சீனாவுடனான ஜோ.பைடனின் ஈடுபாடு இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? -சி.ராஜா மோகன்

 அமெரிக்காவும் சீனாவும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் மற்றும் வலுவான இராணுவ சக்தியைக் கொண்டுள்ளன. இவ்விரு நாடுகளும் ஒருவருக்கொருவர் அதிகம் சார்ந்திருப்பதால் இவர்கள் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் அவற்றுக்கிடையில் முரண்பாடுகளும் உள்ளன. ஆனால். இதில், வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான முரண்பாடுகளும் சிக்கலானவை. 


ஜோ.பைடனின் அரசாங்கம் அதன் சீன இராஜதந்திரத்தை "பொறுப்பான போட்டி" (responsible competition) என்று அழைத்தபோது, இந்தியாவிலும் பிற இடங்களிலும் உள்ள பல ஆய்வாளர்கள் அது செயல்படாது என்று நினைத்தனர். சீனாவால் முடிந்தபோது அதனுடன் இணைந்து செயல்படுவதாகவும், தேவைப்படும்போது அதை எதிர்ப்பதாகவும் நிர்வாகம் கூறியது. சீனாவுடனான வலுவான போட்டி ஆபத்தான மோதலாக மாறுவதைத் தடுக்க தன்னால் முடிந்தவரை முயற்சிப்பதாக அதிபர் பிடன் கூறினார். இதில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. 


இந்திய இராஜதந்திர சமூகத்தில் பலர் போட்டி மற்றும் ஒத்துழைப்பை சமநிலைப்படுத்துவது கடினம் என்று நம்புகிறார்கள். ஒத்துழைப்பில் முன்னுரிமை அளிப்பது அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பெய்ஜிங்கிற்கு பயனளிக்கும் என்று அவர்கள் கவலை கொண்டுள்ளனர். ஆசியாவில் இருந்து வெகு தொலைவில் இருந்தாலும், சீனாவால் நேரடியாக அச்சுறுத்தப்படவில்லை என்றாலும், சீனாவுடன் சமரசம் செய்து கொள்வதற்கு அமெரிக்காவுக்கு காரணங்கள் இருக்கின்றன. இரு நாடுகளும் குறிப்பிடத்தக்க வகையில் ஒன்றையொன்று சார்ந்திருப்பது மற்றும் இராணுவ சக்தியைக் கொண்ட பெரிய பொருளாதாரங்களாகும். இது ஈடுபாட்டிற்கான உண்மையான கட்டாயங்களுக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே முரண்பாடுகளும் உள்ளன.

 

சீனாவை அணுகுதல்


சீனாவின் பொருளாதார சக்தி மற்றும் அமெரிக்காவை ஆசியாவிலிருந்து வெளியேற்றுவதற்கான அதன் முயற்சிகள் குறித்து கவலை அதிகரித்து வருகிறது. இந்த அக்கறை வாஷிங்டனில் உள்ள ஜனநாயகக் கட்சியினரையும் (Democrat Party),  குடியரசுக் கட்சியினரையும் (Republican Party) ஐக்கியப்படுத்தியுள்ளது. இருப்பினும், அவர்கள் எவ்வளவு கடுமையாக இருக்க வேண்டும் என்பதில் வேறுபடுகிறார்கள். சில குடியரசுக் கட்சியினர் சீனாவை ஆக்ரோஷமாக எதிர்கொள்ள விரும்புகிறார்கள். அதன் செல்வாக்கைக் குறைத்து சீன கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுப்பாட்டில் இருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். டிரம்பின் அணுகுமுறை குறித்து எங்களுக்குத் தெரியவில்லை என்றாலும், பைடன் சீனாவுடனான "பொறுப்பான போட்டியில்" (responsible competition) கவனம் செலுத்துகிறார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சமீபத்திய நிகழ்வுகள் இந்த இருநாடுகளும் எவ்வாறு கட்டவிழ்ந்து வருகிறது என்பதை நமக்குக் காட்டுகின்றன.


முதலில், எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பதிலிருந்து, கடந்த வாரம், பைடன், சீன தலைவர் ஜி ஜின்பிங்குடன் நீண்ட தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார். ஜி20 உச்சி மாநாட்டின் போது 2022 ஆம் ஆண்டின் இறுதியில் பாலியில் (Bali) தொடங்கிய அவர்களின் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இது நடைபெறுகிறது. கடந்த நவம்பரில் சான் பிரான்சிஸ்கோவில் (San Francisco) நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்றத்தில் (Asia Pacific Economic Cooperation forum) கலந்து கொள்வதற்காக அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, இரு தரப்பினரும் தங்கள் உறவை உறுதிப்படுத்தவும், இராணுவ தகவல்தொடர்புகளை அதிகரிக்கவும், செயற்கை நுண்ணறிவு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு ஒழுங்குமுறை (regulating artificial intelligence and counter-narcotics) குறித்த விவாதங்களைத் தொடங்கவும் ஒப்புக்கொண்டனர்.


இந்த வாரம், அமெரிக்க கருவூலச் செயலர் (US Treasury Secretary), ஜேனட் யெல்லன் நீண்ட காலத்திற்கு சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். சீனாவுடன் தடையில்லா வர்த்தகம் (free trade) மற்றும் நட்பு நாடான பொருளாதார உறவுகளை ஆதரிப்பதற்காக யெல்லன் அறியப்படுகிறார். பெய்ஜிங்கிற்கான அவரது செய்தி இரண்டு மடங்கானது: அமெரிக்கா பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார உறவை விரும்புகிறது. ஆனால், சோலார் பேனல்கள் (solar panels) மற்றும் மின்சார வாகனங்கள் (electricity vehicles) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்ப பகுதிகளைக் கட்டுப்படுத்துவதற்கான சீனாவின் முயற்சிகளை ஏற்காது. இந்தத் துறைகளில் சீனா தொடர்ந்து அதிக உற்பத்தி செய்தால், அமெரிக்கா புதிய கட்டணங்களை விதிக்க வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரிக்கிறார்.


ஜப்பானை நோக்கிய பார்வை 


 இந்த வாரம் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை (Fumio Kishida) வெள்ளை மாளிகைக்கு அதிபர் பைடன் வரவேற்கிறார். பைடன் அதிபராக இருந்தபோது இந்த சிறப்பு வரவேற்பைப் பெற்ற குவாட் (Quad) அமைப்பின் மூன்றாவது தலைவர் கிஷிடா ஆவார். இதில், மற்ற இரு உறுப்பினர்கள் தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) ஆவர். ஐரோப்பாவில் மோதல் இருந்தபோதிலும், பைடன் இன்னும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மதிக்கிறார் என்பதை இந்த பயணங்கள் காட்டுகின்றன.


இந்த சந்திப்பின் போது, பைடனும், கிஷிடாவும் அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராணுவ மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிப்பார்கள் என்று குறிப்பிடுகின்றனர். இங்கு, இராணுவ நடவடிக்கைகளில் இன்னும் நெருக்கமாக ஒன்றிணைந்து செயல்படுவது, பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் அதிக ஒத்துழைப்பது மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.


கிஷிடாவின் கீழ், பைடனின் இந்தோ-பசிபிக் திட்டத்திற்கு ஜப்பான் ஒரு முக்கிய திட்டமாக மாறியுள்ளது. சீனா, வட கொரியா மற்றும் ரஷ்யாவைத் தடுக்க அவர்களின் பாதுகாப்பு வரவு-செலவு திட்டக்கணக்கை அதிகரிக்கவும், புதிய திட்டங்களைக் கட்டியெழுப்பவும் அவை உறுதியளித்துள்ளன. ஜப்பானின் தலைமையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் அதன் போருக்குப் பிந்தைய அமைதிவாதத்திலிருந்து விலகிச் செல்வதைக் குறிக்கிறது மற்றும் இது ஆசிய புவிசார் அரசியலில் ஒரு பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.


ஜப்பானுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன், AUKUS (Australia, the UK and the US (AUKUS)) முன்முயற்சியில் ஜப்பானும் சேர வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. AUKUS ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையே மேம்பட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பை உள்ளடக்கியது. AUKUS இன் முதல் பகுதி வாஷிங்டன் மற்றும் லண்டனில் இருந்து கான்பெர்ராவுக்கு (Canberra) அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புவதை உள்ளடக்கியது. ஆனால், அணு ஆயுத எதிர்ப்பு நிலைப்பாடு காரணமாக ஜப்பான் இதனுடன் சேராது.


AUKUS இன் புதிய அவதாரம்


ஆனால், டோக்கியோ AUKUS இன் இரண்டாவது தூணின் ஒரு முக்கிய பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தூண் ஹைப்பர்சோனிக் (hypersonic), நீருக்கடியில், சைபர் (cyber), செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் (quantum computing) போன்ற மேம்பட்ட இராணுவ தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த துறைகளில் சீனாவை விட முன்னணியில் இருக்க ஜப்பான் தனது வலுவான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் உற்பத்தி திறன்களை வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பைடன் நிர்வாகம் ஜப்பான் போன்ற பல நாடுகளை AUKUS போன்ற குழுக்களில் ஈடுபடுத்துவதன் மூலம் அதன் கூட்டணிகளை விரிவுபடுத்த முயற்சிக்கிறது. இந்தியா ஏற்கனவே ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் குவாட் (Quad) என்ற இதேபோன்ற குழுவின் ஒரு பகுதியாக உள்ளது. தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of Southeast Asian Nations (ASEAN)) போன்ற பெரிய குழுக்கள் ஆசியாவின் அரசியலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப போராடுவதால் பன்முக வணிகமுறை (Minilateralism) என்று அழைக்கப்படும் சிறிய குழுக்களை நோக்கிய இந்த மாற்றம் நடந்து வருகிறது


கடந்த ஆண்டு, பைடன் ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் தலைவர்களை சந்தித்து, இன்னும் நெருக்கமாக ஒன்றிணைந்து செயல்படவும், அவர்களின் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கவும் ஊக்குவித்தார். குறைகடத்தி (semiconductors) உற்பத்தியை வலுப்படுத்த தைவான், தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட "Chip Four” ஏன்ற கூட்டணியையும் பைடன் உருவாக்கினார்.


கிஷிடாவுடனான (Kishida) சந்திப்புக்குப் பிறகு, பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸுடன் (Ferdinand Marcos) பைடன் மற்றொரு சந்திப்பை நடத்துகிறார். தென் சீனக் கடலில் சீனாவுக்கு சவால் விடும் மார்கோஸை அவர்கள் ஆதரிக்கிறார்கள். அமெரிக்கா நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.


ஆசியாவின் பாதுகாப்பு வலையமைப்பு


புதிய அணுகுமுறை ஆசியாவில் பாதுகாப்பு நெட்வொர்க்குகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த நெட்வொர்க்குகள் தடுப்புகளை மேம்படுத்தவும் அமைதியை பராமரிக்கவும் பல்வேறு நாடுகளின் இராணுவ வளங்களை ஒன்றிணைக்கின்றன. உதாரணமாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு ஜப்பான் கூடுதல் பாதுகாப்புக்கான ஆதரவை வழங்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. மேம்பட்ட தொழில்நுட்பத்தில் இந்தியாவுடன் மேலும் ஒத்துழைக்க தென் கொரியாவை இது ஊக்குவிக்கிறது. சமீபத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் (External Affairs Minister) சுப்பிரமணியம் ஜெய்சங்கர், சியோல், டோக்கியோ, சிங்கப்பூர், மணிலா மற்றும் கோலாலம்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணங்களின் போது, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் கிழக்கு ஆசியாவுடனான தனது ஈடுபாட்டை இந்தியா அதிகரித்தது.


இந்தோ-பசிபிக் பகுதியில், அமெரிக்கா தனது கூட்டணிகளை வலுப்படுத்தவும், புதிய கூட்டாண்மைகளை உருவாக்கவும், ஒத்துழைப்புக்கான சிறிய குழுக்களை உருவாக்கவும், ஆசிய நாடுகளிடையே சுதந்திரமான ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும்

நோக்கம் கொண்டுள்ளது. இதற்கிடையில், சீனா அமெரிக்காவுடன் நேரடியாக அதன் உறவுகளை மேம்படுத்துவதிலும், ஆசியாவில் அதன் முன்னணி தலைமையை ஒப்புக் கொள்வதிலும் கவனம் செலுத்துகிறது.


சீனாவின் அண்டை நாடுகளுடன் அமெரிக்கா நெருக்கமான உறவுகளை நாடினாலும், அரசியல் அல்லது பிராந்திய விவகாரங்களில் பெய்ஜிங் அவர்களுடனான உறவுகளை மேம்படுத்தவில்லை. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இந்த போட்டி இந்தியா போன்ற நாடுகளுக்கு செயல்பட அதிக சுதந்திரத்தை அளிக்கிறது. ஆசியாவில் ஒரு சீன செல்வாக்கு மண்டலத்தை நிறுவுவதற்கு வாஷிங்டனுடன் ஒரு குறிப்பிடத்தக்க உடன்பாட்டிற்கான பெய்ஜிங்கின் விருப்பம் அதன் அண்டை நாடுகளை தனிமைப்படுத்துகிறது. தற்போது, சீனத் தலைவர்கள் ஆசியாவில் தங்கள் உத்திகளை மறுபரிசீலனை செய்வதற்கான சிறிய அறிகுறி உள்ளது.




Original article:

Share:

இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் போது, வளர்ச்சியின் தரத்தில் கவனம் செலுத்த வேண்டியிய நேரம் இது -ரஜினி சிங்

 மின்னணுமயமாக்கல் (Digitalisation) மற்றும் அதிகரித்த முறைப்படுத்தல் (increased formalisation) ஆகியவை இந்தியாவின் திறனை உயர்த்தியதாகத் தெரிகிறது. ஆனால், நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நம்பிக்கை இப்போது உள்ளது.


ஆரோக்கியமான வளர்ச்சி, குறைந்த பணவீக்கம், ஏராளமான வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign institutional investors (FII)) மற்றும் ஆரோக்கியமான வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் ஆகியவற்றால் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக செயல்படுகிறது. 2023-24 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4% வளர்ந்ததாகவும், திட்ட மேலாண்மை நிறுவனத்தின் (Project Management Institute (PMI)) உற்பத்தி மார்ச் மாதத்தில் 16 மாத உயர்வான 59.1 ஐ எட்டியதாகவும் சமீபத்திய தரவு காட்டுகிறது. நமது கடன் விகிதம், தரமிறக்குவதற்கான மதிப்பீட்டு மேம்பாடுகளின் அளவீடு, 1.92 ஆக உள்ளது. இது 10 ஆண்டு சராசரியான 1.57 ஐ விட சிறந்தது. ஆனால் இன்னும் கவலைகள் உள்ளன. புதிய நிதியாண்டில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.


2023-24 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 8% க்கும் அதிகமாக வளர்ந்துள்ளது. இது முழு ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட 7.6% வளர்ச்சியை தாண்ட வாய்ப்புள்ளது. நுகர்வு வளர்ச்சி இன்னும் குறைவாக இருந்தாலும், வளர்ச்சி முக்கியமாக முதலீட்டால் இயக்கப்படுகிறது. 2018-19ல் தொற்றுநோய்க்கு முன் 7 சதவீதமாக இருந்த நுகர்வு மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 3 சதவீதமாக வளர்ந்துள்ளது. இந்தத் தரவு சிலரை ஆச்சரியப்படுத்தலாம். கார்கள், வீடுகள், நகைகள் மற்றும் பயணம் போன்றவற்றிற்காக பலர் நிறைய செலவு செய்கிறார்கள்.


அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருள்கள் (Fast-moving consumer goods (FMCG)) மற்றும் ஆடைகள் போன்ற குறைந்த விலை பிரிவுகள் நுகர்வோரிடமிருந்து எச்சரிக்கையுடன் செலவழிக்கப்படுகின்றன. இருப்பினும், அமைதியாக இருந்த கிராமப்புற தேவைகள் சிறப்பாக வரத் தொடங்கியுள்ளதால் நம்பிக்கை உள்ளது. நீல்சன் அறிக்கையின்படி (Nielsen report), கிராமப்புறங்களில் அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருள்களின் (FMCG) அளவு வளர்ச்சி முதல் பாதியில் 2.2 சதவீதத்திலிருந்து 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புற தேவையை சுட்டிக்காட்டும் இருசக்கர வாகன விற்பனையும் மேம்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவமழை இயல்பாக இருந்தால், ஒட்டுமொத்த நுகர்வு தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தொழில்நுட்பத் துறையில் சாத்தியமான பணிநீக்கங்கள் மற்றும் அவை நகர்ப்புற நுகர்வோர் உணர்வுகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை நாம் கண்காணிக்க வேண்டும்.


அரசாங்கம் இன்னும் திட்டங்களுக்கு மூலதன செலவுகளில் (capex-Capital expenditure) அதிக கவனம் செலுத்துகிறது. பொருளாதாரம் தொடர்ந்து வளர, தனியார் நிறுவனங்களும் அதிக முதலீடு செய்யத் தொடங்குவது முக்கியம். குறிப்பாக, எஃகு (steel), சிமென்ட் (cement), பெட்ரோ கெமிக்கல்ஸ் (petrochemicals), வாகனம் (automobile), அலுமினியம் (aluminium) மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (renewable energy) போன்ற தொழில்களில் அதிக தனியார் முதலீட்டைக் கொண்டுள்ளது. இயந்திரங்கள் போன்ற விஷயங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் கடந்த ஆண்டில் நிறைய ஆர்டர்களைப் பெற்றுள்ளன. இப்போது, தொழிற்சாலைகள் அவற்றின் திறனில் சுமார் 74% பயன்படுத்துகின்றன. இது வழக்கமான தொகைக்கு அருகில் உள்ளது. இதன் பொருள் அடுத்த சில மாதங்களில் தனியார் நிறுவனங்கள் திட்டங்களுக்கு அதிக பணத்தை செலவிடுவதை நாம் காணலாம். இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையத்தின் (Centre for Monitoring Indian Economy (CMIE)) சமீபத்திய தரவுகள், தனியார் நிறுவனங்கள் திட்டங்களில் அதிக முதலீடு செய்வது குறித்து யோசித்து வருவதைக் காட்டுகிறது. 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, முக்கியமாக உற்பத்தி மற்றும் சேவைத் துறையால் வழிநடத்தப்பட்டது. ஏனெனில், விவசாயத் துறை மோசமான பருவமழையின் மோசமான தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு விடுதி (hotels), ஆட்டோ (auto), சுகாதாரம் (healthcare), ரியல் எஃகு, இரும்பு & எஃகு, மருந்துகள் மற்றும் நகை விற்பனையாளர்கள் போன்ற சில துறைகள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், இரசாயனங்கள், ஜவுளி மற்றும் வைரங்கள் வெளியில் இருந்து குறைந்த தேவை காரணமாக சிக்கல்களை எதிர்கொண்டன.


உலகளாவிய மந்தநிலை காரணமாக வணிக ஏற்றுமதி குறைவாக இருந்தாலும், சேவைகள் ஏற்றுமதி வலுவாக இருந்தது. மென்பொருள் சேவைகளைத் தவிர, வணிக ஆலோசனை மற்றும் பயண சேவைகளும் சிறப்பாக செயல்பட்டன. ஆரோக்கியமான பணப்பரிமாற்றங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதிகளால் ஆதரிக்கப்படும், இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6-0.7 சதவீதமாகவும், 2024-25ல் 1 சதவீதமாகவும் இருக்கும் என்று மதிப்பிடுகிறோம். பொருளாதாரத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign institutional investors (FII)) முதலீடுகள் வலுவாக உள்ளன. 2022-23 ஆம் ஆண்டில் 5.5 பில்லியன் டாலர் நிகர வெளியேற்றங்களுடன் ஒப்பிடும்போது, 2023-24 ஆம் ஆண்டில் 41 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு (Foreign direct investment (FDI)) 643 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. உலகளாவிய குறியீடுகளில் இந்திய அரசாங்கத்தின் பத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், வலுவான வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் (FII) முதலீடுகள் 2024-25 ஆம் ஆண்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த தாக்கங்கள் நிலையற்றதாக இருக்கும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.


நுகர்வோர் விலைக் குறியீட்டின் (consumer price index (CPI)) பணவீக்கம் இப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கான 6% ஐ விட குறைவாக உள்ளது. இது, சேவைத் துறையில் பணவீக்கம் குறைந்ததே கடந்த 3 மாதங்களில் 4 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இருப்பினும், அதிக உணவு பணவீக்கம் ஒரு கவலையாக உள்ளது. குறிப்பாக காய்கறிகள் (30%), பருப்பு வகைகள் (19%), மற்றும் மசாலாப் பொருட்கள் (14%) ஆகியவற்றில் அதிக பணவீக்கம் உள்ளது. இந்த ஆண்டு ஒரு சாதாரண பருவமழை என்று கருதினால், 2023-24 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 5.4% ஆக இருந்த நுகர்வோர் பணவீக்கம் 2024-25 ஆம் ஆண்டில் சுமார் 4.8% ஆக குறையும் என்று கணித்துள்ளது. இதில், பணவீக்கம் தொடர்ந்து குறைந்தால், அமெரிக்க பெடரல் வங்கியும் (US Fed) அதற்குள் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கினால், நிதியாண்டின் இரண்டாவது பாதியில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கக்கூடும்.


அதிக வட்டி விகிதங்கள் இருந்தபோதிலும் இந்தியாவில் சில்லறை கடன் வேகமாக அதிகரித்து வருகிறது. கவனமாக இருக்க, இந்திய ரிசர்வ் வங்கி பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களை ஆபத்தானகாக உயர்த்தியது. இது தனிநபர் கடன் வளர்ச்சியை குறைத்து, அது இன்னும் 18% ஆக உள்ளது. செலவு மற்றும் சேமிப்பு பழக்கங்களில் மாற்றங்கள் மற்றும் எளிதான கடன் அணுகல் காரணமாக இந்த போக்கு தொடரும்.


வங்கிகளின் சில்லறை கடன்கள் இன்னும் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் காட்டவில்லை. ஆனால், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த வங்கிக் கடன் வலுவாக இருந்தாலும், வைப்புத்தொகை பெரிதாக வளரவில்லை. இது வங்கிகளுக்கு பணப்புழக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் அவர்களின் நிகர வட்டி வரம்புகளில் அழுத்தம் கொடுக்கிறது. இருப்பினும், வங்கிகளின் சொத்துத் தரம் ஆரோக்கியமாக இருப்பது ஆறுதலான காரணியாகும்.


இந்திய பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி இந்த ஆண்டு 7% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்னணுமயமாக்கல் மற்றும் அதிகரித்த முறைப்படுத்தல் இந்தியாவின் சாத்தியமான வளர்ச்சியை அதிகரித்துள்ளது. அரசாங்கம் இப்போது தரமான வளர்ச்சியை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் சாத்தியமான அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். இடைக்கால பட்ஜெட்டில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, நிதி ஒருங்கிணைப்பு மற்றும் பொதுக் கடனைக் குறைப்பதில் அரசாங்கம் தொடர்ந்து பணியாற்ற இது ஒரு நல்ல நேரமாகும். ஒரு புதிய அரசாங்கம் விரைவில் அமைக்கப்படும் என்பதால், உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று நம்புகிறோம்.




Original article:

Share:

கொல்கத்தாவின் நகர்ப்புற வளர்ச்சிக்கு புறவழிச்சாலையின் பங்கு -சதீஷ் சென்னூர்

 நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மக்களை அவர்களின் சமூக மற்றும் வர்க்க வேறுபாடுகளின் அடிப்படையில் ஒன்றிணைப்பதற்கு பதிலாக பிளவுகளை ஏற்படுத்தியுள்ளன.


இந்தியாவில் நகரமயமாக்கல் மூன்று முக்கிய காரணிகளால் பாதிக்கப்படுகிறது. முதலாவதாக, காலனித்துவம் நகர்ப்புறங்களை நிறுவுவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. இது, சுதந்திரத்திற்குப் பிறகு 1960 கள் வரை நீடித்தது. இரண்டாவதாக, 1970கள் மற்றும் 1990களில் பசுமைப் புரட்சி (Green Revolution) மற்றும் புதிய தாராளமயக் கொள்கைகள் (neoliberal policies) இந்த நகர்ப்புறங்களை மேலும் திடமான சமூகங்களாக உருவாக்கியது. சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்கள் காலனித்துவ நகர்ப்புற திட்டமிடல் மூலம் வடிவமைக்கப்பட்டன. பிந்தைய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்பட்டன.


இந்த நகரங்கள் நிறைய வளர்ந்துள்ளன. அதிகமான மக்களுக்கு இடமளிக்கவும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அவை விரைவாக மாறிவிட்டன. பசுமைப் புரட்சி மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளால் கிடைத்த பணம் நகரங்களை இன்னும் வேகமாக விரிவடையச் செய்துள்ளது. இருப்பினும், இந்த விரிவாக்கம் அனைவருக்கும் சமமாக இல்லை. புதிய வகையான நுகர்வோர் கலாச்சாரம் இந்த நகரங்களில் எளிதாக நுழைந்துள்ளது. இது வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.


ஒரு நகரத்திற்குள் ஒரு நகரம்


இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, கல்கத்தா நகரம் அந்த நேரத்தில் மாநில அரசாங்கத்தால் சிக்கலான, நெரிசலான மற்றும் மோசமடைந்து வருவதாக விவரிக்கப்பட்டது. கல்கத்தாவுக்குள் உப்பு ஏரி நகரம் (Salt Lake City) என்ற புதிய பகுதியை உருவாக்க அவர்கள் முடிவு செய்தனர். இந்த புதிய நகரம் ஒரு சுத்தமான மற்றும் புதிய தொடக்கமாக கற்பனை செய்யப்பட்டது. கல்கத்தாவில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு மோசமான உள்கட்டமைப்பு முக்கியக் காரணம். இதில் குடிநீர், சுகாதாரம் மற்றும் குடிசைப்பகுதிகள் தொடர்பான பிரச்சினைகள் அடங்கும். வறுமை, போக்குவரத்து நெரிசல், மோசமான நிர்வாகம் ஆகியவையும் இருந்தன. நகரில் பொது இடங்களை பராமரிப்பதில் சிறிய பொறுப்பு எடுக்கப்பட்டது.


1980 களில் கிழக்கு பெருநகர புறவழிச்சாலை (Eastern Metropolitan Bypass (EM Bypass)) கட்டியதன் மூலம் மாநிலம் கொல்கத்தாவை மேலும் மேம்படுத்தியது. இந்த சாலை கொல்கத்தாவின் வடகிழக்கு பகுதியை அதன் தெற்கு பகுதியுடன் இணைத்தது. மா மேம்பாலம் (Maa Flyover) மற்றும் கிழக்கு பெருநகர புறவழிச்சாலை (EM Bypass road) நெரிசல், வறுமை மற்றும் போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்க உதவியது. இந்த உள்கட்டமைப்பு முன்னேற்றங்கள் பொருட்கள், மக்கள் மற்றும் யோசனைகளின் ஓட்டத்தை அதிகரித்தன. இருப்பினும், அவை மற்ற சிக்கல்களுக்கும் வழிவகுத்தன. கொல்கத்தா இந்திய மேலாண்மை நிறுவனத்தைச் (Indian Institute of Management) சேர்ந்த பொருளாதார நிபுணர் கல்யாண் சன்யால் (Kalyan Sanyal) மற்றும் ராஜேஷ் பட்டாச்சார்யா (Rajesh Bhattacharya) ஆகியோர் நகரமயமாக்கலுக்கான இந்த அணுகுமுறை பழையதை மாற்றியமைத்து உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் என்ற புதிய வர்க்கத்தை உருவாக்கியது என்று குறிப்பிட்டனர். 'இது யாருடைய நாடு?' என்ற  ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது:'




நகர்ப்புற புறக்கணிப்புகள்


ஏழு நட்சத்திர ஹோட்டல்கள் (Seven-star hotels), சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் (luxury residential apartments), கிளப்புகள் (clubs), சர்வதேச பள்ளிகள் (international schools), மருத்துவமனைகள் (hospitals) மற்றும் மால்கள் (malls) கொண்ட 40 கிலோமீட்டர் புறவழிச் சாலையில் (bypass) அமைந்துள்ளது. இந்த பகுதி முக்கியமாக பணக்காரர்களுக்கு சேவை செய்கிறது. இது ஒரு சமூகப் பிளவை உருவாக்குகிறது. சில சுற்றுப்புறங்களை மோசமாகக் காட்டுகிறது. சில உயரமான கட்டிடங்களில் வெவ்வேறு வருமான நிலைகளுக்கான பிரிவுகள் உள்ளன: அதிக வருமானம், நடுத்தர வருமானம் மற்றும் குறைந்த வருமானம். இது நகரங்களில் உள்ள பிரச்சனையை காட்டுகிறது.


ஆடம்பர தங்குமிடங்களுக்கு வெளியே வாழும் சமூகக் குழுக்கள் மிகவும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். உயர்தர ஹோட்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் வசிப்பதன் மூலம், 2008 இல் சமூகவியலாளர் லோயிக் வாக்வாண்ட் (Loic Wacquant) விவரித்தபடி, அவர்கள் விரும்பத்தகாத சமூகப் பிரச்சினைகளை மௌனமாக ஏற்றுக்கொள்கிறார்கள் மற்றும் பெரும்பாலும் நகர்ப்புற புறக்கணிக்கப்பட்டவர்களாக மாறுகிறார்கள். இந்த கெட்டோக்களில் (ghettos-சிறுபான்மை குழுவின் உறுப்பினர்கள் குவிந்துள்ள நகரத்தின் ஒரு பகுதியாகும்) உள்ளவர்கள் நகரத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவர்கள் சொந்தமாக இல்லை என்று உணர்கிறார்கள் என்பதை ஆய்வு முறைகள் காட்டுகின்றன. அவர்கள் ஏழை மற்றும் ஒதுக்கப்பட்ட தனிநபர்களின் கலவையாக உள்ளனர். சிறிய பகுதிகள் வறுமை, ஒடுக்குமுறை மற்றும் அநீதியின் இடங்களாக மாறி, சமூக வாழ்க்கையை சீரழிக்கின்றன. இந்தப் பிரச்சனைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள, நகர்ப்புற வளர்ச்சி இந்தச் சமூகங்களுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது என்பதைப் பார்ப்பது முக்கியம். முதலாளித்துவ பொருளாதாரம் (capitalist economy) மற்றும் கம்யூனிச அரசாங்கக் கொள்கைகள் (communist government policies) ஒரு குழு தொழிலாளர்கள் மற்றும் சிறிய வேலை சந்தைகளை அருகிலுள்ள செல்வந்தர்களுக்கு சேவை செய்ய வைத்தது.


கடந்த முப்பதாண்டுகளில், ரியல் எஸ்டேட் வளர்ச்சியானது, அண்டை வீட்டாரைத் தேர்ந்தெடுக்கும் மக்களின் தார்மீக உரிமையைப் பறித்துள்ளது. குடிசை வீடுகளுக்கு அருகிலேயே ஆடம்பரமான குடியிருப்புகள் கட்டப்பட்டதால் இது நடந்தது. சாதி, வர்க்கம் மற்றும் மதம் ஆகியவற்றின் கலவையானது நகர்ப்புற விளிம்புநிலையை உருவாக்குகிறது. மேலும், அரசாங்கத்தின் பல்வேறு வடிவங்கள் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கின்றன. நவீன உலகப் பொருளாதாரத்தில், ஏழ்மையான நகரவாசிகள் நவதாராளவாதம் (neoliberal policies) மற்றும் கடந்த காலனித்துவ மற்றும் தேசியவாத விதிகள் ஆகிய இரண்டின் காரணமாகவும் தங்கள் வாழ்க்கை நிலைமைகளை மாற்றியமைத்ததால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.  கொல்கத்தா காலனித்துவ எதிர்ப்பு மற்றும் கம்யூனிச இயக்கங்களைக் கண்டது. நகர்ப்புற மாற்றங்களைப் படிக்க இது ஒரு நல்ல இடமாக அமைந்தது. ஒரு புதிய நகரம் அல்லது சாலைகளில் ரியல் எஸ்டேட் திட்டங்கள் போன்ற புதிய நகர்ப்புற வளர்ச்சிகள் "நகர்ப்புற புறவழிச்சாலை" (bypass urbanism) என்று அழைக்கப்படுவதை உருவாக்குகின்றன, இது நகர்ப்புற ஆய்வுகளில் வளர்ந்து வரும் கருத்தாகும்.


சாலைகள் மற்றும் அதன் மாற்றம்


வரலாற்றாசிரியர் டேவிட் அர்னால்ட் (David Arnold), சாலைகளை,  பொருட்கள், யோசனைகள் மற்றும் மக்களுக்கான பாதைகளை விட அதிகமாக பார்க்கிறார். அவர் அவற்றை அதிகாரத்தின் சின்னங்களாகவும், சமூகத்தை அவதானிப்பதற்கும் ஈடுபடுவதற்கும் முக்கியமான இடங்களாகவும் பார்க்கிறார். புறவழிச்சாலைகள் (bypass) போன்ற பல்வேறு வகையான சாலைகள் அவற்றின் நோக்கத்தைக் காட்டும் குறிப்பிட்ட பெயர்களைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, புறவழிச்சாலைகள் (bypass) போக்குவரத்தை சீராக நகர்த்துவதற்கு கட்டப்பட்ட பகுதிகளைத் தவிர்க்க அனுமதிக்கிறது.


அமெரிக்காவில், கனரக வாகனங்களின் வழித்தடங்கள் எனப்படும் டிரக்குகளுக்கு சிறப்பு வழிகள் உள்ளன. இந்த வழித்தடங்கள் சரக்குகளை கொண்டு செல்வதை எளிதாக்குகின்றன. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில், இதே போன்ற வழிகள் பிரபலமாக உள்ளன. அவை பெரும்பாலும் வட்ட சாலைகள் அல்லது சுற்றுப்பாதை சாலைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில், சுதந்திரம் பெற்றதிலிருந்து சாலைகள் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளன.


நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் பெரும்பாலும் மக்களை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக அவர்களின் சமூக மற்றும் வர்க்க அடையாளங்களின் அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, புறவழிச்சாலை என்பது போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கான சாலை மட்டுமல்ல, இது அன்றாட வாழ்க்கையில் சில சமூக மற்றும் பொருளாதார குழுக்களை தற்செயலாக விலக்குகிறது.


சதீஷ் சென்னூர், கொல்கத்தாவின் சமூக அறிவியல் ஆய்வுகளுக்கான சமூகவியல் மையத்தின் உதவி பேராசிரியர் ஆவார்.




Original article:

Share:

ஒவ்வொரு நாளும் 3,500 உயிர்களைக் கொல்லும் வைரல் ஹெபடைடிஸ் நோய்த்தொற்றுகள் (hepatitis infections) குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

 பங்களாதேஷ், சீனா, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உலகின் மூன்றில் இரண்டு பங்கு ஹெபடைடிஸ் பி மற்றும் சி (hepatitis B and C) நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  

ஏப்ரல் 9 அன்று, வைரஸ் ஹெபடைடிஸ் நோயால் ஏற்படும் இறப்புகள் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organisation (WHO)) எச்சரித்துள்ளது. இந்த நோய் இப்போது தொற்றுநோயால் இறப்பதற்கான உலகின் இரண்டாவது பெரிய காரணமாகும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் 1.3 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கை காசநோயால் ஏற்படும் இறப்புகளுக்கு சமம்.


உலக சுகாதார அமைப்பு 2024ஆம் ஆண்டிற்கான  உலகளாவிய ஹெபடைடிஸ் நோய் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டது. 187 நாடுகளில் வைரஸ் ஹெபடைடிஸ்  வைரஸால்  இறப்புகள் 2019 இல் 1.1 மில்லியனிலிருந்து 2022 இல் 1.3 மில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த இறப்புகளில், 83% ஹெபடைடிஸ் பி காரணமாகவும், 17% ஹெபடைடிஸ் சி காரணமாகவும் ஏற்பட்டன.


உலக ஹெபடைடிஸ் உச்சி மாநாட்டில் (World Hepatitis Summit) பகிரப்பட்ட அறிக்கையில், ஒவ்வொரு நாளும், உலகம் முழுவதும் 3,500 பேர் ஹெபடைடிஸ் பி மற்றும் சி நோய்த்தொற்றுகளால் உயிரிழக்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பங்களாதேஷ், சீனா, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உலகின் மூன்றில் இரண்டு பங்கு ஹெபடைடிஸ் பி மற்றும் சி (hepatitis B and C) நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 10 நாடுகளில் உள்ள அனைவரும் 2025 ஆம் ஆண்டிற்குள் நோய் தடுப்பு, நோயறிதல் மற்றும் சிகிச்சையைப் பெற முடியும் என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது. ஆப்பிரிக்காவில் முயற்சிகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர். நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு இது மிகவும்  முக்கியம். என்று ஐக்கிய நாடுகளின் சுகாதார நிறுவனம் (United nations  health agency) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 ஹெபடைடிஸ் நோய்த்தொற்றுகளைத் தடுப்பதில் உலகளாவிய முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இறப்புகள் இன்னும் அதிகரித்து வருகின்றன என்று  உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Dr Tedros Adhanom Ghebreyesus) தனது கவலைகளை வெளிப்படுத்தினர். 


ஹெபடைடிஸ் நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த அதிகரிப்பு ஏற்படுகிறது. உலக சுகாதார அமைப்பு நாடுகளுக்கு உதவ எப்பொழுதும் தயாராக இருக்கிறது. கிடைக்கக்கூடிய அனைத்து கருவிகளையும் மலிவு விலையில் பயன்படுத்த அவர்களுக்கு உதவ உலக சுகாதார அமைப்பு  விரும்புகிறது. உயிர்களைக் காப்பாற்றுவதும், அதிகரித்து வரும் இறப்புகளின் தற்போதைய எணிக்கையை குறைப்பதே தங்களின் குறிக்கோள் என்று டாக்டர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.


உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடுகள் 2022இன் படி, 254 மில்லியன் மக்கள் ஹெபடைடிஸ் B மற்றும் 50 மில்லியன் ஹெபடைடிஸ் C நோயினால் பாதிக்கபட்டு இருக்கின்றனர் என்பதை தரவுகள் காட்டுகின்றன. நாள்பட்ட ஹெபடைடிஸ் பி மற்றும் சி நோய்த்தொற்றுகளில் பாதி 30 முதல் 54 வயதுடையவர்கள். 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இந்த நோய்த்தொற்றுகளில் 12% பாதிக்கபட்டு உள்ளனர். ஹெபடைடிஸ் நோயாளிகளில் 58% ஆண்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உலகளாவிய முன்னேற்றம் மற்றும் நோயறிதல் மற்றும் சிகிச்சையில் உள்ள இடைவெளிகளைப் பற்றி பேசுவதைத் தவிர, உலக சுகாதார அமைப்பு 2024 உலகளாவிய ஹெபடைடிஸ் அறிக்கையும் சிகிச்சைக்கான செலவினம் மற்றும் சேவை வழங்கலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டி, நிதி ஒரு சவாலாக உள்ளது என்று கூறியது.


வைரஸ் ஹெபடைடிஸுக்கான (viral hepatitis) சிகிச்சைக்கு பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் தொகுப்பை அறிக்கை விவரித்தது. இந்த நடவடிக்கைகள் 2030 க்குள் ஹெபடைடிஸ் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவை:

- சோதனை மற்றும் கண்டறிதலை மேலும் அணுகக்கூடியதாக ஆக்குதல்.

- அனைவருக்கும் சிகிச்சைக்கு சமமான அணுகல் இருப்பதை உறுதி செய்வதற்காக கொள்கை உருவாக்கத்திலிருந்து உண்மையான செயல்படுத்தலுக்கு நகர்தல்.

- ஆரம்ப சுகாதார  நிலையங்களில்  ஹெபடைடிஸ் தடுப்பதற்கான முயற்சிகளை அதிகரித்தல்.

- செயல்களை தெரிவிக்க சிறந்த தரவைப் பயன்படுத்துதல்.

- பாதிக்கப்பட்ட சமூகங்களில் சிவில் சமூகத்தை ஈடுபடுத்துதல்.




Original article:

Share:

காலநிலை மாற்றம் மற்றும் உயிரினங்களின் பாதுகாப்பு பற்றி . . .

 காலநிலை மாற்ற விளைவுகளிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு   பேரழிவிற்கு பிறகு தான் வருகிறது. 

 

காலநிலை மாற்றத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இது, இப்போது ஒரு தனி மனித  அடிப்படை உரிமையாக பார்க்கப்படுகிறது. சுத்தமான சூழலில் வாழ்வது அரசியலமைப்பின் 21 வது பிரிவின் (Article 21) கீழ் வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதி என்று நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. ஆனால் இப்போது, காலநிலை மாற்றத்திலிருந்து பாதுகாக்கப்படுவதும், ஆரோக்கியமான சூழலைக் கொண்டிருப்பதும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காலநிலை மாற்றம் மிகவும் ஆபத்தானதாக மாறி வருவதால், இந்த உரிமையை தனித்தனியாக அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது என்று நீதிமன்றம் நம்புகிறது.


காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் வெப்பநிலை, புயல்கள், வறட்சி மற்றும் பயிர் தோல்விகள் ஆகியவற்றுடன், வாழ்க்கையை  கடுமையாக பாதிக்கிறது. இது உணவு பற்றாக்குறை மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். பருவநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழல் மோசமடைந்தால், போதுமான உணவும் தண்ணீரும் கிடைக்காது. இது சமத்துவத்திற்கு தீங்கு விளைவிக்கும், சூரிய மின்கம்பிகள் காரணமாக கானமயில் மரணங்கள் (Great Indian Bustard) தொடர்பான வழக்கில் நீதிமன்றம் காலநிலை மாற்றம் குறித்து பேசியது. சர்வதேச ஒப்பந்தங்களின்படி இந்தியா உமிழ்வைக் குறைத்து அதிக தூய்மையான ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும்.


நாட்டின் சில பகுதிகளில், ஒரு சிக்கலான சூழ்நிலை உள்ளது. நீதிபதிகள் குழுவான இந்த அமர்வு, சுற்றுச்சூழல், மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய மூன்று ஒன்றிய அமைச்சகங்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டியிருந்தது. அவர்கள் நீதிமன்றத்தின் ஏப்ரல் 2021 முடிவை மாற்ற விரும்பினர். இந்த முடிவு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள கானமயில் (Great Indian Bustard) பாதுகாப்பது பற்றியது. பிரச்சினை என்னவென்றால், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் சூரிய மின்சக்தி நிறுவனங்களால் அமைக்கப்பட்ட மின் கம்பிகளில் மோதி இந்த பறவைகள் இறந்து விடுகின்றன.


பறவைகள் வசிக்கும் இடங்கள் முன்னுரிமைப் பகுதிகள் (priority) மற்றும் பாதுகாப்பு பணிகள் நடக்கும் இடங்களில் சாத்தியமான பகுதிகள் (‘potential’) அனைத்து குறைந்த மின்னழுத்த மின் இணைப்புகளும் பூமிக்கு அடியில் வைக்கப்பட வேண்டும் என்று முந்தைய விதி கூறியது. தற்போதுள்ள மேல்நிலை கம்பிகளை நிலத்தடி கம்பிகளாக மாற்ற வேண்டும் என்றும் அது கூறியது. சில இடங்களில் உயர் மின்னழுத்த கம்பிகளும் பூமிக்கு அடியில் செல்ல வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் நிலத்தடியில் வைப்பது மிகவும் கடினம் மற்றும் செலவுமிக்கது என்பதால் இந்த திட்டம் மாறிவிட்டது. குறிப்பாக, இப்பகுதியில் சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் திறன் நிறைய இருப்பதால், இந்த உத்தரவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கு சிக்கல்களை ஏற்படுத்தியது.. இப்போது, நிலத்தடியில் எவ்வளவு இருக்க வேண்டும், எவ்வளவு தரைக்கு மேலே இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க நிபுணர் குழுவை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால், முந்தைய ஆணைகளையும் ரத்து செய்துள்ளனர். நம் நாட்டின் கார்பன் தடத்தை குறைக்கும் குறிக்கோள் மிகவும் ஆபத்தான உயிரினங்களைப் (critically endangered species) பாதுகாப்பதுடன் மோதுவது வருத்தமளிக்கிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.


Share:

காலநிலை நெருக்கடி பாலின நடுநிலையானது அல்ல -செளம்யா சுவாமிநாதன்

 காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைக்கு மக்களின் 100% பங்களிப்பு தேவைப்படுகிறது. அதே நேரத்தில், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது சிறந்த காலநிலை தீர்வுகளைக் குறிக்கும்.


தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை நெருக்கடி,  மக்களில் வெவ்வேறி விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.  இதனால், பெண்கள் மற்றும் சிறுமிகள் அதிக உடல்நல அபாயங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக வறுமையின் சூழ்நிலைகளில், மற்றும் ஏற்கனவே உள்ள பொறுப்புகள் மற்றும் கலாச்சார விதிமுறைகள் காரணமாக அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். பேரிடர்களின் போது,  ஆண்களை விட பெண்கள் மற்றும் குழந்தைகள் 14 மடங்கு அதிக அளவில் உயிரிழப்பை சந்திக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (United Nations Development Programme (UNDP)) கூறுகிறது. சமீபத்தில், இந்திய உச்ச நீதிமன்றம் காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பு தேவை என்று கூறியது. சுத்தமான சுற்றுச்சூழலைக் (clean environment) கொண்டிருப்பது ஏற்கனவே வாழ்வதற்கான உரிமையுடன் இணைக்கப்பட்ட அடிப்படை உரிமையாகப் பார்க்கப்படுகிறது.


இந்தியாவில், குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் பெண்களுக்கு விவசாயம் மிக முக்கியமான வாழ்வாதாரம். தட்பவெப்பநிலையால் ஏற்படும் பயிர் விளைச்சல் குறைவான உணவுப் பாதுகாப்பின்மையை அதிகரிக்கிறது. ஏற்கனவே, அதிக ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களை மோசமாக பாதிக்கிறது. சிறு மற்றும் குறு நில உரிமையாளர் குடும்பங்களுக்குள், செலுத்தப்படாத கடன்கள் (இடம்பெயர்வு, மன உளைச்சல் மற்றும் சில சமயங்களில் தற்கொலைக்கு வழிவகுக்கும்) காரணமாக ஆண்கள் சமூக இழிவை எதிர்கொள்கிறார்கள். இதற்கிடையில், பெண்கள் கடுமையான வீட்டு வேலைகள், மோசமான உடல்நலம் மற்றும் வாழ்க்கைத் துணையினரிடமிருந்து (intimate partner) அதிக வன்முறையை எதிர்கொள்கின்றனர். இது அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவது, மிகவும் வருத்தமாக உணர்வது, அல்லது தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது போன்ற கொடிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.  தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 மற்றும் 5 தரவுகள் கடந்த பத்தாண்டுகளில் வறட்சி உள்ள மற்றும் இல்லாத மாவட்டங்களை ஒப்பிட்டன. வறட்சி பாதித்த பகுதிகளில் உள்ள பெண்கள் அதிக சவால்களை எதிர்கொள்வது கண்டறியப்பட்டது. அவர்கள் எடை குறைவாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், அதிக வாழ்க்கைத் துணையினால் ஏற்படும் வன்முறையை (intimate partner violence) எதிர்கொள்வதாகவும், கடந்த பத்தாண்டுகளில் வறட்சி இல்லாத மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது பெண் திருமணங்கள் அதிகமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. பெண்களைப் பொறுத்தவரை, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின்மை, அதிக பணிச்சுமை மற்றும் நிச்சயமற்ற வருமானம் ஆகியவற்றைக் கையாள்வது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மட்டும் பாதிக்காது. இது அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சி சார்ந்த நல்வாழ்வையும் பாதிக்கிறது.


தீவிர நிகழ்வுகள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை (gender-based violence)


தீவிர வானிலை நிகழ்வுகள் (extreme weather events) மற்றும் காலநிலை தொடர்பான பேரழிவுகள் (climate-induced natural hazards) உலகம் முழுவதும் அடிக்கடி நடக்கின்றன. 2021 ஆம் ஆண்டில், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் (Council on Energy, Environment and Water (CEEW)) அறிக்கை, இந்தியாவில் 75% மாவட்டங்கள் வெள்ளம், வறட்சி மற்றும் சூறாவளி போன்ற ஹைட்ரோமெட் பேரழிவுகளால் ஆபத்தை எதிர்கொள்வதைக் கண்டறிந்தது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (National Family Health Survey (NFHS)) 5 இன் தரவு, இந்த மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆபத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த இயற்கை பேரழிவுகளுக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் இடையே தெளிவான தொடர்பை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், கடுமையான வானிலை மற்றும் நீர் முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதை கடினமாக்குகின்றன. இது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வாழ்க்கையை கடினமாக்குகிறது. வேலை மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியமான பணிகளுக்கு குறைந்த நேரத்தையும் செலவிடுகிறார்கள்.


கடந்த பத்து ஆண்டுகளில், இது இந்த ஆண்டானது, பதிவு செய்யப்பட்டதிலேயே அதிக வெப்பமான காலகட்டமாகும். இந்தியா மற்றும் பிற நாடுகளில் மிகவும் கடுமையான வெப்ப அலைகள் ஏற்படக்கூடும். கர்ப்பிணிப் பெண்களுக்கு நீண்ட கால வெப்பம் மிகவும் ஆபத்தானது. இதனால், ஆரம்பகால பிறப்பு மற்றும் எக்லாம்ப்சியா (eclampsia) அதிகம். இது இளம் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கும் ஆபத்தானதாக உள்ளது. வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் காற்று மாசுபடுத்திகளை சுவாசிப்பது பெண்களின் ஆரோக்கியத்திற்கு மோசமானது. இது சுவாச மற்றும் இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். கருவில் இருக்கும் பிறக்காத குழந்தைகள் கூட பாதிக்கப்படலாம். இது அவர்களின் வளர்ச்சி மற்றும் சிந்திக்கும் திறனை பாதிக்கும். வளர்ந்து வரும் மூளையை காற்று மாசுபாடு எவ்வாறு பாதிக்கிறது என்பது ஒரு பெரிய கவலையாக உள்ளது. இந்தியாவில் சமீபத்திய ஆய்வுகள் சில சிக்கலான கண்டுபிடிப்புகளைக் காட்டுகின்றன. PM2.5 இல் ஒவ்வொரு 10 அலகு அதிகரிப்புக்கும், நுரையீரல் புற்றுநோய் ஆபத்து 9% அதிகரிக்கிறது. அதே நாளில், இதயம் தொடர்பான இறப்புகளுக்கான வாய்ப்பு 3% ஆகவும், பக்கவாதம் 8% ஆகவும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் PM2.5 மாசுபாட்டின் ஒவ்வொரு 2 மைக்ரோகிராம் அதிகமாக இருப்பதால் டிமென்ஷியா (Dementia) ஆபத்து 4% அதிகரிக்கிறது. 


சில பெண்கள் ஒரே பகுதியில் வாழ்ந்தாலும் கூட, மற்றவர்களை விட அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். காலநிலை மாற்றம் பல்வேறு காரணிகளைப் பொறுத்து பெண்களை வித்தியாசமாக பாதிக்கிறது. வெவ்வேறு காரணிகள் பெண்களின் சில குழுக்களை எவ்வாறு பாதிக்கப்படக்கூடியதாக ஆக்குகின்றன என்பதற்கு எங்களுக்கு கூடுதல் சான்றுகள் தேவை. அப்போதுதான் அவர்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்க முடியும்.

 

காலநிலை நடவடிக்கைக்கு பெண்கள் ஏன் தேவை?


உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்தும் இலக்கை அடைய, அனைவரும் காலநிலை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். ஆண்களுக்கு நிகரான வளங்கள் பெண்களுக்கும் இருக்கும்போது, அவர்கள் விவசாயத்தின் விளைச்சலை 20% முதல் 30% வரை அதிகரிக்க முடியும். குறிப்பாக, பழங்குடியின மற்றும் கிராமப்புற பெண்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னணியில் உள்ளனர். சுயஉதவி குழுக்கள் (Self-help Groups) மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (Farmer Producer Organisations) போன்ற பெண்கள் மற்றும் மகளிர் குழுக்களுக்கு அறிவு, கருவிகள் மற்றும் வளங்கள் தேவை. இது உள்ளூர் தீர்வுகளைக் கொண்டு வர அவர்களுக்கு உதவுகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் தழுவல் நடவடிக்கைகள் வேறுபட்டதாக இருக்கும். ஏனென்றால், வெப்பம், காற்று மாசுபாடு, நீர் மற்றும் உணவு ஆகியவற்றின் வெளிப்பாடு ஒவ்வொரு சூழலிலும் மாறுபடும்.


வெப்ப அலைகள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை பற்றி 


தரவு மற்றும் அறிவில் உள்ள இடைவெளிகளை நிரப்ப, குறிப்பாக பல்வேறு சமூகப் பிரச்சினைகளால் வெவ்வேறு பாலினங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதைப் பற்றி எங்களுக்கு கூடுதல் ஆராய்ச்சி தேவை.  அதே நேரத்தில், நாம் உடனடியாக செய்யக்கூடிய விஷயங்கள் உள்ளன. வெளிப்புறப் பணியாளர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு தீவிர வெப்பத்தை சிறப்பாகச் சமாளிக்க உதவுவது ஒரு முக்கியமான படியாகும்.  பல இந்திய நகரங்களின் தரவுகள் வெப்ப அலை நாட்களில் அதிகப்படியான இறப்புகள் இருப்பதாகக் காட்டுகின்றன, இருப்பினும் அவை அவ்வாறு அங்கீகரிக்கப்படவில்லை. இது சிறு மற்றும் பெரிய வணிகங்களை பாதிக்கிறது. மேலும், நமது பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. வெப்ப அலைகள் ஏற்படக்கூடிய பகுதிகளில், பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி நிறுவனங்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். திட்டத்தை செயல்படுத்தும் முக்கிய நபர்களுக்கு அவர்கள் பயிற்சி அளித்து வளங்களை வழங்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், வெப்ப அலைகளால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க முடியும். கூடுதலாக, உள்ளூர் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைப் பார்த்து வெப்ப அலைகள் குறித்த எச்சரிக்கைகளை அவர்கள் வழங்க முடியும். அவர்கள் வெளிப்புற வேலை மற்றும் பள்ளியின் நேரத்தையும் மாற்றலாம். சுகாதார வசதிகள் மற்றும் பொது இடங்களில் குடிநீருடன் குளிரூட்டும் அறைகளை உருவாக்குவதும் உதவும். யாராவது வெப்பநிலையால் பக்கவாதம் வந்தால், அவர்கள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.


நீண்ட கால திட்டங்களும் முக்கியம். நகரங்களை, அதிக மரங்கள், குறைந்த கான்கிரீட் மற்றும் அதிக பசுமையான இடங்களைக் கொண்டிருப்பவைகளாக சிறப்பாக திட்டமிடலாம். வெப்பத்தை சிறப்பாக கையாளக்கூடிய கட்டிடங்களையும் அவர்களால் வடிவமைக்க முடியும். உதாரணமாக, உதய்பூரில், மகிளா வீட்டுவசதி அறக்கட்டளை  (Mahila Housing Trust) குறைந்த வருமானம் கொண்ட வீடுகளின் கூரைகளை பிரதிபலிக்கும் வெள்ளை வண்ணப்பூச்சுடன் வரைந்தது. இது உட்புற வெப்பநிலையை 3°C முதல் 4°C வரை குறைத்து அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது.  


தண்ணீர் பற்றாக்குறை என்பது நம் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் ஒரு பெரிய பிரச்சினையாகும். அதை சமாளிக்க சமூகத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கடந்த காலத்தில், மழைநீரை சேகரித்து அதை, சேமிக்க இந்தியாவில் சிறந்த வழிகள் இருந்தன. இதற்காக குளங்கள், கால்வாய்களை பயன்படுத்தினர். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (M.S. Swaminathan Research Foundation) தமிழகத்தில் சில பணிகளைச் செய்தது. அவர்கள் புவியியல் தகவல் அமைப்புகள் (geographic information systems) எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். இது உள்ளூர் அரசாங்கத்திற்கு தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதை வரைபடமாக்கவும், அதற்கு எந்தவிதமாக தீங்கு விளைவிக்கும் என்பதைக் கண்டறியவும், விஷயங்களை சரிசெய்வதற்கான திட்டத்தை உருவாக்கவும் உதவியது. இந்த திட்டத்தின் மூலம், அவர்கள் தங்கள் பகுதியில் நீர் அணுகலை மேம்படுத்த அரசாங்க உதவி மற்றும் பணத்தைப் பயன்படுத்தலாம்.

கிராம அளவில் வேலை செய்தல்


பல்வேறு துறைகளையும் சேவைகளையும் ஒன்றாகக் கொண்டுவருவதற்கும், எது மிக முக்கியமானது என்பதை கிராமம் அல்லது பஞ்சாயத்து அளவுகளில் தீர்மானிப்பதற்கும் சிறந்த வழியாகும். இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரத்தையும் பணத்தையும் வழங்குவதும், பஞ்சாயத்து மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் போன்ற அவற்றில் உள்ள மக்களுக்கு பயிற்சி அளிப்பதும், சமூகம் சார்ந்த மற்றும் பங்கேற்பு வழியில் இந்தியா எவ்வாறு பின்னடைவை உருவாக்குகிறது என்பதைக் காட்ட முடியும்.


இறுதியாக, காலநிலை மாற்றம் குறித்த அனைத்து மாநில-செயல் திட்டங்களுக்கும் பாலினம் தொடர்பான தொலைநோக்கு திட்டமாக பயன்படுத்தப்பட வேண்டும். பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டம் (National Action Plan on Climate Change (NAPCC)) மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மாநில செயல் திட்டம் (State Action Plan on Climate Change (SAPCC)) ஆகியவை பெண்களின் மீதான தாக்கங்களை எடுத்துக்காட்டுகின்றன. ஆனால், அவர்கள் பொதுவாக பாலின பிரச்சினைகளை ஆழமாக பார்க்காமல் பெண்களை பாதிக்கப்பட்டவர்களாக மட்டுமே பார்க்கிறார்கள். நாங்கள் 28வது காலநிலை மாற்றத்திற்கான மாநில செயல் திட்டங்களை (SAPCC) சோதித்தபோது, பெரும்பாலானவற்றில் பெரிய மாற்றங்கள் திட்டமிடப்படவில்லை என்பதைக் கண்டோம். பெண்களால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை ஒரு சிலர் மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். காலநிலை மாற்றத்திற்கான மாநில செயல் திட்டங்களை புதுப்பிப்பதற்கான பரிந்துரைகள் நாம் கடந்த ஒரே மாதிரியானவையாக (stereotypes) நகர்த்த வேண்டும் என்று கூறுகின்றன. அனைத்து பாலினங்களும் பாதிக்கப்படக்கூடியவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் பாலின பாத்திரங்களை மாற்றும் உத்திகளைப் பயன்படுத்த வேண்டும். காலநிலை மாற்றத்தைக் கையாள்வதில் அனைவரும் நியாயமாக நடத்தப்படுவதை இது உறுதி செய்யும். பெண்களை பாதிக்கப்பட்டவர்களாக மட்டும் பார்ப்பதற்குப் பதிலாக, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் அவர்கள் தலைவர்களாக இருக்க முடியும். 

 

டாக்டர் சவுமியா சுவாமிநாதன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.




Original article:

Share:

தவறான நிர்வாகம் : காசநோய் (Tuberculosis) மருந்துகளின் பற்றாக்குறை மற்றும் இந்தியாவின் காசநோய் திட்டம் (National TB Program) பற்றி . . .

 காசநோயைக் (Tuberculosis (TB)) கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா பின்தங்கியுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா, இரண்டு ஆண்டுகளுக்குள் காசநோயை "அகற்ற" (eliminate) 2018 இல் ஒரு பெரிய இலக்கை நிர்ணயித்தது. ஆனால் இப்போது, உலகளாவிய தெற்கின் மருந்தகம் (pharmacy of the Global South) என்று அழைக்கப்படும் இந்தியாவில், மருந்து உணர்திறன் காசநோயால் (drug-sensitive TB) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல் உள்ளது. இது அதிர்ச்சியளிக்கிறது, ஏனென்றால் காசநோய் மருந்துகளின் பற்றாக்குறை உள்ளது. இதற்கான தட்டுப்பாடு அடிக்கடி நடக்கிறது. ஏழு மாதங்களுக்கு முன்பு, முக்கியமான MDR-காசநோய் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. 2022 ஆம் ஆண்டில் வழக்கமான காசநோய் மருந்துகளுடன் விநியோக சிக்கல்கள் மோசமடைந்து, MDR-TB மருந்துகளையும் பாதித்தது. இது கிட்டத்தட்ட ஒரு வருடம் நீடித்ததுள்ளது. மேலும், செப்டம்பர் 2021 இல், இந்தியாவில் MDR-TB மருந்து டெலமானிட் (Delamanid) தீர்ந்துவிட்டது. நோயறிதல் மற்றும் சிகிச்சையைத் தொடங்குவதில் இந்த தாமதம் ஏற்கனவே காசநோய் பராமரிப்பில் ஒரு பெரிய கவலையாக உள்ளது. 


சிகிச்சையைத் தொடங்கிய பிறகும் நோயாளிகள் குணமடையாதபோது மற்றொரு சிக்கல் ஏற்படுகிறது. ஆனால், பெரும்பாலும் மருந்துகள் கிடைக்கவில்லை என்றால், இந்த சிக்கலை சரிசெய்வது கடினமாக இருக்கும். 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 8% பின்பற்றாத நோயாளிகள் சிகிச்சையைத் தவறவிட்டதற்கு மருந்துகள் கிடைக்காததே காரணம் என்று கண்டறியப்பட்டது. பல்வேறு வகை காசநோயாளிகளுக்கான மருந்துகள் இந்தியா முழுவதும் எப்போதும் கிடைக்கிறதா என்பதை உறுதிசெய்வது ஒரு பொருட்டல்ல. ஆனால், ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்குப் பிறகு, 2025 இலக்கு தேதியை நெருங்கிவிட்ட நிலையில், இன்னும் போதிய அளவு மருந்து உணர்திறன் காசநோய் மருந்துகள் இல்லை என்பதே கவலைக்குரியது. இந்த மருந்துகள் இந்தியாவில் மட்டுமே பல நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. தேசிய காசநோய் திட்டம் சரியாக நிர்வகிக்கப்படவில்லை என்பதை இது காட்டுகிறது. 


திரு. மோடியின் இலக்கை அடையும் வகையில் தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டமானது (National TB Control Programme), தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (National TB Elimination Programme) என மறுபெயரிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மாற்றம் போதுமான மருந்துகள் இருப்பதை உறுதி செய்வது போன்ற முக்கியமான சிக்கல்களை சரிசெய்யாது. இது காசநோயை எதிர்த்துப் போராடுவதில் திறமையின்மையையும் தீவிரத்தையும் மேலும் அதிகப்படுத்தும். இந்த நோயின் நிலைமையை மோசமாக்கும் வகையில், சுகாதார அமைச்சகம் (Health Ministry) கடைசி நிமிடத்தில் உள்நாட்டில் மருந்துகளை வாங்கலாம் என்று மாநிலங்களிடம் கூறியது. இது உள்ளூர் மட்டத்தில் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியது. மார்ச் 18, 2024 அன்று சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், எதிர்பாராத காரணங்களால் சில மருந்துகள் தாமதமாகலாம் என்று கூறப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு உள்நாட்டில் மருந்துகளை வாங்க மாநிலங்கள் காசநோயாளிக்கு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. உள்ளூர் சுகாதார மையங்கள் அவர்களுக்கு இலவச மருந்துகளை வழங்க முடியாவிட்டால், நோயாளிகள் செலவழித்த பணத்தை திருப்பிச் செலுத்தவும் தேர்வு செய்யலாம். கடைசி நிமிடத்தில் மருந்துகளை வாங்க மாநிலங்கள் அனுமதிக்கப்படுவது மிகவும் மோசமானது. ஆனால், பெரும்பாலான காச நோயாளிகள் ஏழைகளாக இருப்பதால், நோயாளிகள் தங்கள் மருந்துகளுக்கு  பணம் செலுத்த வேண்டும் என்பது இன்னும் மோசமானது. காசநோய் கட்டுப்பாட்டுக்கான 2025 இலக்கை அடைவதற்கான பாதையில் இந்தியா இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், காசநோய் கட்டுப்பாட்டின் அடிப்படை அம்சங்களில் கூட இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை என்று தோன்றுகிறது.




Original article:

Share:

குறைந்தது 20 தனியார் நிறுவனங்கள், அவை தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. இது ஒரு தண்டனைக்குரிய குற்றம். -விக்னேஷ் ராதாகிருஷ்ணன்,சாம்பவி பார்த்தசாரதி

 தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் தனியார் நிறுவனங்கள் அரசியல் நன்கொடைகளை வழங்கக் கூடாது  என சட்டம் கூறுகிறது. இது, தேர்தல் பத்திர நன்கொடைகளுக்கும் பொருந்தும்.


மூன்று ஆண்டுகளுக்குள் தொடங்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் அரசியல் நன்கொடைகளை வழங்கக் கூடாது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.  தேர்தல் பத்திரங்கள் மூலம் செய்யப்பட்ட பங்களிப்புகளும் இதில் அடங்கும். இருப்பினும், புதிதாக உருவாக்கப்பட்ட 20 நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கியதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த பத்திரங்கள் தோராயமாக ₹103 கோடி மதிப்புடையவை.


இந்த நிறுவனங்கள் தங்கள் முதல் தேர்தல் பத்திரங்களை வாங்கியபோது, சில நிறுவனங்கள் ஒரு வருடத்திற்கும் குறைவாகவும், சில ஒரு வருடம் பழமையானதாகவும், மற்றவை இரண்டு வருடங்களாகவும் இருந்தன. இந்த நிறுவனங்களில் பல 2019 இல் பொருளாதார மந்தநிலை அல்லது தொற்றுநோய்களின் போது தொடங்கப்பட்டன. தொடங்கிய சில ஆண்டுகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன.

தொடங்கிய மூன்றே ஆண்டுகளுக்குள் நிறுவனங்கள் அரசியலுக்கு பணம் கொடுக்கக் கூடாது என்ற விதிமுறையை உள்ளடக்கிய சட்டம்,  கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இருந்து வருகிறது. 1985 ஆம் ஆண்டில், பாராளுமன்றம் பிரிவு 293Aஐ மாற்றியது, சில நிபந்தனைகளின் கீழ் நிறுவனங்கள் அரசியலுக்கு நன்கொடை அளிக்க அனுமதித்தது. ஒரு நிபந்தனை என்னவென்றால், நிறுவனங்கள் அரசாங்கத்துக்குச் சொந்தமாக இருக்க கூடாது குறைந்தது மூன்று ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனை, நிறுவனங்கள் சட்டம், 2013 (Companies Act, 2013) இன் பிரிவு 182 இல் இருந்தது. நிதிச் சட்டம், 2017 (Finance Act, 2017) இன் பிரிவு 154, தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு சற்று முன்பு, பிரிவு 182 ஐ மாற்றியபோது, இந்த நிலை நீடித்தது. ஆனால் இந்த மாற்றம், கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு நிறுவனத்தின் நன்கொடையை அதன் சராசரி நிகர லாபத்தில் 7.5% ஆகக் கட்டுப்படுத்தும் விதியை இந்தத் திருத்தம் நீக்கியது. நிறுவனங்கள் தொடங்கப்பட்ட முதல் மூன்று ஆண்டுகளில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க அனுமதிக்கப்படுவதில்லை.  


நிறுவனங்கள் சட்டம் 2013 (Companies Act 2013) இன் படி, ஒரு நிறுவனம் நன்கொடை அளிப்பதன் மூலம் விதிகளை மீறினால், அதற்கு நன்கொடை தொகையின் ஐந்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் நன்கொடைத் தொகையில் ஐந்து மடங்கு வரை அபராதமும் விதிக்கப்படலாம். குறிப்பிடப்பட்ட 20 நிறுவனங்களில் 12 நிறுவனங்கள் ஹைதராபாத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்த 12 நிறுவனங்களும் ரூ.37.5 கோடி நன்கொடை அளித்துள்ளன. இந்த பணத்தின் பெரும்பகுதி, சுமார் 75%, பாரத ராஷ்டிர சமிதியால் பெறப்பட்டது. மீதமுள்ளவை தெலுங்கு தேசம், காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி என்று பல கட்சிகளுக்கு  நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. 


ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட இரண்டு நிறுவனங்கள், அதாவது: 


1. ஷார்க்ஸ் இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் (Tsharks Infra Developers Private Limited) மற்றும் ஷார்க்ஸ் ஓவர்சீஸ் எஜுகேஷன் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் (Tsharks Overseas Education Consultancy Private Limited) ஆகியவை 2023 இல் உருவாக்கப்பட்டன. அவைகள் விரைவாக ₹7.5 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கி பாரத ராஷ்டிர சமிதி  கட்சிக்கு  நன்கொடையாக வழங்கியுள்ளனர். 


2. கோவையில் அமைந்துள்ள மற்றொரு நிறுவனமான எச்.எச் அயர்ன் அண்ட் ஸ்டீல் பிரைவேட் லிமிடெட் (HH Iron and Steel Private Limited) பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ.15 கோடியும், பிஜு ஜனதா தளத்திற்கு ரூ.5 கோடியும் நன்கொடை வழங்கியுள்ளது. 


3. நவம்பர் 2021 இல் நிறுவப்பட்ட அஸ்கஸ் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், 1.5 ஆண்டுகளுக்குள் அதன் முதல் பத்திரத்தை வாங்கி, திராவிட முன்னேற்ற கழகம்.  அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளுக்கு  ₹22 கோடியை நன்கொடையாக  வழங்கியுள்ளது.  


4. மே 2018 இல் தொடங்கப்பட்ட Besseggen Infotech LLP நிறுவனம் ₹11.5 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை தங்கள் நிறுவனம் தொடங்கப்பட்டு   இரண்டு ஆண்டு பத்து பத்துமாதங்களுக்குள் வாங்கியுள்ளனர். இது தேர்தல் பத்திர சட்டத்திற்கு எதிரானது.            

 



Original article:

Share:

டிசம்பர் 2023இல் புதிய உச்சத்தை எட்டிய வீட்டுக் கடன்கள் -விகாஸ் தூத் விகாஸ் தூத்

 டிசம்பர் 2023 இல், கடன் அளவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% ஐ எட்டியது. இது, இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாகும். அதே நேரத்தில், நிகர நிதி சேமிப்பானது (net financial savings) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5% ஆக குறைந்துள்ளது. இது மிகக் குறைந்த அளவாகும்.


அதிகரித்து வரும் நிதி நெருக்கடியின் அறிகுறியாக, இந்தியாவின் வீட்டுக் கடன் அளவுகள் (India’s household debt) டிசம்பர் 2023க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% என்ற எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அதே சமயம், நிகர நிதிச் சேமிப்பு அவைகளின் அளவிற்குக் குறைந்திருக்கலாம். அதே நேரத்தில், நிதிச் சேவை நிறுவனமான மோதிலால் ஓஸ்வாலின் (Motilal Oswal) அறிக்கையின்படி, நிகர நிதி சேமிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆகக் குறையும்.


செப்டம்பர் 2023 இல், இந்திய ரிசர்வ் வங்கியானது, குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு 2022-23 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5.1% ஆகக் குறைந்துள்ளது என்று மதிப்பிட்டுள்ளது. இது, 47 ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவாகும். இதை, நிதி அமைச்சகம் கடுமையாக மறுத்துவிட்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.  


இந்தியாவில் உள்ள குடும்பங்கள் முன்பை விட குறைவான நிதி சார்ந்த சொத்துகளை வாங்குகின்றன என்றும், அதற்கு மாறாக நிதிக்கடன்களும் வாங்குகின்றனர். இந்த பணத்தின் மூலம் வீடுகள், வாகனங்கள் போன்ற உண்மையான சொத்துக்களை வாங்க பயன்படுத்துகின்றனர். இது குடும்ப பிரச்சினைகளால் அல்ல என்று நிதி அமைச்சகம் நம்புகிறது. ஏனென்றால், மக்கள் தங்கள் எதிர்கால தேவைகள் மற்றும் அவர்கள் எவ்வளவு பணம் சம்பாதிப்பார்கள் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளனர்.


பிப்ரவரியில், 2022-23 தேசிய வருமானத்திற்கான புதிய மதிப்பீடுகள் வெளியிடப்பட்டன. இந்த மதிப்பீடுகள் குடும்பங்களில் நிகர நிதி சேமிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3% ஆக உயர்த்தியுள்ளன. இது கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். இது 2011-12 முதல் 2019-20 வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரியான 7.6% ஐ விட குறைவாகும். புதுப்பிக்கப்பட்ட மதிப்பீடுகள் வீட்டுக் கடன் அளவுகளையும் அதிகரித்தன. அவை, 2022-23 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 38% ஆக உயர்ந்தன. இது இரண்டாவது மிக உயர்ந்த நிலையாகும். தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2020-21 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகபட்சமாக 39.1% ஆக இருந்தது.


பாதுகாப்பற்ற தனிநபர் கடன்கள் (Unsecured personal loans)


டிசம்பர் 2023 நிலவரப்படி, வீட்டுக் கடன் (household debt), மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% ஆக அதிகரித்துள்ளது என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன. இது, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும். மோதிலால் ஓஸ்வால் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் (Motilal Oswal research analysts) நிகில் குப்தா (Nikhil Gupta) மற்றும் தனிஷா லதா (Tanisha Ladha) ஆகியோர் கூறுகையில், வங்கிகளின் தரவுகளின்படி, வீட்டுக் கடனில் பாதுகாப்பற்ற தனிநபர் கடன்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அவற்றைத் தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட கடன், விவசாயக் கடன்கள் மற்றும் வணிகக் கடன்கள் உள்ளன.


2022-23 ஆம் ஆண்டில் குறைந்த நிகர நிதி சேமிப்புக்குக் காரணம், மக்கள் அதிகம் சம்பாதிக்காததால் ஏற்பட்டது. ஆனால், அவர்கள் நிறைய செலவழித்து நுகர்வு மற்றும் சொத்துக்கள் போன்ற விஷயங்களில் அதிகம் சேமித்துள்ளனர். இதில், வருமான வளர்ச்சி பலவீனமாக இருப்பதாலும், நாட்டின் வருவாயில் சுமார் 5% சேமிப்பு இல்லாததால், 2023-24 ஆம் ஆண்டில் குடும்பங்களின் செலவு மற்றும் சேமிப்பு இரண்டும் நிறைய வீழ்ச்சியடைந்ததில் ஆச்சரியமில்லை என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.


2022-23 இல் வீழ்ச்சியடைந்த நிகர நிதிச் சேமிப்புகள் மற்றும் குறைந்த சேமிப்புகள் விதிவிலக்கா? 2023-24 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு (households’ net financial savings) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5% ஆக இருக்கும் என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த சேமிப்புகள் ஆண்டு முழுவதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% முதல் 5.5% வரை முடிவடையும் என்று அவர்கள் கணித்துள்ளனர்.

கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், குடும்பங்களின் மொத்த நிதி சேமிப்பானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.8% ஆக சற்று அதிகரித்துள்ளது. இது 2022-23 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 10.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவர்கள் அதிக நிதிக் கடனைப் பெற்றனர். குடும்பங்களின் நிதிக்கடன்  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5% இல் இருந்து 5.8% ஆக உயர்ந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. 2022-23 ஆம் ஆண்டில் குடும்பங்களின் வருடாந்திர கடன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8% ஐ எட்டியுள்ளன. இது, சுதந்திரத்திற்குப் பிறகு இரண்டாவது மிக உயர்ந்த அளவைக் குறிக்கிறது.    

 

2022-23 ஆம் ஆண்டில், குடும்பங்கள் நிறைய பணத்தைச் சேமித்து, பத்து ஆண்டுகளில் மிக உயர்ந்த நிலையை எட்டியது. எவ்வாறாயினும், அவர்களின் ஒட்டுமொத்த சேமிப்பு, ஆரோக்கியம் சார்ந்தவற்றைத் தவிர மற்ற வகையான சேமிப்புகளை உள்ளடக்கியது. அவர்களின் மொத்தச் சேமிப்பு ஆறு ஆண்டுகளில் இல்லாத மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18.4% ஆக இருந்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு சேமிப்பு (Gross Domestic Savings (GDS)) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30.2% ஆக குறைந்துள்ளது. இது 2013-14 முதல் 2018-19 வரை நாம் கண்ட 31-32% வரம்பை விட குறைவு. குடும்பங்களின் நிகர நிதி சேமிப்புகளில்  (net financial savings of households) ஏற்பட்ட குறைவு "வியக்கத்தக்கது" (dramatic) என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.




Original article:

Share: