பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனாவிலிருந்து பெரும் பலன்கள். -வி ஆனந்த நாகேஸ்வரம்

 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் திட்டம் அனைவருக்கும் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளது மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் இணைய  உதவியுள்ளது.


நிலையான வளர்ச்சிக்கு நிதி உள்ளடக்கம் மிகவும் முக்கியமானது என்பது தெளிவாகிறது. ஏனெனில், 2030ஆம் ஆண்டிற்கான 17 ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளில் (SDGs) வளர்ச்சிக்கான முக்கிய காரணியாக இதை எடுத்துக்காட்டுகின்றன. நிதி உள்ளடக்கத்தில் முதல் படி, வங்கிக் கணக்குகள் இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்குகளை வழங்குவதாகும். ஏனெனில், கணக்கு உரிமை முறையான வங்கி முறைக்கு கதவைத் திறக்கிறது.


நிதி உள்ளடக்கத்தை அடைய, மக்களுக்கு வங்கி சேவைகளை வழங்கும் வலுவான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட கொள்கைகள் அரசாங்கங்களுக்குத் தேவை. தனது முதல் சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) திட்டத்தை அறிவித்தார். இது ஆகஸ்ட் 28, 2014 அன்று நிதி உள்ளடக்கம் குறித்த தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.


இந்த திட்டத்தின் முழக்கம் "My Account, Fortune Maker" என்பதாகும். ஏழை மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களை முறையான வங்கி முறைக்கு அணுகலை வழங்குவதன் மூலமும், அவர்களை இந்தியாவின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக மாற்றுவதன் மூலமும் அவர்களை பொருளாதார நீரோட்டத்தில் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும். 


ஜன் தன் கணக்குகள் மக்கள் எளிய ஆவணங்கள் மற்றும் எளிதான KYC/e-KYC மூலம் பூஜ்ஜிய இருப்பு, பூஜ்ஜிய கட்டணமில்லாத கணக்குகளைத் திறக்க அனுமதித்தன. இந்தக் கணக்குகள் ரூபே டெபிட் கார்டுகளுடன் ₹2 லட்சம் விபத்து காப்பீடு மற்றும் ₹10,000 வரை கடன் வசதியையும் வழங்கின.


PMJDY தொடங்கப்பட்டதிலிருந்து, பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 2014 மற்றும் 2017ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியாவின் கணக்கு உரிமை 26 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளதாக எகனாமிக் & பொலிட்டிகல் வீக்லியில் 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 


இது உலகின் மிகப்பெரிய நிதி உள்ளடக்க இயக்கமான PMJDY காரணமாகும். இந்த வளர்ச்சி உலகளாவிய சராசரியை விட (6.57) கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகவும், அதே காலகட்டத்தில் மற்ற வளரும் நாடுகளை விட (7.27) மூன்று மடங்கு அதிகமாகவும் இருந்தது.


ஆகஸ்ட் 8, 2025 நிலவரப்படி, 56 கோடிக்கும் அதிகமான ஜன் தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 67 சதவீதம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வங்கிக் கிளைகளில் உள்ளன. இந்தத் திட்டம் பாலின இடைவெளியைக் குறைக்கவும் உதவியுள்ளது. 


இத்திட்டத்தில் 31 கோடிக்கும் அதிகமான கணக்குகள் 55 சதவீதம் பெண்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, சமூகப் பாதுகாப்பு சேர்க்கைகளில் ஜன் தன் கணக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY)) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY)) ஆகியவற்றின் கீழ் பதிவுசெய்யப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு PMJDY உடன் இணைக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வெளிப்படைத்தன்மை மேம்படுத்தப்பட்டது


 இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. இது பணம் செலுத்துதல்களை மேலும் அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் சேர உதவியுள்ளது. 

நேரடி நன்மை பரிமாற்றத்தை (DBT) ஆதரிப்பதன் மூலம், PMJDY வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தியுள்ளது. சமூக நலன் திட்டத்தின் விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை குறைத்துள்ளது மற்றும் அரசாங்கத் திட்டங்களில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஆதார் மற்றும் மொபைல் இணைப்பு, ஜன் தன்-ஆதார்-மொபைல் (JAM) போன்றவை இந்தியா முழுவதும் டிஜிட்டல் பரிமாற்றங்களில் முக்கிய பங்கு வகித்துள்ளன.


ஜன் தன் கணக்குகளுக்கும் ஒருங்கிணைந்த பரிமாற்றம் இடைமுகத்திற்கும் (UPI) இடையிலான இணைப்பு, முறைசாரா துறையில் உள்ள சிறு மற்றும் குறு தொழில்முனைவோருக்கு அவர்களின் வணிகத் தேவைகளுக்கு முறையான நிதி அமைப்புகளை அணுக உதவுவதன் மூலம் உதவியுள்ளது.


 சமீபத்திய NPCI தரவுகளின்படி, கிட்டத்தட்ட அனைத்து UPI பரிவர்த்தனைகளிலும் பாதியானது, உணவு மற்றும் மளிகைப் பொருட்களுக்கானவையாக உள்ளது. இந்தத் துறைகள் நுண் தொழில்முனைவோரால் வழிநடத்தப்படுவதால், நிதி உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றகள் அடிமட்ட மட்டத்தில் தினசரி வர்த்தகத்தை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதைக் காட்டுகிறது.


இதன் தாக்கம் நிதி அணுகலைத் தாண்டி பரந்த நேர்மறையான விளைவுகளை உருவாக்கியுள்ளது. 'கிராமப்புற இந்தியாவில் வங்கிச் சேவை, சேமிப்பு மற்றும் நுகர்வு சீராக்கம்' என்ற 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், வங்கிச் சேவை அணுகல், சேமிப்பு தொடர்பான சிரமங்களைக் குறைப்பதன் மூலம் மக்கள் தங்கள் செலவினங்களை சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது.  


2021ஆம் ஆண்டு SBI ஆராய்ச்சி அறிக்கை, அதிக PMJDY இருப்புக்கள் குறைந்த குற்ற விகிதங்களுடன் தொடர்புடையவை என்றும், அதிக கணக்கு வைத்திருப்பவர்களைக் கொண்ட மாநிலங்கள் மது மற்றும் புகையிலை பயன்பாட்டில் தெளிவான சரிவைக் கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. 


முன்னால் உள்ள சவால்கள்     


வங்கி சேவைகள் இப்போது கிட்டத்தட்ட அனைவருக்கும் கிடைக்கப்பெறுவதால், அடுத்த சவால் நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்துவதாகும். ரிசர்வ் வங்கியின் நிதி உள்ளடக்க குறியீடு இந்த பகுதியில் நிலையான முன்னேற்றத்தைக் காட்டுகிறது. இந்த குறியீடு நிதி உள்ளடக்கத்தை மூன்று பகுதிகளாக அளவிடுகிறது. 


அவை: அணுகல் (35%), பயன்பாடு (45%) மற்றும் தரம் (20%) ஆகும். 2021இல் தொடங்கப்பட்டதிலிருந்து, நிதி உள்ளடக்க குறியீடு  தொடர்ந்து மேம்பட்டு மார்ச் 2024இல் 67ஐ எட்டியுள்ளது. இந்த அளவில், 0 என்பது முழுமையான விலக்கு (exclusion) என்றும் 100 என்பது முழுமையான உள்ளடக்கம் (inclusion) என்றும் பொருள். இந்தியாவின் நிலையான உயர்வு, நிதி உள்ளடக்கம் நாடு முழுவதும் பரவி வலுவடைந்து வருவதைக் காட்டுகிறது.


வங்கிச் சேவை இல்லாத மக்களை நிதி அமைப்பிற்குள் கொண்டு வருவதில் பிரதமர் ஜன் தன் யோஜனாவின் வெற்றி ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வெற்றி அல்ல. இது ஆழமான நிதி உள்ளடக்கத்திற்கான தொடக்கப் புள்ளியாகும். இது வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் பகிரப்பட்ட ஆதரவை மேம்படுத்துவதன் மூலம் நீண்டகால நன்மைகளைக் கொண்டுவர முடியும்.


வி. ஆனந்த நாகேஸ்வரம் கட்டுரையாளர் மற்றும் நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆவார்.



Original article:

Share:

அமித் ஷா விதல்பாய் படேலுக்கு மரியாதையை செலுத்தினர்: இந்தியாவின் நாடாளுமன்றத்தை வடிவமைப்பதில் வல்லபாய் சகோதரரின் பங்கு. -யஷி

 பகத் சிங் மற்றும் படுகேஷ்வர் தத் ஆகியோர் மத்திய சட்டமன்றத்தில் குண்டுகளை (Central Legislative Assembly) வீசியபோது, ​​விட்டல்பாய் படேல் அதற்குத் தலைமை தாங்கினார். இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது இன்றும் பொருத்தமாக உள்ளது. 

சர்தார் வல்லபாய் படேலின் மூத்த சகோதரர் விட்டல்பாய் படேல், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நாடாளுமன்றமாக இருந்த மத்திய சட்டமன்றத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், டெல்லி சட்டமன்றம் இரண்டு நாள் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டை நடத்துகிறது.


சுதந்திரப் போராட்ட வீரராக இருந்த விதல்பாய் படேல் சபாநாயகர் பதவிக்கு வந்த முதல் இந்தியர் ஆவார்.


மத்திய சட்டமன்ற சபையின் தலைவராக விதல்பாய் படேலின் இரண்டு பதவிக்காலங்களில், நடைமுறைகள் மற்றும் விதிகளை உருவாக்கினார். அவர் அறிமுகப்படுத்திய விதிகள் மற்றும் அமைப்புகள் இன்றும் இந்திய நாடாளுமன்ற சபாநாயகர்களால் பின்பற்றப்படுகின்றன.


இந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அவர், விதல்பாய் படேல் இந்தியாவின் சட்டமன்ற மரபுகளின் அடித்தளத்தை அமைத்து, இன்றைய ஜனநாயகத்தை வலுப்படுத்தினார் என்று கூறினார்.


விதல்பாய் படேலின் குறிப்பிடத்தக்க வாழ்க்கை மற்றும் சபாநாயகர் அலுவலகத்தை வடிவமைப்பதில் அவர் ஆற்றிய பங்கு பற்றிய சுருக்கமான விவரம் இங்கே உள்ளது.

விதல்பாய் படேல்: அவரது சகோதரரைப் போல வெற்றிகரமான வழக்கறிஞர்


விதல்பாய் படேல் செப்டம்பர் 27, 1873இல் ஐந்து சகோதரர்களில் மூன்றாவதாக பிறந்தார். அவர் இங்கிலாந்தில் சட்டப் படிப்பு படித்து, பம்பாயில் வழக்கறிஞராக பணிபுரிய திரும்பினார். அவரது மிகவும் பிரபலமான சகோதரரும் அதே பாதையைப் பின்பற்றினார்.


விதல்பாய் படேல் 1912இல் பம்பாய் சட்டமன்ற குழுவிற்கும் (Bombay Legislative Council), 1918இல் ஏகாதிபத்திய சட்டமன்ற குழுவிற்கும் (Imperial Legislative Council) தேர்ந்தெடுக்கப்பட்டார். 1924இல், அவர் பம்பாய் நகரத்திலிருந்து மத்திய சட்டமன்ற சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆகஸ்ட் 22, 1925இல் அதன் முதல் இந்தியத் தலைவராக உயர்ந்தார்.


சௌரி சௌரா சம்பவத்திற்குப் பிறகு (Chauri Chaura incident) பிரிட்டிஷாருக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை (Non-Cooperation Movement) நிறுத்தும் மகாத்மா காந்தியின் முடிவை எதிர்த்த மூத்த காங்கிரஸ் தலைவர்களில் விதல்பாய் படேலும் ஒருவர் ஆவார். 


சுபாஷ் சந்திர போஸ், மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் மற்றும் பிறர் உட்பட இந்தத் தலைவர்கள் 1923இல் சுராஜ் கட்சியை (Swaraj Party) நிறுவினர். இருப்பினும், அவர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக காங்கிரஸுடன் நெருக்கமாக பணியாற்றினர்.


விதல்பாய் படேல்: மத்திய சட்டமன்ற சபை தலைவராக அவரது பங்கு


அவரது இரண்டு பதவிக்காலங்களிலும், விதல்பாய் படேல் தலைவர் பதவிக்கு (இன்றைய சபாநாயகர்) உயர்ந்த கௌரவ தரத்தை வலியுறுத்தியும் நிலைநாட்டியும் வந்தார்.


ஒரு சூழலில், வைஸ்ராய் தனது ஆண்டு உரையை வசிக்கும் வரும் போது சட்டமன்றத் தலைவர் எழுந்து நிற்க வேண்டும் என்ற மரபை விட்டல்பாய் படேல் எதிர்த்தார். சட்டமன்றத்திற்குள், குடியரசுத்தலைவரே முதன்மையான அதிகாரத்தை (paramount) கொண்டிருப்பவர் என்று விட்டல்பாய் கூறினார். எனவே, அவர் வைஸ்ராயை வரவேற்று, தனது சொந்த நாற்காலியில் அமர்ந்து, பின்னர் வைஸ்ராயை பேசும் முறையை உருவாக்கினார். அமித் ஷா இதைக் குறிப்பிட்டு, பிரிட்டிஷ் அரசாங்கம் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது என்று கூறினார்.


விதல்பாயின் நீடித்த பங்களிப்புகளில், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு சபாநாயகரின் கைகளில் இருந்தது. வார்டு மற்றும் கண்காணிப்பு  பாதுகாப்பு அமைப்பு (ward and watch system)  முறை 2024ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. பின்னர் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (Central Industrial Security Force (CISF)) அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. 


ஏப்ரல் 8, 1929 அன்று, பகத் சிங் மற்றும் படுகேஷ்வர் தத் ஆகியோர் சட்டமன்றத்தில் இரண்டு குண்டுகளையும் துண்டுப்பிரசுரங்களையும் வீசினர். இதன் பிறகு, அரசாங்கம் சட்டமன்றத்தின் பாதுகாப்பை ஏற்க விரும்பியது. ஆனால், அதை உறுதியாக எதிர்த்தார். இறுதியில், பொறுப்பு மற்ற அதிகாரிகளின் உதவியுடன் குடியரசுத்தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.


விதல்பாய் அமைத்த மற்றொரு நிறுவனம் சுதந்திரமான நாடாளுமன்ற செயலகம் (independent Parliament Secretariat) அதில் உள்ள அதிகாரிகள் பாராளுமன்றத் தலைவரைத் தவிர வேறு யாருக்கும் பதிலளிக்கக்கூடாது என்பதாகும். இது தலைவருக்கு ஆலோசனை வழங்கும் மற்றும் உதவும் ஊழியர்கள் வேறு எந்த முதலாளிக்கும் சேவை செய்யாமல், முற்றிலும் சுதந்திரமாக இருப்பதை உறுதி செய்வதற்காக இருந்தது.


1973ஆம் ஆண்டு, விதல்பாயின் நூற்றாண்டு விழாவின் போது, மக்களவை செயலகம் அவர் நினைவாக ஒரு நினைவுச் சின்னத்தை வெளியிட்டது. அப்போதைய மக்களவை சபாநாயகராக இருந்த G.S. தில்லான், படேல் எப்போதும் அடிப்படை விவகாரங்களில் கவனம் செலுத்துவார் என்று எழுதினார். ஒரு சபாநாயகருக்கு வழிகாட்ட ஒரு தன்னாட்சி முறையில் செயல்படும் சபாநாயகருக்கு ஒரு தன்னாட்சி அலுவலகம் (செயலகம்) இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார். குடியரசுத்தலைவராக  இருந்த போது அவரது முதல் பணிகளில் ஒன்று, அத்தகைய செயலகத்தை உருவாக்குவதாக  இருந்தது. அதில் முன்னேற்றம் மெதுவாக இருந்தது. ஆனால், படேல் தன்முயற்சியை ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை.


இறுதியாக, விதல்பாயின் இரண்டாவது பதவிக்காலத்தில், "செப்டம்பர் 22, 1928இல், பண்டிட் மோதிலால் நேரு தனிச் சட்டமன்றத் துறைக்கான தீர்மானத்தை முன்வைத்தார். 


அதை மற்றொரு புகழ்பெற்ற தலைவர் லாலா லஜபத்ராய் ஆதரித்தார். ஜனவரி 10, 1929இல், சில மாதங்களுக்குள் கவர்னர் ஜெனரலின் கோப்பில் தலைவரின் நடைமுறைக் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு தனித் தன்னிறைவுத் துறை உருவாக்கப்பட்டது என்று தில்லான் குறிப்பிட்டார்.


ஜெனிவாவில் விதல்பாய் படேல் மரணம், உயில் மீதான சர்ச்சை

உடல்நலக் குறைவு காரணமாக, 1933ஆம் ஆண்டு அக்டோபர் 22 அன்று ஜெனீவாவில் விட்டல்பாய் இறந்தார். இறப்பதற்கு முன்பு, அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடன் இணைந்து பணியாற்றி வந்தார். 


காந்திஜியின் வழிமுறைகள் போதாது என்றும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் மற்ற நாடுகளில் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் இருவரும் நம்பினர். தனது உயிலில், விதல்பாய் தனது பணத்தில் பெரும் பகுதியை போஸின் அரசியல் பணிக்காக விட்டுச் சென்றார். ஆனால், அவரது குடும்பத்தினர் இதை எதிர்த்தனர். பின்னர், நீதிமன்றம் அந்தப் பணத்தை அவரது குடும்பத்தினருக்கு வழங்கியது.



Original article:

Share:

இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றம் என்பது என்ன? -குஷ்பூ குமாரி, ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— இரு தலைவர்களும் திங்களன்று புதுடெல்லியில் சந்தித்தபோது, ​​இந்தியாவும் பிஜியும் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை வெளிப்படுத்தின. இதில் சுவாவில் உள்ள இந்திய உயர்மட்ட தூதரகத்தில் ஒரு பாதுகாப்பு இணைப்பாளரை அமைப்பதும் அடங்கும். அவர் மற்ற பசிபிக் தீவுகளுக்கான பாதுகாப்பு விவகாரங்களையும் கையாள்வார்.


— இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வெளியுறவு அமைச்சகம் (Ministry of External Affairs (MEA)) வெளியிட்ட கூட்டு அறிக்கையின் படி, ‘இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் இருதரப்பு உறவுகளில் வளர்ந்து வரும் வேகம்’ உள்ளது என்று தெரிவித்துள்ளது. இதில் இந்த ஆண்டு பிஜிக்கு ஒரு இந்திய கடற்படைக் கப்பல் துறைமுக வருகை தரும் திட்டமும் அடங்கும்.


— பிரதமர் மோடி பிஜி இராணுவப் படைகளுக்கு இரண்டு கடல் சார் அவசர ஊர்தியை அன்பளிப்பாக வழங்குவதாகவும், பிஜியில் ஒரு சைபர் பாதுகாப்பு பயிற்சி கூடத்தை நிறுவுவதாகவும் அறிவித்தார். மேலும் பிரதமர் ராபுகாவின் 'அமைதியின் பெருங்கடல்' (Ocean of Peace) முயற்சிக்கு ஆதரவை வெளிப்படுத்தினார்.


— தனது உரையில், பிரதமர் ராபுகா பிஜியின் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் (Exclusive Economic Zone (EEZ)) பாதுகாப்பை ஆதரிப்பதாகவும் இந்தியாவின் உறுதிமொழியை, திட்டமிடப்பட்ட கடற்படைத் துறைமுக வருகையையும் வரவேற்றார். இது கடல்சார் ஒத்துழைப்பு (cooperation) மற்றும் இணைந்து செயல்படும் (interoperability) திறனை மேம்படுத்தும்.


— இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் இருப்பின் பின்னணியில், பரந்த இந்தோ-பசிபிக் கட்டமைப்பிற்குள் பிஜி இந்தியாவிற்கு ஒரு முக்கியமான இராஜதந்திர நட்பு நாடக கருதப்படுகிறது. பிரதமர் ராபுகா பசிபிக் தீவுகளில் பெய்ஜிங் இராணுவ தளத்தை அமைப்பதை எதிர்த்து வருகிறார்.

— பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் இரு நாடுகளும் கவனம் செலுத்துவதை வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் (தெற்கு) நீனா மல்ஹோத்ரா மீண்டும் வலியுறுத்தினார்.


— இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, புது டெல்லி மற்றும் சுவா ஆகியவை ஒன்பது ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டன. அவற்றில் ஒன்று பிஜியில் ஒரு ‘உயர்-சிறப்பு  மருத்துவமனையின்’ (super-speciality hospital) கட்டுமானம், ஆணையிடுதல், செயல்பாடு மற்றும் பராமரிப்பு; மற்றும் ஜன் ஔஷதி திட்டத்தின் (Jan Aushadhi scheme) கீழ் மருந்துகள் வழங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.


உங்களுக்குத் தெரியுமா?:


— பசிபிக் தீவு நாடுகள் (Pacific Island Countries (PICs)) என்பது தென்மேற்கு பசிபிக் பகுதியில் பரவி இருக்கும் 14 தீவு நாடுகளின் குழுவாகும். அதில் குக் தீவுகள், பிஜி, கிரிபாதி, மார்ஷல் தீவுகள், மைக்ரோனீசியா, நவுரு, நியு, சமோவா, சோலமன் தீவுகள், பலாவ், பாப்புவா நியூ கினியா, டோங்கா, துவாலு மற்றும் வனுவாட்டு போன்ற தீவுகள் அடங்கும். இந்த தீவுகள் அனைத்தும் இராஜதந்திர ரீதியாக முக்கியமான கடல்சார் வர்த்தக வழித்தடங்களின் சந்திப்பு புள்ளிகளில் அமைந்துள்ளன.


இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றம்: இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றம் (Forum for India-Pacific Islands Cooperation (FIPIC)) என்பது இந்தியாவும் தெற்கு பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் கிழக்கில் அமைந்துள்ள 14 தீவு நாடுகளும் சேர்ந்த குழுவாகும். 


— இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றம்: இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றம் (FIPIC) என்பது இந்தியாவும் தெற்கு பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் கிழக்கில் அமைந்துள்ள 14 தீவு நாடுகளும் சேர்ந்த குழுவாகும்.


— 14 பசிபிக் தீவு நாடுகளில், பிஜி மற்றும் பாப்புவா நியூ கினியா (Papua New Guinea (PNG)) ஆகியவை அதிக அளவு  மக்கள்தொகையும் அதிக முக்கியத்துவமும் கொண்டவையாகும். பசிபிக் தீவு நாடுகளில் பிஜி மற்றும் பப்புவா நியூ கினியாவுடன் (PNG) இந்தியா முக்கியமாக தொடர்பு கொள்கிறது. 


அதிக இடம் பெயர்ந்தோர் இருப்பதால், 2009ஆம் ஆண்டு மதிப்பீடுகள்  பிஜியின் 849,000 மக்கள்தொகையில் 37% இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருந்தனர். மேலும், 3,000 இந்தியர்கள் பாப்புவா நியூ கினியாவில் வாழ்கின்றனர்.


— பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றங்களுக்கான கிழக்கு நோக்கிய கொள்கையின் கீழ் தொடங்கப்பட்ட ஒரு முயற்சி இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றம் (Forum for India-Pacific Islands Cooperation (FIPIC)) ஆகும். பிரதமர் மோடி நவம்பர் 19, 2014 அன்று பிஜிக்கு தனது வருகையின் போது சுவாவில் முதல் FIPIC உச்சிமாநாட்டை நடத்தினார். 


இதில் அனைத்து 14 பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றங்களும் பங்கேற்றன. பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றங்கள் என்பது ஒரு கடலோர நாடு பெருங்கடலில் உயிருள்ள மற்றும் உயிரற்ற வளங்கள் போன்ற வளங்களைப் பயன்படுத்துவதில் சிறப்பு உரிமைகளைக் கொண்ட கடலின் ஒரு பகுதியாகும். இந்த மண்டலம் பொதுவாக நாட்டின் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்கள் (சுமார் 370 கிமீ) வரை நீண்டுள்ளது.



Original article:

Share:

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி… -ரோஷ்னி யாதவ்

 சமீபத்தில், பிரதமர் மோடியின் பட்டம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம், ஒரு நபரின் கல்வித் தகுதிகள் தொடர்பான தகவல்கள் அதாவது பட்டங்கள் மற்றும் மதிப்பெண்கள் உட்பட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விதிகளின் கீழ் ‘தனிப்பட்ட தகவல்’ (personal information) எல்லைக்குள் வருகிறது என்று தீர்ப்பளித்தது. தகவல் அறியும் உரிமை சட்டம் (Right to Information Act (RTI)) என்றால் என்ன? இந்த சட்டத்தின் கீழ் எந்த பொது அதிகாரிகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்?


தற்போதைய செய்தி?


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை வெளியிடுமாறு டெல்லி பல்கலைக்கழகத்திற்கு 2016ஆம் ஆண்டு உத்தரவிட்ட மத்திய தகவல் ஆணையத்தின் (Central Information Commission (CIC)) உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது.


ஒரு மாணவருக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையே "நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் சிறப்பு உறவு" இருப்பதாக நீதிமன்றம் கூறியது, இது இயல்பிலேயே நம்பிக்கைக்குரியது. மேலும், பட்டங்கள் மற்றும் மதிப்பெண்கள் போன்ற ஒரு நபரின் கல்வித் தகுதிகள் பற்றிய விவரங்கள் RTI சட்டத்தின் கீழ் "தனிப்பட்ட தகவல்" என்று கருதப்படுகின்றன என்றும் அது கூறியது. இந்த சூழலில், தற்போது 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள RTI பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.

முக்கிய அம்சங்கள்:


1. தகவல் அறியும் உரிமை என்பது அரசியலமைப்பின் பிரிவு 19(1)-இன் கீழ் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாகும். பிரிவு 19-(1) ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு மற்றும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் உண்டு என்று கூறுகிறது.


2. 1976ஆம் ஆண்டு, ராஜ் நரேன் vs உத்திரபிரதேச மாநிலம் (Raj Narain vs State of UP) வழக்கில் உச்ச நீதிமன்றம், மக்கள் தங்கள் கருத்துக்களைப் பேசவோ அல்லது வெளிப்படுத்தவோ அறிவு பெற்றிருக்க வேண்டும் என்று கூறியது. இது போன்ற காரணிகளுக்காக தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 19-இன் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.


தகவல் அறியும் உரிமை சட்டம், 2005


3. மக்கள் தகவல்களைப் பெற உதவும் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ஆம் ஆண்டு  அக்டோபர் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வந்தது. தகவல் அறியும் உரிமை சட்ட மசோதா 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், 2005ஆம் ஆண்டு மே 11, 2005 அன்று மக்களவையிலும், அதற்கு அடுத்த நாள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

4. குறிப்பிடத்தக்க வகையில், இந்த சட்டம் முதலில் 2002ஆம் ஆண்டில் ஒன்றிய அரசால் தகவல் சுதந்திர (Freedom of Information (FOI)) சட்டமாக கொண்டு வரப்பட்டது. இருப்பினும், அரசு அதற்கான விதிகளை வகுக்கவில்லை. அதனால், அந்த சட்டம் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பின்னர், தகவல் அறியும் உரிமை சட்டத்தை இயற்ற ஒரு மசோதா தயார் செய்யப்பட்டது. அது இறுதியில் அக்டோபர் 12, 2005 அன்று நடைமுறைக்கு வந்தது.


5. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இயற்றியபோது, ​​அத்தகைய சட்டத்தைக் கொண்ட சில நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியது. 1766ஆம் ஆண்டு ஸ்வீடனில் முதலில் அமல்படுத்தப்பட்டாலும், 1966ஆம் ஆண்டு அமெரிக்கா இது போன்ற சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. 


அதே நேரத்தில் இந்தியாவைப் போலவே இங்கிலாந்தும் 2005ஆம் ஆண்டு இதற்கான சட்டத்தை இயற்றியது. அதன் பின்னர், பல நாடுகள் இதைப் பின்பற்றியுள்ளன. ஏறக்குறைய 120 நாடுகள் இப்போது இதே போன்ற சட்டத்தை இயற்றியுள்ளதாக பெருமையாக பேசுகின்றன.


6. தகவல் அறியும் உரிமை சட்டம் சாதாரண குடிமக்களுக்கு அரசு அமைப்புகளிடமிருந்து தகவல் கேட்கும் உரிமையை வழங்கியது. அதிகாரிகளை அவர்களின் செயல்கள் மற்றும் முடிவுகளுக்கு பொறுப்பேற்க வைத்தது. இதன் விளைவாக, தகவல் அறியும் உரிமை சட்டம், குடிமக்கள் அதிகாரமளிப்புக்கான கருவியாகவும், ஜனநாயக பங்கேற்பை ஊக்குவிப்பதாகவும், பொது அதிகாரிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை  மேம்படுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது.


மத்திய தகவல் ஆணையம் (Central Information Commission )


7. 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம், பொது அதிகாரிகளுக்கு எதிரான மேல்முறையீடுகள் மற்றும் புகார்களைக் கையாள மத்திய தகவல் ஆணையம் (Central Information Commission) மற்றும் மாநில தகவல் ஆணையங்களை (State Information Commissions) அமைத்தது.


8. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12, மத்திய தகவல் ஆணையத்தில் ஒரு தலைமை தகவல் ஆணையர் (Chief Information Commissioner (CIC)) மற்றும் தேவைப்பட்டால் 10-க்கும் மேற்பட்ட தகவல் ஆணையர்கள் வரை இடம் பெற்றிருக்கலாம் என்று கூறுகிறது.


9. 2019ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்திருத்தங்கள் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களின் (Information Commissioners (ICs)) நிபந்தனைகள், பணிக்காலம் மற்றும் ஊதியங்களை மாற்றியது. உண்மையான தகவல் அறியும் உரிமைச் சட்டம், தலைமைத் தகவல் ஆணையர் (CIC) மற்றும் தகவல் ஆணையர்களுக்கு (ICs) இந்தியத் தேர்தல் ஆணையத்தில் உள்ளவர்களுக்கு இணையான அங்கீகாரத்தை வழங்கியது. தேர்தல் ஆணையர்களைப் போலவே, அவர்களுக்கும் 5 ஆண்டு பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்டது. மேலும், குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் மட்டுமே அவர்களை நீக்க முடியும்.


10. 2019ஆம் ஆண்டு திருத்தம் தேர்தல் ஆணையத்துடன் சமத்துவத்தை நீக்கி, தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களின் பணிக்காலம், ஊதியங்கள் மற்றும் நியமன நிபந்தனைகள் மீது அரசுக்கு கட்டுப்பாட்டை வழங்கியது.


11. தலைமை தகவல் ஆணையத்தின் அதிகார எல்லை அனைத்து மத்திய பொது அதிகாரிகளையும் உள்ளடக்கியது. 2005ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவுகள் 18, 19, 20 மற்றும் 25இல் குறிப்பிடப்பட்ட சில அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை ஆணையம் கொண்டுள்ளது.


12. மத்திய தகவல் ஆணையத்தின் (Central Information Commission) அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் பொதுவாக தகவல் வழங்குவதற்கான இரண்டாம் மேல்முறையீட்டில் தீர்ப்பு வழங்குதல்; பதிவு பராமரிப்பு, தன்னிச்சையான வெளிப்படுத்தல்களுக்கான உத்தரவுகள், தகவல் அறியும் உரிமை தாக்கல் செய்ய இயலாமை குறித்த புகாரை பெறுதல் மற்றும் விசாரணை செய்தல் போன்றவைகளை கொண்டுள்ளது. 


மேலும், அபராதம் விதித்தல் மற்றும் ஆண்டு அறிக்கை தயாரித்தல் உட்பட கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது. ஆணையத்தின் முடிவுகள் இறுதியானவை, மேலும் அவை அனைவராலும் பின்பற்றப்பட வேண்டும்.

13. குறிப்பிடத்தக்க வகையில், மத்திய தகவல் ஆணையத்திற்கு மாநில தகவல் ஆணையத்தின் மீது அதிகார வரம்பு இல்லை. மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய ஆணையத்தில் புகார் அல்லது மேல்முறையீடு தாக்கல் செய்ய முடியாது.


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறக்கூடிய தகவல் வகைகள்


14. சட்டத்தின் பிரிவு 2 (f)-இன் கீழ் பெறக்கூடிய தகவல் வகை, பதிவுகள், ஆவணங்கள், குறிப்புகள், மின்னஞ்சல்கள், கருத்துகள், ஆலோசனைகள், செய்திக்குறிப்புகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், பதிவு புத்தகங்கள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், ஆவணங்கள், மாதிரிகள், எந்தவொரு மின்னணு வடிவத்திலும் வைத்திருக்கும் தரவு போன்ற பல வகையான தகவல்களை இந்திய குடிமகன் அனைவரும் கேட்கலாம் என்று கூறுகிறது. ஒரு பொது அதிகாரசபை சட்டத்தின் கீழ் அதை அணுக உரிமை இருந்தால், தனியார் குழுக்கள் பற்றிய தகவல்களும் இதில் அடங்கும்.


தகவல் அறியும் உரிமையின் கீழ் தகவல் வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொது அதிகாரிகள்


15. சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்ட புலனாய்வு (Intelligence) மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் (security organizations) சட்டத்தின் கீழ் தகவல் வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கோரப்பட்ட தகவல் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பானதாக இருந்தால் இந்த விலக்கு பொருந்தாது.


தனியுரிமைக்கான உரிமை (Right to Privacy)


1. ஆகஸ்ட், 2017இல், கே. புட்டஸ்வாமி vs இந்திய ஒன்றியம் (Supreme Court of India in K. Puttaswamy vs Union of India) வழக்கில் இந்திய உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு ‘தனியுரிமைக்கான உரிமை (right to privacy) பிரிவு 21-ன் கீழ் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தின் உரிமையின் உள்ளார்ந்த பகுதியாகவும் மற்றும் அரசியலமைப்பின் பகுதி IIIஇல் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரங்களின் ஒரு பகுதியாகவும் பாதுகாக்கப்படுகிறது’ என்று தீர்ப்பளித்தது.


2. ஆதார் திட்டம் சட்டப்பூர்வமானதா என்று நீதிபதி புட்டசாமி கேள்வி எழுப்பினார். இதன் காரணமாக, அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் தனியுரிமைக்கான உரிமை வாழ்க்கை உரிமையின் அடிப்படை பகுதியாகும் (right to life) என்று உச்ச நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக கூறியது.



Original article:

Share:

பருத்தி மீதான இறக்குமதி வரி ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? -M. சௌந்தரிய பிரீதா

 இந்த வரி விதிப்பு (levy) முதலில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? நாட்டில் பருத்தி உற்பத்தி குறைந்து வருகிறதா?


தற்போதைய செய்தி: பருத்தி (Cotton) என்பது நெசவுத் தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாகும். இது இந்தியாவில் ஏறக்குறைய 60 லட்சம் உழவர்களால் பயிரிடப்படுகிறது. உற்பத்தி குறைவின் காரணமாக, ஒன்றிய அரசு  2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்திய 11% இறக்குமதி வரியை திரும்ப பெற்றுள்ளது. எனினும், கடந்த ஆண்டு வரி இருந்தபோதும் பருத்தி இறக்குமதியில் அதிகரிப்பு காணப்பட்டது. ஆகஸ்ட் 18 அன்று அரசு, தற்போதைய பருத்தி பருவம் முடியும் (செப்டம்பர் 30) வரை வரியை திரும்பப் பெறுவதாக அரசாங்கம் கூறியது.


வரி ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கையில் இறக்குமதி வரி (import duty) அறிவிக்கப்பட்டது. அப்போது நாடு ஆண்டுக்கு 350 லட்சம் பருத்தி மூட்டைகள்  (bales) பருத்தி உற்பத்தி செய்து கொண்டிருந்தது. தேவை 335 லட்சம் பருத்தி மூட்டைகளாக  இருந்தது. நாடு பருத்தியை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் நேரத்திலும் இறக்குமதிகளும் இருந்தன. இந்த வரி பருத்தி உழவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் விதிக்கப்பட்டது.


நெசவுத் தொழிலின் மூலப்பொருள் (பருத்தி) பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையாக, அரசு எல்லா வகையான பருத்தியையும் ஏப்ரல் 14, 2022ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 30, 2022ஆம் ஆண்டு வரை இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளித்தது. பின்னர், இந்த விலக்கை அக்டோபர் 31, 2022 வரை நீட்டித்தது. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முயற்சியின் (Global Trade Research Initiative) படி, பருத்தி இறக்குமதி 107.4% அதிகரித்து. 2023-2024நிதியாண்டில் $579.2 மில்லியன் இருந்த நிலையில் 2024-2025 நிதியாண்டில் $1.20 பில்லியன் ஆக உயர்ந்தது.


தற்போதைய நிலைமை என்ன?


ஒட்டுமொத்த உள்நாட்டு பருத்தி உற்பத்தி 294 லட்சம் பருத்தி மூட்டைகளாக குறைந்துள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் மிகக் குறைவானது. தேவை 318 லட்சம் பருத்தி மூட்டைகளாக உள்ளது. 2024-2025 பருத்தி பருவத்தில் (அக்டோபர் முதல் செப்டம்பர் வரை) பருத்தி உற்பத்தி கடந்த பருத்தி பருவத்தை விட ஏறக்குறைய 20 லட்சம் பருத்தி மூட்டைகள் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதிகளும் ஏறக்குறைய 40 லட்சம் பருத்தி மூட்டைகளுடன் அதிகபட்சமாக இருக்கக் கூடும். 


முக்கிய விநியோகம் ஆஸ்திரேலியா ($258.2 மில்லியன்), அமெரிக்கா ($234.1 மில்லியன்), பிரேசில் ($180.8 மில்லியன்) மற்றும் எகிப்து ($116.3 மில்லியன்) ஆகிய நாடுகளிலிருந்து வருகிறது. இந்திய பருத்தி கழகம் (Cotton Corporation of India) நடப்பு பருத்தி பருவத்தில் உழவர்களிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் (Minimum Support Price (MSP)) ஏறக்குறைய 100 லட்சம் பருத்தியை ரூ.37,500 கோடி செலவில் வாங்கியுள்ளது. 


மேலும், சந்தையில் 73 லட்சம் பருத்தி மூட்டைகளை விற்றுள்ளது. அக்டோபர் 1 அன்று தொடங்கும் 2025-2026 பருத்தி பருவத்திற்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை  8% அதிகரித்துள்ளது. வட மாநிலங்களின் உழவர்கள் அக்டோபரில் பருத்தியை சந்தைக்கு கொண்டு வரத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களின் உழவர்கள் தீபாவளிக்குப் பிறகு பருத்தியை வழங்கத் தொடங்குவார்கள்.


வரி நீக்கம் எதைக் குறிக்கிறது?


இறக்குமதி செய்யப்பட்ட பருத்தியில் சுமார் இரண்டு லட்சம் பருத்தி மூட்டைகள் (bales) மட்டுமே செப்டம்பர் 30-க்கு முன்பு வந்து சேரும் என்பதால், ஏற்கனவே வரவிருக்கும் இறக்குமதி செய்யப்பட்ட பருத்தி, வரி இல்லாமல் இந்தியாவிற்கு வரும். பல உலகளாவிய தர அடையாளங்கள் (brands) பருத்தி இறக்குமதியாளர்கள் மற்றும் ஆடை தயாரிப்பாளர்கள் சில அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளர்களிடமிருந்து மட்டுமே பருத்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றன. 


முன்னதாக, சர்வதேச சந்தையில் ஆடை ஏற்றுமதியாளர்கள் போட்டியிடும்போது, ​​வரி காரணமாக மூலப்பொருட்களின் விலை அதிகமாக இருந்தது. இதனால் அவர்களுக்கு வரி விதிப்பு இல்லாமல் அவர்களுக்கு சமமான வாய்ப்பு கிடைக்கும்.


இருப்பினும், பருத்தி உழவர்கள் இந்த பார்வைகளுடன் முழுமையாக உடன்படவில்லை. தமிழ்நாட்டின் திருவாரூரில் பருத்தி பயிரிடும் ரவிசந்திரன் கூறுகையில், வரி நீக்கம் உழவர்களை பருத்தி பயிரிடுவதிலிருந்து ஊக்கமிழக்கச் செய்கிறது என்றார். அரசிடமிருந்து எந்த ஆதரவும் பெறாத பருத்தி உழவர்களுக்கு இறக்குமதி வரி நீக்கம் உதவாது என்று ஒன்றுபட்ட உழவர்கள் முன்னணியின் (Samyukta Kisan Morcha) தென்னிந்திய அமைப்பாளர் குருபூர் சாந்தகுமார் கூறினார்.


நீண்டகால தீர்வு என்ன?


இந்தத் துறை அரசாங்கத்திடமிருந்து இரண்டு முக்கிய ஆதரவு நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறது. முதலாவதாக, மூலப்பொருள் கொள்முதலைத் திட்டமிடுவதற்கு உதவும் ஒரு நிலையான கொள்கையை அது விரும்புகிறது. இரண்டாவதாக, பருவம் இல்லாத காலத்தில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வரியை நிறுத்தி வைக்க வேண்டும். ஏனெனில், பெரும்பாலான உழவர்கள் அந்த நேரத்தில் தங்கள் விளைபொருட்களை விற்றுவிடுவார்கள்.


நெசவு ஆலைகள் உச்ச பருவத்தில் பருத்தி வாங்க எடுக்கும் கடன்களுக்கு 5% வட்டி தள்ளுபடியை எதிர் பார்க்கின்றனர். ஆலைகள், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன (MSME)) அலகுகள், போதுமான நிதியைப் பெற்றிருந்தால், தேவையான பருத்தியை அவர்களால் ஈடுகட்ட முடியும். அதனால் அரசாங்கம் குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) நடவடிக்கைகளுக்கு தனியாக செலவிட வேண்டியதில்லை என்று தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.



Original article:

Share:

இந்திய தேர்தல் ஆணையமானது, அரசியலமைப்பு மற்றும் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது -பி.டி.டி. ஆச்சாரி

 வாக்காளர் பட்டியலில் கடுமையான முறைகேடுகளை முன்னிலைப்படுத்தும் புகாரை கவனமாக ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு கடமை உள்ளது.


சமீபத்திய வாரங்களில் நடைபெற்ற இரண்டு முக்கிய செய்தியாளர் சந்திப்புகள் தேசிய கவனத்தை ஈர்த்துள்ளன. முதலாவது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் (LoP) ராகுல் காந்தி, ஆகஸ்ட் 7, 2025 அன்று புது தில்லியில் உரையாற்றியது. அங்கு 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பெங்களூர் மத்திய நாடாளுமன்றத் தொகுதியின் மகாதேவபுரா சட்டமன்றப் பிரிவில் வாக்காளர் பட்டியலைக் கையாளும் குறிப்பிட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டினார். அதில் ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும், ‘தந்தையின் பெயர்’ அதில் ‘xyz’ என்றும், வீட்டு எண் ‘0’ என்றும் கொடுக்கப்பட்டு உள்ளது. 


இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) ஆவணங்களை ஆறு மாதங்களுக்கும் மேலாக, தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு அவரது குழுவினரால் இந்த உண்மைகள் கண்டறியப்பட்டன என்று ராகுல் காந்தி தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்த வெளிப்பாடுகள் இந்திய குடிமக்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன. அவை உண்மையாக இருந்தால், முழு தேர்தல் முறையும் நம்பகத்தன்மையை இழந்துவிடும். மேலும்,  இந்தியாவின் ஜனநாயகம் இனி உண்மையானதாக இருக்காது.


ECI இன் நிலைப்பாடு அசாதாரணமானது


இரண்டாவது செய்தியாளர் சந்திப்பு, புது தில்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் அவரது மற்ற உறுப்பினர்களால் ஆகஸ்ட் 17, 2025 அன்று நிகழ்த்தப்பட்டது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் (LoP) எழுப்பிய பிரச்சினைகளை தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தலைமைத் தேர்தல் ஆணையரின் சந்திப்பில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் புகார் குறித்து பல அடிப்படை கேள்விகள் புறக்கணிக்கப்பட்டதால், அவை குடிமக்களுக்கு தெளிவை அளிக்கவில்லை. 


தேர்தல் ஆணையமானது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்ததுடன் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்தது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர்  தனது கூற்றுக்களின் விவரங்களை ஒரு பிரமாணப் பத்திரத்துடன் வழங்க வேண்டும் அல்லது தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இது, தேர்தல் ஆணையத்தின் இந்த அசாதாரண நிலைப்பாடாகப் பார்க்கப்பட்டது. அதுவும் அரசியல் குழப்பத்தில் தன்னை இணைந்திருப்பதைக் காட்டுகிறது. இது நீண்ட காலமாக அரசியல் கட்சிகளை தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தும் என்பதைக் காட்டுகிறது.


இந்திய தேர்தல் ஆணையம் என்பது ஒரு உயர் அரசியலமைப்பு அமைப்பாகும். இது வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதை மேற்பார்வையிடுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் மற்றும் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்குத் தேர்தல்களை நடத்துவதற்கும் இது பொறுப்பாகும். அரசியலமைப்பின் பிரிவு 324 இந்த பணியை நிறைவேற்றுவதற்கு ECI க்கு மகத்தான அதிகாரங்களை வழங்குகிறது. 


அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியான சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு இது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம், சட்டப்பிரிவு 324 என்பது தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக ECI பெறக்கூடிய அதிகாரங்களின் முக்கிய மையமாகும். இருப்பினும், அது அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.


எதிர்க்கட்சித் தலைவருக்கு (LoP) இறுதி எச்சரிக்கை விடுப்பது பிரிவு 324 அல்லது தேர்தல் சட்டங்களின் கீழ் அனுமதிக்கப்படவில்லை. அரசியல் வாதங்களில் பங்கேற்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) கடமையும் அல்ல.


பெங்களூருவில் நடந்த சம்பவம், வாக்காளர் பட்டியல்களில் மோசடிகள் நடந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. 1950ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act) உருவாக்கிய நடைமுறைச் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ராகுல் காந்தியின் வெளிப்பாடுகள் பொருந்தவில்லை என்பது உண்மைதான்.

 இந்தச் சட்டமும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளும், பல அடுக்கு ஆய்வு மற்றும் பொது ஆய்வு மற்றும் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான நியாயமான நடைமுறைக் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. மேலும், தேர்தல் சட்டங்கள் தேர்தலைப் பற்றி ஒரு இறுதி முடிவு இருப்பதாகக் கருதுகின்றன. எனவே, ராகுல் காந்தி எழுப்பிய பிரச்சினைகளை இந்தச் சட்டங்களால் கையாள முடியாது.


இருப்பினும், இந்த பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பதுதான் கேள்வி. அர்த்தமற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் சட்டப் பிரமாண வாக்குமூலங்களுக்கான கோரிக்கை மூலம் அதை எதிர்ப்பதற்கான முயற்சிகள் பயனற்றவை. சட்டப்பிரிவு 324 தேர்தல் ஆணையத்திற்கு மகத்தான அதிகாரங்களை வழங்குகிறது. இதனால், அது பட்டியல்களைத் தயாரித்து நியாயமான முறையில் தேர்தலை நடத்தும். 


சட்டப்பிரிவு 324, அந்த அதிகாரத்தை நியாயமாகப் பயன்படுத்துவதற்கான பொறுப்புகள் மற்றும் கடமைகளைக் குறிக்கிறது. எனவே, ஒரு குடிமகன், வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் கடுமையான முறைகேடுகளை முன்னிலைப்படுத்தி புகார் அல்லது வெளிப்படுத்தினால், அதை கவனமாக ஆராய்ந்து, இந்த தேர்தல் அமைப்பில் உள்ள தவறுகளை சரிசெய்வது தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு கடமையாகும். 


80 வாக்காளர்கள் ஒரே முகவரியில் எப்படிப் பதிவு செய்ய முடியும்? இருப்பினும், அவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்ததால் அவர்கள் வாக்களித்தனர். இது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. ஒருவர் வழக்கமாக அந்தப் பகுதியில் வசிப்பவராக இருந்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருக்க முடியும். இதன் பொருள் அந்த இடத்தில் நிரந்தரமாக தங்குவது என்பதாகும். இந்த 80 பேரும் நிரந்தரமாக ஒரே முகவரியில் வசிக்கிறார்களா?


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கு ஒரு வழியினை வழங்குகிறது. இந்த பட்டியல்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் முன் அல்லது ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில் திருத்தப்படலாம் அல்லது ஒரு சில தொகுதிகள் அல்லது அதன் ஒரு பகுதிக்கான சிறப்புத் திருத்தம் ஆகியவற்றுக்கான காரணங்களை ECI பதிவு செய்ய வேண்டும் (மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 21). வாக்காளர்கள் பதிவு விதிகள், 1960 இன் விதி 25, ஆண்டுதோறும் திருத்தங்கள் இரண்டு வகைகளாக இருக்கலாம்: அவை சாதரண திருத்தம் அல்லது தீவிர திருத்தம் என்பதாகும். சில நேரங்களில் அவை பகுதி சுருக்கமாகவும் பகுதி தீவிரமாகவும் இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.


பீகாரின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR)


இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்தில் (SIR) இந்திய தேர்தல் ஆணையம் தற்போது ஈடுபட்டுள்ளது. உண்மையில், சட்டமோ அல்லது விதிகளோ "சிறப்பு தீவிர திருத்தம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. "தீவிர திருத்தம்" மற்றும் "சிறப்பு திருத்தம்" என்பதற்கு தனித்தனி விதிகள் உள்ளன.


எழுத்தாளரின் கூற்றுப்படி, SIR சில சட்ட சிக்கல்களைக் கொண்டுள்ளது. சில சிறப்புத் திருத்தம் எந்த நேரத்திலும் செய்யப்படலாம் அதேசமயம், தகுதித் தேதியான ஜனவரியில் மட்டுமே தீவிரத் திருத்தம் செய்ய முடியும். ஆனால், இது சில தொகுதிகள் அல்லது அதன் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.


பீகார் விஷயத்தில், SIR ஜூலை 1 ஐ தகுதித் தேதியாகப் பயன்படுத்துகிறது. இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 14(b) க்கு எதிரானது. ஜனவரி 1 தகுதித் தேதியாக இருக்கும் என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது. தகுதித் தேதி என்பது வாக்காளர் பட்டியலைத் திருத்துதல் அல்லது தயாரித்தல் தொடங்கும் நாளாகும்.


பீகாரில் மேலும் 7 லட்சம் பெண் வாக்காளர்கள் நீக்கப்பட்டதன் மர்மம்


சிறப்பு தீவிர திருத்தம் (SIR) விளைவாக பீகாரில் நிலவும் குழப்பமான சூழல்கள் குறித்து பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு மாதத்திற்குள் தீவிர திருத்தம் செய்வது முரண்பாடானது. 1960ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் விதி 25(2) தீவிர திருத்தம் என்றால் பட்டியலைப் புதிதாகத் தயாரிக்க வேண்டும் என்றும் விதி 8, வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புக்கும் சென்று பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறது. 


பதிவு அலுவலர்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு குடியிருப்புக்கும் ஒரு மாத காலத்திற்குள் சென்று கணக்கெடுப்பு நடைமுறைகளை நடைமுறைக்கு ஏற்ப முடிக்க முடியுமா என்பது சந்தேகேமானதாக உள்ளது. இது மாநிலத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கணக்கெடுப்பு பணி முடிந்துவிட்டதாகவும், 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறுகிறது. தேர்தல் ஆணையத்தின் விருப்பத்திற்கு எதிராக, உச்ச நீதிமன்றம், இடைக்கால உத்தரவில், பெயர்கள் மற்றும் அவை நீக்கப்பட்டதற்கான காரணங்களை வெளியிடுமாறு ECI க்கு உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அனைவரும் வரவேற்றுள்ளனர்.


பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் (SIR) பிறகு வாக்காளர் நீக்கம் : பல சிக்கலான கேள்விகள் எழுகின்றன


தற்போதைய வார்த்தைகள்

இந்திய தேர்தல் ஆணையம் ஒரு சக்திவாய்ந்த அரசியலமைப்பு அதிகாரம் கொண்டதாகும். ஆனால், அதன் அதிகாரங்கள் வரம்பற்றவை அல்ல. அரசியலமைப்பு எந்தவொரு நபருக்கோ அல்லது அதிகாரத்திற்கோ முழுமையான அதிகாரங்களை வழங்கவில்லை. இது ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய அதிகாரங்களை உருவாக்கியது.


”A.C. ஜோஸ் vs சிவன் பிள்ளை மற்றும் பிறர்-1984” (A.C. Jose vs Sivan Pillai and Others) வழக்கில், நீதிபதி எஸ். முர்தாசா ஃபசல் அலி குறிப்பிட்டதாவது, தேர்தல் ஆணையத்திற்கு வரம்பற்ற மற்றும் தன்னிச்சையான அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அதன் உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தைப் பின்பற்றி, அவர்கள் அரசியல் சிக்கல்களையோ அல்லது அரசியலமைப்பு நெருக்கடியையோ ஏற்படுத்தக்கூடிய அசாதாரண வழிமுறைகளை வெளியிடக்கூடும் என்று கூறினார். இது அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், இது ஒரு அரசியலமைப்பு நெருக்கடியைக் கூட ஏற்படுத்தக்கூடும். இத்தகைய தவறான பயன்பாடு தேர்தல் செயல்முறையின் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் சேதப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.


பி.டி.டி. ஆச்சாரி மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார்.



Original article:

Share:

கற்பனையான நீதி : சமூக ஊடகங்களின் செயல்பாடு குறித்து . . .

 நீதிமன்றங்கள் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். அவை, அரசின் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை அனுமதிக்கக்கூடாது.


சமூக ஊடகங்களில் பேச்சை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கருத்துச் சுதந்திரத்தின் மீதான சட்ட வரம்புகளை பயன்படுத்தி நிர்வாகத்திற்கு அதிகாரம் அளிக்க முயல்கிறது. மாற்றுத்திற்னாளிகளுக்கு எதிராக இணையத்தில் வெளியிடப்பட்ட அவமதிப்பு கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக, நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியது. இந்த அறிவுறுத்தல்கள் தொடர்ந்து கவலையளிக்கும் போக்கைக் கொண்டுள்ளன. 


அரசியலமைப்பு உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்த நீதித்துறை அரசை ஊக்குவிக்கிறது. விரும்பத்தகாத நகைச்சுவை தொந்தரவாக இருக்கலாம். அதை, நீதிமன்றங்கள் மூலமாகவும், நிர்வாக ஆட்சிமுறை மூலமாகவும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையாக கருதுவது, ஒரு தவறான நீதி உணர்வை உருவாக்குகிறது. பேச்சுக்கு காவல்துறை அதிகாரத்தை விரிவுபடுத்துவது எப்போதும் தீங்கு விளைவிக்கும். 


அரசியல் குழுக்கள், தங்களுக்குப் பிடிக்காத கலை மற்றும் அரசியல் பேச்சை அடக்குவதற்கு அரசின் அமைப்புகள் மூலம் கண்காணிக்க தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்துகின்றனர். சாதாரண குடிமக்கள் சுதந்திரமாகப் பேசுவதற்கு பயப்படுகிறார்கள். இந்த கருத்து தணிக்கை செய்யப்படும்போது, ​​முக்கியமான உண்மைகளும் கருத்துக்களும் இழக்கப்படுகின்றன. 


திறந்த விவாதம் இல்லாமல் ஒரு ஜனநாயகம் சிறப்பாக செயல்பட முடியாது. மக்கள் தங்கள் அடிப்படை சுதந்திரங்கள் மீதான தொடர்ச்சியான கட்டுப்பாடுகளின் கீழ் வாழக்கூடாது. திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இந்தியாவை சமூக ரீதியாக முன்னேற உதவும் விஷயங்களை ஆராய்வதில் இருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பத்திரிகையாளர்கள் தங்கள் தொழில்சார் கடமைகளை நிறைவேற்ற முதல் தகவல் அறிக்கைகளை (first information reports) கையாளுகின்றனர்.


சமீபத்திய ஆண்டுகளில், ஒன்றிய அரசாங்கம், முறைப்படி மற்றும் முறைசாரா முறையில், பிரச்சனைக்குரிய தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 (Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules) மற்றும் சமூக ஊடக நிறுவனங்களை, அரசாங்கத்தால் கண்டறியப்பட்ட பயனர் உள்ளடக்கத்திற்கு எதிராக தொடர அனுமதிக்கும் அந்த விதிகளில் திருத்தம் மூலம் இணையப் பேச்சு கட்டுப்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது. 


திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25, 2025), அரசாங்கம் புதிய வழிமுறைகளை வெளியிட்டது. இவை அதன் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும், இதற்கான நோக்கங்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உள்ளாகியுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் வெறுப்பு பேச்சும், விவாதமும் இந்தியாவில் குற்றமாக்கப்படுகின்றன. 


பின்தங்கிய குழுக்களுக்கு உண்மையிலேயே அநீதி இழைக்கப்படும்போது நீதி தேடுவதற்கான சட்டப்பூர்வ வழிகளை வழங்குகிறது. ஆனால், நிர்வாகத்திற்கு இன்னும் அதிக அதிகாரங்களை வழங்குவது ஆபத்தானது. அடிப்படை நிலையில், "பேச்சு சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துதல்" (misuse of freedom of speech) என்று குறிப்பிடும் நீதித்துறை அறிக்கைகள் தங்கள் பங்கை தவறாகப் புரிந்துகொள்வது போல் தெரிகிறது. நிலப்பிரபுத்துவ அமைப்பில் கேள்விக்கு இடமில்லாத ஆட்சியாளர்களைப் போல செயல்படாமல், அரசியலமைப்பின் கீழ் உள்ள உரிமைகளைப் பாதுகாப்பதே அவர்களின் கடமையாக இருக்க வேண்டும்.



Original article:

Share: