இந்தியாவின் இணைய விளையாட்டுத் துறையின் புதிய அத்தியாயம் - அமர் பட்நாயக்

 இணைய விளையாட்டுத் துறையின் எதிர்காலத்தை மேம்படுத்த, இந்தியா அதிக வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. 


உலகளாவிய இணைய விளையாட்டின் மையமாக இந்தியா உருவாக வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். ஏப்ரல் 2024 நாட்டின் ஏழு சிறந்த விளையாட்டாளர்களை அவர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, அவர்கள் இணைய விளையாட்டுத் துறையின் வளர்ச்சி குறித்து விவாதித்தனர். இணைய விளையாட்டில் உள்ள சவால்கள் குறித்து பேசினர். இணைய விளையாட்டிருக்கும் சூதாட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி பிரதமரிடம் விளக்கினர். இந்த விவாதங்கள் இணைய விளையாட்டுத்துறையில் சிறந்த விதிமுறைகளை உருவாக்க உதவும்.


இணைய விளையாட்டு "டிஜிட்டல்  இந்தியாவின்" வளர்ச்சியில் முக்கிய பகுதியாகும். சமீபத்தில் நடந்த விவாதத்தில் முக்கியமான விஷயங்கள் பற்றி பேசப்பட்டது. முதலாவதாக, இந்திய புராணங்களை அடிப்படையாகக் கொண்ட பல விளையாட்டுகள் பிரபலமாகி வருகின்றன. இரண்டாவதாக, அதிகமான பெண்களை  இணைய விளையாட்டில் சேர ஊக்குவிக்க வேண்டும். கடைசியாக, இணைய விளையாட்டு இந்தியாவில் ஒரு நல்ல தொழில் தேர்வாக  உருவாகவில்லை, அதை மாற்ற வேண்டும்  என்று  விளையாட்டு வீரர்கள் பிரதமரிடம்  தெரிவித்தனர்.


விரைவான வளர்ச்சி


இந்தியாவில் இணைய விளையாட்டுத்துறை விரைவான வளர்ச்சியை அடைந்துள்ளது. 2020 மற்றும் 2023 நிதியாண்டுக்கு இடையில், தொழில்துறை கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (compound annual growth rate (CAGR)) 28% வளர்ச்சியடைந்துள்ளது. இது 2028 நிதியாண்டில் ₹33,243 கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இணைய விளையாட்டுத்துறை ஆண்டுக்கு 15% வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துறை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆதாரங்களிலிருந்து குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்க்கிறது. இது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு  வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.


இந்தியாவின் வலுவான தகவல் தொழில்நுட்பத் திறன்கள் இந்தத் தொழிலின் இயற்கையான திறனை மேம்படுத்துகின்றன. 2021 ஆம் ஆண்டில், உலகளாவிய  இணைய விளையாட்டுத்துறையின் வருவாய் $300 பில்லியனைத் தாண்டியது. இந்த எண்ணிக்கை திரைப்படம் மற்றும் இசைத் தொழில்களின் வருவாயை விட அதிகம். இருப்பினும், இந்தியாவின் இணைய விளையாட்டின் வருவாய்  உலக விளையாட்டு சந்தையில் 1.1% மட்டுமே உள்ளது. இந்த சதவீதம் வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணைய விளையாட்டு இந்திய புத்தொழில் நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது. இது 'இந்தியா டெக்கேட்யின்' (‘India Techade’) முக்கிய பகுதியாகும். மேலும், இது $1 டிரில்லியன் டிஜிட்டல் பொருளாதாரத்தை அடைவதை  நோக்கமாகக் கொண்டுள்ளது. 


இணைய விளையாட்டுத்துறை பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இயங்குபடம் (Animation), காட்சி விளைவுகள் (Visual Effects), விளையாட்டு (gaming),  சித்திரக்கதை  (Comic) மற்றும் விரிவாக்கப்பட்ட நிகழ்நேர பணிக்குழு (Extended Reality taskforce) ஆகியவற்றிற்கான பணிக்குழுவை அமைத்துள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒருங்கிணைப்பு அமைச்சகமாக (nodal ministry) அடையாளம் காணப்பட்டுள்ளது. IT (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு) விதிகள், 2021 மூலம் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வரி விதிப்புகள் குறித்து  தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கைகள் அனைத்தும்  இணைய விளையாட்டு மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இடையே தெளிவான கொள்கை கட்டமைப்பை உருவாக்கும். இளம் இந்தியர்கள் தலைமையிலான புதுமைகளை ஊக்குவிக்க இந்த கட்டமைப்பு பெரிதும் உதவும்.


பரிசீலனை செய்யப்பட வேண்டிய விடயங்கள்


விதிகளை தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் சில சிக்கல்களைத் தீர்க்க வேண்டும். குறிப்பாக, 2021-ன் தகவல் தொழில்நுட்ப விதிகள் (IT Rules of 2021) தொழில்துறையைக் கட்டுப்படுத்த சுய-ஒழுங்குமுறை அமைப்புகளை அமைத்துள்ளன. ஆனால் அவை இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. புதிய தொழில்நுட்பத்தின் காரணமாக விரைவாக மாறும் தொழிலுக்கு சுயக் கட்டுப்பாடு முக்கியமானது. இணைய கற்பனை விளையாட்டு துறைக்கு (online fantasy gaming sector) சுயக் கட்டுப்பாடு தேவை. ஏனெனில், இது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் வெளியிட்டுள்ள  (NITI National Institution for Transforming India (NITI)), ஒரு விவாதக் கட்டுரையில், வரைவு வழிகாட்டும் கொள்கைகளை பரிந்துரைத்தது. இந்தக் கொள்கைகள் சுய-ஒழுங்குமுறை அமைப்பின் தலைமையில் ஒரு சுய ஒழுங்குமுறை மாதிரியை முன்மொழிகின்றன.


கூடுதலாக, வரிவிதிப்பில் சமீபத்திய மாற்றங்கள் புத்தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளது. ஜூலை 2023-ல் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) கவுன்சில் நடத்திய கூட்டத்தில், கவுன்சில் 28% வரி விகிதத்தைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டது. அக்டோபர் 1, 2023 முதல் பந்தயங்களின் மொத்த முக மதிப்புக்கு இந்த வரி பொருந்தும். இது திறமை அல்லது வாய்ப்பை உள்ளடக்கிய அனைத்து இணைய விளையாட்டுத்துறையையும் பாதிக்கும். முன்னதாக, இந்தியாவில்  இணைய விளையாட்டுத்துறை நிறுவனங்கள் ஜூலை 2017 முதல் 18% சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தியுள்ளன. இந்த மாற்றங்கள் ஆரம்பத்தில் வரி வருவாயை அதிகரித்தாலும், அவை தொழில்துறையின் நீண்டகால வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.  இந்த வரி விதிப்புகள் வேலை வாய்ப்பு உருவாக்கத்தை  கடுமையாக பாதிக்கும்.

 

மென்மையான சக்தி


இந்தியா ஒரு உலகளாவிய இணைய விளையாட்டு மையமாக மாறும் ஒரு முக்கியமான கால கட்டத்தில் உள்ளது. கதைகள், புனைவுகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் உட்பட இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம்  முக்கிய காரணம். இந்திய புராணங்களால் ஈர்க்கப்பட்ட விளையாட்டுகளின் போக்கு அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்கும் வாய்ப்பை வழங்குகிறது.


கூடுதலாக, இணைய விளையாட்டுதுறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வலுவான உந்துதல் உள்ளது. இந்த முயற்சி பன்முகத்தன்மையை மேம்படுத்தும். அதிகமான மக்கள் இணைய விளையாட்டை சாத்தியமான வாழ்க்கையாகக் கருதுவதால், இந்தியா வளர்ந்து வரும் திறமையாளர்களை ஊக்குவிக்க ஒரு  குழுவை உருவாக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள்  புதிய விளையாட்டுத் தளத்தை உருவாக்கலாம்.


இணைய விளையாட்டுதுறையில் இந்தியா அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. திறன் விளையாட்டை ஆதரிப்பதன் மூலமும் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதன் மூலமும் அதன் கலாச்சாரக் கதைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் இந்தியா தனது டிஜிட்டல் பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலர்களை எட்ட உதவும். 


அமர் பட்நாயக், ஒடிசாவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞர் ஆவார். அவர் சிஏஜி அதிகாரி. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் தனிப்பட்டவை




Original article:

Share:

உச்ச நீதிமன்றத்தின் காலநிலை மாற்றம் பற்றிய தீர்ப்பு திருப்திகரமாக இல்லை - ஆஷிஷே கதாரி, ஸ்ரீஷ்டி பாஜ்பாய்

 எம்.கே.ரஞ்சித்சிங் மற்றும் பிறர் vs இந்திய யூனியன் மற்றும் பிற வழக்கில் (M.K. Ranjitsinh and Ors. vs Union of India and Ors), இந்தியாவின் முன்மொழியப்பட்ட ஆற்றல் மாற்றத்தின் பல சிக்கலான அம்சங்களை உச்ச நீதிமன்றம் கவனிக்கவில்லை.


காலநிலை மாற்றத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க அனைவருக்கும் உரிமை உண்டு என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது ஒரு நல்ல செய்தி, ஏனென்றால் உலகம் பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. பூமியின் சராசரி வெப்பநிலையானது 1.5° செல்சியஸ் என்ற அளவில் அதிகரித்துவருவதால், மக்களுக்கும் இயற்கைக்கும் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆனால் விஞ்ஞானிகள் எச்சரித்தும் பல நாடுகள் போதுமான அளவு முன்னேற்பாடுகளை செய்யவில்லை.


  நீதிமன்றத்தின் தீர்ப்பு காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை நிறுத்த அல்லது குறைக்க உதவும் செயல்களுக்கு வழிவகுக்கும். பருவநிலை மாற்றத்தால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதையும் நீதிமன்றம் கவனித்தது. இது பொதுமக்களுக்கு உதவ நியாயமான செயல்களுக்கு வழிவகுக்கும்.


தீர்ப்பில் உள்ள குறைகள்


தீர்ப்பில் சில சிக்கல்கள் உள்ளன. இந்திய கானமயிலைக் (Great Indian Bustard) காப்பாற்றுவது பற்றிய அதன் உத்தரவுகளைப் பற்றி நாம் பேசப்போவதில்லை, அதன் வாழ்விடம் மேற்கு இந்தியாவில் பெரிய எரிசக்தி திட்டங்களால் அச்சுறுத்தப்படுகிறது, இது வழக்கின் முக்கிய மையமாக இருந்தது. புதுபிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காலநிலையில் கவனம் செலுத்துகிறோம். இந்தியா தனது காலநிலை வாக்குறுதிகளை நிறைவேற்ற சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்துவது முக்கியம் என்று நீதிமன்றம் கூறுகிறது. 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சிகளின் 26வது மாநாட்டில் (26th Conference of the Parties) பிரதமர் நரேந்திர மோடியால் இந்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கரிம  உமிழ்வை எட்டுவது, புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களிலிருந்து 500 ஜிகாவாட் மின்சாரம் தயாரிப்பது, 2030-க்குள் மொத்த மின் உற்பத்தியில் 50% புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்குதல் ஆகியவை அடங்கும். 2030-க்குள், மின்சாரமானது புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து வர வேண்டும். இந்த இலக்கை அடைவதில் சிக்கல்கள் இருந்தால், அதிக நிலக்கரி அடிப்படையிலான மின்சாரம் பயன்படுத்தப்படலாம், இது காலநிலைக்குத் தீங்கு விளைவிக்கும்.


ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் நிலம் மற்றும் வான்வெளியை சூரிய மற்றும் காற்றாலை ஆற்றலுக்காக எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து நீதிமன்றம் ஆய்வு செய்தது. ஆனால் இந்தியாவின் எரிசக்தி திட்டத்தில் சில பிரச்சனைகளை பற்றி அது கேள்வி கேட்கவில்லை.


முதலாவதாக, அரசாங்கம் பெரிய நீர்மின்சாரம் மற்றும் அணுமின் நிலையங்களை "புதைபடிவமல்லாத எரிபொருள்" மற்றும் "புதுப்பிக்கத்தக்க" ஆற்றல் என எண்ணுகிறது. ஆனால் இவை பாதிப்பில்லாதவை அல்ல. இமயமலையில் பெரிய அணைகளை கட்டுவதால், நிலச் சீர்குலைவு, தாவரங்கள் மற்றும் விலங்குகள் இழப்பு, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளை ஏற்பட்டுள்ளன. அணுசக்தி, மக்களை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறச் செய்துள்ளது. இது பொதுவாக வெளியில் யாருக்கும் தெரிவதில்லை. மேலும் பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக அணுக்கழிவுகளால் ஏற்படும் பாதிப்பு மக்களைக் கவலையடையச் செய்துள்ளது.


இரண்டாவதாக, பெரிய சூரிய மற்றும் காற்றாலை திட்டங்களும் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, கர்நாடகாவில் உள்ள பெரிய பவகடா சூரிய பூங்கா (Pavagada Solar Park) மேய்ச்சல் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. மேலும் இது வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவித்துள்ளது. லடாக்கின் சாங்தாங்கில் (Changthang), 13 ஜிகாவாட் சூரியசக்தித் திட்டம் 20,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த இடம் தனித்துவமான வனவிலங்குகள் மற்றும் பிரபலமான பாஷ்மினா கம்பளியை உற்பத்தி செய்யும் நாடோடி கால்நடை வளர்ப்பிற்கு முக்கியமான இடமாகும்.


குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள சாரி தண்ட் (Chhari Dhand) பாதுகாப்புக் காப்பகத்திற்கு அடுத்துள்ள 1,400 ஏக்கர் பரப்பளவில் ஒரு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒரு முக்கியமான பறவை பகுதிக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் மல்தாரி கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கக்கூடும். துரதிர்ஷ்டவசமாக, இது போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் (environmental impact assessment (EIA)) மற்றும் அனுமதி நடைமுறைகளுக்கு உட்பட்டவை அல்ல. இதன் விளைவாக, அவற்றின் தாக்கங்கள் மதிப்பிடப்படுவதில்லை.


புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் குறிப்பிடத்தக்க முதலீடு இருந்தபோதிலும், அரசாங்கம் நிலக்கரியில் தொடர்ந்து முதலீடு செய்கிறது. புதிய நிலக்கரி சுரங்கத் தொகுதிகளுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது. பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் போன்ற முக்கியமான பகுதிகளில் கூட அவர்கள் புதிய நிலக்கரிச் சுரங்கங்களுக்கு ஒப்புதல் அளித்து வருகின்றனர். பெரும்பாலும், அரசு நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களுக்கு, குறிப்பாக புது தில்லிக்கு அருகில் உள்ள நிறுவனங்கள், சுற்றுச்சூழல் விதிகளைத் தவிர்க்க உதவுகின்றன.


மாற்று வழிகளை பரிசீலித்திருக்க வேண்டும்


ஆற்றலில் ஒரு பெரிய மாற்றத்தை முழுமையாக ஆதரிக்கும் நீதிமன்றத்தின் முடிவு, தூய்மையான சுற்றுச்சூழலுக்கான உரிமை அனைவருக்கும் உள்ளது என்ற அதன் கூற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இந்த உரிமை பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, பெரிய திட்டங்களைத் தவிர மற்ற விருப்பங்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, மேற்கூரை சூரிய சக்தி (rooftop solar) மற்றும் பிற சிறிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் 600 GW க்கும் அதிகமான மின் சக்தியை உருவாக்க முடியும். சிறிய சோலார் திட்டங்கள் இந்திய கிராமங்களில் உள்ள பலருக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் உதவியுள்ளன என்று நீதிமன்றமே கூறியது. எனவே, நியாயம் பற்றிய அரசியலமைப்பின் விதிகள் முக்கியமானதாக இருந்தால், இந்த சிறிய திட்டங்கள் பெரிய திட்டங்களை விட சிறந்ததாக இருக்கும்.

எரிசக்தி பயன்பாடு மற்றும் பரிமாற்றத்தின் செயல்திறனையும் நீதிமன்றம் கேள்வி கேட்க வேண்டும். சமையலறை உபகரணங்கள் மற்றும் பிற அன்றாட பயன்பாடுகளில் இழக்கப்படும் ஆற்றல் மற்றும் ஆடம்பர நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஆற்றல் ஆகியவை இதில் அடங்கும். இந்தியாவில் எரிசக்தி தேவையை நிர்வகிக்க எந்த திட்டமும் இல்லை, அதாவது அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக கருதப்படுகின்றன. அதிகாரத்தை ஆடம்பரத்திற்காக பயன்படுத்தும் பணக்காரர்களிடமிருந்து, போதுமான அதிகாரம் இல்லாத ஏழை பிரிவினருக்கு மறுவிநியோகம் செய்வது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டும். இது அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான தேவையை குறைக்கும்.


மற்ற நாடுகளின் காலநிலை மாற்ற தீர்ப்புகள் மற்றும் இந்தியா ஈடுபட்டுள்ள சர்வதேச ஒப்பந்தங்கள் பற்றி நீதிமன்றம் பேசியது. இருப்பினும், வளர்ந்து வரும் சட்ட யோசனைகள் மற்றும் இயற்கையின் உரிமைகள் பற்றிய ஐ.நா அறிக்கைகள் போன்ற பிற முக்கிய விஷயங்களை அது குறிப்பிடவில்லை. 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் கூட பூமியின் சட்டம் (Earth law) உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. நியாயமான காலநிலை நடவடிக்கைகளுக்கு இது மிகவும் முக்கியமானது. குறிப்பாக பழங்குடியின குழுக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் இயற்கையையும் அவர்களின் வீடுகளையும் இப்போதும் எதிர்காலத்திலும் பாதுகாக்க வழிவகுக்கும்.


இந்தியாவில், உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் 2017-ல் கங்கை மற்றும் யமுனை நதிகளின் உரிமைகளை அங்கீகரித்தது. ஆனால், உத்தரகாண்ட் அரசு அதைச் செய்ய முடியாது என்று கூறியதால், உச்ச நீதிமன்றம் இந்த முடிவை இடைநிறுத்தியது. இருப்பினும், காலநிலைக்குத் தீங்கு விளைவிக்கும் பெரிய அணைகள் போன்ற திட்டங்களை நிறுத்த இந்த அங்கீகாரம் உதவும். மனித உரிமைகள் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகள் தொடர்பான உலகளாவிய ஒப்பந்தங்களைப் பின்பற்றி, நீதிமன்றம் குறிப்பிட்டது போல், புதைபடிவ எரிபொருட்களைப் போன்ற மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும்.


ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் மின்சாரம் தயாரிப்பதற்கான பிற வழிகளைப் பார்க்குமாறு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துதல் அல்லது கழிவுகள் மற்றும் ஆடம்பரத்தைக் குறைப்பதன் மூலம் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துதல் போன்றவற்றைப் பார்க்குமாறு நீதிமன்றம் தனது நிபுணர் குழுவிடம் கூறுவதன் மூலம் தீர்ப்பை சிறப்பாகச் செயல்படுத்த முடியும்.


இந்திய மாடலில் உள்ள சிக்கல்


காலநிலை உரிமைகள் உண்மையிலேயே எதை உள்ளடக்கியது என்பது குறித்து குறிப்பிடத்தக்க கேள்விகள் உள்ளன. வளர்ச்சிக்கான இந்தியாவின் அணுகுமுறை பெரும்பாலும் பெரிய அளவிலான தொழில்துறை, உள்கட்டமைப்பு மற்றும் பிரித்தெடுக்கும் திட்டங்களில் கவனம் செலுத்துகிறது. இந்த திட்டங்கள் அரசியலமைப்பு உரிமைகளை மீறி காடழிப்பு மற்றும் சமூகங்களின் இடப்பெயர்வுக்கு வழிவகுக்கின்றன. உதாரணமாக, கிரேட் நிகோபாரில் 130 சதுர கிலோமீட்டர் பழமையான மழைக்காடுகளை அழித்து, பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்தும் ஒரு உள்கட்டமைப்பு திட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்தால், அது நீதிமன்றத்தின் தீர்ப்பின் இந்த வரியை தெளிவாக மீறுகிறது. நிக்கோபார் தீவுகளில் உள்ள பழங்குடி மக்கள் பாரம்பரியமாக, நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் உலகின் பிற பகுதிகளிலிருந்தும் துண்டிக்கப்பட்டு வாழ்கின்றனர் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த சமூகங்களை இடம்பெயரச் செய்வது அல்லது அவர்களின் நிலங்களை அழிப்பது அவர்களின் தனித்துவமான கலாச்சாரத்தை நிரந்தரமாக அழிக்கக்கூடும்.


நீதிமன்றம் தனது தீர்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தினால், காலநிலை ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டால், அத்தகைய திட்டங்களை மறுபரிசீலனை செய்ய அரசாங்கத்திற்கு அது அறிவுறுத்த வேண்டும். இது உண்மையான நிலைத்தன்மை மற்றும் சமூகநீதியை நோக்கி குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுக்கும். அவ்வாறு செய்யத் தவறினால், காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கத்தின் தற்போதைய அணுகுமுறையை மட்டுமே இந்த தீர்ப்பு ஆதரிக்கிறது. இந்த அணுகுமுறை சுற்றுச்சூழல் ரீதியாக தீங்கு விளைவிக்கும், ஜனநாயக விரோதமானது மற்றும் சமூக ரீதியாக சீர்குலைக்கும்.



Original article:

Share:

வெங்காய ஏற்றுமதி தடை குறித்து . . .

 முறையான திட்டமிடல் இல்லாமல் கொள்கைகள் வகுக்கப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். விலை உயரும் போது, ​​விவசாயிகள் மேலும் நஷ்டம் அடைகின்றனர். குறிப்பாக பணவீக்கம் அவர்களை பாதிக்கும் போது விவசாயிகள் அரசியலில் பேசுவது முக்கியம்.


வெங்காய ஏற்றுமதிக்கு ஆறு மாத தடையை ஒன்றிய அரசு சமீபத்தில் நீக்கியது. இருப்பினும், அவர்கள் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (minimum export price) விதித்தனர். இந்த முடிவு எடுக்கப்பட்ட நேரம் குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவின் வெங்காயம் உற்பத்தி செய்யும் பிராந்தியங்களில் தேர்தலுக்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டது.  இது பொருளாதாரத்தை  மட்டும் குறிக்கவில்லை, அரசியல் நோக்கத்தையும் குறிக்கிறது.


வெங்காயம் மீதான ஏற்றுமதி தடை மட்டும் இதற்கு உதாரணம் அல்ல. இந்தியாவின் உணவுக் கூடையில் 39% உணவுப் பொருட்கள், பணவீக்கம் சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் 4% இலக்கை எட்டாததற்கு முக்கிய காரணமாகும். இந்தியாவின் உணவுப் பணவீக்கம் பெரும்பாலும் காலநிலை தொடர்பான விநியோகப் பிரச்சினைகளால் ஏற்படுகிறது. எனவே, ஏற்றுமதியை தடை செய்வதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை உள்நாட்டு சந்தைகளில் இருந்து ஏற்றுமதி சார்ந்த உற்பத்தியை மாற்றுகிறது.


உணவு சந்தைகளில் இந்த அணுகுமுறை புத்திசாலித்தனமா? சுதந்திர சந்தைகளை ஆதரிக்கும் விமர்சகர்கள் பெரும்பாலும் இது சுதந்திர வர்த்தகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று வாதிடுகின்றனர். இருப்பினும், உள்நாட்டு பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எந்த நடைமுறை அரசாங்கமும் அனுமதிக்காது. பெரும்பாலான இந்தியர்கள் தாங்கள் விற்பதை விட அதிக உணவை வாங்குகிறார்கள். ஆனாலும், விவசாயிகள் பெரும்பாலும் சந்தை உச்சகட்டத்தில் இருக்கும்போது பாதிக்கப்படுகின்றனர். விலைகள் வீழ்ச்சியடையும் போது, அரசாங்கம் அவர்களுக்கு உதவவில்லை. விலைவாசி உயரும் போது, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அவர்கள் அதிக லாபம் ஈட்டுவதைத் தடுக்கின்றன. அதிகரித்து வரும் காலநிலை நெருக்கடி இந்த தீவிர நிலைமைகளை விவசாயிகளுக்கு பல்வேறு சிரமத்தை ஏற்படுத்தும். விவசாயிகளுக்கு நிலைமை சரியில்லை என்பது தெளிவாகிறது.


இந்த கொள்கை சார்பை அகற்ற என்ன செய்ய முடியும்? பல்வேறு பகுதிகள் மற்றும் பயிர்களைச் சேர்ந்த விவசாயிகள் உட்பட அனைவரும் சீர்திருத்தங்களை ஒப்புக்கொண்டு, அரசாங்கத்திடம் நியாயமான கோரிக்கைகளை கேட்க வேண்டும். இது ஏன் நடக்கவில்லை என்பதை விவசாயிகள் குழுக்களும் எதிர்க்கட்சிகளும் சிந்திக்க வேண்டும். அவர்கள் மாறத் தயாரா? அவர்கள் அரசாங்கத்திடம் சரியான விஷயங்களைக் கேட்கிறார்களா? விவசாயிகளுக்கு உதவும் வகையில் உணவுப் பொருட்களின் விலை உயர்வை ஏற்க அரசியல் கட்சிகளும் அரசுகளும் தயாரா? இவை விவசாயிகள்  கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகள்.



Original article:

Share:

சீனா தனது Chang'e-6 விண்வெளித் திட்டத்திற்கு நிலவின் தொலைதூரப் பக்கத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? -அலிந்த் சௌஹான்

 சந்திரனின் தொலைதூரப் பக்கம் இருண்ட பக்கம் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், பூமியிலிருந்து அதை நம்மால் பார்க்க முடியாது என்பதால் மட்டுமே தவிர, சூரிய ஒளி கிடைக்காததால் அல்ல.


மே 3, வெள்ளிக்கிழமை அன்று, சந்திரனின் தொலைதூரப் பக்கத்திற்கு சீனா தனது இரண்டாவது விண்வெளி பயணத்தை செலுத்தியது. இந்தப் பணி, வெற்றிகரமாக இருந்தால், பூமியிலிருந்து நாம் பார்க்க முடியாத சந்திரனின் பக்கத்திலிருந்து மாதிரிகளை கொண்டு வரும் முதல் பணி இதுவாகும்.


இந்த விண்கலத்திற்கு சாங்'இ -6 (Chang'e-6) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வென்சாங் விண்வெளி ஏவுதளத்திலிருந்து (Wenchang Space Launch Center) ஏவப்பட்டது. இந்த விண்கலம் ஏவப்பட்ட சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, விண்கலமானது அதன் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்றது. பின்னர், பிரிந்து சென்ற விண்கலம்  சந்திரனுக்கு தனது பயணத்தைத் தொடங்கியது. இந்த பயணம் நிறைவடைய ஐந்து நாட்கள் ஆகும். சந்திரனின் தொலைதூர பக்கத்தை ஆராய்வதில் விஞ்ஞானிகள் ஏன் ஆர்வமாக உள்ளனர்? என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. இது சாங்'இ -6 பணி பற்றிய விவரங்களையும் வழங்குகிறது.


சந்திரனின் தொலைதூர பக்கத்தை ஏன் ஆராய வேண்டும்?


சந்திரனின் தொலைதூரப் பக்கம் பெரும்பாலும் இருண்ட பக்கம் (dark side) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், அது பூமியிலிருந்து நாம் பார்க்கும் போது சந்திரனின் தெரியாத பின் பக்கமாக இருப்பதால் மட்டுமே தவிர, சூரிய ஒளி இல்லாததால் அல்ல. சந்திரன் எப்போதும் பூமிக்கு ஒரே பக்கத்தைக் காட்டுகிறது, ஏனெனில் அது ஒரே நிலையில் உள்ளது. அதனால்தான் நாம் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறோம். இது அருகிலுள்ள பக்கம் (near side) என்று அழைக்கப்படுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், மக்கள் தொலைதூரப் பக்கத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள், ஏனெனில் இது அருகிலுள்ள பக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. தி நியூயார்க் டைம்ஸின் கூற்றுப்படி, இது ஒரு தடிமனான மேலோடு (thicker crust), அதிக பள்ளங்கள் மற்றும் குறைவான மரியாக்களைக் (craters and fewer maria) கொண்டுள்ளது. மரியா (maria) என்பது பண்டைய எரிமலை குழம்புகளால் உருவான படுகைகள், பள்ளங்கள், முகடுகள் ஆகும்.


தொலைதூர பக்கத்திலிருந்து மாதிரிகளைப் ஆய்வுசெய்வது  விஞ்ஞானிகளுக்கு சந்திரனின் தோற்றம் மற்றும் அது எவ்வாறு உருவாகியுள்ளது என்பதைக் கண்டறிய உதவும். இப்போது வரை, ஆராய்ச்சியாளர்களால் அருகிலுள்ள பக்கத்திலிருந்த மாதிரிகளை மட்டுமே அணுக முடிந்தது. தொலைதூர பக்கத்தின் மாதிரிகள் அருகிலுள்ள பக்கத்திலிருந்து ஏன் மிகவும் வேறுபட்டது என்பதையும் இந்த ஆய்வுகள் மூலம் விளக்கக்கூடும்.


ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வகத்தின் (Johns Hopkins University’s Applied Physics Lab) கிரக புவியியலாளர் பிரட் டெனேவி, இந்த மாதிரிகளைப் பெறுவதன் முக்கியத்துவத்தை சி.என்.என் க்கு வலியுறுத்தினார். அவற்றைக் கொணர்வது மற்றும் பல்வேறு புவி இயற்பியல் அளவீடுகளை நடத்துவது இந்த நீடித்த மர்மத்தை தீர்க்க முக்கியமானது என்று அவர் கூறினார்.


Chang'e-6 திட்டம் என்ன செய்யும்?


சாங்'இ -6 (Chang'e-6) விண்கலம் 53 நாட்கள் பயணமாகும். இது நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த பிறகு, சந்திரனின் சுற்றுப்பாதையைச் சுற்றி வரும். இதற்கிடையில், லேண்டர் (lander) சுமார் 2,500 கிலோமீட்டர் அகலமுள்ள சந்திர மேற்பரப்பில் உள்ள தென் துருவ-ஐட்கென் படுகையில் (South Pole-Aitken basin) தரையிறங்கும்.


இது சூரிய குடும்பத்தின் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தால் உருவான படுகையாகும். இந்த படுகையை உருவாக்கிய தாக்கம் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து தோண்டப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த பொருள் சேகரிக்கப்பட்டால், அது சந்திரனின் உள் வரலாறு குறித்த முடிவுகளை  வழங்கக்கூடும் என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.


முதலில், லேண்டர் மூலமாக, ஸ்கூப்பிங் (scooping) மற்றும் துளையிட்டு (drilling) மாதிரிகளை சேகரிக்கிறது. பின்னர், அது ஒரு ஏறும் வாகனத்தைப் பயன்படுத்தி அந்த மாதிரிகளை ஆர்பிட்டருக்கு அனுப்புகிறது. இறுதியாக, ஆர்பிட்டரின் சேவை தொகுதி மாதிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வருகிறது.


2019 ஆம் ஆண்டில் சாங்'இ -6 (Chang'e-6) திட்டம் மூலம் சீனா வரலாறு படைத்தது. சந்திரனின் தொலைதூர பக்கத்தில் தரையிறக்கத்தை அடைந்த முதல் சாதனை இதுவாகும். இந்த பணியின் போது, ஒரு ரோவர் சந்திரனின் வான் கர்மன் பள்ளத்தை (Von Karman crater) ஆராய்ந்தது.



Original article:

Share:

செயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence (AGI)) என்றால் என்ன, மக்கள் அதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறார்கள்? -பிஜின் ஜோஸ்

 மனிதர்களைப் போலவே சிந்திக்கும், கற்றுக்கொள்ளும் இயந்திரங்கள். மனிதர்களின் இருப்புக்கு வரமா அல்லது அச்சுறுத்தலா?


OpenAI இன் தலைவரான சாம் ஆல்ட்மேன் சமீபத்தில்,  செயற்கை நுண்ணறிவின்  (artificial intelligence (AI))  இறுதி வடிவம் போன்ற செயற்கை பொது நுண்ணறிவில் (Artificial General Intelligence (AGI)) பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் தனது நோக்கத்தைக் கூறினார். AGI AI வளர்ச்சியின் உச்சத்தைக் குறிக்கிறது. ஆல்ட்மேனின் உற்சாகம் இருந்தபோதிலும், உலகளாவிய தொழில்நுட்ப சமூகத்தில் பலர் மிகவும் கவலைப்படுகிறார்கள். ஏன்?.


செயற்கை பொது நுண்ணறிவு  (Artificial General Intelligence (AGI)) என்றால் என்ன?


AGI என்பது செயற்கை பொது நுண்ணறிவைக் குறிக்கிறது. இது ஒரு மனிதனால் செய்யக்கூடிய எந்தவொரு அறிவார்ந்த பணியையும் செய்யக்கூடிய ஒரு வகை இயந்திரம் அல்லது மென்பொருள். பகுத்தறிவு, பொது அறிவைப் புரிந்துகொள்வது, சுருக்க சிந்தனை, பின்னணி அறிவைப் பயன்படுத்துதல், வெவ்வேறு சூழ்நிலைகளிலிருந்து கற்றுக்கொள்வது மற்றும் காரணத்தையும் புதிய விஷயங்களையும் கண்டுபிடிக்கவும் உதவுகிறது. 


எளிமையான சொற்களில், AGI மனித அறிவாற்றல் திறன்களைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே அது புதிய பணிகளைக் கையாளவும், புதிய அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வது மற்றும் அதன் அறிவை புதுமையான வழிகளில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


மனிதர்கள் பல்வேறு அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள். இவை பள்ளியில், வீட்டில் அல்லது வேறு எங்கும் இருக்கலாம். மக்களுடன் பேசுவதன் மூலமும், விஷயங்களை கவனிப்பதன் மூலமும், புத்தகங்களைப் படிப்பதன் மூலமும், தொலைக்காட்சியைப் பார்ப்பதன் மூலமும், கட்டுரைகளைப் படிப்பதன் மூலமும் நாம் கற்றுக்கொள்கிறோம். மனித மூளை இந்த அனைத்து தகவல்களையும் எடுத்துக்கொண்டு முடிவுகளை எடுக்கிறது. இந்த முடிவுகள் பிரச்சினைகளைத் தீர்க்க அல்லது புதியவற்றை உருவாக்க  உதவுகிறது. 


மனித மூளையைப் போலவே இந்த விஷயங்களையும் செய்யக்கூடிய AGI ஐ உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் விரும்புகிறார்கள். ஒரு சூப்பர் நுண்ணறிவு ரோபோவை நண்பராகக் கொண்டிருப்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்த ரோபோ சொல்வதை எல்லாம் புரிந்து கொள்ளும், மனிதர்களைப் போலவே புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும், தீர்க்க வேண்டிய பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்கும்.


நாம் ஏற்கனவே பயன்படுத்தும் AI இலிருந்து AGI எவ்வாறு வேறுபடுகிறது?


AGI மற்றும் AI ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடு:


குறுகிய  செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) குறிப்பிட்ட பணிகளைச் செய்ய உருவாக்கப்பட்டது. இந்தப் பணிகளில் படத்தை அறிதல், மொழியாக்கம் செய்தல் மற்றும் சதுரங்கம் போன்ற  விளையாட்டுகளும் அடங்கும். இந்த பகுதிகளில் மனிதர்களை விட சிறப்பாக செயல்பட முடியும். இருப்பினும், இது வடிவமைக்கப்பட்ட பணிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


AGI, மறுபுறம், பரந்த அளவிலான திறன்களை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மிகவும் பொதுவான நுண்ணறிவு வடிவத்தைக் கொண்டிருக்கிறது. இதன் பொருள் இது மனித நுண்ணறிவைப் போலவே குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. 


அனைத்து AI முன்னேற்றங்களிலும் AGI முதலிடத்தில் உள்ளது. AI வளர்ச்சி எப்போதும் அதன் திறன்களை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்ட ChatGPT ஒரு மனிதன் எழுதியதைப் போல ஒலிக்கும் உரையை உருவாக்க முடியும். இந்த நிகழ்வு உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.


ChatGPT அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, AI மாதிரிகள் கணிசமாக மேம்பட்டுள்ளன. இந்த மாதிரிகளை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சியில்  கோடி கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. AGI-ஐ உருவாக்குவது இந்தப்  பயணத்தில் இறுதி இலக்கைக் குறிக்கிறது.


இது என்ன புது சிந்தனையை ?


செயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence (AGI)) பற்றிய கருத்து முதன்முதலில் 20 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இது கோட்பாட்டு கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தந்தை என்று பெரும்பாலும் கருதப்படும் ஆலன் டூரிங் (Alan Turing) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.


1950 ஆம் ஆண்டில், டூரிங் 'கம்ப்யூட்டிங் மெஷினரி அண்ட் இன்டெலிஜென்ஸ்' (‘Computing Machinery and Intelligence’ (1950)) என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை எழுதினார். இந்த ஆய்வறிக்கையில், அவர் இப்போது டூரிங் சோதனை (Turing test) என்று அழைக்கப்படுவதை அறிமுகப்படுத்தினார். இந்த சோதனை இயந்திர நுண்ணறிவுக்கான அளவுகோலாக செயல்படுகிறது. டூரிங் சோதனையின் படி, ஒரு இயந்திரம் ஒரு இயந்திரமாக அடையாளம் காணப்படாமல் ஒரு மனிதனுடன் உரையாட முடிந்தால், அது மனித நுண்ணறிவை சாத்தியமாக்கியுள்ளது.


டூரிங் இந்த முக்கியமான கட்டுரையை எழுதியபோது, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி உணரப்படுவதற்கு அருகில் கூட இல்லை. கணினிகள் அப்போதுதான் தோன்றத் தொடங்கியிருந்தன. ஆயினும்கூட, டூரிங்கின் கருத்துக்கள் பரவலான விவாதங்களைத் தூண்டின. இந்த விவாதங்கள் அத்தகைய இயந்திரங்களின் சாத்தியமான உருவாக்கம் மற்றும் அவற்றின் சாத்தியமான நன்மைகள் மற்றும் அபாயங்களை உள்ளடக்கியது.



AGI மனிதகுலத்திற்கு எவ்வாறு உதவ முடியும்?


AGI பல நேர்மறையான சாத்தியங்களை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, சுகாதாரப் பராமரிப்பில், நோய்களைக் கண்டறிவது, சிகிச்சையைத் திட்டமிடுவது மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மருந்துகளை எவ்வாறு வழங்குவது என்பதில் இது புரட்சியை ஏற்படுத்தும். மனித திறன்களுக்கு அப்பாற்பட்ட பெரிய தரவுத்தொகுப்புகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இதைச் செய்யும்.


நிதி மற்றும் வணிகத் துறைகளில், AGI செயல்முறைகளை தானியக்கமாக்கலாம் மற்றும் முடிவெடுப்பதை மேம்படுத்தலாம். இது நிகழ்நேர பகுப்பாய்வுகளை வழங்கலாம் மற்றும் துல்லியமான சந்தை கணிப்புகளை செய்யலாம்.


கல்வியில், AGI ஒவ்வொரு மாணவரின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்ய தகவமைப்பு கற்றல் முறைகளை மாற்ற முடியும். இது தனிப்பயனாக்கப்பட்ட கல்வியை உலகளவில் அணுகக்கூடியதாக மாற்றும்.


OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், ஒரு வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நேர்காணலில் AGI பற்றி விவாதித்தார். AGI உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார மதிப்பை பெரிதும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார். இது உருமாறும் என்று அவர் நம்புகிறார். நம்பமுடியாத சிக்கல் தீர்க்கும் திறன்களையும் படைப்பாற்றலையும் வழங்குகிறது.


செயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence (AGI)) பற்றிய சந்தேகத்தை எது இயக்குகிறது?


செயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence (AGI)) பல  நன்மைகளை அளித்தாலும்,  சில காரணங்களுக்காக கவலைகளையும் எழுப்புகிறது. ஒரு முக்கிய பிரச்சினை AGI அமைப்புகளை உருவாக்க தேவையான பரந்த அளவிலான கணக்கீட்டு சக்தி (computational power). அதிக ஆற்றல் நுகர்வு மற்றும் மின்னணு கழிவுகளை உருவாக்குவதால் இது சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும்.


AGI குறிப்பிடத்தக்க வேலை இழப்புகளுக்கு வழிவகுக்கும் மற்றும் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும். அதிகாரம் AGI-ஐ கட்டுப்படுத்துபவர்களின் கைகளில் குவிக்கப்படலாம். மேலும், AGI இன்னும் கருத்தில் கொள்ளாத புதிய வகையான பாதுகாப்பு அபாயங்களை அறிமுகப்படுத்தக்கூடும். அதன் வளர்ச்சி அதை சரியாக ஒழுங்குபடுத்துவதற்கான அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் திறனை விஞ்சக்கூடும். மனிதர்கள் AGI-ஐ அதிகம் சார்ந்து இருந்தால், அடிப்படை திறன்களையும் இழக்க நேரிடும்.


ஒரு பெரிய பயம் என்னவென்றால், AGI மனிதர்களை விட புத்திசாலித்தனமாக மாறக்கூடும். அதன் செயல்களை கணிக்க முடியாததாகவும், கட்டுப்படுத்துவது கடினமாகவும் இருக்கும். பல அறிவியல் புனைகதை படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி, AGI மனித நலன்களுக்கு எதிராக செயல்படும் காட்சிகளுக்கு இது வழிவகுக்கும்.


முழுமையான செயற்கை நுண்ணறிவை உருவாக்கினால், அது மனிதகுலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று 2014 ஆம் ஆண்டில், ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) பிபிசியிடம், கூறினார்.


AI இன் வழிகாட்டி என்று அழைக்கப்படும் Yoshua Bengio, Geoffrey Hinton மற்றும் Yann LeCun ஆகியோரும் AGI வளர்ச்சியின் ஆபத்துகளை எச்சரித்துள்ளனர். ஹிண்டன் AGI இன் அபாயங்களை அணு ஆயுதங்களுடன் ஒப்பிட்டார்.


இந்த கவலைகளைக் கருத்தில் கொண்டு, பல வல்லுநர்கள் இன்று AGI வளர்ச்சி மனித மதிப்புகள் மற்றும் பாதுகாப்பு தரங்களுடன் ஒத்துப்போவதை உறுதி செய்ய கடுமையான விதிகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.




Original article:

Share:

'பத்திரிகை சுதந்திரம் என்பது எந்தவொரு நாடும் விட்டுக் கொடுக்க முடியாத விலைமதிப்பற்ற உரிமை' எனும் காந்தியின் கூற்று பொருள் நிறைந்தது. -ரிஷிகா சிங்

 மக்கள் ஒன்றுபட்டால் பெரிய சமூக மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை காந்தி புரிந்து கொண்டார். பத்திரிக்கை சுதந்திரம் சரியானதாக இல்லாவிட்டாலும் அதை பாதுகாப்பது முக்கியம்


மே 3 உலக பத்திரிகை சுதந்திர தினம் (World Press Freedom Day). இது பத்திரிகையின் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டாடுகிறது. ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை டிசம்பர் 1993 இல் அறிவித்தது. இது  வின்ட்ஹோக் பிரகடன தினத்தை (Declaration of Windhoek) முன்னிட்டு அறிவிக்கப்பட்டது.


வின்ட்ஹோக்கின் பிரகடனம் 1992 இல் நமீபியாவில் கையெழுத்திடப்பட்டது. இது யுனெஸ்கோ கருத்தரங்கின் போது "சுதந்திரமான மற்றும் பன்மைவாத ஆப்பிரிக்க பத்திரிகையின் ஊக்குவிப்பு" (Promotion of an Independent and Pluralistic African Press) என்ற தலைப்பில் நடந்தது. இந்த பிரகடனம் பத்திரிகையாளர்களின் குறிப்பிடத்தக்க பொறுப்புகள், ஏகபோகமற்ற ஊடகத்துறையின் முக்கியத்துவம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்தியது.

ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் (Dennis Francis) சமீபத்தில் பத்திரிகை சுதந்திரம் குறித்து பேசினார். பத்திரிகை சுதந்திரம் என்ற உரிமையை எந்த நாடும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று மகாத்மா காந்தி கூறியதை அவர் மேற்கோள் காட்டினார். உலக பத்திரிகை சுதந்திர தினத்தன்று உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.


மக்கள் பெரும்பாலும் காந்தியை ஒரு அரசியல்வாதியாக அல்லது வெகுஜனத் தலைவராக விவாதிக்கிறார்கள். இருப்பினும், அதிகம் அறியப்படாத உண்மை என்னவென்றால், அவர் தன்னை ஒரு பத்திரிகையாளராகப் பார்த்தார். காந்தி பல பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களுக்கு எழுத்தாளராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். காந்தி ஏன் இந்த மேற்கோளைச் சொன்னார், இன்று அது ஏன் முக்கியமானது? என்று பார்க்கலாம்.


பத்திரிகையாளர் காந்தி 


குறிப்பிடத்தக்க சமூக மாற்றத்திற்கான கூட்டு செயல்பாட்டின் சக்தியை காந்தி அங்கீகரித்தார். தென்னாப்பிரிக்காவில் தனது ஆரம்ப நாட்களிலிருந்து, இந்திய சமூகத்தை அணிதிரட்ட அவர் பணியாற்றினார்.


காந்தி தனது 33 வயதில் இந்தியன் ஒப்பீனியன் என்ற செய்தித்தாளைத் தொடங்கினார். செய்தித்தாளுக்கு பல இலக்குகள் இருந்தன என்று வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா சுட்டிக்காட்டுகிறார். இது வெள்ளை மக்களுக்கு பிறரின் தேவைகள் மற்றும் செயல்திட்டங்களை உணர்த்துதல். புலம்பெயர் மக்களை ஒன்றிணைத்தல். கூடுதலாக, இந்தியர்களுக்கு தங்கள் சொந்த பலவீனங்களை உணர்த்துதல் ஆகியவை இதில் அடங்கும்.


இந்த உதாரணம் பத்திரிகையின் சில காலமாற்ற கொள்கைகளை விளக்குகிறது. மக்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளவும் பத்திரிகை ஒரு சிறந்த வழியாகும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மக்களின் எண்ணங்கள், செயல்திட்டங்கள் மற்றும் இலக்குகளைக் கைப்பற்றும் ஒரு வரலாற்றுப் பதிவாகவும் இது செயல்படுகிறது.

மக்கள் தங்களுக்கு பொதுவானது மற்றும் கூட்டாக எதிர்கொள்ளும் சிக்கல்களைப் புரிந்துகொள்ளவும் பத்திரிகை உதவுகிறது. இது பல்வேறு விஷயங்களில் புதிய கண்ணோட்டத்தை வழங்க முடியும். அடிப்படையில், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரைப் பற்றியும் அறிக்கையிடுவதன் மூலம் பத்திரிகை பல்வேறு சமூகக் குழுக்களை இணைக்க முடியும்.


பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை காந்தி உணர்ந்தார். இந்த கருத்து அரசியல் அடக்குமுறை மற்றும் பெருநிறுவன நலன்களிலிருந்து பாதுகாப்பை உள்ளடக்கியது.


1912ஆம் ஆண்டு இந்தியன் ஒப்பீனியனின் பதிப்பில், காந்தி விளம்பரம் பற்றிய தனது பார்வையில் மாற்றத்தை வெளிப்படுத்தினார். விளம்பரங்கள் நன்மை பயக்கும் என்று முதலில் நினைத்ததாக அவர் எழுதினார். இருப்பினும், சிந்தனையில், அவர் அவற்றை விரும்பத்தகாததாகக் கண்டார். போட்டியாளர்களை விஞ்சும் நோக்கில், விரைவில் பணக்காரர் ஆவதற்கு ஆர்வமுள்ளவர்களால் விளம்பரங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் நம்பினார்.


காந்தியின் காலத்தில், பெரிய அளவிலான மக்களுடன் தொடர்புகொள்வதற்கு மிகக் குறைவான வழிகளே இருந்தன. இந்த வரம்புகள் இருந்தபோதிலும், காந்தி இந்தியாவில் பல செய்தித்தாள்களைத் தொடங்கினார். இதில் யங் இந்தியா (Young India) , நவஜீவன் (Navajivan) மற்றும் ஹரிஜன் (Harijan) ஆகியவை அடங்கும்.


மேற்கோளுக்கு என்ன பொருள் 


பத்திரிகை சுதந்திரம் சரியானதாக இல்லாமல் இருக்கலாம். பெரும்பாலும், ஆதிக்கம் செலுத்தும் சமூகக் குழுக்கள் ஊடக எழுத்தைக் கட்டுப்படுத்துகின்றன, தங்கள் சொந்த நலன்களையும் யோசனைகளையும் ஊக்குவிக்கின்றன.


ஒரு பத்திரிகையாளராக காந்தியின் பணியில் குறைபாடுகள் இருந்தன. சில மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் இந்தியன் ஒப்பீனியனை அதற்கு நிதியளித்த வணிகர்களின் வர்க்க நலன்களுக்கு சார்பானதாகக் கண்டனர் என்று வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா குறிப்பிடுகிறார். இது வணிகர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளான வரிவிதிப்பு மற்றும் வர்த்தகம் போன்ற பிரச்சினைகளை இந்த பத்திரிகை அடிக்கடி பேசியது.


ஆயினும்கூட, பத்திரிகைகள் மீதான கட்டுப்பாடுகள் இல்லாதது அதன் விமர்சனத்தை அனுமதிக்கும் மற்றும் பாடத் திருத்தத்திற்கு வழி வகுக்கும். எனவே, குறைபாடுகள் இருந்தாலும், சுதந்திரமான பத்திரிகை முக்கியமானது.


இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக இந்தியன் ஒப்பீனியன் வாதிட்டதையும் குஹா குறிப்பிடுகிறார். சில சமயங்களில் ஆப்பிரிக்கர்களின் நலன்களையும் ஆதரித்தது. ஐரோப்பிய விவசாயிகள் ஆப்பிரிக்க விவசாயிகளை வெளியேற்றியது குறித்தும், நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்தும் விவாதித்தது.


பத்திரிகை சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பது, அரசாங்கம், அரசியல்வாதிகள் மற்றும் நீதித்துறை போன்ற நிறுவனங்களையும், ஆணாதிக்கம், சாதிவெறி மற்றும் காலனித்துவம் போன்ற சித்தாந்தங்களை விமர்சிக்கும் வழிகளை கட்டுப்படுத்துகிறது. இந்த பத்திரிகை சுதந்திரம் இல்லாமல், மக்கள் தங்கள் கருத்துக்களை வழங்க வழி இல்லை. ஒரு நாட்டின் பிரச்சினைகளை புறக்கணிப்பது நாட்டின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.


எனவே, பத்திரிகை சுதந்திரம் என்பது எளிதில் வழங்கப்படாத ஒரு சலுகை, ஆனால் அது இல்லாதது ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.




Original article:

Share:

ஏன் நல்ல வானிலைச் சூழலில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்? - ராம்நாத் கோவிந்த்

 காலநிலை மாற்றம் என்பது ஒரு தீவிரமான பிரச்சினையாகும். இதற்கு நாம் கவனமாகச் சிந்தித்து அதைத் தீர்க்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஜனநாயகத்தின் நலனுக்காக இந்த பிரச்சினையை சமாளிக்க சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


தற்போது, இந்தியா அதன் பொதுத் தேர்தல்களை நடத்துகிறது. இது பல காரணங்களுக்காக ஒரு முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள நிலையில், இந்த தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளரை மட்டும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தை மையமாகக் கொண்டு இந்த தேர்தலை ஆதரிக்கிறது. பல நாடுகளில் தற்போது தேர்தல்கள் நடைபெறுகின்றன. இந்தத் தேர்தல்களின் முடிவுகள் உலகளாவிய நிகழ்வுகளை வித்தியாசமாக பாதிக்கும். ஆனால், இந்தியத் தேர்தல்தான் ஜனநாயகத்தை கணிசமாக மேம்படுத்தும்.


காலத்தின் தேவையின் அடிப்படையில், வெளிப்படையாக, தேர்தல்களை முடிந்தவரை தகுதியுடைய அனைத்து மக்களையும் பங்கேற்பதாக மாற்ற வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தேர்தல் பற்றிய விழிப்புணர்வானது, வாக்காளர்களைச் சென்றடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதற்கும், தொலைதூர இடங்களில் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்ததற்கும் பாராட்டப்பட வேண்டும். இதில், சிவில் சமூக அமைப்புகளும், செய்தி ஊடகங்களும் வாக்களிக்கும் உரிமை பற்றியும் மற்றும் கடமை பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சாரங்களை உருவாக்கியுள்ளன.


முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவில் வாக்காளர்கள் மிகுந்த உற்சாகம் காட்டியுள்ளனர். இந்த பங்கேற்பு மிகுந்த திருப்திகரமானதாக உள்ளது. இருப்பினும், வாக்குப்பதிவு பற்றிய புள்ளிவிவரங்கள் குறித்து விவாதிக்கும்போது வெப்பமான வானிலையை பார்வையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஒரு பெரிய சவாலாகக்  குறிப்பிடுகின்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்தனர். குளிர்ந்த காலநிலையில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், ஜனநாயக செயல்பாட்டில் இன்னும் அதிகமான மக்கள் பங்கேற்றிருப்பார்கள்.


இப்போது வானிலையானது ஒரு பெரிய விஷயமாக உள்ளது. 17வது மக்களவையின் பதவிக்காலம் முடிவடையும் ஜூன் 16ம் தேதிக்கு முன்னதாகவே தேர்தல்கள் திட்டமிடப்பட வேண்டும். இதில், தளவாடங்கள் மற்றும் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு வாக்களிப்பு சில வாரங்களுக்குள் நடக்க வேண்டும். எனவே, தேர்தல் திட்டத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை தேர்தலானது நீண்டுள்ளது. இது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மிகவும் வெப்பமான பகுதியாக இருக்கும். தேர்தல் ஆணையம் தேர்தலை திட்டமிடும் போது வானிலையை கருத்தில் கொள்கிறது. ஆனால், அது ஜூன் 16 வரையிலான காலக்கெடுவைப் பின்பற்ற வேண்டும்.


ஏப்ரல் மாதத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் (Indian Meteorological Department (IMD)) பல மாவட்டங்களில் வெப்ப அலைகள் பற்றி எச்சரித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையமானது விரைந்து இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்  (National Disaster Management Authority (NDMA)) மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (Ministry of Health & Family Welfare (MoHFW)) அதிகாரிகளுடன் ஒரு பணிக்குழுவை உருவாக்கினர். ஒவ்வொரு வாக்குப்பதிவுக்கும் ஐந்து நாட்களுக்கு முன்பு வெப்ப அலைகள் மற்றும் ஈரப்பதத்தின் விளைவுகளைச் சரிபார்ப்பதுதான் இந்த பணிக்குழுவின் முக்கிய பணியாக உள்ளது. அவர்கள் பிரச்சினைகள் மற்றும் அவற்றைச் சமாளிப்பதற்கான வழிகளை ஆலோசித்து திட்டமிடுகிறார்கள். வாக்குப்பதிவின் போது வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவுறுத்துகிறது. வாக்குச்சாவடிகளில் நிழற்குடை, குடிநீர், மின்விசிறி உள்ளிட்ட வசதிகளை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.


இந்த நடவடிக்கைகள் வாக்காளர்களுக்கு சற்று நம்பிக்கையை அளிதுள்ளன. ஆனால், அவை தேர்தலின் ஒரு பகுதியை மட்டுமே கையாள்கின்றன. வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் வெப்பத்தையும் தூசியையும் தாங்கிக் கொண்டு வெளியில் பிரச்சாரம் செய்கிறார்கள். பொதுக்கூட்டங்களில் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் மயங்கி விழுவதைப் பற்றி கேள்விப்பட்டது திடுக்கிடும் செய்தியானாலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த வெளிப்படையான ‘வாக்காளர் ஆர்வமின்மை’ பிரச்சாரத்தின் போது தொடங்கலாம். வாக்குச் சாவடி அமைப்புகள் பாராட்டுக்குரியவை என்றாலும், கிராமப்புற வாக்காளர்கள் கொளுத்தும் வெயிலில் நீண்ட தூரம் பயணிக்கத் தயக்கம் காட்டலாம்.


இந்தியாவில் கோடைக்காலங்களில் வடக்கு மற்றும் தெற்கில் பெரும்பாலும் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை காணப்படுகிறது. சில இடங்களில், இது 45 டிகிரி செல்சியஸைத் தாண்டக்கூடும். மே மற்றும் ஜூன் மாதங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் போது இந்த தீவிர வானிலையானது பொதுவானதாக பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் புவி வெப்பமடைதல் காரணமாக, இந்த நிலைமைகள் எதிர்காலத்தில் இன்னும் மோசமடையக்கூடும்.


எனவே, வாக்காளர்கள், பிரச்சாரகர்கள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோரை கருத்தில் கொண்டு, தேர்தல் நேரம் குறித்து விவாதிக்க வேண்டும். இது ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.


வானிலையைக் கருத்தில் கொண்டு தேர்தலுக்கான அட்டவணையை பரிந்துரைக்க வேண்டிய நேரம் இது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நான் (இராம்நாத் கோவிந்த்) தலைமை வகிக்கும் குழுவிற்கு வழங்கப்பட்ட பணிகளில் இந்தத் தலைப்பு ஒரு பகுதியாக இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தேர்தல் கால அட்டவணையைப் பற்றி என்னிடம் ஒரு ஆலோசனை உள்ளது, ஆனால் அது கமிட்டி பரிந்துரைத்ததில் இருந்து வேறுபட்டது. நான் எனக்காகவே பேசுகிறேன், கமிட்டியின் ஒரு பகுதியாக அல்ல. காலநிலை மாற்றம் என்பது அனைவரின் கவனம் தேவைப்படும் ஒரு தீவிரமான பிரச்சினை என்று நான் நம்புகிறேன். அதைத் தீர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், குறிப்பாக ஜனநாயகத்திற்காக. வானிலை நன்றாக இருக்கும் போது அதிக மக்கள் பங்கேற்கும் வகையில் தேர்தலை நடத்துவதை இலக்காகக் கொள்ள வேண்டும், இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஜனநாயகத்திற்கு உதவும்.


கட்டுரையாளர் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார்.




Original article:

Share: