வனவிலங்குகளுக்கான தேசிய வாரியம் - குஷ்பு குமாரி

 தற்போதைய கதை என்ன : பதவியேற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 3 தேதி அன்று உலக வனவிலங்கு தினத்தன்று, தேசிய வனவிலங்கு வாரியத்தின் (National Board for Wildlife (NBWL)) முதல் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.


முக்கிய அம்சங்கள்:


. கடைசியாக முழு அளவிலான தேசிய வனவிலங்கு வாரியத்தின் கூட்டம் செப்டம்பர் 5, 2012 அன்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. பிரதமர் தேசிய வனவிலங்கு வாரியத்தின் அதிகாரப்பூர்வ தலைவர் ஆவார்.


. வனவிலங்குகளுக்கான தற்போதைய தேசிய வாரியம் 2003-ல் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 திருத்திய பின் உருவாக்கப்பட்டது.


. 2014-ல் பாஜக அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, NBWL மறுசீரமைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அதிகாரங்களை குறைத்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது. மூன்று அரசு சாரா உறுப்பினர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். அதில் ஒன்று குஜராத் அரசாங்கத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான குஜராத் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை (Gujarat Ecological Education and Research Foundation (GEER)) ஆகும்.


.  கடந்த பத்தாண்டுகளில், NBWL வனவிலங்கு வாழ்விடங்களில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களை அனுமதித்துள்ளது. இது சூழலியலாளர்களின் சர்ச்சை மற்றும் எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. கென் பெட்வா நதியை இணைக்கும் திட்டத்தின் டவுதான் அணை மற்றும் ஹோலோங்கபார் கிப்பன் சரணாலயத்தின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் வேதாந்தாவின் எண்ணெய் ஆய்வுத் திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.


. 1952-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய வனவிலங்கு வாரியத்தை (Indian Board for Wildlife (IBWL)) தேசிய வனவிலங்கு வாரியம் மறுசீரமைத்தது. அதை ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றுவதன் மூலம் அதை வலுப்படுத்துவதே நோக்கமாக இருந்தது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒழுங்குமுறை அதிகாரங்களும் அதற்கு வழங்கப்பட்டன.


. இந்திய வனவிலங்கு வாரியம் (IBWL), மார்ச் 1952-ல் உருவாக்கப்பட்டபோது அது முதலில் ஒன்றிய வனவிலங்கு வாரியம் என்று அழைக்கப்பட்டது. நவம்பர் 24 முதல் டிசம்பர் 1, 1952 வரை மைசூரில் உள்ள லலிதா மஹால் அரண்மனையில் நடந்த அதன் முதல் கூட்டத்தின்போது இது IBWL என மறுபெயரிடப்பட்டது. வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைவதைச் சரி செய்ய இந்த வாரியம் உருவாக்கப்பட்டது.


உங்களுக்குத் தெரியுமா:


வனவிலங்கு கொள்கைக்கான இந்தியாவின் உயர் அமைப்பாக தேசிய வனவிலங்கு வாரியம் உள்ளது. இது வனவிலங்குகள் மற்றும் வனப் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது மற்றும் புதிய தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை வழங்குகிறது.


. NBWL 47 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதன் தலைவராக பிரதமர் மற்றும் துணைத் தலைவராக ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் உள்ளனர்.


. தேசிய வனவிலங்கு வாரியத்திற்கு (National Board for Wildlife (NBWL)) ஒரு நிலைக்குழு உள்ளது. தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியுள்ள வன நிலங்களில் உள்ள திட்டங்களை மதிப்பிடுதல் மற்றும் 10-கிமீ பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் உள்ள திட்டங்கள் போன்ற முக்கியப் பணிகள் இதில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நிலைக்குழுவின் முடிவுகள் பரிந்துரைக்கப்பட்டவை. இருப்பினும், சுற்றுச்சூழல் அமைச்சகம் அதை நிராகரிக்கலாம்.


. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் (Wild Life Protection Act (WLPA)) தேசிய பூங்காக்களுக்கு அறிவிப்பதற்கான கட்டமைப்பை வகுத்தது. வனவிலங்குகள் மற்றும் வாழ்விடப் பாதுகாப்பிற்கான சட்டப்பூர்வ ஆதரவை வழங்கியது. அழிந்துவரும் உயிரினங்களை வேட்டையாடுவதை தடைசெய்தது மற்றும் வனவிலங்கு வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தியது. இது 1973-ல் புலித் திட்டத்திற்கு வழி வகுத்தது.



Original article:

Share:

இந்திய கூட்டாட்சி அமைப்பின் சவால்கள் என்ன? -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி : இந்தியாவில் கூட்டாட்சி முறையைப் பற்றிய பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. வடக்கு மற்றும் தென்னிந்தியாவிற்கு இடையேயான தொகுதி மறுவரையறை மற்றும் பிரதிநிதித்துவ சமநிலை ஆகியவற்றைக் கவனமாக கையாள்வது அவசியம்.


முக்கிய அம்சங்கள்: 


. வளர்ச்சியில் மாநிலங்களுக்கு இடையிலான கிடைமட்ட சமநிலையின்மை (horizontal imbalance) தொடர்ந்து ஒரு சவாலாகவே உள்ளது. தற்போதைய, வளர்ச்சி சவால்களை எதிர்கொள்ள ஒன்றிய, மாநில மற்றும் பொதுப் பட்டியல்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.


. சர்வாதிகாரத்தின் (authoritarianism) எழுச்சி கூட்டாட்சி முறையை பலவீனப்படுத்தக்கூடும். சில நேரங்களில், மாநிலங்களைப் பற்றிய ஒரே மாதிரியான கலாச்சாரக் கருத்துக்களும் (stereotypes) அரசியல் பதட்டங்களை உருவாக்குகின்றன.


. கூட்டாட்சி நடைமுறை என்பது குழப்பமானதாக உள்ளது. அதன் சவால்களை எதிர்கொள்ள பல வழிகள் உள்ளன. கூட்டாட்சியின் அடிப்படை நிர்வாகக் கொள்கைகள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் உள்ளன. இந்திய கூட்டாட்சி வரலாற்றில், நாம் பார்க்கும் மையமயமாக்கல் முக்கியமாக மத்திய மற்றும் மாநிலங்கள் இரண்டாலும் உருவாக்கப்பட்டது.


. அரசியல், கலாச்சார, நிர்வாக மற்றும் பொருளாதார கூட்டாட்சி ஆகியவை ஒரு பொதுவான விதியைப் பின்பற்றவில்லை என்பதாலும் கூட்டாட்சி அரசியலும் சிக்கலானதாக உள்ளது.


. கட்சித் தாவல் தடைச் சட்டம் (anti-defection law) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகள் இப்போது சட்டமன்றத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதிகாரங்களை முறையாகப் பிரிப்பதைவிட கட்சி விசுவாசத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், நாடாளுமன்றத்தால் நிர்வாகத்தை திறம்பட மேற்பார்வையிட முடியாது. இது கூட்டாட்சிக்கு ஒரு பெரிய சவாலை உருவாக்குகிறது.


. கூட்டாட்சி என்பது பொதுவாக ஒன்றிய அரசுக்கும் தனிப்பட்ட மாநிலங்களுக்கும் இடையிலான உறவாகக் கருதப்படுகிறது. ஆனால் ஒரு வகையில், இங்கே மூன்று அரசாங்கங்கள் உள்ளன (உள்ளூர் அரசாங்கத்தைப் தவிர) ஒன்றிய அரசு, தனிப்பட்ட மாநிலங்கள் மற்றும் அனைத்து மாநிலங்களும் ஒன்றாக ஒரு குழுவாக செயல்படுகின்றன.


சரக்கு மற்றும் சேவை வரி என்பது அனைத்து மாநிலங்களும் அனைவருக்கும் பொருந்தும் வகையில் கூட்டு முடிவுகளை எடுப்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்கட்டாகும். சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களை நிர்ணயிப்பது என்பது ஒன்றிய அரசுக்கும் தனிப்பட்ட மாநிலங்களுக்கும் இடையிலான மோதல் மட்டுமல்ல. அது அனைத்து மாநிலங்களும் சேர்ந்து எடுக்கும் கூட்டு முடிவாகும்.


உங்களுக்குத் தெரியுமா?


. காலனித்துவ ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தின்போது இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவம் தொடங்கியது. பல்வேறு மொழி, கலாச்சார மற்றும் புவியியல் குழுக்கள் சுயாட்சியைக் கோரின. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை வடிவமைக்கும் அதே வேளையில், வேற்றுமையில் ஒற்றுமையைப் (unity in diversity) பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்டனர்.


. இதன் விளைவாக, இந்திய அரசியலமைப்பு ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை உருவாக்கியது. இரண்டு அவைகள் உள்ளன. ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. திருத்துவதற்கு மிகவும் எளிதானதோ அல்லது மிகவும் கடினமானதோ அல்ல. எழுதப்பட்ட அரசியலமைப்பு மற்றும் கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலைகளின் முறையை நிலைநிறுத்த ஒரு தன்னாட்சி நீதிமன்றம் போன்ற கூட்டாட்சியின் அனைத்து பண்புகளையும் கொண்டுள்ளது.

Original article:

Share:

இன்னொரு புலிகள் காப்பகம்: இந்தியாவிற்கு அவை ஏன் தேவைப்படுகின்றன, சில காப்பகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்?. -நிகில் கனேகர்

 2022-23ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கடைசி மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, இந்தியாவில் 3,681 புலிகள் (வரம்பு 3167-3925) உள்ளன.


மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள மாதவ் தேசிய பூங்கா இந்த மாத தொடக்கத்தில் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம்   நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கையை 58-ஆக அதிகரித்தது.


சமீபத்திய புதிய புலிகள் காப்பகம் 1,651 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் ஒரு குட்டி உட்பட ஆறு புலிகளைக் கொண்டுள்ளது. புதிய புலிகள் காப்பகம் ரந்தம்போர்-குனோ-மாதவ் தேசிய பூங்கா வழித்தடத்தில் (Ranthambore-Kuno-Madhav National Park corridor) புலிகள் சுதந்திரமாக நடமாட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ந்து வரும் புலிகளின் எண்ணிக்கைக்கு இந்தப் பகுதி ஒரு நல்ல வாழ்விடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.


புலிகள் திட்டம் (Project Tiger)


இந்தியாவில் உள்ள பூர்வீக உயரடுக்குகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெரிய விலங்குகளை வேட்டையாடி வந்தாலும், ஆங்கிலேய ஆட்சியின் போது, ​​வேட்டையாடுதல் தீவிர நிலைக்கு அதிகரித்தது. சுதந்திரத்திற்குப் பிறகும், இந்திய உயரடுக்குகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே புலிகள் பிரபலமாக இருந்தது. இது இந்திய காடுகளில் புலிகள் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது.


1960-களில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது (பண்ணை நிலங்களை வெட்டுவதற்காக விரைவான காடழிப்பு காரணமாகவும்) குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 1969-ஆம் ஆண்டில், இந்திரா காந்தி தலைமையிலான ஒன்றிய அரசு புலித் தோல்களை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தது. அதே ஆண்டில், டெல்லியில் நடைபெற்ற சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் 10-வது மாநாட்டில், புலிகள் அழிந்து வரும் உயிரினமாக அங்கீகரிக்கப்பட்டன.  மேலும், அவற்றைக் கொல்வதைத் தடை செய்ய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இந்திய வனவிலங்கு வாரியத்தின் தலைவர் கரண் சிங் தலைமையில் ஒரு பணிக்குழுவையும் அரசாங்கம் தொடங்கியது.


இந்தப் பணிக்குழுவின் பரிந்துரைகள், 1972ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் (Wildlife Protection Act) நிறைவேற்றப்பட்ட சில நாட்களிலேயே, 1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்க வழி வகுத்தன. இந்தத் திட்டம் ஆரம்பத்தில் ஆறு ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், இன்றுவரை தொடர்கிறது. புலிகளின் எண்ணிக்கையைப் பராமரிப்பதையும் அவற்றின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதையும் இந்தத் திட்டம் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.


காப்பகங்களின் நோக்கம்


மனாஸ் (அசாம்), ஜிம் கார்பெட் (தற்போது உத்தரகண்ட்), கன்ஹா (மத்தியப் பிரதேசம்), பலமாவ் (தற்போது ஜார்க்கண்ட்), ரந்தம்போர் (ராஜஸ்தான்), சிம்லிபால் (ஒடிசா), மெல்காட் (மகாராஷ்டிரா), பந்திப்பூர் (கர்நாடகா), மற்றும் சுந்தரவனக்காடுகள் (மேற்கு வங்கம்) ஆகிய 9 புலிகள் காப்பகங்களுடன் புலிகள் திட்டம் (Project Tiger) தொடங்கப்பட்டது.


இந்த சரணாலயங்கள் ஏற்கனவே தேசிய பூங்காக்கள் இருந்த பகுதிகளில் உருவாக்கப்பட்டன. அவை ஒன்றிய நிதியுதவி திட்டத்தின் மூலம் நிதியைப் பெற்றன.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைத் தவிர, வெட்டுதல், மேய்ச்சல் மற்றும் மக்கள் நடமாட்டம் தடைசெய்யப்பட்ட ஒரு "மையப் பகுதியை" உருவாக்குவதே இந்த காப்பகங்களின் நோக்கமாகும். மேலும், மனித செயல்பாடு குறைவாக இருக்கும் ஒரு "இடையக மண்டலம்" என்று சுனிதா நரைனின் கீழ் அமைக்கப்பட்ட 2005 புலி பணிக்குழுவின் அறிக்கையான “புள்ளிகளில் இணைதல்” குறிப்பிட்டது.


2005-06ஆம் ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர், புலிகள் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்துவதை மேற்பார்வையிடுவதற்காக ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (Tiger Conservation Authority (NTCA)) உருவாக்கப்பட்டது.


புலி பரவல்


2022-23ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கடைசி மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, இந்தியாவில் 3,681 புலிகள் (வரம்பு 3167-3925) இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. NTCA மதிப்பீட்டின் படி, பெரிய பூனைகள் சுமார் 89,000 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளன. இது ஜோர்டானின் பரப்பளவிற்கு சமமானது. மேலும், ஆஸ்திரியாவின் பரப்பளவைவிட பெரியது. சிவாலிக் மலைகள் மற்றும் கங்கை சமவெளிகள், மத்திய இந்திய மலைப்பகுதிகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள், மேற்கு தொடர்ச்சி மலைகள், வடகிழக்கு மலைகள் மற்றும் பிரம்மபுத்ரா வெள்ளப்பெருக்கு சமவெளிகள் மற்றும் சுந்தரவனக்காடுகள் ஆகிய ஐந்து முக்கிய நிலப்பரப்புகளில் புலிகள் பரவலாகக் காணப்படுகின்றன


260 புலிகளைக் கொண்ட கார்பெட், அதிக புலிகளின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து பந்திப்பூர் (150), நாகர்ஹோல் (141), பந்தவ்கர் (135), துத்வா (135), முதுமலை (113), கன்ஹா (105), காசிரங்கா (104), சுந்தரவனக்காடுகள் (100), தடோபா-அந்தாரி (97), சத்தியமங்கலம் (85), மற்றும் பென்ச் (77) புலிகளின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளன.


மாநிலங்களில், மத்தியப் பிரதேசத்தில் 785 புலிகள் உள்ளன. அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 563, உத்தரகண்டில் 560 மற்றும் மகாராஷ்டிராவில் 444 புலிகள் உள்ளன.


சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், 2006 மற்றும் 2018-க்கு இடையில், புலிகள் வசிக்கும் பகுதி 30% அதிகரித்துள்ளது.  மேலும், புலிகள் வசிக்கும் பகுதியில் சுமார் 45%-ல் சுமார் ஆறு கோடி மக்கள் வாழ்ந்தனர்.


புலிகளின் வாழ்விடங்களில் 25% மட்டுமே காப்பகங்களின் முக்கிய பகுதிகளில் இருப்பதாகவும், 20% பாதுகாப்பு மண்டலங்களில் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


கவலைக்குரிய பகுதிகள்


இன்று, 50-க்கும் மேற்பட்ட புலிகள் கொண்ட 26 புலிகள் காப்பகங்கள் உள்ளன.


மீதமுள்ள 27 காப்பகங்களில், புலி அடர்த்தி குறித்து கவலைகள் உள்ளன. உண்மையில், 2022 அறிக்கையின்படி, புலிகள் இல்லாத, அல்லது ஆண் புலிகள் மட்டுமே உள்ள, அல்லது ஐந்துக்கும் குறைவான புலிகள் கொண்ட 16 காப்பகங்கள் இருந்தன. இந்த காப்பகங்கள் அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஒடிசாவில் இருந்தன.


தெலுங்கானா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள புலிகளின் எண்ணிக்கை, ஒடிசாவில் உள்ள சட்கோசியா காப்பகத்தைப் போல, உள்ளூரில் ஒரே மாதிரியாக, குறைந்து, அல்லது மறைந்துவிட்டதால், கவலையளிக்கிறது.


மோசமான சமூக-பொருளாதார நிலைமைகள், அரசியல் நிலையின்மை, கிளர்ச்சிகள், சுரங்கம், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வன வளங்களுக்கான போட்டி போன்ற காரணிகள் அனைத்தும் இந்த சிக்கலுக்கு பங்களித்துள்ளன என்பதை சயின்ஸ் இதழ் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.



Original article:

Share:

புற்றுநோய் ஒரு அறிவிக்கத்தக்க நோயாக இருக்க வேண்டுமா? -சி. அரவிந்தா

 புற்றுநோய் கண்காணிப்பை மேம்படுத்துவதற்கான சிறந்தவழி, தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதாகும்.


இந்தியாவில் புற்றுநோயை ஒரு அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் மீண்டும் எழுகின்றன. இது கண்காணிப்பு மற்றும் சிகிச்சையை மேம்படுத்தும் என்று சிலர் வாதிட்டாலும், ஒன்றிய அரசு இந்த வாதத்தை எதிர்க்கிறது. தொற்று நோய்களை மட்டுமே அறிவிப்பது நடைமுறை என்றும், புற்றுநோய் என்பது தொற்றக்கூடியது அல்ல என்றும் தொற்றாத நோய்  என்றும் கூறியது.


நோய் அறிவிப்புக் கொள்கைகளில் சமீபத்திய மாற்றங்கள் இந்தக் காரணம் இன்னும் சரியாக பொருந்துமா என்ற கேள்விகளை எழுப்புகின்றன. 2024-ஆம் ஆண்டில், பாம்புக் கடிகளை ஒரு அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசாங்கம் அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டது. இது இது இந்தியாவிற்கு மட்டும் உரியதல்ல. 1995-ஆம் ஆண்டில், அமெரிக்கா ஈய நச்சுத்தன்மையை (lead poisoning) ஒரு அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்கத்தது. இது தொற்றா நோய்களைக் கண்காணிப்பதற்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது. பொது சுகாதாரக் கொள்கையில் ஏற்பட்ட இந்த மாற்றம், இந்தியாவில் புற்றுநோய் குறித்து அறிவிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புகிறது.


தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதே நோய் அறிவிப்பின் முக்கிய நோக்கமாகும். தொற்று நோய்களைப் பற்றி சுகாதார அதிகாரிகளிடம் மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். புற்றுநோய் தொற்று நோய்களிலிருந்து வேறுபட்டது. ஏனெனில், அது ஒருவருக்கு நபர் பரவுவதில்லை அல்லது திடீர் மரணங்களை ஏற்படுத்துவதில்லை. இதில் பல வகைகள் உள்ளன. மேலும், கண்டறிவதற்கு சிக்கலான சோதனைகள் தேவைப்படுகின்றன. புற்றுநோயை அறிவிக்கத்தக்கதாக மாற்றுவதை ஆதரிப்பவர்கள், இது முன்கூட்டியே கண்டறிவதற்கும் வளங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கும் உதவும் என்று நம்புகிறார்கள்.


இருப்பினும், இந்த அணுகுமுறையில் அடிப்படை சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக, புற்றுநோய் ஒரு கட்டத்தில் கண்டறியப்படுவதில்லை. மேலும், லேசானது முதல் கடுமையானது என பல வகைகளை கொண்டுள்ளது. ஒரு நோயைப் அறிவிக்கதக்கதாக மாற்றுவது பொதுவாக விரைவான நடவடிக்கைக்கு வழிவகுக்கும். ஆனால், புற்றுநோய்க்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதில்லை, நீண்டகால சிகிச்சை தேவைப்படுகிறது. மருத்துவர்கள் மீது சுமத்தப்படும் சட்டப்பூர்வ கடமைகள் கூடுதல் சுமையை உருவாக்கக்கூடும். இந்தியாவின் தேசிய புற்றுநோய் பதிவு திட்டம் (National Cancer Registry Programme (NCRP)) 1982-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது புற்றுநோய் தொடர்பான தகவல்களுக்கான தரவு சேகரிப்பு அமைப்பாக செயல்படுகிறது. NCRP முக்கிய விவரங்களை சேகரிக்கிறது. அவற்றில் சில, புற்றுநோய் நோயாளிகளின் மக்கள்தொகை, வகை, நிலை மற்றும் உருவவியல் உள்ளிட்ட புற்றுநோய் அடையாளம், கண்டறிதலின் நேரம் மற்றும் கண்டறிதலின்போது நிலை, கீமோதெரபி, கதிர்வீச்சு மற்றும் அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சை விவரங்கள் மற்றும் பின்தொடர்தல் மற்றும் உயிர்வாழும் விளைவுகள் பற்றிய முக்கியமான தகவல்களைத் தொகுக்கிறது. புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகளில் இருந்து தரவுகளை சேகரிக்கும் மருத்துவமனை சார்ந்த பதிவேடுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் புற்றுநோய் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் மக்கள் தொகை சார்ந்த பதிவேடுகள் ஆகியவை NCRP-யில் இடம்பெற்றிருக்கும்.


2022-ல் 269 மருத்துவமனை சார்ந்த மற்றும் 38 மக்கள்தொகை அடிப்படையிலான பதிவுகள் உள்ளன. அவை போதுமானதாக இல்லை. அனைத்து மாவட்ட தலைமையக மருத்துவமனைகள் உட்பட புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் மருத்துவமனை சார்ந்த பதிவுகளை விரிவுபடுத்தப்பட வேண்டும். இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் பதிவேடு இருக்க வேண்டும். இது நாடு தழுவிய புற்றுநோய் கண்காணிப்பை உறுதி செய்யும். புற்றுநோய் அறிக்கையிடலை சட்டப்பூர்வ தேவையாக மாற்றுவதற்கு பதிலாக, ஏற்கனவே உள்ள புற்றுநோய் பதிவேடுகளை வலுப்படுத்துவது சிறந்த நடவடிக்கையாக இருக்கும். 


இரண்டாவதாக, புற்றுநோயை ஒரு அறிவிக்கத்தக்க நோயாக மாற்றுவது தனியுரிமை கவலைகளை ஏற்படுத்தும். ஏனெனில், நோய் அறிவிப்பு என்பது தனிப்பட்ட தனியரிமையைவிட பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதாகும். புற்றுநோய் இன்னும் சமூகத்தில் ஒரு பிரச்னையை  ஏற்படுத்துகிறது. பல மாநில பொது சுகாதாரச் சட்டங்களில் இன்னும் சுகாதார அவசரநிலையின் போது உள்ளூர் அதிகாரிகளுக்கு விரிவான அதிகாரங்களை வழங்கும் விதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை காலப்போக்கில் பயனற்றதாக மாற்றப்பட்டாலும், சட்ட முன்மாதிரி இன்னும் உள்ளது. இதுபோன்ற சட்ட கட்டமைப்பில் புற்றுநோயைச் சேர்ப்பது நோயாளிகள் நோயறிதல் மற்றும் சிகிச்சைக்காக முன்வருவதில் நோயாளிகளிடையே தயக்கத்தை அதிகரிக்கக்கூடும். ஏனெனில், பிரச்சனை மற்றும் பாகுபாடு மக்கள் சரியான நேரத்தில் மருத்துவ உதவி பெறுவதைத் தடுக்கலாம். உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) முக்கியமாக புற்றுநோய் பதிவேடுகளை ஆதரிக்கிறது. உலக சுகாதார அமைப்பு அறிவிப்பை தனிப்பட்ட மட்டத்தில் ஒரு விருப்ப செயல்முறையாக மட்டுமே பரிந்துரைக்கிறது கட்டாய விதியாக அல்ல.


அனைத்து மூன்றாம் நிலை மற்றும் மாவட்ட மருத்துவமனைகளிலும் விரிவான தரவு சேகரிப்பை உறுதிசெய்ய தேசிய புற்றுநோய் பதிவு திட்டத்தை (National Cancer Registry Programme (NCRP)) விரிவுபடுத்துவதே ஒரு பயனுள்ள அணுகுமுறையாகும். புற்றுநோய் பரிசோதனை முயற்சிகளை மேம்படுத்துவது முன்கூட்டியே கண்டறிவதை இது போன்ற நடவடிக்கைகள் உறுதி செய்யும். சட்டப்பூர்வ ஆணைகள் இல்லாமல் அறிக்கையிடல் வழிமுறைகளை வலுப்படுத்துவது புற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் சுகாதார வழங்குநர்கள் நிர்ப்பந்தத்தின் கீழ் புகாரளிப்பதற்குப் பதிலாக தானாக முன்வந்து துல்லியமான தரவை வழங்க அனுமதிக்கும். விரைவாகப் பரவும் தொற்று நோய்களுக்கு கட்டாய அறிவிப்பு சிறப்பாகச் செயல்படும். புற்றுநோய்க்கு, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பதிவு அமைப்பு ஒரு சிறந்த தீர்வாகும். தனியார் மருத்துவமனைகள் மற்றும் வலுவான பின்தொடர்தல் வழிமுறைகள் உட்பட பரந்த மருத்துவமனை பங்கேற்பால் வலுப்படுத்தப்பட்ட நன்கு கட்டமைக்கப்பட்ட பதிவு அமைப்பு, இந்தியாவில் புற்றுநோய் கண்காணிப்பை மேம்படுத்தும்.


டாக்டர். சி. அரவிந்தா ஒரு கல்வியியல் மற்றும் பொது சுகாதார மருத்துவர்.



Original article:

Share:

இந்தியாவில் பொது சுகாதாரக் கல்வியின் சவால்கள் -விகாஷ் ஆர்.கேஷ்ரி

 முக்கியப் பிரச்சனை என்னவென்றால், வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ளன. எனினும், பலர் வேலை தேடுகிறார்கள். அதே நேரத்தில், பெரும்பாலான வேலைகள் தனியார் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.


உலக சுகாதார அமைப்பிலிருந்து (World Health Organization (WHO)) விலக அமெரிக்கா முடிவு செய்துள்ளது. சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் (United States Agency for International Development (USAID)) அளவை வெகுவாகக் குறைக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு உதவி மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இதன் விளைவாக, பல குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் அத்தியாவசிய சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தியா பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை. ஏனெனில், சர்வதேச உதவி இந்தியாவின் மொத்த சுகாதார செலவினத்தில் 1% மட்டுமே ஆகும்.


இருந்தபோதிலும், அத்தகைய நிதியை நிறுத்துவது பொது சுகாதார மேம்பாட்டுத் துறையை இன்னும் சிறியதாக மாற்றக்கூடும். இந்தத் துறை ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் சர்வதேச ஆதரவை பெரிதும் சார்ந்துள்ளது. மிக முக்கியமாக, இந்த வளர்ச்சி பொது சுகாதார வேலை சந்தையை பாதிக்கிறது. இது பொது சுகாதார முதுகலை (Master of Public Health (MPH)) மற்றும் இதே போன்ற முதுகலை படிப்புகளைத் தொடரும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளைக் குறைக்கிறது.


ஒரு நாட்டின் நல்வாழ்வு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு சேவைகளுக்கு பொது சுகாதாரம் மிகவும் முக்கியமானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 47 மூலம் இதை எடுத்துக்காட்டுகிறது. பொது சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பொறுப்பு என்று இந்தக் கட்டுரை கூறுகிறது.


பொது சுகாதாரம் என்பது ஒரு சிறப்புத் துறை. மக்களின் சுகாதாரத் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்ய குறிப்பிட்ட அறிவு மற்றும் திறன்கள் தேவை. பொது சுகாதாரத்தில் பயிற்சிபெற்ற ஒரு அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் இந்தியாவிற்கு அவசரமாகத் தேவை. கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் இந்தத் தேவை மிகவும் தெளிவாகியது.


அத்தகைய பணியாளர்கள் அரசாங்கத்திற்கு மட்டுமல்லாமல், பொது சுகாதாரத்தில் பணிபுரியும் குடிமை சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் இது அவசியம்.


இந்தியாவில் பயிற்சி மற்றும் வேலைகளின் பரிணாமம்


இந்தியாவில் பொது சுகாதாரக் கல்வியின் எழுச்சி சமீபத்தியது. ஆனால், அதன் வரலாறு காலனித்துவ சகாப்தத்திற்கு செல்கிறது. ஆரம்ப ஆண்டுகளில், பொது சுகாதாரம் முக்கியமாக மருத்துவக் கல்வியின் ஒரு பகுதியாகக் கற்பிக்கப்பட்டது. 1932ஆம் ஆண்டு கொல்கத்தாவில் அகில இந்திய சுகாதாரம் மற்றும் பொது சுகாதார நிறுவனம் நிறுவப்பட்ட பின்னரும் இந்த வரையறுக்கப்பட்ட அணுகுமுறை தொடர்ந்தது. பின்னர், தடுப்பு மற்றும் சமூக மருத்துவம் என்பது சமூக மருத்துவம் என்று அழைக்கப்பட்டது. இது மருத்துவக் கல்வியின் ஒரு முக்கிய பகுதியாக மாறியது.


சமூக மருத்துவத்தில் நிபுணர்கள் பொது சுகாதாரத்தில் நன்கு பயிற்சி பெற்றவர்கள். அவர்கள் பொது சுகாதார சேவைகளை வழங்கினர் மற்றும் இந்தத் துறையில் மனித வளத் தேவைகளைப் பூர்த்தி செய்தனர். இருப்பினும், அவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மேலும், அவர்களில் பலர் மருத்துவக் கற்பித்தலில் ஈடுபட்டனர்.


ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் (MPH) பெற பல மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றனர்.  இருந்தபோதிலும், இந்தியாவில் பொது சுகாதார நிபுணர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பொது சுகாதார நிபுணர்களுக்கான தேவை அதிகரித்ததால், முதுகலைப் படிப்பு சார்ந்த நிறுவனங்கள் இந்தியாவிற்குள் விரிவடைந்தன.


இந்தியாவில் MPH மற்றும் தொடர்புடைய படிப்புகளை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்துள்ளது. 2000ஆம் ஆண்டில், ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே பொது சுகாதாரத்தில் முதுகலை நிலை படிப்பை வழங்கியது. தற்போது, ​​100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அத்தகைய படிப்புகளை வழங்குகின்றன.


இந்த விரிவாக்கம் 2005ஆம் ஆண்டில் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் (National Rural Health Mission (NRHM)) தொடங்கப்பட்டதன் மூலம் தொடங்கியது. மருத்துவம் அல்லாத பொது சுகாதார நிபுணர்களுக்கான பொது சுகாதார அமைப்பில் NRHM புதிய முறையை உருவாக்கியது. இதன் விளைவாக, அதிகமான நிறுவனங்கள் MPH படிப்புகளை வழங்கத் தொடங்கின. இந்த நிறுவனங்களில் சமூக அறிவியல் பீடங்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்குள் உள்ள சமூக மருத்துவத் துறைகள் அடங்கும்.


ஆரம்பத்தில், பொது சுகாதார நிபுணர்களுக்கான தேவை அதிகரித்தது. இருப்பினும், இந்தப் பணிகளுக்கான அரசாங்க ஆட்சேர்ப்பு பின்னர் ஒரு நிலையான நிலையை அடைந்தது. இது இருந்தபோதிலும், பள்ளிகள், திட்டங்கள் மற்றும் பட்டதாரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து வளர்ந்து வந்தது. இதன் விளைவாக, பட்டதாரிகளுக்கு வேலைகளை தேடுவது கடினமாகிவிட்டது.


இந்தப் பிரச்சினை பல சவால்களால் மேலும் மோசமடைகிறது. தரப்படுத்தப்பட்ட பயிற்சி இல்லாமை மற்றும் போதுமான நடைமுறை கற்றல் வாய்ப்புகள் இல்லாதது ஆகியவை இதில் அடங்கும். ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் மாறுபட்ட பாடத்திட்டங்களும் உள்ளன. இந்தப் பாடத்திட்டங்கள் உண்மையான உலக பொது சுகாதார சவால்களுக்கு மாணவர்களை போதுமான அளவு தயார்படுத்துவதில்லை.


கூடுதலாக, பொது சுகாதாரப் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் சமமாக விநியோகிக்கப்படவில்லை. அசாம், பீகார் மற்றும் ஜார்கண்ட் போன்ற பெரிய மற்றும் மக்கள்தொகைக் கொண்ட மாநிலங்களில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன. பல சிறிய மற்றும் மலைப்பாங்கான மாநிலங்களும் இதே பிரச்சினையை எதிர்கொள்கின்றன.


பட்டதாரிகள் சந்திக்கும் தடைகள், கல்வியில் சிக்கல்கள்


முதன்மையான சவாலானது விநியோகத்திற்கும் தேவைக்கும் இடையிலான பொருந்தாத தன்மை ஆகும். மேலும், பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்து  வருகின்றன.


இன்று, ஆராய்ச்சி அல்லது திட்ட உதவியாளர்கள் போன்ற பொது சுகாதாரத்தில் தொடக்க நிலை பதவிகளுக்கு மிக அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் வருகின்றன. அவர்களில் கணிசமான பகுதியினர் தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்கிறார்கள். இருப்பினும், ஒரு சில பதவிகள் மட்டுமே கிடைப்பதால் வெற்றி விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது.


கூடுதலாக, பொது அமைப்பிற்குள் பொது சுகாதாரப் பணிகள் மற்றும் நிறுவனங்கள் குறைந்து வருகின்றன. இது வேலை வாய்ப்புகளை மேலும் குறைத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் பொது சுகாதார மேலாண்மை பணியாளர்களை உருவாக்கும் முயற்சிகள் பல தடைகளை எதிர்கொண்டுள்ளன.


சுகாதாரப் பராமரிப்புத் துறை மாறி வருகிறது. பொது சுகாதாரத்தில் தனியார் துறை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த மாற்றம் வேலை வாய்ப்புகளை மேலும் குறைக்கிறது. தனியார் நிறுவனங்கள் மருத்துவமனை மற்றும் வணிக மேலாண்மை நிபுணர்களை விரும்புகின்றன. அவை பொது சுகாதார நிபுணர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை. இதன் விளைவாக, பொது மற்றும் தனியார் துறை வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.


ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகள் பட்டதாரிகளுக்கு முக்கிய முதலாளிகளாக உள்ளன. இருப்பினும், இந்தத் துறைகள் பெரும்பாலும் வெளிநாட்டு மானியங்களைச் சார்ந்துள்ளன. சர்வதேச நிதி வழங்குபவர்களுக்கு இந்தியா முன்னுரிமையாக இல்லை. இதனால், வளர்ச்சித் துறையும் நிதி சிக்கல்களை எதிர்கொள்கிறது. அமெரிக்காவில் சமீபத்திய முடிவுகள் இந்த நிலைமையை மோசமாக்கலாம்.


ஆராய்ச்சி மற்றும் சுகாதார மேம்பாட்டிற்கான தேசிய நிதி இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது கணிசமாக நிதி பற்றாக்குறையாகவே உள்ளது. இந்தக் காரணிகளால், பொது சுகாதார நிபுணர்களுக்கான வேலைகள் பற்றாக்குறையாக உள்ளன. இவை எதிர்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகலாம்.


வேலை பற்றாக்குறை மற்றும் முதுகலை கல்வியின் தரம் ஆகிய இரண்டும் குறித்து கவலைகள் உள்ளன. பொது சுகாதாரப் பள்ளிகளின் விரைவான அதிகரிப்பு மாணவர்களை ஈர்ப்பதற்காக கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது. இந்தப் போட்டி பெரும்பாலும் சேர்க்கை தரத்தை குறைக்க வழிவகுத்தது.


பல மாணவர்கள் முதுகலைப் படிப்புகளில் இந்தத் துறையைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் சேருகிறார்கள். சிலருக்கு பொது சுகாதாரத்தில் வெற்றிபெறத் தேவையான ஆர்வமும் இல்லை. கூடுதலாக, பொது சுகாதாரப் பள்ளிகளில் உள்ள பல ஆசிரியர்களுக்கு சரியான பயிற்சி அல்லது நிஜ உலக அனுபவம் இல்லை.


முதுகலை  படிப்புகளுக்கான தரப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் இல்லை. சுகாதார அமைச்சகத்தின் மாதிரி பாடத்திட்ட கட்டமைப்பு இருந்தபோதிலும், தெளிவான விளைவு நடவடிக்கைகளும் இல்லை. இந்த தரப்படுத்தல் இல்லாமை முதுகலை  படிப்பின் தரம் குறித்த கவலைகளை அதிகரிக்கிறது.


இந்தியாவில், முதுகலைப் படிப்புகள் எந்த கட்டாய அமைப்பாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission (NMC)) முதுகலை படிப்புகளின் பயிற்சியை மேற்பார்வையிடுவதில்லை. இதேபோல், பல்கலைக்கழக மானிய குழு (UGC) போன்ற அமைப்புகள் அதை ஒழுங்குபடுத்துவதில்லை.


இந்த தர சோதனைகள் இல்லாமல் இருப்பதால்,  முதுகலைப் பட்டதாரிகளின் ஒட்டுமொத்த தரநிலை பாதிக்கப்படுகிறது.


கருத்தில் கொள்ள வேண்டிய அணுகுமுறைகள்


இந்த சவால்களை எதிர்கொள்ள, ஒரு பன்முக அணுகுமுறை தேவை. அனைத்து மட்டங்களிலும் பொது சுகாதார வேலைகளை உருவாக்குவதே மிக அவசரமான முன்னுரிமை. இந்த நிலைகளில் முதன்மை பராமரிப்பு, மாநில சுகாதார அமைப்புகள் மற்றும் தேசிய சுகாதார அமைப்புகள் ஆகியவை அடங்கும்.


பெரும்பாலான வளர்ந்த நாடுகளில், பொது சுகாதார கல்வி அமைப்புகள் நன்கு நிறுவப்பட்டவை. இந்த நாடுகளில், அரசாங்கங்கள் பொது சுகாதார நிபுணர்களின் மிகப்பெரிய முதலாளிகளாகும்.


இதேபோல், மாநில அரசாங்கங்களுக்குள் ஒரு அர்ப்பணிப்புள்ள பொது சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவது ஒரு குறிப்பிடத்தக்க படியாக இருக்கும். இந்த நடவடிக்கை வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், பொது சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தவும் உதவும்.


ஒரு வலுவான ஒழுங்குமுறை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இது ஒரு பிரத்யேக ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்குவதன் மூலமோ அல்லது தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission (NMC)) அல்லது பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) போன்ற ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்குள் ஒரு சிறப்பு பொது சுகாதார கல்விப் பிரிவை அமைப்பதன் மூலமோ செய்யப்படலாம்.


இந்தத் துறை பொது சுகாதார நிபுணர்களால் வழிநடத்தப்பட வேண்டும். இது பாடத்திட்டத் தரங்களை அமைத்து குறைந்தபட்ச பயிற்சித் தேவைகளை வரையறுக்க வேண்டும். அதே நேரத்தில், பொது சுகாதாரம் மாறிவரும் மற்றும் வளர்ந்து வரும் துறை என்பதால், நிறுவனங்கள் புதுமைகளை உருவாக்க அனுமதிக்க வேண்டும்.


அனைத்து நிறுவனங்களிலும் பொது சுகாதாரப் பயிற்சி பொது சுகாதார அமைப்புகளுக்குள் நடைமுறை கற்றலுடன் இணைக்கப்பட வேண்டும். பொது சுகாதார நிறுவனங்கள் இல்லாத அல்லது ஒரு சில மட்டுமே உள்ள மாநிலங்கள் மேலும் நிறுவ பாடுபட வேண்டும்.


உலகளாவிய நிலைமை மாறிக்கொண்டே இருக்கிறது. இது நிலையான சுகாதார வளர்ச்சியை ஆதரிக்க நாடு வலுவான நடவடிக்கை எடுத்து உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதை அவசியமாக்குகிறது.


டாக்டர். விகாஷ் ஆர். கேஷ்ரி ஒரு மூத்த பொது சுகாதாரம் மற்றும் சுகாதார கொள்கை நிபுணர் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகை சுகாதார பள்ளியில் துணை மூத்த விரிவுரையாளர் ஆவார்.



Original article:

Share:

ஊட்டச்சத்து பிரச்சனையை சமாளித்தல் -பிரியதர்ஷினி சிங்

 ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு, வெறும் ஒரு தீர்வாக இல்லாமல், ஒரு முழுமையான ஊட்டச்சத்து திட்டம் தேவை.


இந்தியாவில் ஊட்டச்சத்து என்பது போதுமான உணவுப் பற்றாக்குறை மட்டுமல்ல. அவை கலாச்சாரம், சாதி மற்றும் பாலினம் போன்றவற்றாலும் பாதிக்கப்படுகிறது.


அரசாங்கக் கொள்கைகள் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டில் கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், ஆண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் சாதரண பெண்கள் போன்ற பிற குழுக்கள் பெரும்பாலும் தேசிய ஊட்டச்சத்து திட்டங்களில் புறக்கணிக்கப்படுகின்றன.


நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களை நாம் பெரும்பாலும் கவனிக்காமல் விடுகிறோம். இவை உண்மையில் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளாகும். இரண்டு வகையான ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளன. ஒன்று மக்களுக்கு போதுமான உணவு இல்லாதபோது ஏற்படுகிறது. மற்றொன்று மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாதபோது ஏற்படுகிறது. அதனால் இவை இரண்டுமே கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.


உலகிலேயே ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் இரத்த சோகை உள்ள பெண்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.


குழந்தைகள் ஆரோக்கியம்: தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5-ன் படி, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 36% வளர்ச்சி குன்றியவர்கள் (மோசமான ஊட்டச்சத்து காரணமாக அவர்களின் வயதுக்கு குறைவாக). தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளில் 11% (6-23 மாதங்கள்) மட்டுமே சரியான உணவைப் பெறுகிறார்கள்.


பெண்கள் ஆரோக்கியம்: 57% பெண்கள் (15-49 வயது) இரத்த சோகையால் (குறைந்த இரும்புச்சத்து அளவு) பாதிக்கப்படுகின்றனர்.


வாழ்க்கை முறை நோய்கள்: உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகமாக உருவாகின்றன. 24% பெண்களும் 23% ஆண்களும் அதிக எடை அல்லது பருமனாக உள்ளனர். 14% மக்கள் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள்.


ஒரு விரிவான நிகழ்ச்சி நிரல்


போஷன் 2.0 (Poshan 2.0) மற்றும் சாக்ஷம் அங்கன்வாடி (Saksham Anganwadi) ஆகியவை ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளைத் தொடர்கின்றன. அவை கூடுதல் உணவுப் பொருட்கள், துணை உணவுகள், இரும்பு மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் போன்றவற்றை வழங்குகின்றன. மேலும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களைக் கண்காணிக்கின்றன. போஷன் 2.0, லட்சிய மாவட்டங்கள் (aspirational districts) மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் சிறப்புக் கவனம் செலுத்துகிறது.


இருப்பினும், இந்த திட்டங்கள் ஊட்டச்சத்து குறைபாடு என்பது சில பகுதிகளிலும் குறிப்பிட்ட குழுக்களிடையேயும் மட்டுமே ஒரு பிரச்சனை என்பதைக் குறிக்கின்றன.  அதற்குப் பதிலாக, ஊட்டச்சத்துக் குறைபாட்டை சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பாதிக்கும் ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாகக் கருதும் ஒரு பரந்த திட்டம் நமக்குத் தேவை.


ஒரு நல்ல ஊட்டச்சத்து திட்டம் சமூகத்தில் உள்ள பல்வேறு குழுக்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதில் மூன்று முக்கிய புள்ளிகள் இருக்க வேண்டும். அவை:


1. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்கு அப்பால் ஊட்டச்சத்து தேவைகளை அடையாளம் காணுதல்.

2. பல்வேறு தீர்வுகளை வழங்கவும், குறிப்பாக உள்ளூர் உணவு முறைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுதல்.

3. ஊட்டச்சத்து சேவைகளை வழங்கக்கூடிய உள்ளூர் வசதிகளைக் கண்டறிதல்.


இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளூர் நிறுவனங்களைக் கண்டுபிடிப்பதே மிகப்பெரிய சவால். நமது சமூகங்களில் ஒவ்வொரு நாளும் இந்த வேலையை யார் செய்வார்கள் என்ற கேள்விக்கு, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் (health and wellness centres (HWCs)) என்று பதில் தெளிவாக உள்ளது.


தற்போது கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இளம் பெண்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கப்படுகிறது. இதில் கூடுதல் உணவுப் பொருட்கள், அங்கன்வாடி மையங்களில் (AWCs) உள்ள இளம் பருவப் பெண்களுக்கு இரும்பு மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு ஆகியவை அடங்கும்.


இந்த ஊட்டச்சத்து திட்டங்களை நாம் அதிக மக்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். மேலும், சுகாதாரப் பணியாளர்கள் (healthcare workers (HCWs)) மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் (Anganwadi workers (ACWs)) ஆகியோரை ஈடுபடுத்த வேண்டும். ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் உணவுப் பொருட்கள் (take-home ration) போன்றவை அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் நன்மை பயக்கும்.


கூடுதலாக, நடுத்தர குடும்பங்களுக்கு மலிவு விலையில், ஊட்டச்சத்து நிறைந்த உள்ளூர் உணவுகளை ஊக்குவிக்க வேண்டும். இது சர்க்கரை, குறைந்த நார்ச்சத்துள்ள உணவுப் பொருள்களை அவர்கள் உட்கொள்வதைக் குறைக்க உதவும்.


இந்தத் திட்டத்தைப் பின்பற்ற, அனைவருக்கும் சேவை செய்ய போதுமான சுகாதாரப் பணியாளர்கள் (HCWs) இருக்க வேண்டும். ஒவ்வொரு சுகாதாரப் பணியாளர்களும் அதன் முழுப் பகுதிக்கும் முழுமையான ஊட்டச்சத்து சேவைகளை வழங்க வேண்டும். தற்போது, சுகாதாரப் பணியாளர்கள் சமமாகப் பரவவில்லை. கிராமப்புறங்களில் நகர்ப்புறங்களைவிட அதிகமான சுகாதாரப் பணியாளர்கள் உள்ளன.  கிராமப்புறங்களுக்குள் கூட, சில இடங்களில் மற்றவற்றை விட அதிகமான சுகாதாரப் பணியாளர்கள் உள்ளன.


சுகாதாரப் பணியாளர்கள் (HCWs) ஊட்டச்சத்து சேவைகளில் குறைவாகவே உள்ளனர். அவர்கள் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள், இளம் பருவத்தினர், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய், பேரழிவு அல்லது அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு ஊட்டச்சத்து ஆலோசனைகளை வழங்க வேண்டும். இருப்பினும், இந்த சேவைகள் வழக்கமாகவோ அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வழங்கப்படுவதில்லை.


சுகாதாரப் பணியாளர்களில் (HCWs) ஊட்டச்சத்து சேவைகளை வழங்க அர்ப்பணிப்புள்ள பணியாளர்களும் தேவை. தற்போது, ​​ஊட்டச்சத்து என்பது பல்நோக்குப் பணியாளர்களின் வேலையில் ஒரு சிறிய பகுதி மட்டுமே.


வெற்றிக்கான காரணிகள்


ஊட்டச்சத்து திட்டத்தின் வெற்றி, உள்ளூர் தலைவர்களை ஈடுபடுத்துதல் மற்றும் உள்ளூர் உணவுகளுடன் ஊட்டச்சத்து நடைமுறைகளை இணைத்தல் ஆகிய இரண்டு விஷயங்களைப் பொறுத்தது. பிரவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரேர்னா சிங் 1950ஆம் ஆண்டுகளில் பெரியம்மை தடுப்பூசியை ஆய்வு செய்தார். இந்தியா மற்றும் சீனா போன்ற சில நாடுகள் தங்கள் மக்களுக்கு மற்றவர்களைவிட வேகமாக தடுப்பூசி பெற்றதைக் கண்டறிந்தார். மேலும், வெற்றி பெற்ற நாடுகளில் தடுப்பூசியை ஆதரிக்கும் உள்ளூர் தலைவர்கள் இருந்தனர் மற்றும் அதை பழக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இணைத்தனர்.


இந்தியா வேகமாக மாறி வருகிறது. உடல்நலம் என்பது வெறும் நோய் இல்லாதது மட்டுமல்ல, ஒட்டுமொத்த நலமாக இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய ஊட்டச்சத்து திட்டத்தை உருவாக்குவது ஒரு நல்ல முதல் படியாகும். இந்தத் திட்டத்தை ஆரம்ப சுகாதார அமைப்புகள் மூலம் நிர்வகிக்க வேண்டும்.



Original article:

Share: