ஸ்டார்ட்அப்20 உலகிற்கு வழங்குவது என்ன? -சிந்தன் வைஷ்ணவ், கியுலியா அஜ்மோன் மார்சன் & வுயானி ஜரானா

 இந்தியாவில் ஸ்டார்ட்அப்20 (Startup20) நாங்கள் தொடங்கியபோது, ஒவ்வொரு நாட்டின் தனித்துவமான மற்றும் சுதந்திரமான ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தைப் பேணுவதோடு, உலகம் முழுவதும் ஸ்டார்ட்அப் அமைப்புகளை சீரமைக்க உதவும் கொள்கை பரிந்துரைகளை உருவாக்குவதே எங்களது முக்கிய குறிக்கோளாக இருந்தது.


2023-ஆம் ஆண்டு இந்தியாவின் G20 தலைமையின்போது ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. உலகத் தலைவர்கள் ஸ்டார்ட்அப்20-ஐ G20-ன் அதிகாரப்பூர்வ பகுதியாக முறையாக ஏற்றுக்கொண்டனர். இது G20 அமைப்புக்கு ஒரு முக்கியமான படியாகும். இதற்கு முன்பு, அனைத்து வணிக நிறுவனங்கள் அல்லது புதிய ஸ்டார்ட்அப்கள் போன்றவை  பிசினஸ் 20 (Business 20 (B20)) குழு மூலம் மட்டுமே கையாளப்பட்டன. ஸ்டார்ட்அப்20 இப்போது சேர்க்கப்பட்டுள்ளதால், ஜி20 வணிகத்திற்காக இரண்டு தனித்தனி குழுக்களைக் கொண்டுள்ளது. அவை: பெரிய, நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கு B20 மற்றும் புதிய மற்றும் வளர்ந்து வரும் வணிகங்களுக்கு Startup20 போன்றவை ஆகும். கொள்கைகளை வடிவமைப்பதில் இரு குழுக்களும் இப்போது இவை சமமான பங்கைக் கொண்டுள்ளன.


இந்த சாதனை கிட்டத்தட்ட பத்துவருட நிலையான முன்னேற்றத்தின் விளைவாகும். 2015-ஆம் ஆண்டில், துருக்கி G20 அமைப்பை வழிநடத்தியபோது, சிறு வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோர் மீது கவனம் செலுத்தும் ஒரு குழு உருவாக்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டில், ஜப்பான் இளம் தொழில்முனைவோர் கூட்டணியைத் (Young Entrepreneurs’ Alliance) தொடங்கியது. அது இன்னும் தனியாக இயங்குகிறது. 2021-ஆம் ஆண்டில், இத்தாலி G20 புதுமை லீக் (Innovation League) எனப்படும் முதல் G20 தொடக்கப் போட்டியை அறிமுகப்படுத்தியது. இந்தோனேசியா இதை 2022-ல் G20 டிஜிட்டல் புதுமை வலையமைப்பாக விரிவுபடுத்தியது. துருக்கி மற்றும் இந்தோனேசியா போன்ற வளரும் நாடுகளையும், இத்தாலி மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளையும் உள்ளடக்கிய இந்த முயற்சிகள், தொடக்கநிலையாளர்களும் சிறு வணிகங்களும் நியாயமான மற்றும் நீடித்த உலகளாவிய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்ற வளர்ந்து வரும் புரிதலைக் காட்டின.


இந்தியா வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப் காட்சியைப் பயன்படுத்தி ஸ்டார்ட்அப்20-ஐ உருவாக்க பரிந்துரைத்தது. இது ஜி20-க்கு ஒரு புதிய சமநிலையைச் சேர்த்தது மற்றும் பெரிய நிறுவனங்களின் வலிமையையும் சிறிய நிறுவனங்களின் நெகிழ்வுத்தன்மையையும் இணைத்தது. கோவிட் தொற்றுநோய் இந்தக் கலவை எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கும் என்பதை நிரூபித்தது. இந்த தடுப்பூசிகள் ஒரு வருடத்திற்குள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இது இதற்கு முன்பு நடந்ததில்லை. மாடர்னா, பாரத் பயோடெக் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆய்வகங்கள் போன்ற சிறிய நிறுவனங்கள் தடுப்பூசிகளை ஆரம்பத்தில் உருவாக்க உதவியது. ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா போன்ற பெரிய நிறுவனங்கள் கூட்டாண்மை மூலம் அவற்றை உலகம் முழுவதும் பரப்ப உதவியது. பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் ஒரு பெரிய தாக்கத்திற்காக எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை இது காட்டுகிறது.


இந்தியாவில் ஸ்டார்ட்அப்20 தொடங்கப்பட்டபோது, ஒவ்வொரு நாட்டின் ஸ்டார்ட்அப் காட்சியின் சுதந்திரம் மற்றும் தனித்துவமான குணங்களை மதிக்கும் அதே வேளையில், உலகளாவிய ஸ்டார்ட்அப் அமைப்பை ஒன்றிணைக்கும் கொள்கை யோசனைகளை உருவாக்குவதே முக்கிய குறிக்கோளாக இருந்தது. 2024-ஆம் ஆண்டில் பிரேசில் ஜி20 தலைமையை ஏற்றுக்கொண்டபோது, இந்த யோசனை அதன் முதல் உண்மையான சவாலை எதிர்கொண்டது. பிரேசில் தனது சொந்த ஸ்டார்ட்அப் அமைப்பை மேம்படுத்த விரும்பியது. இதனால் அது அதன் அரசாங்கத்திடமிருந்து ஆதரவையும் உலகளவில் கவனத்தையும் பெற்றது. மேலும் இந்தியாவால் தொடங்கப்பட்ட உலகளாவிய கொள்கைப் பணிகளைத் தொடர விரும்பியது. இரண்டு இலக்குகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த அமைப்பு 2025-ல் தென்னாப்பிரிக்காவில் அதன் அடுத்த கட்டத்தை எதிர்நோக்கும்போது பயனுள்ள பாடங்களைக் கற்றுக்கொண்டது.


முதல் இரண்டு ஆண்டுகளில், உலகெங்கிலும் உள்ள ஸ்டார்ட்-அப் மற்றும் சிறு வணிக சமூகங்களின் பகிரப்பட்ட தேவைகளைப் பிரதிபலிக்கும் ஒரு கொள்கை அறிக்கையை உருவாக்க ஸ்டார்ட்அப்20 ஒரு தெளிவான செயல்முறையை உருவாக்க உதவியது. இருப்பினும், இரண்டு முக்கிய சிக்கல்கள் தெளிவாகின. இந்த யோசனைகளை தேசிய கொள்கைகளாக மாற்றுவதற்கான சரியான அமைப்பு இல்லை. மேலும் நீண்டகால பின்தொடர்தலை உறுதி செய்வதற்கான வழி இல்லை. இதைச் சரிசெய்ய, மன்றம் ஒரு சர்வதேச செயலகத்தை அமைக்க பரிந்துரைத்தது. இது ஸ்டார்ட்-அப் அமைப்பின்  உணர்வோடு நன்கு பொருந்தக்கூடிய ஒரு தீர்வாகும்.


இந்தியாவின் முதல் கொள்கை அறிக்கை, உலகளாவிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பில் G20 நாடுகளின் ஒருங்கிணைந்த முதலீட்டை 2030-ஆம் ஆண்டுக்குள் $1 டிரில்லியனாக உயர்த்த வேண்டும் என்ற வலுவான அழைப்பை விடுத்தது. இந்த இலக்கை அடைய, அது சில அடிப்படை நடவடிக்கைகளை பரிந்துரைத்தது. முதலில், ஸ்டார்ட்-அப்களுக்கான பொதுவான வரையறையை உருவாக்கி, நிர்வாக விதிகளை சீரமைத்தல், இரண்டாவதாக, ஸ்டார்ட்-அப்கள் உலகளாவிய பணம், திறமை மற்றும் சந்தைகளை அணுக உதவும் அமைப்புகளை உருவாக்குதல், மூன்றாவதாக, பொதுவாக பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கும் குழுக்களை ஆதரிப்பதன் மூலம் உள்ளடக்கத்தை ஊக்குவித்தல், நான்காவதாக, நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) போன்ற உலகளாவிய இலக்குகளை ஆதரிக்கும் ஸ்டார்ட்-அப்களைக் கண்டுபிடித்து வளர்க்க உதவுதல் போன்றவை இதில் அடங்கும்.


பிரேசில் ஏற்கனவே உள்ள யோசனைகளை மேம்படுத்தி புதியவற்றைச் சேர்த்தது. நிதித்துறையில், முதலீட்டுத் தகவல்களை மிகவும் சீரானதாக மாற்றவும், பணத்தைத் திரட்ட டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தவும், ஆழமான தொழில்நுட்பத்தை ஆதரிக்க கலப்புநிதி கருவிகளைப் பயன்படுத்தவும் பரிந்துரைத்தது. இது சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை முக்கிய கவனம் செலுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வட்டப் பொருளாதாரம் மற்றும் சமூக நிறுவனங்களில் தொடக்கங்களை முன்னிலைப்படுத்தியது. பிரேசிலின் G20 திட்டத்தின் முக்கிய பகுதிகளான கல்வி, திறன் மேம்பாடு மற்றும் நல்ல நிறுவன மேலாண்மைக்கும் இது முக்கியத்துவம் அளித்தது. நெறிமுறை புதுமைக்கான விதிகளை உருவாக்குவதற்கும், நாடுகள் முழுவதும் விதிமுறைகளை சீரமைப்பதற்கும் ஒரு புதிய பணிக்குழு அமைக்கப்பட்டது.


தென்னாப்பிரிக்கா, G20 தலைவராக, ஜூலை 21 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் ஸ்டார்ட்அப்20-ன் 2025 கூட்டங்களைத் தொடங்கியது. ஐந்து சிறப்புக் குழுக்களான அடித்தளம் மற்றும் கூட்டணிகள், நிதி மற்றும் முதலீடு, உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை, வர்த்தகம் மற்றும் சந்தை அணுகல், நகரியங்கள் மற்றும் கிராமப்புற தொழில்முனைவு மூலம் இந்தப் பணி தொர்ந்து செயல்படுத்தும்.


தென்னாப்பிரிக்க அத்தியாயத்தில் பல புதிய முன்னேற்றங்கள் உள்ளன. முதல் முறையாக, நகரியங்கள் மற்றும் கிராமப்புறங்கள் கொள்கைகளில் சிறப்புக் கவனம் பெறுகின்றன. தனியார் துறைத் தலைவர்கள் நாட்டின் நலன்களுக்காகப் பேச ஊக்குவிக்கப்படுகிறார்கள். மிக முக்கியமாக, கொள்கை பரிந்துரைகளை உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல், அவற்றைச் செயல்படுத்துவதற்கான ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான தீவிர முயற்சி இப்போது நடந்து வருகிறது.


ஸ்டார்ட்அப்20 தனது மூன்றாவது ஆண்டைத் தொடங்குகையில், நாம் ‘இந்த மன்றம் இல்லாமல் என்ன செய்ய முடியாது’ என்ற ஒரு அடிப்படைக் கேள்வியைக் கேட்க வேண்டும். அது என்ன செய்யப் போகிறது? இதற்கான பதில் தெளிவாக உள்ளது: ஸ்டார்ட்அப்20 என்பது ஜி20 நாடுகளைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் மற்றும் சிறு வணிக சுற்றுச்சூழல் அமைப்புகள் ஒன்றிணைந்து தங்கள் தேவைகளை வெளிப்படுத்தக்கூடிய மிக உயர்ந்த மட்ட தளமாகும். இது வேகமாக நகரும் ஸ்டார்ட்-அப் உலகம் பெரிய வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களுடன் உலகளாவிய கொள்கை விவாதங்களில் குரல் கொடுக்க அனுமதிக்கிறது.


வைஷ்ணவ் ஸ்டார்ட்அப்20-ன் நிறுவனத் தலைவராகவும், அஜ்மோன் மார்சன் சர்வதேச செயலக உறுப்பினராகவும், ஜரானா தென்னாப்பிரிக்கத் தலைவராகவும் உள்ளனர்.



Original article:

Share:

கூட்டுறவு சங்கங்கள் இந்தியாவின் வேளாண் பொருளாதாரத்திற்கு எவ்வாறு பங்களிக்கின்றன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


•  கூட்டுறவு அமைச்சகம் (Cooperation Ministry) வெளியிட்ட அறிக்கையின்படி, புதிய கொள்கை நாட்டில் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தும் ஒன்றிய அரசின் நோக்கத்தின் ஒரு பகுதியாகும். மேலும் 2025-2045 வரையிலான அடுத்த இருபது ஆண்டுகளுக்கு இந்தியாவின் கூட்டுறவு இயக்கத்தில் முக்கிய சாதனையாக இது நிரூபிக்கப்படும்.


• கடந்த இருபது ஆண்டுகளில் உலகமயமாக்கல் (globalisation) மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக புதிய கொள்கை தேவைப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்தது.


• கூட்டுறவு அமைச்சகம் (Ministry of Cooperation) நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மோடி அரசால் தனி அமைச்சகமாக உருவாக்கப்பட்டது. அமித்ஷா அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1979 முதல் அதுவரை, கூட்டுறவு துறை விவசாய அமைச்சகத்தின் கீழ் இருந்தது.


• பிரதமர் மோடி தனது இரண்டாவது பதவிக்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஜூலை 7, 2021 அன்று மேற்கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாக, புதிய அமைச்சகமான கூட்டுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்பில் இரண்டு பக்க அறிவிப்பு மூலம் அறிவிக்கப்பட்டது. அதன் தொலைநோக்குப் பார்வை கூட்டுறவு மூலம் செழிப்பு (Sahakar se Samriddhi) என்று அறிவிக்கப்பட்டது.


உங்களுக்குத் தெரியுமா?


•  அறிவிப்பு புதிய கூட்டுறவு அமைச்சகத்தின் பரந்த அதிகார எல்லையை வகுத்துள்ளது: துறைகள் முழுவதும் கூட்டுறவு செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் கொள்கையை வகுப்பது; கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவது மற்றும் அதன் வரம்பை ஆழப்படுத்துதல்; கூட்டுறவு அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி மாதிரியை ஊக்குவிப்பது; ஒரு மாநிலத்திற்கு மட்டுப்படுத்தப்படாத நோக்கங்களைக் கொண்ட கூட்டுறவு சங்கங்களை கலைப்பது; மற்றும் கூட்டுறவு துறைகள் மற்றும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது ஆகும்


• கூட்டுறவு மீதான அரசின் முக்கியத்துவம், அமித்ஷாவை அதற்கு அமைச்சராக தேர்ந்தெடுத்ததிலும் பிரதிபலிக்கிறது. இது பொருளாதாரத்திற்கான துறையின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு மற்றும் மில்லியன் கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பின் ஆதாரமாக இருப்பதன் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளத்தக்கது.


• கடந்த நான்கு ஆண்டுகளில், அமைச்சகம் பல பெரிய முயற்சிகளைக் கண்டுள்ளது. பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2023 (Multi-State Cooperative Societies Act, 2023), தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (National Cooperative Exports Limited (NCEL)) உட்பட மூன்று புதிய கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கியது. "உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம்" மற்றும் இரண்டு லட்சம் புதிய பல்நோக்கு முதன்மை விவசாய கடன் சங்கங்கள் (Multi-Purpose Primary Agricultural Credit Societies) திட்டங்களுடன் தொடங்கப்பட்டுள்ளன.


• செப்டம்பர் 8, 2022 அன்று ஒரு அறிக்கையில், கூட்டுறவு துறை நாட்டின் மொத்த விவசாய கடனில் 20%, உர விநியோகத்தில் 35% கூட்டுறவு துறையால் செய்யப்படுகிறது என்றும் உர உற்பத்தியில் 25%, சர்க்கரை உற்பத்தியில் 31%, பால் உற்பத்தியில் 10%-க்கும் மேல் கூட்டுறவு மூலம் செய்யப்படுகிறது என்றும் கோதுமை கொள்முதலில் 13%-க்கும் மேல் மற்றும் நெல் கொள்முதலில் 20%-க்கும் மேல் கூட்டுறவு துறையால் செய்யப்படுகிறது என்றும்  மீனவர்களின் வணிகத்தில் 21%-க்கும் மேல் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்காற்றுகிறது என்று கூட்டுறவு அமைச்சகம் கூறியது.


• கூட்டுறவுத் துறையின் வரலாறு சுதந்திரத்திற்கு முன்பு தொடங்குகிறது, 1904-ல் கூட்டுறவு கடன் சங்கங்கள் சட்டம் இயற்றப்பட்டது. சில ஆண்டுகளுக்குள், இந்தத் துறையில் மிகப்பெரிய விரிவாக்கம் ஏற்பட்டது, 1911-ஆம் ஆண்டளவில் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் எண்ணிக்கை 5,300 ஆகவும், அவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் மேலாகவும் உயர்ந்தது.



Original article:

Share:

இந்திய நகரங்கள் குறித்த உலக வங்கி அறிக்கை. -குஷ்பூ குமாரி

 'இந்தியாவில் நெகிழ்ச்சித்தன்மை மற்றும் வளமான நகரங்களை நோக்கி' (Towards Resilient and Prosperous Cities in India) என்ற உலக வங்கி அறிக்கையின்படி, காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்பை உருவாக்க இந்திய நகரங்களுக்கு 2050-ஆம் ஆண்டுக்குள் $2.4 டிரில்லியன் தேவைப்படும். அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள் என்ன?


தற்போதைய செய்தி:


சமீபத்தில், உலக வங்கி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துடன் இணைந்து, இந்தியாவில் நெகிழ்ச்சித்தன்மை மற்றும் வளமான நகரங்களை நோக்கி என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. காலநிலைக்கு ஏற்ற உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை உருவாக்க இந்திய நகரங்களுக்கு 2050-ஆம் ஆண்டுக்குள் $2.4 டிரில்லியன் தேவைப்படும் என்று அறிக்கை மதிப்பிட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. 2050-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் நகர்ப்புற மக்கள் தொகை ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்து 951 மில்லியனாக உயரும் என்றும், 2030-ஆம் ஆண்டுக்குள், புதிய வேலைவாய்ப்புகளில் 70 சதவீதத்தை நகரங்கள் கொண்டிருக்கும் என்றும் அறிக்கை கணித்துள்ளது. வேகமான நகர்ப்புற வளர்ச்சியுடன், வழக்கமான செயல்முறைகள் தொடர்ந்தால் வெள்ளம் மற்றும் கடுமையான வெப்பம் போன்ற இரண்டு பெரிய பிரச்சினைகளை இந்திய நகரங்கள் எதிர்கொள்ள வாய்ப்புள்ளன.


2. பருவநிலை மாற்றம் மற்றும் நகரங்கள் வளர்ந்து வரும் விதம் ஆகியவை கனமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்கள் என்று அறிக்கை கூறுகிறது. 2070-ஆம் ஆண்டில், இந்த வகையான வெள்ள அபாயம் 3.6 முதல் 7 மடங்கு வரை அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டும், இந்த வெள்ளத்தால் ஏற்படும் இழப்புகள் 2023-ஆம் ஆண்டில் $4 பில்லியன்களிலிருந்து 2070-ஆம் ஆண்டில் $14–30 பில்லியன்களாக உயரும், இதனால் 46.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.


3. புவி வெப்பமடைதல் மற்றும் நகர்ப்புற வெப்ப தீவு நிகழ்வு (urban heat island phenomenon) காரணமாக 2050-ஆம் ஆண்டுக்குள் வெப்பம் தொடர்பான இறப்புகள் ஒவ்வொரு ஆண்டும் இரட்டிப்பாக 3 லட்சமாக உயரக்கூடும் என்று அறிக்கை கூறுகிறது. வேலை நேரத்தை அதிகாலை மற்றும் பிற்பகலுக்கு மாற்றுதல், நகர்ப்புற பசுமையாக்கல், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் குளிர் கூரைகள் போன்ற நடவடிக்கைகள் 1.3 லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றும் என்று அது மேலும் கூறியது.


4. நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு, பெருகி வரும் மற்றும் கடுமையாகும் வெப்ப அலைகளின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கிறது. எதுவும் மாறவில்லை என்றால், 2050-ஆம் ஆண்டளவில் இந்திய நகரங்களில் வெப்பம் தொடர்பான இறப்புகள் இரு மடங்காக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


நகர்ப்புற வெப்ப தீவு விளைவு (urban heat island effect) என்ன?


நகர்ப்புற வெப்ப தீவு என்பது ஒரு உள்ளூர் மற்றும் தற்காலிக நிகழ்வாகும். இது ஒரு நகரத்திற்குள் உள்ள சில பகுதிகள் சுற்றியுள்ள அல்லது அருகிலுள்ள பகுதிகளைவிட ஒரே நாளில் அதிக வெப்ப சுமையை அனுபவிக்கும் போது ஏற்படுகிறது. இந்த மாறுபாடுகள் பெரும்பாலும் கான்கிரீட் காடுகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெப்பத்தை ஏற்படுத்துகின்றன. இந்த இடங்கள் அருகிலுள்ள பகுதிகளை விட 3 முதல் 5°C வரை வெப்பமாக இருக்கும்.


5. தனியார் துறை ஈடுபாட்டை அதிகரித்தல், நிதியளிப்பு வரைபடத்தை உருவாக்குதல் மற்றும் நகராட்சித் திறன்களை உருவாக்குவதற்கான தரநிலைகளை அமைத்தல் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான தலையீடுகளுக்கு இந்த அறிக்கை பல பரிந்துரைகளை வழங்குகிறது. நகரங்களைப் பொறுத்தவரை, தணிப்பு மற்றும் தகவமைப்பு முயற்சிகளை ஆதரிக்க இடர் மதிப்பீடு மற்றும் தனியார் முதலீடு உட்பட மூலதனத் திரட்டலை இந்த அறிக்கை கோருகிறது.


நகர்ப்புற வெள்ளப் பெருக்கின் வகைகள்:


உலக வங்கியின் கூற்றுப்படி, நகர்ப்புற வெள்ளப்பெருக்கு மூன்று முக்கிய வகைகளில் உள்ளது:


(அ) நீர்வழி வெள்ளம் (Pluvial flooding): அதிக மழைப்பொழிவு மண்ணின் உறிஞ்சும் திறனையும் வடிகால் திறனையும் மீறும்போது இது நிகழ்கிறது இதனால் மேற்பரப்பில் தண்ணீர் தேங்குகிறது. நகரங்கள் வளர்ச்சியடையும்போது, அதிக கான்கிரீட் மற்றும் சாலைகள் தண்ணீரை தரையில் ஊறவிடாமல் தடுத்து வெள்ளத்தை அதிகரிப்பதன் மூலம் நிலைமையை மோசமாக்குகின்றன.


(ஆ) கடலோர வெள்ளம் (Coastal flooding): ஐக்கிய நாடுகளின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகத்தின் அறிக்கை (United Nations Office for Disaster Risk Reduction (UNDRR)) கடலோர வெள்ளப்பெருக்கு பொதுவாக புயல் எழுச்சி மற்றும் பலத்த காற்று வீசும் அதே நேரத்தில் அதிக அலைகள் ஏற்படும்போது ஏற்படுகிறது. குறைந்த காற்றழுத்தம் காரணமாக கடல் மட்டம் உயர்வதால் இந்த எழுச்சி ஏற்படுகிறது என்று கூறுகிறது.


(இ) நீர்நிலை வெள்ளம்: கனமழை அல்லது உருகும் பனி ஆறுகளில் நிரம்பி வழியும் போது, நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. உலக சுகாதார அமைப்பு, நீர் மட்டம் விரைவாக உச்சத்தை அடைந்து பின்னர் மெதுவாகக் குறைகிறது. வெள்ளப்பெருக்கின் தாக்கம், மக்கள் நிறைந்த பகுதிகளில் ஆபத்தானதாக மாறும். இது அவர்களை நேரடியாக ஆபத்தில் ஆழ்த்துகிறது.


நகரங்களில் அடிக்கடி திடீர் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்றன. மேலும், வெள்ளப்பெருக்கு பொதுவாக 3 முதல் 6 மணி நேரம் வரை நீடிக்கும். அவை உள்ளூர் அளவில் ஏற்படுகின்றன. சிறிய பகுதிகளை பாதிக்கின்றன. இந்தியாவில், மேக வெடிப்புகள் காரணமாக, திடீர் வெள்ளப்பெருக்குகள் பெரும்பாலும் ஏற்படுகின்றன.  இமயமலை மாநிலங்கள் பனிப்பாறைகள் உருகுவதால் உருவாகும் பனிப்பாறை (glaciers) ஏரிகள் நிரம்பி வழியும் சவாலை மேலும் எதிர்கொள்கின்றன. மேலும், அவற்றின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது.



நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (Urban Local Bodies (ULBs))


"ஊடகவியலாளர் சந்திப்பில், உலக வங்கியைச் சேர்ந்த அகஸ்டே டானோ கோமே, நகரங்கள் தங்களை வலிமையாக்கிக் கொள்ளவும், காலநிலை மாற்றத்தை சமாளிக்கவும் முதலீடு செய்ய, முடிவுகளை எடுக்கவும் செயல்படுத்தவும் சுதந்திரம் தேவை என்று கூறினார். 74வது திருத்தம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் மட்டுமே இது நடக்கும் என்று சிலர் நம்புகிறார்கள், இருப்பினும் மற்றவர்கள் அதை ஏற்கவில்லை."


1. 1992-ஆம் ஆண்டின் 74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் உள்ளூர் சுயாட்சியை வலுப்படுத்துவதற்காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அமைப்புகளுக்கு (Urban Local Bodies (ULBs)) அரசியலமைப்பு அங்கீகாரத்தை வழங்கியது. இருப்பினும், 2022-ஆம் ஆண்டு வரையிலான அதிகாரப்பூர்வ தணிக்கைகள் பல மாநிலங்கள் இன்னும் அதன் விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்று கண்டறிந்துள்ளன.


2. முதல் நகராட்சி அமைப்பு 1687-ஆம் ஆண்டு மதராஸில் நிறுவப்பட்டது, அதைத் தொடர்ந்து மும்பை மற்றும் கல்கத்தாவில் நிறுவப்பட்டது. 1882-ஆம் ஆண்டு, லார்ட் ரிப்பன் (பெரும்பாலும் இந்தியாவில் உள்ளூர் தன்னாட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர்) உள்ளூர் தன்னாட்சிக்கான தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார், இதன்மூலம் நகரங்களை நிர்வகிக்க ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி நிர்வாகத்தின் அடித்தளத்தை அமைத்தார்.



3. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (Urban Local Bodies (ULBs)), மாநகராட்சிகள் (Municipal Corporations), நகராட்சிகள் (Municipalities), அல்லது நகர் பஞ்சாயத்துகள் (Nagar Panchayats), நம் நகரங்களில் நகர்ப்புற ஆட்சியின் அடிப்படை அலகாகும். அவை குடிமக்களுக்கான முதல் தொடர்பு புள்ளியாக இருக்கின்றன மற்றும் கழிவு மேலாண்மை, சுகாதாரம் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் பொறுப்பைக் கொண்டுள்ளன.


4. இந்திய அரசியலமைப்பின் பகுதி IX-A இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அமைப்பு, பங்குகள் மற்றும் பொறுப்புகளை விவரிக்கிறது மற்றும் நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நில பயன்பாடு முதல் பொது சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை வரையிலான பல்வேறு சேவைகளை நிர்வகிக்கும் அதிகாரங்களை அவற்றுக்கு வழங்குகிறது.


5. அரசியலமைப்பின் 12-வது அட்டவணை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள 18 செயல்பாடுகளை குறிப்பிடுகிறது. இந்த திருத்தம் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் தேர்தல்களை நடத்துவதையும் கட்டாயமாக்கியது. உள்ளூர் தொகுதிகளிலிருந்து (wards) நகர சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மரபுரீதியான தலைவராக (ceremonial head) பணியாற்றும் போது, உண்மையான நிர்வாக அதிகாரம் மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரியான நகராட்சி ஆணையரிடம் (municipal commissioner) உள்ளது.


6. இருப்பினும், நகராட்சி அமைப்புகள் கழிவு சேகரிப்பு முதல் நகர திட்டமிடல் வரை அனைத்தையும் நிர்வகிப்பதில் மிகவும் சிரமப்படுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பலவிதமான சிக்கலான நகர்ப்புற பிரச்சினைகளை எதிர்கொள்ள போதுமான வளங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ளன.


7. இதை நிவர்த்தி செய்யும் வகையில், 2025-26ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில், ‘வளர்ச்சி மையங்களாக நகரங்கள்’, ‘நகரங்களின் ஆக்கப்பூர்வமான மறுசீரமைப்பு’ மற்றும் ‘நீர் மற்றும் சுகாதாரம்’ ஆகிய திட்டங்களை செயல்படுத்த, அரசாங்கம் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான நகர்ப்புற சவால் நிதியை உருவாக்கும் என்று அறிவித்தது.



Original article:

Share:

ஜல் ஜீவன் திட்டம் எவ்வளவு முக்கியமானது? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய நிகழ்வு : ஜல் ஜீவன் மிஷன் (JJM) செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மாற்றப்பட்டதாக ஜல் சக்தி துறை இணையமைச்சர் வி. சோமன்னா வியாழக்கிழமை தெரிவித்தார். பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகளை பரிசீலித்த பிறகு இது செய்யப்பட்டது. கூடுதல் செலவுகளை ஈடுகட்ட இந்த மாநிலங்கள் மத்திய ஆதரவைக் கேட்டன. கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியால் ஏற்பட்ட மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக கூடுதல் செலவுகள் ஏற்பட்டன.


முக்கிய அம்சங்கள் :


மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பல மாநிலங்கள் மத்திய அரசிடம் ஆதரவைக் கேட்டதாக சோமன்னா கூறினார். மூலப்பொருட்களின் கூடுதல் செலவை ஈடுகட்ட அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது. கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி காரணமாக இந்த செலவுகள் அதிகரித்தன. இதன் காரணமாக, திட்டத்தின் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் 21.06.2022 அன்று திருத்தப்பட்டன. இந்த மாற்றம், இந்த திட்டத்தின் காலப்பகுதியில் அதன் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணிக்க செய்யப்பட்டது.


சமாஜ்வாதி கட்சி (SP) உறுப்பினர் ஆனந்த் பதௌரியாவின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சோமன்னா இந்தப் பதிலைக் கொடுத்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்ட JJM-ன் கீழ் ஒப்பந்தப் புள்ளி விதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மிகப்பெரிய கூடுதல் செலவை ஏற்படுத்தியதா என்பதை பதௌரியா அறிய விரும்பினார். கூடுதல் செலவு மாநிலங்கள் முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய்களை எட்டியதாக அவர் கூறினார்.


செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜல் ஜீவன் மிஷன் (JJM) பணிகளின் செலவு அதிகரிக்க வழிவகுத்தன. சில மாநிலங்களில் செலவுகள் உயர்த்தப்படுவதாக சில அரசுத் துறைகள் கவலை கொண்டிருந்ததால் இந்தப் பதில் முக்கியமானது.


மே 21 அன்று, *தி இந்தியன் எக்ஸ்பிரஸ்* ஒரு விசாரணையை வெளியிட்டது. இந்த விசாரணை JJM தரவுத்தளத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் பதிவேற்றப்பட்ட தரவுகளை ஆய்வு செய்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட JJM வழிகாட்டுதல்களில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்கள் செலவு வரம்புகளை நீக்கியுள்ளன என்பதைக் கண்டறிந்தது. இந்த நீக்கம் செலவுகள் கணிசமாக அதிகரிக்க வழிவகுத்தது.


இந்த மாற்றங்கள் 14,586 திட்டங்களுக்கு ரூ.16,839 கோடி கூடுதல் செலவுகளுக்கு வழிவகுத்தன. இது முதலில் மதிப்பிடப்பட்ட செலவில் இருந்து 14.58% அதிகரிப்பாகும். கஜேந்திர சிங் ஷெகாவத் ஜல் சக்தி அமைச்சராக இருந்தபோது, ஜூன் 2022-ல் வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டன.


உங்களுக்குத் தெரியுமா?


ஆகஸ்ட் 15, 2019 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் மிஷன், 2024 டிசம்பர் இறுதிக்குள் 16 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், இதன் இலக்கில் 75 சதவீதத்தை மட்டுமே ஐந்தாண்டுகளில் அடைய முடிந்தது. மீதமுள்ள 4 கோடி குழாய் இணைப்புகளை நான்கு ஆண்டுகளுக்குள் 2019 டிசம்பர் 2 வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


2019-ல் ‘ஹர் கர் ஜல்’ (Har Ghar Jal) திட்டம் தொடங்கப்பட்டபோது, ஜல் சக்தி அமைச்சகத்தின் கோரிக்கையான ரூ.7.89 லட்சம் கோடிக்கு எதிராக ஜல் ஜீவன் மிஷனின் செலவீனத்தை ரூ.3.6 லட்சம் கோடியாக ஈஎஃப்சி நிர்ணயித்தது. இருப்பினும், திட்டத்தின் தரவுத்தளத்தில் உள்ள தகவல்கள், ஐந்து ஆண்டுகளில் (2019-2024) ரூ. 8.07 லட்சம் கோடி மதிப்பிலான மாநிலங்கள் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களைக் காட்டுகிறது.


செலவுகளில் ஏற்பட்ட இந்தக் கடுமையான அதிகரிப்பு, செலவினங்களைக் குறைக்கவும் மற்றும் பணிக்கான மத்திய பங்கைக் குறைக்கவும் EFC வழிவகுத்தது. EFC கூட்டத்தின்போது, அங்கீகரிக்கப்பட்ட திட்டத்திற்கு (ரூ. 7.68 லட்சம் கோடி மதிப்பிலான மற்றும் ரூ. 38,940 கோடி மதிப்பிலான பணிகள் வழங்கப்பட்டுள்ளன) ரூ. 8.07 லட்சம் கோடி செலவை ஜல் சக்தி அமைச்சகம் நியாயப்படுத்தியது.



Original article:

Share:

இந்தியாவின் தேர்தல் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன -சுப்ரஷ்தா எஸ்.

 பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் இந்திய தேர்தல் ஆணையம் மாற்று வாக்காளர் பதிவு மாதிரிகளை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.


பீகாரில் வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பதற்கான முதல் கட்டத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 1, 2025-க்குள் முடிக்கவுள்ள நிலையில், நிறைய அரசியல் விவாதங்கள் நடந்துள்ளன. ஏழை மக்கள், சிறுபான்மையினர் மற்றும் புலம்பெயர்ந்தோர் பட்டியலில் இருந்து நியாயமற்ற முறையில் நீக்கப்படுவதாகவும், இந்த செயல்முறை ஒருதலைப்பட்சமானது என்றும் சில எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடிய குழுக்களை குறிவைப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். மறுபுறம், வாக்காளர் பட்டியலை துல்லியமாக வைத்திருக்க புதுப்பிப்பு அவசியம் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாக சிலர் கருத்து கூறுகின்றனர். 


இந்தியாவின் வாக்களிப்பு முறை எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த பெரிய பிரச்சினையை விவாதத்தில் இரு தரப்பினரும் தவறவிடுகிறார்கள். "இயல்பான குடியிருப்பாளர்" பற்றிய நிலையான கருத்துக்களை அதிகரித்து வரும் நடமாடும் குடிமக்களுடன் இணைத்து, ஆழமான பிரச்சினையை பற்றி பேச மாறுகின்றனர். இந்தச் சட்டம்தான் நிர்வகிக்க வேண்டிய சமூக மற்றும் பொருளாதார யதார்த்தங்களுக்குப் பொருந்தவில்லை. தேர்தல் ஆணையத்திற்கு சில வரம்புகள் இருந்தாலும், அவற்றை மாற்ற முயற்சிப்பதற்குப் பதிலாக, அது பெரும்பாலும் அமைப்பில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளது.

வரலாற்றுப் பின்னணி


பெரும்பாலான இந்தியர்கள் கிராமங்களில் வசித்து அரிதாகவே இடம் பெயர்ந்தபோது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act, 1950) இயற்றப்பட்டது - 82%-க்கும் அதிகமானோர் கிராமப்புறங்களில் இருந்தனர். 8%க்கும் குறைவானவர்களே இடம் பெயர்ந்தனர். பெரும்பாலான இந்தியர்கள் தாங்கள் பிறந்த இடத்தில் வாழ்ந்து வாக்களித்ததாக இந்த சட்டம் கருதியது. மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது இனி பொருந்தவில்லை என்றாலும், இந்த யோசனை இன்றும் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் ஒரே இடத்தில் தங்கியிருப்பதாக பலர் நம்புகிறார்கள். ஆனால், சான்றுகள் வேறுவிதமாகக் காட்டுகின்றன. தற்போதைய சட்டங்கள், ஒரே இடத்தில் வசிக்கும் மக்கள் எங்கு வாக்களிக்கலாம் என்பதைத் தீர்மானிப்பதில் இன்னும் முக்கியத்துவம் அளிக்கின்றன. ஆனால் 450 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் - சுமார் 37% மக்கள் - நாட்டிற்குள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்கின்றனர். பீகாரில், இந்த விகிதம் இன்னும் அதிகமாக உள்ளது.


இந்தியாவில், மாநிலம் அதிக உள்நாட்டு இடம்பெயர்வு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. 36% குடும்பங்கள் குறைந்தபட்சம் ஒரு புலம்பெயர்ந்தோரையாவது கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றன. வேலை செய்யும் வயதுடைய மக்களில் 20%க்கும் அதிகமானோர் அனைத்து நேரங்களிலும் மாநிலத்திற்கு வெளியே வாழ்கின்றனர். இந்த வேறுபாடு சொற்பொருளை விட அதிகம். இது பொருள் விலக்குகளை உருவாக்குகிறது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 13.9 மில்லியன் பீகாரிகள் மாநிலத்திற்கு வெளியே வசித்து வந்தனர். இன்று, இந்த எண்ணிக்கை 17 மில்லியனிலிருந்து 18 மில்லியனாக இருக்க வாய்ப்புள்ளது.


பீகார் தேர்தல் அலுவலகத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டு 1.2 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டன. சரிபார்ப்பின் போது "குடியிருப்பு இல்லாதது" காரணமாக பெரும்பாலான பெயர்கள் நீக்கப்பட்டன. கோபால்கஞ்ச் மற்றும் சீதாமர்ஹி போன்ற அதிக குடியேற்ற விகிதங்களைக் கொண்ட மாவட்டங்களில், பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 5%-7% பேர் நீக்கப்பட்டனர். இவை சிறிய புள்ளிவிவரங்கள் அல்ல. மேலும், பொருளாதார நெருக்கடி மற்றும் நியாயமற்ற அமைப்புகள் காரணமாக பலர் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதை இந்த எண்கள் எடுத்துக்காட்டுகின்றன.


இரண்டு வேறுபட்ட கருத்துகள்


பொதுவிவாதங்களில் பெரும்பாலும் இரண்டு வெவ்வேறு கருத்தாக்கங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன — குடியுரிமை மற்றும் குடியிருப்பு. குடியுரிமை, அரசியலமைப்பு மற்றும் குடியுரிமைச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டவாறு, ஒரு சட்டபூர்வமான அந்தஸ்தாகும். ஒருவர் இந்தியக் குடியரசின் குடிமகனாக இருக்கிறாரா இல்லையா என்பது தெளிவானது. மாறாக, குடியிருப்பு என்பது ஒரு நிபந்தனைக்குட்பட்ட மற்றும் சூழ்நிலை சார்ந்த நிலையாகும், இது ஒரு குடிமகன் வாக்களிக்கப் பதிவு செய்யப்படும் தொகுதியை தீர்மானிக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், குடியுரிமையை அல்ல, குடியிருப்பையே ஒரு தொகுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு முக்கிய அளவுகோலாகக் கருதுகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் பிறந்த கிராமங்களுக்கும் வேறு இடங்களில் உள்ள தொழில்துறை மண்டலங்களுக்கும் இடையே பயணிக்கின்றனர், ஒரு இடைநிலை இடத்தில் சிக்கிக்கொள்கின்றனர் — முழுமையாக இங்கும் இல்லை, அங்கும் இல்லை. புலம்பெயர்ந்தவர்களுக்கு, வாக்குரிமையின்மை என்பது வெறுமனே அலுவலக ரீதியான பிரச்சினை மட்டுமல்ல, அது அவர்களின் இருப்பையே பாதிக்கும் — புனைவாக இல்லாத, ஆனால் சக்திவாய்ந்த ஒரு சமிக்ஞையாக, அவர்கள் இங்கு சேராதவர்கள் என்பதை அமைதியாக உணர்த்துகிறது.


இந்த நிலைமை அதிகாரிகள் கவனக்குறைவாக இருப்பது மட்டுமல்ல அதை விட ஆழமானது. இந்திய தேர்தல் ஆணையம் உண்மையான உலகத் தேவைகளைப் பிரதிபலிக்காத காலாவதியான சட்டங்களைக் கையாள்கிறது. மேலும் உள்ளடக்கிய மாற்றங்களை வலியுறுத்துவதற்குப் பதிலாக, அது விதிகள் மற்றும் நடைமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுகிறது. இது பலரை ஒதுக்கி வைக்கிறது. ஏனெனில், அமைப்பு ஏற்கனவே சில குழுக்களுக்கு நியாயமற்றதாக இருப்பது எப்பொழுதும் உதவாது. வாக்காளர் பட்டியல்களில் இருந்து மக்களை நீக்குவது சரியானதைச் செய்வதற்கு சமமானதல்ல - குறிப்பாக வாக்களிக்க நீங்கள் எங்கு வாழ வேண்டும் என்பது குறித்த விதிகள் சில வகையான குடிமக்களை தானாகவே விலக்கி வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து எடுத்துக்காட்டுகள்


மற்ற ஜனநாயக நாடுகளும் இதேபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளை அதிக கற்பனையுடன் எதிர்கொண்டுள்ளன. அமெரிக்காவில், 30 மில்லியன் முதல் 35 மில்லியன் வாக்காளர்கள் தங்கள் சொந்த மாகணங்களைத் தவிர வேறு மாகணங்களில் வசிக்கின்றனர். வாக்களிக்க வராதோர் மற்றும் அஞ்சல் வாக்குச்சீட்டுகள், அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து வாக்களிக்கும் போது, தங்கள் சொந்த மாவட்டங்களில் பதிவு செய்ய அனுமதிக்கின்றன. பிலிப்பைன்ஸ் தனது 1.8 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்களை வெளிநாட்டிலிருந்து வாக்களிக்க அனுமதிக்கிறது, 60%-க்கும் அதிகமானோர் உண்மையாக வாக்களிக்கின்றனர். ஆஸ்திரேலியா தொலைதூர மற்றும் இடம்பெயரும் சமூகங்களில் நகரும் வாக்குச் சாவடிகளைப் பயன்படுத்துகிறது. 90%-க்கும் அதிகமான மக்கள் வாக்களிக்க இந்த செயல்முறை உதவுகிறது. துல்லியமான வாக்காளர் பட்டியல்கள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கியவற்றில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டியதில்லை என்பதை இந்த எடுத்துக்காட்டுகள் காட்டுகின்றன. இது நிறுவன வடிவமைப்பு மற்றும் அரசியல் விருப்பத்தின் செயல்பாடாகும்.


தேர்தல் ஆணையம் சட்டத்தை தானாக மாற்ற முடியாது என்று சொல்வது சரியானது. ஆனால், அது மாற்றங்களுக்கு வலுவாக அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக புலம்பெயர்ந்தோர் உள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல்கள் தொடர்பான அதன் அனுபவம், சட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது. குறைந்தபட்சம், வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கும், ஏற்கனவே உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர்களுடன் இணைவதற்கும் புதிய வழிகளை முயற்சிக்க வேண்டும்.


அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் குழப்பத்தை அதிகரிக்கிறார்கள். வாக்காளர்கள் செயல்முறையைப் புரிந்துகொள்ள உதவுவதற்கு அல்லது கோரிக்கைகள் அல்லது ஆட்சேபனைகளை தெரிவிப்பதன் மூலம் அவர்களுக்கு வழிகாட்டுவதற்குப் பதிலாக, தங்கள் வாக்குரிமையை இழக்கும் மக்களை ஆதரவைப் பெறுவதற்காகப் பயன்படுத்துகிறார்கள். வரைவு வாக்காளர் பட்டியல்கள் பொது மதிப்பாய்வுக்கு திறந்திருக்க வேண்டும் என்றாலும், குறைந்த கல்வியறிவு, மோசமான தகவல் தொடர்பு மற்றும் வேலைக்குச் செல்வதில் உள்ள சவால்கள் காரணமாக பலரால் அவற்றை அணுக முடியாது. பீகாரில் 60%-க்கும் அதிகமான வாக்காளர்கள் கோரிக்கைகள் அல்லது ஆட்சேபனைகளை எழுப்பும் வாய்ப்பு பற்றி அறிந்திருக்கவில்லை என்றும், புலம்பெயர்ந்தோருக்கு, 25%-க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் கணக்கெடுப்புகள் காட்டுகின்றன. வாக்காளர்களை "பொறுப்பை ஏற்க" குற்றம் சாட்டுவது நியாயமற்றதாகவும், பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறுவது போலவும் உணரலாம்.


தேர்தல் ஆணையத்தை பாதுகாப்பது முக்கியம். ஆனால், அதை விட முக்கியமானது, ஆணையத்தை சிறப்பாகச் செயல்பட நாம் வலியுறுத்துவது தான்.


சுப்ரஷ்தா ஒரு கட்டுரையாளர், எழுத்தாளர் மற்றும் The Churn பத்திரிகையின் நிறுவனர் ஆவார்.



Original article:

Share:

”சதுப்புநிலங்கள்” (Mangroves) என்பதை ஒரு முக்கிய வார்த்தையாக மாற்றிய விஞ்ஞானி -செல்வம் வைத்திலிங்கம்

 சதுப்புநில காடுகள் ஒரு காலத்தில் வெறும் சதுப்பு நிலமாகவே பார்க்கப்பட்டன. இப்போது, அவை கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளிலும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் முயற்சிகளிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.


1980களின் பிற்பகுதி வரை, சதுப்புநிலங்களுக்கு அருகிலுள்ள உள்ளூர் சமூகங்கள் மட்டுமே அவற்றின் மதிப்பைப் புரிந்துகொண்டன. இந்த சமூகங்கள் மீன்பிடித்தல் மற்றும் வாழ்வாதாரத்திற்காக சதுப்புநிலங்களை நம்பியிருந்தன. இன்று, "சதுப்புநிலங்கள்" என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கடலோர மண்டலங்களில் பேரிடர் அபாயங்களைக் குறைத்தல், கரியமில வாயு பிடிப்பு மூலம் காலநிலை ஏற்புத்தன்மை, கடலோர மீன்வளத்தை மேம்படுத்துதல் மற்றும் கரையோரத்தில் உள்ள பறவை சரணாலயங்களைப் பாதுகாத்தல் போன்ற பல பகுதிகளில் இது தோன்றுகிறது.


திருப்புமுனை


ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டமும் யுனெஸ்கோவும் 1988-ல் சதுப்புநில ஆராய்ச்சி குறித்த பிராந்திய திட்டத்தைத் தொடங்கின. இருப்பினும், 1989-ல் தான் கடலோரப் பகுதிகளில் காலநிலை மாற்ற விளைவுகளை நிர்வகிப்பதில் சதுப்புநிலங்களுக்கு முன்னணிப் பங்களிப்பை வழங்க எம்.எஸ். சுவாமிநாதன் முன்மொழிந்தார். 1989-ல் டோக்கியோவில் நடந்த காலநிலை மாற்றம் மற்றும் மனித மறுமொழிகள் மாநாட்டில் (Human Responses conference), அவர் பிரச்சினையை தெளிவாக விளக்கினார். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் மட்டங்கள் அதிகரிப்பது கடலோரப் பகுதிகளில் நிலத்தையும் நீரையும் உப்புத்தன்மையாக்கும். இந்த உவர்த்தன்மை உணவு உற்பத்தி மற்றும் வேலைகளை இழக்க வழிவகுக்கும்.


அதிகரித்து வரும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சூறாவளிகளின் தாக்கம் அதிகரிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த சூறாவளிகள் உயிர் இழப்பு, வாழ்வாதாரங்களுக்கு சேதம் மற்றும் இயற்கை வளங்களை அழிப்பதை ஏற்படுத்துகின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, சதுப்புநில ஈரநிலங்களின் நிலையான மேலாண்மைக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைத்தார். அவரது அணுகுமுறை சூழலியல், பொருளாதாரம் மற்றும் சமத்துவக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. புதிய உப்புத்தன்மையைத் தாங்கும் பயிர்களை உருவாக்க சதுப்புநில மரபணு வளங்களைப் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சியும் இதில் அடங்கும். உப்புத்தன்மையைத் தாங்கும் மரபணுக்களை சதுப்புநிலங்களிலிருந்து அரிசி மற்றும் பிற பயிர்களுக்கு மாற்றுவது இதில் அடங்கும். காலப்போக்கில், பல முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. எம்.எஸ். சுவாமிநாதன் சதுப்புநில மறுசீரமைப்பு, பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் முக்கிய பங்கு வகித்தார்.


எம்.எஸ். சுவாமிநாதனின் முயற்சிகளுக்கு நன்றி, சர்வதேச சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பு சங்கம் (International Society for Mangrove Ecosystems (ISME)) 1990-ல் நிறுவப்பட்டது. இது ஜப்பானின் ஒகினாவாவில் அமைக்கப்பட்டது. எம்.எஸ். சுவாமிநாதன் அதன் நிறுவனத் தலைவராக 1993 வரை பணியாற்றினார்.


சதுப்புநிலங்களுக்கான சாசனத்தை உருவாக்கவும் அவர் உதவினார். இந்த சாசனத்தை இயற்கைக்கான உலக சாசனத்தில் சேர்த்தார். இந்த ஆவணம் 1992-ல் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு குறித்த மாநாட்டால் தயாரிக்கப்பட்டது. இன்றும் கூட, சாசனம் உலகம் முழுவதும் சதுப்புநில பாதுகாப்பு முயற்சிகளை வழிநடத்துகிறது.


ISME ஆனது இந்தியாவில் உள்ள சதுப்புநிலக் காடுகளின் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகள் மற்றும் அவற்றின் தற்போதைய பாதுகாப்பின் நிலையை மதிப்பீடு செய்தது. ISME சதுப்புநில பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு பற்றிய தொடர் பட்டறைகளை ஏற்பாடு செய்தது, சதுப்புநில சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு கையேட்டை வெளியிட்டது மற்றும் உலக சதுப்புநில வரைபடத்தை உருவாக்கியது. இந்த நடவடிக்கைகள், மெதுவாக ஆனால் நிச்சயமாக, சதுப்புநிலங்கள் என்றால் என்ன என்ற பொதுவான கருத்தை மாற்றியது. அவை சதுப்பு நிலம் என்ற எண்ணத்தில் இருந்து மற்ற பயன்பாடுகளுக்கு மாற்றுவதற்கு காத்திருக்கிறது. அவை, பல பயன்பாட்டு கடலோர சுற்றுச்சூழல் அமைப்புக்கு மையமாக உள்ளன. ISME ஆனது பயன்பாட்டு ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறது. பல்வேறு பங்குதாரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது மற்றும் சதுப்புநிலங்கள் பற்றிய அறிவு தயாரிப்புகளின் மையமாக செயல்படுகிறது.


எம்.எஸ். சுவாமிநாதனின் மற்றொரு முக்கியமான பங்களிப்பு உலகளாவிய சதுப்புநில தரவுத்தளம் மற்றும் தகவல் அமைப்பை (Global Mangrove database and Information System (GLOMIS)) உருவாக்கியது. இது சதுப்புநில நிபுணர்கள், ஆராய்ச்சி மற்றும் இனங்கள் பற்றிய தகவல்களை வழங்கும் தேடக்கூடிய தரவுத்தளமாகும். மரபணு வளங்களைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்திய சதுப்புநில சுற்றுச்சூழல் தகவல் சேவைகளும் இதில் அடங்கும். 1992-ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் குழு ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது. தெற்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியாவில் உள்ள ஒன்பது நாடுகளில் 23 சதுப்புநில தளங்களை அவர்கள் மதிப்பீடு செய்தனர். இந்தப் பணிக்கான அறிவியல் வழிகாட்டுதலை எம்.எஸ். சுவாமிநாதன் வழங்கினார்.


சதுப்புநில மரபணு வள மையங்களின் உலகளாவிய வலையமைப்பை அமைப்பதே இதன் நோக்கமாக இருந்தது. இந்த மையங்கள் இப்போது பாதுகாக்கப்படுகின்றன. அவை அந்தந்த அரசாங்கங்களால் 'பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக' கண்காணிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.


தேசிய அளவில், இந்தியா சதுப்புநிலங்களை நிர்வகிக்கும் முறையை மாற்றுவதில் எம்.எஸ். சுவாமிநாதன் முக்கியப் பங்கு வகித்தார். 1783 முதல் இந்தியா நீண்ட காலமாக சதுப்புநிலங்களை நிர்வகித்து வருகிறது. இந்த நேரத்தில், சுந்தரவன சதுப்புநில காடுகள் நிறைய அழிக்கப்பட்டன. நிலம் முக்கியமாக விவசாயம் மற்றும் குடியிருப்புகளுக்காக அழிக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலனித்துவ காலம் முதல் 1980 வரை, சதுப்புநிலங்களை நிர்வகிக்க வெட்டுதல் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது. வெட்டுதல் என்பது ஒரு பகுதியில் உள்ள அனைத்து மரங்களையும் வெட்டுவதைக் குறிக்கிறது. 1980-ஆம் ஆண்டு இந்திய வன (பாதுகாப்பு) சட்டம் இயற்றப்பட்டபோது இது மாறியது. பிரிட்டிஷ் மற்றும் பின்னர் மாநில வனத்துறைகள் சதுப்புநிலப் பகுதிகளுக்கான செயல்பாட்டுத் திட்டங்களை வகுத்தன. வெட்டப்பட்ட பகுதிகளில் சதுப்புநிலங்களை மீட்டெடுக்க முயற்சிப்பது சரியாக வேலை செய்யவில்லை என்பதை இந்தத் திட்டங்கள் காட்டுகின்றன. இந்த மோசமான முடிவுகளுக்கு உள்ளூர் சமூகங்கள் பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட்டன. எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உதவியதுடன், முக்கிய பங்களிப்புகளையும் செய்தனர்.


1993-ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டுகளில், முதலில் தமிழ்நாடு வனத்துறையுடனும், பின்னர் பிற மாநிலங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுடனும் நடத்தப்பட்ட பங்கேற்பு ஆராய்ச்சியில், சதுப்புநிலங்களின் உயிரியல் இயற்பியல் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், உள்ளூர் சமூகங்களால் வளங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றின் சீரழிவுக்கு முதன்மைக் காரணம் என்பதைக் கண்டறிந்தனர். அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் சதுப்புநில மறுசீரமைப்புக்கான நீர்-சூழலியல் முறை உருவாக்கப்பட்டது. இந்த முறை பொதுவாக மீன் எலும்பு கால்வாய் முறை (fishbone canal method) என்று அழைக்கப்படுகிறது. இது தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் சதுப்புநிலப் பகுதிகளில் சோதனை முறையில் சோதிக்கப்பட்டது.


இந்த முறை பின்னர் ஒரு கூட்டு சதுப்புநில மேலாண்மை திட்டமாக உருவானது, அப்போதைய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம், 2000-ஆம் ஆண்டில் ஒரு குழு மூலம் மதிப்பீடு செய்து, பொருத்தமான அனைத்து பகுதிகளிலும் மீண்டும் செயல்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டது. இதன் விளைவாக, சதுப்புநில மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பிற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிக முதலீடு செய்தன. 1999 ஒடிசா சூப்பர் சூறாவளி மற்றும் 2004 இந்தியப் பெருங்கடல் சுனாமியின் போது சதுப்புநிலங்கள் ஆற்றிய மகத்தான பங்கு, உயிர் இழப்பு மற்றும் சொத்து மற்றும் இயற்கை வளங்களுக்கு சேதம் ஆகியவற்றைக் குறைப்பதில், இந்தியாவிலும் உலக அளவிலும் சதுப்புநிலங்களை பெரிய அளவில் மீட்டெடுப்பதற்கு வழி வகுத்தது.


சதுப்புநில பரப்பளவு அதிகரிப்பு 


உலக சதுப்புநிலப் பரப்பு தினம் ஜூலை 26 அன்று கொண்டாடப்படுகிறது. சதுப்புநிலப் பகுதிகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க இது ஒரு நல்ல நேரம். இந்திய வன நிலை அறிக்கை (India State of Forest Report (ISFR)) 2023-ன் படி, இந்தியாவில் மொத்த சதுப்புநிலப் பரப்பளவு 4,991.68 கிமீ² ஆகும். இந்தப் பகுதி இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பளவில் 0.15% ஆகும். ISFR 2019 அறிக்கையை ISFR 2023 அறிக்கையுடன் ஒப்பிடும்போது, சதுப்புநிலப் பரப்பளவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காண்கிறோம். நாடு முழுவதும் இந்த அதிகரிப்பு 16.68 கிமீ² ஆகும்.


செல்வம் வைத்திலிங்கம் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆவார். சதுப்புநில ஆராய்ச்சி மற்றும் மேலாண்மையில் அவருக்கு நாற்பதாண்டு கால அனுபவம் உள்ளது.



Original article:

Share:

கார்கில், பஹல்காம் மற்றும் பாதுகாப்பு உத்தியின் ஒரு மறுசீரமைப்பு -ராஜீவ் அகர்வால்

 இந்தியாவின் வழக்கமான போர்த் திறனில் கார்கில் ஒரு முக்கியமான தருணம் என்றால், பஹல்காம் தாக்குதல் என்பது எதிர்காலத்தில் எந்த பயங்கரவாதத் தாக்குதல்களைக் கையாள்வதற்கான தரத்தை உயர்த்தியுள்ளது.


காஷ்மீரின் உயர்ந்த பனிக்கட்டி மலையின் உச்சியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கார்கில் போரின் 26-வது ஆண்டு நினைவு தினமாகும். ஆனால், போரின் நினைவுகள் இன்னும் புதியவையாக உள்ளன. தொலைக்காட்சியில் நேரடியாகக் காட்டப்பட்ட முதல் போர் கார்கில் தான். இது மோதலை (மே 3 முதல் ஜூலை 26, 1999 வரை) இந்திய மக்களின் வீடுகளுக்குள் கொண்டு வந்தது. இந்திய ஆயுதப் படைகள் காட்டிய ‘பாரத்’ மீதான அதீத துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் அன்பின் மூலம் வெற்றி கடினமாகப் போராடி வென்றது. இந்தியா பாகிஸ்தான் படைகளை வெளியேற்றியது மட்டுமின்றி, பாகிஸ்தானை வாபஸ் பெறச் செய்து போர் நிறுத்தத்தை கோரியது.


இவை அனைத்தும் நன்கு தெரிந்ததாகவும் சமீபத்தில் நிகழ்வுகள் போலவும் தெரிகிறது. ஏப்ரல் 22, 2025 அன்று, காஷ்மீரின் பஹல்காமில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது. அவர்கள் ஆண்களை மட்டுமே குறிவைத்து 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்றனர். அடுத்து நடந்தது, ஆபரேஷன் சிந்தூர் (மே 7-10, 2025) என்ற வடிவில் பாகிஸ்தானின் பயங்கரவாத வலையமைப்பிற்கு இந்தியா இதுவரை வழங்காத மிக அழிவுகரமான தண்டனையாகும். நான்கு நாட்கள் துல்லியமான மற்றும் மிகவும் பயனுள்ள தாக்குதல்களில், இந்திய இராணுவம் பாகிஸ்தான் முழுவதும் ஒன்பது பயங்கரவாத தளங்களை தாக்கியது மற்றும் பாகிஸ்தானில் உள்ள 11 இராணுவ விமான தளங்களை கைப்பற்றியது. இந்தத் தாக்குதல்கள் பாகிஸ்தானை வெறும் 96 மணி நேரத்தில் மண்டியிட வைத்தன. அறிக்கைகள் மற்றும் பகுப்பாய்வுகளின்படி, இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைத் தாக்குதல் பாகிஸ்தானில் உள்ள நூர் கான் தளத்தைத் தாக்கியது. இந்தத் தளம் கிரானா மலைகளின் அடிவாரத்தில் உள்ளது. இந்தத் தாக்குதல் ஒரு முக்கியமான அணு ஆயுத சேமிப்பு வசதியை சேதப்படுத்தியது. இதன் பிறகு, பாகிஸ்தான் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கோரியது.


இந்தியாவின் வழக்கமான போர் திறனுக்கு கார்கில் ஒரு திருப்புமுனையாக இருந்தால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் தரத்தை உயர்த்தியுள்ளது. கடந்த இருபதாண்டுகளாக, இந்தியா தனது பாதுகாப்புக் கொள்கைகளை கவனமாக மாற்றியுள்ளது. இது பாகிஸ்தானுக்கும் உலகிற்கும் ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது. அதாவது, எதிர்காலத்தில் எந்தவொரு தாக்குதல்களையும் அல்லது தவறான சாகசங்களையும் இந்தியா பொறுத்துக்கொள்ளாது.


கார்கில் பாடங்கள்


கார்கில் போர் இந்தியா தற்காலிகமாகவும், பாதிக்கப்படக்கூடியதாகவும் இருந்த நேரத்தில் நடந்தது. மே 1998 இல், இந்தியா தன்னை ஒரு அணு ஆயுத நாடாக அறிவித்தது. அதன்பிறகு, இந்தியாவின் சோதனைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தானும் தனது அணு ஆயுதங்களை சோதித்தது. இதன் விளைவாக, தெற்காசியாவில் திடீரென்று இரண்டு அணு ஆயுத போட்டியாளர்கள் இருந்தனர். மேற்கத்திய நாடுகள் அணு ஆயுத சோதனைகளை நடத்தியதற்காக இந்தியாவை பொருளாதாரத் தடைகள் மூலம் அச்சுறுத்தின. அதே நேரத்தில், இந்தியா ஒரு வலுவான நிலையில் இல்லை. அதன் பொருளாதாரம் பலவீனமாக இருந்தது, மத்தியில் ஒரு கூட்டணி அரசாங்கம் இருந்தது.


1990 முதல் காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் வடகிழக்கில் தொடர்ந்த கிளர்ச்சிகள் இந்தியாவின் இராணுவத்தை வலுப்படுத்துவதற்கும், நவீனமயமாக்குவதற்கும் வழிவகுத்தது. இந்தியா பாகிஸ்தானுடன் சமரசம் செய்ய முயற்சித்த காலத்தில் கார்கில் மோதல் ஏற்பட்டது. பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிப்ரவரி 1999-ல் லாகூருக்கு பயணம் செய்தார், இது ஒரு பிரபலமான பேருந்து பயணமாக எல்லை தாண்டியது. நியூயார்க்கில் இரட்டைக் கோபுரங்கள் மீதான 9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு முந்தைய நேரமும் இதுவாகும் (செப்டம்பர் 11, 2001). மேலும், காஷ்மீரில் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு எந்த ஆதரவும் இல்லை.


எனவே, கார்கில் இந்தியாவிற்கு ஒரு கடுமையான எச்சரிக்கை மணியாக இருந்தது. இது 1971-க்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதல் போர் இது. அணு ஆயுதங்களின் நிழலில் போர் நடந்தது. அணு ஆயுதம் ஏந்திய நாடுகளுக்கு இடையே கூட, ஒரு வரையறுக்கப்பட்ட போர் இன்னும் சாத்தியம் என்பதை இது காட்டுகிறது. மோதல் அதிகரிப்பதை கட்டுக்குள் வைத்திருந்தால் இது சாத்தியமாகும். போருக்குப் பிறகு, அரசாங்கம் கார்கில் மறுஆய்வுக் குழுவை அமைத்தது. இந்தக் குழு பல முக்கியமான பரிந்துரைகளை வழங்கியது. இந்தப் பரிந்துரைகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் பல கட்டமைப்பு மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்தன.


போர் வெளிப்படுத்திய ஒரு பெரிய பலவீனம் உளவுத்துறையில் ஏற்பட்ட தோல்வியாகும். கார்கிலில் பாகிஸ்தான் படைகளின் பெரிய அளவிலான இராணுவ ஊடுருவலுக்கான சாத்தியத்தை இராணுவ மற்றும் சிவில் புலனாய்வு அமைப்புகள் இரண்டும் கருத்தில் கொள்ளவில்லை. நிகழ்நேர புலனாய்வு மற்றும் திறமையான வான்வழி கண்காணிப்பு இல்லாதது, முடிவெடுப்பதில் தாமதத்தையும் ஆரம்பகால இழப்புகளையும் ஏற்படுத்தியது. இந்தப் போர், இந்தியாவின் ஆயுதப் படைகளின் உபகரணங்கள், தளவாடங்கள் மற்றும் செயல்பாட்டு தயார்நிலை ஆகியவற்றில் கடுமையான குறைபாடுகளை வெளிப்படுத்தியது. இந்தியாவின் படைகளுக்கு உயரமான பகுதிகளில் போர் புரிவதற்கு தேவையான வசதிகள் இல்லை; அவர்களிடம் சிறப்பு உயரமான பகுதி உபகரணங்கள், போதுமான பீரங்கி ஆதரவு மற்றும் நிகழ்நேர தகவல் தொடர்பு ஆகியவை இல்லை.


கட்டமைப்பு மாற்றங்கள்


பல புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. உதாரணமாக, பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் (Defence Intelligence Agency (DIA)) 2002-ல் அமைக்கப்பட்டது. தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு (National Technical Research Organisation (NTRO)) 2004-ல் நிறுவப்பட்டது. ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (Research and Analysis Wing (RAW)), புலனாய்வுப் பணியகம் (Intelligence Bureau (IB)) மற்றும் இராணுவப் புலனாய்வு பிரிவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (National Security Council Secretariat (NSCS)) மற்றும் கூட்டுப் புலனாய்வுக் குழு (Joint Intelligence Committee (JIC)) ஆகியவற்றில் மாற்றங்களுக்கு வழிவகுத்தது. தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் (National Security Adviser (NSA)) பங்கு நிரந்தரமாக்கப்பட்டது. பிரதமர் தலைமையிலான இராஜதந்திர ரீதியில் உத்தியாக  முடிவெடுக்கும் குழுவின் ஒரு பகுதியாக NSA உள்ளது. பல நிறுவன மற்றும் கட்டமைப்பு மாற்றங்களும் செய்யப்பட்டன. இவை இந்தியாவில் உளவுத்துறை அமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.


கார்கில் போர் என்பது இராணுவம் அதன் உபகரணங்கள் மற்றும் இராஜதந்திர உத்தி இரண்டையும் நவீனமயமாக்க ஒரு முக்கியமான பாடமாக இருந்தது. போரின் போது உதவக்கூடிய நட்பு நாடுகள் மிகக் குறைவு என்பது இந்தியாவிற்கு தெளிவாகியது. இதன் காரணமாக, நவீனமயமாக்கல் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை முதன்மையான முன்னுரிமைகளாக மாறியது. இது இந்தியாவின் "குளிர் தொடக்கக் கோட்பாட்டை" (Cold Start Doctrine) உருவாக்க வழிவகுத்தது. அணுசக்திக்கான அச்சுறுத்தல் கோட்டைக் கடக்காமல் விரைவான அணிதிரட்டல் மற்றும் விரைவான, வரையறுக்கப்பட்ட தாக்குதல்களில் இந்த கோட்பாடு கவனம் செலுத்துகிறது.


மலைப் போருக்கு சிறப்பாகத் தயாராக வேண்டியதன் அவசியத்தையும் போர் வலியுறுத்தியது. இதன் விளைவாக, இந்திய இராணுவம் ஒரு சிறப்பு மலைப் படையை உருவாக்கியது. இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இடையே சிறந்த கூட்டு ஒருங்கிணைப்புக்கான அவசரத் தேவையை இது காட்டியது. ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சிறந்த செயல்பாட்டு ஒருங்கிணைப்புக்கான தேவை இருந்தது.


இந்த பாடங்களிலிருந்து சில மாற்றங்கள் வந்தன. உதாரணமாக, பாதுகாப்புப் படைத் தலைவர் (Chief of Defence Staff (CDS)) பதவி 2019-ல் உருவாக்கப்பட்டது. மேலும், ஆயுதப் படைகளுக்கான ஒருங்கிணைந்த ஒத்திகைப்புக்கான கட்டளைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.


கார்கிலில் இருந்து ஒரு முக்கிய பாடம் உபகரணங்கள் மற்றும் ஆயுத தளங்களை நவீனமயமாக்க வேண்டிய அவசியம். உள்நாட்டிலேயே வளர்க்கப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும், உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதிலும் வலுவான கவனம் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக, இந்தியா பல நவீன ஆயுதங்களைப் பெற்று பயன்படுத்தியது. இவற்றில் ரஃபேல் போர் விமானங்கள், அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள், சினூக் கனரக ஹெலிகாப்டர்கள் மற்றும் S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் அடங்கும். இந்தியா உள்நாட்டிலேயே வளர்க்கப்பட்ட பீரங்கி மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகளையும் உருவாக்கியது.


பயங்கரவாதத்திற்கு எதிரான நீண்ட போராட்டம்


வழக்கமான இராணுவத்தில் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுத்த கார்கிலைப் போலல்லாமல், பயங்கரவாதத்தை தீவிரமாக எதிர்த்துப் போராடுவதில் இந்தியா மெதுவாக இருந்தது. பல ஆண்டுகளாக, பாகிஸ்தான் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளாமல் இந்தியாவுக்கு தீங்கு விளைவித்தது. கார்கிலுக்குப் பிறகு, டிசம்பர் 24, 1999 அன்று இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC-814 கடத்தப்பட்டது ஒரு பெரிய பயங்கரவாத சம்பவமாகும். இந்த பலவீனமான தருணத்தில், அச்சமடைந்த பயங்கரவாதிகளை விடுவிக்க புது தில்லி ஒப்புக்கொண்டது.


டிசம்பர் 13, 2001 அன்று, நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதல், 'ஆபரேஷன் பராக்ரம்' (Operation Parakram) கீழ் இந்திய ஆயுதப் படைகளை ஒரு வருடமாக அணிதிரட்ட வழிவகுத்தது. ஆனால், அது பாகிஸ்தானுக்கு எந்த நேரடி தண்டனையையும் அளிக்கவில்லை. 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் (நவம்பர் 2008) - இந்தியாவின் 9/11 தருணமாக பரவலாகக் கருதப்படுகிறது, ஆனால் பாகிஸ்தானுக்கு எந்த தண்டனையும் வழங்கவில்லை.


செப்டம்பர் 18, 2016 அன்று உரி பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகுதான் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான உத்தி வடிவம் பெறத் தொடங்கியது. சர்ஜிக்கல் தாக்குதல்கள் இந்தத் தாக்குதலுக்கு ஒரு வலுவான பதிலடியாக இருந்தன. அவை தெளிவான நோக்கத்தையும் காட்டின. பிப்ரவரி 14, 2019 அன்று காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (Central Reserve Police Force) வாகனத் தொடரணியின் மீது பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மேலும் நடவடிக்கை எடுத்தது. பிப்ரவரி 26, 2019 அன்று பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை (IAF) தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் வான்வெளிக்குள் இந்திய விமானப்படை நுழைந்து தாக்குதல் நடத்தியது இதுவே முதல் முறை.


சமீபத்திய பஹல்காம் தாக்குதல் ஒரு புதிய அளவுகோலை உருவாக்கியுள்ளது. பாகிஸ்தானுக்குள் ஆழமாக உள்ள முக்கியமான பயங்கரவாத தளங்கள் மற்றும் இராணுவ சொத்துக்களை தாக்குவதன் மூலம் இந்தியா பதிலளித்தது. இந்த நடவடிக்கை இந்தியா இனி கட்டுப்பாடு மற்றும் பொறுமைக்கான கொள்கையைப் பின்பற்றாது என்பதைக் காட்டுகிறது. இனிமேல், எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தான் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும்.


கார்கில் முதல் பஹல்காம் வரை, இந்தியா பல கடினமான பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நல்ல செய்தி என்னவென்றால், இந்தியா இனி எந்தவிதத்திலும் பின்வாங்கும் மனநிலையில் இல்லை. மே 2025-ல், இந்தியாவின் பாரம்பரிய இராணுவ திறன் அதன் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது. ‘மேக் இன் இந்தியா’ முயற்சி பலனளித்து வருகிறது, இப்போது பல சிறந்த ஆயுத தளங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. பஹல்காமுக்கு பிறகு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் புதிய பொருள் கிடைத்துள்ளது. இருப்பினும், இந்திய அரசியல் மற்றும் இராணுவ தலைமை எச்சரிக்கையுடன் இருந்து, எப்போதும் முன்னணியில் இருக்க வேண்டும். இனி ஒருபோதும் மற்றொரு கார்கில் அல்லது பஹல்காம் ஏற்படக்கூடாது.


ராஜீவ் அகர்வால் புதுதில்லியில் உள்ள சிந்தன் ரிசர்ச் பவுண்டேஷனில் மூத்த ஆராய்ச்சி ஆலோசகராக உள்ளார்.



Original article:

Share: