செயல்பாடுகளின் இடைநிறுத்தம் (Suspension of Operations (SoO)) ஒப்பந்தம் என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


குகி தேசிய அமைப்பு (Kuki National Organisation (KNO)) மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணி (United People’s Front (UPF)) ஆகியவற்றின்கீழ் உள்ள போராளிக் குழுக்களுடனான (militant groups) செயல்பாடுகளின் இடைநிறுத்தம் (SoO) ஒப்பந்தத்தின் புதிய பதிப்பானது, பேச்சுவார்த்தைமூலம் நடத்தப்பட்ட விதிமுறைகளுடன் புதுப்பிக்கப்பட்டது.


சூரசந்த்பூரை தளமாகக் கொண்ட குடிமை சமூக அமைப்பான குகி-ஜோ கவுன்சில் (Kuki-Zo Council), உள்துறை அமைச்சகத்தின் (MHA) அதிகாரிகளுடனான தொடர்ச்சியான கூட்டங்களுக்குப் பிறகு, பயணிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் "சுதந்திரமான இயக்கத்திற்காக" (free movement) "தேசிய நெடுஞ்சாலை-02" (National Highway-02) ஐ திறக்க முடிவு செய்தது.


செயல்பாடுகளின் இடைநிறுத்தம் (SoO) ஒப்பந்தமானது, அடிப்படையில் அரசியல் உரையாடலைத் தொடங்க முத்தரப்பு போர்நிறுத்த ஒப்பந்தமாகும். 2008-ல் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், மத்திய அரசு, மணிப்பூர் மாநில அரசு மற்றும் KNO மற்றும் UPF ஆகியவற்றுக்கு இடையே 24 தனித்தனி குகி-ஜோமி கிளர்ச்சிக் குழுக்களை உள்ளடக்கிய இரண்டு கிளர்ச்சிக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.


2023-ம் ஆண்டு மார்ச் மாதம், ஜோமி புரட்சிகர இராணுவம் (Zomi Revolutionary Army (ZRA)) மற்றும் குகி தேசிய இராணுவம் (Kuki National Army (KNA)) ஆகிய இரு குழுக்களுடனான ஒப்பந்தத்தில் இருந்து பைரன் சிங் தலைமையிலான மாநில அரசாங்கம் (Biren Singh-led state government) ஒருதலைப்பட்சமாக வெளியேறுவதற்கு முன்னர் SoO ஒப்பந்தம் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டது. குகி-சோ பெரும்பான்மையாக சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு வெளியேற்ற அறிவிப்புகள் வழங்கப்பட்ட பின்னர், ZRA மற்றும் KNA "போராட்டத்தில் செல்வாக்கு செலுத்துவதாக" சிங் குற்றம் சாட்டினார்.


மே 2023-ல், மோதல் வெடித்த பிறகு, குகி-மைய்தி இனப் பிரிவின் இரு தரப்பிலும் உள்ள கிளர்ச்சிக் குழுக்கள் வன்முறைக்கு வழிவகுத்து அதில் பங்கேற்றதால், அந்த ஒப்பந்தம் 2024-ல் காலாவதியானது.


உள்துறை அமைச்சகம் (MHA) கருத்துப்படி, ஒப்பந்தத்தில் திருத்தப்பட்ட அடிப்படை விதிகளில் "மணிப்பூரின் பிராந்திய ஒருமைப்பாட்டை" (territorial integrity of Manipur) மதிப்பது மற்றும் மாநிலத்திற்கு நிலையான அமைதி மற்றும் நிலைத்தன்மையைக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வை நோக்கிச் செயல்படுவது ஆகியவை இதில் அடங்கும். குகி தேசிய அமைப்பு (KNO) மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணி (UPF) இந்த விதிமுறைகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளன.


ஒரு முக்கிய சொல் குகி போராளி முகாம்களை விளிம்புப் பகுதிகளிலிருந்து இடமாற்றம் செய்வது. மணிப்பூரின் மலைகளில் 14 குகி போராளி முகாம்கள் உள்ளன. இவற்றில் ஏழு குகி ஆதிக்கம் செலுத்தும் மலைகளின் விளிம்பில், மைய்தேயி சமூகம் ஆதிக்கம் செலுத்தும் பள்ளத்தாக்கிற்கு அருகில் அமைந்துள்ளன. அருகிலுள்ள மைய்தேயி கிராமங்கள் மீது தாக்குதல்களை நடத்த இந்த முகாம்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறி, மைய்தேய்கள் நீண்டகாலமாக தங்களை இடமாற்றம் செய்யக் கோரி வருகின்றனர்.


திருத்தப்பட்ட செயல்பாடுகளின் இடைநிறுத்தம் (SoO) ஒப்பந்தம், சிறிய முகாம்களை ஒருங்கிணைத்து பெரியதாக மாற்றும். இதனால், முகாம்களின் எண்ணிக்கை குறையும்.


போராளிகள் தங்கள் ஆயுதங்களை அருகில் உள்ள CRPF/BSF முகாம்களில் ஆயுதங்களை வைப்பது, மூலம் போராளி முகாம்களில் இருந்து ஆயுதங்கள் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்யும்.


பைரன் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவது உட்பட சில முக்கிய குகி சமூகங்களின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே கவனித்துள்ளது. இனக்கலவரத்தின் போது சிங் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக மலையக மக்கள் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகின்றனர். உண்மையில், பிப்ரவரியில் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகுதான் குகி போராளிக் குழுக்கள் ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கின.


குகி சமூகத்தின் மற்றொரு கவலை மைய்தேயி கிளர்ச்சிக் குழுக்கள் பற்றியது. இந்தக் குழுக்கள் இம்பாலில் ஒரு தளத்தை உருவாக்கி, தடை செய்யப்பட்டிருந்தாலும் சுதந்திரமாகச் செயல்பட்டு வந்தன. நவம்பர் 2023-ல், அரசாங்கம் UNLF உடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. UNLF பள்ளத்தாக்கில் உள்ள பழமையான போராளிக் குழுக்களில் ஒன்றாகும்.


அரசாங்கம் இப்போது UNLF-க்காக முகாம்களை அமைக்கிறது மற்றும் இந்த முகாம்களில் தங்கியிருக்கும் UNLF உறுப்பினர்களின் அடையாள அட்டைகளையும் தயாரித்து வருகிறது. இந்த செயல்முறை முடியும் தருவாயில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.



Original article:

Share:

தொழில்நுட்ப தற்சார்பை நோக்கிய நீண்ட பயணம் -B.J. நாராயணன்

 இன்றைய உண்மையான தற்சார்பு என்பது இந்தியா தனது சொந்த தொழில்நுட்பத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும். ஏனென்றால், மற்றவர்களை சார்ந்திருப்பது ஒரு பலவீனமாகிவிட்டது.


இந்தியா தனது 79-வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15, 2025 அன்று கொண்டாடியது. இருப்பினும், இன்று உண்மையான சுதந்திரத்திற்கு அரசியல் சுயாட்சியை விட அதிகம் தேவை என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். இன்றைய வாழ்க்கையின் ஒவ்வொரு துறைக்கும் தொழில்நுட்பம் உதவுவதால், இது தொழில்நுட்ப இறையாண்மையையும் (technological sovereignty) கோருகிறது.


புவிசார் அரசியல் மிகவும் இருண்டகாலத்தில் உள்ளது. இன்றைய போர்களில் துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளுக்குப் பதிலாக மென்பொருள் மற்றும் ட்ரோன்கள் பயன்ப்படுகின்றன. மிகவும் ஆபத்தான போர்கள் இணையத்தில் நடக்கின்றன. நமது வங்கிகள், ரயில்கள் மற்றும் மின்சார அமைப்புகள் அனைத்தும் தொழில்நுட்பத்தைச் சார்ந்துள்ளன. இது பெரும்பாலும் ஒரு நாட்டைச் சேர்ந்த ஒரு சில நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது.


இந்தச் சார்புநிலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிறுவனங்கள் தீமை காரணமாக தங்கள் கிளவுட் அல்லது செயற்கை நுண்ணறிவு சேவைகளை முடக்கினால் என்ன நடக்கும்? நாட்டிற்கு கடுமையான தீங்கு ஏற்படும் அபாயம் உண்மையானது. சமீபத்தில் ஒரு நிறுவனத்திற்கு கிளவுட் சேவைகளை நிறுத்திய போது இது நடந்ததை நாங்கள் கண்டோம். இது ஒரு கற்பனையான பிரச்சனை மட்டுமல்ல - இது இப்போது நாம் சமாளிக்க வேண்டிய ஒன்று.


அடித்தளத்தை உருவாக்குதல்


தொழில்நுட்ப தன்னாட்சி (Technological autonomy) இதற்கு ஒரு தீர்வாகும். தற்போது, ​​இந்தியாவிடம் அதன் சொந்த நம்பகமான செயல்பாட்டு அமைப்பு (operating system), தரவுத்தளம் அல்லது அடிப்படை மென்பொருள் இல்லை. இதனால் நாடு முழுமையாகக் கட்டுப்படுத்தவோ நம்பவோ முடியாத வெளிப்புற ஆதாரங்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இருப்பினும், சுதந்திரத்திற்கான பாதை அது தோன்றும் அளவுக்கு கடினமானதல்ல.


கட்டற்ற மாதிரி (open-source model) தீர்வுக்கான பாதையை வழங்குகிறது. இந்தியா தனது சொந்த Linux மற்றும் Android பதிப்புகளை உருவாக்க முடியும். ஒரு பிரத்யேக நிபுணர் குழுவால் இதைச் செய்ய முடியும். உண்மையான சவால் நீண்டகால ஆதரவு மற்றும் பராமரிப்பில் உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு செயல்பாட்டு அமைப்பை (OS) வெற்றிகரமாக மாற்ற, அதை ஆதரிக்கவும் பயன்படுத்தவும் ஏராளமான மக்கள் தேவைப்படுகின்றனர். நாம் சிறிதளவு பின்தங்கியிருக்கும் செயல்பாட்டு அமைப்பை பின்பற்றினால், அவற்றைப் போட்டித்தன்மையுடனும், சாத்தியமானதாகவும் மாற்றலாம். 


இது இந்தியாவின் கணிசமான தொழில்நுட்ப சமூகத்திற்கான ஒரு பணியாகும். பிரச்சனை அனைவரையும் பாதிக்கிறது. ஆனால், தீர்வு டிஜிட்டல் உலகத்தை உருவாக்கும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களிடம் உள்ளது. இந்த பலவீனமான சார்புநிலையை அகற்ற அவர்கள் ஒன்றிணைய  வேண்டும். எந்தவொரு நிறுவனத்திற்கும் இது மிகப் பெரிய பணியாகும். ஆனால், இந்த இலக்கின் பின்னால் பலர் ஒன்றிணைந்தால் இதை அடைய முடியும்.


வன்பொருள் இறையாண்மைக்கான பாதை


மென்பொருள் இறையாண்மையை (software sovereignty) விட வன்பொருள் இறையாண்மையை (hardware sovereignty) அடைவது மிகப்பெரிய சவாலாகும். மேம்பட்ட குறைக்கடத்தி (semi-conductor) தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கு, சிப் வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் விநியோக அமைப்புகளில் நாட்டிலிருந்து நிறைய பணமும் நீண்டகால முயற்சியும் தேவைப்படுகிறது. இதைச் செய்ய நம்மிடம் பணம் இருக்கிறதா - இன்னும் முக்கியமாக, பொறுமை இருக்கிறதா? ஒரு புத்திசாலித்தனமான முதல்படி, முக்கிய வன்பொருள் பாகங்களில் கவனம் செலுத்துவதும், சிப் வடிவமைப்பு மற்றும் பிணைப்பில் திறன்களை வளர்ப்பதும் ஆகும். உண்மையான உற்பத்தியை வேறு இடங்களில் செய்தாலும்கூட இந்த பணிகளை செய்ய வேண்டும்.


இந்தியாவின் அரசியல் சுதந்திரத்திற்கான பயணம் அகிம்சையால் (non-violence) வரையறுக்கப்பட்டது. தொழில்நுட்ப சுதந்திரத்திற்கான அதன் தேடலானது கட்டற்ற மென்பொருள் மூலமாக இருக்க வேண்டும். இது சமூகம் தனக்குத் தானே பரிசாகக் கொடுக்கிறது. இது நம்மை ஆதரிப்பதே தவிர மற்றவர்களை எதிர்ப்பது பற்றியது அல்ல.


உலகளாவிய கட்டற்ற மென்பொருள் இயக்கம் இனி அது இருந்ததைப் போல சக்திவாய்ந்த சமூக-அரசியல் சக்தியாக இல்லை. Android, Linux மற்றும் Hadoop உள்ளிட்ட பெரும்பாலான மென்பொருள்கள் இன்று கட்டற்றதாகும். இருப்பினும், முக்கியக் கட்டுப்பாடு மையப்படுத்தப்பட்ட மேகக்கணினி மற்றும் சக்திவாய்ந்த நிறுவனங்களால் வெளிப்புறமாக நிர்வகிக்கப்படும் தரவு. மென்பொருள் மற்றும் வன்பொருளில் சுயாட்சிக்கான சமூக இயக்கம் இன்று தேவைப்படுகிறது. இந்தியாவிடம் தேவையான திறமையும் உள்ளது. அதற்கான வழியும் நம்மிடம் உள்ளது.


இந்தியாவிற்குத் தேவை கூட்டு மன உறுதியாகும். ஒரு நெருக்கடி அதன் கையை கட்டாயப்படுத்துவதற்கு முன்பு திட்டமிடல், மேம்பாடு மற்றும் செயல்படுத்தல் என்ற அவசரப் பணியை தொடங்க வேண்டும்.


கட்டற்ற மென்பொருள் ஆதாரங்களில் இருந்து இந்தியாவின் சொந்த அத்தியாவசிய மென்பொருள் பதிப்புகளை உருவாக்க கிராக் குழுவைச் சேர்ப்பது முதல்படியாகும். இந்தியா பயனர்களுக்காக தரவுத்தளங்கள், மின்னஞ்சல் செயலிகள் மற்றும் காலண்டர்கள் (வாடிக்கையாளர் பக்கம்) போன்ற சொந்த மென்பொருளையும், வலை சேவையகங்கள், மின்னஞ்சல் சேவையகங்கள் மற்றும் மேகக்கணினி சேவையகங்கள் (பயனர் பக்கம்) போன்ற ஆன்லைன் சேவைகளை இயக்குவதற்கான மென்பொருளையும் உருவாக்க வேண்டும். 


இலவச கட்டற்ற பதிப்புகள் ஏற்கனவே உள்ளன. ஆனால், உண்மையான சவால் அவற்றைப் புதுப்பித்து சிறப்பாகச் செயல்பட வைப்பதாகும். அதற்கு, தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே இந்தியாவிற்கும் அர்ப்பணிப்புள்ள குழுக்கள் தேவை. அரசு அல்லது தனியார் நிதிகளுக்கு வெளியே, ஒரு நல்ல வணிக மாதிரி பின்னால் இருக்கும்போது மட்டுமே இது சாத்தியமாகும். இதன் நோக்கம் சுய ஆதரவு அல்லது சிறந்ததாக இருக்க வேண்டும்.


கடந்தகாலத்தில் இதை விற்பனை செய்வது கடினமான யோசனையாக இருந்திருக்கலாம். ஆனால், தற்போதைய சூழல் வேறுபட்டது. முன்பு, ராஜதந்திரத் துறைகள் மட்டுமே நம்பகமான மற்றும் பாதுகாப்பான மென்பொருளைக் கொண்டிருப்பதில் அக்கறை கொண்டிருந்தன. இப்போது, ​​தனியார் நிறுவனங்களும் தனிநபர்களும் முக்கியமான தேவைகளுக்காக வெளிச் சக்திகளைச் சார்ந்திருப்பதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். 


மக்கள் தாங்கள் பயன்படுத்தும் இலவச மற்றும் கட்டற்ற மென்பொருளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் செலுத்தி வருகின்றனர். இந்தச் செலவுகள் வெளிப்படையானவையாகவும் நம்பகமான மென்பொருளை ஆதரிக்கும் வகையிலும் இருக்கும் ஒரு மாதிரிக்கு மாறுவது எளிதான படியாக இருக்கும்.

மையமாக ஒரு பணி


தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கான ஒரு பணியை உருவாக்குவதே உடனடி நடவடிக்கையாகும். இது செயல்படுத்தும் பணியாக இருக்கும். கல்வி/ஆராய்ச்சி சமூகங்களை இலக்காகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியாக இல்லாமல், செயல்படுத்தல் பணியாக இருக்கும். இது முதன்மையாக பொறியாளர்களின் வலுவான மேம்பாடு, ஆதரவுக் குழுக்கள் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க ஒரு திறமையான திட்ட மேலாண்மைக் குழுவை உள்ளடக்கும்.


ஒரு நல்ல திட்டம் உருவாக்கப்பட்டால், இதைச் சாத்தியமாக்குவதற்கு வணிகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இரண்டிலும் போதுமான நிபுணர்கள் உள்ளனர். அரசாங்கம் இதற்கு உதவ வேண்டும். விரைவாக தன்னைத்தானே ஆதரிக்கக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.


தொழில்நுட்ப சுதந்திரத்தை (technological independence) நோக்கி நீண்ட பயணத்தை மேற்கொள்வோம்.


B.J. நாராயணன் ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப கழகத்தில் பேராசிரியர் மற்றும் முன்னாள் இயக்குநர் கணினி வரைகலை மற்றும் இணையான கணினி ஆராய்ச்சியாளராக உள்ளார்.



Original article:

Share:

தீர்க்கமான தலையீடு : உச்சநீதிமன்ற உத்தரவு, ஆதார் அட்டை பற்றி…

 வாக்காளர் சரிபார்ப்புக்கு 12-வது ஆவணமாக ஆதாரை சேர்ப்பது ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்.


உச்சநீதிமன்றத்தின் தீர்க்கமான தலையீடு, பீகாரின் தேர்தல் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (Special Intensive Revision (SIR)) 12 செல்லுபடியாகும் ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டையை சேர்க்க தேர்தல் ஆணையத்திற்கு (Election Commission of India (ECI)) உத்தரவிட்டது. இது ஒரு முக்கிய நடவடிக்கை திருத்தம் ஆகும். இது அடிப்படை வாக்களிக்கும் உரிமைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. கடுமையான விதிகள் லட்சக்கணக்கான தகுதியுள்ள மக்களை வாக்களிப்பதைத் தடுக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்துகிறது. 


தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்குரிய வாதத்தை ஏற்றுக்கொண்டது. ஆதார் என்பது வெறும் குடியிருப்பு சான்று மட்டுமே, குடியுரிமை அல்ல. எனவே, அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வலியுறுத்தியது. முரண்பாடுகளை சுட்டிக்காட்டி நீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்தது: பாஸ்போர்ட் அல்லது பிறப்புச் சான்றிதழ் தவிர, மற்ற 11 ஆவணங்களில் ஒன்பது ஆவணங்கள் குடியுரிமையை உறுதியாக நிரூபிக்கவில்லை என்றால், விலக்குக்காக ஆதாரை ஏன் தனியாகக் குறிப்பிடவில்லை? ஆதார் அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்த பின்னரே பயன்படுத்த முடியும் என்றும் நீதிமன்றம் கூறியது. 


இந்தத் தெளிவான நீதிமன்றத் தீர்ப்பு மிகவும் அவசியமானது. பரிசோதனை ஆதாரங்கள் காட்டுகின்றன, பீகாரின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 90% பேர் வைத்திருக்கும் ஆதார் அட்டையைத் தவிர்த்து, பாஸ்போர்ட் (வெறும் 2% பேர் மட்டுமே வைத்திருப்பது) மற்றும் பிற ஆவணங்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தியிருந்தால், பெரும்பாலான உண்மையான வாக்காளர்கள், குறிப்பாக ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய தடைகள் ஏற்பட்டிருக்கும் என்று அனுபவச் சான்றுகள் காட்டுகின்றன. 


தேர்தல் ஆணையத்தின் அவசர சிறப்பு தீவிர திருத்த (SIR) பயிற்சி ஏற்கனவே வரைவு பட்டியலில் இருந்து 65 லட்சத்திற்கும் மேலான வாக்காளர்களை நீக்கியது. இந்த நீக்கம் குறித்த தி ஹிந்துவின் புள்ளியியல் பகுப்பாய்வு பல முரண்பாடுகளை வெளிப்படுத்துகிறது — விகிதாசாரமற்ற எண்ணிக்கையிலான பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் புள்ளியியல் ரீதியாக சாத்தியமற்ற இறப்பு விகிதங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய ‘நிரந்தர இடம்பெயர்வுகள்’ (permanent shifts)  குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் திருமணமான பெண்கள் இடம்பெயர்ந்ததாக தவறாகக் குறிக்கப்பட்டனர். இந்த வடிவங்கள் துல்லியத்தை விட அவசரத்திற்கு முன்னுரிமை அளித்த ஒரு குறைபாடுள்ள செயல்முறையை பரிந்துரைக்கின்றன. சட்டபூர்வ வாக்காளர்களை (legitimate voters) நீக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.


ஆதார் அட்டையைப் பயன்படுத்துவது வாக்காளர் சரிபார்ப்பு செயல்முறையை எளிதாக்குகிறது மற்றும் அணுகக்கூடியதாக ஆக்குகிறது. முதலாவதாக, 65 லட்சம் வாக்காளர்களில் தவறாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு உயிர்நாடியாக அமைந்தது. ஏற்கனவே பட்டியலில் உள்ள ஆவண சரிபார்ப்பு தேவைப்படும் வாக்காளர்களுக்கும் இது உதவுகிறது. 



ஆதார் சரிபார்ப்பு ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாதது நீதிமன்றத்தின் முந்தைய வழிகாட்டுதலுக்கு முரணானது என்று எச்சரித்த அரசியல் மற்றும் குடிமை சமூக செயல்பாட்டாளர்களின் (civil society activists) தொடர்ச்சியான வேண்டுகோள்களை இது நியாயப்படுத்துகிறது. திங்களன்று வெளியிடப்பட்ட அதன் உத்தரவில், உச்சநீதிமன்றம் இன்றைய இந்தியாவில் அடையாள சரிபார்ப்பின் நடைமுறை யதார்த்தங்களுடன் அதன் நடைமுறைகளை சீரமைக்க தேர்தல் ஆணையத்தை கட்டாயப்படுத்துகிறது. 


இந்தத் தீர்ப்பு பீகார் மாநிலத்தை தாண்டி தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் திட்டமிடப்பட்ட மற்ற அனைத்து திருத்தங்களுக்கும் ஒரு முன்மாதிரியை அமைக்கிறது. தேர்தல் ஆணையம், மக்களின் உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்முறையை அவசரப்படுத்தாமல், வாக்காளர் பட்டியலை சரியாகவும் நியாயமாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் இப்போது மிகவும் விடாமுயற்சியுடன் கூடிய மற்றும் மனிதாபிமான அணுகுமுறையை நோக்கிச் செல்ல வேண்டும். வீடு வீடாகச் சென்று முழுமையான சரிபார்ப்பை வலியுறுத்த வேண்டும். மேலும், இந்தியாவின் ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்காளர் பட்டியல் - துல்லியமாகவும் உண்மையிலேயே அதன் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.



Original article:

Share:

சான்றிதழ்களை மட்டுமல்ல, வேலைவாய்ப்புகளையும் உருவாக்குதல் -சப்னா மௌத்கில்

 ஒரு வலுவான மற்றும் உள்ளடக்கிய திறன் மேம்பாட்டு முறையை, பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கையால் தீர்மானிக்கக்கூடாது, மாறாக எத்தனை பேர் நிலையான மற்றும் கண்ணியமான வேலைகளைப் பெறுகிறார்கள் என்பதன் மூலம் தீர்மானிக்க வேண்டும்.


இந்தியா ஒரு பெரிய மக்கள்தொகை நன்மையைக் கொண்டுள்ளது. அதன் மக்கள்தொகையில் 50%-க்கும் அதிகமானோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார். இந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன்களை வழங்குவது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. கடந்த பத்தாண்டுகளில், மத்திய திட்டங்கள், மாநிலத் திட்டங்கள் மற்றும் தனியார் கூட்டாண்மைகள் மூலம் இந்தியா ஒரு பெரிய திறன் மேம்பாட்டு சூழலை உருவாக்கியுள்ளது.


இருப்பினும், இன்னும் ஒரு பெரிய இடைவெளி உள்ளது. பயிற்சிச் சான்றிதழ் பெறுவது வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் இது உண்மையல்ல.


இந்த தவறான அனுமானம் ஒரு அமைதியான ஆனால் வளர்ந்து வரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான இளைஞர்கள் குறுகியகாலப் பயிற்சி படிப்புகளை முடிக்கிறார்கள். ஆனால், பலர் இன்னும் அர்த்தமுள்ள அல்லது நீடித்த வேலைகளைப் பெறத் தவறிவிடுகிறார்கள்.


துண்டிப்பு


பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY) ) போன்ற முதன்மைத் திட்டங்கள் 2014-ஆம் ஆண்டு முதல் 1.6 கோடிக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளன. ஆனால் வேலைவாய்ப்புகள் அடிப்படையில் முடிவுகள் இன்னும் குறைவாகவே உள்ளன. குறுகியகாலப் பயிற்சி (short-term training (STT)) படிப்புகளில், சான்றிதழ் பெற்ற நபர்களில் 43 சதவீதம் பேர் மட்டுமே PMKVY 3.0-ன் கீழ் வேலைவாய்ப்புகளைப் பெற்றதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஒரு பெரிய சிக்கலைக் காட்டுகிறது. இந்த வெற்றியானது பெரும்பாலும் மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் உண்மையான முன்னேற்றங்களால் அல்ல, சேர்க்கை மற்றும் சான்றிதழ்களால் அளவிடப்படுகிறது.


ஒரு முறை பயிற்சி மூலம் உண்மையான வேலைவாய்ப்பை அடைய முடியாது. பயிற்சியின் போதும் அதற்குப் பின்னரும் தொடர்ச்சியான ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் பயிற்சி பெறுபவர்கள் தொழில்துறை தரங்களைப் புரிந்துகொண்டு அவற்றுக்கு ஏற்ப எவ்வாறு மாற்றுவது என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். NITI ஆயோக், அதன் "புதிய இந்தியாவிற்கான உத்தி @ 75"-ல், உயர்கல்வியிலிருந்து வெளிவரும் மாணவர்களில் 47 சதவீதத்தினர் மட்டுமே வேலைவாய்ப்பு பெறத் தகுதியானவர்கள் என்பதை எடுத்துக்காட்டியது. 83 சதவீத பணியாளர்கள் வரையறுக்கப்பட்ட பயிற்சி விருப்பங்களுடன் ஒழுங்கமைக்கப்படாத துறையில் இருப்பதால், உற்பத்தி மற்றும் சேவைகள் இரண்டிலும் திறன்களை மேம்படுத்துவது இன்னும் ஒரு பெரிய சவாலாக உள்ளது.


இந்த சவால்களைத் தீர்க்க, நமது இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கு மூன்று வலுவான தூண்களை உருவாக்க வேண்டும்.



இடம் மற்றும் வழிகாட்டுதல் 


  இந்தியாவின் பொருளாதாரத்தின் பலம் அதன் உழைக்கும் மக்கள் தொகையாகும். இருப்பினும், வேலை வாய்ப்பு பெரும்பாலும் முக்கிய இலக்காக இருப்பதற்குப் பதிலாக குறைவான முக்கியத்துவமாகக் கருதப்படுகிறது. திறன் திட்டங்கள் தொழில்களை ஈடுபடுத்துவதன் மூலமும், நிகழ்நேர தொழிலாளர் சந்தைத் தரவைப் பயன்படுத்துவதன் மூலமும், தொடக்கத்திலிருந்தே முதலாளிகளுடன் கூட்டாண்மைகளை உருவாக்குவதன் மூலமும் இதை மேம்படுத்தலாம். இது வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சியில் இல்லாத இளைஞர்களின் (15–29 வயது) சதவீதத்தைக் குறைக்கலாம் (NEET).


இதனுடன், உலகவங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியத் துறைகளிலும் பயனுள்ள வழிகாட்டுதல் தேவை. தொழில் வழிகாட்டுதல், பணியிட தயாரிப்பு மற்றும் முறையான ஆதரவு இல்லாதது இளைஞர்கள் முறையான வேலைகளில் வெற்றிபெற முக்கிய சவால்கள் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஜெர்மனி போன்ற நாடுகள் இரட்டை தொழில் பயிற்சி (dual vocational training) மூலம் இதைத் தீர்த்துள்ளன. அங்கு வழிகாட்டுதல் அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும், இலாப நோக்கற்ற நிறுவனங்கள் உள்ளூர் தொழில்களுடன் இணைவதன் மூலமும், முன்னாள் மாணவர் வலைப்பின்னல்களை உருவாக்குவதன் மூலமும், டிஜிட்டல் வழிகாட்டுதல் தளங்களை வழங்குவதன் மூலமும் உதவுகின்றன.  


பயிற்சிக்குப் பிந்தைய ஆதரவு                 


பயிற்சியாளர்கள் வேலைச் சந்தையில் நுழையும்போது, ​​வேலைகள் நிரந்தரமாக இல்லை என்பதை அவர்கள் காண்கிறார்கள். தொழிலாளர்கள் பெரும்பாலும் காலப்போக்கில் தங்கள் வேலைகள், தொழில்கள் மற்றும் இடங்களை கூட மாற்றுகிறார்கள். 2036-ஆம் ஆண்டு வரை இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. அதே நேரத்தில், வேலைச் சந்தை மாறி வருகிறது. மேலும், பலர் பாரம்பரிய பணியிட அமைப்புகளை கேள்விக்குள்ளாக்குகின்றனர். இந்தப் போக்கு உலகளவில் காணப்படுகிறது. உதாரணமாக, ஆஸ்திரேலியாவில், 1970-ஆம் ஆண்டுகளில் இருந்து பகுதிநேர வேலைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. இது வழக்கமான பயிற்சி, மறுதிறன் மேம்பாடு மற்றும் தொழில் ஆலோசனை ஆகியவற்றின் அவசியத்தைக் காட்டுகிறது. இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மாவட்ட அளவிலான தொழில் மையங்களை மேம்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தை ஆதரிக்க முடியும், இதனால் சிறந்த வழிகாட்டுதலை வழங்கவும், இடப்பெயர்ச்சிக்கு உதவவும், தொழில் மாற்றங்களை ஆதரிக்கவும் முடியும்.

திறன் மேம்பாடு என்ன வழங்க வேண்டும்


உலக பொருளாதார மன்றத்தின் 'வேலை வாய்ப்புகளின் எதிர்கால அறிக்கை 2023'-ன் படி, இந்தியாவில் குறைந்த திறன் கொண்ட துறைகளில் சுமார் 69 சதவீத வேலைகள் 2030-ஆம் ஆண்டுக்குள் தானியங்கி முறையின் (automation) அபாயத்தில் இருக்கலாம். இந்த சூழ்நிலையில், திறன் மேம்பாட்டிற்கு அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கவோ அல்லது மாறாமல் இருக்கவோ முடியாது.


இந்தியா ஏற்கனவே திறன் மேம்பாட்டிற்கான ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் இப்போது முக்கிய சவால் அதை பயனுள்ளதாக மாற்றுவதாகும். ஒரு சான்றிதழைப் பெறுவது ஒரு நபர் தொழில் திறன்களைக் கற்றுக்கொள்ள கடினமாக உழைத்திருப்பதைக் காட்டுகிறது. ஆனால், ஒரு சான்றிதழ் மட்டுமே ஒரு தொழிலுக்கு உத்தரவாதம் அளிக்காது.


ஒரு நல்ல திறன் அமைப்பு எத்தனை பேர் பயிற்சி பெற்றிருக்கிறார்கள் என்பதன் மூலம் தீர்மானிக்கப்படக்கூடாது. மாறாக எத்தனை பேர் நிலையான, தகவமைப்பு மற்றும் மரியாதைக்குரிய வாழ்வாதாரத்தை உருவாக்க முடியும் என்பதன் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும். 


இந்தியாவின் இளைஞர்களுக்கு உண்மையிலேயே உதவ, திறன் திட்டங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு வழிகாட்டுதல், வேலை இணைப்புகள் மற்றும் தொடர்ச்சியான கற்றலை பயிற்சியின் முக்கிய பகுதிகளாகச் சேர்ப்பது அவசியம்.




கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் சமூகம் ஒரு வலுவான ஆதரவு அமைப்பை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அத்தகைய ஆதரவு இல்லாமல், சான்றிதழ்கள் வெற்று வாக்குறுதிகளாகவே இருக்கும்.


எழுத்தாளர் NIIT அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.



Original article:

Share:

ரூபாயின் மதிப்பை அரசு 'நன்றாகக் கண்காணித்து வருகிறது', டாலருக்கு எதிராக பல நாணயங்களின் மதிப்பு சரிந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

 பல பொருட்களுக்கான வரி விகிதங்களை சரிசெய்வது நுகர்வு அதிகரிக்கும் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று நிதியமைச்சர் கூறினார்.


அரசாங்கம் மாற்று விகிதங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ரூபாய் மட்டுமல்ல, அமெரிக்க டாலருக்கு எதிராக பல நாணயங்களும் சரிந்துள்ளன என்று அவர் விளக்கினார்.


டாலரின் மதிப்பு உலகளவில் வலுவடைந்துள்ளதால், ரூபாயின் மதிப்பு முக்கியமாக டாலருக்கு எதிராகவே உள்ளது. மேலும், மற்ற நாணயங்களுக்கு எதிராக அவை இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.


இது ஒரு உலகளாவிய பிரச்சினை என்றும், ரூபாய்க்கு மட்டுமல்ல, அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.


சமீபத்தில், ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்குக் குறைந்து, பகலில் 88.38-ஐத் தொட்ட பிறகு, ஒரு டாலருக்கு 88.27-ஆக முடிவடைந்தது. இந்த சரிவு அமெரிக்க கட்டணங்கள் குறித்த கவலைகளுடன் தொடர்புடையது. இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி, அரசு நடத்தும் வங்கிகள் மூலம், பெரிய வீழ்ச்சியைத் தடுக்க நடவடிக்கை எடுத்தது.


வரியின் தாக்கம்


ஆகஸ்ட் 27 முதல் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை கடுமையாக விதித்துள்ளது. இதில் ரஷ்யாவிலிருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்க்கு 25 சதவீத அபராதமும் அடங்கும்.


முன்னதாக, ஆகஸ்ட் 7-ஆம் தேதி, ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதையும், நீண்டகால வர்த்தகத் தடைகளையும் காரணம் காட்டி, டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமல்படுத்தியது.


அதிக இறக்குமதி வரிகள் முக்கியமாக நெசவு மற்றும் ஆடைகள், ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், இறால், தோல் மற்றும் காலணிகள், விலங்கு பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் மின் மற்றும் இயந்திர இயந்திரங்களை பாதிக்கின்றன.


இருப்பினும், மருந்துகள், எரிசக்தி பொருட்கள் மற்றும் மின்னணு பொருட்கள் போன்ற துறைகள் இந்த வரிகளால் பாதிக்கப்படவில்லை.


2024-25-ஆம் ஆண்டில், இந்தியா 437.42 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது. இதில் சுமார் 20 சதவீதத்தை அமெரிக்கா கொண்டிருந்தது. 2021-22 முதல் அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்து வருகிறது. 2024-25ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருட்களின் வர்த்தகம் 131.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இந்தியாவின் ஏற்றுமதி 86.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இறக்குமதி 45.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது.


ஜிஎஸ்டி விகித சீரமைப்பு


ஜிஎஸ்டி மாற்றத்தை "மக்கள் சீர்திருத்தம்" ("people's reform") என்று அழைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல பொருட்களுக்கான வரி விகிதங்களை சீரமைப்பு செய்வது ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயனளிக்கும், நுகர்வை அதிகரிக்கும் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று கூறினார்.


ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளை வணிகங்கள் விலைக் குறைப்புகளாக வழங்குகின்றனவா என்பதை அவர் தனிப்பட்ட முறையில் கண்காணிப்பார் என்றும், சில தொழில்கள் ஏற்கனவே விலைகளைக் குறைக்கத் தொடங்கியுள்ளன என்றும் அவர் கூறினார்.


இந்த முடிவின் சில நாட்களுக்குள், கார் தயாரிப்பாளர்கள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஷூ மற்றும் ஆடை நிறுவனங்கள் விலைக் குறைப்புகளை அறிவித்தன. புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் செயல்படுத்தப்படும்போது மேலும் பல நிறுவனங்கள் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சோப்புகள், கார்கள், ஷாம்புகள், டிராக்டர்கள் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் போன்ற கிட்டத்தட்ட 400 பொருட்கள் செப்டம்பர் 22 முதல் நாளிலிருந்து மலிவாக மாறும். தனிநபர் சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கான சந்தாக்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படும். தீவினை பொருட்கள் மற்றும் அதி-ஆடம்பரப் பொருட்களின் சிறிய பட்டியலுக்கு 40 சதவீத வரி அடுக்கு பொருந்தும்.


இந்த சீர்திருத்தம் அனைத்து 140 கோடி இந்தியர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சீதாராமன் கூறினார். ஏனெனில் ஜிஎஸ்டி ஏழை மக்களால் வாங்கப்படும் சிறிய பொருட்களுக்குக் கூட வாங்குகிறார்கள்".


செப்டம்பர் 22 முதல், ஜிஎஸ்டி அமைப்பு இரண்டு அடுக்குகளாக மாறும்: பொதுவான பயன்பாட்டு பொருட்களுக்கு 5 சதவீதம் மற்றும் மற்ற அனைத்திற்கும் 18 சதவீதம். 12 சதவீதம் மற்றும் 28 சதவீத அடுக்குகள் நீக்கப்படும்.

புதுப்பிக்கப்பட்ட ஜிஎஸ்டி அமைப்பு


புதிய ஜிஎஸ்டி கட்டமைப்பில், பெரும்பாலான தினசரி உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் 5 சதவீத வரி அடுக்குக்குள் வரும். ரொட்டி, பால் மற்றும் பன்னீர் ஆகியவற்றிற்கு எந்த வரியும் இருக்காது.


2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மிகப்பெரிய சீர்திருத்தம் இது என்றும், இது சாதாரண மக்களை மையமாகக் கொண்டுள்ளது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான வரிகள் கவனமாக மதிப்பாய்வு செய்யப்பட்டன, மேலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், விகிதங்கள் நிறைய குறைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.



Original article:

Share:

இந்தியா ஐரோப்பிய ஒன்றியம் இடையே முக்கிய ஒத்துழைப்பு துறைகள் யாவை? -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி:


பிரதமர் நரேந்திர மோடியும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Agreement (FTA)) விரைவில் முடிப்பது குறித்துப் பேசிய சில நாட்களுக்குப் பிறகு, வர்த்தகம் மற்றும் வேளாண்மைக்குப் பொறுப்பான இரண்டு மூத்த ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தையாளர்கள் இந்த வாரம் இந்தியாவுக்கு வருகை தந்து ஒப்பந்தத்தில் உள்ள கடினமான பிரச்சினைகளைப் பற்றி விவாதித்துத் தீர்க்க உள்ளனர்.

முக்கிய அம்சங்கள்:


— ஐரோப்பிய வர்த்தக ஆணையர் மரோஸ் செஃப்கோவிச் மற்றும் வேளாண் ஆணையர் கிறிஸ்டோஃப் ஹேன்சன் ஆகியோர் இந்த வாரம் டெல்லிக்கு பேச்சுவார்த்தைகளை வழிநடத்துவார்கள். பிப்ரவரி மாதம் முழு ஆணையர் குழுவும் இந்தியா வந்தபிறகு இது அவர்களின் முதல் வருகையாகும்.


— கேபினட் அமைச்சர்களைப் போன்ற இந்த ஆணையர்கள், பிரஸ்ஸல்ஸில் இருந்து 30 பேர் கொண்ட குழுவிற்கு தலைமை தாங்குவார்கள். அவர்கள் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை சந்திப்பார்கள்.


— ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதே ஐரோப்பிய ஒன்றிய வருகையின் நோக்கமாகும். டிரம்ப் நிர்வாகம் தொடங்கிய கட்டணப் போரின் காரணமாக இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் அவசரமாகிவிட்டன.


— ஐரோப்பிய ஒன்றியம்-அமெரிக்க ஒப்பந்தத்திற்குப் பிறகு வருவதால் இந்த சுற்று பேச்சுவார்த்தைகள் முக்கியமானவை. கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறையில் (Carbon Border Adjustment Mechanism (CBAM)) அமெரிக்காவிடம் EU நெகிழ்வுத்தன்மையைக் காட்டியுள்ளது.


— இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளில் CBAM மீது ஐரோப்பிய ஒன்றியம் முன்பு கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது போல, இப்போது இந்தியாவும் இதேபோன்ற சலுகைகளைக் கோரும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.


— சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாக இயக்குநரான உர்ஜித் படேல், செப்டம்பர் 3 அன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அமெரிக்கா CBAM-ஐ முற்றிலுமாக புறக்கணித்துவிட்டதாகக் கூறினார்.


— இந்திய தொழில்கள் ஏற்கனவே அதன் தாக்கத்தை உணர்ந்து வருவதால் CBAM பேச்சுவார்த்தைகள் முக்கியம். இந்த ஒழுங்குமுறை ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும்.


— செப்டம்பர் 4 அன்று, பிரதமர் மோடி ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவுடன் பேசினார். அவர்கள் “இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய FTA-ன் ஆரம்ப முடிவு” பற்றி விவாதித்தனர்.


— ஆதாரங்களின்படி, இரு தரப்பினரும் வர்த்தக ஒப்பந்தத்திற்காக சுமார் 26 அல்லது 27 அத்தியாயங்களை இறுதி செய்ய வேண்டும், ஒவ்வொன்றும் வெவ்வேறு பிரச்சினைகளை உள்ளடக்கியது. இந்தியாவுடன் சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் வர்த்தக ஒப்பந்தங்களையும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


— ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நாடுகளில் ஒன்றாகும். 2023ஆம் ஆண்டில், இரு தரப்பினருக்கும் இடையிலான பொருட்களின் வர்த்தகம் €124 பில்லியன் மதிப்புடையது. இது இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் சுமார் 12.2% ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த பொருட்கள் வர்த்தகத்தில் இந்தியா 2.2% பங்களிப்பை அளித்துள்ளது. இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான சேவை வர்த்தகம் 2023-ஆம் ஆண்டில் €59.7 பில்லியனாக இருந்தது. இது 2020-ஆம் ஆண்டில் €30.4 பில்லியனாக இருந்தது.


உங்களுக்குத் தெரியுமா?


— ஐரோப்பிய ஒன்றியம் (EU) என்பது ஐரோப்பாவில் உள்ள 27 நாடுகளின் குழுவாகும். இந்த நாடுகள் தங்கள் மக்களின் வாழ்க்கையை சிறப்பாகவும், எளிதாகவும், பாதுகாப்பாகவும் மாற்ற ஒன்றிணைந்தன. அவர்கள் ஒன்றாக வேலை செய்யவும், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும் ஒப்புக்கொண்டனர்.


— பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) ஒரு பகுதியாக மாறிய ஐரோப்பிய பொருளாதார சமூகத்துடன் இந்தியா 1962ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வ உறவுகளைத் தொடங்கியது. 1993ஆம் ஆண்டில் கூட்டு அரசியல் அறிக்கை மற்றும் 1994ஆம் ஆண்டில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த உதவியது.


— இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் (EU) உச்சிமாநாடுகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 15 உச்சிமாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. முதலாவது ஜூன் 2000-ல் லிஸ்பனில் நடந்தது. 2004-ல் ஹேக்கில் நடந்த 5-வது உச்சிமாநாட்டில், இந்த உறவு ஒரு இராஜதந்திரக் கூட்டாண்மையாக மேம்படுத்தப்பட்டது.


— கார்பன் வரி என்றும் அழைக்கப்படும் கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை (CBAM), 2021-ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு அவற்றின் உற்பத்தியின்போது உருவாக்கப்பட்ட கார்பன் வெளியேற்றத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு வரி விதிக்கிறது. உதாரணமாக, இறக்குமதி செய்யப்பட்ட எஃகு ஐரோப்பிய ஒன்றிய தரநிலைகளால் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக உமிழ்வுகளுடன் தயாரிக்கப்பட்டால், அதற்கு வரி விதிக்கப்படும்.



Original article:

Share:

ஜிஎஸ்டி-2.0 பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் - பிராச்சி மிஸ்ரா, ஷோஹன் முகர்ஜி

 இது குறுகியகால வசூல் அதிகரிப்பதைவிட, நீண்டகால வருவாய் வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட நெறிப்படுத்தப்பட்ட வரி கட்டமைப்பின் பிரதமர் மோடியின் பார்வையை உள்ளடக்கியது.


அறிமுகப்படுத்தப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) அதன் மிக முக்கியமான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. ஜிஎஸ்டி-2.0 உடனடி வருவாயை அதிகரிப்பதைவிட நீண்டகால கட்டமைப்பு சீர்திருத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த மாற்றங்களைச் செயல்படுத்த அரசாங்கம் தயாராகும்போது, ​​உண்மையான பிரச்சினை என்னவென்றால், வருமானம் ஆரம்பத்தில் குறையுமா என்பது அல்ல, ஆனால் இந்தியாவின் அடுத்த கட்டப் பொருளாதார வளர்ச்சிக்கு சக்தி அளிக்கக்கூடிய எளிமைப்படுத்தப்பட்ட, வணிகத்திற்கு உகந்த வரி முறைமை (business-friendly tax system) முழுத் திறனையும் வெளிக்கொணர இந்த மாற்றங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதுதான்.


ஜிஎஸ்டி 2.0-ன் மைய நோக்கம் வரி சிக்கலைக் குறைப்பதாகும். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் வரி முறை சிக்கலானதாக உள்ளது. முக்கிய சீர்திருத்தம் வரி விகித கட்டமைப்பில் உள்ளது. தற்போது, ​​நுகர்வோர் பொருட்களுக்கு நான்கு அடுக்குகள் உள்ளன: 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகும். ஜிஎஸ்டி-2.0 இவற்றை பெரும்பாலும் இரண்டு முக்கிய அடுக்குகளாக இணைக்க திட்டமிட்டுள்ளது. அவை, 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஆகும். இதில் சில சிறப்பு விகிதங்களும் தொடரும். இவை 0.25 சதவீதம் மற்றும் 3 சதவீதம். தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களுக்கு 40 சதவீத புதிய சிறப்பு விகிதமும் பொருந்தும்.


இதன் எண்கள் ஒரு வலுவான கதையைச் சொல்கின்றன. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளில் பட்டியலிடப்பட்டுள்ள 506 பொருட்களில் குறிப்பிடத்தக்க வகையில் 90 சதவீத பிரிவுகள் விலைக் குறைப்பைக் கண்டுள்ளன. 52 பொருட்கள் மட்டுமே அதிகரிப்பைக் காண்கின்றன. அதே நேரத்தில், பெரும்பாலான பொருட்கள் இப்போது நீக்கப்பட்ட 12 சதவீத அடைப்புக்குறியிலிருந்து 5 சதவீதத்திற்கு மாறுகின்றன. இதற்கிடையில், 52 பொருட்களுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது அத்தியாவசிய பொருட்களை மிகவும் மலிவு விலையில் மாற்றுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.


ஆடம்பர  (luxury) மற்றும் தீவினைப் பொருட்களுக்கு  (sin goods) முந்தைய 28 சதவீதம் மற்றும் கூடுதல் வரி அமைப்பை மாற்றி, புதிய 40 சதவீத வரி விகிதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கணித தெளிவை அளிக்கிறது, அதே நேரத்தில் ஆடம்பர நுகர்வு அதிக வரிச்சுமையை ஏற்க வேண்டும் என்ற கொள்கையை பராமரிக்கிறது. நிலக்கரி, லிக்னைட் மற்றும் பீட் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த இழப்பீட்டு வரியை நீக்குவது, வரி விகிதங்கள் 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்ந்தாலும், சிரமப்படும் மின்சார விநியோக நிறுவனங்களின் லாபத்தை உயர்த்தும். அதே நேரத்தில், ஆடம்பர பொருட்கள் 40 சதவீத வரி வகைக்கு மாறுவது முற்போக்கான வரிவிதிப்பு கொள்கைகளை வலுப்படுத்துகிறது.


உடனடி வருவாய் பாதிப்பை நிர்ணயிக்கும் ஆய்வாளர்கள் பெரியளவில் தவறவிடுகிறார்கள். ஜிஎஸ்டி வசூல் குறுகிய காலத்தில் ரூ.20.2 லட்சம் கோடியிலிருந்து ரூ.19.7 லட்சம் கோடியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது FY24 தரவுகளின் அடிப்படையில் ரூ.48,000 கோடி குறைப்பு அரசாங்க மதிப்பீடுகளுடன் ஒத்துப்போகிறது. குறுகிய காலத்தில் 11.64 சதவீதத்திலிருந்து 11.43 சதவீதமாகக் குறையும் என்று மதிப்பிடுகிறோம். 

இந்த வருவாய் இழப்பு தற்காலிகமானது மற்றும் "லாஃபர் வளைவில்" (Laffer curve) மூலம் விளக்கப்பட்ட உன்னதமான பொருளாதார தர்க்கத்தைப் பின்பற்றுகிறது. குறைந்த விகிதங்கள் விரிவாக்கப்பட்ட இணக்கம் மற்றும் பொருளாதார நடவடிக்கை மூலம் இறுதியில் அதிக வசூலை உருவாக்க முடியும். இருப்பினும், அதிக வருவாய் சேகரிப்பு இரண்டு முக்கியமான காரணிகளைப் பொறுத்தது. ஒன்று, வணிகங்கள் உண்மையில் வரி மாற்றங்களை நுகர்வோருக்கு அனுப்புகிறதா, இரண்டாவது விலை மாற்றங்களுக்கு நுகர்வோர் தேவை எவ்வளவு உணர்திறன் கொண்டது. எடுத்துக்காட்டாக, குளிர்பானங்கள் மற்றும் புகையிலை உள்ளிட்ட புதிய 40 சதவீத வரி வரம்புக்கு நகரும் முக்கிய தயாரிப்புகள் ஒப்பீட்டளவில் உறுதியற்ற தேவையைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. அதாவது, விலைகள் உயரும்போதுகூட நுகர்வோர் வியத்தகு முறையில் வாங்குவதைக் குறைப்பதில்லை.


இந்த கோரிக்கை-பக்க பரிசீலனைகளுக்கு (demand-side issues) அப்பால், சீர்திருத்தம் மிகவும் அடிப்படையான பிரச்சினையை குறிக்கிறது. இந்தியாவின் தொடர்ச்சியான வரி இடைவெளி (India’s persistent tax gap) ஆகும். உண்மையான மற்றும் சாத்தியமான சேகரிப்புகளுக்கு இடையேயான வித்தியாசம், ஒரு பத்தாண்டு காலத்திற்கு மேலாக நாட்டின் வரி முயற்சியை 70 சதவீதமாக வைத்திருக்கும் என்று மதிப்பிடுகிறோம். இது பயன்படுத்தப்படாத மகத்தான திறனைக் குறிக்கிறது. ஜிஎஸ்டி-2.0, இணக்கச் சுமையை குறைப்பதன் மூலமும், முறையான பொருளாதாரத்தில் தன்னார்வ பங்கேற்பை அதிகரிப்பதன் மூலமும் இந்த சவாலை நேரடியாக எதிர்கொள்கிறது.


எவ்வாறாயினும், சந்தைகள் பெரும்பாலும் குறுகிய காலத்தில் கவனம் செலுத்துகின்றன. மேலும், குறைந்த வருவாய் காரணமாக அதிக நிதிப் பற்றாக்குறையின் எதிர்பார்ப்புகள் (சாத்தியமான வர்த்தக இடையூறுகளால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களை ஆதரிக்க அதிக செலவினங்களுடன் இணைந்து) எதிர்மறையான உடனடி எதிர்வினைகளைத் தூண்டியுள்ளன. குறிப்பாக இந்தியாவின் சமீபத்திய இறையாண்மை கடன் மதிப்பீடு மேம்படுத்தல் மற்றும் நிதி ஒருங்கிணைப்புக்கான அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, இது உறுதிப்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.


விகித பகுத்தறிவு கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், GST-2.0-ன் நிறுவன சீர்திருத்தங்கள் சமமான கவனத்திற்கு உரியவை. சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (Goods and Services Tax Appellate Tribunal (GSTAT)) செயல்பாடுகள் இறுதியாக வணிகங்களுக்கு மேல்முறையீடுகளுக்கான பிரத்யேக மன்றத்தை வழங்கும். இது பல ஆண்டுகளாக நடைமுறை நிச்சயமற்றத் தன்மையை முடிவுக்குக் கொண்டுவரும். நெறிப்படுத்தப்பட்ட அடுக்கு அமைப்பு (slab structure) மற்றும் அதிக தீவினை பொருட்களுக்கான வரிகள் (higher sin taxes) அதிக வகைப்பாடு தகராறுகளைத் தூண்டலாம் மற்றும் தலைகீழ் வரி கட்டமைப்புகளிலிருந்து பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரி வரவுகளுடன் வணிகங்களைச் சுமக்கக்கூடும். GST கவுன்சிலின் விரைவான பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான அர்ப்பணிப்பு பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு பணப்புழக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் முக்கியமான நிவாரணத்தை வழங்குகிறது.


சிறிய ஏற்றுமதியாளர்கள், பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறைகள் சிக்கலானவை என்பதால் நீண்டகாலமாக பின்தங்கிய நிலையில், குறைந்த மதிப்புள்ள ஏற்றுமதி சரக்குகளின் வரம்புகளை அகற்றுவதன் மூலம் பயனடைவார்கள். இந்த திருத்தம், வெளிநாட்டு வாடிக்கையாளர் இருப்பிடங்களுக்கு பொருட்கள் மாற்றப்படும்போது இந்திய இடைத்தரகர்கள் ஏற்றுமதிக்கான நன்மைகளை கோர அனுமதிக்கும் சர்வதேச வர்த்தக போட்டித்தன்மைக்கு குறிப்பிடத்தக்க தடையை நீக்குகிறது.


முக்கியமாக, தன்னார்வ எளிமைப்படுத்தப்பட்ட பதிவுத் திட்டம் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவான மாதாந்திர வெளியீட்டு வரி பொறுப்பைக் கொண்ட குறைந்த ஆபத்துள்ள வணிகங்களை குறிவைக்கிறது. இணக்கத்திற்கான ஒரு அளவு-பொருந்தக்கூடிய அணுகுமுறை சிறிய நிறுவனங்களுக்கு பெரும் சுமைகளை உருவாக்குகிறது என்பதை இது அங்கீகரிக்கிறது. இந்த நிவாரணம் ஆயிரக்கணக்கான விளிம்பு வணிகங்களை முறையான வரி முறைக்குள் கொண்டு வரக்கூடும்.


ஜிஎஸ்டி-2.0 மற்ற பல இராஜதந்திர நன்மைகளைக் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் இளையவர்களால் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான (தலைமை பொருளாதார ஆலோசகரால் "கொடிய முக்கோணம் (deadly troika)" என்று குறிப்பிடப்பட்ட அதிக-பதப்படுத்தப்பட்ட உணவு, சமூக ஊடகங்கள் மற்றும் இணையவழி விளையாட்டுகள்) வரி விகிதங்களை உயர்த்துகிறது. இந்த அணுகுமுறை இந்தியாவின் மக்கள்தொகை நன்மையை சிறப்பாகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதேபோல், புகையிலை மற்றும் காற்றோட்டமான பானங்கள் மீதான அதிக வரிகள் பொது சுகாதாரத்திற்கு உதவுகின்றன. இந்த தயாரிப்புகளுக்கான தேவை நெகிழ்ச்சியற்றதாக இருப்பதால் அவை வருவாயையும் ஈட்டுகின்றன.


செப்டம்பர் 22 செயல்பாட்டு தேதி ஒரு சிறிய நிர்வாக விவரமாகத் தோன்றலாம். இருப்பினும், வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு முழு மதிப்புச் சங்கிலியிலும் கவனமாக ஒருங்கிணைப்பு தேவைப்படும். உலகளவில் கடந்தகால சரக்கு மற்றும் சேவை வரி மாற்றங்கள் சிறிய சிக்கல்கள்கூட பெரிய வணிக இடையூறுகளை ஏற்படுத்தும் என்பதைக் காட்டுகின்றன. மலேசியாவின் அனுபவம் ஒரு தெளிவான எடுத்துக்காட்டு. இது 2015-ல் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியது. ஆனால், வணிகங்கள் தங்கள் அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை சரிசெய்ய போராடியதால் 2018-ல் அதை நீக்கியது.


அரசாங்கம் ஒரு சவாலை எதிர்கொள்கிறது. செயல்படுத்தல் சிக்கல்கள் காரணமாக எளிமைப்படுத்தலின் நன்மைகள் இழக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதைச் செய்ய, மாநில அளவில் உள்ளவர்கள் உட்பட வரி அதிகாரிகளுக்கு வலுவான பயிற்சி தேவை. வணிகங்கள் தெளிவான தகவல்தொடர்பைப் பெற வேண்டும். இந்த மாற்றங்களின்போது எழும் தொழில்நுட்ப சிக்கல்கள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும்.


மொத்தத்தில், ஜிஎஸ்டி-2.0, பிரதமர் நரேந்திர மோடியின் நெறிப்படுத்தப்பட்ட வரிமுறையின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது. இது குறுகியகால வசூலில் மட்டுமல்ல, நீண்டகால வருவாய் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. சீர்திருத்தம் எளிமைப்படுத்தல், குறைந்த இணக்க செலவுகள் மற்றும் அதிக தன்னார்வ பங்கேற்பை நம்பியுள்ளது. இந்த நடவடிக்கைகள் தற்போதைய சிக்கலான அமைப்பைவிட அதிக வருவாயை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியில், ஜிஎஸ்டி-2.0-ன் வெற்றி, வரி செலுத்துவோர் தானாக முன்வந்து விதிகளைப் பின்பற்றுவதையும் சார்ந்துள்ளது.


இது சர்வதேச அனுபவத்தால் ஆதரிக்கப்படும் பொருளாதார தர்க்கமாகும். OECD மற்றும் IMF-ன் ஆய்வுகள், தங்கள் வரி முறைகளை வெற்றிகரமாக எளிதாக்கும் நாடுகள் பொதுவாக ஆரம்பகால வருவாய் வீழ்ச்சியை அனுபவிப்பதைக் காட்டுகின்றன. அதைத் தொடர்ந்து இணக்கம் மேம்படும் மற்றும் பொருளாதார செயல்பாடு விரிவடையும்போது நிலையான வளர்ச்சியைக் காணலாம். இந்தியாவின் ஜிஎஸ்டி-2.0 என்பது வரி சீர்திருத்தம் மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார எதிர்காலத்தில் ஒரு இராஜதந்திர முதலீடு ஆகும்.


மிஸ்ரா அசோகா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகவும், அசோகா ஐசக் பொதுக் கொள்கை மையத்தின் இயக்குநராகவும் தலைவராகவும் உள்ளார். முகர்ஜி அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையில் ஒரு ஆராய்ச்சி கூட்டாளியாக உள்ளார்.



Original article:

Share: