MuleHunter AI : ஆள்மாறாட்ட பணப்பரிமாற்ற வங்கிக்கணக்குகளைக் கண்டறிதல் - ரோஷினி யாதவ்

 சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, MuleHunter.AI உருவாக்கப்பட்டதாக அறிவித்தது. இதன் மாதிரி மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன? 


வெள்ளிக்கிழமை, டிசம்பர் 6-ம் தேதி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) MuleHunter.AI என்ற AI-செயல் மாதிரியை உருவாக்குவதாக அறிவித்தது. இந்த மாதிரி டிஜிட்டல் மோசடியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆள்மாறாட்ட பணப்பரிமாற்ற (mule) வங்கிக் கணக்குகளின் வளர்ந்து வரும் சிக்கலைச் சமாளிக்க இது வங்கிகளுக்கு உதவுகிறது. இந்த மாதிரியை இந்திய ரிசர்வ் வங்கி புத்தாக்க மையம் (Reserve Bank Innovation Hub(RBIH)) உருவாக்கியது.


முக்கிய அம்சங்கள்


1. MuleHunter.AI என்பது ஆள்மாறாட்ட பணப்பரிமாற்ற வங்கிக் கணக்குகளை திறமையான முறையில் கண்டறிய உதவுகிறது. இரண்டு பெரிய பொதுத்துறை வங்கிகளுடன் ஒரு முன்னோடித் திட்டம் நேர்மறையான முடிவுகளைக் காட்டியதாக இந்திய ரிசர்வ் வங்கியின் வெளியீடு குறிப்பிடுகிறது. MuleHunter.AI மாதிரியை மேம்படுத்த வங்கிகள் ரிசர்வ் வங்கி கண்டுபிடிப்பு மையத்துடன் (RBIH) இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது. நிதி மோசடிக்கு பயன்படுத்தப்படும் ஆள்மாறாட்ட பணப்பரிமாற்ற வங்கிக் கணக்குகளின் (mule bank accounts) சிக்கலைத் தீர்ப்பதை இந்த ஒத்துழைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.


2. ஆள்மாறாட்ட பணப்பரிமாற்ற கணக்குகளை (mule accounts) ஒடுக்கவும் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வெள்ளிக்கிழமையன்று, நிதிச் சேவைகள் துறை செயலர் கூட்டம் நடத்தினார். இந்தக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C), விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி மற்றும் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். டிஜிட்டல் நிதி மோசடி, குறிப்பாக மியூல் கணக்குகள் அதிகரித்து வரும் பிரச்சனை குறித்து அவர்கள் விவாதித்தனர்.


3. வெள்ளிக்கிழமை கூட்டத்தில், வங்கிகள் சிறந்த நடைமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டது. அவர்கள் அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தவும், ஆள்மாறாட்ட பணப்பரிமாற்ற கணக்குகளை திறம்பட நிவர்த்தி செய்ய வங்கிகளுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் ஊக்குவிக்கப்பட்டனர். கூடுதலாக, ரிசர்வ் வங்கியின் Mulehunter.AI மூலம் தீர்வை ஆராய்ந்து செயல்படுத்த வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது ஆள்மாறாட்ட பணப்பரிமாற்ற கணக்குகளைக் கண்டறிந்து கண்காணிப்பதை மேம்படுத்த உதவும்.


ரிசர்வ் வங்கி புத்தாக்க மையம் (Reserve Bank Innovation Hub(RBIH)) 

        RBIH என்பது இந்திய ரிசர்வ் வங்கிக்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமாகும். நிதித்துறையில் புதுமைகளை துரிதப்படுத்தும் சூழலை மேம்படுத்துவதற்கும் உருவாக்குவதற்கும் இது அமைக்கப்பட்டது.


ஆள்மாறாட்ட பணப்பரிமாற்ற வங்கி கணக்கு (Mule Bank Account)


1. இந்தியாவில் பெரும்பாலான இணையவழி நிதி மோசடிகளில் ஆள்மாறாட்ட பணப்பரிமாற்ற வங்கிக் கணக்குகள் ஒரு முக்கிய அங்கமாகக் காணப்படுகின்றன.  சைபர் குற்றங்களின் வருமானத்தை மோசடி செய்ய பொதுவாக பயன்படுத்தப்படும் இதுபோன்ற சுமார் 4.5 லட்சம் வங்கிக் கணக்குகளை ஒன்றிய அரசு முடக்கியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த மாதம் செய்தி வெளியிட்டிருந்தது. 


2. ஆள்மாறாட்ட பணப்பரிமாற்றக் கணக்கு என்பது சட்டவிரோத நிதிகளை மோசடி செய்வது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு குற்றவாளிகளால் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்காகும். ஒரு ஆள்மாறாட்ட பணப்பரிமாற்றக் கணக்கு பொதுவாக குற்றவாளிகளால் அவர்களின் உண்மையான பயனர்களிடமிருந்து, பெரும்பாலும் குறைந்த வருமானக் குழுக்களைச் சேர்ந்த நபர்களிடமிருந்து அல்லது குறைந்த அளவிலான தொழில்நுட்ப கல்வியறிவு கொண்ட நபர்களிடமிருந்து வாங்கப்படுகிறது. 


டிஜிட்டல் கைது

        டிஜிட்டல் கைது என்பது ஒரு வகையான ஆன்லைன் மோசடியாகும். இந்த மோசடியில், மோசடி செய்பவர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் மூலம், வீடியோ கால் செய்து போலியான கைதுகளை மிரட்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் பறிப்பதே இவர்களின் முக்கிய குறிக்கோள் ஆகும்.


3.  "ஆள்மாறாட்ட பணப்பரிமாற்றம்" (money mule) என்ற வார்த்தையானது, தங்கள் வங்கிக் கணக்குகள் மூலம் திருடப்பட்ட அல்லது சட்டவிரோதமான பணத்தைச் சுத்தப்படுத்த குற்றவாளிகளால் பயன்படுத்தப்படும் அப்பாவி பாதிக்கப்பட்டவர்களைக் குறிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் புகாரளிக்கப்படும்போது, ஆள்மாறாட்ட பணப்பரிமாற்றம் காவல் விசாரணையின் முக்கிய இலக்காகிறது. ஏனென்றால், உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் அதே வேளையில், ஆள்மாறாட்ட பணப்பரிமாற்றத்தின் கணக்குகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன.


1. செயற்கை நுண்ணறிவு (AI) என்பது இயந்திரங்கள், குறிப்பாக கணினிகள், பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்யும் திறன் ஆகும். இந்தப் பணிகளில் மொழியைப் புரிந்துகொள்வது, வடிவங்களை அங்கீகரிப்பது, சிக்கல்களைத் தீர்ப்பது மற்றும் முடிவுகளை எடுப்பது ஆகியவை அடங்கும். 


2. கணக்கீட்டு சக்தி மற்றும் பெரிய தரவுகளின் முன்னேற்றங்கள், படம் மற்றும் பேச்சு அங்கீகாரம், இயற்கை மொழி செயலாக்கம் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் போன்ற பகுதிகளில் AI-ன் திறனை அதிகரித்துள்ளன. இன்று, AI தொடர்ந்து உருவாகி வருகிறது. இது பல தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது, புதுமைகளை இயக்குகிறது மற்றும் அன்றாட வாழ்க்கையை மாற்றுகிறது.


3. AI-ஐ இரண்டு வகைகளாக வகைப்படுத்தலாம். ஒன்று, செயற்கை குறுகிய நுண்ணறிவு (Artificial Narrow Intelligence (ANI)) பலவீனமான AI என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் செயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence (AGI)) வலுவான AI என்றும் குறிப்பிடப்படுகிறது. 


4. செயற்கை குறுகிய நுண்ணறிவு (ANI) குறிப்பிட்ட பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரு குறுகிய களத்திற்குள் சிறந்து விளங்குகிறது. எடுத்துக்காட்டுகளில் சிரி போன்ற மெய்நிகர் உதவியாளர்கள், நெட்ஃபிக்ஸ் போன்ற தளங்களில் பரிந்துரை அமைப்புகள் மற்றும் பட அங்கீகார மென்பொருள் ஆகியவை அடங்கும். 


5. செயற்கை பொது நுண்ணறிவு (AGI) மனித அறிவாற்றல் திறன்களை பிரதிபலிக்கும் நோக்கம் கொண்டது. இது மனிதர்களால் செய்யக்கூடிய எந்தவொரு அறிவுசார் பணியையும் செய்ய அனுமதிக்கும். செயற்கை பொது நுண்ணறிவுக்கு பொதுவான பகுத்தறிவுத் திறன் இருக்கும். இது சூழலைப் புரிந்துகொண்டு வெவ்வேறு பகுதிகளில் புதிய சூழ்நிலைகளுக்கு மாற்றியமைக்க முடியும். ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட நிரலாக்கம் தேவையில்லாமல், AGI தானே பிரச்சனைகளைக் கற்று தீர்க்க முடியும்.


6. இயந்திர கற்றல் (Machine Learning (ML)) மற்றும் ஆழமான கற்றல் (Deep Learning (DL)) ஆகியவை AI-ன் துணைக்குழுக்கள், ஆனால் சிக்கலான தன்மை மற்றும் திறன்களில் வேறுபடுகின்றன. 


7. இயந்திர கற்றல் தரவுகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கும் கணிப்புகளைச் செய்வதற்கும் பயிற்சி வழிமுறைகளை உள்ளடக்கியது மற்றும் பெரும்பாலும் மனித இயக்க பிரித்தெடுத்தல் தேவைப்படுகிறது. 


8. ஆழமான கற்றல் என்பது இயந்திர கற்றலின் (ML) துணைக்குழு ஆகும். இது பல அடுக்குகளைக் கொண்ட நரம்பியல் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துகிறது. அதனால்தான் இது "ஆழமான" என்று அழைக்கப்படுகிறது. இந்த நெட்வொர்க்குகள் பெரிய தரவுத்தொகுப்புகளிலிருந்து அம்சங்களை தானாகவே கற்றுக்கொள்கின்றன. சிறிய தரவுத்தொகுப்புகளுடன் ML சிறப்பாகச் செயல்படும் அதே வேளையில், ஆழமான கற்றலுக்குப் பரந்த அளவிலான தரவு மற்றும் குறிப்பிடத்தக்க கணக்கீட்டு சக்தி தேவை.




Original article:

Share:

மத சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி . . . - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்


1. நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வின் கருத்துக்கணிப்புகள் இடஒதுக்கீட்டிற்கான அளவுகோலாக மதத்தை அடிப்படையாகப் பயன்படுத்துவது அரசியலமைப்புத்தன்மை குறித்த பெரிய கேள்வியாக அரசியல் சாசன அமர்வு முன் நிலுவையில் உள்ளன. 


2. மே 22 அன்று கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு மேற்குவங்காள அரசு மற்றும் பிற மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். கல்கத்தா உயர் நீதிமன்றம் 2010-ம் ஆண்டு முதல் மாநிலத்தால் வழங்கப்பட்ட அனைத்து 77 சமூகங்களுக்கு OBC சான்றிதழ் வழங்குதலை ரத்து செய்தது. இதற்கு, "மதம் மட்டுமே ஒரே அளவுகோலாகத் தெரிகிறது" என்று நீதிமன்றம் கூறியது.


3. மே 22 அன்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. மார்ச் 5 முதல் செப்டம்பர் 24, 2010 வரை மேற்குவங்காள அரசு இதேபோன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டது. அவர்களில் "42 வகுப்பினர்கள்" அடங்கும். அதில் 41 முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இந்த வகுப்புகள் OBC-களாக வகைப்படுத்தப்பட்டன. இந்த வகைப்பாடு அரசியலமைப்பின் பிரிவு 16(4)ன் கீழ் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மற்றும் பிரதிநிதித்துவத்திற்கு அவர்களுக்கு உரிமை அளித்துள்ளது.


மேலும், இந்த ஆண்டு செப்டம்பர் 24 அன்று, ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட 108 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை (OBC) துணை வகைப்படுத்தியது. இதில் 66 ஏற்கனவே OBC-ல் இருப்பவர்களும், 42 புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களும் அடங்குவர். அவர்கள் 56 "ஓபிசி-ஏ (மேலும் பின்தங்கியவர்கள்)" மற்றும் 52 "ஓபிசி-பி (பின்தங்கியவர்கள்)" போன்ற வகைகளாகப் பிரிக்கப்பட்டனர்.


உங்களுக்குத் தெரியுமா? 


1. இடஒதுக்கீடு சவால் செய்யப்படும் பெரும்பாலான வழக்குகளில், உயர் நீதிமன்றம் (HC) இந்திரா சாவ்னி vs இந்திய ஒன்றியம் (மண்டல் தீர்ப்பு) (Indra Sawhney vs Union of India) உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பெரிதும் நம்பியுள்ளது.


2. 1992-ம் ஆண்டில், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை (OBC) அடையாளம் கண்டு, மதத்தின் அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று தீர்ப்பளித்தது. அனைத்து மாநிலங்களும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாநில ஓபிசி பட்டியலில் எந்த துணைப்பிரிவுகளில் குடிமக்கள் சேர்க்கப்பட வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என்பதைக் கண்டறிந்து பரிந்துரைக்கும் பொறுப்பை இந்த ஆணையம் கொண்டுள்ளது.


3. தற்போதைய வழக்கில், ஆணையம் மற்றும் அரசாங்கம் இரண்டும் குடிமக்களின் விண்ணப்பங்களின் அடிப்படையில் 77 வகுப்பினர்களை ஆணையம் அடையாளம் காட்டியது. அதன்பிறகு, அவர்களை இணைக்க ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்தது.


4. முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அப்போதைய முதலமைச்சர் பகிரங்கமாக (பிப்ரவரி 2010 இல்) அறிவித்த பின்னர், இந்த வகுப்புகளின் பிற்படுத்தப்பட்டவர்களின் நிலையை தீர்மானிக்க எந்தவொரு "புறநிலை அளவுகோல்களையும்" (objective criteria) பயன்படுத்தாமல், ஆணையத்தின் பரிந்துரை மிக விரைவாக வழங்கியதாக உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது. 


5. மேற்கு வங்காளத்தின் 2012 சட்டத்தின் சில பகுதிகளையும் நீதிமன்றம் ரத்து செய்தது. இதில் குறிப்பிட்டுள்ளவை,


(i) மாநில அரசு OBC இடஒதுக்கீடுகளை OBC-A மற்றும் OBC-B வகைகளாக "மேலும் பிற்படுத்தப்பட்ட" மற்றும் "பிற்படுத்தப்பட்ட" வகுப்பினருக்குப் பிரிக்க அனுமதித்த விதி, மற்றும்


(ii) 2012-ம் ஆண்டு சட்டத்தின் அட்டவணையை மாற்றியமைத்து. மேலும், OBC-களை பட்டியலில் சேர்க்க மாநிலத்தை அனுமதித்த விதி ஆகியவை இதில் அடங்கும்.


5. துணை வகைப்பாடு என்பது வெவ்வேறு சமூகங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அளவிலான இழப்புகளை நிவர்த்தி செய்வதாகும். இது ஆணையத்தால் சேகரிக்கப்பட்ட குறிப்பேடுகளை குறிப்பிடுவதன் மூலம் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியும் என்று நீதிமன்றம் கூறியது. 




Original article:

Share:

மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகின்றன. அதற்கான நடைமுறை என்ன? அந்த முயற்சி ஏன் வெற்றி பெற வாய்ப்பில்லை? -அஜய் சிஹ்னா கற்பூரம்

 அரசியலமைப்புப் பிரிவு 67-ன் விதிமுறையானது விரிவானது. இது, மாநிலங்களவைத் தலைவரை நீக்குவதற்கான தீர்மானத்தை 'அனைத்து உறுப்பினர்களிலும் பெரும்பான்மை' மூலம் நிறைவேற்ற வேண்டும். மேலும், மக்களவை 'ஒப்புக்கொள்ள வேண்டும்'. இதுவரை எந்த குடியரசுத் துணைத்தலைவரும் இப்படி பதவியில் இருந்து நீக்கப்படவில்லை.


மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தங்கருக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) அன்று நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான (no-confidence motion) அறிவிப்பை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தன. இது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல் நடவடிக்கையாகும். 


ஆகஸ்ட் மாதம் நடந்த வரவுசெலவு திட்டக் கூட்டத்தொடரின்போது இதேபோன்ற தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் பரிசீலித்து வந்தன. ஆனால், அந்த சந்தர்ப்பத்தில் அது பின்பற்றப்படவில்லை. 


இந்தியாவின் குடியரசுத் துணைத்தலைவராக இருக்கும் மாநிலங்களவை தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான செயல்முறை மற்றும் தேவைகள் என்ன? அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்த நடவடிக்கையை எவ்வாறு பரிந்துரைக்கிறார்கள்?  என்று சில கேள்விகள் முன்வைக்கப்படுகிறது.

 

இந்திய அரசியலமைப்பின் 64-வது பிரிவு, குடியரசுத் துணைத்தலைவர் "மாநிலங்கள் குழுவின் அலுவல் சார்ந்த தலைவராக இருப்பார்" என்று குறிப்பிடுகிறது.


குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவரும் ஒரே நபராக இருக்க வேண்டும் என்பதால், அவர்களை நீக்குவதற்கான செயல்முறையும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று அரசியலமைப்புப் பிரிவு 67-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த விதியின் கீழ், குடியரசுத் துணைத்தலைவர் "அவர் பதவியேற்ற தேதியிலிருந்து ஐந்து ஆண்டு காலத்திற்கு பதவியில் இருப்பார்". அதற்கு முன்னர் குடியரசுத் துணைத்தலைவரானவர், குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதத்தை அனுப்புவதன் மூலம் பதவி விலகலாம்.


குடியரசுத் துணைத்தலைவரை நீக்குவதற்கான அல்லது குற்றஞ்சாட்டுவதற்கான தேவைகள் அரசியலமைப்புப் பிரிவு 67(b)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளன. 


மாநிலங்களவையில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினால், குடியரசுத் துணைத்தலைவர் பதவி நீக்கம் செய்யலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த தீர்மானம் மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.


இந்த விதியின் கீழ், 14 நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வழங்கப்படாவிட்டால், தீர்மானத்தை நகர்த்த முடியாது. மேலும், இந்த அறிவிப்பானது தீர்மானத்தை முன்வைப்பதற்கான நோக்கம் என்ன என்பதை குறிப்பிட வேண்டும்.


14 நாட்கள் அவகாசம் முடிவடைந்ததும், மாநிலங்களவை தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும். பின்னர், அரசியலமைப்புப் பிரிவு 67 (பி) இல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறை பின்பற்றப்படும்.


தற்போதைய வழக்கில், தீர்மானத்தை நாடாளுமன்ற அவையில் எடுத்துக் கொள்ளப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனென்றால், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 20-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இது 14 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது. இதே தீர்மானத்தை அடுத்த கூட்டத் தொடரில் பரிசீலிக்க முடியுமா என்பதை தீர்மானிக்க எந்த முன்னுதாரணங்களும் இல்லை. 


எது எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தில் உள்ள கணக்குகளைப் பார்க்கும்போது, தீர்மானம் தோற்கடிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. குடியரசுத் துணைத்தலைவர் நாடாளுமன்ற அவையை நடத்தும் விதத்தில் நியாயமற்றவர் மற்றும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின் அடையாளமாக இந்த நம்பிக்கையில்லா தீர்மான நடவடிக்கை உள்ளது. 


அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்களின் போது, ​​பல உறுப்பினர்கள் அரசியலமைப்புப் பிரிவு 67 குறித்து கவலைகளை எழுப்பினர். இது, குடியரசுத் துணைத்தலைவர் நீக்கும் செயல்முறையை தெளிவாக்குவதற்கு அவர்கள் திருத்தங்களை முன்மொழிந்தனர்.


மாநிலங்களவை தீர்மானம் மக்களவையால் "ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்" என்ற தேவை "மிகவும் தெளிவற்றது" என்று எச்.வி.காமத் சுட்டிக்காட்டினார். மேலும், தீர்மானமானது பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமா என்பதைக் கூட குறிப்பிடவில்லை. 


மக்களவையும் பெரும்பான்மையுடன் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை தெளிவாகக் காட்ட "இதேபோன்ற தீர்மானத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டது" (agreed to by a similar resolution) என்று வாசிக்க வேண்டும் என்று காமத் முன்மொழிந்தார். 


மக்களவை உண்மையில் ஒரு தனிப் பெரும்பான்மையுடன் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தெளிவுபடுத்தினார். இதன் பொருள் அனைத்து உறுப்பினர்களில் 50% நபர்கள் கலந்துகொண்டு வாக்களிக்கும் தீர்மானத்திற்கு உடன்பட வேண்டும்.


ஆனால், மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான தேவையும் வேறுவிதமாக இருப்பதால் இதில் குறிப்பிட்டுள்ள காரணங்களும் வேறு என்று அவர் விளக்கினார். இந்த தீர்மானம் மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களைத் தவிர்த்து, பெரும்பான்மையான அனைத்து உறுப்பினர்களாலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அவையில் கலந்துகொண்டு வாக்களிப்பவர்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல.


குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை ஒப்பிடும்போது இதில் எழும் கேள்விகள் "புதிவிதமான முரண்பாட்டை" (strange anomaly) காமத் சுட்டிக்காட்டினார். 


அரசியலமைப்பு பிரிவு 61 ஆனது, குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறையை கோடிட்டுக் காட்டுகிறது. இவர்களின் குற்றச்சாட்டுடன் கூடிய தீர்மானம், குற்றம் சுமத்தப்படும் அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்பட வேண்டும்.


"நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் ஒரு குற்றச்சாட்டு அவ்வாறு முன்வைக்கப்பட்டால், மற்ற அவை அந்தக் குற்றச்சாட்டை விசாரிக்கும் அல்லது குற்றச்சாட்டு விசாரிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கும். மேலும், அத்தகைய விசாரணையில் ஆஜராகவும் பிரதிநிதித்துவப்படுத்தவும் குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு". 


விசாரணைக்குப் பிறகு, குற்றச்சாட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அல்லது விசாரிக்கப்பட வேண்டிய நாடாளுமன்ற அவையானது "அவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத பெரும்பான்மையால்" ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால்... குடியரசுத் தலைவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கும் தீர்மானம், "தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தேதியிலிருந்து குடியரசுத் தலைவரை அவரது பதவியிலிருந்து நீக்கும் விளைவைக் கொண்டிருக்கும்". 


டாக்டர் அம்பேத்கர், அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் துணைத்தலைவரைக் குறிப்பிடுகிறது என்றாலும், அவர் உண்மையில் மாநிலங்களவையின் தலைவர் என்று விளக்கினார். அவரது கடமைகளைப் பொறுத்தவரை, அவர் மக்களவை  சபாநாயகருக்கு இணையானவர் என்று குறிப்பிட்டிருந்தார்.


குடியரசுத் துணைத்தலைவர் மற்றும் சபாநாயகரை (அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 94ன் கீழ்) நீக்குவதற்கான செயல்முறைகள் ஒன்றுதான் என்றும் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டிருந்தார்.




Original article:

Share:

நோக்கம் இல்லாமல் முடிகிறது : பல்கலைக்கழக மானியக் குழு சீர்திருத்தங்கள் மற்றும் உயர்கல்வி குறித்து . . .

 பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)) சீர்திருத்தங்களின் இலக்குகள் தெளிவானவை. இருப்பினும், அவைகளுக்கு ஆதரவளிக்க சரியான ஆதாரங்கள் தேவை.


வரைவு UGC (இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலைகள்) விதிமுறைகள் (UGC (Minimum Standards of Instruction for the Grant of Undergraduate and Postgraduate Degree) Regulations), 2024 இந்தியாவின் உயர்கல்வி முறையில் பெரிய மாற்றங்களை பரிந்துரைக்கிறது. இளங்கலை (undergraduate (UG)) மற்றும் முதுகலை (postgraduate (PG)) படிப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை சேர்க்கையில், எந்தவொரு துறையைச் சேர்ந்த மாணவர்களும் பொருத்தமான தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் UG மற்றும் PG-ல் எந்தவொரு துறைச் சார்ந்த படிப்பையும் தொடர உதவுவதும் மற்றும் படிப்புகளை நீட்டிக்க அல்லது தீவிரப்படுத்த அனுமதிப்பது ஆகியவை இதில் அடங்கும். மாணவர்கள் ஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகளைத் தொடரலாம். உயர்கல்வி நிறுவனங்கள் தங்களுடைய வருகைக்கானத் தேவைகளை நிர்ணயித்துக் கொள்ள சுதந்திரம் இருக்கும். யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ் குமாரின் கூற்றுப்படி, இந்த மாற்றங்கள் கடுமையான கட்டுப்பாட்டை அகற்றும், உலகளாவிய தரநிலைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இதன் நோக்கம் பாராட்டத்தக்கது என்றாலும், ஒரு விதிமுறையானது தேர்வுகளை ஒரு தகுதிக்கான அளவுகோலாக மையப்படுத்துகிறது. இது நெகிழ்வுத்தன்மையைக் குறைக்கலாம். இந்த, வரைவு விதிகள் தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) 2020 உடன் ஒத்துப்போகின்றன. இது கலப்பின கற்றல் மாதிரிகள் மற்றும் திறன் அடிப்படையிலான கல்வியை வலியுறுத்துகிறது. வரைவு விதிகள் தேசிய கடன் கட்டமைப்பை (National Credit Framework) செயல்படுத்துவதற்கும் ஆதரவளிக்கின்றன. இது மாணவர்களுக்கு அதிகளவில் கல்வியை அணுகுவதற்கு  நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. 


எவ்வாறாயினும், இந்த சீர்திருத்தங்களின் இலக்குகள் தெளிவாக இருந்தாலும், அத்தகைய பெரும் மாற்றங்களை செயல்படுத்த போதுமான ஆதாரங்கள் உள்ளனவா என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது. இதில், பொருந்தக்கூடிய அளவில், போதிய ஆசிரியர்கள் இல்லாமை, நிதிப் பற்றாக்குறை மற்றும் போதுமான பயிற்சிபெற்ற அல்லது ஊக்கமளிக்கும் ஆசிரியர்கள் இல்லாமை போன்ற முறையான பிரச்சினைகள் மிகப்பெரிய தடைகளாக உள்ளன. மேலும், பெரும்பான்மையான மாணவர்கள் படிக்கும் இணைப்புக் கல்லூரிகளை (affiliated colleges) நிர்வகிக்கும் வகுப்புக்கான தேவைகள் போன்ற ஒழுங்குமுறை கட்டமைப்பு, தன்னாட்சி நிறுவனங்களில் மிகவும் எளிதாக செயல்படுத்தக்கூடிய இந்த புதிய விதிகளை ஆதரிக்க போதுமான வசதிகள் இல்லை. கல்வி என்பது தற்போது பொதுப்பட்டியலில் (concurrent list) இருப்பதால், மாநில அரசுகள் பெரும்பாலும் புதிய விதிமுறைகளுக்கேற்ப ஆரம்பத்தில் ஒன்றிய அரசுக்கு இணங்குவதைக் காட்டுகின்றன. 


ஆனால், பின்னர் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுகின்றன. கல்வி அமைப்புகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளுக்குள் உள்ள செயலற்ற தன்மை, 'கல்வி கடன் வங்கி' (academic bank of credits) போன்ற மாற்றங்களை திறம்பட ஏற்றுக்கொள்வதை மேலும் சிக்கலாக்குகிறது. இந்த முயற்சி மாணவர்கள் ஒரு நிறுவனத்தில் பதிவு செய்யவும், மற்றொரு நிறுவனத்திலிருந்து படிப்புகளை எடுக்கவும், ஒரு நிறுவனத்தில் பயிற்சிகளை முடிக்கவும் அனுமதிக்கிறது. இதன் பின்னர், முதல் நிறுவனத்தால் பட்டம் வழங்கப்படுகிறது. இத்தகைய நெகிழ்வுத்தன்மை வியக்கத்தக்கது என்றாலும், இது பாரம்பரிய கல்விக் கட்டமைப்புகளிடமிருந்து கணிசமான எதிர்ப்பை எதிர்கொள்கிறது. மேலும், இந்த சீர்திருத்தங்களின் வெற்றியானது கல்வியில் முதலீட்டின் கணிசமான அதிகரிப்பைச் சார்ந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முந்தைய ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது உயர் கல்விக்கு 15% குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யுஜிசி வரைவு விதிகள் ஒரு நம்பிக்கைக்குரிய விதிமுறைகளை வழங்கினாலும், அவற்றின் வெற்றி தற்போதுள்ள முறையான சவால்களை எதிர்கொள்வதிலும், போதுமான ஆதாரஙகள் இருப்பதை உறுதி செய்வதிலும் சவால்களை எதிர்கொள்கிறது. 




Original article:

Share:

சூரிய ஆற்றலின் உலகளாவிய பங்கு என்ன? - அஜய் முத்தூர், சபா கலாம்

 சர்வதேச சூரிய கூட்டணியால் (International Solar Alliance (ISA)) வெளியிடப்பட்ட உலக சூரிய அறிக்கை 2024 என்ன கூறுகிறது?


நவம்பர் 5 அன்று, சர்வதேச சூரிய கூட்டணியின் (ISA) உலக சூரிய அறிக்கை 2024 வெளியிடப்பட்டது. 2000 ஆம் ஆண்டில், உலகின் சூரிய சக்தி 1.22 ஜிகாவாட் ஆக இருந்தது. 2023ஆம் ஆண்டில், இது 1,419 ஜிகாவாட் ஆக உயர்ந்தது. கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (Compound annual growth rate (CAGR)) சுமார் 36%-ஐக் காட்டுகிறது. இன்று, உலகம் முழுவதும் புதுப்பிக்கத்தக்க திறன் சேர்த்தல்களில் முக்கால் பங்கை சூரிய திறன் கொண்டுள்ளது.


புதிய சூரிய தொழில்நுட்பங்கள் என்றால் என்ன? 


குவாண்டம் டாட் சோலார் செல்கள் 18.1% சாதனை முறியடிக்கும் செயல்திறனைப் பெற்றுள்ளன. இது சூரிய ஆற்றல் பிடிப்பு (solar energy capture) மற்றும் ஆற்றல் வளிமண்டல நீர் சேகரிப்பு தொழில்நுட்பங்களை (atmospheric water harvesting technologies) மேம்படுத்துவதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய வழியாகும். சுய-குணப்படுத்தும் சோலார் பேனல்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர். இந்த பேனல்கள் சூரிய மின்கலங்களின் ஆயுட்காலத்தை நீட்டித்து பராமரிப்பைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சூரிய சக்தியில் இயங்கும் பைட்டோ-சுரங்கமானது மண்ணிலிருந்து மதிப்புமிக்க உலோகங்களை தாவரங்கள் மூலம் பிரித்தெடுக்க சூரிய சக்தியைப் பயன்படுத்துகிறது. இந்த முறை பாரம்பரிய சுரங்கத்திற்கு ஒரு மாற்றாக உள்ளது. கட்டிட உட்கட்டமைப்புடன் ஒருங்கிணைந்த சோலார் பேவர் பிளாக்குகள் மற்றும் பில்டிங் இன்டக்ரேட்டட் பிவி (Building Integrated PV (BIPV)) தொழில்நுட்பங்கள், வெளிப்படையான சோலார் பேனல்கள் போன்றவை, ஒளியைக் கடந்து செல்ல அனுமதிக்கிறது மற்றும் பார்வையை வழங்குகிறது. இந்த மாற்று தொழில்நுட்பங்கள் லித்தியம் மற்றும் அரிதான பூமி கூறுகள் போன்ற முக்கியமான பொருட்களின் தேவையை குறைக்கும். சூரிய தொழிற்துறையானது பேனல்களை மறுசுழற்சி செய்வதிலும் சுற்றுச்சூழலின் பாதிப்பைக் குறைப்பதற்காக வட்ட பொருளாதார நடைமுறைகளைப் (circular economy practices) பின்பற்றுவதிலும் கவனம் செலுத்துகிறது.


செலவுகளைக் குறைப்பது உதவியதா? 


2024 சர்வதேச சூரிய கூட்டணி அறிக்கை, பயன்பாட்டு அளவிலான சூரிய ஒளிமின்னழுத்த (photovoltaic (PV)) திட்டங்களுக்கான ஏல விலைகள் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து குறைந்து வருவதாகக் காட்டுகிறது. 2024 இல், பயன்பாட்டு அளவிலான சோலார் PVக்கான சராசரி செலவு $40 மெகாவாட் (megawatt (MWh)) ஆக இருந்தது. ஏலத்தின் மூலம் வழங்கப்பட்ட சூரிய ஒளிமின்னழுத்த திறனில் இந்தியா உலகளவில் முதல் இடத்தைப் பிடித்தது. குறிப்பிடத்தக்க ஏல விலை $34 மெகாவாட் மின்திறன் (MWh). 2024-ஆம் ஆண்டிற்குள் மின்சாரத் துறையில் சோலார் PV தொழில்நுட்பத்தில் முதலீடு $500 பில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மற்ற அனைத்து வகையான மின் உற்பத்திகளிலும் உள்ள கூட்டு முதலீட்டைவிட அதிகமாக இருக்கும்.


உலக சந்தை பற்றி? 


2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, சூரிய ஒளிமின்னழுத்த சீனா முன்னணியில் உள்ளது. இது உலக சூரிய ஒளிமின்னழுத்த பேனல் திறனில் 43% (609 GW) ஆகும். அமெரிக்கா 10% (137.73 GW) பங்களிக்கிறது. ஜப்பான், ஜெர்மனி மற்றும் இந்தியா ஆகியவை தலா 5-6% பங்கைக் கொண்டுள்ளன. பிரேசில், ஆஸ்திரேலியா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற வளர்ந்து வரும் சூரிய சந்தைகள் ஒவ்வொன்றும் சுமார் 2% பங்களிக்கின்றன. 2023ஆம் ஆண்டில், சோலார் சூரிய ஒளிமின்னழுத்த உற்பத்தியானது செதில்கள், செல்கள் மற்றும் தொகுதிகள் ஆகியவற்றிற்கான திறனை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியது. உதிரிபாகங்கள் தயாரிப்பில் சீனா மிகப்பெரிய பங்கை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது 97% செதில்கள், 89% செல்கள் மற்றும் 83% தொகுதி நிறுவல் திறனையும் உருவாக்கியது.

சூரிய ஆற்றல் மற்ற தொழில்களை பாதித்துள்ளதா? 


சூரிய ஒளிமின்னழுத்த (photovoltaic (PV)) துறையில் வேலைவாய்ப்பு 2022-ல் 4.9 மில்லியனில் இருந்து 2023-ல் 7.1 மில்லியனாக அதிகரித்தது. இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது மற்றும் வேலை உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தத் துறையின் பங்கை எடுத்துக்காட்டுகிறது. சூரிய ஆற்றலில் இயங்கும் நீர்ப்பாசன முறைகள் விவசாயத்தை மாற்றுகின்றன. உலகளாவிய சூரிய ஆற்றல் பம்ப் சந்தை 2021 முதல் 2027 வரை ஆண்டுதோறும் 5.8% என்ற விகிதத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சியானது சோலார் PV தொழில்நுட்பத்தின் விலை வீழ்ச்சி, டீசல் பம்புகளுடன் ஒப்பிடும்போது சோலார் பம்புகளின் செலவு-செயல்திறன் மற்றும் அதிகரித்த விழிப்புணர்வு ஆகியவற்றால் இயக்கப்படுகிறது. 


விவசாயத்தை தாண்டி கால்நடை மேலாண்மையில் அக்ரிவோல்டாயிக் அமைப்புகள் (agrivoltaics systems) பயன்படுத்தப்படுகின்றன. கால்நடைகளுக்கு நிழல் தரவும், மின்சாரம் தயாரிக்கவும் மேய்ச்சல் நிலங்களில் சூரிய ஆற்றல் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. சூரிய ஆற்றல் அமைப்பை ஏற்றுக்கொள்வதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று பணம் செலுத்தும் வணிக மாதிரிகளை அறிமுகப்படுத்துவதாகும். இந்த மாதிரிகள் பயனர்கள் தங்கள் கணினிகளுக்கு சிறிய, வழக்கமான தவணைகளில் பணம் செலுத்த அனுமதிக்கின்றன.

 

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சூரிய ஆற்றலை மிகவும் மலிவு விலையில் ஆக்கியுள்ளன, அதே நேரத்தில் புதிய பயன்பாடுகள் அதிகமான மக்கள் சூரிய ஆற்றலை பயன்படுத்த உதவுகின்றன. தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆதாரங்களை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் சிறிய தீவு நாடுகளுடன், அனைவரும் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும்.


அஜய் மாத்தூர் சர்வதேச சூரிய கூட்டணியின் தலைமை இயக்குநராகவும், சபா கலாம்  சர்வதேச சூரிய கூட்டணியின் திட்ட நிபுணராகவும் உள்ளனர்.




Original article:

Share:

சம்பல் வழக்கு மற்றும் நீதித்துறை தவிர்ப்பின் அபாயங்கள் - காளீஸ்வரம் ராஜா

 நீதிமன்ற உத்தரவு, முக்கியப் பிரச்னையைத் தீர்ப்பதில் மீண்டும் ஒரு தயக்கத்தைக் காட்டுகிறது. வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்து உறுதியான முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.


2005 இல் “நீதித்துறை செயலற்ற தன்மை” (‘judicial inactivism’)  பற்றிய ஆய்வறிக்கையில், அறிஞர் சாட் எம். ஓல்ட்ஃபாதர் நீதிமன்றங்களின் "முடிவெடுக்கும் கடமை" (duty to decide) அல்லது "தீர்ப்பளிப்பு கடமை" (‘adjudicative duty) பற்றி விவாதிக்கிறார். நீதித்துறையின் செயலற்றத் தன்மை, நீதித்துறை நடவடிக்கையால் ஏற்படும் விளைவுகளைப் போலவே குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் விளக்குகிறார். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நீதித்துறையின் தோல்விகள் அவற்றின் வரம்புகளுக்கு அப்பாற்பட்ட செயல்களைக் காட்டிலும் கவனிக்க கடினமாக இருப்பதாக அறிஞர் சாட் எம். ஓல்ட்ஃபாதர் கூறுகிறார். எனவே, "நீதித்துறை செயலற்ற தன்மை" என்பது ஒரு வகையில் மிகவும் கவலைக்குரியது.


ஒத்திவைக்கப்பட்ட மற்றொரு வழக்கு

 

சம்பல் மஸ்ஜித் வழக்கில் (உத்தர பிரதேசம்) இந்திய உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறை நீதித்துறை தாமதத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. இந்த விவகாரத்தில் வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம் என்று நீதிமன்றம் முடிவு செய்தது. மாறாக, குடிமையியல் நீதிமன்றம் இந்த விஷயத்தை இடைநிறுத்தவும், மசூதி கணக்கெடுப்பின் அடிப்படையில் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டது. சம்பல் ஷாஹி ஜமா மஸ்ஜித் கமிட்டி அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு முடிவுக்காக அனுப்பப்பட்டது. மனுதாரருக்கு மற்ற சட்டப்பூர்வ விருப்பங்களையும் நீதிமன்றம் பரிந்துரைத்தது மற்றும் அனைத்து தரப்பினரும் அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டது. நவம்பர் 29 அன்று வழங்கப்பட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பில், உயிர் இழப்புகளுக்கு வழிவகுத்த கணக்கெடுப்பால் ஏற்பட்ட பதட்டத்திலிருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில சிறுபான்மை குழுக்களும் இந்த உத்தரவை வரவேற்றன.


இருப்பினும், இந்தியாவில் இத்தகைய நீதித்துறை தவிர்ப்பு (judicial evasion) நடவடிக்கையின் அபாயங்களை புறக்கணிக்கப்படக் கூடாது. இது நாட்டின் சமீபத்திய வரலாற்றில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற சட்டத்தை நீதித்துறை சரியாக பின்பற்றாததே சம்பல் வழக்குக்கு ஒரு காரணம். வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், 1991 உச்ச நீதிமன்றம் உட்பட சில நீதிமன்றங்களால் மீறப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிரான வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நாளை (டிசம்பர் 12-ம் தேதி) நடக்கவிருக்கும் விசாரணையின் போது சிக்கலைக் கவனமாகப் பரிசீலனை செய்வது முக்கியம்.வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் பிரிவு 3, வழிபாட்டுத் தலங்களை ஒரு மதம் அல்லது பிரிவினரிடம் இருந்து மற்றொரு மதத்துக்கு மாற்றுவதைத் தடுக்கிறது. ஆகஸ்ட் 15, 1947 அன்று வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மை அப்படியே இருக்க வேண்டும் என்று பிரிவு 4 (1) கூறுகிறது. 


அந்தத் தேதியிலிருந்து எந்த வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மை தொடர்பான வழக்கு அல்லது சட்ட நடவடிக்கையும் சட்டம் இயற்றப்பட்ட பிறகு இந்திய நீதிமன்றங்களில் தொடங்கவோ அல்லது தொடரவோ முடியாது என்பதை பிரிவு 4(2) தெளிவுபடுத்துகிறது. ராம ஜென்மபூமி-பாபர் மசூதி சர்ச்சைக்கு இந்த சட்டம் பொருந்தாது. முக்கியமாக, இந்தச் சட்டத்தை மீறுவது, அத்தகைய சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவது அல்லது தொடர்வது தண்டனைக்குரிய குற்றமாகும். சட்டத்தின் பிரிவு 6, மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.

 

நாடாளுமன்றம், முக்கிய அமைப்பாக நாட்டின் வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டது. அரசியல் ஆதாயத்திற்காக மத உணர்வுகளைத் தூண்டுவதற்கு வகுப்புவாதக் குழுக்கள் கடந்த காலத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க சட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. இது கவனமாகவும், படிப்படியாகவும் செய்யப்பட்டது. எனவே, வழக்கின் நிச்சயமற்ற தன்மையை நீட்டிக்கும் சிறிய தீர்வுகளில் நீதிமன்றம் கவனம் செலுத்தக்கூடாது. சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை பற்றிய வலுவான மற்றும் தெளிவான முடிவு நீண்ட காலமாக தாமதமாகி வருகிறது.

முந்தைய வழக்குகள் 


இதற்கு முன்பும் நீதிமன்றம் இதுபோன்ற ஒத்திவைப்பு அணுகுமுறையைப் அடிக்கடி பயன்படுத்தியது. குடியுரிமை திருத்த சட்டம் (CAA) தொடர்பாக டெல்லியில் ஷாஹீன் பாக் போராட்டத்தின் போது, ​​அமித் சாஹ்னிக்கு vs காவல் ஆணையாளர் 2020 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் போராட்டக்காரர்களுடன் பேசி ஒரு தீர்வை எட்ட நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. இருப்பினும், CAA மீதான சட்டரீதியான சவால் குறித்து நீதிமன்றம் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

 

மீண்டும், ராகேஷ் வைஷ்ணவ் vs யூனியன் ஆஃப் இந்தியா (2021), வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, ​​விவசாயிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய ஒரு நிபுணர் குழுவை நீதிமன்றம் அமைத்தது. சாதகமான சூழலை உருவாக்குவதும் விவசாயிகளிடம் நம்பிக்கையை வளர்ப்பதும் நீதிமன்றத்தின் இலக்காக இருந்தது.


திருத்தத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்து நீதிமன்றம் இன்னும் முடிவு செய்யவில்லை. பிரச்சினை இன்னும் நிலையற்றதாக இருக்கிறது. விவசாயச் சட்டங்கள் முக்கியமாக மக்களின் எதிர்ப்பின் காரணமாக ரத்து செய்யப்பட்டன, பேச்சுவார்த்தை மூலம் அல்ல. இந்த இரண்டு வழக்குகளிலும், முதன்மையாக முடிவு எடுக்கும் கடமை இருந்தபோதிலும் தனது கடமையைச் செய்ய உச்சநீதிமன்றம்  தவறிவிட்டது.


சம்பல் மசூதி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு முக்கியப் பிரச்சினையைத் தீர்ப்பதில் இது போன்ற தயக்கத்தைக் காட்டியது. 1991 சட்டத்தின் செல்லுபடியை ஆதரிக்காததற்கு நீதிமன்றம் சரியான காரணத்தை வழங்கவில்லை. இந்த சட்டம் சகோதரத்துவம் மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கியமான அரசியலமைப்பு மதிப்புகளை ஆதரிக்கிறது. இது நாட்டின் சமூக மற்றும் மத ஒற்றுமையை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்தகைய மனுக்களை ஏற்றுக்கொள்வதற்கு அல்லது குறைந்த பட்சம் அவற்றை நிராகரிப்பதில் விருப்பமின்மை இருந்தால், எம். சித்திக் vs மஹந்த் சுரேஷ் தாஸ், 2019 (M. Siddiq vs Mahant Suresh Das, 2019) என்ற அயோத்தி வழக்கில் அரசியலமைப்பு அமர்வால் வழங்கப்பட்ட தீர்ப்பானது ஆதரவைப் பெற்றிருக்கும் .


அயோத்தி வழக்கின் தீர்ப்பில், மசூதியை சட்டவிரோதமாக இடிப்பதை அனுமதித்த நீதிமன்றம், அதே இடத்தில் கோவில் கட்டுவதை ஆதரித்தது. இழப்பீடாக, புதிய மசூதி கட்டுவதற்கு மாற்று இடம் வழங்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நல்லிணக்கத் தீர்ப்பு அரசியலமைப்பு ரீதியாக திருப்தியற்றதாக இருந்தாலும், 1991 சட்டத்தின் வரலாற்று மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டது. இந்த சட்டம் மதச்சார்பற்ற அரசின் கடமைகளுடன் நெருக்கமாக தொடர்புடையது என்றும், அனைத்து மதங்களுக்கிடையில் சமத்துவத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை காட்டுகிறது என்றும் நீதிமன்றம் கூறியது. கடந்த கால தவறுகள் நிகழ்காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ தீங்கு விளைவிக்கக் கூடாது என நாடாளுமன்றம் தெளிவாக கூறியுள்ளது என நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, 2023ஆம் ஆண்டு ஞானவாபி மசூதி குழுவின் வழக்கில் நீதிமன்றம் மசூதியில் செய்ய ஆய்வு  அனுமதி அளித்தது. இது முந்தைய தீர்ப்பின் ஒரு பகுதிக்கு நேர்எதிராக இருந்தது. இதன் விளைவாக, ஒரு முக்கியமான நேரத்தில் மதச்சார்பற்ற தீர்ப்பில் நீதிமன்றம் அதன் சொந்த சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் கண்டுபிடிப்புகளை மாற்றியது.


நீதித்துறை விருப்பமின்மை 


சம்பல் வழக்கு விசாரணையின் போது, ​​நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாடாளுமன்ற சட்டத்தை மீறும் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு மசூதிகளின் தோற்றத்தை எதிர்த்து, பல்வேறு குடிமையியல் வழக்குகள் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாகவும், வழக்கு தொடர அனுமதி இல்லை என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்து முடிவெடுப்பதற்கும், சம்பல் வழக்குடன் இந்த வழக்கை தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு வாய்ப்பு இருந்தது. வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்து அயோத்தி வழக்கில் முதன்மை அமர்வு வழங்கிய தீர்ப்பை மட்டுமே நீதிமன்றம் மீண்டும் வழங்க வேண்டும். இதற்கு நீதித்துறை விருப்பம் தேவைப்படும். சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்த சிறப்பு அமர்வின் விசாரணையானது, நீதிமன்றத்தின் தவறுகளைத் திருத்திக் கொள்ள மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது.


காளீஸ்வரம் ராஜ் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்.




Original article:

Share:

சுப்பிரமணிய பாரதி: இந்திய மொழிகள் ஆங்கிலத்திற்குத் தாழ்ந்தவை அல்ல எனக் கருதிய ஒரு தமிழ்க் கவிஞர் -வெங்கையா நாயுடு

 சுப்ரமணிய பாரதி சிறப்புப் பட்டங்களால் கௌரவிக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற நபராக இருந்தார். அவருக்கு "பாரதி" மற்றும் "மகாகவி" என்ற பட்டங்கள் வழங்கப்பட்டன. அவர் மூன்று வெளிநாட்டு மொழிகள் உட்பட 32 மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அவர்ஆங்கிலத்தில் சிறந்த கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியிருந்தாலும், தமிழ்க் கவிஞராகவும், பத்திரிகையாளராகவும் இருந்த பெருமை அவருக்கு உண்டு. சுப்பிரமணிய பாரதி தமிழையும் பிற இந்திய மொழிகளையும் ஆங்கிலத்திற்குத் தாழ்ந்தவை அல்ல எனக் கருதினார்.


கவிஞர், பத்திரிகையாளர், சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பை நாம் பயபக்தியுடனும், ஆழ்ந்த மரியாதையுடனும் நினைவுகூருகிறோம். 'மகாகவி' என்ற பட்டத்தைப் போலவே 'பாரதி' என்ற பட்டமும் இந்த மாபெரும் மேதைக்கு வழங்கப்பட்டது. இரண்டும் அவரது எழுத்துக்கள் மற்றும் பேச்சுகள் மூலம் கவிதை மற்றும் இலக்கியத்திற்கான அவரது சிறந்த பங்களிப்பைக் குறிக்கின்றன. கல்விக் கடவுளான அன்னை சரஸ்வதியால் அவர் ஆசீர்வதிக்கப்பட்டார். 


பாரதி என்ற பெயரே தேசிய உணர்வையும், பாரதத்தை சேர்ந்தவராக இருப்பதில் பெருமை அடைய செய்கிறது. பெயரில் உள்ள "நான்(i)" என்ற எழுத்துக்கு முன் "பாரத்(Baharat)" என்ற சொல் வருகிறது. இந்த இடம் பணிவு மற்றும் தேசத்தை தனக்கு முன் வைக்கும் எண்ணத்தை குறிக்கிறது.


சுப்ரமணிய பாரதி தனது குறுகிய வாழ்நாளில் நிறைய சாதித்து, பல பாடங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் இந்தியாவின் வளமான பன்மொழி கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். பாரதிக்கு மூன்று வெளிநாட்டு மொழிகள் உட்பட 32 மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அவர் ஆங்கிலத்தில் சிறந்த கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதினார். தமிழ்க் கவிஞராகவும், பத்திரிக்கையாளராகவும் இருப்பதில் மிகவும் பெருமிதம் கொண்டார். சுப்ரமணிய பாரதி, தமிழையும் பிற இந்திய மொழிகளையும் ஆங்கிலத்திற்குத் தாழ்ந்தவை அல்ல எனக் கருதினார்.


மெய்யியல் மற்றும் கவிதை இலக்கியம் 


நியூ இந்தியா (New India) இதழில் ஒரு கட்டுரையில், சுப்பிரமணிய பாரதி இந்தியாவில் ஆங்கிலம் படித்த சிறுபான்மையினரைப் பற்றி எழுதுகிறார். இந்திய இலக்கியத்தின் உயர்ந்த அம்சங்களைப் பற்றி அதிகம் அறியாததற்காக அவர்கள் மன்னிக்கப்படலாம் என்றார். இருப்பினும், அவர்கள் இந்திய மொழிகளைப் பற்றி விவாதிக்கும்போது தாழ்வு மனப்பான்மையை நிறுத்த வேண்டும் என்று அவர் நம்புகிறார். பாரதி தமிழை உதாரணம் காட்டுகிறார். தமிழ் மொழியில் மெய்யியல் தத்துவம் மற்றும் கவிதை ஆகிய இரண்டிலும் வளமான, வாழும் இலக்கியம் உள்ளது என்கிறார். இது ஆங்கிலத்தை விட பெரியது என்று அவர் கருதினார். 


சுப்பிரமணிய பாரதி இந்தியர்கள் தங்கள் வளமான பாரம்பரியத்தில் பெருமை கொள்ள வேண்டும் என்று விரும்பினார். மொழியும் இலக்கியமும் இந்தப் பாரம்பரியத்தின் முக்கிய அங்கங்களாக இருந்தன. தமிழறிஞர், கவிஞன் எனப் பெருமிதம் கொண்டிருந்த அதே வேளையில், பாரதி பிற மொழிகளின் மீதும் மிகுந்த மரியாதை காட்டினார். உதாரணமாக, அவர் தெலுங்கை "சுந்தர தெலுங்கு" என்று அழைத்தார். பாரத நாட்டினராக இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும் என்று சுப்ரமணிய பாரதி வலியுறுத்துகிறார். நாம் பண்டைய ஞானத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர் நமக்கு நினைவூட்டுகிறார். "உலகின் புகழ்பெற்ற சின்னம் (திலகம்), பாரத தேசம்" என்று அவரது புகழ்பெற்ற வார்த்தைகளில், இந்த நிலத்தை பெருமையாக விவரிக்கிறார்.


சுப்ரமணிய பாரதி “சுதந்திரம்” பற்றிய பரந்த மற்றும் முன்னோக்கிய பார்வையைக் கொண்டிருந்தார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடினார். இருப்பினும், சுதந்திரம் பற்றிய அவரது பார்வை அரசியலுக்கு அப்பாற்பட்டது. பசி, பாலினப் பாகுபாடு, தீண்டாமை, தூய்மையற்ற சூழல், மொழி மற்றும் மதம் சார்ந்த குறுகிய பார்வைகள் ஆகியவற்றிலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என்று அவர் விரும்பினார். இந்த தொலைநோக்கு அணுகுமுறையே சுப்பிரமணிய பாரதியை நம் காலத்திற்கு மிகவும் மரியாதைக்குரியவராக ஆக்குகிறது. 


சாதி அமைப்பிலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என்று பாரதி விரும்பினார். எல்லா உயிர்களையும் சமமாகக் கருதிய அவர், இதை விளக்கும் வகையில் ஒரு தலித் இளைஞனுக்கு உபநயனம் செய்து பிராமணராக்கினார். தனது கவிதை ஒன்றில், "சாதி அமைப்பு இல்லை. சாதி அடிப்படையில் மக்களைப் பிரிப்பது பாவம், அதாவது நன்கு படித்த ஒருவருக்கு மக்களை ஒரே மாதிரியாக நடத்தத் தெரியும், அவர்களின் சாதியால் அல்ல.” என்கிறார்.

 

“பண்டிதஹ் ஸம தர்ஷினஹ” அதாவது, புத்திசாலிகள் எல்லோரையும் சமமாகப் பார்க்கிறார்கள் என்று பழங்கால முனிவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்தது இதைத்தான்.


காலனித்துவ ஆட்சிக்கு எதிராக 


பாரதி ஆங்கிலேய ஆட்சியையும், ஆங்கிலேயர்களால் இந்தியர்கள் அடிமைப்படுத்தப்பட்டதையும் எதிர்த்தாரே தவிர, அனைத்து அந்நியர்களையும் எதிர்க்கவில்லை. அவர்கள் இந்தியாவையும் அதன் கலாச்சாரத்தையும் நேசித்தார்கள் மற்றும் மதித்தார்கள் என்றால், அவர் அவர்களுக்கு பதில் மரியாதை கொடுத்தார். உதாரணமாக, மார்கரெட் இ.நோபல் என்ற ஐரிஷ் பெண்ணுக்கு, சுவாமி விவேகானந்தரால் சகோதரி நிவேதிதா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அவர் கல்கத்தாவில் ஒரு பெண்கள் பள்ளியைத் தொடங்கினார் மற்றும் தேசியவாதம் பற்றி தனது மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக பணியாற்றினார். சகோதரி நிவேதிதா தனது பள்ளியில் "வந்தே மாதரத்தை" அறிமுகப்படுத்தினார். மாணவர்கள் பாடுவதை ஒரு பிரார்த்தனையாகச் செய்தார்.


பாரதியைப் பொறுத்தவரை, சகோதரி நிவேதிதா பாரத மாதாவின் உண்மையான உருவம் என்று எண்ணினார். ஜனவரி 1908-ல் பாரதி 16 கவிதைகள் கொண்ட சுதேச கீதங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டார். புத்தகத்தில் ஒரு சிறிய அர்ப்பணிப்பு இருந்தது, அதில் "இந்த சிறு புத்தகத்தை நான் என் குருவின் பாதத்தில் உள்ள மலர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது. பகவான் கிருஷ்ணர் தனது விஸ்வரூபத்தை அர்ஜுனனுக்கு வெளிப்படுத்தி ஆன்மாவின் தன்மையை விளக்கியது போல, என் குரு எனக்கு முழு வடிவத்தைக் காட்டினார். பாரத மாதா எனக்கு சுதேச பக்தியைக் கற்றுக் கொடுத்தார்” என்கிறார். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள குரு சகோதரி நிவேதிதா  ஆவார்.


பாரதி பெண்களின் உரிமைகளையும் அரசியலில் அவர்களின் பங்கையும் வலுவாக ஆதரித்தார். பெண்களுக்கு அதிக உரிமைகள் மற்றும் கல்விக்கான அணுகல் இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார். பாரதியின் பார்வையில், பெண்கள் சமுதாய மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும். இந்த யோசனை பண்டைய இந்திய உலகக் கண்ணோட்டத்தைப் போல இருந்தது.


இன்றைய இளைஞர்கள் சுப்ரமணிய பாரதியின் கவிதைகள், சிந்தனைகள், வாழ்க்கை  ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இன்று அவரது பிறந்தநாள். அவரது வாழ்க்கையும் பணியும் நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.


கட்டுரையாளர் இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி. 




Original article:

Share: