கட்டாய அணுகல் தரநிலைகள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஏன் முக்கியமானது? - நிகில் கானேகர்

 முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டாய அணுகல் தரங்களை (mandatory accessibility standards) வகுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. அணுகல் ஒரு அடிப்படை உரிமை என்பதை தீர்ப்பு மீண்டும் உறுதி செய்தது.


மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்கள் மற்றும் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான கட்டாய விதிகளை வகுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு, கடந்த வாரம் உத்தரவிட்டது. ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வுக்கு தலைமை தாங்கினார். 


மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் (Rights of Persons with Disabilities (RPwD)) மற்றும் அதன் கீழ் அறிவிக்கப்பட்ட விதிகள் கட்டாயமாக கருதப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, அணுகல் ஒரு அடிப்படை உரிமை என்பதை தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது. 

 

முதலில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் (Rights of Persons with Disabilities (RPwD)) சட்டம் என்றால் என்ன? 


மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் (Convention on Rights of Persons with Disabilities (CRPD)) இந்தியா கையொப்பமிட்டுள்ளது. இந்தியா அணுகலை ஒரு அடிப்படை உரிமையாக ஊக்குவிக்க கடமைப்பட்டுள்ளது. பிரிவு 9-ன் படி, "மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக வாழவும், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையாக பங்கேற்கவும், மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களுடன் சமமான அடிப்படையில், போக்குவரத்து, தகவல் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றை அணுகுவதை உறுதி செய்ய மாநிலங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த சேவைகள் நகரங்கள் மற்றும் கிராமங்கள் இரண்டிலும் இருக்க வேண்டும்.


2016ல் இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் CRPDஐ அடிப்படையாகக் கொண்டது மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகள் கண்ணியத்துடன், பாகுபாடு இல்லாமல், சம வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 2017ன் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகள், குறிப்பிட்ட அணுகல் தரநிலைகளை வகுத்துள்ளன.

 

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் (Rights of Persons with Disabilities (RPwD)) கட்டாய இணக்கத்திற்கான ஒரு அமைப்பை உருவாக்கியது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. இருப்பினும், 2017 விதிகள் சுய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை மட்டுமே வழங்கியுள்ளன. சட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்வி நிறுவனத்தில் (National Academy of Legal Studies and Research (NALSAR)) உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆய்வு மையம் தயாரித்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் குறிப்பிடுகிறது.

 

இதுவரை, பல்வேறு அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 17 தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் வசதிகளை வழங்குவதற்காக இந்திய ரயில்வே வழங்கிய அணுகல் வழிகாட்டுதல்கள், அத்துடன் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஆகியவை இதில் அடங்கும். துறைமுகத் துறைக்காக (Ministry of Ports) வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் அவை இயற்கையில் விளக்கமானவை மற்றும் முழுமையானது அல்ல என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. 


வழிகாட்டுதல்களில் சீரான தன்மை இல்லாததால் செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. ஒரே அணுகல் தேவைகளுக்கு வெவ்வேறு தரங்களைக் கொண்டிருப்பது இந்த சிக்கலுக்கு முக்கிய காரணமாகிறது. 


உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது? 


பொது இடங்களில் பாதுகாப்பு மற்றும் அணுகலை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களைக் கோரி பார்வையற்ற மாற்றுத்திறனாளி ராஜீவ் ரதூரி 2005ஆம் ஆண்டில் தாக்கல் செய்த ரிட் மனு மீது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. 


மாற்றுத்திறனாளிகள் உரிமை (Rights of Persons with Disabilities (RPwD)) விதிகள், இப்போது உள்ளதைப் போல, கட்டாயத் தரங்களை வழங்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மாறாக, அவை நடைமுறைப்படுத்த முடியாத வழிகாட்டுதல்களை மட்டுமே வழங்குகின்றன. RPwD சட்டத்தின் விதி 15(1) நோக்கத்திற்கு எதிரானது. இது சட்டத்தின் அதிகாரங்களுக்கு எதிரானது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

 

இந்த விதியின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பரிந்துரை என்று கூறிய நீதிபதிகள், இந்த தீர்ப்பு தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் கீழ் தேவைப்படும் கட்டாய விதிகளை வகுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த செயல்பாட்டில் பங்குதாரர்கள் மற்றும் பட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்வி நிறுவன (National Academy of Legal Studies and Research (NALSAR)) ஊனமுற்றோர் ஆய்வுகள் மையத்துடன் கலந்தாலோசிக்குமாறு ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. 


கட்டாய விதிகள் அமைக்கப்பட்டவுடன், அணுகல் தரத்தை மீறினால், ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நிறைவு சான்றிதழ்களை நிறுத்தி வைப்பது மற்றும் அபராதம் வசூலிப்பது ஆகியவை இதில் அடங்கும்.

 

பட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்வி நிறுவன (National Academy of Legal Studies and Research (NALSAR)) அறிக்கை என்ன கண்டுபிடித்தது? 


நவம்பர் 2023ல், உச்ச நீதிமன்றம் NALSAR-CDS அணுகல் தொடர்பான நிலைமையை மதிப்பிடுமாறு உத்தரவிட்டது. ஒன்றிய, மாநில அரசுகளின் முன்னேற்றம் இல்லாததைக் குறிப்பிட்டு இது நடந்தது. NALSAR-CDS ஆனது அணுகல் முயற்சிகள் பற்றிய தகவல்களை சேகரிக்க, ஒன்றிய, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் இருந்து கருத்துக்களை சேகரித்தது. 14 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்கள் மட்டுமே பதிலளித்தன. மாற்றுத்திறனாளிகளின் நிஜ வாழ்க்கை அனுபவங்களில் கவனம் செலுத்தி அவர்களின் கருத்துக்களையும் சேகரித்தனர்.


கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கு போக்குவரத்து அமைப்புகளுக்கான அணுகல் முக்கியமானது என்று அறிக்கை எடுத்துக்காட்டியது. டெல்லியில் 3,775 தாழ்தள எரிவாயு பேருந்துகள் (cng busses) அணுகக்கூடிய பயணத்திற்கு உள்ளன. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் 21,669 அணுகக்கூடிய பேருந்துகளில் 1,917 உள்ளன.


அணுகல் உரிமை (right to accessibility) என்பது சாதி, பாலினம், மதம் மற்றும் பிராந்தியம் போன்ற பிற காரணிகளையும், இயலாமை இந்த காரணிகளுடன் எவ்வாறு குறுக்கிடுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்தியது. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு இணையதளங்கள் பயன்படுத்த கடினமாக இருப்பது மற்றும் செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு உள்ளவர்களுக்கு சைகை மொழி அங்கீகாரம் இல்லாதது போன்ற குறிப்பிட்ட சவால்களை அது சுட்டிக்காட்டியது.




Original article:

Share:

வாக்கு எண்ணிக்கை நாளில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி.. - சீனிவாசன் ரமணி

 தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் முடிவுகளை வெளியிடும் இந்தியாவின் தேர்தல் அமைப்பு அமெரிக்க முறையை விட சிறப்பாக செயல்படுகிறது.


சமீபத்திய, அமெரிக்க அதிபர் தேர்தலில் பாப்புலர் வாக்குகள் மற்றும் எலெக்ட்ரோல் காலேஜ் வாக்குகள் ஆகிய இரண்டிலும்  கணிசமான  வாக்குகளை பெற்று டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். நிருபர்கள் தேர்தல் முடிவுகளைச் சுலபமாகச் சேகரித்தனர். வாக்கு எண்ணிக்கையின் போது, ​​டிரம்ப் தேர்தலில் வெற்றி பெறப் போகிறார் என்பது ஆரம்பத்திலேயே தெளிவாகத் தெரிந்தது. அவர் முக்கிய 'ஸ்விங் ஸ்டேகளில்' முழுமையாக வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக இருப்பதாக முடிவுகள் காட்டின.


இந்தத் தேர்தல் 2020ல் இருந்து மிகவும் வித்தியாசமானது. 2020 தேர்தலில் பல சர்ச்சைகளும் சிக்கல்களும் இருந்தன. அந்தத் தேர்தலின் போது, ​​கோவிட்-19 பரவியது. தொற்றுநோய் காரணமாக பல அமெரிக்கர்கள் முன்கூட்டியே வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை பல நாட்கள் ஆனது. டொனால்ட் டிரம்ப் ஜோ பைடனிடம் தோற்றார். ஆனால், தோல்வியை ஏற்கவில்லை. கருத்துக் கணிப்புகள் கணித்தவற்றுடன் உண்மையான முடிவுகள் பொருந்தவில்லை. வாக்கு எண்ணிக்கை மெதுவாக சென்றதால் செய்தி சேகரிப்பது கடினமாகிவிட்டது.


அமெரிக்காவில், வாக்கு எண்ணும் தரவு அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) மற்றும் பிற செய்தி நிறுவனங்களில் இருந்து வருகிறது. இந்தத் தரவின் போக்குகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றியாளர்களை ஊடகங்கள் கணிக்கின்றன. அமெரிக்க ஃபெடரல் தேர்தல் ஆணையம் பிரச்சார நிதி மற்றும் தேர்தல் விதிகளை மேற்பார்வை செய்கிறது. ஆனால், அது நேரடி தேர்தல் தரவுகளை வழங்கவில்லை. அசோசியேட்டட் பிரஸ் (AP) போன்ற ஏஜென்சிகளால் தேர்தல் தரவு சேகரிக்கப்படுகிறது. பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface) மூலம் வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவலை வெளியிடுகிறது அல்லது ஒவ்வொரு மாநிலத்தின் மாநிலச் செயலாளர் மூலம் தகவலை வெளியிடுகிறது.


இந்தியாவில், இந்த செயல்முறை வேறுபட்டது. இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தொகுதிக்கும், சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் நேரலை எண்ணும் தரவை வழங்குகிறது. ஊடகங்கள், குறிப்பாக டிவி பத்திரிகையாளர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து புகாரளிக்க ஏஜென்சிகள் அல்லது அவர்களின் சொந்த நிருபர்களைப் பயன்படுத்தலாம். இருப்பினும், இந்த அறிக்கைகள் எப்போதும் துல்லியமாக இருக்காது.


தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மெதுவாக செயல்பட்டாலும் நம்பகமான தரவை வழங்குகிறது. இந்தத் தரவு வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள வாக்குச் சாவடி முகவர்களால் சரிபார்க்கப்பட்டு, தேர்தல் போக்குகளின் தெளிவான முடிவை வழங்குகிறது. தேர்தல் ஆணைய முடிவுகளை வழங்கும் கட்டமைக்கப்பட்ட விதம், ஊடகங்கள் மற்றும் தரவு ஆய்வாளர்களுக்கு, தகவலை உடைக்க உதவுகிறது. வெவ்வேறு மாநிலங்களில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாக்களிக்கும் போக்குகள் போன்ற விரிவான தரவை அவர்களால் வழங்க முடியும்.


அமெரிக்க செய்தி ஊடகங்கள் தேர்தல் முடிவுகளை சிறப்பாக வழங்குகின்றன. ஆனால், இந்தியாவின் அமைப்பு மிகவும் திறந்த நிலையில் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அனைவருடனும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது. அவர்கள் பொது பயன்பாட்டிற்காக தரவை நேர்மையாக செய்கிறார்கள். இந்திய தேர்தல் ஆணையம் விரிவான தகவல்களை (‘deep-dive data’) வழங்குகிறது. 


நாடாளுமன்றத் தொகுதிகளுக்குள் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான தரவுகளையும் தேர்தல் ஆணையம் வழங்குகிறது. இந்தத் தகவல் இணையதளத்தில் தாமதத்துடன் பதிவேற்றப்படுகிறது. இதன் காரணமாக முடிவுகள் அறிவிக்கப்பட சில வாரங்கள் ஆகலாம். இருப்பினும், இந்த தரவு கிடைப்பது பயனுள்ளதாக இருக்கும். சமூக விஞ்ஞானிகளும் பத்திரிகையாளர்களும் தேர்தல் முடிந்ததற்கு பின்னர் முடிவுகளை இன்னும் விரிவாக பகுப்பாய்வு செய்யலாம்.


ஒரு தரவு பத்திரிகையாளருக்கு, ஒரு பொது அதிகாரத்தின் மூலம் தேர்தல் முடிவுகளை வழங்கும் இந்திய மாதிரி அமெரிக்க மாதிரியை விட சிறப்பாக செயல்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், இந்திய தேர்தல் ஆணையம் பல பிரச்சனைகளுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகப்பெரும் சர்ச்சையை எதிர்கொள்கிறது. மாதிரி நடத்தை விதிகள் பலவீனமான செயலாக்கம் பல்வேறு விமர்சங்களை (legitimate criticism) எதிர்கொள்கிறது. 


சில மாநிலங்களில் வாக்களிக்கும் செயல்முறையில் தாமதம் சில சூழல்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது மற்றும் பிரச்சார செலவினங்களின் தளர்வான கட்டுப்பாடு ஒரு பிரச்சனையாகி வருகிறது. எவ்வாறாயினும், இந்தியாவில் உள்ள பொதுமக்களால் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், தேர்தல் ஆணையம் கட்டமைக்கப்பட்ட வாக்குப்பதிவு தரவை வெளியிடுகிறது. இந்த தரவு வெளிப்படையான, சரியான நேரத்தில் மற்றும் திறமையான முறையில் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.




Original article:

Share:

அதிக சொத்து வரி மூலம் வருவாயை அதிகரிப்பது சாத்தியமானதா? - டிசிஏ சீனிவாச ராகவன்

 இந்தியாவில், அங்கீகரிக்கப்படாத குடியிருப்புப் பிரிவுகள் உள்ளன. இவற்றின் மீது குறைந்த வரி விதிப்பது கூட அரசியல் ரீதியாக சவாலானதாக இருக்கலாம்.


உலகம் முழுவதிற்கும் ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. திவால் அச்சுறுத்தல். சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund (IMF)) சமீபத்திய வலைப்பதிவு, வரும் காலங்களில் உலகம் குறைந்தபட்சம் $3 டிரில்லியன் திரட்ட வேண்டும் என்று ஏன் கூறுகிறது என்பதை இது விளக்கலாம். நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய இந்த நிதி அவசியம். வளர்ந்து வரும் சந்தைகளில், இந்த செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (gross domestic product (GDP)) 4 சதவீதத்திற்கு சமம் என்று IMF மதிப்பிட்டுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதம் தேவையான தொகை இன்னும் அதிகமாகவே உள்ளது.  


"செலவுகளை ஒரு கணம் புறக்கணிப்போம். 'நிலையான' மற்றும் 'உள்ளடக்கிய' உண்மையில் என்ன அர்த்தம்? இதோ எனது யூகம்: 'நிலையான' என்பது மேற்கத்திய நாடுகள் அல்லாத நாடுகளில் உள்ளவர்கள் அதிகமாக உட்கொள்ளக்கூடாது. 'உள்ளடக்கமானது' என்பது பொருள், அங்குள்ள அனைவரும் எதையாவது உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்த இரண்டு யோசனைகளும் எவ்வாறு ஒன்றாகச் செயல்படுகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை."


பணத்தை திரட்டுவதற்கு வலைப்பதிவு ஒரு சிறிய தீர்வை பரிந்துரைக்கிறது. அதிக சொத்து வரி, குறிப்பாக பணக்காரர்களுக்கு. நிலையான வளர்ச்சியில்லாவிட்டாலும், உள்ளடங்கிய வளர்ச்சிக்கு அரசியல்வாதிகளுக்கு உதவ பணக்காரர்களுக்கு வரி விதிக்கப்பட வேண்டும் என்பதே இதன் கருத்து.  இதனால், அரசியல்வாதிகளுக்கு அதிக வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. நாடு தழுவிய சொத்து வரி உயர்வை செயல்படுத்துவது கடினமாக இருக்கலாம் என்று வலைப்பதிவு கூறுகிறது. இருப்பினும், "மிகவும் திறமையான" உள்ளூர் சொத்து வரிகளை நிறைவேற்றுவது எளிதாக இருக்கும். ஏனெனில், அவை தேசிய வரிகளைப் போலல்லாமல் உள்ளூரில் சேகரிக்கப்பட்டு செலவழிக்கப்படுகின்றன.


பதிவர் ஏன் நகராட்சி வரிகளை மட்டும் சொல்லவில்லை என்று தெரியவில்லை. அவர் இந்த விஷயத்தில் டெல்லி மற்றும் லாகோஸ் பற்றி மிகவும் ஆமோதிப்புடன் பேசுகிறார்கள். சொத்தின் அளவை மதிப்பிடுவதற்கு இருவரும் நவீன ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்துகின்றனர்.


அரசியல் கோணம்


நன்று, ஆனால் அந்த தகவல் ஏற்கனவே நகராட்சி அதிகாரிகளிடம் உள்ளது. சிறிய அங்கீகாரமற்ற குடியிருப்பு கட்டிடங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.


இவற்றை இணைப்பதற்கு ட்ரோன்கள் உதவியிருந்தாலும்,  இவற்றின் மீது மிகக் குறைந்த வருடாந்திர சொத்து வரியை விதிக்கும் தைரியம் எந்த அரசியல் கட்சிக்கும் இருக்குமா என்பது எனக்கு சந்தேகம்.


வருமானம் குறைந்த நாடுகளில் அரசியல் அப்படிச் செயல்படாது. உண்மையில், மேற்கின் வளர்ந்த நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் விதிக்கப்படும் செலவுகள் ஏதேனும் ஒரு அறிகுறியாக இருந்தால், அங்கும் அரசியல் செயல்படாது. ஏனெனில், வாக்கு என்பது நிதிகளை பெருமளவில் அழிக்கும் ஆயுதம். ஒவ்வொரு வாக்கும் சிறியது ஆனால் ஒருங்கிணைக்கப்படும் போது அது மாபெரும் சக்தியாக வளரும்.


வலைப்பதிவில் ஒரு மையப்புள்ளி உள்ளது. உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் வீடு போன்ற அடிப்படை விஷயங்களுக்காக நாடுகள் அதிக பணம் திரட்ட வேண்டும்.  இவை நிலைத்தன்மையை எதிர்மறையாக பாதிக்காது.


வளரும் நாடுகளில் உள்ள மற்றொரு பெரிய பிரச்சனை என்னவென்றால், பொது நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதால், மக்கள் தாங்கள் வசிக்கும் சொத்துக்கள் உண்மையில் சொந்தமாக இல்லை.


பிரச்சனை என்னவென்றால், ஒரு நகராட்சி வரி விதித்து அதை வசூலிக்கும் தருணத்தில், அந்த நிலம் வரி செலுத்துபவரின் சொத்தாக மாறும், மேலும் அரசாங்கமோ அல்லது நகராட்சியோ அந்த நிலத்தை பறிமுதல் செய்யும். இந்தியாவில் பல லட்சம் உரிமையாளர்கள் உள்ளனர்.  எனவே, இது கேட்ச்-22 (Catch-22 ) சூழ்நிலையை உருவாக்குகிறது.


விவசாய வருமானத்தின் மீது வரி விதிப்பதே தெளிவான தீர்வு. பாகிஸ்தான் கூட 15 சதவீதம் வரி விதிக்கிறது. சர்வதேச நாணய நிதியம் விகிதத்தை 45 சதவீதமாக அதிகரிக்க விரும்புகிறது.


"இந்தியாவில், வரி நோக்கங்களுக்காக வருமானத்தை ஆதாரமாகக் கருதுவதை நிறுத்துவதே முதல் படியாக இருக்க வேண்டும். வருமானத்திற்கு வரி விதிக்கப் போகிறது என்றால், விவசாய வருமானத்தை ஏன் விலக்க வேண்டும்?"


"இரண்டாவது படி, மற்ற வருமான ஆதாரங்களைக் கொண்டவர்களுக்கு அனைத்து விவசாய வருமானத்திற்கும் வரி விதிக்கப்படும். உதாரணமாக,  விவசாயம் செய்யும் வழக்கறிஞர்கள். இவர்கள் அரசியல் பிரச்சனையை ஏற்படுத்த மாட்டார்கள்."


"நமக்கு ஒரு அரசியலமைப்புச் சிக்கல் உள்ளது: விவசாய வருமான வரி என்பது மாநில விவகாரம். எனவே, அதை பொதுப்பட்டியலில் மாற்றாதவரை நாம் அதை மறந்துவிடலாம். எந்த மத்திய அரசும் அதைப் பற்றி விவாதிக்குமா? வாய்ப்பில்லை."




Original article:

Share:

COP29: இது ஏன் முக்கியமானது? மற்றும் அதன் பின்னணியில் உள்ள வரலாறு என்ன? -ஐஸ்வர்யா சனாஸ்

 தற்போதைய மாநாட்டில் (COP29) பல்வேறு நிகழ்ச்சி நிரல்களைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகளுக்கு மத்தியில், காலநிலை நிர்வாகத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வோம்.


காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) மாநாட்டின் (COP29) 29-வது அமர்வுக்கு முன்னதாக, இது "COP நிதி" என்று அழைக்கப்பட்டது. அதே நேரத்தில் 'புதிய அளவீட்டு காலநிலை இலக்கு (‘New Quantified Climate Goal (NQCG)’) என்பது அதில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய முன்னுரிமைப் பிரச்சினைகளில் ஒன்றாகும்.


அந்த சூழலில், உலகளாவிய கார்பன் சந்தைக்கான பசுமை இல்ல வாயு உமிழ்வு இலக்குகளை சந்திப்பதற்கும் காலநிலை நிதியை அமைப்பிற்கு உதவுவது புதிய அளவீட்டு காலநிலை இலக்கு (NCQG)  வழங்குவதற்கான வழிகளில் ஒன்று. உலக காலநிலை உச்சிமாநாட்டின் முதல் நாளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது. திங்கட்கிழமை (நவம்பர் 11) மற்றும் நவம்பர் 22 வரை தொடரும். 


நடந்து கொண்டிருக்கும் மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகளுக்கு மத்தியில், காலநிலை நிர்வாகத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வது முக்கியமானது. 


COP வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு 1988-ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு ( Intergovernmental Panel on Climate Change (IPCC)) உருவாக்கப்பட்டது. IPCC ஆனது உலக வானிலை அமைப்பு (World Meteorological Organisation (WMO)) மற்றும் ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் (UN Environmental Programme (UNEP)) ஆகியவற்றால் கூட்டாக நிறுவப்பட்டது.  காலநிலை மாற்றம் குறித்த அறிவியல் அறிவை மதிப்பிடும் மற்றும் சாத்தியமான பதில் உத்திகளை வழங்கும் மதிப்பீட்டு அறிக்கைகள், சிறப்பு அறிக்கைகள் மற்றும் வழிமுறை அறிக்கைகளை தயாரிப்பதே IPCC-ன் முக்கிய நோக்கங்களாகும்.


IPCC இப்போது அறிவியல் மற்றும் கொள்கையின் அமைப்பில் செயல்படும் ஒரு எல்லை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டாலும், 1980-ஆம் ஆண்டுகளில் காலநிலை மாற்றம் பற்றிய அறிவியல் நிச்சயமற்ற தன்மை, எதிர்ப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட தகவல்களால் நிறைந்திருந்தது. 1990-ஆம் ஆண்டில் IPCC இன் முதல் அறிக்கையின் வெளியீடு ஒரு திருப்புமுனையைக் குறித்தது.  இது காலநிலை மாற்றம் குறித்த உலகளாவிய ஒப்பந்தத்திற்கான அழைப்புகளுக்கு வழிவகுத்தது. 


காலநிலை மாற்றம் தொடர்பான முதல் உலகளாவிய ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டிசம்பர்11, 1990-ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச் சபையால் அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக் குழு நிறுவப்பட்டது. இக்குழு 1991 மற்றும் 1992-ஆம் ஆண்டுக்கு இடையில் ஐந்து அமர்வுகளை நடத்தியது.  இதில் பல சர்ச்சைக்குரிய விவாதங்கள் மற்றும் அரசியல் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. 


அவர்களின் முயற்சிகள் இறுதியாக கட்டமைப்பு மாநாட்டு ஆவணத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. IPCC மற்றும் INC நிறுவனமானது காலநிலை மாற்ற அரசியலின் வரலாற்றில் ஒரு முக்கிய தருணத்தைக் குறித்தது.


காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு (UNFCCC) என்பது 1992-ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். இது காலநிலை பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு அடிப்படையை வழங்குகிறது. 


ரியோ எர்த் உச்சிமாநாடு என்றும் அழைக்கப்படும் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் (UNCED) 19 ஜூன் 1992-ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் குறித்த கட்டமைப்பு மாநாடு கையொப்பத்திற்காக திறக்கப்பட்டது. அதனுடன், மற்ற இரண்டு சகோதர மாநாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. உயிரியல் பன்முகத்தன்மைக்கான ஐ.நா. மாநாடு மற்றும் பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா. கட்டமைப்பு மாநாடு 21 மார்ச் 1994-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. 


UNFCCC-ன் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இது காலநிலை நிர்வாகத்தின் கட்டமைக்கப்பட்ட ஒரு அடிப்படையை வழங்கிய ஒரு கட்டமைப்பு மாநாடாகும்.


இந்த விதிகள், வழிமுறைகள், செயல்முறைகள், மற்றும் அமைப்புகளின் விரிவான அமைப்பை அனுமதித்தது. UNFCCC அமைப்பின் இறுதி நோக்கம், 'வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயு செறிவுகளை ஒரு மட்டத்தில் நிலைநிறுத்துவதாகும். இது காலநிலை அமைப்பில் ஆபத்தான மானுடவியல் (மனிதனால் ஏற்படும்) குறுக்கீட்டைத் தடுக்கும். 


UNFCCC சர்வதேச காலநிலை நடவடிக்கைக்கு வழிகாட்டும் அடிப்படைக் கொள்கைகளை நிறுவியது. இந்தக் கொள்கைகளில் முதன்மையானது "பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள் மற்றும் திறன்கள்" (“common but differentiated responsibilities and respective capabilities” (CBDR-RC)), காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் பொறுப்பை அனைத்து நாடுகளும் பகிர்ந்து கொண்டாலும், அவற்றின் திறன்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவற்றின் கடமைகள் வேறுபடுகின்றன.


சர்வதேச காலநிலை முயற்சிகளில் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் முக்கியமான கூறுகளாக தரவு சேகரிப்பு, அறிவை கட்டியெழுப்புதல் மற்றும் தகவல்தொடர்புகளில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மாநாடு வலியுறுத்துகிறது.


UNFCCC காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான லட்சிய நோக்கங்களை வகுத்தது. ஆனால், கட்டமைப்பே போதுமானதாக இல்லை. மாநாட்டை உருவாக்க மற்றும் அதன் நோக்கங்களை வலுப்படுத்த மேலும் செயல்முறைகளை நிறுவ வேண்டிய அவசியம் இருந்தது. 


காலப்போக்கில், மாநாட்டின் ஆளும் குழுவாக செயல்படும் COP  மாநாட்டை நிறுவுதல் போன்ற உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நிறுவனங்கள், செயல்முறைகள் மற்றும் கட்டமைப்புகளின் வளர்ச்சிக்கு கட்டமைப்பு மாநாடு வழி வகுத்தது. ஒவ்வொரு ஆண்டும், முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், மேலும் ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், உறுதிமொழிகளைச் செம்மைப்படுத்துவதற்கும், கட்சிகளின் பிரதிநிதிகளை (UNFCCCயை அங்கீகரித்த நாடுகள்) COP ஒன்றிணைக்கிறது.


COP மாநாடு என்பது உலகின் ஒரே பலதரப்பு முடிவெடுக்கும் மன்றமாகும், இது கிரகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் ஒன்றிணைத்து காலநிலை மாற்றத்திற்கான கொள்கை பதில்களை கூட்டாக உருவாக்கி செயல்படுத்துகிறது. தற்போது, ​​UNFCCC அமைப்பில்  198 நாடுகள் (197 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்) உள்ளன. 


1995-ஆம் ஆண்டில் ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற முதல் COP மாநாடு, பெர்லின் ஆணைக்கு குறிப்பிடத்தக்கது. இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறித்தது. இந்தச் சந்திப்பின் போது, ​​வளர்ந்த நாடுகளுக்கான சட்டப்பூர்வ கடப்பாடுகளின் அவசியம் குறித்து ஒப்புக்கொள்ளப்பட்டது. 


1997-ஆம் ஆண்டு ஜப்பானின் கியோட்டோவில் நடைபெற்ற COP3  மாநாட்டில் கியோட்டோ நெறிமுறையை ஏற்றுக்கொள்வதற்கு பெர்லின் ஆணை அடிப்படையாக அமைந்தது.  கியோட்டோ நெறிமுறை பெரும்பாலும் முதல் பசுமை இல்ல வாயு உமிழ்வு குறைப்பு ஒப்பந்தமாக குறிப்பிடப்படுகிறது. UNFCCC  அமைப்பின் கீழ் Annex I  நாடுகள் என அறியப்படும் வளர்ந்த நாடுகளுக்கு சட்டப்பூர்வமாக பிணைப்பு இலக்குகளை அறிமுகப்படுத்தியது. அவைகளுக்கு உமிழ்வு இலக்கு கொடுக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட கடப்பாடு காலத்திற்குள் ஒரு நாடு வெளியிடக்கூடிய அதிகபட்ச அளவு பசுமை இல்ல வாயு உமிழ்வு ஆகும். 


இந்த கியோட்டோ நெறிமுறை, வளர்ந்த நாடுகளுக்கு சட்டப்பூர்வமாகக் கட்டுப்படும் உமிழ்வுக் குறைப்பு இலக்குகளை நிறுவுவதன் மூலம் சர்வதேச காலநிலைக் கொள்கையில் குறிப்பிடத்தக்க படியைக் குறித்தது. இந்த நடவடிக்கை 1992-ஆம் ஆண்டில் UNFCCC அமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகளின் (common but differentiated responsibilities (CBDR)) கொள்கையை வலுப்படுத்தியது.


கூடுதலாக, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே உமிழ்வு வர்த்தகத்தை எளிதாக்குவதற்கு கியோட்டோ நெறிமுறை மூன்று வழிமுறைகளை அறிமுகப்படுத்தியது: சர்வதேச உமிழ்வு வர்த்தகம், தூய்மையான மேம்பாட்டு பொறிமுறை மற்றும் கூட்டு அமலாக்கம். 


2005-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி கியோட்டோ நெறிமுறை போதுமான எண்ணிக்கையிலான நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. வருடாந்திர COP கூட்டங்களில் கியோட்டோ நெறிமுறையைப் பற்றி விவாதிக்கும் அல்லது கட்டமைக்கும் எந்தவொரு கூட்டமும் கியோட்டோ நெறிமுறைக்கான நாடுகளின் மாநாடு (CMP) என அழைக்கப்படுகிறது. 


இந்த CMP பதவியானது,  UNFCCC அமைப்பைவிட கியோட்டோ கட்டமைப்பின் கீழ் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறிப்பாக தொடர்புடையது என்பதைக் குறிக்கிறது.


அடுத்தடுத்த மாநாடுகளில், தழுவல், தணிப்பு, தொழில்நுட்பம், நிதி, பாலின சமத்துவம், உள்நாட்டு அறிவு அமைப்புகள், இழப்பு மற்றும் சேதம் மற்றும் வெளிப்படைத்தன்மை போன்ற புதிய வகைகள் அல்லது பேச்சுவார்த்தை செயல்முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பகுதிகள் ஒவ்வொன்றும் அவற்றின் கட்டமைப்பிற்குள் பல செயல்முறைகள் மற்றும் கட்டமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளின் முக்கியமான தலைப்புகளாக உருவாகியுள்ளன.   




Original article:

Share:

இந்தியாவிற்கு தேவையான பசுமை மாற்றம். -அருணாபா கோஷ்

 இந்தியாவின் ஆற்றல் மாற்றத்திற்கு பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க அமைப்புகள், செயல்பாட்டு செலவு மாதிரிகள், காலநிலை-எதிர்ப்பு முதலீடுகள், உலகளாவிய விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பு, டிஜிட்டல் தீர்வுகள், வட்ட பொருளாதார நடைமுறைகள் மற்றும் சிறந்த நுகர்வோர் நிதியுதவி  போன்றவை தேவை.


அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பின் வெற்றி மற்றும் மேற்கு ஆசியாவில் மோதல்களின் நிழலில் COP29 பேச்சுவார்த்தைகள் நடைபெறும்போது, ​​ஒன்று தெளிவாகிறது. இந்தியா தனது பொருளாதார வேகத்தை குறைக்காமல், சமமாக கரிமநீக்க (decarbonize) நடைமுறையில் ஈடுபட வேண்டும். அதே நேரத்தில் முதலீடுகளை செயல்படுத்த காலநிலை நிதியையும் ஈர்க்க வேண்டும். சுத்தமான, மீள்திறன் மற்றும் வலுவான ஆற்றல் அமைப்பில், வலுவான பொருளாதாரத்தை உருவாக்க இந்தியா ஏழு அடிப்படை மாற்றங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த பசுமைப் பொருளாதாரத்தின் மையத்தை மக்கள் உருவாக்க வேண்டும்.


இந்த காலகட்டத்தில் இந்தியாவின் மின் தேவை கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். உச்ச தேவை 2031-32 ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 370 ஜிகாவாட் எட்டும். அதாவது ஒவ்வொரு சில வருடங்களுக்கும், ஆற்றல் முதலீடுகள் எவ்வாறு செல்கின்றன, உள்கட்டமைப்புகள் எவ்வாறு  கட்டமைக்கப்படுகின்றன மற்றும் புதிய வணிக மாதிரிகள் எவ்வாறு வெளிவருகின்றன என்பதற்கான மாதிரிகள் நமக்குத் தேவைப்படும். தற்போதைய வழங்கல் மற்றும் தேவையை பொருத்துவதற்கு பதிலாக,  வெப்பமயமாதல் உலகில் இந்த முறைகளை எளிதாக்கும் மற்றும் செயல்படுத்தும் அளவீடுகளை நாம் கண்காணிக்க வேண்டும். மாற்றத்தைத் தூண்டுவதற்கு இந்த மாற்றங்கள் முக்கியமானவை.


முதலில், மையப்படுத்தப்பட்ட ஆற்றல் அமைப்புகளில் இருந்து பரவலாக்கப்பட்ட ஆற்றல் அமைப்புகளுக்கு மாறவும். விநியோகிக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Distributed renewable energy (DRE)) ஆதாரங்கள் அளவில் ஆற்றல் அமைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான தூணாக இருக்கலாம். பெரிய அளவிலான ஆற்றல் அமைப்புகளை உருவாக்குவதில் இந்த ஆதாரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த விஷயத்தில் இந்தியா ஏற்கனவே தனது லட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளது. 10 மில்லியன் குடும்பங்களைச் சென்றடையும் நோக்கில், மேற்கூரை சூரிய ஆற்றல் உற்பத்தி (rooftop solar) முயற்சியை இந்தியா தொடங்கியுள்ளது. இந்த முயற்சி 30 ஜிகாவாட் சுத்தமான ஆற்றலை உருவாக்கும்.


குறைந்த மின்சக்தியைப் பயன்படுத்தும் குறைந்த பொருளாதார அடுக்குகளில் உள்ள பெரும்பாலான நுகர்வோருக்கு மேற்கூரை சூரிய ஆற்றல் உற்பத்தி விலை மிகவும் அதிகமாக உள்ளது.  எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (Council on Energy, Environment, and Water (CEEW)) நடத்திய ஆய்வில், நாட்டின் மேற்கூரை சூரிய ஆற்றலில் சுமார் 30% 0-1 kW வகைக்கு உட்பட்டது. இந்த வகை மானியங்களுக்குப் பிறகும் பலருக்கு விலை உயர்ந்ததாகவே உள்ளது. சமூக சூரிய ஆற்றல் அல்லது சமூக கூட்டாண்மை போன்ற புதிய சந்தை சார்ந்த தீர்வுகள் மற்றும் வணிக மாதிரிகள் இந்த சிக்கலை தீர்க்க உதவும்.


இரண்டாவதாக, மூலதனச் செலவில் (capex) இருந்து செயல்பாட்டுச் செலவுக்கு (opex) மாற்றவும். பாரம்பரியமாக, ஆற்றல் அமைப்புகளை முதன்மையாக ஒரு மூலதனச் செலவுச் சிக்கலாகக் கருதுகிறோம். தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கு, செயல்பாட்டுச் செலவு மாதிரியின் மூலம் எரிசக்தியை சிறப்பாக விலை நிர்ணயம் செய்வது பற்றி நாம் சிந்திக்கத் தொடங்க வேண்டும். உதாரணமாக, ஒவ்வொரு நுகர்வோரும் சோலார் பேனல் வாங்கத் தேவையில்லை.  ஒரு பயன்பாட்டு நிறுவனம் ஒரு சமூகத்திற்கான சோலார் பேனல்களை நிர்ணயித்த விலையில் நிறுவலாம் மற்றும் கட்டணம் செலுத்தும் அடிப்படையில் நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கலாம். 


ஒவ்வொரு நபரும் குளிரூட்டியை வாங்குவதற்குப் பதிலாக, குளிர்ச்சியை ஒரு சேவையாக வழங்கும் மாவட்ட அளவில் குளிரூட்டும் முறைகளை செயல்படுத்தலாம். இதேபோல், நிலையான இயக்கத்தில், மின்சார பேருந்தின் விலையில் முதலீடு செய்வதைவிட மக்கள் ஒரு கிலோமீட்டருக்கு சுத்தமான போக்குவரத்து சேவைகளுக்கு பணம் செலுத்தலாம். இது இறுதி நோக்கத்திற்கு உதவும் வகையில் ஆற்றலைப் பயன்படுத்துவதும், அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்வதும் ஆகும்.


மூன்றாவதாக, குறுகிய கால நிதி அபாயங்களில் கவனம் செலுத்துவதிலிருந்து, காலநிலையைத் தாங்கக்கூடிய சுத்தமான ஆற்றல் மற்றும் வணிகங்களில் முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கி நாம் செல்ல வேண்டும். வளர்ந்து வரும் சந்தைகளில் முதலீடு செய்வது ஆபத்தானதாகத் தோன்றலாம். இருப்பினும், இந்த அபாயத்தின் பெரும்பகுதி உண்மையானதை விட உணரப்படுகிறது. 1.4 டிகிரி புவி வெப்பமடைதலில் நாம் ஏற்கனவே அனுபவிக்கும் அதிர்ச்சிகளையும் நாம் புறகணிக்க முடியாது. 


CEEW ஆய்வில், இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் தற்போது காலநிலையால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் வாழ்கின்றனர். காலநிலை மாற்றத்தின் மேக்ரோ பொருளாதார விளைவுகளுடன் ஒப்பிடுகையில், நமது ஆற்றல் அமைப்புகளை மீள்தன்மையடையச் செய்வதிலும், காலநிலை-உறுதிப்படுத்துதலிலும் முதலீடு செய்வது மிகவும் குறைவான அபாயகரமான அணுகுமுறையாகும். நாட்டின் கடினமான உள்கட்டமைப்பு நேரியல் அல்லாத காலநிலை அபாயங்களுக்கு எதிராக மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும். செலவில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பின்னடைவில் எவ்வளவு முதலீடு செய்வது எதிர்கால இடையூறுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


நான்காவதாக, தொழில்துறைக் கொள்கையை நிர்ணயிப்பதைவிட, விநியோகச் சங்கிலிகளில் இணைப்பதை பற்றி சிந்தியுங்கள். ஒரு கட்டத்திற்கு அப்பால், அமெரிக்கா அல்லது ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பாதுகாப்புவாத நிலைத்தன்மையுடன் இணைக்கப்பட்ட தொழில்துறை கொள்கைகளை இந்தியாவால் தற்போது வாங்க முடியாது.  இந்தக் கொள்கைகள் முழுப் பொருளாதாரத்தையும் ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனமாக மாற்ற முயற்சிக்கும் மிகவும் திறமையான வழியாக இருக்க வேண்டியதில்லை. 


உலகளாவிய சுத்தமான எரிசக்தி விநியோகச் சங்கிலிகளில் இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.  மற்ற நாடுகளுடன் இணைந்து அதன் பலத்தை மதிப்பதன் மூலமும், அதன் பலத்தில் செயல்படுவதன் மூலமும் இதை அடைய முடியும். சோலார் மற்றும் பசுமை ஹைட்ரஜன் விநியோகச் சங்கிலிகளில் இந்தியா கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதிகள் உள்ளன. 


இந்தத் துறைகளில் திறம்பட பங்களிக்கக்கூடிய இடத்தை இந்தியா ஆராயலாம். கூடுதலாக, எதிர்கால சுத்தமான எரிபொருளுக்கான உலகளாவிய, விதிகள் அடிப்படையிலான அமைப்பை உருவாக்குவதில் இந்தியா ஒரு பங்கை வகிக்க முடியும். ஆற்றல் பாதுகாப்பு முக்கியமானது. எவ்வாறாயினும், பாதுகாப்புவாத மற்றும் ஒருதலைபட்சமான கொள்கைகளைக் காட்டிலும், ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதை ஊக்குவிக்கும் மற்றும் சர்வதேச விதிகளைப் பின்பற்றும் பாதையில் இது தொடரப்பட வேண்டும்.


கரிம நீக்கம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை அடைய, கவனம் வன்பொருளிலிருந்து மென்பொருளுக்கு மாற வேண்டும். இந்தியா தற்போது இரண்டு விரைவான மாற்றங்களை சந்தித்து வருகிறது. முதலாவதாக, இது 820 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள இணைய பயனர்களைக் கொண்டுள்ளது. கிராமப்புறங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.


டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் அமைப்புகள் எவ்வாறு திறம்பட செயல்பட முடியுமா?  என்பது பௌதீக உள்கட்டமைப்பை உருவாக்குவதை விட அதிகம். மென்பொருள், செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட் மீட்டர்கள் ஆகியவற்றிலும் முதலீடு தேவைப்படுகிறது.


மில்லியன் கணக்கான ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர்களின் வெளியீடு ஆரம்பம்தான். இந்த மீட்டர்கள் மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் எப்படி, எப்போது வழங்குகிறது என்பதை மேம்படுத்த உதவுகிறது. இந்த மேம்படுத்தல் ஆற்றல் அமைப்புகளை மேலும் மீள்தன்மையுடையதாகவும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களுடன் இணக்கமாகவும் ஆக்குகிறது. டிஜிட்டல் முறையில் மின்சாரத்தை நிர்வகித்தல் ஒரு புதிய வணிக மாதிரியாக மாறும். இது வெறுமனே பௌதீக சக்தி உள்கட்டமைப்பை உருவாக்குவதைத் தாண்டி நகரும்.


ஆறாவது, ஒரு நேர்கோட்டில் இருந்து ஒரு வட்ட பொருளாதாரத்திற்கு செல்கிறது. இது ஆற்றல் அமைப்புகளுக்கு உதவுவது மட்டுமல்லாமல், நமது முக்கியமான கனிம பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது. சமீபத்திய CEEW ஆய்வில், இந்தியாவின் தற்போதைய மற்றும் புதிய சூரிய ஆற்றல் திறனில் இருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் 600 கிலோ டன்களை எட்டும் என்று கண்டறிந்துள்ளது. இது 720 ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளங்களை நிரப்புவதற்கு சமம். 


இந்த கழிவுகளை நிர்வகித்தல் மற்றும் சிலிக்கான், டெல்லூரியம் மற்றும் காட்மியம் போன்ற கனிமங்களைக் பாதுகாப்பது சுற்றுச்சூழல் தேவையாகும். ஆனால், நீர் மற்றும் விவசாயக் கழிவுகளின் வட்டப் பொருளாதாரத்தின் மையமாக இந்தியாவை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்.  இது காற்றின் தரம், நகர்ப்புற சுகாதாரம், நீர் இருப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு உதவக்கூடும்.


இறுதியாக, ஆற்றல் மாற்றத்தின் மையத்திற்கு மக்களைக் கொண்டு வாருங்கள். ஆற்றல் நிறுவனங்களுக்கு நிதியளிப்பதில் இருந்து இறுதிப் பயன்பாட்டு நுகர்வோருக்கு நிதியளிக்கும் நிலைக்கு மாற வேண்டிய அவசியம் உள்ளது. பெரிய மூலதனச் செலவில் மற்றும் சுத்தமான ஆற்றலாகப் பாயும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைப் பற்றி நாங்கள் தொடர்ந்து சிந்திக்கிறோம். ஆனால், இறுதிப் பயன்பாட்டு நுகர்வோர் மின்சார இரு சக்கர வாகனத்தை வாங்க விரும்புகிறாரோ, அல்லது தங்கள் கூரையில் சோலார் பேனல்களைப் பயன்படுத்த விரும்புகிறாரோ, அல்லது அவர்களின் புதிய வீட்டிற்கு அதிக திறன் வாய்ந்த சாதனங்களை விரும்புகிறாரோ, அதற்கான நிதி எங்கே? தனித்தனியாக,  நுகர்வோரின்  தேர்வு மிகவும் சிறியதாகவும் இருக்கலாம். ஆனால், நாம் ஒரு வரையறையை உருவாக்கும் போது, ​​ அவை  மிகப்பெரும் வாய்ப்பாக மாறும்.


இந்தியாவின் ஆற்றல் மாற்றத்திற்கு இது ஒரு முக்கியமான காலகட்டம். முன்னோக்கி செல்லும் பாதை என்பது ஒரு ஆற்றல் மூலத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறுவது மட்டுமல்ல. இது ஒரு முன்னுதாரண மாற்றம் மற்றும் ஆற்றல், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுடனான நமது உறவை மறுவரையறை செய்வதற்கான வாய்ப்பாகும். மேலும், கொள்கைகளின் மையத்தில் மக்களை மீண்டும் கொண்டு வரவும் உதவும்.




Original article:

Share:

எலோன் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி அமெரிக்க அரசாங்கத்தை ஒழுங்கமைக்க தலைமையேற்கிறார்கள்: DOGE என்றால் என்ன?

 எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசுவாமியின் கீழ் அரசாங்க செயல்திறன் துறையை அமைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த 'துறை' சரியாக என்ன செய்யும்?


அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், X வலைதள உரிமையாளர் எலோன் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் அரசாங்கத் திறன் துறை (Department of Government Efficiency (DOGE)) என்ற புதிய அமைப்பின் தலைவராக இருப்பார்கள் என்று அறிவித்துள்ளார்.


"அமெரிக்க தேசபக்தர் விவேக் ராமசாமியுடன் இணைந்து செயல்படும் கிரேட் எலோன் மஸ்க், அரசாங்கத் திறன் துறைக்கு ("DOGE") தலைமை தாங்குவார் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று டிரம்ப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


DOGE என்ற சுருக்கமானது மஸ்க் நீண்டகாலமாக ஆதரிக்கும் கிரிப்டோகரன்சியான dogecoin ஐக் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது.


DOGE என்றால் என்ன?, அதன் பங்கு மற்றும் செயல்பாடுகள் என்னவாக இருக்கும்?


அரசாங்க செயல்திறன் துறை (Department of Government Efficiency (DOGE)) என்ன செய்யும்?


உண்மையில், DOGE என்பது அமெரிக்காவின் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’ (Minimum Government, Maximum Governance) என்ற பதிப்பாக இருக்கும். குடியரசுக் கட்சி நீண்டகாலமாக குறைந்த கட்டுப்பாடுகள் மற்றும் குறைந்த வரிகளைக் கொண்ட நலிவடைந்த அரசாங்கத்தை ஆதரித்துள்ளது. இருப்பினும், அரசாங்க செலவினங்களைக் குறைக்க இரண்டு பெரும் செல்வந்தர்களை வேலைக்கு அமர்த்தும் டிரம்பின் திட்டம் முன்னோடியில்லாதது.


எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அரசு துறைகள் மற்றும் நிதியை மறுசீரமைப்பார்கள் என்று அமெரிக்க அதிபர் கூறினார். மேலும், அவர் கூறியதாவது, "இந்த இரண்டு அமெரிக்கர்கள் ஒன்றாக, அரசாங்க அதிகாரத்துவத்தை அகற்றவும், அதிகப்படியான விதிமுறைகளை குறைக்கவும், வீணான செலவினங்களைக் குறைக்கவும், கூட்டாட்சி நிறுவனங்களை மறுசீரமைக்கவும் எனது நிர்வாகத்திற்கு வழிவகுப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். ‘அமெரிக்காவை காப்போம்’ (Save America) இயக்கத்திற்கு இது மிகவும் முக்கியமானது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது அமைப்பின் மூலம் அதிர்வலைகளை ஏற்படுத்தும் மற்றும் அரசாங்க வளங்கள் வீணடிப்பதில் ஈடுபடும் பலரை பாதிக்கும் என்று அமெரிக்க அதிபர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.


துறை எவ்வாறு செயல்படும் என்பதை அறிய X-வலைதளத்தில் “அரசாங்கத்தின் செயல்திறன் துறையின் அனைத்து நடவடிக்கைகளும் அதிகபட்சமாக வெளிப்படைத்தன்மைக்காக இணையதளத்தில் வெளியிடப்படும். எப்பொழுதாவது, நாம் முக்கியமான ஒன்றை குறைக்கிறோம் அல்லது வீணானதை குறைப்பதில்லை என்று பொதுமக்கள் நினைக்கும் போது, ​​எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்! உங்களின் வரி டாலர்களை மிகவும் முட்டாள்தனமாக செலவழிப்பதற்கான தலைமையையும் நாங்கள் வைத்திருப்போம். இது மிகவும் சோகமாகவும், மிகவும் வேடிக்கையாகவும் இருக்கும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.


ராமஸ்வாமி X வலைதளத்தில் குறிப்பிட்டதாவது, “DOGE விரைவில் அரசாங்க வளங்கள் வீணடிப்பு, மோசடி மற்றும் துஷ்பிரயோகம் போன்றவற்றின் நெருக்கடி ஆதாரத்திற்கான உதாரணங்களைத் தொடங்கும். அமெரிக்கர்கள் கடுமையான அரசாங்க சீர்திருத்தத்திற்கு வாக்களித்தனர் மற்றும் அதை சரிசெய்வதில் அவர்கள் ஒரு பகுதியாக இருக்க தகுதியானவர்கள்.


மூன்று பேரின் பதவிகள், DOGE என்ன செய்யப் போகிறது என்பதற்கான முக்கிய அறிகுறிகளாகும். ஏனெனில், அந்தத் துறை எவ்வாறு அமைக்கப்படும், அது அதன் வேலையை எப்படிச் செய்யும் அல்லது அதற்கு யார் நியமிக்கப்படுவார்கள் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.


அரசின் திறன் துறை எவ்வாறு செயல்படும்?


டிரம்பின் அறிக்கை DOGE ஒரு அரசாங்கத் துறையாக இருக்காது என்பதைத் தெளிவாக்குகிறது. "அரசாங்கத்தின் செயல்திறன் துறையானது அரசாங்கத்திற்கு வெளியே இருந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும். மேலும், பெரிய அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்களை இயக்குவதற்கு வெள்ளை மாளிகை மற்றும் மேலாண்மை மற்றும் நிதிநிலை அறிக்கை அலுவலகத்துடன் இணைந்து செயல்படும். மேலும் அரசாங்கத்திற்குமுன் எப்போதும் கண்டிராத தொழில் முனைவோர் அணுகுமுறையை உருவாக்கும்" என்று அவர் கூறினார். 


எலோன் மஸ்க்கும், ராமசுவாமியும் தங்கள் வணிக முயற்சிகளில் தற்போதைய நிலைமைகளை தொடர முடியும் என்பதை உறுதி செய்வதற்கான ஒரு வழியாக இது பார்க்கப்படுகிறது. அவர்கள் மத்திய அரசு ஊழியர்களாக இருந்திருந்தால், அவர்களின் நியமனத்திற்கான விதிகள் பொருந்தியிருக்கும்.


சுதந்திரப் பிரகடனத்தின் 250-வது ஆண்டு விழாவான ஜூலை 4, 2026-ம் ஆண்டுக்குள் இந்தத் துறை தனது பணியை முடிக்க வேண்டும்.


டிரம்ப் DOGE-ஐ "நம் காலத்தின் மன்ஹாட்டன் திட்டம்" (The Manhattan Project of our time) என்று அழைப்பது, அமெரிக்காவின் முதல் அணுகுண்டை உருவாக்கிய திட்டத்தைக் குறிக்கிறது. இருப்பினும், பலர் ஆர்வமாக இல்லை.


அவ்வாறான அதிகாரப் பதவிகளில் இரண்டு வர்த்தகர்களை நியமிப்பது நலன்களுக்கு இடையிலான முரண்பாடான கேள்விகளை எழுப்பும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உதாரணமாக, மஸ்க் தனது பல திட்டங்களில் அரசாங்க விதிமுறைகளை மீறியுள்ளார். மேலும், இருவருக்குமே நிர்வாக அனுபவம் இல்லை, இது பெருநிறுவன-நிலைகளின் செயல்திறனைத் தவிர, பல நலன்சார்ந்த செயல்பாடுகளைச் செய்ய வேண்டும்.


செலவுகளைக் குறைக்க ஒரு தனி அமைப்பை உருவாக்குவது செலவுகளை அதிகரிக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். இந்த புதிய அமைப்பு அதன் சொந்த ஊழியர்களையும் நிதிநிலை அறிக்கையும் கொண்டிருக்கலாம்.




Original article:

Share: