மகசேசே விருது, கிராமப்புறப் பெண்களை மீண்டும் கல்விக்கு அழைத்து வரும் இயக்கத்தை கௌரவிக்கிறது. -உஜ்வால் தாக்கர்

 ராஜஸ்தானின் 50 ஊரகப் பகுதிகளில் இருந்து, இந்த அமைப்பு 30,000-க்கும் மேற்பட்ட ஊரக பகுதிகளுக்கு விரிவடைந்து. 1.4 மில்லியனுக்கும் அதிகமான பெண்களைப் பள்ளிகளில் சேர்த்துள்ளது.


ஒவ்வொரு ஆண்டும், மக்களும் கருத்துக்களும் ஒரு நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் என்பதை ரமோன் மகசேசே விருது நமக்கு நினைவூட்டுகிறது. இந்த ஆண்டு பெண் குழந்தைகளைப் பயிற்றுவிப்பதற்கான விருது, ஊரக பகுதிகளில் இருக்கும் பெண் குழந்தை மற்றும் அவரது கல்வி குறித்து மிகவும் தேவையானவைகளை வெளிப்படையாக காட்டுகிறது. 


உலகம் பரிசு பெற்றவர்களை பாராட்டும்போது, ​​இந்தியா அதன் எல்லைகளுக்குள் இன்னும் முழுமையடையாத ஒரு மாற்றத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு ஊரக பகுதிகளில் இருக்கும் பெண்ணும் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்தல், அங்கேயே தங்கி, நன்றாகக் கற்றுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.


உலகின் மிகப்பெரிய பள்ளி அமைப்புகளில் ஒன்றான இந்தியாவில், 250 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் படிக்கின்றனர். ஆனால், ஊரக பகுதிகளில் உள்ள மில்லியன் கணக்கான பெண்கள், மேல்நிலைப் பள்ளியை முடிப்பதற்கு முன்பே பள்ளியை விட்டுவிடுகிறார்கள். இதற்கான காரணங்கள் நன்கு தெரிந்தவை: 

வறுமை, ஆணாதிக்கம், வீட்டு வேலைகள், இளமைப் பருவத் திருமணம், அருகிலுள்ள பள்ளிகள் இல்லாமை, சில சமயங்களில், கழிப்பறை இல்லாதது போன்ற அடிப்படையான ஒன்றாகும்.


இந்த ஒதுக்கீட்டின் செலவுகள் மிகப்பெரியவை. பள்ளிப்படிப்பின் ஒவ்வொரு கூடுதல் வருடமும் ஒரு பெண்ணின் வருமானத்தை 10-20 சதவீதம் அதிகரிக்கிறது. அனைத்து பெண் குழந்தைகளும் 12 ஆண்டுகள் கல்வி முடித்தால், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 10 சதவீதம் உயரலாம். 


கல்வி பெற்ற பெண் திருமணத்தை தாமதப்படுத்துகிறார், ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறுகிறார், அதிகம் சம்பாதிக்கிறார் மற்றும் தனது குடும்பம் மற்றும் சமுதாயத்தில் அதிகம் முதலீடு செய்கிறார். அந்த பெண்ணிற்கு கல்வியை மறுப்பது வெறும் அநீதி மட்டுமல்ல. இது முழு நாட்டையும் பாதிக்கிறது.


மாற்றத்திற்கான ஒரு ஊக்கமளிக்கும் உதாரணம் சஃபீனா ஹுசைன் நிறுவிய கல்வி பெண்கள் இயக்கம். ராஜஸ்தானில் 50 ஊரக பகுதிகளில் இருந்து, இந்த அமைப்பு 30,000-க்கும் மேற்பட்ட ஊரகப் பகுதிகளுக்கு விரிவடைந்து. 1.4 மில்லியனுக்கும் அதிகமான பெண்களை பள்ளிகளில் சேர்க்க உதவியுள்ளது.


அவர்களின் முறை எளிமையானது. ஆனால், சக்திவாய்ந்தது: இளம் பெண்கள் மற்றும் ஆண்களை உள்ளூர் தலைவர்களாகப் பயிற்சி அளித்து, அவர்கள் வீடு வீடாகச் சென்று, மகள்கள் வகுப்பறைகளில் இருக்க வேண்டும் என்று குடும்பங்களை நம்ப வைக்கிறார்கள். சஃபீனாவின் பணி உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 


கடந்த சில நாட்களுக்கு முன்னர் WISE Prize for Education விருதும் கிடைத்துள்ளது. இந்த விருதை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. விடாமுயற்சி, தரவுகள் மற்றும் சமுதாய கூட்டாண்மை ஒன்றிணையும் போது என்ன நடக்கும் என்பதை அவரது தலைமைத்துவம் காட்டுகிறது. முன்பு கண்ணுக்குத் தெரியாத பெண் குழந்தைகள் இப்போது படிக்கிறார்கள், எழுதுகிறார்கள், மற்றும் தங்கள் தாய்மார்கள் கனவில் கூட நினைத்திராத எதிர்காலத்தைப் பற்றி கனவு காண்கிறார்கள்.

பெண் குழந்தைகளின் கல்விக்கான இயக்கம் சிவில் சமுதாயத்தின் பொறுப்பு மட்டுமல்ல. இந்திய அரசு தீவிர நோக்கத்தைக் காட்டியுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் (Right to Education Act) ஆரம்பக் கல்வி மட்டத்தில் கிட்டத்தட்ட முழுமையான சேர்க்கையைக் கொண்டு வந்தது. 


‘பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ (Beti Bachao, Beti Padhao) இயக்கம் மக்களின் எண்ணங்களை மாற்ற உதவியுள்ளது மற்றும் கஸ்தூர்பா காந்தி பலிகா வித்தியாலயங்கள் ஆபத்துள்ள சிறுமிகளுக்கு வாழும் இடமாக பள்ளியை வழங்குகின்றன. மாநிலங்களும் புதிய முயற்சிகளை செய்துள்ளன: பீஹாரில் பள்ளி சிறுமிகளுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டம் பள்ளிக் கல்வியை நிறுத்தும் எண்ணிக்கையை குறைத்தது. இது இந்தியாவின் பல பகுதிகளிலும் இதே போன்ற முயற்சிகளை ஊக்குவித்தது.


எனவே, பெண் கல்வியின் கதை ஒன்றிணைந்த கதையாகும் - அரசாங்கம் அடித்தளம் அமைக்கிறது மற்றும் பெண்களைப் பயிற்றுவித்தல் போன்ற அமைப்புகள் கடைசி தீர்வுகளை வழங்குகின்றன. ஆனாலும், பணி முடிக்கப்படவில்லை. ஊரகப் பகுதிகள் இருக்கும் இந்தியாவில் இன்னும் கல்வியில் ஆழமான பாலின இடைவெளிகள் உள்ளன. 15 முதல் 30 வயதுக்குட்பட்ட மில்லியன் கணக்கான இளம் பெண்கள் வறுமை, ஆணாதிக்கம் அல்லது இளமைப் பருவ திருமணம் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே பள்ளியைவிட்டு வெளியேறினர்.


பெண்களுக்கு, படிப்பதற்கான இரண்டாவது வாய்ப்பு கிடைப்பதில் இருந்து நம்பிக்கை வருகிறது. பெண்களைப் பயிற்றுவிப்போம் என்ற புதிய திட்டமான பிரகதி, இளம் பெண்கள் திறந்தவெளிப் பள்ளி முறை மூலம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தகுதிச் சான்றுகளைப் பெறுவதற்குத் தயாராகும் முகாம்கள் மூலம் கற்றலுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. 


இதை விரிவுபடுத்துவதற்கு, தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவனத்தின் வலுவான அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட துடிப்பான மாநில அளவிலான திறந்தவெளிப் பள்ளி சுற்றுச்சூழல் அமைப்புகள் தேவைப்படும். ஊக்கமளிக்கும் விதமாக, முற்போக்கான மாநில அரசுகள் இந்த முயற்சியில் பங்கெடுக்கத் தொடங்கியுள்ளன.

மகசேசே விருது எப்போதும் ஒதுக்கப்பட்டவர்களை உயர்த்தும் தைரியம் கொண்ட தலைவர்களைக் கெளரவித்துள்ளது. பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதை அங்கீகரிப்பதன் மூலம், இந்தியாவின் முடிக்கப்படாத புரட்சியான ஊரகப் பகுதிகளில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதை நோக்கி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பணி தொண்டு அல்ல. நலன்புரி அல்ல. இந்தியா தனது எதிர்காலத்தில் செய்யக்கூடிய மிக சக்திவாய்ந்த முதலீடாகும்.


வரலாறு நம்மிடம் கேட்கும் கேள்வி எளிமையானது: இந்த புரட்சியை முடிக்கும் தன்மையை நாம் பெற்றிருந்தோமா?


எழுத்தாளர் குழு தலைவர், பெண்கள் கல்வி



Original article:

Share:

கார்பன் விலை நிர்ணயம் மற்றும் வரிகளை மறுபரிசீலனை செய்தல் -பிரச்சி பிரியா, ஆர்.வி. அனுராதா

 அதிக வர்த்தகக் கட்டுப்பாடுகள் இருக்கும் இன்றைய காலத்தில், நாம் கவனமாக இருக்க வேண்டும். வெவ்வேறு இடங்கள் வெவ்வேறு கார்பன் விலை நிர்ணய விதிகளைக் கொண்டிருந்தால், வணிகங்கள் அவற்றையெல்லாம் பின்பற்றுவது மிகவும் விலை உயர்ந்ததாக மாறும்.


இந்தியாவின் ஐக்கிய இராச்சியத்துடனான (யு.கே.) சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA), வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பொற்கொள்கையாகப் புகழ்ந்தது போல், பல நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இருப்பினும், இது இந்தியாவிற்கு ஏற்படவிருக்கும் சாத்தியமான பயன்களை கணிசமாக பாதிக்கக்கூடிய ஒரு உடனடி கொள்கைக் கருவியை கவனத்தில் கொள்ளவில்லை.


ஐக்கிய ராட்சியத்தின் ஐரோப்பிய ஒன்றிய கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை (U.K.’s Carbon Border Adjustment Mechanism (UK-CBAM)) போன்ற கொள்கையளவில் இங்கிலாந்தின் கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை ஜனவரி 2027 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இது எஃகு மற்றும் அலுமினியம் போன்ற குறைக்க கடினமான துறைகளுக்கான நேரடி மற்றும் மறைமுக உமிழ்வுகள் இரண்டையும் உள்ளடக்கியது. 

அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மின்சாரம் உட்பட. கார்பன் எல்லை சரிசெய்தலின் நோக்கம் பின்னர் மற்ற தயாரிப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.


கார்பன் எல்லை சரிசெய்தலின் தீங்கான தாக்கங்களுக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்கும் என்று கோயல் குறிப்பிட்டார். இருப்பினும், எந்தவொரு வருங்கால நடவடிக்கையும் உடனடி செலவு தாக்கத்திற்கு விரும்பிய நிவாரணத்தை வழங்காது. இது இருதரப்பு ஒப்பந்தத்தில் முன்கூட்டியே கையாளப்பட வேண்டிய பிரச்சினையாகும்.


 உதாரணமாக, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தில், கார்பன் எல்லை சரிசெய்தல் மற்றும் பெருநிறுவன நிலைத்தன்மை தொடர்பான பிற விதிகள் குறித்த அமெரிக்காவின் கவலைகளை நெகிழ்வுத்தன்மை மூலம் நிவர்த்திசெய்ய ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளது.


இந்தியாவின் ஏற்றுமதியில் கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை தாக்கம்


சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பு, அலுமினியம் மற்றும் இரும்பு மற்றும் எஃகுக்கான ஐக்கிய ராச்சியத்தின் மிகவும் விரும்பப்படும் நாடு விகிதங்கள் 0-6% வரம்பில் இருந்தன. இந்தியா-ஐக்கிய ராச்சிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ், இந்திய ஏற்றுமதிகளுக்கு இந்த வரிகள் பூஜ்ஜியமாக குறைக்கப்படும். 


முதல் பார்வையில், இது இந்தியாவுக்கு பயன் அளிக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், ஜனவரி 2027 முதல், அலுமினியம் மற்றும் எஃகு இறக்குமதிகள் ஐக்கிய ராச்சியத்தின் கார்பன் விலையுடன் பொருந்த வேண்டும். அது தற்போது தோராயமாக $66/tCO₂ ஆகும். இது ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்தபட்சம் 20% முதல் 40% வரை செலவு அதிகரிப்பாக மாறும்.


ஐக்கிய ராச்சியத்தின் கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை, ஏற்றுமதி செய்யும் நாடுகளில் கார்பன் விலை நிர்ணயத்திற்கான விலக்குகளை அனுமதிக்கிறது. இதில் கார்பன் வரிகள் அல்லது உமிழ்வு வர்த்தகத் திட்டங்களின் கீழ் செலுத்தப்படும் விலைகள் அடங்கும். இந்திய தொழில்துறை நிலக்கரிக்கு கூடுதல் வரி (cess) போன்ற வரிகளை செலுத்துகிறது. புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடமையின் கீழ் செலவுகளை ஏற்கிறது. 


மேலும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கார்பன் கடன் வர்த்தக திட்டத்தின் (Carbon Credit Trading Scheme (CCTS)) கீழ் இப்போது வெளிப்படையான கார்பன் விலை உள்ளது என்றாலும் ஐக்கிய ராச்சியத்தின் கடன் வர்த்தக திட்ட விலக்குகளை அனுமதிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


 கடன் வர்த்தகத்தை பொறுத்தவரை, இந்தியாவின் திட்டமிடப்பட்ட கார்பன் விலைக்கு இடையேயான பெரிய இடைவெளி, எரிசக்தி திறன் பணியகத்தால் CO₂ டன்னுக்கு $8–10 என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய ராச்சியத்தின் கார்பன் விலை தற்போது டன்னுக்கு $66 என உள்ளது. இதனால் இந்த பெரிய இடைவெளி ஒரு முக்கிய சவாலாக உள்ளது.


ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை போலவே, யு.கே.யின் அணுகுமுறையும் யு.கே.க்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு உள்நாட்டு உற்பத்தியாளர்கள் செலுத்தும் உள்ளக கார்பன் விலையை ஒத்த ஒரு கட்டணத்தை விதிப்பதில் கவனம் செலுத்துகிறது. 


ஐக்கிய ராச்சியத்தின் போட்டி நன்மையை இழப்பதாக உணரப்படும் குறிப்பிட்ட துறைகளில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் செலுத்தும் அதே விலையை விதிப்பதன் மூலம், கார்பன் விலையை ஒருதலைப்பட்சமாக நிர்ணயிப்பது, ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு ஒப்பந்தம் மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் உமிழ்வு குறைப்பு தொடர்பான பன்முக உறுதிமொழிகளை மீறுகிறது.


ஆற்றல் கலவை, தொழில்துறை கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் கிடைக்கும் தன்மை மற்றும் சாத்தியத்தின் அடிப்படையில் நாடுகளுக்கு இடையே உமிழ்வுகள் மாறுபடுவதால், பொருளாதாரங்கள் முழுவதும் ஒரே கார்பன் விலை இருக்க முடியாது. 


2024 அக்டோபரில் பலதரப்பு நிறுவனங்களின் கூட்டு அறிக்கை கார்பன் சந்தைகளில் அதிக ஒருங்கிணைப்பை வலியுறுத்தியது, துண்டாடப்பட்ட அமைப்புகள் விலை விளைவுகள், கசிவு மற்றும் நிகர பூஜ்ஜிய இலக்குகளை (net-zero goals) குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்று எச்சரித்தது.


துண்டாடப்பட்ட சந்தைகள் இணக்க செலவுகளை மட்டுமே உயர்த்தும், சப்ளை செயின்களை பாதிக்கும், மற்றும் வளர்ச்சி மற்றும் காலநிலை இலக்குகள் இரண்டையும் தடுக்கும். உமிழ்வுகளை அளவிடும் முறைகளை ஒருங்கிணைக்க, அறிக்கையிடல் தேவைகளை நெறிப்படுத்த, மற்றும் பசுமை தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான ஆதரவை உறுதிசெய்ய உலகளாவிய கார்பன் விலை நிர்ணய ஒப்பந்தம் அவசியமாகும். 


சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) 2021-ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியம், குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு $25, நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்கு $50 மற்றும் அதிக வருமானம் உள்ள நாடுகளுக்கு $75 என வரிசைப்படுத்தப்பட்ட விலை நிர்ணயத்துடன் ஒரு சர்வதேச கார்பன் விலை தளத்தை (International Carbon Price Floor (ICPF)) முன்மொழிந்தது.


 இதன் அடிப்படையில், உலகப் பொருளாதார மன்றம், விலை நிர்ணயம் மற்றும் அறிக்கையிடலுக்கான குறைந்தபட்ச தரநிலைகளுடன் தொடங்கி, உலகளாவிய கார்பன் விலை நிர்ணயத்திற்கு ஒரு சுமுகமான மாற்றத்தை எளிதாக்க மூன்று கட்ட அணுகுமுறையை முன்மொழிந்தது. 


இந்த விதிகள் பின்னர் வெவ்வேறு பிராந்தியங்களில் பயன்படுத்தப்படும் அமைப்புகளுடன் இணைக்கப்படும். அதே நேரத்தில் கார்பன் தரவு சரிபார்க்கப்படும் தம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்யும். குழப்பத்தைக் குறைத்து ஒரு உலகளாவிய அமைப்பை நோக்கி நகர, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, இந்தியா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளில் உள்ளதைப் போன்ற பிராந்திய கார்பன் சந்தைகளை இணைக்கவும் மன்றம் பரிந்துரைத்தது.


இந்த மாதிரி வேலை செய்யுமா என்பதை இந்திய அரசாங்கம் மதிப்பீடு செய்வதும், ஒரே எண்ணத்தை கொண்ட வளரும் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஆராய்வதும் முக்கியமாகும். அதிகரித்து வரும் கட்டண மற்றும் கட்டணமற்ற தடைகளின் காலத்தில், பிளவுபட்ட கார்பன் விலை நிர்ணயம் மிகப்பெரிய இணக்க செலவுகளாக மாறும் அபாயத்தை நாம் எதிர்கொள்ள முடியாது.


தேசிய நடவடிக்கை


உயர்ந்துவரும் பாதுகாப்புவாதத்தின் மத்தியில் குறுகிய காலத்தில் உலகளாவிய ஒருமித்த கருத்து சாத்தியமில்லை. எனவே, இந்திய தொழில்துறை தூய்மையான தொழில்நுட்பங்களை ஏற்றுமதி இணக்கமாக மட்டுமல்லாமல் செயல்திறன் மற்றும் போட்டித்திறனுக்கான கருவிகளாக பார்க்க வேண்டும். பல்வேறு மறைமுக கார்பன் வரிகளை ஒருங்கிணைந்த கார்பன் சந்தை கட்டமைப்பாக நெறிப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் ஒரு செயல்படுத்துபவராக செயல்பட வேண்டும். 


கார்பன்-தீவிர துறைகளில் பல வரிகளுக்கு பதிலாக, கார்பன் கடன் வர்த்தகத் திட்டத்தின் (Carbon Credit Trading Scheme (CCTS)) மூலம் ஒரே வெளிப்படையான கார்பன் வரியின் கீழ் கடுமையான உமிழ்வு குறைப்பு இலக்குகளை நடைமுறைப்படுத்துவது கார்பன் விலை கண்டுபிடிப்பை மேம்படுத்தும், இணக்கம், கண்காணிப்பை எளிதாக்கும் மற்றும் நமது போட்டித்திறனை பாதுகாக்கும். 


இது எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த உலகளாவிய கார்பன் சந்தையில் சேருவதற்கு திறன் கொண்ட வலுவான கார்பன் விலை நிர்ணய அமைப்பை உருவாக்க இந்தியாவை நிலைநிறுத்தும். 


இந்த கார்பன் வரிகளிலிருந்து வரும் வருவாய் தொழிற்துறை கார்பன் நீக்கத்திற்காக மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டும். நிதி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட வரைவு காலநிலை நிதி வகைபாடு (climate finance taxonomy), சுத்தமான தொழில்நுட்ப முதலீட்டை அதிகரிக்க முதலீட்டாளர்களுக்கு உதவும் மற்றொரு முயற்சியாகும்.


பலதரப்பு விதிகள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படும் மற்றும் இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் சமத்துவத்தை பாதுகாக்கத் தவறும் உலகில், நாட்டிற்குள் அரசாங்கம் மற்றும் தொழில்துறைக்கு இடையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே ஒரே தீர்வாகும்.


பிராச்சி பிரியா, மும்பையைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்; ஆர்.வி. அனுராதா, பார்ட்னர், கிளாரஸ் லா அசோசியேட்ஸ், புது டெல்லி.



Original article:

Share:

ஒலி மாசுபாடு உயர்ந்து கொண்டிருக்கிறது ஆனால் கொள்கை மவுனமாக உள்ளது. -ரோஹன் சிங்

 அதிகரித்து வரும் ஒலி மாசுபாட்டை எதிர்த்துப் போராட நகர்ப்புற இந்தியா உரிமை அடிப்படையிலான அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நகர்ப்புற ஒலி மாசுபாடு நமது காலத்தின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பொது சுகாதார நெருக்கடிகளில் ஒன்றாக அமைதியாக உருவெடுத்துள்ளது. இந்திய நகரங்கள் முழுவதும், டெசிபல் அளவுகள் வழக்கமாக அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறுகின்றன. குறிப்பாக பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்பு மண்டலங்களுக்கு அருகில், அமைதி மற்றும் கண்ணியம் என்ற அரசியலமைப்பு வாக்குறுதியை சிதைத்து வருகின்றன.

2011-ஆம் ஆண்டில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)) தேசிய சுற்றுச்சூழல் ஒலி கண்காணிப்பு வலையமைப்பை (National Ambient Noise Monitoring Network (NANMN)) தொடங்கியது. இது ஒரு நேரடி தரவு தளமாக கருதப்பட்டது. பத்தாண்டுகளுக்குப் பிறகு, இந்த வலையமைப்பு சீர்திருத்தத்திற்கான ஒரு கருவியாக குறைவாகவும், செயலற்ற களஞ்சியமாகவும் செயல்படுகிறது. தரவு வெவ்வேறு தரவுத்தளங்களில் கிடைக்கிறது. இருப்பினும், அதன் பயனுள்ள செயல்பாடுகள் இன்னும் கிடைக்கவில்லை.

பிரச்சினை தவறான உணரும் கருவி (sensor) குறைபாடு இருப்பது மட்டுமல்ல பல உணரும் கருவிகள் 25 முதல் 30 அடி உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளன  பொறுப்புக்கூறலின் ஆழமான இல்லாமையிலும் உள்ளது. கிடைக்கக்கூடிய தரவு தவறாகவோ அல்லது முழுமையற்றதாகவோ இருந்தாலும், அது  அரசியல் ரீதியாக எந்த விதமான எந்த உண்மையான நடவடிக்கையும் எடுக்க அதைப் பயன்படுத்துவதில்லை. 

ஐரோப்பாவுடன் இதை ஒப்பிடுகையில், அங்கு சத்தத்தால் ஏற்படும் நோய்கள் மற்றும் இறப்பு புள்ளிவிவரங்கள் கொள்கையை தீவிரமாக வடிவமைக்கின்றன. ஐரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனம் சமீபத்தில் நகர்ப்புற ஒலி மாசுபாட்டின் வருடாந்திர பொருளாதார செலவை €100 பில்லியனாக நிர்ணயித்தது. இது வேக மண்டலங்கள் மற்றும் மண்டல கட்டமைப்புகளில் மறுவடிவமைப்புகளைத் அதிகரிக்க செய்தது. 

இதற்கு நேர்மாறாக, இந்தியா ஒழுங்குமுறை அமைப்பு பிளவுப்பட்டதாகவும் நிறுவனம் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. தகவல் அறியும் உரிமை (Right to Information (RTI)) தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை; மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் தனித்தனி பிரிவுகளாக (silos) செயல்படுகின்றன; உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில்கூட, 2025 முதல் காலாண்டு தரவு பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை.

அக்கறையின்மை, புறக்கணிப்பு, கடுமையான கேள்விகள்

இது வெறும் சுற்றுச்சூழலைப் புறக்கணிப்பது மட்டுமல்ல. இது ஏறக்குறைய நாட்டின் சட்டங்களைப் புறக்கணிப்பது போன்றது. அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 21, மன மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வை உள்ளடக்கிய கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை (right to life) உத்தரவாதம் செய்கிறது. அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 48A, அரசாங்கம் சுற்றுச்சூழலை தீவிரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறது. 

"அதிகம் ஒலியில்லாத மண்டலங்கள்" (silence zones) போன்ற அமைதியான இடங்கள் மிகவும் சத்தமாக மாறும்போது, ​​அரசாங்கம் விவகாரங்களை எவ்வாறு நிர்வகிக்கிறது மற்றும் மக்களை எவ்வாறு மதிக்கிறது என்பதில் உள்ள சிக்கல்களை இது காட்டுகிறது.

ஒலி மாசுபாடு (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகள், 2000 (Noise Pollution (Regulation and Control) Rules) ஒரு வலுவான சட்டக் கட்டமைப்பை வழங்குகின்றன. இருப்பினும், அமலாக்கம் பெரும்பாலும் குறியீட்டு முறையில் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் (World Health Organization) கூற்றுப்படி, அதிகம் ஒலியில்லாத மண்டலங்களில் பாதுகாப்பான வரம்புகள் பகல் நேரத்தில் 50 dB(A) மற்றும் இரவு நேரத்தில் 40 dB(A) ஆகும். இருப்பினும், டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில், உணர்திறன் மிக்க நிறுவனங்களுக்கு அருகிலுள்ள அளவீடுகள் பெரும்பாலும் 65 dB(A)-70 dB(A)-ஐ அடைகின்றன.

உள்கட்டமைப்பு விரிவாக்கம் (Infrastructure expansion) மற்றும் தளவாடங்களால் இயக்கப்படும் போக்குவரத்து நெருக்கடியை (logistics-driven traffic) அதிகப்படுத்தியுள்ளது. ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், இரவு நேர துளையிடுதல் மற்றும் கிரேன் நடவடிக்கைகள் தொடர்கின்றன. 2024-ஆம் ஆண்டில், இந்திய உச்சநீதிமன்றம், அதிகப்படியான சத்தம் உட்பட சுற்றுச்சூழல் சீர்குலைவுகள் பிரிவு 21-ன் கீழ் வாழ்க்கை மற்றும் கண்ணியத்திற்கான (right to life and dignity) அடிப்படை உரிமையை மீறும் என்று மீண்டும் உறுதிப்படுத்தியது. 

ஒலி மாசுபாடு (V) வழக்கில், நகரங்களில் அதிக சத்தம் மக்களின் மன ஆரோக்கியத்தையும் சுதந்திரத்தையும் பாதிக்கிறது என்று நீதிமன்றம் கூறியது. இந்த வழக்கு 2005-ல் தொடங்கியது. 2024-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தால் மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஏனெனில், ஒலி மாசுபாடு இன்னும் நமது அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது.

சுற்றுச்சூழல் செலவு குறைவான தொந்தரவானது அல்ல. 2025-ஆம் ஆண்டு ஆக்லாந்து பல்கலைக்கழக ஆய்வில், நகர்ப்புற பகுதிகளில் ஏற்படும் ஒலி மற்றும் செயற்கை ஒலி ஆகியவை ஓர் இரவுக்குப் பிறகு பொதுவான மைனா பறவைகளின் தூக்கத்தையும் பாடல் முறைகளை சீர்குலைப்பதாகக் கண்டறிந்துள்ளது. பறவைகள் குறைவாகவும், குறைவான சிக்கலான தன்மையுடனும் பாடின. இதனால் அவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்வது கடினமாகிவிட்டது. 

இது பறவைகளுக்கு மட்டும் உள்ள பிரச்சனை அல்ல - இயற்கையின் தொடர்புகொள்ளும் முறை சீர்குலைந்து வருவதை காட்டுகிறது. பல்லுயிர் பெருக்கம் அதன் குரலை இழக்கும்போது, ​​அது நகர்ப்புற சுற்றுச்சூழல் நெறிமுறைகளின் அமைப்பில் ஆழமான பாதிப்பு ஏற்பட்டிருப்பதை பிரதிபலிக்கிறது.

குடிமை சோர்வு மற்றும் எந்தவிதமான சத்தமும் இல்லாத அரசியல்

நகர்ப்புற ஒலி வெறும் தொழில்நுட்பப் பிரச்சினை அல்ல, அது ஆழமாக அரசியல் ரீதியானது. பொதுமக்களின் தொடர்ச்சியான சீற்றம் இல்லாதது, ஒலி ஆக்கிரமிப்பு இயல்பாக்கப்படுவதிலிருந்து உருவாகிறது. ஹாரன் அடிப்பது, துளையிடுவது மற்றும் ஒலிபெருக்கிகள் சுற்றுப்புற எரிச்சலூட்டும் பொருட்களாக மாறிவிட்டன. இவை கேள்விக்குள்ளாக்கப்படுவதற்குப் பதிலாக பொறுத்துக்கொள்ளப்படுகின்றன. 

இந்த குடிமைச் சோர்வு, மாசுபடுத்தியாக சத்தம் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதன் மூலம் அதிகரிக்கிறது. புகைமூட்டம் அல்லது குப்பைகளைப்போல் இல்லாமல், ஒலி எந்த எச்சத்தையும், எந்தக் கறையையும் விட்டுச் செல்லாது - ஒரு தளர்வான மனம் மற்றும் தொந்தரவு செய்யப்பட்ட தூக்க சுழற்சி மட்டுமே. இதன் விளைவாக, குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள நிலைமைகளைக் கொண்டவர்கள் மத்தியில், பொது சுகாதாரம் ஒரு அமைதியான பிரச்சனையாகி வருகிறது.

மரங்கள் மீது ஒலியின் தாக்கம்

இந்தியாவின் சட்டக் கட்டமைப்பு, காகிதத்தில் வலுவானதாக இருந்தாலும், பிரிக்கப்பட்ட செயல்படுத்தலால் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. 2000-ஆம் ஆண்டு ஒலி மாசுபாடு விதிகள், நகர்ப்புற உண்மைகளை பிரதிபலிக்கும் வகையில் அரிதாகவே புதுப்பிக்கப்படுகின்றன. நகராட்சி அமைப்புகள், போக்குவரத்து காவல்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு இடையில் சிறிய ஒருங்கிணைப்பு உள்ளது. 

தேசிய சுற்றுச்சூழல் காற்று தரங்களுக்கு (National Ambient Air Quality Standards) ஏற்ப ஒரு தேசிய ஒலிக் கொள்கை அவசரமான தேவையாக உள்ளது. அத்தகைய கட்டமைப்பு மண்டலங்களுக்கு இடையே அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவை வரையறுக்க வேண்டும். வழக்கமான தணிக்கைகளை கட்டாயப்படுத்த வேண்டும். மேலும், உள்ளூர் குறைதீர்க்கும் வழிமுறைகளை மேம்படுத்த வேண்டும். நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பால் ஏற்படும் (synergy) சிறந்த விளைவு இல்லாமல், அமலாக்கம் அவ்வப்போது மற்றும் அடையாளமாகவே இருக்கும்.

'ஒலி கருணை' கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்

இறுதியில், நகர்ப்புற ஒலிக்கு எதிரான போராட்டம் வெறும் ஒழுங்குமுறை அல்ல, அது கலாச்சார ரீதியானது. நகரங்கள் ஒலி அனுதாபத்தின் பகிரப்பட்ட நெறிமுறையை வளர்க்க வேண்டும். பொதுப் பிரச்சாரங்களைத் தாண்டி, பள்ளிகள், ஓட்டுநர் பயிற்சித் திட்டங்கள் மற்றும் சமூக இடங்களில் ஆழ்ந்த கல்விக்கு நகர வேண்டும்.

நிலையான செய்தி மூலம் இருக்கைப் பட்டை பயன்பாடு (seatbelt usage) ஒரு வழக்கமாக மாறியது போல, ஹாரன் சத்தத்தைக் குறைத்தல் மற்றும் சத்த உணர்திறனை சமூக ரீதியாக உள்வாங்க முடியும். அமைதி என்பது ஒலி இல்லாதது அல்ல, மாறாக நாம் மற்றவர்களிடம் கவனமாகவும் மரியாதையுடனும் இருக்கிறோம் என்று அர்த்தம்.

அப்படியானால், சீர்திருத்தம் எங்கிருந்து தொடங்க வேண்டும்? முதலில், தேசிய சுற்றுச்சூழல் ஒலி கண்காணிப்பு வலையமைப்பை (National Ambient Noise Monitoring Network (NANMN)) பரவலாக்க வேண்டும். உள்ளூர் அமைப்புகளுக்கு நிகழ்நேர ஒலித் தரவு மற்றும் செயல்படும் பொறுப்பை வழங்க வேண்டும்.

இரண்டாவதாக, கண்காணிப்பை அமலாக்கத்துடன் இணைக்கவும் - அபராதங்கள், மண்டல இணக்கம் அல்லது கட்டுமானத் தடைகள் இல்லாமல், தரவு செயல்திறன் மிக்கதாகவே உள்ளது.

மூன்றாவதாக, விழிப்புணர்வை நிறுவனமயமாக்குங்கள் - விழிப்புணர்வு வாழ்க்கையின் ஒரு வழக்கமான பகுதியாக மாற வேண்டும் - "ஒலிக்காத நாள்" (No Honking Day) போன்ற பிரச்சாரங்கள் மக்களின் சத்தமிடும் பழக்கங்களை மாற்றுவதற்கான நீண்டகால முயற்சிகளாக வளர வேண்டும்.

நான்காவதாக, நகர்ப்புற திட்டமிடலில் ஒலியியல் மீள்தன்மையை உட்பொதிக்கவும் - நகரங்கள் வேகம் மற்றும் விரிவாக்கத்திற்காக மட்டுமல்ல. ஒலி நாகரிகத்திற்காகவும் வடிவமைக்கப்பட வேண்டும்.

அமைதியை கட்டாயப்படுத்தக்கூடாது மற்றும் வடிவமைப்பு, நிர்வாகம் மற்றும் ஜனநாயக விருப்பத்தின் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும். இந்தியா சத்தத்தை ஒரு தீவிரமான உரிமைப் பிரச்சினையாகக் கருதவில்லை என்றால், அதன் பொலிவுறு நகரங்கள் (smart cities) கூட அமைதியாக வாழ முடியாத அளவுக்கு சத்தமாக இருக்கலாம்.

ரோஹன் சிங், நகர்ப்புற சுற்றுச்சூழல் நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரம் குறித்து செய்தி சேகரிக்கும் ஒரு தன்னிச்சையான பத்திரிகையாளர்.



Original article:

Share:

இந்தியாவில் சுகாதாரக் காப்பீட்டின் எழுச்சி மற்றும் அபாயங்கள் -அன்பாஸ் அப்துல் வஹாப், ஜீன் டிரேஸ்

 மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் அனைவருக்குமான மருத்துவ பராமரிப்புக்கு உறுதியான பாதையாக இல்லை.


உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு (Universal health care (UHC)) என்பதன் குறைந்தபட்ச வரையறை என்னவென்றால், "பணம் செலுத்தும் திறனைப் பொருட்படுத்தாமல் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும்" (all members of the community irrespective of their ability to pay) தரமான சுகாதாரப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். 


இது 1946-ல் போர் குழு அறிக்கையில் (Bhore Committee report) தெளிவாகக் கூறப்பட்டது. அப்போதிருந்து, கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குப் பிறகு, மனித வளர்ச்சியின் இந்த அடிப்படை இலக்கை இந்தியா இன்னும் அடையவில்லை.


இன்று, சுகாதாரக் காப்பீட்டை விரிவுபடுத்துவதன் மூலம் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை Universal health care (UHC)) அடைய முடியும் என்ற ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், அரசு நிதியுதவி பெறும் சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் வேகமாக விரிவடைந்துள்ளன. 


ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் (Ayushman Bharat) கீழ் 2018-ல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY)), ஒரு முக்கிய மைல்கல்லாகும். PMJAY உடன், ஒவ்வொரு பெரிய மாநிலத்திற்கும் அதன் சொந்த மாநில சுகாதார காப்பீட்டுத் திட்டம் (State Health Insurance Programme (SHIP)) உள்ளது. பெரும்பாலான மாநில சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள் (SHIP) PMJAY மாதிரியைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன. 


இது ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ₹5 லட்சம் காப்பீடு கிடைக்கும். இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் அனைத்தும் உள்நோயாளிகளின் பராமரிப்புக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இரண்டையும் உள்ளடக்கிய, கிட்டத்தட்ட சம விகிதத்தில், பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலிலிருந்து நோயாளிகள் தேர்வு செய்யலாம். 


2023-24-ஆம் ஆண்டில், PMJAY 58.8 கோடி தனிநபர்களுக்கு சுமார் ₹12,000 கோடி வருடாந்திர பட்ஜெட்டை (மொத்த பட்ஜெட்டில் 40% பங்களிப்பை மாநிலங்கள் வழங்கியதாகக் கருதினால், பரிந்துரைக்கப்பட்டபடி இருக்கும்) கொண்டுள்ளது. ஒருங்கிணைந்து, மாநில சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் (SHIP) இதே எண்ணிக்கையை உள்ளடக்கியது மற்றும் அவற்றின் ஒருங்கிணைந்த பட்ஜெட் குறைந்தது ₹16,000 கோடியாக இருந்தது.


 மொத்தம் ₹28,000 கோடி அல்லது அதற்கு மேல் இந்த தொகையானது, சுகாதாரத்துக்கான பொதுச் செலவினங்களில் ஒப்பீட்டளவில் சிறிய பகுதிதான், ஆனால் அது விரைவாக அதிகரித்து வருகிறது. குஜராத், கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தொடர்புடைய தரவுகள் கிடைக்கின்றன. 2018-19 மற்றும் 2023-24-க்கு இடையில் உண்மையான அடிப்படையில் SHIP பட்ஜெட் ஆண்டுக்கு 8% முதல் 25% வரை வளர்ந்துள்ளது.


தவறுகள் கடுமையாகலாம்


PMJAY மற்றும் SHIP-கள் பொது வசதிகள் அதிகமாகவோ அல்லது தரமற்றதாகவோ இருக்கும்போது ஏழை நோயாளிகளுக்கு குறைந்த செலவில் பரந்த அளவில் வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. 


இருப்பினும், இவை சரியான உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு (UHC) கட்டமைப்பிற்கு மாற்றாக இல்லை. மேலும், அவற்றில் அதிகளவில் குறைபாடுகள் உள்ளன. அவற்றில், சில இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பில் உள்ள பலவீனங்களை மோசமாக்கும்.


முதலாவதாக, சுகாதாரக் காப்பீடு இலாப நோக்கமுள்ள மருத்துவத்தை ஊக்குவிக்கிறது. PMJAY பட்ஜெட்டில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கிறது. இந்த மருத்துவமனைகளில் பெரும்பாலானவை லாபம் சார்ந்தவை. (மாநில சுகாதார காப்பீட்டு திட்டங்களுக்கான (SHIPகள்) தொடர்புடைய புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை). ஆறு முக்கிய மாநிலங்களில் PMJAY-ன் சமீபத்திய ஆய்வில், இந்தத் திட்டம் மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்களை அதிகரிக்கவில்லை. 


ஆனால், தனியார் மருத்துவமனைகளின் பயன்பாட்டை அதிகரித்தது. சுகாதாரப் பராமரிப்பில் லாப நோக்கங்கள் சிக்கல்களை உருவாக்குகின்றன என்பதை பொருளாதார வல்லுநர்கள் அறிவார்கள். தனியார் வழங்குநர்கள் அனுமதிக்கப்பட்டால், அவை இறுக்கமாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இருப்பினும், இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பு முறை மோசமாக ஒழுங்குபடுத்தப்பட்ட இலாபம் தேடுபவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. சுகாதாரக் காப்பீடு இந்த சார்பை சரிசெய்வதற்குப் பதிலாக வலுப்படுத்துகிறது.


இரண்டாவதாக, முதன்மை மற்றும் வெளிநோயாளர் சிகிச்சைக்கான முதலீடுகள் மிகவும் அவசரமாக இருக்கும்போது, ​​சுகாதாரக் காப்பீடு, மருத்துவப் பாதுகாப்பு முறையை மருத்துவமனையில் சேர்க்கும் நோக்கில் குறைகிறது. முதன்மை சிகிச்சையை வலுப்படுத்துவது அணுகக்கூடிய சிகிச்சையை உறுதிசெய்வது மட்டுமல்லாமல் தேவையற்ற மருத்துவமனை வருகைகளையும் அவர்களின் நிதிச் சுமையையும் குறைக்கும். 


PMJAY-ல் உள்ள அனைத்து முதியோர்களின் (70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்) எண்ணிக்கையில் விரைவான முதுமையுடன் சேர்ந்து, பல அடிப்படை சுகாதார சேவைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தாலும், விலையுயர்ந்த மூன்றாம்நிலை பராமரிப்பு (Costly tertiary care) பொது சுகாதார செலவினங்களில் அதிகரித்துவரும் பங்கை உறிஞ்சிவிடும் அபாயத்தை உள்ளடக்கியது.


மூன்றாவதாக, கடுமையான பயன்பாட்டு சிக்கல்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. PMJAY மற்றும் SHIP-களின் ஒருங்கிணைந்த பராமரிப்பு மக்கள்தொகைக் யில் 80% வரை அதிகமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பலருக்கு இந்தத் திட்டத்தைப் பற்றியோ, பதிவு செய்யப்பட்டவர்களுக்குக் கூட பெரும்பாலும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியாது. 


2022-23 குடும்ப நுகர்வுச் செலவுக் கணக்கெடுப்பின் சமீபத்திய பகுப்பாய்வின்படி, இந்த ஆண்டில் காப்பீடு செய்யப்பட்ட மருத்துவமனை நோயாளிகளில் 35% மட்டுமே தங்கள் காப்பீட்டைப் பயன்படுத்த முடிந்தது. மற்ற ஆய்வுகள், குறிப்பாக பின்தங்கிய குழுக்களிடையே, கடுமையான பயன்பாட்டுத் தடைகளையும் தெரிவிக்கின்றன. 


PMJAY அல்லது SHIP-களை வருவாய் மீறிய பணம் செலவின் சுகாதார செலவினங்களில் (out-of-pocket health expenditure) கணிசமான குறைப்புடன் இணைக்கும் வலுவான ஆதாரம் இல்லாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.


மருத்துவமனைகள் மற்றும் பாகுபாடு


நான்காவதாக, இலக்கு வைக்கப்பட்ட சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள், காப்பீடு செய்யப்பட்ட மற்றும் காப்பீடு செய்யப்படாத நோயாளிகளுக்கு இடையே பாகுபாட்டின் சிக்கல்களை உருவாக்குகின்றன. தனியார் மருத்துவமனைகள் பொதுவாக காப்பீடு செய்யப்படாத விரும்புகின்றன. ஏனெனில், சுகாதாரப் பராமரிப்புக்கான வணிகக் கட்டணங்கள் காப்பீடு திருப்பிச் செலுத்தும் விகிதங்களைவிட மிக அதிகம். 


குறைந்த காப்பீட்டுப் பயன்பாட்டிற்கான ஒரு காரணம், தனியார் மருத்துவமனைகள் அதன் பயன்பாட்டை ஊக்கப்படுத்தாமல் போகலாம். பொது மருத்துவமனைகள் இதற்கு நேர்மாறான நடத்தையைக் காட்டுகின்றன. அவர்கள் தங்கள் சிகிச்சைக்கு சிறிது பணம் பெறுவதால் காப்பீடு செய்யப்பட்ட நோயாளிகளை விரும்புகிறார்கள். 

இந்த நிலைமை மேலும் சிக்கல்களை உருவாக்குகிறது. இது பாரபட்சமான சிகிச்சைக்கு வழிவகுக்கும். இது நோயாளிகள் காப்பீட்டில் சேர உடனடியாக அழுத்தம் கொடுக்கக்கூடும்.


ஐந்தாவது, சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் சுகாதாரக் காப்பீடு குறித்து தங்கள் சொந்த புகார்களைக் கொண்டுள்ளனர். இதில் குறைந்தளவில் திருப்பிச் செலுத்தும் விகிதங்கள் மற்றும் நீண்ட தாமதங்கள் அடங்கும். முதல் புகார் நியாயமானதாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால், இரண்டாவதாக நிராகரிப்பது கடினம். 


உண்மையில், சில மாதங்களுக்கு முன்பு, தேசிய சுகாதார ஆணையமே (National Health Authority (NHA)) PMJAY திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள தொகை ₹12,161 கோடியை எட்டியுள்ளதாக வெளிப்படுத்தியது. இந்தத் தொகை திட்டத்தின் முழு ஆண்டு பட்ஜெட்டைவிட அதிகம். பல அறிக்கைகள் தனியார் மருத்துவமனைகள் PMJAY நோயாளிகளுக்கு சேவைகளை நிறுத்திவிட்டதாகவோ அல்லது திட்டத்திலிருந்து விலகியதாகவோ காட்டுகின்றன. 


ஏனெனில், அவர்களின் இரசீதுகள் பல மாதங்களாக செலுத்தப்படாமல் உள்ளன. இதை, மக்களவையில் சுகாதார அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, PMJAY தொடங்கப்பட்டதிலிருந்து 609 மருத்துவமனைகள் இதிலிருந்து விலகிவிட்டன என்று குறிப்பிட்டுள்ளன.


கடைசியாக, ஆனால் முக்கியமாக, சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் ஊழல் மற்றும் தவறான பயன்பாட்டிற்கு ஆளாகின்றன. PMJAY-ன் கீழ் மோசடி நடவடிக்கைகளுக்காக 3,200 மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க NHA சமீபத்தில் பரிந்துரைத்தது. நாடு முழுவதிலுமிருந்து முறைகேடுகள் குறித்து ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வருகின்றன. 


தகுதியான நோயாளிகளுக்கு சிகிச்சை மறுக்கப்படுவது, காப்பீடு செய்யப்பட்ட நோயாளிகளிடம் தனியார் வழங்குநர்கள் கட்டணம் வசூலிப்பது மற்றும் மற்ற சந்தர்ப்பங்களில், திட்டத்தை சுரண்டுவதற்காக தேவையற்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முறைகேடுகள் நோயாளிகளை கடுமையான நிதி மற்றும் சுகாதார அபாயங்களுக்கு ஆளாவதன் மூலம் சுகாதாரக் காப்பீட்டின் நோக்கத்தைத் தோற்கடிக்கின்றன.


கடுமையான கண்காணிப்பு மற்றும் பல தணிக்கைகள் இந்த முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கம் கொண்டவை. ஆனால், இந்த பாதுகாப்புகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு சிறிய சான்றுகள் மட்டுமே உள்ளது. இந்த திட்ட இணையதளங்களில் தணிக்கை அறிக்கைகளின் எந்த தடயத்தையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது மற்றவற்றுடன், சுகாதாரக் காப்பீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாததற்கான ஒரு அறிகுறியாகும்.


அமைப்பு லாபம் சார்ந்தது


சுருக்கமாக, இந்தியாவின் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள், சுகாதாரப் பாதுகாப்பை ஏற்பாடு செய்வதற்கான மிகவும் மோசமான வழியாகும். குறிப்பாக, இந்த அமைப்பை வழிநடத்த போராடும் மக்களுக்கு அவை மிகவும் கடினமானவை. இந்தத் திட்டங்களால் பொது சுகாதார வசதிகளை விரிவுபடுத்துவதிலும் மேம்படுத்துவதிலும் இந்தியாவின் தொடர்ச்சியான தோல்வியை மாற்ற முடியாது. இவ்வளவு பலவீனமான அடித்தளத்துடன் எந்த நாடும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை (UHC) அடையவில்லை


சமூக சுகாதாரக் காப்பீடு சில நாடுகளில் UHC கட்டமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது என்பதை இது மறுக்க முடியாது. இதற்கு சில உதாரணங்கள், கனடா மற்றும் தாய்லாந்து ஆகும். ஆனால், PMJAY மற்றும் SHIP-களில் உலகளாவிய பாதுகாப்பு போன்ற சமூக சுகாதாரக் காப்பீட்டின் முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை. மேலும் முக்கியமாக, இலாப நோக்கமுள்ள சுகாதார பராமரிப்பு வழங்குநர்கள் மீது வலுவான கவனம் செலுத்துகிறது.


இந்தியாவின் லாபம் சார்ந்த சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு, பொது சுகாதார வசதிகளில் பல காலங்களாக மிகக் குறைந்த முதலீட்டை பிரதிபலிக்கிறது. உண்மையில், மிகச் சில நாடுகள் மட்டுமே இந்தியாவைவிட குறைவாகவே முதலீடு செய்துள்ளன. உலக வங்கியின் சமீபத்திய உலக வளர்ச்சிக் குறிகாட்டிகளின்படி, 2022-ம் ஆண்டில் இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3%-ஆக சுகாதாரத்திற்கான பொதுச் செலவினம் இன்னும் குறைவாக இருந்தது. 

இது உலக சராசரியான 6.1% உடன் ஒப்பிடப்பட்டது. இந்த இடைவெளியை சரிசெய்யாமல் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு (UHC) அடைய முடியாது. பொதுத்துறை சுகாதாரப் பராமரிப்பு தரங்களை உயர்த்த தீவிர முயற்சி தேவை. சில இந்திய மாநிலங்கள் இந்த திசையில் செல்ல முயற்சிக்கின்றன. அவற்றின் முடிவுகள் ஊக்கமளிக்கின்றன. ஆனால் அமைப்பில் உள்ள இடைவெளிகள் இன்னும் மிகப் பெரியவை. சுகாதாரக் காப்பீடு தற்காலிக நிவாரணத்தை மட்டுமே வழங்குகிறது. உண்மையான சிகிச்சை தேவைப்படும் ஒரு அமைப்புக்கு இது ஒரு வலி நிவாரணி போன்றது.


அன்பாஸ் அப்துல் வஹாப் ஒரு தன்னிச்சையான ஆய்வாளர். ஜீன் ட்ரேஸ், ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் வருகைப் பேராசிரியராக உள்ளார்.



Original article:

Share:

மற்றொரு வாய்ப்பு : பீகாரின் சிறப்புத் தீவிர திருத்த நடைமுறை மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து . . .

 காலக்கெடுவிற்கு அப்பால், கருத்துகணிப்புகளை அனுமதிப்பது தவறாக விலக்கப்பட்ட வாக்காளர்களுக்கு உதவக்கூடும்


இந்திய உச்சநீதிமன்றம் செப்டம்பர் 1, 2025 அன்று பீகாரின் சிறப்புத் தீவிரத் திருத்தம் (Special Intensive Revision (SIR)) பயிற்சி குறித்த உத்தரவு, வரைவு வாக்காளர் பட்டியலில் (draft electoral rolls) தவறாக விடுபட்ட வாக்காளர்களுக்கு இந்த உத்தரவு ஒரு உயிர்நாடியாகும். காலக்கெடுவுக்குப் பிறகும் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைத் தொடரலாம் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) தெளிவுபடுத்துதல், வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பிய ஒரு பயிற்சியின் வரவேற்கத்தக்க நடவடிக்கையைப் பிரதிபலிக்கிறது. 


செப்டம்பர் 1, 2025-க்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகும் பரிசீலிக்கப்படும் என்றும், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரை செயல்முறை தொடரும் என்றும் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இதன் பொருள் சேர்த்தல் மற்றும் விலக்கல்களை இன்னும் இறுதிப் பட்டியலில் சேர்க்கலாம். விலக்கப்பட்ட வாக்காளர்கள் தங்கள் ஆதார் அட்டை மூலம் மீண்டும் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. 


இருப்பினும், ECI வழங்கிய எண்கள் ஒரு கேள்வியை எழுப்புகின்றன. படிவம்-6-ஐப் பயன்படுத்தி 15 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் பதிவு செய்திருந்தாலும், விலக்கப்பட்ட சுமார் 65 லட்சம் வாக்காளர் பெயர்களை மீண்டும் சேர்ப்பதற்காக சுமார் 33,000 கோரிக்கைகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன. புதிய பதிவுகள் மற்றும் மறுசேர்க்கை ஆகிய இரண்டு பிரிவுகளும் படிவம்-6-ஐப் பயன்படுத்துகின்றன என்பதை ஒருவர் கருத்தில் கொள்ளும்போது இந்த பெரிய வேறுபாடு இன்னும் அதிகமாகிறது. 

இது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளில் குழப்பத்திற்கு வழிவகுக்கும். இந்தக் குழப்பமானது, ECI-க்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையே ஒரு பெரிய சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையமானது (ECI) தனது தினசரி தரவு அறிக்கைகளைப் பயன்படுத்தி, விலக்கப்பட்ட வாக்காளர்களுக்கு கட்சிகள் உதவவில்லை என்று கூறினாலும், கட்சிகள் தாங்கள் கோரிக்கைகளை எழுப்பியதாக வாதிடுகின்றன. ஆனால் தொகுதி நிலை அதிகாரிகள் (Block Level Officers) அவற்றை முறையாகச் செயல்படுத்தத் தவறிவிட்டனர்.


நீதிமன்றமானது இந்த சவால்களை அங்கீகரித்து, பீகார் மாநில சட்ட சேவைகள் ஆணையம் (Bihar State Legal Services Authority), வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு உதவ, துணைச் சட்டத் தன்னார்வளர்களைப் (para-legal volunteers) பயன்படுத்துமாறு நீதிமன்றம் புத்திசாலித்தனமாக அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை கவலை அளிக்கிறது. விதிவிலக்கு பட்டியல்களில் அசாதாரண வடிவங்களைக் கண்டறிந்து, முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, தி இந்து உட்பட, தரவு சார்ந்த விசாரணைகளை பிரதிபலிக்கும் கவலைகளை பிரதிபலிப்பதாக தோன்றுகிறது. 


வலுவான திருத்த நடவடிக்கைகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் இந்த கண்டுபிடிப்புகளை ஆதாரத்தின்படி கள அறிக்கைகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன. குறுகிய சுயநலத்திற்கு மேலாக உயர்ந்து, உண்மையாக ஒதுக்கப்பட்ட வாக்காளர்களுக்கு தீவிரமாக உதவவேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கு உள்ளது. ஜனநாயக செயல்முறை அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் அத்தகைய குடிமைப் பொறுப்பைக் கோருகிறது. 


அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு, வரைவுப் பட்டியலில் உள்ள 99.5% பேர் ஏற்கனவே ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்கள் மற்றும் மீதமுள்ளவர்களில் நியாயமற்ற விலக்குகளைத் தடுக்க ஆதாரை சரியான தனி ஆவணமாக ECI அங்கீகரிக்க வேண்டும். விலக்கப்பட்ட வாக்காளர்களுக்கு உரிமைகோரல்களை தாக்கல் செய்ய ஆதார் போதுமான ஆதாரமாக இருப்பதால், ஏற்கனவே வரைவு பட்டியலில் உள்ளவர்களுக்கும் இது போதுமானதாக இருக்க வேண்டும். 


பீகார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் (Special Intensive Revision (SIR)) அனுபவம் எதிர்காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கான மேம்பாடுகளை வழங்குகிறது. ECI அதன் தொழில்நுட்ப மற்றும் குறுகிய காலக்கெடு அணுகுமுறையை கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, இது நீண்டகாலத்திற்கு பரவலான தீவிர திருத்தங்களுக்கு ஆதரவாக, முழுமையான வீடுவீடாக சரிபார்ப்பை அனுமதிக்கிறது. வாக்காளர் உரிமைகளைவிட நிர்வாக வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் அவசரப் பயிற்சிகள் (hurried exercises) மூலம் உண்மையான வாக்காளர் பட்டியலை அடைய முடியாது.



Original article:

Share:

கேள்விக்குரிய உற்சாகம்: மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எண்களைப் பற்றி…

 அரசாங்கமானது தனது நிதிப் பற்றாக்குறை இலக்குகளை அடைவது கடினமாக தோன்றலாம்.


வெள்ளியன்று (ஆகஸ்ட் 29, 2025) வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எண்கள், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டின் (Q1) வளர்ச்சி 7.8%-ஆக இருந்ததைக் காட்டுகிறது. இதன் பெரும்பாலான விமர்சனங்கள் வளர்ச்சியைத் தடுக்கும் காரணிகளைப் பற்றிய பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. உதாரணமாக, இந்திய ரிசர்வ் வங்கியானது, ஆகஸ்ட் 6, 2025-ல், முதல் காலாண்டில் (Q1-ல்) வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என்று கணித்திருந்தது. ஆனால், இந்த தரவு வெளிவருவதற்கு ஒரு மாதத்திற்குள், ஒரு குறிப்பிடத்தக்க 1.3 சதவீத புள்ளிகளால் அது முடக்கப்பட்டது. 


இதனால், இது தொடர்பாக சுயபரிசோதனை (introspection) செய்ய வேண்டும். இந்த தரவுகளுக்குள், 7.7% என்ற வலுவான உற்பத்தித் துறையின் வளர்ச்சியானது, குறிப்பாக கடந்த ஆண்டின் Q1-ல் 7.6% என்ற ஒப்பீட்டளவில் உயர்ந்துள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சில ஆய்வாளர்கள், ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க வரிவிதிப்பின் காலக்கெடுவிற்கு முன்னதாக உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரித்ததால், வணிகப் பொருட்களின் ஏற்றுமதி Q1-ல் வெறும் 1.6% மட்டுமே வளர்ந்துடன், நிறுவனங்கள் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதே காரணம் என்றும் கூறியுள்ளனர். 


இருப்பினும், அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எண்கள் இதைப் பற்றி தெளிவுபடுத்தவில்லை. தொழில்துறை உற்பத்திக் குறியீட்டால் அளவிடப்பட்ட உற்பத்தித் துறையானது, Q1-ல் 3.3% வளர்ச்சியைக் கண்டது. இது கடந்த ஆண்டின் Q1-ல் காணப்பட்ட 4.3%-ஐ விட குறைவாக இருந்தது. மேலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு Q1-ல் எஃகு நுகர்வு கடுமையாக குறைந்துள்ளது. இதில், தனியார் மற்றும் வணிக வாகன விற்பனை இரண்டும் உண்மையில் Q1-ல் முறையே 5.4% மற்றும் 0.6% சரிந்தது. 

இரயில்வே சரக்கு போக்குவரத்து கடந்த ஆண்டு 5%-ஆக இருந்தநிலையில், தற்போது கூடுதலாக 2.5% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், விமான சரக்கு போக்குவரத்து கடந்த ஆண்டு 13.9% உடன் ஒப்பிடும்போது 5.4% அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகன விற்பனை 6.2% குறைந்துள்ளது. அதே நேரத்தில், மூன்று சக்கர வாகன விற்பனை 0.1% வளர்ச்சியுடன் இருந்தது. 


இந்த மாறுபட்ட தரவுகள், முக்கிய தொழில்கள் மற்றும் நுகர்வோர் துறைகள் இரண்டும் மந்தமாக இருப்பதைக் காட்டுகின்றன. மேலும், இது உற்பத்தி வளர்ச்சியின் உயர்வை கடுமையான ஆய்வுக்கு உட்படுத்துகிறது. மறுபுறம், சேவைத் துறையின் வலுவான செயல்திறன் வரவேற்கத்தக்கது. மேலும், இந்தியப் பொருளாதாரம் இந்தத் துறையில் எவ்வளவு சார்ந்திருக்கிறது என்பதையும் காட்டுகிறது.


இந்த ஆண்டிற்கான 6.3% முதல் 6.8% வரை வளர்ச்சிக் கணிப்பை அரசாங்கம் தக்கவைத்துக் கொண்டிருப்பதாக தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன் பொருள், முதல் காலாண்டில் (Q1) 7.8%-ஆக இருந்தது. அதாவது, அமெரிக்க வரிவிதிப்புகளின் வரையறுக்கப்பட்ட தாக்கத்தைப் பற்றிய அறிக்கைகள் இருந்தபோதிலும், மீதமுள்ள மூன்று காலாண்டுகளில் வளர்ச்சி கணிசமாகக் குறையும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 


பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (Nominal GDP) வளர்ச்சி 8.8% இருந்தபோதிலும், Q1-ல் பணவீக்கம் வெறும் 1% என்று கருதுவதால், புள்ளிவிவர அமைப்பின் வலிமை குறித்தும் தரவுகள் சந்தேகங்களை எழுப்புகின்றன. தெளிவாக, விலை நிலைகள் (price levels) போதுமான அளவு கைப்பற்றப்படவில்லை. 


ஒப்பீட்டளவில் குறைந்த பெயரளவிலான வளர்ச்சி விகிதம், அரசாங்கத்தின் நிதிப் பற்றாக்குறை இலக்குகளை அடைவது மிகவும் சவாலானதாக உள்ளது. குறிப்பாக, வரவிருக்கும் ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளால் வருவாய் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கும் நேரத்தில். ஒட்டுமொத்தமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) எண்கள் சில மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளன. அதே சமயத்தில், பல கேள்விகளையும் முன்வைத்துள்ளன.



Original article:

Share: