சீன குணாதிசயங்களுடன் கூடிய அதிகாரப் பரவலாக்கத்தின் அபாயங்கள் - பிரணயா கத்ஸ்தானே, மனோஜ் கேவல்ரமணி

 ஒரு காலத்தில் சீனாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு காரணமாக இருந்த அதிகாரப் பரவலாக்கம் தற்போது சிக்கலாக மாறியுள்ளதை என்பதை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும். 


இந்த ஆண்டு சுதந்திரதின உரையில், முதலீட்டாளர்களை ஈர்க்க மாநிலங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட வேண்டும் என்று பிரதமர் ஊக்குவித்தார். இதற்கு நேர்மாறாக, சீனாவில் பிராந்தியங்களுக்கு இடையேயான தீவிர பொருளாதாரப் போட்டி சிக்கலாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் சீனாவின் பொருளாதார வெற்றிக்காகப் பாராட்டப்பட்ட அதிகாரப் பரவலாக்கம் ஏன் இப்போது சிக்கல்களை ஏற்படுத்துகிறது

 

ஒரு காலத்தில் சீனாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு காரணமாக இருந்த அதிகாரப் பரவலாக்கம் இப்போது எதிர் விளைவை ஏற்படுத்துவதாக மாறியுள்ளது. சீனாவில், உள்ளூர் அரசாங்கங்கள் அரசாங்க செலவினங்களில் 51%-ஐ கையாளுகின்றன. 


இது இந்தியாவில் நகர அளவிலான அரசாங்கங்களால் நிர்வகிக்கப்படும் 3%-க்கும் குறைவான பங்கைக் காட்டிலும் மிகப் பெரிய பங்காகும். சீனாவில் உள்ள உள்ளூர் அரசாங்கங்கள் வேலையின்மை காப்பீடு மற்றும் ஓய்வூதியம் போன்ற பகுதிகளையும் நிர்வகிக்கின்றன. இவை பொதுவாக இந்தியாவில் உள்ள தேசிய அரசாங்கத்தால் கையாளப்படுகின்றன.


சீனாவின் தீவிர அதிகாரப்பரவல் என்பது அது ஒரு கூட்டாட்சி நாடு என்று அர்த்தமல்ல. ஒரு கூட்டாட்சி அமைப்பில், உயர் மட்ட அரசாங்கங்கள் கீழ் மட்ட அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பறிக்க முடியாது. ஏனெனில், இந்த அதிகாரங்கள் அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுகின்றன.  


இருப்பினும், சீனா தனது கட்சி மற்றும் அரசு அமைப்பில் அத்தகைய பாதுகாப்புகளைக் கொண்டிருக்கவில்லை. சீனாவில் உள்ள உள்ளூர் அரசாங்கங்கள் டெங் சியோபிங்கின் தெற்கு சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து பெருமளவில் செலவழிக்கத் தொடங்கிய பிறகு, 1994-ன் வரி-பகிர்வு சீர்திருத்தத்தின் மூலம் நிதி திரட்டும் திறனை தேசிய அரசாங்கம் விரைவாகக் கட்டுப்படுத்தியது. 


அதிக திறன் ஒரு கட்டமைப்பு (Overcapacity is structural) பிரச்சினை

 

உள்ளாட்சி அமைப்புகள் தீர்வு காண வேண்டும். உள்ளூர் தலைவர்களின் அரசியல் வெற்றிக்கு பொருளாதார வளர்ச்சி முக்கியமானது என்பதால், அவர்கள் பொதுச் சேவைகளைவிட தொழில்துறை கட்டுமானத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினர். அவர்கள் தொழில்துறை நிலத்தை குடியிருப்பு நிலத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த விலையில் வழங்கினர். பிராந்திய பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது மற்றும் எதிர்கால உள்ளூர் வரி வருவாயை உருவாக்குவது இதன் குறிக்கோளாக இருந்தது. நிறுவனங்கள் குறைந்த நிலச் செலவைப் பயன்படுத்தி, பொருட்களை மலிவாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தன. 


இந்த முதலீட்டு தலைமையிலான மாதிரி பெரும்பாலும் அதிக திறனுக்கு வழிவகுக்கிறது. இது இரண்டு முடுக்கிகள் மற்றும் பிரேக்குகள் இல்லாத காரைப் போன்றது. இந்த அணுகுமுறை ஹூ ஜிண்டாவோ காலகட்டத்தில் நன்கு செயல்பட்டது. மத்திய அரசு பரந்த இலக்குகளையும் நிர்ணயித்தது, அதே நேரத்தில் உள்ளூர் அரசாங்கங்கள் பரிசோதனை செய்து போட்டியிட்டன. 

இந்த முறை குறிப்பிடத்தக்க செல்வத்தை உருவாக்கியது. ஆனால் கட்டமைப்பு மிகைத்திறன், வீணான முதலீடுகள் மற்றும் வணிகங்கள் பணத்தை இழப்பது போன்ற சிக்கல்களையும் ஏற்படுத்தியது.

 

இரண்டு முக்கிய காரணங்களுக்காக ஒட்டுமொத்த போக்கு நேர்மறையானது:


முதலாவதாக, மத்திய அரசாங்கம் உள்ளூர் அரசாங்கங்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியது. வளர்ச்சி அல்லது சீர்திருத்தத்தை அடைய பல்வேறு வழிகளில் பரிசோதனை செய்ய அனுமதிக்கிறது. உதாரணமாக, குவாங்டாங் பொருளாதார திறப்பு மைய இலக்கை அடைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை (special economic zones) உருவாக்கியது. மற்ற பிராந்தியங்கள் வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டன. குறிப்பிட்ட தீர்வைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக, வீட்டுவசதிகளில் உள்ளூர் கண்டுபிடிப்புகளையும் மத்திய அரசு அனுமதித்தது. 


இரண்டாவதாக, சாதகமான புவிசார் அரசியல் சூழல் முக்கியமானது. சீனா உற்பத்தி வெளிநாட்டு சந்தைகள் அதிகமாக வாங்க தயாராக இருந்தன. உதாரணமாக, சீனாவின் எஃகுத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது.  2000-ஆம் ஆண்டு தொடங்கி, சீனா ஒரு நிகர எஃகு இறக்குமதியாளர் என்ற நிலையிலிருந்து ஆறு ஆண்டுகளுக்குள் மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக மாறியது. 2010-களின் தொடக்கத்தில், அதிகப்படியான எஃகு உற்பத்தியை நிவர்த்தி செய்வது ஒரு முக்கிய எஃகு ஏற்றுமதியாளராக மாறியது. பல சீன நிறுவனங்கள் தோல்வியடைந்தாலும், சில வெற்றிபெற்று தொழிலாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் பெரும் நன்மைகளை அளித்தன.





கார் ஒரு சரிவை எதிர்கொள்கிறது 


  ஜி ஜின்பிங் ஆட்சிக்கு வந்த நேரத்தில் இந்த மாதிரி சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கியது. 2014-ஆம் ஆண்டில், தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் (National Development and Reform Commission (NDRC)) ஆராய்ச்சியாளர்கள் 2009 முதல் 2013 வரையிலான அனைத்து முதலீடுகளிலும் பாதி "பயனற்றது" என்று மதிப்பிட்டனர். இந்த கழிவு கிட்டத்தட்ட $6.9 டிரில்லியன் ஆகும்.  இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, மத்திய கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதே ஜி ஜின்பிங்கின் தீர்வாக இருந்தது. விரும்பத்தக்க பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் மூலதனத்தை வழிநடத்த அமைப்புகளை அல்லது "போக்குவரத்து விளக்குகளை" அமைப்பதை அவர் நோக்கமாகக் கொண்டிருந்தார். 


அப்போதிருந்து, மத்திய உத்தரவுகள் மிகவும் குறிப்பிட்டவையாகிவிட்டன. தன்னிறைவுக்கான குறிப்பிட்ட தயாரிப்பு வரிகளில் கவனம் செலுத்த வழிவகுத்தது. எடுத்துக்காட்டாக, குறைக்கடத்திகளுக்கான (semiconductor) முழு விநியோகச் சங்கிலியையும் உள்ளூர்மயமாக்குவதற்கான முயற்சிகள் சந்தை தேவை அல்லது சீனத் தொழில்துறையுடன் ஒத்துப்போவதில்லை. 


2014-ல் “பெரும் நிதி” தன்னிறைவு குறைமின்கடத்தி துறையை உருவாக்கும் குறிக்கோளுடன் தொடங்கியது. இதன் அடிப்படையில், பல உள்ளூர் அரசாங்கங்கள் சிப் தயாரிக்கும் நிறுவனங்களில் பெருமளவில் முதலீடு செய்தன. இருப்பினும், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, சீனா இன்னும் மேம்பட்ட சிப் உற்பத்தியில் தேர்ச்சி பெறவில்லை. இருந்தபோதிலும், பல நிறுவனங்கள் உள்ளூர் அரசாங்கத்திடம் இருந்து நிதியுதவியை தொடர்ந்து பெறுகின்றன.


தி எகனாமிஸ்ட் கருத்துப்படி, ஜூன் 2024-ல், அனைத்து தொழில்துறை நிறுவனங்களிலும் 30% பணத்தை இழந்தன. இது 1990-களின் கடைசியில் ஆசிய நிதிய நெருக்கடியின் போது இருந்ததைவிட மோசமாக உள்ளது.


மற்றொரு காரணம், மற்ற அரசாங்கங்கள் இப்போது சீனாவின் அதிகப்படியான திறனை ஒரு தேசிய பாதுகாப்பு அபாயமாக கருதுகின்றன. மின்சார வாகனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் போன்ற சீன தொழில்நுட்ப தயாரிப்புகள் மீதான புவிசார் அரசியல் சர்ச்சைகளில் இருந்து இது தெளிவாகிறது. கூடுதலாக, சீனாவின் மோசமான சர்வதேச நடத்தை சீன தயாரிப்புகள் மற்றும் முதலீடுகள் குறித்த எதிர்மறையான பார்வைகளை மோசமாக்கியுள்ளது. 


பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சி (Belt and Road Initiative (BRI)) அணுகுமுறையில் உள்ள குறைபாடுகள்:


வளர்ந்து வரும் உள்நாட்டு தேவைக்கு ஏற்ப மேற்கத்திய சந்தைகளை மாற்றுவதையும், பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சி மூலம் புதிய சர்வதேச சந்தைகளைக் கண்டறிவதையும் ஜி ஜின்பி நோக்கமாகக் கொண்டார். இருப்பினும், அதிகரித்து வரும் உள்நாட்டுத் தேவை வெற்றிகரமாக இல்லை. ஏனெனில் இது வழங்கல் பக்க தீர்வுகளில் கவனம் செலுத்துகிறது. பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சியும் தோல்வியடைந்துள்ளது, ஏனெனில், பங்கேற்கும் நாடுகள் குறிப்பிடத்தக்க தேவையை உருவாக்கும் அளவுக்கு பொருளாதார ரீதியாக வலுவாக இல்லை. 


சுருக்கமாக, அதிகாரப் பரவலாக்கத்திற்கான சீனாவின் அணுகுமுறை அதிக திறன் மற்றும் ஏற்றுமதியில் கவனம் செலுத்த வழிவகுக்கிறது. சீனாவின் ஆக்ரோஷமான சர்வதேச நிலைப்பாடு மற்றும் தன்னம்பிக்கையில் கவனம் செலுத்துவதால் இந்த மாதிரி அதன் வரம்புகளை எட்டியுள்ளது. சில துறைகளுக்கான ஏற்றுமதியில் குறுகியகால அதிகரிப்பு இருக்கலாம் என்றாலும், முக்கிய நாடுகளுடனான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மாற்றாத வரை சீனா பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்.


பிரனய் கோட்டஸ்தானே மற்றும் மனோஜ் கேவல்ரமணி ஆகியோர் தக்ஷஷிலா இன்ஸ்டிடியூஷனில் ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர்.




Original article:

Share:

தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பைப் பயன்படுத்துதல் -எலிசபெத் ஃபௌரே

 தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது. இது கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முன்முயற்சிகளில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. 


ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 12-ஆம் தேதி தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான ஐக்கிய நாடுகளின் தினமாக (South-South Cooperation (SSC)) கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய வடக்கு-தெற்கு மாதிரியைத் தாண்டி, நாடுகளுக்கிடையேயான வளர்ச்சி கூட்டாண்மைக்கான புதிய கட்டமைப்பை முன்னிலைப்படுத்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த நாளை உருவாக்கியது. 


1955-ஆம் ஆண்டு பாண்டுங்கில் நடைபெற்ற ஆப்பிரிக்க - ஆசிய மாநாட்டில் வளரும் நாடுகளிடையே ஒத்துழைப்பு என்ற கருத்து தொடங்கியது. இந்த மாநாடு 1961-ல் அணிசேரா இயக்கத்தை (Non-Aligned Movement) உருவாக்க வழிவகுத்தது. இதன் விளைவாக 1964-ல் குழு 77 (G-77) உருவாக்கப்பட்டது. G-77 முக்கியமாக 1960-கள் மற்றும் 1970-களில் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை ஊக்குவித்தது. 


காலநிலை மாற்றம், மோதல் மற்றும் அதிகரித்து வரும் உணவுப் பாதுகாப்பின்மை போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் தற்போதைய முக்கியத்துவத்தை இந்த கட்டுரை வலியுறுத்துகிறது. குறிப்பாக காலநிலை மாற்றம், மோதல்கள் மற்றும் உணவு பாதுகாப்பின்மை காலங்களில். இது உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் தீர்வுகளில் இந்தியாவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. உள்ளடக்கிய, சூழல் சார்ந்த, நிபந்தனையற்ற மற்றும் உள்நாட்டில் நிர்வகிக்கப்படும் அணுகுமுறைகளில் கவனம் செலுத்துகிறது.

 

உலக உணவுத் திட்டம் (United Nations World Food Programme (WFP)) தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு (South-South and Triangular Cooperation (SSTC)) மூலம் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட உதவுகிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதை இந்த அணுகுமுறை குறிக்கிறது. 


ஒரு கூட்டு வளர்ச்சி ஒப்பந்தம் 


கடந்த பத்தாண்டுகளில், உலக அளவில் தெற்கில் உள்ள நாடுகள், 2030 இலக்கை அடைய புதிய தளங்கள் மற்றும் நிறுவனங்களை ஆதரித்து, உலகளாவிய ஆளுகை மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு (South-South Cooperation (SSC)) சர்வதேச ஒத்துழைப்பின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மறுவடிவமைக்க உதவுகிறது. 


இந்த அணுகுமுறை வளரும் நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது, பகிரப்பட்ட வளர்ச்சி இலக்குகளை அடைய திறன்கள் மற்றும் வளங்களைப் பகிர்வது ஆகியவற்றை உள்ளடக்கியது. வளர்ந்த நாடுகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளுடனும் அவை கூட்டு சேர்ந்துள்ளன. தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு விவசாயம், சுகாதாரம், கல்வி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண  ஒத்துழைப்பின் செயல்பாடுகள்  உலக அளவில் வளர்ச்சிக்கான நம்பிக்கையை அதிகரிக்க செய்கிறது. 


தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு வலுவானது. ஏனெனில் அது பரஸ்பர நன்மை, ஒவ்வொரு நாட்டின் தேசிய இறையாண்மைக்கு மரியாதை மற்றும் நிபந்தனையற்ற தன்மை ஆகியவற்றின் அடித்தளமாகும். இந்த அணுகுமுறை நாடுகள் அதிகாரம் பெற்றதாக உணரவும், அதிக தன்னம்பிக்கையுடன் இருக்கவும், ஒருவரிடமிருந்து ஒருவர் படம் கற்றுக்கொள்ளவும், வலுவான மற்றும் நிலையான சமூகங்களுக்கு வழிவகுக்கும்.

 

உலக உணவுத் திட்டம் (United Nations World Food Programme (WFP))  மற்றும் தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு (South-South and Triangular Cooperation (SSTC)):


 2019 முதல், உலக உணவுத் திட்டம் பல நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தியுள்ளது. தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தால் நிர்வகிக்கப்படும் தெற்கு-தெற்கு அறக்கட்டளை நிதியும் இதில் அடங்கும். இந்தியா-ஐ.நா மேம்பாட்டு கூட்டாண்மை நிதி மற்றும் வறுமை மற்றும் பட்டினி ஒழிப்புக்கான இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா வறுமை மற்றும் பசி ஒழிப்பு (India, Brazil and South Africa Facility for Poverty and Hunger Alleviation (IBSA Fund)) ஆகியவை இதில் அடங்கும். உலக உணவுத் திட்டம் கீழ் நிர்வகிக்கப்படும் தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு அறக்கட்டளை நிதி, மொத்தம் $9.75 மில்லியன் ஆகும்.

நாடுகளிடையே ஒத்துழைப்பில் ஆர்வம் அதிகரித்து வருவதால், WFP SSTC மூலம் அரசாங்கங்களுக்கு தனது ஆதரவை அதிகரித்துள்ளது. 2023-ஆம் ஆண்டில், 60 WFP வருடாந்திர நாடுகளின் 85 அறிக்கைகள் தெற்கு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்தன. இது 2021 மற்றும் 2022 உடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இது தேசிய திறன்களை வலுப்படுத்துவதில் SSTC-ன் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. 


  இந்த ஈடுபாடு வளரும் நாடுகள் அறிவு, அனுபவங்கள், திறன்கள், வளங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவை நேரடியாக பரிமாறிக் கொள்வதை உள்ளடக்கியது. இந்த செயல்முறை பெரும்பாலும் ஒரு நன்கொடையாளர் அல்லது உலக உணவுத் திட்டம் போன்ற ஒரு அமைப்பால் ஆதரிக்கப்படுகிறது.  இந்த முக்கோண ஒத்துழைப்பில் நிதி, பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவி போன்ற பல்வேறு வகையான ஆதரவு அடங்கும். 


ஆதரவின் குறிப்பிட்ட பகுதிகள்: சமூக பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வலைகள், ஊட்டச்சத்து மற்றும் உணவு மேம்பாடு, சிறு விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் அவர்களை சந்தைகளுடன் இணைத்தல், கிராமப்புற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு, அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை நிர்வகித்தல், பேரிடர் அபாயக் குறைப்பு,காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப அவசரநிலைக்குத் தயாராகுதல் மற்றும் பதிலளிப்பது. இந்த முயற்சிகள் விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 


80-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் கள இருப்பைப் பயன்படுத்தி, உலக உணவுத் திட்டத்தின் மூலம் 70-க்கும் மேற்பட்ட தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. புரவலன் அரசாங்கங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த முன்முயற்சிகள், உலகெங்கிலும் உள்ள 69 நாடுகளில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவியுள்ளன.

 



இந்தியாவின் தலைமைத்துவ பங்கு

 

தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பில் ((South-South and Triangular Cooperation (SSTC)) இந்தியா பல குறிப்பிடத்தக்க முயற்சிகளுடன் முன்னணியில் உள்ளது. பான்-ஆப்பிரிக்கா மின்னணு நெட்வொர்க் திட்டம் (Pan-African e-Network Project), இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா நிதியம் மற்றும் சர்வதேச சூரியசக்தி கூட்டணி (International Solar Alliance (ISA)) ஆகியவை இதில் அடங்கும். 


இந்த முன்முயற்சிகள் தனது நிபுணத்துவம் மற்றும் வளங்களை மற்ற வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டைக் காட்டுகின்றன. அவை கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன. 


இந்தியா 1947 முதல் தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பில் ஈடுபட்டு, சுமார் $107 பில்லியன் முதலீடு செய்கிறது. 


வலுவான கொள்கைகள், திட்டங்களுடன் உணவு மூலம் இந்தியா குறிப்பிடத்தக்க உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்பு வலைகளில் ஒன்றாகும், இது ஒரு பில்லியன் மக்களை உள்ளடக்கியது மற்றும் உணவு வலுவூட்டலுக்கான தேசிய திட்டத்தையும் (national program for food fortification) கொண்டுள்ளது. 


இந்தியா பொது உணவு விநியோகத்திற்கான விநியோகச் சங்கிலியை மேம்படுத்தியுள்ளது மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துகிறது. இந்த வெற்றிகள் மற்ற வளரும் நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் விநியோக சங்கிலி அமைப்புகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது.


2022-ஆம் ஆண்டில், உலக உணவுத் திட்டம் நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் உணவுப் பாதுகாப்பு குறித்த பரிமாற்றத்தை எளிதாக்கியது. இது நேபாள அதிகாரிகளுக்கு இந்தியாவின் உணவு உரிமைகள் மற்றும் பாதுகாப்புச் சட்டங்களைப் பற்றி அறிய அனுமதித்தது. இதன் விளைவாக, நேபாளம் தனது உணவு முறைகளை மேம்படுத்துவதற்கான ஒரு மாதிரியாக உணவுக்கான உரிமைகள் (Nepal adopted India's Rights to Food (RtF)) Act) சட்டத்தை ஏற்றுக்கொண்டது. நேபாளத்தின்  உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துகிறது மற்றும் பெரும்பாலான மாகாண அரசாங்கங்கள் 2023-24 நிதியாண்டிற்கான தங்கள் திட்டங்களில் உணவு அமைப்புகள் நடவடிக்கைகளை சேர்க்க வழிவகுத்தது. 


தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பை (South-South and Triangular Cooperation (SSTC)) வலுப்படுத்த, பல அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்: 


 1. புதுமையான நிதி வழிமுறைகள் மற்றும் பல்வகைப்பட்ட நிதி ஆதாரங்கள். 


2. பங்கேற்கும் நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றுதல்


3. சிறந்த நடைமுறைகள், அனுபவங்கள் மற்றும் புதுமைகளைப் பகிர்தல். 


4. சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார அம்சங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்தல். 


உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் இப்போது உலகளாவிய நிர்வாகம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது சர்வதேச ஒத்துழைப்பின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு (South-South and Triangular Cooperation (SSTC)) மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். புதிய தளங்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிப்பதில் அவர்களின் பங்கு 2030 கொள்கை இலக்குகளை அடைவதற்கான சரியான பாதையில் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.


எலிசபெத் ஃபௌரே, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் (United Nations World Food Programme) பிரதிநிதி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய இயக்குநர்.



Original article:

Share:

பொதுக் கணக்குகள்: புதிதாக அமைக்கப்பட்ட பொதுக் கணக்குக் குழு குறித்து…

 அரசாங்கத்தை கண்காணிக்கும் ஒரு கருவியாக பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee) தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.


கடந்த பத்தாண்டுகளாக, நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தது. நாடாளுமன்றத்தில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்த்தது. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக  தற்போது நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் தற்போது பலம் பெற்றுள்ளன.  


நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றம் எவ்வாறு மேற்பார்வை செய்கிறது என்பதை வலுப்படுத்த புதிய சூழ்நிலை வாய்ப்பு அளிக்கிறது. புதிதாக அமைக்கப்பட்ட பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee (PAC)) தனது பணியை தொடங்கவுள்ளது. செப்டம்பர் 2 அன்று, பொதுக் கணக்குக் குழு அதன் பதவிக்காலத்தில் விவாதத்திற்காக 161 தலைப்புகளைத் தேர்ந்தெடுத்ததாக அறிவித்தது. இந்த தலைப்புகள் பெரும்பாலானவை தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (Comptroller and Auditor General of India (CAG)) அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. 


குழு சொந்தமாக ஐந்து தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளது


 1. வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் சீர்திருத்தங்கள். 


2. ஒன்றிய அரசின் நலத்திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல். 


3. ஆற்றல் துறையில் மாற்றத்திற்கான கொள்கை நடவடிக்கைகள். 


4. சட்டங்களால் அமைக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளின் செயல்திறனை மதிப்பாய்வு செய்தல்.


5. பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள் மீதான கட்டணங்கள், மற்றும் பயன்பாட்டாளர் கட்டணங்களை விதித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல். 


பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee (PAC)) காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக் கணக்குக் குழு, அரசின் செலவு விவரங்களைத் தாண்டி, எவ்வளவு பணம் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது என்பதையும் சரிபார்க்கலாம். பொதுக் கணக்குக் குழு தேர்ந்தெடுக்கும் தலைப்புகள் அரசியல் கோணங்களைக் கொண்டிருந்தாலும், அவை பொதுமக்களின் நலனுக்கு சேவை செய்கின்றன.


நாட்டின் நிதியை நாடாளுமன்றம் கட்டுப்படுத்துகிறது என்று அரசியலமைப்பு கூறுகிறது. நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் மூலம் மட்டுமே வரிவிதிக்க முடியும். அனைத்து அரசாங்க செலவினங்களுக்கும் ஒதுக்கீட்டு மசோதாக்கள் மூலம் பாராளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India (CAG)) அரசுத் துறைகளின் நிதிச் செயல்பாடுகளை சரிபார்த்து, தணிக்கை செய்யும் அரசியலமைப்பு அலுவலகமாகும். 


தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகள் ஒரு முக்கியமான நாடாளுமன்றக் குழுவான பொதுக் கணக்குக் குழுவுக்கு செல்கிறது. சமீபகாலமாக, அரசாங்கத்தின் முடிவுகள் சில வணிகங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், சலுகைசார் முதலாளித்துவத்திற்கு (crony capitalism) ஆதரவாக இருப்பதாகவும்  குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளன. 


இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரிய (Securities and Exchange Board of India (SEBI)) தலைவர் மாதபி புச் மற்றும் அதானி குழுமம் மீதான கடுமையான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் மறுத்துவிட்டது. அதானி குழுமம் இந்தியாவில் ஏழு விமான நிலையங்களை கட்டுப்படுத்துகிறது. 


பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளும் குறிப்பிடத்தக்க கேள்விகளை எதிர்கொள்கின்றன. இந்த விவகாரங்கள் குறித்து பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்துவதை பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே எதிர்த்துள்ளது. பொதுக் கணக்குக் குழுவில் 22 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 13 பேர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள், 9 பேர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள். இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் உள்ளனர்.


ஆளும் கூட்டணியின் பெரும்பான்மையால் குழுவின் வலுவான நிலைப்பாட்டை பலவீனப்படுத்தப்படலாம். பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee (PAC)) மற்றும் துறை தொடர்பான நிலைக்குழுக்கள், அவற்றில் பல குழுக்கள் இன்னும் அமைக்கப்படவில்லை, அந்த குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும். அனைத்து குழுக்களும் நாடாளுமன்ற அதிகாரத்தின் கருவிகளாக செயல்பட வேண்டும் மற்றும் நிர்வாகம் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.



Original article:

Share:

வேலை உருவாக்கும் உரிமைகோரல்களுக்கான வரம்புகள் - கிங்சுக் சர்க்கார்

 பெரும்பாலான வேலைவாய்ப்புகள் விவசாயம் மற்றும் முறைசாரா துறையில் (informal sector)' சுய வேலைவாய்ப்பு' உருவாக்கப்பட்டுள்ளன. 


சமீபத்தில், 2021-ஆம் ஆண்டு மற்றும் 2024-ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியா 7.8 கோடி வேலைகளை உருவாக்கியதாகவும், ஆண்டுக்கு சராசரியாக 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாகவும் ஒன்றிய அரசு கூறியது. இவை KLEMS (K-capital (மூலதனம்), L-labor(உழைப்பு) , E-energy (ஆற்றல்), M-materials(பொருட்கள்), and S-purchased services(வாங்கிய சேவைகள்)) தரவுத்தளம், பணியாளர் எதிர்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation (EPFO)) மற்றும் காலமுறை தொழிலாளர் நலன் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) ஆகியவற்றின்தரவுத்தள  தரவுகளால் பெறப்பட்டது. 


கடந்த நான்கு ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதங்கள் 2021-ஆம் ஆண்டு 5.1 சதவிகிதம், 2022-ஆம் ஆண்டு 3.3 சதவிகிதம், 2023-ஆம் ஆண்டு 3.2 சதவிகிதம் மற்றும் 2024-ஆம் ஆண்டு 6.0 சதவிகிதம். இருப்பினும், உருவாக்கப்படும் வேலைகளின் தரம் விரும்பத்தக்கதாக இருக்கும் என்பதை காட்டுகிறது.


முறைசாரா துறையில் விவசாயம் மற்றும் சுய வேலைவாய்ப்பில் பெரும்பாலான வேலை வளர்ச்சி ஏற்பட்டதாக காலமுறை தொழிலாளர் நலன் கணக்கெடுப்பு (PLFS) தரவு காட்டுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% க்கும் குறைவான பங்களிப்பை வழங்கும் விவசாயம், சுமார் 45% தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறது. 


2009-ஆம் ஆண்டு முதல் 2012 -ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் விவசாயத் தொழிலாளர்களின் வீழ்ச்சி ஏற்பட்டது. கொரோனாவுக்குப் பிறகு, பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் விவசாயத்திற்குத் திரும்பினர். இது வேலையின்மைக்கு வழிவகுத்தது. நகர்ப்புறங்களுக்கு குடியேறுபவர்கள் இப்போது குறைந்த வருமானம் கொண்ட நடவடிக்கைகளை நம்பியுள்ளனர். இது மோசமான வேலை தரத்தை எடுத்துக்காட்டுகிறது. 


இந்தியாவின் தொழிலாளர் சக்தியில் பெரும்பான்மையானவர்கள் (57%) சுயதொழில் செய்பவர்கள். இது 2020-21-ஆம் ஆண்டு முதல் அதிகரித்துள்ளது. ஆண் சுயதொழில் செய்பவர்கள் மாதத்திற்கு சராசரியாக ₹15,763  வருவாய் ஈட்டுகிறார்கள். பெண்கள் ₹5,637 வருவாய் ஈட்டுகிறார்கள்.  கூடுதலாக, சுயதொழில் செய்யும் பெண்களில் 37% ஊதியம் பெறாத குடும்ப உழைப்பில் வேலை செய்கிறார்கள். 


ஜூலை 2022-ஆம் ஆண்டு மற்றும் ஜூன் 2023-ஆம் ஆண்டுக்கு இடையில், சுயதொழில் செய்யும் தொழிலாளர்களின் சராசரி வருவாய் உண்மையான அடிப்படையில் 3% குறைந்துள்ளது. பெரும்பாலும் குறைந்த ஊதியம் பெறும் பெண் தொழிலாளர்களின் பங்கு அதிகரித்து வருகிறது. 


தற்காலிக தொழிலாளர்கள் தொழிலாளர் சக்தியில் 23% உள்ளனர். இவர்கள் ஒப்பந்தங்கள் இல்லாமல் தினமும் வேலை செய்கிறார்கள். ஜூன் 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆண் சாதாரண தொழிலாளர்கள் தினமும் ₹432 சம்பாதிக்கிறார்கள். பெண் சாதாரண தொழிலாளர்கள் ₹291 சம்பாதிக்கிறார்கள். ஜூலை 2022-ஆம் ஆண்டு முதல் ஜூன் 2023-ஆம் ஆண்டு வரை, அவர்களின் வருவாய் உண்மையான அடிப்படையில் 3% குறைந்துள்ளது. 


தற்காலிக தொழிலாளர்களுக்கு வேலைப் பாதுகாப்பு இல்லை.  பெரும்பாலான தொழிலாளர் சட்டங்களின் கீழ் வருவதில்லை மற்றும் நிறுவன சமூக பாதுகாப்புக்கான அணுகல் இல்லை. 


நிரந்தர தொழிலாளர்கள் தொழிலாளர் சக்தியில் வெறும் 21% மட்டுமே. இவர்களில், 62% பேருக்கு எழுத்துப்பூர்வ வேலை ஒப்பந்தம் இல்லை (அவர்கள் EPF மற்றும் ESI இன் கீழ் இருந்தாலும்), 51% பேர் ஊதிய விடுப்பு பெறவில்லை. 60% பேருக்கு சமூக பாதுகாப்பு இல்லை. ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தியில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பங்கு 2002-03-ஆம் ஆண்டில் 23% ஆக இருந்து 2021-22-ஆம் ஆண்டில் 40% ஆக அதிகரித்துள்ளது என்பதை 2021-22-ஆம் ஆண்டின் தொழில்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Industries (ASI)) தரவு காட்டுகிறது. 


வழக்கமான தொழிலாளர்களின் இந்தியாவின் பங்கு (23%) மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது விதிவிலக்காக குறைவாக உள்ளது. பெண்களின் பங்களிப்பு 2018-19-ஆம் ஆண்டில் 25% ஆக இருந்து.  2022-23-ஆம் ஆண்டில் 37% ஆக அதிகரித்தாலும், இந்த வளர்ச்சியின் பெரும்பகுதி விவசாயம் மற்றும் ஊதியம் பெறாத சுயவேலைவாய்ப்பில் ஏற்பட்டது. 


பெண் தொழிலாளர்களில் 15% மட்டுமே வழக்கமான சம்பள வேலைகளை வைத்திருக்கிறார்கள். மேலும், குறிப்பிடத்தக்க பாலின ஊதிய இடைவெளி உள்ளது, குறிப்பாக சுயதொழில் செய்பவர்களிடையே. 


கூடுதலாக, கடந்த பத்தாண்டுகளில் நடைமேடை தொழிலாளர்களின்  பங்கு அதிகரித்துள்ளது. இது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடைமேடை தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு குறியீடு 2020-ஆம் ஆண்டின் கீழ் முறைசாரா தொழிலாளர்களாகக் கருதப்படுகிறார்கள் மற்றும் ஆகஸ்ட் 2021-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இ-ஷ்ரம் போர்ட்டலில் (e-shram portal ) சுயமாக பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். இருப்பினும், கிக் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பு முறைகள் தெளிவற்றதாகவே உள்ளன. மேலும், தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களின் கீழ் நடைமேடை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. 


பணியாளர் எதிர்கால வைப்பு நிதி அமைப்பு  (EPFO)  சேர்க்கையின் நிகர அதிகரிப்புக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியதே காரணம் என்று கூறுவது சவாலானது. தற்போதுள்ள பயனாளிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை மறுசீரமைப்பதும் தரவுகளில் உள்ளடங்கும். இவை இந்த  புள்ளிவிபரங்களை மிகைப்படுத்துகிறது. நிகர ஊதிய தரவு (Net payroll data) நேரடி வேலை உருவாக்கத்தை விட பணியாளர் எதிர்கால வைப்பு நிதி அமைப்புக்குள்   (EPFO) மாற்றங்களை பிரதிபலிக்கிறது. 


பணியாளர் எதிர்கால வைப்பு நிதி அமைப்பு  (EPFO) சேர்க்கை தரவுகளின் மாதாந்திர வெளியீடு ஏப்ரல் 2018-ஆம் ஆண்டில் தொடங்கியதிலிருந்து (செப்டம்பர் 2017 முதல் தரவை உள்ளடக்கியது). இது திட்டத்தின் கீழ் வராத முன்னர் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களை உள்ளடக்கியது. இந்த தொழிலாளர்களை முறைப்படுத்துவது நேர்மறையானது என்றாலும், இது புதிய வேலை உருவாக்கத்திற்கான தெளிவான ஆதாரமாக பார்க்கப்படக்கூடாது. 


இந்தியாவின் தொழிலாளர் கட்டமைப்பு அமைப்பில் குறைபாடுகள் உள்ளன. தொழில்களின் விநியோகம் நாட்டு வருமானத்தின் துறைவாரியான பகிர்வுக்கு ஈடுகொடுக்கவில்லை. விவசாயத்திலிருந்து உபரி உழைப்பு ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தித் துறைக்கோ அல்லது முறையான சேவைத் துறைக்கோ உறிஞ்சப்படவில்லை. 


உழைப்பை உறிஞ்சுவதில் இந்த தோல்வி வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் அளவு மற்றும் தரம் இரண்டையும் பாதித்துள்ளது. கொரோனாவுக்குப் பிறகு விவசாயத்திற்குத் திரும்பும் பல தொழிலாளர்கள் முந்தைய போக்குகளின் தலைகீழ் மாற்றத்தைக் குறிக்கின்றனர். இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் கூறப்பட்ட வேலைவாய்ப்பு வளர்ச்சியைக் கொண்டாடுவதற்கு எந்த காரணமும் இல்லை. 


கிங்சுக் சர்க்கார் கட்டுரையாளர் மற்றும் கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் ஆசிரிய உறுப்பினர்.



Original article:

Share:

நிதிநிலை அறிக்கை நடைமுறைப்படுத்தலில் பொறுப்புணர்வைக் கொண்டு வருதல் - பத்ரி நாராயணன். கோபாலகிருஷ்ணன்

 நிதிநிலை அறிக்கை ஒதுக்கீட்டை அடிப்படை விளைவுகளுடன் இணைக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது.


சில நாட்களுக்கு முன்பு, மாநிலங்களவை மசோதாவை மக்களவை திருப்பி அனுப்பியது. இது ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கை செயல்முறை முடிவடைவதைக் குறிக்கிறது. ஒன்றிய நிதிநிலை அறிக்கை வழக்கமாக அதிக கவனத்தை ஈர்க்கிறது. ஒதுக்கீடுகள், துறைசார் முன்னுரிமைகள் மற்றும் வரிவிதிப்பு ஆகியவற்றில் விவாதங்கள் கவனம் செலுத்துகின்றன. 


இருப்பினும், பொதுச் செலவினங்களின் கண்ணோட்டத்தில், நிதிநிலை அறிக்கையின் விவாதங்கள்  பயிற்சி போன்ற செயல்முறை ஆகும். நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில்  இந்த விவாதங்களில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  நாடாளுமன்றத்தின் கேள்வி நேரமோ அல்லது விவாதங்களோ பொதுவாக  வரவு செலவுத் திட்டத்தைப் பற்றி பேசுவதில்லை. 


வளர்ச்சிப் பொருளியலாளர்கள் பெரும்பாலும் செலவினங்களை விளைவுகளுடன் இணைப்பதை வலியுறுத்துகின்றனர். வெறுமனே வெளியீடுகளை விட விளைவுகளில் கவனம் செலுத்துவதையும், ஒதுக்கீட்டை விட செயல்படுத்துவதையும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். 


பொது நிதி மேலாண்மை சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்தியா தனது முதல் விளைவு நிதிநிலை அறிக்கை (Outcome Budget) 2006-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. விளைவு வரவு செலவுத் திட்டம் செயல்பாட்டு நோக்கங்களுக்கான ஒதுக்கீடுகளை வரைபடமாக்குகிறது.  பொது நிதி விதி 2017 (54) இன் படி,  அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பைப் பின்பற்றி விளைவு நிதிநிலை அறிக்கையை தயாரிக்க வேண்டும். 


செலவினங்கள் என்பது ஒரு  திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தின் அளவைக் குறிக்கிறது.  விளைவுகள் என்பது இந்த முடிவுகளுக்கு வழிவகுக்கும் அளவிடக்கூடிய குறிகாட்டிகள். 


உதாரணமாக, மாசுபாட்டைக் கவனியுங்கள்: மாசுபடுத்தும் சுத்திகரிப்பு நிலையங்களின் திறன் ஒரு இடைநிலை வெளியீட்டாக செயல்படுகிறது.  அதே நேரத்தில் காற்று அல்லது நீரின் தரத்தில் உண்மையான அதிகரிப்பு விரும்பிய விளைவு ஆகும். வளர்ச்சி சீர்திருத்தங்களுக்கு பெரும்பாலும்  குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது.  2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இலக்குகளை 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, இந்த இலக்குகளுடன் ஒப்பிடும் போது இந்த  இடைவெளிகளைக் காட்டுகிறது. 


முதலாவதாக, 93 துறைகளில், 57 துறைகள் மட்டுமே நிதிநிலை அறிக்கை ஆவணத்தில் தங்கள் விளைவு இலக்குகளை பகிர்ந்து கொண்டுள்ளன. கூடுதலாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 11 மாநிலங்கள் மட்டுமே தங்கள் மாநில வரவு செலவுத் திட்டங்களுக்கான விளைவு வரவு செலவுத் திட்டத்தில் பங்கேற்கின்றன. 


இரண்டாவதாக, தங்கள் இலக்குகளைப் பகிர்ந்து கொண்ட பல துறைகள் அவற்றை புதுப்பிக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் முடிவுகள் மற்றும் வெளியீடுகள் பூர்த்தி செய்யப்படவில்லை அல்லது முன்னேறவில்லை என்று பரிந்துரைக்கிறது. உதாரணமாக, வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா(Rashtriya Krishi Vikas Yojana), பயிர் மேலாண்மைக்காக 9,347 பண்ணை இயந்திர வங்கிகளை நிறுவுவதற்கும், 25 டன் பயிர் இயந்திரங்களைப் பயன்படுத்தி நிர்வகிப்பதற்கும் 2022-ஆம் ஆண்டு முதல் மாறாமல் அதே இலக்குகளைக் கொண்டுள்ளது. 


இதேபோல், ஒரு யூனிட் பரப்பளவில் மின்சாரம் கிடைப்பதற்கான இலக்குகள் ஆண்டுக்கு ஆண்டு ஒரே மாதிரியாக உள்ளன.  இந்த தேக்கமடைந்த இலக்குகள் மோசமான முன்கணிப்பு மற்றும் பொது நிதியை திறம்பட பயன்படுத்துவதில் பொறுப்பின்மையை பிரதிபலிக்கின்றன. 


மூன்றாவதாக, அமைச்சகங்களில் உள்ள பல விளைவு இலக்குகள் நுட்பமாக நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, பிரதமர் கௌஷல் விகாஸ் யோஜனாவிற்கான(Kaushal Vikas Yojana) திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் நோக்கங்கள் வேலை வாய்ப்புகளை இலக்காகக் கொள்வதிலிருந்து சான்றிதழ்களை மட்டுமே குறிவைப்பதாக மாறியுள்ளன. விளைவு குறிகாட்டிகளின் அறிக்கையிடலும் காலப்போக்கில் மாறிவிட்டது. இது ஒப்பீடுகளை கடினமாக்குகிறது. அளவீடுகளில் சில மாற்றங்கள் நியாயமானதாக இருந்தாலும், முந்தைய இலக்குகள் குறித்து அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும். 


இந்தியாவில் விளைவு கண்காணிப்பு என்பது ஒரு முறையாக நிலையாக மாறி வருகிறது. வரி செலுத்துவோரின் பணம் மதிப்புமிக்கது. மேலும், திறமையின்மை காரணமாக இந்தியா பொது நிதியின் அதிக செலவை ஏற்படுத்துகிறது. எனவே இதன் செயல்திறன் முக்கியமானது. ஒதுக்கீடுகள் மட்டுமே முன்னுரிமை  அளிக்கின்றன என்ற கருத்து உள்ளது, இது செலவு-செயல்திறன் மற்றும் விளைவுகளில் கவனம் செலுத்துவதை விட துறைகள் அதிக நிதியைத் தேட வழிவகுக்கிறது. 

 

இந்தியாவின் முதன்மைக் கணக்கு தணிக்கையாளரின் (Comptroller and Auditor General of India (CAG)) நடைமுறை தணிக்கைகள் போதுமானதாக இல்லை. ஒதுக்கப்பட்ட நிதிகள் அவற்றின் உத்தேசிக்கப்பட்ட விளைவுகளை அடைந்துள்ளனவா என்பதை மதிப்பிடுவது முக்கியமானதாகும். இது திட்டங்களின் செல்லுபடியாகும் தன்மையைப் பற்றி விவாதிக்கவும்,  திட்டத்தின் வருமானத்தை மறு மதிப்பீடு செய்யவும் உதவுகிறது. செயல்படுத்தல் சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்கும், சில கொள்கைகள் ஏன் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்பதைப் புரிந்துகொள்வதற்கும் இத்தகைய விவாதங்கள் தேவை. இதற்கு முன்னுரிமை அளிக்காமல், நிதிநிலை அறிக்கை விவாதங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். 


விளைவு நிதிநிலை அறிக்கை பற்றிய தேவை ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே விரிவுபடுத்துதல், மேம்பட்ட கண்காணிப்பு திறன் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் சிறந்த சீரமைப்பு ஆகியவை இருக்க வேண்டும். அரசுத் துறைகள், குறிப்பாக கீழ் மட்டங்களில், செலவழித்த வளங்களின் வருவாயில் கவனம் செலுத்த வேண்டும். 


நிதி ஆயோக்கின் வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் அண்மையில், வெளியீடு - விளைவு கண்காணிப்பில் உலகளாவிய சிறந்த நடைமுறைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டது. 


இந்த நிதிநிலை அறிக்கை நடைமுறை ஜனநாயக பொறுப்புக்கூறலின் ஒரு பகுதியாகும். இது அரசின் ஆய்வுக்கு இன்றியமையாதது. குடிமக்களும் பிரதிநிதிகளும் இதை அர்த்தமுள்ளதாக முன்னெடுக்க வேண்டும். பாராளுமன்ற விவாதங்கள் பெரும்பாலும் அனுமதிக்கப்பட்ட தொகைகள் அல்லது அவற்றின் பயன்பாடு குறித்து கவனம் செலுத்துகின்றன. இந்தியா தனது 78-வது சுதந்திர தினத்தை நெருங்கும் வேளையில், போதிய மனித மூலதனமின்மை முதல் மாசுபாடு வரையிலான வளர்ச்சி இடைவெளிகளுடன் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அதிக பொறுப்புணர்வைக் கோருவது நமது தார்மீகக் கடமையாகும். 


பத்ரி நாராயணன் குப்தா கெல்லாக்கில் பொருளாதாரத்தில் ஆராய்ச்சியாளர். கோபாலகிருஷ்ணன் நிதி ஆயோக்கில் ஒரு சக ஊழியர்.



Original article:

Share:

ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் தலைமுறை இடைவெளியை குறைத்தல்

 வாத்சல்யா திட்டம்  (Vatsalya Scheme), தேசிய ஓய்வூதிய அமைப்பின்  (​ ​National Pension System (NPS)) அனைத்து அம்சங்களையும் பிரதிபலிக்கக்கூடாது. 


இந்தியாவின் பெரும்பாலான தொழிலாளர்கள் சுயதொழில் செய்பவர்களாகவோ அல்லது தனியார் துறையில் பணிபுரிபவர்களாகவோ இருப்பதால், ஓய்வூதிய நிதி ஒரு பெரிய சவாலாக உள்ளது. அதிக பணவீக்கம் காரணமாக, வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது இந்தியர்கள் ஓய்வுக்காலத்திற்காக அதிகம் சேமிக்க வேண்டும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. 


இருப்பினும், பல இந்தியர்கள் தங்கள் முப்பதுகளின் பிற்பகுதியில் அல்லது நாற்பதுகளில் மட்டுமே ஓய்வுக்காலத்திற்குத் திட்டமிடத் தொடங்குகிறார்கள். மேலும், போதுமான ஓய்வூதிய நிதிகளுடன் முடிவடைகிறார்கள். 


  தேசிய ஓய்வூதிய வாத்சல்யா திட்டம் (National Pension Scheme (NPS) Vatsalya) என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் முன்மொழிந்துள்ளது. இந்த திட்டம் தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாகும். இது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை சிறார்களுக்கான  தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கணக்குகளைத் திறக்கவும், சிறார்களுக்கு 18 வயது  வரை பங்களிப்புகளைச் செய்யவும் அனுமதிக்கும். 


அவர்கள் வேலைக்கு செல்லும் வரை, அவர்கள் தொடர்ந்து கணக்கில் பங்களிக்கலாம். இந்த திட்டம் இளைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டமிடலில் ஒரு தொடக்கத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


நீண்ட முதலீட்டு காலத்தில், அவர்களின் பணம் தடையற்ற கூட்டுத்தொகையிலிருந்து பயனடையலாம். இருப்பினும், சேமிப்பாளர்களை ஈர்க்கும் வகையில் திட்டம் கவனமாக கட்டமைக்கப்பட வேண்டும். 


தேசிய ஓய்வூதிய வாத்சல்யா திட்டம் (National Pension Scheme (NPS) Vatsalya)  பிரதான தேசிய ஓய்வூதிய அமைப்பு (​​National Pension System (NPS))  போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  இது சிறந்ததாக இருக்காது. உதாரணமாக, தேசிய ஓய்வூதிய அமைப்பை  (​National Pension System (NPS))  போலவே, தேசிய ஓய்வூதிய வாத்சல்யா திட்டம் (National Pension Scheme (NPS) Vatsalya)அமைப்பின் சந்தாதாரர்கள்  தங்கள் பங்குகளை, கார்ப்பரேட் பத்திரங்கள், அரசாங்க பத்திரங்கள் மற்றும் பிற சொத்துக்களில் தங்கள் பங்களிப்புகளை ஒதுக்குவதற்கு ஆட்டோ விருப்பத்தை தேர்வு செய்யலாம்.  


இரண்டு விருப்பங்களின் கீழ் பங்கு ஒதுக்கீடுகள் 75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சிறார்களுக்கு நீண்ட முதலீட்டு இருப்பதால், வருமானத்தை அதிகரிக்க இந்த வரம்பை நீக்குவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்கலாம். கூடுதலாக, தேசிய ஓய்வூதிய வாத்சல்யா திட்டம் (National Pension Scheme (NPS) Vatsalya), தேசிய ஓய்வூதிய அமைப்பை  (​National Pension System (NPS))  அமைப்பை போலவே, 18 வயதை அடைவதற்கு முன்பு திரும்பப் பெற அனுமதிக்காது. 


கல்வி அல்லது மருத்துவ சிகிச்சை போன்ற குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் பங்களிப்புகளில் 25 சதவீதம் வரை பகுதியளவு திரும்பப் பெறுதல் மட்டுமே அனுமதிக்கப்படும். முன்கூட்டியே திரும்பப் பெறுவதைக் கட்டுப்படுத்துவது நன்மை பயக்கும் அதே வேளையில், சந்தாதாரர்கள் தங்கள் சேமிப்பைப் பயன்படுத்துவதில் சில நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். 


18 வயதில் வெளியேற அனுமதிக்கும் ஒரு திட்டம் உள்ளது.  ஆனால், அவர்கள் முதிர்வு தொகையில் 80 சதவீதத்தை ஆண்டுத் தொகையாக மாற்ற வேண்டும். 20 சதவீதத்தை மட்டுமே மொத்தமாக திரும்பப் பெற முடியும். 


இந்தியாவில் ஆண்டுத் தொகை திட்டங்கள் பெரும்பாலும் குறைவான வருமானம் மற்றும் பணப்புழக்கத்தை வழங்குகின்றன. இந்த அம்சம், வாத்சல்யாவில் இணைக்கப்பட்டால், பெற்றோர்/பாதுகாவலர்களுக்கு குறிப்பிடத்தக்க தடையாக இருக்கும். பங்களிப்புகளை அதிகரிக்க, இந்தத் திட்டம் தாத்தா பாட்டி அல்லது பிற உறவினர்களால் வாத்சல்யா கணக்கில் பரிசளிப்பதை எளிதாக்க வேண்டும்.



Original article:

Share: