக்களவையில் ஒட்டுமொத்த கேள்விகளின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது.


தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் (national security and internal affairs) மீதான ஆர்வம் வியக்கத்தக்க வகையில் குறைந்துள்ளது. 15 வது மக்களவை வரை, உள்துறை அமைச்சகத்திடம் (Ministry of Home Affairs) இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால், இப்போது, ராஜ்யசபாவில் அதிக கேள்விளை எதிர்கொண்ட முதல் ஐந்து அமைச்சகங்களின் பட்டியலில்   வெளிப்படையாக இல்லை, கேள்விகளின் என்னிக்கை 32% குறைந்துள்ளன. மேலும், இந்த மாற்றம் நாடு எதை முக்கியமானதாகக் கருதுகிறது என்று மக்களை யோசிக்க வைக்கிறது, குறிப்பாக முக்கியமான சட்டங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.


அதேசமயம், இந்தியா தனது பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது இந்தியாவை "பலவீனமான ஐந்து" பொருளாதார  நாடுகளில் (fragile five economies) இருந்து உலகின் முதல் ஐந்து பொருளாதார நாடுகளில் (top five economies) ஒன்றாக மாற விரும்புகிறது. நிதி அமைச்சகம் ஒரு வித்தியாசமான போக்கைக் காண்கிறது. இந்த அமைச்சகம், நாட்டின் நிதித் திட்டங்களுக்குப் பொறுப்பாகும். அது இப்போது நாடாளுமன்றத்தில் குறைந்த கவனத்தையே பெற்று வருகிறது. மக்களவை மற்றும் மாநிலங்கவையில் கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கையில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு நேர்மறையான அறிகுறி உள்ளது. மேலும் பல கேள்விகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நிதி விஷயங்களை மிகவும் வெளிப்படையானதாகவும் பொறுப்பானதாகவும் மாற்றுவதில் வளர்ந்து வரும் கவனத்தை இது அறிவுறுத்துகிறது.


கோவிட்-19 தொற்றுநோய் இந்தியாவின் கல்வி முறையை பெரிதும் பாதித்துள்ளது. இந்த சவால்கள் இருந்தபோதிலும், பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை மீதான கவனம் வலுவாக உள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைய கேள்விகள் கேட்கப்படும் முதல் ஐந்து அமைச்சகங்களில் கல்வி அமைச்சகமும் ஒன்றாகும். நாடாளுமன்ற விவாதங்களில் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது. இருப்பினும், அனுமதிக்கப்படாத கேள்விகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த முக்கியமான பகுதியில் மேற்பார்வை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது பற்றிய கவலைகளை இது எழுப்புகிறது.


புள்ளிவிவரங்களை உன்னிப்பாகப் கவனித்தால் ஒரு போக்கு  வெளிப்படுகிறது. மக்களவையில், அடுத்தடுத்த அமர்வுகளில் அனுமதிக்கப்படாத கேள்விகளின் சதவீதம் குறைந்துள்ளது. 


ஆனால், மாநிலங்கவையில் நிலைமை வேறு. இங்கே, அனுமதிக்கப்படாத கேள்விகளின் என்னிக்கை அதிகரித்து வருகிறது. 17வது மக்களவையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் (Health and Family Welfare), உள்துறை (Home Affairs), பாதுகாப்பு (Defence), விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் (Agriculture and Farmers’ Welfare) மற்றும் நிதி (Finance) போன்ற அமைச்சகங்களுக்கு அனுமதிக்கப்படாத கேள்விகளின் என்னிக்கை மாநிலங்களவையில் 36.6% ஆகும். மக்களவையில் நிராகரிக்கப்பட்ட கேள்விகளில் என்னிக்கை 37.8% ஆக இருந்தது. இது பாராளுமன்ற மேற்பார்வையில் நடந்து வரும் பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகிறது.


தலையீடுகளின் பயன்பாடு


இந்திய நாடாளுமன்றம் செயல்படும் விதம் மாறி வருகிறது. என்ன தலைப்புகள் கவனத்தை ஈர்க்கின்றன என்பது மட்டுமல்லாமல், சட்டமியற்றுபவர்கள் சிக்கல்களைத் தீர்க்க தங்கள் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள். பூஜ்ஜிய நேர விவாதம் (Zero Hour) அதிகரித்து வருவது ஒரு முக்கிய போக்காக பார்க்கப்படுகிறது.


கடந்த 15 ஆண்டுகளில், மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேர (Zero Hour) பயன்பாடு 62% அதிகரித்துள்ளது. மக்களவையில் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு ஒரு நல்ல அறிகுறியாகும். சட்டமியற்றுபவர்கள் அவசர பிரச்சினைகளைக் கையாள்வதிலும், அரசாங்கத்திடம் விளக்கங்களைக் கேட்பதிலும் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. இருப்பினும், 'அரை மணி நேர விவாதங்கள் (Half-an-Hour Discussions)', 'குறுகிய அறிவிப்பு கேள்விகள் (Short Notice Questions)', 'கவன ஈர்ப்பு தீர்மானம் (Calling Attention)', 'குறுகிய கால விவாதங்கள் (Short Duration Discussions)' மற்றும் 'சிறப்பு குறிப்புகள்' (Special Mentions) போன்ற பிற முறைகள் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன.


முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பூஜ்ஜிய நேரம் (Zero Hour) பிரபலமாக இருந்தாலும், அதற்கு அதன் வரம்புகள் உள்ளன. விவாதங்களை சிறப்பாக நடைபெறுவதற்கும், தீர்வுகளைக் கண்டறிவதற்கும், பிற முறைகளையும் பயன்படுத்துவது முக்கியம். இவற்றில் 'கவன ஈர்ப்பு தீர்மானம்' (Calling Attention), 'குறுகிய காலம்' (Short Duration) மற்றும் 'அரை மணி நேரம்' விவாதங்கள் (‘Half and Hour’ discussions)  ஆகியவை அடங்கும். இந்த முறைகள் அதிக உறுப்பினர்களை விவாதத்தில் ஈடுபட அனுமதிப்பதுடன் விவாதங்களின் தரத்தையும்  மேம்படுத்துகின்றன.


16வது மக்களவை மற்ற அமர்வுகளை விட அதிக சுறுசுறுப்பாக இருந்தது. அதிக எண்ணிக்கையிலான கேள்விகளை அனுமதிப்பதற்கும், சபைக்குள் பல்வேறு விவாதங்களில் ஈடுபடுவதிலும் அது தனித்து நின்றது.


சபையின் செயல்பாடுகள் பற்றிய விரிவான ஆய்வு, அடுத்த நடவடிக்கைக்கான வாய்ப்புகளைத் தவறவிட்டது. தவறாக வழிநடத்தும் அறிக்கைகளுக்கு எதிராக சிறப்புரிமைப் பிரச்சனைகளை முன்வைக்காதது போன்ற நிகழ்வுகள் மேலும் அரசாங்க பொறுப்புக்கூறலின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. மாநிலங்களவையின் 2023 குளிர்காலக் கூட்டத் தொடரில் போட்டித் தேர்வுகளுடன் தொடர்புடைய மாணவர்களின் தற்கொலைகள் (student suicides linked to competitive exams) குறித்த முக்கியமான மசோதாவின் விவாதம் தவிர்க்கப்பட்டது. இப்பிரச்சினை தொடர்பான சட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க அவைத் தலைவர் தயாராக இருந்த போதிலும், மக்கள் பிரதிநிதிகள், அரை மணி நேரம் விவாதம் நடத்துவதற்கான வாய்ப்பினை நழுவவிட்டனர். சமூகப் பிரச்சினைகளை நாடாளுமன்ற வழிகளில் கையாள்வதற்கான வாய்ப்பை இது தவறவிட்டது.


கடந்த காலங்களில், வகுப்புவாத வன்முறை மசோதா 2014 (Communal Violence Bill in 2014) போன்ற சட்டங்களை வலுவான எதிர்க்கட்சிகளால் தடுக்க முடிந்தது. இப்போதைய நாடாளுமன்ற மாற்றங்கள் சட்டமியற்றும் அவையின் ஈடுபாட்டை (legislative engagement) மேம்படுத்த வேண்டும் என்பதைக் காட்டுகின்றன. பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும், விவாதங்களை ஊக்குவிக்கவும், தேசம் மற்றும் நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்ட சட்டங்களை உருவாக்கவும் ஒவ்வொரு வாய்ப்பும் பயன்படுத்தப்பட வேண்டும்.


பிரியங்க் நாக்பால் மற்றும் நேஹல் சர்மா ஆகியோர் 2023-2024 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சட்டமன்ற உதவியாளர்களாகப் (Legislative Assistant to Members of Parliament (LAMP)  பணியாற்றியவர்கள். 




Original article:

Share: