அவசரநிலையின் 50-வது ஆண்டு : காரணங்களிலிருந்து அரசியலமைப்பு தாக்கங்கள் வரை -ரோஷ்னி யாதவ்

 ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 25, 1975 அன்று இரவு, இந்திரா காந்தி அரசாங்கம் அவசரநிலையை அறிவித்தது. "உள்நாட்டு குழப்பம்" (“internal disturbance.”) இருப்பதாகக் கூறியது. சுதந்திர இந்தியாவில் அவசரநிலையை அமல்படுத்த இந்தக் காரணம் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை. அதன் 50வது ஆண்டு நிறைவை குறிக்கும் வேளையில், நாட்டின் அரசியலமைப்பு வரலாற்றில் இந்த முக்கியமான திருப்புமுனையை திரும்பிப் பார்க்க வேண்டிய தருணம் இது.

என்ன பிரச்சினை?


அவசரநிலை 50 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 25, 1975 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. அடுத்த 21 மாதங்களுக்கு, அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டன, பத்திரிகைகள் தடை செய்யப்பட்டன, பலர் கைது செய்யப்பட்டனர், மற்றும் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், அரசாங்கம் சிறப்பு உத்தரவுகளால் ஆளப்பட்டது. 


கேள்வி 1: நவீன இந்திய அரசியல் வரலாற்றில் "அவசரநிலை" என்றால் என்ன, அவசரநிலைகள் பற்றி அரசியலமைப்பு என்ன சொல்கிறது?


நவீன இந்திய அரசியல் வரலாற்றில், "அவசரநிலை" என்ற சொல் ஜூன் 25, 1975 முதல் மார்ச் 21, 1977 வரையிலான காலத்தைக் குறிக்கிறது, அப்போது பிரதமர் இந்திரா காந்தியின் அரசாங்கம் சட்டங்கள் மற்றும் நிர்வாகத்தின் மீது முழுக் கட்டுப்பாட்டை எடுக்க சிறப்பு அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தியது.


அவசரநிலைகள் பற்றிய விதிகள் இந்திய அரசியலமைப்பின் பகுதி XVIII-ல், பிரிவுகள் 352 முதல் 360 வரை காணப்படுகின்றன. இந்த விதிகள் ஜெர்மனியின் வீமர் அரசியலமைப்பால் ஈர்க்கப்பட்டன. அரசியலமைப்பில் மூன்று வகையான அவசரநிலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.


இந்தியாவில் அவசரநிலைகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகள்:


பிரிவு 352: அரசாங்கம் ஒரு தேசிய அவசரநிலையை அறிவிக்க அனுமதிக்கிறது.


பிரிவு 353: ஒரு தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்ட பிறகு என்ன நடக்கும் என்பதை விளக்குகிறது.


பிரிவு 354: அவசரநிலையின் போது ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் பணம் எவ்வாறு பகிரப்படுகிறது என்பதில் மாற்றங்களை அனுமதிக்கிறது.


பிரிவு 355: வெளிப்புற தாக்குதல் அல்லது உள்நாட்டு வன்முறையிலிருந்து மாநிலங்களைப் பாதுகாப்பது ஒன்றிய  அரசின் கடமை என்று கூறுகிறது.


பிரிவு 356: ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு ஒழுங்கு சீர்குலைந்தால், ஒன்றிய அரசு அதன் கட்டுப்பாட்டை எடுக்க அனுமதிக்கிறது.


பிரிவு 357: பிரிவு 356-ன் கீழ் மாநிலங்களுக்கு சட்டங்களை உருவாக்க ஒன்றிய அரசை அனுமதிக்கிறது.


பிரிவு 358: தேசிய அவசரநிலையின் போது, ​​அரசாங்கம் பிரிவு 19 (சுதந்திர உரிமைகள்)-ஐ புறக்கணிக்கலாம்.


பிரிவு 359: அவசரநிலையின் போது பகுதி III (அடிப்படை உரிமைகள்)-ன் கீழ் உரிமைகளை நிறுத்தி வைக்க அனுமதிக்கிறது.


பிரிவு 360: நாட்டின் நிதி நிலைத்தன்மை அச்சுறுத்தலுக்கு உள்ளானால் நிதி அவசரநிலையை பிறப்பிக்கலாம்.


இந்தியாவில் எத்தனை முறை அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது?


இந்தியா இதுவரை மூன்று முறை அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளது:


1. முதல் அவசரநிலை - அக்டோபர் 26, 1962 அன்று, போர் சூழ்நிலை காரணமாகவும்,


2. இரண்டாவது அவசரநிலை - டிசம்பர் 3, 1971 அன்று, போர் காரணமாகவும்,


3. மூன்றாவது அவசரநிலை - ஜூன் 25, 1975 அன்று, உள்நாட்டுக் கலவரம் காரணமாக.

(குறிப்பு: "உள் குழப்பம்" என்ற சொல் பின்னர் 1978-ல் அரசியலமைப்பின் 44வது திருத்தத்தால் நீக்கப்பட்டது.)


கேள்வி 2: இந்திய அரசியலமைப்பு எத்தனை வகையான அவசரநிலைகளை அங்கீகரிக்கிறது?


அரசியலமைப்பின் பகுதி XVIII-ல் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விதிகள் மூன்று வகையான அவசரநிலைகளை வழங்குகின்றன: தேசிய அவசரநிலை (பிரிவு 352-354, 358-359), குடியரசுத்தலைவர் ஆட்சி (பிரிவு 355–357), நிதி அவசரநிலை (பிரிவு360).


தேசிய அவசரநிலை


அரசியலமைப்பின் பிரிவு 352-ன் கீழ், இந்தியாவின் பாதுகாப்பு அல்லது அதன் எந்தப் பகுதியும் போர், வெளிப்புறத் தாக்குதல் அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சியால் அச்சுறுத்தப்பட்டால் குடியரசுத்தலைவர் தேசிய அவசரநிலையை அறிவிக்க முடியும். இது பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையில் செய்யப்படுகிறது. (1975-ல், "ஆயுதமேந்திய கிளர்ச்சி" என்பதற்குப் பதிலாக "உள்நாட்டு குழப்பம்" என்று பயன்படுத்தப்பட்டது.) இந்த வகையான அவசரநிலை பொதுவாக "தேசிய அவசரநிலை" என்று அழைக்கப்படுகிறது.


குடியரசுத்தலைவர் ஆட்சி


பிரிவு 356(1)-ன் படி, ஆளுநரின் அறிக்கை அல்லது வேறுவிதமாக அரசியலமைப்பின்படி ஒரு மாநில அரசு செயல்பட முடியாது என்று குடியரசுத்தலைவர் கருதினால் ஒரு அறிவிப்பை வெளியிடலாம்:


(அ) மாநில அரசாங்கத்தின் சில அல்லது அனைத்து செயல்பாடுகளையும் ஆளுநர் அல்லது மாநிலத்தில் உள்ள எந்தவொரு அதிகாரத்தின் அதிகாரங்களையும், மாநில சட்டமன்றத்தைத் தவிர, எடுத்துக்கொள்வது;


(ஆ) மாநில சட்டமன்றத்தின் அதிகாரங்களை நாடாளுமன்றம் செயல்படுத்த அனுமதிப்பது;


(இ) பிரகடனத்தை செயல்படுத்த உதவும் வகையில் தேவையான மாற்றங்கள் அல்லது தற்காலிக விதிகளை உருவாக்குவது, அந்த மாநிலத்தில் சில அரசியலமைப்பு விதிகளை நிறுத்துவது உட்பட.


நிதி அவசரநிலை


இந்தியாவின் நிதி நிலைத்தன்மை அல்லது கடன் அல்லது அதன் எந்தப் பகுதியின் நிதி நிலைத்தன்மை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக குடியரசுத்தலைவர் நம்பினால், அரசியலமைப்பின் பிரிவு 360, நிதி அவசரநிலையை அறிவிக்க அனுமதிக்கிறது.


கேள்வி 3: 1975-ஆம் ஆண்டு தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்த முக்கிய நிகழ்வுகள் யாவை?


1974 மற்றும் 1975-ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட பல அரசியல் மற்றும் சமூக முன்னேற்றங்கள் தேசிய அவசரநிலை பிரகடனத்திற்கு வழிவகுத்தன. அவற்றில் பின்வருவன அடங்கும்:


📍 ஜேபி இயக்கம்:


1974 ஆம் ஆண்டின் முற்பகுதியில், குஜராத்தில் மாணவர்கள் முதல்வர் சிமன்பாய் படேலுக்கு எதிராக நவநிர்மாண் இயக்கம் என்ற போராட்டத்தைத் தொடங்கினர். அவரது காங்கிரஸ் அரசாங்கத்தை ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டினர். போராட்டங்கள் வன்முறையாக மாறியது. படேல் ராஜினாமா செய்தார். குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இது பீகாரில் ஊழல் மற்றும் மோசமான நிர்வாகத்திற்கு எதிராக இதேபோன்ற மாணவர் போராட்டத்தைத் தூண்டியது.


ஏபிவிபி மற்றும் சோசலிச குழுக்கள் சத்ர சங்கர்ஷ் சமிதியை உருவாக்கி, மரியாதைக்குரிய காந்தியத் தலைவரான ஜெயபிரகாஷ் நாராயணை (ஜேபி) தங்கள் தலைமைக்கு அழைத்தன. ஜேபி ஒப்புக்கொண்டார். ஆனால், இயக்கம் வன்முறையற்றதாக இருந்து, இந்தியா முழுவதும் பரவி, ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டிருந்தனது.


இது ஜேபி இயக்கம் என்று அறியப்பட்டது. ஜூன் 5, 1974 அன்று, ஜே.பி. பாட்னாவில் "சம்பூர்ண கிராந்தி" (முழு புரட்சி)-க்கு அழைப்பு விடுத்து ஒரு பிரபலமான உரையை நிகழ்த்தினார். 1974-ஆம் ஆண்டின் இறுதியில், நாடு முழுவதிலுமிருந்து அவருக்கு ஆதரவு கிடைத்தது. மேலும், டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்தினார்.


1975 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவர் இந்தியா முழுவதும் பயணம் செய்து, "சின்ஹாசன் காலி கரோ, கே ஜனதா ஆதி ஹை" ("அரியணையை காலி செய், மக்கள் வருகிறார்கள்") என்ற முழக்கத்துடன் பெரிய பேரணிகளை நடத்தினார்.


📍 1974 ரயில்வே வேலைநிறுத்தம்:


மே 1974ஆம் ஆண்டில், சோசலிசத் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஒரு பெரிய ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்கினார், இது இந்தியா முழுவதும் ரயில் சேவைகளை மூன்று வாரங்களுக்கு நிறுத்தியது.


📍 ராஜ் நரேன் தீர்ப்பு:


ஜூன் 12, 1975 அன்று, அலகாபாத் உயர் நீதிமன்றம் பிரதமர் இந்திரா காந்தியை தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக ராஜ் நரேன் தாக்கல் செய்த வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. நீதிமன்றம் ரே பரேலியில் இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்தது.


பின்னர் உச்சநீதிமன்றம் அவர் நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள அனுமதித்தது, ஆனால் வாக்களிக்கவில்லை.


ஜூன் 25, 1975 அன்று இரவு, இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது, அரசியலமைப்பின் பிரிவு 352(1)-ன் கீழ் தேசிய அவசரநிலையை அறிவித்தார். அந்த நேரத்தில், போர், வெளிப்புற ஆக்கிரமிப்பு அல்லது உள் குழப்பத்தால் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருந்தால் சட்டம் அவசரநிலையை அனுமதித்தது. (குறிப்பு: 1978-ஆம் ஆண்டில், "உள் குழப்பம்" என்ற சொல் அரசியலமைப்பு திருத்தம் மூலம் "ஆயுதமேந்திய கிளர்ச்சி" என்று மாற்றப்பட்டது.)





கேள்வி 4: 1975 தேசிய அவசரநிலையின் போதும் அதற்குப் பின்னரும் ஏற்பட்ட முக்கிய அரசியலமைப்பு தாக்கங்கள் என்ன?


1975-ஆம் ஆண்டில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு, பல பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு ஒரு ஒற்றையாட்சி அமைப்பாக திறம்பட மாற்றப்பட்டது. மாநில அரசுகளுக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடைத்தது. மாநில அரசுகள் அதிகாரப்பூர்வமாக நீக்கப்படாவிட்டாலும், அவை முழுமையாக மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. செய்தித்தாள்கள் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டன. மேலும் UNI மற்றும் PTI செய்தி நிறுவனங்கள் சமாச்சார் என்ற அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தில் இணைக்கப்பட்டன.


ஜெயபிரகாஷ் நாராயண் (ஜேபி) உட்பட கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்தியன் எக்ஸ்பிரஸ்-ன் விகாஸ் பதக் அறிக்கையின்படி, உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டத்தின் (MISA) கீழ் சுமார் 36,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


இந்திய ஜனநாயகத்தில், குறிப்பாக அரசியலமைப்பில், அவசரநிலை பல மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இந்தக் காலகட்டத்தில் செய்யப்பட்ட சில முக்கிய அரசியலமைப்பு மாற்றங்கள்:


38வது மற்றும் 39வது அரசியலமைப்புத் திருத்தங்கள்: 


எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் இருந்தபோது இந்தத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. 38வது திருத்தம், அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்வதைத் தடுத்தது. 39-வது திருத்தம், குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தவைர், பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோரின் தேர்தல்களை நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியாது என்று கூறியது.


42வது அரசியலமைப்பு திருத்தம்: இந்தத் திருத்தம் பல முக்கிய மாற்றங்களைச் செய்தது:


  • தேர்தல் தகராறுகள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்கள் இனி விசாரிக்க முடியாது.


  • மாநில விவகாரங்களில் தலையிட மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் கிடைத்தது.


  • நீதிமன்ற மறுஆய்வு இல்லாமல் அரசியலமைப்பைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு வரம்பற்ற அதிகாரம் வழங்கப்பட்டது.


  • மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கொள்கைகளை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தையும் நீதிமன்றத்தில் கேள்வி கேட்க முடியாது.


உங்களுக்குத் தெரியுமா?


அவசரநிலையின்போது, ​​நாடாளுமன்றம் மக்களவையின் ஐந்து ஆண்டு காலத்தை ஒரு வருடம் நீட்டிக்க முடியும். வழக்கமாக மாநிலங்களுக்குச் சொந்தமான பட்டியலில் சட்டங்களை இயற்றவும், மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களை மாநிலங்களுக்கு நீட்டிக்கவும் முடியும். நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன், மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் நிதி வளங்கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன என்பதை குடியரசுத் தலைவர் மாற்ற முடியும்.


அவசர நிலைக்குப் பிந்தைய நிலை


1977ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவசரநிலை முடிவுக்கு வந்தது. அதன் பிறகு, ஜனசங்கம், காங்கிரஸ் (O), சோசலிஸ்டுகள் மற்றும் பாரதிய லோக் தளம் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. மொரார்ஜி தேசாய் இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமரானார். இந்தக் காலகட்டத்தில் புதிய அரசியல் குழுக்கள் செல்வாக்கு பெறுவது மற்றும் அதிகாரம் மேலும் பரவலாக்கப்பட்டிருப்பது போன்ற பெரிய மாற்றங்கள் காணப்பட்டன. அவசரநிலைக்குப் பிறகு சில முக்கிய அரசியலமைப்பு மாற்றங்கள்:


📍44வது அரசியலமைப்புத் திருத்தம்:


1976ஆம் ஆண்டின் 42வது திருத்தத்தால் செய்யப்பட்ட பல மாற்றங்களை ஜனதா அரசாங்கம் ரத்து செய்தது. இது அவசரநிலை விதியை முற்றிலுமாக நீக்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் அதைச் சுமத்துவதை மிகவும் கடினமாக்கியது.


அவசரநிலை பிரகடனங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்ய நீதிமன்றங்களை அனுமதித்தது. மேலும், அத்தகைய பிரகடனங்களை ஒரு மாதத்திற்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைக்க வேண்டும் என்று கோரியது. இரு அவைகளும் சிறப்பு பெரும்பான்மையுடன் அதாவது மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினரும், தற்போது வாக்களிப்பவர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கும் அதை அங்கீகரிக்கவில்லை என்றால் அவசரநிலை முடிவுக்கு வரும்.


அவசரநிலையை அமல்படுத்துவதற்கான சரியான காரணமாக "உள்நாட்டு குழப்பம்" என்பதையும் இந்தத் திருத்தம் நீக்கியது. இப்போது, ​​போர், வெளிப்புற ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதக் கிளர்ச்சி மட்டுமே காரணங்களாகப் பயன்படுத்த முடியும். இருப்பினும், 42-வது திருத்தத்தால் சேர்க்கப்பட்ட 'மதச்சார்பற்ற' மற்றும் 'சமதர்ம' என்ற வார்த்தைகளை முகவுரையில் அது தக்க வைத்துக் கொண்டது.


📍ஷா கமிஷன் மற்றும் அதன் அறிக்கை:


ஜனதா அரசாங்கம் அவசரநிலை மற்றும் அதன் விளைவுகளை விசாரிக்க ஷா கமிஷனை அமைத்தது. அவசரநிலையை ஆணையத்தின் அறிக்கை கடுமையாக விமர்சித்தது. இந்த முடிவு ஒருதலைப்பட்சமானது மற்றும்  அடிப்படை உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறியது.


கேள்வி 5: 1975-ஆம் ஆண்டு தேசிய அவசரநிலையிலிருந்து அரசியலமைப்பு பாடங்கள் என்ன?


வரலாறு நமக்கு முக்கியமான பாடங்களைக் கற்பிக்கிறது. எனவே, நாம் அதே தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. அத்தகைய ஒரு பாடம் 1975-ஆம் ஆண்டு அவசரநிலையிலிருந்து வருகிறது. இது இந்தியாவின் ஜனநாயகத்தில் ஒரு தாழ்ந்த புள்ளியாகக் கருதப்படுகிறது. இந்த நிகழ்வு இன்றும் மக்களுக்கு ஜனநாயக விழுமியங்களையும் குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.


1975-ஆம் ஆண்டு அவசரநிலையிலிருந்து முக்கியப் பாடம் என்னவென்றால், பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சி இருந்தால் மட்டுமே ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும். இதற்கு ஒரு தன்னாட்சியான நீதித்துறை, ஒரு சுதந்திரமான பத்திரிகை, ஒரு வலுவான அரசியல் எதிர்ப்பு மற்றும் சிவில் சமூகத்தின் தீவிர ஈடுபாடு தேவை.


தி இந்தியன் எக்ஸ்பிரஸின் அபூர்வா விஸ்வநாத் "ஜனநாயகத்தை சீர்குலைக்க இந்திரா காந்தி அரசியலமைப்பை எவ்வாறு பயன்படுத்தினார்" (“How Indira Gandhi used the Constitution to subvert democracy”) என்ற கட்டுரையில் ஜனநாயகம் அரசியலமைப்பைப் பின்பற்றுவதை அடிப்படையாகக் கொண்டது என்று எழுதினார். இதில் அரசியல் எதிர்க்கட்சி, நீதித்துறை, பத்திரிகை மற்றும் குடிமைச் சமூகத்தின் பணிகளிலிருந்து வரும் பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவை அடங்கும்.



Original article:

Share:

நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு ஏன் முக்கியமானது? -குஷ்பூ குமாரி

 நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் (Parliamentary Estimates Committee) பவள விழாவில் உரையாற்றும்போது, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நிறுவன ஒத்துழைப்பை வளர்ப்பதில் இந்த குழுவின் பங்கை வலியுறுத்தினார். நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு என்றால் என்ன என்பதையும் நாடாளுமன்ற குழுக்களைப் பற்றியும் புரிந்துகொள்ள அடிப்படைகளுக்குத் திரும்பிச் செல்வோம்.


தற்போதைய செய்தி:


மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த திங்கள்கிழமை மும்பையின் விதான் பவன் வளாகத்தில் பாராளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் பவள விழாவை அடையாளப்படுத்தும் தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்தார். மும்பையில் உள்ள மகாராஷ்டிரா விதான் பவன் வளாகத்தில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் நிகழ்வு, நாடு முழுவதிலும் இருந்து குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை ஒன்றிணைத்தது.


முக்கிய அம்சங்கள்:


1. 75 ஆண்டுகால சாதனையை குறிக்கும் வகையில் "இந்தியாவின் நாடாளுமன்ற பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தருணம்" என்று விவரித்த பிர்லா, 1950-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதிலிருந்து மதிப்பீட்டுக் குழு 1,000-க்கும் மேற்பட்ட அறிக்கைகளை சமர்ப்பித்து, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் முக்கிய தேசிய கொள்கைகளை வடிவமைப்பதில் பங்காற்றியுள்ளது என்று விவரித்தார்.


2. பிர்லா நிறுவன ஒத்துழைப்பை வளர்ப்பது, நிதி பொறுப்புணர்வை அதிகரிப்பது மற்றும் ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்த தொழில்நுட்ப-சார்ந்த ஆட்சிமுறையை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சபாநாயகர் உறுப்பினர்களை ஒத்துழைப்பு மற்றும் பொறுப்பு உணர்வைக் கடைப்பிடிக்க வலியுறுத்தினார், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தூண்களாக குழுக்களின் பங்கை வலுப்படுத்தினார். அவர் நாடாளுமன்ற மற்றும் மாநில/யூனியன் பிரதேச சட்டமன்றங்களின் மதிப்பீட்டுக் குழுக்களுக்கிடையே ஒருங்கிணைப்புக்கும் அழைப்பு விடுத்தார்.


நாடாளுமன்ற குழுக்கள்


3. திலீப் பி சந்திரன் (Dileep P Chandran) இந்தியன் எக்ஸ்பிரஸில், "நாடாளுமன்ற குழுக்கள் பெரிய சட்டமன்றங்களின் நிறுவன மற்றும் தொழில்நுட்ப சிக்கலான தன்மையின் வரம்புகளை சமாளிக்கும் சாதனங்களாகும்.  சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலிருந்து குழு முறையை ஏற்றுக்கொண்டது மற்றும் அதன் சொந்த நாடாளுமன்றத்தில் பெரிய பணிகளை திறம்பட நிர்வகிக்க புதிய நுட்பங்களைக் கண்டுபிடித்தது.


4. இந்தியாவில் நாடாளுமன்ற குழு அமைப்பின் தோற்றம் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திற்கு செல்கிறது. சுதந்திர இந்திய நாடாளுமன்ற முதல் குழு பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee (PAC)) ஆகும், இது 1921-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம், 1919-இன் கீழ் அமைக்கப்பட்டது. இது மான்ட்ஃபோர்டு சீர்திருத்தங்கள் (Montford Reforms) என்றும் அழைக்கப்படுகிறது.


 5. அரசியலமைப்பு நாடாளுமன்ற குழுக்களின் அமைப்பு, பதவிக்காலம் அல்லது செயல்பாட்டிற்கு எந்த சிறப்பு விதிகளையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கவில்லை. நாடாளுமன்றக் குழுக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளைக் (privileges) கையாளும் பிரிவு 105 மற்றும் நாடாளுமன்றம் அதன் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தையை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை உருவாக்கும் அதிகாரத்தை வழங்கும் பிரிவு 118-ன் படி தங்களுக்கு தேவையான அதிகாரத்தைப் பெறுகின்றன.


நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையும் இந்த அரசியலமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு, அதன் நடைமுறை மற்றும் வணிக நடத்தையை ஒழுங்குபடுத்த விதிகளை உருவாக்கலாம் என்று பிரிவு 118(1)) குறிப்பிடப்பட்டுள்ளது.


6. மக்களவை நடைமுறை விதிகள் பாராளுமன்ற குழுக்களின் நியமனத்திற்கு வழிவகை செய்கின்றன. இந்தக் குழு அவையால் நியமிக்கப்படுகிறது அல்லது தேர்ந்தெடுக்கப்படுகிறது அல்லது சபாநாயகர்/தலைவரால் பரிந்துரைக்கப்படுகிறது. அவை சபாநாயகர்/தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகின்றன. இந்தக் குழு தனது அறிக்கையை அவைக்கு அல்லது சபாநாயகருக்கு/தலைவருக்கு சமர்ப்பிக்கிறது.


7. நாடாளுமன்ற குழுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் அதிக நேரம் செலவிட உதவுகின்றன மற்றும் விவகாரங்களை மிக விரிவாக ஆய்வு செய்கின்றன. இந்தக் குழுக்கள் அந்தந்த துறைகளின் நிபுணர்களிடமிருந்து உள்ளீடுகளைப் பெறலாம் மற்றும் விவாதங்களில் பங்குதாரர்களின் பங்கேற்பை உறுதி செய்யலாம். இந்த நடவடிக்கைகள் பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு கடினமான பிரச்சினைகளில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த உதவுகின்றன.


மதிப்பீட்டுக் குழு (Estimates Committee)


1. மதிப்பீட்டுக் குழு ஒரு நிதி நிலைக்குழு (Financial Standing Committee) ஆகும். இந்த குழுவில் 30 உறுப்பினர்களுக்கு மேல் இடம் பெற்றிருக்கமாட்டார்கள். அவர்கள் ஒற்றை மாற்றக்கூடிய வாக்கு மூலம் விகிதாசார பிரதிநிதித்துவ கொள்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் அவையால் அதன் உறுப்பினர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒரு அமைச்சர் குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படக்கூடாது மற்றும் ஒரு உறுப்பினர், குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அமைச்சராக நியமிக்கப்பட்டால், அத்தகைய உறுப்பினர் அத்தகைய நியமனத்தின் தேதியிலிருந்து குழுவின் உறுப்பினராக இருப்பதை நிறுத்திவிடுவார்.


ஜூன் 23, 2025 திங்கட்கிழமை, மும்பையில் உள்ள விதான் பவனில் நடைபெற்ற இரண்டு நாள் தேசிய மதிப்பீட்டுக் குழுக்களின் மாநாட்டில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். அவருடன் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் மாநிலங்களவைத் தலைவர் ராகுல் நர்வேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


2. பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு மேல் இருக்கக்கூடாது. மக்களவை விதி 312 "குழு நிதி ஆண்டு முழுவதும் அவ்வப்போது மதிப்பீடுகளின் ஆய்வைத் தொடரலாம் மற்றும் அதன் ஆய்வு தொடரும்போது அவைக்கு அறிக்கை அளிக்கலாம்" என்று கூறுகிறது. குழு எந்த ஒரு வருடத்தின் முழு மதிப்பீடுகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று தேவையில்லை.


நிதிக் குழுக்களில் மதிப்பீட்டுக் குழு, பொதுக் கணக்குக் குழு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் குழு ஆகியவை அடங்கும். இந்த குழுக்கள் 1950-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டன.


3. 1993-ஆம் ஆண்டு, சிவராஜ் பாட்டீல் மக்களவை சபாநாயகராக இருந்தபோது, ​​அரசாங்க பட்ஜெட்டுகள் மற்றும் முக்கிய கொள்கைகளை மறுஆய்வு செய்வதற்காக துறை சார்ந்த 17 நிலைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் மேற்பார்வையை மேம்படுத்துவதும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக நேரத்தையும், முக்கியமான சட்டங்களைப் படிப்பதில் பெரிய பங்கையும் வழங்குவதே இதன் குறிக்கோளாக இருந்தது. பின்னர், இந்தக் குழுக்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரிக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் 31 உறுப்பினர்கள் உள்ளனர் - மக்களவையிலிருந்து 21 பேர் மற்றும் மாநிலங்களவையிலிருந்து 10 பேர் இடம் பெற்றிருப்பார்கள்.


4. தற்காலிக குழுக்கள் (Ad hoc Committees) ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக நியமிக்கப்படுகின்றன. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை முடித்து, அவைக்கு அறிக்கை சமர்ப்பித்த பிறகு இல்லாமல் போய்விடுகின்றன. முக்கிய தற்காலிக குழுக்கள் மசோதாக்களின் தெரிவுக் குழுக்கள் மற்றும் கூட்டுக் குழுக்கள். ரயில்வே மாநாட்டுக் குழு,  நாடாளுமன்ற வளாகத்தில் உணவு மேலாண்மை மற்றும் பாதுகாப்புக் குழு போன்ற குழுக்களும் தற்காலிக குழுக்களின் வகையின் கீழ் வருகின்றன.


5. பாராளுமன்றம் இரு அவைகளின் உறுப்பினர்களுடன் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் ஒரு கூட்டு நாடாளுமன்ற குழுவை (Joint Parliamentary Committee - JPC) நாடாளுமன்றம் உருவாக்கலாம். மேலும், எந்த அவையும் அந்த அவையின் உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஒரு தேர்வுக் குழுவை அமைக்கலாம். இந்தக் குழுக்கள் பொதுவாக ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழிநடத்தப்படும். தனது அறிக்கையை சமர்பித்தவுடன் குழு கலைக்கப்படும்.



குழு

உறுப்பினர்களின் எண்ணிக்கை

தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்

நிதி குழு

பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee)

22 உறுப்பினர்கள் (அதில் 15 மக்களவை உறுப்பினகள் +7 மாநிலங்களவை உறுப்பினர்கள்)

இரு அவைகளாலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

1921-இல் அமைக்கப்பட்டது

மதிப்பீட்டுக் குழு (Estimates Committee)

30 உறுப்பினர்கள்

மக்களவையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்

(அப்போதைய நிதியமைச்சராக இருந்த ஜான் மத்தாயின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்டது)

பொது நிறுவனங்கள் குழு (Committee on Public Undertakings)

22 (15 உறுப்பினர்கள்+7 மாநிலங்களவை உறுப்பினர்கள்)

இரு அவைகளாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்

(1964-இல் உருவாக்கப்பட்டது)




Original article:

Share:

இந்தியாவை தடுப்பூசிமயப்படுத்தல் : தடுப்பூசிகள் போடாத குழந்தைகள் குறித்து…

 பல ஏழைக் குடும்பங்களில் இன்னும் தடுப்பூசிகள் போடாத குழந்தைகள் உள்ளனர்.


நல்ல செய்தி என்னவென்றால், உலகளவில் தடுப்பூசிப் பாதுகாப்பு, 1980 மற்றும் 2023-ஆம் ஆண்டிற்கு இடையில், தட்டம்மை [measles], போலியோ மற்றும் காசநோய் [tuberculosis] உள்ளிட்ட ஆறு நோய்களுக்கு இரட்டிப்பாகியுள்ளது. மேலும், உலகளவில் 75% ஆக, டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் (diphtheria, tetanus, and pertussis (DTP)) தடுப்பூசியின் முதல் டோஸைப் பெறாத ‘தடுப்பூசிகள் போடாத’ குழந்தைகளின் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தடுப்பூசிகள் போடாத குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு முக்கியமான செயல்திறன் குறிப்பானாகவும், தடுப்பூசி பாதுகாப்பு ஏற்றத்தாழ்வுகளின் குறிகாட்டியாகவும் உள்ளது. பல ஆண்டுகளாக தடுப்பூசி பாதுகாப்பு மேம்பட்டிருந்தாலும், 2023-ஆம் ஆண்டில், 1.44 மில்லியனாக, இந்தியா இன்னும் தடுப்பூசிகள் போடாத குழந்தைகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடாக இருப்பதாக தி லான்செட் தெரிவித்துள்ளது. உலகின் ஏறக்குறைய 16 மில்லியன் தடுப்பூசிகள் போடாத குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட எட்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் போரை எதிர்கொள்ளும் அல்லது வளங்கள் இல்லாத நாடுகளில் வாழ்கின்றனர். ஆனால், இந்தியாவில் இந்தப் பிரச்சினைகள் இல்லை. இருப்பினும், 2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 23 மில்லியன் குழந்தைகள் பிறந்தன. இது உலகளவில் அதிகபட்ச பிறப்பு விகிதமாகும். 2024-ஆம் ஆண்டில், உலகளவில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கொண்ட சீனாவில், வெறும் 9.5 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறந்தனர். தடுப்பூசிகள் போடாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகத் தோன்றினாலும், 2023-ஆம் ஆண்டில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையின் பின்னணியில் பார்க்கும்போது, ​​இந்தியாவில் தடுப்பூசிகள் போடாத குழந்தைகளின் சதவீதம் 6.2% ஆகும். 2021-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தடுப்பூசிகள் போடாத குழந்தைகளின் சதவீதத்தை இந்தியா 1992-ஆம் ஆண்டில் 33.4%-லிருந்து 2016-ஆம் ஆண்டில் 10.1% ஆக குறைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது. கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்பு, தடுப்பூசிகள் போடாத குழந்தைகளின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டில் 1.4 மில்லியனாக இருந்தது, ஆனால், இது 2021-ஆம் ஆண்டில் 2.7 மில்லியனாக உயர்ந்து பின்னர் 2022-ஆம் ஆண்டில் 1.1 மில்லியனாகக் குறைந்து 2023-ஆம் ஆண்டில் 1.44 மில்லியனாக அதிகரித்தது.


2021 ஆய்வில் இருந்ததைப் போலவே, தடுப்பூசிகள் போடாத குழந்தைகளின் பெரிய சதவீதம் உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத்தில் உள்ளது. மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் மற்றும் அருணாசலப் பிரதேசத்திலும் அவர்களின் ஒப்பீட்டளவில் அதிக விகிதம் உள்ளது. பல ஆண்டுகளாக, பாலினம், சாதி மற்றும் கிராமப்புற-நகர்ப்புற நிலையின் அடிப்படையில் தடுப்பூசிகள் போடாத குழந்தைகளில் உள்ள வேறுபாடு கணிசமாக குறைந்துள்ளது. எனினும், ஏழைகள், குறைந்த கல்வியுள்ள தாய்மார்கள், பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) மற்றும் முஸ்லிம்களிடையே பரவல் அதிகமாகவே உள்ளது. செல்ல கடினமாக இருக்கும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில், பெரிய புலம்பெயர் மக்கள்தொகை உள்ள நகர்ப்புற சேரிகளில் உள்ள குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு செய்வதிலும், புதிதாக பிறந்த குழந்தைகளுள்ள முஸ்லிம் குடும்பங்களிடையே தடுப்பூசி தயக்கத்தை குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். உலக சுகாதர அமைப்பின் (World Health Organization (WHO)) நோய்த்தடுப்பு கொள்கையை (Immunization Agenda, 2030) பூர்த்தி செய்ய இந்தியா அதிக பணி செய்ய வேண்டியுள்ளது - 2019-ஆம் ஆண்டுடன் உடன் ஒப்பிடும்போது தடுப்பூசிகள் போடாத குழந்தைகளை பாதியாக குறைப்பது. மேலும் 2023-ஆம் ஆண்டில் தடுப்பூசிகள் போடாத குழந்தைகளின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டின் அளவான 1.4 மில்லியனை எட்டியுள்ளதால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை பாதியாக குறைக்க இந்தியாவுக்கு அதிக மற்றும் நிலையான முயற்சிகள் தேவை.


Original article:

Share:

இந்தியா தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது. உடனடியாக செயல்பட வேண்டிய நேரம் இது. -நீரஜ் சிங் மானஸ்

 நீர்-பாதுகாப்பான பொருளாதாரம் என்பது காலநிலை மீள்தன்மையின் அடிப்படையாகும். இது வேளாண்மைப் பாதுகாக்கிறது, நகர்ப்புற வளர்ச்சியை ஆதரிக்கிறது மற்றும் பொது சுகாதாரத்தை உறுதி செய்கிறது. உண்மையான பிரச்சினை கருவிகள் இல்லாதது அல்ல, மாறாக விரைவாகவும் உறுதியாகவும் செயல்பட நாம் தயாராக இருக்கிறோமா என்பதுதான்.


இந்தியா கடுமையான நீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்த நெருக்கடி நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை, உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்தை அச்சுறுத்துகிறது. உலக மக்கள்தொகையில் 18 சதவீதம் இந்தியாவில் உள்ளது. ஆனால், அதன் நன்னீர் வளங்களில் 4 சதவீதம் மட்டுமே உள்ளது. இது கடுமையான நீர் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. காலநிலை மாற்றம் பிரச்சினையை மேலும் மோசமாக்குகிறது. 2018ஆம் ஆண்டில், நிதி ஆயோக் கூட்டு நீர் மேலாண்மை குறியீட்டை (Composite Water Management Index) வெளியிட்டது. 600 மில்லியன் இந்தியர்கள் ஏற்கனவே அதிக முதல் தீவிரமான நீர் நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள் என்று எச்சரித்தது. 2030ஆம் ஆண்டுக்குள், நீர் தேவை கிடைக்கக்கூடிய விநியோகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம். உலக வள நிறுவனம் (World Resources Institute) உலகில் மிகவும் நீர் பற்றாக்குறை உள்ள 17 நாடுகளில் இந்தியாவை 13 வது இடத்தில் தரவரிசைப்படுத்தியுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் மிக வேகமாக குறைந்து வருகிறது. பாசன விவசாயத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை மற்றும் குடிநீரில் 85 சதவீதம் நிலத்தடி நீரைச் சார்ந்துள்ளது.


2024ஆம் ஆண்டு நிலத்தடி நீர் தர அறிக்கை, இந்தியாவின் நீர் ஆதாரங்களில் 70 சதவீதம் மாசுபட்டுள்ளதாகக் காட்டுகிறது. இந்த மாசுபாடு மக்களின் ஆரோக்கியத்தையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் அச்சுறுத்துகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, நாம் இன்னும் ஏன் சிதறல் கொள்கைகளையும் (fragmented policies) பலவீனமான முயற்சிகளையும் கொண்டிருக்கிறோம்? தண்ணீர் நமது நாட்டின் முன்னேற்றத்தின் உயிர்நாடி. நமக்கு இன்னும் வலுவான நடவடிக்கை தேவை.


இந்தியாவின் நீர்வளத்தைப் பாதிக்கும் தற்போதைய நெருக்கடியாக காலநிலை மாற்றம் உள்ளது. இந்திய விவசாயத்தில் 55% ஐ ஆதரிக்கும் பருவமழை கணிக்க முடியாததாகிவிட்டது. எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (Council on Energy, Environment and Water (CEEW)) 2024 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில் 55% தாலுகாக்களில் கனமழை 10% அதிகரித்துள்ளது. இதனால் பயிர்கள் மற்றும் உள்கட்டமைப்பு சேதமடையும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம், இந்தியாவின் 33% நிலம் வறட்சியை எதிர்கொள்கிறது. நாட்டின் 48% மண் ஈரப்பதத்தை இழக்கிறது என்று 2024 Conscious Planet அறிக்கை கூறுகிறது. அதிகரித்து வரும் வெப்பநிலை இமயமலையில் பனிப்பாறைகள் வேகமாக உருக்குகின்றன. இது மில்லியன் கணக்கான மக்களை ஆதரிக்கும் கங்கை மற்றும் சிந்து போன்ற ஆறுகளை அச்சுறுத்துகிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நீர் பற்றாக்குறை 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 12% வரை குறைக்கக்கூடும். இது பெரும் பொருளாதார இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்று உலக வங்கி எச்சரிக்கிறது.


இந்தியாவின் நீரில் 80 சதவீதத்தை வேளாண்மைக்கு பயன்படுத்துகிறது. மேலும், காலநிலை மாற்றங்களால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது. 2018-19ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை, மழைப்பொழிவு 100 மிமீ குறைந்தால், காரீப் பருவத்தில் விவசாயிகளின் வருமானம் 15 சதவீதமும், ரபி பருவத்தில் 7 சதவீதமும் குறையும் என்று காட்டுகிறது. காலநிலை மாற்றம் விவசாய வருமானத்தை சராசரியாக 15-18 சதவீதம் குறைக்கக்கூடும். இந்தியாவின் விவசாய நிலத்தில் கிட்டத்தட்ட பாதியை உள்ளடக்கிய நீர்ப்பாசனம் செய்யப்படாத பகுதிகளில், வருமானம் 25 சதவீதம் வரை குறையக்கூடும். இதுபோன்ற போதிலும், நீர்ப்பாசனம் பெரும்பாலும் திறமையற்றது. மேலும், நெல் மற்றும் கரும்பு போன்ற நீர் அதிகம் உள்ள பயிர்கள் இன்னும் பரவலாக பயிரிடப்படுகின்றன.


நுண் நீர்ப்பாசனம் 50 சதவீதம் வரை தண்ணீரை சேமிக்க முடியும். இருப்பினும், அரசாங்க மானியங்களுடன் கூட, இது 9 சதவீத சாகுபடி நிலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உலக வங்கியால் ஆதரிக்கப்படும் அடல் பூஜல் யோஜனா (Atal Bhujal Yojana), நீர் பற்றாக்குறை உள்ள ஏழு மாநிலங்களில் சமூக தலைமையிலான நிலத்தடி நீர் மேலாண்மையை ஊக்குவிக்கிறது. இது 8,000 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கியது. இது நம்பிக்கைக்குரியதாக இருந்தாலும், நீர் நெருக்கடியின் அளவோடு ஒப்பிடும்போது அதன் அளவு மிகவும் சிறியது.


நகர்ப்புற இந்தியாவில் கடுமையான நீர் பிரச்சினைகள் உள்ளன. பெங்களூரு, சென்னை மற்றும் டெல்லி போன்ற நகரங்கள் நகர்ப்புற நீர் பிரச்சினைகள் எவ்வளவு மோசமாகலாம் என்பதைக் காட்டுகின்றன. 2019ஆம் ஆண்டில், சென்னை அதன் நீர்த்தேக்கங்கள் வறண்டபோது தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டது. இதனால் மில்லியன் கணக்கான மக்கள் தண்ணீரைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்தனர். 2030ஆம் ஆண்டுக்குள், 100 மில்லியன் மக்களைப் பாதிக்கும் 21 நகரங்களில் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்படும் என்று நிதி ஆயோக் எச்சரிக்கிறது.


நீர் பாதுகாப்பின்மை பொது சுகாதாரத்தையும் பாதிக்கிறது. சுமார் 70% நீர் ஆதாரங்கள் மாசுபட்டுள்ளன. நிதி ஆயோக்கின் 2018ஆம் ஆண்ட தரவுகளின்படி, நீரினால் பரவும் நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் 200,000 இறப்புகளுக்கு காரணமாகின்றன. ஃப்ளூரைடு (Fluoride) மற்றும் ஆர்சனிக் (arsenic) தண்ணீரை மாசுபடுத்துகின்றன. இது 19 மாநிலங்களில் 230 மில்லியன் மக்களை பாதிக்கிறது. சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் யமுனை போன்ற ஆறுகளை மாசுபடுத்துகிறது. இதனால், அவற்றைப் பயன்படுத்த பாதுகாப்பற்றதாக ஆக்குகிறது. உலக வங்கியின் "One Health" அணுகுமுறை மனித, விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை இணைக்கிறது. இந்த அணுகுமுறை நோய் விகிதங்களைக் குறைப்பதன் மூலம் பில்லியன் கணக்கானவர்களைச் சேமிக்க முடியும். இருப்பினும், அதன் முன்னேற்றம் மெதுவாக உள்ளது.


காலநிலை மீள்தன்மையை உருவாக்குவதற்கு தைரியமான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை. தேசிய நீர் இயக்கம் (National Water Mission) 2025-ம் ஆண்டுக்குள் நீர் பயன்பாட்டுத் திறனை 20% மேம்படுத்த விரும்புகிறது. இருப்பினும், முன்னேற்றத்தை அளவிடுவதற்கு வலுவான அடிப்படை தரவு இல்லை. CEEW பரிந்துரைத்த நீர் கணக்கியல், நீர் சேமிப்பை அளவிட உதவும். சேமிக்கப்பட்ட தண்ணீரை முக்கியமான துறைகளுக்கு அனுப்பவும் இது உதவும். காலநிலை தன்மைகள் மற்றும் 2023ஆம் ஆண்ட தொடங்கப்பட்ட இந்தியாவின் பசுமை கடன் திட்டம் போன்ற நிதி கருவிகள், தகவமைப்புக்கான நிதி இடைவெளியை நிரப்ப உதவும். 2019-20ஆம் ஆண்டில், தகவமைப்பு நிதி ஒரு நபருக்கு ₹260 மட்டுமே செலவிடுகிறது. இது தணிப்புக்காக செலவிடப்பட்ட ஒரு நபருக்கு ₹2,200 ஐ விட மிகக் குறைவு.


300 பெரிய அணைகளை பழுதுபார்த்து நவீனமயமாக்க உலக வங்கி $1 பில்லியன் திட்டத்தைக் கொண்டுள்ளது. மேகாலயாவில் நீர் அறுவடைக்கு ஆதரவாக ஆசிய வளர்ச்சி வங்கி $50 மில்லியன் கடனை வழங்கியது. இவை நல்ல முன்னேற்றமான படிகள் ஆகும்.


ஆனால், உலகளாவிய நீர் நிதி இடைவெளி மிகப் பெரியது. இது, 2030ஆம் ஆண்டுக்குள் $6.7 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடைவெளியை பூர்த்தி செய்ய, தனியார் நிறுவனங்கள் ஈடுபட வேண்டும். சிலி மற்றும் பெரு போன்ற நாடுகள் இதை எவ்வாறு செய்ய முடியும் என்பதைக் காட்டுகின்றன.


நிலையான நீர் மேலாண்மைக்கு சமூக பங்கேற்பு மிகவும் முக்கியமானது. 2019ஆம் ஆண்டு முதல், ஜல் சக்தி அபியான் (Jal Shakti Abhiyan) மழைநீர் சேகரிப்பை ஊக்குவிப்பதன் மூலம் 1,50,000 நீர்நிலைகளை புதுப்பிக்க உதவியுள்ளது. இருப்பினும், விழிப்புணர்வு மற்றும் உள்ளூர் ஈடுபாடு இன்னும் குறைவாகவே உள்ளது. பெரும்பாலும் தண்ணீரை எடுக்கும் பொறுப்பை ஏற்கும் பெண்கள், முடிவெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை (Integrated Water Resources Management (IWRM)) ஈரநில மறுசீரமைப்பு போன்ற இயற்கை முறைகளை நிகழ்நேர நீர் கண்காணிப்பு போன்ற தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கிறது. இந்த அணுகுமுறை தண்ணீருக்கான நியாயமான அணுகலை உறுதி செய்ய உதவும். தனிமையில் வேலை செய்வதைத் தவிர்க்க நீர், ஆற்றல் மற்றும் காலநிலை கொள்கைகளை சீரமைப்பதும் முக்கியம். எடுத்துக்காட்டாக, சூரிய சக்தியில் இயங்கும் நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்துவது நிலத்தடி நீர் பயன்பாட்டைக் குறைக்கும் மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும்.


இந்தியாவின் தண்ணீர் நெருக்கடி, பெரிய மாற்றங்களுக்கான அவசரத் தேவையைக் காட்டுகிறது. நீர்-பாதுகாப்பான பொருளாதாரம் காலநிலை மீள்தன்மைக்கான அடிப்படையாகும். இது விவசாயம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கிறது. இதை செயல்படுத்துவதற்கு கருவிகள் நம்மிடம் உள்ளதா என்பது முக்கிய கேள்வி அல்ல. மாறாக, விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்பட நமக்கு விருப்பம் உள்ளதா என்பதுதான். 1.4 பில்லியன் மக்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ள நிலையில், நாம் இன்னும் காத்திருக்க முடியாது.


எழுத்தாளர் கொரியா குடியரசின் பார்லி கொள்கை முன்முயற்சியில் தெற்காசியாவிற்கான சிறப்பு ஆலோசகர்.



Original article:

Share:

காலநிலை நிதி (climate finance) என்பதன் பொருள் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


  • கடந்த ஆண்டு, அஜர்பைஜானின் பாகுவில் நடந்த COP29 கூட்டத்தில், காலநிலை நிதி பிரச்சினை விவாதிக்கப்பட்டது. இதில், வளர்ந்த நாடுகள் 2035ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு குறைந்தது 300 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்ட ஒப்புக்கொண்டன. இந்தத் தொகை வளர்ந்த நாடுகள் தற்போது வழங்க வேண்டிய தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகும். இருப்பினும், வளரும் நாடுகள் தங்களுக்குத் தேவை என்று கூறும் ஆண்டுக்கு 1.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை விட இது இன்னும் மிகக் குறைவு.


  • ஜெர்மனியின் பான் நகரில் நடந்த தற்போதைய வருடாந்திர காலநிலை பேச்சுவார்த்தையில், திங்களன்று ஒரு முறையான ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், வளரும் நாடுகள் கடுமையாக அளவுக்கு பின்னுக்குத் தள்ளப்பட்ட பிறகு இது நடந்தது. 2015ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் வளர்ந்த நாடுகளின் கடமையைப் பற்றி விவாதிக்க ஒரு பிரத்யேக செயல்திட்டத்தை அவர்கள் விரும்புகிறார்கள். இந்தக் கடமை வளரும் நாடுகளுக்கு நிதி உதவி வழங்குவதை உள்ளடக்கியது.


  • பாரிஸ் ஒப்பந்தம் வளர்ந்த நாடுகளுக்கு இரண்டு கடமைகளை வைக்கிறது. முதலாவதாக, அவர்கள் நிதியை "வழங்க வேண்டும்" (பிரிவு 9.1). இரண்டாவதாக, அவர்கள் "காலநிலை நிதியைத் திரட்டுவதில் முன்னணியில் இருக்க வேண்டும்" (பிரிவு 9.3). இந்த இரண்டு கடமைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஆனால், அவை தனித்தனியானவை. ஒன்று மற்றொன்றை ரத்து செய்யவோ அல்லது மீறவோ இல்லை.


  • 2035ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 300 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்டுவதற்கான புதிய வாக்குறுதி, பிரிவு 9.1 இன் கீழ் உள்ள கடமையைத் தவிர்க்கிறது. கடந்த ஆண்டு பாகுவில் நடந்த கூட்டத்தின் முடிவில் வளரும் நாடுகள் மிகவும் அதிருப்தி அடைந்தன. இந்தியா 300 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை "மோசமான ஏழை" (abysmally poor) என்று அழைத்தது. பின்னர், போதுமான காலநிலை நிதி இல்லாமல், அதன் எதிர்கால காலநிலை நடவடிக்கைகளின் இலக்குகளை குறைக்க வேண்டியிருக்கும் என்றும் இந்தியா கூறியது.


  • கடந்த வாரம் தொடங்கிய பான் காலநிலை பேச்சுவார்த்தைகளுக்கு முன்பு, இந்தியா மற்ற வளரும் நாடுகளிடமிருந்து ஆதரவைத் திரட்டியது. பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 9.1 எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி விவாதிக்க ஒரு புதிய செயல்திட்டதை அவர்கள் ஒன்றாகக் கோரினர். ஆனால், வளர்ந்த நாடுகள் இந்தக் கோரிக்கையை கடுமையாக எதிர்த்தன. காலநிலை நிதி பேச்சுவார்த்தைகளின் பல்வேறு பகுதிகளின் கீழ் இந்த பிரச்சினை ஏற்கனவே விவாதிக்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறினர். எனவே, புதிய மற்றும் தனி செயல் திட்டத்திற்கான உருப்படி தேவையில்லை என்று அவர்கள் வாதிட்டனர்.

உங்களுக்குத் தெரியுமா? :


  • போதுமான நிதி ஆதாரங்கள் வழங்கப்படாதது குறித்து இந்தியா ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. மேலும், வளர்ந்த நாடுகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அது கூறியது. இந்தத் தோல்வி நம்பிக்கையை உடைக்க காரணமாகிறது. பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 9.1 என்பது ஒரு தார்மீக கட்டாயம் மட்டுமல்ல, சட்டப்பூர்வக் கடமையும் கூட என்று இந்தியா கூறியது. இந்தக் கடமை ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) பிரிவு 4.3-ல் இருந்து நேரடியாக வருகிறது.


  • காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கான பரந்த கொள்கைகளை வகுக்கும் உலகளாவிய சர்வதேச ஒப்பந்தமான 1992 கட்டமைப்பு மாநாடு, வளர்ந்த நாடுகளுக்கு, பிரிவு 4.3 இல், வளரும் நாடுகள் காலநிலை நடவடிக்கை எடுப்பதில் ஏற்படும் "ஒப்புக்கொள்ளப்பட்ட முழு செலவுகளை" பூர்த்தி செய்ய "புதிய மற்றும் கூடுதல் நிதி ஆதாரங்களை வழங்குவதை" கட்டாயமாக்குகிறது.


  • முறையான ஆலோசனையின் விளைவாக, இந்த ஆண்டு இறுதியில் பிரேசிலின் பெலெமில் நடைபெறவிருக்கும் COP30 காலநிலை மாநாட்டின் போது இதேபோன்ற கூட்டத்திற்கு முன் வைக்கப்படும் ஒரு 'அறிக்கை' வெளியிடப்படும்.


  • வளரும் நாடுகள் பெலெமில் ஏதாவது சாதிக்க நம்புகின்றன. பிரிவு 9.1 ஐ செயல்படுத்துவது குறித்து விவாதிக்க ஒரு தனி பணிநிலையத்தை உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள். இந்த இலக்கு இன்னும் யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கலாம். இருப்பினும், வளரும் நாடுகள் ஒரு விஷயத்தில் திருப்தி அடையலாம். காலநிலை நிதி பிரச்சினையை மீண்டும் கவனத்திற்குக் கொண்டுவருவதில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வளர்ந்த நாடுகள் வழக்கமாகத் தவிர்க்க முயற்சிக்கும் ஒரு விவாதத்திற்கும் அவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.


Original article:

Share:

சுற்றித் திரியும் வெடிமருந்துகள் என்பது என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


  • வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம், பாகிஸ்தானுக்குள் உள்ள பயங்கரவாத குழுக்களை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) நடவடிக்கையைத் தொடங்கியது. இதன் பிறகு, இரு நாடுகளும் மூன்று நாட்களுக்கு ஒருவருக்கொருவர் பதிலடி தாக்குதல்களை நடத்தின. இறுதியாக, அவர்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.


  • பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இந்திய இராணுவத்தின் தயார்நிலையை மேம்படுத்த, அவசரகால கொள்முதல் (Emergency Procurement (EP)) அமைப்பு, மற்ற பாதுகாப்பு கொள்முதல்களுக்குப் பயன்படுத்தப்படும் வழக்கமான நீண்ட கொள்முதல் செயல்முறையைப் போலல்லாமல், விரைவான நடைமுறைகளைப் பயன்படுத்தி உபகரணங்களை விரைவாக வழங்க அனுமதிக்கிறது. இது போன்ற அவசரகால கொள்முதல்களின் ஆறாவது சுற்று இதுவாகும்.


  • பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, EP செயல்முறையின் (EP mechanism) மூலம் வாங்கப்படும் சில முக்கிய உபகரணங்களில் ஒருங்கிணைந்த ட்ரோன் கண்டறிதல் மற்றும் இடைமறிப்பு அமைப்புகள் (Integrated Drone Detection and Interdiction Systems (IDDIS)), குறைந்த அளவிலான இலகுரக ரேடார்கள் (Low Level Lightweight Radars (LLLR)) மற்றும் VSHORADகள் ஆகியவை அடங்கும். அதில், ஏவூர்திகள் (Launchers) மற்றும் ஏவுகணைகள் (Missiles) போன்றவை உள்ளன.


  • இதில் சுற்றித் திரியும் அல்லது மிதக்கும் ஆயுதங்களும் அடங்கும். இது செங்குத்து டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் (Vertical Take-Off and Landing (VTOL)) அமைப்புகளையும் கொண்டுள்ளது. குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் (Bulletproof jackets (BPJ)), பாலிஸ்டிக் ஹெல்மெட்கள் (ballistic helmets) மற்றும் விரைவு எதிர்வினை சண்டை வாகனங்கள் (Quick Reaction Fighting Vehicles (QRFV)) கனரக மற்றும் நடுத்தர ​​ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. 


  • செவ்வாயன்று, பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. EP செயல்முறையின் கீழ் 13 ஒப்பந்தங்கள் முடிக்கப்பட்டுள்ளதாக அது கூறியது. இந்த ஒப்பந்தங்கள் ரூ.1,981.90 கோடி மதிப்புடையவை. இந்த தொகை இந்திய இராணுவத்திற்கு அனுமதிக்கப்பட்ட ரூ.2,000 கோடியின் மொத்த செலவில் ஒரு பகுதியாகும்.


  • சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு நவீன தளங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் துணைக்கருவிகளின் விரைவான கையகப்படுத்தல் நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த கையகப்படுத்துதல்கள் இந்திய இராணுவத்தின் திறன்களை பெரிதும் மேம்படுத்தியுள்ளன. அவை இராணுவத்தின் சரக்குகளையும் வலுப்படுத்தியுள்ளன.


உங்களுக்குத் தெரியுமா? :


  • 2020ஆம் ஆண்டு சீனாவுடனான லடாக் மோதல் தொடங்கியபோது ஆயுதப்படைகளுக்கு கொள்முதல் செய்வதற்கான அவசர அதிகாரங்கள் வழங்கப்பட்டன. பிப்ரவரி 2019ஆம் ஆண்டு பாலகோட் வான்வழித் தாக்குதல் மற்றும் 2016ஆம் ஆண்டு துல்லியத் தாக்குதலுக்குப் (surgical strike) பிறகும் இந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டன.


  • விரைவாகக் கண்காணிக்கப்பட்ட பெரும்பாலான பாதுகாப்பு கொள்முதல்கள் 2020ஆம் ஆண்டு தொடங்கின. அவை, அடுத்த நான்கு ஆண்டுகளுக்குத் தொடர்ந்தன. இந்த நேரத்தில், இராணுவத்திற்கு வழங்கப்பட்ட அவசரகால அதிகாரங்கள் பல முறை நீட்டிக்கப்பட்டன. கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control (LAC)) இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் இராணுவ முட்டுக்கட்டை காரணமாக இது நடந்தது.


  • கடந்த நான்கு ஆண்டுகளில், ஆயுதப் படைகள் நூற்றுக்கணக்கான ஆளில்லா வான்வழி வாகனங்கள், சுற்றித் திரியும் அல்லது மிதக்கும் ஆயுதங்கள், திரள் ட்ரோன்கள் மற்றும் எதிர்-யுஏவி அமைப்புகளை வாங்கியுள்ளன. இவை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்பட்டன. அவை தாக்குதல், கண்காணிப்பு மற்றும் தளவாடங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. மூன்று சேவைகளும் இந்திய நிறுவனங்களிடமிருந்து வெவ்வேறு ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளையும் (anti-drone systems) வாங்கின.


  • ஆயுதப் படைகள் அவசரகால சக்திகளைப் பயன்படுத்தி பல்வேறு ஆயுத அமைப்புகளையும் வாங்கியுள்ளன. ரஃபேல் போர் விமானங்களுக்கான HAMMER ஆகாயத்திலிருந்து தரைக்கு (air-to-ground) துல்லிய-வழிகாட்டப்பட்ட ஆயுத அமைப்பு, ஸ்பைஸ் குண்டுகள் மற்றும் மேன் போர்ட்டபிள் ஏர் டிஃபென்ஸ் சிஸ்டம் (Man Portable Air Defence System (MANPADS)) ஆகியவை இதில் அடங்கும். இராணுவத்தின் T-72 மற்றும் T-90 முக்கிய போர் டாங்கிகளுக்கான APFSDS எனப்படும் கவச-துளையிடும் (armour-piercing) வெடிமருந்துகளும் இதில் அடங்கும்.


Original article:

Share:

குறைந்து வரும் கருவுறுதல் விகிதம் குறித்து பாலின இடைவெளி குறியீடு வெளிக்கொணர்வது என்ன? -ரிதுபர்ண பத்கிரி

 உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டில் (Global Gender Gap Index), இந்தியாவின் தரவரிசையில் குறையும் கருவுறுதல் விகிதம் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது? கருவுறுதல் மற்றும் அதன் தேர்வை பாதிக்கும் முக்கிய காரணிகள் யாவை?


ஜூன் 24 அன்று, சர்வதேச இராஜதந்திர பெண்கள் தினம் (International Day of Women in Diplomacy) அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, ​​பெண்கள் இராஜதந்திரத்தில் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள் என்பதை பேச்சாளர்கள் எடுத்துரைத்தனர். கட்டமைப்புக்கான தடைகளை அகற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். இந்தத் தடைகள் பெண்கள் உலகளாவிய முடிவெடுக்கும் நிலைகளை ஏற்றுக்கொள்வதைத் தடுக்கின்றன. பாலின சமத்துவத்தை அடைவதற்கு இதுபோன்ற பாத்திரங்களில் பெண்களை ஆதரிப்பது அவசியம்.


உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025 ஒரு பெரிய உலகளாவிய கவலையைக் காட்டுகிறது. இந்த அறிக்கையில், இந்தியா 148 நாடுகளில் 131வது இடத்தில் உள்ளது. உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டை உலக பொருளாதார மன்றம் உருவாக்குகிறது. இது 2006ஆம் ஆண்ட முதல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது. இந்த குறியீடு பொருளாதாரம், அரசியல், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய நான்கு துறைகளில் பாலின சமத்துவத்தை அளவிடுகிறது.


உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை முந்தைய முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டது. ஒரு உதாரணம் 1984-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான மேம்பாட்டு நிதியம் (United Nations Development Fund for Women (UNIFEM)), மற்றொன்று 1995ஆம் ஆண்டில் பெய்ஜிங் பெண்கள் உலக மாநாடு ஆகும். இந்த முயற்சிகள் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்க உதவியது. 2015ஆம் ஆண்டில், பாலின சமத்துவம் மீண்டும் உலகளாவிய முன்னுரிமையாக மாறியது. இது நிலையான வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் செயல் திட்டங்களில் நிலையான வளர்ச்சி இலக்கு 5 ஆக சேர்க்கப்பட்டது. இது 2030ஆம் ஆண்டுக்குள் இதை அடைவதே இலக்கு ஆகும்.


கொள்கை வகுப்பாளர்கள் இதை ஒரு அளவுகோலாகப் பயன்படுத்துவதால் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை முக்கியமானது. பாலின வேறுபாடுகளைக் குறைப்பதில் முன்னேற்றத்தைச் சரிபார்க்க அவர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். சமீபத்திய அறிக்கையில், இந்தியாவின் சமநிலை மதிப்பெண் 64.1 சதவீதம். இந்த மதிப்பெண் தெற்காசியாவில் மிகக் குறைவான ஒன்றாகும். சுகாதாரம் மற்றும் ஆயுட்காலம் பிரிவில், இந்தியா முன்னேறியுள்ளது. பிறப்பு மற்றும் ஆரோக்கியமான ஆயுட்காலம் ஆகியவற்றில் பாலின விகிதத்தில் இது சிறந்த மதிப்பெண்களைக் காட்டுகிறது.


கருவுறுதல் விகிதம் மற்றும் பாலின சமத்துவமின்மை குறைதல்


இருப்பினும், இந்தியாவில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவது குறித்து கவலைகள் உள்ளன. மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate (TFR)) ஒரு பெண்ணுக்கு இருக்கும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கையைக் காட்டுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியத்தின் (United Nations Population Fund’s (UNFPA)) உலக மக்கள்தொகை அறிக்கை 2025 இன் படி, இந்தியாவின் TFR 2.0 ஆகக் குறைந்துள்ளது. 2019-21ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (National Family Health Survey (NFHS-5)) இதைத் தெரிவித்துள்ளது.


மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 2 இன் மாற்று நிலையாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இரண்டு குழந்தைகள் தங்கள் இரண்டு பெற்றோரை மாற்ற முடியும். இருப்பினும், சில குழந்தைகள் வயதுக்கு வருவதற்கு முன்பே இறக்கின்றனர். எனவே, உண்மையான மாற்று நிலை 2.1 ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவின் TFR இப்போது இந்த மாற்று நிலை 2.1 க்குக் கீழே குறைந்துள்ளது.


குறைந்து வரும் கருவுறுதல் விகிதம் உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டில் இந்தியாவின் நிலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்க சுதந்திரம் மற்றும் தேர்வுகள் வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படுகின்றன என்பதை இது காட்டுகிறது. பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் காரணங்கள் அனைத்தும் குறைவான குழந்தைகளைப் பெறுவது அல்லது இல்லாதது குறித்த தம்பதிகளின் முடிவுகளைப் பாதிக்கின்றன. எனவே, கருவுறுதல் என்பது தனிப்பட்ட தேர்வைப் பற்றியது மட்டுமல்ல. இது சமூகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.


UNFPA மற்றும் YouGov நடத்திய ஒரு கணக்கெடுப்பு இந்தியா உட்பட 14 நாடுகளில் நடத்தப்பட்டது. 20 சதவீத மக்கள் தாங்கள் விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பெற முடியாமல் போகலாம் என்று கூறியதாகக் கண்டறிந்துள்ளது. பருவநிலை மாற்றம், போர் மற்றும் தொற்றுநோய்கள் போன்ற எதிர்கால கவலைகள் தங்களை குறைவான குழந்தைகளைப் பெறத் தேர்வு செய்வதாக ஐந்தில் ஒருவர் கூறியுள்ளனர்.


இந்தியாவில், குழந்தைகளைப் பெற விரும்பும் இளைஞர்களுக்கு நிதி சிக்கல்கள் ஒரு பெரிய சவாலாக உள்ளன. அவர்களில் சுமார் 38% பேர் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். வேலையின்மை மற்றும் வேலை பாதுகாப்பின்மை 21% இளைஞர்களைப் பாதிக்கிறது. இடமின்மை மற்றும் அதிக வாடகை போன்ற வீட்டுவசதி பிரச்சினைகள் 22% ஐ பாதிக்கின்றன. மேலும், 18% பேர் மோசமான குழந்தை பராமரிப்பு வசதிகள் குழந்தைகளைப் பெறுவதை கடினமாக்குகின்றன என்று கூறுகிறார்கள்.


குழந்தைகளைப் பெற முடிவு செய்வதில் சுகாதாரப் பராமரிப்பு மற்றொரு முக்கிய காரணியாகும். உலகெங்கிலும், மூன்றில் ஒருவருக்கு எதிர்பாராத கர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், 14% பேர் கருவுறுதல் அல்லது கர்ப்பம் தொடர்பான மருத்துவ சேவையைப் பெறுவதில் சிரமப்படுவதாகக் கூறுகின்றனர். குறைந்தது 15% பேர், குழந்தைகள் வேண்டாமென்றோ அல்லது குறைவான குழந்தைகள் வேண்டாமென்றோ இருப்பதற்கு மோசமான உடல்நலம் அல்லது நாள்பட்ட நோய்கள் தான் காரணம் என்று கூறுகின்றனர்.


இனப்பெருக்கத் தேர்வுக்குப் பின்னால் உள்ள சமூகக் காரணிகள்


இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கருவுறுதல் விகிதங்கள் பரவலாக வேறுபடுகின்றன. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS-5) 2019-21 இதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஐந்து மாநிலங்கள் மட்டுமே ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் என்ற மாற்று அளவை விட அதிகமாக கருவுறுதல் விகிதங்களைக் கொண்டுள்ளன. இந்த மாநிலங்கள் பீகார் (2.98), உத்தரபிரதேசம் (2.35), ஜார்கண்ட் (2.26), மேகாலயா (2.91), மற்றும் மணிப்பூர் (2.17) போன்றவை ஆகும்.


இதற்கு நேர்மாறாக, பல தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் மாற்று அளவை விடக் குறைவாக கருவுறுதல் விகிதங்களைக் கொண்டுள்ளன. கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் கருவுறுதல் விகிதங்களை 1.6 முதல் 1.9 வரை கொண்டுள்ளன.


மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில், இது இப்போது 1.6 ஆகவும், கிராமப்புறங்களில், இது 2.2 ஆகவும் உள்ளது. அதிக கருவுறுதல் விகிதங்கள் பெரும்பாலும் பொது உள்கட்டமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. அவை பெண்களின் கல்வி மற்றும் நிறுவனத்தின் குறைந்த மட்டங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளன. மறுபுறம், குறைந்த கருவுறுதல் விகிதங்கள் பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகின்றன.


கருவுறுதல் சரிவு (decline in fertility) என்பது பெண்களின் தனிப்பட்ட விருப்பத்தின் விளைவாகும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மைநிலை  மிகவும் சிக்கலானது. பெற்றோரை, குறிப்பாக தாய்மையை ஆதரிக்கும் நிலைமைகளை உருவாக்குவதில் மாநிலமும் சமூகமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் பொருள் சுகாதாரப் பராமரிப்புக்கான நியாயமான அணுகலை உறுதி செய்தல் மற்றும் இனப்பெருக்க சுதந்திரத்தைப் பாதுகாத்தல் என்பதாகும்.


மேலும், தாய்மையை உயிரியல் ரீதியாக தீர்மானிக்க முடியாது மற்றும் மகப்பேறு விடுப்பு, நெகிழ்வான வேலை நேரம் மற்றும் குழந்தை பராமரிப்பு வசதிகள் போன்ற அரசின் ஆதரவு நடவடிக்கைகளால் ஆதரிக்கப்பட வேண்டும். உதாரணமாக, 24,000 பெண் ஊழியர்களை உள்ளடக்கிய பெண்களின் குரல் ஆய்வு 2024 (Voice of Women Study), மருத்துவ ரீதியாக அவசியமான மகப்பேறு விடுப்பு போன்ற குடும்ப நட்புக் கொள்கைகளைப் (family-friendly policies) பயன்படுத்துவது கூட பணியிடத்தில் பெண்களுக்கு நற்பெயரைச் செலவழிக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளது. பெண்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியம், பகுதிநேர பணியிடங்களுக்கு தள்ளப்படுகிறார்கள், தொழில் முன்னேற்றத்தை கட்டுப்படுத்துகிறார்கள் மற்றும் பொருளாதார சமத்துவமின்மையை அதிகரிக்கிறார்கள். எனவே, இதன் காரணமாக, பெற்றோர் முறை என்பது ஒரு செலவாகக் கருதப்படுகிறது.


எனவே, வீழ்ச்சியடைந்து வரும் கருவுறுதல் விகிதத்தை பரந்த சமூக மற்றும் நிறுவன சிக்கல்களின் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்களும் பெண்களும் பெற்றோராக மாறுவது குறித்த தங்கள் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையும் UNFPA மற்றும் YouGov கணக்கெடுப்பு காட்டுகிறது. இந்தியாவில், பெண்கள் அரிதாகவே மகப்பேறு முடிவுகளை தனியாக எடுக்கிறார்கள். குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கான விருப்பம், சமூக அழுத்தம் போன்றவை குழந்தைகளைப் பெறுவது குறித்த பெண்களின் தேர்வுகளை பாதிக்கிறது.


லீலா துபே மற்றும் பிரேம் சௌத்ரி போன்ற அறிஞர்களின் சமூகவியல் ஆய்வுகள் இதைச் சுட்டிக்காட்டியுள்ளன. உதாரணமாக, ”பெண்கள் மற்றும் உறவுமுறை: தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பாலினம் குறித்த ஒப்பீட்டு பார்வைகள்” (Women and Kinship: Comparative Perspectives on Gender in South and South-East Asia) என்ற தனது புத்தகத்தில், உறவுமுறை அமைப்புகள் பாலின உறவுகளை வடிவமைக்கின்றன என்று டியூப் விளக்குகிறார். இந்த அமைப்புகள் பெரும்பாலும் பெண்களை விட ஆண்களை அதிகம் மதிக்கின்றன. இதேபோல், சவுத்ரி, தனது ”தி வெயில்டு வுமன்: ஷிஃப்டிங் பாலின சமன்பாடுகள் இன் ரூரல் ஹரியானா” (The Veiled Women: Shifting Gender Equations in Rural Haryana) என்ற படைப்பில், இந்தியாவில் மகள்களைப் பெறுவதற்கு எதிரான சார்புகளைப் பற்றி எழுதுகிறார்.


கொள்கை மட்டத்தில், நம்பிக்கையை வளர்ப்பது முக்கியம். இந்த நம்பிக்கை நிலையான மற்றும் உரிமைகள் சார்ந்த அணுகுமுறைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். உதாரணமாக, 2024ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகராட்சி சட்டங்களில் மாற்றங்களைச் செய்தது. முன்னதாக, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்கள் உள்ளூர் தேர்தல்களில் போட்டியிடுவதை இந்தச் சட்டங்கள் தடை செய்தன. ஆனால், மாநிலத்தில் கருவுறுதல் விகிதம் குறைந்துவிட்டதால், பழைய கொள்கை நீக்கப்பட்டது.


NFHS 2019-21இன் படி, ஆந்திரப் பிரதேசத்தில் நகர்ப்புறங்களில் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 1.47 ஆக இருந்தது. கிராமப்புறங்களில், TFR 1.78 ஆக இருந்தது. இரண்டு எண்களும் 2.1 என்ற மாற்று அளவை விட மிகக் குறைவு. இருப்பினும், தம்பதிகளுக்கு அதிக குழந்தைகளைப் பெறச் சொல்வது மட்டும் போதாது. பொருளாதார மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்கும் உறுதியான நடவடிக்கைகள் தேவை. இவை பெற்றோரை ஒரு யதார்த்தமான தேர்வாக மாற்ற உதவும்.


சமூக நிலையில், குறைவான குழந்தைகளைப் பெறுவதா அல்லது குழந்தைகளைப் பெறாமலிருப்பதா என்ற முடிவு, வீட்டில் பாலின நிலைகளிலும் பாதிக்கப்படுகிறது. 2024-ம் ஆண்டில் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (National Statistics Office (NSO)) நடத்திய நேர பயன்பாட்டு கணக்கெடுப்பு, 41% பெண்கள் பராமரிப்பில் பங்கேற்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. 21.4% ஆண்கள் மட்டுமே இதைச் செய்கிறார்கள். பெண்கள் ஒரு நாளைக்கு 140 நிமிடங்கள் பராமரிப்பு நடவடிக்கைகளில் செலவிடுகிறார்கள். ஆண்கள் ஒரு நாளைக்கு 74 நிமிடங்கள் மட்டுமே செலவிடுகிறார்கள். 


இந்திய சமூகம் வீட்டு வேலை மற்றும் பராமரிப்பு பணிகளை பெரும்பாலும் பெண்களின் வேலையாக எவ்வாறு பார்க்கிறது என்பதை இது காட்டுகிறது. இது பெரும்பாலும் பெண்களை குழந்தைகளைப் பெற தயங்க வைக்கிறது அல்லது குறைவாகவே தேர்வு செய்கிறது. பெண்களின் ஊதியம் பெறாத வீட்டு வேலையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் கொள்கைகளுக்கான அவசரத் தேவையை இது எடுத்துக்காட்டுகிறது. ”Valuing Work: Time as a Measure”  என்ற 1996ஆம் ஆண்டு வெளியான தேவகி ஜெயின் போன்ற பெண்ணிய பொருளாதார வல்லுநர்கள் இந்தக் கருத்தை ஆதரித்துள்ளனர்.


குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்தைச் சமாளிக்க, வீட்டுக் கடமைகள் மற்றும்  பெற்றோர் பொறுப்புகள் போன்ற  பாரம்பரிய பாலினத் தன்மைகளுக்கு அப்பால் செல்ல வேண்டும். இது வெறும் "பெண்களின் பிரச்சனை" (women’s problem) மட்டுமல்ல. இதற்கு சமூகம் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இருவரின் நடவடிக்கையும் தேவை. இந்தியாவில், குழந்தைகளைப் பெறுவது பற்றிய முடிவுகள் சாதி, மதம் மற்றும் ஆணாதிக்கத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.



Original article:

Share: